Tuesday, June 28, 2011

பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு -கிராமத்துக்காதல்+அழகிய அழுகை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUmMckJNomiHZVrgmF6HV4h4OF3XWvEdWvIJUFPo69D4yDD_pHP9FHLKxMN-Z5_87J9A9zlDxKx_FuhhTC2OhVJdayVkQsf7z6YO1PUBTjP0D-i3m1BufJaL5-3GvZNuj5a-DotubEEEUI/s1600/pillaiyar_theru_kadaisi_veedu-Mp3+Sogs+free+Download.jpg 

ஹீரோவுக்கு கேன்சர், ஹீரோயினுக்கு எயிட்ஸ்,வில்லனுக்கு பைல்ஸ்,வில்லிக்கு லொள்ஸ்  இப்படி கதை சொல்ற இயக்குநர்களுக்கெல்லாம் ஆப்பு இருக்குடி..1980 களில் 47 படங்கள் இப்படி வந்தன.. அவற்றில் பாதி ஹிட் படங்கள். ஆனா 2011லயுமா? உஷ் அப்பா முடியல.. 

ஜித்தன் ரமேஷை சிரிக்கறப்பவே பார்க்க சகிக்காது.. இதுல பாதிப்படம் அழுதுட்டே வர்றாரு.. (சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மன்னிக்க)

படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும் ,ஹீரோயினுக்கும் காதல்,ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோவும் ,ஆடியன்சும் நினைக்கும்போது கேன்சர் ஹீரோவுக்கு என ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்.. கேன்சர் ஹீரோவுக்கா இருந்தா என்ன? ஹீரோயினுக்கா இருந்தா என்ன? சாகறது ஆடியன்ஸ்தானே?

இந்த லட்சணத்துல இந்தப்படத்தோட டைரக்டர் பட ரிலீஸ் அப்போ டி விக்கு அளித்த பேட்டில வழக்கமான படங்களில் வர்ற மாதிரி ஹீரோ - ஹீரோயின் அறிமுகம் சாதாரணமா இருக்காது ஸ்பெஷல் டச் இருக்கும்னாரு.. அந்த ஸ்பெஷல் டச் என்னங்கறதை இப்போ சொல்றேன்.. சாப்பிட்டுக்கிட்டே இதை படிக்கறவங்க சாப்பிட்ட பிறகு தொடரவும்.. 

 ஹீரோ கிராமத்துல காலைக்கடனுக்காக ஒதுங்கறார்.. பாதிலயே வயக்காட்டு ஓனர் டேய் யார்றா அங்கே என கத்தறார்.. பாதிலயே எந்திரிச்ச ஹீரோ கைல தண்ணி சொம்போட ஓடறார்.. (வித் அவுட் வாஷிங்க்.. )அப்போ ஹீரோயின் எதேச்சையா அங்கே வர்றார்.. 2 பேரும் மோதிக்கறாங்க.. அப்போ ஹீரோ அந்த 40 மார்க் ஃபிகரைப்பார்த்து பிரமிச்சுப்போய் பின்னாலயே போய் கிணத்துல விழறாரு.. ஹீரோயின் அவரைக்காப்பாற்ற முயற்சி பண்றப்ப ஹீரோவோட வேட்டி அவர் கைல.. ஹீரோ கிணத்துல..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல  இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ndqtDaKToa4izyljPWJGe9ZFo-B9KFpNl7qFT7qLbJiIbkHxCKSspR8JcHAZKOqVqcyQkKVHx8b9lnLmhIIom3PNEN3GjVQLqZ8vWGPmdY8NFvSht4j4sTBnH7mDXI6yo0aXgPtCAQ06/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_04.jpg

படத்தில் தேறிய வசனங்கள்

1.  லவ்ங்கறது  அழகைப்பார்த்தோ ,பணத்தைப்பார்த்தோ வர்றதில்லை.. உள்ளே இருந்து வர்றது.. 

எப்டி? வாமிட் மாதிரியா?

2.  எனக்கு அந்தப்பொண்ணு வேணூம்....ம் ம் 

என்னமோ டீக்கடை பன்னு வேணும்கற மாதிரி கேட்கறே?

3. உன் ஆளு எப்படி இருப்பா?

இந்த ஊர்லயே அழகான பெண் அவ தான்.. (இப்படித்தான் ஒவ்வொரு லவ்வரும் சொல்லிக்கறானுங்க.. )

4. நான் அடிக்கடி சொல்வேனே.. ஊரெல்லாம் அழகா இருக்கும், ஒருத்தன் மட்டும் அழுக்கா இருப்பான்னு அது இவன் தான்.. (ஆஹா என்னமா இண்ட்ரோ கொடுக்குது பொண்ணு..?)

5. நீ என்னடி  படிக்கறே?

 ஆமா, சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது?

6. காக்கா எச்சம் போட்டா நினைச்ச காரியம் நடக்கும்..  (அட ஈனப்பயலுகளா.. அது தினமும் தாண்டா எச்சம் போடுது...?டெய்லி அதன் கீழ் போய் நின்னுக்கிட்டா காரியம் சக்ஸஸா?)

7.  அம்மா.. அடுத்த ஜென்மத்துலயாவது உனக்கு நல்ல புருஷன் கிடைக்கட்டும்.. 

8. அவன் பண்றது கேனத்தனமா இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு.. 

9. நான் உன் கூட பேசுனது சாதாரண விஷயம்....உடனே லவ்ங்கறதா?

ஆனா எனக்கு அதுதான் விஷயமே.. 

10. பொண்டாட்டிங்க எல்லாரும் புகுந்த வீட்ல இருக்கறப்ப பழைய பாத்திரம் மாதிரி  இருப்பாங்க,ஆனா பிறந்த வீட்டுக்கு வந்துட்டா மட்டும் பளிச்னு ஆகிடறாங்களே அது எப்படி?

11. நடந்தது நடந்து போச்சு.. 

ஆமா.. நடக்காதது ஆட்டோல போச்சு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-nkyvXbHdRYB_uYJMJX3jcp32bON5N4dVGnE7Pwe7KZaXnDq7DKHGfpfsnnbk2pAI1cLYV7H58xUqExaKlhGPOQ7NjGAQKD379x8AAQJ1Vf9FRiynlVV0_RYFYPL6eNo_sYoDKKGpJ2E/s1600/Suhasini+Hot+In+Pillaiyar+Theru+Kadaisi+Veedu+%25281%2529.jpg

12. நட்பு, வீடு 2ம் தானா அமைஞ்சது,நீ மட்டும் தான் நானா தேடி கிடச்சது..

13. ஆண்டவன் சில சமயம் கெட்டவங்களுக்கும் நல்லது பண்ணிடறானே?

14. இவருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.. என்ன ,அறிவு தான் கொஞ்சம் கூட இல்லை..

15. ஒருத்தன் சாகப்போறான்னு தெரிஞ்சும் மேரேஜ் பண்ண  ஓக்கே சொல்றியேம்மா.. உன்னை நினைச்சா..... 

16. இந்த ஊர்ல எங்கண்ணன் ஏகப்பட்ட நல்லது பண்ணி இருக்கார்.. அவர் செஞ்ச நல்லதுகளை சொல்லிட்டே போகலாம்.. அவ்ளவ் ஏன்? கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகியும் நோ சைல்டு.. இப்போ அவ 4 மாசம் முழுகாம இருக்கான்னா அதுக்கும் எங்கண்ணன் தான் காரணம்..(அண்ணன் பேரு ராம்சாமியா?)

17. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?

தெரியலை.. இது வரைக்கும் அதுக்கான அவசியம் வர்லை..

18. மனசுல இருக்கறதை நாம சொல்லாமலேயே தெரிஞ்சுக்கறது 2 பேர் தான் 1. அம்மா 2.சாமி..

19.  நீங்க தண்ணி அடிப்பீங்களா?

எப்பவும் அடிக்க மாட்டேன்.. சந்தோஷமா இருக்கறப்ப, மூடு அவுட்டா இருக்கறப்ப.. அடிப்பேன்..

=இதுக்கு பேசாம டெயிலி தண்ணி அடிப்பேன்னு சொல்லி இருக்கலாம்.. 

20. எல்லாரும் கல்யாணத்துக்கு போய் இருக்காங்க..

எதுக்கு? சாப்பிடவா?

21.  காதல் ஒண்ணும் பஸ் இல்லை.. 50 பேர் 60 பேர் ஏத்திக்க.. அது கேரியர் இல்லாத சைக்கிள் மாதிரி.. ஒருத்தருக்கு மேலே ஏத்தவே முடியாது.. 

அடத்தூ.. பஞ்ச் டயலாக்..?

22.என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா?

ம்ஹூம்..

அப்புறம் என்ன தைரியத்துல  ஓ சி கட்டிங்க்க்கு ஷேர்க்கு வர்றே?

பசங்க சொல்வாங்க.. நல்ல காரியம் பண்ணப்போறப்ப ஒரு கட்டிங்க் போட்டுட்டு போனா நல்லதுன்னு.//..

23.  பாக்கெட்ல காசும்,. உடம்புல தெம்பும் இருந்தா 10 பொண்டாட்டிங்க கூட கட்டிக்கலாம்... (நல்லவேளை.. பொண்ணுங்களை இதுல சேர்க்கல.. )

24. இந்த உலகத்துல எந்த ஆம்பள தப்பு பண்ணாம இருக்கான்? 

25.  ஒரு பேஷண்ட்டை காப்பாற்ற ஹாஸ்பிடல், பணம் மட்டும் போதாது..

. ( ஏன்?அழகிய நர்சும் வேணுமா?ராஸ்கல்.. பாடைல போறப்பக்கூட பருவச்சிட்டு கேட்குதா..?)

ஹீரோயின் புதுமுகம் போல ,பேரு சுஹாசினியாம்..சுமாரா இருக்கு ஃபிகரு,.. 

http://www.metromasti.com/galleryImage,650,wmi%7C2.png%7CC%7C60%7C20%7C20%7C,wmi%7Csimgw.png%7CBC%7C%7C0%7C100%7C,,khushi/2011-04-02/Kollywood/Event/Pillaiyar%20Theru%20Kadaisi%20Veedu%20Movie%20Audio%20Launch%20Gallery/Pillayar-Koil-Kadaisi-Theru-Audio-Launch-Gallery-16.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

 1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல கிராமத்து சிறுவர்கள் வாய்க்கால்ல பாய்ந்து ஜம்ப் பண்ணும் கவிதையான காட்சி..

2. காதலி கடவுள் பற்றி பேசியதும், பத்தே நிமிடத்தில் ஆல விழுதுகளை, 2 எலுமிச்சம்பழங்களை (கண்கள்) வைத்தே ஒரு விநாயகர் சிலை ரெடி பண்ணும் காட்சி.. ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஒரு சபாஷ்..

3. ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோ நினைத்துக்கொண்டிருக்கும்போது ஹீரோவுக்குத்தான் கேன்சர்,என ட்விஸ்ட் வைத்த விதமும்,அதைத்தொடர்ந்து வரும் ஹீரோ- ஹீரோயின் சந்திப்புகளும்..

4. எனக்கு ஒரு தேவதையை மெலோடி பாட்டை கையாண்ட விதம்.. 

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ சைக்கிள்ல 12 கிமீ ஸ்பீட்ல போறார். அதை துரத்தும் போலீஸ் ஜீப் 75 கிமீ ஸ்பீடுல போகுது,ஆனா ஹீரோவைப்பிடிக்க 13 நிமிஷம் ஆகுது.. என்னா லாஜிக் இது?

2. ஹீரோவுக்கு வந்திருக்கும் கேன்சர்க்கு டாக்டர் சொல்ற டெக்னிக்கல் பேரையேதான் 180 (நூற்றி எண்பது) படத்து ஹீரோவுக்கும் அந்த டாக்டர் சொல்றாரு.. என் டவுட் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சா? அல்லது 2 பேரும் ஒரே டி விடில சுட்டுட்டீங்களா?

3. டைட்டிலில் பொள்ளாச்சி பொன்னாவரம் என கதைக்களன் நடக்கும் ஊரைக்காட்டுகிறார்கள் ,ஆனால் பேசும் மொழி நடை (ஸ்லாங்க்) அந்த ஊர் போலவே இல்லையே?

4. ஹீரோ இறந்துட்டதும் டக்னு படத்தை முடிக்காம மெகா சீரியல் ரேஞ்சுக்கு ஏன் சடங்குகளை எல்லாம் காட்டி இழுக்கனும் படத்தை?

http://2.bp.blogspot.com/-LX8ePYh34mA/TZN-lwi0t7I/AAAAAAAAPPs/QQyJj4S9QQ0/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_audio_launch_06.jpg


இந்தப்படம் எல்லா செண்ட்டர்லயும் சுமாரா 20 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

சி. பி . கமெண்ட் - டி வி சீரியல் ரசிகைகள் பார்க்கலாம்

ஈரோடு தேவி அபிராமி,ஆனூர் 2 தியேட்டர்களில்  படம் ஓடுது.. நான் எந்த தியேட்டர்ல பார்த்திருப்பேன்னு எல்லாருக்கும் தெரியும்..என் பொண்ணு பேரு இருக்கற தேவி அபிராமி தியேட்டர்ல தான் பார்த்தேன்..

Monday, June 27, 2011

என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி?

1.நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு #ஈரோடு என் கே கே பி ராஜா மீது அம்மாவுக்கு என்ன கோபமோ?

------------------------------

2. டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் : லாரிகள் நாளை ஓடுமா? #டீசல் அடிச்சுட்டு ஓட்டுனா ஓடும்,லபோ திபோன்னு அடிச்சுக்கிட்டு இருந்தா ஓடாது

-----------------------

3. காதலன் வீட்டு முன்பு தீக்குளித்த பெண் பலி#அப்டியே காதலனையும் கட்டிப்பிடிச்சு கரை சேத்தி இருக்கலாம்

---------------------

4. எஸ்.ஐ.,யை தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு#அவர் என்ன அரசியல்வாதியா?எப்படி பேசுனாலும் போனாப்போகுதுன்னு விட?

---------------------

5. ஓட்டலில் சாப்பாட்டிற்கு அப்பளம் வைக்காததால் ஆவேசம்  10 பேர் கைது#அடடா அப்பளம் சாப்பிட ஆசைப்பட்டு இப்படி ஜெயில்ல களி சாப்பிடறாங்களே?

--------------------

6. மகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி தகவல்#மகனையும் உள்ளே அனுப்பிடலாமா?அப்பா மட்டும் போதுமா?

--------------------

7. கும்பகோணம்:அண்ணியின் விரலை கடித்த வாலிபருக்கு வலை#மாறுபட்ட கோணத்துல சிந்திச்சு இருக்கார் போல..

---------------------


8. விஜய்யின் போக்கிரி பட தயாரிப்பாளர் கைது!#விஜய்யை  வெச்சு படம் தயாரிச்சா அவ்வளவு பெரிய சமுதாயக்குற்றமா? அவ்வ்வ்

-------------------

9. ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்: சல்மான் வாழ்த்து!#நல்ல மனம் வாழ்க ,நாடு போற்ற வாழ்க

---------------------

10சீதையாக நடிப்பதால்,  பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா.#ஆமாமா,முதல் ராமரை நினைச்சு 2வது ராமரை அவாய்டுபண்றாரோ?

----------------------------

11. "ஐ லவ் யூ அண்ணா". என ஒரு ஃபிகர் அழைத்தால் பயம் தேவை இல்லை,உங்கள் பெயரை அண்ணாமலை என மாற்றுக#விடாக்கண்டன் விமல்ராஜ்

---------------------

12.ஆ.ராசாவை விசாரிக்க சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை#இது ஜெ வின் பழி வாங்கும் நடவடிக்கை-கலைஞர் புலம்பல்@இமேஜினேஷன்

-----------------------

13.அண்ணா என ஒரு ஃபிகர் அழைத்தும் ஒருவன் கவலைப்படவில்லை என்றால் அந்த ஃபிகர் கேரளத்துப்பைங்கிளியாக இருக்கும்

--------------------

14. சின்ன விஷயத்தை பெரிசாக்கி நமக்கு தொந்தரவு தர்றவங்க 1.நம்ம சம்சாரம் 2.சினிமாவில் நடிகைகள்#நோ உள்குத்து

--------------------



15. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி- ஹன்சிகா மோத்வானி#அப்புறம் ஏன் நயன் தாரா உங்களை சக்களத்தின்னு வையறாங்க?ஒரு வேளை கண்ணன் மாதிரியோ?

--------------------

16. ட்விட்டரில் உன்னால் ஐலவ்யூ சொல்ல முடியுமா? என சவால் விட்டாள்.ஏன் முடியாது என்றேன்.140 க்குள் முடிக்கவேண்டும் எப்படி 143 முடியும்?என்றாள்

---------------------

17. எனக்காக காத்திருப்பது உனக்கு போர் அடிக்கவில்லையா? என்றாள் காதலி.உன் சமீபத்தைவிட எனக்கு அதிகபோதை தருவது உனக்காக காத்திருக்கும் தருணங்களே

--------------------

18. கணினியுகத்தில் எந்த கிறுக்கனாவது காதலியின் ஃபோட்டோவை மணிபர்சில்வைத்திருப்பானா?என்றாள் காதலி.எந்த யுகத்திலும் காதலியின் முகம்தானே சுகம்?

---------------------

19. காதலியிடம் 143 என்றேன்.இப்போதைக்கு உங்கள் எண்ணத்தை 356 என்றாள்.நான் என்ன 420யா? என்றேன்#அக்கவுண்டன்ஸி கேர்ள் லவ்

-----------------------------

20. என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி? என்றாள் காதலி.உன்னையே தேற்றிய எனக்கு கவிதைகளை தேற்றுவதா கஷ்டம்? என்றேன்

அன்பே.. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது

1.நீ என்னை காயப்படுத்தி விட்டாய்,இதில் என்ன விசித்திரம் எனில் காயத்துக்கு மருந்தே நீ தான்.

------------------------

2. உணர்ச்சி வசப்பட்டு நான் வார்த்தைகளை கொட்டுவதில்லை,உணர்ச்சிகள் மாறி விடும்,ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. 

--------------------

3.  சேலை எடுக்கும் கணவன் மெல்லிய  எடை குறைந்த சேலையாக எடுத்தால்வீட்டில் துவைக்கும் பணி கணவனுடையதாக இருக்கும்

---------------------

4.  என்னைப்புரிந்து கொள்வாயா?இல்லை,பிரிந்து கொல்வாயா?முடிவெடுக்கும் அதிகாரம் உன் கையில்,ஏற்றுக்கொள்ளும் அன்பு என் மனதில்#அப்ளிகேஷன்

---------------------

5. நான் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்வதே இல்லை என என்னுடன் ஊடல்கொண்டாள்.அப்போதுதான் ஏன்? ஏன்? என பேசிக்கொண்டே இருப்பாய் என்றேன்


 ---------------------



6. கொடுத்து கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது,வாங்கினால் வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்ற இங்கிதம் இல்லாத உதடுகள் உன்னுது#கிஸ்ஸாலஜி

--------------------

7. இன்றுடன் நம் காதல் செத்துப்போய்  12 ஆண்டுகள் ஆகின்றன.நீயும், நானும் தனித்தனியே இருக்கிறோம்.வாழ்கிறோமா?

---------------------------

8. கூட்ட நெரிசலில் பஸ்ஸில் கண்டக்டர் முன்னும்பின்னும்  எரிச்சலுடன் அடிக்கடி சென்று வருவதைப்போல என் நினைவுகள் உன் ஊடல் தருணங்களைதொட்டுத்தொட்டு வருகிறது..

----------------------------

9. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது,வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட இயலாத ஏழை அசலையாவது கட்ட ஏங்குவது போல் கிடைத்த அன்பை உன் மீது செலுத்த துடிக்கிறேன்

--------------------

10.  கல்நெஞ்சக்காரியடி நீ.அதனால் தான் உன் முடிவை மறு பரிசீலனைக்கு நான் கோரிக்கையே விடுக்கவில்லை.நேசிப்பு என்பது இதயம் உள்ளவர்களூக்குமட்டும்

------------------------

நெல்லை பதிவர் சந்திப்பு கடைசி பாகம் -பாகம் 6



பண்டிகைகளும், விழாக்களும் மக்களின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை.வீட்டில் ஏதாவது சண்டை,கணவன்,மனைவிக்குள் ஊடல் என்றால் இந்த மாதிரி விழாக்காலங்களில் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் சும்மானாச்சிக்காவது தம்பதிகள் சந்தோஷமாக முகத்தை வைத்துக்கொள்வார்கள்.. அந்நியோன்யமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள்.. பிறகு அதுவே தொடர் கதை ஆகிவிடும்..

இது போன்ற உயரிய காரணங்களுக்காகவும்,மனித நேயம் வளர்வதற்காகவும்,உறவுகள் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் விழாக்கள்..ஊர்த்திருவிழா என்றால் வியாபாரிகளுக்குக்கொண்டாட்டம்.. சுபச்செலவாக இருப்பதால் யாரும் அது பற்றி கவலைப்படுவது இல்லை.. 

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்..  காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை  பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்.. 

நேரில் சந்தித்து உரையாடிய பின் அவன் கற்பனைகள் தவிடுபொடியாகும்..அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எழுத்தாளனின் முகம் வெளிப்படும்போது அவன் ஏமாற்றம் அடைகிறான்...

ஆனால் பதிவர் சந்திப்பில் யாரும் அதிகமாக எதிர்பார்த்து வரவில்லை.. ஒவ்வொரு பதிவரின் எழுத்தை மட்டுமே பார்த்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்?பழகுவதற்கு எந்த மாதிரி ஆள் என்பதை கண்கூடாக காண முடிவதால் சந்திப்புக்கு பிறகு உறவு பலப்படும் வாய்ப்பே அதிகம்.. 


எல்லா பதிவர்களூம் பேசி முடித்த பின் ஒரு நன்கொடை வசூலிக்கப்பட்டது.. பதிவர்கள் மனம் உவந்து பணம் கொடுத்தனர்.. இதில் சித்ராவும் ,பலாப்பட்டறை சங்கரும் அதிகமான பணம் கொடுத்தனர்.. நான் 100 ரூபாய் கொடுத்தேன்..

மொத்தம் 37 பதிவர்கள் வந்திருந்தனர்.. சராசரி ஆளூக்கு ரூ 50 டூ 100 தருவாங்க, அதிக பட்சம் ரூ 3000 கலெக்ட் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் ரூ 5615 கலெக்ட் ஆச்சு.. ஆச்சரியம் தான்.. இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி யாரோ ஒரு பதிவர் ஏழ்மை நிலையையும் மீறி ரூ 15 நன்கொடையாக கொடுத்ததுதான் விழாவின் ஹை லைட்..அப்போதுதான் நான் நன்கொடை இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமோ என வருந்தினேன்..

ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..

சும்மா வந்து சந்தித்தோம், சிந்தித்தோம் என வாய் வார்த்தைக்காக இல்லாமல் ஏதோ உபயோகமாக செய்த திருப்தி அனைவர் உள்ளத்திலும்..

பதிவர் மீட்டிங்க் முடிந்ததும் சாப்பாடு...


பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).

செம கலக்கலான சைவ சாப்பாடு..


முதல்ல ஒரு சூப் குடிச்சோம்.. அப்புறம் நாண் ரொட்டி ,குருமா , பிறகு வெஜ் ஃபிரைடு ரைஸ்.. தயிர் பச்சடி..

அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய்  என வெளுத்து வாங்கினோம்..

இந்த சாப்பாட்டை செம எஞ்சாய் பண்ணி சாப்பிட்டது இம்சை அரசன் பாபு,வெறும்பய ஜெயந்த்,கல்பனா ,நாஞ்சில் மனோ சாரி லேப்டாப் மனோ இந்த செட் தான்.. ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஜாலியா பேசிக்கிட்டே கிண்டல் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டாங்க.. அவங்க என்ன பேசுனாங்க, என்ன கமெண்ட்ஸ் பண்ணாங்க என்பது எல்லாம் இங்கே சொன்னா அது ரொம்ப நீளம் ஆகிடும்.. ஏற்கனவே பதிவை சீக்கிரம் முடிடா ரொம்ப இழுக்காதே என ஏகப்பட்ட மிரட்டல்கள் வருவதால் அவை கட்..

பாபு வும் ,மனோவும் கல்பனாவை மிரட்டி (அன்பு மிரட்டல்) அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா என அதிகாரம் செஞ்சாங்க.. ஏன்னா இவங்க போனா அடிக்கடி வர்றானே அப்டின்னு இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்.. 

நாய்க்குட்டி மனசு,சித்ரா,கவுசல்யா இவங்க ஒரு செட்.. டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாங்க..


பலாபட்டறை சங்கர்,மணிஜி,மணிவண்ணன் ,வலைச்சரம் சீனா,வெடிவால் இவங்க எல்லாம் ரொம்ப நாசூக்கா சாப்பிட்டாங்க..

ஜோசஃபின் அவர் கணவர் கூட  ஸ்டேண்டிங்க்லயே சாப்டாங்க.. அவர் மனைவிக்கு ரொம்ப தான் மரியாதை செலுத்துனார்.. லவ் ஜோடி போல.. நான் கேட்டேன்.. என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்..  ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..

நான் நின்னுட்டே தான் சாப்பிட்டேன்.. ஒரு இடத்துல உக்காந்து சாப்பிட்டா எல்லாரையும் நோட் பண்ண முடியாதே?

சாப்பிட்டு முடிச்ச பிறகு எல்லாரும் குரூப் குரூப்பா ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ஒரு ஃபீலிங்க்..

இறுதி நிகழ்ச்சியா சித்ரா எல்லா பதிவர்களூக்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்தாங்க.. உணவு உலகம் அண்ணன் தான் அவங்க கிட்டே நீங்க கொடுங்கன்னு வேண்டுகோள் விடுத்தார்.. அப்பவே என் மைண்ட் 37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரீன் பதிவர் சித்ரா.. பதிவுலகம் அதிர்ச்சி அப்டின்னு டைட்டில் வெச்சுடலாமா?ன்னு யோசிச்சுது..

சித்ரா கிட்டே பர்மிஷன் கேட்டேன்.. தம்பி.. நீ பதிவர் சந்திப்பு போஸ்ட்டையாவது எந்த கோணங்கித்தனமும் பண்ணாம உருப்படியா எழுதப்பாரு அப்டின்னாங்க.. ஆஹா.. சி.பி போற பக்கம் எல்லாம் பல்பு வாங்கறானே அப்டின்னு நினைச்சுட்டு டைட்டில் ஐடியா கேன்சல்..ஓக்கே அக்கா அப்டின்னுட்டேன்..

அப்புறம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு பிரியா விடை பெற்றோம்.. ( நல்ல வேளை பிரியாங்கற பேர்ல எந்த பதிவரும் இல்லை)


அப்புறம் நான் ,லேப்டாப் மனோ, கோமாளி செல்வா ,லேப் டாப் மனோ மேல நம்பிக்கை இல்லாம அவரோட சம்சாரம் ( தாலி கட்டிய முதல் மனைவி ) பாடிகார்டா அனுப்பின மனோவின் மச்சினன் 4 பேரும் குற்றாலம் போய் வந்தோம்.. அது தனியாக பின்னொரு நாளில் குற்றாலத்தில் கும்மி அடிச்சோம் என்ற தலைப்பில் பதிவு போட்டுக்கலாம்..

இப்போதைக்கு நெல்லை பதிவர் சந்திப்பு போஸ்ட் இனிதே நிறைவு பெறுகிறது.. வாழ்க வளமுடன்,, வாழ்க வையகம்..

டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்..  ..

உதயன் -சந்தானத்தின் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

http://indiatheatres.com/MovieStills%5CUdhayan(1).jpga

10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின்  இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....

சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத்தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்‌ஷன்.. அண்ணன் தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்... 2 கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார்.. சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்.. ஹி ஹி ..


படத்தோட கதை என்னான்னா.. 2 தாதா கோஷ்டி... (அய்யய்யோ.. மறுபடி தாதா கதையா? வுடு ஜூட்.. )  ஒரு தாதா கோஷ்டில ஹீரோயின் அப்பா கணக்குப்பிள்ளை... இன்னொரு தாதா கோஷ்டில ஹீரோவோட அண்ணன் (இவரும் ஒரு ஹீரோ தான் )2 கோஷ்டியும் மாற்றி மாற்றி அடிச்சுக்குது.. இதெல்லாம் இடைவேளைக்குப்பிறகுதான்.. அதுவரை ஹீரோ ஹீரோயின் லவ் காட்சிகள், சந்தானம் காமெடி காட்சிகளை வெச்சு ஒப்பேற்றப்பார்த்திருக்காங்க.. ..ஹூம்... 

60 மார்க் ஃபிகரை 80 மார்க் ஃபிகர் ஆக்கும் ரசவாத வித்தையை ஆடை வடிவமைப்புக்கலைஞரும்,முக ஒப்பனைக்கலைஞரும் பிரமாதமாக கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு சபாஷ்.. ..ஹீரோயின் முகத்தைபார்த்துக்கொண்டே இருக்கலாம்.. சோ க்யூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்‌ஷன் தான் வருது.. 

டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது நம்ம சந்தானம் தான்.. பாம்பு பிடிப்பவராக  டி வி கேமராமேன்களோட அவர் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் பில்டப் சீன்கள் செம காமெடி ரகளை கச்சேரி.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Tz5rh9HRS-3PBw_FWJZnEyQq_NPyq3Pn1EqbVJMlHdl8oONmQaEBbKD0AIbqTMXcUYtEH36zq_uVMXq7QImVfZYM6fGplElBaEL9QP_s8L4LMNIrUxNEpv_SfatCchxePUWLdrZ-EfSt/s1600/Pranitha-+Cute-+Stills+-In-+Udhayan-+Movie-008.jpg



சந்தானம் காமெடியில் பின்னிப்பெடல் எடுத்த காட்சிகள்..

1. எதுக்காக மறுபடியும் அங்கே போய் திரும்பி எண்ட்ரி கொடுக்கறீங்க?


சந்தானம் -  ஹி ஹி பில்டப்ல பேண்ட் ஜிப் போட மறந்துட்டேன்..

2. சந்தானம் - பாம்பை பிடிக்க பரபரப்பா போறேன்.. எதுக்கு கேமராவை முன்னால கொண்டு வர்றீங்க?.. இந்த கீரித்தலையனை கூடவே கூட்டிட்டு போறேன்.. பாம்பை பயமுறுத்த உதவுவான்..

3. சந்தானம் -  அவன் என்ன அபிஷேக் பச்சனா?க்ளோஷப்ஷாட் வைக்க?

4. சந்தானம் -  அடேய்.. பாம்புக்கு எதுக்கு பால், முட்டை இதெல்லாம்? அதென்ன ஜிம்முக்கா போகுது?

5. சந்தானம் -  அடப்பாவிகளா.. இந்நா வரைக்கும் பூட்டாத கதவையா நம்பிட்டு இருந்தீங்க..?நீங்கள்ளாம்......

6. ஹீரோ- சாரி. மிஸ்.. நீங்க ரொம்ப அழகு.. வண்டியை இடிச்சா திரும்பி பார்க்கறீங்க.. அதுக்குத்தான் அடிக்கடி இடிச்சேன்.. அடிக்கடி உங்க முகத்தை பார்க்கலாமே..?

7. ஹலோ.. இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க?

சந்தானம் - ம் ,அழுக்கு பனியனும்,கிழிஞ்ச லுங்கியும் போட்டிருக்கேன்.. பேசுதுங்க பாருங்க.. ஃபோன்ல..

8. சந்தானம் -  சரி சரி.. போடா.. பேண்ட் சர்ட் உனக்கு ஓசி கொடுத்தவன் உன்னை தேடுவான்.. இவரு பெரிய மிஸ்கின் பாரு.. கூலிங்க் க்ளாஸ் போடாம வெளீல வரவே மாட்டாரு.. 

9. ஹீரோ -  இது யாரு ஆண்ட்டி..? உங்க தங்கச்சியா? ஓ சாரி உங்க மகளா?

10. ஹீரோயின் - ஆம்பளைங்களூக்கு உடனே கிடைச்சுட்டா அதனோட அருமை தெரியாது.. ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க.. 

11. மிஸ்.. உங்க பேரென்ன? 

------------------------

ஓ , ஊமையா? சாரிங்க... 

அய்யோ.. என் பேரு பிரியா.. 

12. இப்போ பாருடி.. என் சர்ட் பட்டன் மேல் பட்டனை ஒண்ணு மட்டும் கழட்றேன்.. லோன் சாங்க்‌ஷன் ஆகிடும் பாரு.. ( ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா வாழ்க)

13. சந்தானம் -  மேடம், உள்ளே ஏ சி ஒர்க் ஆகலையா? ஏன் பட்டனை கழட்டி விட்டிருக்கீங்க?

ஸ்டுப்பிட்.. 

டவுட் கேட்டா ஏன் திட்டறீங்க?
14.  என்னப்பா இது சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?

சொல்லாம வந்தா சர்ப்பரைஸ்.. சொல்லிட்டு வந்தா அது மீட்டிங்க்.. 

15. அவ பேரு கூட என்னமோ வர்றியா? போறியா?ன்னு வருமே.. ம் பிரியா.... 


http://movies.vinkas.in/files/2011/06/pranitha-stills.jpg

16. சின்னப்பையன் - அங்க்கிள், எங்க கூட விளையாட வர்றதா சொன்னீங்க?

சந்தானம் -  அது உங்கக்கா கூட இருக்கறப்ப சொன்னது.. இப்போ நீ தனியாத்தானே இருக்கே?

17. சந்தானம் -  கோணியை திட்டுனா சாணிக்கு ஏன் கோபம் வருது?

18. சந்தானம் -  இந்த பொண்ணுங்க எல்லாம் சாக்கு மூட்டைல கால் விட்டு தத்தி தத்தி வர்றாங்க பாருங்க.. இந்த கேமை நிமிர்ந்து பார்த்தா  தெரியாது.. குனிஞ்சு பார்த்தாதான் தெரியும்.. 

19. எத்தனை  பேர் இருந்தாலும் அந்த கூட்டத்துல  பொண்டாட்டி வாசனை புருஷனுக்கு தெரிஞ்சிடும்.. 

20. ஸாரி.. மேடம்,,. நான் வேணும்னு பண்ணலை.. தெரியாம இடிச்சுட்டுது..

இல்லை.. நான் வேணும்னுதான் இடிச்சேன்... ( ஆஹா பெண்ணுக்கு சம உரிமை)

21. சாரி சார்.. யாரும் சாகலை.. சுடுகாடு காலி.. அதனால டியூ கட்ட முடியல.. 

22. ஏய்.. வசந்த்.. நீயா!!!!!!!!!!!

ஏன்? வேற யாரையாவது எதிர்பார்த்தியா?

அது இல்ல.. வீட்டுக்குள்ள எப்படி வந்தே?

வாசல் வழியாத்தான்... 

23. ஹலோ.. பூசாரியா? நீங்க மந்திரிச்சதுல இருந்து என் பொண்ணு ராத்திரில உளர்றதில்லை.. 

வெரிகுட்..
பகல்லயே உளற ஆரம்பிச்சுட்டா.. 

24. சந்தானம் -  வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களைவிட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போறபொண்ணுங்க அதிகம்

25. வோட்கா சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 


சந்தானம் -  மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்தெரியுமா உங்களுக்கு? 

26.  சந்தானம் -  நீயும் சிங்கிள்,நானும் சிங்கிள்.. ஒய் டோண்ட் வீ  கெட் மிங்கிள்?

27. சந்தானம் -  கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு கேட்டதுக்கு ஏன் இந்த கத்து கத்தறா?கற்பழிச்சிருந்தாக்கூட இப்படி கத்தி இருக்க மாட்டா.. போல.. 

28. ஹீரோ - ஹாய்.. ப்ரியா.. நீ பக்கத்துல இருந்து பார்க்கறதை விட தூரத்துல இருந்து பார்க்கறப்பத்தான் அழகா தெரியறே!!


அப்படியா? அப்போ நான் கிளம்பறேன்.. என்னை தூரத்துல இருந்தே ரசிச்சுக்கோ..

29. சந்தானம் - எதுக்கு இத்தனை பொண்ணுங்க? இவங்க எல்லாம் யாரு?

எல்லாரும் என் ஒயிஃப்ங்க தான்.. ஹவுசிங்க் லோன் வாங்கி கட்னதால எல்லாரும் ஹவுசிங்க் ஒயிஃப் ஆகிட்டாங்க.. 

30. சந்தானம் -  டேய்.. உன் கிட்டே கரண்ட் இருக்கறதால தானே லோன் வாங்கி லோன் வாங்கி வீடு கட்டறே..?ஃபீஸ் பிடுங்கிட்டா?

எப்படி பிடுங்குவீங்க..?

இப்படி உதைச்சுத்தான்

அய்யோ.....




http://telugu.go4wallpapers.com/bollywood_babes33/P/Praneetha/PRANEETHA151110a.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது சோ க்யூட் சீன்.. 

2. ஹீரோயின் காதல் வசப்பட்ட முதல் நாள் ஹீரோவின் ரூமில் உடை மாற்றும்போது ஹீரோவின் ஃபோட்டோவை தன் துப்பட்டாவால் மூடும் இடம் கவிதை.. 

3.  இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும் , ஹீரோயின் முக அழகை 100%  மெருகேற்றி காட்டியதும்.. 

4. அபார்ட்மெண்ட்சில் ஹீரோ,ஹீரோயின், சிறுவர் ,சிறுமிகள் கண்னாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை

5. டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது..  ( டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது)





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9cj6niB9z9RrfJSauXmGlKZjIfEkaXdyfrk494h8fzQveXcskW5mp03g96WCI6d1JHTcOHbRSmoycB3sQeSHjdfLbD8XdlqpCbcU1FAGsolZnMEOwsM1SeV53DgX3-uvouXFUnSUfCBc/s1600/Pranitha+new+Hot+Photo+Stills+%25285%2529.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும் ,டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? THE DRESSING SENSE OF THE HERO IS VERY BAD


2. டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடி ரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே  . அது எப்படி? எந்தப்பெண் அப்படி போடுது?

 3. ஹீரோவுக்கு முக உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தத்தெரிவதில்லை என்பதற்காக அவருக்கு படம் பூரா கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டது.. 


 4. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்தவர் திடீர் என யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல என்ற மோசமான டப்பாங்குத்துப்பாடலை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்தது..




http://www.imageboxoffice.com/photos/1024-768/simg34d53c99263536.jpg

இடைவேளைக்குப்பிறகு வன்முறை  ஜாஸ்தி.. 

ஏ , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி .பி .கமெண்ட் - சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்

பலரது வேண்டுகோளுக்கிணங்க  நாட்டுக்கு முக்கியமான தகவல்  ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)

டிஸ்கி - 1 வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்

டிஸ்கி 2 கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது ...