Showing posts with label SHANKAR. Show all posts
Showing posts with label SHANKAR. Show all posts

Thursday, February 02, 2012

ரஜினி முதல்வன்ல நடிச்சிருந்தா..? ஷங்கர் ஷாக் பேட்டி - காமெடி கும்மி

http://www.extramirchi.com/gallery/albums/south/shooting/Endhiran_location/normal_Shankar,_Rajini_and_Aishwarya_Rai_at_endhiran_the_robot_on_location.jpg

1 'முதல்வன்’ படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''


சி.பி - மாஸ் ஹீரோவை வளைச்சுப்போட்டிட்ருந்தா  மாளாத காசு பார்த்திருக்கலாம், ஒரு அள்ளு அள்ளிடலாம்னு நினைச்சிருப்பாரு.. ஜஸ்ட் மிஸ்.. வேற என்ன பெரிசா நினைக்கப்போறாரு?

 '' 'முதல்வன்’ கதை ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, 'இதை இப்போ செய்ய வேண்டாம். கொஞ்ச காலம் கழிச்சு செய்யலாம். அதுக்குள்ள நீங்க 'அழகிய குயிலே’ படத்தை எடுங்க’னு சொன்னார். எனக்குப் பெரிய ஏமாற்றம். நானும் 'அழகிய குயிலே’, வேற சில கதைகளை யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, எதுலயும் என் மனசு லயிக்கலை. பத்தாவது மாச கர்ப்பத்தைச் சுமக்கும் தாயைப் போல 'முதல்வன்’ கதையைச் சுமந்துட்டு இருந்தேன். அந்தக் குழந்தை யைப் பிரசவிக்காமல் இன்னொரு கருவைச் சுமக்க நினைக்கிறது சாத்தியம் இல்லாத காரியமா தோணுச்சு. அதான் உடனே அர்ஜுனை வெச்சு முதல்வனை முடிச்சேன்!''


சி.பி - சூப்பர் ஸ்டார் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் எப்போதும் சுணக்கம் காட்டுபவரே.. கலைஞர்-ஜெ இருவரிடமும் இணக்கமா இருக்கனும்னு நினைக்கறாரு.. இந்தக்காலத்துல எல்லார்ட்டயும் நல்ல பேர் எடுக்கனும்கறதுக்காக தன்னோட சுய அடையாளத்தை தொலைச்சவங்க நிறைய பேரு, அதுல ரஜினியும் ஒருத்தர்..


'2. 'உங்கள் முதல் கதை 'அழகிய குயிலே’ இன்னும் தயாரிக்கப்படாமலேயே இருக்குனு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீங்க. அதை நீங்க நினைச்சா இப்போ தயாரிச்சு இயக்கலாமே... தயக்கம் என்ன?''



சி.பி -  அவரையும் அறியாம பிரம்மாண்டம்கற லேபிள் ஒட்டிக்கிச்சு, வெளீல வர முடியல..  அவருக்குள்ள இருக்கற அந்த அழகியல் ரசனை கலையை  பிரம்மனால் வெளீல கொண்டு வர முடியாமயே போச்சு..

 '' 'அழகிய குயிலே’வை 'ஜென்டில்மேன்’ முடிச்சு ரெண்டாவதா செய்யலாம்னு கே.டி.குஞ்சுமோன் சொல்லியிருந்தார். அப்புறம், 'காதலன்’ முடிச்சுட்டு செய்யலாம்னு தலைப்பைக்கூட ரெஜிஸ்டர் செஞ்சார். ஆனா, அப்போ சந்தர்ப்பம் அமையலை. என் முதல் இரண்டு படங்களின் பரம ரசிகரான தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமும் லஞ்சத்துக்கு எதிரான 'இந்தியன்’ படத்தை நான் இயக்குவதையே விரும்பினார். சரி, 'ஜீன்ஸ்’ முடிச்சுட்டு சொந்தத் தயாரிப்பில் 'அழகிய குயிலே’வை இயக்கலாம்னு நினைச்சேன். 
எழுத்தாளர் சுஜாதாகிட்ட இதைப் பத்திப் பேசினப்ப, 'நீங்க குயிலை எல்லாம் கடந்துவந்துட்டீங்க... இந்த வயசுல பெரிய பெரிய விஷயங் களை எல்லாம் படம் பண்ணக்கூடிய சாத்தியம் இருக்கும்போது, 'அழகிய குயிலே’வை ஆற அமரச் செய்துக்கலாம்’னார். என்னோட நண்பர்கள், நலம்விரும்பிகள் எல்லாரும்கூட, 'பாறையைத் தூக்க முடியும்போது, ஏன் முட்டையைத் தூக்கணும்’னு சொன்னாங்க. இன்னும் நான் ஆறவும் இல்லை... அமரவும் இல்லைனு நினைக்கிறேன்!''


சி.பி -  பாறையையே தூக்குன நீங்க இப்போ முட்டையை தூக்குனா என்ன? அட்லீஸ்ட் உங்க அசிஸ்டெண்ட்ஸை வெச்சாவது தூக்கலாமே? நோ டைரக்‌ஷன், ஒன்லி புரொடக்‌ஷன்கற ஃபார்முலாவுல வசந்த பாலனை வெச்சு அந்த படத்தை எடுங்களேன்..


http://tamilmovienews.in/wp-content/uploads/2011/12/shankar-vijay-nanban.jpg
3. ''மிகவும் நல்ல படங்களை 'எஸ் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் வழங்கினீர்கள்... இடையில் ஏன் இடைவெளி? மீண்டும் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?''


சி.பி -  நல்ல படம் எடுத்தா நல்ல பேரு கிடைக்கும் , சோறு கிடைக்குமா?



''நல்ல படங்கள் எடுக்கணும்கிற என் எண்ணத்துக்குப் பல சோதனைகள். ஒருபக்கம் நான் இயக்கும் படங்கள் என் நேரத்தையும் சக்தியையும் முழுமையா எடுத்துக்கிச்சு. இன்னொரு பக்கம் வியாபாரமும் போட்டியும் நிறைஞ்ச இந்த சினிமா உலகத்துல இத்தனை வருஷ அனுபவம் இருந்தும் கடந்த மூணு வருஷமா நான் திக்கித் திண்டாடினேன் என்பதுதான் கசப்பான உண்மை. கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் நஷ்டம்!


ஒருகட்டத்தில், இனி படங்களே தயாரிக் கக் கூடாதுங்கிற முடிவுக்கே நான் வந்துட் டேன். 'காதல்’, 'புலிகேசி’, 'வெயில்’மாதிரி யான நல்ல படங்களைத் தயாரிச்சு நான் சம்பாதிச்சதைவிட, இழந்ததே அதிகம். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பிரச்னைகள்ல இருந்து விடுபட்டுக்கிட்டு இருக்கேன். 'என்ன ஆனாலும் சரி... நல்ல படங்கள் எடுக்கணும்’கிற ஆசை இன்னும் என்னைவிட்டு ஒரேயடியாப் போகலை. மறுபடியும் கதைகள் கேட்க ஆரம்பிச்சு இருக்கேன். நல்ல கதைக்காக நானும் ரசனையான

தயாரிப்பாளருக்காக எங்கேயோ நல்ல கதைகளும் காத்துட்டு இருக்கோம். சரியா கமிட் ஆகிடுச்சுன்னா, அதிரடியை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!''




சி.பி - வெயில் லாஸ் ஆச்சுன்னு சொல்லுங்க ஒத்துக்கலாம், ஆனா கொஞ்சம் கூட செலவே பண்ணாத காதல் படம் எப்படி லாஸ் ஆகும், செமயா ஓடுச்சே, இம்சை அரசன் 23ம் புலிகேசி ஏ , பி சி என 3 செண்ட்டர்லயும் ஓடுச்சே?இன்கம்டேக்ஸ் காரன் கிட்டே சொல்ற புலம்பல் கணக்கை நம்ம கிட்டேயும் சொன்னா எப்படி சார்? 




4. ''சங்கர் ஏன் ஷங்கர் ஆனார்?''


சி.பி -  எல்லாம் நியூமராலஜி தான், அது கோடம்பாக்கத்தை பிடித்த சாபக்கேடு.. டி ராஜேந்தர் விஜய டி ஆர் ஆனதும் சிம்பு எஸ் டி ஆர் ஆனதும்,  S V சேகர்  S Ve சேகர் ஆனதும் இந்த செண்ட்டிமெண்ட்லதான்..


 ''நான் 'சங்கர்’ ஆக இருக்கும்போது ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வருவாங்க. கிராமத்துல இருந்துலாம் வருவாங்க. எல்லாரும் என்னை 'ச்சங்கர்... ஸங்கர்’னு கூப்பிடுவாங்க. இன்னும் சிலரோ ஒரு படி மேல போய் 'ஸங்கரு... ஸங்கரு தம்பி’னு பாசமாக் கூப்பிடுவாங்க. 'சங்கர்’ல வர்ற 'ச’வை 'sa’-ன்னோ, 'cha’-ன்னோதான் உச்சரிக்க முடியுது. 'ஷங்கர்’ல இருக்குற 'ஷ’ உச்சரிப்பு வரணும்னும், 'என்னைக் கொஞ்சம் கவனிங்க (!)’ன்னும் அசோசியேட் டைரக்டரானதும் டைட்டில் கார்டுல 'ஷங்க்கர்’னு போட்டுக்கிட்டேன். 'ஓ... ரொம்ப ஓவரா அழுத்திட்டமோ’னு அடுத்த படத்துல 'க்’கை கட் பண்ணிட்டு 'ஷங்கர்’னு போட்டேன்.


'ச’வை 'ஷ’னு மாத்தினதுக்கே நீங்க இந்தக் கேள்வி கேட்கிறீங்க. இது சின்ன மாற்றம். நான் பரவாயில்லைனு சொல்ற மாதிரி, என் அசிஸ்டென்ட் ஒருத்தன் வந்துட்டு இருக்கான். பேரு 'அட்லீ’ (ஒரிஜினல் பேரு அருண்குமார்). நல்ல்ல்லாக் கவனிங்ங்ங்க!''


சி.பி -  தன்னை மற்றவங்க கிட்டே இருந்து தனித்து காட்டனும் சம் திங்க் டிஃப்ரண்ட் ஃப்ரம் அதர்ஸ்னு சொல்ல வைக்கனும்னு மனிதர்கள் படும் பாடு இருக்கே..




5. ''தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகளுக்கு, திரையுலகத்தினர் சார்பா கப் போராட்டம் நடக்கும்போது நீங்கள் அதில் முனைப்புடன் கலந்துகொள்வது இல்லையே... ஏன்?''



சி.பி -  ஒரு நல்ல படைப்பாளி போராளி ஆகனுமா?ன்னு அண்ணன் யோசிச்சிருப்பாரு..


 ''காவிரிப் பிரச்னைக்காகத் திரையுலகமே நெய்வேலியில் திரண்டபோதுகூட நானும் கலந்துக்கிட்டேனே? மேடைல பேசறப்ப, 'தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தா, இந்த தேசமே திரும்பிப் பார்க்கும். பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கு’னும் சொல்லி இருந்தேன்.


அந்தக் காட்சியை அப்படியே கொஞ்சம் விஷ§வலா யோசிச்சுப் பாருங்களேன்... ஒவ்வொரு வீடு முன்னாடியும் அந்தந்தக் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்காங்க. கேமரா ஒரு வீட்டு வாசல்ல இருந்து ஜூம் பேக் ஆகி, தெரு மொத்தத்தையும் காமிக்குது. அப்படியே கேமரா இன்னும் மேல போய் ஹெலிகாப்டர் ஷாட்ல அந்த ஏரியா முழுசையும் காட்டுது... இன்னும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல மேல போய், மொத்தத் தமிழ்நாட்டையும் காண்பிக்கும்போது எப்படி இருக்... டைரக்டர்ர்ர்ர்ர்...கட்!''


சி.பி - கேட்ட கேள்வி என்ன அண்ணன் சொல்ற பதில் என்ன? நல்லா நழுவறாங்கப்பா.. அண்ணன் மீன ராசின்னு நினைக்கறேன்..



6. ''உங்களுக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்... ஏன்?''

 ''இயக்குநர் மகேந்திரன்!
உலக சினிமாக்கள் பரிச்சயமாகாத அந்தக் காலகட்டத்திலேயே யதார்த்தமாகவும் மெல்லிய உணர்வுகளால் மனதை வருடுவதாகவும் வந்த 'உதிரிப் பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'முள்ளும் மலரும்’ போன்ற படங்களின் தரத்தை நினைச்சுப் பாருங்க. சான்ஸே இல்லை!


எனக்கு அவருடைய படங்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். 'சினிமா இயக்குநர் ஆகணும்... இதுமாதிரி  படங்களை இயக்கணும்’னு மனசுக்குள் ஒரு விதை விழுவதற்குத் தூண்டுகோலா இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.


இப்போதைய இயக்குநர்கள்னு யோசிச்சா... பல நல்ல இயக்குநர்களில் எனக்கு வசந்தபாலனைப் பிடிக்கும். தனக்குனு ஒரு தனி ரூட் பிடிச்சுக்கிட்டு 'வெயில்’, 'அங்காடித் தெரு’, 'அரவான்’னு ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமான படங்களா, உலக சினிமா வரிசையில் இடம்பெறக் கூடிய அற்புதமான படங்களாக் கொடுத்துட்டு இருக்கார்!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgNEMJ2IWWb9f7akwSm3sHyUtiygf6Lxiwh5QpWZ9OgdfNaiD3yZnVCqsA8Xpip7H82dNGL6HphM82S71Yub3ZV6uDzixd0sqFARGbSzHOAnv1r_mzVMFJDbF5QLNg2NFgx5f2_7JoKrg/


7. ''உங்களுடைய பெரும்பாலான படங்கள், தனி மனித சாகசங்கள் மூலம் சமூக மாற்றம் சாத்தியம் என்பதுபோல காட்டுகின்றன. நடைமுறையில் இது எந்த அளவுக்குச் சாத்தியம்?''


 ''அண்ணா ஹஜாரே ஒரு 'இந்தியன் தாத்தா’னு விகடனும் மற்ற ஊடகங்களும் குறிப்பிட்டு இருந்தது, ஒரு ஃபிலிம் மேக்கரா எனக்கு அன்லிமிடெட் சந்தோஷம் கொடுத்துச்சு! எந்த ஒரு சமூக மாற்றமும் ஒரு தனி மனிதனின் சிந்தனையில் இருந்துதான் பிறக்குது. ஒவ்வொருவருடைய சிந்தனையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் வெவ்வேறு அளவுகள்ல இருக்கும். ரெண்டரை மணி நேர சினிமாவில் அதைக் கொஞ்சம் பெரிசாக் காட்ட வேண்டியிருக்கு. அவ்வளவுதான்!''


சி.பி - ஹீரோ ஒர்ஷிப் தமிழனை மழுங்கடிக்கும் கலாச்சாரம்


அடுத்த வாரம்
 
''மாட்டிக்கிட்டீங்களா... உங்கள் ஹீரோக்களில் 'தி பெஸ்ட்யார்? ஹீரோயின்களில் 'தி பெஸ்ட்யார்? நழுவாதீர்கள்... நச்செனப் பதில் சொல்லுங்கள்?''


''மாஸ் ஹீரோ, புதிதாக வந்த கிளாமர் ஹீரோயின், மிகப் பெரிய பட்ஜெட், சமூக அக்கறை என்ற கோட்டிங் தடவிய மசாலா கதை, பரவலாக பாமரனுக்குத் தெரியாத சில விநோத விஷயங்கள், சில மாடர்ன் டிஜிட்டல் பாடல், ஒரு டண்டணக்க தெலுங்கு பீட் பாடல், பத்திரிகை, டி.வி. விமர்சனங்கள் வெளிவரும் முன்னரே 'கார்பெட் பாம்பிங்முறையில் ஏகப்பட்ட பிரின்ட் போட்டு, முதல் சில நாட்களிலேயே பணத்தை அள்ளும் உத்தி... இதுதானே 'ஷங்கர் ஃபார்முலா’? விடையாக... 'நண்பன் ரீ-மேக்என்று சொல்லக் கூடாது... சென்சிபிள் பதில் தேவை ஷங்கர்ஜி!


''மணிரத்னமே கைவிட்ட 'பொன்னியின் செல்வன்புராஜெக்ட்டை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும், ஆத்தென்டிக்காகவும் எடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே என்பது என் எண்ணம்... அப்படி ஒரு 'மேக்னம் ஓப்பஸ்எடுக்கத் துணிச்சல் இருக்கிறதா?''

தொடரும்

Thursday, September 01, 2011

விஜய்-ன் நண்பன் 3 இடியட்ஸ்ஸை ஓவர்டேக்குமா? இயக்குநர் ஷங்கர் பேட்டி - காமெடி கும்மி

http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-News/Nanban-Ileana-Latest-Photos-Pictures-Wallpapers-Nanban-Girl-Ileana-Stills-Nanban-Ileana-Photos.jpg 
 
இந்தியன் பார்ட் 2 ஹீரோ அண்ணா ஹஜாரே!

சர்ப்ரைஸ் ஷங்கர்
 
ப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!

சி.பி - சொந்தப்படம்னா லோ பட்ஜெட், அடுத்தவன் தயாரிப்புன்னா மெகா பட்ஜெட் , நல்ல கொள்கை.. 


1. '' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''

சி.பி - அநீதியை தட்டி கேட்கும் வெட்டி ஹீரோ கான்செப்டையே எத்தனை நாளுக்கு எடுக்கறது?அண்ணனுக்கே போரடிச்சிருக்கும்.. 

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/02/Anuya-the-mystery-woman-in-Nanban.png


'' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.


சி.பி - ஹிந்திப்படத்தையே 3 தடவை பார்த்துட்டாங்களா? சுத்தம்,அப்புறம் உங்க தமிழ் ரீமேக் பார்க்கறப்ப போர் அடிக்குதும்பாங்களே?

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!''


சி.பி - எடிட்டிங்க் டேபிள்ல மட்டும் இல்ல உங்க பட ஓப்பனிங்க்கும் செம ரஷ்தான்.. 


2. ''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''

சி.பி - அப்போ ஸ்ரீவித்யாவுக்கு சோப்பு போட்டுட்டு இருந்திருப்பாரு, (ரசிகன்) இப்போ அவரோட ரசிகர்களுக்கே அரசியலுக்கு வர வேண்டி சோப் போட ரெடி பண்ணிட்டு இருக்காரு. 




''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''

சி.பி - கிராஃபிக்ஸ் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க, பல டைம் அது ஓவர் டோஸ் ஆகி ஒரிஜினிலை, ஒரிஜினாலிட்டியை குறைச்சுடுது. 

3. '' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?''

சி.பி - எகிறவெல்லாம் இல்லை. கோ பட ஹிட்டால கே வி ஆனந்துக்குத்தான் வேல்யூ ஏறி இருக்கு, ரவுத்திரம் ஓடாததால ஜீவா கோ படத்தால கிடைச்ச மார்க்கெட்டை கொஞ்சம் இழந்திருக்கார். 

''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!''

சி.பி - அவர் நடிப்பெல்லாம் கரெக்ட் தான், ஆனா ஆக்‌ஷன் ஹீரோ ஆக இப்பவே அவசரப்படறார், அதன் மைனஸ்.. 

4. ''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...''


''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''

சி.பி - நேச்சுரலி அவர் பொண்டாட்டிக்கு பயந்த புள்ள ஆச்சே?

5. '' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?''

சி.பி - சம்பளம்தான் படுத்தி இருக்கும்... மற்றபடி ஒண்ணும் பெரிய எக்ஸ்ட்ரா ஒர்க் இருந்திருக்காது. 


''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!''


சி.பி - எஸ் ஜே சூர்யா நடிக்கறாரா? அய்யய்யோ அப்போ ஏ படமா? இலியானாவுக்கு நீங்க சொல்ற அளவு அவ்வளவு பெரிசெல்லாம் இல்லையே? ஓ ,யூ மீன் கிரேஸ்.. அப்போ சரி.


6. ''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?''

சி.பி - எல்லாம் சம்பளப்பிரச்சனைதான், அண்ணன் அடிமாட்டு சம்பளம் பேசி இருப்பாரு. அவங்க உஷாராகி இருப்பாங்க, அணில் மாட்டிக்குச்சு.. 


''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''


சி.பி - அய்யோ எல்லாரும் கிணத்துக்குள்ளயா இருக்காங்க? ஓ! நல்லா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? அப்போ சரி.. 

7. ''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?''

சி.பி - உங்களுக்கென்ன ஈஸியா கேட்டுட்டு போயிடுவீங்க, சம்பளம் யாரு தருவா? அப்புறம் அண்ணன் தலைல துண்டு போட்டுக்கனும்.. 


''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!''

சி.பி - பதார்த்தமா சம்பளத்தைத்தான் யதார்த்தம்னு அண்ணன் சொல்றார். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்.. 

8. ''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''

 சி.பி - அன்னா ஹசாரே கதையை எடுத்தா கடத்தல், கொலை எதையும் காட்ட முடியாதே? வெறும் உண்ணா விரதத்தை மக்கள் பொறுமையா உக்காந்து பார்ப்பாங்களா?

''ஆமாங்க... அண்ணா ஹஜாரேவை 'இந்தியன் தாத்தா’னு விகடனில் எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹஜாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!


இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''

 சி.பி - ஏ எம் ரத்னம் பாவம், மாட்னாரு.. 


http://hothotbuzz.com/wp-content/gallery/ileana/lrg-8082-illiana-029.jpg

9. ''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?''


''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!''


சி.பி - ஆரண்ய காண்டம் ஓடாததுக்கு முக்கிய காரணம் பெண்கள் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ஓவர். நீங்க பண்ணுன பாய்ஸ் மாதிரி. பல பிளஸ்களை சில மைன்ஸ் கள் அடிச்சு கரை சேர்க்க விடாம பண்ணிடுச்சு.


10. ''ரஜினி உடல்நிலை பத்தி விசாரிச்சீங்களா?''


''ஒருநாள் திடீர்னு ஐ.எஸ்.டி. நம்பர்ல இருந்து கால். ரஜினி சாரா இருக்குமோனு நினைச்சு அட்டெண்ட் பண்ணா... ரஜினியேதான்!

'நல்லாயிட்டேன் ஷங்கர். ஃப்ரீயா சந்திக்கலாம். 'நண்பன்’ பார்க்க ஆசையா இருக்கேன்’னு சொன்னார். 17-ம் தேதி போன் பண்ணி 'ஹேப்பி பர்த் டே’ சொன்னார். அவர் சௌகரியமாகி, அவருக்கு சௌகரியமா இருக்கும்போது... பார்க்கலாம்!''


சி.பி - அப்படியே ராணாக்குப்பிறகு  2 பேரும் சேர்ந்து பண்ண ஒரு பிராஜக்ட்கு பிட் போட்டு பாருங்க

thanx - vikatan