Showing posts with label ஷங்கர். Show all posts
Showing posts with label ஷங்கர். Show all posts

Thursday, December 25, 2014

கப்பல் - இயக்குனர் ஷங்கரைக்கவர்ந்தது ஏன்? -மயிலாடுதுறை மாப்ளை கார்த்தி ஜி.கிரிஷ் பேட்டி

‘கப்பல்’… ஓர் அறிமுக இயக்குநரின் படத்துக்கு நாளுக்கு நாள் எகிறி வருகிறது எதிர்பார்ப்புகள்! ஷங்கரின் உதவியாளரான கார்த்தி ஜி.கிரிஷுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. திரைப்படக் கல்லூரி படிப்புக்குப் பின் “சிவாஜி’, “எந்திரன்’ என இரண்டு படங்களில் வேலை பார்த்த அனுபவத்தோடு கோடம்பாக்கம் நுழைந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஷங்கரின் “எஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தை வாங்கி வெளியிடுவதால் பரவசமும், உற்சாகமும் சூழ்ந்திருக்கிறது கார்த்தி ஜி.கிரிஷின் முகத்தில்…



ஸ்டில்ஸ்… டிரெய்லர் எதிலும் பெரிய வித்தியாசம் தெரியலை… இருந்தும், இந்தப் படத்தில் எந்த அம்சம் ஷங்கரை கவர்ந்திருக்கும்….?



எல்லா இடங்களிலும் இழையோடி இருக்கும் நகைச்சுவை தான் இதன் சிறப்பம்சம். அந்த விஷயம்தான் ஷங்கர் சாரை வெகுவாக கவர்ந்திருக்கும். பிரம்மாண்டம், சீரியஸ் என அவர் படங்களின் பேசு பொருள்கள் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், ஷங்கர் சாருக்கு உள்ள க்யூமர் சென்ஸ் அபாரமானது. பத்து நிமிடங்கள் அவரிடம் நெருங்கிப் பேசினால், ஷங்கரா இப்படி? என்று நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போகலாம். “ஜீன்ஸ்’ கதைக்கு அவர் முதலில் தேடிப் பிடித்த ஆள் யார் தெரியுமா? கவுண்டமணி. இரட்டை வேடங்களில் கவுண்டமணியை அந்தப்படத்தில் நடிக்க வைப்பதுதான் ஷங்கர் சாரின் திட்டம். ஆனால்,அந்த சமயத்தில் கவுண்டமணி பிஸி. கால்ஷீட் கிடைக்கவில்லை. திட்டமிட்ட நாள்களுக்குள் முடித்தாக வேண்டிய படம் அது என்பதால், நடிகர்களைத் தொடர்ந்து, கதையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இப்போதும் காமெடி படங்களின் தீவிர ரசிகர் ஷங்கர் சார். அந்த மாதிரியான அம்சங்கள் இதில் அவரை கவர்ந்து இழுத்திருப்பதாக நினைக்கிறேன்.



ஷங்கரின் உதவியாளர்கள் பெரும்பாலும் காதல், காமெடி என்றுதானே கதையைத் தொட்டுப் பிடிக்கிறார்கள்….? நீங்கள் கூட இப்போது காமெடி…?




இது எனக்கு முதல் டெஸ்ட். எந்த விஷயத்திலும் தீர்மானமாக இறங்க முடியாது. வியாபாரம் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு வித கவனம் தேவை. அப்படியொரு விஷயம்தான் இதில் நடந்தேறி இருக்கிறது. எதையும் இங்கே வலிந்து திணிக்க முடியாது. தமிழ் சினிமா ரசிகன் மனதில் இன்றைக்கும் நட்பை பேசும் படங்களுக்கு இடம் உண்டு. அது மாதிரியான பாணியில் ஒரு கதை பிடித்தேன். மயிலாடுதுறை மாதிரி ஒரு சின்ன நகரத்திலிருந்து சென்னை மாதிரி பெரிய நகரம் வரும் நண்பர்களின் கதை. பிரியம், விருப்பம், ஆறுதல், அக்கறை என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடாமலே சில நேரங்களில் குறுகி விடுகிறோம். நாகரிக விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தக் காலக் கட்டத்திலும் அதே அன்பு, அதே நல்லியல்புகளுடன் நட்பை போற்றிப் பாதுகாக்கும் சிலருக்கு இங்கே ஒரு பிரச்னை. அந்த பிரச்னைகளிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? அது என்ன பிரச்னை என்பதுதான் திரைக்கதையின் உள்ளுக்குள் இருக்கும் சிறப்புகள். வாய் விட்டு சிரித்த பின்னர் கண்களின் ஓரம் கசிந்திருக்குமே ஈரம் அது போன்ற உணர்வு இது.




நடிகர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது…?




நடிகர்களின் தேர்வுக்குதான் அதிக நாள் பிடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கலர் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். காமெடி படம் என்றாலே, இங்கே நாலைந்து ஹீரோக்கள் ஞாபகத்துக்கு வந்து விடுகிறார்கள். அவர்களையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது இதில் நான் கடைப்பிடித்த முதல் விதி. தெரிந்த முகம், ஆனால் இதுவரை இல்லாத நடிப்பு என்பதுதான் ஹீரோ தேர்வுக்கு நான் வைத்திருந்த ஐடியா. அந்த இடத்தில் வைபவை பொருத்தி பார்த்தேன். நினைத்தபடி அதற்கு பொருந்தி வந்தார். லுக், மேனரிஸம் எல்லாவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வந்து பார்த்தால், நான் நினைக்கிற சினிமாவுக்கு ஏற்ற ஆளாக இருந்து போனார். ஹீரோயின் வேடத்துக்கு சோனம் பஜ்வா மும்பை இறக்குமதி. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடிப்பார். முக்கிய வேடத்துக்கு கருணாகரன், அர்ஜூன், விடிவி கணேஷ். இதைத் தவிர இன்னும் பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். இது என் முதல் படம். அதை நினைத்தபடி எடுப்பதற்கு இந்த கலைஞர்களின் பங்கு முக்கியமானது.




ஷங்கர் கூட இரண்டு படம்…. அது மட்டுமே முழு சினிமா பயணத்துக்கும் போதுமானதா…?

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவன் நான். கல்லூரி நாள் மேடைகள் எல்லாவற்றிலும் எனக்கே கைத்தட்டல்கள். அந்த கைத்தட்டலின் ருசி பிடித்து போனதால் அதைத் தக்க வைத்துக் கொள்ள மனசு விரும்பியது. திரைப்படக் கல்லூரியில் படித்தால் போதும், இயக்குநராகி விடலாம் என்பதுதான் அப்போதைய திட்டம். ஆனால் அது மட்டுமே போதாது என்பதுதான் ஷங்கர் சாரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம்.

ஷங்கர் சாரின் உதவியாளர் நேர்முகத் தேர்வுக்கு நேற்று போனது போல் இருக்கிறது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 400 பேரில் நான் உள்ளிட்ட சிலர்தான் தேர்வானோம். ஷங்கர் சார் எனக்கு கற்றுக் கொடுத்தது கணக்கு வழக்கே இல்லை. “சிவாஜி’, “எந்திரன்’ இரண்டு படங்களில் வேலை பார்த்தது 200 படங்களில் வேலை பார்த்ததற்குச் சமம். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு இன்னும் பத்து படங்கள் இயக்கலாம். எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்க்க அழைத்தேன். பார்த்தவர் விழுந்து விழுந்து சிரித்தார். கொஞ்ச நேரத்தில் இதை நானே ரிலீஸ் செய்யலாம் என இருக்கிறேன் என சொன்னார். அவர் என் குரு மட்டுமல்ல. அதற்கும் மேலே…

- ஜி.அசோக்.

நன்றி  - தினமணி 

Sunday, September 14, 2014

ஐ - ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம்- விக்ரம் பேட்டி

ஐ' படத்தின் கதை எதைப் பற்றியது என்று நடிகர் விக்ரம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசையினை அர்னால்ட் வெளியிட இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ் திரையுலக பிரபலங்கள் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.15ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது. 


இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'. 


இது ழுழுக்க முழுக்க ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான். ஒரு நடிகனாக, நடிப்பதற்கு எனக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். மூன்று முறை இப்படத்திற்காக எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்: பாடலாசிரியர் கபிலனின் ‘ஐ’ அனுபவங்கள்

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் விரும்பும் பாடலாசியர், கபிலன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மூன்று பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வருகிறது. ‘உன் சமையல் அறையில் உப்பா? சர்க்கரையா?’, ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’, ‘கரிகாலன் காலப் போல’ ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?’ இப்படி கணக்கிட முடியாத வெற்றிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பாடலாசிரியர் கபிலன் ‘தி இந்து’ வுக்காக அளித்த கவித்துவப் பேட்டி.. 


‘ஐ’ படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது? 


 
‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ‘அந்நியன்’ படம் வழியே ஹாரிஸ் ஜெயராஜிடமும் என்னை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் ஷங்கர். நான் அடுத்தகட்ட உயரத்துக்குச் செல்ல காரணமாக இருந்தவரும் அவரே. ‘ஐ’ படத்துக்காக 



‘‘என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே..
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத்தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர்போல
உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா? 



இப்படியான வரிகளோடு பயணிக்கும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலை பெண் பாத்திரத்துக்கான சிறு மாற்று வரிகள் சேர்த்தும் மற்றொரு பாடலாக எழுதி யிருப்பேன். 



இன்னொரு பாடல் சென்னை பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்த அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பாடல், வடசென்னையைச் சேர்ந்த காதலன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அவர்கள் மொழியிலேயே பாடலை எழுதினேன். கொடக்கானல் மலை உச்சியில் ஷங்கருடன் அமர்ந்து இப்பாடலை எழுதினேன். பாடல் முழுவதும் தயாரானதும் இயக்குநர் ஷங்கர், ‘‘உங்களை உச்சத்துக்குக் கொண்டு போகப்போகிற பாடல் இது’’ என்றார். அந்த வரிகள்தான்.. 



‘‘நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா மூட்டை
ஒரு மாட்டுக்கொம்பு மேல
பட்டாம்பூச்சிபோல..’’ இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். 


இயக்குநர் ஷங்கரோடு நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி? 

 
எளிமையான வரிகளைப் பெறுவதில் இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருடன் அமர்ந்து பாடலுக்கான பல்லவியைப் பிடிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். என்னைக் கேட்டால் பல்லவி என்பது உயிருக்குத் தலை மாதிரி; ரயிலுக்கு இன்ஜின் மாதிரி. அது பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் அடுத்தடுத்து வரிகளைப் பிடிப்பது எளிது. ‘ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டாங்களா!’ என்று ஒரு குழந்தைக்கு கதை சொல்வதைப்போல எளிமையாகப் பாடலுக்கான சூழலை விளக்குபவர், ஷங்கர். ஒரு பாடலை எப்படி படமாக்கத் திட்டம் என்பதில் தொடங்கி பென்சில் பிடித்து படம் வரைந்து விவரிப்பார். பாடலில் நாயகன், நாயகியின் அணிகலன், ஆடைகளின் வண்ணங்கள் இவற்றையெல்லாம் பகிர்வார். அந்த சூழலே நம்மை அற்புதமான மனநிலைக்குக் கொண்டுபோய்விடும்

.
‘தெகிடி’ படத்தின் பாடலில் ஓர் இடத்தில் காதல் இரண்டெழுத்து என்று எழுதியிருக்கிறீர்களே? 

 
‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என்று தொடங்கும் பாடல் அது.
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு…
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும், நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால் காதல் இரண்டெழுத்து…’ 



இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் நகரும். பலர் என்னிடம் அது எப்படி காதல் இரண்டெழுத்து? என நேரடியாகவும், சமூக வலைதளங்களின் வழியாகவும் கேட்கிறார்கள். சங்க இலக்கியத்தில் ‘கா’ என்பதற்கு சோலை என்ற ஒரு பொருள் உள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் காதலர்கள் சோலையில்தான் சந்திப்பார்கள். அடுத்து ‘த’ என்றால் தந்து பெறுதல். காதலர்கள் அன்பைத் தந்து பெறுபவர்களாச்சே. ‘ல்’ என்பது இல்லறம், இல்வாழ்க்கை, குடும்பம். இந்தப்படப்பாடலின் சூழலில் நாயகன், நாயகி இருவரும் காதலர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்காமல்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் ‘காதல்’ இரண்டெழுத்து என்பது சரிதானே. 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் போன்ற கவிஞர்கள் இருந்த சூழலைப் போல இப்போதும் பாடலாசிரியர்கள் மீது அதே மதிப்பு உள்ளதா? 


 
இப்போது பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக வருபவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இசை தெரியாதவர்கள் இசையமைப்பாளராக முடியாது. இன்றைக்கு வேறு துறையில் இருப்பவர்கள் பலர் பொழுதுபோக்காகப் பாடல் எழுதுகிறார்கள். அதற்குப் பெரிதாகத் தொகை எதுவும்கூட வாங்குவதில்லை. ஒரு கவிஞனிடம் அந்தப் பாடலைக் கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பெரியும். இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே இன்று நல்ல பாடல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 



அடுத்த உங்களது புதிய படைப்புகள்? 

 
‘குறில் நெடில்’, ‘நகர்ப்பறை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற கட்டுரைத் தொகுப்பும். எழுதி முடித்துத் தயாராக உள்ளன. இன்னும் வடிவமைப்பு உட்பட சில பணிகள் மட்டும் மீதமுள்ளது. 


கவிஞர் வாலியின் பிரிவு தமிழ்த் திரைத்துறை யில் எந்தமாதிரியான வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது? 

 
ஐந்து தலைமுறைக்குப் பாடல் எழுதிய கவிஞர். எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியவர். நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாக வைத்திருந்தவர். கார்கில் யுத்தம், மின்வெட்டு, நிலக்கரி ஊழல் இப்படி எதையும் பாடல் வழியே பேசியவர். இறுதி நாட்கள் வரைக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடியே போனது. அவரது மறைவின்போது நான் எழுதிய வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..
கடவுள் இருந்திருந்தால்
ஒரு விபூதி சாம்பலாகியிருக்காது. 



உங்கள் பாடல் வரிகள் படத்தின் தலைப்பாக வரும்போது எப்படி உணர்வீர்கள்? 

 
மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். சமீபத்தில்கூட ‘உன் சமையல் அறையில்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வந்தது. என்ன ஒரே ஒரு வருத்தம் மட்டும் உண்டு. ஒரு கவிஞன் எழுதிய பாடல் வரிகளைப் பயன்படுத்தும்போது அந்தக் கவிஞனை அழைத்து அந்தப்படத்தில் பாடல் எழுதச் சொல்லலாமே என்பதுதான் அது. 









thanx - the hindu

Wednesday, October 09, 2013

ரஜினி என் படத்துல வில்லனா நடிப்பாரா? சத்யராஜ் ஷங்கரிடம் கேள்வி -@ த ஹிந்து தமிழ்

நடிகர் சத்யராஜ் 

கண் முன்னே மகளின் காதல் முடிந்துபோனதில் இதயம் நொறுங்கி ‘ முதல் ஹார்ட் அட்டாக்’கை எதிர்கொள்ளும் உயர் தட்டு அப்பா. ஊருக்காக மகளின் காதலை எதிர்த்துவிட்டு, இரவோடு இரவாக பை நிறையப் பணம் கொடுத்துக் காதலனோடு மகளை அனுப்பிவைக்கும் முறுக்கு மீசை அப்பா. மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்விதான் மாணவர்களின் எதிர்காலம் என்று நம்பி, கடைசியில் தனது மாணவனின் தனித்திறமைக்கு மண்டியிடும் பேராசிரியர்...



வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகிப் பிறகு நாயகனாகப் பரிணமித்த சத்யராஜின் தற்போதைய மென்மையான திரை முகங்கள்தான் இவை. ‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களில் சத்தியாராஜின் குணசித்திரம் பார்த்து, நம்ம அப்பாவும் இப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஏங்காத இளம் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.



பசுமை போர்த்திய கோவையில், தாவரவியல் பட்டதாரியாகக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எம்.ஜிஆரின் தீவிர ரசிகராகச் சுற்றிக்கொண்டிருந்தார் ரங்கராஜ். கோவையை அடுத்த கோபிச்செட்டிப்ப்பாளைத்தில் நடந்த ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பு அவரைச் சுண்டி இழுத்துவிட்டது. பிறகு சென்னை வந்து, கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இணைந்தார். போதிய நாடக அனுபவங்கள் கிடைக்கும் முன்பே, சினிமா அரவணைத்துக்கொள்ள, ரங்கராஜ் சத்தியராஜ் ஆனார்.



1978இல் ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரை, ரசிகர்கள் சபிக்கும் அளவுக்குத் தமிழ் சினிமா வில்லன் கதாபாத்திரங்களில் வலிக்க வலிக்க முத்திரை குத்தியது. இவரது கல்லூரி நண்பரான இயக்குனர் மணிவண்ணன் ‘24 மணிநேரம்’ படத்தின் மூலம் இவரை திகிலான வில்லன் ஆக்கினார். அந்தப் படத்தில் “ என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே?” என்று சத்தியராஜ் பேசிய வசனமும் அதைப் பேசிய விதமும், அவரது அடையாளமாகவே மாறிவிட்டன.



நக்கலும் பகடியும் மிக்க வில்லன்னாக வலம் வந்த சத்யராஜை அதே மணிவண்ணன் ‘முதல் வசந்தம்’ படத்தில் ‘குங்குமப் பொட்டு’ கவுண்டராக ஆக்கி, குணசித்திர வில்னனாக மாற்றினார். சத்தியராஜுக்கு இப்படியும் ஒரு முகம் உண்டா என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் படத்தை.



“நடிகர் சத்தியராஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே மணிவண்ணன்தான். மணிவண்ணன் இல்லையென்றால் சத்தியராஜ் இல்லை. அவர் என்னை நடிகனாக மட்டும் ஆக்கவில்லை. வாசகனாகவும் மாற்றினார். சே குவேராவையும், ஹோசிமினையும் படிக்க வைத்தார். என்னை வரலாற்று மாணவன் ஆக்கினார்” என்று நெகிழும் சத்தியராஜுக்கு மணிவண்ணனின் இழப்பு பெரிய அடி. 



மணிவண்ணனும் சத்தியராஜும் கூட்டணி அமைத்த சுமார் 25 படங்கள், அவர்களுக்கேன்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கின. இவர்களது கூட்டணியில் உருவான ‘அமைதிப் படை’ சமகால அரசியலை நையாண்டி செய்யும் வேலையைச் செய்தது. வால்டர் வெற்றிவேல், மக்கள் என்பக்கம், நடிகன் உள்ளிட்ட படங்கள் அவரை வசூல் நாயகனாகவும் மாற்றின.



ஒரு கட்டத்தில் தனது நக்கல் நையாண்டி நடிப்பு பாணியிலிருந்து விடுபட்டார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’ ஆகியவை சத்தியராஜின் நக்கல் பிம்பத்தைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கிப்போட்டன. “ என்னை கதாபாத்திரமாக மட்டுமே பார்த்து ஏ.எல். விஜய், பொன்.ராம், அட்லீ மாதிரியான இளம் இயக்குனர்கள் நடிக்க கூப்பிடறாங்க. ராஜாராணிக்குப் பிறகு மகளோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற மாலுக்கு ஷாப்பிங் போனேன். 



பெண் பிள்ளைகள் ஒடிவந்து கையப் பிடிச்சுக்கிட்டு உருகுறாங்க. இந்த மாதிரியான ஒரு நெகிழ்ச்சி புதுசா இருக்கு” என்று சிலிர்க்கும் சத்யராஜ், “நிஜத்திலும் நான் நல்ல அப்பாதான்” என்று தன்க்கே உரிய முத்திரையுடன் முடிக்கிறார். தன் திரைப் பயணத்தை இதற்கு முன்பு மடைமாற்றிய மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.



ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கிறீர்களா என்று இயக்குநர் ஷங்கர் கேட்டபோது அவர் என் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பாரா என்று சத்யராஜ் கேட்டதாகச் சொல்வார்கள். அந்த அளவுக்குத் தன் வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாத சுதந்திரக் கலைஞர் சத்யராஜ். ஆனால் அதே ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானாவுக்கு அப்பாவாக நடித்து வித்தியாசமான வேடங்களில் தனக்கிருக்கும் ஈடுபாட்டையும் காட்டினார். அதையடுத்து, முன்னணி நடிகைகளின் பாசமுள்ள அப்பாவாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். தீபிகா படுகோனே, ஸ்ரீவித்யா, நயன்தாரா என்று இந்தப் பட்டியல் தொடர்கிறது.




சத்யராஜ் தற்போது நடித்துவரும் படங்கள் ஹிட் ஆவதில், அப்பா கதாபாத்திரம் என்றால் சத்யராஜ் என்ற சென்டிமெண்ட் உருவாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற சென்டிமென்ட்களில் நம்பிக்கையில்லாத பெரியாரின் தொண்டரான சத்யராஜ் இதைப் பற்றி என்ன நினைப்பார்? ‘ராஜா ராணி’யில் ஒரு இடத்தில் அப்பா சத்யராஜ் சொல்வதுபோல சென்டிமென்ட் எல்லாம் அவருக்கு “செட் ஆகாது”. வில்லன், நாயகன் என்று மாறிவரும் திரை முகங்களில் இதுவும் ஒன்று என்று அவர் கலைப் பயணம் தொடர்கிறது.


நன்றி - த ஹிந்து தமிழ்

Wednesday, March 06, 2013

விஸ்வரூபம் - பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர்

1,விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!

விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர்.

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது

 

 

2. .நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

 விஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. 
 
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

விஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். 
 
 
 
 
 
3.பிரமாண்ட இயக்குனரை மிரட்டிய கமலின் விஸ்வரூபம்! முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. தமிழகம், புதுவை தவிர்த்து பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம் ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.  


தமிழில் சினிமாவைப்பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு இணையான படங்களை தருபவர் என்ற பெருமை இதுவரை டைரக்டர் ஷங்கருக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் கமலின் விஸ்வரூபம் படம் வந்த பிறகு அந்த பெயரை போய் விட்டது. ஷங்கர் படம் ஹாலிவுட் படம் மாதிரி என்றால், கமலின் படம் ஹாலிவுட் படமே என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதோடு, விஸ்வரூபம் படத்தைப்பார்த்த ஷங்கரும் அதிர்ச்சியடைந்து போய் இருக்கிறார். கமல் என்ற நடிகருக்குள் இத்தனை பெரிய இயக்குனரா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அவர், ஒரு டைரக்டராய் நாம் இன்னும் நிறைய யோசிக்க வேண்டும் போலிருக்கிறதே என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.

அதன்காரணமாக, ரஜினியை வைத்து தான் இயக்கிய எந்திரன் படத்தை விடவும் இப்போது விக்ரமைக்கொண்டு இயக்கி வரும் ஐ படத்தை இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். அதனால் இதுவரை 80 கோடி பட்ஜெட்டில் ஐ படத்தை பண்ண பட்ஜெட் போட்டு வைத்திருந்தவர், இப்போது 145 கோடி வரை பட்ஜெட் உயர்த்தியிருக்கிறாராம். அதோடு, படத்தை உலக அளவில் பப்ளிசிட்டி செய்து வெளியிட்டு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
 
 
 
 
4.விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி...?!! -  விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம் தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது. படமும் ஹாலிவுட் தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி,  இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
 
 
 
5.விஸ்வரூபம் 2க்கு பிறகு ஹாலிவுட்! கமல் முடிவு!! விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்தை முடித்த பிறகு ஹாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். பெங்களூருவில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விஸ்வரூபம் பிரச்னையில் திரையுலகம் மற்றும் பத்திரிகைகள் எனக்கு ஆதரவாக இருந்ததாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூப பிரச்னை திடீரென்று பொது பிரச்னையாக மாறி விட்டது. கமல்ஹாசனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டுமா? என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.

பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வாரம் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது. விஸ்வரூபம் இந்தி படம் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் வெளியாகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விஸ்வரூபம் தமிழ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் படத்தை முதலில் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பாக டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு விட்டது. டி.டி.எச். மூலம் படம் வெளியிடும் புதிய முறை இன்று இல்லாவிட்டாலும் நாளை அமலுக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அடுத்தபடியாக ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னேவுடன் பணியாற்ற உள்ளேன். ஆனால், எனது விஸ்வரூபம் படத்தின் 2வது பாகத்தை முடித்த பிறகே அவருடன் பணியாற்றுவேன். இந்த ஆண்டுக்குள் விஸ்வரூபம் 2வது பாகம் வெளியாகும் என்று நம்புகிறேன். அந்த படம் இந்தியாவை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும். ஆனால், விஸ்வரூபம் முதல் பாகத்தை போன்று விமர்சனங்கள் எதுவும் வராத வகையில் பார்த்து கொள்வேன், என்றார்.
 
 
டிஸ்கி - டைட்டிலில் வந்த   பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர் 2ம் தனித்தனி மேட்டர்


Thursday, January 03, 2013

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg

Monday, August 20, 2012

Bicentennial Man (1999) -ஷங்கர்-ன் எந்திரன் -ன் மூலம்- ஒரு பார்வை

http://ecx.images-amazon.com/images/I/51PBTXBTSFL._SL500_AA300_.jpg

ரோபோ, ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலித்தால்? பஸ்களைக் கவிழ்த்து அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்ந்தால்? அப்படியொரு ரோபோ படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது! க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்தப் படத்தின் பெயர் Bicentennial Man.



தமது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ‘ஆண்ட்ரு’ என்கிற ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். சுட்டியாகவும் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை, மார்ட்டினின் மூத்த மகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரிய வெறுப்பின் காரணமாக ரோபோவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால், முயற்சிகள் தோல்வியடைகின்றன. வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும்படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ஆண்ட்ரு, எஜமானியின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.



கோபமடையும் மார்ட்டின், ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு அந்த வீட்டின் ஒரு செல்லப்பிராணி ஆகிறது. ஒரு கட்டத்தில் இன்னொரு உறுப்பினராகவே மாறுகிறது. தவிர, மகள்களின் உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது.


http://images5.fanpop.com/image/photos/25300000/Bicentennial-Man-robin-williams-25340319-2126-1433.jpg

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை உடைத்துவிடும் ஆண்ட்ரு, அதே போன்ற பொம்மையை, தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு, சுயமாகச் சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்துகொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போலத்தானா என்பதை அறிந்து கொள்வதுதான் அவரின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரோபோ சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே, ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.





ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்ட்டின் அதைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதோடு நில்லாமல் மனித உணர்ச்சிகளைப் பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு, உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறுகிறது. மார்ட்டினிடம் இருந்து கற்றுக் கொண்ட மர வேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாகச் சம்பாதிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவுக்குக் கொட்டுகிறது வருமானம். இந்நிலையில் தமக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் வேதனையுடன் அனுமதியளிக்கிறார்.



தம்மைப் போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதைத் தேடி அலையும் ஆண்ட்ரு, கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவுக்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளையமகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக் கையில் இருக்கும்போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு.



அவளுக்காக, சிறு வயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது. அப்போது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்குக் காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தமது காதல் மிகுந்த சொற்களால் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கிறாள்.



அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு ரோபோ. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. பிறகு ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தமக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மனித வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பைப் பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார்; போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காதல்காவியம் முடிவடைகிறது.

http://movie2s.com/aimages/BicentennialMan.jpg



ஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப் படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியது. ஆசை, காதல், கோபம்... என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் தழுவல்தான் ரஜினியின் ‘எந்திரன்’ என்ற பேச்சுக்கூடக் கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக்கூடும். அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.



ரோபோ டான்ஸர்!


ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில செய்தி சேனல்களில் சீனாவில் ஃப்யுஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ரோபோவின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஸோலோ, க்ரூப் டான்ஸ் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ரோபோ டான்ஸர்கள். இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?



முதல் ரோபோ வலது கையை உயர்த்தும்போது மற்ற ரோபோக்களும் வலது கையை உயர்த்தினால்தான் அது க்ரூப் டான்ஸ். இல்லையேல் அது டுமீல் டான்ஸ். முதல் ரோபோ வலது கையை உயர்த்தப் போகிறதா அல்லது தலையை அசைக்கப் போகிறதா என்பதை மற்ற ரோபோக்கள் அறிந்துகொள்ள அவற்றுக்கு இடையே தொடர்பியல் (communication) மிக முக்கியம். இந்தத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ரோபோக்கள் ஃப்ரொபஷனல் டான்ஸர்களாக இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை ஸ்ரேயாவுக்கும், தமன்னாவுக்கும் பதிலாக ரோபோவை ஆட வைத்து விடுவார்களோ என்ற கவலை தேவையில்லை.
http://all-movie-goofs.info/wp-content/uploads/bicentennial-man-movie-still-9.jpg



நன்றி - கல்கி , புலவர் தருமி

Tuesday, March 06, 2012

சுஜாதாவின் வசனம் எழுதும் ஸ்டைல் - ஷங்கர் சிலாகிப்பு பேட்டி

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Shankar-Rajini-and-Aishwarya-Rai-at-endhiran-the-robot-on-location.jpg

1.  ''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

சி.பி - சுஜாதாவின் நாவல்களில் பஞ்ச் கொடுக்கும் ஹீரோயிசம் செமயா இருக்கும்.. வரலாற்று பின்னணியில்  குமுதத்தில் தொடராக வந்த ரத்தம் ஒரே நிறம் நாவலில் கூட அப்படிப்பட்ட பஞ்ச் ஏகத்துக்கும் இருக்கும்..

 ''நாங்க வெளியூருக்கு கதை டிஸ்கஷன் போறதுக்கு முன்னாடி, 'கதை ஃபுல் லைன் ரெடியா இருக்கா, சுபம் போடற வரைக்கும்?’னு கேட்டுக்குவார். டிஸ்கஷன் ஆரம்பிச்சதும் அவர் அமைதியாக் கவனிப்பார். எந்த வசனமோ, கதையோ, காட்சிகளோ, சொல்ல மாட்டார். கதைப் போக்குல, காட்சிகள்ல ஏதாவது சிக்கல் வந்து முக்கி நிக்கிறப்போ மட்டும், எதனால சிக்கல்னு தெளிவுபடுத்தி, 'இந்த ரூட்ல யோசிங்கம்பார். அப்பப்போ சில படங்களையும் சில காட்சிகளையும் ரெஃபரன்ஸுக்கு சுட்டிக்காட்டுவார்.

தீர்க்க முடியாத பிரச்னை ஏதும் வந்தா, மறுநாள் 'Syd Field, Robert Mckee, இவங்க எல்லாம் ஸ்க்ரீன் ரைட்டிங்ல இந்தந்தப் பிரச்னை வந்தா, இந்தந்த சொல்யூஷன் சொல்லியிருக்காங்க. இதை ஃபாலோ பண்ணுங்கம்பார். டிஸ்கஷன் எங்கேயும் தேங்கித் தடை இல்லாம வேகமாப் போறதுக்கு வழிகாட்டுவார். டிஸ்கஷன் முடிஞ்சதும் சீன் ஒண்ணுல இருந்து சுபம் வரைக்கும் என்னை கேசட்ல விவரிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போயிடுவார்.
ஒரே வாரத்துல ஃபர்ஸ்ட் ஹாஃப் வசனம் வந்துடும். அடுத்த வாரத்துல செகண்ட் ஹாஃப் வந்துடும். செம ஃபாஸ்ட். டிஸ்கஷன்ல உள்வாங்கின அத்தனை விஷயங்களையும் தான் நினச்சதையும் சேர்த்து நிறையவே எழுதி விளாசிப் பின்னித் தள்ளியிருப்பார். சுஜாதா சார், படிச்சுக் காமிக்கும்போது அவரோட ஒன் லைனர்களை எல்லாம் கை தட்டி ரசிப்பேன். அவர் எழுதினதுல இருந்து என்னென்ன எந்த அளவுக்குத் தேவையோ எடுத்து, எனக்கு எப்படி வேணுமோ அப்படி ஒரு டிராஃப்ட் எழுதி திருப்பி அவர்கிட்ட அனுப்புவேன். அதுல அவர் ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ராவா இருக்கிற வார்த்தைகளை அடிப்பார். அசிஸ்டென்ட் டைப் பண்ணப்ப விட்டுட்ட க், ச், ஞ், சின்ன '’, பெரிய 'பிழைகளைச் சரிபண்ணி அனுப்புவார். இதான் எங்க வொர்க்கிங் ஸ்டைல்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcLqpbDprP2xq0KA8Z5aEOErP1Te8bASJprQCoaGHxgAcL60zrLuIqYk31X1X9viE0IHt9ev3Q8LTpF5WWUVH-_3ITkRV3SeC6L9mszMZ2fQMBMnz8UewyaklmztdMIeVJPbKAKoJCUNcJ/s320/sujatha_OEA_family_3.jpg
'இந்தியன் சந்துரு (கமல்): 'இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு... இது எங்க அப்பாவுக்குப் புரியல!’
'முதல்வன்க்ளைமாக்ஸ்ல ரகுவரன்: இறக்கும்போது சொல்ற, 'That was a good interview...’
'அந்நியன்: 'தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு... விளைவுகளோட சைஸைப் பாருங்க... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!’
'சிவாஜி ரஜினி சார்: (ஒரு ரூபாயைச் சுண்டி இறந்துகிடக்கும் சுமனின் நெத்தியில் அடித்து) 'இதைக்கூட நீ எடுத்துட்டுப் போக முடியாது...’
'எந்திரன் சிட்டி: 'என்னைப் படைச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...’
- இப்படிப் பல சிரமமான காட்சிகள்ல வர்ற விஷயங்களை ஒரே வரில நச்சுனு சொல்றதுல சுஜாதா சார், சுஜாதா சார்தான்!
அவர் எழுதினதுல எனக்குப் பிடிச்சது 'இந்தியன்தாத்தா பேசற, 'மத்த நாடுகள்ல எல்லாம் லஞ்சம் இருக்கு... அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம்... இங்கதான் கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்கிற வசனம்தான்.
மொத்தப் படத்தோட விஷயமும் வீரியமும் இந்த ஒரே வரியில எவ்வளவு அழகா வந்திருக்கு பாருங்க!''


சி.பி - சுஜாதாவின் இழப்பு இலக்கிய உலகுக்கு மட்டும் அல்ல, சினிமா உலகத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.. அவர் இருந்திருந்தா  இன்னும் பல சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரியும், பல நல்ல சினிமாக்களும் வந்திருக்கும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2uKhlyy1iX7zWgP1XSaf2wO__XiY7Sv10AvW7xxTXY2jAr6JvaBt9jbR5XLtUkqCClIyz76Vf_nWi2EyGGiOp-ni52RcmFCObZBwbLaAT3CU0g7hzbEM5lWDMguNMkKr7QuqcS_nOKv8/s320/rajini_kamal_05.jpg
2. ''ஒரே படத்தில் கமலையும் ரஜினியை யும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''

சி.பி - அவருக்கு எண்ணம் ஆசை எல்லாம் இருக்கு.. கமல் ரஜினி கூட ஓக்கே சொல்லிடலாம், ஆனா தியேட்டர்ல ரசிகர்கள் நிலைமை? கண்டிப்பா கலவரம் தான் வரும்.. 

 '' 'சிவாஜிரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, 'நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும்? நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்னு சொன்னார். 'ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்னு நான் சொன்னேன். 'எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்!
பார்ப்போம்... நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்!''


சி.பி - இதுல என்ன கவனிக்க வேண்டியதுன்னா கமலை ஹீரோவா போட்டு ரஜினியை வில்லனா போட்டாக்கூட ரஜினிதான் ஈசியா பேர் சம்பாதிக்கற மாதிரி அசால்ட்டா ஸ்டைலிஸ் ஆக்டிங்க் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவார்..
3. ''நீங்கள் நன்றாகக் கவிதை எழுது வீர்களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க, ப்ளீஸ்...''
 ''அப்படியா... யார் சொன்னா..?!

- இது கவிதையானு பாருங்க!''

சி.பி - இதை எங்க ஊர்ல மொக்கைம்போம்..

4. ''சினிமாவில் ஓர் இடம் தேடித் தவித்த ஐஸ்வர்யா ராயையும் இயக்கி இருக்கிறீர் கள்... இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்த 'மோஸ்ட் வான்டட் அழகிஐஸ்வர்யா ராய் பச்சனையும் இயக்கி இருக்கிறீர்கள். இரு காலகட்டத்திலும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''


சி.பி - கேள்வி சுத்தி வளைச்சு என்ன கேட்க வருதுன்னா மேரேஜ்க்கு முன்னால மேரேஜ் ஆன பிற்பாடு ஃபிகர்ட்ட என்ன மாற்றம்கறதை கொஞ்சம் நாகரீகமா, சுத்தி வளைச்சு கேக்குது.. 

 
 '' 'ஜீன்ஸ்அவங்களுக்குக் கிட்டத்தட்ட முதல் படம்தான். முதல் நாள் பாடல் ஷூட்டிங்லயே டான்ஸ் ரொம்பப் பிரமாதமா ஆடினாங்க. சீன்ஸ் எடுக்கும்போது எல்லா வசனங்களையும் முதல் நாளே வாங்கிட்டுப் போய்ப் படிச்சிட்டு வருவாங்க. கஷ்டமான காட்சிகள்ல, நடிச்சுக் காட்டச்சொல்லி அதை அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க. சில நாள் லேட்டா வரும்போது கோபமா 'ஏன் லேட்டுனு கேட்டா, 'உடம்பு சரியில்ல... காஸ்ட்யூம் சரியில்லனு சொல்வாங்க. 104 டிகிரி ஜுரம் அடிச்சுத் துவண்டு படுத்திருப்பாங்க. 'ஷாட் ரெடின்னா, அதை வெளிக்காட்டிக்காம உடனே கேமரா முன்னாடி அற்புதமா வொர்க் பண்ணிட்டு, 'கட்சொன்னதும் பொத்துனு போய் பெட்ல விழுந்துடுவாங்க.
உலக அதிசயங்கள்ல பாட்டு எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு நாட்டுல ஷூட் முடிச்சு, சாயங்காலம் ஃப்ளைட் பிடிச்சு இன்னொரு நாட்டுக்குப் போகணும். மிஸ் ஆனா மறுநாள் மொத்த ஷூட்டிங்கும் காலி. மொத்த யூனிட்டும் ஏர்போர்ட் போய், எல்லாரோட லக்கேஜ், எக்யூப்மென்ட்ஸ்லாம் கொண்டுவந்து சேர்த்து, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன்னு புரொடக்ஷன் ஆளுங்க ஒரு பக்கம் குழம்பி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஐஸ்வர்யா ராய் சட்டுனு எல்லாரோட பாஸ்போர்ட், டிக்கெட்லாம் வாங்கிட்டுப்போய் பத்தே நிமிஷத்துல செக் இன், போர்டிங் பாஸ், லக்கேஜ்னு எல்லாத்தையும் ஒரே ஆளா முடிச்சிட்டு வந்து நின்னாங்க. இப்ப நினைச்சுப்பார்த்தாலும், எப்படி ஒரே ஆளா அதெல்லாம் முடிச்சாங்கனு ஆச்சர்யமா இருக்கு!

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்ல கடைசி நாள் ஷூட்டிங். கடைசி ஷாட் முடிஞ்சதும் என் காலைத் தொட்டு, 'என்னை பிளெஸ் பண்ணுங்கன்னாங்க. 'அய்யோனு நான் அலறி, எகிறி, 'மூணு படம்தான் பண்ணியிருக்கேன்னேன். 'நோ... யூ ஆர் மை டீச்சர்ன்னாங்க.
இன்னைக்கும் அதேதான். 'ஹி இஸ் மை டீச்சர்னுதான் பேட்டிகள்லயும் மேடைகள்ல யும் சொல்றாங்க. ஒரு சீனியரா ரஜினி சார் கிட்ட அவங்க காட்டுற மரியாதை, அவர் கிட்ட இருந்து எடுத்துக்கிற பிளெஸ்ஸிங்ஸ், மச்சுபிச்சுல உடல் முழுக்க சிவப்புச் சிவப்பா, தடிக்கத் தடிக்கப் பூச்சி கடிச்சும், அதை எல்லார்கிட்டயும் காட்டி சீன் போடாம, க்ரீம் போட்டு மூடி நடிச்ச டெடிகேஷன்... இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.
என் திருமண நாள் அன்னைக்கு, என் வீட்டுக்கு ரஜினி சார், ஐஸ்வர்யா ராய், சாபுசிரில், ரத்னவேல், எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே அரட்டையும் சிரிப்புமா இருந்தது. சாப்பிட எல்லாரும் தயங்கிட்டு இருந்தப்போ சட்டுனு எழுந்த ஐஸ்வர்யா ராய், குழம்புல கரண்டியைப் போட்டு எல்லாருக்கும் பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க. சாபுவுக்கு ஆச்சர்யத்தில் பேச்சே வரலை.
ஒரு குடும்பப் பெண்ணா, இந்தியப் பெண்ணா, நடிகையா, உலக அழகியா, எல்லா வகையிலும் முழுமையானவர் ஐஸ்வர்யா ராய். அன்றும் இன்றும் மேலும் பண்பட்டவராக!''


சி.பி - ஷங்கர் உருகறதை பார்த்தா இன்னம் கூட ஒரு படத்துல  அவரை யூச் பண்ற ஐடியா இருக்கும் போல ( ஹீரோயினா நடிக்கவைக்க யூஸ் பண்ற ஐடியாப்ப்பா)

5. ''நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம்.... ரசித்த சினிமா..?''
 ''லா..ரா. எழுதிய 'அபிதா’.
The Battle of Algiers.''
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/prabhu-daughter-wedding/Prabhu-07.jpg

6. ''.ஆர்.ரஹ்மானுடனான சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''.ஆர்.ரஹ்மான்... நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.
என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ... எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா டாக்டர் களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.
இதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுன்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்கனு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹா வுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.
எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.
நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!''


சி.பி - ஹா ஹா அதெல்லாம் ஓக்கே , அந்நியன் படத்துல ஹாரீஸ் ஜெயராஜை மியூசிக் போடச்சொன்னப்போ குமுதத்துல வந்த பேட்டில  என்ன சொன்னீங்க? என்பதை ரீ வைண்ட் செய்யவும் ஹி ஹி  


http://tamilwire.com/images/2008/07/rajini-kamal.jpg