Showing posts with label போலீஸ். Show all posts
Showing posts with label போலீஸ். Show all posts

Saturday, December 22, 2012

திரிபுராவில் மக்கள் முன்னிலையில் நடந்த ரேப் , போலீஸ் அதிர்ச்சி

Woman stripped naked, gang-raped in Tripura

Published: Saturday, Dec 22, 2012, 15:07 IST
Place: Tripura | Agency: IANS
A housewife was stripped naked, gangraped and battered in full public glare in Tripura, police said Saturday.


"A 37-year-old woman was gang-raped at Bishalgarh in western Tripura Wednesday night. After the rape, the women was stripped naked, brutally beaten up and then tied to a tree," a police official told reporters here.


Based on the victim's complaint, police immediately swung into action and arrested seven people. However, three more accused, including the main one, are on the run.


Police said the accused dragged the house wife from her home and took turns to rape her before many people, including women. But no one dared to come forward to save the mother of a five-year-old.


The role of the husband is also being probed, the police official said.


Tripura Woman's Commission chairperson Purnima Roy strongly condemned the atrocious incident and asked the police to take stern action against the culprits.


People organised a protest rally at Bishalgarh, 25 km from here, over the incident.


நன்றி - DNA 

ஸ்ரீவைகுண்டம்: பள்ளி மாணவி கொலையில் ரவுடி கைது! 
Posted Date : 14:42 (22/12/2012)Last updated : 14:53 (22/12/2012)
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்று கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்தவர்  பேச்சியம்மாள். இவரது மகள் புனிதா (வயது 13), நாசரேத்தில் உள்ள ஒரு பெண்கள்  மேல்நிலைபள்ளியில் 7 ஆம்வகுப்பு படித்து வந்தாள். தினமும் வீட்டில் இருந்து 2  கி.மீ. தூரத்தில் உள்ள தாதன்குளத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து ரயிலில் பள்ளிக்கு  சென்று வந்தாள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்ற புனிதா தாதன்குளம் ரயில்  நிலையம் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.அவளது ஆடைகள்  அகற்றப்பட்டு இருந்ததால்,அவள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று  போலீசார் கருதினர்.
புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,இது குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தாதன்குளத்தை சேர்ந்த சுப்பையா (35) என்ற ரவுடியை போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர்.விசாரணையின்போது மாணவி புனிதாவை கொன்றதை  சுப்பையை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக சுப்பையா அளித்துள்ள வாக்குமூலத்தில்,"எனது சொந்த ஊர் மணியாச்சி  அருகே உள்ள பாறைகுட்டம். என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் போலீசார்  என்னை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த சில நாட்களாக  நெல்லையில் சுற்றி திரிந்தேன். எனது மனைவியின் வீடு தாதன்குளத்தில் உள்ளதால்  அங்கு சென்று தலைமறைவாக இருக்க நினைத்தேன்.

இதனால் கடந்த புதன்கிழமை மாலை நெல்லையில் நன்றாக மது குடித்து விட்டு  திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி தாதன்குளத்திற்கு சென்றேன்.அளவுக்கு அதிகமாக  மது குடித்திருந்ததால் தாதன்குளம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் என்னால் நடக்க  முடிக்கமுடியவில்லை.இதனால் அங்கேயே படுத்து தூங்கி விட்டேன்இரவு முழுவதும்  ரயில் நிலையத்தில் தூங்கிய நான் மறு நாள் காலை எழுந்து எனது மனைவி வீட்டிற்கு  சென்றேன்.

தாதன்குளம் ரயில் நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதி வழியாக செல்லும் போது அந்த  வழியாக மாணவி புனிதா நடந்து வந்தாள்.அவளை அங்குள்ள முட்புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றேன்.  ஆனால் அவள் சத்தம் போட்டு அலறினாள்.இதனால் என்னால் அவளை பலாத்காரம்  செய்ய முடியவில்லை.

நடந்த விவரத்தை புனிதா வெளியே சொல்லிவிடுவாள் என்ற பயத்தில்,அவளை  துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு எனது மனைவி வீட்டிற்கு சென்று  விட்டேன்" என்று கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 


மேலும் பலருக்கு தொடர்பு 


இதனிடையே இக்கொலையில் சுப்பையா மட்டுமல்லாது மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி மாணவி புனிதாவின் உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்,.

பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்! 
Posted Date : 12:35 (22/12/2012)Last updated : 15:16 (22/12/2012)
புதுடெல்லி: மாணவி பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்து டெல்லியில் ஜனாதிபதி வீடு  முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியும் கலைத்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. 
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக்  கண்டித்தும்,பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,குற்றவாளிகளுக்கு  தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,   மாணவ,மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் போராட்டம்  தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் போராட்டம் நடத்தியவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய  மேற்ப்பட்ட போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதில் போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துன. 

இதனால் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார்  போராட்டக்காரர்களைக் கலைத்தனர். டெல்லி முழுவுதும் 5வது நாளாக பல்வேறு  அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகள்  காயம்

போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகை செல்லும் பாதை  மூடப்பட்டது. தடியடி நடத்தினாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று  போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.தடியடில் பல மாணவ, மாணவியர்கள் காயமடைந்தனர்.  


போலீசார் தடியடி நடத்தியும் மாணவர்கள் கலையாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போலீசார் தடியடி நடத்தியது சிறிது கலைந்த மாணவர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இதனிடையே போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,போராட்டக்காரர்களை சாந்தப்படுத்தும்  விதமாக, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை  விதிக்குமாறு பரிந்துரைக்கப்படும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி -விக்டன்




Monday, August 20, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மர்மங்கள்

http://resultsbuzz.in/wp-content/uploads/2012/05/TNPSC-Images.jpg 
கேள்வித்தாளை லீக் செய்தவர் யார்?

பிடிக்கத் துடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை


நல்ல நம்பிக்கையை பெற்றுவந்த டி.என்.பி.எஸ்.சி.க்கு திருஷ்டிப் பரிகாரம்... கடந்த வாரத்தில் நடந்தது. எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டு இருப்பதைப் பொறுக்காத மனிதர்கள் புகுந்து விளையாட.. எது ஓட்டை என்பதற்கான தேடுதல் துரிதமாய் நடக்கிறது!


சமீபத்தில் நடந்த தேர்வில் மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது என்று அதிர்ச்சியைக் கிளப் புகிறார்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தினர். ''டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை ஆசி ரியர்கள், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் கல்லூரிகள் என்று ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு மூலம் கோடிக்கோடியாக கொள்ளை அடித்திருக்கிறார்கள்.


 இந்த முறை சென்னையில் இருந்து கேள்விகள், பாலன் என்பவருக்குப் போய் இருக்கிறது. பாலன் மூலம் இ-மெயிலில் பல்வேறு நபர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாலன் யார்? அவருக்குக் கேள்வித்தாள் யார் மூலம் கிடைத்தது என்பதைத்தான் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர்களே கடந்த ஆண்டு நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறவர்கள் சென்னையைச் சேர்ந்த பாலன் அண்டு கோ நெட்வொர்க் ஆட்களிடம் பணம் கொடுத்தால் போதும். ஒரு துண்டுக் காகிதத்தில் பீச் ரோட்டில் உள்ள ஒரு நூலகத்தில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கச் சொல்வார்கள். 'புத்தகம் கொடுக் கவும்' என்ற வார்த்தை மட்டும்  பென்சிலால் அதில் எழுதப்பட்டு இருக்கும்.

 அங்கே போனால், ஒரு குறிப்பிட்ட புத் தகத்தைக் கொடுத்து, அதை நன்றாகப் படித்து தேர்வு எழுதச் சொல்வார்கள். அந்தப் புத்தகத்தில் வினாத்தாளில் வர விருக்கும் கேள்விகளில் 80 சதவிகிதம் வரை இருக்குமாம். கடந்த வருடம்தான், டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் அரவ ணைப்பில் இந்த நெட்வொர்க் இயங்குவதைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த நூலக நபரையும் பிடித்து விட்டனர். ஆனால், இந்த வருடமும் அதேபோன்று நெட்வொர்க் இயங்கி உள்ளதுதான் ஆச்சர்ய்ம்! 



சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சென்டருக்கு குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அங்கே படிக்கும் மாணவர்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறார்கள். தலைக்கு ஒரு லட்சம் வீதம் வசூல் செய்துகொண்டு, பாடம் நடத்தும் போர்டில் வினா - விடைகளை எழுதிப் போட்டு இருக்கிறார்கள். அந்த போர்டில் எழுதி யதை அழிக்காமலேயே போய்விட்டதால், அடுத்த நாள் விஷயம் வெளியே கசிந்து விட்டது என்கி றார்கள்.



இந்த வருடம் நடந்த சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''எங்களைப் பொறுத்தவரை, நிஜ வினாத்தாளை எடுத்து, யாரோ மற்றவர்களுக்குப் படித்துக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கேட்டு, தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர். வினாக்களுக்கான பதில்களிலும் தவறுகள் இருக்கின்றன.


இதையெல்லாம் தவறு செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஆயக்குடி ஆகிய இடங் களில் உள்ள சில சென்டர்களில் படித்துத் தேர்வு எழுதி யவர்கள் இதுவரை 100% வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் ரகசியமாக சர்வே செய்து வருகிறோம்'' என்றனர்.


http://www.thehindu.com/multimedia/dynamic/01072/TH-EXAM_1072396f.jpg

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி களிடம் பேசியபோது, ''பயங்கரமான நெட்வொர்க் அமைத்து வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதை நிச்சயம் லோக்கல் போலீஸாரால் டீல் செய்ய முடியாது. முன்னர் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றினோம்.


மேற்கொண்டு விசார¬ணையைத் தொடர முடியாமல் தடை வாங்கி விட்டனர். அதனால், தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு இருக்கும் தடையை உடைத் தால், திடுக்கிடும் பல விவரங்களைக் கொண்டு வருவோம். இப்போதைய வினாத்தாள் லீக்கின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பதால் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கிறோம்'' என்றனர் வருத்தத்துடன்.



இந்தச் சூழலில் கடந்த வருடம் குரூப் 2 தேர்வு எழுதித் தோற்றுப் போன, சென்னையைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.



''கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்காக நான் மெனக்கெட்டுப் படித்து எழுதினேன். அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, 'கஷ்டப்பட்டுப் படிச்சா, வேலை கிடைக்காது. எங்களைக் கவனி. அப்பத்தான் உனக்கு வேலை கிடைக்கும்' என்று என்னிடம் சொன்னார்கள். வினாத்தாள் முன்கூட்டியே வாங்கித் தருவதாகப் பேரம் பேசியவர்கள், மூன்று லட்சம் கேட்டனர். அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதைவிட, குறுக்குவழியில் போக விரும்பாமல் நோ சொல்லி விட்டேன்.


ஆனால், என்னை அணுகிய அதே நபர், தேர்வில் மிகஅதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பலரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பதவிகளைப் பிடித்து விட்டனர். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொதித்தார்.



என்ன செய்யப்போகிறது அரசு?


  நன்றி - ஜு வி 



http://i.ytimg.com/vi/utTdVEjTb9E/0.jpg

Sunday, August 19, 2012

சென்னை ஈ சி ஆர் ரோடு NH 47 ஆ? NH 143?யா?

http://www.ecrbeachhouse.com/images/chennai-beachhouseecr.jpgடான்ஸுக்கு கூட்டிட்டு வந்து உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க!


ஈ.சி.ஆர். பார்ட்டி... மைனர் பொண்ணு!



விபசாரத்தில் பெண்களைத் தள்ளுவதற்காக புதுசு புதுசாகத்​தான் யோசிக்கிறார்கள்.அப்படிக் கையாளப்பட்ட ஒரு டெக்னிக் அம்பலமாகவே, 11 புரோக்கர்களும், 23 பெண்களும் போலீஸாரிடம் சிக்கி இருக்​கிறார்கள்.



சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே சுதந்திர தினத்துக்கு முன் தினம் இரவு, ஒரு சொகுசுப் பேருந்து நின்றது. பேருந்துக்கு வெளியே சில பெண்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க... அந்த வழி யாகச் சென்ற ஒருவர் போலீஸுக்குத் தகவல் தட்டிவிட்டார்.
 போலீஸார் ஸ்பாட்டுக்கு வந்ததும், ''இந்த ஆளு எங்களை டான்ஸ் ஆடினா போதும்னு கூட்டியாந்துட்டு, இப்போ வேற மாதிரி இருக்கச் சொல்றான் சார்'' என்று பெண்கள் குற்றம் சாட்டினர். 'ஆஹா... இது வேற விவகாரம்’ என்று உஷாரான போலீஸ், உடனே பஸ்ஸில் இருந்த பெண்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்துக்கு அனுப்பினர். பிரச்னை செய்த புரோக்கர்கள் 11 பேரை ரிமாண்ட் செய்து விட்டனர்.


http://images03.olx.in/ui/11/06/41/1295810330_160350541_1-Farm-House-for-Daily-Rent-in-ECR-Chennai-ECREast-Coast-Road.jpg

காப்பகத்துக்கு அனுப்புவதற்கு முன், அந்தப் பெண்களில் ஒருவரிடம் பேசினோம். ''என் பேரு சந்தியா. எனக்கு டான்ஸ் நல்லா ஆட வரும். சினிமாவுல முயற்சி செஞ்சேன். பெருசா வாய்ப்பு கிடைக்கலை. அதனால, ஹோட்டல்ல டான்ஸ் ஆடுறேன். நுங்கம்பாக்கத்தில் இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் மட்டும் டான்ஸ் ஆடப் போவேன். ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் ஆடுவேன். டிப்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 2,000 ரூபா கிடைக்கும். சில பேர் டான்ஸ் முடிஞ்சதும் ரூமுக்குப் போகலாம்னு வம்பு பண்ணிக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்குறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.




போன வாரம் எங்க ஹோட்டலுக்கு அன்​சாரினு ஒரு புரோக்கர் வந்தார். 'ஈ.சி.ஆர். ரோட்டுல இருக்கிற பண்ணை வீட்டுல வெளிநாட்டுக்காரங்க விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 25 பேரு அந்த விருந்துல கலந்துக்கப் போறாங்க. அங்கே டான்ஸ் ஆடணும். நிறையத் துட்டு கிடைக்கும்’னு சொன்னார். என்கூட டான்ஸ் ஆடுற பொண்ணுங்க நாலு பேரு இருக்காங்க. அவங்ககிட்டேயும் விஷயத்தைச் சொல்லி, நாங்களே 13 பேரை ரெடி பண்ணிட்டோம். எனக்கு வீடு வடபழனி பக்கத்தில் இருக்கு. 'ராத்திரி 9 மணிக்கு பஸ் வரும் ரெடியா இருங்க’னு அன்சாரி எனக்குப் போன் பண்ணிச் சொன்னார். நாங்க எல்லோரும் வடபழனியில் நின்னுட்டு இருந்தோம். ஏசி பஸ் வந்து எங்களை ஏத்திக்கிட்டு கிளம்புச்சு.




பஸ்ல போகும் போது, அன்சாரி என்கிட்ட வந்து, 'ஃபாரீன்ல இருந்து வர்றவங்களுக்கு தமிழ்நாட்டுப் பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் முடிஞ்சதும் அவங்க ஆசைப்படுற மாதிரி நடந்துக்கோங்க. பணத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேணும்னாலும் கொடுப்பாங்க’னு சொல்லவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. என் கூட வந்த மத்த பொண்ணுங்ககிட்டயும், அன்சாரி கூட வந்த ஆளுங்க இதே மாதிரி பேசினாங்க. உடனே, எல்லா பொண்ணுங்களும் கத்திக் கூச்சல் போட்டு வண்டியை நிறுத்திட்டோம். அதுக்குள்ள போலீஸ் வந்துட்டாங்க...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினார்.



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/Lohas-Hotel-New-Well-Being-Spa-Resort-Clark.jpg

''ஈ.சி.ஆர். ரோட்டுல மாயாஜால் தாண்​டிட்டா நிறைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றன. அங்கதான் இது மாதிரி பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றாங்க. வெளிநாட்டில் இருந்து வரும் சில பார்ட்டிகளைத் திருப்திபடுத்த சில நிறுவனங்கள் இது மாதிரியான பார்ட் டிகளுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க. வெளி நாட்டுக்காரங்க, 'ப்ரஷ்ஷா’ வேணும்னு கேட்பாங்க. 
அதுக்காகத்தான் டான்ஸ் அது இதுன்னு பொய் சொல்லி பொண்ணுங்களை ஏமாத்திக் கூட்டிட்டுப் போவாங்க. அங்கே வச்சுப் பணத்தைக் காட்டினா சிலர் சைலன்ட் ஆயிடுவாங்க. பிடிக்காதவங்களை டான்ஸ் முடிஞ்சதும் அனுப்பி வைச்சிடுவாங்க. காசுக்காக சில ஸ்கூல் பொண்ணுங்க கூட இந்த பார்ட்டிக்கு வந்து போறாங்க. இந்த மாதிரி பார்ட்டிகளை அரேஞ்ச் பண்றதுக்காகவே நிறைய புரோக்கர்கள் இருக்காங்க'' என்று நம்மிடம் சொன்னார் ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் மேனேஜர் ஒருவர்.




இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கும் ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம் பேசினோம். ''மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர். ஏதாவது ஸ்கூல் பொண்​ணாக இருக்குமோன்னு நினைச்சோம். விசாரிச்சபோது அந்தப் பொண்ணு வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கே ஒரு வீட்டில் வேலை செய்வது தெரியவந்தது. 
பார்ட்டியில டான்ஸ் ஆட ணும்னு சொல்லித்தான் அந்த பொண்ணுங்க 23 பேரையும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இருந்தாலும் பிடிபட்ட புரோக்கர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. புரோக்கர்களிலும் பெண்கள்தான் அதிகம். ஈ.சி.ஆர். பகுதியில் இதுபோல பார்ட்​டிகள் நடப்பது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் உறுதியாக.



இருட்டுக்குள் இன்னும் என்னனென்ன  நடக்கிறதோ...!
http://mithunonthe.net/wp-content/uploads/2010/02/mamallapuram-chennai-ecr.jpg

thanx - ju vi

Wednesday, March 07, 2012

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் திரிபாதி பேட்டி



http://www.hindu.com/2006/04/11/images/2006041105010301.jpg 

இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு


 சி.பி - கொள்ளையர்களும், கொலையாளிகளும் மனுஷங்களே கிடையாது.. அவனுங்களை அவனுங்க பாஷைலயே போட்டுத்தள்ளனும்.. அதை விட்டுட்டு வாரா ராசா திருந்துடு.. என் செல்லம் இல்ல?ன்னு கொஞ்சிட்டு இருக்க முடியாது.. பெரும்பாலான குற்றங்கள் போலீஸ் பயம் காரணமாத்தான் நடக்காம இருக்கு..

 தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தஎன்கவுன்டர் களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி  பேட்டியில் இருந்து...  


''வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?''



''எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!''


சி.பி - ஓப்பனிங்க்ல ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்.. நிருபர் பாவம் ஹா ஹா 

 
''உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?''

சி.பி - அஃபீசியலா? எத்தனை? அன் அஃபீசியலா? எத்தனை?னு கூட கேட்பாங்க போல. எல்லா மேட்டரையும் ஓப்பனா சொல்லிட்டு இருக்க முடியுமா?


''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் வேலையாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!''

சி.பி - என்கவுண்ட்டர் டிபார்ட்மெண்ட்னு தனியா ஒண்ணு ஆரம்பிக்கலாம், தப்பே இல்லை 

http://www.hindu.com/2009/08/05/images/2009080560190401.jpg




''என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'

சி.பி - இன்னைக்கு எத்தனை ஆடு சிக்கப்போகுதோ.. இந்த பிரஸ்காரங்களுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கனுமோன்னு தான் வேறென்ன?

 


(சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ''போகும்போது என்கவுன்டருக்காகச் செல் கிறோம் என்றே தெரியாதே?''


சி.பி - ஆனா எனக்கென்ன தோணுதுன்னா எல்லாம் ஆல்ரெடி பிலான் பண்ணி மேலிடத்துக்கு தகவல் சொல்லி அப்ரூவல் வாங்கித்தான் பண்றாங்க போல.. 

 
''சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?''


''ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?''

 சி.பி -திருடனோ,கொள்ளைக்காரனோ சம்பாதிக்கற பணத்தை வீட்டுக்கு தரும்போது அதை அனுபவிக்க எந்த அலவு அந்த குடும்பத்துக்கு உரிமை இருக்கோ அதே அளவு அவன் சுடப்பட்ட பிறகு அதுக்கான பின் விளைவுகளுக்கும் தயாரா இருக்கனும்..

''உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?''


''ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!''

சி.பி - அதுவும் சரிதான்.. போலீஸ்காரங்க ஃபேமிலி மேட்டர் வெளீயே தெரிஞ்சா சினிமால வர்ற மாதிரி லாக் பண்ணி கார்னர் பண்ணுவாங்க 




''உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?''

சி.பி - கொள்ளைக்காரங்க, கொலைகாரங்க பண்றதெல்லாம் பாவம்.. அந்த மாதிரி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறது புண்ணியம்..

 
''நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!''

 http://liveindia.tv/wp-content/uploads/2011/06/images/17VBG_POLICE_660338f.jpg

''சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?''


''அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? அவன்தான் எல்லா வற்றையும் செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!''


சி.பி - இவர் ஏ ஆர் ரஹ்மான், அல்லது ரஜினியின் ரசிகரா இருப்பார் போல.. ஆண்டவரை கை காட்டறாரு.. நாட்டை ஆள்பவரை பற்றி ஒண்ணூம் சொல்லலை. 

 
''போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - 10 என்கவுண்ட்டர் நடந்தா அதுல ஒண்ணுஅப்படி ஆகிடுதுன்னு சொல்றாங்க..  அவங்கவங்க தனிப்பட்ட விரோதிகளை தீர்த்துக்கட்ட இதை பயன் படுத்திக்கறதா பேசிக்கறாங்க..   




''யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்துஇருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!''

Tuesday, March 06, 2012

நடிகை அல்போன்சாதான் கொலையாளியா? மர்ம முடிச்சுகள்-காதலன் கொலை வழக்கு விபரங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMm9y2oZ_COBqX8nhzWB5rovM5KzVzlwKtWs4JbYKT2OJif04Z_zwtJggdakhlNn1ZWku3PGAtgkifWVfRVDKO9vJ_wfKGm1Lhs_evSp4Rx5lej-hA5QR8n8Zy9YzAGLaRTInihEV93sQ/s1600/alfonsa2.jpgஎனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.


சி.பி - அடப்பாவமே! என்னா அழகு..!! சாவடிக்கறாடா! அப்டின்னு சொல்வாங்களே.. அது இதுதானா?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

சி.பி - வீ வாண்ட் மோர் டீட்டெயில்ஸ்..  அவர் இவரை பிரிஞ்சாரா? இவர் அவரை பிரிஞ்சாரா?


இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். 

சி.பி - பேக்கரியை நீ பார்த்துக்கோ, அக்காவை நான் பார்த்துக்கறேன்னு  வினோத் சொல்லிட்டார் போல.. 



 நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.


சி.பி - டான்ஸ் பழகறேன்னு உடான்ஸ் விட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கார்.. ஓக்கே, ஒண்ணும் தப்பில்லை,. எல்லாரும் பண்றதுதான்


இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.பி - எனக்கும் இது கொலைன்னுதான் தோணுது.. பொதுவா ஆம்பளைங்க , அதுவும் வினோத் மாதிரி ஆளுங்க தற்கொலை செய்யற மாதிரி இருந்தா மதுவுல விஷம் கலந்து தான் குடிப்பாங்க.. பொண்ணுங்கதான் சேலை தலைப்புல் தூக்கு போட்டுக்குவாங்க.. அதுவும் இல்லாம தூக்கு போட்டு சாகறது என்பது தனிமையில் , துக்கத்தில், விரக்தியில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவு.. யாரும் வீட்ல பலரை வெச்சுக்கிட்டு தூக்கு போட்டுக்க மாட்டாங்க.. லெட்டர் எதும் எழுதி வைக்கலை 


வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

சி.பி - இந்த சீன்ல என்ன நடந்திருக்கும்னா வினோத் அம்மா பேச்சை கேட்டுட்டு அல்போன்சாவை கழட்டி விடலாம்னு பிளான் போட்டிருப்பார்.. அம்மா கிட்டே ஓக்கே சொல்லி இருப்பார்.. உடனே அல்போன்சா சண்டைக்கு வந்திருப்பார்.. வாக்குவாதம் முற்றி இருக்கும்.. அவங்க வினோத்தை போட்டுத்தள்ளி இருப்பாங்க

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzAmy9UK_kG1-2D13nGAQNwJOI-8UIatXaMn-e7jfsaRSbq2dnFeKktuT8V3F8tJQ4qe0pwBTKzt2inf1Lm6OAZEtqcAzKAoLKWZiTvH9eUrNgOHvkLEMJzGZjMk1vZd0XyVNA4_uQ4A/s1600/thirupachi-aruva.jpg


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

சி.பி - போறதுக்கு முன்னால கடைசி ஆசையை பாப்பா நிறைவேத்தி இருக்காங்க.. 


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

சி.பி - சும்மா ரீல் ரீலா விடாதீங்க.. பெட்ரூம்ல 2 பேருதான், எதுக்கு துண்டு கட்டுனேன், டிரஸ் மாத்துனேன்னு கதை விடறீங்க?இது எல்லாம் செட்டப்.  தூக்குல காதலன் கம் கணவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எந்த பொண்ணும் பதறி அவரை காப்பாத்த போய் தாங்கிப்பிடிப்பாங்க.. வெளீல ஓடி வந்து உதவி கேட்க ஏது டைம்? அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்துடமாட்டாரா?காமரா இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டு ஒரு அலிபி கிரியேட் பண்ண பாப்பா ஆக்ட் குடுத்திருக்கு..


காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

சி.பி - உங்க காதல் நிஜமானதுதான், ஆனா வினோத் உங்களூக்கு துரோகம் பண்ண நினைச்சிருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலை




அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சி.பி - நல்லா உன்னிப்பா பாருங்க.. அல்போன்சா கேமராவை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்.. சரியா இருக்கா?ரெக்கார்டு ஆகுதா?ன்னு செக் பண்ண? ( உண்மையான பதட்டமா இருந்தா கேமராவை பார்க்க டைம் இருக்காது, தோணாது.. )


ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.


சி.பி - ஒரு வேளை அல்போன்சா முதல் விக்கெட் கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அது 2 வது விக்கெட்க்கு பிடிக்காம இருக்கலாம்.. 



வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.
சி.பி - உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?கணவன் சொன்னா மட்டும் கேட்கவா போறாங்க?

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

சி.பி - அல்போன்சாவின் பெற்றோர் உன்னை நினைத்து படத்துல வர்ற லைலா பெற்றோர் மாதிரி போல.. எவன் வசதியா இருக்கானோ அவன் கூட ஜாயிண்ட் ஃபேமிலி ஆகிடறது.. 

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சி.பி - அன்புள்ள அல்போன்சா.. வினோத்தை சண்டைல அடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கனும் கார்ல வினோத்தை போட்டுக்கிட்டு ஐ மீன் வினோத் டெட்பாடியை போட்டுகிட்டு ஏதாவது மலைப்பிரதேசத்துக்கு போய் அங்கே இருந்து உருட்டி விட்டு அப்புறம் மலையில் இருந்து கீழே தவறி விழுந்துட்டார்னு ரீல் விட்டிருக்கனும் ஜஸ்ட் மிஸ்டு


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhidUApnXlSQCfTy5feMc_wgDujlUfQo_NFpSOmqyazotETE8CqYMfFYzSs2AkQlPTIOrp4lLXr1lS33y33x42-GAV-DiPxmiQtzzSvz5w1ea165VA9_pQwdoDenlBOqEd_yV619PyFwdI/s400/4_%252520AlfonsaRedCholiBelly.jpg
ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.


அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

சி.பி -இது சும்மா ஸ்டண்ட்.. தன் மேல் டவுட் வரக்கூடாதுன்னு பண்ணுன டிராமா.. அல்லது பயந்திருப்பாங்க.. 


அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

Sunday, February 26, 2012

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்ட்டரில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்-போலீஸ் சமாளிப்பு??

வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் விசாரணையில், உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. 



கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து, வங்கி மேலாளரை மிரட்டி, கேஷியரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பிற்பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில், மிரட்டி 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.


 சம்பவம் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வைத்து இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். கொள்ளையர்களில் ஒருவனின் போட்டோவை, கடந்த 22ம் தேதி காலை போலீசார் வெளியிட்டனர். இந்த படத்தை "டிவி' மற்றும் பத்திரிகைகளில் பார்த்த வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவர், போலீசிடம் கொள்ளையர்கள் தங்கியிருக்கும் இடத்தை தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு கொள்ளையர்கள் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை சரணடைய வலியுறுத்திய போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.போலீசாரின் எதிர் தாக்குதலில், ஐந்து கொள்ளையர்களும் கொல்லப்பட்டனர்.




அவர்கள் வீட்டில் இருந்து ஏழு துப்பாக்கிகள் மற்றும் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட, 14 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அங்கு கிடைத்த நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஒரு ஓட்டுனர் உரிமத்தின்படி, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வினோத்குமார், சந்திரிகா ரே, வைசாலியைச் சேர்ந்த ஹரிஷ்குமார், நாளந்தாவைச் சேர்ந்த வினய் பிரசாத் மற்றும் மேற்கு வங்க மாநிலம், ஹவுராவைச் சேர்ந்த அபய்குமார் என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்த தகவல்களை நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த என்கவுன்டர் சம்பவத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முதலில், போலீசார் எந்த நேரத்தில் அங்கு சென்றனர். சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்தான விஷயங்களில், போலீசார் கூறியுள்ள தகவல்களுக்கும், அப்பகுதி மக்கள் சிலரது கூற்றிற்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.



1. போலீசார் கூற்றுப்படி, இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி பொதுமக்களில் சிலர் இரவு 10 மணிக்கே போலீசார் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், அப்போதிலிருந்தே, சாலைகளில் ஆங்காங்கே நின்றிருந்தவர்களை போலீசார் அங்கிருந்து சென்றுவிட உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


சி.பி - இரவு 12 மணிக்கு மேலிடத்துல இருந்து  போட்டுத்தள்ளிடுங்கனு தகவல் வந்திருக்கும், . அதை வெச்சு போலீஸ் சொன்ன அறிக்கையா நம்மாளுங்க தப்பா புரிஞ்சுட்டாங்களோ என்னவோ?

2. அடுத்ததாக, வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த சப்தம் கேட்டு பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வந்ததாகவும், அதன் பின்பு, பாதுகாப்பிற்காக கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அப்படியிருக்கும் போது, அந்த வீட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


சி.பி - சைலண்ட் கில்லர்கள் போல


3. கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியில் இருந்து ஜன்னல் வழியாக போலீசார் சுட்டனர். கொள்ளையர்களை சுட்ட தோட்டாக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த போதும், துப்பாக்கி குண்டுகள் வேறு எங்கும் படவில்லை. ஹாலில் உள்ள சுவரில் மட்டும் குண்டு துளைத்ததற்கான இரண்டு சுவடுகள் காணப்படுகின்றன. அதே போல், வீட்டில் இருந்த "டிவி', வாஷிங் மெஷின் இவற்றில் குண்டு துளைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. போலீசார், சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தும் போது, பல இடங்களில் குண்டுகள் தெறித்திருக்கும். அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.


சி.பி - ஓக்கே , அடுத்த முறை என்கவுண்ட்டர் நடக்கறப்ப  இந்த குறைகள் களைந்தெறியப்பட்டு உண்மையான என் கவுண்ட்டர் போலவே ஜோடிக்க முயற்சி பண்றோம்.. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,ஊழலும் ஸ்விஸ் பழக்கம்

4. சம்பவம் நடந்த வீட்டின் தரையில் மட்டுமே ரத்தகறைகள் உள்ளன. கொள்ளையர்கள் ரத்தகாயங்களுடன் அங்கும், இங்கும் துடித்திருந்தால் சுவரில் கூட ரத்தம் இருக்கும். அப்படி எந்த தடயமும் இல்லை.


சி.பி - ஓடுனாத்தான் போலீஸ் சுடுதே, அதனால தரையோட தரையா படுத்திருப்பாங்க,,. 

5. வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, வீட்டிற்குள் புகுந்தோம் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், முன் கதவு தாழ்பாள் கூட உடைய வில்லை.


சி.பி - அடடா.. அவசரத்துல அதை கவனிக்கலையே.. 

6. சம்பவம் நடந்து முடிந்த நிலையில், கொள்ளையர்கள் வைத்திருந்த ஒரு பையில் இருந்து போலீசார், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள், ஒரு டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை எடுத்துள்ளனர். அவற்றை கொண்டு தான், இறந்தவர்கள் பெயர் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால், அந்த அடையாள அட்டைகள் அனைத்தும் பொய்யானவை என்பதும், சம்பந்தப்பட்ட பெயர் மற்றும் முகவரியில் இரண்டு பேர் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாருக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டாலும், மாஜிஸ்திரேட் விசாரணையில் அனைத்து தகவல்களுக்கும் விடை கிடைத்துவிடும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


சி.பி - கொள்ளையர்கள் பொய்யான ஐ டி கார்டு வெச்சிருந்தா அதுக்கு போலீஸ் என்ன செய்வாங்க?அவங்க கைக்கு கிடைச்சதைத்தானே தர முடியும்?


சி.பி.ஐ., விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு: வங்கி கொள்ளை வழக்கில் ஐந்து பேரை என்கவுன்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றவும் கோரி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். 


சி.பி - ம்க்கும், செத்தவங்க தியாகிங்க.. மனித உரிமை மீறல்னு மனு குடுக்க வந்துட்டாங்க.. போலீஸ் எப்படிய்யா வேலை செய்யும்?

சிறைவாசிகள் உரிமை அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான புகழேந்தி தாக்கல் செய்த மனு: வங்கிகளில் கொள்ளையடித்ததாக கூறப்படும் நபர்கள், வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் கொல்லப்பட்டனர். தற்காப்புக்காக அந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்கு என்கிற நிலையை போலீசார் எடுத்தால், உடனடியாக போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடத்துக்கு நான் நேரில் சென்றேன். அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தேன். 22ம் தேதி இரவு 10 மணிக்கு போலீசார் வந்து, வீட்டுக்குள் இருக்குமாறும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடுமாறும், விளக்குகளை அணைத்து விடுமாறும் கூறியதாக, சிலர் தெரிவித்தனர். அப்பகுதியில் கட்டடம் கட்டப்படும் இடத்தில் பணிகளை முடித்து விட்டு, அங்கிருந்து புறப்படுமாறு, போலீசார் தெரிவித்ததாகவும் கூறினர். ஆனால், நள்ளிரவில் தான் சந்தேகப்படும் நபர்களைப் பற்றி தகவல் கிடைத்ததாக, கமிஷனர் கூறியுள்ளார். அந்தப் பகுதியை இரவு 10 மணிக்கு தங்கள் வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்து விட்டதாக, அப்பகுதி மக்கள், என்னிடம் கூறினர். வீடியோவில் காட்டப்பட்ட சந்தேகப்படும் நபர், வங்கியில் பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். வீடியோவில் காட்டப்பட்ட நபரைப் போல், வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் வசிப்பவரும் உள்ளார் என போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலை வைத்துக் கொண்டு, கொள்ளை வழக்கை விசாரிக்கும் எந்த பொறுப்பான அதிகாரியும், சந்தேகப்படும் நபர்களை கொல்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள். ஒரு குற்றத்தை புலன்விசாரணை செய்ய போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களை கொல்ல தான் நினைக்கின்றனர். இதை செய்து விட்டு, தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர். 


சி.பி - போலீஸ் நல்லது தான் செஞ்சிருக்காங்க.. பொது மக்கள்க்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு நினைச்சிருக்காங்க.. 

ஐந்து பேரும் இறந்த பிறகு தான், அவர்களில் நால்வர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமத்தின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் கிடைத்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஐந்து பேரது பெயர்கள், முகவரியை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ளார். அதில் ஒருவரது பெயர் சந்திரிகா ராய். பீகார் மாநிலம் மஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த சந்திரிகா ராய் என்பவர் பாட்னாவில் டிரைவராக உள்ளார். கமிஷனர் வெளியிட்ட அபய்குமார் என்பவரின் முகவரி பொய்யானது. வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்த மொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டதா என்பது குறித்து, கமிஷனர் தனது பேட்டியில் தெளிவாக கூறவில்லை. 


கொள்ளை வழக்கை சட்டப்படி விசாரிப்பதற்குப் பதில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களை கொன்றுள்ளனர். போலீசாருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டடை நடந்ததாக கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வீட்டில் இருந்த "டிவி', வாஷிங் மெஷினில், குண்டு பட்டதற்கான தடயம் எதுவும் இல்லை. சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் புகார் அனுப்பினேன். அவர்களே இவ்வாறு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். எனவே, போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, ஊழல் மற்றும் அடக்கு முறைக்கு எதிரான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் ஏ.பி.சூரிய பிரகாசம், பொதுச் செயலர் அசோக் சக்ரவர்த்தி ஆகியோர் அனுப்பிய மனுவில், "நீதித்துறையின் அதிகாரத்தை போலீஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஐந்து பேருக்கு போலீசார் மரண தண்டனை வழங்கியுள்ளனர். அந்த இளைஞர்களிடம் எந்த விசாரணையையும் நடத்தாமல், அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், கொன்றுள்ளனர். நீதித்துறையின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்கிற கருத்தை போலீசார் தெரிவிப்பது போல் உள்ளது. குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கும் போர்வையில், யாரையும் போலீசார் கொன்று விடலாம் என்கிற முடிவுக்கு தான் வர வேண்டியதுள்ளது. எனவே, இந்த கடிதத்தை பொது நல மனுவாக கருதி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Friday, December 09, 2011

போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் (5)

நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை திரும்பப் பெற முடியாது எனக் கூறிய சென்னை ஐகோர்ட், சாதாரண மக்களுக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீசாருக்கு மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.


சி.பி - போலீஸ்னா மாமூல் தான் வாங்குவாங்க, இப்போ ரேப் பண்றதையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. 


பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை, யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருக்கோவிலூர் போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


சி.பி -பழங்குடி, ஆதி திராவிடர்கள்னாலே இவனுங்களுக்கெல்லாம் கேவலமா போயிடுது.. 



கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவில், இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.



சி.பி - நல்ல வேளை, எஸ் பி யாவது நல்லவரா இருந்திருக்காரு


இச்சம்பவம் தொடர்பாக, ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நான்கு பெண்களுக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, தமிழக அரசும் உத்தரவிட்டது.

சி.பி - ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும், அப்புறம் ஆளாளுக்கு பணம் இருக்குங்கற தைரியத்துல விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.. 


"இரவு நேரத்தில், பெண்களை போலீசார் அழைத்துச் சென்றது தவறு; பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். 


 சி.பி - நைட்லதான் மப்புல இருந்திருக்கும் நாய்ங்க..


இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பாக, நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என, அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். 

 சி.பி - ஒரு வருஷம் சஸ்பெண்ட் பண்ணுனா ஆச்சா? டிஸ்மிஸ் செஞ்சாத்தானே மற்றவங்களூக்கு ஒரு பயம் இருக்கும்?


இதையடுத்து, நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக் கூடாது எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


சி.பி - வேற மாவட்டத்துக்குப்போய் இதே வேலையைத்தான் அங்கேயும் செய்வானுங்க, கட் பண்ணி விட்டுடனும் நந்தா படத்துல வர்ற மாதிரி.. 

விழுப்புரம் எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஒரு கிரிமினல் வழக்கில் புலன் விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கான்ஸ்டபிள்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோர் ஜீப்பில், இரவு 8 மணிக்கு டி.மண்டபம் என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.

 சி.பி - இவனுங்களே பக்கா கிரிமினல்ஸ்.. இந்த லட்சணத்துல கிரிமினல் கேஸை விசாரிக்க இவனுங்களை அனுப்பி?

இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி, வெள்ளிக்கண்ணு உள்ளிட்ட சிலரை தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மானம்பூண்டி பை-பாஸ் வரை சென்றுள்ளனர்.

சி.பி - போலீஸ்க்கு இதே பொழப்புதான்.. கைது செய்ய வேண்டிய ஆளுங்களை தப்பிக்க விட்டுட வேண்டியது.. அப்புறம் அவங்க வீட்ல இருக்கற அப்பாவி பெண்களை மானபங்கப்படுத்தவேண்டியது, இதுக்கு சரியான தண்டனை என்னான்னா  அவனுங்க மனைவி அல்லது மகளை அவன் கண் முன்னால தான் என்ன செஞ்சோம்கறதை ஒப்புதல் வாக்குமூலம் தரச்சொல்லி, பாதிக்கப்பட்டவங்க கால்ல விழ வெச்சு, கழுதை மேல உக்கார வெச்சு நகர் வலவ் வர வைக்கனும்

சீனிவாசனுக்கு தலைமை கான்ஸ்டபிள் தனசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உதவியதாகத் தெரிகிறது. புலன் விசாரணைக்குப் பின், அனைவரும் பகல் இரண்டு மணிக்கு வீட்டில் விடப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 சி.பி - துறை நடவடிக்கைன்னாலே ட்ரான்ஸ்ஃபர்னு அர்த்தம், இங்கே செஞ்ச அதே கேடு கெட்ட வேலையை அங்கே போய் செய்வானுங்க./.


இவ்வழக்கு நேற்று, "முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றதை போலீசார் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை' என்றார்.


சி.பி - மாலை 6 மணீக்கு மேல லாக்கப்ல பெண்களை வெச்சிருக்கக்கூடாதுன்னு விதி இருக்கே? அப்புறம் என்ன இதுக்கோசரம் அதை மீறினாங்க?




அதற்கு அரசு தரப்பில், "போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர். உடன், எந்த பெண் போலீசாரும் இல்லை. இது விதிமுறை மீறல் இல்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், போலீசாருக்கு ஒரு சட்டமா? கைது செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது?' என கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது.



சி.பி - நஷ்ட ஈடுங்கற பேச்சே இருக்காக்கூடாது.. அப்புறம் ஆளாளுக்கு  கைல பணத்தை வெச்சுக்கிட்டு அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க..   அட்லீஸ்ட் 10 வருஷமாவது தீட்டனும்..


சாதாரண நபருக்கான சட்டம் போலீசாருக்கு பொருந்தாதா: "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: போலீஸ் வாகனத்தில், பழங்குடியின பெண்கள் ஐந்து பேர் மற்றும் மூன்று சிறுவர்கள், இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். போலீசார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரு பெண் புகார் அளித்துள்ளார். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என, நாங்கள் கேட்டோம். அதற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர், "விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், அவர்களை கைது செய்ய முடியாது' என்றார்.


சி.பி - ஆமா, நீங்க எல்லாம் கிழிக்கறதுக்குள்ள அவங்க எங்கயாவது எஸ் ஆகிடுவானுங்க.. 



அரசு குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்தை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு பற்றி, ஒருவரது பெயரை குறிப்பிட்டு போலீசில் ஒரு பெண் புகார் அளித்தால், அந்த நபரை உடனடியாக கைது செய்ய, போலீசார் தயக்கம் காட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, சாதாரண நபருக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் அமல்படுத்தவில்லை?

சி.பி - சட்டம்னா எல்லாருக்கும் பொதுதான், அதில் இவனுங்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கு ?



அரசு இந்த விஷயத்தை கடுமையாக கருதுகிறது என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கியதாகவும், அட்வகேட்-ஜெனரல் குறிப்பிட்டார். நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் விசாரணை முடிந்து விடும் என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புலன் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால், தகுந்த உத்தரவை இந்த கோர்ட் பிறப்பிக்கும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


சி.பி - இன்னிம் ஒரு  மாசம் போச்சுன்னா இதை அப்படியே மூடி மறைச்சுடுவானுங்க பாருங்க..  அப்புறம் அடுத்து வேற ஏதாவது பரபரப்பு வரும்.. அதை பிடிச்சுக்குவாங்க , இதை விட்டுடுவாங்க..