Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Monday, May 04, 2015

சிம்பு வின் மூன்றாவது முன்னாள் காதலி பர பரப்புப்பேட்டி

விஜய், சிம்பு, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இப்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வருகிறது. “ஹலோ...நல்லா இருக்கீங்களா?” என்று அழகுத் தமிழில் கைகுலுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வாலு, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே, இதயம் முரளி, புலி என்று வரிசையாக உங்களது படங்கள் வெளியாக இருக்கின்றனவே?
நன்றி. ஐந்தாறு வருடங்கள் கழித்தும் இதே மாதிரி பரபரப்பாக நான் இருக்க வேண்டும். ஹன்சிகா நல்ல நடிகை. ஹன்சிகா நடிக்கிற படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நம்ப வேண்டும். இதுதான் என் ஆசை.
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டுவிட்டீர்களே?
ஆமாம். வணக்கம். நன்றி. எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற வார்த்தைகளைத் தாண்டி நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். மேடையில் பேச சின்னதாகத் தயங்குகிறேன். குழந்தைகளிடத்தில் தமிழில் பேசும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழில் எனக்கு அக்கா என்ற வார்த்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அக்காவா? அப்படி உங்களை யார் அழைக்கிறார்கள்?
நான் தத்தெடுத்து வளர்க்கிற 30 குழந்தைகளும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் அன்பான வார்த்தையாகத் தெரிகிறது.
முப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான நோக்கம்?
என் அம்மா ஒரு டாக்டர். காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் என எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லி சொல்லி வளர்த்தது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என் அம்மா மாதிரி முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடிகை ஆனதும் எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
என்ன மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
நான் தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளின் கல்விக் கட்டணம், உடைகள், விளையாட்டுப் பொருட்கள், திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என அனைத்துச் செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நான் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன்.
அவர்கள் என்னைப் பார்த்தவுடன் “ ஹய்.. அக்கா” என்று சந்தோஷமாக கோரஸ் பாடுவதைப் போல அழைப்பார்கள். அவர்கள் அன்பில் நான் கரைகிறேன். பொம்மைகள் வாங்கிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுகிறேன். தென்னிந்திய உடுப்பி சாப்பாடு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என் பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடுவதில் அலாதி ஆர்வம் உண்டு.
குழந்தைகளுக்கு மட்டும்தான் உதவி செய்வீர்களா?
அப்படியில்லை. என் சக்திக்கு உட்பட்டு தேவைப்படும் யாருக்கும் உதவத் தயார். கடந்த வருடம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டேன். தற்போது முதியோர்களுக்காக ஒரு இல்லம் கட்ட விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் இருக்கிறது.
சினிமாவில் இப்போது என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
10 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இந்தியில் அமிதாப், ஹிருத்திக் ரோஷனோடு நடிப்பு, 15 வயதில் ஹீரோயின் என எனக்கு எல்லாமே நன்றாக அமைந்தன. அரண்மனை படம் என்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. வாலு படத்தில் ப்ரியா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் என் நடிப்பில் இன்னும் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் சேட்டை செய்யும் குறும்புப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்தும் ஹன்சிகா நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையாக நடிப்பதே பெரிய சாதனைதான்.
மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பீர்களா?
தமிழ், தெலுங்கில் நல்ல நடிகையாக வர வேண்டும். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிக்க வேண்டும். இதுதான் என் இலக்கு. இந்தி சினிமாவுக்குப் போகும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவின் தரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழ் சினிமாவில் நானும் இருப்பது எனக்குப் பெருமை.
படத்துக்குப் படம் அழகாகத் தெரிகிறீர்களே, அந்த ரகசியம் என்ன?
நன்றி. நான் எதற்கும் கவலைப்படுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை, எனக்குக் கோபமே வராது. திட்டினால்கூட, நான் சிரித்துக்கொண்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்.
உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?
என் அம்மாதான். நான், பிரபல நடிகையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது, நம்பிக்கை கொடுத்தது, சாதிக்கத் தூண்டியது எல்லாம் என் அம்மாதான்.
காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே... (கேள்வியை முடிக்கும் முன்பே)
ஸாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி.


நன்றி  - த இந்து

Thursday, April 23, 2015

‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான்ட்ரா சிறப்புப் பேட்டி

இளம் கதாநாயகி ரெஜினா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமும் தமிழ்நாடு. அள்ளிச் சூடிக்கொண்டதோ தெலுங்குத் திரையுலகை. தமிழில் ‘ராஜதந்திரம்’ தந்த வெற்றிக் களிப்பு முகத்தில் மின்ன ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவருடன். ஒரு குறும் பேட்டி:
தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ் சினிமாவில் நடிக்க பிகு செய்கிறீர்கள் போலத் தெரிகிறது..
திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்காது. என் அதிர்ஷ்டமோ, என்னவோ இயல்பாக, யதார்த்தமாகத் தொடும் காரியம்தான் எனக்குச் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் நடித்தால் போதும். நம்ம ஊரில் நல்ல கதை கொண்ட யதார்த்தமான படத்தில் நடித்தால் மட்டும்தான் கவனிப்பாங்க. அதனால்தான் இங்கே நிதானமாகப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அறிமுகமான ‘கண்ட நாள் முதல்’ படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகிறதே?
இந்நேரம் தமிழில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்க வேண்டாமா என்றுதானே கேட்கவருகிறீர்கள்? ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியானாலும் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை விடவே இல்லை.
பி.எஸ்.சி. சைக்காலஜி வரைக்கும் தொடர்ந்தேன். அப்படிப் பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் எனது படிப்புக்காகவே டெடிகேட் செய்திருக்கிறேன். இந்த இடைவெளியில் நல்ல கதைகளை எப்படித் தேர்வு செய்வது என்ற ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு ‘ராஜதந்திரம்’. இடைவெளி இருந்தாலும் ‘பளிச்’சென இடம்பிடித்துவிட்டீர்களே?
‘ராஜதந்திரம்’ படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் அந்தக் குழுவினருடன் இணைந்தேன். அவர்கள் திடீரென்று அழைத்த நேரத்தில் தெலுங்கில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு சில தந்திரங்கள் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அந்த டீம் என்னைக் கவர்ந்ததும் அதில் நடிக்க முக்கியமான ஒரு காரணம். கேடி பில்லாவுக்குப் பிறகுகூட என்னை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு நிஜமான வெற்றிக்குப் பிறகு எல்லோரும் நம்மை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
உங்களைப் போலவே தெலுங்கிலிருந்து வந்த ஹன்சிகா தற்போது இங்கே முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இடம்பிடித்துவிடுகிறாரே?
என் கையில் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டும்தான் என் வேலை. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதைக்கூட நான் பார்ப்பதில்லை. தேடி வரும் கேரக்டர் புதிதாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி பெரிய இயக்குநர்கள், முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான். பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார், ஜோதிகா என்று திருமணதுக்குப் பிறகு திரைக்கு மறுபிரவேசம் செய்து கலக்க ஆரம்பித்திருக்கும் முன்னாள் கதாநாயகிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய ஹீரோயின்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்தான் சினிமா ஆயுள் என்ற நிலை மாறி வருகிறது. திருமணப் பேச்சு தொடங்கியதுமே நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்ளும் சூழல் முற்றிலும் மறைந்துவிட்டது. நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது, எங்களைப் போன்ற புதிய தலைமுறை நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையை இல்லாமல் செய்கிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவும், சுதந்திரமும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
நீங்கள் டிரெக்கிங் ப்ரியையாமே?
ஆமாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஏலகிரி மலைப்பகுதிக்குக் கிளம்பிவிடுவேன். இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் அமெரிக்காவில் ‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கப்போகிறேன். அங்கே டிரெக்கிங் செய்ய உகந்த இடத்தைப் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறேன். குளிர்ச்சியான இடம் விரைவில் சிக்கும். அப்டேட்டுக்கு என் ட்விட்டரைச் செக் பண்ணுங்கள்.




நன்றி - த இந்து 

Tuesday, March 24, 2015

கொம்பன் -ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம் - கார்த்தி பேட்டி

“இயக்குநர் முத்தையாவோட வாழ்க்கையில் அவருடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் நடந்த ஈகோ யுத்தத்தைத்தான் கதையாக வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் கூட நடந்திருக்கின்றன” என 'கொம்பன்' படம் எப்படித் தனக்கு நெருக்கமானது என்று உற்சாகமாகத் தொடங்கினார் கார்த்தி
கொம்பன் படத்தின் கதை என்ன?
ராமநாதபுரம் ஏரியா ஆப்பநாடு பகுதியில் ஆடு வியாபாரம் செய்கிறவன்தான் கொம்பையா பாண்டியன். தண்ணி அடிக்காத, கெட்ட பழக்கம் இல்லாத நல்லவன். இந்த மாதிரியான கதாபாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணியது இல்லை. மாமனார் - மருமகன் ஈகோதான் கதைக்கரு. ராஜ்கிரண்தான் நடிக்கணும்னு பல ஆண்டுகளாக இந்தக் கதையை வைத்திருந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
திருமணமான புதிதில் புது மாப்பிள்ளைகள் மாமனாரை வம்புக்கு இழுப்பார்கள். அவர் வீட்டில் இருக்கும்போதே, “உங்கப்பா சாப்பிட்டாரா”னு கிண்டல் பண்ணுவாங்க. கல்யாணம் ஆன உடனே மாமனார் - மருமகன் இருவருக்குள் நடக்கும் காமெடி, உரசல் எல்லாம் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
கல்யாணத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பல கதைகள் வந்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு நடப்பது பற்றிய காட்சிகள் அமைந்த படங்கள் குறைவு. அதிலும் மாமனார் - மருமகன் உறவில் சமீபத்தில் எந்தப் படமும் வந்ததில்லை. அந்த வகையில் ‘கொம்பன்' அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
படத்தின் விளம்பரங்களில் ‘பருத்தி வீரன்’ படத்தின் சாயல் தெரிகிறதே..
‘பருத்தி வீரன்' படத்தில் இருந்து வேற மாதிரித் தெரிய வேண்டும் என்று மீசை எல்லாம் வைத்துப் போய்ப் பார்த்தால் எல்லாருமே அந்த மாவட்டத்தில் இதே மாதிரிதான் மீசை வைத்திருந்தார்கள். அந்த ஊர்க்காரனாக மாற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாமே பண்ணியிருக்கிறேன்.
‘பருத்தி வீரன்' படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு அப்படத்தின் ஞாபகம் வராமல்தான் நடித்திருக்கிறேன். ‘கொம்பன்' ஆரம்பிக்கும்போது ‘பருத்தி வீரன்' ஞாபகம் வந்தாலும், முடியும்போது கண்டிப்பாக இது வேறு படம் என்று ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
தொடர்ச்சியாகக் கிராமத்து வேடங்களே வருகிறது என்று லட்சுமி மேனன் சலித்துக்கொண்டிருக்கிறார் கவனித்தீர்களா?
திரையுலகை விட்டு விலக இருக்கிறார் என்று செய்திகள்கூட வந்தது. பிறகுதான் அந்தச் செய்தி தவறு என்று கேள்விப்பட்டேன். லட்சுமி மேனனுக்கு உண்மையில் நடிப்பைவிடப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஒரே மாதிரியான கிராமத்து வேடங்களே வருகிறதே என்ற எண்ணம் அவங்ககிட்ட இருக்கிறது.
நகரத்தில் வளர்ந்த பெண், மார்டனான பெண். ஆனால் கிராமத்து வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவதால் அனைவருமே அதே மாதிரியான வேடத்திற்கு அவரைக் கூப்பிடுகிறார்கள். ஒரு நடிகையாக அவங்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். மற்றபடி சினிமா மேல கோபம் எல்லாம் இல்லை. திறமையான நடிகை.
அண்ணனும், தம்பியும் வெவ்வேறு கதைக்களங்களில் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?
அமையுறதுதான். நல்ல கதைகள், நல்ல இயக்குநர்கள் நம்மைத் தேடி வர வேண்டும். நல்லவேளை எனக்கு அவரை மாதிரிப் படங்கள் அமையவில்லை. அவர்கூட யார் போட்டி போடுவது? இருவருடைய படங்களும் வேறு மாதிரி அமைவது சந்தோஷமாக இருக்கிறது.
ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் மாதிரி உங்களுக்குப் போட்டி யார்?
ஏன் இப்படிச் சிக்கலில் மாட்ட வைக்க நினைக்கிறீர்கள். என்னுடைய முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும்தான் போட்டி. என் படத்தைப் பார்க்க வருபவர்கள் என்னிடம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லையே!
எனது முந்தைய படத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பொறுத்துதான் அடுத்த படத்திற்கு மக்கள் வருகிறார்கள். முந்தைய படத்தைவிட இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது, எவ்வளவு தரமாக இருக்கிறது இதைதான் பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்குமே அவருடைய முந்தைய படத்தோடுதான் போட்டி என்பது என் கருத்து.
வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
ஒவ்வொரு படத்துக்கும் உழைக்கிறேன். நிறைய உழைத்த படங்கள் சரியாகப் போகாதபோது ரொம்ப வருத்தப்படுவேன். ஆனால், அப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த படத்தைப் பாதிக்கும். ஒரு படம் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. ஆனால், எல்லாப் பொறுப்பும் என்னைத்தான் பாதிக்கும். தோல்வி வரும்போது எல்லாம் அடுத்த படம் ஜெயிக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு எழுந்துவிடுவேன்.
இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கணும் என்று நீங்கள் நினைத்த படம் எது?
‘மெட்ராஸ்' அப்படி நான் பண்ணிய படம்தான். அந்தப் படம் எனக்காக உருவாக்கப்பட்டதில்லை. கதையைப் படித்தபோது ரொம்ப பிடித்தது. என்னை அப்படத்துக்குப் பொருத்திக் கொண்டேன். மற்றபடி நான் பார்க்கும் படங்கள் நல்லாயிருக்கும்போது, நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது இல்லை. படம் நல்லாயிருக்கும் பட்சத்தில் படக்குழுவினருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டிவிடுவேன். அது தான் என்னுடைய பாணி.
உங்கள் படத்தின் கதை, காட்சிகள் பற்றி உங்கள் மனைவியிடம் பேசுவீர்களா?
நீங்க வேற. அப்படி எல்லாம் பேச ஆரம்பித்தால் வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டிற்குப் போனால் சினிமாவை மறந்துவிடுவேன். படத்தைப் பற்றி பேசினாலே, “24 மணி நேரமும் படத்தைப் பற்றி சிந்திக்கிறீங்களே” என்று மனைவி கேட்பார். அதனால் என் படத்தைப் பற்றி மனைவியோடு விவாதிப்பதில்லை.


thanx  - the hindu



  • Gow  
    Enaku Surya Na Romba Pidikum Karthi Unga Padam Madras சூப்பர் Komban Padam Vetri Pera Vazhthukal
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Shankar  
      சூரியாவிடம் ஒரே போன்ற நடிப்பு உள்ளது.நமக்கு அவரிடம் இருந்த லயிப்பு போய் அலுப்பு வந்து விட்டது.இவரும் ஒரு groove இல் வந்து விட்டார்.இந்த இருவரின் அளப்பல்கள் வேறு நம்மை படுத்துகின்றன.
      Points
      15400
      2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • பூபாலன்  
        அண்ணணோடு மோதினா அண்ணன் படம் ஓடாது
        3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Jay  
          ஒரு ஆண் அவன் வீட்டிலேயே அவன் செய்யும் தொழில் பற்றி சுதந்திரமாக பேச முடியவில்லை என்பதை கூட ஏதோ பெரிய நகைச்சுவை போல சொல்லிகொள்கிறான் ! கொடுமை !
          Points
          3525
          3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
          • செல்வகுமார Chozhan  
            சாதிய ரீதியான படங்களில் நடிப்பதை முதலில் நிறுத்தவும். ஏற்கனவே பருத்திவீரனில் சேர்வையாக, இப்போ கொம்பனில் மறவராக. நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்து ஒரு தமிழரான நீங்களே எப்படி இது போன்ற படங்களில் கூச்ச நாச்சம் இல்லாமல் நடிக்கீன்றீர்கள்? கடந்த மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட கொலைகள். பாதிக்கப்பட்டது தமிழ் சமூகங்களான தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்), கோனார் (இடையர்), நாடார்(சானார்). கொலை செய்தது ஒரே சமூகம்....
            3 days ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • shankar  
              இன்னும் இந்த தமிழ் சமூகம் இப்படி எதாவது பிடித்துகொண்டு உருப்படாமல்போய் கொண்டு இருங்கள்...படத்தை படமாக பாருங்கள் அது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.have tolerance .

          Sunday, March 08, 2015

          புறம்போக்கு -ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா யார் டாப்?-இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். பேட்டி

          • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
            ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
          • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
            ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
          ‘‘இந்த சமூகத்தின் எல்லா பிரதிபலிப்புகளும் சிறைச்சாலைக்குள்ளும் இருக்கிறது. சிறைக்குள் ஒரு பயங்கரவாதியும் இருந்திருக்கிறான். உலகை மாற்றி அமைக்க முயற்சித்த ஒரு புரட்சியாளனும் இருந்திருக்கிறான். ‘சிறைச்சாலைக்குள் நுழையும்போது ஒரு கிராமத்துக்குள் நுழையும் மனநிலையோடு செல்’ என்கிறார் மாவோ.
          ‘புறம்போக்கு’ படத்தின் வழியே நானும் அப்படித்தான் நுழைய முயற்சி செய்திருக்கிறேன்’’ என்று பேசத் தொடங்குகிறார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
          ‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பை முடித்து, டப்பிங் மற்றும் ஒலி, ஒளிக் கலவை பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து…
          இந்தப் படத்துக்காக ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
          குலுமணாலியில் பனிப்பொழிவோடு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி னோம். வாசல் கடந்து இறங்கினால் 2 அடி முதல் 3 அடி வரை பனி இருக்கும். 60 பேர் கொண்ட குழுவோடு சரியாக திட்டமிட்டு புறப்பட்ட பயணம் அது. கிட்டத்தட்ட 50 நாட்கள்.
          ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கப் பட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டோம். எந்த பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அந்த பாதிப்புக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி பயனுள்ளதாக இருந்தது.
          இரவு மரங்கள் மீது தூங்கும் பனி காலை 7 மணிக்கு சூரியன் உதித்ததும் உருகிவிடும். மரங்களில் பூத்திருக்கும் அந்த பனித் துளிகளை படமாக்குவது எனது திட்டம். அதனால் அதிகாலை நேரத்திலேயே ஆர்யாவும், கார்த்திகாவும் மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருந்தனர். ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையிலான தயாரிப்பு என்பதால் எல்லா முடிவு களையும் நானே எடுக்க முடிந்தது.
          இப்படத்துக்கு இயல்பான ஆட்கள் அமைந்தது இலகுவாக படப்பிடிப்பை நகர்த்த உதவியது. ஆர்யாவுக்கு ஷூட்டிங் இல்லை என்றால்கூட அன்று செட்டில் இருப்பார். இதனால் யாருடைய பகுதியையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் சூழல் அமைந்தது.
          அரசியலை ஆழமாக உற்று நோக்கு பவர் நீங்கள். நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
          ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட் டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்தில் ஆண்டொன் றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள். அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள். நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது.
          அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும், அதை ஆடுகளுக்கு உணவாக்கி, வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும், இந்தப் பணிக்கு 5000 பேர் தேவையில்லை. கிராமத்தில் இருக் கும் 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையையும் முன் வைக்கிறது.
          நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆண்டின் முடிவில் வங்கி கூறியதுபோல நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், அந்த கிராமத் தில் வேலையில்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயம் உருவாகிறது.
          ஏங்கெல்ஸ் இங்கே, ‘ஆடுகள் மனிதனை துரத்தி விட்டன’ என்று முடித்திருப்பார். சரியான பொருளாதார அறிஞர்களால் நாடு வழிநடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் இன்றைக்கு பூதாகரமாக வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நாம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகிறது. எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு. இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்துக்குத் தள்ளிவிடும்.
          தற்போதைய சினிமா லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?
          சினிமாவின் மூலம் சமூக மாற் றத்துக்கு வித்திட முடியும் என்கிற போக்கு மாறி லாபம் மற்றும் வரு மானத்தை நோக்கிய பயணமாக இது மாறிவிட்டது. இது சரியாகப் படவில்லை. இது தொடர்ந்தால் தெருக்களை திரையரங்குகளாக மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று படுகிறது. படத்தை வெளியிட திரையரங்குகளே கிடைக்கவில்லை என்றால் சாலையோரத்தில் வேட்டி கட்டி படம் காட்ட வேண்டியதுதான்.
          மலையாள இயக்குநர் ஜான் ஆப்ரஹாம், ‘அம்ம அறியான்’ என்ற ஒரு படத்தை எடுத்தார். கிராமம் தோறும் நிதி வசூல் செய்து, படத்தை எடுத்து, அதே மக்களிடம் போட்டுக் காட்டினார். அதற்கென ஒரு அமைப்பை உருவாக்கி கேரளா முழுக்க படத்தை திரையிட்டார். திரையில் தோன்றும் அவர்கள்தான் நேரிலும் வந்து தெருவில் திரைப்படத்தை போட்டுக் காட்டிவிட்டு செல்வார்கள். ஜான் ஆப்ரஹாம் கஷ்டப்பட்டு செய்ததை இன்றைய டிஜிட்டல் வளர்ச்சியால் எளிதாக செய்ய முடியும்.
          மெகா சினிமாவில் புதிய அனுபவங்களோடு மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது சாத்தியமே இல்லை என்றால் ஜான் ஆப்ரஹாம் செய்தது மாதிரி கிளம்ப வேண்டியதுதான்.
          ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் படத் தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட காரணம் என்ன?
          தாமதம் எல்லாம் இல்லை. குறித்த காலத்தில் படத்தை முடித்திருப்பதாகவே கருதுகிறேன். மூன்று ஹீரோக்கள், மும்பையில் உள்ள நாயகி என்று எல்லோரையும் ஒன்றிணைத்து. பணி யாற்ற வேண்டும். குலுமணாலி, ஜெய் சால்மர், பெங்களூரு, சென்னையில் சிறைச்சாலை செட் என்று லொக்கேஷன் களை அமைக்கவே நிறைய காலம் ஆனது.
          நான் இமாச்சல பிரதேசத்தில் ஷுட்டிங்கில் இருக்கும்போது சென்னை யில் சிறைச்சாலை செட்டை போட முடி யாது. ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து அறைகள் தொடங்கி அறை யின் வண்ணம் வரைக்கும் சரியாக கவனிக்க வேண்டும். இந்த சிறைச் சாலை செட்டுக்கே 2 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் படப் பிடிப்பு 2 மாதங்கள். ஆகமொத்தம் 4 மாதங்கள் ஆனது.
          அப்படி பார்க்கும்போது சரியான நேரம்தான் எடுத்துக்கொண்டோம். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதைக்களத்தை அமைத்திருந்தேன்.
          விவசாயத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கவிருப்பதாக கூறினீர் களே?
          விவசாயத்துக்கு உகந்த நிலப்பரப்பு நம்முடையது. அதை சரியாக பயன் படுத்தவில்லை. விளை நிலங்களின் உற்பத்தி இந்த ஆண்டு மட்டும் 6 சதவீதம் குறைந்திருப்பதாக கணக் கெடுப்பு கூறுகிறது. பாரம்பரிய விதை களை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழலை இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் உருவாக்கி வைத்திருக் கிறது.
          ஒவ்வொரு பகுதி மண்ணின் வெப் பத்துக்கும், குளிர்ச்சிக்கும் விதைகளின் பரிணாம மாற்றம் உண்டு. இதெல்லாம் இப்போது நமக்கு மட்டுமே என்று இல்லை. யாரிடமோ பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் மர்மமான பிரச்சினைகள்தான்.
          இப்படி விவசாயப் பின்னணியில் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அது அடுத்த படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.
          எஸ்.பி.ஜனநாதன்


          நன்றி- த  இந்து

          Sunday, March 01, 2015

          எனக்குள் ஒருவன் -லூசியா’ கன்னடத்தில் ஹிட் ஆன அளவு தமிழில் ஆகுமா?-தனுஷின் முன்னாள் சகலை பேட்டி

          • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
            ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
          • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
            ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
          பாய்ஸ் படத்தில் விடலைப் பையனாக அறிமுகமாகி ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களுக்கு நகர்ந்திருப்பவர் சித்தார்த்.
          தனக்கென்று தனிப் பாணி கொண்ட அவரைச் சந்தித்தபோது, “ கடந்த 12 வருடங்களில் 25 படங்கள்தான் நடித்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. அதற்காக நான் பண்ணிய படம்தான் ‘எனக்குள் ஒருவன்’.” தரமான சினிமா தர வேண்டும் என்ற தாகம் வெளிப்படப் பேச ஆரம்பித்தார் அவர்.
          ‘லூசியா’ கன்னடத்தில் ஹிட். அதன் மறு ஆக்கத்தில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால்தான் ஒப்புக்கொண்டீர்களா?
          இப்படத்தை ‘லூசியா’ ரீமேக் என்ற ஒரு வார்த்தையில் அடக்க முடியாது. அடிப்படைக் கதைக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
          இப்படத்துக்காக இயக்குநர் பிரசாத் எழுதியிருக்கும் வசனங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். ‘லூசியா’ பார்த்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால், இந்த வேறுபாட்டை உணர்வார்கள். பார்க்காதவர்களுக்கு இரட்டை விருந்து.
          முதல் முறையாக ஒரே படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
          ஒரேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டேன்.
          முதலில் ஹீரோ கதாபாத்திரத்தை நடித்துவிட்டுப் பிறகு திரையரங்கப் பணியாள் கதாபாத்திரம் செய்தேன். அதற்காக முகத்தைக் கறுப்பாக்கினேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இருபது நாட்கள் திரையரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அது எனக்கே புதிய அனுபவம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.
          மக்களோடு மக்களாக நின்று கொண்டிருப்பேன். ‘ஹீரோ யாருப்பா… எங்க இருக்காருன்னு’ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘இன்னும் வரலை. மேக்கப் போட்டுட்டு நானே இருக்காருப்பா…’ என்று பதிலளித்தேன். அதே போல தீபா சன்னிதி, நரேன் இருவருக்குமே என்னை முதல் முறையாகப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. இப்படி நிறைய நிஜ காமெடியை அனுபவித்தேன்.
          உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நேரத்தில் படம் வெளியாகிறதே?
          எங்கள் படத்துக்கு முன்னர் ‘காக்கிச் சட்டை’ வெளியாகிறது. அவங்க எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார்களோ, அதே நம்பிக்கையில்தான் நாங்களும் வெளியிடுகிறோம்.
          போன வருடம் இதே மார்ச் மாதத்தில், ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜெயிச்சுருக்கு, அந்த நம்பிக்கையில் நம்ம படத்தை வெளியிடலாம் என்று சொல்லி அடுத்த வருடம் நிறைய படங்களை வெளியிடுவார்கள். அந்தப் பெயர் எங்களுக்குக் கிடைக்கும்.
          இந்தி, தெலுங்கில் படம் பண்ணுவதை ஏன் குறைத்துக்கொண்டீர்கள்?
          இதுவரை மூன்று படங்கள் இந்தியில் பண்ணியிருக்கேன். அதில் இரண்டு வெற்றிப் படங்கள். தெலுங்குப் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பவும் இந்தி, தெலுங்கிலிருந்து நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் தமிழில் நல்ல தரமான படங்களைப் பண்ணிவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
          எனக்கு இந்த சாக்லேட் பாய், அழகான பையன் என்ற இமேஜ் எல்லாம் போக வேண்டும். சொல்லப் போனால் என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும்போது கோபம்தான் வருகிறது. அப்படிக் கூப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இனிமேல் எந்த மாதிரியான கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.
          வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வணிகப் படங்கள் பண்ண மாட்டீர்களா?
          எம்.பி.ஏ. படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள் சேர்ந்தேன்.
          எங்கப்பா ‘எதுக்குப்பா இது’ன்னுகூடக் கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
          போதுமான அளவுக்குச் சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், வெளிநாட்டில் போய் டூயட் ஆடி, பூ கொடுத்துக்கொண்டுதான் இருக்கணும். எனக்கு அதுவும் பிடிக்கல… வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?
          அதற்காக வணிகப் படங்களுக்கு நான் எதிரியல்ல. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘சிங்கம்’ மாதிரியான கதை எனக்கு வரவில்லை. சூர்யாவுக்கு வந்தது; நடித்தார். எனக்கு எது சரியா வரும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ அதில் நடிக்கிறேன். நல்ல வணிகப் படத்துக்கான கதை வரும்போது அதில் கண்டிப்பாக நடிப்பேன்.
          ‘காவியத் தலைவன்’ படத்துக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையே…
          வசூல் ரீதியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் ‘காவியத் தலைவன்’ படம் தப்பான படம் கிடையாது. நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் எனக்கு அமைந்த படம். வசந்தபாலன் மாதிரியான இயக்குநர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாட வேண்டும்.
          இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பாருங்கள் அப்படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இப்போதுகூட நாம் கமல் சார் நடித்த ஓடாத படங்களைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பில் வெற்றியடைந்த படங்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? இல்லையே!
          மறுபடியும் உங்களைப் பற்றிய காதல், பிரிவு செய்திகள் வலம் வருகின்றனவே?
          (சிரித்துக் கொண்டே…) எதுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டு…? இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கட்டும்; என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறேன்.


          thanx = the hindu



          Wednesday, February 25, 2015

          காக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதையா? - ராட்டினம் இயக்குநர் பேட்டி

          • ஸ்ரீமுகி
            ஸ்ரீமுகி
          • ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
            ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
          ‘‘அந்த ஹீரோவிடம் கதை சொல்லுங்கள். ஓகே என்றால் படப்பிடிப்புக்கு கிளம்புங்கள்.. இப்படிச் சொல்லும் தயாரிப்பாளர்கள்தான் இன்றைக்கு நிறைய தென்படுகிறார்கள். பெரும்பாலான தமிழ் சினிமா, நடிகர்களை நம்பியே இருக்கிறது.
          தயாரிப்பாளர்களும் நல்ல கதையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ‘ஆர்டிஸ்ட் வேல்யூ’ மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து 2014-ல் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தந்ததா? இல்லையே..’’
          - தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் பற்றி சற்று கோபத்துடன் பேசுகிறார் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.
          ‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
          விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.
          நாயகன் சத்யா, படத்தின் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?
          எங்கள் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. அவர் படத்தின் நாயகன். படத்தை விளம்பரப்படுத்துவதும், பண்ணாததும் அவர் விருப்பம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் உரிமை கொண்டாட எல்லோருக்கும் பங்கு உண்டு.
          அதுவே தோல்வி அடைந்தால் இயக்குநர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை நம்பி படம் எடுக்கிறோம். இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
          முழுக்க கமர்ஷியல் பின்னணியில் புதிய பட வேலைகளைத் தொடங்கிவிட்டீர்களாமே?
          கமர்ஷியல், யதார்த்தம், பிரம்மாண்டம் இதை எல்லாம் கடந்து நல்ல சினிமா என்பதுதான் சரியான வெற்றி. கடந்த ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களின் வெற்றிதான் பெரிய வெற்றி.
          அந்த வகையில் கலகலப்பாக ஒரு கதையை எழுதி வருகிறேன். கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பணிகளை எல்லாம் ‘எட்டுத்திக்கும் மதயானை’ ரிலீஸுக்கு பிறகு தொடங்கவேண்டும்.
          ‘ராட்டினம்’ படத்தில் காதலை வித்தியாசமாக காட்டியிருந்தீர்கள். இந்த படம் எதை நோக்கி பயணிக்கிறது?
          ‘ராட்டினம்’ திரைப்படம் திருட்டு டிவிடி வழியேதான் அதிக மக்களை போய்ச் சேர்ந்தது. திரையரங்குகளில் இருந்து எடுத்த பிறகு கிடைத்த பாராட்டுகள்தான் அதிகம். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை காவல்துறை பின்னணியில் படமாக்கியிருக்கிறோம்.
          அதே நாளில் ரிலீஸாகும் ‘காக்கிச்சட்டை’ படமும் போலீஸ் கதைதானே.
          ‘காக்கிச்சட்டை’ படத்தில் பரவலாக முகம் அறிமுகமான ஹீரோ என்பதால் கமர்ஷியல், மாஸ் ஆகிய விஷயங்களில் பெரிதாக கவனம் செலுத்தியிருப்பார்கள். ‘எட்டுத்திக்கும் மதயானை’யில் யதார்த்தம் மட்டும்தான் பிரம்மாண்டம்.
          சாமானிய மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் அலசியிருப்போம். தகுதிவாய்ந்த ஒரு பொறுப்பில் இருக்கும் அதிகாரி அந்த பணியின் முக்கியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறுவதால் நிகழ்கிற சமூக அவலங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இது வித்தியாசமான போலீஸ் பின்னணியாக இருக்கும்.
          முதல் படத்தில் இயக்குநர். அடுத்த படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல பொறுப்புகளை சுமப்பது ஏன்?
          இன்றைக்கு சினிமாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நேரடி கிளைத் தொழில்களில் தயாரிப்பாளர் பணம் போடுகிறார். ஆனால், போட்ட பணத்தை நேரடியாக, எளிதாக எடுத்துவிட முடிகிறதா? அதில் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள். இயக்குநராக இருந்த நான், தயாரிப்பாளர் ஆனபிறகு இப்படி பல அனுபவம் கிடைத்திருக்கிறது.
          ‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
          விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.



          நன்றி  - த இந்து