Showing posts with label டாக்டர். Show all posts
Showing posts with label டாக்டர். Show all posts

Tuesday, November 06, 2012

மின்வெட்டு - பொட்டில் அடித்தாற்போன்ற 10 கேள்விகள்- டாக்டர் ராம்தாஸ் டூ ஜெ

சென்னை: நீலம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:



தமிழ்நாட்டில் 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. 5 முதல் 7 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. 969 மெகாவாட் மின்சாரம் தான் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது 7,500 மெகாவாட் உற்பத்தியாகிறது. 4,000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு காரணம் பல மின் நிலையங்களை சரியாக பராமரிக்காததும், எண்ணூர், குத்தாலம் மின் நிலையங்களை மூடியதுதான்.



ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் தொடங்க 15 ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்டது. இதுவரை அந்த திட்டம் கிடப்பில் உள்ளது



டெல்லியில் உபரியாக ஒப்படைக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அது கிடைத்தால் கூட 230 மெகாவாட்தான் பயன்பாட்டுக்கு வரும். பெரும்பான்மையான மின்சாரம் இரவில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அது நமக்கு பயன்படாது. எனவே இந்த வாதங்கள் எல்லாம் தங்களை திசை திருப்பும் முயற்சியில்தான்.



நிலம் புயலால் டெல்டா மாவட்டங்களில் 5லட்சம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதே போல் வேலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.



சென்னையில் புயலின் போது தரை தட்டிய கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு கப்பல் நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார் ராமதாஸ்.





மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?




ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?



முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?


4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?


ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?



6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?


58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?



8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?


ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?



10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?



 thanx - thats tamil

Thursday, May 10, 2012

கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் -தடுப்பது எப்படி?

ன்றிக் காய்ச்சல் பரவுகிறது’ என்று பீதி பரவுகிறது. 'காலரா தாக்குகிறது’ என்று எகிறுகிறது பதற்றம். விநோத வைரஸ் காய்ச்சல் வாரக்கணக்கில் ஆட்களை முடக்கிப்போடுகிறது என்று மறுபுறம் வதந்தி. சாதாரணக் காய்ச்சல்தான்... ஆனால், அசாதாரணப் பாதிப்புகளை உண்டாக்கி விடும் கோடை காலக் காய்ச்சல்கள்.


 கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் என்னென்ன; அவை வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி; வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?


ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலக்ஷ்மியும் ஓய்வுபெற்ற மாநகராட்சி பொதுமருத்துவர் பஞ்சாட்சரம் செல்வராஜனும் விளக்குகிறார்கள்.


1. வைரஸ் காய்ச்சல்


இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பினால் வரும் காய்ச்சல் இது. நாள் முழுவதும் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். கடுமையான உடம்பு வலி இருக்கும். தொண்டைக் கரகரப்பு, அடிக்கடி இருமல் ஏற்படலாம். ஆனால், சளிப் பிரச்னை இருக்காது. அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். சாதாரண பாரசிட்டமால் மாத்திரை போதுமானது.


 ஆனால், ஓய்வு முக்கியம். மருந்து மாத்திரை போட்டுக்கொண்டு வேலை செய்து உடலை வருத்திக்கொள்வதைவிட, ஓய்வு எடுத்தாலே குணமாகிவிடும். நீர்ச் சத்து மிக்க பழங்கள், பழச் சாறு, மோர், தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



2. மலேரியா


மலேரியா நான்கு வகையான வைரஸ் களால் உருவாகிறது. பொதுவாக, தமிழகத்தில் வைவாக்ஸ் என்கிற வைரஸ் மூலமாகவே மலேரியா உருவாகும். இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால், சமீப காலமாக வட மாநிலப் பயணிகள் மூலம் ஃபால்சிபேரம் என்கிற வைரஸ் மூலம் ஒருவிதக் காய்ச்சல் பரவுகிறது. இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. 


ஆகையால், அதீத எச்சரிக்கை அவசியம். மலேரியாவுக்கு முக்கியமான காரணம் கொசுக்கள். மலேரியாவைப் பரவச் செய்யும் அனாஃபிலஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் வளரும். எனவே, நீர்நிலைகள், வீடுகளில் தண்ணீர்த் தொட்டிகளில் டெமிஃபாஸ் என்கிற மருந்தை வாரத்துக்கு ஒருமுறை தண்ணீரில் தெளிக்கலாம் (இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது). 


ஆனால், இந்த மருந்து வெளியே கிடைக்காது; உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும்தான் கிடைக்கும். ஆகையால், உங்கள் ஊர்/பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுங்கள். இதேபோல, வீட்டி லும் தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்.



அரை மணி நேரத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டுத் தாக்கும் கடும் குளிர்க் காய்ச்சலும் கடும் தலைவலியும் இதற்கான அறிகுறிகள். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், 'குளோரோக்வைன் ப்ரைமாக்வைன்’ மருந்தை எடுத்துக்கொண்டால், மலேரியா மூன்று, நான்கு நாட்களில் சரியாகும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



3. டெங்கு, சிக்குன் குனியா

டெங்கு காய்ச்சலுக்கும் சூத்திரதாரிகள் கொசுக்கள்தான். எய்டெஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்களும் சுத்தமான நீரில்தான் வாழும். சிக்குன் குனியாவுக்கும் இதே கொசுக்கள்தான் காரணம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், மூன்று நாட்கள் வரை நல்ல காய்ச்சல் இருக்கும். இதைத் தொடர்ந்து கண் வலிக்கும். பின்பு கடுமை யான தலைவலி உருவாகும். இது எலும்பு களைப் பாதிப்பதால், மூட்டுப் பகுதிகள் அதிக வலியெடுக்கும்.


 வீரியம் அதிகமா னால், மூக்கில் இருந்து ரத்தம் வெளிப்படும். அதிகபட்சம் மூன்று நான்கு நாட்கள்தான் நீடிக்கும். சிக்குன் குனியாவுக்கும் கிட்டத் தட்ட இதே அறிகுறிகள்தான். முதியவர் களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், மூட்டு வலி நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இந்த இரு வகைக் காய்ச்சலுக்குமே 'பாரசிட்டமால்’ மாத்திரைதான் வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ஐஸ் ஒத்தட மும் குழந்தைகளுக்கு மிதமான தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


4. டைஃபாய்டு


சால்மோனெல்லா என்கிற பாக்டீரியாவால் டைஃபாய்டு உருவாகிறது. தமிழில் இதைக் குடல் அம்மை நோய் என்பார்கள். டைஃபாய்டு ஏற்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சல் கடுமையாகும். தொடர்ந்து பசியின்மை, உடல் எடை குறைதல், பேதி உருவாகும். காய்ச்சல் வந்து ஒரு வாரம் கழிந்த நிலையில்தான் பரிசோதித்து, அதை உறுதிசெய்துகொள்ள முடியும்.


 இந்த நோயால், பாதிக்கப்பட்ட வர்கள் கார உணவுகளைத் தவிர்த்து, வயிற்றைப் புண்ணாக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 'பாரசிட்டமால்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தடுப்பு ஊசி உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இதைப் போட்டுக் கொண்டால், டைஃபாய்டு வராமல் தவிர்க்க முடியும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.


5. சின்ன அம்மை


சின்ன அம்மை 'வேரிசெல்லா’ என்கிற வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது. 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று உடலின் பிற பகுதிகளிலும் சிறு சிறு நீர்க் கட்டிகள் உருவாகும். கடும் அரிப்பை உருவாக்கும். 


அரிப்பு ஏற்பட்டு சிவக்கிற சமயத்தில்தான் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும். அதனால் சிவக்கும் சமயத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சுமார் ஒரு வாரம் வரை இந்த நீர்க் கட்டிகள் இருக்கும். பின்பு, அவை தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். நல்ல ஊட்டச் சத்து மிக்க காரம் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்ச் சத்து மிக்க உணவு, இளநீர், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயாளி இருக்கும் இடம் மிகுந்த சுத்தத்தோடு இருக்க வேண்டும். தடுப்பு ஊசி உண்டு.


6. பன்றிக் காய்ச்சல்


ஹெச்-1 என்-1 என்கிற கிருமி மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் முதல் 24 மணி நேரத்துக்குக் காய்ச்சல் குறையாது. இது நுரையீரலைப் பாதிப்பதால், சளிப் பிரச்னையோடு மூச்சுத் திணறலும் இருக்கும். கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வழியும். இவை தான் அறிகுறிகள். இந்தப் பிரச்னை கள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகளையோ, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையோ அணுகி, முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


பன்றிக் காய்ச்சல்தான் என்று உறுதிப்படுத்தப் பட்டால், உடனடியாக இதற்கென அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பாதிக் கப்பட்டவரை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், பன்றிக் காய்ச்சலுக்கு எல்லா மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முடியாது. மருத்துவமனைகளில் 'ஓஸ்டில் டாமிவிர்’ என்கிற மாத்திரை கொடுக்கப் படுகிறது.


இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 


ஆஸ்துமா, சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.



முக்கியமான மூன்று...


கோடைக் காலத்தில் எல்லா வகையான காய்ச்சலில் இருந்தும் தப்பிக்க மூன்று விஷயங்கள்தான். 


1. கொசுக்களை அண்ட விடாதீர்கள்; 


2. தண்ணீர் நிறையக் குடியுங்கள், நீர்ச் சத்து மிக்க, ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளுங்கள்; 



3.சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுங்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள்!

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Wednesday, November 02, 2011

சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்


Anti-smoking ads
Anti-smoking ads

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்துல டாக்டர் சண்முகம் மிக ஃபேமஸ்.. அவருக்கு 2 பொண்ணுங்க , முத பெண்ணின் பெயர் லதா.. 2வது பெண்ணின் பெயர் உமா பாரதி..

2வது பெண்ணை டாக்டருக்கு படிக்க வைத்தார்..அவருக்கு மாப்பிள்ளையும் டாக்டராவே பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சாரு.. சேலத்துல  மாப்ளைக்கு சொந்தமா க்ளினிக் இருக்கு..

அப்துல்கலாம் கிட்டே அவார்டு வாங்கற மாதிரி உமாபாரதி  ஒரு ஃபோட்டோவை ரெடி பண்ணி அதை தன் க்ளினிக் விளம்பரமா வெச்சு  காசு பார்த்தாங்க.. அது யாரோ கண்டு பிடிச்சு கேஸ் ஃபைல் பண்ணி பல முறை நடையா நடந்து கோர்ட்டின் கண்டனத்தையும் , அபராதம் கட்டச்சொல்லி ஆணையும் பெற்று எப்படியோ மீண்டு வந்தார்..


இப்போ மோசடி உமாபாரதியின் கணவர் டர்ன்..

டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட்ல அவர் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனா அவர் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தான்.. அப்புறம் எப்படி இவர் டெஸ்ட் டியூப் பேபி ஸ்பெஷலிஸ்ட் ஆனார் என்பது இப்போ தான் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு..

ஒரு தம்பதி குழந்தை இல்லைன்னு ட்ரீட்மெண்ட்க்காக வந்திருக்காங்க.. பல டாக்டர்ட்ட போயாச்சு, பல கோயில் குளம் அலைஞ்சாச்சு.. ஆனா மழலை பாக்கியம் இல்லை..

டெஸ்ட்ல மனைவி சைடுல எந்த குறைபாடும் இல்லைன்னு தெரிய வந்தது.. கணவனிடம் உயிர் அணுக்கள் கவுண்ட்டிங்க் கம்மி .. டெஸ்ட் டியூப் பேபிக்காக வந்திருக்காங்க..

வழக்கம் போல் செய்யும் பில்டப்பாக ரொம்ப சிரமம் சார் என சொல்லி ஏதோ டெஸ்ட் எடுப்பது போல் பாவ்லா காட்டி ஒரு வாரம் கழிச்சு வாங்க, ரிசல்ட் சொல்றேன் என அனுப்பி விட்டார்.. ஒரு வாரம் கழிச்சு அவங்க வந்ததும் 10 லட்சம் ரூபா செலவு ஆகும்.. என்று கூறி இருக்கிறார்..

ரொம்ப அதிகம் என அந்த தம்பதி தயங்கியதும் பேரம் (!!) ஒரு வழியாக படிந்து ரூ 8 லட்சத்துக்கு வந்தது..

கணவனிடம் இருந்து ஸ்பெர்ம் எடுத்துக்கொண்டார்.. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட்க்கு மனைவியை வரச்சொல்லி இருந்தார்..

பொதுவாக ஒரு மனைவி என்பவர் கணவன் தன்னைத்தவிர வேற யாராவது ஒரு பெண்ணை பார்த்தாலோ, பழகினாலோ மனைவிக்கு பிடிக்காது , பொஸஸிவ்நெஸ்தான் காரணம்.. ஆனால் உமாபாரதி செய்த மேட்டர் தமிழ்க்காலாச்சாரத்துக்கு முற்றிலும் புதியது, புதிரானது.. பணம் என்னவெல்லாம் செய்யத்தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக , மோசமான முன்னுதாரணமாக உமா பாரதி விளங்கினார்



அந்த பேஷண்ட்டிடம் பிரெயின் வாஷ் செய்ய ஆரம்பித்தார்..

 ”இங்கே பாரம்மா, டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட் என்பது ரொம்ப ரிஸ்க்.. 40% சான்ஸ் தான் இருக்கு.. சப்போஸ் 4 மாச கருவுல கலையவும் வாய்ப்பு இருக்கு, அதே கரு 6 மாசத்தில் கலைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து தான்.. “

“ இப்போ என்னம்மா பண்றது?”

“ ரொம்ப ஈஸியான,100% ரிசல்ட் கரெக்ட் ஆக , இந்த பிரச்சனைக்கு ஒரு வழி இருக்கு.. ஆனா அதுக்கு நீ சம்மதிக்கனும்..”

“என்னம்மா? என்னென்னவோ சொல்றீங்க?”

“ இதெல்லாம் சகஜம் டவுன்ல.. நிறைய பேர் இப்படி ஓக்கே சொல்லி இருக்காங்க.. அதாவது நீங்க கண்ணை மூடி 5 நிமிஷம் அட்ஜஸ் பண்ணிக்குங்க ...என் கணவர் உங்களுக்கு குழந்தை வரத்தை இயற்கை முறைப்படி தருவார்.. விஷயம் யாருக்கும் தெரியாது...”

அந்தப்பெண் மிரண்டு போய் வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டார்,.. அட்வான்ஸ் ஆக ரூ 5 லட்சம் பணம் கட்டி இருக்கிறார்கள்.. அவள் தன் கணவனிடம் அழுது கொண்டே இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்..

அவர் சில ஆட்களை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் போய்  நியாயம் கேட்டிருக்கிறார்.. பணத்தை ரிட்டர்ன் கேட்டார்.. டாக்டர் தர மறுத்து விட்டார்.. அட்வான்ஸ் கொடுத்தா கொடுத்ததுதான்.. நான் அப்படி எல்லாம் உங்க மனைவி கிட்டே கேட்கவே இல்லை.. அவங்க தான் ஏதோ சதி செய்யறாங்க  அப்டினு பிளேட்டை திருப்பி போட்டிருக்கிறார்.. 

இப்போது கேஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளை வேண்டி ட்ரீட்மெண்ட் எடுக்கும் நபர்களுக்கு சில ஆலோசனைகள்


1. மனைவியுடன் அவரது அம்மா, அல்லது உங்கள் அம்மா துணையாக எப்போதும் விட்டு வாருங்கள்
 
2. சில டாக்டர்கள் வேண்டும் என்றே உங்களை டைவர்ட் பண்ணவும் , பெண்ணை தனிமைப்படுத்தவும் ஏதாவது வாங்கி வர சொல்லலாம். அதனால் வெளிவேலைகள் பார்க்க இருவர்.. மனைவியுடன் ஒரு பெண் துணை அவசியம்.. 



3. நல்ல டாக்டர் தானா? என வெளி உலகில் விசாரிக்கவும், ஆல்ரெடி அவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் அனுபவம் கேட்டறியவும். 

4. எல்லாவற்றையும் விட சிறந்தது. அநாதை இல்லங்களில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது.


டிஸ்கி - இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. வழக்கு இன்னும் நடந்து வருகிறது, ஹாஸ்பிடல் சீல் வெச்சுட்டாங்க. சேலத்துலதான் சீல். அவங்க 2 பேரும் இப்போ தலை மறைவு. எந்த ஊர்ல ஹாஸ்பிடல் திறந்து வெச்சாங்களோ? சமீபத்தில் வெளியான கருங்காலி என்ற படம் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

Saturday, May 21, 2011

அல்சர் சரி ஆக என்ன பண்ணனும்? அல்சர் வராம தடுக்க என்ன பண்ணனும்?

http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_57375735045.jpg 
 
''அல்சர் குணமாக ஆறு வேளை சாப்பாடு!''


வருமானத்தில் காட்டும் அக்கறையை வயிற்றுக்கு காட்டுவது இல்லை. விளைவு, அல்சர் என்கிற வயிற்றுப் புண்!  

அல்சரை தவிர்க்க இங்கே ஐடியாக்கள் வழங்குகிறார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் எம்.ஹரிஹரன்...

''நாம் சாப்பிட்ட உணவு 4 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் வயிற்றுக்குள் உணவை தள்ள வேண்டியது அவசியம்.

இது எப்படி என்றால் வண்டிக்கு பெட்ரோல் போடுவது போல்தான். ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாச்சு.. வண்டியோட மைலேஜ்படி 50 கி.மீ. வண்டி ஓடிவிட்டது என்றால் அடுத்து பெட்ரோல் போட்டால்தான் தொடர்ந்து ஓடும். அதுபோல்தான் மனிதனின் வயிறும்.

சிலர் மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள். அல்லது சாப்பிடத் தாமதம் ஆகும். அதனால் காலையிலே சேர்த்து சாப்பிடுகிறேன் என்று அதிகமாக சாப்பிடுவார்கள். மொத்தமாக சாப்பிடுவதால், அந்த நேரத்தில் மந்தமாக இருக்குமே தவிர, எதிர்பார்க்கிற விஷயம் நடக்காது. தினசரி மூன்று முறை உணவு சாப்பிடுவது அவசியம். காலை 9 மணிக்கு சாப்பிட்டால் அடுத்து மதியம் 1 மணி வாக்கில் அவசியம் சாப்பிட வேண்டும்.
 http://www.tamilulakam.com/news/upload/others/Tu_12457.jpg
அப்படி சாப்பிடவில்லை என்றால் சுறுசுறுப்பு குறையும். மூளை, உள்ளிட்ட உறுப்புகள் சோர்வடைந்துவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும். சாப்பிடவில்லை என்றால் எபெக்டிவ் ஆக செயல்பட முடியாது. ஒர்க் பெர்பாமன்ஸ் குறைந்துவிடும். சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கக் கூடாது!'' என்றவர் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி விளக்கினார்.



'' சிலர் உணவை தவிர்த்துவிட்டு குளிர் பானம் அல்லது சின்னதாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கணிசமான கலோரி உடலில் சேரும். ஆனால், அடுத்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடும் போது ஏற்கெனவே சாப்பிட்டதை கணக்கில் கொண்டு குறைவாக சாப்பிட மாட்டார்கள். ஒரு முழு கட்டு கட்டி விடுவார்கள். அது செரிப்பதற்கான உடல் உழைப்பு இல்லை என்றால் அது  கொழுப்பாக மாறிவிடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். கூடவே, நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்!
 
  நீண்ட நேரமாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதற்காக சுரந்த அமிலம் குடலை பாதிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் குடலில் புண் ஏற்படும். தேவையில்லாத எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPR-BAEQko8pxJ6Z7t9lzB55iz-Ybg3AsG2EdkuLj_d7wdEW85w8Lqv4lukpGMsAyKMmOvxclmhLPNP7s8VhvNkmhyRbDe2NR0j_MKJyO342-pkRY_wKIoQei-6Q-rixQTS73KPxvEt80/s1600/doctor-funny.jpg
சில சமயம் மயக்கம்கூட வரும்.
அல்சர் வந்துவிட்டால் முதலில் குடல் புண் ஆற மருந்து தருவோம். அதன் பிறகு முறையாக உணவு எடுத்துக்கொள்வது அவசியம். புகை, மதுப் பழக்கங்களை உடனடியாகக் கைவிட்டால், அல்சர் முழுமையாக குணமாகும். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் குழைய வேக வைத்த அரிசி சாதம், கஞ்சி போன்றவற்றோடு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காரம் சேர்க்காத மோர் எடுத்துக் கொள்ளலாம்.

எண்ணெயில் வதக்கிய, பொரித்த உணவுகள், இனிப்பு பலகாரங்கள், காரமான குழம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அல்சரை தவிர்ப்பதோடு, இதர லைஃப் ஸ்டைல் நோய்களிலில் இருந்தும் தப்பிக்க முடியும்!'' - நம்பிக்கையாகச் சொல்கிறார் டாக்டர் ஹரிஹரன்.


இதுவும் காரணம்
1986-ம் ஆண்டுக்கு முன்பு வரை அல்சர் வருவதற்கு ஒரே காரணம் நேரம் தவறி சாப்பிடுவதுதான்! பிறகு அல்சர் வருவதற்கு ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்கிற தொற்றுக் கிருமியும் காரணம் என கண்டறியப்பட்டது. அதிகம்பேருக்கு இந்த கிருமி மூலம்தான் அல்சர் பரவி வருகிறது. சிலர், 'நான் நேரத்துக்கு சரியாக சாப்பிட்டும் எனக்கு அல்சர் வந்துவிட்டது’ என்று வருந்துவதற்கான காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

காரணங்கள் பல..!

தலைவலி, காய்ச்சலுக்கு கண்டபடி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது...
ஆன்ட்டி பயாடிக் மாத்திரையை பிகாம்ப்ளக்ஸ் மாத்திரை உடன் சேர்த்து சாப்பிடாதது...
உணவைத் தவிர்த்து காபி, தேநீர் என அதிகம் பருகுவது...
பர்கர், ஃபிரைட் ரைஸ் என செரிக்கக் கடினமான உணவுகளை உண்பது...
தொடர்ந்து பீடி, சிகரெட் புகைத்தல்...
பாட்டில் பானங்களை அதிகமாகப் பருகுவது...
ஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவது.
 நன்றி - விகடன்