Showing posts with label க்ரைம். Show all posts
Showing posts with label க்ரைம். Show all posts

Tuesday, June 02, 2015

12.01.1967 எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதா மாட்டியது எப்படி? -க்ரைம் வழக்கு

பட்டுக்கோட்டை பிரபாகர்

12.01.1967 அன்று எம்.ஜி.ஆர் சுடப் பட்டார். எம்.ஆர். ராதாவும் சுடப் பட்டார். வழக்கின் விசாரணையில் ‘எம்.ஆர். ராதா என்னை சுட்டார். பிறகு தன்னைத் தானே கூட்டுக்கொண்டார்' என்றார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆர் என்னை சுட்டதால், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி நான் அவரை சுட்டேன்' என்றார் எம்.ஆர். ராதா. எது உண்மை?
சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி எம்.ஆர். ராதாவுடன் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் வாசு மட்டுமே. அவர் தன் சாட்சியத்தில், ‘எம்.ஆர். ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டுப் பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவ ரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கப் போராடினேன். அப்போது அவர் தன் னைத் தானே இரண்டாவது முறையாக சுட்டுக் கொண்டார். அதன் பிறகு நான் அந்தத் துப்பாக்கியைப் பறித்தேன். பிறகு போலீஸில் ஒப்படைத்தேன்' என்றார்.
எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், எம்.ஜி.ஆர் தரப்பின் நிர்பந்தத்தாலும் தயாரிப்பாளர் வாசு பொய் சாட்சி சொல்கிறார் என்றது டிஃபன்ஸ் தரப்பு.
அரசுத் தரப்பு இருவருக்கும் இடை யில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு களைப் பதிவு செய்தது. ‘தொழிலாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப் பட்ட ஒரு காட்சியில், தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பஸ் வாங்கும் சூழலில் எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ்தான் இனி தொழி லாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என்று வசனம் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என்றார். அதை எம்.ஆர்.ராதா ஆட்சேபித்தார். ‘சினிமாவுக்குள் உன் கட்சியின் சின்னத்தைக் கொண்டு வராதே' என்றார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட, படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தி இறுதியில் திரைக்கதையில் இருந்தபடி ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார்.
‘நாத்திகம்’ பத்திரிகையில் எம்.ஆர். ராதா எழுதிய ஒரு கட்டுரையில் எம்.ஜி.ஆரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அது எம்.ஜி.ஆர்தான் என்று புரியும்விதமாக ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருந்தார். காமராஜரைக் கொலை செய்ய ஒருவர் சதி செய்வதாக குறிப் பிட்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மனம் புண்பட்டது.
டிஃபன்ஸ் தரப்பில் எம்.ஜி.ஆர் சினிமா வில் எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் இடையூறுகள் செய்ததாகவும், எம்.ஆர். ராதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ததாகவும் வாதிட்டார்கள்.
போலீஸ் தரப்பு தங்களிடம் வாசு ஒப்படைத்த ராதாவின் துப்பாக்கியின் ஆறு சேம்பர் களில் மூன்றில் மட்டுமே குண்டுகள் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் வீட்டில் கைப்பற் றப்பட்ட அவரது துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த உடைகள் அவசரமாக ஏன் துவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பியது ராதா தரப்பு. அவற்றில் ரத்தக் கறைகள் அழிக்கப்படாமல் இருந்திருந் தால் அதில் எம்.ஜி.ஆரிடம் இருந்து துப் பாக்கியைப் பறிக்க ராதா முயன்றபோது, சிந்திய அவரின் ரத்தத் தடயங்களை நிரூபித்திருக்க முடியும் என்றது.
வழக்கு விசாரணை முடிந்து 1967-ம் வருடம் நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித் தார். தீர்ப்பின் சுருக்கம்: ‘எம்.ஆர். ராதா குண்டுகள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றதிலேயே அவரின் கொலை நோக்கம் தெரிகிறது.
அரசியல் விரோதம் காரணமாக ராதாதான் தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத் தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. ஆகவே, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்.'
இந்த வழக்கில் உண்மை யைக் கண்டறிய மிக உதவி யாக இருந்தது தடயவியல் துறைதான். ஒரு துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளி யேறும்போது வெப்பத்தினால் சற்றே விரிவடைந்து சுழன்ற படி துப்பாக்கியின் குழலின் உட் பகுதியில் கடுமையான அழுத்தத் துடன் உரசியபடி வெளியேறும். அப்படி உரசுவதால் குண்டின் மேல் கோடுகள் விழும். குழலின் உட்புற அமைப்பு எல்லாத் துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குண்டுகளின் மேல் இருக்கும் உராய்வுக் கோடுகள் வெவ்வேறு விதமாகவே இருக்கும்.
இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா இருவரின் துப்பாக்கிகளி லும் குண்டுகள் போட்டு சோதனைக்காக சுட்டு அந்த குண்டுகளையும் அவர் களின் உடல்களில் இருந்து நீக்கப்பட்ட குண்டுகளையும் மைக்ராஸ்கோப் வழியாக ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந் தார்கள்.
தடயவியல் துறையின் நிபுணர் களான டாக்டர். கே.சி.பி.கோபால கிருஷ்ணன், டாக்டர். பி.சந்திர சேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த சோதனைகளை நடத்தி மூன்று குண்டு களும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டவை என்று உறுதி செய்தார்கள்.
தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண் டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவ ருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
விடுதலைக்குப் பின் மலேசியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராதா பேசியபோது, ‘எம்.ஜி.ஆரும் நானும் 50 வருஷமா நண்பர்கள். சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுக்கிட்டோம். அந்த சமயம் கம்பு இருந்திருந்தா, கம் பால சண்டை போட்டிருப்போம். துப் பாக்கிதான் இருந்துச்சி. அதனால துப் பாக்கியால சுட்டுக்கிட்டோம்' என்றார்.
அன்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஆப்ரஹாம் சுகுமார் ராதாவுக்கு முதலுதவி செய்தபோது அவர், ‘நான் தான் சுட்டேன், போலீஸுக்கு ஸ்டேட் மெண்ட் கொடுத்தாச்சு' என்று சொன்ன தாக தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார்.
பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகரனிடம், ‘மிகவும் பக்கத்தில் இருந்து சுடப்பட்டபோதும் நானும், எம்.ஆர்.ராதாவும் எப்படி பிழைக்க முடிந்தது?' என்று கேட்ட தால், அவர் அந்த ரவைகளை (குண்டு) தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தை உள்ளேயிருக்கும் ரவையின் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ராதா பயன்படுத்திய ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட் டவை.
அவற்றை ஒரு தகர டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை யின் டிராயரில் வைத்திருந்தார். டிரா யரை ஒவ்வொரு முறை இழுத்து மூடும் போதும் ரவைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்திருக்கின்றன. அத னால் ரவையின் மேல் பிணைக்கப் பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இப்படி அழுத்தம் குறைந்த ரவைகளைப் பயன்படுத்திய தால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார்.
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில் ஒரு கொலை. போலீஸ் சந்தேகிக்கும் ஒருவனைச் தேடிச் செல்வார்கள். அவன் தங்கியிருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கும். காத்திருப்பார்கள். அவன் கையில் சூட்கேஸோடு வருவான். தான் மூன்று நாட்களாக ஊரில் இல்லை என்று சொன்னபடி அறைக் கதவை சாவி போட்டு திறப்பான். கதவின் கீழ் இடுக்கு வழியாக உள்ளே தள்ளப்பட்டிருந்த மூன்று தினங்களின் தினசரி பேப்பர்களை எடுத்து மேஜையில் வைப்பான்.
அவனை சிக்க வைக்கும் எந்தத் தடயமும் கிடைக்காது. அந்த மூன்று தினங்களின் பேப்பர்களை செக் செய்வார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமையின் இலவச இணைப்புப் புத்தகம், சனிக்கிழமை பேப்பருக்குள் இருக்கும். அதை வைத்து அதட்டி விசாரித்ததும், தான் பேப்பர்களை செட்டப் செய்தபோது மாறிவிட்டதாகச் சொல்வான். செய்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Sunday, May 17, 2015

துப்பறியும் கதைகளை எழுதும்போது- பட்டுக்கோட்டை பிரபாகர் -குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...

குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...
தொடர்’வதற்கு முன்..
அன்புள்ள உங்களுக்கு…
வணக்கம்.
பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!
ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பார். இருவரும் வெளியே புறப்படும்போது ஒரு சிறிய காகிதத் துண்டை மடக்கி கதவின் ஓரத்தில் செருகி வைத்து கதவை மூடுவார். ‘என்ன செய்கிறாய்?’ என்று நண்பர் கேட்பார். ‘வா, சொல்கிறேன்’ என்று அழைத்துப் போவார். வெளியே வேலை முடிந்து இருவரும் திரும்புவார்கள். அந்த மடக்கப்பட்ட துண்டு சீட்டு கீழே கிடக்கும். ‘யாரோ கதவைத் திறந்தி ருக்காங்க’ என்பார் ஜெய். எனக்கு ‘அட’ என்று இருந்தது.
இதுபோல சின்னச் சின்ன ஐடியாக்களை எங்கே படித்தாலும், பார்த்தாலும், பேசினாலும் நான் ரசிக்கத் தொடங்கினேன். நான் கதை எழுதத் தொடங்கியபோது ‘அட’ என்று நினைக்க வைக்கிற கதைகள் அதிகம் எழுத வேண்டும் என்று ஆர்வப்பட்டேன்.
நான் எழுதிய முதல் சிறுகதையான ‘அந்த மூன்று நாட்கள்’ கதையில் அரைக் கிறுக்காக நடித்து ஒருவனை நம்ப வைத்து, அவனுக்கே தெரியாமல் கடத்தி வைத்து, அவனுடைய பெற் றோரை பிளாக் மெயில் செய்து பணம் பெற்றபின் அவனை விடுவிப்பான் ஒருவன். தான் கடத்தப்பட்டதோ, தன்னை வைத்து மிரட்டி பணம் வாங் கப்பட்டதோ தெரியாமல் கூலாக வீட்டுக்குத் திரும்பி பெற்றோர் சொன்ன பிறகுதான் உணர்வான் அவன்.
இந்த முதல் கதை எனக்குப் பெற் றுத் தந்த பாராட்டுக்கள்தான் என் னைத் தொடர்ந்து எழுத வைத்தது பரத், சுசிலா என்கிற துப்பறியும் ஜோடியை உருவாக்க வைத்தது. அவர்கள் காத லித்துக்கொண்டே துப்பறிந்தார்கள். இப்போதும் என்னைச் சந்திக்கும் வாசகர் கள் அவர்களை நலம் விசாரிக்கிறார்கள்.
துப்பறியும் கதைகளை எழுதும்போது எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆர்வம் சேர்ந்து கொள்ளும். செஸ் விளையாடுவது போல மூளை துறுதுறுக்கும். ஒரு புதி ருக்கு விடை தேடுவது எப்படி சுவாரஸ் யமான விஷயமோ அதுபோல சுவாரஸ் யமான புதிரை உருவாக்குவது இரண்டு மடங்கு சுவாரஸ்யமான விஷயம்.
‘Who Done it?’ என்கிற குற்றத்தை யார் செய்தது என்று கண்டுபிடிக்க வைக்கும் வகையான கதைகளில் பல கதாபாத்திரங்களின் மேல் சந்தே கத்தை விதைப்பதும், இறுதியில் ஒரு எதிர்பாராத முடிவைத் தருவதும் சவாலான வேலை. படிக்கும்போது பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் எழுதும்போது கொஞ்சம் மண் டையை உடைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
இப்போது குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் விஞ்ஞானத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. மிகவும் குயுக்தி யான, விசித்திரமான உத்திகளுடன் குற்றங்களை செய்கிறார்கள் என்றால், அதை கண்டுபிடிப்பதிலும் அதே மாதிரி நுணுக்கமான புத்திசாலித்தனமான அணுகுமுறை அவசியமாகின்றன.
இந்தியாவின் உளவு ஸ்தாபனமான ரா (RAW), யுரேனியத்தைப் பயன் படுத்தி பாகிஸ்தான் அணு ஆயுத ஆராய்ச்சி நடத்தி வருவதை ரகசியமாக உளவு பார்த்து, அப்போது பிரதம ராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரி வித்தது. இந்தத் தகவலை ’ரா’ எப்படி கண்டுபிடித்தது தெரியுமா? பாகிஸ் தானின் அணு ஆராய்ச்சி நிகழும் கவுட்டா ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக் கும் பகுதியில் உள்ள சலூன்களில் வெட்டப்படும் தலைமுடிகளை சேகரித்து அதை கதிரியக்க ஆராய்ச்சி செய்து இந்தமுக்கியமான தகவலைக் கண்டுபிடித்தது.
பல குற்ற வழக்குகளில் குற் வாளிகளைக் கண்டுபிடிக்க சின்ன தடயங்களே உதவியாக இருந்திருக் கின்றன. சில வழக்குகளில் அந்தத் தடயங்கள் உடனடியாக கிடைக் காமல் 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட கிடைத்திருக்கின்றன. கற்பனை களைவிடவும் உண்மைகள் வித்தியாச மானவை என்பார்கள்.
இந்தத் தொடரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல வகையான குற்ற வழக்குகளில் குற்ற வாளிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம். அத்தோடு இலவச இணைப்பாக நான் எழுதிய துப்பறியும் கதைகளில் கையாண்ட சில உத்திகளைப் பற்றியும் எழுத இருக் கிறேன்.
‘எப்படி? இப்படி!’ என்கிற புதிய தொடர் ‘அட’ என்று உங்களை புருவம் உயர்த்த வைக்கும். அல்லது ‘அடப் பாவிகளா!’ என்று அங்கலாய்க்க வைக் கும். அடுத்த வெள்ளி முதல் வாரா வாரம் சந்திப்போம். அதுவரை ஏற்கெனவே வணக்கம் கூறிவிட்டதால் ‘காத்தி ருங்கள்’ என்று மட்டும் கூறுகிறேன்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி =  hindu

Thursday, August 16, 2012

நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSeERahkW3FrinX3kv96aJlBYM1FIcymjisKUBvAi9Cwa8fCd3A3hSpsB5SS9dt9QINCdZNT2PeYbHhSENnKSaBIb8j-3Ez8me5LN1fMMh5x3LtboFBedITOkgjrkyhqMrudgvdvuN9Hw/s1600/Naan-Songs.jpg

சின்ன வயசுலயே  கலைஞர் மாதிரி கிரிமினல் மைண்ட் உள்ள ஒருத்தர் ஜெ பண்ற மாதிரி ஆர்ப்பாட்டம்,ஆணவம், படோடபம் எல்லாம் இல்லாம மு க ஸ்டாலின் மாதிரி அடக்கி வாசிச்சு கமுக்கமா , அமுக்கமா, டாக்டர் ராம்தாஸ் மாதிரி சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை பச்சோந்தியா மாத்திக்கிட்டுப் பண்ற ஆள் மாறாட்ட தில்லு முல்லுகள் தான் கதை..


சின்ன வயசுலயே ஹீரோ தன் அம்மா தப்பு பண்றதை பார்த்து அப்பா கிட்டே சொல்லிடறான், அப்பா தற்கொலை, ஆனாலும் மாறாத அம்மாவை வீட்டுக்குள்ள வெச்சு கொளுத்திடறான் வித் தட் கள்ளக்காதலன்.. 


ஜெயில்ல  சில வருஷம் இருந்துட்டு வெளீல வந்து பஸ்ல ஊருக்குப்போறப்ப எங்கேயும் எப்போதும் மாதிரி ஒரு விபத்து, அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் ஆள் அவுட்.. அந்தாளோட சூட்கேஸை அபேஸ் பண்ணி அவர் கிட்டே இருக்கும் சர்ட்டிஃபிகேட் வெச்சு காலேஜ் சேர்ந்துடறான்.. 


காலேஜ்ல ஒரு பணக்காரப்பையன் நட்பு கிடைக்குது.. அவன் பங்களாவுலயே சர்வண்ட்  கம் பேயிங்க் கெஸ்ட்டா தங்கிடறான்.. அந்த பணக்காரப்பையன் ”மாமே” மாதிரி லேடீஸ் மேட்டர்ல வீக்.. பல பொண்ணுங்களோட சுத்தறவர்..ஆனா அவரை நல்லவர்னு நம்பி ஒரு பொண்ணு லவ் பண்ணுது.. 


 ஒரு கட்டத்துல ஹீரோவால தனக்கு பிரச்சனை வரும்னு  பணக்காரப்பையன் நினைக்கறான்.. ஹீரோ முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்ணிட்டு இருக்கும் இந்துன்னு தெரிஞ்சுடுது.. 2 பேருக்குமான வாக்குவாதத்துல  சண்டைல ஹீரோ  அவனை கொலை பண்ணிடறார்..


http://chennaionline.com/images/gallery/2012/July/20120730015206/vijay-Antony-in_Naan_movie_photos_stills_01.jpg

 பாடியை புதைச்சுடறார்.. ஹீரோவுக்கு கோவை குணா மாதிரி மிமிக்ரி தெரியும்.. அதனால செத்துப்போன ஆள் குரல்ல ஃபோன்ல மட்டும் அப்பப்ப பேசி அவங்க பெற்றோரை,காதலியை  அவன் உயிரோட எங்கேயோ தலை மறைவா இருக்கற மாதிரி நம்ப வைக்கிறான். 


 இந்த மேட்டர் அந்த பணக்காரப்பையனோட நண்பன் ஒருத்தனுக்கும் தெரிஞ்சுடுது.. அவனையும் க்ளோஸ் பண்ணிடறான் ஹீரோ..


 இப்போ அந்த பணக்காரப்பையனோட காதலிக்கு டவுட் வந்துடுது.. அவளை எப்படி நம்ப வைக்கிறான், போலீஸ்க்கு எப்படி அல்வா தர்றான்? என்பதுதான் மிச்ச மீதிக்கதை.. 


 சும்மா சொல்லக்கூடாது திரைக்கதை பக்கா.. ஹாலிவுட் பட சுடல்தான்.. ஆனாலும் திறமையா பண்ணி இருக்காங்க  ( நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்- வடிவேலு)


 சம்சாரம் ஃபாத்திமா தான் தயாரிப்பு. கணவர் விஜய் ஆண்ட்டனி தான் ஹீரோ.. சம்சாரம் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும் போல அண்ணன் ரொம்பவே அடக்கி வாசிக்கறார்.. அவர்க்கு நடிப்பு வர்லைங்கறது திரைக்கதை அமைப்பால தெரியவே இல்லை.. ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா இருக்கார்..  கூலிங்க் கிளாஸ் போட்டுட்டா அம்சமா இருப்பார், ஆனா ஒரு சீன்ல கூட அப்படி வராதது ஏமாற்றமே.. 


ஹீரோயின் ரூபா மஞ்சரி. ஹேர் ஸ்டைல் சூப்பர் .. இந்த மாதிரி ரவுண்ட் ஃபேஸ் ஃபிகர்ங்களுக்கு கர்லிங்க் ஹேர்ஸ்டைல் பக்காவா செட் ஆகும்.. அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் அழகு.. கண்ணுக்கு ஐ டெக்ஸ் மையை நம்பாம என்னென்னமோ தடவி இருக்கார்.. எதிர் காலத்தில் தவிர்த்தா அவருக்கும், கண்ணுக்கும் நல்லது.. 


 பணக்காரப்பையனா ஆனந்த தாண்டவம் ஹீரோ  சித்தார்த் வர்றார்.. அமெரிக்கன் ஸ்டைல் ஹேர் ஸ்டைல் அக்மார்க் பணக்காரப்பையன் லுக்,.. ஆள் சோ க்யூட்.. அசால்ட்டா நடிச்சிருக்கார்.. 


அனுயா 6 காட்சிகளில் வந்தாலும் அள்ளிக்கறார். ஆல்ரெடி சிவப்பா இருக்கும் அவர் கன்னத்தில் அதீத சிவப்பு ஒப்பனை பண்ணி இருப்பது எதுக்கு? ஸ்லீவ்லெஸ் டிரஸ் தான் அணிவேன் என்ற இவரது பிடிவாதத்துக்கு ஒரு சபாஷ்.. இவரை இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் ( படத்துல)


போலீஸ் ஆஃபீசரா வர்றவர் நல்லா பண்ணி இருக்கார் என்றாலும் ஒரு வி ஐ பி ஹீரோவை போட்டிருந்தா படத்தோட மார்க்கெட்டிங்க் நல்லா இருந்திருக்கும்..


http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_b1747.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கு அப்பாவா காலேஜ்ல வந்து ஒரு சீன்ல நடிச்சுட்டு போறவர் ஹீரோ கிட்டே மிரட்டி பணம் பறிக்க  ஹோட்டல்ல ஹீரோவை சந்திக்கறார்.. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏதோ கலாட்டா பண்ண ஹீரோ அவங்களை  பீர் பாட்டிலை உடைச்சு ரகளை பண்ற சீன் பார்த்து அரண்டு மிரண்டு தலை தெறிக்க ஓடும் சீன்.. அட்டகாசம்.. தியேட்டரே அப்ளாஸ் மழையில் 


2. ஹீரோ ஃபோர்ஜெரி சிக்னேச்சர்ல கேடி என்பதை படத்தின் முதல் சீன்லயே காட்டி விடுவது பின் வரும் பல காட்சிகளுக்கு உதவியா இருக்கு.. 


3. தயாரிப்பாளர் தன் மனைவி என்பதால் ஹீரோ அடக்கியே வாசித்து இருப்பது. வாய்ப்பு இருந்தும் எந்த பெண்ணையும் அவர் படத்துல தொடலை.. டி ஆர்க்குப்பின் தமிழ் சினிமாவில் பெண்ணை தொடாத ஹீரோ என்ற பட்டம் கிடைக்கலாம்.. ( படத்துல வர்ற எல்லாப்பெண்னையும் தொடும் ஹீரோ பட்டம் சாட்சாத் சிம்புவுக்கே என்பது கோலிவுட் டைரிக்குறிப்பு)


4. திரைக்கதை அமைப்பு மிகத்தெளிவாக, அமைதியாக எந்த அவசரமும் இல்லாம அதி புத்திசாலித்தனம் எல்லாம் இல்லாம நார்மலா போவது பிளஸ்..



5.  படத்தின் கதை, திரைக்கதை வாய்ப்பளித்தும் எந்த இடத்திலும் கவர்ச்சியை  புகுத்தாமல் மிக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்த விதம் செம

http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_a1733.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  சக மாணவனுக்கு ஹீரோ போலி கையெழுத்து போட்டு உதவறார்.. தப்பு தான்.. ஆனா ஹெச் எம் நாளை ஸ்கூ;லுக்கு வரும்போது அம்மா அப்பாவை கூட்டிட்டு வான்னு சொன்னா போதாதா? ஏன் அப்பவே அனுப்பனும்? ஏன்னா அந்த ஸ்கூல் எல்லா மாணவர்களையும் ஸ்கூல் பஸ்ல பிக்கப் பண்ணிட்டு டிராப் பண்ற பஸ்.. பாதிலயே அனுப்புனா எப்படி?


2. பாதில வீட்டுக்கு வரும் ஹீரோ வீடு உள் பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டறான்.. உடனே கள்ளக்காதலனை பாத்ரூமிலோ கட்டிலுக்கு அடியிலோ ஒளிச்சு வைக்காம அம்மாக்காரி கதவை திறக்கறா.. மாமா இங்கே வந்துட்டுப்போனதை அப்பா கிட்டே சொல்லிடாதேங்கறா.. அவ்ளவ் ஏன் ரிஸ்க்? கதவைத்திறந்ததும் “ என்னப்பா? என்ன பிரச்சனை? ஏன் நேரத்துலயேவந்துட்டே? வா ஸ்கூலுக்கு போலாம், விசாரிக்கலாம்னு கேட்டிருக்கலாம்..கதவை திறந்து போட்டபடி அவன் கூட கிளம்பினா கள்ளக்காதலன் எஸ் ஆகிடுவான்


3. தன் அம்மாவையும், கள்ளக்காதலனையும் ரூம்ல வெச்சு சாத்தி எரிக்கறார் ஹீரோ.. அப்ப தப்பிக்கற ஐடியாவுல தான் அவர் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கார்.. அது ஒரு விபத்து மாதிரி தான் எல்லாருக்கும் தெரியுது.. அப்புறம் எப்படி அவர் போலீஸ்ல மாட்டி ஜெயில்க்கு போறார்? என்பதற்கு படத்தில் விளக்கம் ஏதும் இல்லை ( எடிட்டிங்க்ல கட் ஆகி இருக்கலாம் ஃபுட்டேஜ் பிராப்ளமா?)


4. ஹீரோ இந்து, அவர் முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்றார்.. கையெழுத்து, தொழுகை எல்லாம் கத்துக்கறார்.. ஆனா முஸ்லீம்களின் முக்கிய அடையாளமான சுன்னத் ஆபரேஷன் ஏன் செஞ்சுக்கலை..? அவர் மாட்றதே அதை வெச்சுத்தானே? ஒரு கிரிமினல் அது கூட யோசிக்க மாட்டானா?


5. ஹீரோ முஸ்லீம் கிடையாது என்பதை இன்னொரு ஆண் கண்டுபிடிப்பது ஹாலிவுட்டுக்கு ஓக்கே. எப்பவும் சுடும்போது நேட்டிவிட்டி கலக்கனும்.. ஹீரோ ஒரு பொண்ணு கூட கில்மா பண்றப்ப அந்த லேடி கண்டு பிடிச்சா கில்மாவுக்கு கில்மா.. லாஜிக்குக்கு லாஜிக் .. உறுத்தல் ஏதும் இருக்காது..

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sms-heroine-anuya/anuya-hot-sexy-photos-1s.jpg


6.  இழவு விழுந்த வீட்டில் ஒரு வாரம் வரை உறவினர் கூட்டம் இருக்கும். ஆனா ஹீரோவின் அப்பா இறந்த அடுத்த நாளே வீடு வெறிச்சோடி இருக்கு.. ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே கில்மா.. ஹால்ல பையன்..  என்னதான் மிட் நைட்னாலும் யாரும் அவ்ளவ் தைரியமா அப்படி செய்ய மாட்டாங்க


7. சித்தார்த்  2 ஃபிகர்களை தள்ளிட்டு அவுட்டோர் போய்ட்டு 2 நாள் கழிச்சு வர்றார்.. அப்போ அவர் கிட்டே உங்க லவ்வர் வந்துட்டுப்போனாங்க என்பதை ஹீரோ ஏன் சொல்லலை? அதானே பிரச்சனை ஏற்பட முதல் காரணம்? அவ சொல்லிடுவான்னு தெரியாதா?


8. அதே மாதிரி 2 நாள் டூர் போகும் சித்தார்த் அந்த 2 நாள்ல தன் காதலி தன்னைத்தேடி வீட்டுக்கு வருவா-ன்னு தெரியாதா?ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிருக்கும்போது காதலி என்ன ஆச்சுன்னு பார்க்க வராமலா இருப்பா?


9. ஹோட்டல்ல கலக்கலா ரவுடிகளிடம் பாயும் ஹீரோ சித்தார்த்திடம் மட்டும் பம்முவது ஏன்? அவர் காரணம் இல்லாமல்  ஹீரோவை அறையும்போது குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டலையே? ( அவர் ரூமை காலி பண்ணச்சொல்லிடறார், அப்புறம் என்ன பயம்?ரூம்லயே தங்கனும்னாக்கூட அதுக்காக பொறுத்துப்போலாம்)


10. ஹீரோ டெட் பாடியை டிஸ்போஸ் பண்றப்போ, கார்ல போறப்ப பின்னணி இசையா திகிலா மியூசிக் போட்டு பயத்தை ஆடியன்ஸ்க்கு தோற்றுவிக்காம என்னமோ கல்யாணக்கொண்டாட்டத்துக்கு போடற மாதிரி துள்ளல் இசை ஏன்?


http://gallery.southdreamz.com/cache/pressmeet/naan/free-naan-movie-press-meet-events-gallery-vijay-antony-rupe-mankari-siddarth-stills-11_720_southdreamz.jpg


11. ஹீரோ ஒரு சீன்ல ரூம்ல ஒளிஞ்சிருக்கார் ஹீரோயின் வந்து பார்த்துட்டு கிளம்பறா. அப்போ மாடில இருந்து அவ போய்ட்டாளா? என எட்டிப்பார்க்கும்போது அந்த ரூம் லைட்டை ஏன் ஆஃப் பண்ணலை?  அதானே சேஃப்? அங்கே இருந்து அவ பார்த்தாக்கூட இருட்டுதான் தெரியும்.. கிரிமினல்க்கு அது கூடத்தெரியாதா?


12. ஹீரோ கார் ஓட்ட எப்போ கத்துக்கறார்? ஏன்னா சித்தார்த் வீட்டுக்கு வர்ற வரை அவர்க்கும் கார்க்கும் சம்பந்தமே இல்லை.. ஆனா திடீர்னு கார் அநாசயமா ஓட்ற மாதிரி காட்றாங்க


13. ஹீரோ சித்தார்த்தின் அப்பாவின் ஃபேமிலி ஃபிரண்ட்சை சந்திக்க ஹோட்டல்க்கு வர்றார். அப்போ சித்தார்த்தின் ஃபோன் அவர் வெச்சிருக்கார்.. சித்தார்த்தைத்தான் கொன்னுட்டாரே? அப்போ அந்த ஃபோனை சைலண்ட் மோடுல போட்டு வைப்ரேஷன்ல வெச்சுட்டா மேட்டர் ஓவர்.. கால் வந்தா அவருக்கு மட்டும் தெரியும்.. அவங்க 3 பேருக்கும் தெரியாது.. அதை விட்டுட்டு ஏன் தடுமாறுகிறார்?


14.இன்ஸ்பெக்டர் ஹீரோவை விசாரிச்சுட்டு அவரை வெளியே உக்கார வெச்சு பின் சித்தார்த்தின் காதலியை விசாரிக்கறார். அப்போ ஹீரோவை கூப்பிட்டு காதலி கிட்டே “ இவரை தெரியுமா?”ன்னு ஏன் கேட்கலை?


15. இவ்வளவு கிரிமினல் வேலை பண்ணும் ஹீரோ லேடீஸ் மேட்டர் பக்கம் ஏன் போகவே இல்லை.. வாய்ப்பு இருந்தும் தவிர்க்க என்ன காரணம்? அதை வெச்சு இன்னும் இண்ட்ரஸ்ட்டா கதையை நகர்த்தி இருக்கலாமே?


http://1.bp.blogspot.com/-EOIsPU1zE0o/T6N1QKh_FfI/AAAAAAAAl10/g7qfD-Yl0eY/s1600/Rupa%2Bmanjari%2Bactress%2B%2B%25287%2529.JPG


16. ஹீரோ அடிபட்டு ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கார்.. கைல தலைல எல்லாம் கட்டு.. போலீஸ் ஹீரோவை பற்றி விசாரிக்க ஃபேக்ஸ் அனுப்புது.. அதாவது ஒரிஜினல் முஸ்லீம் வீட்டுக்கு.. ஹீரோ டக்னு அந்த அட்ரஸ் போய் சமாளிக்கறார்.. அதெப்பிடி ஒரே நாள்ல காயம் சரியாகிடுமா?



17. அட்ரஸ் வெரிவிஃபிகேஷன் பண்ண கான்ஸ்டபிள் இங்கே இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கும்போது ஆள் இருக்கார்னு சொல்லி இருப்பார்.. அப்போ இன்ஸ்பெக்டருக்கு டவுட் வராதா? இங்கே ஹாஸ்பிடல்ல இருந்த ஆள் அங்கே எப்படி போனார்? ஏன் போனார்?னு.. ஏன் அவரே நேரடியா ராமநாத புரம் போய் அதை க்ளியர் பண்ணலை?அதே போல் ஃபேக்ஸ் போற அதே டைம் இவரும் எப்படி அங்கே போறார்? ஃபிளைட்ல போனாக்கூட முடியாது


18. ஹீரோ 2 கொலை பண்றப்ப க்ளவுஸ் போடவே இல்லை.. கைரேகை காட்டி கொடுத்திருக்கும். எப்படி சித்தார்த்தை கொன்னது அவர் நண்பர் தான்னு நம்பவைக்க முடியும்? ரேகையை வெச்சு கண்டு பிடிக்க மாட்டாங்களா?


 19. ஏடி எம் மிஷின்ல ஹீரோ சித்தார்த் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கறார்.. கொலை செய்யப்பட்ட நாள்க்குப்பிறகு சித்தார்த்த் அக்கவுண்ட்ல இருந்து பல்க் அமவுண்ட் எடுக்கப்பட்டிருக்குன்னா போலீஸ்  உடனே ஏ டி எம் வீடியோ காமராவுல ஹீரோவை பார்த்திருக்காதா?


20. அனுயா ஹீரோ மேல கிரேஸ் ஆனது எப்படி? ஹீரோ அவரை கண்டுக்கவே இல்லை. அதிகம் பேசுனதும் இல்லை.. அன் டைம்ல அவர் வீட்டுக்கு எந்த நம்பிக்கைல போறார்?


21. ஹீரோயின்  மது மஞ்சரி ஒரு சீன்ல என் ஆளை நீ இன்னும் பார்த்ததில்லைன்னு அனுயா கிட்டே சொல்றா.. இந்தக்காலத்துல செல்ஃபோன்ல கவர்னர் கில்மாப்படமே ரிலீஸ் ஆகுது..  அப்படி இருக்கும்போது தன் செல் ஃபோன்ல சேவ் பண்ணி வெச்சிருக்கற லவ்வர் ஃபோட்டோவை ஹீரோயின் அனுயா கிட்டே காட்டி இருந்தா ஆள் மாறாடம் அப்பவே தெரிஞ்சிருக்குமே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfn5JT3NT-9_V6hxcYyUtkj4W2p-MV_lyCta5UoZPm5zBvWQIN_u8QHCf0l9g0bMIXhADU081YYe2_OYJ8QSt7ZogVkj20QsF4esiq8tJybIi1K3avCI7EFZ1sMg_d6d0J3dq0-mY8xou_/s1600/Naan-Movie-New-Stills+(6).jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. சார், எனக்கே என் சைன் இவ்ளவ் அழகா போட வராது.. ஆனா இவன் போட்டிருக்கான் பாருங்க



2. உன் பேரென்ன?

 ஏன்?


அழகான பொண்ணு எங்காவது தட்டுப்பட்டா அவங்க பேர் கேட்டு வெச்சிக்குவேன் அது என் பழக்கம் ..புரியலை? இதான் ராகிங்க்




3. சீனியர் பொண்ணை பார்த்து அழகா இருக்கேனு தைரியமா சொல்றியே, அது எப்படி?


எஸ்.. நீ அழகு .. அதான்


4. XQS மீ மிஸ்.. நாங்க கொஞ்சம் பர்சனலா பேசனும்.. நீங்க.... ப்ளீஸ்..

 ம்க்கும், அப்போ நீயே அவளை டிராப் பண்ணிடு,,

  வித் பிளஷர் ( ஐடியாவே அதுக்குத்தானே?)



5. பிடிச்சிருக்குன்னு சொல்றே, ஆனா லவ்வலைன்னு சொல்றே.. புரியலையே?


ஹி ஹி எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும், ஆனா இந்த காதல், கல்யாணம் எல்லாம் ஒத்து வராது


6. டேய்./. காலேஜ் எல்லாம் எப்படி இருக்கு?


 அது நல்லா தான் இருக்கும், அவன் எப்படி படிக்கறான்னு கேளுங்க


7. அங்கே கார்ல இடம் இல்லைன்னா டோண்ட் ஒர்ரி.. என் மடில இடம் இருக்கு ஹி ஹி



8. லவ்வுக்கு பொசசிவ் நெஸ் தேவை தான்.. ஆனா ஓவரா போய்ட்டா டேஞ்சர்


9. இங்கே யாருமே 100% பர்ஃபெக்ட் இல்லை


10. அசோக் கேரக்டர் எப்படி?


 தானும் படிக்க மாட்டான், யாரையும் படிக்கவும் விட மாட்டான் ( கிராமங்கள்ல இதையே “ தானும் படுக்க மட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான்னு” பழமொழியா சொல்வாங்க )


11. ஏதோ சின்னப்பிரச்சனை.. அதைப்போய் பெருசு பண்ணிட்டு..

 இப்போ எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகள் தான் பெரிய தப்பு உருவாக காரணமா இருக்கு

http://onlyfilmy.com/files/2012/08/Rupa-Manjari-776x1024.jpg



விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் ரேங்க் -  ஓக்கே


 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5


 டெக்கான் கிரானிக்கல் - 6/10



http://images.suite101.com/2689805_com_thetalente.jpg

மேலே உள்ள படம் தான் ஒரிஜினல்... நன்றி - அதிஷா

சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். லேடீஸும் பார்க்கற மாதிரி கண்ணியமான நெறியாள்கை.. படத்துக்கு டி வில சரியா விளம்பரம் தர்லை, அது பெரிய மைன்ஸ், சன் டி வி சன் பிக்சார்ஸ் இதை வாங்கி இருந்தா இதை 100 நாள் படம் ஆக்கி இருப்பாங்க.. ஜஸ்ட் மிஸ்.. ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

நான் படத்தை நான் இயக்கி இருந்தால் வைக்கும் டைட்டில் த ஹிந்து - 420 ( THE HINDU - 420)

கமர்ஷியல் ரன்னிங்க் ரேஸில் அட்டகத்தியை “ நான்” முந்தினாலும் விகடன் மார்க்கில் பிந்தும். காரணம் லாஜிக் மிஸ்டேக்ஸ் எக்கச்சக்கம்


 டிஸ்கி -

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

 

EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்

 

 

 

 

http://haihoi.com/Channels/cine_gallery/naan_movie_stills_siddharth_venugopal_rupa_manjari_1f79bef_S_194.jpg

Tuesday, August 07, 2012

சிவப்பு ரோஜாக்கள் - சினிமா விமர்சனம்

http://img.filmlinks4u.net/2010/07/Sigappu-Rojakkal-1978.png

என் இனிய தமிழ் மக்களே புகழ் பாரதிராஜா மண்வாசனை கிளப்பும் கிராமத்துப்படங்களைத்தான் திறம்பட இயக்குவார்  என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கிய க்ரைம் த்ரில்லர் தான் சிவப்பு ரோஜாக்கள் , பின்னாளில் வந்த பல க்ரைம் படங்களுக்கு முன்னோடி.. கே பாக்யராஜின் திரைக்கதை (உதவி), வசனத்தில் ( முழு) தயாரான படம். வடிவுக்கரசி இதில் கிளாமராக நடித்திருப்பது, கவுண்டமணி, பாக்யராஜ் சின்ன கேரக்டரில் வந்து போவது என சிற்சில ஆச்சரியங்கள் உண்டு.. .


ஹீரோ கமல் ஒரு பிஸ்னெஸ் மேன்.. அவரோட மெயின் வேலை என்னான்னா  ஃபிகரை கரெக்ட் பண்றது, மேட்டர் முடிச்சதும் கொலை செஞ்சு அவர் வீட்டுத்தோட்டத்தில் புதைப்பது.. இந்த மாதிரி சைக்கோ ஆக அவருக்கு  ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு.. அது அப்புறம்.. 

ஒரு ஜவுளிக்கடைல ஹீரோயினை பார்க்கறார்.. லவ் @ ஃபர்ஸ்ட் சைட்.. சைக்கோவுக்கு லவ் வருமா? பத்து பைசா சம்பாதிக்க வக்கில்லாத பொடிப்பசங்களுக்கே லவ் வர்றப்போ கோடியில் புரளும் சைக்கோவுக்கு லவ் வராதா என்ன?


ஹீரோ பெருசா ரிஸ்க் எல்லாம் எடுக்கலை.. அதே ஜவுளிக்கடைக்கு 3 டைம் போறார்.. ஃபிகர் செட் ஆகிடுச்சு.. 365 நாள் போனாலும் நமக்கு செட் ஆகறதில்லை. கார்ல ரைடு கூட்டிட்டுப்போறார், சினிமாவுக்கு கூட்டிட்டு போறார்.. மேரேஜ் பண்ணிக்க புரப்போஸ் பண்றார்.. ஃபிகர் ஓக்கே சொல்லிடுது. 


 ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல மேரேஜ்.. இவ்ளவ் வசதி உள்ள அப்பாடக்கர் ஏன் எந்த சொந்தம் பந்தம், ஆஃபீஸ் நண்பர்கள் யாரும் இல்லாம தனியா மேரேஜ் பண்ண வந்திருக்கீங்களேன்னு அந்த கேனம் பூனம் கேட்கலை.. எப்படியோ புளியங்கொம்பா.  ஒருத்தன் சிக்கிட்டான்னு மேரேஜ் பண்ணிக்குது..


http://www.cinemastrikesback.com/news/new%20dailies/SivappuRojakkal1.jpg


பங்களாவுக்கு கூட்டிட்டு போறான்.. சுத்தி காட்டிட்டு கில்மாவுக்கு முத அடியை எடுத்து வைக்கறப்போ கம்ப்பெனில இருந்து ஃபோன்;./. கம்பெனில வேலை பார்த்த ஒரு ஃபிகர் காணாம போனது தொடர்பா ஒரு பிரச்சனை.. ஃபிகரோட அண்ணன்காரன் வந்திருக்கான்.. இவரு புது சம்சாரத்தை விட்டுட்டு  கம்ப்பெனிக்கு போறாரு


அண்ணன்காரன்  தன் தங்கயை இந்த ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற ஆள் யாரோ ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்கான், சாட்சி இருக்கு, சர்வர் சொன்னான்கறான்..  உடனே ஹீரோ அந்த ஹோட்டல் போய் அந்த சர்வரை க்ளோஸ் பண்ணிட்டு வர்றான்

 இந்த சைக்கிள் கேப்ல  ஹீரோயின் என்ன பண்றா?  ஏவாள் மாதிரி ஆப்பிளை அப்படியே சாப்பிடாம கத்தியால கட் பண்ணி சாப்பிடறா.. அப்போ விரல் ல லைட்டா காயம் ஆகி ரத்தம் கொட்டுது.. ஹீரோவோட பூனை அந்த ரத்தத்தை டேஸ்ட் பாக்குது,. 

 ஹீரோயின் பயந்துடறா,.. அப்படியே ஜன்னல் வழியா பார்க்கறா.. கரெக்டா மழை வருது. தோட்டத்துல புதைக்கப்பட்ட ஒரு டெட் பாடியோட கை மட்டும் மேல வருது..  திகில் கொடுக்கும் கை. வீல்னு கத்தறா.. ( ஹேண்ட்னு தானே கத்தி இருக்கனும்)


ஹீரோவோட வளர்ப்புத்தந்தையும் , தோட்டக்காரனும் அவுட் ஹவுஸ்ல  டி வி ல ஹீரோ நடிச்ச ஐ மீன் ரியலா எடுத்த லைவ் பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்காங்க. ஹீரோயின் அதை பார்த்துடறா.. பிட்டுப்படத்தை, அதை அவங்க பார்த்துட்டு இருந்ததை.. 


 ஹீரோ கரெக்டா வர்றான்.. ஒரே சேசிங்க் தான்/. துரத்தல் தான் (  2ம் 1 தான்) போலீஸ் வந்து பிடிச்சுடுது.. ஹீரோ மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்கப்பட நலம்.. 


படத்துல முதல் ஹீரோ திரைக்கதையும்,  இளையராஜாவின் பின்னணி இசையும்.. மிகச்சிறப்பா பண்ணி இருக்காங்க.. 


கமல்க்கு லவ் சப்ஜெக்ட் சொல்லியே தர வேணாம்.. காதல் இளவரசர்..   ஹீரொயினை கரெக்ட் பண்றது, அதுல கூட ஒரு பணக்காரத்தனம்,  கெத்து காட்டுவது, அப்பப்ப ஹீரோயின் கிட்டே பிட்டு போடறது ஒரே ரொமான்ஸ் மயம் தான்.. கல்லறையில் துரத்தும் காட்சியில் திகில் கலக்கல்.. 


 ஸ்ரீதேவி.,. அந்தக்கால இடை அழகி.. இவர் கிட்டே என்ன ஸ்பெஷாலிட்டின்னா இவர் உதடு , கன்னம், இடை இன்ன பிற சமாச்சாரங்களை எல்லாம் தனித்தனியாவும் ரசிக்கலாம், டோட்டலாவும் ரசிக்கலாம்.. அவ்ளவ் அழகு..  ஹீரோ ஏ ஜோக் சொல்லும்போது, கில்மாவுக்கு பிட் போடும்போது இவர் ச்சீ சொல்லும் அழகே தனி.. ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரியே முகத்தை வைத்துக்கொள்வதில் பாப்பா பி ஹெச் டி போல.. 


அடுத்து வடிவுக்கரசி.. வர்ணிக்கவே கூச்சமா இருக்கு.. ஏன்னா  முதல் மரியாதை, படையப்பாவில் எல்லாம் வயசான கேரக்டர்ல பார்த்து பழகிடுச்சு.. இருந்தாலும் இதுல கிளுகிளுப்பாத்தான் இருக்கு.. லோ கட்  ஜாக்கெட்ல இவர் கமலிடம் டபுள் மீனிங்கில் பேசும்போது செம கிளு கி்ளு.. ( ஏன்னா டபுள் மீனிங்க் டையலாக்கை லேடீஸ்  பேசும்போது கிக் டபுள்  மடங்கு ஆகிறதுன்னு சென்னிமலை சித்தர் சொல்லி இருக்காரு )


கவுண்டமணி கலக்கல் மணி எப்பவும் போல.. சார்  சார் என பம்பும்போது, இண்ட்டர்வ்யூவுக்கு வந்த ஃபிகர்களிடம் வழியும் போது கலக்குகிறார்.. கே பாக்யராஜ்  சர்வராக சில காட்சிகளில் வருகிறார். ( பாரதிராஜா தான் இவரை வற்புறுத்தி நடிக்க வைத்தாராம்)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCOuiOGO5xyGhigeElp7udhUYI419vpdey6Q3QTux02dJi2k6pC2HHv6noenOfxAFJ8KdWGtymjzyFJh4po3rybdlE59B9I8ofgY1txiUpfgQizqzSTGMIou5nu3JGE6KuvpxU1TayREU/s1600/Sridevi+Kamal+Haasan+Sreedevi.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் அவ்வளவு யதார்த்தம்.. ஹீரோயின் தோழி சீண்டுகையில் ஹீரோயின் வெட்கம்.. செம.. சிலுவையை சுமந்து க்ளைமாக்ஸில் ஹீரோயினை துரத்தும் ஹீரோவின் கண்களில் கொலை வெறி எல்லாம் கலக்கல்.. 



2. படத்தில் லாஜிக் மீறலையும் மீறி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிகள் - பூனை ரத்தம் சுவைப்பது, தோட்டத்து மண்ணில் இருந்து பிணத்தின் கை வெளியே வருவது.. அந்தக்கட்சிகளில் இளையராஜாவின் பி ஜி எம் கலக்கல்.. 


3. நத்திங்க் நத்திங்க் என டென்ஷன் ஆகி கமல் கத்தும் டெரர் சீன்.. ஹீரோயினுக்கு முதன் முதலாக ஹீரோவின் இன்னொரு கோர முகம் தெரிய வரும் சீன்,.. பின்னாளில் கே எஸ் ரவிக்குமார் எடுத்த க்ரைம் த்ரில்லர் படமான புரியாத புதிர் படத்தில் ரகுவரன் சொல்லும் ஐ நோ ஐ நோ என்ற புகழ் பெற்ற காட்சி இந்த காட்சியின் உல்டாவே,.,.

4. இளையராஜாவின் அட்டகசமான பின்னணி இசை, தீம் மியூசிக் சாங்க், 2 சூப்பர் ஹிட் பாடல்கள், ஒளீப்பதிவு என டெக்னிக்கல் மேட்டர்ஸ் ஆல் பர்ஃபெக்ட் ( 1978)





http://www.shotpix.com/images/46224764671477334604.png
இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஒரு கம்ப்பெனி ஓனர் தன் கம்பெனில ஒர்க் பண்ற லேடீஸை கரெக்ட் பண்றது எல்லா இடத்திலும் நடப்பதுதான்.. ஆனா இந்தக்கதைல வர்ற ஹீரோவோட எய்மே ரேப் அண்ட் மர்டர் தான்.. எப்படியும் கொலை பண்ணப்போறோம்னு தெரிஞ்சே தான் எல்லாம் பண்றான்.. அப்படி இருக்கறவன் ஏன் தன் கம்பெனி ஆள் மேல கை வைக்கனும்? பின்னால போலீஸ் பிரச்சனை வரும்னு தெரியாதா?  கார் எடுத்துட்டு பஸ் ஸ்டாப் போனா 1000 ஃபிகர்கள் படியும், பிக்கப் பண்ணிட்டு மேட்டரை முடிச்சுட்டு மர்டர் பண்ணிட்டா ரிஸ்க் இல்லை, போலீஸ் ட்ரேஸ் அவுட் பண்ண வழியும் இல்லை ( இதை ஐடியாவா சொல்லலை, கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்ப்தால் சொன்னேன்)


2. சின்ன வயசுல தனக்கு இழைக்கபட்ட  பாலியல் கொடுமைக்கெதிரா சைக்கோ ஆகும் ஹீரோ தவறான பெண்களை கொலை பண்றது ஓக்கே, எதுக்கு கில்மா?  ( தன் வளர்ப்புத்தந்தை வீடியோவில் பார்க்க என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் ஏற்கும்படி இல்லை, அதுக்கு பி எஃப் இருக்கே?)


3. தன் பங்களா தோட்டத்துல  ஏகப்பட்ட பிணம் இருக்கு, அவுட் ஹவுஸ்ல  வளர்ப்புத்தந்தை டி வி ல  பிட்டுப்படம் பார்க்கறார், தன்னைப்பற்றிய சுய விபரக்குறிப்புகள் எழுதபட்ட ரூம் இருக்கு- இத்தனை மைனஸ் இருந்தும் எந்த லூசாவது அந்த பங்களாவுக்கு ஹீரோயினை கூட்டிட்டு போவானா? அவ்லவ் வசதி உள்ளவன் ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல முதல் இரவை முடிச்சுடுவானே?


4. ஹீரோ ஹீரோயினை காலம் பூரா வெச்சு காப்பாத்த லவ்வறாரா? அல்லது அவரையும் மேட்டரை முடிச்சுட்டு க்ளோஸ் பண்ண திட்டமா? என்பதும் தெளிவா சொல்லப்படலை.. 


5. அவுட் ஹவுஸ்ல பிட்டுப்படம் பார்க்கும் ஹீரோவின் வளர்ப்புத்தந்தை தாழ்ப்பாள் போடாம கதவை அப்படி திறந்து போட்டுட்டா பார்த்து ஹீரோயின் கிட்டே மாட்டிக்குவார்? ( ஏன்னா கில்மாப்படம் பார்ப்பதின் பால பாடமே சவுண்ட் வராம மியூட்ல வைப்பதும் வாசல் கதவை தாழ் போடுவதும் தான் )


http://www.shotpix.com/images/02010586592183352455.png


6. நம்ம வீட்ல ஒரு பெருக்கானோ, எலியோ செத்தா அருவெறுப்பா அதை தூக்கி டிச்சுல ஐ மீன் சாக்கடைல போட்டுடுவோம்.. ஆனா இதுல சஸ்பென்ஸை கூட்ட பெருக்கானை தோட்டத்துல புதைக்கற மாதிரி சீன் வெச்சிருக்காங்க.. தேவை இல்லாத சீன்


7. ஹீரோவின் ஃபிளாஸ்பேக் சீன்ல அந்த காலேஜ் ஃபிகரு கில்மா புக்ஸ் எல்லாம் படிச்சதால சூடாகி ஹீரோவை வலியனா ரேப்புக்கு பிட் போடுது.. கரெக்ட்டா அம்மா வந்துடறாங்க.. பொதுவா இந்த மாதிரி எதுக்கும் துணீஞ்ச கட்டைங்க எதையும் பிளான் பண்ணீ செய்வாங்க.. வாசல் கதவு, வீட்டுக்கதவு தாள் போடாமயா செய்வாங்க.. அம்மா பக்கத்துல கோயிலுக்கு போய் இருக்கா, எந்நேரமும் வர்லாம்னு இருக்கும் சிச்சுவேஷன்ல லைட் மீல்ஸ் சாப்பிட்டா ஓக்கே, ஆற அமர ஃபுல் மீல்ஸ் சாப்பிடறது நாட் ஓக்கே..


8. அந்த காலேஜ் ஃபிகரோட அம்மா ஹீரோ கிட்டே கோயிலுக்கு போறதா சொல்லிட்டு மட்ட மத்தியானம் கிளம்பி போகுது.. எந்த ஊர்ல அந்நேரத்துல கோயில்ல விஷேஷமோ? ஒரு வேளை ஆண்ட்டியும்  கில்மாவுக்கு வேற எங்கேயோ போயிடுச்சு போல.  


9. பயங்கர திகிலா வந்திருக்க வேண்டிய  பூனை காட்சி சரியா எடுக்கலை.. ஒவ்வொரு டைமும் பூனையை யாரோ தூக்கி ஹீரோயின் மேல வீசுவது நல்லா தெரியுது.. இன்னும் பெட்டரா பண்ணி இருந்திருக்கலாம்..


10. கை படாத ரோஜாவா வரும் ஹீரோயின் ஹீரோ பல களம் கண்டவர்னு தெரிஞ்சும் அவருக்காக உருகுவது, குணம் அடைய பிரார்த்திப்பது அக்மார்க் சினிமாத்தனம்.. கொஞ்சம் கூட தார்மீக கோபம் வராதா?


11. ஹீரோ சாட்சியான  சர்வரை கொலை பண்றது ஓக்கே.. அதை ஹோட்டல்லயே செய்யறது டேஞ்சர் ஆச்சே.. ரிமோட்டான ஏரியாவுக்கு வரச்சொல்லி பேரம் பேசி பின் படியலைன்னா அங்கே போட்டுத்தள்ளிட்டா நாளைக்கு போலீஸ் விசாரனை வந்தா ஹீரோ மேல பழி விழாதே..


12. பேரம் பேசும்போது சர்வர் ரூ 50,000 கேட்கறார்.. 1978ல ஒரு பவுன் ரூ 2300  அந்த கணக்கு பிரகாரம் பார்த்தா மார்க்கெட் ரேட் படி ரூ  50 லட்சம்.. ஒரு சாதாரண சர்வர் ஒரு மர்டரர் கிட்டே அவ்ளவ் பணம் கேட்பானா? தன்னையே அவன் கொலை பண்ணிட்டா? என சிந்திக்க மாட்டானா?


http://123tamilforum.com/imgcache2/2011/09/6-11.jpg



அட்டகாசமான பாடல்கள்


1. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


2. நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை..


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. வர்றேன்


 போறேன்னு சொல்லிட்டு போங்க, ஏன்னா நீங்க வந்துட்டுப்போற இடம்  ஜெயில்


 நோ வர்றேன், என் அடுத்த பிறந்த நாளுக்கு இதே ஜெயிலுக்கு..





2. கூண்டுக்கு உள்ளே இருக்கறவங்க எல்லாரும் குற்ற வாளிங்களூம் இல்லை, வெளீல நடமாடிட்டு இருக்கற எல்லாரும் நல்லவங்களும் இல்லை..


3. கவுண்டமணி - சாப்ட்ட்டாச்சா?


யா

 ஆல் ஆஃப் யூ கம் டூ இண்ட்டர்வியூ?நான் தான் மேனேஜர்.. எந்திரிக்க மாட்டீங்களே? ஏன்னா உங்க வயசு அப்படி, என் வயசு இப்படி, வேலை உனக்கு கன்ஃபர்ம்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதே.. டேலண்ட் டேலன்.ட் ஹி ஹி



4. கவுண்டமணி - இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கும் லேடீஸ்ல  நீங்க பாதிப்பேரு, நான் பாதிப்பேரு பார்க்கலாமா? ஏன்னா நிறைய பேரு வந்திருக்காங்க..ஆளுக்குப்பாதின்னா வேலை சுளுவா முடியும்.. வேற ஏதும் இல்லை


5. இந்த மாதிரி தான் டிரஸ் பண்ணிட்டு ஆஃபீஸ்க்கு வருவீங்களா?


 (கட் ஷாட் - கனெக்‌ஷன் )- சில நேரங்கள்ல இதுவும் போடறது கிடையாது


6. உங்க பொழுது போக்கு என்ன மிஸ்?


(கட் ஷாட் - கனெக்‌ஷன் )-  பி எஃப் பார்ப்பது, ட்ரிங்க்ஸ் பார்ட்டிஸ்..



7. மிஸ்.. உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா?

 எதுல? ஐ மீன் ஸ்டெனோ, பி ஏ இப்படி பல வேலை பார்த்திருக்கேன்..


எந்த இடத்துலயும் ஏன் பர்மனெண்ட்டா இல்லை?



8.  உங்களுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டா வாட் யூ ஃபீல்?


 நோ வே..  நோ ஒர்ரி.. இந்த கம்பெனி நல்ல திறமையான  நபரை இழக்கும்



9.  ஓக்கே, நான் உன்னை வெச்சுக்கறேன், ஐ மீன் வேலைக்கு



10. ஹீரோயின் - புது வெரைட்டீஸ் நிறைய வந்திருக்கு, பார்க்கறீங்களா?


 யா யா



http://s3images1.filmorbit.com/media/15/88/35/1588355.jpeg



11. பியூட்டி ஃபுல்..  ஐ டாக் அபவுட் த கர்ச்சீஃப்


12.  ஐ லைக் தட் கலர்.. உங்க இடுப்பு ஓரமா இருக்கே. ஐ லைக் இட்..  பியூட்டி ஃபுல்.. இப்பவும் நான் கர்ச்சீபை தான் சொன்னேன்



13.  பிரேசியர் வேணும்


 என்ன சைஸ்?\


 ஏதோ ஒரு சைஸ் குடுங்க/

 ஓஹோ, உங்க மனைவி சைஸ் சொல்லி விடலையா?



14. எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை..  ஹி ஹி


 சரி சரி புரியுது புரியுது



15. சித்ரா 2 நாளா  ஆஃபீஸ் வர்லையே?

 கவுண்டமணி - அந்த ஒரே கவலைதான் சார் எனக்கும்,. 2 நாளா சோறே இறங்கலை



16. ஹீரோயின் தோழி - யூ வாண்ட் பனியன்?

 யா


 கை வைச்சதா? கை வைக்காததா?

 எனக்கு எப்பவும் கை வைக்காததுதான் பிடிக்கும்



17. ஹாய் சினிமாவுக்கு போலாமா?


 அப்போ வார்டன்?

 அவரையும் கூட்டிட்டுப்போகமுடியாதே?



18.நான் ரெகுலரா உங்க கடைக்கு வர்றதால ஆர் யூ மிஸ்டேக்கன் மீ?


ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை



முன் பின் அறிமுகம் இல்லாம  உங்களுக்கு கர்ச்சீஃப் எல்லாம் கிஃப்ட் பண்ணுனனே அதனால ஏதும் விகல்பா நினைக்கலையே?




ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை







வர்றப்போ எல்லாம் உங்க டேபுளுக்கே வர்றேனே? அதனால ஏதும் தப்பா நினைக்கலையே?




ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை


இப்போ நான் உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா தப்பா நினைப்பீங்களா? 




ச்சே, ச்சே அதெல்லா.......அவ்வ்வ்வ்வ்



17. படம் ஓக்கேவா?


 ரொம்ப செக்சியா இருந்துது


 வைகுண்ட ஏகாதசி எப்போ?

 எதுக்கு ?

 அப்போதான் சம்பூர்ண ராமாயணம் போடுவான், போலாம்..



18. முன் அனுபவம் இல்லாம ஒரு காரியத்துல இறங்குனா அது சரி வருமா?

 நோ நோ எந்த காரியத்துலயும் முன் அனுபவம் கண்டிப்பா தேவை

 அதான் நானும் சொல்றேன்.. எப்போ ஆரம்பிக்கலாம்?

 ச்சீய்



19.  என்ன சிரிப்பு?


 கவுண்டமணி - நீங்க முதலாளி, சிரிச்சீங்க, அதான் நானும் சிரிச்சேன்



20. பிரார்த்தனைல உங்களுக்கு நம்பிக்கை இல்லை?

 பரீட்சைக்கு போறப்ப சாமி கும்பிட்டுட்டு போறதை விட நல்லா படிச்சுட்டுப்போகனும்னு நினைக்கறவன் நான்



http://s3images1.filmorbit.com/media/15/88/36/1588361.jpeg



21. சாமி சிலை எவ்ளவ்?

 10 ரூபா


 ரொம்ப சீப்பான சாமி போல./.  சரி சரி முறைக்காத



22. இதுதான் டைனிங்க் டேபிள்.. இதுல நான் உக்காந்து சாப்பிட்டதா நினைவே இல்லை, ஏன்னா  ஐ ஆம் எ லோன்லி மேன், எல்லாம் பெட்ரூம்ல தான்


23.  ஆஃபீஸ்லயே ஒரு டபுள் பெட்ரூம் ரெடி பண்ண சொல்லட்டா?


 எப்பவும் உங்களுக்கு பெட்ரூம் நினைவு தானா?


 சரி, இனி சோபாலயே வெச்சுக்குவோம்



24. இத்தனை புக்ஸும் நீங்க படிச்சவையா?

 யா, இனிமே நோ தியரி, ஒன்லி பிராக்டிகல்.

 அப்போ இவை எல்லாமே.....

 ஹி ஹி எஸ்



25. வாழ்க்கை பூரா நானே ஜெயிக்கனும்கறதுக்காக  யாரையும் விளையாட்டுல சேர்த்துக்கறதில்லை



26. சில பேரோட விதியை வேதனைப்படறதால மாத்திட முடியாது


27. என் பிரார்த்தனைல எனக்கு நம்பிக்கை இருக்கு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK5-sAenDxFm9BNqyXEKjGf6G7Acg2313rqwI8euszIHWIaLOaJoNJFKmqjHUnoV4RBOQt-owPKHTSYBA1q33IkrMuyBqJv1PhA03Pz-vsHh6alGLjmNAIpkVGbJZ8AIbeYRuQLPg5HvjP/s320/bharathiraja.jpg



பாடல்கள்



இந்தப்படம் 1980ல ஹிந்தில ரீ மேக் ஆச்சு.. அப்புறம் ஜப்பான் மொழில டப் பண்ணி அங்கே ரிலீஸ் ஆச்சு..

Saturday, July 28, 2012

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22141_1.jpg

தமிழ் சினிமாவில் 4 வகையான படங்கள் வருவதுண்டு. 

1. அனைவராலும்  சிலாகித்து பாராட்டு பெறும் படங்கள் 

2. மாமூல் மசாலா குப்பைகள்

 3. விருதை குறி வைத்து எடுக்கப்படும் படங்கள் 

4. வக்ர சிந்தனையை தூண்டும் வல்கரான படங்கள்..

 நடு நிசி நாய்கள் படத்துக்குப்பின் நான் பார்த்த மிக மோசமான , வன்முறை,வல்கரின் உச்சமான படமாக இதை சொல்லலாம்.. மேக்கிங்க் வைஸ் பல இடங்களில் சபாஷ் வாங்கினாலும் அஸ்திவாரம் மகா மட்டம்.. இந்த மாதிரி மக்கள் மனதை பாதிக்கும், சமுதாயத்துக்கு எந்த வித நேர் மறை விளைவுகளை தராமல் வக்கிர எண்ணங்களை சமூக விரோதிகளிடம் வளர்க்கும் படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கண்டனத்துடன் விமர்சனத்துக்குள்ளே போலாம்.. 


கார் ஆகட்டும், பைக் ஆகட்டும் முதல்ல ஃபர்ஸ்ட் கீர், அப்புறம் செகண்ட் கீர் லாஸ்ட்டா டாப் கீர். இப்படித்தான் ஸ்பீடு எடுக்கனும்.. ஆனா  படத்தோட ஓப்பனிங்கே டாப் கீர்ல ஸ்டார்ட் ஆகுது.. ஒரு ஹனிமூன் கப்பிள் நடுக்காட்ல கார்ல போறாங்க.. அதை 4 பேர் கொண்ட கும்பல் துரத்துது..  இதை சுவராஸ்யமா 7 ரீல் கொண்டு போனதே பெரிய விஷயம்.. அவங்க எதுக்காக அவங்களை துரத்தறாங்க அப்டிங்கறதை சாவகசமா இடைவேளைக்குப்பிறகு  ஃபிளாஷ்பேக்ல சொல்றாங்க. 


 முறைப்படி இந்த கதையை ஃபிளாஷ்பேக் உத்தியை பயன் படுத்தாம நேரடியா ஏன் சொல்லலைங்கறதுக்கும், ஆரம்பத்துல ஹீரோயின் கார் ஓட்ட ஹீரோ ஏன் பின் சீட்ல உக்காந்திருக்கார் என்பதற்கும் அட்டகாசமான சஸ்பென்ஸ் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கு.. சொன்னா சுவராஸ்யம் போயிடும்./.

வில்லன் குரூப் ல மெயின் வில்லன் சாடிஸ்ட்.. உலகத்துல சாடிஸ ரேப்க்கு தனி மார்க்கெட் இருக்கறதால  பெண்ணை சித்ரவதை பண்ணி ரேப் பண்ணி அதை வீடியோ எடுத்து நெட்ல விட பிளான் பண்றாங்க.. 3 டிக்கெட்ங்களை கூட்டிட்டு வந்து ஃபாரஸ்ட்ல பாழடைஞ்ச பங்களாவுல கில்மா பண்றப்போ ஹீரோயின்  அதை பார்த்துடறா.. அதை வீடியோ எடுத்துடறா.. அதை கைப்பற்றத்தான் சேசிங்.. படம் பூரா ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான்.. படம் முடிஞ்சதும் ஆடியன்சும் ( மொத்தமே 19 பேர்தான்)  விட்டா போதும்னு வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கறாங்க


http://i.ytimg.com/vi/LwNRQ2Lwfzw/0.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஷூட்டிங்க் ஸ்பாட், லொக்கேஷன்ஸ், ஒளிப்பதிவு அட்டகாசம்..

2. ஹீரோயின்  நடிப்பு செம.. பல படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர் போல் நடிச்சிருக்கார்..அங்கங்கே ஓவர் ஆக்டிங்கும் உண்டு

3. ஹீரோயின் பட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை  காரை டிரைவ் பண்றார்.. ஆனா ஹீரோ தேமேன்னு பின்னால இருக்கார்./  ஆனா பின் பாதி ஃபிளாஷ்பேக் சீன்ல ஹீரோ தான் கார் ஓட்டறார்.. இதுக்கான காரணத்தை க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சீனா வெச்சது கலக்கல் .. இயக்குநர் படத்தில் பாராட்டத்தக்க ஒரே  விஷயம் இந்த ட்விஸ்ட் தான்.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  


http://i869.photobucket.com/albums/ab253/tamiltheatre/pollangu-5.jpg


மனம் கவர்ந்த ரொமான்ஸ் வசனங்கள் ( ஹனிமூன் ட்ரிப்)

1. ஏய்.. ரொம்ப வளைக்காதே..

எதை?

 காரை

2.ஹனிமூனை யார் கண்டு பிடிச்சாங்க ? தெரியுமா? கேன் யூ கெஸ்?

ம்ஹும், நீங்களே சொல்லிடுங்க..

கூட்டுக்குடும்பத்துல பிறந்த ஒருத்தன் தன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க முடியாதவன் தனியா எங்காவது அவளை தள்ளிட்டு போக ஐடியா கண்டு பிடிச்சு இருக்கனும்

 அப்போ மாயாண்டி குடும்பத்துல  பிறந்த முனியாண்டி?!!

3.  ஏய்! வலிக்குதா?


வலி இல்லாம வழி கிடைக்காது



4. டியர்.. தாங்க்ஸ்..

எதுக்கு?

என்னை சந்தோஷப்படுத்துனதுக்கு

ஐ நோ (I KNOW)

எப்படி?

ம் ம்  என்னால உணர முடிஞ்சது..  உயிர்த்துடிப்பு சொல்லுச்சு..



ம், ஆனா வலிக்குது



5.  குளிருது... உனக்கு குளிரலை?

 போர்வைக்கு எப்படி குளிரும்?



 புரியலையே..

மக்கு புருஷா.. நைட் டைம்ல நான் தானே உன் போர்வை.. எனக்கு எப்படி குளிரும்?



6. கடல்ல ஒரு வகை மீன்கள் இருக்கு.. லாங்க் ஷாட்ல அவை நீர்  மட்டத்தை விட்டு வெளில வர்றப்போ நெருப்புக்குழம்பு பாய்ச்சல் போல் தெரியும்.. கொள்ளி வாய் பிசாசுன்னு  சிலர் நினைப்பாங்க.. அதே மாதிரி அடர்ந்த கானகத்தில் இப்படி அருவி சத்தம் போலியா கேட்கும்.. அதுக்கு கோஸ்ட் மாடஸ்டி ஆஃப் வாட்டர்னு பேரு.,.

வில்லனின் வசனங்கள்

1. எல்லா பெரிய ஆளுங்களும் ( பெரிய மனுஷங்க) தொடர்ந்து பணக்காரங்களா இருக்க அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டே இருக்கறது தான் காரணம்

2. அது போக 18 இடங்களில் கெட்ட வார்த்தைகள் 



http://4onlinetv.com/wp-content/uploads/mvbthumbs/img_359_pollangu-tamil-theo-trailer-pro-mounam-ravi_xvid.jpg


இயக்குநரிடம்  பல கோபாவேச கேள்விகள்


1. இந்தப்படத்தின் மூலம் நீங்க சமுதாயத்துக்கு சொல்ல வருவது என்ன? சமூக விரோதிகளுக்கு ஐடியா குடுக்கறீங்களா? ஆட்டோ சங்கர் மாதிரி இதை பார்த்து அது போல் செய்யலாம்னு முயற்சி செஞ்சு யாராவது பாதிக்கப்பட்டா நீங்க அதுக்கு பொறுப்பு ஏத்துக்குவீங்களா?

2. ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கறது தப்பில்லை.. நல்ல விஷயங்களை காப்பி அடிக்காம இப்படிப்பட்ட வல்கர் படம் தான் உங்க கண்ணுக்கு சிக்குச்சா?

3. படத்தோட டைட்டில்ல எழுத்து , இயக்கம்னு உங்க பேரை ஜம்பமா போட்டுக்கறீங்க.. இதன் ஒரிஜினல் மூவிக்கான க்ரெடிட்டை ஏன் கொடுக்கலை?

4. ஏதோ த்ரில்லர் படம்னு தெரியாம ஒருத்தன் தன் ஃபேமிலியோட வந்து தியேட்டர்ல மாட்டிக்கிட்டா அவன் அடையும் மன உளைச்சல்களுக்கு உங்க நஷ்ட ஈடு என்ன?

5. ஹீரோ செலக்‌ஷன் மகா மட்டம்.. சரியான தத்தியா இருக்கார்.. அவர் தான் ஃபைனான்ஸ் பண்ணாரா?

6. ஹீரோயின் நியூலி மேரீடு கேர்ள்க்கு பொருத்தமே இல்லை.. 38 வயசு ஆண்ட்டி மாதிரி இருக்கு..

7 சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு எவ்ளவ் லஞ்சம் கொடுத்தீங்க?


http://www.tamilnow.com/movies/gallery/pollangu/pollangu-9231.jpg


லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. படத்தோட ஓப்பனிங்க் சேஸ் சீன்ல ஹீரோயின் கார்ல வேகமா போறா.. வில்லன் குரூப் ஜீப்ல துரத்தறாங்க.. அப்போ ஹீரோயின்  டக்னு மெயின் ரோட்டை விட்டு விலகி லெஃப்ட்ல கட் பண்ணி மண் ரோட்டில் கொஞ்ச தூரம் போய் வண்டியை நிறுத்தி வந்த பாதையின் மண் தாரையை அழிச்சுட்டு கிளம்பறா.. அதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா? என் ஐடியா என்னன்னா ஆளில்லா அநாமத்து காட்டில்  அப்படி சப்வே மண் ரோட்டில் போய் மாட்டிக்கறதுக்கு ஒரு பெண் என்ன யோசிப்பான்னா வில்லன்க அந்த இடத்தை கிராஸ் பண்ணதும் வந்த வழியிலேயே காரை திருப்பி போனா எஸ் ஆக வாய்ப்பு அதிகம்.. ஏன்னா 10 கிமீ வில்லன்க போய் ஆள் எஸ்னு உணரும்போது ஹீரோயின் ஆப்போசிட் டைரக்‌ஷன்ல 10 கிமீ போய் இருப்பா.. டோட்டலா 20 கிமீ தள்ளி இருப்பா.. சேஃப்.. இந்த ஐடியா தான் செலக்ட் பண்ணுவாங்க.. மேலும் மேலும் சிக்கலை வரவழைக்கும் அந்த சப் வே ஐடியா வை யாரும் அதும் ஒரு பொண்ணு செலக்ட் பண்ண மாட்டா..

2. ஒரு  சீன்ல வில்லனை மலைப்பாம்பு வளைக்குது.. அப்போ அவன் கைல கன் இருக்கு.. சுட்டிருக்கலாம்.. பயத்துல அல்லது உயிர்ப்பாதுகாப்புக்காகவாவது சுட்டிருக்கனும்./. ஆனா அவன் சுடலை ஏன்? வேற ஒரு வில்லன் வந்து அவன் கைல இருக்கற கன்னால சுடறான்.. அது டேஞ்சர் இல்லையா? பாம்பு மேல குண்டு பாய்வதை விட ஆள் மேல பாய்வதற்குத்தான் சான்ஸ் அதிகம்

3.  இன்னொரு காட்சில மலைப்பாம்பு ஒருத்தனை வளைக்குது.. அப்போ 3 பேரு வந்து என்னமோ ராட்டைல இருந்து நூல் உருவற மாதிரி அவனை ஈசியா விடுவிக்கறாங்க.. அப்புறம் என்னமோ செல்லப்பிராணியை வழி அனுப்பற மாதிரி காட்டுக்குள்ளே அதை விட்டுடறாங்க.. காட்டிலாகா அதிகாரியிடம் இது பற்றி பேசினேன்.. மலைப்பாம்பின் பிடி இறுகி இருக்குமாம்.. அல்ப சொல்பமா  அப்படி எல்லாம் விடுவிக்க முடியாதாம்.. உடும்புப்பிடிக்கு அடுத்து மலைப்பாம்பின் பிடிதான் ஃபேமஸாம்

4.   புரட்சித்தலைவியின் தஞ்சாவூர் பொம்மைஓ பி எஸ், சோனியாவின்  கை பொம்மை மன்மோகன் சிங்கை  எல்லாம் தோற்கடிக்கும் வகையில் அந்த கணவன் கேரக்டர்,, மகா மகா சோப்ளாங்கி..  கேரக்ட்ரைசேஷன் ஒர்ஸ்ட்

5. கதைப்படி அவங்க ஹனிமூன் கப்பிள் தான்.. ஆனா வில்லன் அவங்க கிட்டே “ உங்க கழுத்துல தாலி இல்லை.. தள்ளிட்டு வந்துட்டீங்களா?” அப்டினு கேவலமா கேட்கறப்போ எந்த ரெஸ்பாண்சும் இல்லையே, ஏன்? தன்னிலை விளக்கம் கொடுக்க வேணாமா?

6. டவர் இல்லாத காட்டுப்பகுதி.. யாருக்கும் செல் ஃபோன் டவரே கிடைக்கலை.. ஆனா வில்லன்க தேடல் வேட்டையை நடத்தும்போது 4 வெவ்வேறு திசைகளில் போய் மறுபடி கரெக்டா வேற ஒரு இடத்துல ஒண்ணு கூடுவது எப்படி?இந்த இடத்துல மீட் பண்ணலாம்னு அவங்க பேசிக்கவும் இல்லை..

7. ஹீரோயின் அடிபட்டு மயக்க நிலைல இருக்கு.. இந்த லூஸு வில்லன்க பாட்டுக்கு கேனத்தனமா விசாரனை பண்றதும், தேளை அவங்க மேல விடறதும் ஓவர்.. தேளை ஒருத்தன் அப்பப்ப தூண்டி விடறான்.. அவன் என்ன ஜூவாலஜி ஸ்பெஷலிஸ்ட்டா? பொட்டுன்னு அவனைத்தான் மொதல்ல போடும்..

8. ஹீரோயின் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோ, தீவிரவாதியோ கிடையாது.. சராசரி பொண்ணுக்கான வலி தாங்கு திறன் தான் அவருக்கும் இருக்கும்.. ஆளில்லா காட்டில் கை விரல் நகங்கள் 10, பற்கள் எல்லாம் கட்டிங்க் ப்ளையர் எல்லாம் வெசு பிடுங்கியும் அவர் பிடிவாதமா அந்த கேமராவை எங்கே ஒளிச்சு வெச்சேன்னு சொல்ல மாடேன்னு அடம் பிடிப்பது செயற்கை.. அவ்ளவ் அடம் பிடிச்சு என்ன யூஸ்?

9. ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருட்டுல இவர் பாட்டுக்கு  மண்ணுக்குள்ளே கேமராவை ஒளிச்சு வைக்கறார்.. செல் ஃபோன் டவர் இல்லை.. யாருக்கும் மெசேஜ் அனுப்பும் வசதியும் இல்லை.. அதனால என்ன யூஸ்? இவர் செத்துட்டா அந்த ரகசியத்தை யார் எடுக்கப்போறாங்க?

10. நடுக்காட்டில் நள்ளிரவில் எழும் மணப்பெண் ஒரு மினிமினி பட்டர்ஃபிளை பார்த்து வீடியோ எடுப்பது ஓக்கே.. அது பின்னாலயே 2 கிமீ தூரம் போய்க்கிட்டே இருப்பது ரொம்ப ஓவர்.. அது என்ன பிட்டுப்படமா? பட்டர் ஃபிளை தானே.. 2 நிமிஷம் எடுத்தாலும் 2 மணி நேரம் எடுத்தாலும் 1 தானே..?  




http://haihoi.com/Channels/cine_gallery/Pollangu-Movie-Wallpapers-11_S_152.jpg


சென்சார் ஆஃபீசரிடம் சில கேள்விகள்

1.  லஞ்சம் வாங்கிட்டா எவ்ளவ் குப்பை படத்தையும் ரிலீஸ் பண்ணிடலாமா? இந்தப்படத்துக்கு எப்படி சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைச்சதுன்னு நீதி விசாரனை எல்லாம் வரவா போகுதுன்னு  அலட்சியமா?

2.  ஒரு பெண்ணை ரேப் பண்ற மாதிரி சீன் காட்ட சிம்பாலிக் ஷாட் போதாதா? அவ்ளவ் டீட்டெயிலா காட்டி இருக்காங்க.. அதை எப்படி அலோ பண்ணீங்க?

3. ஹீரோயின் நகங்கள் பிடுங்கப்படும் காட்சி, பல்லை கட்டிங்க் ப்ளையர் ( கொரடு) வெச்சு எடுக்கும் காட்சி எல்லாம் ஓவரோ ஓவர்.. இதுவரை எந்த தமிழ் சினிமாவுலயும் வர்லை.. என்ன தைரியத்துல இதை எல்லாம் அலோ பண்ணீங்க?

4. ஹீரோயின் மயக்கம் ஆகிடறா.. அவளை எழுப்ப தண்ணி தெளிக்கறதுக்குப்பதிலா வில்லன் ஹீரோயின் முகத்துல.. .. மகா மட்டமான வல்கரான சீன் அது.. உவ்வே,, இதை எப்படி ஓக்கே சொன்னீங்க?

5. பிணத்துடன் உறவு கொள்ளும் வில்லன் மூவ்மெண்ட் காட்டுனது ஓவர்னா ஒருத்தன் அந்த பிணத்தின் முகத்து தோலை அப்படியே  உரிச்சு எடுக்கறது எல்லாம் வல்கரின் உச்சம்.. உங்க ஃபேமிலி லேடீஸ் இந்தப்படத்தை பார்க்க அலோ பண்ணுவிங்களா?

6. இந்தப்படத்துக்கு பணத்தை வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் குடுத்த குற்றத்துக்காக தண்டனையா உங்க மனைவி மகள் அம்மாவுடன் இந்தப்படத்தை பார்க்கனும்னு சொல்லிடனும்.. அப்போதான்யா உங்களுக்கெல்லாம் புத்தி வரும்..


தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு கேள்வி

1. நாய் வித்த காசு குரைக்காதுதான்.. இந்த மாதிரி மட்டமான படம் எடுத்து அதுல வர்ற வருமானத்துல சாப்பாடு சாப்பிடனுமா?கீழே இருப்பவர் தான் தயாரிப்பாளர் . படத்துல போலீஸ் ஆஃபிசரா வர்றார்..


http://www.thehindu.com/multimedia/dynamic/00928/19cp_Pollangu_Praka_928179g.jpg



சி.பி கமெண்ட் - இந்த கேவலமான படத்தை பெண்கள், கர்ப்பிணிகள், மாணவ மாணவிகள் , 36 வயதுக்கு உட்பட்டோர், மனோரீதியாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் மென்மையான மனம் கொண்ட அனைத்து வயது ஆண்கள் பார்க்க வேண்டாம். ஹனிமூன் போகும் புது மணத்தம்பதிகள் பார்த்தால் ஜென்மத்துக்கும் அந்த ஆசையே போயிடும் அபாயம் இருப்பதால். அவர்களும் பார்க்க வேண்டாம்..வன்முறையின் உச்சமான படத்தை எடுத்த இயக்குநர் பேரு காந்தி மார்க்ஸ்ஸாம் அவ்வ்வ்வ். என்னே ஒரு முரண்!


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க் - ஓக்கே


டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5

 டெக்கான் கிரானிக்கல்   6 /10

டிஸ்கி 1 - நடுநிசி நாய்கள் விமர்சனம் - http://www.adrasaka.com/2011/02/18_18.html


டிஸ்கி 2 -

இயக்குநர் கவுதம் மேணனுக்கு ஒரு கண்டனக்கடிதம்( இது பொல்லாங்கு இயக்குநருக்கும் பொருந்தும்)http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

 

 

டிஸ்கி 3 - சுழல் விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 

 

டிஸ்கி 4 -  டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html 


Friday, July 27, 2012

சுழல் - சினிமா விமர்சனம்



http://www.fingertipszone.com/cinema_images/tamil/suzhal/suzhal_11.jpg 

ஹீரோ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்.. பார்ட் டைம் ஜாப்பா எலக்ட்ரீஷியன் ஒர்க்கும் பார்ப்பாரு.. பிரதாப் போத்தன் ஒரு போதை மருந்துப்பிரியர்.. அடிமை.. அவருக்கு ஒரு சம்சாரம்.. எப்போ பாரு அவரை கரிச்சுக்கொட்டிட்டே இருக்கு.. எதுக்குமே நீ லாயக்கில்லை.. உன்னை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்னு  24 மணி நேரமும் புலம்பிட்டே இருக்கு.. கோபத்துல எதையோ தூக்கிப்போட மெயின் ஸ்விட்ச் பணால்.. இப்போ எலக்ட்ரீசியன் ஹீரோ அங்கே எண்ட்ரி.. 


 என்ன மலையாள பிட்டுப்படம் மாதிரி ஓப்பனிங்க்கா இருக்கேன்னு அவனவன் நிமிர்ந்து உக்கார்றான்.. ஆனா கதை வேற மாதிரி போகுது.. அதாவது பிரதாப் போத்தன் போலீசால் கண்காணிக்கப்படற ஒரு சமூக விரோதி,.,. என்னமோ பண்றார்.. சட்டத்துக்குப்புறம்பா சம்பாதிக்கறார்.. அது என்னன்னு கண்டு பிடிக்க  அதுல் குல்கர்னி.. அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட்.. 




http://www.mottaboss.com/stills/jun12/26/suzhal_movie_stills_suzhal_tamil_movie_photos_gallery_eab1745.jpg


படத்தோட மெயின் கதை இடைவேளைக்குப்பின் தான்.. இப்போ டைம் பாஸ் பண்ணனும்.. எப்படி 5 ரீல் ஓட்ட? ஹீரோவுக்கு ஒரு அறிமுக காட்சி பாடல்...  அவங்க நண்பர்களோட சேர்ந்து ஹீரோ கிராமத்துக்கு போறப்ப ஒரு ஜாலி பாட்டு ( ஜாலி பாட்டுன்னு யூனிட் நினைச்சுக்குச்சு.).. அங்கே நண்பர்களுக்குள் ஒரு ஜோடி லவ் செட் ஆகுது.. ஹீரோ ஒரு கற்பனை ஹீரோயின் கூட ஒரு பாட்டு.. 3 பாட்டு ஆச்சா? அவங்க அந்த கிராமத்துல இருந்து ரிட்டர்ன் வர்றப்போ ஒரு விபத்து.. ஒரு பொண்ணு அவுட்.. ஒரு பையன் சீரியஸ்.. அவசரமா ஆபரேஷனுக்கு 50 லட்சம் பணம்  தேவைப்படுது..


 ஹீரோ மறுபடி பெண்டிங்க் ஒர்க் பார்க்க  பிரதாப் வீட்டுக்கு போறாரு.. பிரதாப்க்கு கொச்சின்ல இருந்து ஒரு கொரியர் கவர் வ்ருது.. அதை நைசா ஹீரோ அபேஸ்.. அப்புறம் தற்செயலா பிரதாப் டெட்.. இதான் சான்ஸ்னு ஹீரோ அந்த கவரை எடுத்துட்டு கொச்சின் போறார்.. 


 அங்கே ஒரு உயிர் விளையாட்டு.. சின்னப்பசங்க எல்லாம் வரிசைல நின்னு சுத்தி தொட்டு விலையாட்டு விளையாடற மாதிரி.. அதாவது கோடீஸ்வரர்கள் பலர் பெட் கட்டி இருப்பாங்க.. 10 பேர் சுற்றி நின்னு ஒருவரை ஒருவர் குறி பார்த்து சுடனும்.. ரிவால்வர்ல  3 குண்டு தான் இருக்கும்.. லக் இருக்கறவன் பிழைப்பான்.. லக் இல்லாதவன் எமன் கிட்டே போவான்.. 

 3 ரவுண்ட்லயும் ஹீரோ ஜெயிச்சு பணத்தை அள்ளிக்கிறார்..  அப்புறம் என்ன ஆச்சு? என்பதை வெண் திரையில் காண்கன்னு சொல்லலாம்.. ஆனா 98% கதை முடிஞ்சது.. மீதி 2 லைன் தான்.. அதையும் சொல்லிடறேன்.. ஹீரோவை பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருத்தன் மலையூர் மம்பட்டியான் செந்தில் மாதிரி டொப்புன்னு கொன்னுடறான்.. ஹீரோ ஃபிரண்ட் அநாமத்தா ஹாஸ்பிடல்ல இருக்கார்.. போலீஸ் ஆடியன்சை பார்த்து நக்கலா சிரிக்க  த எண்ட்.. 




http://haihoi.com/Channels/cine_gallery/Suzhal-Movie-Stills-53_S_109.jpg


 இந்த கேவலமான படத்துல  அதுல் குல்கர்ணி நடிக்க ஒத்துக்கிட்டது ஏன்னு தெரியல.. படத்துல மொத்தமா 14 சீன் தான் வர்றார்.. அவர் வர்ற நிமிஷங்கள் டோடலா 18 நிமிஷம் தான்.. பேசற வசனங்கள்  ஏ ஃபோர் சீட்ல  கால் பக்கம். அட்டகாசமான நடிகரை வேஸ்ட் பண்ணிட்டாங்க.. 


காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற ஹீரோ பாவம்.. சொல்லிக்க ஏதும் இல்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ( சப்போஸ் நெக்ஸ்ட் பட சான்ஸ் கிடைச்சா.. ) ஏன்னா முத படம் ஊத்திக்கிச்சுன்னா யாரும் சான்ஸ் தர மாட்டாங்க.. 

படத்துல ஹீரோயின்னு யாரும் இல்லை ( அதுக்காகவே இந்த டைரக்டரை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. ) படத்துல 6 கேர்ள்ஸ் கேரக்டர் வருது.. எல்லாரும் ஒண்ணைக்கண்ட மாதிரியே குதிரை முகக்காரிகளா இருக்காங்க.. தமிழனுக்கு இது சுத்தமா பிடிக்காதே.. எப்படி செலக்ட் பண்ணாரு? அட கதையைத்தான் ஒழுங்கா செலக்ட் பண்ணலை.. அட்லீஸ்ட் சதையை சாரி பொண்ணுங்களையாவது பார்க்கற மாதிரி பிடிச்சுப்போடக்கூடாது? அட்டர் வேச்ட்.. ஆல் கேர்ள்ஸ்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZHiHjOePidR8zwRNo381oWhHtIRLpoq77AtsuXQ9vbiC4Bqfbehx1CzMLRq0Dn4a97o5OxGPL07o34BF19O4hs4vjJSGPjk-MHmGP7ZFcsVS47iU6ZsLD6mSaaa6l3zGzEQbeyR8WlgOG/s1600/Suzhal+Movie+Audio+Launch+Stills+Suzhal+Movie+Audio+Release+Event+Photos+(4).jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  குருதிப்புனல் கமல் ரேஞ்சுக்கு அதுல் குல் கர்னியை ஃபோட்டோ எடுத்து பிரமாதமா போஸ்டர் டிசைன் செஞ்சது, ஸ்டில்ஸ், விளம்பரங்கள்ல நல்ல ஆக்‌ஷன் படம் மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துனது



2. படத்தோட ஹீரோ அதுல் குல்கர்னிதான்னு எல்லாரையும் நம்ப வெச்சது.. அது கூட தேவலை.. அதுல் குல்கர்னியையே நம்ப வெச்சிருக்காரு ( ஸ்டார் டஸ் ஆங்கில மாத இதழ்ல அண்ணன் பேட்டி குடுத்திருக்காரு ஹய்யோ அய்யோ பாவம் )


3. சொல்லாத ஆசை எல்லாம் சொல்ல வந்தேன் பாடல் காட்சில ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம்.. வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதைல வர்ற பரிசல் காட்சிகளை எல்லாம் சுட்டிருக்கார். இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கு 


4. ஹீரோவின் நண்பருக்கு நடக்கும் பைக் ஆக்சிடெண்ட் தத்ரூபம்.. அதில் அட்டகாசமாக பங்கு பெற்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ஒரு சபாஷ்.. 



5. யார் யாரோ பூமியில் வந்து போனார்கள் பாடல் வரிகள் கிளாசிக்..  வாழ்க்கைத்தத்துவத்தை பிழிஞ்சுட்டாங்க.. ஆனா மிஸ் பிளேஸ்.. 




http://www.tollywoodnews.net/wp-content/plugins/RSSPoster_PRO/cache/c976e_thumbs_suzhal-movie-stills-27.jpg



 இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள்


1. படத்துக்கு வர்ற தமிழ் ஆடியன்சை எல்லாம் கேனக்கிறுக்கனுகன்னு நினைக்கறீங்களா? என்ன இதுக்கோசரம் பட பிரமோஷன்கள்ல, பிரிவ்யூ ஷோக்கள்ல எல்லாம் அதுல் குல்கர்னி படம்னு பில்டப் கொடுக்கறீங்க? முறைப்படி போஸ்டர்ல கெஸ்ட் ரோல்ல அதுல் குல்கர்னின்னு போடனும்.. 



2. ஹீரோ எலக்ட்ரிகல் ஒர்க் பாதி பெண்டிங்கல வெச்சுட்டு டூர் போறார்.. அப்போ ஓனர் சரி போ நான் பாத்துக்கறேன்கறார்.. அப்புறம் அவர் டி வி தான் பார்த்தார், ஹீரோ ரிட்டர்ன் வந்து உயிருக்கு போராடிட்டு இருக்கற நண்பன் கூட ஹாஸ்பிடல்ல இருக்கும்போது  கூட விடாம துரத்திட்டு வந்து பெண்டிங்க் ஒர்க்கை முடிச்சுக்குடுக்க சொல்றார்.. ஏன் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? வேற ஆளே இல்லையா?


3. ஹீரோ கொச்சின்க்கு ரிசர்வ்டு டிக்கெட்டோட ரயில் ஏறிட்டார்.. ஆனா ஒரு சின்னப்பொண்ணு கிட்டே “ கொஞ்சம் தள்ளி உக்காரும்மா”ன்னு இடம் பிடிக்கறார்.. சரி அன்ரிசர்வ்டு கம்பார்ட் மெண்ட்ல ஏறிட்டார் போலன்னு நினைச்சா டி டி ஆர் செக்கிங்க் வர்றார்.. அப்போ சிலர் ஸ்டேண்டிங்க்ல வேற பேக்ல  நிக்கறாங்க..  எந்த ஊர்ல ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல ஸ்டேண்டிங்க் எல்லாம் வந்துச்சு?


4. கதை கொச்சின்ல நடக்கறப்போ ஒரு பய மலையாளமே பேசலை.. ஆல் தமிழ் தான்.. கொச்சின் தமிழ் நாடா மாறிடுச்சா? ( போனாப்போகுதுன்னு போலீஸ் மட்டும் மலையாளம் பேசுது)


5. ஹீரோ ஒரு சீன்ல ரயிலை பிடிக்க தண்ட வாள நடுவால வேகமா ஓடறார், பக்கத்துலயே அம்புட்டு இடம் காலியாத்தானே இருக்கு? ஏன் அப்படி கேனத்தனமா ஓடறார்? ஹீரோ பில்டப்பா?


6. பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையா நினைக்கறீங்களா? படத்துல வர்ற 6 பொண்ணுங்க பேர்ல ஒரு ஆள் பேரு கூட டைட்டில்ல வர்லை.. டைட்டில்ல மொத்தமே  3 பேர் பேருதான் வருது.. அப்புறம் எல்லாம் டெக்னீஷியன் நேம் தான்.. 


7. இந்த ஆக்‌ஷன் படத்துல தேவையே இல்லாம 6 பாட்டு.. அதிலும் அந்த குத்தாட்ட அயிட்டம் சாங்க் ரொம்ப மட்டம்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHYTyVwvabQLU5p2TYbWlZHyiID9VqL_1jJHcKzuRO5tdMSE7rM9lYfFAHV_JDkKZyMP7lxCVmy34f4oA0ntI6qw-3hpd_avmH98MzVxFydJV6VfR4kgfwTavfRHw06H6NL2NuzjqEwoU/s1600/suzhal_latest_wallpapers_001.jpg


 படத்துல வசனகர்த்தாவுக்கு வேலையே இல்லை.. சமீபகாலமா அதாவது நான் பார்த்த கடந்த 10 வருட படங்கள்ல வசனம் இவ்ளவ் மோசமா இருக்கற படம் இதுதான்.. போனா போகுது.. 3 வசனம் சொல்றேன்





 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி அடுத்தவங்களை எதிர்பார்க்கற மாதிரியே இருக்கு?


2. ஒரு நாட்டோட எக்கனாமி, லா & ஆர்டர் சீர் குலைக்கற மாதிரி சக்தி அந்த கும்பல் கிட்டே இருக்கு.. அதை வளர விடக்கூடாது.. 


3. நீங்க சொன்னது சரிதான் சார்.. எதிரிங்க பூமியிலோ, வானத்திலோ இல்லை.. தண்ணில தான் இருக்காங்க ( ஆமா சரக்கு அடிச்சுட்டு கப்பல்ல இருக்காங்க )





http://moviegalleri.net/wp-content/gallery/suzhal-movie-stills/suzhal_movie_stills_suzhal_tamil_movie_photos_gallery_2a0f843.jpg



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38


 குமுதம் எதிர்பார்க்கும் ரேங்க் - சுமார்


டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க்கிங்க்  -  1.5 / 5


டெக்கான் கிரானிக்கல் - 3/10




சி.பி - கமெண்ட்  - தெளிவா சொல்லிட்டேன் இது ஒரு குப்பை படம்னு.. யாராவது ஃபோன் பண்ணி படம் எப்படி?ன்னு கேட்டா கடுப்பாகிடுவேன்.. ஆண்கள், பெண்கள் யாரும் பார்க்கத்தேவை இல்லாத படம்..இந்தப்படத்தோட ஒரிஜினல் கீழே உள்ள படமாம் தகவல் உதவி அதிஷா


 டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html


பொல்லாங்கு விமர்சனம் - http://www.adrasaka.com/2012/07/2_28.html
 


Movie Review: 13 Tzameti

Friday, May 04, 2012

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்

http://www.cinemapoomi.ithayapoomi.org/images/articles/1332090993valaku%20en_002.jpg

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு பணக்கார வீட்ல வேலை செய்யற வேலைக்காரப்பொண்ணு மேல யாரோ ஆசிட் வீசிடறதா காட்டறாங்க .. அந்த வேலைக்காரப்பொண்ணை ஒருதலையா லவ்வின ஒரு பிளாட்ஃபார்ம் கேஸ் பையன் தான் அந்த வேலையை செஞ்சிருக்கனும்னு அவனை விசாரணைக்கு கூட்டிட்டு வர்றாங்க.. படத்தோட முதல் பாதி அந்தப்பையனோட ஃபிளாஸ் பேக்ல சொல்லப்படுது..

கிராமத்துல விவசாயக்குடும்பம் அவனுது.. விளைச்சல் இல்லாம கந்து வட்டிக்கு பணம் வாங்கிப்பையனைப்படிக்க வைக்கறாங்க.. ஒரு கட்டத்துல கடனை திருப்பிக்கட்ட முடியாத சூழ்நிலைல பணம் கொடுத்த ஆள் ரொம்ப நெருக்குனதால  பையன் வட மாநிலத்துல வேலை செய்ய கிட்டத்தட்ட விற்கப்படறான்.. 6 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு கடனைக்கட்டி ரிட்டர்ன் வர்றப்போ அவன் பேரண்ட்ஸ் ஆக்சிடெண்ட்ல இறந்துடறாங்க.. இப்போ இவன் அநாதை.. 

 கையேந்தி பவன்ல வேலைக்கு சேர்றான்.. ரோட்டோர வாழ்க்கை.. அந்த வழியா போக வர இருந்த வேலைக்காரப்பெண்ணை  பார்த்து லவ்வறான்.. ஆனா பாப்பாவுக்கு அவனைக்கண்டாலே பிடிக்கலை.. ஏன்னா பொதுவாவே பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை, நேர்மையான காதல் நெஞ்சங்களை பிடிக்காது.. பன்னாடைப்பசங்களை, பன்னாடுகளில் இருந்து இறக்குமதி செஞ்ச ஜீன்ஸ் போட்டுட்டு பொய் சொல்லி ஏமாத்துற பசங்களைத்தான் உருகி  உருகி காதலிப்பாங்க.. அவன் மேட்டரை முடிச்சுட்டு கழட்டி விட்ட பின் அம்மா, அப்பா பார்த்த பையனை கமுக்கமா மேரேஜ் பணி செட்டில் ஆகிடுவாங்க..




http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2686&option=com_joomgallery&Itemid=140


அதனால நிராகரிக்கப்பட்ட வேதனைல அவன் தான் ஆசிட் ஊற்றி இருக்கனும்னு அவன் மேல கேஸ்.. 

 இப்போ இடை வேளை.. 2 வது கோணம்.. இப்போ அந்த வேலைக்காரப்பொண்ணு வேலை செய்யற பணக்கார ஃபிகரு போலீஸ் ஸ்டேஷன்ல  வாலண்ட்ரியா ஆஜர் ஆகி சாட்சி சொல்லுது.. அந்த பாப்பாவோட பார்வைல வழக்கின் இன்னொரு கோணம்.. 

அந்த பணக்கார ஃபிகரை கரெக்ட் பண்ண நல்ல நோட் பண்ணுங்க.. நோ காதல் ஜஸ்ட் கரெக்‌ஷன்... சிம்ப்பிளா சொல்லனும்னா சிம்பு- நயன் தாரா மாதிரி ட்ரை பண்றான்..  அவ கூட ஊரைச்சுத்தறப்ப... அவ கடல்ல குளிக்கறப்ப செல் ஃபோன்ல ஃபோட்டோ , வீடியோ எடுத்து வெச்சு அதை ஃபிரண்ட்ஸ்க்கெல்லாம் காட்டிட்டு இருக்கான்.. 

 அந்த மேட்டர் அந்த ஃபிகருக்கு தெரிஞ்சுடுது... தூ-ன்னு கேவலமா துப்பிட்டு கட் பண்றா.. அந்த கோபத்துல அந்தப்பையன்  அவ மேல ஆசிட் ஊற்ற வீட்டுக்கு வந்தவன் கதவை திறந்த வேலைக்காரி மேல ஊத்திடறான்.. 

 இதுதான் கேஸ்.. இதுக்குப்பிறகு இந்த கேஸை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் என்ன பண்றார்.. ஆசிட் ஊத்துன பையனோட அம்மா ஒரு கேஸ்.. அதாவது  ஒரு மினிஸ்டரோட சின்ன வீடு.. அவ கிட்டே பணம் வாங்கிட்டு, கேஸை திசை திருப்பி அந்த ஏழைப்பையனை பிரெயின் வாஸ் பண்ணி குற்றத்தை ஒத்துக்க வெச்சு தண்டனை வாங்கி குடுக்கறார்.. 

 அதுக்குப்பின் என்ன ஆகுது என்பதை வெண் திரையில் காண்க.. 

கமல் நடிச்ச விருமாண்டி படத்தோட, மற்றும் ,ROSHOMAN போல் ஒரே சம்பவத்தை இரு வேறு நபர்களின் பார்வையில்சொல்லும்  திரைக்கதை உத்தி தான் இதுலயும்.. ஆனா அபாரமான உழைப்பு.. பக்காவான ஸ்கிரிட் நாலெட்ஜ் இல்லாம இதை பண்ண  முடியாது...

 தன்னோட வழக்கமான பாணியான  உண்மைச்சம்பவம்.. நியூஸ் பேப்பர்ல வந்த செய்தி.. அதை வெச்சு டெவலப் பண்ற சாமார்த்தியம் இதை பக்காவா யூஸ் பண்ணி இருக்கார்

ஹீரோவாக வரும் புதுமுகம் ஸ்ரீ அலட்டல் இல்லாத நாயகன்.. எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கிறது.... பல காட்சிகளில் நிஜமாவே இவருக்கு இது முதல் படம் தானா ? என அசத்துகிறார். அழுகைக்காட்சிகளில் கூட ரசிக்க வைக்கிறார்..





http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-1.jpg
ஹீரோயின் வேலைக்காரியாக வரும் ஊர்மிளா மகந்தா கிட்டத்தட்ட பாவனா அல்லது அனன்யா மாதிரி முகபாவனை, நடிப்பு எல்லாம்.. மிக அமைதியான அண்டர் ஆக்டிங்க் நடிப்பு.. படம் முழுக்க அவர் வரும் போர்ஷனில் ஒரு சீனில் கூட பிசிறு தட்டாத நடிப்பு.. 


பணக்கார ஃபிகராக வரும் மனீஷா ஓக்கே.. படத்தில் ஓரளவு கிளு கிளு கேரக்டர் இவர் மட்டும் தான்.. டீன் ஏஜ் ஃபீலிங்க்சை மிக அழகாக வெளிக்கொணர்கிறார்.


ஹீரோவுக்கு கூட மாட ஹெல்ப் செய்யும் அந்த கூத்துப்பட்டறைப்பையன்  சின்னச்சாமியின் நடிப்பு கிளாசிக்.. பல இடங்களில் அப்ளாஸ் வாங்கிகிறான்.. 

 பணக்காரப்பெண்ணை  கரெக்ட் பண்ணும் அந்த பையனை பற்றி சொல்ல பிரமாதமாக ஏதும் இல்லை.. கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சு இருக்கார்.. அவ்ளவ் தான்..  .


இன்ஸ்பெக்டராக வரும் குமார்வேல் நடிப்பும் பிரமாதம்.. அசால்ட்டாக ஒரு போலீஸின் தெனாவெட்டை, நரியின் நய வஞ்சகத்தை முகத்தில் கொண்டு வருகிறார்..


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=4336&option=com_joomgallery&Itemid=141


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் ( அப்ளாஸ் அள்ளிய இடங்கள்)



1.  கந்து வட்டிக்கு  பணம் வாங்கிய விவசாயி பணம் வசூலிக்க ஆள் வந்ததும் வீட்டில் ஒளிந்து கொள்வதும், தன் மனைவியை தகாத வார்த்தையில் கேள்விகள் கேட்ட ஆளை அரிவாளுடன் பாய்வதும் பின் அடிப்பட்டு வீழ்வதும் உருக்கமான காட்சிகள்

2. பவர் ஸ்டாரை  நக்கல் அடிப்பது போல் எடுக்கப்பட்ட அந்த ஷூட்டிங்க் சீன் செம காமெடி.. இறுக்கமான திரைக்கதையில் ஒரு ரிலாக்ஸ்.. ..

3. கையேந்தி பவன் ஓனர் காலடியில் ஃபிளாட் ஃபார்ம் இளைஞன் காதலியின் ஃபோட்டோ.. அதை அவருக்குத்தெரியாமல் எடுக்க 2 பேரும் செய்யும் ஐடியா சிம்ப்பிள் அண்ட் சூப்பர்.. 

 4.  பணக்கார ஃபிகர் சைக்கிள் பஞ்சர் ஆனதும் காரில் வந்த கரெக்ட் பண்ற பையன்  அசடு வழிவதும், அப்போ கடைக்காரர் சைக்கிள் டியூப்பை காத்து பிடுங்கி விட்டு அந்த சத்தத்தை நக்கல் சத்தமாக காட்டுவதும் காமெடி

5. ஃபிகர் கால் பண்ணா “ ஏய் மாமோய் நிங்க எங்கே இருக்கீங்க ?” என்ற ரிங்க் டோனையும், ஃபிரண்ட்ஸ் கால் பண்ணா “ அய்யோ ராமா.. என்னை ஏன் இந்த கழிசடைப்பசங்களோட எல்லாம் சேர வைக்கறீங்க? ‘ என்ர கவுண்டமணீயின் காமெடியை  ரிங்க் டோனாக வைக்கும் சாமார்த்தியம் செம.. 

6. திரைக்கதையில், எடிட்டிங்கில் . ஒளிப்பதிவில் அதகளம் பண்ணி விட்டு இசையில் அடக்கி வாசித்தது குட் ஒன்.. 


7. 'வழக்கு எண் 18/9' படத்தை வழக்கமான சினிமா விடியோ கேமராவில் எடுக்கவில்லை. Canon EOS 7D என்ற கேமராவிலேயே எடுத்துள்ளார்கள். இது ஒரு சாதனை. - தருமி
 



http://cinecentral.in/wp-content/uploads/2012/04/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg

வலம் இருந்து இடமாக இரண்டாவதாக இருக்கும் ஃபிகர் (கையில் செல் ) படத்தில் வரும் 2 ஹீரோயின்களை விட அழகு ஹி ஹி 


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அம்மா , அப்பா வீட்ல இல்லாதப்ப அந்த பணக்காரப்பையன் முதன் முதலா வீட்டுக்கு வந்து ஏதோ டவுட்  கேட்கறேன்னு சொல்றப்ப “ அம்மா வந்த பின் வா-ன்னு சொல்லாம எப்படா வருவான்னு காத்துட்டு இருக்கற மாதிரி ஏன் அவனை உள்ளே வரச்சொல்லனும்? ( அவளுக்கு அவன் மேல காதல் ஏதும் இல்லை.. பின் ஏன்?)

2. பொதுவாவே லேடீஸ்க்கு விழிப்புணர்வு ஜாஸ்தி.. அந்த ஃபிகரு பாடம் சொல்லித்தர்றப்போ அவன் செல் ஃபோன்ல அவ தொடைக்கு நேரா செல்லை வெச்சு 4 நிமிஷம் வீடியோ எடுக்கறான்.. அந்த லூசு.. அதெல்லாம் தெரியாம பேசிட்டு இருக்கு.. அவ்ளவ் கேனையா? இந்தக்கால பொண்ணுங்க?

3. அந்தப்பையன் செலவுக்குப்பணம் குடுன்னு அம்மாவை மிரட்றான்... எதுக்குன்னு கேட்டா சொல்லலை.. அப்புரம் பார்த்தா அவன் பர்த்டே பார்ட்டிக்காம்.. அதை ஏன் சொல்ல தயக்கம்? பணக்காரப்பசங்க 20000 ரூபா செலவு பண்ணி பார்ட்டி கொண்டாடுறது சகஜம் தானே?


4. படத்துல ரொம்ப முக்கியமான மைனஸ்.. ஃபிகரை கரெக்ட் பண்ண ஐடியா பண்ற எந்தப்பையனாவது ஃபிகரோட பேரை போடாம ஐட்டம்னு செல்ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வைப்பானா? அந்த ஃபிகர் அவன் கூடவே எப்போ பாரு குடி இருக்கு.. தன் ஃபோன் நெம்பர் என்ன பேர்ல ஸ்டோர் பண்ணி இருப்பான்னு பார்க்க மாட்டாளா? அந்த பயம் அந்தப்பையனுக்கு வராதா?

5. அந்த பணக்கார ஃபிகர் அந்தப்பையன் கூட பீச்சுக்கு போனதும் ஐ கடல் அப்டினு பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி.. பொம்பளையையே பார்க்காதவன் அனுஷ்காவை பார்த்த மாதிரி குதிப்பது ஏன்?அவளும் சிட்டில தானே வசிக்கறா? இதுக்கு முன்னால கடலை பார்த்ததில்லையா?


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120407154122000000.jpg

 6. குரூப் ஸ்டடினு சொல்லிட்டு வீட்டை விட்டு  வந்த  பெண் எங்காவது கடல்ல குளிக்குமா? விதி படத்துல தான் விபரம் இல்லாம பூர்ணிமா பாக்யராஜ் குளிச்சுதுன்னா இத்தனை வருஷம் கழிச்சும் அதே படத்தின் அதே சீனை அட்டக்காப்பி அடிக்கனுமா?

7. கடல்ல அவ குளீக்கறப்ப அவன் பப்ளிக்கா செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறான்.. அந்த ஃபிகரு  எது வேணாலும் எடுத்துக்கோன்னு பெப்பரெப்பேன்னு குளிக்குது. 

8.  அம்மா கிட்டே குரூப் ஸ்டடின்னு பொய் சொல்லிட்டு வர்றவ கைல ஒரு நோட், ஒரு புக் தான் எடுத்துட்டு வருவா.. நைட்டி, மாத்திக்க டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வருவாளா?

9. மொபைல் ஃபோன்ல சார்ஜ் போடறேன்னு அந்தப்பையன் சொல்லி ரூம்ல அவ கண் முன்னால செல் ஃபோனை வெச்சுட்டு போறான்.. அந்த பேக்கு டிரஸ் மாத்தி செல் ஃபோன்ல பதிவாகரது தெரியாம இருக்கு.. 

10.. செல் ஃபோன் அந்த இடத்துல ஸ்க்ரீன்  பாப்பாவைப்பார்த்த மாதிரி வெச்சுட்டு போறான்.. குப்புற திருப்பி வெச்சாத்தானே படம் பிடிக்கும்?



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/15313162973.jpg

11. ஆல்ரெடி பிளான் பண்ணி ரூம் போட்டவன் அவளுக்குத்தெரியாம செல் ஃபோனை ஃபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.. 

 12. செல் ஃபோன்ல சீன் படம்  பார்த்து அவ ரசிக்கறா.. அவளை சூடேத்தி மேட்டர் முடிக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கலை.. அவன் அவ்ளவ் கேனையா?

13.  தன் செல் ஃபோன்ல அவளை கில்மா போஸ்ல எடுத்த ஸ்டில் இருக்குன்னு தெரிஞ்ச பையன் எவ்ளவ் ஜாக்கிரதையா இருப்பான்? 2 மெம்மரி கார்டுல பதிவு பண்ணி ஒரு காப்பியை வீட்ல வெச்சிருப்பான்.. மதுரை டாக்டர் ரியாஸ் அப்டித்தான் பண்ணுவாராம்.. ஆனா இந்த லூஸ் ஏன் அவ கிட்டே கொடுத்துட்டு வர்ற மாதிரி அவளுக்கு முன்னாலயே கார்ல வெச்சுட்டு மெக்கானிக்கை பார்க்க போறான்?

14. முதல் முதலா சந்தேகம் கேட்க வரும்போது அந்தப்பையன் கொண்டு வரும் புக் காலேஜ் புக். அவன் டவுட் கேட்கற கெல்வி பிளஸ் ஒன் ல வர்ற கேள்வி.. ஆனா 2 பேரும் படிக்கறது  பிளஸ் டூ


15. ஹீரோவை போலீஸ் ஏமாத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்குது,.. அவங்க குடுத்த வாக்குப்படி ஹீரோயினுக்கு மருத்துவச்செலவுக்கு பணம் தர்லை.. அந்த மேட்டரை ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயிண்ட்ட சொல்றான்,, ஓக்கே அதை ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? அவன் கோர்ட்ல மறுபடி மாத்தி ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கலாமே?




http://mimg.sulekha.com/tamil/vazhakku-enn-18-9/stills/vazhakku-enn-18-9-pictures-078.jpg

16. கோர்ட் வாசல்ல ஹீரோயின் வந்தமா  இன்ஸ்பெக்டர் மேல ஆசிட் ஊத்துனமா?போனோமா?ன்னு இல்லாம ஒரு லாங்க் லெட்டர் குடுக்கறா.. அந்த பேக்கு இன்ஸ்பெக்டர் அதை  படிச்சுட்டு இருக்கு.. அது வரை வெயிட் பண்ணி நிதானமா ஆசிட் ஊத்துறா.. 

 17.. படத்தோட மெயின் மேட்டர் எல்லாத்துக்கும் காரணமான அந்த பையனுக்கு தண்டனை தந்த மாதிரியே த்தெரில.. அந்த பெண்ணூக்கு அவன் மேல கோபமே வர்லையா? அவன் தண்டனை வாங்கறது அழுத்தமா பதிவு பண்ணப்படலை.. அது மாபெரும் மைனஸ்.. சுருக்கமா சொல்லனும்னா இன்ஸ்பெக்டர் சசிகலா மாதிரி..  அந்தப்பையன் ஜெ மாதிரி. பெங்களூர் கோர்ட்ல  சசி டிராமா போட்டு தண்டனையை வாங்கிட்டா சரி ஆகிடுமா? உண்மை குற்றவாளீக்கு தண்டனை வேண்டாமா?

18. திரைக்கதையில் பின் பாதியை முதலிலும், முன் பாதியை பின்னாலும் காட்டி இருக்கலாம்.. ஏன்னா பின் பாதில அவனவன் கிளு கிளு கில்மா  மாதிரி பார்த்து அந்த ஏழைப்பையன் தாக்கத்தை, பாதிப்பை மறந்துடறாங்க.. அதனால அதை முதல்ல காட்டி ஏழைப்பையன் ஃபிளாஸ் பேக்கை 2 வதா காட்டி இருந்தா இன்னும் உருக்கமான பாதிப்பை மக்களிடம் உருவாக்க முடியும்..


http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-11.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ஏண்டி.. நேத்து உன் ஆளோட படம் பார்க்கப்போனியே.. எப்படிடி இருந்துச்சு>

படத்தை எங்கே பார்க்க விட்டான்? அது பெரிய கூத்துடி..


2. உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா?

 ம் ம் ம்

 தெரியுமா? தெரியாதா? குழப்பாதே/!


3. ஏண்டா.. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

 அது கூட பெரிசு இல்லை... அந்த ஹீரோ கடைசி வரை  தன் லவ்வை ஹீரோயின் கிட்டே சொல்லவே இல்லை.. செம சொதப்பல்


4.  இவ்ளவ் திறமையை வெச்சுக்கிட்டு  ஏண்டா இந்த மாதிரி பிளாட்ஃபார்ம் வேலைக்கெல்லாம் வர்றே?

 ஹூம்.. விதி தான்.. ஒரு நாள் கூத்துன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே..

5.  கலையை ரசிக்கற வயசான பெருசுங்க எல்லாம் மண்டையை போட்டுட்டே இருக்குங்க.. இனி என்னாகப்பொகுதோ கூத்துத்தொழிலுக்கான எதிர்காலம்.. ?


6. ஆம்பளை இல்லாத வீட்ல பொட்டைப்புள்ளையை அப்படித்தான் வளர்த்தி ஆகனும்..


7. அவன் தான் கஞ்சா விக்கற பார்ட்டியா இருக்கும்.

 எப்படி கண்டு பிடிச்சே?

 அதோ போலீஸ் அவன் கிட்டே பிச்சை எடுத்துட்டு இருக்கு பாரு

8. அந்த அக்கா என்ன கலெக்டர் வேலையா பார்த்துட்டு இருந்துது? சட்டு புட்டுனு விசாரிக்க? டிக்கெட் தானே? என்ன?னு போய்க்கேட்க?

9.  டேய்.. ஃபோட்டோவுல என்னை கட் பண்றியா? அவளை கட் பண்றியா? ஓஹோ/.. என்னை கட் பண்ணிட்டு அவளை மட்டும் வெச்சுக்கறியா...


10. யார்? என்ன?னு விசாரிக்காமயே அந்த சின்னப்பையனுக்கு அவ உதவி செய்யறாடா.. எங்கம்மா கூட அப்படித்தான்.. அவ எனக்குகிடைச்சா எங்கம்மாவே கிடைச்ச மாதிரி..


http://www.thehindu.com/multimedia/dynamic/00954/18_CP_still_jpg_954603f.jpg

11. எப்படிடா போய் சொல்ல சொல்றே.. அவங்கம்மா இன்னும் என்னை விளக்கு மாத்தால அடிக்கலாமா? செருப்பால அடிக்கலாமா?ன்னு நினைச்சுட்டு கோபமா இருக்காங்க.. எப்படி லவ்வை சொல்ல?


12. உனக்குத்தான் பொய் சொல்ல வராதே.. எப்படி வெளில போய் வேலை கேப்பே?

13.  ஃபிகரு -  நான் சின்ன வயசுல  இருந்தே சைக்கிள்ல தான் ஸ்கூல் வர்றேன்..

டகால்டி - அதான் இவ்ளவ் நல்லா ஓட்டறீங்க.. ஹி ஹி


14. எங்கம்மா அப்பா கிட்டே செல் ஃபோன் வாங்கிக்குடுத்தாத்தான் நல்லா படிப்பேன்னு ஒரு பிட்டை போட்டேன்..

15.  ம்க்கும்.. இவ்ளவ் கண்டிஷன் போடறாங்களே.. அவங்க காலத்துல செல் ஃபோன் இருந்திருந்தா அவங்க யூஸ் பண்ணாமயா இருப்பாங்க?

16.   என்னது? வாத்து வரும்னு மொட்டை மாடில வெயிட் பண்ணுனா அவங்க ஆத்தா வருது..?


17.  ஃபிகரு - ( மனசுக்குள்) ஹூம்.. சரியான மொக்கையா இருக்கான்.. நம்பிட்டான்..


டகால்டி - தக்காளி.. ஏண்டி கில்மா எம் எம் எஸ் பார்த்துட்டு சிரிச்சுட்டு சமாளீக்கறியா?

18.  நீங்க. என் பர்த்டே பார்ட்டிக்கு வரனும்..

 ம் ரொம்ப முக்கியம்.

19.  டேய் ,மச்சான்.. போன மாசம் தானே டா பர்த்டே பார்ட்டி வெச்சே? மாசா மாசம் ஒரு டைம் பிறந்த நாள் வருமாடா?

20. ஏண்டா ராஸ்கல்? பிளஸ் டூ படிக்கற பொண்ணை மிட் நைட்ல பார்ட்டிக்கு கூப்பிடறியே.. உனக்கு என்ன தைரியம்?


http://citricice.com/wp-content/uploads/2012/02/Vazhakku-Enn-18-9.jpg


21. வசதியான பையன் தானே.. ஓக்கே டெல்டி..

எப்படிடி?

 இப்போதைக்கு ஓக்கே சொல்லு.. அப்புறம் பிடிக்கலைன்னா கழட்டி விட்டுடலாம்.. ( அடங்கோ)


22.  வீட்ல பொய் சொல்லிட்டு வந்துட்டேன்.. இதுதான் என் முதல் பொய்..

 எனக்கு இதுதான் 2வது பொய்ங்க ஹி ஹி


23.  மினிஸ்டருக்கு அவ லாபம்.. அப்போ எனக்கு?  எப்படியும் அவ மினிஸ்டர்ட்ட போவா... அவர் நமக்கு கால் பண்ணுவாரு.. அப்போ டீலை முடிச்சுக்கலாம்..

24.  அந்த பொண்ணு ஒரு டிக்கெட்டுய்யா..  இப்போ ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்..  விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஹூம்


25. கொலைக்கேசையே ஒண்ணும் இல்லாம ஆக்குன ஆள் நீங்க.. இது ஒருசாதாரண கேஸ்.. நீங்க நினைச்சா முடியாதா?

 26. மேடம்.. இனிமே ஏதாவது பிரச்சனைன்னா டைரக்ட்டா என் கிட்டேயே வரலாம்.. மினிஸ்டரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க.. வாங்க நான் ஹெல்ப் பண்றேன் ஹி ஹி


http://www.accesskollywood.com/akd-images/preview/vazhakku-enn-movie-preview.jpg


எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று

 சி,பி கமெண்ட் - டீன் ஏஜ் பெண்களூக்,கான விழிப்புணர்வுக்கருத்துள்ள படம் என்பதால் அனைத்து பெண்ணை பெற்றவர்களூம் பெண்ணுடன் காண வேண்டிய படம்.. அது போக மசாலா படங்கள் பார்த்துச்சலித்த  வித்தியாசமான நல்ல படங்களை பார்க்கும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .. 

 ஈரோடு தேவி அபிராமியில், ஆனூரில், அண்ணாவில் படம் ஓடுது...




http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/p480x480/564936_10150693164320666_128920130665_9833491_520616476_n.jpg

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.