Showing posts with label க்ரைம். Show all posts
Showing posts with label க்ரைம். Show all posts

Monday, April 30, 2012

நரசிம்மன் ஐ பி எஸ் (Achante Anmakkal ) - மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vyAdVeSudoVg4rxdKGw351LI7OZXI5STlc_0_b24iEdSkK9e3jKbKUPNiPQVdK3Z3qPe0sMT8ZTrxk7EW9v6b_oVx8F4-_cxnImT5-010Mj4zbFVtV5IkgNlbmwazHvvpN-le2EmzCw/s1600/Achante_Aanmakkal.jpg

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் கதையை படமா எடுக்க டைரக்டர் நினைச்சிருக்காரு.. ஆனா என்ன பிரச்சனை வந்ததோ டக்னு கதையை டைவர்ட் பண்ணி ஆர்டினரி கொலை கேஸ் இன்வெஸ்டிகேஷனா மாத்திட்டாரு.திரைக்கதைல அண்ணன் இன்னும் நிறைய கத்துக்கனும்..

ஒரு ஊர்ல ஒரு  மாமனார்.. அவருக்கு அமைஞ்ச 2 மாப்பிள்ளைகளும் போலீஸ் ஆஃபீசர்ஸ். மாமனாரும் ஒரு போலீஸ் ஆஃபீசர் தான்.. அவர் ஒரு லாக்கப் டெத்ல ஒரு கைதியோட மரணத்துக்குக்காரணமானதா குற்றம் சாட்டப்படறார்.. அந்த  பொய்க்கேஸ்ல இருந்து எப்படி 2 மாப்பிள்ளைகளூம் விடுவிச்சாங்க என்பதே படத்தோட ஒன் லைன்.. டைட்டில் ஓக்கேவா? அதாவது மாப்ளைங்க 2 பேரும் மாமனார்க்கு மகன்கள் போல .. 

சரத்குமார் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் ஷாட்லயே  ஆள் ஜம்முன்னு ப்ளூ ஜீன்ஸ் , ஒயிட் சர்ட், கூலிங்க் கிளாஸ்னு கலக்கறார்.. ஆனா அவர் ஃபைட் போட ஆரம்பிச்சா  அதை முடிக்க 20 நிமிஷம் ஆகுது.. உஷ் அப்பா முடியல.. காது வலிக்குது.. சும்மா  ஃபைட் போட்டா பரவாயில்லை.. ஹேய் ஹேய் ஏய் ஏய்னு பேக் கிரவுண்ட் மியூசிக் வேற..

நெடுமுடி வேணுதான் மாமனார் கேரக்டர்.. நல்ல அனுபவம் வாய்ந்த நடிப்பு.. ஆனா போலீஸ் யூனிஃபார்ம்ல ஏன் ஆள் பம்முறார்னு தெரியல..  என்னமோ அவர் தப்பு பண்ணுன மாதிரியே ஒரு கில்டி ஃபீலிங்க்ஸ்டோட நடிச்சிருக்கார்.. ( ஒரு வேளை கதையை மாத்திட்டாங்களோ..)

http://cdn4.supergoodmovies.com/FilesFive/narasimhan-ips-6c113f88.jpg


மேக்னா ராஜ் தான் சரத்க்கு ஜோடி..  2 டூயட் இருக்கு. 1 அழுகாச்சி சீன் இருக்கு.. வேற சீன் ஏதும் இல்லை.. யுவராணி ஹீரோவுக்கு கொழுந்தியாவா வர்றார்.. நோ யூஸ். ( அதாவது படத்தின் கதைக்கோ திரைக்கதைக்கோ அவர் நோ யூஸ்னு சொல்ல வந்தேன் ஹி ஹி )


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  கோவைல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பாலக்காடு தான்..  ( அப்போ பாலக்காட்ல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பா கோவையா?)


2.  ஒரே மாசத்துல அந்த குற்றவாளீகளை நான் அரெஸ்ட் பண்ணிடுவேன்

 போ போ எல்லாரும் பஸ் ஸ்டேண்ட்ல தான் வெயிட்டிங்க்.. போய் அரெஸ்ட் பண்ணிட்டு வந்துடு..


3.  என் புருஷன் மப்புல இருக்காரா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்க ஒரு டெஸ்ட் இருக்கு.. பேரு கொக்கு டெஸ்ட். அதாவது அவரை ஒரு காலை தூக்கி ஒரு கால்ல நிக்க சொல்லி 10 வரை எண்ணூவேன்// 8 வரை நின்னா அவர் ஒரு ஆஃப் குவாட்டர் மட்டும் தான் அடிச்சுருக்கார்னு அர்த்தம்


4.  உங்களூக்குத்தெரியாதா? ஒரு சுப்பீரியர் ஆஃபீசர் இன்சார்ஜ்ல இருக்கற கைதி இறந்துட்டா ஸ்பாட்ல அவர் இல்லைன்னாலும் அதுக்கான மாரல் ரெஸ்பான்ஸிபிலிட்டி அவருக்கு உண்டு

5.  தப்பை எப்படி செய்யனும்? அதை எப்படி மறைக்கனும்னு போலீஸ் தான் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கும்.. அதனால இந்த கொலையை போலீஸ் தான் செஞ்சிருக்கும்..

6.  ஒரு கேஸ் துப்பறீயும் போது இன்னொரு கேஸ் துப்பு துலங்கறது ஒண்ணூம் பெரிய அதிசியம் இல்லை.. மாமூலா நடக்கறதுதான்


7.  இந்தப்பொண்ணை இதுக்கு முன்னால எங்கயாவது பார்த்திருக்கீங்களா?

 ம்.. ஆனா இவ்வளவு பக்கத்துல இல்லை..


http://moviegalleri.net/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/sarathkumar_meghana_raj_narasimhan_ips_movie_stills_1723.jpg


 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ்.. , அவரிடம் சில கேல்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு சீன்ல சரத் தன் சகலை கிட்டே நான் பாலக்காட்ல இருக்கேன்.. நீ கோவைல இருக்கே.. அதனால அந்த விசாரனையை நீ பார்த்துக்கோ அப்டிங்கறார்.. ஆனா அவர் ஃபோனை வெச்ச அடுத்த சீன்ல யே சகலை கூட நடந்து பேசிட்டு இருக்கற மாதிரி சீன் வருது.. எப்படி?

2.  சரத் பெரிய ஆக்‌ஷன் ஹீரோ தான் ஆனா அதுக்காக கூலிங்க் கிளாஸ் கூட கழட்டாம 24 பேரை உதைக்கறது ரொம்பவே ஓவர்.. கண்ணே தெரியாது.. எப்படி ஃபைட் போடுவாரு?

3.  லாட்டரி டிக்கெட்சை பதுக்கி போற வேனை சரத் மடக்கி பிடிக்கறார்.. அப்போ வேன்ல இருக்கற ஆளூங்க சும்மா கீழே குதிச்சா போதாதா? டாய்னு கத்திக்கிட்டே அந்த லாட்டரி டிக்கெட்ஸை எல்லாம் ஏன் வானத்துக்கு தூக்கி எறியறாங்க? மறுபடி அடுக்க சிரமம் ஆச்சே?

4. படம் ஆக்‌ஷன், த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன்னு ஸ்பீடா போற டைம்ல சரத் மலையாளம் கத்துக்கற போர்ஷனை காட்ட ஒரு பாட்டு, சம்சாரத்தை சமாதானப்படுத்த ஒரு பாட்டு தேவையா?


5. படத்தில் ஒரு சீன்ல மார்ச் 20 ல எலக்‌ஷன் வெச்சிருக்கறதா டயலாக் வருது.. டென்த் , பிளஸ் டூ எக்சாம் எல்லாம் முடிஞ்ச பின் எப்பவும் மே மாசம் தானே பொதுத்தேர்தல் வரும்? ( கேரளாவுல மாறி இருந்தா டப்பிங்க்ல மாத்தி இருக்கலாமே/)



http://nowrunning.com/content/movie/2012/NarasimhanIPS/stills/NarasimhanIPS6.jpg
6. போலீஸ் ஒரு சீன்ல பொட்டிக்கடைல கில்மா புக்ஸ் சீஸ் பண்ணுது.. ஓக்கே ஆனா எவனாவது பப்ளீக்கா என்னமோ வெத்தலை வெச்சிருக்கற மாதிரி ஓப்பனா கடை வாசல்ல கில்மா புக் போட்டு விப்பானா? மறைவா வெச்சிருப்பான்.. அப்புறம் கஸ்டமர்ஸ் கேட்ட பின் எடுத்து தருவான்

7. லாட்டரி டிக்கெட் பிரின்ட் பண்ணுன கேஸ்ல பிரஸ் ஓனர் அண்னனிடம் விசாரிக்கறப்ப மாறூவேஷத்துல விசாரிக்கறாங்க.. பிரஸ் ஓனர் நெம்பர் வேணூம்.. நாங்க அவனோட அண்ணன்ங்க அப்டினு சொன்னதும் அவன் எப்படி ஏமாறுவான்? ஏன்னா அதுக்கு முந்தின நாள் தான் போலீஸ் வந்து விசாரிச்சப்போ எனக்குத்தெரியாதுன்னு சொன்னான்.. அப்பொ அவன் என்ன சொல்லனும்? எனக்கு தெரியலை. உங்க ஃபோன் நெம்பர் குடுங்கனு வாங்கி வெச்சிருந்து அனுப்பி இருக்கனும்.. 

8. பெரிய இடத்துப்பெண்ணை அந்த பொடியன் லவ் பண்றதா ஒரு கிளைக்கதை வருது.. அந்த கோடீஸ்வர ஃபிகரு கழுத்துல 10 ரூபா பாசி, 35 ரூபா தாவணி போட்டுட்டு பரிதாபமா வருது.. ( ஆன ஃபிகர் சூப்பர் தான் பணக்காரக்களை இல்லீங்கொவ்)


9. மம்முட்டி நடிச்ச சி பி ஐ டைரி குறிப்பு படம் மாதிரி எடுக்கனும்னு நினைச்சு வேணும்னே தேவை இல்லாம ஃபிளாஸ் பேக் சீன்ஸ் மட்டும் 18 தடவை வருது... ஆர்டினரி ஆடியன்ஸ் குழம்பிட மாட்டாங்க?

10.  ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு செண்டிமெண்ட், அழுகை காட்சிகள்.. அதுவும் கதைக்கு சம்பந்தம் இல்லாம சர்த் மனைவி தன் அப்பா பற்றி அழுவது?

http://thebollywoodgallery.com/wp-content/uploads/2012/02/Meghana-Raj-Hot-In-Narasimhan-IPS-10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஆடை வடிவமைப்பு அருமை.. அதுவும் குறிப்பா சரத்க்கு ஜோர்.. அவர் அன்யூனிஃபார்மில் வரும் அனைத்துக்காட்சிகளும் கம்பீரம்..


2. பட போஸ்டர், விளம்பரம், புரோமோட் வேலைகளீல் இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் பார்த்துக்கொண்ட சாமார்த்தியம் அழகு.. டப்பிங்க் படம்னு நிறைய பேருக்கு தெரில..


3. இடைவே:ளை வரை கொஞ்சம் இழுத்தாலும் அதுக்குப்பின் திரைக்கதை ஸ்பீடா போவது பிளஸ்

4. படத்தின் கதை வாய்ப்பு கொடுத்தும் கவர்ச்சி ஏதும் காட்டாமல் அனைவரையும் கண்ணியமாக காட்டியது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksttrsgFqdZdesa8-1N3HrBA-etqJoDeZLQAHclUIoYmjJ8X-6mxA10J2JxCUVnkhlShsB_asI2ghfvLtr72VrBEIE6rZOLTHzWjQgBXmRFmmvq3qlp_OP4p-U1r7fFBqvKNKfPx8800/s1600/Megna_Raj_Hot_Stills_11.jpg


சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பட விரும்பிகள், இன்வெஸ்டிகேஷன் டைப் படங்களை ரசிக்கும் பெண்கள் பார்க்கலாம்..


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு விகடன் நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்.

நரசிம்மன் ஐ பி எஸ் ஆன் லைனில் ஓ சி யில் பார்க்க 

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்

http://cinemabucket.blogspot.in/2012/03/achante-aanmakkal-new-malayalam-full.html


http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0050.jpg

Saturday, March 10, 2012

அல்போன்சா -சில்ஃபான்சா -1992 - எ கில்மா தெஃப்ட் லவ் ஸ்டோரி

http://www.oneadda.com/wp-content/themes/utility/timthumb.php?src=http://www.oneadda.com/wp-content/uploads/2012/03/aaaaaaa.jpg&h=200&w=300&zc=1 

அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி - சூசயிடு அட்டெம்ப்ட்டா? பிரெட்டெண்ட் டு பி சூசயிடு அட்டெம்ப்ட்டா? நல்லா விசாரிங்கப்பா. ( தற்கொலை முயற்சியா? தற்கொலை முயற்சி செய்வது போல் நடிப்பி பயிற்சியா? - நன்றி மேஜர் சுந்தர்ராஜன்)



அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ்

 சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.


சி.பி - வர்ற படங்களில் எல்லாம் மேல் அங்கி விலகியே இருந்ததால் கவர்ச்சி மேலோங்கி இருந்தது ஹி ஹி 




பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.




விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.


Its a preplanned murder says vinoth kumars father



தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!



சி.பி - அந்த ஹாஸ்பிடல்தான் அவரோட ரெகுலர் சூசயிடு அட்டெம்ப்ட் ட்ரீட்மெண்ட் ஹாஸ்பிடலாம் ஹி ஹி 


"என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; நடிகை அல்போன்சா குடும்பத்தினர், திட்டமிட்டு கொலை செய்துள்ளனர், என, வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறினார். அல்போன்சா உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

நடிகை அல்போன்சா வீட்டில், அவரது காதலன் வினோத்குமார், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நடிகை அல்போன்சா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். வினோத்குமாரின் மரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காதலன் வினோத்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என, அவரது தந்தை பாண்டியன், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தார்.

இது குறித்து பாண்டியன் -   என் மூத்த மகன் வினோத்குமார், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். என் மைத்துனர் பாலு வீட்டில் தங்கி, சினிமா தொடர்பான பயிற்சிக்கு சென்று வந்தார். கவசம் என்ற படத்தில், கதாநாயகனாக நடித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்து, திரையிடத் தயாராகவுள்ளது.



என் மகன் நடனத் திறமையை வளர்த்துக் கொள்ள, நடன இயக்குனர் ராபர்ட் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். நான்கு மாதமாக, அவரது வீட்டிலேயே தங்கினார். என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் பெற்று, ராபர்ட்டிடம் கொடுத்தார். ராபர்ட் அவரது நண்பருடன் சேர்ந்து, சங்கு என்ற படம் எடுப்பதற்கான தயாரிப்பு செலவுக்கு, 50 லட்சம் ரூபாயை என் மகனிடம் கேட்டுள்ளனர். என் மகன் தர மறுத்து விட்டான். இது பற்றி என்னிடமும் கூறினான்.


சி.பி - கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் தெரியாதா? சங்கு-ன்னு யாராவது டைட்டில் வைப்பாங்களா? அதான் சங்கு ஊதிடுச்சு .. அவ்வ்வ்


அந்த படத்தில், ஒரு கதாநாயகனாக உன்னை போடுகிறேன் என கேட்டும் பணம் தராத நிலையில் தான், எதிர் வீட்டில் குடியிருந்த அவரது அக்கா, நடிகை அல்போன்சாவை மகனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் மூலமாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான், கடந்த 4ம் தேதி, நள்ளிரவு திடீரென, மகனின் மொபைல் போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அல்போன்சா, "உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் என கூறி வைத்து விட்டார். நாங்கள் பதறியடித்து அங்கு சென்ற போது, கார் "பார்க்கிங்கில், தரையில் போட்டு வைத்திருந்தனர். அவனது மூக்கு, வாய் பகுதியிலும் ரத்தம் இருந்தது.

அவனது அறைக்கு சென்று பார்த்த போது, சுவரில் ஆங்காங்கே ரத்தம் படிந்திருந்தது. சம்பவத்தன்று, இரவு 7.30 மணிக்கு என்னிடம் பேசினான். தான் நன்றாக இருப்பதாகவும், மாத்திரைகளை நேரம் தவறாமல் சாப்பிடுமாறு, எனக்கு அறிவுரையும் கூறினான். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்தில், என் மகன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQJX3jvxNeWarhUvcghT96h0SfS2fAZ-9stMS43eoB0IwvIFTeMEetLwPiRXHbbT6LLF1CXAh-OyAbgnEE0ayRiM0C1jfKVV5tWGn0nynLQA91eF-arM0aOgFq5xwU0E_YdF2FNsqNpZo/s640/alfonsa1.jpg






"பணம் தர மறுத்ததால், என் மகனை, அல்போன்சா, அவரது தம்பி ராபர்ட், அவரது அம்மா மூவரும் சேர்ந்து, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கமிஷனரிடம் புகார் செய்தேன். என் மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்
.

Tuesday, March 06, 2012

நடிகை அல்போன்சாதான் கொலையாளியா? மர்ம முடிச்சுகள்-காதலன் கொலை வழக்கு விபரங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMm9y2oZ_COBqX8nhzWB5rovM5KzVzlwKtWs4JbYKT2OJif04Z_zwtJggdakhlNn1ZWku3PGAtgkifWVfRVDKO9vJ_wfKGm1Lhs_evSp4Rx5lej-hA5QR8n8Zy9YzAGLaRTInihEV93sQ/s1600/alfonsa2.jpgஎனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.


சி.பி - அடப்பாவமே! என்னா அழகு..!! சாவடிக்கறாடா! அப்டின்னு சொல்வாங்களே.. அது இதுதானா?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

சி.பி - வீ வாண்ட் மோர் டீட்டெயில்ஸ்..  அவர் இவரை பிரிஞ்சாரா? இவர் அவரை பிரிஞ்சாரா?


இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். 

சி.பி - பேக்கரியை நீ பார்த்துக்கோ, அக்காவை நான் பார்த்துக்கறேன்னு  வினோத் சொல்லிட்டார் போல.. 



 நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.


சி.பி - டான்ஸ் பழகறேன்னு உடான்ஸ் விட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கார்.. ஓக்கே, ஒண்ணும் தப்பில்லை,. எல்லாரும் பண்றதுதான்


இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.பி - எனக்கும் இது கொலைன்னுதான் தோணுது.. பொதுவா ஆம்பளைங்க , அதுவும் வினோத் மாதிரி ஆளுங்க தற்கொலை செய்யற மாதிரி இருந்தா மதுவுல விஷம் கலந்து தான் குடிப்பாங்க.. பொண்ணுங்கதான் சேலை தலைப்புல் தூக்கு போட்டுக்குவாங்க.. அதுவும் இல்லாம தூக்கு போட்டு சாகறது என்பது தனிமையில் , துக்கத்தில், விரக்தியில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவு.. யாரும் வீட்ல பலரை வெச்சுக்கிட்டு தூக்கு போட்டுக்க மாட்டாங்க.. லெட்டர் எதும் எழுதி வைக்கலை 


வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

சி.பி - இந்த சீன்ல என்ன நடந்திருக்கும்னா வினோத் அம்மா பேச்சை கேட்டுட்டு அல்போன்சாவை கழட்டி விடலாம்னு பிளான் போட்டிருப்பார்.. அம்மா கிட்டே ஓக்கே சொல்லி இருப்பார்.. உடனே அல்போன்சா சண்டைக்கு வந்திருப்பார்.. வாக்குவாதம் முற்றி இருக்கும்.. அவங்க வினோத்தை போட்டுத்தள்ளி இருப்பாங்க

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzAmy9UK_kG1-2D13nGAQNwJOI-8UIatXaMn-e7jfsaRSbq2dnFeKktuT8V3F8tJQ4qe0pwBTKzt2inf1Lm6OAZEtqcAzKAoLKWZiTvH9eUrNgOHvkLEMJzGZjMk1vZd0XyVNA4_uQ4A/s1600/thirupachi-aruva.jpg


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

சி.பி - போறதுக்கு முன்னால கடைசி ஆசையை பாப்பா நிறைவேத்தி இருக்காங்க.. 


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

சி.பி - சும்மா ரீல் ரீலா விடாதீங்க.. பெட்ரூம்ல 2 பேருதான், எதுக்கு துண்டு கட்டுனேன், டிரஸ் மாத்துனேன்னு கதை விடறீங்க?இது எல்லாம் செட்டப்.  தூக்குல காதலன் கம் கணவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எந்த பொண்ணும் பதறி அவரை காப்பாத்த போய் தாங்கிப்பிடிப்பாங்க.. வெளீல ஓடி வந்து உதவி கேட்க ஏது டைம்? அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்துடமாட்டாரா?காமரா இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டு ஒரு அலிபி கிரியேட் பண்ண பாப்பா ஆக்ட் குடுத்திருக்கு..


காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

சி.பி - உங்க காதல் நிஜமானதுதான், ஆனா வினோத் உங்களூக்கு துரோகம் பண்ண நினைச்சிருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலை




அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சி.பி - நல்லா உன்னிப்பா பாருங்க.. அல்போன்சா கேமராவை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்.. சரியா இருக்கா?ரெக்கார்டு ஆகுதா?ன்னு செக் பண்ண? ( உண்மையான பதட்டமா இருந்தா கேமராவை பார்க்க டைம் இருக்காது, தோணாது.. )


ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.


சி.பி - ஒரு வேளை அல்போன்சா முதல் விக்கெட் கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அது 2 வது விக்கெட்க்கு பிடிக்காம இருக்கலாம்.. 



வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.
சி.பி - உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?கணவன் சொன்னா மட்டும் கேட்கவா போறாங்க?

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

சி.பி - அல்போன்சாவின் பெற்றோர் உன்னை நினைத்து படத்துல வர்ற லைலா பெற்றோர் மாதிரி போல.. எவன் வசதியா இருக்கானோ அவன் கூட ஜாயிண்ட் ஃபேமிலி ஆகிடறது.. 

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சி.பி - அன்புள்ள அல்போன்சா.. வினோத்தை சண்டைல அடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கனும் கார்ல வினோத்தை போட்டுக்கிட்டு ஐ மீன் வினோத் டெட்பாடியை போட்டுகிட்டு ஏதாவது மலைப்பிரதேசத்துக்கு போய் அங்கே இருந்து உருட்டி விட்டு அப்புறம் மலையில் இருந்து கீழே தவறி விழுந்துட்டார்னு ரீல் விட்டிருக்கனும் ஜஸ்ட் மிஸ்டு


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhidUApnXlSQCfTy5feMc_wgDujlUfQo_NFpSOmqyazotETE8CqYMfFYzSs2AkQlPTIOrp4lLXr1lS33y33x42-GAV-DiPxmiQtzzSvz5w1ea165VA9_pQwdoDenlBOqEd_yV619PyFwdI/s400/4_%252520AlfonsaRedCholiBelly.jpg
ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.


அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

சி.பி -இது சும்மா ஸ்டண்ட்.. தன் மேல் டவுட் வரக்கூடாதுன்னு பண்ணுன டிராமா.. அல்லது பயந்திருப்பாங்க.. 


அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.