Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Wednesday, February 11, 2015

ஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா? - த இந்து விமர்சனம்

வாய் பேச முடியாத டேனிஷ் (தனுஷ்) என்னும் இளைஞ னுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல். வாய்ப்பு தேடி மும்பைக்கு வருகிறார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து உதவி இயக்குநர் அக்‌ஷரா (அக்‌ஷரா ஹாசன்) உதவ முன்வருகிறார். ஆனால், பேசமுடியாத நடிகரை பாலிவுட் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
பேச இயலாதவர் இன்னொருவர் குரலால் ‘பேச’ தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஆனால் அதற்கு ஒரு குரல் வேண்டுமே? பல குரல் களைப் பரிசீலித்துத் திருப்தி அடை யாத அக்‌ஷராவும் டேனிஷும் மும்பை கல்லறைத் தோட்டத்தில் முதியவர் அமிதாப் சின்ஹாவின் (அமிதாப் பச்சன்) கம்பீரமான குரலைக் கண்டு பரவசம் அடைகிறார்கள். சினிமா கனவு நிறைவேறாமல் விரக்தியில் குடிகாரனாக அலையும் அமிதாபைச் சம்மதிக்கவைக்கிறார்கள். ஷமிதாப் என்ற பெயருடன் அறிமுகமாகிறார் டேனிஷ். அமிதாபின் கம்பீரக் குரலா லும் தன் நடிப்புத் திறமையாலும், ஒரே படத்தில் பெரிய நட்சத்திரமாகி விடுகிறார் ஷமிதாப்.
மூவரின் திறமையான நாடகத் தால் நிஜ வாழ்விலும் இந்த இரவல் குரல் தொடர்கிறது. வெற்றியும் தொடர் கிறது. கனவு போன்ற இந்த வளர்ச்சிக்குக் குறுக்கே வருகிறது ஈகோ யுத்தம். டேனிஷின் நட்சத்திர அந்தஸ்து தன் குரலால்தான் கிடைத் தது என்று அமிதாப் நினைக்க, தன் திறமையால் தான் எல்லாமே நடக்கிறது என டேனிஷ் மமதை கொள்ள, வெற்றிக் கூட்டணி உடைகிறது. டேனிஷின் நட்சத்திர பிம்பம் சரியத் தொடங்குகிறது. இருவரில் யார் ஈகோ ஜெயித்தது?
திரைக்கதை தனுஷை சுற்றி நகர்ந்தாலும் அமிதாபின் குரல்தான் படத்தின் நிஜக் கதாநாயகன்.
திரையுலகில் இருக்கும் போட்டி, பொறாமை, சுயநலம், நட்சத்திர போதை எனப் பல அம்சங்களையும் இப்படம் கையாள்கிறது.
தனுஷுக்கு அக்‌ஷராவின் உதவி கிடைக்கும் விதம், அவருக்கான மாற்று ஏற்பாடுகள் நடக்கும் வேகம் எல்லாம் மசாலா சினிமாவுக்கே உரிய சுதந்திரங்கள். படத்தின் ஆதார மையத்தை பாதிக்காததால் இவற்றை மன்னித்துவிடலாம். இரவல் குரல் என் னும் ரகசியத்தை மூவரும் காப்பாற்று வதற்கான காட்சிகள் சுவாரஸ்ய மானவை.
‘உன் எடையைவிட என் குரல் கனமானது’ என்று அமிதாப் கெத்து காட்டுவதும் மது, தண்ணீர் ஆகிய வற்றை வைத்துப் பேசும் வசனங் களும் அரங்கை அதிர வைக் கின்றன. டேனிஷுக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்படும் நெருக்கத்தின் போது டேனிஷும் அமிதாபும் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் ரகளை. ஈகோ யுத்தம் மெல்ல மெல்ல முறுக் கேறிக்கொண்டே போகும் விதம் நம்பக மாக உள்ளது. இருவரின் பிரிவும் அதனால் இருவரும் படும் அவஸ்தை களும் சரியாகவே சித்தரிக்கப் பட்டுள்ளன.
படத்தின் முதல் பாதி விறுவிறுப் பாக, புத்துணர்ச்சியுடன் நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. உருக்க மான காட்சிகளை அமைப்பதில் வல்லவரான பால்கி தன் முத்தி ரையை முதல் பாதியில் நன்கு பதித் திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் உருக்கம் எல்லை மீறி மிகை உணர்ச்சியாகிவிடுகிறது. மனதை கனக்கச் செய்யும் முடிவுதான் நல்ல படத்துக்கு அடையாளம் என்று யார் சொன்னது?
எனினும் அமிதாப், தனுஷ் நடிப்பு, இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு ஆகியவை இந்த குறை களை மறக்கச் செய்துவிடுகின்றன. ‘சீனி கம்’ படத்தில் அத்தனை பாடல் களுக்கும் தனது பழைய தமிழ் டியூன் களை பயன்படுத்திய ராஜா, இதில் அப்படிச் செய்யவில்லை. இரண்டே நிமிடம் மட்டும் வரும் ‘ஆசைய காத்துல தூது விட்டு’ டியூன் தவிர, மற்ற பாடல்கள் புதுசு.
நடிப்பில் அசத்துகிறார் தனுஷ். உடல் மொழியால் பேசும் கலை அவருக்கு நன்கு வசப்படுகிறது. ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்ச்சிகளை உணர்த்தும் காட்சிகள் அவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றுகின்றன. அமிதாபை முதலில் சந்திக்கும்போது அவரிடம் நடித்துக் காட்டுவது, அவராலேயே அவமானப்படுவது, அவரைப் பிரிந்த பிறகு உணர்ச்சியைக் கொட்டுவது, உண்மையைச் சொல்லிவிட வேண் டும் என்பதற்கான காரணங்களை அடுக்குவது ஆகிய காட்சிகளில் அபாரம்.
பேசாமல் தனுஷ் ஸ்கோர் செய்ய, பேச்சின் மூலமாகவே அமிதாப் ஸ்கோர் செய்கிறார். தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏமாறும் காட்சிகளிலும், தனுஷை சீண்டும் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார். தன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று குமுறும் இடத்தில் மலைபோல உயர்கிறார். கடைசி காட்சியில் பேசாமலேயே நெகிழவைக்கிறார்.
இரண்டு வலிமையான நடிகர்களு டன் அக்‌ஷரா ஹாசன் (அறிமுகம்) தன் இருப்பை திரையில் வெற்றிகரமாகப் பதிவுசெய்திருக்கிறார். படத்தொகுப் பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம்.
திரைக்கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது, நடிகர்களுக்காகத் திரைக்கதை அமைப்பது என்ற இரண்டு வகைகளில் ஷமிதாப் இரண்டாவது வகை. அபார நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை தொய்வையும் மிகையான காட்சிகளையும் மீறிப் படத்தை ரசிக்கவைக்கின்றன.

thanx - the hindu

  •  Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    வரவேட்கபடவேண்டிய புது முயற்சி. வித்தியாசமான திரை கதை. வாழ்த்துக்கள்.
    Points
    16840
    about 13 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
       
    • ஹலோ, மைக் 1, மைக் 2, மைக் 3, ஓவர் ஓவர்...
      Points
      2395
      about 14 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
      • நம்ம மோகன் (மைக்) சார் கத மாதிரிலா இருக்குது
        Points
        360
        about 16 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
        • அப்படியே மோகன் - சுரேந்தர் விஷயம்.....
          about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
          • AS  
            நல்ல படம். கண்டிப்பாக.
            about 19 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
            • Subhash  
              3 ah? Seriously?? Intha padathuku neenga tharalama 4.5 kudukalaam..
              about 22 hours ago ·   (10) ·   (11) ·  reply (0) · 
              • Subhash  
                3 ah? Seriously?? Intha padathuku neenga tharalama 4.5 kudukalaam..

              Tuesday, January 27, 2015

              இளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா? கமலுக்கா?

              ரஜினி, கமல், ராஜா


              ராஜாவிடம் கமல் தந்த ஒவ்வொரு படமும் ராஜாவுக்கு அல்வா சாப்புட்றமாதிரி. ஒவ்வொரு படமும் டிமாண்டிங் ஆனா வெவ்வேறு மாதிரி! உதாரணம், குணாவில் வரும் 'உன்னை நானறிவேன்" பாடல், இது கமர்ஷியலா சூப்பர்டூப்பர் ஹிட் அடிக்கணும், ஒரு கண்ணே கலைமானே போல ஹிட் ஆகணும்னு எந்த பிரஷரும் ராஜாவுக்கு முன் வைக்கப்படலை(கிட்டதட்ட அதே சிச்சுவேஷன்) எனவே ராஜா, எந்த கமர்ஷியல் அழுத்தமும் இல்லாமல் ஒரு கலைஞனாக, மிக சுதந்திரமாக மெட்டமைக்கலாம்! இதுபோல் கமல் ராஜாவுக்கு தந்தது பல கலைப்படைப்புக்கள்! ராஜாவுக்கு இருந்த பெரும் கலைப்பசிக்கு, புகுந்து விளையாடவும் சேலஞ்சிங்காகவும் தன் திறமைக்கேற்ற அட்டகாசமான தீனியாகவும் அமைந்தன!

              ஆனா ரஜினி படங்களோ, பலதும் கிட்டதட்ட அதே கதைகள்தான். கிட்டதட்ட ரிப்பீட் சிச்சுவேஷன் பலப்பல. அம்மா செண்டிமென்ட், தங்கச்சி/தம்பி செண்டிமென்ட், ஹீரோ இன்ட்ரோ, வில்லன் இன்ட்ரோ, திமிர்ப்பிடித்த நாயகி, காமெடி காட்சிகள் இப்படி பல ரிப்பீட்கள். ஆனாலும் ராஜா, ரஜினியின் ஸ்டைலுக்கு இசையால் சேர்த்த பரிமாணம் வாய்ப்பே இல்லை! வெகு சுமாரான அந்தப்படங்களில் நம்மை உட்காரவைத்ததும், ரசிக்கவைத்ததும், ஏன், சிலமுறை, ரஜினியின் ஸ்டைலை சரியானபடிக்கு ஹைலைட் செய்ததுமே ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் தான்!

              அதுவும், ரஜினியானவர், பணக்காரனாக நடித்தாலும் சரி, ஏழையாக நடித்தாலும் சரிம் ரொமான்ஸ் காட்சியிலும் சரி,ஜல்சா, நகைச்சுவை கோபம் சோகம் நகைச்சுவை, வில்லனிடம் சவால் வசனம், கூலாக பேசும் வசனம், இப்படி எல்லாவற்றிலுமே தன் அக்மார்க் ஸ்டைலோடு தான் பேசுவார் நடிப்பார் மேனரிசம் காட்டுவார்! சொல்லப்போனால், கிட்டதட்ட ஒரேமாதிரி அமைந்த அனைத்து கதைகளிலுமே, சுவாரசியம் கூட்டினது ரஜினியின் இந்த ஸ்டைல் தான்!

              இந்த ஸ்டைலுக்கு ராஜா, தன் பின்னணி இசையின் மூலம் எத்தகைய பரிமாணம் கொடுத்திருக்கிறார் என அத்தனை படங்களிலும் பாருங்கள்!

              ராஜாவுக்கு பின்னான இசையமைப்பாளர்கள், ரஜினிக்கு இன்ட்ரோ பாடல் என்றாலே, உடனே பிரம்மாண்டத்துக்காக Trumpet இசையை வைத்துவிடுவார்கள்! முத்து ஒருவர் ஒருவன் முதலாளி, சந்திரமுகி தேவுடா தேவுடா, அதாண்டா இதாண்டா, இப்படி பல உதாரணங்கள்! (தேவாவின் பாட்ஷா ஜேம்ஸ்பாண்ட் இசை, படையப்பா கிக்கு ஏறுதே, ஆரம்ப ஃப்ளூட் இசை போன்ற மிகச்சில exceptions மட்டுமே இருக்கிறது)

              ஆனால் ராஜாவோ, ரஜினி என்றால் பயன்படுத்தும் இசைக்கருவிகள் ஆகட்டும், வாசிக்கும் இசை ஆகட்டும், எத்தனை வெரைட்டி! Bass Guitar, Classic guitar, Electric Guitar, Strings section, Trumpet, Sax type Wind instruments, Synth Music, Rythmsஇல் எக்கசக்க தாளவாத்திய கருவிகள், இப்படி, இசைக்கருவிகளிலாகட்டும் இசையிலாகட்டும், இளையராஜா ரஜினி படங்களில் ஒரு Musical SuperStar ஆகவே வலம் வந்து பட்டையை கிளப்பியிருக்கிறார்!

              இப்படி, ராஜாவின் ரஜினிக்கான இசை என்பது மட்டுமே ஒரு தனி Genre! ராஜா, கமலுக்கு கூட, வேறு எந்த நாயகனுக்குமே இப்படி ஒரு சிறப்பை தந்ததில்லை! கமல் ஒருகட்டத்தில் முற்றிலும் வெவ்வேறு படங்களை தந்ததால் ராஜா சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். ஆனால் சிச்சுவேஷன் சாதா என்றால் பாடலும் சாதா தான்! உதாரணம், சத்யா படத்தில் 'நகரு நகரு' போன்ற பாடல்கள். ஒருவேளை, கமல் தொடர்ந்து காதல் இளவரசன் டைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தால், ராஜாவின் இசை output தரம் சற்றே குறைந்திருக்கும் என்று கூட எனக்கு தோன்றும்!

              ஆனால், ரஜினியை ராஜா ட்ரீட் செய்த விதமே வேறு. வள்ளி படத்தில் டிங்கு டாங்கு ரப்பப்போ பாடலில் வரும் Guitar Strummingஐ கேளுங்கள்! அதுபோன்ற ஒரு Stylish இசை, வாய்ப்பே இல்லை! இதுபோல் கணக்கற்ற உதாரணங்கள் ராஜா இசையமைத்த ரஜினி படங்களுக்கு உண்டு!

              அதிசயப்பிறவி படம், ஒரு லோ பட்ஜெட் படம். MD உள்பட எல்லாருக்குமே கொஞ்சம் குறைந்த சம்பளம் தான் தரப்பட்டிருக்கும். ஆனால் அதற்குக்கூட ராஜாவின் இசை, எந்தவித தரக்குறைவும் இல்லாமல் தான் இருக்கிறது!

              இத்தனைக்கும், அப்போதெல்லாம் ரஜினிfilms (&கமல் films too) தொடர்ந்து ராஜாவிடம் போகாது! அவ்வப்போது சங்கர்கணேஷ் சந்திரபோஸ் என மற்றவர்கள் இசையமைப்பார்கள்! ஆனால் திரும்ப ராஜாவிடம் வரும்போது அதகளம் தான்!!

              இன்றைய தேதியில், நிச்சயம் கமல், ரஜினி இருவருமே அவ்வப்போது ராஜாவிடம் சென்றிருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்ற காரணமே அவர் இதற்குமுன் இசையமைத்ததன் தரம் தான்!

              அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே, கமலும் ரஜினியும், தம்முடைய மிக நீண்ட கேரியரில், வேறு யாருடனுமே( Same producer/heroine/comedian etc ) இத்தனை முறை, அசோசியேட் ஆனதே இல்லை! ரஜினி கிட்டதர்ர 80படங்கள் கமல் கிட்டதட்ட 68 படங்கள் ராஜாவுடன்! இதில், ராஜாவின் பாடல்கள், பின்னணி இசையை எடுத்துவிட்டு பார்த்தால், நிச்சயம் ஒரு மிகப்பெரிய மைனஸ் தெரியும்! (இந்த இசையோடு கம்பேர் செய்தால், இன்றைய காலகட்டத்தில் மற்றவர்கள் ரஜினி படங்களில் அமைக்கும் எத்தனை BGMs செல்ஃப் எடுத்திருக்கிறது, நினைவில் நிற்கிறது என நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்! ;)))

              (மகாநதி விகடன் விமர்சனத்தில் சொன்னதைப்போலவே) பலப்பல ரஜினி படங்களிலும் அவரது ஸ்டைலையும் படத்தையும் நாம் ரசிக்க, நம்மையுமறியாமல் நம்மை இயக்கிய சக்தியாக ராஜாவின் பின்னணி இசை & பாடல்கள் இருந்திருக்கிறது!

              எனவே, ரஜினி கமல் இருவருமே, ஒட்டுமொத்தமாகவே ராஜாவை புறக்கணித்தது நிச்சயம், இருவருக்குமே, (குறிப்பாக ரஜினிக்கு அதிகம்) பேரிழப்பு தான். இதில், கமல் ரஜினி என பிரித்துப்பார்க்க முடியாதபடி இருவரின் படங்களுக்குமே இழப்பு தான். 

              நன்றி -

              Friday, March 14, 2014

              இளையராஜா, பாலுமகேந்திரா நட்பு பற்றி... கார்த்திக்ராஜா பேட்டி @ த தமிழ் இந்து

              இளையராஜாவைப் போலவே எளிமையாக இருக்கிறார் கார்த்திக் ராஜா. மை பூசாத தலை, எளிமையான ஆடை, நெற்றியில் சின்னதாய் குங்குமக்கீற்று. சினிமாவில் கவனம் செலுத்துவதைவிட, தன் தந்தைக்கு உதவியாக இருப்பதையே பெரும் பேறாகக் கருதும் அவரை மதுரையில் சந்தித்தோம். 


              யுவன்சங்கர் ராஜா ஒரு பேட்டியில் ‘என்னை விட கார்த்திக்ராஜா திறமையானவர். ஆனால், அவருக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை’ என்று கூறியிருக்கிறாரே? 

               
              இல்லவே இல்லை. எனக்குக் கிடைத்ததுதான் சிறந்த வாய்ப்பு. எத்தனையோ இசையமைப்பாளர்கள் அப்பாவோடு வேலை செய்ய முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். கோடி ரூபாய் கொடுத்துகூட அந்த வாய்ப்பைப் பெற பலர் தவம்செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு, பாக்கியம் எனக்குத் தான் கிடைத்துள்ளது. 


              உங்கள் சகோதரர் யுவன், வைரமுத்துவுடன் இணைந்துள்ளாரே? 

               
              அவர் வைரமுத்துவுடன் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை. 



              அவர் வைரமுத்துவுடன் இணைந்தது மாதிரி, நீங்கள் பாரதிராஜா படத்திற்கு இசையமைப்பீர்களா? 

               
              அப்பா ஓ.கே சொன்னால் பண்ணுவேன். அவர் என்கிட்ட வரப் போறதில்லை. நானும் அவர்கிட்ட கேட்கப் போறதில்லை. பிறகெதுக்கு இந்தக் கேள்வி? 


              யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு உங்கள் வீட்டில் என்ன மாதிரியான ரியாக்‌ஷன் இருந்தது? 

               
              எங்கள் வீட்டில் எல்லோருமே ஆதரித்தோம். அவர் தோசை சாப்பிட விருப்பப் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எங்க வீட்டில் தோசையே பண்ண மாட்டாங்க என்றாலும் கூட, அவர் சாப்பிடுறதில ஒன்றும் தப்பில்லையே. அது அவருடைய விருப்பம். அவர் இப்பவும் எங்களுக்கு யுவன்தானே. எங்கள் உறவுகள் அப்படியேதான் இருக்கிறது. 


              இளையராஜா, பாலுமகேந்திரா நட்பு பற்றி... 


              ஒரு தயாரிப்பாளர், என்னை இசை அமைப்பாளராகவும், பாலுமகேந்திராவை இயக்குநராகவும் வைத்து ஒரு படம் பண்ண ஆசைப்பட்டிருக்கார். அதை பாலு சாரிடம் சொன்னபோது, ‘நோ. ஒன்லி இளையராஜா. அவரோட பையனா இருந்தாக்கூட வேண்டாம். இளையராஜாதான் என் படத்துக்கு மியூசிக் பண்ணுவாரு... பண்ணிக்கிட்டே இருப்பாரு...’ என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு அப்பா மீது அவர் உயிரா இருந்திருக்கார். 



              அப்பாவும் அவரைப் பற்றி என்கிட்ட சொல்லியிருக்கார். ‘கடைசி வரைக்கும் என் மேல் உண்மையான அன்போடு இருந்த ஒரே ஆள் அவர்தான். என்ன கதையோ... என்ன சொன்னாரோ... அதில் டீவியேஷன் எதுவும் இல்லாமல் படம் எடுக்கக்கூடிய ஒரே ஆள் பாலுமகேந்திரா தான்’என்று சொல்வார். 


              உங்களுக்கு விவரம் தெரிஞ்சப்ப அப்பாவுடன் இருந்த நண்பர்கள் இப்போதும் இருக்கிறார்களா? 

               
              இல்லை. யாருமே இல்லை. போட்டி பொறாமையால விலகிட்டாங்க. அப்பா கூட வேலை செய்றது இப்ப நான் மட்டும் தான். யத்தீஸ்வர்(12), ஜெயேஸ்வர்(6) என்ற என்னோட ரெண்டு பசங்களும்தான் அவருக்குப் பிரெண்ட்ஸ்.


              அம்மாவின் இழப்பில் இருந்து அப்பா மீண்டுவிட்டாரா? 

               
              ஒன்று நல்லாத் தெரிஞ்சுக்கோங்க. அப்பா வீட்லே இருக்க மாட்டாங்க. அப்பாவுக்குத் தொழில்தான் தெய்வம். வீட்டை முழுக்க முழுக்க கவனிச்சிக்கிறது அம்மாதான். அம்மாவோட இழப்பு, அப்பாவுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. 



              ஆரம்பத்துல அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. அப்பாவை ஆன்மிகவாதியாக மாற்றியதே அம்மா தான். கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்ததில் இருந்து, தினமும் பிள்ளையார் படத்துக்கு விளக்கு வைத்து பூப்போடுறதை அம்மா வழக்கமா வெச்சிருந்தாங்க. ஒரு கட்டத்துல அம்மா வழியிலேயே அப்பாவும், பூவை எடுத்து சாமிக்குப் போட்டுவிட்டு, ஆரத்தி காட்டிவிட்டு ஆபீஸ் போக ஆரம்பிச்சாங்க. அப்படி ஆரம்பிச்ச அவரோட ஆன்மிகப் பயணம் இன்னைக்குத் திருவண்ணாமலை வரைக்கும் போயிருக்கு. 


              ‘உழைப்பாளி’, ‘பொன்னுமணி’ன்னு நிறைய படங்களுக்குப் ‘பின்னணி இசை’ பண்ணியிருக்கீங்க. அதில் தான் அதிக விருப்பம்போல் தெரிகிறதே? 


               
              உண்மைதான். எனக்கு பேக்ரவுண்ட் மியூசிக் பண்றதுன்னா ரொம்ப விருப்பம். ஏன்னா அதை மட்டும்தான் படத்தின் இயக்குநர்களால் மாற்ற முடியாது. பாடல்கள் என்றால் அவர்கள் விருப்பத்துக்கு என்னவேண்டுமானாலும் பண்ணிட்டுப் போயிடுவாங்க. 


              ஆரம்பத்தில் அப்பாவோட இசையில் கீபோர்டு வாசிச்சீங்க. இப்ப எந்த வகையில் அப்பாவுக்கு உதவுறீங்க? 

               
              காலையில் டியூனை மட்டும் கொடுத்து விட்டு அப்பா வெளியில போயிடுவாங்க. திரும்ப அப்பா வரும் போது நான் எல்லாத்தையும் முடிச்சி வெச்சிருப்பேன். கேட்டுட்டு, திருத்தங்கள் மட்டும் சொல்வாரு. ரொம்ப ஈசியா சொல்லிட்டேன்ல. ஆனா, செய்றது ஈஸியான வேலை இல்லை. 

              tanx - the hindu



              • Srinivasan  from Chennai
                முதிர்ச்சியான பதில்கள்...
                a day ago ·   (3) ·   (1) ·  reply (0)
              • முருகவேல்.சண்முகம்  from Chennai
                //வைரமுத்துவுடன் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை/// அப்பாவின் முகம் மட்டுமல்ல, குணம் கூட அப்படியே, பிரச்சினை ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் எனும்போது இவருக்கு விருப்பமில்லை என்பது, தான் அப்பாபிள்ளை என்பதை மீண்டும் தந்தைக்கு உணர்த்த விரும்புவது போன்றத்து.. யுவன் வைரமுத்து நல்ல கூட்டணி, சாதனைபடைக்க ஒரு இசை பிரியன் என்ற முறையில் ஆதரிக்கிறேன், காத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள் இக்கூட்டணிக்கு..
                a day ago ·   (6) ·   (1) ·  reply (0)
              • syed sulthan  from Chennai
                ஒரு குடும்பத்தில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைதான் மாறுபடுமே தவிர உறவுமுறை அல்ல. குடும்ப உறவுகள் என்றுமே மாயாது. மறையாது. விலகாது.
                a day ago ·   (24) ·   (5) ·  reply (1)
                Sahul Hameed · Rahul kulkarie · Gani  · Habib  · raja   Up Voted
                • Tamilian  from Chennai
                  உறவு மாறாது என்பது சரியான வாதம்.ஆனால் பிறந்த வீட்டில் ஒப்பவில்லையெனில் உறவு சரியாக இல்லாமல் போய் விடும் என்பது யதார்த்தம்.
                  about 22 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
              • SIVAKUMAR  
                நல்ல மகன். நல்ல தந்தை. பக்குவமான பேச்சு. பண்பான அடக்கம். தெளிந்த சிந்தனை. தேர்ந்த முடிவு. ராஜாவின் மறுவடிவம்.
                about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
              • murugesan mayandi  from Tirupur
                அப்படியே பிடிவாதத்துடன் இருங்கள் விளங்கிடும் .யுவன் பெட்டெர்.
                about 23 hours ago ·   (3) ·   (2) ·  reply (0)
              • கி.நாவுக்கரசன் நாவுக்கரசன்  
                தந்தையின் நிழலாய் இருப்பதில் சுகம் காணும் கார்த்திக் ராஜா பாராட்டுக்கு உரியவர். அதேநேரம் சகோதரரின் மதமாற்றம் அவருக்கு ஏற்படுத்தாத பாதிப்பை வைரமுத்துவின் தொழில்முறை நெருக்கம் பாதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

              Sunday, February 24, 2013

              பாரதிராஜா, இளையராஜா மீண்டும் மோதல் @ அன்னக்கொடியும் கொடிவீரனும்"

              பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

              அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள்.

              காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

              பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

              இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

              இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

              இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

              "பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.


               நன்றி - தினமலர்



              மதுரையில் இருந்து கிளம்பி வந்து பல்வேறு போராட்டங்களைக் கடந்து தங்களது திறமையால் தமிழ் திரையுலகத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி உட்கார்ந்தவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். ஒருவர் இயக்கத்திலும், மற்றொருவர் இசையமைப்பிலும் நிகரற்று விளங்குகிறார்கள்.


              இருவரும் பால்ய கால நண்பர்கள் என்பதால் அடிக்கடி ஊடலும், கூடலும் இருக்கும் என்பது இயற்கை.


              ஆனால் தற்போது இருவருக்குள்ளும் இனி சேரவே முடியாது என்ற அளவுக்கு ஏதோ பிரச்னை வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



              சமீபத்தில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீடு தங்களது சொந்த மண்ணான மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட இளையராஜாவை, பாரதிராஜா ஒருமையில் அழைத்துப் பேசியதும், சில அறிவுரைகள் வழங்கியதும், இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனது. சொந்த மண்ணில் தன்னைப் பற்றி பாரதிராஜா இவ்வாறு கூறியது இளையராஜாவின் மனதை பாதித்தது.



              இதுதான் இருவருக்குள்ளும் அவ்வப்போது உண்டான சண்டை, வெளி உலகுக்குத் தெரிய வரக் காரணமாகிவிட்டதாம்.


              தங்களது திறமையால் தமிழ் உலகில் நிகரற்று விளங்கும் இருவரும் நட்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


              thanx - dinamani

              Saturday, February 23, 2013

              இசை ஞானி இளையராஜா மீதான 18 குற்றச்சாட்டுகள்



              இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.


              1. ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது.


              2. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர்.



               3. தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்;


              4. வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை.

              5. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்;


              6. அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார்.

              7. தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார். அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர்.

              8. முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார்.


              9. யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர்.


              10. 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர்.

              11. அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர்.

              12. பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர்.


              13. அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர்.


              14. தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர்.


              15. பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை.


              16. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார்.


              17. எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர்.


              18. "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.



              இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா?

              இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) 



              ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? 

               நன்றி -

              rozavasanth (@rozavasanth)