Showing posts with label DELHI. Show all posts
Showing posts with label DELHI. Show all posts

Thursday, January 10, 2013

சாருநிவேதிதாவின் கட்டுரை @ THE ASIAN AGE ( Rape and the Indian home)

Charu Nivedita.JPG
Charu Nivedita

Rape and the Indian home

The recent gangrape of a 23-year-old girl in the national capital, followed by the death of the victim, has sent shockwaves throughout the country. It has also triggered discussions about the kind of punishments rapists deserve.



There are arguments for and against capital punishment. In my view, our country has not matured enough to bid adieu to capital punishment. Nevertheless, capital punishment alone will not stop these abominable acts. Faster and stiffer enforcement of punishment is sure to help. Few years ago some college students who had brutally attacked a girl in a cinema complex in Chennai were let off with just a fine of a few thousand rupees.






Who fosters the mentality of indulging in violence against women? It is the family and the society. A scene from a recent movie depicts the hero, accompanied by the comedian, waiting at a traffic signal. He asks a girl whose face is covered and is standing beside him, something. When the girl unveils her face the hero spits on the road, as the girl is not good looking. 





No other cinema of any other country can boast of such scenes. Men who watch and enjoy these films sexually assault women at slightest chance. They eve-tease schoolgirls, just like our heroes do in films. And if a girl complains to her parents, they vitriolise her face. These incidents are not stray; they get reported with chilling regularity. I used to refer to Delhi as the rape capital when I lived there 20 years ago. Today the situation has worsened rather than improving. Similarly, in Tamil Nadu, too, crimes against women have increased.




Those who commit these crimes are usually first-time offenders and the crimes are not predetermined. They are people like us and live among us. They are not strangers or outsiders.





A woman from the elite class said to me recently that she was sexually abused by a cyclerickshaw driver when she was six years old. When I asked her why she hadn’t complained, she said that she was afraid to do so.





There’s another incident that occurred in a Chennai pub. It was a birthday party and we were four friends — three guys and the girlfriend of a friend. After the party, the next morning, the girl called me and told me in a tense voice that one of our friends at the party had been asking for her phone number secretly, through signals, which the girl was unable to comprehend. 




At the end of the party, when they were about to leave, the friend came up to the girl and said that he was asking for her phone number. This incident made me think. Is this okay? Or is this the portrait of a man who may stalk a woman and sexually assault her?




Women’s space is hidebound in our society. She is cramped inside the family. There is slight relaxation of boundaries to enable her to go for work nowadays. But apart from that she has no other space outside family and workplace.




A few years ago, a girl who had stepped out of a discotheque was chased to death, literally, by men who followed her in a car. It happened in Chennai. It happens everywhere. You may recall the moral police who would attack women in pubs. The core issue is that women should never move out of their “space”. If they do, they will be teased, molested or raped. “What was a woman doing with a man at this hour?” was the question of the offenders in Delhi.




In India, a woman’s space is walled off like a jail. If she comes out of her cell, her body is no longer hers. Delhi tops in this attitude. A slum-dwelling woman who had stepped out early morning was kidnapped in a car and gangraped in east Delhi. Last year, in Delhi, a 70-year-old woman was raped by a rickshawpuller and was thrown on a farmland. This incident happened in front of a police station.
Leave alone Europe and America. Even in countries in the East, women’s space is not restricted like it is in India. When I was in Malaysia recently, I saw working women everywhere, even at bars, wearing a tudung (headscarf), and at men’s salons. Remember, Malaysia is an Islamic country. Of course, petty crimes happen — signboards with the warning, “Take care of your footwear”, hang everywhere, in temples and pagodas, but crimes against women are unheard of.




The attitude of Indian men towards women is the reason for the increasing number of sexual and other crimes against women in India. A mother plays a significant role in developing her son’s views about women. But most men see their mothers and sisters as domestic help who wash, cook and assist them. An extension of this view is the image of women as a commodity, meant only for gratification, sexual and otherwise.






Even though we have a culture of worshipping women as goddesses, crimes against women is rising in number and audacity. Because women have come out of the sanctum sanctorum prescribed by men, they are being sexually assaulted and raped — punished for defying “norms”. Mahatma Gandhi once said that only if a woman can walk safely on the streets at nights can we boast of our freedom. If India needs to attain that state of true freedom, our attitude towards women has to undergo a drastic change. 




Charu Nivedita is a post-modern Tamil writer based in Chennai.


His magnum opus, Zero Degree, is considered one of the best in trangressive fiction.

Comments

Charu, probably hadn't heard

Charu, probably hadn't heard of what a rape town malaysia is. Unknown to him, Malaysia is notorious for rapes involving children as young as 4 years old. Besides Charu your magic is lost in English. Better done in Tamil.

Salute you Mr.Charu. This is

Salute you Mr.Charu.
This is the first article on this rape incident that tries to identify the issue, as opposed to analysing the symptoms of the issue.
Very well written Mr.Cahru

realy its nice article..

realy its nice article.. delhi issue was not a law and order problem,its a severe society problem..
maanam ketta samoogam...

Asian Age will be doing a

Asian Age will be doing a service to readers if it stops publishing these junk pieces by Charu Nivedita.

This is very nice article. I

This is very nice article. I try to read Zero Degree also.

Chary put all the

Chary put all the informations crime against women but what are the salvation of this problem. How we can face this?

Well written article. The

Well written article. The author addressed the root of the problems. 'A mother plays a significant role in developing her son’s views about women'

Hi, I am a great fan of your

Hi, I am a great fan of your wrting and I have been following you(articles,books) for last five years. Its one of the great artcle about the fundmental reason of these incidents which sadly no one seems to be talking about. Its not just that, the so-called sexual morality dictated in the name of so-called indian 'culture' because of which indian males sex-starved when at the same time our sexual exposure gets increased manifold through movies, tv shows, internet(scandals). until we find solutions for these, i am afraid we are going to see many more of these even , the captial punishment is made into law books

Pucca.This is the way one

Pucca.This is the way one should look the problem, not in some mediocre way. Very nice article. Absolute true, the problem starts from the family.

Saturday, January 05, 2013

டெல்லி - சம்பவம் - மக்கள் கருத்து

பாலியல் பலாத்கார பாரதம்

தலைநகர் டெல்லி...தலைகுனிவு காட்சிகள்
 
 
ஆர்.ஷஃபி முன்னா 
 
 
டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் 23 வயது மாணவி சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம். இதைச் சமூகமும் உச்சபட்சமாக உணர்ந்ததால்... தலைநகரே ஸ்தம்பிக்க, நாட்டின் பல இடங் களிலும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.


தெற்கு டெல்லியின் சாக்கேத் பகுதியிலிருக் கும்
மால் ஒன்றில், தன் 'பாய் ஃப்ரெண்ட்' அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன் சினிமா பார்த்துள்ளார் சீமா. வீடு திரும்புவதற்காக, இரவு 9.30-க்கு தனியார் பேருந்தில் இருவரும் ஏறியுள்ளனர். உள்ளே இருந்த சில பயணிகள், அடுத்த ஸ்டாப்பிங்குகளில் இறங்கிவிட, சீமா, அர்விந்த், டிரைவர் மற்றும் ஐந்து ஆண்களுடன் பயணம் தொடர்ந்துள்ளது. 



அவர்கள் சீமாவை சீண்ட, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம். கோபம் அடைந்தவர்கள்... அர்விந்தை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். பிறகு, டிரைவர் ஸீட்டின் அருகே உள்ள கேபினில், ஓடும் பேருந்திலேயே அனைவரும் சீமாவை மாறி மாறி வல்லுறவு கொண்டுள்ளனர். சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரம்... சினிமாக்களில்கூட பார்த்தறியாத உச்ச கொடூரம். அதன்பிறகு, இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்தது... கொடுமையிலும் கொடுமை! இதைப் பார்த்த ஒருவர் தந்த தகவலை அடுத்து, இருவரையும் மீட்டு அருகிலுள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ்.


குற்றவாளிகள் ஆறு பேரில் இருவர் மறுநாள் கைது செய்யப்பட்டாலும், மீதம் உள்ளவர்களை கைது செய்வதில் போலீஸ் வழக்கம்போல் சுணக்கம் காட்டியது. சம்பவம் தலைப்பு செய்தியாக மாற.... டெல்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் கைகோக்க... போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க... 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை' என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.



''பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தவும் யாரும் முன்வரவில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களில் இந்தச் சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டாமல் எங்கள் போராட்டம் ஓயாது'' என நம்மிடம் ஆவேசப்பட்டவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பிரதீபா சர்மா.


பொதுமக்களின் ஆவேசப் போராட்டம் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி... ஏன், ஜனாதிபதியின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. இதன் பிறகே... மீதம் இருந்த நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தது டெல்லி போலீஸ். அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றி கோரிக்கை வைக்கும் அளவுக்கு போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது!


''பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பலவும், பத்து வருடங்களுக்கு மேலாக, முடிவடையாமல் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் விஷயத்தில் மனித உரிமைகளைப் பார்ப்பது பாவமாகிவிடும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு துணைபோகாமலிருக்கவும் போலீஸார் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் என் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இந்த நகரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும்'' எனச் சீறினார் போராட்டத்திலிருந்தவர்களில் ஒருவரான முதியவர் சாய்ராம் ராத்தோட்.



போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் லாபம் தேட முனைந்த சில அரசியல் கட்சிகளை, போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், போராட்டக்காரர்களுக்கு இடையே ஊடுருவிய சமூக விரோதிகள் சிலரால், எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


போராட்டக்காரர்களை அடக்கும் பணியில் திடீர் என மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போயிருக்கிறார் ஒரு போலீஸ்காரர். ஆனால், 'மாரடைப் பால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த விஷயத்தை போலீஸ் பெரிதாக்குகிறது' என்று இந்த மரணத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் இப்போது.


''சீமா மருத்துவ மாணவி என்பதால், உடலின் தன்மையை அறிந்து சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். ஐந்து முறை கோமா நிலைக்குச் சென்று திரும்பியபோதும் அவருக்கு மனஉறுதி அதிகமாக உள்ளது. இது, தான் உயிருடன் இருந்தால்தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதற்காகவும் இருக்கலாம். ஒருமுறை நினைவு திரும்பியபோது, 'அம்மா... நான் வாழ விரும்புகிறேன்!’ என ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார்.


ஒரு கட்டத்தில் ஒருசில அடிகள் நடக்கவும் செய்தார். ஆனால், இப்போது அவரால் எதுவும் முடியவில்லை. வெறி கொண்ட அந்தக் கொடூரர்கள் அவருடைய பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியையும் நுழைத்துள்ளனர். அது வயிற்றுக்குள்ளும் சென்று பல உறுப்புகளையும் பாதித்துள்ளது. இதனால், உடல் முழுவதும் பரவிவிட்ட இன்ஃபெக்ஷன்தான் தற்போது மாணவிக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. முதுகிலும் பல எலும்புகள் முறிந்துள்ளன. அவரு டைய முழு நிலைமையையும் விளக்கமாகக் கூறினால்... மருத்துவர்களாகிய எங்களுக்கே மனது வலிக்கிறது. இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் மனிதர்களே அல்ல?'' என ஆதங்கப்பட்டார் சப்தர்ஜங் மருத்துவமனையின் சூப்பிரண்டென்டன்ட் பி.டி.அத்தானி.



விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில், ஒரு சமயம் நன்றாக.... மறுசமயம் மோசமாக என மாணவியின் உடல் நிலையும் மாறிக் கொண்டே போனதால்... மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, அரசு செலவில் அனுப்பப் பட்டார் சீமா. ஆனால், உடல்உறுப்புகள் ஒவ் வொன்றாக செயல் இழக்க... டிசம்பர் 29-ம் தேதி அதிகாலை சிங்கப்பூரிலேயே, 13 நாள் போராட்டத் துக்குப் பின் இறந்து போனார்.


தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுகளின்படி, நம் நாட்டின் 53 பெரு நகரங்களில், மிக அதிகமான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகியிருப்பது... டெல்லியில்தான். 2011-ல் இங்கே மட்டும் 572 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர். மும்பை-239, பெங்களூரு-96, சென்னை-76, கொல்கத்தா-47 என இந்த பட்டியல் நீள்கிறது!


டெல்லியில் இரண்டு நாட்களுக்கு, மூன்று கற்பழிப்பு வழக்குகள் சராசரியாகப் பதிவாகின்றன. கற்பழிப்பு குற்றங்கள் சம்பந்தமான டெல்லி போலீஸின் குற்றப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள், 'பெண்களுக்கு, அவர்களை அறிந்தவர்களால்தான் அதிக ஆபத்து' என்கின்றன. 


2011-ம் வருடத்தில் பதிவான வழக்குகளில் மட்டும் 97.54 சதவிகித குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். இதில், 58.28 சதவிகித குற்றவாளிகள் உறவினர்கள். 36.46 சதவிகித குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுடைய தெருவிலேயே வசிப்பவர்கள். வெறும் 2.8 சதவிகித குற்றவாளிகள் மட்டுமே முன்பின் தெரியாதவர்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!


'பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு' என்ற பட்டியலில் இந்தியா இருப்பது, காந்தி பிறந்த தேசத்துக்கு எத்தனை பெரிய கேவலம்!     

பஸ் டிரைவர் ராம்சிங், இவனுடைய சகோதரன் முகேஷ் சிங், பாடி பில்டரான வினய் சர்மா, தள்ளுவண்டியில் பழங்களை விற்கும் பவண் குப்தா (இந்த இருவரும்... டிரைவரின் நண்பர்கள்), ப்ளஸ் டூ படித்துவிட்டு வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி வந்திருக்கும் அக்ஷய் தாக்கூர், கூலி வேலை செய்து பிழைக்க ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் ராஜு ஆகிய ஆறு பேரும், இந்தக் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



 மக்கள் கருத்து 

1. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு.....இப்போதுதானா? மாபெரும் இதிகாசமென இந்த நாடு கொண்டாடுகிறதே அந்த 'மகாபாரத'த்தில் மனைவியை வைத்து சூதாடுகிறார்கள் பாண்டவர்கள்.அறிவிற் சிறந்த பெரியோரும்,மூத்தோரும் கூடியிருக்கும் சபையில் துகிலுரியப்படும் போது ஐந்து கணவர்களோ,அல்லது வீரத்திலும்,அறிவிலும் சிறந்த பெரியோர்களோ காப்பாற்றும் திறனை இழந்து விட்டதால் கடவுளைக் கூப்பிடுகிறாள்.....


.
இப்போது இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பாருங்கள் இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.

நல்லவேளை குறைவாக அணிந்திருந்ததால் பாஞ்சாலி பலாத்காரத்திற்கு உள்ளாட்கப்பட்டாள் என யாரும் இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை.
இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை,அவள் ஒரு நுகர்பொருள்.... அவ்வளவுதான்.அப்படித்தான் இந்த கலாச்சாரம் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இங்கு பெண் தெய்வங்கள் வணங்கப்படுவதும்,
பெண்களின் பெயரால் நதிகளும்,மலைகளும் போற்றபடுவதும் நிஜத்தில் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால் மட்டுமே தவிர வேறு காரணம் ஏதுமிருக்க முடியாது.

கற்பழிப்பு என்பது கடைந்தெடுக்கப்பட்ட வன்முறையே.இந்தக் கொடுமையை செய்த அந்த இளைஞர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள என்ன தூண்டியது,எது தைரியம் கொடுத்தது என்பதை யோசிக்கவே இயலவில்லை.
இந்த தேசத்து ஆண்கள் மனதில் பெண்களின் மீது இவ்வளவு வ்ன்மமா?
இதை பாலியல் இச்சை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் மிகக் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்வோம்.

எதுவென்றாலும் இந்த தேசம் முழுதும் மாறவேண்டிய தருணம் வந்து விட்டது...மாறுங்கள்,இல்லயென்றால் மாற்றப்படுவீர்கள்.

இத்தனை அவமானத்திலும்,துயரத்திலும் ஆறுதல் வீறு கொண்டு போராடும்
இளைய சமுதாயம். நாளைய வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது...!!!



2. இந்த அரசியல்வாதிகள் பேசி முடித்து சட்ட்ம இயற்றுவதற்கு வருடங்கள் ஆகலாம். சவுதியில் வழங்கப்படும் தண்டனையே (கட்டி வைத்து குற்றவாளிகளின் மேல் கல்லெறிதல்) சிறந்த தண்டனை. அதற்கு பயப்படாதவர்கள் குறைவே. கர்ஜிக்கும் மனித ஆர்வலர்கள் இந்த பெண்ணின் உயிரை கொண்டு வர மாட்டார்கள்.



3. பாலியல் வன்முறை வழக்குகள் டெல்லியில் அதிகம் என்றாலும், உண்மையில் மற்ற மாநிலங்களில் குடும்ப கௌரவத்திற்காக உண்மை வெளியே வந்து விடாமல் மறைத்து விடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்..இனிமேல் தைரியமாக சட்ட நடவடிக்கைகளுக்கு முன் வருவார்கள் என்பதுடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தைரியமாக நடந்து கொள்வார்கள் என நம்புவோம்.


நன்றி - விகடன்

டெல்லி ரேப்டு கேர்ள் சாவுக்குக்காரணம் டெல்லி போலீஸ் தான் - பர பரப்பு தகவல்கள்

டெல்லி சம்பவம்: உதவ வராமல் சண்டை போட்ட போலீசார்'

Posted Date : 11:48 (05/01/2013)Last updated : 11:49 (05/01/2013)
புதுடெல்லி: டெல்லியில்  
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி  சாலையில் வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீசார்  உதவ வராமல் அந்த இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்டது என்பது குறித்து  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக மாணவியின் நண்பர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மாணவியை இரும்பு  கம்பியால் தாக்கி பலாத்காரம் செய்த கும்பல்,அவரையும், அவருடன் வந்த ஆண்  நண்பரையும் பலமாக தாக்கி சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்ட மாணவி உயிரிழந்துவிட்ட  நிலையில்,அவருடன் வந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை  பெற்று 

இந்நிலையில் சாலையில் ஆடைகளின்றி காயங்களுடன் தானும், மாணவியும் உயிருக்கு  போராடிக் கொண்டிருந்தபோது தங்களுக்கு யாருமே உதவவில்லை என்றும்,போலீசாரும்  உதவ வராமல் காவல் நிலைய எல்லை குறித்து தங்களுக்குள்  சண்டையிட்டுக்கொண்டிருந்ததாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள  பேட்டியில் அந்த ஆண் நண்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"அவ்வழியாக காரிலும்,பைக்கிலும்,  ஆட்டோ ரிக்ஷாவிலும் சென்றவர்களை தடுத்து

நிறுத்தி உதவி கேட்க  முயற்சித்தேன்.ஆனால் தங்களது வாகனங்களில் மெதுவாக அருகில் வந்து வேடிக்கை  பார்த்து விட்டு சென்றனரே தவிர,யாருமே உதவவில்லை.இதிலேயே 25 நிமிடங்கள்  கழிந்துவிட்டது.

பின்னர் அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் போலீசுக்கு இது குறித்து தகவல்  அளித்தபின்னர்,45 நிமிடங்கள் கழித்து 3 வேன்களில் ரோந்து போலீசார் வந்தனர்.

நாங்கள் ஆடையிலாமல் கிடந்த நிலையில்,போலீசார் உட்பட யாரும் ஒரு சிறிய  துணியை கூட கொடுக்கவில்லை.ஆம்புலன்ஸையும் அழைக்கவில்லை.அவர்கள்  வெறுமனே எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

எங்களுக்கு உதவ முன்வராமல் இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும்  என தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.இதிலேயே 45 நிமிடங்கள்  விரயமாகிவிட்டது.

பின்னர் பலமுறை நான் கேட்டுக்கொண்ட பின்னர் யாரோ ஒருவர் ஒரு போர்வையை  கிழித்துக்கொடுத்தார்.அதனைக்கொண்டு மாணவியின் உடலை நான் மூடினேன். 

பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர்  அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்" என்று தெரிவித்துள்ளார். 



நன்றி - விகடன் நியூஸ்

Tuesday, December 25, 2012

டெல்லி சி எம் VS போலீஸ் டிபார்ட்மெண்ட் மோதல் , தலைநகரில் பர பரப்பு

டெல்லி சம்பவம்: முதல்வர் ஷீலா தீட்சித் - போலீஸ் இடையே மோதல்!
Posted Date : 16:03 (25/12/2012)Last updated : 16:06 (25/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பலாத்காரத்திற்குள்ளான மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும்,  காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் டெல்லி துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் உஷா  சதுர்தேவி,அண்மையில் வாக்கு மூலம் பெற்றார்.

அதனை தாம் விடியோவில் பதிவு செய்தபோது, டெல்லி காவல்துறையை சேர்ந்த 3  அதிகாரிகள் அதனை தடுத்ததாகவும்,தாங்கள் தயாரித்து வைத்துள்ள கேள்வி-பதில்  அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதனை வாக்கு மூலமாக பெறுமாறு  வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்க தாம் மறுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் தம்மை  மிரட்டி தவறாக நடந்துகொண்ட்தாகவும் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி புகார்  கூறியிருந்தார். 
இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்  இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்  ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஏற்கனவே மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் வெடித்தபோது,டெல்லி காவல்துறை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சம்பவத்திற்கு தாம்  பொறுப்பேற்க முடியாது என்று தீட்சித் கூறியிருந்தார்.


டெல்லி காவல்துறையை மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று,மாநில அரசு பொறுப்பின்  கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித் நீண்ட காலமாகவே மத்திய அரசை  வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட்டை தடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஷீலா  தீட்சித் எழுதிய கடிதத்தை ஊடகத்திற்கு கசியவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  டெல்லி காவல்துறை, இதுகுறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட  வேண்டும் என கோரியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காவல்துறை செய்தி  தொடர்பாளர் ராஜன் பஹத், மாஜிஸ்திரேட்டை  போலீஸ் அதிகாரிகள்  மிரட்டவோ,தடுக்கவோ இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் காவல்துறைக்கும், முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும் இடையே  ஏற்பட்டுள்ள இந்த மோதல் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


thanx - vikatan

டெல்லி கேங்க் ரேப்டு பெண்ணின் தம்பி பர பரப்பு பேட்டி - மீடியாக்கள் தொல்லை ஓவர்

“When a movement is happening, it is sometimes hard to know you are at the epicentre,” says the younger brother of the Delhi bus gangrape victim who continues to battle for her life. 



Ironically, the 19-year-old adds, nobody lets you forget it either — not the protesters, not the eager internet rumour-mongers, not the politicians, not the police and certainly not the media. In the midst of all, their only concern is a woman who only partly knows the extent of her injuries but senses the worst as the buzz around her grows. 


It’s been a week since the family has been at the bedside of the woman at Safdarjung Hospital. Since then, from the floor of Parliament to the doors of Rashtrapati Bhavan, the story of their tragedy is the only thing they have been hearing. 


“It is like the life we had a week ago never existed. Every day is now passing by in a flash. When I switch on the TV or log on to a social networking site, I see these emotional outbursts about Damini, Amanat, Nirbhaya (the names some media organisations have given the victim). It’s hard to digest that this is my sister they are talking about,” says the brother. 


The first time he saw a pseudonym flashing on TV, he says he raised the issue with doctors and some police personnel. “I thought the channel in question had got my sister’s name wrong, because they said ‘Damini’s condition is deteriorating’ — they addressed her like that. I was reassured from the first day that our names, my sister’s name would not come out. I was furious,” he says. 


He has since learnt the ropes, even the terms for it. “Somebody explained to me it is a phenomenon known as personification. I don’t like it, but they say she is the face of a movement,” he says. However, the Net barrage was something he couldn’t take — he has blocked his Facebook account. 


“Every two hours, there is a new rumour. On social networks, celebrities and many friends flash her obituaries every night. For them it is just an online status they correct in two hours. At the same time, media channels say she has had a two-hour conversation, she has walked, she has smiled, she has hugged UPA chairperson Sonia Gandhi,” he says. 


Last Friday, he saw claims on a TV channel of his sister having “taken a few steps, with brother’s help”, and “walking for the first time after the incident”. She was actually vomiting and complaining of a new abdominal pain that day. 



“That night, my mother and sister hardly slept. It was a long and bad night for us, and TV channels were flashing that she was on her feet. I was tired and angry,” he recounts. 



On Sunday, as the protests over the rape turned violent in Delhi, the family faced another pressure. Even as the victim went through one more operation, her brother says the police approached them. 



“They told us more than 80 people had been injured, that people were getting violent in my sister’s name. They wanted us to make an appeal for peace. We wanted the movement to continue, but we did not want violence,” her brother says. 


Towards the evening, when she was brought back to the ICU after her surgery, her father finally conceded to the demand. The father’s appeal to “Please help the police in maintaining law and order. Pray for my daughter, vandalism can serve no purpose”, rang out through media channels late on Sunday night. 


A day later, the father does not want to interact with the media, despite repeated requests. “My father is scared that a wrong message has gone out. It seems like we don’t want the protests. We are suffering so much, why should we be against the movement? Now, he has decided against speaking to the media. There were more requests from the police, but we told them we don’t want to risk it again,” the brother says. 



The flood of relatives and neighbours has not made things smooth either. “People want to know what she said, what she wrote in notes, how long she had known her male friend, who was accompanying her. Relatives want us to ask doctors if she will be able to get married and have children. My parents have become tired of answering questions,” he says. 


Politicians have gone so far as to seek a meeting with the girl. “There is a risk of infection, we have said that repeatedly. But the requests continue to pour,” a senior administrative official at Safdarjung Hospital said. 


While some politicians paid solitary visits, others have been calling the family and landing at the hospital every day. “They are protesting outside the hospital, calling us at odd hours, telling us they will pay us for her medical treatment. Each one speaks to the doctor, gets a new update, and calls us. While we appreciate the support, it gets scary sometimes,” the brother says. 


Meanwhile, the family’s efforts are concentrated on keeping the victim as guarded from the hue and cry as possible. While she wants the accused to be hanged, the brother says, she is also scared.
“She does not know her intestines have been removed. She doesn’t even know the extent of the public outcry,” says the brother. “Even when her friends or relatives come to visit, she asks us how much they know. When she hears of politicians coming, she gets scared. She keeps asking my mother if she has told anyone what happened.”


நன்றி -  இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெல்லி அரசு செய்த 6 தவறுகள்

Delhi gangrape protests: The six mistakes of the government

The anti-rape protesters were lathicharged on Sunday as some sections of the crowd turned violent at India Gate. However, those beaten and injured also included women protesters. They complained that there were no warning and the police simply went on to lathicharge protesters. The police also used water cannons and tear gas shells to disperse the protesters. 



The question is as to where did the government go wrong. Following are the six mistakes of the government while handling the protests:

 
1. Totally misread how widespread anger against quality of policing was fuelling protests 


2. Total absence of quick demonstrative action, except for issuing standard statements 



3. The Home Ministry publicly praising the Delhi Police, even as massive protests were on 



4. The absence of an acceptable, credible leader who could engage with protesters at India Gate 


5. Lack of uniform, cohesive approach to handling young protesters 



6. Using force on peaceful women, youth on Saturday, fuelling more protests on Sunday 



 நன்றி - IBN LIVE

 


Saturday, December 22, 2012

டெல்லி - குற்றம் நடந்தது என்ன? - மக்கள் கருத்து

ல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து...  ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துள்ளது. 'குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்’ என்று நாடெங்கும் போராட்டம் நடக்கின்றன! 


தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பிசியோதெரபி படித்த 23 வயது மாணவி அவர். பொறியாளரான தனது நண்பருடன் கடந்த 16-ம் தேதி சினிமா பார்த்து விட்டு, இரவு 9.30 மணிக்கு முனிர்கா பேருந்து நிலையத்தில் நின்றார். ஒரு பேருந்து வந்து நிற்கவே, இருவரும் அதில் ஏறினர். உள்ளே இருந்தது மொத்தமே ஆறு பேர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரிடம், 'இந்த நேரத்தில் ஒரு பொண்ணுகூட என்னடா பண்ற?’ என்று மிரட்டி இருக்கிறார்கள். உடனே, அந்தப் பெண் குறுக்கிட்டு, 'நாங்கள் நண்பர்கள். படம் பார்த்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லவும் 'நீ பேசாதடி’ என்று இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பரையும் தாக்கி பேருந்தில் இருந்து அவரை வெளியே தள்ளினர்.
அடுத்து அவர்கள் செய்த காரியங்கள் கொடூரத்தின் உச்சம். அந்த மாணவியை இரும்புக் கம்பியால் பல இடங்களிலும் தாக்கவே, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார். வலியால் துடித்த பெண்ணை அந்தப் பேருந்துக்கு உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மஹில்பூர் என்ற இடத்தில் உள்ள மேம் பாலத்தில் பேருந்தை நிறுத்தி, அலங்கோலமாக்கி விட்டு அந்த மாணவியை வெளியே வீசி இருக்கிறார்கள். இப்போது, அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்து​வ​மனையில் உயிருக்குப் போராடிக்​கொண்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த இந்தச் சம் பவத்தைக் கண்​டித்து மொத்த நாடும் கனன்று கொண்டு இருக் கிறது.
இதுதொடர்பாக  வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியது டெல்லி போலீஸ்,  அக்ஷய் குமார் மற்றும் ராஜு என்ற இரு​வரைத் தேடி​ வருவதாகக் கூறும் டெல்லி போலீஸார், வெளியிட்ட உண் மைகள் பகீர் ரகம்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 'யாதவ் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் பேருந்து, டெல் லியில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்களையும் மாணவர்​களை​யும் ஏற்றிச்செல்லும் கான்ட்ராக்ட் பேருந்து. ராம் சிங் என்பவர்தான் கடந்த 10 மாதங்களாக அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந் தார். 16-ம் தேதி மாலை தன் நண்பர்கள் நால்வர் மற்றும் தனது தம்பி முகேஷ§டன் சேர்ந்து மது அருந்தியவர், பேருந்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பி இருக்கிறார். பேருந்துக்காக மாணவி தன் நண்பருடன் காத்திருப்பதைக் கண்டதும், பயணிகள் பேருந்தைப்போல் நிறுத்தி, அவர்களை ஏற்றிக் கொண்டனர். நண்பரை அடித்து வெளியே எறிந்து விட்டு, மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை ஓட்டுனர் ராம் சிங் பலாத்காரம் செய்த போது, அவனுடைய தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டி இருக்கிறார். அந்த பஸ் கறுப்புக் கண்ணாடியுடன் இருந்ததால், உள்ளே நடந்த எதுவுமே வெளியில் யாருக்கும் தெரியவில்லை. மாணவியை வெளியே வீசிய பிறகு, பேருந்தை ஷெட்டுக்கு எடுத்துச்சென்று ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருக்கிறார்கள்.
மாணவி சேர்க்கப்பட்டுள்ள டெல்லி சப்தர்ஜிங் மருத்துவ மனையின் டாக்டர் பி.டி.அதானி, ''அந்த மாணவியின் உடலில் பல முக்கிய உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் செயற்கை சுவாசம்தான் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து இருக்கிறோம்.. இன்னும் சில அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இல்லை. அந்த ஆறு பேரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது அடிவயிறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஐ.சி.யு-வில்தான் இருக்கிறார். இப்படி ஒரு மோசமான கேஸை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை'' எனக் கவலை தெரிவித்து இருக்கிறார்.


இந்த வழக்கை சூ-மோட்டாவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ''மக்கள் உங்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டனர். சம்பந்தப்பட்ட பேருந்து டெல்லியில் அனுமதி இல்லாத கறுப்பு நிற ஸ்டிக்கர், ஜன்னல் துணிகளுடன் சென்று இருக்கிறது. இந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து போலீஸ் செக் பாயின்ட்களை பேருந்து கடந்துள்ளது. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?'' என்று, டெல்லி போலீஸாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது.


அனைத்துத் திசைகளில் இருந்தும் சரமாரியாகப் புகார்கள் குவியவே, ''கறுப்புக் கண்ணாடி, திரைகள் போட்டுள்ள பேருந் துகளை உடனே கண்காணித்து உரிமத்தை ரத்து செய்யுங்கள். இரவு ரோந்து போலீஸாரின் எண்ணிக்கையை பலப்படுத்துங்கள். புதிதாக ரோந்து வாகனங்களை வாங்குங்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாரை நியமியுங்கள்'' என்று அடுக்கடுக்கான சட்டங்களை உள்துறை விதித்துள்ளது.
2012-ல் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்.

எங்கே போகிறது இந்தியா... அதுவும் தலைநகர்?

- ஆ.அலெக்ஸ்பாண்டியன்


நன்றி - ஜூ வி 




 மக்கள் கருத்து 




1. எல்லாம் சரி.இரவில்,அதுவும் நண்பருடன் அந்தப்பெண் ஏன் திரைப் படத்திற்கு செல்லவேன்டும்? குற்றவாளிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குற்றச்செயலில் ஈடுபட ஏன் வாய்ப்பு தர வேண்டும்? இதை யாருமே பேசமாட்டீர்களா?



2. இது பிரச்சனை ஒன்று மட்டுமே இந்தியாவின் தலையாய பிரச்சனை அல்ல என்று மார்க்கண்டேய கட்ஜீ கூறி இருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற பிரச்சனை அவருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால்..... நெறியாளர் இதை வெளியிடுவார் என நம்புகிறேன்.



3. உணர்ச்சி வசப்படாமல் நடந்ததை திரும்பி பார்க்கவேண்டும்.

1. அது ரெகுலர் பஸ் கிடையாது.

2. அந்த பஸ்ஸில் ரூட் நம்பர் இல்லை. செல்லும் இடமும் போடவில்லை.

3. அதை ஓட்டியவர்கள் சீருடை அணியவில்லை.

4. வண்டியில் வேறு பயணிகள் இல்லை.

5. வண்டியில் விதிகளுக்கு புறம்பாக கருப்பு கண்ணாடி ஓட்டப்பட்டுள்ளது.

6. முன்பின் அறிமுகம் இல்லாத சிலர் வாகனத்தில் ஏற அழைப்பு விடுத்தால் ஏறலாமா?

7. இரவு சினிமாவிற்கு செல்பவர்கள் திரும்பி வருவதற்கு வழி செய்யாமல் படம் பார்க்கலாமா?

8. ஞாயிற்று கிழமை பஸ் எண்ணிக்கை பாதி தான்.

9. ஆட்டோவிற்கு நூறு ரூபாய். டாக்ஸியிற்கு முன்னூறு ரூபாய் பையில் இல்லாமல் ஒரு பெண் இரவு சினிமாவிற்கு செல்லலாமா?

10. டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பது தெரிந்தும் இப்படி ரிஸ்க் எடுக்கலாமா?

11. அந்த பெண்ணிற்கு நடந்தது கொடுமையே. அந்த பெண் குணமடைய நாம் கடவுளை வேண்டுவோம்.

12. அந்த கயவர்களுக்கு தக்க தண்டனை வேண்டும்.

13. இங்கு நியூ யார்க் தலை சிறந்த ஊர். ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆண்களே சில இடத்திற்கு செல்ல மாட்டார்கள். சென்றால் பர்ஸோட சேர்த்து கிட்னியும் போய்விடும்.

14. பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். இடம் பொருள் நேரம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இது அனைவருக்கும் பொருந்தும்.




4. தயவு செய்து அந்த கயவர்களை சட்டென்று தூக்கில் போட்டுவிடாதீர்கள். தூக்கு தண்டணை எதிர்ப்பாளர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். கொஞ்ச நாள் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அந்த கயவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை விடுவிக்க போராட ஆரம்பிப்பார்கள். உடனே நமது மென் மனதுக்காரர்கள் அவர்களை மன்னித்து விட முனைவார்கள். இவர்களுக்கெல்லாம், கோவையில் அந்த கைதிகளை அழைத்து சென்று என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது போல் செய்து விட வேண்டும். அதிலும் அனைவரையும் கொன்றுவிடக் கூடாது.......அடுத்தவர்கள் அந்த கொலை பயத்தில் சில நாட்களாவது இருந்து பின் சாகடிக்கப்பட வேண்டும். இப்போதைக்கு அவர்களின் விரல்களை மட்டும் வெட்டி விடலாம்.



5. கறுப்புக் கண்ணாடி, திரைகள் பேருந்துகளில் போடுவது குற்றம் செய்வதற்கு அல்ல வெயிலில் பயணம் செய்பவர்களுக்கு அவதிப்படாமல் பயணம் செய்வதற்க்கு அதை விலக்குவதால் சாதரன மக்களுக்கு மட்டுமே பாதிப்பு எம்பி, மந்திரி, டிப்பளமாட், அதிகாரிகள் எல்லாருக்கும் கண்ணாடி, திரைகள் உள்ள வண்டிகளில் தான் எப்பொழுதும் பயணம் செய்கிறார்கள். பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட்டால் குற்றங்கள் குறையும்.


6. இது மாதிரி ஆட்களுக்கு நம்ம சைலேந்திர பாபு தான் சரி.

இன்னொரு சந்தேகம்... ஒப்பந்த பேருந்துக்கும் சாதாரண பயணிகள் பேருந்துக்கும் வேறுபாடு கூடத் தெரியாமலா இந்த இருவரும் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்?


7. இந்தியாவுக்கு மானம்லா இருக்கா?

தருமபுரியில் 3 பெண்களை உயிரோடு கொளுத்திய தேசம் இது

பத்திரிக்கை அலுவலகத்திலே ஊழியர்களை கொளுத்திய தேசம் இது.

இது சூடு சொரணை அற்ற ஜட தேசம்.

இங்கு காசுக்கு மனசாட்சியை விற்று விட்டு , என் தலவன் சின்ன குற்றவாளி, உன் தலைவன் பெரிய குற்றவாளின்னு ஜால்ரா தட்டுற பயல்கள்தான் அதிகம்.



8. 635 வழக்குகளில் ஒருவர் மட்டுமே சிறிய தண்டனை அடைந்துள்ளார் - இதுதான் இத்தனை கொடுமைகளுக்கும் அடித்தளம். குற்றத்துக்கு தண்டனை கிடைக்காது, கிடைத்தாலும் பல வருடங்களாகும், அதுவும் ஒரு சிறிய தண்டனையாகவே இருக்கும் என்று குற்றவாளிகள் நினைப்பதுவே அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. ஆனால் நம்மால் ஏன் நீதிமன்றங்கள் வருடத்தில் 150 நாட்கள், தினமும் 3 மணி நேரம் என்ற அளவில் செயல்படுகின்றன, கணக்கில்லா வாய்தாக்கள் வழங்க எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்று கேட்க முடியாமல் நீதிமன்ற அவமதிப்பு என்ற சட்டம். இந்தியா நாசமாவதில் மிக மிக மிக அதிகப் பங்கு நீதித்துறையையே சாரும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றியே ஊழல் புகார்கள் வரும் பெரிய நாடு இந்தியா மட்டுமே.



9. ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நாஙகள் விழித்து க்கொள்வோம் என்பது நமக்கு வழக்கம் தானே.வெளி நாட்டு டூரிஸ்ட் கள் கதி கேக்கவே வேண்டாம். இந்தியா வரவே பயப்படும் நிலைதான்.



10. டெல்லிய்ல் ஒரு பெண் கொடூரப்படுத்தப்பட்டார் என்றவுடன் எல்லா ஊடகங்களும் தங்களுக்குஒரு ஸ்கூப் கிடைத்திவிட்டது என அதை வைத்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். நாடாளுமன்ரத்தையே முடக்குகின்றனர். பல்லாயிரம் உயிர்கள்( விவசாயிகள், கூலிகள், மீனவர்கள், சாதி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள்) செத்தபோது கண்டுகொள்ளவில்லையே.

Wednesday, December 19, 2012

டெல்லி லேடி டாக்டர் ரேப்பிஸ்ட் வாக்குமூலம்

பாடம் கற்பிக்க விரும்பினோம்': டெல்லி சம்பவ குற்றவாளி 



Posted Date : 18:19 (18/12/2012)Last updated : 18:31 (18/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது மாணவிக்கு  பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்குற்றத்தை புரிந்ததாக கைது  செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவன் விசாரணையின்போது தெரிவித்ததாக  காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக  4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு  வருகின்றனர்.


இதனை டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த காவல்துறை  ஆணையர் நீரஜ் குமார்,இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்  என்று நீதிமன்றத்தை டெல்லி காவல்துறை கேட்டுக்கொள்ளும் என்றும்,அப்படி  அமைத்தால்தான் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

குற்றவாளிகள் மீது பாலியல் பலாதகார வழக்கு மட்டுமல்லாது, கொலை முயற்சி  வழக்கும் பதிவு செய்யப்படும் என தெரிவித்த நீரஜ் சிங், கைது செய்யப்பட்ட 4  பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி  கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் ஆவர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பாடம் கற்பிக்க விரும்பினோம்

இதனிடயே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், அப்பெண்ணுடன் வந்த நண்பரை முதலில்  தாக்கியபோது,அப்பெண் அதனை தடுக்க முயற்சித்ததாகவும்,இதனால் அப்பெண்ணுக்கு  பாடம் கற்பிக்க வேண்டி தாங்கள் இச்செயலை செய்ததாகவும் விசாரணை நடத்திய  போலீஸ் அதிகாரிகளிடம் குற்றவாளி ஒருவன் கூறியதாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி  டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்  என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.



கற்பழிப்பு தலைநகராகும் டெல்லி!
Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 18:05 (18/12/2012)
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-கற்பழிப்புக்கு  தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு  அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று!

டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு  திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை  தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்  இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய  ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில்  தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.

பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர்  குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர்  கைது செய்யப்பட்டனர்.
24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்

தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த  பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள்  நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன்  ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல  அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராம்  சிங் என்ற விவரமும்  தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை  குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர்  எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த  இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம்  இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்  அடிப்படையில் மேலும் 2 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, மேலும் 2 பேர் தேடப்பட்டு  வருகின்றனர்.
டெல்லியில்  செய்தியாளர்களிடம் இது தொடர்பான விவரங்களை தெரிவித்த
டெல்லி காவல்துறை ஆணையர்  நீரஜ் குமார்,  கைது செய்யப்பட்ட 4 பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர்  என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு, தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவ, மாணவிகள் போராட்டம்

இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் மாணவிகள் கூறினர். 

அதிர்ந்த நாடாளுமன்றம்

இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று  எதிரொலித்தது.

மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து  செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு,  உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் கோரினர்.

இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும்  என்று கூறினார்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய  அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது  கவலையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம்  நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

டெல்லிக்கு முதலிடம்

இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239  பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக  உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில்  மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76  மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல்  கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக  இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.

நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,கற்பழிப்புக்கு  தலைநகராக இருப்பதில் அல்ல...!




டெல்லி மாணவியின் முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
Posted Date : 12:16 (19/12/2012)Last updated : 12:22 (19/12/2012)
புதுடெல்லி: 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான டெல்லி  மாணவியின் சில முக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக சேதமடைந்துள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சரப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும்  அம்மாணவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு நேரில் சென்று  பார்த்து, அம்மாணவியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஒருபுறம் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள்  பலமாக ஒலித்துவரும் நிலையில்,மறுபுறம் பாதிக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு போராடி  வருகிறார்.

குறிப்பாக அம்மாணவியின் சில அதிமுக்கிய உடல் உறுப்புகள் நிரந்தரமாக  சேதமடைந்துவிட்டதாக, அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை அம்மாணவியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில்,இரவில் மீண்டும் மோசமடைந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது  மிகவும் கடுமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத 'மருத்துவ கேஸ்' என்றும்  கூறியுள்ளனர்.  

ஒருவர் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் 


இத்தகைய நிலையில் இருந்தால் அவரது  நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும், இந்நிலையில் அப்பெண்ணுக்கு  செயற்கை  சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு 65 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நன்றி - விகடன் 


டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையாநாயுடு எழுந்து, மருத்துவ மாணவி கற்பழிப்பு பிரச்னையை கிளப்பினார். அவருடன் சேர்ந்து, பா.ஜ., உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.

உடன், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""அரசியல் காரணங்களுக்காகவே, கேள்வி நேரம் இடையூறு செய்யப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் பலாத்கார விவகாரம். இதை அரசியலாக்க வேண்டாம்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லாவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களை, சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அமளி தொடர்ந்தது. இதனால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.இதன்பின், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், இந்தப் பிரச்னை குறித்துப் பேசினர்.

மைத்ரேயன் - அ.தி.மு.க.,: இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை வழங்க வேண்டும்.
ராம் ஜெத்மலானி - பா.ஜ.,: டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை, நீக்க வேண்டும்.
ஜெயா பச்சன் - சமாஜ்வாதி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் காலம்தாழ்த்தாது, நடவடிக்கை எடுக் வேண்டும்.
ரேணுகா சவுத்ரி - காங்.,: இளம் பெண்ணின் மீது நடத்தப்பட்டுள்ள, இந்த கொடூர அத்துமீறலுக்கு, எவ்வளவு பணத்தை இழப்பீடாக கொடுத்தாலும், அது ஈடாகாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உள்ளது.
மாயாவதி - பகுஜன் சமாஜ்: இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்ட விதிகளை திருத்த வேண்டியது அவசியம்.
வசந்தி ஸ்டான்லி ( தி.மு.க.),: இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில், இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இனி, இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டங்கள் இயற்றப்படும். இதற்காக, குற்றவியல் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கலாகும்.இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

லோக்சபாவிலும், டில்லி கற்பழிப்பு விவகாரம் குறித்து, பேச அனுமதிக்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:இந்த கொடூர செயலில், மொத்தம், ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், இன்னும் இரண்டு பேரை, போலீசார் கைது செய்யவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

திருமாவளவன் பேச்சு -எம்.பி.,க்கள் எதிர்ப்பு:
லோக்சபாவில், நேற்று பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த, சிதம்பரம் லோக்சபா தொகுதி, எம்.பி., திருமாவளவன் எழுந்து, தர்மபுரி விவகாரத்தை கிளப்பினார். அவர் பேசியதாவது:தர்மபுரி அருகே, நாய்க்கன் கோட்டையில் உள்ள நத்தம், "காலனி' அண்ணாநகர் போன்ற, தலித் கிராமங்களை, 3,000 பேர் கொண்ட கும்பல், சூறையாடியது. ஏறத்தாழ, 4 மணி நேரம், தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள், நின்று நிதானமாக அனைத்து வீடுகளையும், தாக்கி விட்டு சென்றுள்ளனர். இருந்தும், போலீசார் அவர்களை தடுக்கவில்லை. வன்முறையாளர்களின் தாக்குதலின் போது, போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உடன், தம்பித்துரை, செம்மலை, வேணுகோபால் உட்பட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, "மாநில பிரச்னைகளை இங்கு பேசக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது:தமிழகத்தில், பொது மக்களின் நன்மை கருதி, அரசு கேபிள் "டிவி' சேவை துவங்கி, நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் தொழில் நுட்பம் அவசியம்.என்ன காரணத்தினாலோ, இதற்கான ஒப்புதலை வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய, இது போன்ற திட்டங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதனால், விரைவில் இந்த திட்டத்திற்கு, டிஜிட்டல் அனுமதி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -



டில்லியில் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் பார்லி.,யில் குரல் எழுப்பினர்.
டில்லியில் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசி சென்று விட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியது. ஆனால் சபாநாயகர் நிராகரித்தார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

ராஜ்யசபா ஒத்திவைப்பு :


ராஜ்யசபாவில் எழுந்த அமளி காரணாமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி கற்பழிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பஸ்சில் இருந்த ரகசிய காமிரா உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,


மாணவருக்கு ஆபரேஷன்:


இதற்கிடையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கும், உடன் இருந்த அவரது நண்பருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கற்பழிக்கப்பட்ட மாணவி இன்னும் மயக்கம் தெளியாமல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் பேட்டி:

இந்த கற்பழிப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது மிக முக்கிய விஷயமாக கருதுகிறோம். அனைத்து உறுப்பினர்களும் பார்லி.,யில் எழுப்புவோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே விளக்கம் அளிப்பார் என தெரிகிறது,


போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை:

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து டில்லி வசந்த்விகார் போலீஸ் ஸ்டேஷனை இப்பகுதி மாணவிகள் முற்றுகையிட்டனர். எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி - தினமலர் 


Monday, December 17, 2012

டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வில்லித்தனமான பேச்சு

புதுடில்லி:""ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும்,'' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:
டில்லியில், நேற்று முன்தினம், "அன்னஸ்ரீ யோஜனா' என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. "ஆதார்' அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 



அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ""நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது,'' என்றார்.

26 ரூபாய்போதும்:
"பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை' என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, "தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும்' என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, "ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது' என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


thanx - dinamalar




மக்கள் கருத்து 



1. இங்கே கருத்து சொல்லி இருக்கும் திரு ரமேஷ் மற்றும் சாடிக் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசாங்கம் என்ன மானியமாக மாதம் 6000 ரூபாயா குடுக்குது. அத வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காம சோம்பேறி ஆக போறாங்க, 600 ஓவாய வச்சிக்கிட்டு இன்னைக்கு ஒரு தனி மனிதனால கூட வாழ முடியாதுன்னு சாமானியனுக்கும் தெரியும். மானியம் என்பது என்ன? கஷ்ட படுரவங்களுக்கு அவங்க கஷ்டத்த குறைக்க குறைஞ்ச விலைல பொருள குடுக்குறதுதான் மானியம். அதும் கிட்டத்தட்ட 70 கோடிக்கும் மேல வாழற நம்ம இந்தியால இது தேவை, ஏழை மக்களை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம மானியத்த ஒழிக்கணும்னு சொல்றிங்களே நீங்க எல்லாம் மனசார முடியாதவங்களுக்கு ஒரு உதவி கூட செய்ய மாட்டிங்கனு நல்ல தெரியுது 






2. பிஜேபியோடு சேர்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதே பிழைப்பாகி விட்டது சிலருக்கு. ஷீலா என்ன தவறாக சொல்லி விட்டார், ஆதார் அட்டை மூலம் மாதம் அறுநூறு கிடைத்தால் ஒரு குடும்பத்துக்கு போதுமானது என்றால், படுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சொல்லவில்லை. மறைமுக மானியமாக கிடைத்து கொண்டிருக்கும் இப்பணத்துடன் குடும்ப வருமானமும் சேர்ந்தால் சுலபமாக குடும்பம் நடத்த முடியும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம். நம்மை பொறுத்த வரை இந்த மான்யங்களையே நிறுத்தி விட்டு விலைவாசியை குறைப்பதற்கும் வேலையில்லா திண்டாத்தை போக்குவதற்கும் பயன் படுத்தினால் நல்லது என்பதே சரியானதாக இருக்கும். 




3. Sekar
 Sekaran ஐய்யய்யோ...இந்த தொகை மிக மிக அதிகம்..அறுநூறு ரூபாயா..அடேங்கப்பா..இவ்ளோ தொகை வைத்துகொண்டு மக்கள் என்ன செய்வார்கள்? சுவிஸ் வங்கியில் கணக்கை ஆரம்பித்துவிடுவார்கள். சொன்னால் கேளுங்கள்..தயவு செய்து இவ்ளோ தொகையை கொடுக்காதீர்கள்..சேர்த்து வைக்க வங்கி இருக்காது..எல்லா செலவும் போக மீதி கூட ஐநூற்றி தொண்ணூறு ரூபாய் மீதமிருக்கும். அப்படியே உடனே சுவிஸ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். ஷீலா அவர்கள் என்செய்வார்கள்..? அவர்கள் வாழுகின்ற விதம் அப்படி..ஏழைகள் என்றால் என்ன என்று கேட்பார்கள்..அல்லது வயிற்றில் ஈரத்துணியை போட்டு கொண்டு வாழ்ந்தால்..இதே அதிகம்தான். கோபுரங்களில் வாழ்பவர்கள்..குடிசைகள் பற்றி தெரிய நியாயமில்லை..ஒரு லட்சத்தை தினசரி வாடகையாக கொடுத்து வாழும் வசதி படைத்த மத்திய அமைச்சர்கள் உள்ள நாடு அல்லவா இது..இன்னமும் பேசுவார்கள்..இது போதும் பிரச்சாரத்திற்கு..காங்கிரஸ் காணாமல் போக இது போதும்.. 





4. இலக்கு எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் வைத்துக்கொண்டால்தான் நமக்கு முயற்சி என்பது இருக்கும். அரசியல்வாதிகள் இப்படி கீழ்த்தரமான இலக்குகள் வைத்துக்கொள்வதால்தான் நாடு முன்னுக்கே வராமல் இருக்கிறது. அறுநூறு ரூபாயில் ஒருவர் மட்டுமே வாழ்க்கை நடத்துவது கடினம். மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது உணவு, உடை இருப்பிடம் என்ற மூன்றும்தான். அதில் உணவுக்கு மட்டுமே ரூபாய் ஆறுநூறு போதாது. ஆறு நூறு ரூபாய்க்கு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு (ரொட்டி) யார் கொடுக்கிறார்கள்? ஒரு ஆளின் தினக்கூலியே முன்னூறு ரூபாய்க்கும் அதிகம். மாதம் இரண்டு நாள் வேலை செய்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம் சோம்பேறிகளாக இருந்தால் போதுமா? டெல்லி முதலமைச்சர் என்ன சொல்லவருகிறார்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மாறினால்தான் நாடு முன்னுக்கு வரும். ஒரு ஆளின் மாத வருவாய் மூன்று ஆயிரம் என்ற இலக்கு இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அப்போதுதான் அரசியல்வாதிகளும் வேலை செய்வார்கள். மக்களும் உழைப்பார்கள். மக்களுக்கு இந்த அளவு வருவாய் வரவில்லை என்றால், அப்படிப்பட்டவர்களுக்கு அரசே ஊதியம் தரவேண்டும் அல்லது எதாவது ஒரு நிரந்தரமற்ற வேலையாவது தந்து ஊதியத்திற்கு வழி செய்யவேண்டும். இதை செய்யாதவரை நாடு முன்னேறியதாக சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை. ..





5. 1965 லே நானும் என் கணவரும் 400ரூவா சம்பளத்துலே குடுமபம் நடத்த என்ன பாடு பட்டோம்னு தெரியுமா? அப்போ காய்கள் அவ்ளோமலிவு , பால் 35காசுதான் லிட்டர்க்கு. ஒரு லிட்டர் பால் வாங்கினா போரும் அரிசி நல்லரகம் 38காசு மலிவுரகம் 26காசு , 1கிலொ பருப்பும் 20காசு 30காசுதான் பிறகு கொஞ்சம்கொஞ்சமா ஏறி 2 /3 ரூவாயாச்சு. வீட்டுவாடகை 45ரூவா மின் பில் 14 டு 20 ரூவா ஆகும் பத்துகாசுக்கு முள்ளங்கிவாங்கினாலபூம்பிஞ்ச்ஜாக இருக்கும் ஒரு முள்ளங்கி வாங்கி கொஞ்சம் சாம்பர்லே போடு மீதிய பொரியலும் செஞ்சுருவேன் பொரியலும் செஞ்சுருவேன் இதே டெல்லிலே தான் இருந்தேன் என் கணவர் 1000/ ரூவா சம்பளம் வாங்கும் போது 1980ம் ஆண்டு வரை வீட்லே டிவி வாங்கலேஒரு ற்றான்சிச்ட்டர் தான் உண்டு . muunupillaikal படிச்சாகணும் அப்போ எல்லாம் பள்ளி சம்பலம்கூட கம்மிதான் தமிழ் பள்ளிலேதான் படிச்சாங்க 8ம் வகுப்புவரை பீஸ் 3ரூவாதான் டியூஷன் எல்லாம் போகலே தாமே தான் படிச்சாங்க டீசர்கலும் நல்ல கத்துகொடுத்தாங்க பிள்ளைகளும் சின்சியரா படிச்சாங்க , 9ம் வகுப்பிலேந்து 10ரூவாதான் பீஸ் .+1 +2 க்கு எடுக்கும் க்ரூப் பொருது 15 டு 20 ரூவாய்தான் , இப்போ வாரம் 10 000 / வாங்கினாலும் போராதுன்ர நிலை , ஏழைகளும் தம் பிள்ளைகள் நல்ல பெரிய பல்லிலே ஆங்கிலவழி லே படிக்கவைக்க ஆசைபடுராக, இப்போதும் பல பெத்தவங்க தாம் தான் கஷ்டம் படறோம் தம் பிள்ளைக நல்லா வாழனும்னு உளைக்கிராக அரசு சொல்லுது 2000/போரும்னு ஷீலா திக்ஷித்துக்கு வரும் சம்பளம் எவ்ளோ ஒரு சாமானியனுக்கு வரும் சம்பளம் எவ்ளோ , இந்தம்மா சூக்க ரொட்டியும் தாலும் தின்னுட்டு போகமுடியும் வயசாச்சு இன்று செத்தால் நாளை சங்கு , வளரும் பிள்ளைக நிலை என்ன என்று தெரிஞ்சுதான் பேசுராகளா , யாருகண்டது இதுகளெல்லாம் ஒருவேளைக்கே 200 ரூவா சிலவு செய்வாக ,