Saturday, April 06, 2024

ராமாயி வயசுக்கு வந்துட்டா (1980) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ யூ ட்யூப் 18+

    


 நடிகை  கீர்த்தி  சுரேஷின் அம்மா  மேனகா  புதுமுகமாக  அறிமுகம்  ஆன  படம்  இது . இவரது  இயற்பெயர்  பத்மாவதி.இவர்  ஒரு  கால கட்டத்தில் இந்தியாவில்  அதிக  சம்பளம்  வாங்கும்  நடிகைகளில்  ஒருவராக  இருந்தாராம். அட்டென்சன்  சீக்கிங்கிறாக  வைக்கப்பட்ட  டைட்டில்  மற்றும்  கீர்த்தி  சுரேஷின்  அம்மா  தான்  நாயகி  என்பதால்  பார்ப்போம்  என  முடிவு  செய்தேன்.அந்தக்காலத்தில்  எடுக்கப்பட்ட  ஒரு  விழிப்புணர்வுப்படமாகவே  இயக்குநர்  முயன்றிருக்கிறார். இது  கமர்ஷியலாக  வெற்றிப்படமா?இல்லையா? என்ற  தகவல்  கிடைக்கவில்லை 


மேனகா  வின்  இரண்டாவது  படம்  சாவித்திரி.ஆனால் அது  சரியாகப்போகவில்லை .ரஜினியுடன்  இவர்  நடித்த  நெற்றிக்கண்  செம  ஹிட்.மலையாளப்படங்களில் அ திகம்  நடித்த  இவர்   தெலுங்கு , தமிழ்  உட்பட  மொத்தம்  116  படங்களில் நடித்தார். சமீபத்தில்  வந்த  அண்ணாத்த  படத்திலும்  நடித்திருக்கிறார்


 இப்படத்தின்  ஷூட்டிங்  வத்தலக்குண்டு  என்ற  கிராமத்தில்  நடைபெற்றது . அந்த  ஊர்  மக்கள்  நாயகி  ஆன  மேனகா  கிராமியப்பெண்ணாகவே  மாறியதை  ஆச்சரியமாகப்பார்த்தார்களாம் . நியூஸ்  பேப்பரில்  புதுமுகம்  தேவை  என்று  விளம்பரம்  கொடுத்து  அதில்  தேர்வானவர்  இவர் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி , நாயகன்  இருவருமே  சிறு  வயதில்  இருந்தே   க்ளாஸ்மேட்ஸ் , ஸ்கூல்  மேட்ஸ் , முறை  மேட்ஸ். அதாவது  இருவரும்  முறைப்பெண் , முறைப்பையன்  உறவு  முறை. இருவரது  பெற்றோர்களுமே  அருகருகே  வீட்டில்  வசிப்பதால்  சின்ன  வயதில்  இருந்தே  இவனுக்குத்தான்  இவள்  என  வாய்  வழி நிச்சயம்  செய்து  விட்டார்கள் 


நாயகன் , நாயகி  இருவரும்  பருவ  வயதை  அடைந்த  பின்னும் இருவரும்  உடல் அளவில்  வளர்ந்த  அளவு  மனதளவில்  மெச்சூர்  ஆகவில்லை.  ரொம்ப  அப்பாவிகள் . ஊர்  முழுக்க  இவர்கள்  இருவரும்  வருங்கால  தம்பதி  என்பது  தெரியும் 


 ஒரு  நாள் அந்த  ஊரில்  இருக்கும்  பாட்டி  சும்மா  கிண்டலுக்கு நாயகியிடம்  திருமணத்தன்று  இரவு  என்ன  நடக்கும்? தெரியுமா? அது  தெரிந்தால்  தான்  திருமணம்  செய்து  வைப்பார்கள்  என   விளையாட்டாகக்கூற  நாயகி , நாயகன்  இருவரும்  தனித்தனியே  கிளம்பி  ஊராரிடம்  விளக்கம்  கேட்கிறார்கள் 


 நாயகனுக்கு  ஒரு  பெண்  வாய்  வழி  வசனமாக  தியரி  பாடம்  நடத்துகிறாள் .  வில்லன்  நாயகிக்கு  இதுதான்  சாக்கு  என  பிராக்ட்டிகல்  கிளாஸ்  எடுத்து  விடுகிறான்


 நாயகி  கற்பு  பறி  போன  விஷயம்  ஊர்  முழுக்கப்பரவி  விடுகிறது .பஞ்சாயத்து  கூடுகிறது . கெட்டுப்போன  பெண்ணை  எங்கள்  வீட்டு  மருமகளாக  ஏற்றுக்கொள்ள  மாட்டோம்  என  நாயகனின்  பெற்றோர்  கூற  பஞ்சாயத்து  முடிவுப்படி  கெடுத்த  வில்லனுக்கே  நாயகியை  தாரை  வார்க்க  ஏற்பாடு  நடக்கிறது 


 இவ்வளவு  நடந்தும்  நாயகிக்கு, நாயகனுக்கு  அந்த  விபரம்  எதுவும்  புரியவில்லை . சிலர்  யோசனைப்படி  அவர்கள் இருவரும்  ஊரை  விட்டு  ஓடி  விடுகிறார்கள் 


 பட்டணம்  வந்ததும்   ஒரு  ஆதரவற்ற  அனாதை  இல்லம்  நடத்தும்  தம்பதியிடம்  அடைக்கலம்  புகுகிறார்கள் .அங்கே  இன்னொரு  வீணாப்போன  வில்லன்  இருக்கிறான் . 


 முதலில்    அவன்  நாயகியை  இல்லீகலாக  அடைய  முயற்சி  செய்கிறான்.

அது  பலிக்க  வில்லை , அடுத்ததாக  லீகலாக  அதாவது  நாயகியை  மேரேஜ்  பண்ண  முயற்சி  செய்கிறான்


இதற்குள்  கிராமத்தில்  இருந்து  நாயகனின்  அப்பா  அவனைத்தேடி  வந்து  அவனை  ஊருக்கு  அழைத்துச்சென்று  விடுகிறார்


 இப்போது  நாயகி  தன்னைக்கெடுத்த  வில்லனை  திருமணம்  செய்து  கொண்டாரா?கெடுக்க  நினைக்கும் புது  வில்லனைத்திருமணம்  செய்து  கொண்டாரா?அல்லது  நாயகனைக்கரம்  பிடித்தாரா? என்பது  தான்  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஆக  புதுமுகம்  என்ற  சுவடே  தெரியா  வண்ணம்  மேனகா  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.இவரது  அழகும், அப்பாவித்தனமும், இளமையு   தான்  படத்தின்  மூல  தனம், உணர்ந்து  செய்திருக்கிறார்


 நாயகன்  ஆக  உதய சங்கர்  சுமாராக  இருக்கிறார்.  வெகு சுமாராக  நடிக்கிறார்

கங்கை  அமரன் இசையில்  பாடல்களெல்லாம்   நன்றாக  இருக்கின்றன  . பிஜிஎம்  சுமார்  ரகம்  தான் 


இயக்கம்  வி  அழகப்பன்



சபாஷ்  டைரக்டர்


1   பெரும்பாலும்  புதுமுகங்களை  வைத்தே  மொத்தப்படத்தையும்  எடுத்து  முடித்ததால்  கால்ஷிட்  பிரச்சனை, சம்ப்ளப்பிரச்சனை  இருந்திருக்காது 


2   திரைக்கதை  சுமாராக  இருந்தாலும்  கிளாமராக  டைட்டில் வைத்த  லாவகம் 


3  நாயகியை  அறிமுகப்படுத்தியது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சந்தைக்குப்போன  மச்சான் , ஜாடையில கண் அடிச்சான் ( டைட்டில்  சாங்) 

2  நான்  தான்  உங்கப்பண்டா , நல்ல  முத்துப்பேரன்  டா ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் ) 


3  அடி  ராமாயி  என்  ராசாத்தி  புது  ரோசாப்பூ   (  தோழிகள்  கிண்டல்  சாங் ) 


4  நாலு  வகைப்பூவில்  (  டூயட்) 


  ரசித்த  வசனங்கள் 


1 நம்ம  ஊர்  ஜனம் இருக்கே? யாராவது  கறுப்பா  வாந்தி  எடுத்தாக்கூட  காக்கா  காக்காவா  வாந்தி எடுத்தாங்கனு  சொல்வாங்க 


2  உன்  பொண்ணுக்கு  மூக்கு  சிவந்திடுச்சு , சீக்கிரமாவே  மூலைல  உக்காந்துடுவா 

3  அரச  மரத்தை  சுத்திட்டு  அடி  வயித்தை  தொட்டுப்பார்த்தா   நடக்குமா? என்  கிட்டே  வா , பூரா  விபரமும்  சொல்றேன் 

4 குழந்தைக்கு  நோய்  வந்த  பின்   மருந்து  தருபவர்  டாக்டர் , நோய்  வராம  பார்த்துக்கறவ  தாய் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிறுமியாக  இருக்கும்போது  நாயகி  ஒரு  முயலைத்துரத்துவதாக ஒரு  காட்சி. முயல்  நடைபாதையில்  ஓடுது. பொதுவாக  காட்டு  முயல்  செடி கொடிகள்  இருக்கும்  காட்டுக்குள்  தான்  ஓடும் . அருகிலேயே  அவ்ளோ  தாவரங்கள்  இருக்க  அங்கே  ஓடாமல்  நடை  பாதையில்  ஓடுவது  ட்ரெய்னிங்  கொடுத்த  சர்க்கஸ்  முயல்  ஆகத்தான்  இருக்கும் 


2  நாயகி  சிறுமியாக  இருக்கும்போது  அதாவது 13  வயதில்  அவளது  முறை  மாமன்  கூடவே  ஒன்றாக  அருகருகே  படுத்துத்தூங்க  பெற்றோர்  அனுமதிப்பது  எப்படி ? என்ன  தான்  நிச்சயிக்கப்பட்டவர்கள்  என்றாலும்  திருமணத்துக்கு முன்  ஒரு  கிராமத்தில்  இப்படி  படுக்க  1980களில் அனுமதித்தார்களா? 


3  என்னதான் அப்பாவியாக  இருந்தாலும்  கிராமத்தில்  இருந்து பட்டணம்  வந்த  நாயகன் - நாயகி  இருவரும்  பொதுப்போக்குவரத்தான  பஸ்சில்  போகாமல் ஆட்டோவில்  போய் சார்ஜ்  தர  கையில்காசில்லாமல்  தவிப்பது  நம்பும்படி இல்லை


4 வில்லனின்  பங்களாவில் தங்கும்  இருவரும்  தனி  அறையில்  தூங்கும்போது  ரூம்  கதவை  உள் பக்கமாகத்தாழ்  இட்டுக்கொள்ள  மாட்டார்களா? சின்னத்தம்பி பிரபுவை  விட  அப்பாவி போல 


5  நாயகன், நாயகி  இருவருமே  சின்ன  வயதில்  இருந்தே  கிளாஸ்மேட்.. இருவரும்  ஒரே  அளவு  தான்  படித்திருக்கிறார்கள் , அப்படி  இருக்கும்போது மளிகை  சாமான்  லிஸ்ட்  என  சொல்லி   வில்லன் ஒரு  வெள்ளை  சீட்டில்  லவ்லெட்டர்  எழுதி  நாயகியிடம்  கொடுக்கச்சொல்லும்போது  அதை  வாங்கிப்பார்த்துப்படிக்க  மாட்டாரா? 


6  வில்லன்  வீட்டில்  தான்  நாயகி  தங்கி  இருக்கிறார். தடை  சொல்ல  யாரும்  இல்லை. அந்த  பேக்கு  வில்லன் லவ்  லெட்டரை  நாயகியிடம்  நேரடியாகத்தராமல்  நாயகனிடம்  தந்து  தூது  விடுவது  ஏன் ? 


7 நாயகி  நாயகனை  நீ  வா  போ  என  ஒருமையில்  தான்  அழைக்கிறார். திடீர்  என  வாங்க , போங்க  என  மரியாதையாக  அழைப்பது  ஏன் ? திருமணமும்  ஆகவில்லை , அவருக்கு  மன  வலர்ச்சியும்  இல்லை . எப்படி  திடீர்  மெச்சூரிட்டி  வந்தது ? 


8 நாயகன்  நாயகியிடம்  என்ன  திடீர்னு  என்னை  வாங்க  , போங்க  என  மூன்றாவது  மனுசன்  கிட்டே  பேசுவது போல்  வித்தியாசமா  நடந்துக்கறே  என  கேட்கும்போது  நாயகி  அப்படி  அவனைக்கூப்பிடுவது  ஆறாவது  முறை . அஞ்சு தடவை  காது  கேட்கலை  போல 


9  நாயகி  அடிக்கடி  ஹேண்ட்  பேக்கை  எடுத்துக்கிட்டு  போற  மாதிரி காட்றாங்க. நான்  கூட  வேலைக்குப்போறதா  நினைச்சேன். ஒரு  டைம்  நாயகியே  சொல்லுது . கடை  வீதிக்குப்போறேன்  அப்டிங்குது. காசு  ஏது ?


10 க்ளைமாக்ஸ்  ல  நாயகி  நான்  சரத்  சந்திரர்  நாவலை அதிகம் படித்தவள்  என  ஒரு  டயலாக்  வருது ,ஆனா  2  மணி  நேரப்படத்துல  ஒரு  சீன்ல  கூட  பாப்பா  புக்  படிக்கிற  மாதிரி  காட்சியே  வர்லை 


11  படம்  முழுக்க  நாயகி  சின்னத்தம்பி  பிரபு  மாதிரியே  அப்பாவியா  வருது . திடீர்னு க்ளைமாக்ஸ்ல  கே  பாலச்சந்தர்  நாயகி  மாதிரி  மெச்சூரிட்டியாப்பேசுது


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  18+  இல்லை , ஆனால்  வசனம்  ஆங்காங்கே  லைட் க்ரீன்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கீர்த்தி  சுரேஷ்  ரசிகர்கள் பார்க்கலாம். ரேட்டிங்  2/ 5 


ராமாயி வயசுக்கு வந்துட்டா
இயக்கம்வேந்தன்பட்டி அழகப்பன்
தயாரிப்புடி. பி. எஸ். எல். ஞானமணி
ஸ்ரீ துர்கா கம்பைன்ஸ்
எல். மனோகரன்
இசைகங்கை அமரன்
நடிப்புஉதயசங்கர்
மேனகா
வெளியீடுசனவரி 121980
நீளம்3230 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Friday, April 05, 2024

REST IN PEACE (2024) - அர்ஜெண்ட்டீனா- சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 

       7/3/2024  அன்று  47 வது  மலாகா  திரைப்பட  விழாவில் திரையிடப்பட்ட  இந்தப்படம்   சிறந்த  நடிகர் ,    சிறந்த  துணை   நடிகர் ஆகிய  இரு  விருதுகளை  வென்றது . இது  த்ரில்லர்  ஃபிலிம்    என  பிரமோட்  செய்யப்பட்டாலும்  இது ஒரு  எமோஷனல்  ஃபேமிலி  டிராமா  தான். ஆனால்  விறுவிறுப்பாக  நகரும்  ஒரு  த்ரில்லர்  மூவி 

21/3/2024ல்  அர்ஜ்ண்ட்டீனா  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  27/3/2024  முதல்  ஒளிபரப்பாகிறது.1994 ல்  நடைபெற்ற  ஒரு  வெடிகுண்டு  விபத்து சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  எழுதப்பட்ட  நாவலின்  திரை  வடிவம்  இது


ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  தன்  மனைவி ,   10  வயது  மகள் , மகன்  உடன்  இனிமையான  குடும்ப  வாழ்க்கை  நடத்தி  வருகிறான்..திடீர்  என  அவனுக்கு  பண  நெருக்கடி  வருகிறது .கம்பெனியில்  பணியாளர்களுக்கு  சம்பளம்  தரக்கூட  பணம்  இல்லை .வியாபாரத்தில்  நட்டம்  மகளின்  ஸ்கூல்  ஃபீஸ்  கட்ட  பணம்  இல்லை .இந்த  நெருக்கடியை  சமாளிக்க  நாயகன்  வில்லனிடம்  பண  உதவி  கேட்கிறான்


 ஆனால்  ஏற்கனவே  நாயகனின்  வீட்டை  அடமானமாக  வைத்து  வாங்கிய  கடனுக்கே  இன்னும்  வட்டி , அசல்  கட்டாமல்  இருப்பதால்  வில்லன்  புதிதாகக்கடன்  தர  மறுப்பதோடு  பழைய  கடனுக்கான  கால  அவகாசமாக  ஒரு  வாரம்  காலக்கெடு  விதிக்கிறான். அந்த  ஒரு வாரத்துக்குள்  அசல், வட்டி  அடைக்காவிட்டால்  நடப்பதே  வேறு  என்கிறான் 

 

 இதன்  பின்  நாயகன்  மிகுந்த  மன  உளைச்சலுக்கு  ஆளாகிறான்.மனைவி  நாயகனை  சமாதானப்படுத்தினாலும்  அவளுக்கும்  கடனை  நினைத்துக்கவலையாக  இருக்கிறது 


 இப்படி  இருக்கும்போது  நாயகன் ஒரு  இடத்துக்குப்போகும்போது  அங்கே  ஒரு  வெடிகுண்டு  வெடிக்கிறது . அதில்  மாட்டிக்கொண்ட  நாயகனுக்கு  லேசான  காயம்  தான் . ஆனால்  நாயகனின்  சூட்கேஸ்  தூக்கி  எறியப்பட்டு  போலீசால்  கைப்பற்றப்பெற்று   நாயகியிடம்  ஒப்படைக்கப்படுகிறது


 வெடி  விபத்தில் நாயகன்  இறந்திருக்கலாம்,  என  போலீஸ்  கருதுகிறது . ஆனால்  டெட்  பாடி  கிடைக்காததால்  நாயகி  அதை  நம்பவில்லை 


 இந்த  சம்பவத்தை  சாக்காக  வைத்து  நாயகன்  தற்காலிகமாக  எல்லாப்பிரச்சனைகளிலிருந்தும்  தப்பிக்க  வேறு  ஊருக்கு  சென்று  விடுகிறான் 


 அந்த  ஊரில்  வேறு  பெயர் , வேறு  ஐ டி  கார்டு  ரெடி  பண்ணி  ஒரு  ஷாப்பிங்  காம்ப்ளெக்சில் , ரெஸ்டாரண்ட்டில்   பணி  புரிகிறான். ஓனரின்  மனைவி  நாயகனை  அன்புடன்  நடத்துகிறாள் . ஒரு  கிறிஸ்துமஸ்  கொண்டாட்டத்தின் போது  ஓனர்  ஹார்ட்  அட்டாக்கில்  இறந்து  விட   சில  நாட்களில்  நாயகன்  ஓனர்  மனைவியுடன் நெருக்கமாகி  இருவரும்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் 


நாயகி  இப்போது  வில்லனுடன்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறாள் . ஏற்கனவே  நாயகன்  மூலம்  பிறந்த  இரு  குழந்தைகளுடன்  இப்போது  வில்லன்  மூலம்  பிறந்த  ஒரு  குழந்தையும்  உண்டு 


 15  வருடங்கள்  கழிகின்றன .  ஃபேஸ் புக் மூலம் நாயகன்  தன்  மகளுக்கு  திருமணம்  என்பதை  அறிகிறான். அவர்களை  நேரில்  பார்க்க  கிளம்புகிறான்.

இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதிக்கதை 



நாயகன்  ஆக  ஜாக்கிங்  ஃபரியல்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். பின்  பாதியில்  வரும்  வயதான  கெட்ட்ப்பில்  அசப்பில்  அஜித் குமார்  போலவே  சாயல்  (  காட்  ஃபாதர்   எ  வரலாறு  கெட்டப் ) இளவயது  கெட்ட்ப்பில்  செமயான  நடிப்பு ,வயதான  கெட்டப்பில்சராசரி  நடிப்பு  அவருடையது 


 வில்லன்  ஆக  கேப்ரியல்  கொயட்டி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்,குள்ளநரித்தனம், வில்லத்தனைம்  இரண்டையும்  சரி  சமமாக  வெளிப்படுத்துகிறார்



நாயகி  ஆக  கிரிசெல்டா சிசிலியானி  கலக்கி  இருக்கிறார். முதல்  பாதியில்  நாயகனுடன்  இருக்கும்போதும்,  பின்  பாதியில் வில்லனுடன்  இருக்கும்போதும்  பேலன்ஸ்  பண்ணி  நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ்  காட்சியில்  இவர்  நடிப்பு  அருமை 


மகனாக , மகளாக  வருபவர்களுக்கு  அதிக   காட்சிகள்  இல்லை  வந்தவரை  ஓக்கே  ரகம் 


ஃபெடரிகா ஜசிட்  தான்  இசை . பின்னணி  இசை  நல்ல   விறுவிறுப்பு  ரோட்ரிக்கோ  வின்  ஒளிப்பதிவு  சிறப்பு 

ஒன்றே  முக்கால்  மணி  நேரம்  ஓடும்படி  க்ரிஸ்ப்  ஆக  கட்  செய்திருக்கிறார்  எடிட்டர் 


மார்க்கோ  ஒசாரியா  விடோய் ,  செபாஸ்டியன்  போரன்ஸ்டின்  ஆகிய  இருவரும்  திரைக்கதை  எழுத   செபாஸ்டியன்  போரன்ஸ்டின்  இயக்கி  இருக்கிறார்



சபாஷ்  டைரக்டர்


1  முதல்  காட்சியிலேயே  கதை  அரம்பம்  ஆகி விடுவது  சிறப்பு , செம  விறுவிறுப்பாக  காட்சிகள்  நகர்கின்றன


2  கடன் நெருக்கடியால் நாயகன்  கஷ்டப்படும்  காட்சிகள்  மனதுக்கு  நெருக்கமாக  அமைந்திருக்கிறது . எல்லோருக்குமே  கடன்  இருக்கும்  என்பதால்  ஈசியாக  கனெக்ட்  ஆகி  விடுகிறது 


3  க்ளைமாக்ஸ்  காட்சியில் நாயகன்  , நாயகி  நடிப்பு  அருமை 


4  நாயகன்  தன்  மகன்  வில்லனை  அப்பா  என  அழைப்பது  கண்டு  மருகுவது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லன்  தன்  ஓனரின்  மனைவியோடு  நெருக்கம்  ஆவது  எப்படி? என்பதை  டீட்டெய்லாகக்காட்டிய  இயக்குநர்  நாயகி  வில்லனுடன்  இணைந்தது  எப்படி  என்பதை  விஷூவகாலக்காட்டவில்லை . இது பின்னடைவு 

2    வில்லன்  பணத்துக்காக  நாயகனை  அவ்ளோ  தூரம்  நெருககடி  தருபவன்  நாயகன்  காணாமல்  போனதும்  நாயகியிடம்  நீங்க  கடனைக்கட்ட  வேண்டியதில்லை  எனக்கூலாக  சொல்வது  எப்படி ? 


3   வில்லன்  நாயகியை  எப்படி  வீழ்த்தினார்     என்பது  சொல்லப்படவில்லை .பண  நெருக்கடிதான்  காரணமா? இல்லை  வில்லனின்  செல்வாக்காலா?என்பது  சொல்லப்பட்டிருக்க  வேண்டும்


4  நாயகன்  கடந்த  15  வருடங்களாக  தன்  மனைவி  என்ன  ஆனாள்   என்பது  ப்ற்றிக்கவலைப்படாமல்  இருப்பது  எப்படி ?


5  நாயகன்  கடைசி  வரை  தன்  மகன் , மகளை  சந்திக்காமல்  இருப்பது  ஏன் ?

6  நாயகன்  தான்  மட்டும்  இன்னொருத்தியுடன்  வாழலாம், ஆனால்  தன்  மனைவி  தனிமையாக  இருப்பாள்  என்று  எதிர்பார்க்கலாமா? வில்லனுடன்  இணைந்து  மனைவியைக்கண்டு    ஜெர்க் ஆவது   ஏன்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு  ஃபேமிலி  டிராமா  என்பதால்  பெண்களுக்குப்பிடிக்கும்,த்ரில்லர்  மோடில்  சொல்லப்பட்டிருப்பதால்  ஆண்களுக்கும்  பிடிக்கலாம் , ரேட்டிங்  2.5 / 5 


Rest in Peace
Promotional release poster
SpanishDescansar en paz
Directed bySebastián Borensztein
Screenplay by
  • Marcos Osorio Vidal
  • Sebastián Borensztein
Based onDescansar en paz: ¿nunca soñaste con dejar todo y empezar de nuevo?
by Martín Baintrub
Produced by
Starring
CinematographyRodrigo Pulpeiro
Edited byAlejandro Carrillo Penovi
Music byFederico Jusid
Production
companies
  • Kenya Films
  • Benteveo Producciones
Distributed byNetflix
Release dates
  • 7 March 2024 (Málaga)
  • 21 March 2024 (Argentina)
CountryArgentina
LanguageSpanish

Thursday, April 04, 2024

ANATOMY OF A FALL (2024) -ஃபிரஞ்ச் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் டிராமா + கோர்ட் ரூம் டிராமா ) @ அமேசான் பிரைம்


சிறந்த  திரைக்கதைக்கான  ஆஸ்கார்  விருதை  வென்ற  படம்  இது .6  மில்லியன்  டாலர்  செலவில் எடுக்கப்பட்டு  35  மில்லியன்  டாலர்  பாக்ஸ்  ஆஃபீசில்  வசூல்  செய்த  படம் . 2023   மே  மாதம்  முதல்  2024  மார்ச்  மாதம்  வரை  பல  திரைப்பட  விழாக்களில்  கலந்து  கொண்டு  இதுவரை 47  விருதுகளை  வென்ற  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின் கணவர்  ஒரு  ரைட்டர் . இருவரும்  காதல்  திருமணம்.அவர்  தான்  முதலில் ப்ரப்போஸ்  செய்தார்.    13  வயதில்  ஒரு  மகன்  இருக்கிறான். தன்  கணவனின்  எழுத்துத்  துறமையைப்பார்த்து  நாயகியும்  ஒரு  ரைட்டர்  ஆக  மாறுகிறார்.  வாழ்க்கை  நன்றாகப்போய்க்கொண்டு  இருக்கும்போது   மகனுக்கு  ஒரு  சாலை  விபத்து  நிகழ்கிறது . அதில்  அவனது பார்வை  பறிபோகிறது.


 இந்த  விபத்துக்குக்காரணம்  நாயகியின்  கணவர்  தான்  என்பதால்  அது  பற்றி  இருவருக்கும்  அடிக்கடி  வாக்குவாதம்  நடக்கிறது .மருத்துவச்செலவு  கூடிக்கொண்டே  போகிறது .இதனால்  எழுதுவதை  ஓரம்  கட்டி  விட்டு  வேலைக்கு  போய் சம்பாதிக்கும்  வழியைப்பாருங்கள்  என  நாயகி  சொல்லி  விடுகிறாள் 


இதனால்  நாயகியின் கணவன்  கோபம்  கொள்கிறான் . இதனால்  அடிகக்டி  இருவரும்  வாக்குவாதம்  செய்வது , சண்டை  போடுவது  என  இருக்கிறார்கள் 


ஒரு நாள்  மகன்  தன்  செல்ல  நாயுடன்  வாக்கிங்  போய்  விட்டு  வீடு  திரும்புபோது  தன்  அப்பா  கீழே  விழுந்து  அடிபட்டுக்கிடப்பதைக்கையால்  தடவி  உணர்ந்து  அம்மாவை   அழைக்கிறான்.  நாயகி  உடனே  மாடியில்  இருந்து  கீழே  வந்து  ஆம்புலன்சை  அழைக்கிறாள் 


 இது போலீஸ்  கேஸ்  ஆகிறது . நாயகியின்  கணவன்  தன்   மனைவியுடன்  அடிக்கடி  சண்டை போட்ட சம்பவங்களை  செல்  ஃபோனில்  எதற்காகவோ  ரெக்கார்டு  செய்து  வைத்திருக்கிறான். இதனால்  போலீசின்  சந்தேகம்  நாயகி  மீது  திரும்புகிறது நாயகியின்  கணவன்  மூன்றாவது  மாடியிலிருந்து  தவறி  விழுந்து  இறந்தானா?  நாயகி  கணவனை  அடித்து  கீழே  தள்ளிக்கொலை  செய்தாரா? என்பதை   கோர்ட்  ரூம்  டிராமா  வாக  மீதி  திரைக்கதை  சொல்கிறது 


நாயகியாக  ஜெர்மன்  நடிகை  சாண்ட்ரா  ஹல்லர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  அவர்  நல்லவரா? கெட்டவரா?சராசரி  பெண்ணா? என்பதை  கடைசி  வரை  சஸ்பென்ஸாகவே  நகர்த்திக்கொண்டு  போனது  அருமை 


தமிழ்ப்படம்  போல  152  நிமிடங்கள்  படம் ஓடுகிறது. கோர்ட்  சீன்  காட்சிகளி;ல் சினிமாத்தனம்  இல்லாமல்   யதார்த்தமாய்  இருந்தது  சிறப்பு 


ஒளிப்பதிவு  சைமன்  அருமையாக  பணி  ஆற்றி  இருக்கிறார். 


ஆர்தர்  ஹராரி  என்பவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  ஜஸ்டின்  டிரையட்



சபாஷ்  டைரக்டர்


1  லீகல்  டிராமா  வில்   பொதுவாக  கோர்ட்  சீன்கள்  ஓவர்  ஆக்டிங்  அல்லது  ஓவர்  எமோஷனலாக  வக்கீல்கள்  வாதாடுவது  போல  இருக்கும்,இது  அப்படி  எல்லாம்  இல்லாமல் யதார்த்தமாக  , லைவாக  இருந்தது 


2   க்ளைமாக்ஸ்  காட்சியில்  அந்த சிறுவன்   நாய்க்கு  ஆஸ்பிரின்  மருந்து  கொடுத்து  டெஸ்ட்  செய்து  அதை  கோர்ட்டில்  வாக்கு மூலமாக  அளிக்கும்  காட்சி 


3    குற்றம்  சாட்டப்பட்ட  நாயகி , சாட்சி  ஆன  மகன்  ஆகிய  இருவரும்  ஒரே  வீட்டில்    வசிக்கக்கூடாது  என  கோர்ட்டில்  ஒரு  பெண்ணை  அனுப்பி  கேஸ்  முடியும்  வரை  அம்மா =- மகன்   கேஸ்  சம்பந்தமாக  எதுவும்  பேசிக்கொள்ளக்கூடாது  என  கண்காணிக்க  ஆர்டர்  போடுவது 


4  நாயகி  தன்  கணவர்  எழுதிய  27  பக்க  கான்செப்ட்டை  வைத்து  அதை  எடுத்தாண்டு  ஒரு 400  பக்க  மெகா  ஹிட்  நாவலை  உருவாக்கியது  குறித்து  கோர்ட்டில்  எழும்  வாத  விவாதங்கள்  


5    ஓப்பனிங்  சீனில்  நாயகியைப்பேட்டி  எடுக்க  வந்த  லேடி  பிரஸ்  ரிப்போர்ட்டரை  வைத்து  அரசாங்க  வக்கீல்  கேசை  நாயகிக்கு  எதிராக  திருப்பும்  சாமார்த்தியம் 


6  சிபிஐ  டைரி குறிப்பு  படத்தில் ஒரு  பொம்மையை  கீழே  போட்டு  அது  விழும்  நிலை  கண்டு  அது  தற்கொலையா? கொலையா  ?என  கண்டு  பிடிக்க  முயல்வது  போல  மூன்றாவது  மாடியில்  இருந்து  ஒரு  டம்மி  பொம்மையை  வீசி   டெமோ  காட்டும்  காட்சி 


ரசித்த  வசனங்கள் 


1   ஒரு   எழுத்தாளர்  தன்னோட எல்லா எழுத்துக்களையும் நிஜ  வாழ்வில்  அனுபவித்ததைத்தான்  எழுதனும்னு  அவசியம்  இல்லை


2  சட்டம்  என்பது  யாருக்கும்  நண்பன்  அல்ல, யாராவது   நண்பன்  ஆகனும்னு  நினைச்சாலும்  அதுவும்  முடியாது


3  ஒருத்தரோட  கண்ணைப்பார்க்காம  அவரோட  இண்ட்டென்சன்  என்ன?னு  நாம  முடிவு  பண்ண  முடியாது 


4  ஒருத்தரோட  கோபம்  அவரோட  உடல்  வலிமையை  அதிகரிக்க  வாய்ப்பிருக்கு 


5  தற்கொலை  முயற்சியில்  ஒருவர்  வெற்றி பெற்றாலும்,தோல்வி  அடைந்தாலும்  அது தற்கொலை  முயற்சி  என்று  தான்  சொல்லப்படுகிறது . இது  ஒரு  வினோதம்


6  ஒரு  பேஷண்ட்  என்ன  சொன்னாலும்  அதை  உண்மைனு  ஒரு   சைக்கலாஜிக்கல்  டாக்டர்  நம்பனும்னு  அவசியம்  இல்லை 


7  நீங்க  நாய்  மாதிரி  அழகா  இருக்கீங்க  மேடம்


 ஒருத்தரை  ஏதோ  ஒரு  விலங்கா  பார்க்காதவரை  நம்ப  முடியாது . எல்லாரும்  அவங்களுக்கு[பிடிச்ச  நபரை  ஏதோ  ஒரு  விலங்கோட , பறவையோட  கம்ப்பேர்  பண்ணிக்குவாங்க 


8  நீ  யாரைப்பார்த்து  சிரிச்சதே  இல்லையே?


 அதனாலதானே  என்னை  நீங்க  லவ்  பண்ணுனீங்க? உங்க  ஃபிரண்ட்ஸைப்பார்த்து  சிரிச்சிருந்தா  அதை  ஏத்துக்க  முடியுமா  உங்களால?


9  ஒரு  எழுத்தாளரால அவரோட  எண்ணத்தை  அவர்  எழுதும்  கதைல  வர்ற  கேரக்டர்  மூலமாவும்  சொல்லலாமே?


  சொல்லலாம், ஆனால்  எல்லா  கேரக்டர்களுமவர்  எண்ணத்தைபிரதிபலிக்கும்னு  வாதம்  பண்ண  முடியாது 


10  பணம்  நமக்கு  எல்லா  சந்தோஷத்தையும்  கொடுத்துடாதுனு  யாரோ  சொல்லி  இருக்காங்க, ஆனா  தெருவில்  நின்னு  அழுவதை  விட  இந்த  காருக்குள்  இருந்து  அழுவது  எனக்கு  பிடிச்சிருக்கு 


11  எப்பவுமே  நாம  முடிவெடுக்க  எந்த  வித  எவிடென்சும்  இல்லாதப்ப  நம்ம  மனசுதான்  முடிவெடுக்கும் 


12  ஒரு  ரைட்டர்  தன்  புருசனை  கொலை  பண்ணிட்டாங்க  என்று  சொல்வதை  விட  ஒரு  டீச்சர்  தற்கொலை பண்ணிட்டாங்க  என்று  சொல்வதில்  சுவராஸ்யம்  கம்மியா  இருக்குனு மீடியாக்கள்  நினைக்கலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியை  இண்டர்வ்யூ  எடுக்க  வந்த  பெண்ணிடம்  நாயகி  பேசும்போது  மேலே   மாடியில் இருக்கும்  கணவன்  சத்தமாக  இசை  கேட்டுக்கொண்டு  இருந்ததால்  இன்னொரு  நாள்  இண்ட்டர்வ்யூ  வெச்சுக்கலாம்னு  கிளம்பறாங்க.  பெட்ரொமாக்ஸ்  லைட்டே  தான்  வேணுமா  என்பது  போல  வீட்டுக்குள்ளேயே தான்  கேள்விகள்  கேட்கனுமா?வீட்டுக்கு  வெளில  வாக்  போய்க்கிட்டே  பேசி  இருக்கலாமே? கோர்ட்டில்  குறுக்கு  விசாரணை   பண்ணும்போதும்  யாரும்  இந்த  பாய்ண்ட்டை  மென்சன்  பண்ணவில்லையே?  


2  நாயகியின்  கணவன் பல  சமயங்களில்  நாயகியோடு  தனிமையில்  நடக்கும்  விவாத  உரையாடல்களை  ரெக்கார்வு  பண்ணி  இருக்கிறார். இது  எதற்கு? என்பதை  கோர்ட்டில்  யாருமே  கேள்வி  எழுப்பவில்லை . அப்போ  முன் கூட்டியே  திட்டமிட்டுத்தானே  அவர்  அதை  செய்திருக்க  வேண்டும்  என்ற  பாயிண்ட்டை  நாயகியின்  வக்கீல்  முன்  வைக்கவில்லையே? 


3  பொதுவாக  மனிதனை  விட  விலங்குகளுக்கு  மோப்ப  சக்தி  அதிகம். அந்த  சிறூவனின்  நாய்  அவனது  அப்பா  எடுத்த  வாந்தியை  வாந்தியில்  இருந்த  மாத்திரை , மருந்தை  நாய்  சாப்பிட்டது  என  ஸ்டேட்மெண்ட்  கொடுக்கிறான். வசதியான  வீட்டில்  வளரும்  நாய்  , வேளா  வேளைக்கு  நல்ல  உணவு  கிடைக்கும்  நாய்  எதற்கு   தெரு நாய்  போல்  அப்படி  சாப்பிட்டது ?  அது  நம்ப  முடியலை 


4  க்ளைமாக்சில்  கேசுக்கு  முக்கியமான  தீர்ப்பை  லைவாக  கோர்ட்டில்  காட்டாமல்  குறிப்பால்  உணர்த்துவது  ஏன் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆஸ்கார்  அவார்டு  உட்பட  பல  விருதுகளை  வென்ற படம்  திரைப்பட  விழாக்களில்  மட்டுமே  காண  முடிகிற  படம்  ஓடிடி  யில்  காண்பது  அபூர்வம் .  ரேட்டிங்  3.25 / 5 


Anatomy of a Fall
Theatrical release poster
FrenchAnatomie d'une chute
Directed byJustine Triet
Written by
Produced by
Starring
CinematographySimon Beaufils
Edited byLaurent Sénéchal
Production
companies
  • Les Films Pelléas
  • Les Films de Pierre
Distributed byLe Pacte[1]
Release dates
Running time
152 minutes[4]
CountryFrance[5]
Languages
Budget€6.2 million[8]
(US$6.7 million)
Box officeUS$34.8 million[9]

Wednesday, April 03, 2024

ஆடு ஜீவிதம் (2024)- மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சர்வைவல் டிராமா)

 


  2008ஆம்  ஆண்டு  மலையாளத்தில்  வெளி  வந்த  நாவலான  ஆடு  ஜீவிதம் அந்த  ஆண்டில்  அதிக  விற்பனை  ஆன  நாவலாக  பரபரப்பாகப்பேசப்பட்டது . உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  எழுதப்பட்ட  நாவல்  அது 80 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  இதுவரை  50  கோடி  மட்டுமே  வசூல்  ஆகி  உள்ளது


 தமிழ்  சினிமாவில்  கேரக்டர்  அல்லது  கெட்டப்க்காக தங்கள்  உடலை  வருத்தி  உருமாற்றிய  வல்லமை  கொண்டவர்கள்  மூவர் . 1  சேது  விக்ரம்  2  வாரணம்  ஆயிரம்  சூர்யா  3  அபூர்வ  சகோதரர்கள் கமல் . அந்த  வரிசையில்  மலையாள  நடிகர்  பிருத்விராஜ்  சுகுமாறன்  படத்துகாக 92  கிலோ  எடையுடன் ஒரு  கெட்டப்  பின்  உடல்  இளைத்து  31  கிலோ  குறைத்து 61 கிலோ  எடையுடன் ஒரு கெட்டப்பில்  தோன்றி  ரசிகர்களிடையே  வரவேற்புப்  பெற்றார்


இந்தப்படத்துக்காக  முதலில்  இயக்குநர் அணுகியது  சூர்யாவைத்தான். ஆனால்  கால்ஷீட்  பிரச்சனை  காரணமாக  அவர்  நடிக்க  முடியாமல்  போனது. 2015ல்  இருந்தே  இதை  எடுக்க  மிகவும்  சிரமப்பட்ட  இயக்குநர் 2020ல்  கோவிட்  பிரச்சனையால்  ஃபாரீனில்  மாட்டிக்கொண்டு  பின்  மீண்டு  வந்து  படம்  இயக்கினார், விமர்சன  ரீதியாக  மீடியாக்கள்  பாராட்டைப்பெற்றாலும்  கமர்ஷியலாக  இது  பிரம்மாண்ட  வெற்றியைப்பெறவில்லை . சுருக்கமாகச்சொன்னால்  கமல்  படம்  மாதிரி  பேரு  கிடைச்சுது , ஆனா  சோறு  கிடைக்கலை  (  விதி விலக்கு -  விக்ரம், சகலகலாவல்லவன், அபூர்வசகோதர்கள்  ETC)


    ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு  மிடில்  கிளாஸ்  வாழ்க்கை  வாழ்ந்து  வருபவன்.மனைவியுடன்  இல்வாழ்க்கை நடத்தி  வருபவன்  வெளிநாடு  போய்  வேலை  செய்து  அதிக  பொருள்  ஈட்டி  இங்கே  ஜாலியாக  செட்டில்  ஆகலாம்  என  நினைக்கிறான், இதனால்  தன்  சொந்த  வீட்டை  அடமானம்  வைத்து  ரூ 30,000   ஒரு  புரோக்கரிடம்  கட்டி  துபாய்  போகிறான்


 ஆனால்  அங்கே  அவனை  ரிசீவ்  பண்ண  உரிய  நபர்  வரவில்லை . இவராக ஒரு  துபாய்  ஷேக்கை  ஓனராக  நினைத்து   ஏமாறுகிறார். அந்த  ஷேக்  இவரையும், நண்பரையும்  ஒரு   பாலைவனத்துக்கு  அழைத்து  செல்கின்றார் . அங்கே  ஆடு  மேய்க்கும்  வேலை . ஏதோ  ஹெல்ப்பர்  வேலை    என  நினைத்து  வந்த  நாயகனுக்கு  இது  அதிர்ச்சி .அதனால்  அங்கே  இருந்து  எஸ்கேப்  ஆக  முயற்சி  செய்கிறார்  , முடியவில்லை 


 மிக  சிரமப்பட்டு  திட்டம்  போட்டு  அந்த  இடத்தை  விட்டு  நாயகன்  தப்பிக்கிறான். ஆனால்  பாலைவனத்தைக்கடப்பதற்குள்  பல  பிரச்சனைகளை , பாலைவனப்புயல் , பாம்பு , கழுகு , கானல்  நீர்  என  சந்தித்து  எப்படி  கரை  சேர்ந்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  உயிரைக்கொடுத்து  நடித்திருப்பவர்  பிருத்விராஜ் . ஆள்  தோல்  நிறம் , எடை  எல்லாம்  மாறிப்போய்  பரிதாபமாகத்தோற்றம்  அளிக்கிறார். சிறப்பான  நடிப்பு 


நாயகி  ஆக  அமலா  பால், அதிக  வாய்ப்பில்லை , வந்தவரை  ஓக்கே 

படத்தில்  நடித்த  அனைத்து  துணைக்கதாபாத்திரங்களும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


ஏ  ஆர்  ரஹ்மான்  இசை  பெரிதாக  சோபிக்கவில்லை . கொஞ்ச  நேரம்  அமைதியாகத்தான்  இரேம்ப்பா  என  பிஜிஎம்  டார்ச்சரால்  சொல்ல வைக்கிறார். இளையாராஜாதான்  மவுனம்  ஒரு  மொழி  என  உணர்ந்தவர் , நமக்கு  உணர்த்தியவர். இண்டர் நேஷனல்  மார்க்கெட்டிங்க்கிற்காக  இவரை  புக்  பண்ணி  இருப்பார்கள்  போல 


கே  எஸ்  சுனில்  தான்  ஒளிப்பதிவு.முழுக்க  முழுக்க  பாலைவனத்தில்  லைவ்  லொக்கே ஷனில்  படம்  பிடித்திருக்கிறார்கள் ,சவாலான  பணி  தான்

ஏ  ஸ்ரீதர்  தான்  எடிட்டிங்.கிட்டத்தட்ட  3  மணி  நேரம்  படம்  ஓடுகிறது .எப்போதான்  முடிப்பீங்க  ?என  சலிப்பை  ஏற்படுத்துகிறது . சர்வைவல்  டிராமா  எனில்  2  மணி  நேரம் கிரிஸ்ப்பாக  இருக்க  வேண்டும் 


ஒரிஜினல்  நாவல்  ஆசிரியர்  பென் யாமின்.திரைக்கதை  , இயக்கம்  பிளெஸ்ஸி


சபாஷ்  டைரக்டர்


1 கமர்ஷியலாக  போகாத  மிக  ரிஸ்க்  ஆன  கதையைப்படம்  எடுக்க  தயாரிப்பாளரை   ஓக்கே  சொல்ல  வைத்த  சாமார்த்தியம் 


2  பாலைவனம் மாதிரி  செட்டிங்ஸ்  எல்லாம்  போடாமல்  நிஜ  பாலைவனத்துக்கே  போய்  படம்  பிடித்தது


  ரசித்த  வசனங்கள் 


தமிழ்  டப்பிங்கில்  இருந்தாலும்  70% வசனங்கள்  அரபு  மொழிதான் . சப்  டைட்டில்  பல  இடங்களில்  காணவில்லை, ஆனால்  குத்து  மதிப்பாகப்புரியும்படிதான்  காட்சிகள்  அமைக்கப்பட்டுள்ளன. வசனமே  புரியாமல்  ரசித்த  வசனம்  எப்படிப்போட? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  எனக்கு  ஹிந்தி  தெரியாது  போடா, இங்க்லீஷூம்  தெரியாது  போடா  க்ரூப்பைச்சேர்ந்தவன்  ஆக  நாயகன்  இருக்கிறான், ஆனால்  என்ன  தைரியத்தில்  துபாய்  போக  ஆசைப்பட்டான்  என்பதில்  விளக்கம் இல்லை.அங்கே  போய்  மொழி  புரியாமல்  எப்படி  சமாளிப்போம்  என்ற  அறிவு  வேண்டாமா? இதனால்  இந்த  கேரக்டர்  மேல்  பரிதாபம்  வருவதற்குப்பதில்  எரிச்சல்  வருகிறது


2   ஃபாரீன்  போகிறோம்  என்றால் அங்கே  யாரை  சந்திக்க  வேண்டும்?  கம்பெனி  பெயர்  என்ன?  புரோக்கர்  பேரு  என்ன ?  அங்கே  தெரிந்த  நபர்கள் வேறு  யாராவது  இருந்தால்  அவர்கள்  விபரம்,  ஃபோன்  நெம்பர்  எதுவுமே  தெரியாமல் என்  புருசனும்   கச்சேரிக்குப்போனான்  கதையாக  நாயகன்  போய்  மாட்டிக்கொள்வது  அபத்தம் 


3   போனது  போயாச்சு ,  வேலைக்கு  சேர்ந்த  முதல்  நாளிலேயே  எந்த  வேலையும்  செய்யாமல் நான்  ஊருக்குப்போறேன் என  அடம்  பிடிப்பது  நமக்கே  கடுப்பை  வரவைக்குது.அட்லீஸ்ட்  10  நாட்களாவது  வேலை  செய்வதாக  காட்டி  விட்டு  அடுத்த  நாள்  இந்தக்காட்சியை  வைத்திருக்கலாம் 


4   நாயகன்  தப்பிக்க  முடிவெடுத்த  பின்  50  ஆடுகள்  மீதும்  மிகுந்த  பாசம்  கொண்டவர்  போல  நான்  ஊருக்குப்போறேன்  எனப்புலம்புவது , பிரியா  விடை  பெறுவது  ஒட்டவில்லை 


5    நாயகன்  நாயகி  உடன்  சந்தோஷமாக  இருந்த  தருணங்கள்  படம்  ஆரம்பித்து  முதல்  அரை  மணி  நேரம்  ஒரே யடியாகக்காட்டி  இருக்க  வேண்டும்.அப்படி  இல்லாமல்  10  நிமிசம்  பாலைவனக்காட்சி , 10 நிமிசம்  ஃபிளாஸ்பேக்  காட்சி  என  இயக்குநர்  பேலன்ஸ்  செய்த  ஐடியா  ஒர்க் அவுட் ஆகவில்லை 


6 இடைவேளைக்குப்பின்  பாலைவனத்தில்  தப்பிக்கும்  காட்சி மிக  நீளம்.  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்க  வேண்டும், சீக்கிரம்  முடிங்கப்பா  என  புலம்ப  வைத்து  விட்டார்கள் 


7  நாயகனின்  சொந்த பந்தம்  யாரும்  அவரைத்தேடும்  முயற்சியில்  ஈடுபட மாட்டார்களா?  அட்லீஸ்ட்  தூதரகத்தில்  போய்  புகாராவாது  கொடுப்பது போல  காட்சி  வைத்திருக்க  வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபாரீன்  மோகம்  கொண்டு  இருக்கும்  ஆண்கள் , ஃபாரீன்  மாப்ளையைத்தான்  கட்டிக்குவேன்  என  அடம்  பிடிக்கும்  பெண்கள்  பார்க்க  வேண்டிய  படம் . பொறுமை  மிக  மிக  அவசியம். ரேட்டிங்  2.25 / 5 



ஆடுஜீவிதம்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்கம்ப்ளெஸி
மூலம் திரைக்கதைப்ளெஸி
அடிப்படையில்
பென்யாமினின் ஆடுஜீவிதம் , நஜீப்பின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது
உற்பத்தி
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுசுனில் கே.எஸ்
திருத்தியவர்ஏ. ஸ்ரீகர் பிரசாத்
இசைஏஆர் ரஹ்மான்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • விஷுவல் ரொமான்ஸ் பட தயாரிப்பாளர்கள்
  • ஜெட் மீடியா தயாரிப்பு
  • அல்டா குளோபல் மீடியா
மூலம் விநியோகிக்கப்பட்டதுபிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் (மலையாளம்)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் (தமிழ்)
மைத்ரி மூவி மேக்கர்ஸ் (தெலுங்கு )
ஹோம்பலே பிலிம்ஸ் (கன்னடம்)
ஏஏ பிலிம்ஸ் (ஹிந்தி)
வெளிவரும் தேதி
  • 28 மார்ச் 2024
நேரம் இயங்கும்
173 நிமிடங்கள் [1]
நாடுகள்
  • இந்தியா
  • அமெரிக்கா
மொழி
  • மலையாளம்
பட்ஜெட் 80 கோடி [2]
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்மதிப்பிடப்பட்ட ₹50 கோடி [3]

Tuesday, April 02, 2024

ஜோஷ்வா-இமை போல் காக்க (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர் ) @அமேசான் பிரைம்

      


  இளைய  தளபதி  விஜய்  நடிக்க யோஹன்  அத்தியாயம்  1  படத்தின்  கதை  தான்  இது  என்று  சொல்லப்பட்டாலும்  இயக்குநர்  கவுதம்  இதை  மறுத்திருக்கிறார்.இப்படத்துக்கு  முதலில்  சூர்யாவைத்தான்  அணுகினார்கள்  என்றாலும்  சூர்யா  ஆல்ரெடி  தான்  நடித்த  காப்பான்  (2019)  படத்தின்  கதை  சாயல்  தெரிகிறது  என  மறுத்து  விட்டாராம்  .(  இது  ல  காமெடி என்னான்னா  1991  ல்  ரிலீஸ்  ஆன  ஏவி எம்மின்  மாநகரக்காவல் படத்தின்  பட்டி  டிங்கரிங்  கதை  தான்  காப்பான்  என்பது  சூர்யாவுக்குத்தெரியாமல்  போனதே ) 


  என்னை  அறிந்தால் (2015)  படத்தின்  வில்லன்  அருண்  விஜய் தான்  இக்கதையில் நடிப்பதாக  இருந்தது.பின்   அதுவும்  செட்  ஆகவில்லை . 2019 ஆம் ஆண்டு  பூஜை  போடப்பட்டு  தொடங்கப்பட்ட  படம்  கொரோனா  காரணமாக  இரண்டு  வருடங்கள்  தாமதம்  ஆகி  2022 ல்   படப்பிடிப்பு  நடந்து  இப்போதுதான்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது . நடுநிசி  நாய்கள்  தான்    கவுதம்  கேரியரில்  டப்பாப்படம். விண்ணைத்தாண்டி வருவாயா  தான்  அவரது  ஹை  குவாலிட்டி  படம்  , இப்படம்  எந்த  ரேஞ்ச்  என்பதைப்பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஃபாரீனில்  படித்து  வக்கீலாக  இருப்பவர் . நாயகன்  ஒரு  காண்ட்ராக்ட்  கில்லர் . அதாவது  வாடகைக்கொலையாளி . இருவரும்  எதேச்சையாக  சந்தித்து  திடீர்க்காதலில்  விழுகிறார்கள் .   நாயகன்  தன்னைப்பற்றிய  விபரம்  சொன்னதும்  நாயகி  பிரேக்கப்  செய்து  கொள்கிறார்


  ஃபாரீன்  போன  நாயகி அங்கே  ஒரு  பெரிய  கொலைக்கேசில் சாட்சி  ஆகி  விடுகிறார் .நாயகியைக்கொல்ல  பல  கொலைகாரக்கும்பல்கள்  ரெடி  ஆகின்றன.


 நாயகன்   காண்ட்ராக்ட்  கில்லர்  வேலையை  விட்டு  விட்டு  இப்போது  செக்யூரிட்டி  கார்டாகப்பணி  புரிகிறான். நாயகிக்கே  செக்யூரிட்டி  ஆக  வேலை  பார்க்கும்  வாய்ப்பு   நாயகனுக்குக்கிடைக்கிறது . நாயகன்  நாயகியைக்காப்பாறினானா?  காதலைப்புதுப்பித்தானா? என்பது  மீதி  திரைக்கதை 

நாயகன்  அக  வருண்.நல்ல  ஹைட் , ஜிம்  பாடி  ஆனால்  முகத்தில்  உணர்சிகள்  மிஸ்சிங். . விஜய்  சூர்யா  அருண்  விஜய்  ஆகியோர்  செய்ய  வேண்டிய  ரோலை  இவர்  செய்கிறாரே  என  ஆச்சரியப்படுவதா?அவங்க  எல்ல்லாம்  தப்பிச்சுட்டாங்க , இவர்  மாட்டிக்கிட்டாரே  என  பரிதாபப்படுவதா? 


 நாயகி  ஆக  ராஹெபி . பார்க்க  ஜிலேபி  மாதிரி  இருக்கிறார். ஆனால் நடிப்பு  பெரிதாக  மனம்  கவரவில்லை 


நாயகனின்  நண்பன்  ஆக  கிருஷ்ணா . நல்ல  வாய்ப்பு.ஆனால்  அவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  குழப்பம், ட்விஸ்ட்க்காக  சொதப்பி  வி,ட்டார்கள்  , ஆனால்  கிருஷ்ணா  நடிப்பு  குட் 


 மன்சூர்  அலிகான்  டான்  கேரக்டரில்  வருகிறார். வழக்கமாக  பரட்டைத்தலையில்  கேவலமான  கெட்டப்பில்  வரும்  இவர்  இதில்  டீசண்ட்  ஆக  வருவது  வியப்பு \


நாயகியின்  அப்பாவாக  கிட்டி , கமலின்  சத்யா  படத்தில்  இருந்த  கம்பீர  நடிப்பு  மிஸ்சிங்


திவ்யதர்ஷினி  ஒரு  முக்கிய  ரோலில்  வருகிறார். நாயகியை  விட  இவர்  அழகாக  இருக்கிறார். 


விசித்ரா,லிசி  ஆண்ட்டனி  சின்ன  ரோல்களில்  வருகிறார்கள் 


அந்தோணீயின்  எடிட்டிங்கில்  படம்  140  நிமிடங்கள்  ஓடுகின்றன. மெயின்  கதையில்  கிருஷ்ணாவின் ஃபிளாஸ்பேக்  கதை  சரியாக  ஃபிட்  ஆகவில்லை 


கார்த்திக்கின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  கதையுடன்  ஒட்டாமல்  தனித்து  நிற்பது  பலவீனம் எஸ்  ஆர்  கதிர்  ஒளிப்பதிவு  குட் . நாயகியை க்ளோசப்  காட்சிகளில்  கூட  அழகாகக்காட்ட  முடியவில்லை 


திரைகக்தை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கவுதம்  வாசுதேவ்  மேனன் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகனின்  சிகிச்சைக்காக  டாக்டர்  ஒரு  அசிஸ்டெண்ட்டை அழைத்து வர  நாயகன்  அந்த  அசிஸ்டெண்ட்டிடம்  டாக்டர்  பேரு  என்ன  எனக்கேட்டு  அவன்  விழித்ததும்  அவன்  வில்லனின்  கையாள் என்பதை  உணர்ந்து  ஆக்சன்  சீக்வன்ஸ்  ஆரம்பிக்கும்  காட்சி  செம 


2  மன்சூரின்  அடியாள்  கிருஷ்ணா  20  அடியாட்களுடன்  ஹோட்டலுக்கு  வர  நாயகன் - நாயகி  சேசிங்  சீன்  குட் 


3  நாயகன்  மற்றும்  மன்சூரின்  அடியாள்  கிருஷ்ணா   இருவருக்குமிடையேயான    ஃபிளாஷ்பேக்  ட்விஸ்ட்  குட்   


4  கிருஷ்ணா  வைத்து  சொல்லப்படும்  இரண்டாவது  ட்விஸ்ட்  குட் 


5  கிருஷ்ணாவின்  ஃபோனை  நாயகன்  காரில்  வேண்டுமென்றே  விட்டு  வர  அதை  வைத்து  வில்லி  சாந்தினி  அவர்களை  ட்ரேஸ்  அவுட்  செய்யும்  காட்சி 


6  நம்ப  முடியவில்லை என்றாலும்  எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  நான்  உன்  ஜோஷ்வா , எங்கு  சென்றாலும்  கூட்டிச்செல்வாயா? 


2  ஜோசுவா , சிறு  பேராசை 


3  தப்பாசு  நேரம்... யார்  அந்தத்திருடன் 


4  அச்சத்தில்  மிச்சம்  கொள்வேனா? 


5  காக்க  காக்க  கண்  போல்  காக்க 


6  சிங்கிளா  சிங்கம்  வருது  , ஒதுங்கு  ஒதுங்குடா 


  ரசித்த  வசனங்கள் 


1  அதிகமாப்பேச  வேண்டாம், அமைதியா  இரு  என்பதைத்தான்  நாசூக்கா  கீப்  கொயட்னு  சொல்லி  இருக்காங்க 


2  பயமா  இருக்கா?


 நீ  வர்றேன்னு  தெரிஞ்ச பிறகு  இல்லை 


3  ஒரு  வாரம்  நீ  அசையக்கூட  கூடாதுனு  டாக்டர்  சொல்லிட்டார்


 அப்டியா? அப்போ  உன்னைக்கொலை  செய்ய  வர்றவங்க  கிட்டே  ஒரு  வாரம்  கழிச்சு  வரச்சொல்லிடலாமா? 


4  உன்  இங்க்லீஷ்  புரியல , ஆனா  உன்  ஆதங்கம்  புரியுது 


5  எப்பவுமே  நம்ம  கூட  இருக்கறவங்க  தான் ( நமக்கு  துரோகம்  செய்வாங்க )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்னைப்பற்றி  நாயகியிடம்  விவரிக்கும்போது  சொல்லும்  விஷயம்  பரிதாபத்தை ஏற்படுத்துவது  போல  இருந்தாலும்  சொன்ன  விதம் பிட்  பிட்டாக  சின்ன  வார்த்தையாக   ஸ்டைலாகப்பேசுவது  எரிச்சல்  மூட்டுவதாக  இருக்கிறது.அதில்கதாபாத்திரம்  தெரியவில்லை ,இயக்குநர்  டச்  தான்  அதீதமாய்த்தெரிகிறது 


2 நாயகி  எதுவும்  விளக்கம்  கேட்கலை .நாயகன்  தானா  முன் வந்து  கிறுக்கன்  மாதிரி  தான்  ஒரு  கொலைகாரன், பலரைக்கொன்றிருக்கிறேன்னு  சொல்லிட்டு  அதெல்லாம்  மறந்துடு , இனி  அப்டி  நடக்க  மாட்டேன்  என  சொல்வது   மடத்தனம் 

3  ஏர்போர்ட்  வாசலில் நாயகன்  2  நிமிடங்களில்  18  கொலை  பண்ணிட்டு  34  பேரை  அடித்து  வீழ்த்துகிறான், இது கின்னஸ்  ரெக்கார்டு. ஆனா  போலீஸ்  வர்லை.இது  லிம்கா   ரெக்கார்டு 


4 ஒரு  இடைவெளிக்குப்பின்  நாயகன் - நாயகி இருவரும்  சந்திக்கும்  சீனில்  உயிரோட்டமான  காட்சி  இல்லை . ஓவர்  அலட்டலாக  செயற்கையாக  இருவரும்  பேசிக்கொள்கிறார்கள், ஒட்டவே  இல்லை 


5 நாயகனுக்கு  வயிற்றில்  புல்லட்  பட்டிருக்கு . சீரியஸ்  கண்டிஷன். ஒண்னா  அவன்  ஹாஸ்பிடலுக்குப்போய்  ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கனும், இல்லைன்னா  டாக்டரை  அவன்  இருக்கும்  இடத்துக்கு வர  வெச்சு  ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கனும், ரெண்டும்  செய்யாம  பெரிய  பருப்பு  மாதிரி  நாயகியைக்கார்ல  கூட்டிட்டுபோய்  மயக்கம்  ஆகிறான், சும்மா  அனுதாபம்  சம்பாதிக்கவா?  பிராக்டிகலா யோசிக்க  மாட்டானா? 

6  உயிருக்கு  ஆபத்தான  நிலைல  நாயகன்  இருக்கும்போது நாயகி  அவனைக்காப்ப்பாற்ற  தானே  காரை  ஓட்டிட்டுப்போறா. அப்போ  வில்லன்கள்  துரத்தறாங்க .அப்போ  ஒண்ணா  அவ  காரை  வேகமா  ஓட்டி  தப்பிக்கனும்,அல்லது  வில்ல்ன்களைத்தாக்க  முயற்சி  பண்ணனும், ரெண்டும்  இல்லாம  நாயகனை  எந்திரு  அஞ்சலி  எந்திரு  அஞ்சலி  கணக்கா  எழுப்பிட்டு  இருக்கா , அவனே  சீரியசா  இருக்கான், எந்திரிச்சாலும்  ஃபைட்  போடவா  போறான்? 


7  நாயகனைத்தாக்க  ஒரு  கும்பல் வருது . நாயகனிடம்  துப்பாக்கி  இருக்கு . நாலு  பேரை  ஷூட்  பண்ணினா  மீதி ஆட்கள்  ஓடி  இருப்பாங்க .நாயகன்   ஃபைட்  சீக்வன்ஸ்  வரனும்  என  துப்பாக்கியை  நாயகி கைல  கொடுத்து  தேவைப்பட்டா  ஷூட்  பண்ணு  என  ஒரு  ரூமில்  நாயகியை  அடைத்து  விட்டு  இவன்  ஃபைட்  போட்டு  டைம்  வேஸ்ட்  பண்ணிட்டு  இருக்கான்.அதுக்குப்பதிலா  முடிஞ்ச  வரை  10  பேரை  ஷூட்  பண்ணிட்டா  மீதி  ஆட்களோட  ஃபைட் போட்டு இருக்கலாம் 


8  ஆறு  அடியாட்கள்  நாயகியைப்பிடிச்சு    எங்கேயோ  கூட்டிட்டுப்போறாங்க.  நாயகன்  இல்லை .அப்பவே  நாயகியைப்போட்டுத்தள்ளி  இருக்கலாம், எல்லார்  கைலயும் , கத்தி , கடப்பாறை  ஆயுதம்  எல்லாம்  இருக்கு , ஏன்  கொல்லலை ? 


9  மன்சூர்  அலிகான்  முன்  நாயகி  மாட்டிக்கிட்டா . டிரைவர்  சொல்றான். இளைக்கொன்னு  வீடியோஎடுத்துஅனுப்பினா  6  கோடி  ரூபா  பேமண்ட்  கிடைக்கும்கறான். டக்னு  கொல்லாம   அவரு  லூஸ்  மாதிரி  டயலாக் பேசிட்டு  இருக்காரு . ஹீரோ  வர்ற  வரை  டைம்  வேஸ்ட்  பண்ணனும்னு  ஆர்டர் போல 


10 நாயகன் - நாயகி  இருவரும்  பல  ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள் . சாப்பிடும்போது  எந்த  வித  செக்கிங்கும்  இல்லை .வில்லன்  க்ரூப்20 கோடி ரூபா  விலை  பேசி  அடியாட்களை  அனு[ப்பி கொல்லச்சொன்னதுக்குப்பதிலா  ஏதோ  ஒரு  ஹோட்டல் சர்வருக்கு  ஒரு   கோடி  ரூபா  குடுத்து  சாப்பாட்ல விஷம்  கலக்க  வெச்சு  ஈசியா  கொன்னிருக்கலாம், ஐடியா  இல்லாத  பசங்க 


11  ஹோட்டலில்    நடக்கும்    ஃபைட்  சீக்வன்சில்  வடச்சட்டில  ( வாணலி)  சுடுதண்ணீர்  இருக்கு , நாயகன்  அதை  வெறும்  கைகளால்  எடுத்து  அடியாட்கள்  மேல்  ஊற்ற  அவங்க  அலறுகிறார்கள் .இவர்  மேல் தெறிக்காதா?கொதிக்கும்  வாணலியை  வெறும்  கைகளால்  தூக்குகிறாரே?இவர்  என்ன  இரும்புக்கை  மாயாவியா?


12  கிருஷ்ணா  வசனமா  பேசும்போது  அவரு  தங்கையை ஒருத்தன்  கடல்ல  தூக்கிப்போட்டுட்டான்  கறாரு, ஆனா விஷூவலா  நமக்குக்காட்டும்போது  அது  ஆறு 


13  நாயகியிடம்  துப்பாக்கியைக்கொடுத்து  விட்டு  நாயகன்  கிருஷ்ணாவுடன்  போடும்  சோலோ  ஃபைட்  சினிமாத்தனம் 


14  க்ளைமாக்சில்  மெயின்  வில்லன்  சைடு  வில்லனிடம்  நாயகி  ஃபோட்டோவைக்காட்டி  இவளைத்தான்  கொல்லனும்கறான்.அவன்  அவனோட  அடியாளுங்க கிட்டே  அந்த  ஃபோனில்  இருக்கும்  ஃபோட்டோவைக்காட்டுகிறான், அதுக்குப்பதிலாக  எல்லார்  ஃபோன்  வாட்சப்க்கும்  அதை  ஃபார்வார்ட்  பண்ணி  இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான் , ஆனால்  லிப்லாக்  சீன்  உண்டு . இப்பவெல்லாம்  லிப் லாக்  கூட  யூ  ஆகி  விட்டது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கவுதம்  ரசிகர்களுக்கு  மட்டும்  உவப்பான  படம் . பொது  ரசிகர்களுக்கு  அவ்வளவாகப்பிடிக்காது . ரேட்டிங்  2.25 / 5


Joshua: Imai Pol Kaakha
Poster
Directed byGautham Vasudev Menon
Written byGautham Vasudev Menon
Produced byIshari K. Ganesh
StarringVarun
Krishna
Raahei
CinematographyS. R. Kathir
Edited byAnthony
Music byKarthik
Production
company
Vels Film International
Release date
  • 1 March 2024
Running time
140 minutes
CountryIndia
LanguageTamil