Thursday, March 24, 2011

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி


ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) 


ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

(அது ஹோம் கேபினேட்  இல்லை.. பங்களா கேபினேட்)

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

(நல்ல வேளை அண்ணா இப்போ இல்ல.. இருந்தா கலைஞர் அண்ணா என் கனவுல அதை சொன்னார், இதை சொன்னார்னு பீலா விட முடியாம போய் இருக்கும்)


42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
(அப்படி புதைத்துவிட்டுத்தான் வதைத்துகொண்டு இருக்காங்களா?)

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

(உட்காரவே முடியலைன்னாலும் சிம்மாசனத்தை மட்டும் விட மாட்டேங்கறாரே... )


1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

 (ஆஹா.. நல்லதொரு குடும்பம்.. பல்கலை கலகம் இல்லா கழகம்)


இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

 (எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. ஆனால் மன்னரின் வாரிசுகள் எல்லோரும்னு திருத்திக்கோணும் போல... )_


கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். 

( தந்தை மகனுக்காற்றும் உதவி..?)

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

(ஐம்பெருங்காப்பியங்கள் மாதிரி அவ்வளவு சீக்கிரம் இவங்களை அழிக்கவே முடியாது போல இருக்கே..?)


குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள். 

 ( தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி ....)


ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.

( ராசாத்தி உங்களை நம்பி  இந்த கோதைப்பொண்ணு இருக்குதுங்கோ.. ஒரு வார்த்தை சொல்லீட்டாக்கா , மினிஸ்டர் போஸ்ட் கிடைக்குமுங்கோ..)


ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.

( போயஸ்க்கு ஒரு சசிகலா... கோபாலபுரத்துக்கு ஒரு ராஜாத்தி ...?)
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.

(ஹூம்.. ஒரு செல்வியோட அக்குறும்பையே தமிழ்நாடு தாங்கலை... இதுல இன்னொரு செல்வியா? )

கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

( சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் ,. முடிவே இல்லாதது...)

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

(இளைஞன் படு டப்பா ஆகியும் கூட இன்னும் கலைஞர் டி வி யில் வெற்றிகரமா ஓடிட்டிருக்கறதா சொல்றாங்களே.. அதுதான்யா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு)
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.

 ( சொல்ல மறந்த சோகக்கதை..?)

பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

(வாலி, வைரமுத்து மாதிரி ஜால்ரா அடிக்க யாராலும் முடியலையே... )


தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!

(சிங்கம் ஒன்று புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்.. நமக்கு கெட்ட காலம்.. )


டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. 

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

( ஜெயில் பாட்டு ஓ வந்ததென்ன கிழ மானே  சுச்சூச்சுசூ...அதைக்கேட்டு பெயில் தந்ததென்ன ....)


இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

 (ராடியா ராடியா நீராராடியா......சகுனி போல் வளரும் ராடியா....உள்ளே தள்ள சி பி ஐ இல்லையா...?)

 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

(நான் அடைந்ததிலேயே மிகச்சிறந்த அவமானம் என் மகன் தான்...கலைஞர் )


 மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

(ஃபிரீயா விடு ஃபிரீயா விடு மாமூ.. நேர்மைக்கு இல்லை கேரண்டி... )

 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

(ஒரு தாதா தாத்தாவை வென்ற கதை...? )


 தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

(கொலை கொலையா தந்திரிக்கா,, கோர்ட்டை கோர்ட்டை சுத்திவா...)


 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

(உன் குத்தமா? என் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல...)


 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

(கொடூரக்குற்றங்கள்....அந்தரத்தில் நிற்கும் நீதி..? )


 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

( காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. )



  சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

( வேர் ஈஸ் த பார்ட்டி.. அட உங்க வீட்ல பார்ட்டி... )


கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

(ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா? )


 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

 யாருக்கு ஜாமீன்?யாருக்கு பெயில்? யாருக்கும் புரியல...

டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. 

( வந்தாள் எழிலரசியே.. இனி என்றும் அவர் ஆட்சியே... )


ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். 

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

( தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி.. கேப்பமாரி...)

வை கோ - ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு.

கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்! 



1. ''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.


ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.


'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

அண்ணே.. முதல்ல பேச்சு வார்த்தைன்னா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கனும்.. முதல் கட்ட பேச்சு வார்த்தை, 2வது கட்ட பேச்சு வார்த்தை.. இதெல்லாம் எதுக்கு..பேரம் பேச இதென்னா மாட்டுச்சந்தையா?
2. ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!


அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். 

அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை.

ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.


சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும்  மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....


3. ''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 


''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!


48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. 

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 

'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

இப்படி சொல்ற நீங்க.. இதே ஜெ உங்களுக்கு 20 சீட் குடுத்திருந்தா அம்மான்னா சும்மா இல்ல... ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொல்லி இருப்பீங்க.. மனுஷனோட நாக்கு இருக்கே அது நரம்பில்லாதது.. எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசும்....


4. ''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 


''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


அப்படி சொல்ல முடியாது.. தி மு க வின் நிரந்தர ஓட்டு வங்கி 32%, அதிமுகவின் நிரந்தர ஓட்டு வங்கி 29 % ... மீதி இருக்கற எல்லா எதிர்க்கட்சியும் ஒண்ணு சேர்ந்து ஓட்டே போடாத, போடப்பிடிக்காத அனைவரும் ஒன்று சேர்ந்தா மாற்றம் நிகழும்...

5. ''தனியாக நிற்பது..?'' 


''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

அதுவும் இல்லாம கைக்காசு வீணா செலவு தான் ஆகும்.. அதையும் சொல்லுங்க.. இதுல என்ன ஒளிவு மறைவு.?
6. ''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.


ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது...

7. ''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

இங்கே தான் கலைஞர் தப்பு பண்ணீட்டார்.. லட்சங்களை காட்டாம கோடியை காட்டி இருந்தா எல்லாரும் புற்றீசல் மாதிரி அங்கே போய் இருப்பாங்க.. உங்க கட்சி ஆளுங்களை குறைச்சு மதிப்பிட்டுட்டார் கலைஞர்....


8. ''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 


''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? அம்மாவுக்கு எதிராத்தான் போடுவாங்க.. அது அய்யாவுக்குத்தான் போகும்.. கலைஞருக்கு செம லாபம்...
9. ''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். 

ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

எனக்கென்னவோ நீங்க அடுத்த எலக்‌ஷனுக்கு அய்யா கூடவே சேர்ந்து எனது ஒரே தலைவன் கலைஞர் தான்னு வீர முழக்கம் இடுவீங்களோன்னு டவுட்டா இருக்கு...


10. '' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

சீட் குடுக்க முடியலைன்னா கலைஞர் இதயத்தில் இடம் உண்டுன்னு டகால்டி அடிப்பாரே.. அந்த மாதிரி இது அம்மா டெக்னிக்....


11. ''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?'' 

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''

நீங்க இருப்பீங்க... கட்சி இருக்குமா? # டவுட்டு

Wednesday, March 23, 2011

வீட்டுக்காவலில் வைக்கபட்ட ஜெயலலிதா.... அதிமுக அதிர்ச்சி


http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/03/subramaniam-swamy.jpg?w=257&h=300 

இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...


 ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்.......


1. ''அ.தி.மு.க. வேட்பாளர் லிஸ்ட் முதலில் வெளியிட்டது எனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்லியதில் இருந்தே, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற பரிதாப நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்! இரண்டாவது லிஸ்ட் இப்போது வெளி வந்து இருக்கிறது. இதாவது அவருக்குத் தெரியுமா, என்பது போகப் போகத்தான் நமக்குத் தெரியும்.

இதென்னங்க பெரிய பிரமாதம், ஏப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க..அவர் வந்து என்னை சந்தித்ததே எனக்கு நினைவில் இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடப்போறரா ?இல்லையா?ன்னு பாருங்க...
 http://thatstamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg

2. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜெயலலிதா பக்கம் வெற்றி என்கிற நிலை இருந்தது. இப்போது மாறி வருகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. 'மன்னார்குடி  கும்பல் பிடியில்... நவ துஷ்டக் கிரகங்களின் பிடியில்... ராகு கேது பிடியில் ஜெயலலிதா சிக்கிக்கொண்டு தவிக்கிறாரோ?' என்று சந்தேகப்படும் அளவுக்கு, அடுத்தடுத்த குழப்பங்களை செய்து வருகிறார்.

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்..  அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.

3. மெஜாரிட்டியான ஸீட்டுகளைப் பிடித்து, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிவைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் ராமதாஸைக் கூட்டணியைவிட்டு விரட்டினார். இப்போது வைகோவையும் அனுப்பிவிட்டார். விஜயகாந்த்தையும் அலைக்கழித்து விரட்டப் பார்த்தார். இப்படித் தப்பும் தவறுமாக ஜெயலலிதா அரசியலில் முடிவெடுப்பதாக வெளியில் பிரகடனப்படுத்தி, அவரது இமேஜை சீர் குலைக்கும்விதமாக செயல்படுகிறது அந்தக் கூட்டம்.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா அம்மா இமேஜ் டேமேஜ்தான் ஆகும்.
ராம்தாஸ் புற்றுநோய் மாதிரி.. விரட்டுனதே நல்லது...கேப்டன் இப்போ அம்மா கூட இருக்கறது நல்லதுதான்..  

http://thatstamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg

4. அ.தி.மு.க-வில் எந்தக் கட்சிகளை சேர்க்க வேண்டும்? யாரை கழட்டிவிட வேண்டும்? ஜெயலலிதா யாருடன் போனில் பேச வேண்டும்? யாரை நேரில் சந்திக்க வேண்டும்? இன்றைக்கு ஜெயலலிதா என்ன சேலை கட்ட வேண்டும்? என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ணுவது சசிகலாதான்!'' 

 மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...


5. , ''சசிகலா சொல்வதைச் செய்யும் ரோபோ பொம்மைதான் ஜெயலலிதா. சுயமாக அவரால் எதையும் செய்ய முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி இனி ஜெயலலிதா எங்கே பேசப்போகிறார்? பொறுப்பான எதிர்க்கட்சி என்கிற வகையில், முதலில் ஜெயலலிதா என்னுடன் ஆலோசனை செய்து இருக்கலாம். ஆனால், செய்தாரா? நானும்கூட, 'சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும் வரை பேசப் போவது இல்லை' என்று முடிவு எடுத்து இருக்கி​றேன். அதனால்தான், நானும் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ளவே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது!'' 

 அம்மா ஒரு கண்ணாடி மாதிரி.. யார் வந்து மோதுனாலும் விரிசல் விழத்தான் செய்யும்...


6. ''வைகோ இருந்தால், தேர்தலுக்குப் பிறகு காங்கிர​ஸுடன் கூட்டணி சேர முடியாதே? அதனால்தான், கழட்டிவிட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, புதிய கூட்டணி ஏற்படப்போகிறது. எம்.எல்.ஏ-க்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... முதல்வர் பதவியில் அமர மாட்​டார்கள். அமரப்போவது யார் என்கிறீர்களா? காங்​கிரஸ்! அதற்காகத்தான் சசிகலா மறைமுகமாக அரசியல்​ரீதியாக காய் நகர்த்துகிறார்!''

இதென்ன புதுக்கதை?காங்கிரஸ்க்கு டெபாசிட்டே கிடைக்காம கேவலப்படப்போகுது....
 http://img.dinamalar.com/data/uploads/WR_316760.jpeg

'7. 'சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது முடிவானதே லண்டனில்! கடந்த சில நாட்களாக டெல்லியை சேர்ந்த முக்கிய அரசியல் வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார். அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரை அணுகி, தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன்!'' 

 பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே...



8. ''ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பிவிடுவார்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும். அதன் மூலம் வரும் பலாபலன்களை நிர்வகிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். மிடாஸ் மதுபான உற்பத்தி கம்பெனியானது சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுவது. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஐந்து வருட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது என்று கேட்டால், மயக்கமே போட்டுவிடுவீர்கள். அந்த அளவுக்கு தி.மு.க-வுடன் தொழில் முறைத் தொடர்புகள் உண்டு. இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடந்தது உண்மை. இதைப்போலவே, தேர்தலுக்குப் பிறகும் நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!''


விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல....

செய்யும் ஊழலில் 25 % மக்களுக்கு.. உங்கள் வாக்கு..எங்களுக்கே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQSZCnKTKLcApdb8J-a8I52obAnmKsKt36qF0B5NZJZ_a6h1Qh08Zp3u_a71OYzEQGYU2yjbJn8_14vjnKY6mZXjORl3ua_l7VUtpHGwuYUwoabkiToFgragkS__lK7Q4tP0ur7EjMXbM/s1600/PM.JPG

1. இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய தலைவர் முகமதுசுலைமான் பேச்சு: எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது, மற்ற கட்சிகளின் சின்னத்திலேயே நிற்க வைக்கின்றனர். இதில், எங்களுக்கு உடன்பாடில்லை; அதனால், சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கிறோம்.

தம்பி டீ இன்னும் வர்லை.. ஹா ஹா என்னது? தனியா நிக்கறீங்களா? ஹய்யோ ஹய்யோ.. நீங்க ஒருத்தர் மட்டும் தனியா நின்னா பயமா இருக்காது?

------------------------------------------

2. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் சேதுராமன்: தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவது போல எந்த கணக்கும் இன்றியும் பணியாற்றினால் தேவல... ஏன்னா கணக்குப்பார்த்து வேலை செஞ்சுதான் தமிழன் நாசமா போயிட்டு இருக்கான்...

-------------------------------------------------

3. மாவட்டச் செயலர்களிடம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மாவட்டச் செயலர்கள் என்ன முடிவை எடுக்கச் சொன்னாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எதைச் செய்தாலும் நாம் சரியாகச் செய்ய வேண்டும். ஒரு நாள் நிதானமாக யோசித்துவிட்டு, முடிவு எடுக்கலாம்.

இப்போ கடைசியா என்ன சொல்றீங்க? 41 போதுமா? அல்லது இன்னும் 4 வேணும்னு பிரச்சனையை கிளப்பப்போறீங்களா? பார்த்துக்குங்க.. அம்மாவுக்கு கோபம் வந்துட்டா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடும்..


----------------------------------------------------
http://www.tamilhindu.com/wp-content/uploads/dinamanicartoon260211.jpg
4. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்: டாஸ்மாக் பணியாளர்கள் உழைப்பால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வருகிறது. ஏழு ஆண்டுகளில், 12 ஆண்டு உழைப்பைச் செலுத்திய டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்க வேண்டும்.


வாக்குறுதிதானே,..? அதுல எந்தக்குறையும் அய்யா வைக்க மாட்டார். வாரி வழங்கிடுவார்.. ஆனா நிறைவேத்தறது எப்போன்னு கேட்கக்கூடாது...

-----------------------------------------

5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி : தி.மு.க., சின்னத்தில் மட்டும் நாங்கள் நின்றதில்லை; காங்கிரஸ் கூட்டணியில் நின்ற போது, கை சின்னத்தில் நின்றோம். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, இரட்டை இலை சின்னத்தில் நின்றோம்.


மொத்தத்துல சொந்தக்கால்ல நின்னு உங்களுக்கு பழக்கம் இல்ல...

----------------------------------------

6. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: ஊழல் புரியாத கட்சி என்று எதுவும் இல்லை. ஊழலை முற்றிலுமாகத் தடுப்பதற்கு, ஊழல் தடுப்பு ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஆணையத்தால், ஊழலை சரிவரத் தடுக்க முடியவில்லை. எனவே, புதிய விதிமுறைகளுடன் ஆணையம் அமைக்க வேண்டும்.

புதிய விதி முறைன்னா எப்படி? புரியும் ஊழலில் மக்களுக்கு 50 % கொடுத்துடனும்னா? பட் இந்த டீலிங்க் நல்லாருக்கு.. 

-------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojZkLhJd0WzO_-aZBnLZwvD5mFWJf-AdudNxalF9G-4ORvBghDjPWt83ffvdpnCCawJ8oeYGM-wi0bt0B_bLyZ5QGCX7X5TEKgCrtZhpsrSp12gXF__lPzGAwDKbBeU50VqZBtjr3-lw2/s1600/tamilmakkalkural_blogspot_viji.jpg
7. இந்திய தேசிய லீக் தேசிய தலைவர் முகமது சுலைமான் பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் தான், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அநீதியான சட்ட விரோத தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் வரவேற்றன. இதன் காரணமாக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல், நாங்கள், 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம்.

யாரும் உங்களை தடுக்க மாட்டாங்க. தாராளமா தனித்து போட்டி இட்டுக்கொள்ளுங்க.. ஆனா அண்ணே... பயமா இருக்காது ..கட்சி ஆஃபீஸ்ல சிங்கிள் மேனா இருக்க..? 

-----------------------------------------------


8. கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு பேட்டி: கொ.மு.க.,வுக்கு, ஏழு சீட்டுகள் ஒதுக்கியது தவறு என்பதை தேர்தல் முடிவுகள் தி.மு.க.,வுக்கு உணர்த்தும். கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளின் பட்டியல் பெரியது. ஆனால், எந்த கோரிக்கைகளுக்காக, கொ.மு.க., போராடியிருக்கிறது? போராடுவதாக அறிக்கைகள் மட்டுமே தருவர்.

தனியரசுன்னு பேர் வெச்சிருக்கீங்களே. நீங்க தனியா போட்டி போட்டு தனியா ஆட்சி அமைக்கலாமே.. ஏன் கண்ட நாய்ங்க பின்னால அலையறிங்க..?

---------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyoUE_slgsRqLQ_1qZYGeRXMS3PjxDcSij7b9xIdxJ4qnJoH3p4X2iCBSYmfYzznLwOo_CkPJd0J6Ya-oKswJCFnjc9kWclQd54wW83QSXd-sf5UAoUmeEn6ZeeKDYONb8N-GBcAwjqOU/s400/cartoon_385.jpg
9. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாட்டீல் பேச்சு: என் தாய் மொழியான மராத்தியில் படித்தவன் நான். இதனால், எனக்கு இந்தி, ஆங்கிலம் சரியாக தெரியாது. 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது, இதன் பாதிப்பை உணர்ந்தேன். அப்போது, செய்தியாளர்கள் இந்தியில் கேட்ட கேள்விகள் எனக்கு சரியாக புரியவில்லை. இதனால், தவறாக பதில் அளித்தேன். மற்ற மொழிகளையும் கற்க வேண்டிய அவசியத்தை அப்போது உணர்ந்தேன்.

நீங்க இப்போ தான் உணர்ந்தீங்களா? நாங்க தலைவர் கலைஞரின் பேரன்கள் ஹிந்தி படிக்க டியூஷன் போன பின்னும் அதை உணராம தமிழ் தமிழ் என தள்ளாடிட்டு இருக்கோம்..

-------------------------------

10. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேட்டி:
எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்திலேயே சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்றவர்கள், இப்போது சென்னையில் ஏழு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். இது கூட்டணி தர்மம் அல்ல. தேர்தலில் கிடைக்கப் போகும் தோல்வி பயம் தான்.


என்னது? தோல்வி பயமா? ஏ ஹே ஹே ஹே ... ஓட்டுக்கு ரூ 10000 கொடுக்கும் அளவு அவங்க கிட்டே பணம் இருக்கு. பணம் இருக்க பயம் ஏன்?

---------------------------------------------------------

சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....அப்புறம் ....?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s1600/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg 
 தமிழ்நாட்டின் இளைய உள்ளங்கள் ஏங்கித்தவித்த இந்த நூற்றாண்டின் இணை யற்ற படமான ( இணை அற்ற என்றால் ஜோடி இல்லாத என அர்த்தம் வருதே# அவ் அவ்) சாந்தி அப்புறம் நித்யா படம் 25 அன்று ரிலீஸ் ஆகிறது.எனக்கென்னவோ இந்தப்படத்தில் செமத்தியான சீன் இல்லைன்னாலும் படம் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது..( அப்போ எப்படியும் பார்த்திடுவே.. எதுக்கு இந்த விளக்கம்..?)

இந்தப்படத்துக்கு முதல்ல வெச்ச டைட்டில் சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....என இருந்திருக்கும்னு நான் நினைக்கறேன்.. அப்புறம் சில பிரச்சனைகளால மாத்தி இருப்பாங்க.. ஹி ஹி . ஏன்னா நித்யா(னந்தா) ரஞ்சிதா இல்லாம எங்கேயும் வெளீல போறதில்லையாம்...

அப்புறம் இந்த வாரம் இன்னொரு அதிசயமும் நடக்க இருக்கு. (நடக்காது.. ஓடும்)அதாவது இந்த 25ந்தேதி மட்டும் 4 அஜால் குஜால் படம் ரிலீஸ் ஆகுது.. ஹி ஹி . நாலு படத்தையும் பார்க்கறது கன்ஃபர்ம்.. ஆனா எந்தப்படத்தை முதல்ல பார்க்கறதுன்னு தரம் பிரிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1VwfQsk3HqGMyeItHBRrHnIpV6dVKensXGEuzrechvtf8TOvm6Ky6jkJsp2NER34-odLJ0tHRTQy00TuABRCoGALAHh_jsQTyN84NN0HnKzQStZekzbPPyozid12FxoEmRbwbMPIBIoBG/s1600/Shanthi11-568x1200.jpg
1. arasu1691 அரசியலுக்கு ஹீரோக்கள் வந்தாலே காமெடியா இருக்கும், இதுல காமெடியன்களே வந்தா..ம்ம் கிழிஞ்சுது லம்பாடி லுங்கி #வடிவேலு, விவேக்

----------------------------------------------
2.  bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: அய்யாகிட்ட போன தொண்டன், இங்க வந்தா தலைவன் # எப்படி வசதி #tnfisherman


--------------------------------------------
3. navi_n அடுத்தவன் குற்றத்தை வைத்து தன்னைப் பெருமை படுத்திக் கொள்ளும் நிலையிலேயே இரண்டு கட்சிகளும் உள்ளன. #தமிழகத்தின்_தலைஎழுத்து 

---------------------------------------------------

4.  mankuthirai RT @arivaali : தி.மு.க.,வை ஆதரித்து வடிவேலு தேர்தல் பிரசாரம் # கட்ட துரைக்கு கட்டஞ் சரி இல்ல #fb 

------------------------------------------------
5.. bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: இங்கே கதவுகளை மூடுவதேயில்லை. #tnfisherman 

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDCWXSiWfKafVPVU0BP-F-D9UMz6lO_SP0RlfMIuaWhL3PUljLATIjcNqcbnKBrAd5yicko-cFQDrndAnp3V_tGnIY7B6Uu9NQkVZ1Ot-lnfG6idlHVush3UfKEmeIBPt1QE-rPOLwwYDc/s1600/Archana-10.jpg
6.  iamkarki சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்/வைக்கிரதெல்லாம் பாக்கெட்டுல கை/ பாறாங்கல்லில் கூட எடுத்துடுவேன் நெய் நெய்/ ராசா ராசா. நான் ஸ்பெக்ட்ரம் ராசா 

-------------------------------------------
7.      UVMP ஏங்க யாரவது TR ரை பாத்தா தேர்தல் நடக்குதுன்னு வர சொல்லுங்க, அவர் செய்ய வேண்டிய காமெடி இன்னும் பாக்கி இருக்கு#மிஸ் யு TR

-------------------------------

8. penathal ஏஞ்சலினா ஜோலியின் பாஸ்வேர்ட் வேண்டுமா, இங்கே க்ளிக்கு என்கிறது மெயில். பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய? தெரியவில்லையே!! 


----------------------------------------
9.   Ganesukumar செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.

-------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3_YtzGOi6yi0BR8rIi4eTGYS8HVyMm1-bEanZ4MLYcAr5zT5mi9da5R8s9Ul7hR14sJ8G3HBMcdtBDfKlH9iR1tTJgJDqB02TZMygrrCMgVSPtZRw5HQu1r8tpHY3BsM05Sbx-y9OMFro/s1600/malavika_16.jpg

10. vedhalam விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டும் - சத்யராஜ் # அங்க ஏற்கனவே ஒரு மிஸ்டர் பீன் இருக்காரு

--------------------------------------

11.  RajanLeaks ஜெ வீடு அருகே மரத்தில் ஏறி போராட்டம் #நடிகை வீட்டருகே மரத்திலேறி எட்டிப் பார்த்தனர்னு தினத்தந்தி காரன் நாளைக்கு நியூஸ் போடுவான்! 

---------------------------------------

12. Pattapatti இரவு 10 மணிக்கு மேல், சைகை காட்டிய நடிகர் சரத்குமார் மீது போலீசார் வழக்குபதிவு#ஹி..ஹி சித்திக்கு குட்நைட் சொல்லியிருப்பாருங்க போன்லே.. 

-------------------------------------------

13.   RajanLeaks தமிழர்களே தமிழர்களே என்னைக் கடலில் தூக்கிப் போட்டால் கடல் தண்ணீர் தான் வெளியே வந்து விழும் நான் தப்பித்துக் கொள்வேன் # அதிமுக ஆட்சி! 

----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSs5SYcGt_YwMxnqwFz3LHb3EtxPmbd9YDs_uFJFF-uhdcXWyCqndfhMd733WFQ7bTb0LuqCaQTQFxmUX6kU5chyphenhyphenj087zvSz7NpxA76CRwHgXf0_leepVcJdX8zgn7hG_DuN2FM3lqNAHC/s1600/Poonam-Bajwa-stills-015.jpg
14. navi_n உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவீர்கள் என்றால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே அதைச் செய்யலாமே. 


-----------------------------------------------
15.         gpradeesh சரத்குமார்,விஜயகாந்த்,அருண்பாண்டியன்,மன்சூர்! என்னங்கடா இது? பல்க்கான பார்ட்டிகளா நிக்குது. சட்டசபைல சண்டைபடமா எடுக்கபோறாய்ங்க?

டிஸ்கி 1 - படம் 1,2 ஆகியவற்றில் இருப்பது  சாந்தி அப்புறம் நித்யா பட நாயகி.இந்தப்படத்துல அவுட்டோர் ஷூட்டிங்கே இல்லையாம்.. எல்லாம் ஒரே வீட்டுக்குள்ளயே எடுத்திருக்காங்க... அடடா.. நிறைய லொக்கேஷன்ஸ் மிஸ் ஆகுதேன்னு வருத்தப்படறவங்க......லத்திகா படம் பார்க்கவும்...


டிஸ்கி 2 -  படம் 3-ல் இடமிருந்து வலமாக 3 வது ஃபிகரை கவனிக்கவும்.. அவர் என்ன பண்றார்னே தெரில.. ஆனா எனக்கு இடமிருந்து வலமா முதல் ஃபிகர் தான் பிடிச்சிருக்கு.. 




டிஸ்கி 3 -  படம் 4-ல் இடம் பெற்றவர் பெயர் அர்ச்சனா.. ஒரே படத்தின் மூலம் 10 ஏக்கரா இடம் பெற்றவர்.. ஹி ஹி 


டிஸ்கி 4 - படம் 5-ல் இடம் பெற்ற மாளவிகாவுக்கு பின்னால நிக்கற ஃபிகர் யார் என தகவல் அளிப்பவர்க்கு தக்க அல்லது தகாத சன்மானம் அளிக்கப்படும்..


டிஸ்கி 5  - கடைசி  படத்தில் இடம் பெற்றுள்ள பூஜா டிரஸ் பண்ணீட்டு இருக்கும்போதே ஆ ஜா ( வந்துடு) என்றாராம் மும்பை டைரக்டர்,, அதான் போட்டது போட்டபடி வந்துட்டார்,. ஹி ஹி . அப்புறம் பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்.