Tuesday, November 30, 2010

எகத்தாளமான பதிவர்கள் லிஸ்ட்டும்,லேடீஸ் மேட்டரில் அவர்கள் பேடு டேஸ்ட்டும்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/Anakha.jpg
1.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - மச்சான்,தென்னை மரத்துல ஏறி நின்னு பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்களா தெரியறாங்க..

டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.

---------------------------------

2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா?  ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட  இல்லையே?

--------------------------------


3. இம்சை அரசன் பாபு - என்ன மங்குனி ?கார் டேங்க்கை ஓப்பன் பண்ணி விட்டு சிரிக்கறீங்க?

மங்குனி - ஒண்ணுமில்லை,மனசு விட்டு சிரிச்சா OIL  கூடும்னாங்க.

ஹய்யோ ஹய்யோ அது ஆயில் இல்லை,ஆயுள்.

-------------------------


4. நல்ல நேரம் சதீஷ் - வளர்ந்த  செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை விட,வளரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவோம்,அதுதான் சிறந்தது,எனவே யாரும் காலேஜ் ஃபிகர்ஸை சைட் அடிக்க வேண்டாம்,ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.

-------------------------------


5.  கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?

சவுந்தர் - சக்சஸ்க்கு காரணம் பிரில்லியண்ட் டீச்சர்,  ஃபெயிலியர்க்கு காரணம் பியூட்டிஃபுல் டீச்சர்.

-------------------------


6. பெரியப்பா எல் கே - மனசுக்குள்ள நிறைய இருக்கும் ,ஆனா எழுத வராது,அது லவ் லெட்டர்,மனசுல ஒண்ணுமே இருக்காது,ஆனா பக்கம் பக்கமா எழுதுவோம்.. அது செமெஸ்டர்.

----------------------
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/vaaranam_aayiram.jpg
7. திருப்பூர் கார்த்திக்குமார் -   ஹாய் சார் ,நான் இதை சொல்லியே ஆகனும்,கொஸ்டின் பேப்பர் அவ்வளவு கஷ்டம்.இங்கே எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு கொஸ்டின் பேப்பரை பார்த்திருக்கவே மாட்டான்.. ஐ திங்க்  இந்த டைமும் எக்சாம் ஊத்திக்குச்சு..

முன்தினம் படிச்சேனே, படிச்சதும் மறந்தேனே,சல்லடைக்கண்ணாக உள்ளமும் புண் ஆனதே...

இத்தனை நாளாக புக்கையே பாராமல் விளையாடி இருந்தேனோ..
ஹாலிடேஸ்ஸூம் வீணானதே...

-----------------------

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)

நான் ரெண்டாங்க்கிளாஸ் படிக்கறப்ப என் ஆளு (அப்பவே ஆரம்பிச்சிட்டாரா?)
பிரேயர்ல லீடர் ஸ்பீச் குடுக்கறப்ப நான் காதை  பொத்திக்குவேன் ஏன்னு சொல் பார்ப்போம்?

பட்டாபட்டி -- யாருக்கு தெரியும்?சொல்லுய்யா தெரிஞ்சுக்கறோம்.

அவ எப்பவும் பேச்சை “ டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அப்படின்னு ஆரம்பிப்பா..அவ வாயால என்னை அண்ணானு கூப்பிடறதை என் மனசு தாங்காதே...

-----------------------------

9.  பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா ....

---------------------


10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?

பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.

---------------------

Monday, November 29, 2010

தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர்

http://www.newsonweb.com/newsimages/June2009/64c008cc-15b7-4561-8751-8d67193b61f11.jpg
1.என் பேரு சஞ்சய் சரக்கு சாமி,என் பொழுதுபோக்கு ,தொழில் ரெண்டுமே குடிதான்,என்னோட லட்சியம் எல்லா சரக்கும் அடிக்கனும்,முடியாதுன்னு நினைக்கறீங்களா?தன்னம்பிக்கைக்கும்,தலைக்கனத்துக்கும் ஒரு கட்டிங்க் அளவுதான் வித்தியாசம்,என்னால எல்லா சரக்கையும் ராவா அடிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை.என்னால மட்டும்தான் ராவா அடிக்கனும்னு சொல்றது தலைக்கனம்,கஷ்டப்பட்டு குடிச்சா வாமிட் வரும்,இஷ்டப்பட்டு அடிச்சா போதை வரும்..

2. தண்ணி அடிச்சுட்டு ரகளை பண்ற தண்ணி வண்டி கேஸூங்க....பொதுவா சொல்ற டயலாக்ஸ்----


1. மாப்ளே,நீ என் தம்பி மாதிரிடா....

2.நான் வண்டி ஓட்டறேண்டா...

3. எனக்கு எவ்வளவு அடிச்சாலும் ஏர்றது இல்லையே...(மப்பு)

4.நான் போதைல உளர்றேன்ன்னு நினைக்காதே...(எப்பவும் அவரு உளறுவாய்தான்)

5.இன்னொரு பெக் அடிச்சா செமயா இருக்கும் .

6.என்ன வேணும்னு சொல்லு,உனக்காக நான் உயிரையே குடுப்பேன்.

7. மச்சி,நாளைல இருந்து நான் சரக்கு அடிக்க மாட்டேன்.

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilsong/images/restricted/25-11-2008/ghajini_hindi_movie_stills_1.jpg

3. எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...

4. MANAGEMENT STUDENT KISSES A GIRL.

GIRL - WHAT IS THIS?

BOY - IT IS CALLED DIRECT MARKETTING,

GIRL SLAPS THE BOY.( பளார்னு விட்டா பாரு ஒரு அறை)

BOY - WHAT IS THIS?

GIRL- THIS IS CALLED CUSTOMER FEED BACK.

டிஸ்கி 1 - இந்தப்பதிவு வடக்குப்பட்டி  ராமசாமியின் போதைக்கதை,இதற்கும் பன்னிக்குட்டி ராமசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ராம்சாமியின் நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தபந்தங்கள் இப்பதிவைக்கண்டு என் மேல் கோபித்துக்கொண்டால் அதற்கு.....

ஒண்ணும் பண்ண முடியாது.

டிஸ்கி 2 - ஆங்கில ஜோக்கை தமிழில் மாற்றிப்பார்த்தேன் ,சரியான எஃப்க்ட் கிடைக்கவில்லை.எனவே தமிழில் தர முடியல.தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க.

Sunday, November 28, 2010

நந்தலாலா - கலக்கல் லாலா - சினிமா விமர்சனம்





சித்திரம் பேசுதடி,அஞ்சாதே என தொடர்ந்து கமர்சியல் ஹிட்ஸ் அடித்த மிஷ்கின் ஆர்ட் ஃபிலிம் டைப்பில் ஒரு ஜப்பானியப்படத்தை தழுவி எடுத்திருக்கிறார்.பல டப்பா படங்களையும்,ஹீரோயிச படங்களையும் பார்த்து சலித்த நமக்கு இது  ஒரு வித்தியாசமான அனுபவத்தையே தருகிறது.

அன்பே சிவம்.திருடா திருடா,காதல் சொல்ல வந்தேன்,மைனா வரிசையில் இதுவும் ஒரு பயணக்கதைதான்.ஆனால் சொன்ன விதத்தில் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

தனிமையில் இருந்து தாயின் அன்புக்கு ஏங்கி வெளியூரில் இருக்கும் தன் தாயை சந்திக்க தனியாகக் கிளம்பும் சிறுவன்,பைத்தியக்கார விடுதியில் தன்னை இங்கே சேர்த்துவிட்டு போய் விட்டாளே என்ற ஆத்திரத்தில் அவளை கோபமாக சந்திக்கத்துடிக்கும் மன நலம் குன்றிய ஆள் இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து ஒன்றாக பயணிக்கையில் ஏற்படும் அனுபவங்களும் ,சந்திக்கும் மனிதர்களும்தான் கதை.

ஆற்றின் போக்கில் வளைந்து கொடுக்கும் நாணல் மாதிரி மனிதர்கள் அனுசரித்துப்போக வேண்டும் என்ற குறியீட்டுக்காட்சியுடன் (FLEXIBILITY) டைட்டில் தொடங்குகிறது.

ஒரு படத்துக்கு ஒளிப்பதிவும் ,இசையும்,பின்னணி இசையும்  எப்படி உயிர்நாடியாக விளங்குகிறது என ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பாடமாக வைக்கும் அளவுக்கு இந்தப்படத்தில் 2 தொழில் நுட்பங்களும் பிரமாதமாகக்கையாளப்பட்டிருக்கிறது.

பாலுமகேந்திரா,மணிரத்னம் வரிசையில் வசனத்துக்கான முக்கியத்துவத்தை குறைத்து காட்சிகளின் மூலமே பார்வையாளனை கட்டிப்போட முடியும் என நிரூபித்திருக்கிறார், இயக்குநர்.

சிறுவனாக வரும் அந்த சின்னப்பையனின் நடிப்பு கிளாஸ் ரகம்.தலையை குனிந்து நிற்பதில் கோபம்,ஏக்கம் ,பாசம் என விதம் விதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.சபாஷ்..தம்பி.


சில இடங்களில் மனநலம் குன்றியவராகவும்,சில இடங்களில்  நார்மல் மனிதராகவும்,பல இடங்களில் சராசரிக்கும் அதிகமான அறிவுடனும் நடந்து கொள்ளும் விநோதமான ஒரு மனிதனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மிஷ்கின். இரண்டு இடங்களில் மட்டுமே ஓவர் ஆக்டிங்க்கோ என யோசிக்க வைத்து மற்ற அனைத்து இடங்களிலும் பண்பட்ட நடிகனாக தன்னை வெளிப்படுத்திய மிஷ்கினுக்கு  ஒரு ஷொட்டு.

படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பதிந்து போகும் அனைத்து கேரக்டர்அளுக்கும் ஒரு சபாஷ்.

மனித நேயத்தையும்,இயக்குநரின் தொழில் நுட்ப நயத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் -

1.காலில் அடிபட்டு சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவியின் பாவாடையை முழங்கால் வரை தூக்கும் ஹீரோவை தவறாகப்புரிந்து கொண்டு பளார் என அறையும் மாணவி ஹீரோ  “வலிக்குதா?” எனக்கேட்கும்போது குபுக்கென கண்ணில் கண்ணீர் வரக்கலங்கும் இடம். (இந்த இடத்தில் வரும் பின்னணி இசை அபாரம்)

2.  இளநி வெட்டு ம் ஆள் 3 இளநியை திருடி விட்டார்கள் என்பதற்காக ஹீரோவைத்துரத்தி பின் கீழே விழுந்து அடி பட்டதும் ஹீரோவே அவரை கவனிக்கையில் கண்கலங்குவது.

3.ஹார்னை சுட்டு செல்லும் ஹீரோவை லாரி டிரைவர் அடிப்பதும் ,பின் அவனின் குண நலன் தெரிந்து சினெகம் ஆவதும்.

4. விலை மாதுவாக வரும் சினிக்தா  தனது சோகக்கதையை சொல்லி நான் அழுக்கானவ என கதறும்போது பெய்யும் மழையில் அவளை நனையச்சொல்லி  “நீ குளி சுத்தம் ஆகிடுவே” என வெள்ளந்தியாக ஹீரோ சொல்வதும் ,அப்போது சினிக்தாவின் கண்களில் வெளிப்படும்  நன்றி,புத்துணர்ச்சி கிளாசிக் ரகம்.

5. சிறுவனின் தாயைக்கண்டு பிடித்த ஹீரோ அவளிடம் விளக்கம் கேட்பதை வசனமே இல்லாமல் லாங்க் ஷாட்டில் தெளிவாக பார்வையாளனுக்கு புரிய வைத்த விதம். ( இந்த சீனை ஒரு விசுவோ , டி ஆரோ எடுத்திருந்தால் 4 பகத்துக்கு வசனம் வைத்திருப்பார்கள்) படத்துக்கும் கதைக்கும் மிக முக்கியமான இந்த சீனில் வசனமே இல்லாமல் எடுத்த இயக்குநர் மிக கவனிக்கப்பட வேண்டியவர்.

பின்னணி இசையில் இசைஞானி கலக்கிய இடங்கள்

1.ஹாஸ்பிடலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் காட்சியில் மத்தளம்,முரசு என கலக்கல் காக்டெயில் இசையை அளீத்தது..

2. கூட வந்த சிறுவனே தன்னை மெண்ட்டலா என கேட்கும்போது ஒல்லிக்கும் பின்னணி இசை.

3. பைத்தியமாக கிடக்கும் தன் அம்மா ராகினியை ஹீரோ சந்திக்கும் காட்சியிலும்,அதைத்தொடர்ந்து 15 நிமிடங்கள் பின்னணி இசை மூலமே கதை சொன்ன விதம்.

4.எல்லாவற்றையும் விட பல இடங்களில் அமைதி,நிசப்தம் ,மவுனம்  இவற்றை வெளிப்படுத்துவது கூட நல்ல இசை தான் என நிரூபிப்பது.


ஒண்டர்ஃபுல் ஒளிப்பதிவு  என சொல்ல வைத்த இடங்கள்

1.டைட்டில் போடும் சீனில் ஆற்று நீர் காண்பிக்கப்பட்ட விதம்.

2. சிறுவனின் தாய் சந்திப்பு சீனில் கேமரா கோணம்

3.சினிக்தா காரில் வரும் இளைஞர்களால் ரேப்புக்கு ட்ரை பண்ணப்படும்போது வைக்கப்பட்ட லாங்க்‌ஷாட்

4,க்ளைமாக்ஸில் ராகினியை சந்திக்கும்போது அவருக்கு க்ளோஷப் காட்சி வைக்காமல் லாங்க் ஷாட்டிலேயே வலியை உணர்த்துவது.

வசனகர்த்தா ஜொலித்த இடங்கள்

1.  நீ வேலைக்காரி.என் கூட ஸ்கூலுக்கு வர வேணாம்,வந்தா எல்லாரும் நீதான் என் அம்மான்னு நினைப்பாங்க.

2.  இந்த பஸ் மெயின்ல போகுதா? பைபாஸ்ல போகுதா?

ம், ரோட்ல


3.  எங்கப்பா நான் சின்னப்பையனா இருந்தப்பவே ஓடிப்போயிட்டாரு..உங்கப்பா?

நான் பிறந்ததுமே ஓடிட்டாரு.

எல்லா அப்பாக்களும் இப்படித்தான் ஓடிப்போவாங்களா?

4. அம்மாவைப்பார்த்ததும் நீயும் என்னை மாதிரியே அவளை அடிக்கப்போறியா?

ம்ஹூம்,கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கப்போறேன்.

5.  ரோட்ல போறவங்கிட்டே எதுக்கு தண்ணீர் கேக்குறே?

ம்,லிஃப்ட் கேக்கறேன்.

அது எதுக்கு நமக்கு..?

6.  நான் ஒரு நொண்டி,நான் எங்கம்மா வயிற்றுல இருக்கறப்பவே செத்திருக்கலாம்.

7.  உன் பேரன்ன?      மெண்ட்டல் .   ஆத்தாடி ,அப்படி ஒரு பேரா?

8.  கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்

       .நோ நோ எங்கம்மா 40 கி மீ ஸ்பீடுலதான் போகச்சொல்லி இருக்காங்க.

ஹனிமூனுக்கு வந்த இடத்திலும் அம்மா ஞாபகமா?

9.  ப்ளீஸ் கொஞ்சம் பேசாம வர்றியா?

அய்யய்யோ பேசாம வந்தா நான் ஊமை ஆகிடுவேன்.

10. இதுதான் உங்கம்மா என யார் உனக்கு சொன்னது?       என் பாட்டி.

பாட்டியை உனக்கு அடையாளம் காட்டுனது யாரு? உனக்கு அம்மாவும் இல்லை,-பாட்டியும் இல்லை.

11. விலைமாது - முத்தம் மட்டும் எனக்கு பிடிக்காதுகுடிகாரன்,கிழவன்,சீக்காளி அப்படி ஆளாளுக்குகிட்டே வரும்போது எனக்கு நாறும்,எங்கம்மா பொணம் கூட அப்படி நாறலை.. என்னை சுத்தி ஒட்டடை ...புது சரக்குன்னு சொல்லி..... 3 நாள்ல 36 பேரு  /...... முடியல ...என்னால முடியல.. வலி.. வலி...

12. அம்மா இல்லைன்னா எல்லாரும் கஷ்டப்படுவாங்களா?

கஷ்டம்னா என்னன்னு இப்போ உங்களைப்பார்த்துதான் தெரிஞ்சுது..

13. நரிப்பல்லு வாங்கிக்க..தம்பி..அதிர்ஷ்டம் தேடி வரும்.

அம்மா தேடி வருவாளா?

14. உன்னை மெண்ட்டல்னு சொன்னப்போ உனக்கு எப்படி கோபம் வந்தது?அதே மாதிரிதானே எனக்கும் எங்கம்மா செத்துட்டா அப்படினு நீ சொன்னப்பவும் இருந்திருக்கும்?

டைட்டிலில் துணை ,இணை இயக்குநர்கள் என 17பேர் அறிமுகம் ஆகிறார்கள் அனைவருக்கும் செம வேலை இருந்திருக்கும்.ஒரு படத்துக்கு கண்ட்டினியூட்டி எவ்வளவு முக்கியம் என்பதை சிலாகிக்கவைக்கும் அளவு உபயோகிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின்.

கோபிசெட்டிபாளையம் கள்ளீபட்டி என ஈரோடு மாவட்டத்தில் பல இடங்கள் காட்டப்படுவது அழகு.

நெம்பர் டூ போக 3 விரலை ஹீரோ காண்பிப்பது,போகும் இடம் இருட்டு என்பதால் கோயிலில் இருந்து அகல் விளக்கை அபேஸ் செய்து வரும் ஹீரோ கடவுள் சிலையை காட்டி பாவம் அவங்க இருட்டுல இருப்பாங்க என்பது.,லிஃப்ட் தர மறுத்த லாரிக்காரனிடம் இருந்து ஹாரனை அபேஸ்
செய்வது, பைத்தியமாக வரும் ஹீரோ எங்கே போனாலும் சுவரின் ஓரத்தில் விரலால் கோலம் போட்டுக்கொண்டே போவது   என ரசிப்புத்தன்மையை அதிகரிக்கும் சீன்கள் அதிகம்.

தாலாட்டு கேக்கலாமா? பாட்டு, ஒண்ணூக்கு ஒண்ணு துணை இருக்கும் உலகத்துலே அன்பு ஒண்ணுதான் அனாதையா என பாடல்கள் கலக்கல் ரகம்.

இந்தப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் இந்தப்படத்துக்கு எல்லாம் குறை சொல்லிகொண்டிருந்தால் நல்ல சினிமா பார்க்கவே லாயக்கு இல்லை.

இந்தப்படத்தில் கமல் நடித்திருந்தால் படத்தின் மார்க்கெட் கூடி இருக்கும் (மிஷ்கினின் முதல் சாய்ஸ் கமல்தான்,சம்பள விஷயம் காரணமாக கமல் நடிக்க மறுத்து விட்டாராம்).

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 50

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சூப்பர்

இந்தப்படம் ஜனரஞ்சகமாக சூப்பர் ஹிட் ஆகி ஓடவில்லை என்றால் நட்டம் இயக்குநருக்கு அல்ல.தனது ரசனையை மேம்படுத்திக்கொள்ளாமல் இன்னும் குண்டுச்சட்டியில்தான் குதிரை ஓட்டுவேன் என அடம் பிடிக்கும் தமிழ் ரசிகனுக்குத்தான்.

Saturday, November 27, 2010

கனிமொழி Vs கவுண்டமணி - சினிமா விமர்சனம்

அட

கவுண்டமணி - அய்யா ,ராசா,புது டைரக்டரு,இந்தப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்புல படத்தோட டைட்டில் பற்றி என்ன ராசா பேட்டி குடுத்தீஙக?ஞாபகமிருக்கா?

டைரக்டர் - அண்ணே,அது வந்து....கனி மொழி என்று டைட்டில் வைத்த்துக்கு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை,படத்தின் கதைக்கு அந்த டைட்டில் தேவைப்படுகிறதுன்னு பேட்டி குடுத்திருந்தேண்ணே...

கவுண்டமணி - மேலே மெலே....


டைரக்டர் - அப்புறம் .. ம் ம் இந்தப்படத்தை பார்த்தா இந்த டைட்டிலை விட பொருத்தமான வேற டைட்டில் இந்த படத்துக்கு வைக்கவே முடியாதுன்னு பேட்டி குடுத்திருந்தேன்...ஏண்ணே?பொருத்தமா இல்லையா?

கவுண்டமணி -  வருத்தமா இருக்கு.அந்தம்மா பேரை இப்படி எல்லாம் கெடுக்கறியேன்னு...இந்த டைட்டில் வைக்க அனுமதி வாங்க ஒரு மாசம் செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைஞ்ச நேரத்துக்கு நல்ல கதையை
ரெடி பண்ணி  இருக்கலாம்..

டைரக்டர் - ஏண்ணே,படத்தோட கதைக்கு என்ன குறைச்சல்?

கவுண்டமணி - ஹீரோ ஹீரோயினை ஒரு தலையா காதலிக்கறான்,கடைசி வரை காதலை அவ கிட்டே சொல்லவே இல்லை,கிளைமாக்ஸ்ல வேற ஒருத்தன் ஹீரோயினை தட்டிட்டு (கல்யாணம் பண்ணிட்டு ) போயிடறான்..இதுல என்ன புதுமை இருக்கு?இந்த மாதிரி ஓராயிரம் படம் பார்த்தாச்சு...

அட

டைரக்டர் - சரி,அதை விடுங்கண்ணே...ஹீரோவும்,ஹீரோயினும் சந்திக்கற முத சீன்ல 2 பேருமே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வந்து கலக்கி இருப்பாங்களே,அதைப்பத்தி ஆடியன்ஸ் என்ன பேசிக்கறாங்க?

 கவுண்டமணி -  ஏதோ மஞ்ச மாக்கான் படத்துக்கு வந்துட்டமோன்னு பேசிக்கிட்டாங்க...

டைரக்டர் - சரி..ஹீரோயின் எப்படிண்ணே?

கவுண்டமணி - அது சும்மா சொல்லக்கூடாது..நல்ல ஃபிரிட்ஜ்ல வெச்ச லெமனா,18 வயசு தமனா மாதிரி தளதளன்னு தான் இருக்கு..ஆனா படத்தோட கதை,திரைக்கதை உனக்கு எமனா அமைஞ்சிடுச்சே?

டைரக்டர் - காமனா (COMMON) படத்தை பத்தி என்ன தாண்ணே சொல்ல வர்றீங்க?

கவுண்டமணி - படத்துக்கு தலை வலின்னு டைட்டில் வெச்சு இருக்கலாம்.

சி பி - அண்ணே,ஒரு நிமிஷம்....

கவுண்டமணி - வந்துட்டாண்டா வீங்குன வாயன்....டேய்.. இப்போ எதுக்கு வந்திருக்கே?படத்துல நீ கேட்ட நல்ல வசனத்தை பற்றி சொல்றக்காக்கும்?பரங்கிமலை ஜோதில பிட்டு படம் பாக்கற நாய் நீ இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா..?நீ தலையே சீவ மாட்டியா?

சி பி - அண்ணே,பட விமர்சனம் இனிமே எழுதுனா உன் தலையை சீவிடுவோம்னு ஆளாளுக்கு மிரட்டறாங்க..அவங்க வந்து சீவட்டும்னு நான் சீவாம இருக்கேன்.

கவுண்டமணி - அட விளங்காதவனே.. அவங்க அரிவாளோட வருவாங்க,சீப்போட வருவாங்கன்னு நினைச்சியா?சரி சரி சொல்லித்தொலை...
அட

ரசிக்க முடியாத படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்-

1.யோவ்,தியேட்டர்ல எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணுங்கய்யா.. சின்னஞ்சிறுசுக  ஏதோ சில்மிஷம் பண்ணுவாங்க..ஈங்க பாட்டுக்கு எல்லா லைட்டையும் போட்டு வெச்சா?


2.காலேஜ்க்கு படிக்கத்தானே வர்றே?எங்கே புக்,பேனா,நோட் எல்லாம்?

 எல்லாம் டெஸ்க்குல வெச்சுட்டு போயிடுவேன் சார்...

அடப்பாவி,அப்புறம் எதை படிப்பே?   நான் எங்கே சார் படிக்கறேன்?


3. முதல்ல இந்த மாதிரி அட்வைஸ் பண்ற லெக்சரரை டைவர்ஸ் பண்ணனும்.

4  நமக்குள்ள  இருக்கற டேலண்ட்டை அடிக்கடி யூஸ் பண்ணனும்,பெரிய வாய்ப்பு கிடைக்கறப்ப பார்த்துக்கலாம்னு வெயிட் பண்ணக்கூடாது..

5. டேய். உனக்கு எல்லா வேலையும் செஞ்சு செஞ்சு என் காலெல்லாம் தேஞ்சு போச்சு.

அம்மா.பேசாம எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி  வெச்சுடு. உனக்கு ரெஸ்ட் எனக்கு பெஸ்ட்.


6. கமபைன் ஸ்டடி பண்றேன்னு வெளில போறவனை நம்பிடலாம்,ஆனா தனியா படிக்கறேன்னு கதவை தாழ் போட்டுட்டு படிக்கறவனை நம்ப முடியாது..

7.  டேய் மாப்ளே.. இவளா உன் ஆளு?சூப்பரா இருக்கா.. இவளை மட்டும் நீ கல்யாணம் பண்ணிட்டே என் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாதுடா..

நல்ல ஃபிரண்டுடா...

8. என் பந்தை எவனும் தொடக்கூடாதுடா,தொட்டா அவன் ஃபெயில் ஆகிடுவான்..

அடப்பாவி..எப்படி எல்லாம் மிரட்டறான்..நீயே தனியா வலிபால் விளையாடு..

9.எது கத்துக்கறதா இருந்தாலும் இன்ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம்.

10.  சார் எனக்கு பட சான்ஸ் வேணும்.

எனக்கு தெரிஞ்ச புது டைரக்டர் ஒருத்தர் இருக்காரு,போறியா?

சார்... மணிரத்னம்,ஷங்கர் இப்படி இருந்தா சொல்லுங்க...

11.  மாமா ,உங்களுக்கு லவ் பிடிக்காதா.. ஏன்? லவ் ஃபெயிலரா?

இல்ல,லவ் பண்ணுனவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..அதான்..

12. போலீஸ் மாதிரியே கேள்வி கேக்கறியே அது ஏன்?

திருடன் மாதிரியே பதில் சொல்றியே அது ஏன்?

13.  காதலியின் ஃபோட்டோவை தொட்டுப்பார்க்க முயலும் நண்பனிடம் ஹீரோ-   டேய்.. அவ என் ஆளு கை வைக்காதே..



அடப்பாவி.. வெறும் ஃபோட்டோடா..

கூப்பிட்டுப்பாரு,திரும்பிப்பார்ப்பா..

14. நான் உன் ஃபோன் நெம்பரை சத்தம் போட்டு  அவ முன்னால சொல்றேன்,அவ உனக்கு கால் பண்ணுனா  அவ உன்னை லவ் பண்றான்னு அர்த்தம்.

சப்போஸ் அவளுக்கு நீ சொன்ந்து கேக்கலைன்னா?

காது கேகாதவனு கழட்டி விட்டுடு..

15.  என்னடா ஸ்வெட் ட்ரீம்ஸ் (SWEAT DREAMS) னு மெசேஜ் அனுப்பி இருக்கே..ஸ்வீட் ட்ரீம்ஸ்டா (SWEET DREAMS)

அடடா இத்த்னை நாளா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடதான் எல்லாருக்கும் அனுப்பினேனா?

அதான் எவளும் உனக்கு செட் ஆகலை


16.  இங்கே வெச்சிருந்த பாட்டில்ல இருந்த மீதி சரக்கு எங்கே?


விடுடா,சிந்தி இருக்கும்

  எங்கே,சிந்துன இடத்தை காமி..      என் வாய்ல...


17. உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி என் கூட இருக்கறதா ஏண்டா சொன்னே?

மாட்டுனா எல்லாரும் மாட்டனும்னுதான்

18. அம்மா ஒரு 200 ரூபா குடு.

எதுக்கு?

உன் பர்ஸ்ல 500 ரூபா  நோட்டுதான் இருந்துச்சு அதான்   200 குடு,500 எடு.

19. அப்பா இந்த இங்கிலீஷ் படத்துல கிஸ் சீனே வர்ல?

5 வயசுப்பையன் கேக்குற கேள்வியைப்பாரு.. எல்லா இங்கிலீஷ் படத்துலயும் கிஸ் சீன் வரும்னு யார் சொன்னது உனக்கு?

கவுண்டமணி - அப்பாடா,முடிச்சுட்டான்,நாயே நீ ஓடிப்போயிடு,தம்பி நீ நில்லு,நீ இதுக்கு முன்னால ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல வேலை செஞ்சியா?

டைரக்டர் - ஆமாண்ணே,எப்படி கண்டு பிடிச்சீங்க?

கவுண்டமணி - படத்துல பர்ச்சேஸ் பண்ற சீன் ஏகப்பட்டது வருதே..

1. ஹீரோ செல்ஃபோன் வாங்கும் சீன் 20 நிமிஷம்

2. ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டிராவல் பேக் வாங்கும் சீன் 5 நிமிஷம்

3.ஹீரோவின் அண்ணன் பைக் வாங்கும் சீன் 3 நிமிஷம்

4.ஹீரோயின் கிஃப்ட் வாங்கும் சீன் 7 நிமிஷம்

எதுக்கு இப்படி சாவடிக்கறே?

டைரக்டர் - அண்ணே ,படத்துல சம்பவங்கள் வேணும்னே...ரசிக்கற மாதிரி சீன்ஸ் நான் சொல்றேன்

1.ஹீரோயின் எங்கே இருந்து எந்த ரூட்ல வருவானு ஹீரோவுக்கு மேப் போட்டு விவரிக்கும் சீன்.

2. ஏரியா விட்டு ஏரியா போய் அந்த ஏரியா ஆளுங்க கிட்டே அடி வாங்கும் சீன்

3.யோகா கிளாஸ்க்கு முதன் முதலா போற ஹீரோ ஜீன்ஸ்,டி சர்ட் ,கூலிங்க் கிளாஸ் சகிதம் போற சீன்

4.உள்ளங்கை மாடலில் ஒரு சோபாவை அலங்கரித்து வைத்திருந்த  சீன்

கவுண்டமணி - தம்பி நீ ஹிட்ஸ் ஆன படங்கள் நிறைய பாரு.அதுல 60 சீன்ஸ் ரசிக்கற மாதிரி இருக்கும்.நீ பண்ணுன கூத்துக்களை நான் வரிசைப்படுத்தறேன் பாரு.

1.ஹீரோயின் காலடில ஹீரோ விளையாடும் வாலிபால் போய் விழுது,தை ஹீரோயின் எடுத்து தர்றா உடனே ஒரு டூயட்

2.நடக்காததை எல்லாம் நடந்ததாக கற்பனை பண்ணிக்கொள்ளும் ஹீரோ (இப்போதான் மந்திரப்புன்னகை,குடைக்குள் மழை வந்தது)

3.க்ளை மாக்ஸ்ல ஹீரோயின் டபுள் ஆக்ட்னு ஒரு ட்விஸ்ட் தந்து பேக் அடிச்சு அது ஹீரோவின் கற்பனைனு ஜகா வாங்குனது..

4. ......

டைரக்டர் - அண்ணே,நிறுத்துங்க...படம் ஓடுமா ஓடாதா?அதை மட்டும் சொல்லுங்க..

கவுண்டமணி - ஏ செண்ட்டர்ல 7 நாள்   பி செண்ட்டர்ல 5 நால்,  சி செண்ட்டர்ல 3 நாள் ஓடும்

டைரக்டர் -  பத்திரிக்கை விமர்சனம்?

கவுண்டமணி - ஆனந்த் விகடன்-34 மார்க்

குமுதம் - சுமார்

நாடகம் மாதிரி படம் எடுக்கறவங்களுக்கெல்லாம் இந்தப்படத்தோட ரிசல்ட் ஒரு பாடமா இருக்கட்டும்.

Friday, November 26, 2010

கரு.பழனியப்பன் விருந்து - காமெடி கும்மி

http://4.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TO5dK8hrBQI/AAAAAAAAAMU/M7YMmgX2-ps/s1600/mandhira_punnagai_movie_stills_04.jpg
கரு பழனியப்பன் அவர்கள் நமது பதிவர்களை விருந்துக்கு அழைத்தது பதிவுலகிலும்,கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.இது ஒரு நல்ல தொடக்கம் என சிலரும்,நடுநிலை விமர்சனத்துக்கு பாதிப்பு வரும் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அதை எல்லாம் ஒதுக்கி விட்டு  கும்மி அடிக்கும் வேலையை மட்டும் நாம் செய்யலாம்.இந்த விருந்தில் கலந்து கொண்ட உண்மைத்தமிழன் அண்ணன்,பிரபா உட்பட அனைவரும் என் நண்பர்களே,இந்த நகைச்சுவை பொதுவாக எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.


1 .டைரக்டர் சார்,சினிமா விமர்சகர்கள் அனைவரையும் கூப்பிட்டு விருந்து வெச்சது தப்பா போச்சு.

ஏன்?

இப்போ படத்தை யாரும் விமர்சனம் பண்ணலை.விருந்து எப்படி இருந்துதுன்னு விமர்சனம் பண்ணீட்டு இருக்காங்க...


2. எதுக்காக எப்போதும் இல்லாத புது பழக்கமா விமர்சகர்களுக்கு விருந்து வெச்சுருக்கீங்க?

அவங்க நம்ம படத்துக்கு மருந்து வெச்சுடக்கூடாதுன்னுதான்.

3.பிளாக் ஸ்பாட்ல எழுதற ஆளுங்க எல்லாருக்கும் விருந்து உண்டுன்னு சொன்னாங்களே?

யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...

4.சினிமா விமர்சனம் பண்ண வந்த விமர்சகர்களுக்கு இப்போ தர்ம சங்கடமான நிலைன்னு எப்படி சொல்றீங்க?

காலைல 11 மணிக்கு படத்தை போட்டு,  2 மணிக்கு முடிச்சு பசியோட இருக்கறவங்க கிட்டே இப்போ படத்தோட விமர்சனத்தை பாசிட்டீவ்வா எழுதுனாத்தான் விருந்துன்னு சொல்லீட்டாங்களாம்.

5.டைரக்டர் சார்,அவசரப்பட்டுட்டீங்க,மொத்தம் 2000 பேர் விருந்து வேணும்னு வந்திருக்காங்க. இப்போ எப்படி சமாளிக்கப்போறீங்க?

பேசாம பழைய விருந்து புக் 10 கிலோ வாங்கி ஆளுக்கு ஒண்ணு குடுத்து அனுப்பி விட்டுடலாமா?


6.டைரக்டர் சார்,சினிமா விமர்சனத்தை டைப் பண்ணிட்டேன்,பிளாக்ல போடலாமா?

இருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.

7.சினிமா விமர்சகர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காரே டைரக்டரு... அது ஏன்?

கொஞ்ச நஞ்ச மனசாட்சியோட எழுதறங்க கூட பக்கத்துல அவங்கவங்க மனைவி தர்ற டோஸ்சால படத்துக்கு சாதகமா விமர்சனம் எழுதத்தான்.


8.திடீர்னு பிளாக் உலகத்துல சினிமா விமர்சனம் எழுதறவங்க எண்ணிக்கை 250 மடங்கா பெருகிடுச்சே? ஏன்?

நல்லா விருந்து வைக்கலைன்னா படம் ஊத்திக்கிச்சுன்னு விமர்சனம் எழுதிடுவோம்னு மிரட்டத்தான்.

9. சி .பி செந்தில்குமாரும்,அவரோட சொந்தக்காரங்களும் விருந்து சாப்பிட லைன்ல நின்னும் டைரக்டர் துரத்தி விட்டுட்டாரே,ஏன்?

பிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK)  இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்.

10.யோவ் சிரிப்புப்போலீசு,படம் தான் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதி இருக்கேனே,அப்புறம் ஏய்யா படம் எனக்குப்பிடிக்கலைன்னு பின்னூட்டம் போடறீங்க?

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.

11.தமிழனுக்கு செஞ்சோற்றுக்கடன் உணர்வு நிறைய இருக்குன்னு எல்லாரும் புரூஃப் பண்ணீட்டாங்க.

எப்படி சொல்றீங்க ராம்சாமி?

சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே?

12. என்னய்யா இது ?தியேட்டர் வாசல்ல 50 பேர் நின்னுக்கிட்டு  படம் நல்லாலை,படம் ஓடாது அப்படின்னு சொல்லீட்டு இருக்காங்க?

அவங்க எல்லாருமே  சி பி  மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்க,மக்களோட மவுத் டாக் தான் உண்மையான விமர்சனம்னு சொல்லப்படறதால படத்தோட டைரக்டரை ,புரொடியூசரை மிரட்டறதுக்காக அப்படி நெகடிவ் விமர்சனம் சொல்றாங்க?ஏதோ விருந்தும்,குவாட்டர் மருந்தும் கிடைச்சா போதுமாம்.

டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.