Showing posts with label SURYA. Show all posts
Showing posts with label SURYA. Show all posts

Sunday, December 02, 2012

மாற்றான் - சூர்யா நடிக்காமலேயே படமாக்கப்பட்டதா? ஒளிப்பதிவாளர் பேட்டி

அழகியலும் அறிவியலுமாக கலந்துகட்டி அடிக்கிறது சௌந்தர்ராஜனின் கேமரா. மாற்றான் படத்தின் ஒளிப்பதிவுக்காக அதிகமாக பேசப்பட்டவர். காரணம் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவி கதையை நிஜமாக்கியது இவருடைய ஒளிப்பதிவு. கேமரா கோணத்தின் புதிய அம்சங்களோடு புறப்பட்டிருக்கும் சௌந்தர்ராஜனின் எக்ஸ்பிரஸ் ஒளிப்பதிவு பற்றி இங்கே...








.நீங்கள் ஒளிப்பதிவாளரான கதை..






நான் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போதுதான் சினிமா ஒளிப்பதிவில் தீவிர ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முன்புகூட சினிமா ஆசை இருந்தது. ஆனால் அது சராசரி ரசிகனுக்குரியதுதான். கல்லூரி முடிந்தவுடன் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர்தான் கே.வி.ஆனந்திடம் சொன்னார். அவரிடம் தொடர்ந்து எட்டு வருடம் இருந்தேன். நான் முதன் முதலில் தனியாக பண்ணிய படம் "சுக்ரன்'. இந்த படம்தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் அறிமுகம். கே.வி.ஆனந்திடமே "கனா கண்டேன்' படம் ஒளிப்பதிவு செய்தேன். இதுவரை ஒன்பது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இது தவிர 600 விளம்பரப் படங்களும், சில குறும்படங்களும் செய்திருக்கிறேன்







ஒளிப்பதிவில் இன்றைய தொழில்நுட்பங்கள் பற்றிச் 


சொல்லுங்களேன்?






மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. முக்கியமானது டிஜிட்டல். இந்தமாற்றத்தோடு போட்டி போடாதவர்கள் பீல்டு அவுட் ஆகவேண்டியதுதான். எல்லா ஒளிப்பதிவாளருமே இதற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிலிம் டூ டிஜிட்டல் மாற்றம் என்ன செய்திருக்கிறது என்றால் பல பிலிம் கம்பெனிகளையே மூடவைத்திருக்கிறது. 


இப்போது "கொடாக்' கம்பெனி மட்டும்தான் இருக்கிறது. அதுமட்டுமா... இன்று செல்போனிலேயே படம் எடுக்கக்கூடிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதை தியேட்டரில் வெளியிடும் போதுதான் பெரிய ஒர்க் தேவைப்படுகிறது. காட்சிகளுக்கு விஷுவல் எபெக்ட் சேர்க்கத்தான் ஆள் தேவை. இந்த இடத்தில் விஷுவல் எபெக்டரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாக்கி இருக்கிறது. ஆக இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு டெக்னிக்கல் விஷயங்களில் புதுமை செய்கிற ஒளிப்பதிவாளர்கள்தான் இப்போதைய தேவை. 








வெளிநாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களில் இருக்கும் தத்ரூபம், சண்டைக் காட்சிகளில் இருக்கும் சாகசம், காட்சியில் இருக்கும் ஸ்டைலிஷ் போன்றவை இந்திய, தமிழ்ப்படங்களில் இல்லையே?






கிடையவே கிடையாது. வெளிநாட்டுப் படங்களுக்கு நம்மூர் டெக்னிஷியன்கள் நிறைய பேர் ஒர்க் பண்ணுகிறார்கள். சந்தோஷ் சிவனை அமெரிக்க திரைப்படவுலம் ஒரு முக்கிய மெம்பராகவே சேர்த்திருக்கிறது. உலக சினிமாவில் பயன்படுத்தப்படும் அத்தனை தொழில்நுட்பங்களும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் இருக்கும் மணிகண்டன், ஆர்.டி.ராஜசேகர், ரவி.கே.சந்திரன் போன்றோர் சர்வதேச தரத்தில் இயங்குகிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் பிரச்னை என்ன என்று பார்த்தால் கதை. அதுதான் மற்ற விஷயங்களைத் தீர்மானிக்கிறது. ஸ்கிரிப்ட் தான் பைபிள், அதற்குத் துணை நிற்பதுதான் டெக்னிக்கல். இங்கிருப்பவர்கள் "ஸ்கைபால்' செய்தால் அதே வேகத்தில் செய்யப்போகிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது.






 "மாற்றான்' படத்தின் தொழில்நுட்பத்தை வைத்து சூர்யா இல்லாமலே சூர்யா படம் எடுக்க முடியுமாமே... அது பற்றி?






உண்மைதான். ஒருவேளை எம்.ஜி.ஆர் காலத்தில் இந்த டெக்னிக் இருந்திருந்தால் கொஞ்சம்கூட சந்தேகம் வராத அளவுக்கு எம்.ஜி.ஆர் நடித்தது போன்ற படத்தைத் தரமுடியும், அப்படியொரு விஷயம் இது. "மாற்றான்' படத்தில் நான்கு விதமான மெத்தேட் கையாளப்பட்டது. எல்லாம் சோதனை முயற்சிதான் என்றாலும் சிறப்பாக செய்யப்பட்டது.






 முதலில் ரொம்பவும் பக்கத்தில் கேமராவை வைத்து எடுத்தோம். அடுத்து தூரத்தில். மூன்றாவது விஷயம் சூர்யாவின் முகத்தின் எக்ஸ்பிரஷனை மட்டும் எடுத்தோம். இது 3டி முறையில் எடுக்கப்பட்டது. நான்காவதாக முழு உடலையும் ரீப்லேஸ் பண்ணி எடுத்தோம். இந்த நான்கு மெத்தேட்களும் ஐந்து கேமராக்களில் ஷூட் செய்யப்பட்டது. ஒரு சூர்யாவின் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, மறுபடியும் முடி எல்லாம் வளர்ந்த பிறகு ஐந்து மாதம் கழித்து அதே ஷாட்களில், அதே வெளிச்சத்தில் மரம், செடி, கொடி எதுவும் மாறாமல் எடுக்கவேண்டும். இதில் இருக்கும் இன்னொரு அட்வான்டேஜ், சூர்யாவின் அசைவுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மற்ற கோண கேமராவில் சரி செய்துகொள்ள முடியும்.







உங்கள் பார்வையில் ஒளிப்பதிவுக்கான இலக்கணம் என்ன? 






சினிமாவுக்கு இருக்கும் இலக்கணம்தான் இதற்கும். மனிதனின் கண் எப்படிக் காட்சிகளைக் காண்கிறதோ அதுபோலவே கேமராவின் கண்களும் இருக்கவேண்டும். கண்கள் 180டிகிரி கோணத்தில் ஒரு காட்சியைக் காணுமானால் கேமராவும் அதைத்தான் செய்யவேண்டும். மீறினால் காட்சி கொலாப்ஸ் ஆகிவிடும். கதையை மீறி ஒரு விஷயம் இல்லை. கதையுடன் ஒளிப்பதிவு போட்டி போடலாமே தவிர, கதையை அது மீறக்கூடாது. சினிமா என்பது ஒரு மீடியம். அதற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழிதான் சினிமா மொழி. அதைப் புரிந்து கொண்டால் ஒளிப்பதில் சுணக்கம் இருக்காது. ஆனால் கதை பயணிக்கும் விதத்தில் சில நேரம் இலக்கணத்தை உடைக்கலாம். அதுவும் கூட கன்னாபின்னாவென்று இருக்கக்கூடாது. இலக்கணத்தைப் புரிந்து கொண்டு உடைப்பதாக இருக்கவேண்டும்.






ஒரு படத்தில் ஒளிப்பதிவாளர் பேசப்படும் இடம் என்று குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?






அந்தக் காலத்தில் சண்டைக் காட்சிகள் வந்தாலே அதைப் பெரிதாக பேசுவார்கள். என்னைக் கேட்டால் ரசிகர்கள் எம்.ஜி.ஆரை அதிகம் விரும்பியதற்கு சண்டைக் காட்சிகள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். கதைக்கு உதவி செய்கிற எந்த ஒளிப்பதிவும் கண்டிப்பாக பேசப்படும். "பீட்சா' ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு சுமார் முப்பது நிமிட காட்சிகளை அபாரமாக எடுத்திருந்தார்கள். 


அதே போலத்தான் "மாற்றான்' படத்திலும் ஒட்டிப்பிறந்தவர்களாக இருக்கவேண்டுமே தவிர, ஒட்ட வைத்துப் பிறந்தவர்களாக இருக்காத அளவுக்கு வடிவமைத்திருந்தோம்.




 அதனால்தான் அது பேசப்பட்டது. இதில் இருந்த ஒர்க் மிகப் பெரியது. இது சக ஒளிப்பதிவாளர்களுக்குத்தான் தெரியும். மக்களுக்குத் தெரியாது. அந்த தெரியாத இடம்தான் ஒளிப்பதிவின் வெற்றி.பொதுவாக, ஒரு படத்துக்கு நார்மலாக உழைக்கும் விதத்தைவிட கூடுதலாக இருபது, முப்பது சதவிகிதம் உழைத்தால் அதுவே நல்ல ஒளிப்பதிவுதான்.






நீங்கள் ரசித்து செய்த படங்கள்?





எல்லாமேதான். நான் முதலில் ரசித்தால்தான் அந்தப்படத்தை மற்றவர்கள் ரசிக்கும்படி நன்றாக செய்யமுடியும். இருந்தாலும் தெலுங்கு "பில்லா', "அறை எண் 305ல் கடவுள்', இப்போது "மாற்றான்' இவை நான் அதிகம் இன்வால்வாகி செய்த படங்கள்





.அழகே இல்லாத நடிகைகளைக்கூட படத்தில் அழகாக காட்டுகிறீர்களே ஒளிப்பதிவில் என்ன மேஜிக் செய்கிறீர்கள்? 






நடிகைகளை அழகு படுத்த சினிமாவில் இன்று அதிக வித்தைக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஏனென்றால் நம் இந்திய சினிமா அப்படியிருக்கிறது. இங்கு அவர்களை சுற்றித்தான் கதைகள். முகம், நகம், முடி என்று தனித்தனி அழகுகலை நிபுணர்கள் இருக்கிறார்கள். 


இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஒளிப்பதிவிலும் நாங்கள் அழகை அள்ளித் தெளிக்கிறோம். ஸ்டார் படம் பண்ணும்போது, நடிகைகளை அழகாக காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காக கொஞ்சம் மெனக்கெடுவோம். ஆனாலும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு சில பிளஸ் இருக்கும். அதனை மேலும் பிளஸ் ஆக்கவேண்டும். கூடுமானவரை ரியலாகவும் இருக்கவேண்டும். அதற்கு லைட்டிங் கரெக்ஷன் மிக முக்கியம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்






.உங்களைப் பாதித்த சிறந்த ஒளிப்பதிவு படம் எது?





நிறைய இருக்கிறது. வித்ரோ ஸ்டோரா பண்ணிய படங்கள் எல்லாமே என்னைப் பாதித்த படங்கள்தான். பி.ஸ்ரீ.ராம் செய்த "அலைபாயுதே' படம் ரொம்ப பிடிக்கும். "இதயத்தைத் திருடாதே' படத்தின் பனி கூட கேரக்டராக மாறி நடித்திருக்கும். ரசிகர்களுக்கு வெளிப்படையாக இது தெரியாது. ஆனால் அந்தக் காட்சிகள் உள்ளே ஏறியிருக்கும். இயற்கையைச் சேர்த்து கேரக்டராக மாற்றித் தரும் ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கும். இதுதான் சிறந்த ஒளிப்பதிவு. திருவல்லிக்கேணி ரோட்டைக் காண்பித்தால், அந்த ஏரியாவே உங்கள் உள்ளுக்குள் பயணம் செய்யவேண்டும். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போது அதில் ஒரு இன்ஸ்பிரேஷன் வரும்.






சக ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்?





கதிர், மதி, வேல்ராஜ், ஆர்.டி.ராஜசேகர், "பீட்சா' கோபி அமர்நாத், "ஆரண்ய காண்டம்' பி.எஸ்.வினோத் இவர்களுடைய ஒர்க் எல்லாம் எக்ஸலண்ட்டாக இருக்கும். இவர்களுடைய படத்தைப் பார்க்கும் போது எனக்கும் உற்சாகம் பிறக்கும். நாமும் இப்படிப் பண்ண வேண்டும் என்று தேன்றும்







.பெரிய இயக்குநரிடம் ஒரு ஒளிப்பதிவாளராக கதை கேட்கும் போது, பிடிக்காமல் இருந்தால் என்ன செய்வார்கள்?






படம் நன்றாக இருக்காது என்று தெரிந்தால் யாருடைய படமாக இருந்தாலும் விட்டுத்தள்ளவேண்டியதுதான். ஆனால் நல்லவேளையாக எனக்குத் தமிழில் அப்படி அமையவில்லை. தெலுங்கில் இரண்டு படத்தை அப்படி ஒதுக்கியிருக்கிறேன்.






 நீங்கள் லொக்கேஷன் தேர்வு செய்யும் விதம் பற்றி? 







எனக்கு மட்டுமில்லை, எந்த ஒளிப்பதிவாளருக்குமே கதை சொல்லும் போதே அதன் விஷுவல் மனதில் ஓடவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மலை உச்சியில் தன்னந்தனியாக ஒரு மரம் இருக்கிறது என்று காட்சியிருந்தால் நாம் அதற்காக நிறைய தேடணும். கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அல்லது கிடைத்ததே கூட காட்சிக்கு பொருத்தமின்றிப் போகலாம். அப்போது செட் போட்டுத்தான் எடுக்க நேரிடும். ஒரு கதையை காட்சியாகவும், அதே நேரம் உயிரோட்டமாகவும், புதுமையாகவும் கொண்டுவரும் வரை லோக்கேஷனுக்கு முடிவே கிடையாது. நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனை காட்சியாக வரும் வரைக்கும் உழைக்கவேண்டும்.






நீங்கள் கனவு காணும் ஒளிப்பதிவு?







பிரீயட் படம் பண்ணவேண்டும். அது பழமையானதாகவோ, அல்லது 1800களில் இருப்பதாகவோ, சுதந்திர போராட்ட காலத்தியதாகவோ இருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அந்தக் காலத்து கறுப்பு - வெள்ளை புகைப்படங்களை சின்ன வயதிலிருந்தே நான் ரசிப்பேன். அதனை விஷுவலில் அழகாக அப்படியே கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை.





 நீங்கள் ஒளிப்பதிவு செய்த படங்களில் எந்தப் படத்துக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது? 






"கனா கண்டேன்', "பில்லா' (தெலுங்கு), "மாற்றான்'





.இப்போது பணி செய்துகொண்டிருக்கும் படங்கள்?




தமிழில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் "இசை'. தெலுங்கில் இரண்டு படங்கள். 
 நன்றி - தினமணி 

Friday, October 12, 2012

மாற்றான் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIpDjl6f40hGZPHKPdTi9s1sDrvmq8lI15fyePXbnhQZm10lKCn45lKwglrQB_yyInG4Gf0Ty3uDYqbF7Dpv63dpRWDGlQobrODRO4p0RLyLLY2rwazrDLoSalEkUIT62xF-uGiMqom-gk/s1600/Maatran+Audio+cover+Stills+(2).jpg

ஹீரோவோட அப்பா பெரிய  பேபி மில்க் பிராடக்ட் ஓனர். வெற்றிகரமா தொழில்ல முன்னேறியவர்.அவர் எப்படி மற்ற போட்டி கம்பெனிகளை எல்லாம் சர்வசாதாரணமா அடிச்சு முன்னேறுனார்ன்னு எல்லாருக்கும் ஒரு குழப்பம்.அப்போ ஒரு ஃபாரீன் லேடி பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்ற போர்வையில்  அவர் கம்பெனிக்கு வந்து அவரை பேட்டி எடுக்கற சாக்குல  தொழில் ரகசியம் , அந்த பால் ஃபார்முலா ரகசியம் எல்லாம் தெரிஞ்சுக்கறா. 


இப்போ ஒரு திருப்பம். அந்த ஃபாரீன் லேடி பிரஸ் ரிப்போர்ட்டரும் இல்லை, போட்டி கம்பெனியும் இல்லை. ஃபாரீன் உளவாளி.ஹீரோவோட அப்பா தான் வில்லனே.

ஒலிம்பிக்ல  நடக்கும்  விளையாட்டு போட்டிகளில் யூ எஸ் பல தங்க பதக்கங்கள் வாங்க குறுக்கு வழியா ஊக்கமருந்து கண்டு பிடிக்கறார். சோதனைல யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஃபார்முலா . அந்த ஃபார்முலா சக்சஸ் ஆகி யு எஸ் அவரை கொண்டாடுது. அந்த ஃபார்முலாவை கொஞ்சம் சேஞ்ச் பண்ணி குழந்தைகளுக்கான பால் பவுடர்ல மிக்ஸ் பண்றாரு. 


 இதன் படி பசுக்கள்  2 மாதத்தில் வாழ்நாள்ல எவ்வளவு பால் கறக்க முடியுமோ அத்தனையும் கறக்கலாம். ஆனா பிற்காலத்துல இது ஆபத்து . ஒரு தலை முறையையே பாதிக்கும். சொந்த அப்பாவா இருந்தாலும் எப்படி பையன் அந்த சதியை முறியடிக்கறான் என்பதே கதை.. 



படத்தோட முதல் ஹீரோ எழுத்தாளர் சுபாதான். படத்தின் கதை வசனம் எல்லாம் அவர் தான். ஆனா டைட்டில்ல வசனத்துக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.. படத்துல ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு.. சுவராஸ்யம் கருதி அதெல்லாம் சொல்லலை,.,. படத்தின் முன் பாதி வேகம் பின் பாதில  அது மிஸ்சிங்க்... 


ஹீரோ சூர்யா ட்வின்ஸ்ஸா வரும்போது இரு மாறுபட்ட கேரக்டர்ஸ்க்கான வேறுபாட்டை வழக்கம் போல் நல்லா காட்டி இருந்தாலும் இடைவேளை டைம்ல இருந்துதான் அவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகுது..  சண்டைக்காட்சிகளில் பல இடங்களில் சாகசம் காட்டி இருக்கார். ஏழாம் அறிவு பாதிப்பு ஆங்காங்கே இருக்கு அவர் நடிப்பில் . குறிப்பாக சண்டைக்காட்சிகளில்// . ஆனால் ஏழாம் அறிவில் விட்டதை இதுல பிடிச்சுட்டார்னு சொல்லலாம்../ 


ஹீரோயின் கா ஜில்  வாவ் லால் சாரி காஜல் அகர் வால்.. ஒரு டன் கனகாம்பரப்பூக்களை ராட்சச மிக்சில அரைச்சு செய்யப்பட்ட மினியேச்சர்  பீட்ரூட் அல்வா அவர் உதடு. வாழை மரத்துக்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட மாதிரி அவர் இடுப்பு ஐ மீன் இடை.. அவர் ஸ்லோ மோஷன்ல ஓடி வரும்போது பேக் கிரவுண்ட்ல  ”துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு”  பாட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்.. நடிப்பு சொல்லிக்கற அளவு இல்லைன்னாலும் ஜொள்ளிக்கற அளவு இருக்கு. இது போதாதா? தமிழ் நாட்டின் சி எம் ஆகவே ஆகலாம்..





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்டக் ஆன் யூ ஆங்கிலப்பட காப்பின்னு படத்தோட  ஸ்டில் வெளியானதும் தகவல் பரவியதும் படத்தோட கதையை அவசர அவசரமா மாத்தி  சரியா செட் ஆகற மாதிரி செஞ்சது.


2. சாருலதா படத்தின் சாயல் அந்த ட்வின்ஸ் பிரிப்பு  , ஒருவர் உயிர் துறப்பு மேட்டர்ல இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்காதவாறு திரைக்கதை அமைத்தது.


3. ஒளிப்பதிவு . லொக்கேஷன்கள் கலக்கலாய் அமைச்சது. கோ படத்துல பாடல் காட்சிகள் எப்படி சிலாகிக்கப்பட்டனவோ அதே போல் அந்த ஒற்றைப்பாறை காட்சி , மலை அருவிகள் இயற்கைக்காட்சிகள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது


4. படத்துல ஏகப்பட்ட திருப்பு முனை காட்சிகள். சில யூகிக்க முடிந்தவை , சில எதிர்பாராதவை. ஒரு நாவல் ஆசிரியர் எழுத்தை நம்பினார் கை விடப்படார் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை நிலை நிறுத்தியது


5. படத்தின் கதை அனுமதித்தும் ஹீரோ டாமினேஷனோ பஞ்ச் டயலாக்சோ இல்லாமல் இது டைரக்டர் படம் என சொல்ல வைத்தது.


6. ஹீரோவுக்கு  ஹீரோயின் எட்டாக்கனி என்பதை யாரும் கண்டு பிடிக்காத முறையில் கேமரா கோணங்களை வைத்தது..

7. பேசிக் இன்ஸ்டிங்க்  ஹீரோயின் ஷெரன் ஸ்டோன்  சாயலில் ஒரு ஃபாரீன் லேடியை சிறப்பாக நடிக்க வைத்தது , கா”ஜில்” அகர்வால் தக்கபடி உபயோகித்தது


8. ஆர்மர் ஆஃப் காட் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை நினைவு படுத்தும் ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சபாஷ் .அந்த மரக்கிளை சீன் ஓக்கே.





 இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே  ஹீரோ ஸ்லிப் ஆகி  கீழே விழுவது போல் அமங்கலமான  சீன் எதுக்கு? சூர்யா ர்சிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் பார்க்குமே?



2. சூர்யாவோட அப்பா தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில் பாத்ரூம் கதவை தாழ் போடாமல் இருப்பது ஏன்? தற்கொலை செய்பவர்கள் முதலில் செய்யும் காரியமே கதவை உள் பக்கம் தாழ் போடுவதுதானே? 


3. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளிகள் பாத்ரூமில் ஒளிச்சு வெச்சு சாப்பிடும் காட்சி உவ்வே + பல படங்களில் வந்தவை 


4. காஜில் அகர்வாலுக்கு அந்த  சோடா புட்டி கண்ணாடி பார்ட்டி செந்தமிழில் காதல் கடிதம் தருவது அந்நியன் அக்மார்க்  விக்ரம் ஸ்டைல். இதை சமாளிக்க ஹீரோயினே என்ன அந்நியன் ஸ்டைலா? என்ற வசனம் வேறு 



5. ஃபாரீன் லேடி  மில்க் கம்பெனிக்கு வந்து சர்வ சாதாரணமா டாக்குமெண்ட்சை ஃபோட்டோ எடுப்பது எப்படி? மேஜை டிராயர்க்கு லாக் எல்லாம் கிடையாதா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஃபார்முலாவை இப்படித்தான் அலட்சியமாய் தொறந்து போட்டுட்டு போவாங்களா? அது என்ன நமீதா ஜாக்கெட்டா? 


6. சூர்யாவோட அப்பா அந்த ஃபாரீன் லேடியை உளவாளின்னு கண்டு பிடிச்சதும் குஜராத் போகும்போது ஏன் தன் பசங்க கிட்டே அவ பற்றி எச்சரிக்கை  பண்ணலை? நான் இல்லாத சமயம் இவ வந்தா சேர்க்காதீங்க.. அப்டினு ஃபோட்டோ காட்டி இருக்கலாமே? அதே போல் கம்பெனி மேனேஜரிடம் அந்த ஃபாரீன் லேடி பற்றி எச்சரிக்கவே இல்லையே?


7. ஃபார்முலா சீக்ரெட் தந்த பின் மொத்தமா பணம் தராம அந்த ஃபாரீன் லேடி ஏன் தவணை முறைல பணம் தர்றா? கையில காசு வாயில தோசை ஃபார்முலாவை ஃபாலோ பண்ணலை , ஏன்? 





8. படத்தோட ஹீரோ சூர்யா என்ன ஷகீலாவா? அவர் குளிக்கறதை ஏன் விலா வாரியா காட்டனும்? ட்வின்ஸ் எவ்வளவு சிரமப்படறாங்க என்பதை காட்டத்தான் குழந்தையா இருந்தப்ப , சிறுவனா இருந்தப்போ காட்சிகள் வெச்சாச்சே? ஒரு வேளை கமல் மாதிரி பாடியை காட்டியே தான் ஆவேன்ன சூர்யா  அடம் பிடிச்சாரா?


9. ஃபாரீன் லேடி தன் ஹேண்ட் பேக்ல முக்கியமான ஆதார ஃபோட்டோக்களை அசால்ட்டா டேபிள்ல வெச்சுட்டு ஏதோ ஃபோன் வந்ததுன்னு அதை அப்படியே சூர்யா முன்னாடி வெச்சுட்டு அந்த பக்கம் போவது ஏன்? நானா இருந்தா அந்த பேக்கையும் கையில எடுத்துட்டு போய் இருப்பேன் 


10. தன் சொந்தக்குழந்தையை கொலை பண்ண முடிவு எடுக்கும் சொந்த அப்பா அதுக்கு ரொம்ப ஈசியான வழி 2 பேரும் தூங்கும்போது கொல்வதே. அதை விட்டுட்டு ட்வின்ஸ்ல ஒரு ஆள் விழிச்சிருக்கும்போது எந்த லூஸ் அப்பாவாவது  இன்னொரு குழந்தையை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரா? அந்த குழந்தை அம்மா கிட்டே சொல்லிடும்னு தெரியாதா? 


11. திருப்பத்துக்கு மேல் திருப்பம்  வேணும்கறதுக்காக க்ளைமாக்ஸ்ல சூர்யாவின் ”ராவணன்” ரகசியம் தேவையா? 


12. படத்துக்கு முக்கியமான காட்சியான ஃபாரீன் லேடி பென் ட்ரைவரை விழுங்குவது நம்ப்ற மாதிரியே இல்லையே? அதெப்பிடி தண்ணீர் இல்லாம ஒரு பென் டிரைவரை விழுங்க முடியும்? 


13. வில்லன் ஃபோன் நெம்பரை சூர்யா கண்டு பிடிச்சதும், மேனெஜர் கிட்டே  அந்த நெம்பரை சொல்லி ஃபோன் போடுங்க அப்டினு சொல்லும்போது வில்லன் டக்னு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்கலாமே? ஏன் பேக்கு மாதிரி மாட்டிக்கறான்? டக்னு பேட்டரியை கழட்னாக்கூட போதுமே? 


14. மெடல் லேடி கிட்டே சூர்யா  ஹோட்டல்ல ஹால்ல எல்லாரும் பார்க்கும்போது லேப்டாப்பை ஓப்பன் பண்ணி அந்த ரகசியத்தை பற்றி டிஸ்கஸ் பண்றாரு. ஏன்? வில்லன் பார்க்கட்டும்னா? தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் செய்ய வேண்டியதுதானே? 


15.   காஜல் அகர்வால் லவ் பண்ணுன ஹீரோ சூர்யா ஆள் அவுட். அவரோட இதயத்தை பொருத்திய இன்னொரு சூர்யா தான் இப்போ உயிரோட . அதாவது நீ வருவாய் என படத்துல அஜித் கண்கள் ஆர் பார்த்திபன் கிட்டே பொருத்தப்பட்டதும் தேவயானிக்கு ஒரு குழப்பம் வருமே அந்த மாதிரி காஜல்க்கு நோ குழப்பம். எவனா இருந்தா எனக்கென்ன? சம்பளம் குடுத்தா சரி அப்டிங்கற மாதிரி லவ்வறது சரியா? கொஞ்சமாச்சும் தடுமாற்றம் , யோசனை வராதா? 


16. ஹீரோ அந்த மெடல் லேடி கிட்டே லேப் டாப் வெச்சு விளக்கிட்டு இருக்காரு. தத்தி வில்லன் மேனேஜர் விளக்கு பிடிச்ச மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு. மேலிடம் சொல்லித்தான் எதுவும் செய்வாரா? அவருக்குன்னு மூளை இல்லையா? அட்லீஸ்ட் அந்த ஆதாரத்தை லேப்டாப்பை பிடுங்கி இருக்கலாமே? 


17.தன் அப்பா தான் வில்லன்கற மேட்டர் தெரிஞ்சதும் சூர்யா ஏன் காஜல் கிட்டே அந்த மேட்டரை சொல்லலை?  ஆதாரம் அவ கிட்டே இருக்கு, அவ தன் அப்பா கிட்டேயே போய் குடுத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்க மாட்டாரா? ( அப்டித்தான் நடக்குது )

 


மனம் கவர்ந்த வசனங்கள் ( ரைட்டர் சுரேஷ் பாலா -சுபா)

1.காதலிச்ச யாராலும் கவிதை எழுதாம இருக்க முடியாது .கலீல் ஜிப்ரான் கவிதை படிச்சவங்க யாரும் காதலிக்காம இருக்க முடியாது



2.  உங்க 2 பேருக்கும் கனவு ஒண்ணாதான் வருமா? இதயம் மட்டும்தான் ஒண்ணு ,மத்த ஆல் பார்ட்ஸ் தனித்தனி கி கி



3. போட்டின்னு வந்துட்டா டீல் பண்ணனும் ,பீல் பண்ணக்கூடாது



4. எனக்கு இதயம் இல்லாம இருக்கலாம் ,ஆனா மனசுல ஈரம் இல்லாம இல்ல


5. நீ அரியர்ஸ் வெச்சிருந்தியே , என்னாச்சு? என்ன கண்டிஷன்ல இருக்கு?


 கஜினிங்கறதை  இதுல காட்றான்



6. லேடி - 8 வயசுல இவன் என்ன பண்ணான் தெரியுமா?

 ஆண்ட்டி.இதெல்லாமா சொல்வாங்க?






7. காஜல் - நான் இப்போ மப்புல இருக்கறதால  எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது போல//


 நோ நோ. உங்களுக்கு நாலு நாலா தெரிஞ்சா தான் தப்பு


8. எனக்கு டயபடிஸ் இருக்கு.. நானும் பாத்ரூம் போகனும்



 எனக்கு லெக் பீஸ்




9. பாரதியார் யார்னு தெரியுமா?


 ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு  பாடுனவர் தானே?


 அது கண்ண தாசன்




10. ஏம்மா? நீ போஸ்ட் பெயிடா? ப்ரீ பெய்டா?


-------


 அய்யோ அம்மா.. விடும்மா என்னை மன்னிச்சுடு


 இப்போ உன் கனெக்‌ஷன் ஆஃப் பண்ணிட்டா பார்த்தியா?




11. இவன் தான் உன் லவ்வரா? எங்கே பிடிச்சே? 1 வாங்குனா 1 ஃப்ரி மாதிரி..



12. இது நீ கட்டிக்கப்போற பொண்ணா?



 ஆமா, எப்டி தெரியும்?




 கண்ல பார்த்தாலே அது தெரிஞ்சுடும்









எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBd9rtjAch64_OPY7r3dxTmp4wvjCh1oVF3Eol1O2_gtK6IGI-TnomfDwuiEn-MP-qbjcajHBjMY3LNKb0-NROjsk-DzPEhHia7zxdmg-f_5dNaGnvRtlSlSDCHX9Sg-KuaauuTDd68TBU/s1600/kajal-agarwall19.jpg



சி.பி கமென்ட் - முன் பாதி வேகம் பின்பாதில இல்லைன்னாலும் இது கவனிக்கத்தக்க படமே. பெண்கள், சூர்யா ரசிகர்கள் என எல்லா தரப்பையும் கவரும். ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


இந்தபடத்தில் பணி ஆற்றிய இயக்குநர், ஹீரோ , ஹீரோயின் பேட்டி மற்றும் பாடல் வரிகள் விபரமாய் படிக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_9785.html



http://searchandhra.com/english/wp-content/uploads/2009/08/Kajal-Agarwal-Photo-Gallery-Latest-hot-7.jpg

Thursday, October 11, 2012

மாற்றான்

http://www.tamil.cinebuzzz.com/img_previews/6b.jpg

இது மாற்றான் படம் பற்றிய முன்னோட்ட பார்வை + தொழில் நுட்ப கலைஞர்களின் பேட்டி தான்.


 மாற்றான் விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/blog-post_12.html

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.



அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.









அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.



ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.


அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!



மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.



இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.



.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.



ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.



மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.



ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!


http://www.tamilcloud.com/wp-content/uploads/2012/07/Maatran-movie-stills-_2_-2.jpg



மாற்றான் திரைப்படம் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவலும் அல்ல... ஒரிஜினல் கதை... சமூக நலன் சார்ந்தது, என்று நடிகர் சூர்யா கூறினார்.



ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம், `மாற்றான்.' காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.



இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது படத்தின் ஹீரோ சூர்யா பேசுகையில், "இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், `மாற்றான்.'



இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் `மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.


இது, ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை,'' என்றார்.



அவரிடம், 'படத்தில் இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?' என்று கேட்டனர் நிருபர்கள்.


அதற்கு சூர்யா, 'ஒரே சம்பளம்தான் வாங்கினேன்,' என்றார் சிரித்தபடி.


இயக்குநர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


சூர்யாவின் மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.


கேவி ஆனந்த் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள மாற்றான் படம், ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக இருந்தது.


இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யாவும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


மாற்றானின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமை மற்றும் தமிழ் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஈராஸ்.


அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "பிராந்திய மொழி சினிமாவில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டும் வகையில் மாற்றானை வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களை வாங்கி வெளியிட உள்ளோம்," என்றார்.






 1.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர்
பாடல்: மதன் கார்க்கி

கால் முளைத்த பூவே
என்னோடு பலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.







2. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக்,ப்ரியாஹிமேஷ்
பாடல்: தாமரை

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?

நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று

கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்

நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்






3. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பிராங்கோ,சத்யன்,ஆலாப்ராஜு,சாருலதாமணி,சுசிச்ரா  
பாடல்: பா.விஜய்

இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

this is how we like to do it
this is how we like to do it

உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..







4. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,கார்த்திக்,ஷ்ரேயா கோஷல்
பாடல்: விவேகா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தோடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்






5.படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:க்ரிஷ்,பாலாஜி,மிலி,ஷர்மிளா
பாடல்: நா.முத்துக்குமார்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
வருடம் உருண்டசு
இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
இது எதுவோ ? அட பூவும் தலையும்
சேர்ந்த பக்கம் பொதுவோ

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

இவள் வார்த்தை மழை துளியாக
அவள் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக
நதிபோலே இவன் மனம்போக
பெரும் புயல் போலே அவன் செயல் போக
யார் இங்கே இணையாக ..
இவள் கண்ணாடி அவன் முன்னாடி
தரும் உருவம்
இது பிரிந்தால் கூட
ஒன்றாய் நின்ற்கும் உருவம்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே


நன்றி - மாலை மலர், தட்ஸ் தமிழ்,தமிழ் பாடல் வரிகள்,தினமலர், தினகரன், நக்கீரன்,கல்கி

விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

சுள்ளென்று இருக்கிறார் சூர்யா. 'மாற்றான்’ திருப்தியாக வந்த சந்தோஷத்தில், முறுக்கிய போலீஸ் மீசையில் 'சிங்கம் 2’-க்குத் தயாராகும் ஆர்வம் கண்களில் தெரிகிறது.



 ''இரட்டையர் படம்னு ஈஸியா சொல்றீங்க. ஆனா, அது அத்தனை ஈஸி இல்லைங்க. ஒட்டிப் பிறந்தவங்களைப் போய் பார்த்தேன். ஒண்ணு மலர்ந்து சிரிச்சா, இன்னொண்ணு முகம் சிவக்குது. ஒண்ணு தூங்கும்போது, அடுத்தது சத்தம் போட்டு அழுது அடம்பிடிக்குது. முதல்ல... இது பரீட்சைனு தோணுச்சு. அப்புறம் பார்த்தா, ஜாலி, கேலி, சந்தோஷம், வேதனை, ஆட்டம் பாட்டம்னு ஒரு எம்.ஜி.ஆர். பட பேக்கேஜ் வந்துடுச்சு.



 ஒரு வசனம் பேசுறதைக்கூட கே.வி.ஆனந்த் சார் சாதாரணமா எடுத்துக்க மாட்டார். நக்கலா, அலட்சியமா, கோபமா... தேவைப்படுற டோன்ல சொல்லவெச்சு, சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டுபோய்டுவார். 'மாற்றான்’ படத்தின் முதல் ரசிகன் நான்தான்.''




''சம்பளம், படங்களின் வியாபாரம், நல்ல அபிமானம்... ரஜினி, கமலுக்கு அடுத்த பட்டியலில் வந்துட்டோம்னு தோணுதா?''




''நாம மரியாதை வெச்சிருக்கிறவங்களே, நம்மிடம் நீங்க நல்ல இடத்தில் இருக்கீங்கன்னு சொல்றப்போ, 'ஒழுங்கா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்’கிற திருப்தி வருது.



ஆனா, அதுக்கு மேல தலையில எதையாவது ஏத்திக்கிட்டா, அது கஷ்டம். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் எல்லாப் படங்களும் ஹிட் ஆகணும்.



அதில் என் படங்களும் இருக்கணும். ஒரு ரசிகனா இதுதான் என் எதிர்பார்ப்பு. எனக்கு விஜய், அஜித் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். எல்லாருக்கும் இங்கே இடம் இருக்கு. அவங்கவங்க பாதையில் அவங்கவங்க ஓடிக்கிட்டு இருக்காங்க. என்கிட்ட சோம்பேறித்தனம் கிடையாது. தந்திரம் இல்லை. கொஞ்சம் கோபப்படுவேன். அதை மட்டும் குறைச்சுக்கணும். இப்போ எல்லாத்தையும் காது கொடுத்துக் கேட்கிறேன். என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கேன். என் வெற்றி முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அந்த ஒரு விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன்.''



''சிம்பு, தனுஷ், 'ஜெயம்’ ரவி, ஆர்யானு உங்களுக்கு அடுத்த வரிசையும் ஆரோக்கியமா இருக்கு. அவங்க படங்களைப் பார்க்கும்போது என்ன தோணும்?''



''அதெல்லாம் மதிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதி வந்துட்டதா நான் நினைக்கலைங்க. '3’ படத்தில் தனுஷின் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவ்வளவு எனர்ஜியோட இருந் தார் ஒவ்வொரு சீன்லயும். ஜாலியா நடிக்கி றதுன்னா அசால்ட்டா பின்றார் ஆர்யா. அவ ரால சீரியஸாவும் நடிக்க முடியும். அதை அவர் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.



 'சுந்தரபாண்டியன்’ல சசிகுமார் ரொம்ப யதார்த்தமா, லவ்லியா நடிச்சிருக்கார். இதெல்லாம் போக... சமீபத்தில் பார்த்ததில் 'பர்ஃபி’ படம் ரொம்பப் பிடிச்சது. இவ்வளவு சின்ன வயசில் ரன்பீர் கபூர் அப்படி அசத்தியிருக்கிறதைப் பார்த்தா, நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கலையேனு தோணுது. இன்னும் நிறைய தூரம் போகணும்.''




''ஹீரோன்னா ஹீரோக்கள்பத்தி மட்டும்தான் பேசுவீங்களா... ஹீரோயின்கள்பத்தியும் பேசலாமே?''



''காஜல் ரொம்ப இன்டெலிஜென்ட். ரஷ்ய மொழியில் பேச வேண்டிய சூழலில் ரொம்ப சுலபமாக் கத்துக்கிட்டுப் பேசினாங்க.  'மாற்றான்’ல இரண்டு ஆண்கள். அவங்கள்ல ஒருத்தனோட பழகுற பொண்ணுனு கொஞ்சம் சிக்கலான கேரக்டர். அதை அவங்க சமாளிச்சு நடிச்ச விதம்... செம ஸ்மார்ட்!



அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. யாரும் அவங்ககிட்ட பழகலாம். எல்லார்கிட்டேயும் சமமாப் பழகுவாங்க. யோகா டீச்சர்ங்கிறதால ஹெல்த் டிப்ஸ் நிறையக் கொடுப்பாங்க. ஸ்ருதிகிட்ட இன்னும் நிறையத் திறமைகள் இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் துணிச்சலா தனக்கான அடை யாளம் தேடிக்கிறது ஸ்ருதி ஸ்டைல். ஒரு சமயம் பாடினாங்க. அதில் நல்லா ட்யூன் பண்ணிட்டு மியூஸிக் ஆல்பம் வரைக்கும் வந்தாங்க. இப்போ பாருங்க... சினிமாவில் க்ளீன் க்ரீன் ஹீரோயினா வந்து நிக்கிறாங்க. சூப்பர்ல?!''


 நன்றி - விகடன்



கே வி ஆனந்த் பேட்டி







சூர்யா - கா” ஜில் ”அகர் வால் பேட்டி



Thursday, August 04, 2011

ஏழாம் அறிவு மெகா ஹிட் ஆகும் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி VS விகடன் காமெடி கும்மி

http://www.thedipaar.com/pictures/resize_20100830141958.jpg

இது 2,000 வருட ரகசியம்!

ஏழாம் அறிவு ஆல்பம்


மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தைத் தமிழ் கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது


''140 நாட்கள் ஷூட்டிங்...  நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன்.



 சி.பி - இதே டயலாக்கைத்தான் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்கறப்பவும் சொன்னாரு.. பார்ப்போம்.. 



தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பிரமாதமா வந்திருக்கு படம்!''


சி.பி - ஆனா ஒரு மெகா ஹிட் கொடுத்தவர் அடுத்து வர்ற படங்கள்ல அடக்கி வாசிக்கறது தான் தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட்.. உதா சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் , பாட்ஷா

 சி.பி - இந்த ஸ்டில்ஸை பார்த்தா புதுமைப்பித்தன் ஆர் பார்த்திபன் கெட்டப் தான் நினைவு வருது,  விக் நல்லாவே தெரிது, துருத்திட்டு இருக்கு, ஆனா சிக்ஸ் பேக் சூப்பர்.. வெல்டன் சூர்யா,வெல் நாட் டன் மேக்கப்மேன்

1.'' 'ஏழாம் அறிவு’ன்னா என்ன?''
'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். 

 சி.பி - அய்யய்யோ, பீரியட் ஃபிலிமா? கொஞ்சம் கஷ்டம் தான்.. 


அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!''


சி.பி - அண்ணன் சொல்றதைப்பார்த்தா அப்போகாலிப்டாவை கொஞ்சம்,காட்ஸ் மஸ்ட் பீ க்ரேஸி கொஞ்சம் உல்டா பண்ணீட்டார் போல. 

http://pirapalam.net/wp-content/uploads/2010/11/Shruti-Haasan-_12__001.jpg


'2. 'நீங்க சொல்றதைப் பார்த்தா... சூர்யாவோட கேரியர்ல பெஸ்ட் படமா இருக்குமா?''

''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''


சி,.பி - எனக்குள் ஒருவன் கமல் கெட்டப் மாதிரி இருக்கும்னு நினைக்கறேன் .


3. ''ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம். எப்படி இருக்காங்க?''

சி.பி - அவங்க எப்பவும் போல் லோ ஹிப்ல , லோ கட்ல தான் இருக்காங்க. ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கலை? அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு போல.. 


''சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை. அவங்களுக்கு எல்லாமே பெரிய பெரிய டயலாக்ஸ். கமல் சார் பொண்ணுனு நாங்க சலுகை காட்டலை. அவங்களும் அதை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை அழகாக் கொடுத்து இருக்காங்க. தமிழில் திறமையான இன்னொரு ஹீரோயின் ரெடி. அதுவும் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின். சந்தோஷம்தானே!''

சி.பி - பெரிய டயலாக்னா எப்படி? அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டியா?


4. ''ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இசை... பேசப்படுகிற கூட்டணியாச்சே...''


''இதிலும் அப்படியே... படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஆறாவதா ஒரு சைனீஸ் பாட்டு தேவையா இருந்தது. சீன மொழி தெரிந்த ஒரு கவிஞரைத் தேடினோம். அப்போதான் மதன் கார்க்கிக்கு 'சீன மொழி எழுத, படிக்கத் தெரியும்’னு கேள்விப்பட்டேன். அவர்கிட்ட கேட்டா, 'பாட்டே எழுதுவேன் சார்!’னு எழுதிக் கொடுத்தார். ''இது பாட்டுதானா? நாம் சொன்ன விஷயம் எல்லாம் இந்தப் பாட்டில் இருக்கானு குழப்பமா இருந்துச்சு. சீன மொழி தெரிஞ்சவங்ககிட்ட கிராஸ் செக் பண்ணப்போனா, 'அழகான     கவிதைங்க’னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. ரொம்ப சீக்கிரமா அப்பா பெயரைத் தாண்டிடுவார் மகன்!''


சி.பி -அப்போ அந்த சைனீஷ் பாட்டை ரசிகர்கள் எப்படி புரிஞ்சுப்பாங்க?ஸ்க்ரீன்ல தமிழ் லைன் ஓடுமா? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVoSFycCh5UmTwIZMGji1N57EXRu5BNXVWu12xFKD-LXBEYgXNmEb_1LFxuL3Kdl0JP3y0QYAXx_eABfY-TkKS7Uu1QIjLk5VREncaArE6HE0B9LGYlx1fhSZ8Z5EnVcHFfPJRs1FVU1n_/s400/Shruti+Haasan+Barefoot.jpg


5. ''உங்களோட வெற்றிக்குக் காரணம் என்ன?''


''எனக்கு சக்சஸ் பிடிக்கும். சிலர் வெற்றியைப் பார்த்து ஆடக் கூடாது. தோல்வியைப் பார்த்து துவளக் கூடாதுன்னு சொல் வாங்க. நான் அப்படியே ரிவர்ஸ் டைப். வெற்றியைக் கொண்டாடு வேன். தோல்வி கிடைச்சா துவண்டு விழுந்திருவேன். வெற்றி யையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டால், அப் புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி, தோல்வி இரண்டுமே உறைக்கும். தோல்வியில் துவண்டு எழுந்தால் தான், அடுத்து பலமா நிக்க முடியும்.


சி.பி - ஆனா ரமணா ஹிட் கொடுத்தப்ப இதே விகடன் பேட்டில இந்தப்படத்தின் வெற்றி என்னை பாதிக்கவில்லை, எப்பவும்போல் தான் ஒர்க் பண்றேன்னு சொன்னீங்களே?
சினிமாவில் சில விஷயங்கள் நீங்க கேட்காமலேயே கிடைக்கும். அதை ரசிச்சு உள்ளே போய் விழுந்துட்டா, உங்க கதை முடிஞ்சது. நான் சினிமாவை 'கேம்’ மாதிரி நினைச்சு விளையாடு றேன். எனக்கு ஃபைனல் கோல் தான் முக்கியம். இடையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவும் வேண் டாம். என்கிட்டே வெற்றிக்கு வேறு மந்திரம் எதுவும் இல்லை!''


சி.பி - வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் வேணாமா? அதான் சார் வாழ்க்கையில் பெரிய விஷயம்.. 

http://news.top10recent.com/wp-content/uploads/2011/01/Shruti-Hasan-New-hot-photos-1-600x746.jpg