Showing posts with label AJITH. Show all posts
Showing posts with label AJITH. Show all posts

Tuesday, May 01, 2012

அஜித் -ஷாலினி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ( 41)


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 41 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 41 துளிகள் இங்கே...

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.

தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.
http://tamil.cinesnacks.net/photos/movies/Billa-2/ajithin-billa-2-stills-006.jpg

அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.!   ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.

கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
http://www.ajithfanclub.com/wp-content/uploads/2011/10/Ajith-Shalini-Anoushka-Photos-500x375.jpg

பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.

அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.


அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!

வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
http://www.our-kerala.com/newgallery/images/photos/images/anoushka-5.jpg

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!

வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUJjD178qUwpGc-8YVhyphenhyphenB_IxdW9L-fwhC7zjYwzb6JR7EUsub4l2wEfOCf03ZxXD46MfY4m3iNvTEA6qKRGB8DIHEt_-eUb4HLAYc57uC99hzLdkZ8Rlh2ecoYnPVmPt3jddlA2pJ_7hE/s1600/f4.jpg
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!

தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!

அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!

உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!

எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!

மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!

அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!

தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.



http://www.pkp.in/images/a/Shalini%20Ajith%20(6).JPG

thanx - vikatan


டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.

Wednesday, August 31, 2011

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்

http://www.thangameen.com/Images/ContentImages/admin/mangatha-016.jpg 

பொறி பறக்கும் ஒன் லைன்  ஸ்டோரி, மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ,கிளாமர் குயின்ஸ்ஸாக கட்டுடல் கன்னிஸ் 3 முத்தான ஃபிகர்ஸ் , சூப்பர் ஹிட் ஸாங்க்ஸ் 4 இத்தனையையும் கையில் வைத்துக்கொண்டு வெங்கட் பிரபு சிக்ஸர் அடிப்பார் என்று பார்த்தால் ஃபோர் அடிக்கவே தட்டு தடுமாறி இருக்கிறார்..

ஏற்கனவே மணிரத்னம் திருடா திருடா படத்தில் எடுத்த ஒன் லைன் தான்.. 500 கோடி பணம் , அதை அபேஸ் பண்ண அந்தப்படத்தில்  3 கேங்க் , இந்த படத்தில் 2 கேங்க்,ஒரே வித்தியாசம் இந்தப்படத்தில் போலீஸ் ஆஃபீசர்ஸே வில்லன் வேலையை செய்கிறார்கள்.. 

அஜித்துக்கு கொஞ்ச நாள் கேப்க்கு பிறகு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு.. ஆண்ட்டி ஹீரோ..ஆனால் அதற்காக அவர் 40 வயசு கேரக்டருக்கு 50 வயசு மாதிரி ஓவரா நரை முடி காட்டி இருக்க தேவை இல்லை.. டான்ஸ் காட்சிகளில் புது சுறு சுறுப்பு, சில மெனக்கெடல்கள்,வாக்கிங்க் போறதை எல்லாம் குறைச்சு ,இடைவேளை ட்விஸ்ட்டின் போது வாலி சிரிப்பு சிரித்து பல புதிய நடிப்பின் பரிமாணங்களை தொட முயற்சி செய்துள்ளார்.. வரவேற்கலாம்..

திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா, பீமா படங்களோடு ஒப்பீடு செய்கையில் இதில் அவர் மேக்கப் , கெட்டப், நடிப்பு எல்லாம் சுமார் தான்.. பாடல் காட்சிகளில் கூட அவரால் சோபிக்க முடியாமல் போனது சோகமே... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/08/Mankatha-trisha-hot.jpg

லட்சுமிராய் ஆள் செம ஹைட் என்பதால் வில்லி ரோலுக்கு நல்ல பொருத்தம்,அவரை முடிந்த அளவு “யூஸ்” பண்ணிக்கொண்டது இயக்குநரின் சாமார்த்தியம்.

அங்காடித்தெரு அஞ்சலிக்கு தம்மாந்தூண்டு கேரக்டர்.... ஆண்ட்ரியாவுக்கும் அதே..

ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் கிழடு தட்டிப்போன முகத்துடன் வருகிறார்.. படத்தில் வரும் எல்லா போலீஸ் கேரக்டர்களும் கிராப்பை குறைத்து க்ளோஸ் கட்டிங்க்கில் வரும்போது இவர் மட்டும் ஹிப்பி தலையுடன் ஃபங்க் முடியுடன் வருவது இவரது கேரக்டர் ஸ்டடிக்கு கிடைத்த அடி.. 

http://www.cinespot.net/gallery/d/82031-1/Lakshmi+Rai+Hot++Photos.jpg

 படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  XQS  மீ மிஸ்.. நீங்க யாரு..?

அடப்பாவி.. நைட் பூரா என் கூட இருந்துட்டு இப்போ கேள்வியைப்பாரேன்?

சாரி. மப்பு.. 

2. நேத்து நான் தப்பா நடந்துக்கிட்டேனா?

நேத்து சரியாதான் நடந்துக்கிட்டே.. இப்போதான் தப்பா நடக்கறே.. கண்டுக்க மாட்டேங்கறே....

3.  பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க சும்மா இருக்க விட மாட்டாங்களே...

4.  உங்க வயசு என்ன?

அப்பா.. அவர் கிட்டே ஏன் வயசை கேட்கறீங்க?

பொண்ணுங்க கிட்டே தானே வயசை கேட்கக்கூடாது,..?

பொண்ணுங்க இருக்கறப்பவும் வயசை கேட்கக்கூடாது...

 5. ஹாய். குடிக்கவா வந்தீங்க..?

என்னைப்பார்த்தா குடிகாரன் மாதிரியா தெரியுது?

6. நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கறது?

7.  எனக்கு அந்த ஃபிகர்  வேணாம்.. 

நீயே நினைச்சாலும் அது உனக்கு செட் ஆகாது. நீ அதுக்கு லாயக்கில்லை.. 

8.  லைட் போட்டூட்டு வண்டி ஓட்டலாம், லைட்டா போட்டுட்டு வண்டி ஓட்டக்க்கூடாது...டைட்டா இருக்கனும் சரக்கு உள்ளே.. 

9.  நான் ஏன் வேலைக்கு போகனும்?நான் நினைச்சா எனக்கு கீழே 80 பேர் வேலை செய்வாங்க. 

அதுக்கு ரொம்ப செலவாகுமே..? 


http://hothubshot.com/hothub_files/2010/04/lakshmirai-bath-hot-hub.jpg

10. ஏய்.. நீ எப்படி இங்கே வந்தே.?

டார்லிங்க்.. எப்படி வந்தேன்னு கேக்காதே..? எதுக்கு வந்தேன்னு கேளு.. 

தண்ணி அடிச்சிருக்கியா?

ம்..

வீட்டுக்குத்தெரியுமா?

வீட்டுக்கு ஏன் தெரியனும்?அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா போதாதா?

ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ஆணோ, பொண்ணோ தண்ணி அடிச்சா எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக்ஸா சொல்ல முடியுது?

11.  யார் எவ்வளவு சரக்கு அடிச்சிருந்தாலும் அவங்கவங்க வீட்டுக்கு போகும்போது கொஞ்சமாவது மப்பு தெளிஞ்சிடும்....

12.  பல் துலக்கிட்டு வீட்டுக்குள்ள போ.. அம்மா கண்டு பிடிக்க மாட்டாங்க. 

13.  வாங்க மாப்ளை.. மாப்ளைக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..

வேணாங்க.. இப்போதான்... 

14.  என்ன வந்ததுல இருந்து சீரியஸாவே இருக்கீங்க?

காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?

15.  சிக்னல் ஓப்பன் பண்ணப்போறோம். நீ ரெடியா இருந்துக்க. 

பிறந்ததுல இருந்தே நான் ரெடி தான்.. 

16.  ஹூம்.. இவ்வளவு பணம் இருந்து என்ன? சுகர் பேஷண்ட் மாதிரி எதையும் அனுபவிக்க முடியல.. 

17.  அதென்னவோ தெரியல.. மப்பானாலே இளையராஜா பாட்டெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwmFxhW-0NSMJEqhevRJe4yFU8pRCr2PA9uiMVJLc4dLMNN92EhzhG51-iA1q8Mw6m33Ra0GduM_FJGbQa0fZ157_6-kfWI83R8jFYTsT5ICXnDImDcGBZzQ3HWx0p37TJZdyNKDhDSbg/s1600/Anjali_In_Saree_00.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. இடைவேளை வரை செம ஸ்பீடான திரைக்கதை. க்ளைமாக்ஸில் சொல்லப்படும் சஸ்பென்ஸ்.. 

2.  பணத்துடன் செல்லும் டிரக்வேனை டிராஃபிக்கில் பாடியை மட்டும் அலாக்காக மாற்றுவது.. அதை நம்பும் வகையில் காட்டியது. 

3. லட்சுமிராய்  பிரேமை சுடாமல் திடீர் என ஆள் மாற்றி சுடும் சீன் நல்ல ட்விஸ்ட்.. 

4. கிரிக்கெட் சூதாட்டம் என ட்ரெண்டுக்கு தக்க வகையில் திரைக்கதையில் அதை நுழைத்த விதம்.. 

5. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் முடிந்த வரை குழப்பம் வராத அளவு கதை சொல்ல முயன்றது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheY-DGZozoCU69Bdj4V29yGkl2amHGYo2fz-rf1Gfig6c4m0YH7tOqfEzhLjhqv4wLGyMT3TLCgPZlK8RW5nOycfMDdYp9nJaU3Yg3PE2lG-GdQWc5YahTuf5YXVTOBURKfF_L_yuw_hE/s1600/andrea08.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  செம டெம்ப்போ பாட்டான விளையாடு மங்காத்தா பாட்டை அஜித்தே பாடுவது போல் காட்டாமல் பேக் டிராப்பில் பாடல் மட்டும் ஒலிக்க அஜித்தை சும்மா டான்ஸ் மட்டும் பண்ணுவது போல் காட்டி இருக்கலாம். இன்னும் கெத்தாக இருந்திருக்கும்..

2.  ஏமாற்றி காதலிப்பதாக நடிக்கும் அஜித்தை விட உண்மையாக காதலிக்கும் த்ரிஷா முகத்தில் காதல் ரசமே சொட்டவில்லையே ஏன்?த்ரிஷாவின் காதல் உண்மையாக பதிவு செய்யப்பட்டால்தான் அஜித் அவரை ஏமாற்றும்போது அதன் எஃபக்ட் எடுபடும்?

3. என்னதான் ஒருவன் பணத்தின் மேல் ஆசை உள்ளவனாக இருந்தாலும் காதலியின் அல்லது காதலி என நம்பவைத்து ஏமாற்றும் பெண்ணின் தந்தையை அப்படியா ஓடும் காரிலிருந்து வீசி எரிவார்கள்?வில்லன் இமேஜை வலிய அஜித் மேல் திணிப்பது போல் இருக்கே?பெண்கள் இந்த காட்சியை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களே?

4. ஓப்பனிங்க் சாங்கில் அஜித் முதலில் லட்சுமிராய் உடன் டான்ஸ் ஆடுகிறார்.. பின் அங்கே வரும் த்ரிஷாவுடன் ஆடுகிறார்.. ஆனால்  அடுத்த ஷாட்டில் அஜித்தின் வீட்டுக்கு திடீர் விசிட் அடிக்கும் த்ரிஷாவிடம்  அஜித் லட்சுமிராய் அட்ரஸ் கேட்டு வந்த பெண் என பொய் சொல்லும்போது அவர் லராயை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை.. எப்படி?

5.  போலீஸ் டிபார்ட்மெண்ட்டே ஒரி போலீஸ் ஆஃபீசரை தற்கொலை செய்தது போல் செட் பண்ணுகிறது , ஆனால் அதே ஆஃபீசரை எந்த கெட்டப்பும் மாற்றாமல் பேரை மட்டும் மாற்றி அதே கேசில் நடமாட விடுகிறதே . எப்படி?

6.  பணத்தை யாராவது தனியே வந்து எடுத்தால் கூட்டாளிகள் செல்ஃபோனுக்கு அலாரம் அடிப்பது போல் செட் செய்த பிரேம் பின் எப்படி அவர்களை ஏமாற்றுகிறார் என்பதை காட்டவே இல்லையே?

7. பணத்தை அடைவதையே குறியாக இருக்கும் அஜித் ஏன் பிரேமை யூஸ் பண்ணி அலாரம் கொலாப்ஸ் செய்ய முயற்சியே எடுக்கவில்லை?

8. இந்தப்படத்தை அஜித் ரசிகர்கள், பெண்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளூம்படி இன்னும் பாலிஷாக செய்திருக்கலாம்... பண விஷயத்தில் மட்டும் அஜித் கெட்டவர் என காட்டி.. காதலி, தோழி எல்லோரையும் பணத்துக்காக கொலை செய்யக்கூட அஞ்சாதவர் என காட்டி இருக்க தேவை இல்லை. அதை பலரால் ஜீரணிக்க முடியாது. 

http://s4.hubimg.com/u/1248939_f520.jpg

ஏகன், அசல், ஆஞ்சநேயா போன்ற தோல்விகளால் துவண்டு கிடந்த  அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமே , ஆனால் வாலி, பில்லா ரேஞ்சுக்கு இல்லை..

 ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி  செண்ட்டர்களில் 50 நாட்கள்.,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42 

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள், அஜித் ரசிகர்கள் பார்க்கலாம்

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்.