Showing posts with label விஷால். Show all posts
Showing posts with label விஷால். Show all posts

Friday, September 04, 2015

பாயும் புலி - சினிமா விமர்சனம்

மாஃபியா கும்பலை ஒழித்துக்கட்டும் கதை என்பதால் படம் முழுவதும் அதிரடி வேகத்தில் அடிக்கிறார் விஷால்.
திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றலாகி வரும் அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் ரோல் அவருக்கு. பணியில் இணைவதற்கு முன்பாகவே ஹீரோ அண்டர் கிரவுண்ட் ஆபரேஷனில் இறங்குகிறார். ஆஃப் டூட்டியில் வந்து அங்குள்ள மாஃபியாக்களின் கொட்டத்தை அடக்கிவிட்டு திரும்புகிறார். அதன்பிறகும் மதுரையில் ஒரு தொழிலதிபர் கொல்லப்பட உண்மையிலேயே ஆன் டூட்டியில் வந்து மாஃபியாக்களின் வேர்வரை சென்று களையெடுக்கிறார்.
இந்த நாலுவரி மையக்கருவை வைத்துக்கொண்டு பாயும் புலியாக மிரட்ட வேண்டிய திரைக்கதை ஏனோ, பல காட்சிகளிலும் பதுங்கு புலியாகவே வந்து பம்முகிறது.
விஷாலுக்கு அண்ணனாக வரும் சமுத்திரகனி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார்.. வெறும் அழகு பதுமையாக வரும் காஜல் அகர்வால் அவ்வப்போது வந்து டூயட் பாடுகிறார். பாடல் காட்சிகளுக்கான இசை தெலுங்கு படங்களையே ஞாபகப்படுத்துகின்றன.
சூரியின் காமெடி முதல் பாதியில் பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. வேல ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் இரண்டு பேருமே அப்பா பாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
நீண்ட நாள் கழித்து நடிகர் ஆனந்த்ராஜை திரையில் பார்க்க முடிகிறது. ஆனந்த்ராஜூக்கு இப்படத்தில் மிகவும் பக்குவமான ரோல்.
ஒரு வழக்கமான தமிழ் பட போலீஸ் கதைக்குத் தேவையான பல விஷயங்கள் பாயும் புலி படத்தில் இருக்கிறது. அதுதான் இந்தப் படத்தில் பெரிய குறையே.
இடைவேளைக்குப் பிறகு, சரி என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம் என நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் வேகம் மிஸ்ஸிங். பாடல்களும் அவ்வளவு சிறப்பாக படத்துடன் பொருந்திப் போகவில்லை.
டெக்னிக்கலாக பாயும் புலி வெகு சிறப்பான முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை. வேல்ராஜ் ஒளிப்பதிவு, இமான் பின்னணி இசை, ஆண்டனி படத்தொகுப்பு எல்லாமே மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த சிறப்புகள் எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமே படத்திற்கு வலுசேர்க்கிறது,
அதிரடி தெலுங்கு சண்டைப் பட ஸ்டைலில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. கேமராவும் எடிட்டிங்கும் சிறப்பாக இருந்தும் படத்தை தூக்கிநிறுத்த முடியவில்லை.
முதல் பாதியில் வரும் சில சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் மிகவும் அழுத்தமாக இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் அருமையான கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆதாயத்துக்காக அரசியல் செய்யாத, தேசபக்தியில ஈடுபாடுமிக்க ஒரு பாரம்யரிய குடும்பத்தின் வாரிசுகள் எப்படி அடாவடி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பது நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த சின்னச் சின்ன தருணங்களில் மட்டுமே இயக்குநர் சுசீந்திரன் மிளிர்கிறார்.
கடைசி 20 நிமிடங்கள் சுவாரசியமாக இருந்தாலும் அது படத்தை பெரிய அளவில் தூக்கி நிறுத்தவில்லை. ஒரு சுமாரான படம் என்ற நிலைக்குக் கீழாக இல்லையென்றாலும் 'பாண்டிய நாடு' தந்த திருப்தி பாயும்புலியில் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.


நன்றி- த இந்து

Tuesday, October 21, 2014

பூஜை - சினிமா விமர்சனம்


 ஹீரோவோட அம்மா  ரொம்ப வருசமா  ஹீரோவை ஒதுக்கி வைக்கறாரு.அது ஏன்?இதுக்கு பயங்கரமா சிந்திச்சிருக்காங்க.ஹீரோவோட மாமா பொண்ணு ஹீரோவை  விரும்புது.ஆனா  யார் கிட்டயும்  சொல்லலை. வீட்ல மாப்ளை பார்த்ததும்  டக்னு ஹீரோக்கு  செல்  போன் ல  ஒரு மெசேஜ் 143 -னு அனுப்பி  இருக்கலாம். செய்யலை. ரேட் கட்டர் போடலை போல . வாசல்ல அப்பா  இருக்கும்போதே கேனம் மாதிரி அந்தப்பொண்ணு  ஹீரோவைக்கட்டிப்பிடிச்சு அழுது,அதைப்பார்த்து அப்பன்காரன் செம காண்ட் ஆகி  திட்றாரு. ஹீரோவோட அம்மாவுக்கு இதனால அவமானம். பளார் பளார் பளார்னு 3 அறை .

 வருசம் 16 படத்துல  குஷ்பூ , பாத்ரூம் , கார்த்திக்   சீன் ல  இருந்து  உருவிட்டாங்க போல,ஹீரோ வாயைத்திறந்து “ அம்மா என் மேல  தப்பில்லை, அவ தான் வந்து கட்டிப்பிடிச்சா”ன்னா  மேட்டர்  ஓவர் . ஆனா  சொல்லலையே. ஓபிஎஸ்க்கே அண்ணன் போல , அம்மாவுக்கு  முன்னால பவ்யமா  இருக்காரு.

இப்போ  அம்மா  ஒரு ஊர்ல ,  மகன் இன்னொரு ஊர்ல .வில்லன்  ஹீரோ  குடும்பத்துல  ஒருத்தரை  செருப்பாலயே அடிக்கறாரு.உடனே அம்மா  ஹீரோவை வரச்சொல்லி அவன்  கையை வெட்டிட்டு வாடாங்கறாங்க. வாவ். வாட்டே அம்மா ? 

ஹீரோ - வில்லன்  க்ரூப்க்கு இடையே நடக்கும்  துரத்தல்கள்  , சண்டைகள் , வெட்டுகள்  குத்துகள்  தான்  படம். காது வலி இல்லாதவர்கள் நிச்சயம்  வலியோடு தான்  திரும்பனும்னு கங்கணம் கட்டிட்டு  சவுண்ட்  மிக்சிங் பண்ணி  இருக்காங்க.

ஹீரோவா  புரட்சித்தளபதி  விஷால். ஆள்  வாட்டசாட்டமா  இருக்கார் தான். எக்சசைஸ் பாடி தான் . எல்லாம் ஓக்கே  ஆனா  ஃபுட் பால் விளையாடற மாதிரி அவர்  வில்லன் ஆட்களை உதைப்பது , அவங்க 25 கிமீ போய் விழுவது எல்லாம்  ரொம்பவே  ஓவர்.ஹீரோயினுடன் அவர் பம்முவது ஓக்கே . காதல் காட்சிகளில்  ஸ்ருதியுடன் சரியா  ஒட்டலை . லட்சுமிமேனன் பயமா? கமல் பயமா? தெரியலை . பாண்டிய நாடு படத்துடன் ஒப்பிட்டால் இது பல படி கீழேதான்.


நாயகியா  ஸ்ருதி  கமல் . இவரது கம்பீரமான ஆண்  குரல் மைனஸ் மாதிரி  தெரிந்தாலும்   ரொம்ப  கேவலமா  எல்லாம் இல்லை. சமாளிக்கலாம்.டூயட் காட்சிகளில்  தனது  திறமையை  சென்சார் அனுமதித்த அளவில்  காட்டி  இருக்கார்.



ராதிகா தான் அம்மா. எடுபடலை . கிழக்குச்சீமையிலே   கேரடக்ர் எல்லாம்  எப்படி  எல்லாம் கலக்கினார்?
 

சூரி தான்  காமெடியன். கரலாட்டக்காரன் வாழைப்பழக்காமெடி ரீ மிக்ஸ் பட்டி டிங்கரிங்க்  ஜோக்கிற்கு  10% மக்கள்  சிரிக்கறாங்க . நல்ல  முன்னேற்றம். முன்பெல்லாம் 3% ஆட்கள்  தான்  சிரி[ப்பாங்க 


 வில்லனாக  முகேஷ்  திவாரி. அய்யோ பாவம் . பலி ஆடு. ஹீரோ  கிட்டே அடி வாங்கவே நேரம் சரியா  இருக்கு

 சத்யராஜ்-ன்  மொட்டை பாஸ் கெட்டப் கலக்கல். ஆனா அவருக்கு வாய்ப்பு கம்மி . போலீஸ் ஆஃபீசர் என்றதும் அவருக்கு   பெரிய  முக்கியத்துவம்  இருக்கும்னு எதிர்பார்த்தா  ஏமாத்திட்டாங்க 


 பாடல்காட்சிகள்  சுமார்  தான் . வழக்கமாக குத்தாட்டப்பாடல்களீல் கலக்கும்  ஹரி இதில் அடக்கி வாசிச்சிருக்கார்.



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  தீபாவளிக்கு  போட்டியே  இல்லாத  டைமில் படத்தை  ரிலீ ஸ்  செஞ்சது



2 படம் பர பரப்பாக   இருப்பது  போல் சம்பவங்களை , காட்சி அமைப்பை வேக வேகமாக அடுக்கிச்செல்வது 

புது வசந்தம் சித்தாராவை அழகாகக்காட்டியது




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   சத்யராஜ்மாதிரி   ஒரு ஜைஜாண்டிக்கான  போலீஸ் ஆஃபீசர் ஒரு சினிமா  தியேட்டர் வாசலில்  ஒரு ஆள் வந்து காலில் விழுவது  போல் நடிச்சு காலை வாரி  விடும்போது வேடிக்கை பார்த்து அப்படி பெப்பரப்பேன்னு   விழுவாரா? 


2 ஹீரோ  ஹீரோயின்  கிட்டே லவ் சொல்லும்போது  ஒண்ணா  பிடிச்சிருக்குன்னு  சொல்லனும் , இல்லை பிடிக்கலைன்னு சொல்லனும், பெண் இனத்தையே  கேவலப்படுத்துவது போல் அப்படி வசனம் எதுக்கு ? 


3 முதன்  முதலா காதலைச்சொல்லும்  முறைப்பெண்   எதுக்கு கட்டிப்பிடிக்கனும்? சொல்லவே  கூச்சம். கட்டிப்பிடிக்க  கூச்சம் இல்லையா? ( பொறாமை தான் )

4   வில்லன் அடியாளுங்க  86 பேர் அரிவாளோட இருக்காங்க . ஹீரோ  ஒரே ஒரு  பைக் பம்ப்பர் கொண்டு செம தாக்கு தாக்கறார். அவர் மேல ஒரு கீறல்  குட விழாதா?

மனம் கவர்ந்த வசனங்கள்


1 ஸ்ருதி - என்னங்க இது? உங்க பிரண்ட் பீர்  தர்றாரு?


விஷால் = ?

சூரி = கூலிங்கா ஏதாவது குடுன்னியே?# பூஜை




2 சாமிக்குப்பலி  கொடுத்தா  பூஜை முடிஞ்சிடும்.நான் அவனை பொலி போட்டுட்டு பூஜையை முடிக்கிறேன் # பூஜை




3 பெத்தவங்க மனசை வேதனைப்ப்டுத்திட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை # பூஜை

4 இந்தக்காலத்துப்பொண்ணுங்க அஞ்சு பீரை அட்டர் டைம் ல அடுக்குவாங்க # பூஜை

5 உன்னைப்பாத்தா வைரமுத்து மாதிரி இருக்கு.


உன்னைப்பார்த்தா வயிறு முத்துவனாட்டம் இருக்கு # பூஜை



6 சூரியின் மொக்கை = டேய் சுடலை.நீ விக்கற கடலை சுடலை




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


1  ஹரி திரைக்கதை எழுதும்போது ஜாக்கிங் போய்க்கிட்டே எழுதுவாரா? படம் பறக்குது # பூஜை

2  ( அம்மாவோட )சித்தப்பா வை செருப்பால அடிச்சவனை ஹீரோ பழி வாங்கறதுதான் கதை.அடேங்கப்பா.# பூஜை

3 கோவை கங்கா யமுனா காவேரி தியேட்டர் காம்ப்ளெக்ஸ் ல விஷால் 28 பேரை அடிக்கறாரு.அடேங்கப்பா # ஹரிடா

4 லோ கட் சர்ட் போட்டுட்டு ஸ்ருதி கமல் ஸ்கிப்பிங் ரோப் இல்லாமயே சும்மா சும்மா குதிக்குது.சமூகத்துக்கு ஏதோ சொல்ல வருதோ? # பூஜை

5 அம்மா ராதிகா பையன் விஷால் கிட்டே " போடா வெளியே"னு துரத்தறாரு.அப்போ அந்த குரல் 6 டைம் எக்கோ அடிக்குது.நம்மைத்தான்  போகச்சொல்றாரா?


6 ஸ்ருதி கமல்  மேலாக்கா  ஏதோ போட்டிருக்காங்க அசால்ட்டா.ஓ அதான் தாவணியாம்.ஒரு ஓரமாகிடக்கு # பூஜை



தீபாவளி ரிசல்ட்
1 கத்தி = தலைவலி
2 பூஜை = காதுவலி






சி பி கமெண்ட் =

பூஜை =அடிதடி ,வெட்டு,குத்து ,கொலை,சேசிங் ,ஜீப் ,கார் ,லாரி .மாமூல் மசாலா.ஹரி மார்க் கொலைகள் .விகடன் மார்க் =41 , ரேட்டிங் = 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5  /  5
  
யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு

தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி கூட்டணி சேர்ந்துள்ள படம் பூஜை. இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று அளித்துள்ளனர். இதனால் பூஜை படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே வரிவிலக்கு பெற இயலும், ஆனால் இப்போது பூஜை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பூஜை படக்குழுவினர்.


பூஜை படம் தீபாவளியன்று, விஜய்யின் கத்தி படத்தோடு மோத இருக்கிறது.



யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு




ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 13வது படம் பூஜை. இந்த படத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன்-சத்யராஜ் முக்கிய வேடங்களில நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருககிறார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் இதுவரை விஷால் படங்கள் இல்லாத அளவுக்கு 1108 தியேட்டர்களில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது.


அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் 375 தியேட்டர்களிலும், கேரளாவில் 70, ஆந்திராவில் 473, கர்நாடகாவில் 47, எப்எம்எஸ்- 143 ஆக மொத்தம் 1108 தியேட்டர்களில் பூஜை வெளியாகிறதாம். இதில் தமிழ்நாட்டை விட, ஆந்திராவில்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.


தமிழில் உருவான ஒரு படத்துக்கு தெலுங்கிற்கு இத்தனை முக்கியத்தும் கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. தமிழில் விஜய்யின் கத்தி படம் சர்ச்சைகளில் சிக்கியிருந்தபோதும், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது. அதனால் விஷால் படம் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான் உண்மை


அதனால் ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூல் இல்லையென்றால்கூட ஆந்திர ரசிகர்கள் படத்தை காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் விஷாலுக்கு அதிகமாக உள்ளதாம். காரணம், விஷால் ஆந்திராக்காரர்தான் என்றபோதும், அவருக்கு அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், அப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அவர் நடித்த எல்லா படங்களுமே கிட்டத்தட்ட அங்கு வசூலை வாரி குவித்திருக்கின்றன.


அவர் ஒத்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டால்கூட அந்த படம் ஹிட்தான் என்ற செண்டிமென்ட் இருப்பதால்தான் விஷாலுக்கு ஆந்திரா மீது இத்தனை நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். ஆக, தமிழ்நாட்டில் விஷால் படம் என்று வெளியாகும் பூஜை, ஆந்திராவில் ஸ்ருதிஹாசன் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகிறதாம்.



தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் 'கத்தி' படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 'பூஜை' படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் 'பூஜை' படம் 'கத்தி'க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு சாதனையைப் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாம்.தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகள், தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம். அதோடு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ளதாலும், 'பூஜை' படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பூஜை' படத்துடன் தமிழில் 'கத்தி' படமும், தெலுங்கில் 'கார்த்திகேயா' என்ற படமும் மட்டுமே போட்டியாக வெளியாகிறது. 'கத்திக்கும், கார்த்திகேயாவுக்கும்' வெற்றி பெற 'பூஜை' தேவைப்படுகிறது.
நன்றி- தினமலர்

Sunday, April 13, 2014

ஜிகர்தண்டா படத்துக்கும் கனடா டான் கண்ணம்மா வுக்கும் என்ன சம்பந்தம்? - லட்சுமி மேனன் பேட்டி

சுந்தர பாண்டியன் படத்தின் ஆரம்பித்த வெற்றி பாண்டிய நாடு வரை தொடர்ந்திருப்பதில் கோடம்பாக்கத்தில் ‘அதிர்ஷ்டக் கதாநாயகி’ என்று புகழப்படுகிறார் 17 வயதே நிரம்பிய லட்சுமி மேனன். இத்தனை சிறிய வயதில் பெரிய உயரத்தை எட்டியிருக்கும் இவர், விஷால் ஜோடியாக நடித்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் இன்று வெளியாகிறது. இதற்கிடையில் விமல் ஜோடியாக நடித்துவரும் ‘மஞ்சப் பை’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து... 


லட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இருக்கிறதா? 

 
அறவே கிடையாது. அதிர்ஷ்டம் என்று சொல்வது ஹம்பக். என்னை ‘லக்கி ஹீரோயின்’ என்று சொல்வதையும் நான் விரும்பவில்லை. சினிமாவுக்காகப் பெயரை மாற்றிக்கொள்ளச் சொன்னபோது நான் மறுத்துவிட்டேன். நான் நடித்த படங்கள் வெற்றிபெற்றதற்குக் காரணம் நான் அல்ல. நல்ல கதை, ரசிகர்களைக் கவரும் கதாபாத்திரங்கள், திறமையான இயக்குநர்கள், நிறைய ரசிகர்களைக் கொண்ட ஹீரோக்கள் என்று எல்லாமே சரியாக அமைந்த படங்கள் எனக்கு அமைந்ததால் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன. நான் இதுவரை கதை கேட்டதும் கிடையாது. என் கேரக்டர் பற்றிக் கவலைப்பட்டதும் கிடையாது. இயக்குநர்களை நம்பினேன். அவர்கள் என்னைக் கைவிடவில்லை. 



பத்துப் படங்களைத் தாண்டி விட்டீர்கள், ஆனால் படங்களில் ஹீரோக்களைக் காதலிப்பதைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறோம் என்று நினைத்ததுண்டா? 


 
அந்த மாதிரி சீரியஸாக யோசிக்கவெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சீரியஸான பெண்ணும் இல்லை. இதற்கு முன் எப்படியோ... நான் சிகப்பு மனிதனில் என் கதாபாத்திரத்தைப் பார்த்திருந்தால் நீங்கள் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள். அதேபோல மஞ்சப் பை படத்தில் டாக்டர் கார்த்திகாவாக நடிக்கிறேன். சென்னைப் பெண் எப்படியிருப்பாள் என்பதற்கு என் கேரக்டர் உதாரணமாக இருக்கும். ஜிகர்தண்டாவில் கண்ணம்மா. இதில் நீங்க மதுரைப் பெண்ணைப் பார்க்கலாம். சிப்பாய் படத்தில் என் கேரக்டர் பெயரே தேன்தமிழ். படம் முழுவதும் சுத்தமான தமிழில் ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசும் புரட்சிகரமான கேரக்டர். இதற்கு மேல் வித்தியாசமான கேரக்டர்களை எங்கே போய்த் தேடுவீர்கள்? 


சினிமா தந்திருக்கும் புகழால், உங்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகிப் போயிருப்பார்கள் இல்லையா? 

 
நல்லவேளையாக எனக்கு அந்த மாதிரி நண்பர்கள் அமையவில்லை. பள்ளியில் எக்கச்சக்க ஃப்ரெண்ட்ஸ். நான் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவர்கள் அலட்டிக்கொண்டதே கிடையாது. லட்சுமி, மரியா, அனந்தகிருஷ்ணன், ஹரி, சச்சின் என்று எனது நெருக்கமான நண்பர்கள்கூட எனது பாபுலாரிட்டியை கேர் பண்ணுவது கிடையாது. ஹீரோயின் ஆகிவிட்டோம் என்று வீட்டில் முடங்கிக் கிடக்காதே என்று அவர்கள் சொல்கிறார்கள்.


 ஷூட்டிங் இல்லாத நாட்களில் கொச்சி நகரின் கடைத்தெருகளில் சாதாரணமாக ஷாப்பிங் செய்துகொண்டிருப்பேன். அங்கே பெரிய ஹீரோக்களைப் பார்த்தால் கூட்டம் கூடுமே தவிர ஹீரோயின்களைச் சட்டை செய்ய மாட்டார்கள். இங்கே என் வெற்றிக்குக் காரணமான எல்லோருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவதில்லையே என்பதுதான் எனது ஒரே கவலை. 


சசிகுமாருடன் மீண்டும் இணைந்து நடித்தபோது கிசுகிசு வந்தது. தற்போது விஷாலுடன் காதல் தீவிரம் என்றே செய்தி வருகிறது. நீங்கள் அழுத்தம் திருத்தமாக இதை மறுத்ததாகத் தெரியவில்லையே? 

 
இந்தமாதிரி கிசுகிசு வரவில்லை என்றால்தான் பிரச்சினையே. அதனால் கிசுகிசுக்களை நான் வரவேற்கிறேன். அதைப் பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. சினிமாவில் விஷால் மாதிரி ஓபன் ஹார்ட்டெட் மனிதர் ஃபிரெண்டாகக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கே எனது வளர்ச்சியில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதை எங்கேயும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். விஷாலைப் போலவே தற்போது கௌதம் கார்த்திக்கும் நல்ல ஃபிரெண்ட். அவரோடு வாய்ப்பு அமைந்தால் மீண்டும் நடிப்பேன். சித்தார்த்துக்கு நான் ஃபேன். அவரும் இப்போது எனக்கு ஃபிரெண்ட்தான். 


விஷால் லட்சுமி மேனன் காதலை மறைக்கத்தான் நீங்கள் நண்பர்களின் லிஸ்ட்டை அதிகப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது… 

 
திட்டவட்டமாகச் சொல்ல வேண்டும் என்றால் நான் விஷாலைக் காதலிக்க வில்லை. ஆனால் அவர் என்னைக் காதலிக்கிறாரா என்று எனக்குத் தெரியாது


.
விஷால் உங்களைக் காதலிப்ப தாகச் சொன்னால் உங்கள் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும்? 

 
அப்படி நடந்தால் அது எனது பர்செனல் விஷயமாகி விடும். அதன் பிறகு அதை மீடியாவிடம் டிஸ்கஸ் பண்ண மாட்டேன். ஆனால் அதற்கெல்லாம் அவருக்கும் இப்போது நேரமில்லை. அவர் அடுத்தடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். நானும் அப்படித்தான்

 
.
மஞ்சப் பை உட்படத் தமிழில் ஏற்றுக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்து விட்டீர்கள். அடுத்து விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள் இல்லையா? 

 
அது தவறான செய்தி. விஜய் சேதுபதியுடன் நடிக்கக் கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இப்போது ‘அவதாரம்’ என்ற மலையாளப் படத்தில் ஜோஷி சார் இயக்கத்தில் திலிப் ஜோடியாக நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. அடுத்த தமிழ்ப் படம் இன்னும் முடிவாகவில்லை. எனக்காக அம்மா கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். 


நன்றி -த இந்து

Saturday, April 12, 2014

என்னோட பெஸ்ட் 'நான் சிகப்பு மனிதன்' : விஷால் பேட்டி

நான் சிகப்பு மனிதன்' படத்தில் தனது ஹீரோயிசத்தை காட்டாமல், எதார்த்தமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஷால். தனது நடிப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருந்தவரிடம் தொலைபேசியில் உரையாடியதில் இருந்து.. 



'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடித்த அனுபவம் ?

 
'நான் சிகப்பு மனிதன்' படத்தை பொருத்தவரையில், நிறைய பேர் இயக்குநர் திருவுடன் ஏன் படம் பண்றீங்க என்று கேட்டார்கள். ஆனால் எனக்கு இந்த கதை பிடித்திருந்தது, கதாபாத்திரம் பிடித்திருந்தது, மற்ற படங்கள் மாதிரியே என்னோட பெஸ்ட்டை நான் கொடுத்திருக்கேன், 


இப்படத்தில் உள்ள நார்கோலெப்சி (Narcolepsy) அப்படிங்கிற விஷயம் புதுசா இருந்தது. இப்படத்தில் நான் வொர்க் பண்ணியதை நினைக்கையில் மகிழ்ச்சி என்பதை விட பெருமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதை இன்றல்ல இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து கேட்டால் கூட சொல்லுவேன். 


வெளிநாடுகளில் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருக்கு, இப்போ எப்படி ஃபில் பண்றீங்க ?

 
மிகவும் நல்ல விஷயம் தான். இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறது பார்க்குறப்போ பெரிய நம்பிக்கை தருது, நிறைய வித்தியாசமான முயற்சிகள் பண்ணணும்னு புதிய உற்சாகம் கிடைக்கிறது. 


படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் குழப்பம் இருந்ததா?

 
குழப்பம் ஏதும் இல்லை. சென்சார் தரப்பினர் மிகவும் நியாயமாக நடந்து கொண்டார்கள். படத்துடைய கதை திடமாக அமைந்ததால் அவர்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள், நாங்களும் மனநிறைவுடன் பெற்றுக்கொண்டோம். சென்சார் துறையினர் மிகவும் பொறுப்புடன் செயல்படுகின்றர். 


இயக்குநர் திருவுடன் மூன்று படம் பண்ணீருக்கீங்க, அடுத்தும் அவருடன் படம் பண்ணுவீங்களா ?

 
அவருடன் மூன்று இல்லை, ஐந்து, ஆறு இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணலாம். 


இந்தி படங்களிள் ரிலீஸ் ஆகும் தேதியை படப்பிடிப்பிற்கு முன்பே அறிவிக்கிறார்கள், அதை தமிழ் சினிமாவில் நீங்களும் பின்பற்றிருக்கும் காரணம் என்ன ? இது தொடருமா?

 
நிச்சயமா தொடரும், ’பாண்டிய நாடு’ படத்திலும் சரி , ’நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் சரி ரிலீஸாகும் தேதியை படம் ஆரம்பிக்கும் முன்பே தெரிவித்திருந்தோம். அதன் படியே நடத்தியும் காட்டியிருக்கிறோம். 


இதன் காரணம் என்னவென்றால், ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே வெளியாகும் தேதியை அறிவித்தால், மக்களுக்கும் அந்த படத்தில் வேலை பார்க்கும் கலைஞர்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும். அதுவே படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். 


’பூஜை’ படத்தின் படப்பிடிப்பு எப்போ தொடங்குது? எப்போ ரீலிஸ் ?

 
’பூஜை’ படத்தின் போட்டோ ஷூட் முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஷூட் ஆரம்பிக்கிறது. தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும். 


த இந்து -நன்றி

Friday, April 11, 2014

நான் சிகப்பு மனிதன் - சினிமா விமர்சனம்

 

 விஷால் லட்சுமிமேனன் லவ் மேட்டர்  ஓடிட்டிருக்கும்போது வரும் படம் என்பதால் இது விஷாலுக்கு ஒரு முக்கியமான படம்.எப்டின்னா படம் ஹிட் ஆகிட்டா ராசியான ஜோடின்னு பேர் வாங்கி இதான் சாக்குன்னு கேப்டன் -ராதிகா மாதிரி ஏகப்பட்ட படங்கள்ல (26)  ஜோடியா போட்டுக்கலாம்



படத்தோட விமர்சனத்துக்குள்ளே போகும் முன்  நார்கொலாப்சி ( ஒரு வகை டிஸ் ஆர்டர் நோய் ) ன்னா என்ன?னு பார்த்துடுவோம்.அதாவது  நீங்க ஏதாவது  அதிர்ச்சியான செய்தியைக்கேட்டாலோ , பார்த்தாலோ டக்னு தூங்கிடுவீங்க.இன்னும் புளி போட்டு விளக்கனும்னா நீங்க உணர்ச்சி வசப்பட்டா தூங்கிடுவீங்க. முதல் இரவுல பொண்ணு பக்கத்துல வந்தா டக்னு தூங்கிடுவீங்க. இந்த மாதிரி ஒரு வியாதி வந்தா என்ன ஆகும் ?> ( ஒண்ணும் ஆகாது ஹி ஹி )


இந்த மாதிரி ஒரு கொடுமையான வியாதி  ஹீரோவுக்கு  இருக்கு .இந்த வியாதியை எதுக்கு மெனக்கெட்டு கூகுள் ல 13 அசிஸ்டெண்ட் டைரக்டரை விட்டு திரு தேடுனார்னா அப்போதான் ரஜினி நடிச்ச நான் சிகப்பு மனிதன்க்கும் , விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் க்கும் வித்தியாசம் காட்ட முடியும்  

ஹீரோ , ஹீரோயின் 2 பேருக்கும் அறிமுகம் ஆகுது . ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ். 2 பேர் வீட்லயும் திருமணத்துக்குத்தனித்தனியா  ஜோடி பார்க்கறாங்க .  2 பேருக்கும் செட் ஆகலை . எப்படி ஆகும்? இயற்கை எழுதி வெச்சது இவங்க 2 பேரும் தான் ஜோடி சேரனும்னு இருக்கு . 
 
ஹீரோயின் -ஹீரோ 2 பேரும் லவ்விங்க். ஹீரோயின் அப்பா இதுக்கு ஒத்துக்கலை. காரணம் இந்த நோய் இருப்பதால் ஹீரோவால அப்பா ஆக முடியாது . இதுக்கு என்ன தீர்வு?ன்னு எல்லாரும் யோசிக்கும்போது ஹீரோயின் ஒரு ஐடியா கண்டு பிடிக்குது. இந்த மாதிரி மேட்டர்கள் ல பொண்ணுங்க சமயோசித புத்தி  ஆண்களின் மூளையை விட 3 மடங்கு வேகமாகவும் , திறமையாகவும் வேலை செய்யுமாம். கொல்லிமலை சித்தர் வாக்கு . 

 அதாவது  ஹீரோவுக்கு மழை ல நனைஞ்சாலோ , தண்ணில நனைஞ்சாலோ அந்த நோயோட பாதிப்பு இருக்காது  டகார்னு அந்த ஹீரோயின் ஹீரோவை  ஒரு நீச்சல் குளத்துல தள்ளி  மேட்டரை முடிச்சுடுது . என்ன எல்லாம் திகைச்சுப்போய்ட்டீங்க / ? இன்னும் எத்தனை நாள் தான் பெண்கள் அடுப்பு ஊதிக்கிட்டே இருப்பாங்க ? முன்னேற வேண்டாமா? 


எல்லாம் சுபம்னு நினைக்கும்போது  பருத்தி வீரன் ல வர்ற மாதிரி 4 பேர் ஹீரோயினை கேங்க் ரேப் பண்ணிடறாங்க . ஹீரோயின் கோமா ல .  

 இடைவேளை . 

 ஹீரோ எப்படி அந்த 4 பேரைக்கண்டு பிடிச்சுப்பழி வாங்கறாரு என்பது தான் மிச்ச மீதிக்கதை . 


 ஹீரோ கம் தயாரிப்பாளர் விஷால் க்கு மீண்டும் ஒரு சமர் டைப் த்ரில்லர் கதை . பாஸ் ஆகிடும் . திமிரு பட பாதிப்பில் அவர் எப்போதும்  மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பது ஏனோ ? நல்ல நாள் ல யே விஷால் கழுவாத  முக காயத்ரி மாதிரி தான் இருப்பாரு . இதுல கேரக்டரே தூங்கி வழியும் ஆள் என்பதால் நல்லாப்பொருத்தமா இருக்கு . ரொமான்ஸ் காட்சிகளீல்  ஹீரோயினை   டாமிப்னேட் பண்ண விட்டுட்டு அண்ணன் அடக்கி வாசிக்கிறார் ( நல்லவராம். லேடீஸ் ஆடிய்ன்சை கவரவாம் ) 


 ஹீரோயினாக  கும்கி தேவதை லட்சுமிமேனன்.  பச்சைப்பசேல் வெள்ளரிக்காயைப்பாதி சாப்பிட்டு வெச்சுட்டு வெளில போய்ட்டு வந்தா அது வெள்ளரிப்பழமா மாறி இருந்தா எப்படி இருக்கும் ? அப்படி முகத்துல லேசான முதிர்ச்சி . நமக்கு கொஞ்சம் அதிர்ச்சி ! ஆனாலும் தமிழன் ரசிக்காம போக மாட்டான் . இவரது ஆடை அணியும் பாங்கு , கேமரா கோணங்கள் எப்படி வந்தாலும் கண்ணியம் காட்டும் லாவகம் மற்ற  ஹீரோயின்கள் பின்பற்ற வேண்டியது .


சரண்யா வழக்கம் போல் கலக்கும் அம்மா கேரக்டர். காமெடிக்கு ஜெகன். இன்னும் நல்லா அவரைப்பயன்படுத்தி இருக்கலாம் . 




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. படத்தின் கதையோடு ஒன்றி வரும்  காமெடி காட்சிகள் ,  ஜெகனின் அளவான வசனங்கள் 


2   லட்சுமி மெனன் ஹீரோவோடு  கில்மாப்படத்துக்கு முதல் ஷோவுக்கு ப்போகும் காட்சியில்  தியேட்டர் அதிர்கிறது . இனி ஏகப்பட்ட படத்துல  இதே மாதிரி காட்சி வைப்பாங்க 


3  ஆர்த்தி  ஹீரோவிடம் வழியும் காட்சி பல படங்களில் வந்த காட்சி என்றாலும் ரசிக்க வைக்கும் காமெடி 


4   ரசிகர்களை சூடேற்றட்டும் என நினைத்து வைத்த லிப் லாக் கிஸ் சீன் ஆக்சுவலா கடுப்பைத்தான் கிளப்புது . எல்லாம் ஒரு பொறாமை தான். அந்த ஸ்விம்மிங்க் பூல் காட்சி செம கிளுகிளுப்பு 


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 முன் பின் அறிமுகம் இல்லாத 4 பேர் ரேப் பண்ணிிட்டாங்க   என்றாலே   போதும் . எதுக்கு அந்த   எக்ஸ்ட்ரா ஃபிளாஸ்பேக் ? 


2  பில்டிங்கில் மேலே வில்லன் , கீழே  ஹீரோ . வில்லன்   அந்த கொலையை செஞ்சிட்டு அப்படியே கமுக்கமா இருந்திருக்கலாம். எதுக்கு தன்னைத்தானே  வயிற்றில் கிழிச்சு  ஹீரோவைக்கூப்பிடறார் ? 


3 பில்டிங்கின் எட்ஜில்  நிற்கும்  வில்லன் பிம்பம்  கீழே ஹீரோவுக்கு தேங்கி  இருக்கும் மழை நீரில் தெரிவதும் நம்ப முடியாத கோணம் 


4  மாஸ் ரேப் , கேங்க் ரேப் எல்லாம்  மிக வக்கிரமான சிந்தனையாளர்கள் , ஒரு  ஃப்ளோ வில் செய்வது . வில்லன்  ஹீரோவைப்பழி வாங்கனும்னா  ஹீரோயினை அவன் மட்டும் ரேப் பண்ணி இருக்கலாம். அவனுக்கு சில ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவிய ஆட்கள் 3 பேருக்கு  பகிர்வது ஏற்றுக்கொள்ள முடியல 


5  வில்லன்  தன் மனைவியை தன் நண்பனுக்கு  தந்து மாமா வேலை பார்ப்பது , 2 கோடி கேட்டு மிரட்டுவது  இதெல்லாம்  ஹிந்திப்படத்துக்கு  சரி . தமிழ்ப்படத்துக்கு ஒத்து வராது 



மனம் கவர்ந்த வசனங்கள்


1. தாமஸ் ஆல்வா எடிசன் ,வின்ஸ்டன் சர்ச்சில் னு நிறையப்பேரு இப்டி இருந்தவங்கதான்.உங்க பையன் பெரிய ஆளா வருவான் # விஷால் க்கு ஓப்பனிங் பில்டப்


சில விஷ்யங்கள் நாம சம்பாதிச்ச காசில் செஞ்சாத்தான் மனத்திருப்தி # நா சி ம


3 தூக்கம் வராம கஷ்டப்படறவங்க ,தூக்கத்துக்காக தண்ணி அடிக்கறவங்க மத்தில தூக்க வியாதி எனக்கு வரம் # திரு


4  ட்ச் - எனக்கு ஆல் த பெஸ்ட் சொல்லுங்க .


 வி - எதுக்கு?


 லட்ச் - நாளைக்கு என்னைப்பொண்ணுப்பார்க்க வர்றாங்க # நா சி க


5 வீட்ல இத்தனை பேரு இருக்கீங்க.ஒரே சத்தமா இருக்காது ? 


கடல் கூட சத்தம் தான்.ஆனா உள்ளே அமைதி .அது மாதிரி கூட்டுக்குடித்தனம் # திரு


6  நான் தூங்கும்போது யார் எது பேசுனாலும் என் மைன்ட் ல ரெக்கார்டு ஆகிடும் # திரு


7  சரன்யா = டேய்.அவன் வீட்டுக்கு ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வந்திருக்காண்டா 


.ஜெகன் - நீ உடனே மொட்டை மாடிக்கு வத்தல் காயப்போட வந்திருப்பியே? 


8  லட்ச் - முத நாள் முத ஷோ வே  பார்க்க ஆம்பளைங்க ஏன் அலையறாங்க ? 


அடுத்த ஷோ ல முக்கிய சீன் கட் பண்ணிட்டா?


9    புருசனுக்கு த்தெரியாம தப்புப்பன்னுனா கள்ளக்காதலனுக்கு அவ நல்லவளாத்தெரிவா . புருசனுக்குத்தெரிஞ்சே தப்பு செஞ்சா அவ அவிசாரியாத்தான் தெரிவா? 


10  செக்சுக்காகப்பணம் செலவு பண்றது தப்புன்னா இந்த உலகத்துல எல்லா ஆம்பளைங்களும் அந்த தப்பைப்பண்ணிட்டேதான்   இருப்பாங்க, இருக்காங்க

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S



1. பாண்டிய நாடு ஹிட் ஆனதால் விஷால் இப்போ டைட்டிலில் போஸ்டரில் புரட்சித்தளபதி # நா சி ம


சமர் இயக்குநர் திரு கேரக்டரைசேசனில் டீட்டெயிலா கலக்கறார் # நா சி ம

3  ஹீரோயின் கள் எல்லோரும் பிராபோட்டுத்தான் ஜாக்கெட்.ஆனாஹீரோக்கள் யாரும்பனியன்போடாமசட்டை. வெய்யில்க்கு வேர்க்காது?


4 கேமரா மேன் கிரேன் ஷாட் வைக்கும்போது ராட்டன் தூரில மேல இருந்து கீழே இறங்கிட்டே படம் பார்க்கறமாதிரி இருக்கு


5  ஹீரோ இன்ட்ரோக்கு நோ பில்டப்.சிங்கிள் சிம்ப்பிள் ஷாட்.ஹீரோயின் இன்ட்ரோ க்கு 18 கட் ஷாட் 23 நொடி ல # லட்சுமிமேனன்


6 உடை அணிவதில் ,ஆடை விலகாமல் பார்த்துக்கொள்வதில் கண்ணியக்கன்னி # லட்சுமிமேனன்


7  உன் ஆசைக்காதல் சொல்ல பாட்டுக்கான க்ரூப் டான்சருக்கான காஸ்ட்யூம் டிசைன் கலக்கல்.மராத்தி,ஒடிசி பாரம்பரிய உடை


8 இதுக்கு முன்னால ஒரு பொண்ணு இவ்ளவ் ஆக்ரோசமா தன் காதலை சொல்லி இருப்பாளா?னு தெரியலை னு சொல்லி பச்சக் னு லிப் கிஸ் அடிக்குது லட்சு


9  தங்கச்சியைக்கண் முன் ரேப் பண்ணுன வில்லனை பழி வாங்னா அது ரஜினி வெர்சன்.காதலியை ரேப் செஞ்ச வில்லனை பழி வாங்குனா அது விஷால் வெர்சன்


10  இடைவேளை வரை போர் அடிக்கவில்லை.நா சி ம.இயக்குநருக்கு ச்வால் இனி தான் காத்திருக்கு


11  புரட்சித்தளபதி என்பதால் தளபதி சூர்யா மாதிரி விஷால் தலைக்குப்பின்னால சூரியன் அடிக்கடி வருது.அய்யோ!!

12 பனி மலைல டூயட் னா மத்த ஹீரோயின் கள் எல்லாம் கஷ்டப்படுவாங்க.லட்சுவுக்கு ஒரு ஷோபா செட் கொண்டாந்து இறக்கிட்டாரு.விஷால்.லவ் மேட்டர் உண்மைதான்



13  காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் குடும்பப்பெண்கள் தவிர்க்கவும் # நா சி ம





சி பி கமெண்ட் - நா சி ம = சுவராஸ்யமான முன் பாதி,ஜீரணிக்க கஷ்டமான கலாச்சார சீர்க்கேட்டின் அடையாளப்படுத்தும் பின் பாதி -



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் - 2.5 / 5


விருதாச்சலம்  பிவிஜி யில்  படம் பார்த்தேன் 





உள்ளூர்ல படம் பார்த்தா சாதாத்தமிழன்.வெளியூர் போனாலும் டைம் டேபிள் போட்டுட்டு படம் பார்த்தா அவன் தான் வெட்டித்தமிழன்


    

Wednesday, October 16, 2013

‘ஆரம்பம், -400+ , ஆல் இன் ஆல் அழகு ராஜா 300 + -தீபாவளி ரேஸ் - டிரைலர் @ THE TAMIL HINDU

அஜித்தின் ‘ஆரம்பம், கார்த்தி யின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', விஷாலின் 'பாண்டிய நாடு' ஆகிய மூன்று படங்கள் தீபாவளி ரேசுக்கு தயாராகி நிற்கிறது. இந்த மூன்று முன்னணி நாயகர்களின் முந்தைய படங்கள் வசூலில் கொஞ்சம் பின்தங்கியதால் தீபாவளிக்கு வெற்றிச் சரவெடி அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தீபாவளிக்காக இப்படம் எப்படி தயாராகி வருகிறது என்று ஒரு சிறிய முன்னோட்டம். சினிமா பாஷையில் சொன்னால், டிரைலர்.

'ஆரம்பம்' படத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா
ஆரம்பம்


அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டா ளத்தைக் கொண்டு விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 31ம் தேதியே வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அஜித் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் ‘தல’யின் மாறுபட்ட கதாபாத்திரத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கி றார்கள். இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகள் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு படத்தை திரையிடும் வேலைகள் நடந்து வருகின்றன.


அதே நேரத்தில் இப்படத்துக்கு ஒரு சிக்க லும் காத்திருக்கிறது. ஏ.எம்.ரத்னம் 'கேடி' படத்தினை தயாரித்த போது வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதற்கு “படத் தின் தயாரிப்பாளர் நானில்லை. ரகுராம் தான்.” என்று கூறிவருகிறார் ஏ.எம்.ரத்னம்.


பொதுவாக அஜித் படம் என்றாலே வெளியான 4 நாட்களுக்குள் கல்லாப் பெட்டியை நிரப்பிவிடலாம். இதனால் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவந்தது. இறுதியில் என்.எஸ்.சி ஏரியாவை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியது. 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிக்கல் இல்லாமல் வந்தால் இப்படம் ‘தல’ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்துதான்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை காஜல் அகர்வால்
ஆல் இன் ஆல் அழகுராஜா


பாக்ஸ் ஆபிசின் சமீபத்திய செல்லப் பிள்ளை கார்த்தி. இதனால் இப்போதே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கு 300 திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.


கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் நடிக்க 'காமெடி சரவெடி' இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். காமெடி வகை படங்களில் மகுடம் சூட்டிய ராஜேஷ் இப்படத்தில் இருப்பது கூடுதல் பலம். சந்தானம் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நகைச்சுவை ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்கிறது படக்குழு. படத்தொகுப்பு வேலைகள் முடிந்து, இதர பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறன.


 படத்தின் விநியோக உரி மையை பொறுத்தவரை எந்தொரு பிரச்னையுமில்லை. இதுவரை சுமார் 300 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு 50 திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அனைத் துமே முடிவு செய்தப்படி நடைபெற்றால் நவம்பர் 1ம் தேதி காமெடி சரவெடியாக அனைத்து இடங்களிலும் வெடிக்க இருக்கிறான் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'
'பாண்டியநாடு' படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை லட்சுமி மேனன்

பாண்டியநாடு


விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா நடிக்க சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம். விஷால் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தினை வேந்தர் மூவிஸ் வெளியிட முடிவு செய்திருக்கிறது. பொள்ளாச்சி யில் இப்போதுதான் படப்பிடிப்பு முடிந்து, இசை வெளியீடும் முடிந்திருக்கிறது. படத்தின் எடிட்டிங், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி நெருங்கிவிட்டதால் படத்தின் பணிகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.


thanx - the tamil hindu

Wednesday, May 15, 2013

பட்டத்து யானை - சந்தானம் ஹீரோ , விஷால் சைடு - இயக்குநர் பூபதி பாண்டியன். ஷாக் பேட்டி

சந்தானம் ஓனர்... விஷால் லேபர்! 
க.ராஜீவ் காந்தி
வழக்கமா ஒரு படத்தில் ஹீரோவின் வாழ்க்கையில் நடுநடுவே ரிலாக்ஸுக்காக, அப்பப்போ காமெடியன் வருவார். ஆனா, இந்தப் படத்தில் காமெடியன் வாழ்க் கையில் அப்பப்போ ஹீரோ வந்து ஆக்ஷன் பண்ணுவார். படத்தின் கதை முழுக்கவே சந்தானம் மேலேதான் டிராவல் பண்ணும். சந்தானத்தின் கதையின் நடுவில் புகுந்து தன் பிரச்னைகளைத் தீர்த்துக்குவார் விஷால். 80 சதவிகிதம் காமெடி, 20 சதவிகிதம்தான் ஆக்ஷன். நல்லா இருக்குல்ல இந்த ஃபார்முலா!'' - 'பட்டத்து யானை’ படத்தின் மேக்கிங்குறித்து நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.


''அப்போ படத்தின் ஹீரோ விஷாலா... சந்தானமா?''


''காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் சந்தானம். அவருக்கு ஒரே தேதியில் ரெண்டு ஆர்டர் வருது. ஒண்ணு, ஏரியா ரவுடி வீட்டுக் கல்யாணம். இன்னொண்ணு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வீட்டுக் கல்யாணம். ரெண்டு ஆர்டரில் எதை எடுக்கிறதுனு சந்தானம் முழிச்சுட்டு இருக்கும்போது, ரவுடியை இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டிவிட்டுரலாம்.


 இன்ஸ்பெக்டர் வீட்டு ஆர்டர் எடுத்துக்கலாம்னு விஷால் ஐடியா கொடுப்பார். ஆனா, கல்யாணம் நடக்கும் அன்னைக்குனு பார்த்து இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடும். இப்போ ரவுடிகிட்ட வசமா மாட்டிக்குவார் சந்தானம். 'இப்படி மத்தவங்களை நம்பாம நாமளே திருச்சில சொந்தமா ஒரு ஹோட்டல் வைப்போம்’னு சொல்லி, சந்தானத்தை திருச்சிக்குக் கூட்டிட்டு வருவார் விஷால். 



அப்புறம் திருச்சியில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. க்ளைமாக்ஸ்ல ஒரு விருந்து சமைக்கிறார் சந்தானம். அதில் விஷாலைக் காலி பண்ணணும்னு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்துடுவார். அந்த அளவுக்கு விஷால் மேலே சந்தானம் ஏன் காண்டாகுறார்ங்கிறதுதான் கதையே. இதுக்கு நடுவில்தான் ஹீரோவோட காதல், அதில் வர்ற பிரச்னைகள், ஆக்ஷன் எல்லாமே இருக்கும்!


எப்பவும் என் படத்துல காமெடிக்குனு தனியா யாரையும் நடிக்கவைக்க மாட்டேன். ஹீரோ, ஹீரோயின், வில்லன் வரை எல்லாருமே காமெடி பண்ணுவாங்க. அப்படி இதில் படம் முழுக்க சந்தானம் காமெடி பண்றார். ஒரு ஹோட்டல் நடத்தணும்னா ஒரு ஓனர், நாலஞ்சு லேபர்ஸ் வேணும்ல. அப்படி இதில் ஓனர் சந்தானம். அவரோட லேபர்ஸ்தான் விஷால், ஜெகன், சபேஷ் கார்த்தி, சரித்ரன் நாலு பேரும்!''  


''அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நடிக்கிறாங்களா?''


''அர்ஜுன் சார் பொண்ணுகிட்ட கரெக்ஷன்ஸ் சொன்னா எப்படி எடுத்துக்குவாங்கனு, ஆரம்பத்தில் சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா, கேமரா முன்னாடி ஐஸ்வர்யாவுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. முதல் படம்னு சொல்ல முடியாத அளவுக்கு நடிக்கிறாங்க!''


'' 'வின்னர்’, 'கிரி’ படங்கள்ல வடிவேலுவுக்கு நீங்க தான் காமெடி எழுதினீங்க. தனுஷ§க்கு 'தேவதையைக் கண்டேன்’, 'திருவிளையாடல்’னு ரெண்டு ஹிட் படம் கொடுத்தீங்க. அவங்ககூட எல்லாம் டச்ல இருக்கீங்களா?''


''வடிவேலுகூடப் பேசிட்டுதான் இருக்கேன். அவரோட ரெண்டாவது ரவுண்ட் செம மிரட்டலா இருக்கும் பாருங்க. தனுஷ்கூட இடையில கொஞ்ச நாள் பேச முடியலை. இப்ப திரும்பப் பேசிக்க ஆரம்பிச்சுட்டோம். 'கொலவெறி’, இந்திப் படம்னு ரொம்பப் பெரிய ரேஞ்சுக்குப் போயிட்டார். சீக்கிரமே அவர்கூட ஒரு படம் பண்ண வாய்ப்பு வரும்னு நினைக்கிறேன்!''

 நன்றி - விகடன்

Saturday, October 01, 2011

வெடி - சமீராரெட்டியின் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

https://lh3.googleusercontent.com/-t-DBoo60IDA/Tkj-7oo0o8I/AAAAAAAAAzo/Z_GglHL5FMQ/vedi-1.jpg 

விஷால்க்கு கதை எழுதனும்னா டைரக்டர்கள் யாரும் சிரமமே படத்தேவை இல்லை.. இடைவேளை வரை காமெடியனை வெச்சு மொக்கை காமெடி  போட வேண்டியது, ஹீரோயின் கிளாமரை வெச்சு 2 டூயட் பாட வேண்டியது.. ஹீரோ ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு வருவாரு.. வந்த ஊர்ல ஒரு ரவுடி கும்பலோ, தாதா கும்பலோ அந்த ஊரை ஆட்சி செய்யும், அண்ணன் அவங்க அட்டூழியத்தை, கொட்டத்தை அடக்குவாரு.. டேய்.. திருந்துங்கடா  டா டா...


படத்தை ஓரளவுக்காவது தியேட்டர்ல உக்காந்து பார்க்க முடியுதுன்னா சமீராரெட்டியின் கிளாமரும், விவேக்கின் சுமாரான காமெடியும் தான்...

சமீராரெட்டியை ஸ்விம்மிங்க் பூலில் தள்ளி விட்டதும், நனைந்த பனியனோடு அவர் எழுந்து நிற்கும்போது ஒரு பய தியேட்டர்ல கண் இமைக்கலையே... வழக்கமா டூயட் வந்தா தம் அடிக்க போற பசங்க கூட இருடா.. ஏதாவது சீன் இருக்கும்னு நம்பிக்கையா உள்ளேயே இருந்தாங்க.. 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/vedi-vishal-sameera-reddy-hot-photos.jpg

ஹீரோவுக்கு தங்கையா ஒரு ஃபிகரு ஹீரோயினை விட நல்லாருக்கு... பாப்பாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டுன்னு தோணுது. ஆனா பாப்பா சிரிக்கறப்ப அழகா இருக்கு.. அழும்போது பார்க்க சகிக்கலை.. நல்ல நடிகைன்னா அழும்போது கூட ரசிக்க வைக்கனும்.. 

விவேக் ஏற்கனவே வடிவேல் பண்ணுன காமெடி கேரக்டரான வெட்டி பயில்வான் கேரக்டர்.. அதாவது பலூனை அவர் டிரஸ்ஸுக்குள்ள மறைச்சு வெச்சு பாடி பில்டர்னு ஃபிகர்ங்க கிட்டே பீத்திக்குவாராம், சகிக்கலை, ஆனா தியேட்டர்ல சிரிக்கறாங்க.. 

சமீராரெட்டி ஏனோ வயசான மாதிரி நல்லாவே இல்ல.. முகத்தை தவிர மற்றதெல்லாம் ரசிக்கும்படி இருக்கு.. அவரது ஹேர் ஸ்டைல் சகிக்கலை..

அண்ணன் புரட்டாசித்தளபதி ஒரே மாதிரி முக பாவம்... உணர்ச்சியே இல்லாம வசனம் பேசறது.. மாடுலேஷன்னா என்னன்னு அண்ணன் கமல்ட்ட இருந்து கத்துக்கனும், அவன் இவன் பார்த்துட்டு இதைப்பார்க்கறப்ப கடுப்பா இருக்கு..



http://www.chitramala.in/photogallery/d/573912-1/vedi-movie-stills-_1_.jpg
படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  மை மதராஸ் சே ஆயா ஹூங்க்... 

விவேக் - எங்காயா கல்கத்தா.

2. ஒரு நாளுக்கு நான் 25 மணி நேரம் எக்சசைஸ் பண்றேன்..

அதெப்பிடி? 24 மணி நேரம் தானே?

3.  எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு உனக்கு எப்படி தெரியும்?

நீயும் என்னை மாதிரியே தப்பு தப்பா ஹிந்தி பேசுனியே?

4.  மாஸ்டர்.. நட்ட நடுராத்திரில மொட்டை மாடில என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

மூன் பாத் டேக்கிங்க்.. 

உங்க பை செப்ஸை காண்பிங்க.. 

வேணாம்.. அது கிளார் அடிச்சு நிலால இருக்கற பாட்டிக்கு கண் கூசும்.. 

5.  ரீமா சென் - நான் உன்னை ரேப் பண்ணப்போறேன், நீ கதறிக்கதறி அழப்போறே.. 

அவன் ஏன் அழறான்..? ஒன்ஸ்மோர் தான் கேட்பான். ( அதானே?)

6.  என் பொண்ணு பூஜைல இருக்கா..

மணி ஓசை கேட்டுதுங்க்..

அவ ரொம்ப பக்திங்க..

பார்த்தேன்..!!!

7. நீங்க வீட்டுக்கு வந்திருக்கற விருந்தாளி , காபி சாப்பிட்டுட்டுதான் போகனும்.. 

அது சரி.. ஏன் வீட்டுக்குள்ள இருந்து டம்ளர் மட்டும் பறந்து வருது?

அது வந்து... விருந்தாளிங்க காத்திருக்கறது என் மனைவிக்கு பிடிக்காது.. நீங்க டம்ளரை பிடிங்க.. நான் காபியை எடுத்துட்டு வர்றேன்.. 

8. இந்த உலகத்துல எப்பவும் ஒர்க் அவுட் ஆகறது செண்டிமெண்ட்ஸ் தான்..

9.  டேய்.. பேட்டைப்பார்த்து பால் போட வேண்டியதுதானே.....

எஸ்.. அப்டித்தான் போட்டேன்..

டேய்.. என் உயிரோட விளையாடிட்டே டா....

என்ன ஆச்சு மாஸ்டர்....?
ம் .. குச் குச் ஹோத்தா ஹை..

10.  மாஸ்டர்.. நான் பாலு பேசறேன்,... 

நான் பலூன் பேசறேன்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKymyG8HrFU32I0BwBUerahFPT6rbup_ICv_42RaobMaec9ymWW6d952wiQCcplkGUjlXoMgwTrgtD-Ake0cuybhS5CINCgk0cysGW0AE8F9vVfDrbwKqi4m-EDjitgqIfyyehIkTc-a0/s1600/Sameera-Reddy-hot-pics.jpg

11.  ஏக் காவ் மே  ஏக் கிசான் ரஹதா தா 

அப்டின்னா?

ஒரு குகைல ஒரு சிங்கம் தான் இருக்க முடியும்.. 

12. இந்த பலூன் மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும், வெளில யார் கிட்டேயும் சொல்லிடாதே.. மீறி வெளில சொன்னே.. அநாவசியமா நான் உன் கால்ல விழ வேண்டி இருக்கும்.. 

13. ரீமா சென் - நாந்தான் மன்னிப்புக்கேட்டுட்டேனே.. ஏன் முறைக்கறே.. 

ஃபோனைக்குடு,,,

ம்.. அதை வெச்ச இடத்துல தேடு..

உன் சர்ட்டுக்குள்ள வெச்சே.. எடுத்துக்கவா?

14. ஏண்டி.. அவன் நம்மளைப்பற்றிதானே பேசறான்?

இல்ல.. உன்னைப்பற்றி..
15. ஹீட்டரை சரி பண்ணனும்...


யோவ்.. முதல்ல என்னை சரி பண்ணுய்யா.. 

16. கடைசில பொண்ணுங்க அடிக்கறது மொட்டை தானேடி.. அது காதலனா இருந்தாலும் சரி.. கழட்டி விட்டவனா இருந்தாலும் சரி..

17.  முள் படுக்கைல குப்புற படுங்க , இந்த 5 பேரும் உங்க மேல ஏறி நடப்பாங்க. வேண்டுதல் முடிஞ்சிடும்.. 

ம்க்கும், எனக்கு எல்லாம் கிழிஞ்சிடும்.. 

18.  எல்லாரையும் நாம கொல்ல வேண்டியதில்லை.. நம்ம மேல இருக்கற பயமே அவங்களை சாகடிச்சுடும்.. 

19.  என் தங்கச்சி மேல எவன் கை வெச்சாலும் நான் அவனை அடிப்பேண்டா அடிப்பேண்டா அடிப்பேண்டா டா டா டா . # புரட்டாசித்தளபதி விஷால் பஞ்ச டயலாக் @வெடி

20. என் மேல கேஸ் போட நான் அல்ப சொல்ப இல்லடா # வில்லன் பஞ்ச் டயலாக்


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/sameera-reddy-hot-in-maxim-magazine-photo-stills-11.jpg

21.  போலீஸ்னா பயம் இருக்கக்கூடாது, பயம் இருந்தா போலீஸா இருக்கக்கூடாது..

22.  அங்கே ஒரு கேனம் இருப்பான், அவன் கிட்டே ஃபோனைக்குடுங்க.. 

இங்கே கேனம் யாரு?

அய்யாதான்

23. டாக்டர்.. விளையாடறீங்களா? உங்களை தூக்கிடுவேன்.. 

உங்க வலது கையையே உங்களால இப்போ தூக்க முடியாது.. 

24. டீ வாங்கிட்டு வான்னு சொல்லி இருந்தாக்கூட பரவால்ல.. கழுவிட்டு வாங்கிவாண்ட்டாங்களே..

25. சீக்கிரமா வந்தா உன் பொணத்தை உன் தங்கை பார்ப்பா, லேட்டா வந்தா உன் தங்கை பொணத்தை நீ பார்ப்பே,,

26.. டாக்டர்.. வலி பயங்கரமா இருக்கு.. 

கவலைப்படாதே.. நின்னுடும்.. 

எப்போ?

உயிர் போனதும்...

27. பயம் எப்படி ஸ்டார்ட் ஆகுது?

எப்படி வரும்கற டவுட்லயே ஸ்டார்ட் ஆகும்..

28. நான் செத்தாலும் நீ சொல்றதை செய்ய மாட்டேண்டா...

உல்டாவா பேசாதே.. நான் சொல்றதை செய்யலைன்னாத்தான் நீ சாவே,,

29. டாக்டர், இஞ்செக்‌ஷன் போட்டாச்சா?

ம், நீங்க என்கவுண்ட்டர்ல போட்ருங்க

30. சின்ன வயசுல இருந்தே பயம்னா என்னன்னே தெரியாம வளர்ந்துட்டேன்.. பயம்னா என்னன்னு காட்றா.. பாக்கனும்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf4Wbbc6DLF7uzGMWtVcl8tpaHvOn2Cj_8ULqV43i3CLyFzV2sEJ2NASw9r08zqu2sL-gRAq_9skc7vO5-lIgCNj232y7KckTvRvL5w-NjvmVnBPD0okB-ujSKXDVrXEPfWWUo-XJnctSw/s1600/Hot%252520Sameera%252520Reddy-21%255B1%255D.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காதலிக்கப்பெண்ணொருத்தி, என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு?, இப்படி மழி அடித்து, மேலே மேலே , இச் குடு என 5 பாடல்களையும் ஓரளவு பார்க்கும்படி படம் ஆக்கியது.. 

2. ஹீரோயின் தங்கை கேரக்டருக்கு அழகு ஃபிகரை புக் செய்தது

3. குப்பை படத்தில் கூட ரசிக்க வைக்கும் ஊர்வசி காமெடி காட்சிகள்

4. ஒரு சீனில் கூட பிரபுதேவா தலையை காட்டாமல் விட்டது

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW0dS09wsQCWa0kEoTno7dGXMP0IrW5EC1n4G-wqpxrrL5S0LQmqCnefkh163DX035I0LG5FkC2kGYHRCPsFf5oCm87w_CQZWrM1POIy7LOLqAzUEqX24PSFFnQJuQ4rkJuhi3Y5hvYKs/s1600/Vedi-Movie-Hot-Stills-Photos-Gallery-1.jpg


இயக்குநர் பிரபுதேவாவிடம் சில கேள்விகள்

1. வில்லனின் உடம்பில் ஸ்லோபாய்சன் ஊசி போட்டு பின் அவனை ஹீரோ மிரட்டி எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கும் சீனை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது?

2.  விஷால் எப்படி ஒவ்வொரு சீனிலும் 34 பேரை அடித்து துவைக்கிறார்?

3. பாத்ரூமில் ஹீரோவை டர்க்கி டவல் மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோயின் கட்டிப்பிடித்தால்தான் காதல் வருமா?

4. ஃபிளாஸ்பேக்கில் விஷாலின் தங்கையாக வருபவர் ஒரு பேட்டை ரவுடியின் மகள்.. அதற்குத்தகுந்தபடி ஆளை செலக்ட் செய்திருக்கலாம்..அவர் பணக்காரப்பொண்ணு போல அதுவும் சேட் வீட்டு பொண்ணு போல இருக்கிறார்..

5. அநாதை இல்லத்தில் தங்கையை மட்டும் தனியாக ஏன் விட வேண்டும்? அதே அநாதை இல்லத்தில் விஷாலும் வளரலாமே?வாட் லாஜிக்? அண்ணன், தங்கை இருவரும் வளர அநாதை இல்லத்தில் ரூல்ஸ் கிடையாதா?

6.. போலீஸ் ஆஃபீசராக வரும் விஷால் ஏன் எப்போதும் லை தாடியோடவே இருக்கார்?

7. கொல்கத்தா வந்த பின் விஷால் என்ன தொழில் செய்யறார்? ஹீரோயின்  பின்னால் சுற்றுவது தவிர....




ஏ செண்ட்டர்களில் 20 நாட்கள், பி செண்ட்டர்களில் 15 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாம், உங்களுக்கென்ன தலையெழுத்தா?
 http://www.chitramala.in/photogallery/d/573918-1/vedi-movie-stills-_4_.jpg



டிஸ்கி 1 -

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

\

டிஸ்கி 3 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

Tuesday, June 21, 2011

பாலாவின் அவன் இவன் - , நோ ஜீவன் ,எஸ் காமெடி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR4VASGXr92m6x4llPrwB3NumoAQoKyoYIVro5eLYnrLYIE5OWdJpru5P3spGJrdgCr5PRJjOMlHUryxLpL40GYD_hxeDvORnC_J3r1Ms7DeG36uWxZH6ziuScw2o92PpBndAhASQymAo/s1600/avan_ivan_movie_posters_wallpapers1.jpg 

நமக்குப்பிடித்த கலைஞன் (கவனிக்க - கலைஞர் அல்ல) கம் படைப்பாளி மிக பிரமாதமான படைப்பு ஒன்றை அளிக்கும்போது மனம் குதூகலம் அடைந்து அவருக்கு கை குலுக்க கை கொடுப்போம்.அதே படைப்பாளி எப்போதாவது சறுக்க நேரிட்டால் அவருக்கு ஆதரவுக்கரம் கொடுத்து ஆறுதல் வரம் அளிப்போம். அப்படி ஆறுதல் தர வேண்டிய அளவிலான ஒரு சறுக்கல் படம் தான் பாலா எனும் கம்பீர யானையின்  அவன் இவன் .

தொடர்ந்து ஒரே விதமான படங்களை தரும் படைப்பாளி விமர்சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது பாணியிலிருந்து விலகி வித்தியாசமான படம் தர முற்படுகையில்  அவரையும் அறியாமல் அப்படம் மக்கள் ரசனையை விட்டு விலகி விட நேர்வது உண்டு.. அப்படி ஒரு விலகல் படம் தான் இது..

கதை ரொம்ப சிம்ப்பிள்.. வளர்ப்புத்தந்தையை  அவமானப்படுத்திய,கொலை செய்த வில்லனை  கொடூரமாக கொலை செய்யும் இரண்டு மகன்களின் கதை.அந்த 2 பசங்களுக்கும் உண்டான  காதல்,அவர்களுக்கிடையே யான உறவு என்று படம் ரொம்ப சாதாரண திசையில் செல்கிறது..

படத்தில் முதல் பாராட்டு விஷாலுக்குத்தான்.. என்னா ஒரு பாடி லேங்குவேஜ்.. என்னா ஒரு நளினம்.. கமல் மாதிரி பரத நாட்டியக்கலைஞர் பெண்மையின் நளினத்தை கொண்டுவருவது சிரமமான விஷயம் இல்லை.. விஷால் மாதிரி ஆண்மை மிளிரும் பாடி பில்டர்ஸ் பெண்மையின் நளினத்தை , கிட்டத்தட்ட திருநங்கை மாதிரி ஒரு லாவகத்தை முகத்தில்,உடல் மொழியில் கொண்டு வந்தது அபாரம். இந்த ஆண்டின் சிறந்த நடிகர் விருது நிச்சயம்..

http://tamil.filmychai.com/images/moviewallpapers/orginal_48596ff5-1d4a-3788-7a37-000046c0b421.jpg

ஆர்யா மட்டும் என்ன? அசால்ட்டாக நடிப்பதில் அவரை அடிச்சுக்க ஆள் ஏது?சம்பட்டைத்தலையா.. சட்டித்தலையா என்று கவுண்டமணி செந்திலைத்திட்டுவது போல அவரது கெட்டப் இருந்தாலும் மைனஸ்ஸையே ப்ளஸ் ஆகும் ரசவாத வித்தையை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்யா ஆங்காங்கே கோல் அடிக்கிறார்.. பாத்திரத்தின் தன்மை கருதி பல இடங்களில் விஷாலுடனான கம்பைண்டு சீனில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கில் அசத்துகிறார்.. 


இருவரது வளர்ப்புத்தந்தையாக வருபவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதே.. (ஜி எம் குமார்)பாத்திரத்தின் தன்மை கருதியும்,திரைக்கதையின் தேவை கருதியும் அவர் துகில் உரியப்பட்டு வில்லனால் சித்திரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்தது செம துணிச்சல் தான்.. 

ஹீரோயின்களில் ஆர்யாவின் ஜோடியாக வரும் மதுஷாலினியின் நடிப்பு சுமார் ரகமே... அவரது ஃபேஸ்கட் வசீகரம் கம்மி..
ஆனால் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் கான்ஸ்டபிளாக வருபவர் (ஜனனி அய்யர்) கண்களால் கவிதை சொல்கிறார்.. கிட்டத்தட்ட லைலா வின் வெகுளித்தன காப்பி என்றாலும் அவரது பாடி லேங்குவேஜ் அழகு.. 

ஒரு காட்சியில் விஷாலும், இவரும் போட்டி போட்டுக்கொண்டு காதல் பார்வைகளை பகிர்வதும்,விருந்து பரிமாறும்போது பார்வைகளை பரிமாறுவதும்  காதலர்கள் காணக்கண் கோடி வேண்டும்..

http://chennai365.com/wp-content/uploads/movies/Avan-Ivan/Avan-Ivan-Moive-04-18-Stills-018.jpg

பாலாவின் காமெடி வசனங்கள் ( விளிம்பு நிலை மனிதர்களின் உரையாடல் என்பதால் கண்ணியம் குறைவாக இருந்தாலும் அதுவும் ஒரு கலாச்சாரப்பதிவே)

1. டேய்,, அநாதை நாயே.. 

ஆமா.. இவரு மட்டும் 4 பொண்டாட்டி,5 வைப்பாட்டி வெச்சிருக்காரு..


2. அடப்பாவி.. எப்படி என் வீட்டுக்குள்ள வந்தே? இந்த அர்த்த ஜாமத்துல?

ம்.. ஏறிக்குதிச்சு.. பின்னே காலிங்க் பெல் அடிச்சு எந்த திருடனாவது வருவானா?

3. எங்கேடி போறீங்க?

ம். காலேஜ்க்கு.. 

எனக்குத்தெரியாத காலேஜா? ஓ.. டுட்டோரியல் காலேஜா?

4. ஏண்டி.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே.. பொம்பள புள்ளைங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்?

5. என்னை இப்போ யாரும் ஃபோட்டோ பிடிக்காதீங்க.. நான் மேக்கப்ல வேற இல்ல.. 

6.  அந்த கோமாளிப்பையன் என்னையே பார்க்கறான் (செல்வா மன்னிக்க)

விடுடி.. அவனாவது உன்னைப்பார்க்கறானே? சந்தோஷப்படு.. 

7.  டேய்.. என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா.. 

டி எஸ் பி சார்.. கண்ல இருந்து தண்ணி தான் வரும்... பின்னே  மூ********மா வரும்?


8. ஏம்மா.. கூப்பிட்டதும் உடனே ஓடோடி வர்றதுக்கு நான் என்ன உன் புருஷனா?


9. பாப்பா.. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு.. உன் பேண்ட்ல ஜிப் இருக்கா ? இல்லையா? என்பதை மட்டும் சொல்லிடு.. 

10. சரி.. உன் பேரென்னடி?

தேன் மொழி.. தேனு.... 

ஓ.. நக்கனும்னு நினைப்பீங்களோ.... ( படிக்கும்போது விரசமாக இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி இல்லை)

http://www.cinehour.com/gallery/actresses/kollywood/Janani%20Iyer/Janani%20Iyer%20Stills%20At%20Avan%20Ivan%20Audio%20Launch/34365645Janani-Iyer-At-Avan-Ivan-Movie-Audio-Launch-17.jpg

11. அம்பிகா.. - டேய்.. சரக்கு அடி வேணாம்கலை.. அம்மாவுக்கு கொஞ்சம் மிச்சம் வைடா.. இப்போவெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா தூக்கமே வரமாட்டேங்குது./.

12. போலீஸ்- ஆள் பார்க்க எப்படி இருந்தான்..?

கருப்பா இருந்தாலும் களையா தான் இருந்தான்,,,, 

13. என்னா இது சலூன் பக்கம் பொம்பள புள்ளா?.. ஏம்மா கட்டிங்க்கா? ஷேவிங்க்கா? ( இந்த வசனத்தில் இன்னும் கண்ணியம் காட்டி இருக்கலாம்)


14. டேய்.. என்னமோ உழைச்சு சம்பாதிச்ச மாதிரி யோசிக்கறே.. நீ திருடனதைத்தானே தாரை வார்க்கப்போறே?

15. டேய்.. சுமங்கலியோட சாபம் உங்களை சும்மா விடாது.. 


அட போடா.. அவளுக்கு 2 புருஷன்.. அதும் இல்லாம அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல கை பட்டவ.. 

14.  அதுக்குத்தாண்டா நானும் சொல்றேன்.. அவ நமக்கு எதுக்கு?

அடப்பாவி .. நமக்குன்னு ஏன் என்னையும் சேர்க்கறே?

15.  டேய்... ஒரு கோடி ரூபா சரக்கு.. ஒரு டீயும் ,பன்னும் வாங்கிக்கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கறாங்கடா.. ஏமாந்துடாதே?

16. எதுக்குடா லேடீஸ் காலேஜ் பஸ் ஸாப் பக்கம் ஜீப் வர்ற மாதிரி பண்ணுனீங்க..?

உள்ளே போறது உறுதி ஆகிடுச்சு.. அண்ணி முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்துட்டு போயிடறோம்.. 

17. என்னது பிளேடு முழுங்கிட்டானா?

டாக்டர்.. என் குடல் ஃபுல்லா நீங்க உருவு உருவுன்னு உருவுனாலும் ஒரு பிளேடு எடுக்க முடியாது..  ( டபுள் மீனிங்க் டயலாக்  யூ டூ பாலா)

18.   இன்ஸ்பெக்டர்.. அவன் பிளேடு முழுங்கலை.. ஹி ஈஸ் எ லையர் (HE IS A LIEAR)

என்ன டாக்டர் சொல்றீங்க? அவன் ஒரு லாயரா? (LAWER)

(கிரேசி மோகன் பாணி வசனம்)

19. சூர்யா - அகரம் ஃபவுண்டேஷன் மூலமா  ஏழைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யறோம்.. 

ஆர்யா- அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கோடிக்கணக்குல சம்பாதிக்கறீங்களே.. கொடுத்தா என்னவாம்..?

20.  டேய்.. மாப்ளே.. நீ பெரிய நடிகன்டா.. த்ரிஷா உனக்குத்தான்.. 
21. ராத்திரி தூங்கறப்பக்கூட பவுடர் அடிச்சுட்டு, செண்ட் போட்டுக்கிட்டு தான் அவன் தூங்குவான்..

22. டேய்.. நாயே.. நல்ல படம் ஓடிட்டு இருக்கறப்ப  எதுக்கு நடுவுல தேவை இல்லாம பிட் படம் ஓட்டிட்டு இருக்கே?

23. யோவ்.... உன் அரண்மனையை வித்து ஒரு படம் எடுக்கப்போறேன்.. அதுல கதை ,வசனம்,வெட்டிங்க்,ஒட்டிங்க் ,புட்டிங்க் எல்லாம் நீ தான், நான் டைரக்சன் மட்டும்,,

24.  ஆர்யா - எனக்கு அவனை பிடிக்கும்,.. ஆனா அதை வெளில காண்பிச்சுக்க மாட்டேன்.. அவனுக்கு மட்டும் தான் நடிக்கத்தெரியுமா?

25.  டேய்.. போதும்டா.. அப்பனை மாதிரி எக்ஸ்ட்ரா பிட்டுப்போடாதே.. இத்தோட நிறுத்திக்கோ..

26. உனக்கு என்ன வேணும் மவனே..... 

என்ன வேணும்னே தெரில .. நீ என்ன சாமி.. ? 

(ஆனந்த விகடனில் வந்த கவிதையின் உல்டா வடிவம் .

ஒரிஜினல் கவிதை - என்ன வரம் வேண்டும் என கடவுள் கேட்டார்..   பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்பதே தெரியவைல்லை.. நீ என்ன கடவுள் என்றேன்.. ) 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_v_OH_3PtVTWg1CebplEHUM7ymMSXSXRIqbW77JK0x_hZ7VWJTelwh9DsjoCrphCDxVH47usjgKIaXWpqyZvQIcEH7ecc6O6uoOnk-30dQG06sciHwQXfXE8qX-0RYX97xbfXtEtd_5PU/s640/Madhu+Shalini5.jpg

இயக்குநர் பாலா சபாஷ் பெறும் இடங்கள்

1. விஷாலின் பாத்திரப்படைப்பும், அவர் மூலம் இப்படியும் ஒரு நடிப்பை வர வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும்.. 

2.  ரவுடி,கேடிகளுக்கு போலீஸ் அழைப்பு விடுத்து விருந்து வைத்து வேண்டுகோள் விடுக்கும் காமெடி சீன்.. 

3. காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி  காத்துக்கிடக்கேன் வாடி பாடல் படமாக்கப்பட்ட விதம்..

4. சக்சஸ் சக்சஸ் என்று கத்திக்கொண்டே அந்த சின்னப்பையன் லேடி கான்ஸ்டபிளை கட்டிப்பிடிக்கும் சீன் , தியேட்டரில் செம் ஆரவாரம்..

5. சூர்யா வேடிக்கை பார்க்க விஷால் காட்டும் நவரச நடிப்பை வேடிக்கை பார்க்கும் காதலியின் முகத்தில்  தோன்றும் பெருமித உணர்வு  காதலனின் நடிப்பை விட பிரமாதமாக படம் ஆக்கியது.. 

http://aambal.files.wordpress.com/2011/06/bala.jpg
  இயக்குநர் சறுக்கிய இடங்கள்

 1. மூளையை கழற்றி மூலையில் வைத்து விட்டுப்பார்க்க வேண்டிய காமெடிப்படமாக இருந்தாலும்  இயக்குநர் தாராளமாக தவிர்த்திருக்கவேண்டிய பல கட்டங்கள் உண்டு.. அதில் முக்கியமானது படத்துக்கும் விஷாலின் மாறுகண் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை.. தேவையே இல்லாமல் அவரை ஏன் சிரமப்படுத்த வேண்டும்?

2. எந்த காதலனாவது காதலியை கலாட்டா பண்ணுவதாக நினைத்து மற்றவர் முன்னிலையில் காதலியை குட்டிக்கரணம் அடிக்க சொல்வானா? அப்படி சொன்னால் அவன் நல்ல காதலனா? ( காதலியின் முந்தானை காற்றில் விலகினாலே பரிதவிப்பவன் தானே உண்மையான காதலன்? )

3. பாலா டச் வேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் அந்த கொடூரமான துரத்தல் காட்சியும், அப்பா கேரக்டர் ஆடை இல்லாமல் தூக்கில் தொங்க விடப்படுதல் .. தேவையற்ற திணிப்பு.. 

4. இடைவேளை வரை காமெடியாக போகும் திரைக்கதை அதற்குப்பின் சீரியசாகப்போக வேண்டிய சூழ்நிலையில் பாலா பதட்டத்தில் பல காட்சிகளை ரெண்டும் கெட்டானாக காமெடி+ சோகம் மிக்ஸிங்க்காய் அமைத்தது..

5. வில்லனின் பாடி லேங்குவேஜ் கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகானின் நடிப்பை காப்பி அடித்தது..

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmUL_O1sduh4QFZbCu9v1VU5mAei6tiDOdEGpb2Okvw9tlaLx-X1hSa_2sYuz9TOmafrLPxVa4ZpY5g82pXCV7U_uxTo3UrJkAz7ARcjs9UeUG88nRV0GZUQW8NwPJtroXb6GsEZzUQTtJ/s1600/Janani+Iyer+Hot+1.jpg

இந்தப்படம் வசனங்களில் அத்துமீறல், காட்சி அமைப்பில் ஒரு பத்து நிமிடங்கள் பெண்கள் முகம் சுளிக்கும்படியாக இருப்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.. ( ஆனா எல்லாரும் தனித்தனியா போய் பார்க்கலாம்)

 கமர்ஷியலாக இந்தப்படம் ஓடாது.. அதிகபட்சம் 25 நாட்கள் ஓடலாம்.. ஏ செண்ட்டரை விட பி சி செண்ட்டரில் தான் எடுபடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - காமெடி ரசிகர்கள்,பாலா அபிமானிகள் மட்டும் பார்க்கலாம் (கதையைப்பறி கவலைப்படாதவர்களும் )

ஈரோடு அபிராமி,சண்டிகா  என 2 தியேட்டர்களில் படம் ஓடுது.. நான் அபிராமியில் பார்த்தேன்.. (ஏன்னா என் பொண்ணு பேரு அபிராமி.. )