Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Saturday, August 18, 2012

என்னை டார்ச்சர் பண்ணாங்க -ஜெ வழக்கு புகழ் வக்கீல் ஆச்சார்யா பேட்டி


a

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி



ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.



14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர்.


அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/Sasikala-DC.jpg.crop_display.jpg


1.''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''




''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).



2. ''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''




''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?


எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''





3. ''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'



''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர்.


ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.


 இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s640/jj-cartoon.jpg

4. ''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''



(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!'' 



'5. 'அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''



''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''



6. ''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''




''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/j-sasi.jpg




7. ''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''



8. ''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''




''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''




9. ''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''



''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''



10. ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''






''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''





http://www.envazhi.com/wp-content/uploads/2012/03/JAYA-WORTHLESS-RULE.jpg
11. ''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''



''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''



12. ''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''



13. ''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''




''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.



'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

நன்றி - ஜூ வி



http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/jaya-marriage.jpg

Friday, May 04, 2012

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்

http://www.cinemapoomi.ithayapoomi.org/images/articles/1332090993valaku%20en_002.jpg

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு பணக்கார வீட்ல வேலை செய்யற வேலைக்காரப்பொண்ணு மேல யாரோ ஆசிட் வீசிடறதா காட்டறாங்க .. அந்த வேலைக்காரப்பொண்ணை ஒருதலையா லவ்வின ஒரு பிளாட்ஃபார்ம் கேஸ் பையன் தான் அந்த வேலையை செஞ்சிருக்கனும்னு அவனை விசாரணைக்கு கூட்டிட்டு வர்றாங்க.. படத்தோட முதல் பாதி அந்தப்பையனோட ஃபிளாஸ் பேக்ல சொல்லப்படுது..

கிராமத்துல விவசாயக்குடும்பம் அவனுது.. விளைச்சல் இல்லாம கந்து வட்டிக்கு பணம் வாங்கிப்பையனைப்படிக்க வைக்கறாங்க.. ஒரு கட்டத்துல கடனை திருப்பிக்கட்ட முடியாத சூழ்நிலைல பணம் கொடுத்த ஆள் ரொம்ப நெருக்குனதால  பையன் வட மாநிலத்துல வேலை செய்ய கிட்டத்தட்ட விற்கப்படறான்.. 6 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு கடனைக்கட்டி ரிட்டர்ன் வர்றப்போ அவன் பேரண்ட்ஸ் ஆக்சிடெண்ட்ல இறந்துடறாங்க.. இப்போ இவன் அநாதை.. 

 கையேந்தி பவன்ல வேலைக்கு சேர்றான்.. ரோட்டோர வாழ்க்கை.. அந்த வழியா போக வர இருந்த வேலைக்காரப்பெண்ணை  பார்த்து லவ்வறான்.. ஆனா பாப்பாவுக்கு அவனைக்கண்டாலே பிடிக்கலை.. ஏன்னா பொதுவாவே பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை, நேர்மையான காதல் நெஞ்சங்களை பிடிக்காது.. பன்னாடைப்பசங்களை, பன்னாடுகளில் இருந்து இறக்குமதி செஞ்ச ஜீன்ஸ் போட்டுட்டு பொய் சொல்லி ஏமாத்துற பசங்களைத்தான் உருகி  உருகி காதலிப்பாங்க.. அவன் மேட்டரை முடிச்சுட்டு கழட்டி விட்ட பின் அம்மா, அப்பா பார்த்த பையனை கமுக்கமா மேரேஜ் பணி செட்டில் ஆகிடுவாங்க..




http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2686&option=com_joomgallery&Itemid=140


அதனால நிராகரிக்கப்பட்ட வேதனைல அவன் தான் ஆசிட் ஊற்றி இருக்கனும்னு அவன் மேல கேஸ்.. 

 இப்போ இடை வேளை.. 2 வது கோணம்.. இப்போ அந்த வேலைக்காரப்பொண்ணு வேலை செய்யற பணக்கார ஃபிகரு போலீஸ் ஸ்டேஷன்ல  வாலண்ட்ரியா ஆஜர் ஆகி சாட்சி சொல்லுது.. அந்த பாப்பாவோட பார்வைல வழக்கின் இன்னொரு கோணம்.. 

அந்த பணக்கார ஃபிகரை கரெக்ட் பண்ண நல்ல நோட் பண்ணுங்க.. நோ காதல் ஜஸ்ட் கரெக்‌ஷன்... சிம்ப்பிளா சொல்லனும்னா சிம்பு- நயன் தாரா மாதிரி ட்ரை பண்றான்..  அவ கூட ஊரைச்சுத்தறப்ப... அவ கடல்ல குளிக்கறப்ப செல் ஃபோன்ல ஃபோட்டோ , வீடியோ எடுத்து வெச்சு அதை ஃபிரண்ட்ஸ்க்கெல்லாம் காட்டிட்டு இருக்கான்.. 

 அந்த மேட்டர் அந்த ஃபிகருக்கு தெரிஞ்சுடுது... தூ-ன்னு கேவலமா துப்பிட்டு கட் பண்றா.. அந்த கோபத்துல அந்தப்பையன்  அவ மேல ஆசிட் ஊற்ற வீட்டுக்கு வந்தவன் கதவை திறந்த வேலைக்காரி மேல ஊத்திடறான்.. 

 இதுதான் கேஸ்.. இதுக்குப்பிறகு இந்த கேஸை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் என்ன பண்றார்.. ஆசிட் ஊத்துன பையனோட அம்மா ஒரு கேஸ்.. அதாவது  ஒரு மினிஸ்டரோட சின்ன வீடு.. அவ கிட்டே பணம் வாங்கிட்டு, கேஸை திசை திருப்பி அந்த ஏழைப்பையனை பிரெயின் வாஸ் பண்ணி குற்றத்தை ஒத்துக்க வெச்சு தண்டனை வாங்கி குடுக்கறார்.. 

 அதுக்குப்பின் என்ன ஆகுது என்பதை வெண் திரையில் காண்க.. 

கமல் நடிச்ச விருமாண்டி படத்தோட, மற்றும் ,ROSHOMAN போல் ஒரே சம்பவத்தை இரு வேறு நபர்களின் பார்வையில்சொல்லும்  திரைக்கதை உத்தி தான் இதுலயும்.. ஆனா அபாரமான உழைப்பு.. பக்காவான ஸ்கிரிட் நாலெட்ஜ் இல்லாம இதை பண்ண  முடியாது...

 தன்னோட வழக்கமான பாணியான  உண்மைச்சம்பவம்.. நியூஸ் பேப்பர்ல வந்த செய்தி.. அதை வெச்சு டெவலப் பண்ற சாமார்த்தியம் இதை பக்காவா யூஸ் பண்ணி இருக்கார்

ஹீரோவாக வரும் புதுமுகம் ஸ்ரீ அலட்டல் இல்லாத நாயகன்.. எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கிறது.... பல காட்சிகளில் நிஜமாவே இவருக்கு இது முதல் படம் தானா ? என அசத்துகிறார். அழுகைக்காட்சிகளில் கூட ரசிக்க வைக்கிறார்..





http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-1.jpg
ஹீரோயின் வேலைக்காரியாக வரும் ஊர்மிளா மகந்தா கிட்டத்தட்ட பாவனா அல்லது அனன்யா மாதிரி முகபாவனை, நடிப்பு எல்லாம்.. மிக அமைதியான அண்டர் ஆக்டிங்க் நடிப்பு.. படம் முழுக்க அவர் வரும் போர்ஷனில் ஒரு சீனில் கூட பிசிறு தட்டாத நடிப்பு.. 


பணக்கார ஃபிகராக வரும் மனீஷா ஓக்கே.. படத்தில் ஓரளவு கிளு கிளு கேரக்டர் இவர் மட்டும் தான்.. டீன் ஏஜ் ஃபீலிங்க்சை மிக அழகாக வெளிக்கொணர்கிறார்.


ஹீரோவுக்கு கூட மாட ஹெல்ப் செய்யும் அந்த கூத்துப்பட்டறைப்பையன்  சின்னச்சாமியின் நடிப்பு கிளாசிக்.. பல இடங்களில் அப்ளாஸ் வாங்கிகிறான்.. 

 பணக்காரப்பெண்ணை  கரெக்ட் பண்ணும் அந்த பையனை பற்றி சொல்ல பிரமாதமாக ஏதும் இல்லை.. கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சு இருக்கார்.. அவ்ளவ் தான்..  .


இன்ஸ்பெக்டராக வரும் குமார்வேல் நடிப்பும் பிரமாதம்.. அசால்ட்டாக ஒரு போலீஸின் தெனாவெட்டை, நரியின் நய வஞ்சகத்தை முகத்தில் கொண்டு வருகிறார்..


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=4336&option=com_joomgallery&Itemid=141


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் ( அப்ளாஸ் அள்ளிய இடங்கள்)



1.  கந்து வட்டிக்கு  பணம் வாங்கிய விவசாயி பணம் வசூலிக்க ஆள் வந்ததும் வீட்டில் ஒளிந்து கொள்வதும், தன் மனைவியை தகாத வார்த்தையில் கேள்விகள் கேட்ட ஆளை அரிவாளுடன் பாய்வதும் பின் அடிப்பட்டு வீழ்வதும் உருக்கமான காட்சிகள்

2. பவர் ஸ்டாரை  நக்கல் அடிப்பது போல் எடுக்கப்பட்ட அந்த ஷூட்டிங்க் சீன் செம காமெடி.. இறுக்கமான திரைக்கதையில் ஒரு ரிலாக்ஸ்.. ..

3. கையேந்தி பவன் ஓனர் காலடியில் ஃபிளாட் ஃபார்ம் இளைஞன் காதலியின் ஃபோட்டோ.. அதை அவருக்குத்தெரியாமல் எடுக்க 2 பேரும் செய்யும் ஐடியா சிம்ப்பிள் அண்ட் சூப்பர்.. 

 4.  பணக்கார ஃபிகர் சைக்கிள் பஞ்சர் ஆனதும் காரில் வந்த கரெக்ட் பண்ற பையன்  அசடு வழிவதும், அப்போ கடைக்காரர் சைக்கிள் டியூப்பை காத்து பிடுங்கி விட்டு அந்த சத்தத்தை நக்கல் சத்தமாக காட்டுவதும் காமெடி

5. ஃபிகர் கால் பண்ணா “ ஏய் மாமோய் நிங்க எங்கே இருக்கீங்க ?” என்ற ரிங்க் டோனையும், ஃபிரண்ட்ஸ் கால் பண்ணா “ அய்யோ ராமா.. என்னை ஏன் இந்த கழிசடைப்பசங்களோட எல்லாம் சேர வைக்கறீங்க? ‘ என்ர கவுண்டமணீயின் காமெடியை  ரிங்க் டோனாக வைக்கும் சாமார்த்தியம் செம.. 

6. திரைக்கதையில், எடிட்டிங்கில் . ஒளிப்பதிவில் அதகளம் பண்ணி விட்டு இசையில் அடக்கி வாசித்தது குட் ஒன்.. 


7. 'வழக்கு எண் 18/9' படத்தை வழக்கமான சினிமா விடியோ கேமராவில் எடுக்கவில்லை. Canon EOS 7D என்ற கேமராவிலேயே எடுத்துள்ளார்கள். இது ஒரு சாதனை. - தருமி
 



http://cinecentral.in/wp-content/uploads/2012/04/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg

வலம் இருந்து இடமாக இரண்டாவதாக இருக்கும் ஃபிகர் (கையில் செல் ) படத்தில் வரும் 2 ஹீரோயின்களை விட அழகு ஹி ஹி 


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அம்மா , அப்பா வீட்ல இல்லாதப்ப அந்த பணக்காரப்பையன் முதன் முதலா வீட்டுக்கு வந்து ஏதோ டவுட்  கேட்கறேன்னு சொல்றப்ப “ அம்மா வந்த பின் வா-ன்னு சொல்லாம எப்படா வருவான்னு காத்துட்டு இருக்கற மாதிரி ஏன் அவனை உள்ளே வரச்சொல்லனும்? ( அவளுக்கு அவன் மேல காதல் ஏதும் இல்லை.. பின் ஏன்?)

2. பொதுவாவே லேடீஸ்க்கு விழிப்புணர்வு ஜாஸ்தி.. அந்த ஃபிகரு பாடம் சொல்லித்தர்றப்போ அவன் செல் ஃபோன்ல அவ தொடைக்கு நேரா செல்லை வெச்சு 4 நிமிஷம் வீடியோ எடுக்கறான்.. அந்த லூசு.. அதெல்லாம் தெரியாம பேசிட்டு இருக்கு.. அவ்ளவ் கேனையா? இந்தக்கால பொண்ணுங்க?

3. அந்தப்பையன் செலவுக்குப்பணம் குடுன்னு அம்மாவை மிரட்றான்... எதுக்குன்னு கேட்டா சொல்லலை.. அப்புரம் பார்த்தா அவன் பர்த்டே பார்ட்டிக்காம்.. அதை ஏன் சொல்ல தயக்கம்? பணக்காரப்பசங்க 20000 ரூபா செலவு பண்ணி பார்ட்டி கொண்டாடுறது சகஜம் தானே?


4. படத்துல ரொம்ப முக்கியமான மைனஸ்.. ஃபிகரை கரெக்ட் பண்ண ஐடியா பண்ற எந்தப்பையனாவது ஃபிகரோட பேரை போடாம ஐட்டம்னு செல்ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வைப்பானா? அந்த ஃபிகர் அவன் கூடவே எப்போ பாரு குடி இருக்கு.. தன் ஃபோன் நெம்பர் என்ன பேர்ல ஸ்டோர் பண்ணி இருப்பான்னு பார்க்க மாட்டாளா? அந்த பயம் அந்தப்பையனுக்கு வராதா?

5. அந்த பணக்கார ஃபிகர் அந்தப்பையன் கூட பீச்சுக்கு போனதும் ஐ கடல் அப்டினு பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி.. பொம்பளையையே பார்க்காதவன் அனுஷ்காவை பார்த்த மாதிரி குதிப்பது ஏன்?அவளும் சிட்டில தானே வசிக்கறா? இதுக்கு முன்னால கடலை பார்த்ததில்லையா?


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120407154122000000.jpg

 6. குரூப் ஸ்டடினு சொல்லிட்டு வீட்டை விட்டு  வந்த  பெண் எங்காவது கடல்ல குளிக்குமா? விதி படத்துல தான் விபரம் இல்லாம பூர்ணிமா பாக்யராஜ் குளிச்சுதுன்னா இத்தனை வருஷம் கழிச்சும் அதே படத்தின் அதே சீனை அட்டக்காப்பி அடிக்கனுமா?

7. கடல்ல அவ குளீக்கறப்ப அவன் பப்ளிக்கா செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறான்.. அந்த ஃபிகரு  எது வேணாலும் எடுத்துக்கோன்னு பெப்பரெப்பேன்னு குளிக்குது. 

8.  அம்மா கிட்டே குரூப் ஸ்டடின்னு பொய் சொல்லிட்டு வர்றவ கைல ஒரு நோட், ஒரு புக் தான் எடுத்துட்டு வருவா.. நைட்டி, மாத்திக்க டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வருவாளா?

9. மொபைல் ஃபோன்ல சார்ஜ் போடறேன்னு அந்தப்பையன் சொல்லி ரூம்ல அவ கண் முன்னால செல் ஃபோனை வெச்சுட்டு போறான்.. அந்த பேக்கு டிரஸ் மாத்தி செல் ஃபோன்ல பதிவாகரது தெரியாம இருக்கு.. 

10.. செல் ஃபோன் அந்த இடத்துல ஸ்க்ரீன்  பாப்பாவைப்பார்த்த மாதிரி வெச்சுட்டு போறான்.. குப்புற திருப்பி வெச்சாத்தானே படம் பிடிக்கும்?



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/15313162973.jpg

11. ஆல்ரெடி பிளான் பண்ணி ரூம் போட்டவன் அவளுக்குத்தெரியாம செல் ஃபோனை ஃபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.. 

 12. செல் ஃபோன்ல சீன் படம்  பார்த்து அவ ரசிக்கறா.. அவளை சூடேத்தி மேட்டர் முடிக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கலை.. அவன் அவ்ளவ் கேனையா?

13.  தன் செல் ஃபோன்ல அவளை கில்மா போஸ்ல எடுத்த ஸ்டில் இருக்குன்னு தெரிஞ்ச பையன் எவ்ளவ் ஜாக்கிரதையா இருப்பான்? 2 மெம்மரி கார்டுல பதிவு பண்ணி ஒரு காப்பியை வீட்ல வெச்சிருப்பான்.. மதுரை டாக்டர் ரியாஸ் அப்டித்தான் பண்ணுவாராம்.. ஆனா இந்த லூஸ் ஏன் அவ கிட்டே கொடுத்துட்டு வர்ற மாதிரி அவளுக்கு முன்னாலயே கார்ல வெச்சுட்டு மெக்கானிக்கை பார்க்க போறான்?

14. முதல் முதலா சந்தேகம் கேட்க வரும்போது அந்தப்பையன் கொண்டு வரும் புக் காலேஜ் புக். அவன் டவுட் கேட்கற கெல்வி பிளஸ் ஒன் ல வர்ற கேள்வி.. ஆனா 2 பேரும் படிக்கறது  பிளஸ் டூ


15. ஹீரோவை போலீஸ் ஏமாத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்குது,.. அவங்க குடுத்த வாக்குப்படி ஹீரோயினுக்கு மருத்துவச்செலவுக்கு பணம் தர்லை.. அந்த மேட்டரை ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயிண்ட்ட சொல்றான்,, ஓக்கே அதை ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? அவன் கோர்ட்ல மறுபடி மாத்தி ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கலாமே?




http://mimg.sulekha.com/tamil/vazhakku-enn-18-9/stills/vazhakku-enn-18-9-pictures-078.jpg

16. கோர்ட் வாசல்ல ஹீரோயின் வந்தமா  இன்ஸ்பெக்டர் மேல ஆசிட் ஊத்துனமா?போனோமா?ன்னு இல்லாம ஒரு லாங்க் லெட்டர் குடுக்கறா.. அந்த பேக்கு இன்ஸ்பெக்டர் அதை  படிச்சுட்டு இருக்கு.. அது வரை வெயிட் பண்ணி நிதானமா ஆசிட் ஊத்துறா.. 

 17.. படத்தோட மெயின் மேட்டர் எல்லாத்துக்கும் காரணமான அந்த பையனுக்கு தண்டனை தந்த மாதிரியே த்தெரில.. அந்த பெண்ணூக்கு அவன் மேல கோபமே வர்லையா? அவன் தண்டனை வாங்கறது அழுத்தமா பதிவு பண்ணப்படலை.. அது மாபெரும் மைனஸ்.. சுருக்கமா சொல்லனும்னா இன்ஸ்பெக்டர் சசிகலா மாதிரி..  அந்தப்பையன் ஜெ மாதிரி. பெங்களூர் கோர்ட்ல  சசி டிராமா போட்டு தண்டனையை வாங்கிட்டா சரி ஆகிடுமா? உண்மை குற்றவாளீக்கு தண்டனை வேண்டாமா?

18. திரைக்கதையில் பின் பாதியை முதலிலும், முன் பாதியை பின்னாலும் காட்டி இருக்கலாம்.. ஏன்னா பின் பாதில அவனவன் கிளு கிளு கில்மா  மாதிரி பார்த்து அந்த ஏழைப்பையன் தாக்கத்தை, பாதிப்பை மறந்துடறாங்க.. அதனால அதை முதல்ல காட்டி ஏழைப்பையன் ஃபிளாஸ் பேக்கை 2 வதா காட்டி இருந்தா இன்னும் உருக்கமான பாதிப்பை மக்களிடம் உருவாக்க முடியும்..


http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-11.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ஏண்டி.. நேத்து உன் ஆளோட படம் பார்க்கப்போனியே.. எப்படிடி இருந்துச்சு>

படத்தை எங்கே பார்க்க விட்டான்? அது பெரிய கூத்துடி..


2. உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா?

 ம் ம் ம்

 தெரியுமா? தெரியாதா? குழப்பாதே/!


3. ஏண்டா.. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

 அது கூட பெரிசு இல்லை... அந்த ஹீரோ கடைசி வரை  தன் லவ்வை ஹீரோயின் கிட்டே சொல்லவே இல்லை.. செம சொதப்பல்


4.  இவ்ளவ் திறமையை வெச்சுக்கிட்டு  ஏண்டா இந்த மாதிரி பிளாட்ஃபார்ம் வேலைக்கெல்லாம் வர்றே?

 ஹூம்.. விதி தான்.. ஒரு நாள் கூத்துன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே..

5.  கலையை ரசிக்கற வயசான பெருசுங்க எல்லாம் மண்டையை போட்டுட்டே இருக்குங்க.. இனி என்னாகப்பொகுதோ கூத்துத்தொழிலுக்கான எதிர்காலம்.. ?


6. ஆம்பளை இல்லாத வீட்ல பொட்டைப்புள்ளையை அப்படித்தான் வளர்த்தி ஆகனும்..


7. அவன் தான் கஞ்சா விக்கற பார்ட்டியா இருக்கும்.

 எப்படி கண்டு பிடிச்சே?

 அதோ போலீஸ் அவன் கிட்டே பிச்சை எடுத்துட்டு இருக்கு பாரு

8. அந்த அக்கா என்ன கலெக்டர் வேலையா பார்த்துட்டு இருந்துது? சட்டு புட்டுனு விசாரிக்க? டிக்கெட் தானே? என்ன?னு போய்க்கேட்க?

9.  டேய்.. ஃபோட்டோவுல என்னை கட் பண்றியா? அவளை கட் பண்றியா? ஓஹோ/.. என்னை கட் பண்ணிட்டு அவளை மட்டும் வெச்சுக்கறியா...


10. யார்? என்ன?னு விசாரிக்காமயே அந்த சின்னப்பையனுக்கு அவ உதவி செய்யறாடா.. எங்கம்மா கூட அப்படித்தான்.. அவ எனக்குகிடைச்சா எங்கம்மாவே கிடைச்ச மாதிரி..


http://www.thehindu.com/multimedia/dynamic/00954/18_CP_still_jpg_954603f.jpg

11. எப்படிடா போய் சொல்ல சொல்றே.. அவங்கம்மா இன்னும் என்னை விளக்கு மாத்தால அடிக்கலாமா? செருப்பால அடிக்கலாமா?ன்னு நினைச்சுட்டு கோபமா இருக்காங்க.. எப்படி லவ்வை சொல்ல?


12. உனக்குத்தான் பொய் சொல்ல வராதே.. எப்படி வெளில போய் வேலை கேப்பே?

13.  ஃபிகரு -  நான் சின்ன வயசுல  இருந்தே சைக்கிள்ல தான் ஸ்கூல் வர்றேன்..

டகால்டி - அதான் இவ்ளவ் நல்லா ஓட்டறீங்க.. ஹி ஹி


14. எங்கம்மா அப்பா கிட்டே செல் ஃபோன் வாங்கிக்குடுத்தாத்தான் நல்லா படிப்பேன்னு ஒரு பிட்டை போட்டேன்..

15.  ம்க்கும்.. இவ்ளவ் கண்டிஷன் போடறாங்களே.. அவங்க காலத்துல செல் ஃபோன் இருந்திருந்தா அவங்க யூஸ் பண்ணாமயா இருப்பாங்க?

16.   என்னது? வாத்து வரும்னு மொட்டை மாடில வெயிட் பண்ணுனா அவங்க ஆத்தா வருது..?


17.  ஃபிகரு - ( மனசுக்குள்) ஹூம்.. சரியான மொக்கையா இருக்கான்.. நம்பிட்டான்..


டகால்டி - தக்காளி.. ஏண்டி கில்மா எம் எம் எஸ் பார்த்துட்டு சிரிச்சுட்டு சமாளீக்கறியா?

18.  நீங்க. என் பர்த்டே பார்ட்டிக்கு வரனும்..

 ம் ரொம்ப முக்கியம்.

19.  டேய் ,மச்சான்.. போன மாசம் தானே டா பர்த்டே பார்ட்டி வெச்சே? மாசா மாசம் ஒரு டைம் பிறந்த நாள் வருமாடா?

20. ஏண்டா ராஸ்கல்? பிளஸ் டூ படிக்கற பொண்ணை மிட் நைட்ல பார்ட்டிக்கு கூப்பிடறியே.. உனக்கு என்ன தைரியம்?


http://citricice.com/wp-content/uploads/2012/02/Vazhakku-Enn-18-9.jpg


21. வசதியான பையன் தானே.. ஓக்கே டெல்டி..

எப்படிடி?

 இப்போதைக்கு ஓக்கே சொல்லு.. அப்புறம் பிடிக்கலைன்னா கழட்டி விட்டுடலாம்.. ( அடங்கோ)


22.  வீட்ல பொய் சொல்லிட்டு வந்துட்டேன்.. இதுதான் என் முதல் பொய்..

 எனக்கு இதுதான் 2வது பொய்ங்க ஹி ஹி


23.  மினிஸ்டருக்கு அவ லாபம்.. அப்போ எனக்கு?  எப்படியும் அவ மினிஸ்டர்ட்ட போவா... அவர் நமக்கு கால் பண்ணுவாரு.. அப்போ டீலை முடிச்சுக்கலாம்..

24.  அந்த பொண்ணு ஒரு டிக்கெட்டுய்யா..  இப்போ ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்..  விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஹூம்


25. கொலைக்கேசையே ஒண்ணும் இல்லாம ஆக்குன ஆள் நீங்க.. இது ஒருசாதாரண கேஸ்.. நீங்க நினைச்சா முடியாதா?

 26. மேடம்.. இனிமே ஏதாவது பிரச்சனைன்னா டைரக்ட்டா என் கிட்டேயே வரலாம்.. மினிஸ்டரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க.. வாங்க நான் ஹெல்ப் பண்றேன் ஹி ஹி


http://www.accesskollywood.com/akd-images/preview/vazhakku-enn-movie-preview.jpg


எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று

 சி,பி கமெண்ட் - டீன் ஏஜ் பெண்களூக்,கான விழிப்புணர்வுக்கருத்துள்ள படம் என்பதால் அனைத்து பெண்ணை பெற்றவர்களூம் பெண்ணுடன் காண வேண்டிய படம்.. அது போக மசாலா படங்கள் பார்த்துச்சலித்த  வித்தியாசமான நல்ல படங்களை பார்க்கும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .. 

 ஈரோடு தேவி அபிராமியில், ஆனூரில், அண்ணாவில் படம் ஓடுது...




http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/p480x480/564936_10150693164320666_128920130665_9833491_520616476_n.jpg

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Wednesday, March 14, 2012

ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல்.

 சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே  செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ்

 இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.


 ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.


வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில்


 ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன்.

சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி 




 பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.
அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன்.


 சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி

 இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன்.


சி.பி - அண்ணே, எகெயின்  ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை  உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க?  உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி


 எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான்

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார்.

 சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி

அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.



கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.


ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்?


 சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா..


 முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.


சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!!

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.
இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன்.

 சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ..

 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா?

இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!


சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா  “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ்
வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.


 சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல..
ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

Saturday, March 10, 2012

அல்போன்சா -சில்ஃபான்சா -1992 - எ கில்மா தெஃப்ட் லவ் ஸ்டோரி

http://www.oneadda.com/wp-content/themes/utility/timthumb.php?src=http://www.oneadda.com/wp-content/uploads/2012/03/aaaaaaa.jpg&h=200&w=300&zc=1 

அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி - சூசயிடு அட்டெம்ப்ட்டா? பிரெட்டெண்ட் டு பி சூசயிடு அட்டெம்ப்ட்டா? நல்லா விசாரிங்கப்பா. ( தற்கொலை முயற்சியா? தற்கொலை முயற்சி செய்வது போல் நடிப்பி பயிற்சியா? - நன்றி மேஜர் சுந்தர்ராஜன்)



அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ்

 சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.


சி.பி - வர்ற படங்களில் எல்லாம் மேல் அங்கி விலகியே இருந்ததால் கவர்ச்சி மேலோங்கி இருந்தது ஹி ஹி 




பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.




விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.


Its a preplanned murder says vinoth kumars father



தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!



சி.பி - அந்த ஹாஸ்பிடல்தான் அவரோட ரெகுலர் சூசயிடு அட்டெம்ப்ட் ட்ரீட்மெண்ட் ஹாஸ்பிடலாம் ஹி ஹி 


"என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; நடிகை அல்போன்சா குடும்பத்தினர், திட்டமிட்டு கொலை செய்துள்ளனர், என, வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறினார். அல்போன்சா உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

நடிகை அல்போன்சா வீட்டில், அவரது காதலன் வினோத்குமார், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நடிகை அல்போன்சா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். வினோத்குமாரின் மரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காதலன் வினோத்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என, அவரது தந்தை பாண்டியன், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தார்.

இது குறித்து பாண்டியன் -   என் மூத்த மகன் வினோத்குமார், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். என் மைத்துனர் பாலு வீட்டில் தங்கி, சினிமா தொடர்பான பயிற்சிக்கு சென்று வந்தார். கவசம் என்ற படத்தில், கதாநாயகனாக நடித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்து, திரையிடத் தயாராகவுள்ளது.



என் மகன் நடனத் திறமையை வளர்த்துக் கொள்ள, நடன இயக்குனர் ராபர்ட் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். நான்கு மாதமாக, அவரது வீட்டிலேயே தங்கினார். என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் பெற்று, ராபர்ட்டிடம் கொடுத்தார். ராபர்ட் அவரது நண்பருடன் சேர்ந்து, சங்கு என்ற படம் எடுப்பதற்கான தயாரிப்பு செலவுக்கு, 50 லட்சம் ரூபாயை என் மகனிடம் கேட்டுள்ளனர். என் மகன் தர மறுத்து விட்டான். இது பற்றி என்னிடமும் கூறினான்.


சி.பி - கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் தெரியாதா? சங்கு-ன்னு யாராவது டைட்டில் வைப்பாங்களா? அதான் சங்கு ஊதிடுச்சு .. அவ்வ்வ்


அந்த படத்தில், ஒரு கதாநாயகனாக உன்னை போடுகிறேன் என கேட்டும் பணம் தராத நிலையில் தான், எதிர் வீட்டில் குடியிருந்த அவரது அக்கா, நடிகை அல்போன்சாவை மகனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் மூலமாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான், கடந்த 4ம் தேதி, நள்ளிரவு திடீரென, மகனின் மொபைல் போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அல்போன்சா, "உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் என கூறி வைத்து விட்டார். நாங்கள் பதறியடித்து அங்கு சென்ற போது, கார் "பார்க்கிங்கில், தரையில் போட்டு வைத்திருந்தனர். அவனது மூக்கு, வாய் பகுதியிலும் ரத்தம் இருந்தது.

அவனது அறைக்கு சென்று பார்த்த போது, சுவரில் ஆங்காங்கே ரத்தம் படிந்திருந்தது. சம்பவத்தன்று, இரவு 7.30 மணிக்கு என்னிடம் பேசினான். தான் நன்றாக இருப்பதாகவும், மாத்திரைகளை நேரம் தவறாமல் சாப்பிடுமாறு, எனக்கு அறிவுரையும் கூறினான். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்தில், என் மகன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQJX3jvxNeWarhUvcghT96h0SfS2fAZ-9stMS43eoB0IwvIFTeMEetLwPiRXHbbT6LLF1CXAh-OyAbgnEE0ayRiM0C1jfKVV5tWGn0nynLQA91eF-arM0aOgFq5xwU0E_YdF2FNsqNpZo/s640/alfonsa1.jpg






"பணம் தர மறுத்ததால், என் மகனை, அல்போன்சா, அவரது தம்பி ராபர்ட், அவரது அம்மா மூவரும் சேர்ந்து, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கமிஷனரிடம் புகார் செய்தேன். என் மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்
.

Friday, February 17, 2012

ரேப் மேட்டரை கண்டுக்காதீங்க - பம்மும் மம்தா , விம்மும் தும் ததா - காமெடி கும்மி

http://www.sudarnila.com/images/mamtha332.jpg 

கோல்கட்டா: ஆங்கிலோ இந்திய பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கி, என ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.


 சி.பி - மேடம், நம்மாளுங்க வெறும் வாய்லயே அவல் மெல்லுவாங்க,கும்பகோணம் வெற்றிலை கிடைச்சா சும்மா விட்டுடுவாங்களா? இதை வெச்சே ஒரு மாசம் ஓட்டிட மாட்டாங்க?


மேற்குவங்க மாநிலத்தில் கோல்கட்டாவின் பார்க் ஸ்டீரிட் எனற நைட் கிளப்பிலிருந்து கடந்த 5-ம் தேதி வெளியே வந்த 35 வயது ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் வீடு திரும்புவதற்காக காரில் இருந்த சிலரிடம் லிப்ட் கேட்டுள்ளார். 

 சி.பி - பகல்லயே நடராசா தியேட்டர்ல பிட் படம் பார்க்கறவங்க மிட் நைட் மசாலா பார்க்காமயா இருப்பாங்க.. நைட் கிளப் தனியா  போனது முதல் தப்பு, மிட் நைட்;ல லிஃப்ட் கேட்டது 2 வது தப்பு.. 90% பொண்ணு மேல தான் தப்பு இருக்கு..


ஆனால் அவர்கள் அவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்று ஓடும் காரில் கற்பழித்தனர்.. இது தொடர்பாக கடந்த 11-ம் தேதி போலீசில் புகார் கூறப்பட்டது.


சி.பி -  - சம்பவம் நடந்தது 5 ந்தேதி.. புகார் குடுத்தது 11 ல 6 நாள் பாப்பா பேரம் பேசிட்டு இருந்துச்சா?ஏன் முதல்லயே புகார் தர்லை? அதையும் விசாரிக்கனும்.. 

 



இந்த சம்பவத்தில் முன்னாள் சபாநாயகரின் மகனுக்கு தொடர்பிருப்பதாகவும், ஆளும் கட்சி என்பதால் ஆங்கிலோ இந்திய பெண் கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை இல்‌லை என எதிர்க்‌கட்சியினர் குற்றம்சாட்டினர்.


சி.பி - பொதுவா ஆளுங்கட்சில இருக்கறவங்க யாருக்கும் அறிவே கிடையாது.. பிரச்சனை பெருசாகும்னு தெரியும்போதே ஏதாவது ஸ்டெப் எடுத்து ,பேச்சு வார்த்தை நடத்தி பைசல் பண்ணி இருக்கனும், நாம தானே ரூலிங்க் பார்ட்டி நம்மை என்ன பண்ன முடியும்னு ரூடா நடந்துக்கிட்டா இப்படித்தான் சில லட்சங்களில் முடிக்க வேண்டிய மேட்டரை இப்போ பல கோடி கொடுத்து சரி செய்யனும்..  விலைவாசி ஏறிக்கிடக்கு


இந்த சூழ்நிலையில் நேற்று முதல்வர் மம்தா கூறுகையில், ஆங்கிலோ இந்திய பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தினை அரசியலாக்க வேண்டாம். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில் உண்மை நிச்சயம் வெளியேவரும். இதற்காக எனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.என்றார்.


சி.பி - ஓஹோ ,அப்பவும் உங்க கட்சி ஆளை கூப்பிட்டு கண்டிக்க மாட்டீங்க..?ஏன் இப்படி பண்ணாருன்னு கேள்வி கேட்கற எதிர்க்கட்சி ஆட்களைத்தான் மிரட்டுவீங்க..?



கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பி.‌கே. பச்சன்ந்தா கூறுகையில், கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் ஆங்கிலோ இந்திய பெண், கனடா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த ஜனவரி 2-ம் தேதி மேற்குவங்கம் வந்துள்ளார். 


சி.பி - மேற்கு வங்கம் வந்த பெண்ணுக்கு ஏற்பட்டது கற்பில் பங்கம்.. அதில் ஆளுங்கட்சி ஆட்கள்  வகித்தார்கள் அங்கம்..இனி அங்கே உருவாகப்போகுது கற்பழிக்கப்பட்டோர் நலவாழ்வு சங்கம்


சம்பவம் நடப்பதற்கு முன்பு அவரிடம் சிலர் தகாத முறையில் நடந்துள்ளதாக பார்க்ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு கொடுத்துள்ளார். பின்னர் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னரே போலீசிற்கு தெரியவந்துள்ளது.. மேலும் அவரது மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்கள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


சி.பி - போலீஸ்க்கு சம்பவம் நடந்த அன்னைக்கே தெரிஞ்சுருக்கும்.. பக்கி பசங்க ஆளுங்கட்சி ஆள்ங்க கிட்டே பேரம் பேசிட்டு இருந்திருப்பாங்க. 

Saturday, April 23, 2011

ஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உயர் அதிகாரிகள்...வதம் செய்யக்கிளம்பிய வள்ளி..

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/01/Sneha_In_Police_Dress_2.jpg 

ஈரோடு: போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில், பரபரப்பு புகார் கூறியுள்ள ஈரோடு பெண் போலீஸ் வள்ளியை, சென்னை பத்திரிகையாளர்கள் மொய்த்தனர். மன அமைதிக்காக, தான் பணிபுரியும், "ஸ்டோர் ரூமி'ல், சுவாமி படத்தை மாட்டியுள்ளார் வள்ளி.

ஈரோட்டை சேர்ந்தவர் வள்ளி (35); 1997ல் போலீசாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமி'ல் பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்க கோரியும், சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கை, வள்ளி தாக்கல் செய்தார்.


இவ்வழக்கு, வரும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், இவ்வழக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புகார் கொடுத்துள்ள பட்டியலில், 2004 முதல் 2011 வரை ஈரோட்டில் பணிபுரிந்த, 10 உயர் அதிகாரிகள் உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

அவரை சமாதானப்படுத்தவும், வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றவும் வேண்டி, வள்ளியின் மொபைல் போனுக்கு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதுபோல், வள்ளி புகார் கூறியுள்ள அதிகாரிகள் பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வர, சென்னையில் இருந்து வார, மாத இதழ்களின் நிருபர்களும் அவரை நேற்று மொய்த்தனர்.

எந்த கேள்விக்கும் பிடிகொடுக்காமல், "இப்பிரச்னை குறித்து நீதிபதி தான் உத்தரவு வெளியிடுவார். நான் வக்கீலை மீறி, போலீஸ் துறையை மீறி செயல்பட முடியாது' என, ஒரே பதிலை கூறி வருகிறார் வள்ளி.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனம் தளராமல் வள்ளி தன்னுடைய பணிக்கு வழக்கம் போல் வந்து கொண்டுள்ளார். மன அமைதி வேண்டி, அலுவலகத்தில் சுவாமி படத்தை மாட்டி, பூ போட்டு வணங்கி வருகிறார்.

"ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், யாரேனும் மிரட்டுகின்றனரா?' என, வள்ளியிடம் கேட்டதற்கு, ""நீதி, நியாயத்துக்காக உழைக்கும் ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் இருக்கும் வரை பயமில்லை,'' என்றார்.

சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு போல இன்னும் 10 நாட்களில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன்.பல பெரிய தலைகள் உருளக்கூடும்..ஈரோட்டில் இப்போதே 4 உயர் அதிகாரிகள் லீவில் இருக்காங்களாம்.. 

என்னைக்கேட்டால் எவனெல்லாம் இந்த கேஸ்ல  மாட்றான்களோ.. அவங்க எல்லார் குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கனும்.. எல்லா சினிமா தியேட்டர்களிலும் ஸ்லைடு போட்டு அவங்களை கேவலப்படுத்தனும்.. அப்பத்தான் இனி வரும் காலங்களில் தப்பு பண்றவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.

அதை விடுத்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணி சமாளிச்சா அவன் அங்கே போய் அதே வேலையை வேற பெண் போலீஸ் கிட்டே காட்டுவான்..