Showing posts with label பாமக. Show all posts
Showing posts with label பாமக. Show all posts

Thursday, July 04, 2013

சாதி த்தது என்ன? தர்மபுரி இளவரசன் இறப்பு உணர்த்துவது என்ன? மக்கள் அலசல்

 

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவர் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 



அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை இளவரசன் கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயிலில் பாயந்து தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 


தர்மபுரி: தர்மபுரி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளவரசனின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சந்தேக மரணமாகவும் கருதப்படுகிறது.
தான் இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை என்று திவ்யா நேற்று நீதிமன்றத்தில் கூறிய நிலையிலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தண்டவாளத்தின் அருகிலிருந்து அவரது பைக் மற்றும் கைப்பை கைப்பற்றப்பட்டதோடு, அவரது சட்டை பையிலிருந்து 2 கடிதங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
144 தடை உத்தரவு
இதனிடையே இளவரசனின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தினால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த திவ்யாவும். நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 தலித் கிராமங்களில் உள்ள வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கலப்பு திருமணத்தால் நடந்தனைந்த வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா உயர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தாயாருடன் செல்ல விரும்புகிறேன் என்றும் இளவரசனுடன் இப்போது போக விரும்பவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தேன்மொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு இளவரசன் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இளவரசனின் மோட்டார் சைக்கிள், கைப் பை, சட்டைப் பையில் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 வாசகர் கருத்து 


1. காதல் எனும் போர்வையில் அந்த மகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்....தகப்பன் உயிர் போச்சு...இப்போது, அதே காதல் மகனை பெற்றோரிடம் இருந்து பிரித்துள்ளது......பாழாய்ப்போன காதல்............பெற்றோரின் மனதை நோகடித்து அப்படி என்ன காதல் வேண்டிக் கிடக்கு? பெற்றோரால் பிறந்த நாம், அவர்களை பகைத்து வாழ்ந்து பயன் என்ன? பெற்றோர், பிள்ளை உறவை முறிக்கும் வகையிலான காதலை யாரும் ஆதரிக்காதீர்கள்......சமூக நீதி என்று பசப்ப வேண்டாம்....பெற்றோரின் மன வலியை யாரும் சட்டை செய்வதில்லை..




2. காமம் சில சமயம் காதல் எனும் போர்வையில் உயிர்களை காவு வாங்கி விடுகிறது...உண்மை அன்பான காதலி உயிரிழப்புக்கு பின் அணு அணுவாக வேதனைகளை தான் அனுபவிப்பாள்....வெறும் காம காதல் வேதனை தராது...மாறாக வேற்று உறவை தான் தேடும்..நல்ல உலகமடா இது...



3. பெண்களே.....உண்மை காதல் இல்லாவிட்டால் தயவுசெய்து திருமணம் செயாதீர்...உங்கள் வேலை முடிந்ததும் இடத்தை காலி பண்ணி விடுங்கள்.... 


4. காதலிப்பதில் உண்மையான ஆண்கள் எப்போதும் மிக கவனத்துடன் செயல்படுவது நல்லது....போன உயிர் மீண்டு வராது..எப்படி போனது என்பதை விட....இனி வராது என்பதை காதல் செய்யும் உண்மையான ஆண்மகன்கள் யோசிக்க வேண்டும்....பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற பழைய பாடல் நினைவு வருகிறது....இறந்து போன அன்பருக்காக ஆண்டவனிடம் வேண்டிகொள்வோம்... 



5. இரண்டு பேரை பலிகொடுத்து தன் கூற்றை நிருபித்து கொண்ட "பா ம க" ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாகவேனும். 


6. பெற்றோர்கள் இளம் வயது பிள்ளைகளை பக்குவ படுத்தி வளர்க்க வேண்டும்.... 


7. P Ramesh Ponnaih நிதானம் இல்லாத வயதில் எடுத்த விபரீத (திருமணம் உட்பட ) முடிவு பெற்றோரின் நிலை மற்றவர்களுக்கு இது ஒரு படிப்பினை . பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் நாம் வாழும் சமூகமும் நல்ல பண்பாட்டினையும் பழக்கத்தையும் கற்றுத்தர வேண்டும் . 



8. அது தான் இப்பொழுது தயாரிக்கும் படங்கள் எல்லாம் 80 % சமுதாயத்தை சீரலிப்பதாகவெ உள்ளன... அப்பாவை, டேய் டாடி, என்றும், எருமை என்றும் நகைசுவை காட்சிகளில் அழைப்தாக வந்தால் எப்படி இருக்கும்... முன் காலத்தில் ரெங்கா ராவ் நடித்த படங்கள், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சமுதாயம் கற்கும் அளவிற்கு இருக்கும்... மக்களாக பார்த்து திருந்த வேண்டும்..


9. Devaraj சாதிகள் இல்லையடி பாப்பா என்பது உண்மை தான். ஆனால் அதனை சாதி சமய சிந்தனையில் மூழ்கி விட்ட சமுதாயத்தில் ஒரே அடியாக, ஒரே நாளில் சாதி அற்ற நிலையை உருவாக்க முடியாது. இரண்டு மரணங்கள்: ஒன்று திவ்யாவின் தந்தை தற்கொலை, அடுத்தது திவ்யாவின் முன்னாள் கணவர் மரணம். இந்த இறப்புகளை தவிர்த்து இருக்க முடியுமா? முதல் இறப்பை தொடர்ந்து நிகழ்ந்த துயரமான நிகழ்வுகள், கொடுமைகள், உடமை இழப்புகள் என பட்டியல் நீளும். இளம் தலைமுறையினர் நன்கு சிந்தித்து செயல் பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


 வெறும் உடல் ரீதியான கவர்ச்சிக்கு இடம் கொடுத்து, பின்பு வேதனை படுவதை விட. பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சாதி யை ஒழிகின்றேன் என்று வீராப்பு பேசும் சாதிய தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் சாதியை ஒழித்து, நல்ல சமுதாய தலைவர்களாக மிளிர வேண்டும். படிக்கின்ற சின்ன பசங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் திரைப்படங்கள் சீர்திருத்தம் என்ற (போர்வையில் சாதியை ஒழிகின்றேன் என்று, காதல், கத்திரி காயை உருவாக்க வேண்டாம். சமுதாயம் உருப்பட உங்கள் படம் இருக்கட்டும். அல்லது நீண்ட காமிடி படம் தயாரித்து மக்களை சிரிக்க வையுங்கள்.


நன்றி - தினமலர்

Sunday, June 03, 2012

காடு வெட்டி குரு கன்னா பின்னா பேட்டி @ விகடன் - கிடாவெட்டு

''மாநாட்டுக்காக நாலு நாள் மகாபலிபுரத்துல தங்கி இருந்தேன். அங்கே பீச்ல நடக்குறதை எல்லாம் நானும் பார்த்துட்டுத்தான் இருந்தேன். சவட்டிஎடுக்கிற மொட்டை வெயில்ல யாரைப்பத்தியும் கவலைப்படாம கட்டிப்புடிச்சிட்டு மோந்துட்டு இருக்குதுங்க.


சி.பி - யூத்னா அப்டி இப்டித்தான் இருக்குமாம், கேட்டா அப்படி சமாளிக்கறாங்கண்ணே,.. அண்ணே, நிஜமா காத்து வாங்கத்தான் போனீங்களா?இல்லை, ஓ சி ல லைவ் ஷோ பார்க்கப்போனீங்களா?


இதுவாங்க காதல்? அந்தக் காலத்துலயே தமிழனுக்கு வீரமும் காதலும் இருந்ததா, இலக்கியங்கள்ல சொல்லி இருக்காங்களே. அதுதான் காதல்!'' - எடுத்த எடுப்பிலேயே ஆவேசம் காட்டுகிறார் காடுவெட்டி குரு. அவரது சொந்த கிராமமான காடுவெட்டியிலேயே நடந்தது இந்தச் சந்திப்பு

http://kilakarainews.files.wordpress.com/2012/01/wr_540716.jpeg


.
1. ''ஆயிரம் சமாதானம் சொல்லுங்கள்... வன்னியர் சமுதாயத்துப் பெண்களை வேறு சாதிப் பையன்கள் காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களின் கையை வெட்டுவேன்’ என்று நீங்கள் பேசியது சரியா?''


சி.பி - அண்ணன் காடு வெட்டி குரு இனி லவ்வர்ஸ் கை வெட்டி குரு என அன்போடு அழைக்கப்படுவார், ஆனா ஒரு டவுட், கையை வெட்டுனா அவங்க லவ் பண்ணாம அமைதி ஆகிடுவாங்களா?




''காதல் திருமணமோ... கலப்புத் திருமணமோ செய்யக் கூடாதுனு நான் சொல்லவே இல்லை. அது என் கொள்கையும் கிடையாது. காதல்ங்கிற பேர்ல பொண்ணுங்களை ஏமாத்துறதைத்தான் என்னால ஏத்துக்க முடியலை. கடலூர், அரியலூர் மாவட்டங்கள்ல வசதியாக இருக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சுச் சீரழிச்சுடுறாங்க.


 ஆறு மாசம் அந்தப் புள்ளையைக் கூட வெச்சு நாசம் பண்ணிட்டு, அப்புறம் அடிச்சுத் துரத்திடுறானுங்க. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்க எங்கே போகும்? தற்கொலைதான் பண்ணிக்குதுங்க. எங்க வன்னியர் சாதிப் பொண்ணுங்களைக் குறிவெச்சு மட்டும்தான் இது நடந்துட்டே இருக்கு. கடலூர், அரியலூர் மாவட்டத்துல புள்ளைங்களைப் பெத்த எத்தனை பேரு கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பாருங்க...



சி.பி - ஏமாத்தற நாய்ங்களுக்கு ஜாதி என்ன குலம் என்ன? கோத்திரம் என்ன? கிடைச்சதை மடக்கறாங்க... டி வி சீரியல், சினிமா பார்த்தும் பொண்ணுங்கதான் ஜாக்கிரதையா இருக்கனும்.. குறிப்பிட்ட ஜாதிப்பெண்களைத்தான் ஏமாத்தறாங்கன்னு சொல்லிட முடியாது



நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைனு உங்களுக்கே தெரியும். ஏன்... அதே தெய்வீகக் காதல் ஒரு ஏழை வீட்டுப் பெண் மேல வர மாட்டேங்குது? அதான் ஒரு ஆவேசத்துல 'காதல்ங்கிற பேர்ல எங்கக் குடும்பத்துப் பொண்ணுங்களை ஏமாத்துறவங்க கையை வெட்டுங்க’னு சொன்னேன்



. எங்க சாதிப் பையனே அப்படி ஒரு தப்பு பண்ணி இருந்தா, அவனையும் வெட்டுங்கனுதான் சொல்றேன். ஒரு பொண்ணைப் பெத்த அப்பா ஸ்தானத்துல இருந்து பாருங்க... நான் சொல்றதோட அர்த்தமும் வலியும் புரியும்!''



http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg


'2. 'அப்போ உங்க சாதியைச் சேர்ந்த பசங்க மத்த சாதிப் பொண்ணுங்களைக் காதலிக்கிறதை ஏத்துக்குறீங்களா?''


''காட்டுமன்னார்குடி, அரியலூர் பகுதியில் எங்க சாதிப் பசங்க நிறைய பேரு தாழ்த்தப் பட்ட சமூகத்துப் பெண்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பெண்ணை அடிச்சுத் துரத்தினது கிடையாது. 


சந்தோஷமா வெச்சிக் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. எங்க சுத்து வட்டாரத்துல யாராவது காதலிச்சு வீட்ல சம்மதம் கிடைக்கலைன்னா, நேரா இதே காடுவெட்டி கிராமத்துக்குத்தான் ஓடி வருவாங்க. 'காடுவெட்டி கிராமத்துக்குப் போயிட்டா, குரு அண்ணன் சேர்த்துவெச்சிடுவாரு’னு அவங்களுக்கு ஒரு நம்பிக்க


அப்படி நானே இதுவரை ஆயிரத்துக்கும் மேல காதல் கல்யா ணங்களைச் செஞ்சிவெச்சிருக்கேன். பெத்தவங்ககிட்டயும் பேசி சமாதானப் படுத்திவெச்சிருக்கேன். உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைப்பான் இந்த குரு!''


3. ''பா.ம.க. மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்திருச்சே?''


சி.பி - பா ம க எப்போ ஜாதி அரசியலை விட்டுச்சு? இப்போ மறுபடி கையில எடுக்க? ஜாதிக்கட்சி ஜாதியை கையில எடுக்கறதுல என்ன தப்பு?



''தமிழ்நாட்டுல சாதி இல்லாம என்ன நடந்திருக்கு சொல்லுங்க? இங்கே இரண்டரைக் கோடி வன்னியர்கள் இருக் கோம். ஆனா, எங்க வாழ்க்கை நிலை இன்னைக்கு வரைக்கும் உயரலையே?


 எங்க பாட்டன் காலத்துல விவசாய நிலக் கிழார்களா இருந்தவுங்க, இன்னைக்கு விவசாயக் கூலிகளா இருக்கோம்.எங்க உரிமைக்காக நாங்க போராடும்போது சாதியைச் சொல்லித்தான் போராட வேண்டி இருக்குது. சாதியை ஒழிச் சிட்டோம்னு சொல்றீங்க...


 சரி, இன்னும் சிதம்பரம் நடராஜர் கோயில்ல நந்தன் போன வாசலை எதுக்கு மூடி வெச்சிருக்காங்க? ஸ்ரீரங்கம் பெருமாளை நாங்க போய்ப் பார்க்க எதுக்கு நடுவுல ஒரு இடைத்தரகர்? தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டுமே சாதி இல்லைனு சொல்லிட்டு, ஊருக்குள்ள சாதியை வளர்த்துக்கிட்டுதான் இருக்கு.


 'நாங்க சாதி இருக்கு’னு சொல்லிட்டு, சாதிக் கொடுமையை ஒழிக்கப் போராடிட்டு இருக்கோம். வடநாட்டுப் பக்கம் போனா, நடிகையில இருந்து கிரிக்கெட் ஆடுறவன் வரைக்கும் அத்தனை பேரும் பேரோடு சாதியையும் சேர்த்துதான் வெச்சிருக்கான். இதெல்லாம் எப்போ மாறி, இந்தியன், தமிழன்கிற நிலை வருதோ... அப்ப நாங்க சாதியைப் பத்திப் பேசினா எங்களை வந்து கேளுங்க!''


4. ''அப்போ 2011-ல் தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சினு சொன்னீங்க.. இப்ப என்ன... 2016-ல் அன்புமணி தமிழக முதல்வர்ங்கிறதுதான் உங்க திட்டமா?''


''கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் - அழகிரி, ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா, விஜயகாந்துக்குப் பிறகு அவரு பொண்டாட்டினு ஆளாளுக்குச் சொல்லிட்டு இருக்காங்க. எங்க கட்சியை வழி நடத்தும் சின்னய்யாதான் அடுத்த முதல்வர்னு நாங்க சொல்றதுல என்ன தப்பு? வெள்ளைக்காரன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டான். அப்படிப்பட்டவனே எங்க சின்னய்யா வைப் பார்த்து, எழுந்து நின்னு கை தட்டி இருக்கான். அப்படிப்பட்ட திறமை சாலியை 'முதல்வர்’னு சொல்றதில் என்ன தப்பு?''


சி.பி - வாரிசு அரசியலால தான் தமிழ் நாடு குட்டிச்சுவராகி இருக்கு, மதுவிலக்கு, சினிமா, புகைப்பழக்கம் இப்படி பல நல்ல விஷயங்களில் எல்லாருக்கும் புத்தி சொல்ற தலைவரு இந்த விஷயத்துல மட்டும் தன் மகனை ஏன் முன்னிலைப்படுத்தி பத்தோட 11 ஆகறாரு?என் குடும்பத்தை சேர்ந்தவங்க யாராவது அரசியலுக்கு வந்தா என்னை செருப்பால அடிங்கன்னு ஏன் சொன்னாரு?


http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg


5. ''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி?''


''எங்கே கோயில் திருவிழா நடந்தாலும் அங்கே ஒரு புது டாஸ்மாக் கடை திறக்கிறதுனு ஒரு புது திட்டம் கொண்டு வந்திருக்காங்க அவங்க. எல்லோரும் குடிச்சிட்டுப் போய் சாமி கும்பிடுங்கனு சொல்றாங்கபோல!


உலகத்துலயே இப்படி ஒரு கேவலம் எங்கேயும் நடக்காது. சாமி கும்பிடுற இடத்துல சாராயத்துக்கு என்னங்க வேலை? குடிகாரங்களை உருவாக்குவதில் தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்கணும்னு திட்டம் போட்டு வேலை செய்றதைத் தான் ஜெயலலிதாவின் ஒரு வருடச் சாதனைனு சொல்ல லாம்!'


சி.பி - சாராயம்  சாப்பிற சாமி தான் தமிழன்க அதிகம் கும்பிடற கருப்பண்ண சாமி, மாடசாமி இப்படி.. அரசாங்கத்துக்கு முக்கிய வருமானமே டாஸ்மாக் தான்.. குஜராத் மட்டும் எப்படி டாஸ்மாக் இல்லாமயே சமாளிக்குதுன்னு போய் பாடம் கத்துட்டு வரச்சொல்லனும் மேடமை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyWDabmTF4POj8IkzO7WZMsXgl2uehp4-jAsxvGYZQw81mmJrfSiUVyUA-Y_MEwd1xHUj2eQE2hoHa3E54Oy6ZZjkyQ4WlPVd9Ton8IPhVrZM9AnmZwm-jwhmFYxqWk-zXogWmPLkDz0Uy/s1600/ramadoss_jayalalitha1.jpg


6. ''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்?''


''அவரு இன்னும் தெளியவே இல்லையே! தலைவருக்கு உண்டான தகுதி எதுவுமே அவருக்குக் கிடையாது. ஏதோ ஒரு அலையில மக்கள் ஓட்டுப் போட்டாங்க. ஜெயிச்சு வந்துட்டாங்க.



'நான் ஆஃப் அடிச்சேன். என் தொண்டர்கள் ஃபுல் அடிப்பாங்க. எல்லோரும் குடிப்போம்’கிங்றதுதான் அவரோட கொள்கை. எம்.ஜி.ஆர். வந்தாரு, குடிக்கச் சொன்னாரு. கலைஞரும் குடிக்கச் சொன்னாரு. ஜெயலலிதாவும் குடிக்கச் சொன்னாங்க. நாளைக்கு இவரு வந்தாருன்னா, 'என்னைப் போல எல்லோரும் நிதானம் இல்லாம குடிச்சிக்கிட்டே இருங்க’னு சொல்லு வாரு.



நிதானம் இல்லாம குடிச்சிட்டே இருந்தா, குடும்பத்தையே நடத்த முடியாது. அப்புறம் எப்ப டிங்க நாட்டை ஆள முடியும்? அவரு எந்த நேரத்துல குடிக்காம இருப்பாருனு யாருக்குமே தெரியலயே. சட்டமன்றத்துக்கே அப்படித்தானே வராரு. ஏதோ வந்துட் டாரு... இதோடு அவரு அரசியல் முடிஞ்சிடும். அதனால அவரைப் பத்தி இனி பேச வேண்டியதே இல்லை!''

http://mmimages.mmnews.in/Articles/2011/Feb/2075eacd-69e3-4238-b0de-46a34db1771a_S_secvpf.gif