Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Wednesday, September 12, 2012

குமுதம் விழாவில் சென்னிமலை சி .பி.செந்தில்குமார் பேச்சு

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு  பாகம் 2

குமுதம் பத்திரிக்கை எங்களை எல்லாம் மதிச்சு அழைச்சு விழா நடத்துவதில் ரொம்ப சந்தோஷம்.. 12 வருடங்களுக்குப்பின் சந்திக்கிறோம். இங்கே பேசுனவங்க எல்லாம் குமுதம் பத்திரிக்கை பற்றி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க.. நான் என் மனசுல உள்ளதை எந்த ஒப்பனையோ,அலங்காரங்களோ செய்யாம சொல்றேன்.. 


2000 ஆம் வருஷ தீபாவளி மலர்ல இதே மாதிரி நிகழ்ந்த ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பை 2 பக்க கட்டுரையா போட்டீங்க.. அப்போ இதே மாதிரி குமுதம் புக்ஸின்  ஜோக்ஸ் தரத்தை கூட்டுவது எப்படி?ன்னு பேசுனோம்.. அப்போ குமுதத்தின் விலை ரூ 6. குமுதத்தோட சேல்ஸ்  ஏழரை லட்சம். அப்போ என்ன டாக் இருந்துச்சுன்னா குமுதம் புக்கை ஏழரை லட்சம் பேருக்கும் இலவசமா குடுத்தாலே அதுல வர்ற விளம்பரங்கள் மூலமா குமுதத்துக்கு வர்ற லாபம் ஒரு புக்குக்கு ரூ 1.80  அப்டினு சொல்வாங்க. 


அப்போ ஒரு ஜோக்குக்கு ரூ 50 சன்மானம் குடுத்தீங்க.. ஒரு பக்க கதைக்கு ரூ 100 குடுத்தீங்க.. அப்போ ஒரு பவுனோட விலை ரூ 3900. பெட்ரோல் விலை ரூ 34 .குமுதம் விலை ரூ 6 . இப்போ 12 வருஷங்கள் கழிச்சு பார்த்தா ஒரு பவுனோட விலை ரூ 24,000 + . பெட்ரோல் விலை ரூ 72  .குமுதம் விலை ரூ 10 . எல்லாமே டபுள் மடங்கை தாண்டிடுச்சு. ஆனா சன்மானம்  12 வருடங்களுக்கு முன்னால  என்ன சன்மானம் தந்தீங்களோ அதே 50 ரூபா தான் தர்றீங்க..


 போட்டி பத்திரிக்கைகளான தின மலர் வார மலர்ல ஒரு ஜோக் குக்கு ரூ 500 தர்றாங்க.. அது போக ஸ்பெஷல் ஜோக் 1 க்கு 1000 தர்றாங்க. ஆனந்த விகடன்ல  ஒரு ஜோக் = ரூ 100. ஆனா குமுதம் இதழ்ல  ஏன் சன்மானத்தை உயர்த்தலை?


 உங்களை விட பல மடங்கு சேல்ஸ்ல குறைவா இருக்கும் கல்கி வார இதழ்ல 2000 ஆம் வருஷத்துல ஒரு ஜோக்குக்கு ரூ 15 குடுத்தாங்க. இப்போ 3 மடங்கா  45  தாண்டி ரூ 50 தர்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க ரூ 100 ஆவது தர வேண்டாமா?


அடுத்து செலக்‌ஷன் டீம். பொதுவா இப்போ இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஜோக் செலக்‌ஷனுக்கு அனுபவம்  மிக்க ஆட்களை போடுவது கிடையாது. செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க பல வருசங்கள் எல்லா பத்திரிக்கைகளும் படிச்சவரா இருக்கனும். அப்போதான் உல்டா ஜோக்ஸ் வந்தா கண்டு பிடிக்க முடியும்..


ஆல்ரெடி வந்த ஜோக்குகள் தான் இப்போ மீண்டும் மீண்டும் ரீ மேக் ஜோக்குகளா உலா வந்துட்டு இருக்கு. ஒரு நல்ல படைப்பாளி ஒரு நாளுக்கு 10 ஜோக் அனுப்பினா  ஒரு உல்டா படைப்பாளி பல புக்ஸ்ல இருந்து சுட்டு 100 ஜோக்ஸ் அனுப்பறார். செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க அடடே, இத்தனை அனுப்பி இருக்காரே என அவருக்கே அதிக வாய்ப்பு தர்றீங்க.



இதுக்கு நல்ல உதாரணமா எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி அவர்களை சொல்லலாம்.. அவர் புக் ஷாப்ல தான்  இருக்கார். எல்லா பழைய புக்ஸும் அத்துபடி.. அது போக நடை பாதைக்கடைகள்ல விற்கும் பழைய குமுதம், விகடன், பாக்யா வாங்கி அதுல வரும் ஜோக்ஸ் காப்பி அடிச்சு எழுதறார்.. ஏன் அப்படிப்பட்டவங்களுக்கு வாய்ப்பு தர்றீங்க? புது ஆட்களுக்கு புது ஜோக்ஸ்க்கு வாய்ப்பு தாங்க..



 புது ஜோக்ஸ் போட ஒரு குறுக்கு வழி இருக்கு. அது டாபிக்கல் ஜோக்ஸ் போடறதுதான்.. உதாரணமா இந்த மன்னர் ஜோக்ஸ், வேலைக்காரி ஜோக்ஸ், நர்ஸ் ஜோக்ஸ் எல்லாம் கட் பண்ணுங்க.. அந்தந்த வாரத்துல எது ஹாட் டாபிக்ஸோ அது சம்பந்தமான ஜோக்ஸ்.. உதாரணமா ஆண்ட்ரியா-அனிரூத் கிஸ் மேட்டர்,அழகிரி மகன் கைது ஆகும் சூழல்,கார்ட்டூனிஸ்ட் கைது இந்த மாதிரி மேட்டர்ஸ் கைல எடுங்க.. அப்போ காப்பி ஜோக்ஸ் உல்டா ஜோக்ஸ் குறைஞ்சுடும். நீங்க மீண்டும் மீண்டும் தலைவர் ஜோக், டாக்டர் ஜோக், வேலைக்காரி ஜோக் போட்டா எல்லாம் ரிப்பீட் ஆகிட்டே தான் இருக்கும் 


 இன்னைக்கு ஆனந்த விகடனும், குங்குமமும் நெட்ல அப்டேட்டா இருக்காங்க.. ட்வீட்ஸ்  வலை பாயுதே , வலைப்பேச்சு என்ற டைட்டில்ல வருது,.,.  ஆனா குமுதத்துல வர்றது இல்லை.  குமுதம் ரிப்போர்ட்டர்ல ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் வருது.. ஆனா ஏன் குமுதத்துல. ட்வீட்ஸ்க்குன்னு 2 பக்கங்கள் ஒதுக்கக்கூடாது?


 ஒரு ட்வீட்க்கு ரூ 50 என சன்மானம் குடுத்து படைப்பாளிகளை ஊக்குவியுங்கள்.. ஏராளமான திறமைசாலிகள் சமூக வலைத்தளங்களில் இருக்காங்க.. அவங்களை உபயோகப்படுத்துனா அவங்களும் வளர்வாங்க, குமுதமும் வளரும்.


 குமுதம் இதழில் முதல்ல எல்லாம் ஆறு வித்தியாசங்கள் டாபிக்ல ஒரு ஜோக் செமயா வரும், ஆனா இப்போ அதுல குவாலிட்டி குறைஞ்சுடுச்சு.. அதில் நல்ல கவனம் செலுத்தனும்.


 குமுதம் பத்திரிக்கைல வாரம் மினிமம் 25 ஜோக்ஸாவது போடனும். ரெகுலரா ஜோக்ஸ் எழுதறவங்க 50 பேர் இருக்காங்கன்னா அவங்க தலா 50  ஜோக்ஸ் வாரம் அனுப்பினாலே வாரா வாரம் 2500 ஜோக்ஸ் வந்துடும். ஆனா நீங்க என்ன பண்றீங்க? குமுதம் இதழில் பணி புரியும் குட்டி மு வெங்கடேஷன், மாதவரம் பால்பண்ணை, ஜெயாப்ரியன், சென்னை இவங்க 2 பேருக்கும் தலா 2 பக்கம் ஒதுக்கிடறீங்க. அவங்க ஜோக்ஸ் போட்டது  பொக ஏதோ போனா போகுதுன்னு  தர்மம் போடற மாதிரி வாசகர்கள் ஜோக்ஸ் அஞ்சோ பத்தோ போடறீங்க? அது எப்படி பத்தும்?



 உங்க ஆஃபீஸ் ஆட்கள் ஜோக்ஸை போட வேண்டாம்னு சொல்லலை.. அதை கணக்குல வெச்சுக்காதீங்கன்னு சொல்றேன்.. வாசகர்கள் ஜோக்ஸ் மினிமம் 25 வாரா வாரம் போடுங்க.. அப்போதான் உற்சாகமா ஜோக்ஸ் எழுத முடியும்,..


 வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் ஜோக் கை ஒரு முழுப்பக்கத்துக்கு போட்டு முத்திரை ஜோக்னு போடுங்க.. ஆல்ரெடி இது ஆனந்த விகடன் ஒரு டைம் செஞ்ச மேட்டர் தான்... நல்ல விஷயங்களை நம ஃபாலோ பண்ணறது தப்பில்லை.



சினிமா விமர்சனங்கள் உங்க யூனிட் ஆட்கள் எழுதறாங்க.. அவங்க பெரும்பாலும் தமிழ்ப்படங்க மட்டும் தான் விமர்சனம் எழுதறாங்க. மற்ற மொழிப்படங்களான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹாலிவுட் பட விமர்சனங்களை வாசகர்கள் எழுத வாய்ப்பு குடுங்க.. படிக்கறவங்களுக்கும் ஒரு வெரைட்டி கிடைக்கும்.


 குமுதம் புக்ல கண்ட்டெண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.. ஒரு குமுதம் புக்கை  கேப் விடாம படிச்சா 45 நிமிஷங்கள்ல  ரெகுலர் வாசகனும், 1 மணி நேரத்துல புது வாசகனும் படிச்சுடலாம்.. ஆனந்த விகடன், இந்தியா டுடே எல்லாம் படிச்சு முடிக்க  2 மணி நேரத்துக்கும் மேல ஆகுது.. 



- தொடரும்



 என் பேச்சு முடிஞ்ச பின்  ஆசிரியர்கள், எடிட்டர்கள் பேசுனாங்க.. பின் கார்டூனிஸ்ட் கண்ணா 3 நகைச்சுவை கார்ட்டூன் வரைஞ்சு ஜோக்ஸ் போட்டி வைச்சாங்க.. அது பற்றி பிறகு....

இதன் முதல் பாகம் படிக்காதவங்க


சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1 

 http://www.adrasaka.com/2012/09/1_10.html

 

 


Monday, September 10, 2012

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1

குமுதம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் இரா மணிகண்டன்  20 நாட்களுக்கு முன் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசில் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒண்ணு வைக்கப்போவதாகவும் , குமுதம் ஜோக்ஸ் தரத்தை முன்னேற்றும் ஆலோசனைக்கூட்டமாகவும், ஜோக் எழுத்தாளர்களை கவுரப்படுத்தும் விழாவாக அது இருக்கும் எனவும் அறிவித்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நிகழ்ச்சி நடைபெறும் நாள் 8.9.2012 சனிக்கிழமை


 ஏன்னா இந்தக்காலத்துல தமிழ் நாட்டில்  படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதே அரிது. ஏற்கனவே 12 வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு சந்திப்பு  நிகழந்தது. 2000 ஆம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் அது ஃபோட்டோக்களுடன் இடம் பெற்றது. அப்போ  தேர்வு ஆன டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் 



1. வி சாரதி டேச்சு, திருவல்லிக்கேணி, சென்னை , 

 2. அம்பை தேவா , தூத்துக்குடி , 

3, சி பி செந்தில்குமார் , சென்னிமலை

 4. பா ஜெயக்குமார் , வந்தவாசி 

5. எஸ்  எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர்


 6. சீர்காழி வி ரேவதி, தஞ்சாவூர்


7. உ ராஜாஜி , இடைக்காட்டூர்,சிவகங்கை


8. பாஸ்கி  ,சென்னை


9.தஞ்சை தாமு


10. இரா கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை






இந்த முறை  பழைய லிஸ்ட்டில் இருந்தவங்கள்ல முதல் 3 பேர் , 6வது நபர் மட்டும் இடம் பிடிச்சோம். மீதி ஆட்கள் புது வரவு . அதில் முக்கியமானவர் பர்வீன் யூனுஸ், இவர் இப்போ பெருந்துறையில் வங்கி மேலாளராக பணி புரிகிறார். அவர் தான் விடு பட்ட பல ஜோக் ரைட்டர்ஸை  விழாவுக்கு ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.


வழக்கம் போல் அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் பயணம். சென்னையில் அதிகாலை 4.15 க்கு செண்ட்ரல் போயாச்சு. அங்கே இருந்து எதிர் புறம் உள்ள பார்க் ஸ்டேஷனுக்கு நடந்து போய்  எலக்ட்ரிக் ரயிலில் பல்லாவரம் ஸ்டேஷன் போனேன். அங்கே ட்விட்டர் நண்பரும் , அட்ராசக்க இணையத்தின் ஆரம்ப கால வாசகரும், ஆலோசனை சொல்பவருமான சிவ பக்தர் தீவிர ஆன்மீகவாதி சிவ கீர்த்தியுடன் சந்திப்பு. 


 சென்னை மழையுடன் என்னை வரவேற்றது, நண்பர் சிவா என்னை குடையுடன் வரவேற்றார். மழையிலும் தாமதிக்காமல்  வந்த அவர் என்னை அவர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். காலை டிபன் அவர் கைங்கரியம். ஆனியன் தோசை 8 சாப்பிட்டேன். காலை, மாலை என இரு வேளைக்கும் அவர் வாங்கி வந்த மாவு பாக்கெட் ஒரே  வேளையில் காலி ஆனது.. 

9.30 மணிக்கு என்னை பல்லாவரம் ஸ்டேஷனில் டிராப் பண்ணினார். விழா நடக்கும் நேரம் காலை 11 மணி தானே போயிடலாம்னு நினைச்சது எவ்லவ் பெரிய தப்பு.. ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவே 30 நிமிடம் ஆகிடுச்சு. அங்கே இருந்து எக்மோர் ஸ்டேஷன் போனேன். மணி 10.30 ஆகிடுச்சு. 


 அம்பை தேவாவும் , பர்வீன் யூனுசும் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசுக்கு வந்துட்டதா சொன்னாங்க.. கே ஆனந்தன் ஃபோன் பண்ணி நாங்க எல்லாம் 9 மணிக்கே வந்துட்டோம்.. நீங்க தான் லேட் என்றார்.. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் வெளியூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லனும்னா நம்ம ஊர் கணக்கு ஒத்து வராது.. பங்க்சுவாலிட்டியை கடை பிடிக்க  முன்னதாக தயாராக வேணும்.. 


அங்கே இருந்து 20 ஆம் நெம்பர் பஸ் பிடிச்சு அபிராமி தியேட்டர்  ஸ்டாப் போனேன் . ஆட்டோ வாடகை ரூ 70ன்னு சொன்னாங்க,. பஸ்சில் 5 ரூபாதான். சிக்கனம் தேவை எக்கணமும். 11. 15 க்கு ஆஃபீஸ் போய்ட்டேன். என்னமோ சி எம் ஆஃபீஸ் மாதிரி பயங்கர செக்யூரிட்டி..  ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் உள்ளே செல்ல ஏகபப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணி வெச்சிருந்தாங்க. போன தடவை இவ்வளவு பாதுகாப்பு இல்லை.. 


அதாவது  உள்ளே செல்லும் ஒவ்வொரு கதவிலும் செக்யூரிட்டி ஏதோ ஒரு கார்டை சொருகறார். அப்போதான் கதவு திறக்குது.. 

 கூட்டம் ஜஸ்ட் அப்போதான் ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் வரப்போ அம்பை தேவா தான் முதல்ல பேசிட்டிருந்தார்.


1.அம்பை தேவா - நான் 30 வருஷங்களா ஜோக் எழுதிட்டு இருக்கேன். என் பூர்வீகம் அம்பை.. விக்ரமசிங்க புரம் ( மணிரத்னம் எடுத்த ராவணன் படத்துல உலக அழகி ஐஸ்வர்யா ராய்  14 ஷாட்ல குளிச்சுட்டே இருப்பாங்களே அந்த அம்பா சமுத்திரம் - சி .பி ) நடிகர் சிவகுமார் என் நீண்டகால நண்பர். அவர் மகன் கார்த்தியின் திருமணத்துக்காக  கோவை வந்து பின்  ஊர் திரும்பும்போது நடந்த பெரிய  பஸ் விபத்தில் என் மகள் , மனைவிக்கு பெரிய காயம் ஏற்பட்டதால் நீண்ட நாட்கள் சென்னை மருத்துவ மனையில் தங்க வேண்டிய சூழலால் சென்னையில் பணி மாற்றல் வாங்கிக்கொண்டேன்.அந்த விபத்து சிகிச்சைக்கு சிவகுமார் ரூ 1,50,000 உதவி செய்தார்.  வாரா வாரம் 100 ஜோக்குகள் எழுதறேன்.. எனக்கு ஜோக் எழுதுவதில் சலிப்பே ஏற்பட்டதில்லை .



2. பர்வீன் யூனுஸ்  - நான் ஒரு வங்கியில் மேலாளரா இருக்கேன். மாசம் ரூ 60,000 சம்பளம் வாங்கினாலும் ஜோக் சன்மானமா ரூ 50 வந்தது என மனைவி ஃபோன் பண்ணிச்சொல்லும்போது ஏற்படும் மன மகிழ்ச்சி அளவில்லாதது. அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கடந்த 2 வருடங்களாக பல பத்திரிக்கைகளில் எழுதிட்டு வர்றேன்.  எல்லா படைப்பாளிகளுக்கும் எஸ் எம் எஸ் மூலமா யார் யார் படைப்புகள் எந்த எந்த பத்திரிக்கைகளில் வந்திருக்கு என தகவல் சொல்லிடுவேன்.. குமுதம் பத்திரிக்கையும், விகடனும் என் 2 கண்கள் போல.. தொடர்ந்து வாய்ப்பு தர்றீங்க.. 



3. பாலாஜி கணேஷ் , கோவிலாம்பூண்டி - சார் சொன்னா நம்ப மாட்டீங்க.. மிக வறுமையான சூழலில் நான் இருக்கேன்././ நான் வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட ஜோக் எழுதி சம்பாதிக்கறதுல தான் வீட்ல அடுப்பு பொங்குது.. சில சமயம் நீங்க அனுப்பிய மணி ஆர்டர் பணத்துல தான் அரிசி வாங்கி சமைச்சிருக்கோம்.. என் வாழ்க்கைல பத்திரிக்கைகளும், படைப்புகளும் இரண்டறக்கலந்துடுச்சு . 



4. கே ஆனந்தன் பி பள்ளிப்பட்டி  - நான் ஜோக்ஸ், ஒரு பக்க கதை என எல்லாம் கலந்து கட்டி எழுதிட்டு வர்றேன்.. ஒரு பக்க சிறுகதைகள் எழுத என்னை ஊக்குவிச்சதே குமுதம் தான்.மற்ற பத்திரிக்கைகளை விட குமுதம் தான் என் படைப்புலக வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்குது.. ஏன்னா ஒரு முறை விகடன் ஆஃபீஸ்ல ஃபோன் பண்ணி 2 நாளுக்குள் அனுப்புங்க அவசரம்னு சொல்லி ஒரு டாபிக்ல ஜோக்ஸ் அனுப்ப கேட்டாங்க.. நானும் ஆஃபீஸ்க்கு லீவ்  போட்டுட்டு மாங்கு மாங்குன்னு 100 ஜோக்ஸ் எழுதி அனுப்பினேன். ஒண்ணு கூட வர்லை..  மனசு விட்டுப்போச்சு.. ஆனா குமுதத்துக்கு நான் அனுப்பற  ஜோக்ஸ்ல 20க்கு 1 என்ற விகிதத்துல வந்துடுது..



5. சொக்கம்பட்டி தேவதாசன்  - நான் ஆனந்த விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் நிருபராக பணி ஆற்றியவன். கடந்த 5 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு வர்றேன். ஆனந்த விகடன் தீபாவளி  மலரில் பல ஜோக்ஸ் என்னுது வந்திருக்கு. என்னை லட்சக்கணக்கான மக்களுக்கு அறிமுகம் செஞ்சதில் குமுதத்திற்கு பெரிய பங்களிப்பு இருக்கு.




6. சீர்காழி வி ரேவதி - நான் தஞ்சையில் இருக்கேன்.. என் மனைவி பேர்ல தான் எழுதிட்டு இருக்கேன்.. 21 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கேன்.. என்னோட முதல் ஜோக் வந்ததே குமுதத்துல தான்.. புக்ல என் பேரு ஐ மீன் என் மனைவி பேரு பார்க்கும்போது எழுதுவதற்கான உத்வேகம் பெருகும்..



7. அ . பேச்சியப்பன் , ராஜபாளையம் - குமுதம் ரிப்போர்ட்டர்  வைத்த பாபா பஞ்ச் டயலாக் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினேன்.. அதில் தேர்வானதுதான் 

1. நான் சாய் பாபா அல்ல, யார் பக்கமும் சாயாத பாபா, 

2. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்..



இப்போ குமுதம் நடத்திய கோச்சடையான் பஞ்ச் டயலாக் போட்டியிலும் கலந்திருக்கேன்.. வாசகர்களை நாடித்துடிப்பு அறிந்து குஷிப்படுத்துவதில் குமுதம் தான் என்றும் நெம்பர் ஒன்..



8. சுபஸ்ரீ சென்னை - நானும், எங்கப்பாவும் கடந்த 3 வருடங்களா குமுதத்துக்கு ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கோம்.. என் படைப்பு வந்தா என்னை விட எங்கப்பா தான் சந்தோஷப்படுவார்.  ஒரு பொண்ணா நான் சந்தோஷப்படறது என்னை எங்கப்பா ஊக்குவிக்கறதுதான். 



9.  நா கி பிரசாத் , கோவை - என் முத ஜோக், என் முதல் சிறுகதை வந்ததெல்லாம்  குமுதம் இதழில் தான். புதிய படைப்பாளிகளை குமுதம் ஊக்குவிப்பது போல் எந்த பத்திரிக்கையும் ஊக்குவிப்பது இல்லை.. ஒரு பக்க கதை போடும்போது அதில் படைப்பாளிகளின் பெயரை நல்லா போல்டு லெட்டர்ல போடுங்க.. ஏன்னா 2 லைன்ல ஜோக் எழுதறவங்க பேரும், ஒரு பக்கத்துல கதை எழுதறவங்க பேரும் ஒரே சைஸ்ல தான் வருது..  இன்னும் அட்ராக்சனா பேர் போட்டா நல்லாருக்கும்,,


 இதைத்தொடர்ந்து பேசுனவங்க எல்லாம்  ஒரே டைப்ல தான் பேசுனாங்க.. அவங்க பேச்சுல ஒண்ணை கவனிச்சேன்.. எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு சுய அறிமுகம், அப்புறம் குமுதம் துதி பாடல் இதுதான் மேலோங்கி இருந்தது.. கூப்பிட்ட்டிருப்பது குமுதம் பத்திரிக்கையின் ஜோக்ஸ் தரத்தை மேம்படுத்துவது எப்படி? என்பதற்கான ஆலோசனைக்கூட்டம்.. ஆனா வந்தவங்கள்ல பெரும்பாலும் அந்த டாப்பிக்கை தொடவே இல்லை.. 


குமுதம் பத்திரிக்கையின் நிறை குறைகள் என்ன? அவங்க என்ன செய்யறாங்க? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ட்விட்டர்ஸ்க்கு ஏன்  விகடன், குங்குமம் போல்  மரியாதை செலுத்தலை?என்பது பற்றி விளக்கமா நான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அடுத்த பதிவில்..... 

Thursday, August 30, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 2

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலரும் பல பதிவுகள் போட்டுட்டு வர்றாங்க. நான் படிச்ச 16 பதிவுகள்ல  4 பேர் மட்டும் விழாவில் பதிவர்கள் அறிமுகம் பகுதில நானும் , கேபிள் சங்கரும்  மற்றவர்களை ஓவராய் கலாய்த்ததாகவும், அது பெண்களுக்கு பிடிக்காது எனவும், தனிப்பட்ட முறையில் பதிவர்களை கலாய்ப்பது  தவறு எனவும் சொல்லி இருக்காங்க.. 



 அவங்களை நினைச்சு சிரிப்புதான் வருது,. நரசிம்ம ராவ் மாதிரியோ, மண் மோகன் மாதிரியோ அறிக்கையை பார்த்து படிச்சா தூக்கம் வந்துடும். இதெல்லாம் ஜாலிக்கு.  தருமன் கண்ணுக்கு எல்லாமே நல்லதா தெரியும்.. துரியோதணன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தெரியும். அதுக்கு மனசை பக்குவப்படுத்திக்கனும்.. 

  மேடையில் இருந்தவாறே நாங்க 2 பேரும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை கவனிச்சுட்டுதான் இருந்தோம்.. அப்படி யாரும் ரசிக்காம இருந்த மாதிரி தெரியல.. பெண்கள் அதை ரசிச்சிருக்க மாட்டாங்க என்பதும் கற்பனையே? ஏன்னா  4 பதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்ட போது அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்றே சொன்னார்கள். மேடையில் அமர்ந்த படி எஸ் எம் எஸ் மூலம் அவ்வப்போது நான் கருத்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.. அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தேன்..


 இதுல இன்னொரு விஷயமும் சொல்லிக்கறேன். 150 பதிவர்கள் தங்களை அறிமுகம் பண்ணிக்கிட்டாங்க.. அதுல நான் கலாட்டா செஞ்சது மொத்தம் 16 பேரை மட்டுமே. தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்கள் பழக்கம்.. அதே போல் அப்படி கிண்டல் அடிக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் கேபிள் சங்கர் கலாட்டா செய்தது மொத்தம் 7 பேரை மட்டுமே.



டி வி சீரியல்கள் பார்த்து பார்த்து தமிழர்கள் பலர் உம்மணாம்மூஞ்சிகளாக மாறி வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.. அவர்கள் மன நலம் அடைந்து சிரிச்ச முகமாக மாற இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.குறை சொல்லி எழுதிய மற்ற பதிவர்கள் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. ஆனா ஜாலி டைப்பான பலா பட்டறை சங்கர் கூட  அது போல் ஒரு கருத்தை சொன்னது ஆச்சரியமா இருக்கு


இதை விட காமெடி இன்னொரு அதி புத்திசாலி பதிவர்  12 பக்கம் ஏ 4 ல வர்ற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்.. அதனோட சாராம்சம் பதிவர் அறிமுக நிகழ்ச்சி தேவை அற்றது . 2 மணி நேரம் வீண் என்றார். பதிவரை பற்றித்தான் நமக்கே தெரியுமே? டெயிலி பதிவு வாசிக்கிறோமே என்றார்.


அவருக்கு என் பதில் இணைய  தளங்கள் 1000க்கும்  மேல் இருக்கு. அதில் நாம் ரெகுலரா பார்ப்பது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட 20 பதிவுகள் தான். எத்தனையோ பதிவுகள் விடுபட்டிருக்கும். தெரியாமல் இருக்கும். 2 வருடங்கள் வலை உலகில் இருக்கும் எனக்கே இதுவரை சென்னை பதிவர் சந்திப்பில் வந்த பதிவர்கள் பாதிப்பேர் தெரியாது. ( இந்த லைனில் எனக்கே என்ற வார்த்தையில் தலைக்கனம் இல்லை ) அப்படி இருக்க புது ஆட்களுக்கு யாரை தெரியும்.. இந்த சந்திப்பின் மூலம் பலரும் பலரை அறிய வாய்ப்பு.. அவ்ளவ் தான்.


புதிய தலைமுறை வார இதழில் இருந்து  ஒரு மேடம் வந்திருந்தாங்க. அவங்க சொன்ன அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதா இருந்தது. அதாவது ஆனந்த விகடன் இதழ்ல என் விகடன் புக்ல வாரா வாரம் வலை ஓசை பகுதியில் ஒரு பதிவரை அறிமுகம் செய்வது போல் புதிய தலைமுறை வார இதழில் அனைத்து பதிவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள்.

அதற்காக துறை வாரியாக அதாவது இலக்கியம், சமையல்
, சமூகம், கவிதை, சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம் இப்படி இயங்குபவர்கள்  அந்தந்த பிரிவை குறிப்பிட்டு மெயில் ஐ டி வலைத்தள முகவரியை ஒருங்கிணைத்து தரச்சொன்னார்கள்

இது நல்ல வாய்ப்பு, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்
 1.30 மணிக்கு லஞ்ச்..  அறிவிச்ச பின்னும் பாதிப்பேர் சாப்பிடப்போகாம வந்த பதிவர்களுடன் அளவளாவிப்பேசிக்கொண்டிருந்தது அவங்க ஆர்வத்தை காட்டுச்சு.


 சைவ விருந்து , வெஜிடபிள் சூப், மைசூர் பாக், கோக், இட்லி, தோசை ,பூரி . இதுதான் மெனு. எல்லாரும் ஒரு வெட்டு வெட்டிட்டு மீண்டும் மேடைக்கு வந்தோம்.. ஷாக் சர்ப்பரைஸ் என்னன்னா பி கே பி சத்தமே இல்லாம மேடைல அமர்ந்திருந்தார்.. வழக்கமா வி ஐ பி ங்க வந்தா உடனே மேடைல உக்கார வைக்க மாட்டாங்க.. மைக்ல பில்டப் கொடுத்து அப்புறமா தான் உக்கார வைப்பாங்க.. ஆனா இவர் சோ சிம்ப்பிள்.. மேன்..



 கவியரங்கம் நடந்தது.. இதுல பிரபல ட்விட்டரும், பாடல் ஆசிரியருமான சுரேகாவின்  ஆளுமை வெளிப்பட்டது.. அருமையான பேச்சு. அழகான மொழி நடை.. அங்கதம் என மேடையில் கலக்கினார்.. அவரது பேச்சும், அறிமுகமும், கவிஞர்கள் கவிதையும்  டைப் பண்ண 3 மணி நேரம் ஆகும் என்பதால் அது அடுத்த பாகத்தில். 


 அடுத்து பி கே பி பேச வந்தார்






அவர் நல்ல மேக்கப்பில் இருந்தார்.. மிக இயல்பாக பேசினார்..

வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இதுவே முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டதும் அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டதும் விழாவின் வெற்றி என  நினைக்கிறேன்

Photo


விழாவுக்கு என்னை அழைத்த போது மின்னல் வரிகள் கணேஷ், “  நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும், பிறகு  நீங்கள் கிளம்பிக்கலாம்என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைப்பதிவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.
தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்





லஞ்சம் 



பலூன் விற்பவன்
பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ..
வாங்கிய சட்டையின் விலை இருபது
பிறந்த குழந்தை
ஆணா பெண்ணா என
தெரிந்து கொள்ள கொடுத்த விலை ஐநூறு .


கோபம் வரத்தான் செய்கிறது

குடுமி பிடித்து
மண்ணில் உருண்டு புரண்டு
சண்டையிடும்
மழலைகளை காணும் போதெல்லாம்
கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது .
என்னோடு சண்டையே ..
போட்டிராத அக்காவின் மேல் .


என் அன்பைப்போல !

எவர் தடுப்பினும்
நடுவழியிலேயே
நின்றுவிடப்போவதில்லை மழை
உன் மீதான என் அன்பைப்போல !



தென்றல் கவிதை புத்தகம் வெளீயிடுபவர்  பி கே பி , பெறுபவர் சேட்டைக்காரன் அண்ணன், அருகில் கவிதாயினி சசிகலா



முதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்

நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்

விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !



வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !
\
கேபிள்சங்கர், வீடு திரும்பல் மோகன், சி பி


இப்போ வலைப்பூ என்பது தவிர்க்க முடியாத சக்தி ஆகிடுச்சு. இப்போ புதுசா ஒரு பத்திரிக்கை தொடங்குனா  அதுல கண்டிப்பா வலைப்பூ  பக்கங்கள்னு ஒதுக்கியே ஆக வேண்டிய கட்டாய சூழல் இருப்பதை நான் பார்க்கிறேன்.. உல்லாச ஊஞ்சலில் கூட கேபிள் சங்கரை எழுத வைத்தேன்.. அவரும் 17 வலைப்பூக்கள் பற்றி அறிமுகம் செய்தார்.. 


அட்ராசக்க நீண்ட நாள் வாசகரும்,ஆத்ம நண்பரும் ஆன கும்பகோணம் பேராசிரியர் உடன் ஒரு அழகிய சந்திப்பு


உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.

சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !


பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.


வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.


Unparliamentary
வார்த்தைகள் , அல்லது விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !  





சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.


சினிமா விமர்சனம் எழுதியே ஆகனும் என்பதற்காக யாரும் அப்படி எழுதிட்டு இருக்காதீங்க.. வேறு பல விஷயங்கள் எழுத இருக்கு..



பதிவுலகின் ஒரு சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் பேச அதை ரசிப்பவர் இன்னொரு சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் 


வலைப்பூவில் படித்த ஒரு குட்டிக்கதையை இங்கே பகிர்ந்து என் பேச்சை நிறைவு செய்கிறேன்... “ஒரு டிபார்ட்மெண்ட்டர்ல்  ஸ்டோர்,, அங்கே ஒரு கஸ்டமர் வந்து அரைக்கிலோ பட்டர் வேணும்னு கேட்றார். சேல்ஸ்மேன் சொல்றார். சார், எங்க கிட்டே ஒரு கிலோ பட்டர் பாக்கெட் தான் இருக்கு.. பேக் பண்ணினது.. அதை பிரிக்க முடியாது, அது பேக் பண்ணி இருக்கு.

 யோவ்,.. நான் கஸ்டமர்.. நான் சொல்றதுதான் வேணும். என்னை சேட்டிஸ்ஃபை பண்றதுதான் உன் வேலை .. உன் கிட்டே என்ன பேச்சு? நான் ரெகுலரா இங்கே வந்து  அரை கிலோ தான் வாங்கிட்டு இருக்கேன். நீ மேனேஜர்ட்ட போய் கேளு


 சேல்ஸ் மேன் உடனே  மேனேஜர் கிட்டே போய்  “ சார், இங்கே ஒரு லூஸ் , மெண்டல் , சாவு கிராக்கி வந்து   பட்டர் பாக்கெட்ல லூஸ்ல கேட்குது சார்.. “

 இப்படி சொல்லிட்டு இருக்கும்போது திடீர்னு கஸ்டமர் அங்கே வந்துட்டார்.. 

 இப்போ  2 பேருக்கும் அதிர்ச்சி.. கஸ்டமரை லூஸ்னு சொல்லியாச்சு,.. என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியல.. 

 உடனே அந்த சேல்ஸ் மேன் ஸ்மார்ட்டா   ரிப்ளை பண்ணான்.. ” ஆனா இந்த ஜெண்டில்மேன் அரைக்கிலோ வாங்கிக்கறேன்னு சொல்றார் சார்.. “ என சமாளிச்சார்


 உடனே மேனேஜரும் “ அப்புறம் என்னய்யா? அவருக்கு அரைக்கிலோ பிரிச்சு குடுத்துடு” என்றார்


 கஸ்டமர் போனதும் மேனேஜர் அந்த சேல்ஸ்மேனை தனியா அழைச்சு “ வெரிகுட்யா.. நீ கஸ்டமரை நக்கல் அடிச்சே, கமெண்ட் பண்ணினே.. ஆனா கஸ்டமர் வந்ததும் டக்னு சமாளிச்சியே,  நீ எந்த ஊருப்பா? 

 மெக்சிகோ சார்.. மெக்சிகோ தெரியுமில்ல சார்? ஃபிட்பால்  மேட்சுக்கு பேர் போன  இடம்.. அது போக  பிராஸ்டிடியூட்க்கும் பேர் போன இடம் “

 உடனே மேனேஜர் செம காண்ட் ஆகி “ யோவ், என்னை நக்கல் அடிக்கறியா? என் சம்சாரம் கூட மெக்சிகோ தான் “

 உடனே சேல்ஸ் மேன் டக்னு “ஓஹோ அவங்க அந்த ஃபுட் பால் டீம்ல இருக்காங்க சார்? 


 என்றானாம்.. அதுலயும் அவன் தன்னோட ஸ்மார்ட்னெசை காண்பிச்சுட்டான்.. 

 அது மாதிரி உங்க  வலைப்பூவை எல்லாரும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்காங்க என்ற உணர்வுடன் ஸ்மார்ட்டாக நடந்துக்குங்க.. வாழ்த்துகள்.. “















a
“படங்கள் உதவி வீடு திரும்பல் மோகன்