Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Tuesday, April 22, 2014

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தார் கலைஞர்: லட்சிய திமுக நிறுவனர் - தலைவர் டி.ராஜேந்தர் பேட்டி

இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண் டிருக்கும் சூழலில், திமுக-வுக்கு எதி ராக சங்கநாதம் எழுப்பி இருக்கிறார் லட்சிய திமுக நிறுவனர் - தலைவர் டி.ராஜேந்தர். அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி.


திமுக தேர்தல் பிரச்சாரத்துக்காக தானே உங்களை அழைத்தார் கருணாநிதி.. இடையில் என்ன நடந்தது?



திமுக-வில் உட்கட்சி பூசல் பூதாகரமாய் நிற்கிறது. ஒரு தலைவ ரோட பிள்ளை தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த வரே திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார். ஸ்டாலின் பிரச்சாரத்தை தவிர திமுக தரப்பில் மற்ற யாரு டைய பிரச்சாரத்தையும் தொலைக் காட்சியில் காட்டுவதில்லை. திமுக-வினருக்கே இந்த நிலை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?



டி.ராஜேந்தரை விட்டிருந்தால், எதிர் அணியில் அழைத்து எம்.பி. சீட் கொடுத்திருப்பார்கள் என்றும் மேடையில் ஏறி தலைமுடியை கோதியிருப்பார்… களத்தில் இறங்கி மோதியிருப்பார் என்றும் நினைத்திருப்பார்கள். அதற்கு பயந்துதான் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தார் கலைஞர். திமுக-வின் பிரச்சாரத்தை பலப்படுத்த என்னை அழைத்த அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிர். அது எல்லாமும் எனக்கு தெரியும். அதைப்பற்றி தற்போது விமர்சிக்க வேண்டாம்.



இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் அதிமுக- வுக்கு ஆதரவாக இருந்திருப் பீர்களா?



இனிமேல், யார் கேட்பார்கள், அழைப்பார்கள் என்கிற கற்பனை கனவுகளை எல்லாம் வளர்த்துக் கொண்டு இருக்க போவதில்லை. ஏற்கெனவே இரண்டு முறை அதிமுக-விற்காக பிரச்சாரம் செய் தேன். காஞ்சிபுரம், கும்மிடிப் பூண்டி, புதுக்கோட்டை இடைத் தேர் தல்களில் முதல்வர் அழைத்ததால் பிரச்சாரம் செய்தேன். அதிமுக வெற்றி பெற்றது. அப்போதே எவ் வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவன். இப்போதா மாறப்போ கிறேன்?



பிரச்சார அலை ஓயும் இந்த நேரத் தில் திடீரென திமுக-வை எதிர்த்து அறிக்கை வெளியிடக் காரணம்?




’திமுக-வுக்கு ஆதரவான அலையை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது’ என்கிறார் கலை ஞர். அது என் மனதை ரொம்பவே புண்படுத்தியது. ஒருவேளை காலம் கனிந்து, எதிர் அணியில் நின்று நான் களமாடியிருந்தால் கலைஞரால் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்க முடியுமா? அதனால்தான் நான் இப்போது பேச வேண்டி இருக்கிறது. விஜயகாந்த்துக்கு பின்னால் அலைந்த கலைஞர் ஏன் என்னை கூப்பிட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி.




ஸ்டாலின்தான் உங்களை புறம் தள்ளினாரா?



அவரை பற்றி பேச எதுவும் இல்லை. அவரை பொருட்டாக நினைக்கவும் இல்லை. என்னிடம் திறமை இருக்கிறது. நான் என்னு டைய தந்தை பெயரை சொல்லிக் கொண்டு நிற்கவில்லை. எத்தனை கலைஞர் என்னை கைவிட்டாலும், கடவுள் துணையோடு என் பயணத்தைத் தொடருவேன்.



  • இவருக்கு இந்த முறை கை செலவுக்கு காசு கிட்டைகவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது
    2 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  SHAN  
      dmk க்கு ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி ஒப்புக்கு குஷ்பு என ஒரு கிராமமே உள்ளது.குத்துதே குடையுதே என இவரையெல்லாம் சேர்த்துக்கொண்டு ஆட்டம் ஆட ஸ்டாலின் தயாரயில்லை.இவருக்கு பொருத்தமான கட்சி IJK தான்.அங்கே கொபசெ post காலியாக உள்ளது
      about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
      • தி மு க பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் இருக்கும் திறமை வாய்ந்த ஆட்களை அவர்கள் பிரகாசிக்க விடாமல் வெளியேற்றும் செயல் கலைஞர் காலத்திலேயே தொடங்கி விட்டது. ஸ்டாலின் அதை தொடருகிறார் ! எம் .ஜி .ஆர் ., வைகோ ., பரிதி இளம்வழுதி பட்டியலில் வுள்ளே வெளியே விளையாட்டில் டி .ராஜேந்தர் . இப்படியே போனால் தி மு க பெட்டிகடையாக சுருங்கி விடும் !
        about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
        •  Sundaram  from Salem
          ராஜேந்தர், வைகோ, நெடுமாறன், சீமான், தமிழருவி போன்றோர் ஆற்றல் இருந்தும், வீணாகி கொண்டு இருகிறார்கள் .தெளிவான சிந்தனை இல்லை .கொக்கரிக்கும் குணம் மட்டும் போதாது .சுட்ச்ச்சமம்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்கள் எவரிடுமும் இல்லை .நல்ல உள்ளங்கால் .ஆனால் தான் என்ற மமதை ,ஆகங்காரம் இவர்களை பின்னுக்கு தள்ளுகிறது .ராதிகா ராஜேந்தர் இவ்விருவர் மட்டுமே எம். ஜி .ஆர் ஈக்கு ஈடு கொடுத்து திமுகவை தூக்கி நிறுத்தியவர்கள் .வல்லமை உள்ளவர்கள். பாவம் மேல குறிப்பிட்டுள்ள ஐந்து பேருக்குமே அதிர்ஷ்டதேவதை அருள் இல்லை .இவர்கள் மர்ற்றவர்களை தூக்கி நிறுத்த கூடியவர்கள் .ஆனால் இவர்களை தூக்கி நிருதத எவரும் இல்லை .ஆரூடம் கூறுவதானால், இவர்களுக்கு இந்நிலை தொடரவே செய்யும் .தமிழ்நாட்டில் தேசியம் வளர உதவ வேண்டும். திராவிட கட்சிகள் யாவும், குடும்ப கட்சிகள் ஆகிவிட்டன. இவர்களிடமிரிந்து ஒதுங்கி கொண்டு தேசிய கட்சிகளில் சேர்ந்து தமிழ் உணர்வுடன் பணியை தொடரலாம் சுந்தரம்

        thanx - the hindu

        Thursday, May 23, 2013

        வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1,2

        வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 1

        -வீ.கே.ரமேஷ்

        படங்கள்:
        க. தனசேகரன்

        வீரபாண்டியாரை 'சேலத்து சிங்கம்' என்று சிலாகிப்பார் கருணாநிதி. அவரும் கடைசி நிமிடங்கள் வரை கருணாநிதிக்கே சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தார். அந்தச் சிங்கத்தின் குகையிலேயே இப்போது சிறு நரி புகுந்தது போல், சலசலப்பு கிளம்பி இருக்கிறது. விளைவு, பலபேருக்கு பஞ்சாயத்து பண்ணிய வீரபாண்டியாரின் குடும்பத்திற்கே இப்போது நாட்டாமை தேடவேண்டிய நிலை. உண்மையில் அந்தக் குடும்பத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

        கோலோச்சிய வீரபாண்டிய ஆறுமுகம் 
         
        தொடர்ந்து 38 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளராகவும், ஐந்து முறை எம்.எல்.ஏவாகவும், வேளாண்மை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் என மூன்று முறை அமைச்சராகவும் இருந்த மூத்த முன்னோடி வீரபாண்டி ஆறுமுகம்.

        கடந்த திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள அங்கம்மாள் காலனி நிலத்திற்கு அண்ணன் ஆசைப்பட்டதால், அங்கிருந்த மக்களை இரவோடு இரவாக அடித்து விரட்டினர் அன்புத் தம்பிகள். திமுக ஆட்சி முடியும் வரை அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை இருந்தது.


        சூளுரைத்த ஜெயலலிதா


        விஷயம் தெரிந்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு சேலம் வந்த ஜெயலலிதா, 'அங்கம்மாள் காலனி நிலத்தை மீட்டு தருவேன். அந்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை சிறைக்குள் தள்ளுவேன்' என்று சூளுரைத்துச் சென்றார். இதனால், கொதித்தெழுந்த வீரபாண்டி ஆறுமுகமும் அடுத்தடுத்த மேடைகளில் ஜெயலலிதாவை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.


        ஆட்சி தன் கைக்கு வந்ததும். வீரபாண்டி ஆறுமுகத்தை மையமாக வைத்தே ஜெயலலிதா நில அபகரிப்பு புகார்களை கவனிக்க ஒரு தனி பிரிவை ஏற்படுத்தியதாக சொல்வார்கள். அம்மா சொன்னது போலவே, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை, பின்பு பழைய வழக்குகளுக்காக குண்டர் தடுப்புக் காவலும் சூழ்ந்தது.


        சிங்கத்தை சீட்டிங் கேஸில் தள்ளினால் எப்படி இருக்கும்? ஆதரவாளர்கள் கொதித்தார்கள்; எதிர்ப்பாளர்கள் திளைத்தார்கள். சிறைவாசம் வீரபாண்டியாரை ரொம்பவே முடக்கிப் போட்டது. குண்டாஸை உடைத்து வெளியில் வந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மரணத்தை தழுவினார்.


        வெடித்துக் கிளம்பிய சொத்து பிரச்னை


        குடும்பத் தலைவன் இறந்தால் சராசரி குடும்பங்களில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வீரபாண்டியார் குடும்பத்திலும் அப்படியொரு பிராது வெடிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். குடும்ப உறுப்பினர்களுக்குள் இலைமறை காயாக இருந்த சொத்துப் பிரச்னை, வீரபாண்டியாரின் மூத்த மருமகள் பிருந்தா மூலமாக விஸ்வரூபம் எடுத்து கோர்ட் கதவுகளை தட்டியது.



        சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிருந்தாவும், வீரபாண்டியாரின் மூத்த மனைவி ரெங்கநாயகியும் கூட்டாக தாக்கல் செய்திருக்கும் அந்த மனுவில் '(வீரபாண்டி)எஸ்.ஆறுமுகம் 2007 செப் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவிடம் இருந்து 97.5 சென்ட் நிலத்தையும், அவரது சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தையும் வாங்கி எஸ்.ஆறுமுகம், ரெங்கநாயகி மற்றும் பிருந்தா செழியன் என மூன்று பெயரிலும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்
        . பிறகு, கடந்த 2011 டிசம்பர் 23 ஆம் தேதி ரெங்கநாயகி, பிருந்தா செழியன் ஆகிய எங்கள் இருவரையும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இரவில் கடத்திச் சென்ற ஆறுமுகம், அங்கு வைத்து மிரட்டி இந்த இரண்டு சொத்துக்களின் பங்குகள் மேலும் எட்டு சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

        ரெங்கநாயகி தன் கணவருக்கு தானமாக கொடுப்பதாகவும், மருமகள் பிருந்தாசெழியன் அந்த நிலத்தை 37.66 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும், நான்கு காசோலைகளில் தலா 9 லட்சமும், ஐந்தாவது காசோலையில் 1.66 லட்சமும், வழங்குவதாக அவர் தெரிவித்த போதிலும், அந்த தொகை வழங்கவில்லை. எனவே, அந்த சொத்து பதிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
        முதல் மனைவி ரெங்கநாயகியின் இளைய மகன் ராஜேந்திரனுக்கு பங்கை கொடுக்காமல், இரண்டாவது மனைவி லீலா, அவரது மகன் பிரபு, முதல் மனைவியின் மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, மூத்த மகன் செழியனின் மகள்கள் சூர்யா, சிந்து, ராஜேந்திரனின் மகள்களான கிருத்திகா, மலர்விழி ஆகியோருக்கு அந்தச் சொத்து தானமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தான சொத்து பரிமாற்ற பதிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
        வீபாண்டியார் குடும்பத்திலிருந்தே இப்படி ஒரு வழக்கு புறப்பட்டு வர என்ன காரணம்? அந்தக் குடும்பத்தில் இப்போது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
        வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 2

        -வீ.கே.ரமேஷ்
         

        படங்கள்: 
        க. தனசேகரன்

        வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரெங்கநாயகி, இரண்டாவது மனைவி லீலாவதி. முதல் மனைவி ரெங்கநாயகிக்கு மகேஸ்வரி, நெடுஞ்செழியன் (எ) செழியன், நிர்மலா, ராஜேந்திரன் (எ) ராஜா என நான்கு பேர். மகேஸ்வரியின் கணவர் காசி, செழியனின் மனைவி பிருந்தா (இவர் தான் தற்போது கோர்ட்டுக்கு சென்றிருப்பவர்).

        இவர்களுக்கு சூர்யா, சிந்து இரண்டு மகள்கள். நிர்மலா கணவர் மதிவாணன். இவர்களுக்கு கயல்விழி, பாரிவேல் என இரண்டு பிள்ளைகள். ராஜா மனைவி சாந்தி. இவர்களுக்கு மலர்விழி, கிருத்திகா என இரண்டு பிள்ளைகள். வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதிக்கு ஒரே மகன் பிரபு. அவரது மனைவி கௌதமி. இவர்களுக்கு சித்தார்த் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

        வீரபாண்டியாரின் சொத்துகள்

        வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவரது அப்பா சோழயப்ப கவுண்டர் பூலாவரி அக்ரஹாரத்தில் பூர்வீக பூமியில் இருந்து பிரித்து கொடுத்த சொத்தின் மதிப்பு 2 ஏக்கர் 10 சென்ட் நிலமும், சில பொருட்களும்தான். ஆனால் வீரபாண்டியார் அரசியலில் இருந்து சம்பாதித்த சொத்துக்கள் கணக்கில் உள்ளவைகளையும், இல்லாதவைகளையும் சேர்த்தால் வரும் கோடிகள் கண்ணைக் கட்டும் என்கிறார்கள். வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததால் பல மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலம் எவ்வளவு, விவசாயம் நிலம் எவ்வளவு என்பதெல்லாம் வீரபாண்டியாருக்கு அத்துப்படி.

        அதனால், மாவட்டம் கடந்தும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். சொந்த ஊரான பூலாவரியில் மட்டும் 150 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களும், 2 ஏக்கரில் பங்களாவும், சேலம் டூ கோவை மெயின் ரோட்டில் வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வி.எஸ்.ஏ வணிக வளாகம், சென்னை தி.நகரில் பிரபு அப்பார்ட்மென்ட்ஸ், சென்னை வீடு இவை அனைத்தும் வீரபாண்டியாரின் ஒயிட் கணக்கு.



        இதில்லாமல், பினாமி கணக்குகளை தோண்டினால் விழுப்புரம், கடலூரில் முந்திரி தோப்புகள், கேரளாவில் ரப்பர் தோட்டங்களும், ஊட்டி, கொடைக்கானலில் டீ, காஃபி எஸ்டேட்களும், சென்னையில் பெட்ரோல் பங்க் என நீண்டுக் கொண்டே போகும்! தற்போது இந்த சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தான் குடும்ப உறவுகளுக்கிடைய முட்டல் ஏற்பட்டுள்ளது.


        பிருந்தாவனத்தில் இருந்த பிருந்தா

        தற்போது வழக்கு தொடுத்துள்ள பிருந்தா, சீரங்கபாளையத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான வீரப்பத்திரனின் மகள். படிப்பும் உயர்ந்த பண்பும் உடையவர். வீட்டிற்கு மூத்த மருமகள் என்பதால் பிருந்தாவுக்கு வீரபாண்டியார் வீட்டில் ராஜமரியாதை. தன் கணவர் செழியன், திமுகவில் உயர்ந்த நிலையில் இருந்ததால் பிருந்தா அதிகார மையத்தின் உச்சத்தில் இருந்தார். 



        ஆனாலும்,  கட்டபஞ்சாயத்தோ, அடாவடி தனங்களோ செய்யாமல் குடும்ப தலைவியாக தன் கணவனுக்கும், குழந்தைகளுக்கு ஏற்ற சராசரி பெண்ணாகவே திகழ்ந்தார். ஆனால் கணவரின் திடீர் இறப்புக்கு பின்னால் பிருந்தாவின் நிலை தலைகீழாக மாறியது. சொத்துகளுக்கு பங்குபோட வந்து விடுவார் என்று வீரபாண்டியாரின் குடும்பத்தாரால் கணவன் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிருந்தா. அவரது குழந்தைகளைக் கூட தாத்தாவிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் தன் கணவனின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வரும்போது கூட தன் கணவரின் வீட்டுக்கு செல்லாமல், தன் கணவரின் சமாதிக்கு நேராக சென்று சற்று நேரம் மனம் விட்டு அழுதுவிட்டு திரும்பி வந்து விடுவார் பிருந்தா.

        இதுபற்றி ராஜாவிடம் யார் கேட்டாலும் 'எங்க அண்ணன் செழியன். திருமணம் ஆனதும் சேலத்தில் வீடு வாங்கி தனியாக போய்விட்டார். நானும், அப்பாவும்தான் கிராமத்தில் இங்கு இருந்தோம். அண்ணனுக்கு சிட்டி லைஃப் தான் பிடிக்கும். பிருந்தாவும் டவுன்லையே வாழ்ந்த பொண்ணு..அதனால் சேலத்தில் அண்ணன் இருந்த வீட்டிற்கே போய் விட்டார். 'குழந்தைகள் படிப்புக்கு வசதியாக சேலத்தில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பிருந்தாவும் சொல்லிவிட்டது. அதற்காக பிருந்தா மீது எங்களுக்கும், எங்கள் மீது அவருக்கும் உள்ள பாசமும் அன்பும் சற்றும் குறையவில்லை' என்று நா கூசாமல் சொல்வார்


        மறுக்கப்பட்ட சொத்துக்கள்

        ஒரு சராசரி தந்தையை போலவே வீரபாண்டியாரும் தனது மூத்த மகள் மகேஸ்வரி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அதற்கு இன்னும் கூடுதலான காரணம் மகேஸ்வரி பிறந்த பிறகு தான் அரசியலில் அவர் பிரகாசிக்க ஆரம்பித்தார். முக்கிய பதவிகளும் தேடி வந்தது. மகேஸ்வரியும் தன் அப்பாவின் மீது அதிக அன்பு வைத்திருந்ததால் திருமணம் ஆகியும் தன் மாமனார் வீட்டிற்கு போகாமல் அப்பா வீட்டிலேயே இருந்து விட்டார். இவரது பேச்சுக்கு அப்பா, அம்மா, தம்பி, தம்பி மனைவி யாரும் மறுத்துப் பேச மாட்டார்கள். இதனால், வீட்டில் அதிகார மையமாக திகழ்ந்தார் மகேஸ்வரி. ஒரு கட்டத்தில் சேலம் மாவட்ட தி.மு.க. அரசியல் புள்ளிகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்ந்தார். சேலம் திமுக வட்டத்தில் தனக்கான ஒரு ஆதரவு கோஷ்டியையும் உருவாக்கிக் கொண்டார். மகேஸ்வரிக்கு 'அக்கா புகழ்' பாடியே பதவிகளை பிடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

        மகேஸ்வரியும், ராஜாவின் மனைவி சாந்தியும் குடும்ப உறவுமுறைகளை தாண்டி அன்பு தோழிகளாக வலம் வந்தார்கள். வீரபாண்டியார் வீட்டை விட்டு கிளம்பிவிட்டால் இவர்கள் பஞ்சாயத்து பேசி பலர் சொத்து பிரச்னைகளை தீர்த்து வைத்தார்கள். தம்பி மீது இருந்த பாசத்தால் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் ராஜாவின் குடும்பத்திற்கே சேரும்படி பார்த்துக் கொண்டார் மகேஸ்வரி. வீரபாண்டியாரும் மகள் மீதிருந்த பாசத்தால் மகேஸ்வரி சொன்ன மாதிரியே பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் ராஜாவிடமே ஒப்படைத்தார்.



        மூத்த மகன் செழியனின் மனைவி பிருந்தாவுக்கோ, இளைய தாரத்து மகன் பிரபுவுக்கோ சொந்த ஊரில் உள்ள பூர்வீக சொத்துக்கள் எதையும் எழுதி வைக்கவில்லை. அதேநேரம் தனது சுயசம்பாத்தியத்தில் வந்த பெரும்பாலான சொத்துக்களை தன் மனைவி ரங்கநாயகி மீதும் தன்னுடைய மூத்த மருமகள் பிருந்தாவின் மீதும் எழுதி வைத்திருந்த வீரபாண்டியார், அதை மட்டும் அனைவருக்கும் சமமாக எழுதி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.


        பகடைக்காய் பிருந்தா

        ''இந்த பாகப்பிரிவினையில் முதல் மனைவி ரங்கநாயகியின் வாரிசுகளுக்கு மன வருத்தம். தங்களுடைய சொத்துக்களுக்கு வாரிசு தாரராக இன்னொருவர் வந்து விட்டாரே என்று  எண்ணியதால்தான் ராஜா தரப்பால், பிருந்தாவின் மூலமாக இந்த பாகப்பிரிவினை செல்லாதது என்று வழக்கு தொடுக்க வைக்கப்பட்டுள்ளது.


        ஒருவேளை, 'பாகப்பிரிவினை செல்லாது' என்று கோர்ட் சொல்லிவிட்டால், பிரபுவிற்கு தராமலேயே அனைத்து சொத்துக்களையும் நாமே வளைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இதில் பிருந்தா பகடைக்காய் தான்'' என்கிறார்கள் பிரபுவின் ஆதரவாளர்கள்.


        ராஜாவின் முதல் மகள் மலர்விழியின் திருமணம் நிகழ்வுகள் தடபுடலாக நடைப்பெற்று வருவதால், இப்போது வீரபாண்டியார் குடிம்பத்தினர் அனைவரது கவனமும் அதில்தான் இருக்கிறது. இந்த திருமணத்தின் மூலம் மீண்டும் வீரபாண்டியார் குடும்பத்தை திமுக தலைமை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று சேலமே வியக்கும் வண்ணம் வீரபாண்டியாரின் கல்லூரியான வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி படு ஜோராக இருக்க வேண்டும் என்பதற்காக தடபுடலான வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
        குடும்பத்திற்குள் நடக்கும் குஸ்திகள் போதாதென்று வீரபாண்டியாரின் எதிர்க் கோஷ்டியும் இப்போது குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.''2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவின் சகோதரர் கங்காராமிடம் இருந்து 50.5 சென்ட் நிலத்தை திமுக கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கிய வீரபாண்டியார், அந்த நிலத்தை தன் குடும்பத்தாரின் பெயரில் எழுதி, தங்கள் குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார்கள். இதுப்பற்றி தலைமைக்கு தெரியப்படுத்துவோம்" என்று அபாயச் சங்கு ஊதுகிறது அந்தக் கோஷ்டி.



        அப்படியானால் வீரபாண்டியர் குடும்பத்திற்கு இனி அரசியல் எதிர்காலம்?  - நாளை பார்க்கலாம்....

        நன்றி - விகடன்

        Saturday, November 24, 2012

        வலுவிழக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் - உள்ளடி வேலைகள் - குற்றம் நடந்தது என்ன?

        டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.


        இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


        2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,407 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.


        இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.


        2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.


        ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.


        முரளி மனோகர் ஜோஷி...:


        2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.



        அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.


        இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


        சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது

        .
        முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:



        மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.



        கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,


        கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.



        ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.



        நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன். இதைக் கூட நஷ்டமாகக் கூற முடியாது. காரணத்தைச் சொல்லி, அதை நிச்சயம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியும்.


        இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.



        2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.


        மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.


        அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.



        ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.


        முன்னதாக ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று எழுதி அவர்கள் அனுப்பிய ரிப்போர்ட்டில் நஷ்டக் கணக்கை நீக்கினேன். ஆனால், மீண்டும் அதையே சேர்த்து எழுதி திருப்பி அனுப்பி வைத்து கையெழுத்து போட வைத்தனர். எதை வைத்து இந்தத் தொகையை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு யூகம் தான் என்று பதில் தந்தனர். ஆடிட்டிங்கில் யூகங்களுக்கு எப்படி இடம் தர முடியும் என்று கேட்டதற்கு பதிலே வரவில்லை.


        மேலும் 2ஜி விவகாரத்தில் சிஏஜி அலுவலகத்தில் இருந்து பல தகவல்கள் வெளியே கசிந்தபடியே இருந்தன. அதை யார் லீக் செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.


        2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கூட சிஏஜி அலுவலக அதிகாரிகளுடன் முரளி மனோகர் ஜோஷி தொலைபேசியில் விவாதித்தார்.


        சி.பி - ஆனால் துக்ளக் கில் ; இதெல்லாம் நாடகம், கேசை திசை திருப்ப , ஒன்று மில்லாமல் ஆக்க அனைவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் என கட்டுரை வந்துள்ளது 


        இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.


        நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.


        இப்போது சொல்லுங்கள் ராசா குற்றவாளியா?: கருணாநிதி


        சென்னை: 2ஜி ஏலம் விடப்பட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததில் இருந்தே, இது தொடர்பாக சிஏஜி கூறிய கணக்குத் தவறு என்பது உறுதியாவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


        மேலும் இந்த விவகாரத்தில் ஆ.ராசா குற்றவாளியா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


        ''வீரமணி முழக்கியுள்ள விவேக மணி!'' என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:


        வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!:


        கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான பகுதியை நீக்க வேண்டுமென்று நீங்கள் கடிதம் எழுதிய பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?



        கருணாநிதி: கடந்த மாதம் 27-10-2012 அன்றே இந்தப் பிரச்சனை பற்றி நான் முரசொலி கேள்வி-பதில் பகுதியிலே விரிவாக நாடார் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் இதிலே தக்க கவனம் செலுத்தி, பிழையினை நீக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினேன். 


         தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளின் சார்பிலும், இதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தார்கள். உரியவர்களிடமிருந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியாததால், 15-11-2012 அன்று பிரதமருக்கும், மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியதும்; அது பல ஏடுகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.



        மேலும் 16-11-2012 அன்று டெல்லியில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவர் தம்பி டி.ஆர். பாலு, அந்தக் கூட்டத்தில் நாடார்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிட, அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

        மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு அவர்களை நேரில் சந்தித்து, நாடார்கள் பிரச்சனை பற்றி கூறியவுடன், மத்திய மனிதவளத் துறை அமைச்சரும், நாடார்கள் பற்றிய அவதூறு வரிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். 


        இந்த நிலையில்தான் நம்முடைய தமிழக அரசு திடீரென்று விழித்துக் கொண்டு, 16-11-2012 அன்று அவசர அவசரமாக பிரதமருக்கு இந்தப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி, 17ம் தேதி பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பல்லாயிரம், பல லட்சம் ரூபாய்ச் செலவில், முதல் பக்க விளம்பரச் செய்தியாக அது இடம் பெற்றுள்ளது. நல்ல சுறுசுறுப்பு?.


        ஆனால் இதற்கே மிகப்பெரிய விளம்பரங்கள்! நாடார்களுக்கு வந்த ஆபத்து ஏதோ முதல்வர் கடிதத்தால் தான் விலகியது என்பதைப்போல நன்றி தெரிவித்து- பெரிய விளம்பரங்களைக் கொடுத்திருப்பதுதான் வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!.


        அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள்.. என்ன சொல்லப் போகிறார்கள்?:


        கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத்திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?



        கருணாநிதி: இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு தணிக்கைக் குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் 9,000 கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.



        இதை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜ.கவும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கனவே கூறி வந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



        தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.


        எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கையில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகையையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?.


        தமிழர் தலைவர், இளவல் வீரமணி:


        தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் "விடுதலை"யில் "1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. ராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்" என்று அருமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?



        அதிமுகவினரை போலீசில் நுழைக்க ஜெ. முயற்சி:


        கேள்வி: தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50,000 பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதைபற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?


        கருணாநிதி: அதைத்தான் நான் முன்பே எழுதியிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துணவுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பரிந்துரைகளைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கனவே விரிவாக வந்தன.



        அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக்காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



        முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல்துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல்துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வரவேண்டும்.
        இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



        நன்றி - தட்ஸ் தமிழ்

        கலைஞர் உருக்கம் ,வீரபாண்டி ஆறுமுகம் மறைவு

        'வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம்'': கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி



        சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.


         former minister veerapandi arumugam dead
        வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


        பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.


        3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:


        அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


        இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.


        அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


        ராமதாஸ் இரங்கல்:


        வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
        வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


        தா.பாண்டியன் இரங்கல்:


        இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
        திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



        திருமாவளவன்...


        விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
        வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

         
         

        வீரபாண்டியார் மரணம்: சேலத்தில் அறிவிக்கப்படாத 'பந்த்'; வன்முறை-3 பஸ்கள் உடைப்பு: திமுக தொண்டர் சாவு

         
         
         
        சேலம்: மூத்த திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவையடுத்து சேலத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும்ம் விடுமுறை விடப்பட்டது.




        சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். 3 அரசுப் பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்தன. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.




        சேலம் மாநகரத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டுவிட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் சேலம் நகரமே வெறிச்சோடிப் போனது.




        இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக திருப்பூர் எஸ்.பி, நாமக்கல் எஸ்.பி ஆகியோரும் சேலம் வந்துள்ளனர். இவர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


        இன்று மாலை 6 மணி முதல் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் நாலைந்து பேருந்துகளாக சேர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படவுள்ளன.




        வீரபாண்டியார் மறைவை கேள்விப்பட்ட திமுக தொண்டர் மரணம்:




        இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்ட சேலத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.




        எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (45) டீக்கடை வைத்து நடத்தி வந்தார். தீவிர திமுககாரரான இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர்.


        வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்டதும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.


          நன்றி - தட்ஸ் தமிழ்