Showing posts with label ஆர்யா. Show all posts
Showing posts with label ஆர்யா. Show all posts

Thursday, October 31, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

அஜித் ஒரு போலீஸ் ஆஃபீசர் கம் பாம் ஸ்க்வாடு ஆஃபீசர். அவரோட நண்பர் ராணாவும் . அவரும்  தீவிரவாதிகளைத்தாக்கும்  ஒரு ஆபரேஷன்ல துப்பாக்கிக்குண்டு பட்டு ராணா செத்துடறாரு . புல்லட் ப்ரூஃப்  ஜாக்கெட் போட்டும் எப்படி குண்டு பாய்ஞ்சுது ?அப்டினு அஜித் மேலிடத்துல கேள்வி கேட்கறாரு .

 பொதுவா மேலிடம் , மேடம் இவங்களுக்கெல்லாம் கேள்வி மேல  கேள்வி கேட்டாலே பிடிக்காதே .அதனால அஜித் ஃபேமிலியை கார்னர் பண்றாங்க . புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தயாரிப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கு . அதில் கமிஷனர் , மினிஸ்டர் எல்லாருக்கும் தொடர்பு இருக்கு . 

தன் நண்பனின் சாவுக்குக்காரணமானவங்களை அஜித் எப்படி பழி வாங்கறார்? அந்த  ஊழல் பணத்தை எல்லாம் இந்தியன் தாத்தா , சிவாஜி மாதிரி எப்படி ரிட்டர்ன் எடுக்கறார் என்பதே திரைக்கதை . 


ஸ்வார்டு ஃபிஷ் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கம் ஆங்காங்கே  தெரியுது . அது சாதா ரசிகனுக்குத்தெரியாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு சுத்தி வளைச்சு கதை சொல்லி இருக்காங்க . 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் கலக்கல் . அவர் படத்தில் பேசும் காட்சிகள் குறைவு , ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல் . மேக் இட் சிம்ப்பிள் என்பது இந்தப்படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனம் . கோட் சூட் கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான் படம் முழுக்க வர்றார் . ஃபைட்  சீனில் ஒரு ரிஸ்க் ஜம்ப் , காரில் தொங்கி சண்டை இடும் காட்சி என 2 இடங்களில்  ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சக நடிகர்களுக்கு சமமாக சான்ஸ் கொடுக்கும் பண்பு அஜித்திடம் இய்லபாகவே உண்டு.


ஆர்யா , படத்தின் முன் பாதிக்கு இவர் தான் ஹீரோவா என கேட்கும் அள்வு  படம் முழுக்க வியாபிக்கிறார். டாப்ஸியிடம் லவ்வுவது , லவ் பிரபோசிங்க்  சீன் எல்லாம் இளமை ஏரியா . அவர் பாய்ஸ்  குண்டுப்பையன் மாதிரி கெட்டப் சேஞ்ச் செய்தது எல்லாம்  பெரிதாக எடுபடவில்லை .முன் பாதியில் அவர் அஜித்தை வில்லன் ஆக நினைத்து நீ வா போ என ஒருமையில் பேசியவர்  பின் பாதியில்  ஜீ  என அழைப்பது அக்மார்க் ரஜினி ஃபார்முலா .


நயன் தாரா அஜித்துக்கு ஜோடி இல்லை , ஆனால் தோழி மாதிரி . டூயட் வாய்ப்பு இல்லை . நயன் தாரா ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக வலியனா திணிக்கப்பட்ட  ஒரு கவர்ச்சிக்காட்சி உண்டு . அது இல்லாமலேயே நயன் கிக்காகத்தான் இருக்கிறார் .


டாப்சி  இளமைத்துள்ளல் . ஆர்யா காதலை வெளிப்படுத்தும்போது யோசிப்பவர்  பின் இயல்பாய் மனதில் காதல் மலரும்போது ஆஹா போட வைக்கிறார் .


போலீஸ் ஆஃபீசர்களாக  கிஷோர் , அதுல் குல்கர்னி  என திறமைசாலிகள் ஆங்காங்கே அட்டெண்டென்ஸ் போடுகிறார்கள்



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் ஜீவநாடிக்காட்சியே அந்த  ஊழல் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் பேங்க் சீன் தான் கலக்கலான ஐடியா . படமாக்கம் , எடிட்டிங்க் , நடிப்பு , இயக்கம் , பி ஜி எம் எல்லாம் கன கச்சிதம் ,. நீண்ட நாட்களுக்கு டாப் சீன்களில் இடம் பிடிக்கும்



2. அஜித்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஆரம்பத்தில் அதாவது படத்தின் ஆரம்பத்தில் ஆர்யாவை முன்னிறுத்தி காட்சிகளை அமைத்தது 


3. படம்  முழுக்கவே ஸ்டைலிஷான அஜித் , மேக்கிங்க் எல்லாம் பக்கா . ஒளிப்பதிவு , லொக்கேஷன்  செலக்சன் எல்லாம் பக்கா 

4 ஃபோனில் டாப்சி ஐ லவ் யூ என வெவேறு மாடுலேஷனில் சொலவ்து அபாரம் 






இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  இந்த மாதிரி ஆக்சன் படத்துக்கு ஹீரோ அறிமுகக்காட்சி ஹீரோ ஓடி வருவது மாதிரி இருக்கனும் , பாட்டு சீனாக இருக்கக்கூடாது . வெற்றி விழா கமல் ஓப்பனிங்க் சீன் நல்ல உதாரணம் அதே போல் ஓப்பனிங்க் சாங்க்  பெரிதாக எடுபடவில்லை .


2. ஹீரோ அஜித் ஒரு பேரத்துக்காக ஆள் மாறாட்டம் செய்கிறார். அந்த ஆளை வில்லன் ஆள்  ஃபோட்டோவில் கூட பார்த்திருக்க மாட்டாரா? இப்பவெல்லாம் நவீன யுகம் , எம் எம் எஸ் ஸில் செல் மூலம் ஃபோட்டோவை அனுப்பிக்கலாமே? 


3. நயன் தாரா  ஒருவனை துப்பாக்கி முனையில் மிரட்டி படுக்கையில் அவன் மீது உட்கார்ந்து இருக்கும்போது அஜித் அவன் ரூமில் ஆள் மாறாட்டம் செய்யும் காட்சியில் எதுக்கு அவ்வளவு ரிஸ்க்? அவன் தலையில் ஒண்ணு போட்டு மயக்கம் அடையச்செய்து இருக்கலாமே? ஒரு ஆக்சன் ஹீரோ இருக்கும்போது நாயகியின் கிளாமரைகாட்டித்தான் ஆளை மயக்கி ஏமாற்றனும் என்பது ஹீரோவுக்கும் பங்கம் தானே? 


4. டி வி  ரிமோட் எல்லாரும்  யூஸ் பண்ணுவொம் . ஒரு மினிஸ்டருக்கு ரிமோட்டை எப்படிப் பிடிப்பது என்று கூடவா  தெரியாது ? சிவப்பு பட்டன் இருப்பது  டி வி திரையை நோக்கி இருக்கனும் என்பது சின்னக்குழந்தைக்குக்கூடத்தெரியுமே?  


5 அஜித்தின் ஃபிளாஸ்பேக் காட்சியில் ஆல்ரெடி பார்த்துப்பழ்கிப்போன கேப்டன் , சர்த்குமார் படங்களின் வாசனை .அதையும் , ஆர்யா டாப்ஸி  காட்சிகளையும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருக்கலாம் 




மனம் கவர்ந்த வசனங்கள்


1. இடைவேளை பஞ்ச் = ஆர்யா - உன்னை மாதிரி ஆளுங்களுக்கு இது தான் முடிவு. 


அஜித் - ஹா ஹா .இனி தான் ஆட்டம் ஆரம்பம்


2 இது யாரு ? இன்னொரு ஹேக்கரா?


உனக்கு போர் அடிக்குமேன்னு துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வந்திருக்கேன்



3 மேலே இடித்த நயன் - ஸாரி


இடி பட்ட ஆள் - ப்ளஷர் ஈஸ் மைன்


4 ஆ-ன்னா ஊ-ன்னா கன்னைத்தூக்கிடற்யே

இது மூளை சம்பந்தப்பட்ட விஷயம்


5 உனக்கும் அந்த தீவிரவாதிக்கும் என்ன வித்தியாசம் ?

அப்போ ப்ளூ சர்ட் , இப்போ பிரவுன்


6 நான் எதுக்கு பயப்படனும் ? என்னை விட என் உயிரைப்பத்தி கவலைப்பட நீ இருக்கும்போது

7 டைவர்ஸ் கேட்குறாடா


சூப்பர் ஆஃபர் , மிஸ் பண்ணிடாதே


8 நம்ம கல்யாண நாள் எப்போ? என் மேல அன்பு இருந்தா நினைவு இருக்கும்


இப்போதானே முடிஞ்சது ?

அதான் எப்போ? டேட் ?


9 சாவைப்பார்த்து நான் என்னைக்குமே பயந்ததில்லை , ஆனா அது எப்போ எப்படி வருதுங்கறதுதான் முக்கியம்


10 எதிரிங்க எத்தனை பேர் இருந்தாலும் சமாளிச்சடலாம், ஆனா துரோகி ஒருத்தன் இருந்தாலும் என்னால சகிச்சுக்க முடியாது


11 ஃபிங்கர் பிரிண்ட் ரொம்ப முக்கியம்


என்ன தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் கடைசில நாம கைநாட்டு தான்


12 நீ இங்கே என்ன பண்றே?

நிச்சயம் உனக்கு நல்லது பண்ண வர்லை





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1.டாப்சிக்கு ஆர்யா மேல் காதல் வந்ததும் முதுகில் தேவதைக்கான சிறகு முளைக்கும் காட்சி கவிதை


2. அஜித் ன் பாடிலேங்குவேஜில் தேர்ந்த வில்லனுக்கான எகத்தாளம்


3 SWORD FISH ன் உல்டா சீன் என சொல்லப்படும் டிக் டாக் டிக் டாக் மேனரிசம் ஆல்ரெடி வாலி யில் அஜித்தே செய்ததே


4 ஆர்யா டூ நயன் - இப்டி நம்ப வெச்சு ஏமாத்திட்டியே # சிம்பு இதைப்பாத்தா ;-))


5 வசனமே பேசாமல் ஒரு ஹீரோவை அப்ளாஷ் வாங்க வைப்பது எப்படி என்ற கலையில் விஷ்ணுவர்தன் பிஹெச்டி


6 ஆரம்பம் @ இடைவேளை. பார்த்த வரை படம் ok அஜித் ன் பஞ்ச் மேக் இட் சிம்ப்பிள் குட் டயலாக் டெலிவரி.ஆர்யாவுக்கு அஜித்தை விட காட்சிகள் அதிகம்




7 அஜித் க்கு காட்சிகள் கம்மி என்றாலும் வரும் காட்சிகள் எல்லாம் ஸ்டைலிஷ் தான்.


8 பில்லா ,மங்காத்தா வை விட BGM கலக்கல் இதில் குறைவு என்றாலும் குறை சொல்லும்படி மோசம் இல்லை


9 ஹீரோவை விட உயரமான ஆட்கள் காட்சியில் வரும்போது கேமரா கோணம் எப்படி வைக்கவேண்டும் என்பதை ஒளிப்பதிவாளர் கற்க வேண்டும்


10 நாயகன் கமல் கெட்டப்பில் அஜித் ஆடும் பாட்டுக்கு அப்ளாஸ் அள்ளுது.கலர்புல் கலக்கல்


11 த்ரிஷா ராணா விடம் மயங்கியதில் ஆச்சரியமே இல்லை. ஆகிருதியான ஆள்


12 விஷ்னுவர்தன் நம்ம கேப்டன் ரசிகர் போல.அஜித் ன் பிளாஸ்பேக்கில் பல கேப்டன் பட வாசனை


13 ரைட்டர் சுபா சார்.ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத் நடிச்ச ஏய் பட கதையை அப்டியே பட்டி டிங்கரிங் பண்ணிட்டீங்க போல :-(((




சி பி கமெண்ட் - ஆரம்பம் - முன் பாதி வேகம், பின்பாதி ஸ்லோ- பில்லா,மங்காத்தாவுக்கு ஒரு மாற்று கம்மி - விகடன் மார்க் - 42 , ரேட்டிங்க் -3 / 5 பெரம்பலூர் ராம் ல் படம் பார்த்தேன்



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3  / 5



Monday, October 07, 2013

ஆரம்பம் , வேகம் , அதகளம் - அல்டிமேட் ஸ்டார் அஜித் பேட்டி @ த தமிழ் ஹிந்து

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். | 


அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்' ஷூட்டிங்கில் அஜித் பிஸி. படங்கள், உடல்நிலை, போட்டோகிராபி, பைக் ரேஸ் என அஜித்துடன் The Hindu நாளிதழுக்காக நிகில் ராகவன் பேசியதிலிருந்து... 


" 'ஆரம்பம்', 'வீரம்' படத்துல என்ன ரோல்ல நடிக்கிறீங்க?" 



"இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது. 'பில்லா', 'மங்காத்தா' படம் மாதிரி 'ஆரம்பம்' படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.
'வீரம்' படத்துல அப்படியே 'ஆரம்பம்' படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான். 'அட்டகாசம்' படத்துலதான் கடைசியா இந்த மாதிரி ரோல் பண்ணேன். 'ஆரம்பம்', 'வீரம்' இரண்டு படங்கள்லயுமே ஆக்‌ஷன் ரோல்தான்." 



"ஒரு கதாபாத்திரத்துல நடிக்க ஒப்புக்க, என்னென்ன இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க?" 



"நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது. ரொமான்டிக் ஹீரோவா ஆரம்பிச்சு, அப்பறம் ஆக்‌ஷன் ரோல்ல நடிச்சு, இப்ப கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதைக்கான ஸ்கிரிப்ட்ட நான் நம்பறேன். ஆனா, பல நேரத்துல நாம நினைக்கறது நடக்கறதில்லை. சில நேரம் இயக்குநரோட திறமைய நம்பிதான் இறங்கணும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை." 


 
"நீங்க இயக்குநரின் நடிகரா? படத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?" 


"படத்துல இயக்குநர்களோட நோக்கத்தைதான் நான் நிறைவேத்தறேன். ஒரு நடிகனா, நான் என் ஆலோசனைகளை சொல்லுவேன். இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!" 


"ரொமான்டிக் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம்... எந்த ரோல் உங்களுக்கு மன திருப்தி தந்திருக்கு?" 



"என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்... நரைத்த முடி உள்பட. அதிர்ஷ்டவசமா, மங்காத்தா, பில்லா-2 ரெண்டும் அமைஞ்சது. இப்ப 'ஆரம்பம்', 'வீரம்' படங்கள்லயும் இது தொடருது. வில்லத்தனம் கொண்ட ரோல்ல நடிக்கறதால ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லாம போகாது. எனக்கு சௌகர்யமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். வேலை செய்யறேங்கறது தான் எனக்கு உற்சாகத்தை குடுக்குது, அது எந்த கதாபாத்திரமா இருந்தாலும் சரி." 



"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. 


 அவங்களை நாங்க மதிக்கறோம். ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது." 
 

"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன். சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை... ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க?" 



"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை." 


"நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்..." 


"ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். 'ஆரம்பம்', 'வீரம்' ரெண்டு படமும் முடிஞ்ச பிறகு, கால்ல ஒரு சின்ன ஆபரேஷன் பாக்கி இருக்கு, அதை பண்ணிக்கப் போறேன். அதுக்கப்பறம் ஆறு மாசத்துக்கு புது படம் ஒத்துக்கப் போறதில்லை. கால் சரியா குணமாகறதுக்காக மட்டும் இல்லை, அந்த ஆறு மாசத்துல ஏரோ மாடலிங்ல ஈடுபடப்போறேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!" 

 

"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது.. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க.. அவங்களை நாங்க மதிக்கறோம்.. ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க.. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க.. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது." 



"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க.. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன்.. சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை.. ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க..?" 


"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை.என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை."


thanx - tamil the hindu


Sunday, September 29, 2013

இரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட்டி

வழக்கமான காதல், மோதல், காமெடி என்னும் வட்டத்தைத் தாண்டி, ‘நான் கடவுள்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் ஆர்யா. கதாபாத்திரத்துக்காக எத்தகைய சவால்களையும் எப்போதும் ஏற்க விரும்புவதாகச் சொல்லும் ஆர்யா, கோடம்பாக்கத்தின் தற்போதைய காதல் இளவரசனாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியிலிருந்து... 



ஆர்யா என்றால் ‘தமிழ் சினிமாவின் பிளேபாய்’ என்ற பிம்பம் முன்னால் வந்து நிற்கிறது. ஊடகங்கள் மீது உங்களுக்குக் கோபமே வராதா?


 
இது மீடியாவுக்கும் எனக்குமான கொடுக்கல் வாங்கல். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர்கள் எழுதுவதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தானே செய்கிறது. அந்தக் கொஞ்ச உண்மையை, சமயங்களில் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி எழுதும்போது ஷாக்காக இருக்கும். அதெல்லாம் செய்தியைப் படிக்கும் அந்த நிமிடத்தில்தான். அதன் பிறகு கூல் ஆகிவிடுவேன். அவர்கள் என்னைப் பற்றி நன்றாக எழுதும்போது, நான் என்ன பொக்கேவா அனுப்புகிறேன்? என்னதான் பிளேபாயாக என்னைக் காட்டினாலும், நான் நடிக்கும் படங்கள் நன்றாக இல்லையென்றால் மக்கள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள். 



நயன்தாரா விஷயம்...

 
நயனுக்கும் எனக்கும் நடுவுல நட்பைத் தவிர எதுவுமில்லே. இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லணும்னா, விஷால் எப்படி எனக்கு க்ளோஸ் ஃபிரெண்டோ அப்படித்தான் நயன்தாராவும். நீங்களாவது கொஞ்சம் தெளிவா போடுங்க. ஏன்னா நயன்தாரா அவ்வளவு நல்ல பொண்ணு. ராஜா ராணிக்கு படத்துக்கு லீட் ஹீரோயின் யார்னு முதல்ல எனக்கு சொல்லவே இல்ல. நான் நஸ்ரியாதான் லீட் ஹீரோயின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒருநாள் திடீர்ன்னு நயன்கிட்ட இருந்து போன்.. “ ஆர்யா.. நீதான் ஹீரோவா பண்றியா.. சொல்லவே இல்ல!? ரொம்ப கம்ஃபர்ட்டா ஃபீல் பன்றேண்டா”ன்னு சொன்னாங்க. பாஸ்கரன் படத்துல கிடைச்ச ‘நண்பேண்டா!’ நட்பு இது. அப்புறம் ராஜா - ராணி படத்துல எங்க ஜோடி நடிப்பு, ரொம்ப டாமினேட்டிங்க இருக்கும். அது கதைக்காக நாங்க காட்டின இன்வால்வ்மெண்ட். 

 

நயன்தாரா உங்களைத் தேடி உங்க வீட்டுக்கே வந்தாங்களாமே?

 
அதுல என்ன தப்புன்றீங்க? என்னோட வீட்டுக்கு பூஜா வந்திருக்காங்க, த்ரிஷா வந்திருக்காங்க. இந்த வரிசையிலத்தான் ஒரு தோழியா, என்னோட அப்பா அம்மாவைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவ்வளவுதான். 



ஆக, ஆர்யாவுக்கு அப்பா அம்மா பார்க்கிற பெண்தான்னு முடிவாகிடுச்சா?


 
அதை உறுதியா என்னால சொல்ல முடியல. ஆனால் நாம கல்யாணம் செஞ்சுக்கப் போற பெண்ணையாவது அப்பா - அம்மா சூஸ் பண்ணட்டும்னு விட்டா, அதுல தப்பில்ல. ஏன்னா நமக்கு எது நல்லதுன்னு அவங்களுக்கு தெரியும். அவங்க பார்க்குறது மொக்க ஃபிகரா இருந்தாலும் ஓகேதான். அப்புறம் கல்யாணத்துக்கு டைம் லைன் பிக்ஸ் பண்ண முடியாது. எப்போ பொண்ணு கிடைக்குதோ, அப்பதான் கல்யாணம். இப்போ என்னோட கவலையெல்லாம்... நான் சிக்குறதுக்கு முன்னாடி என் நண்பன் விஷாலுக்கு ஒரு நல்ல பெண் கிடைச்சு அவன் சிக்குணும்கிறதுதான்! 

 

நான் கடவுள் மாதிரி ஒரு படத்துல நடிச்சீங்க. அதுக்குப் பிறகு அந்த மாதிரி ஆர்யாவைப் பார்க்க முடியலையே!


 
அவன் இவன்ல ‘கும்பிடுறேன் சாமி’ உங்க கண்ணுல படலையா? அப்புறம் சந்தோஷ் சிவனோட உருமியில ஒரு காட்சின்னாலும் நறுக்குனு தைக்கிற மாதிரி நடிச்சிருக்கேன்னு கேரளால ரிவ்யூ கொடுத்தாங்க. ஆனா லவ் , ஆக்‌ஷன் களத்துல டிராவல் பண்ணினாதான் ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் நம்மள மறக்காம இருப்பாங்க. அதே மாதிரி நான் லவ் பண்ணி , பைட் பண்ணினாத்தான் படம் பார்ப்பேன்னும் ஆடியன்ஸ் அடம்பிடிக்கவும் மாட்டாங்க. ஒரே மாதிரி நடிச்சும் அவங்கள போரடிக்கக் கூடாது! அப்புறம் நிறைய மல்டி ஸ்டாரர் படங்கள்ல நடிக்க விருப்பமா இருக்கேன். இதுமாதிரிப் படங்கள்ல நடிக்கும்போது, அது பெரிய பட்ஜெட் படமா இருக்கு! ஒவ்வொரு ஸ்டாருக்கும் தனித்தனியா இருக்க ரசிகர்கள், எல்லாம் திருவிழா மாதிரி தியேட்டர் கூடிருவாங்க. 


ஆரம்பம் படத்துல ஒரு வித்தியாசமான ஆர்யாவைப் பார்க்கலாமா?


 
கண்டிப்பா! விஷ்ணுவர்த்தனோட நான் பண்ற நாலாவது படம் இது. அவரை மச்சான்னுதான் கூப்பிடுவேன். அவர் என்னை வில்லனா நடின்னு சொன்னாலும் நடிப்பேன். வேற எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். ஆனா, ஆரம்பம் படத்துல என்ன கேரக்டர்னு மட்டும் கேட்காதீங்க. இந்தப் படத்துல தல அஜித்கூட நடிச்சதுனால, இது எனக்கு ஸ்பெஷல் படம். இந்தப் படத்துல என் கேரக்டர் கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும். அதேமாதிரி ஒரு காட்சியில் 110 கிலோ வெயிட்டோட வர்ற மாதிரி, ஒரு கெட்அப்ல நடிச்சுருக்கேன். அதுவும் புதுசா இருக்கும். 

 

இரண்டாம் உலகம் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கே? அதுவும் 50 கோடி பட்ஜெட்டுன்னு சொல்றாங்களே?


 
இதுல கவனிக்க வேண்டிய விஷயம், இந்த 50 கோடி ஆர்யாவுக்காக இல்ல. கதைக்காக. கதைக் களத்துக்காக. இதுதான் ஹெல்தியான பட்ஜெட். மார்க்கெட் வேல்யூ ஒரு ஹீரோவுக்கு இருக்குன்றதுக்காக கன்னாபின்னான்னு செலவு செஞ்சு படம் எடுத்தா, அது ஆடியன்ஸுக்கு பிடிக்காம போயிடலாம். ஆனா கதை கேட்டுதுன்னா, நம்ம காட்டுற உலகத்தை ஆடியன்ஸ் நம்பனும்னா அதுக்காக எவ்வளவு வேணா செலவு செய்யலாம். செல்வா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்துட்டு ஆர்டினரி டைரக்டர் இல்ல, கண்டிப்பா, அவர் இயக்கத்துல நடிச்சா எனக்கு நல்லது நினைச்சேன். மனுஷன் சொல்லி வெச்ச மாதிரி “ஆர்யா ஒரு கதை இருக்கு கேக்குறியா?” கூப்பிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துல அவர் முன்னாடி இருந்தேன். கதை கேட்டு முடிச்சதும் , வேற ஒரு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீல். என்கிட்ட கதையா சொன்னதை விட 50% கூடுதலா விஷுவலைஸ் பண்ணியிருக்கார். 



செல்வராகவன் நட்சத்திரங்கள்கிட்ட ரொம்ப டெரர் காட்டுற மனிதர்னு சொல்றாங்களே?


 
இந்த மாதிரி கதையக் கையாளும்போது டெரராத்தான் இருக்கணும். செல்வா ரொம்ப கூலான ஆள்! ஆனா படத்துல நடிச்ச அனுபவம், ரொம்ப டெரிபிக்கா இருந்தது. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போற, படம்னு சில பேர் அளந்து விடுவாங்க. ஆனா நிஜமாவே நம்ம சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போற படம். தமிழ் சினிமா, கோடாம்பாக்கத்து செட்டை விட்டு, கோபிச்செட்டி பாளையத்தை விட்டு, சுவிஸ் பனிமலைகளை விட்டு வேற ஒரு உலகத்துக்கு அழைச்சிட்டு போற படம். எனக்கு பிஸிகல் ஸ்டிரைன் அதிகமா கொடுத்த படம். 



கதையப் பத்தி யாரும் வாயே திறக்க மாட்டேன்றீன்களே?

 
கதைய சொல்லிட்டா இந்தப் படத்தை பார்க்குற ஆர்வமே போயிடும். இந்த மாதிரி ஃபேண்டஸி படங்களுக்கு இருக்குற ஆபத்து அதுதான். இருந்தாலும் உங்களுக்காக முதன்முதலா வாய திறக்குறேன். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில ரொம்ப அழகான காதலர்கள். அவங்க ரெண்டு பேரும் இன்னொரு உலகத்துல மருவன் - வர்ணாங்கிற வேற ரெண்டு கேரக்டர்ஸா மீட் பண்றாங்க. எதுனால இப்படி நடந்தது? அந்த இன்னொரு உலகத்துல அவங்க அனுபவம் எப்படி இருந்துச்சுங்கிறதுக்காக, அந்த கேரக்டர்ஸுக்கும் ஆடியன்ஸுக்கும் த்ரில்லான அனுபவமா அமையப் போகுது. என்ன பாஸ், பதில் சொல்றதுல ஒரு டைரக்டர் ரேஞ்சுக்கு தேறிட்டனா? 



அடுத்து நீங்க நடிக்கிற படம் தலைப்பு பிரச்சினையில சிக்கியிருக்கே?


 
அதை எஸ்.பி.ஜனநாதன் சார் பார்த்துக்குவார். ஆனா ஒரு விஷயம். படத்தோட தலைப்பு ‘புறம்போக்கு’ன்னு இருக்குறதால என்னோட கேரக்டரை அதோட ரிலேட் பண்ணிக்காதீங்க. இது கதையோட சம்பந்தப் பட்டது. இந்தப் படம் தவிர மகிழ்திருமேனி இயக்கத்துலயும் நடிக்கிறேன். அதுக்கு இன்னும் தலைப்பு ரெடியாகல. இந்த ரெண்டு படத்துக்கு அப்புறம், ஆர்யா படம் 100 கோடி வசூலுக்கு மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! 


thanx - the hindu 


a



டிஸ்கி - நான் ஒரு ஆணாதிக்கவாதின்னு ஒரு தப்பான அபிப்ராயம் ஆங்காங்கே பரவிக்கிடக்கு. ஆனா பாருங்க ஆர்யா பேட்டில கூட அனுஷ்கா ஸ்டில்லுக்குத்தான்  முன்னுரிமை , பின்னுரிமை , சைடு உரிமை எல்லாம் கொடுத்திருக்கேன் , இதில் இருந்து தெரிய வரும் நீதி - சி பி பெண்மையை போற்றுபவர் , பெண்களை மதிப்பவர் . இதை எல்லாம் நீங்க ஊர்ல போய் சொல்லனும் ;-))

Thursday, September 26, 2013

ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ

ஆர்யா-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமா கிறார் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர். ஒரு படத்தை மக்கள் மத்தியில் எப்படிப் பிரபலப்படுத்தலாம் என்பதில் ‘நிபுணர்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இவரைச் சந்தித் தோம்.


இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எப்படி அமைந்தது?


"மதுரையில் பிறந்து சென்னையில் படித்து வளர்ந்தவன் நான். பள்ளியில் படிக்கும்போதே டான்ஸ், ஸ்கிட் என கல்சுரல்ஸ் ஆர்வம் அதிகம். சினிமா என்று பள்ளிப்பருவத்திலேயே முடிவு செய்துவிட்டதால் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அப்போது ‘தனிமரம்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ ஆகிய இரண்டு குறும்படங்களை தயாரித்து, இயக்கினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே உதவி இயக்குனராக சேர வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இதற்காக ஷங்கர் சாரை சந்தித்து என் குறும் படங்களைக் கொடுத்தேன். அந்தக் குறும்படங்களைப் பார்த்த அவர் உடனடியாக என்னை உதவி யாளனாகச் சேர்த்துக் கொண்டார். அவரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் வேலை செய்தேன்."


ராஜா ராணி உங்கள் வாழ்க்கையில் நடந்த கதையா?


"என் வாழ்க்கையில் கொஞ்சம். எனது நண்பர்கள் வாழ்க்கையில் கொஞ்சம், என்னைச் சுற்றி இருப்ப வர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் என்று என் கண் முன்னால் நடந்த விஷயங்களைத்தான் கதையாக்கி னேன். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மா எந்த கல்யாணத்துக்குப் போனாலும் நானும் தொற்றிக் கொள்வேன். அப்படி ஒரு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. இது நடந்த சில மாதங்கள் கழித்து "டேய் அட்லீ… அந்தப் பொண்ணு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டாளம்ப்பா!" என்று ஒருவர் வேதனையோடு சொன்னது என்னை ரொம்பவும் பாதித்தது. நம்மைச் சுத்தி பெரிய பிரச்சனையா ‘காதலும், மணவிலக்கும்’ இருக்கு! அப்படி இருக்கும்போது கதைய எதுக்கு வெளியே தேடணும்னு இதையே எடுத்துகிட்டேன். இதை பிரச்சனையா பேசாம பொழுது போக்கு திரைக் கதைக்குள்ள பிரச்சனைய மறை முகமா பேசியிருக்கேன். ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’



ஆர்யா- நயன்தாராவுக்கு கல்யாணம் என்று பத்திரிகை அடித்து விளம்பரம் பண்ணினது சீட்டிங் இல்லையா?



"கண்டிப்பா இல்லை! என்னதான் நாம காவியம் மாதிரி ஒரு படம் எடுத்தாலும் அது மக்கள்கிட்ட போய் சேரலன்னா இயக்குனர் உட்பட ஒரு 200 பேரோட உழைப்பு வேஸ்ட்! தயாரிப்பாளர் பணம் வேஸ்ட்! இந்தப் படத்தோட முதல் காட்சியே கல்யாணத்துலதான் ஆரம்பிக்குது. அதனாலதான் இந்த விளம்பர உத்தியை கையில எடுத்தேன். நயன் தாரா ஆர்யா இரண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்கிட்டுதான் பண்ணி னோம். இப்போ பாருங்க அதுவே பரபரப்பாயிடுச்சு."


நயன்தாராவுக்கு தனிப்பட்ட வாழ்க் கையில ஏற்பட்ட காதல் தோல்விகள் அவர் நடிப்புல எதிரொலிச்சுருக்கா?


"ஷாக்கடிக்கிற கேள்வி. இதுக்கு கண்டிப்பா நான் பதில் சொல்ல விரும்புறேன். நான் திட்டமிட்டு இந்தப் படதுக்கு அவங்கள தேர்வு செய்யல. நயன்தாராவிடம் தமிழ்பொண்ணுக்குரிய எல்லா ஹோம்லியும் அவங்ககிட்ட இருக்கு! எல்லாருக்குமான கதைய சொல்லும்போது நயன்தாராதான் சரின்னு முடிவுபண்ணினேன். ஆனா எதிர்பாராம அவங்க நடிச்ச பல சோகக் காட்சிகள்ல நிஜ வாழ்க்கையில் அவங்க சந்திச்ச காதல் தோல்வியோட வலியை கண் முன்னால பார்த்தேன். ஒரு பொண்ணோட மனக்காயம் நிஜமாவே பதிவாகியிருக்கிற காட்சிகளை ரசிகர்களும் பார்க்கப் போறங்க!"


thanx - the hindu

Sunday, March 11, 2012

அழகிய அனுஷ்கா, திகு திகு த்ரிஷா யார் டாப்? - ஆர்யா ஓப்பன் டாக். பேட்டி

http://sareesmania.files.wordpress.com/2011/02/anushka-dancing-green-saree1.jpg
''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்ஆர்யா!


 1. ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

 சி.பி - ச்சே, ச்சே அப்படி எல்லாம் இல்லை.. டைரக்டர்க்கு தனி கேபின் , ஹீரோவுக்கு தனி கேபின் , மாத்தி மாத்தி சேட்டை பண்ணிக்கலாம் ஹி ஹி 

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும்.

சி.பி - நல்லவேளை, நடிகையை பற்றி சொல்லலை, அப்புறம் சோனியா அகர்வால்,ஆண்ட்ரியா எல்லாரும் சண்டைக்கு வந்திருப்பாங்க 

 பெரிய ஸ்கோப் கொடுப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார்.

சி.பி - அதுதாங்க , கம்ப்ளைண்ட்டே, எல்லாத்தையும் அவரே பார்த்துக்கறாராம், வேற யாருக்கும் சான்ஸ் தர மாட்டேங்கறாராம்.. 




 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

சி.பி - ஆயிரத்தில் ஒருவன் வந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு.. பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்கவங்க பட ரிலீஸ் அப்போ இந்தப்படம் தான் மெகா பட்ஜெட், இதுவரை யாருமே தொடாத கதைம்பாங்க , ஆனா ரிலீஸ் ஆனாத்தான் தெரியும்.

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''


http://trisha.indiancelebs.co.in/wp-content/uploads/l-600-400-feeacd83-65cc-4924-bdb9-6472b9409d30.jpeg

2. ''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்கங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது.  



 சி.பி - அவ்ளவ் கமுக்கமான ஆளா? பார்த்தா ஓப்பன் டைப் மாதிரிதானே தெரியுது?




நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள் என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''


 சி.பி - அப்போ இந்த பேட்டிக்கு டைட்டிலா ஆர்யாவால் அனுஷ்காவை சமாளீக்க முடியவில்லை, திணறல்னு வெச்சுடலாமா? ஹி ஹி 


http://www.extramirchi.com/wp-content/uploads/2009/03/trisha_arya_sarvam-5.jpg
3. ''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறைபடத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டாநான். அப்புறம் 'படித்துறைபடத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறைவெளிவரும்!''


சி.பி - ஆஹா டைட்டிலே கவிதையா இருக்கே? ஆர்ட் ஃபிலிமா இருந்து வழுக்கி விடாம இருந்தா சரிதான் /

4. ''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

5. ''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமேனு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...


http://www.dailomo.net/wp-content/gallery/stunning-trisha-in-silk-saree/trisha-too-hot-in-silk-saree-stunning-pic-5.jpg
6. '' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''


''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

சி.பி - த்ரிஷாவை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது , என்னை தவிர - ஆர்யா பர பர பேட்டி - எப்படி டைட்டில் ? 

http://1.bp.blogspot.com/_k936YJKWxuM/SnxtdFxV-bI/AAAAAAAAHLY/IUobjI_phas/s1600/ank2.jpg