Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Thursday, February 05, 2015

என்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்

 ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . ஹீரோயின் 1 ஆல்ரெடி  டைவர்ஸ் ஆன வர். ஒரு  பெண் குழந்தை  உள்ள  அழகி .இருவருக்கும்  காதல். திருமணத்துக்குத்தயார் ஆகும்போது   நாயகி   கொல்லப்படுகிறார். அவரது  மரணத்துக்குக்காரணமானவரை  ஹீரோ  தேடிட்டு இருக்கார்.

வில்லன்  என்ன  மாதிரி  டைப் ? பணக்கார  ஆளுங்களுக்கு  ஏதாவது  ஆபரேஷன்  நடக்கும்போது  அவங்களுக்கு இதயம்/கல்லீரல்  மாதிரி  உடல்  உறுப்புகள்  தேவைப்பட்டா   ஏழை  ஜனத்தைக்கடத்தி  அவங்க  உறுப்பை  தடாலடியா  எடுத்து    ஹோல்சேல்  பண்ற  ஆள். வில்லன்  இப்போ  டார்கெட்  வெச்சிருப்பது   ஹீரோயின் நெ 2 . 


ஹீரோ கஸ்டடி ல  இருக்கும்  குழந்தையை  வில்லன்  கடத்தி  ஹீரோயின் 2 வை  எக்சேஞ்ச் ஆஃபர்ல  கேட்கறான் . இருவருக்கும்  நடக்கும்  கண்ணாமூச்சி  தான்  பின் பாதி  திரைக்கதை . 


ஹீரோவா அல்டிமேட்  ஸ்டார்  அஜித் குமார் . ஹீரோயிசம் அதிகம்  காட்டாத ஆனா அதையும்  மீறித்திமிரும்  ஹீரோயிசம்  கொண்ட ஆண்மைத்தனம்  கொப்புளிக்கும்  பாடி லேங்குவேஜ்  உள்ள  வெகு  சில  சினிமா  ஹீரோக்களில்  ஒருவர் .3  விதமான  கெட்டப்களில்   வர்றார். வழக்கம்  போல்   சால்ட்  & பெப்பர்  லுக்கில்  தான்  அப்ளாஸ்  அதிகம் . யூத்தான  கெட்டப்பில்  பெண்களைக்கவர்கிறார். படம்   முழுக்க   அடக்கி  வாசித்து   வில்லனை  ஆர்ப்பரிக்க  வைத்திருக்கிறார்.




ஹீரோயினா  த்ரிஷா . கொள்ளை  அழகு சேலையில்  , பட்டு  சேலையில்  பவனி வரும்  ஆரணிப்பட்டு  தேவதை . இவரது  சிரிப்பும்  , இன்னும்  இருக்கும்  இளமையும்   பார்த்துட்டே  இருக்கலாம் . 


இன்னொரு  ஹீரோயினா  அஸ்கா  உதட்டழகி ,மல்கோவா  மாம்பழ  கன்ன அழகி ,ஆறடிக்கு 2  இஞ்ச்  கம்மியான அரேபியன்  ஹார்ஸ்  அழகி அனுஷ்கா . இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை . ஹீரோவைக்கண்டதும்   காதல்  கொள்வதும்  , உன்னைப்போல்  ஒரு  ஆளை  இதுவரை  நான்  பார்த்ததில்லை  எனும்போதும்  சிரிப்பு  தான்  வருது. 


வில்லனாக   அருண்  விஜய்க்கு   நல்ல  வாய்ப்பு  . பல  காட்சிகளில்   டாமினேட்  செய்யும்  வாய்ப்பு  . சரியாகப்பயன்  படுத்தி  இக்ருக்கார் ..

 குழந்தையாக  வரும்  சுட்டி  கொள்ளை  அழகு . விவேக்   பெரிதாக  சிலாகிக்கும்படி  இல்லாவிட்டாலும்  ஓக்கே ரகம் . 




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

ஒருபயலும்  தியேட்டர்ல உக்காந்தூ படம் பார்க்கலை.ஸ்டேன்டிங் தான்.டைட்டில் சாங்

நெத்தியில மத்தியில குங்குமப்பொட்டு வெச்ச எல்லாப்பொண்ணுங்களும் தேவதை தான்.ஆனா ஒரு தேவதையே பொட்டு வைக்கலைன்னா மெருகு குறையுமா? $ அஷ்கா அனுஷ்

சிம்பு படத்துல ரயில் ல ரொமான்ஸ்.அஜித் படம் அதுக்கும் மேல .விமானத்தில்

ஹீரோ வில்லன் பைட்  ஓப்பனிங் லயே  வைக்கலாமா? வெச்ட்டாங்க

ஹீரோ  ஓப்பனிங்  சீன் ரொம்ப  சிம்ப்பிள்.ஆரம்பம்  வீரம்  அளவு  அதிர்வு இல்ல

அஜித் அனுஷ்கா  ,அஜித்  த்ரிஷா  காம்போ சீன்ஸ் அக்மார்க்  கவுதம் பிராண்ட் ரொமான்டிக் கலெக்சன்ஸ்

காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அளவு வேகம் இல்லாத ஆனால் நிதானமான திரைக்கதை @ இடைவேளை


ஒரு வெள்ளிக்கொலுசு போல பாட்டு இளையராஜா க்கு இணையான மெலோடி .படமாக்கம் ,ஒளிப்பதிவு பக்கா

யு /ஏ தர காட்சி ரீதியாஒரு  சீன் கூட இல்லை.பக்கா டீசன்ட்.ஆனா ஹீரோ அடிக்கடி கெட்ட வார்த்தை பேசுவது தேவையற்றது.

கவுதம் -அஜித் காம்போ வில்  அடுத்த படம் புக் ஆகும் அளவுக்கு எ அ ஹிட் இருக்கும்.100 கோடி கலெக்சன் அளவு ஹிட் ஆகுமா?உறுதியா சொல்ல முடியலை

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

எனக்கு தமிழ் தெரியும்னு  எப்டி தெரியும்?
தேன்மொழி னு பேர் வெச்ட்டு தமிழ் தெரியாம இருக்குமா? # எ அ

அனுஷ் = இந்த உலகத்துலயே ரொம்ப அழகானவன் நீ தான்

அஜித் டூ அருண் விஜய் = ஸ்பீச்சாடா குடுக்கறே? ,

விவேக் = கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு பாக்கனும்
செல் முருகன் = கண் மங்கலா தெரியுமே பாஸ்?

த்ரிசா டூ அஜித் = இப்டி அழகாகிட்டே போனா நாங்க எல்லாம் என்ன பண்றது?

அருண் விஜய் = கிழிஞ்சது  உன் சட்டை
அஜித் = சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்


அருண் விஜய் = உன் கிட்டே பழைய கெத்து இல்லையே.எ்ன்னாச்சு?
அஜித் = அதான் நானும் யோசிச்ட்டு இருக்கேன்


நீ என் கையாலதான் சாகனும்.நான் தான் உன்னைக்கொல்லப்போறேன்னு பயந்தபடியே சாகனும்.அதான் நான்


அவ நினைப்பு வரும்போது குடியே இல்லாத (சரக்கு கிடைக்காத ) குடிகாரன் மாதிரி  ஆகிட்டேன்

விவேக் டூ அஜித் = சத்யா ! சூப்பர்.நின்னுட்டீங்க  # குறியீடு

எனக்குப்பிடிச்சது .சவாலா நினைக்கறது,என்னோட வாழ்க்கை எல்லாமே 1 தான்.அது ஆபத்தோட விளையாடறது


கொஞ்சம் டைம் குடுங்க சார்.
எது இல்லையோ அதைத்தான் கேட்கறே! மணி அடிக்க வேண்டியதுதான்.உனக்கும் சேர்த்து

வில்லனின் அடியாள் = என்னடா இவன் வேற பயப்படமாட்டேங்கறான்.



நீங்க போலீசா?
இல்ல
உங்களை நம்பலாமா?
அது மட்டும் நிச்சயமா

உலகமே இன்னைக்கு கிறிஸ்மஸ் கொண்டாடுது.ஆனா எனக்கு இன்னைக்குதான் தீபாவளி !

பார்ட்டி பேர் என்ன?
ஹேமா நிக்கா
அவ ஏன் நிக்கறா? உக்காரச்சொல்லு #





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஒளிப்பதிவில்  , இசையில்   முத்திரை  பதிக்கும்  இயக்குநர்  வ்ழக்கம்  போல்  இதிலும்  அழுத்தமான    மேக்கிங்  ஸ்டைலை  மெயிண்ட்டெயின்  செய்தது


2 ஹீரோயிசம்   காட்டாமல்   ஹீரோவை  ரொம்ப  அடக்கி  வாசிக்க  வைத்தது


3  ஃபேமிலி  ஆடியன்ஸ்   பார்க்கும்  தரத்தில்  மிக  டீசண்ட்டாக  காட்சிகளை  படம் ஆக்கியது



4   ஹீரோவின்  மகளின் கையில்   ஜிபிஎஸ்  வாட்ச்   இருப்பதை  வில்லன்  கண்டுபிடித்து  அகற்றுவது   ,  வில்லி  ஹீரோ விடம்  மாட்டும்  காட்சி


5  வில்லன்  - ஹீரோ  இடைப்பட்ட காட்சிகள்  , சவால்கள்  , வசனங்கள்  கன கச்சிதம்


6  பாடல்  காட்சிகள்  படம் ஆக்கப்பட்ட  விதம்  உலக  தரம்.பாடல் ஆசிரியர்  தாமரை  பின்னி விட்டார். பிஜிஎம்  பின்  பாதியில்  பக்கா



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   வில்லனை  ஹீரோவை  விட  பவர்ஃபுல்லாக  காட்டியது  ஓக்கே , ஆனா  ஹீரோ  வில்லனை   மடக்கும்  காட்சி ,வில்லனை  வெல்லும்  காட்சியில்   ரொம்ப  யதார்த்தம்  காட்டினால்  எப்படி  ?  ஆரம்பம்  போல்   கை தட்ட வைக்கும்  ஹீரோயிச  காட்சிகள்   ரொம்ப  குறைவு


2  அதாரு  உதாரு   தரைக்குத்து  சாங்கிலும்  வில்லனுக்கே   அதிக  வாய்ப்பு .


3 ஒரு  25  வயசு  மாடர்ன்  கேர்ள்  40  வயசு ஆளைப்பார்த்த  முதல்  பார்வையில்  உன்னை மாதிரி  மேன்லி ஆளைப்பார்த்ததில்லைனு அப்;பவே  அவர் கிட்டேயே  சொல்வாரா?


4 ஆபத்தான  இடத்துக்கு   போலீசான  ஹீரோ   ஜீப்பில்  போகும்போது  குழந்தையையும்  ஏன்  அழைத்துச்செல்லனும் ?


5  ஹீரோயினை  டார்கெட்  வைக்கும்  வில்லன்   ஹீரோவின்  குழந்தையைக்கடத்தித்தான்  ஹீரோவை   மிரட்டப்போறார்  என்பது  படம்  பார்க்கும்  நமக்குத்தெரியுது ?  போலீஸ்  ஆஃபீசர்க்குத்தெரியாதா?> 




சி  பி  கமெண்ட் -எ அ = முன் பாதி ராமேஸ்வரம் கடல் போல் அமைதி அழகு ,பின்பாதி திருச்செந்தூர் கடல்போல் ஆர்ப்பரிக்கும் ஆக்சன்-விகடன் =44,ரேட்டிங் =3/ 5.ஆரம்பம்  அளவு  அப்ளாஷ்  வாங்கும்  காட்சிகள்  இல்லை, ஆனால்  தரத்தில்  அதை  விட  ஒரு படி அதிகம் .துப்பாக்கி க்கு  ஒரு படி  கீழே , கத்திக்கு  ஒரு படி மேலே .காக்க  காக்க வை விட   வேகத்தில்   குறைவிருந்தாலும் வேட்டையாடு  விளையாடு  தரத்தில்  இருக்கு .ஏ செண்ட்டர்ல  ஓடும்! பிஜிஎம்  ஸூப்பர்  .குறிப்பா க்ளைமாக்ஸில்


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 44

குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = ஓக்கே

 ரேட்டிங்  =  3 / 5

ஈரோடு  சண்டிகா  வில்  படம்  பார்த்தேன்



Sunday, February 01, 2015

அமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து சரண் -அஜித் காம்போ படம்

ஆயிரத்தில் இருவர்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்த இயக்குநர் சரணை சந்தித்தோம்.
“இந்தப் படத்தில் முதல் 10 நிமிடத்தில் கதையை சொல்லிவிடுவேன். அதற்கு பிறகு எல்லாமே சம்பவங்கள்தான். முதல் 10 நிமிட கதையை அடிப்படையாக வைத்து நிகழும் நிகழ்வுகள்தான் மொத்த படமுமே” என்று ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தைப் பற்றிய விளக்கத்துடன் பேச ஆரம்பித்தார் சரண்.
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படத்தைத்தான் ‘ஆயிரத்தில் இருவர்’ படமாக மாற்றி இருக்கிறீர்களா?
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படமும் ‘ஆயிரத்தில் இருவர்’ படமும் வெவ்வேறு கதை. அந்தப் படம் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அந்தப் படத்துக்காக நான் பேசி வைத்த நடிகர், நடிகைகள் அனைவருமே ‘ஆயிரத்தில் இருவர்’ கதைக்கு பொருத்தமாக இருந்தார் கள். ஆகையால் அவர்களை வைத்தே இதைப் படமாக்கி விட்டேன். மற்றபடி இரண்டு படங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
நீங்களும் அஜீத்தும் இணைந்து பல படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அவருடன் இணையும் திட்டம் இருக்கிறதா?

அஜீத் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ‘அசல்’ படத்துக்கு பிறகு இன்னொரு படத்தை இணைந்து செய்யலாம் என்று நானும், அவரும் பேசினோம். இதுபற்றி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி யிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அப்படத்தை செய்ய முடியவில்லை. மீண்டும் இணைந்து படம் பண்ணுவதற்கான சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக பண்ணுவோம்.
எனக்கும் அவருக்குமான நட்பு எப்படி என்றால், நாங்கள் எப்போதுமே திடீரென்றுதான் இணைந்து படம் செய்ய முடிவெடுப்போம். அவர் கூப்பிட்டு பேசிய அடுத்த நாள் முதல் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ‘அட்டகாசம்’, ‘அசல்’ எல்லாமே அப்படித்தான் நடந்தது. அந்த மாதிரியான வாய்ப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம்.
‘காதல் மன்னன்’ படத்தில் அஜீத்தை சாக்லெட் பாயாக காட்டினீர்கள். ஆனால், தற்போது அவர் கமர்ஷியல் படங்களில் சிக்கிக் கொண்டாரே?
நான் ‘காதல் மன்னன்’ படம் பண்ணியதே ஒரு கமர்ஷியல் பார்வையில்தான். மறைந்த இயக்குநர் பாலசந்தர் அப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு, “இந்த கதையை மூன்று விதமாக எடுக்கலாம். அந்த மூன்று விதங்களில் நீ கமர்ஷியலாக பண்ணி யிருக்கிறாய். நல்லாயிருக்கு” என்று பாராட்டினார்.
தற்போது ஒரு குறும்படம் இயக்கி வெற்றி பெற்றாலே சினிமா இயக்குநர் ஆகிவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே? 


இது வரவேற்கத்தக்கதுதான். நல்ல படம் எடுக்கும் எல்லாருக்குமே இங்கு வாய்ப்பு இருக்கிறது. புதிதாக வருபவர்கள் இயக்குநர் களிடம் இருந்து கற்றுக்கொண்டும் வரலாம், கல்லூரியில் படித்து விட்டும் வரலாம். யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் இயக்குநர் மணிரத்னம் தனிமுத்திரை பதித்து இருக்கிறாரே.
அதேபோல குறும் படம் எடுத்து சினிமா உலகுக்குள் நுழைபவர்களாலும் தனி முத்திரை பதிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது, வரவேற்கும் விதமாகத்தான் பேச வேண்டும் என்று சொன்னால் அது தவறு.
குறும்படம் எடுத்து சினிமாவுக்கு வருபவர்களில் 5 சதவீதம்பேர் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் வருகிறார்கள். மீதமுள்ள 95 சதவீதம் பேர் இயக்குநர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பாக மட்டுமே குறும்படங்களை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்.
இப்படி நிறையப் பேர் வருவதால் ‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். அவர்களுக்கான களம் இது அல்ல என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். 

 thanx - the hindu

 



  • Namale kathaya thirudidan padam எடுக்குறோம் maththavangala குறை சொல்றோம் போலினு.
    about 17 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) ·
       
  • sundar  
    ....‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். .... என்றும் ......பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்......என்றும் சொல்லியுள்ளார். எடுத்த படம் ஒழுங்கா போகலை என்றால் அவஸ்தை படும் தயாரிப்பாளர்கள் தவிர நடிகர், நடிகையரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு என்னபாடு படப்போகிறார்களோ??? போலீஸ், உண்மைவிளம்பி டி.வீ நிகழ்ச்சிகளுக்கு கொண்டாட்டம்தான்.
    Points
    1165
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "போலி இயக்குநர்கள் பெருகிவிட்டார்கள்" இப்படியெல்லாம் யோசிப்பதை விட்டு விட்டு, புதுசா மக்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல படங்களை கோடாங்க. ஜெர்மன் கவிஞன் Goethe சொல்ற மாதிரி, "All truly wise thoughts have been thought already thousands of times; but to make them truly ours, we must think them over again honestly, till they take firm root in our personal experience." இத முதலில் follow பண்ணுங்க சரண் சார், நீங்க உண்மையான படத்தை எடுக்கலாம். உண்மையிலேயே அனைத்து படைப்பாளிகளும் போலியானவர்களே. அவனவனுக்கு தான் தெரியும் தாம் எங்கிருந்து திருடுகிறோம் என்று...
    Points
    1815
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • skv  
    செத்தவீட்டுலேதான் தலைய விரிச்சுன்னு ஆடுவாக அன்று .இன்று சினிமாலே எல்லாமே அப்படிதான் இருக்கு உடைக்கோ பஞ்சமொபஞ்சம் திருமானமான பெண்கள் எவாலுமே தாலியே போடறது இல்லே சிநிமாகாரிகளைபார்த்து குடும்பபெங்களும் அப்படியே பின்பர்ருகிரார்களே அதுதான் கொடுமை

Monday, January 12, 2015

புலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா?-தேவி ஸ்ரீபிரசாத் பேட்டி

தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா
தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா 
 

'புலி'யில் புது இசை: சிலாகிக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்

 

 
2014ல் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்தவர், 2015ல் விஜய் நடித்து வரும் 'புலி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்... அவர்தான் தேவி ஸ்ரீபிரசாத்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேசினோம்.
"2014ம் ஆண்டு எனக்கு ‘வீரம்’ படம் மூலமா நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் பல படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த 2015ம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்திருக்கிறது.
விஜய் படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். அவர் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் 'வில்லு' தான் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.
இயக்குநர் சிம்புதேவன் என்னிடம் 'புலி' படத்தைப் பற்றி பேசும் போதே எனக்கும் அவரும் நல்ல செட்டாகி விட்டது. அவர் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால், படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையுமே கார்டூனாக காட்டியதால் எனக்கு ரொம்ப எளிமையாக இருந்தது. 'புலி'யில் புது இசையை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 'புலி' தலைப்பிற்கே ஒரு பெரிய ரீச் கிடைத்திருக்கிறது.
'புலி' ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இதற்கு முன்னால் இந்த மாதிரியான படத்திற்கு நான் இசையமைத்ததில்லை. இப்படத்திற்கு நான் பண்ணப் போகிற இசையில் படத்தோட கதைக்கும், பிரம்மாண்டத்துக்கும், அதனோட அழகுக்கும், பொருத்தமா இருக்கணும். அதற்கு ஏற்றார் போல் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டேன். ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறது. விஜய், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பாடுகிறார்களா என்பது இப்போதே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை சாப்பிட்டு விடும்.
என்னுடைய பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும் என்பதை மனதில் வைத்து தான் அனைத்து பாடல்களையும் பண்றேன். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணுவதால், தமிழில் ரொம்ப தேர்ந்தெடுத்து தான் பண்றேன்.
என்னோட குரு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய இசை அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்த மாதம் நடத்த இருக்கிறோம். இந்தியாவில் இருக்கிற பெரிய இசைக் கலைஞர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நிறைய பேருக்கு நான் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சிஷ்யன் என்பது தெரியாது.
நாலைந்து வயது இருக்கும் போதே அவர்கிட்ட மாண்டலின் கற்றுக் கொள்ள போய்விட்டேன். என்னை மிகப் பெரிய மாண்டலின் கலைஞராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், நான் சினிமா பக்கம் போய்விட்டேன்" என்றார். 


நன்றி -த இந்து

Thursday, January 08, 2015

அஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்க்களம் - தீர்வு என்ன?

     
     
தமிழ் சினிமாவில் நாயகர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக உருவான காலம் தொட்டே அவர்களுடைய ரசிகர்களின் மோதல்களும் தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், என்று தொடங்கிய ரசிகர்களின் ஆக்ரோஷ மோதல்கள் இன்று அஜீத் - விஜய் ரசிகர்களிடையே உச்சகட்டத்தை எட்டி நிற்கிறது. முந்தையை ரசிகர்கள் போஸ்டர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் மோதிக்கொண்டிருந்தனர். ஆனால் அஜீத் - விஜய் ரசிகர்கள் அந்த யுத்தத்தை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பல காலமாக இந்த மோதல் இருந்துவந்தாலும் அது உச்சகட்டத்தை எட்டியது இந்தப் புத்தாண்டில்தான். பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டிய அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29-ம் தேதிக்குத் தள்ளிப்போவதாக அதன் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் புத்தாண்டு சமயத்தில் அறிவித்தார். ஏற்கெனவே ‘கத்தி’ பட விவகாரத்தில் தங்களை கலாட்டா செய்த அஜீத் ரசிகர்களைப் பழிவாங்க, இதுதான் தக்க சமயம் என்று பொங்கி எழுந்தனர் விஜய் ரசிகர்கள்.
“அஜீத் எப்போதும் யாருடனும் போட்டியிடாமல் தனியாக தன் படத்தை வெளியிடும் பழக்கம் கொண்டவர்” என்று ஆரம்பித்து, “மோதி ஜெயிக்கிறதுதான் வீரம்... தனிச்சு நின்னா அதுக்குப் பேரு சோரம்” என்று அஜீத் ரசிகர்களை ட்விட்டர் தளத்தில் சீண்டிப் பார்த்தனர்.
இதனால் கொந்தளித்துப்போன அஜீத் ரசிகர்கள் பதிலுக்கு, “படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதற்காக கைகட்டி வாய்ப்பொத்திக் கெஞ்சியது நாங்களா?” என்று ‘தலைவா’ பட சர்ச்சையை நினைவூட்டினர்.
இந்த சண்டையை இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய்க்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள் அஜீத் ரசிகர்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அஜீத்துக்கு எதிரான ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் பரப்பினார்கள். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வாய்கூசும்படியான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டது தமிழக சினிமா ரசிகர்களின் தரத்தை இந்திய அளவில் குறைப்பதாக இருந்தது.
ரசிகர்களின் இந்த மோதலைப் பற்றி அஜீத்தும், விஜய்யும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில் தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டியுள்ளனர். உதாரணமாக ஒருமுறை ‘மங்காத்தா’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற விஜய், அஜீத்துக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்தார். அதுபோல் விஜய்யின் பிறந்தநாள் ஒன்றில் அவரது வீட்டுக்கு சென்று நாள் முழுவதும் அவருடன் இருந்துள்ளார் அஜீத்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடிய விஜய் “ரசிகர்களின் சண்டை தேவையற்றது. தங்களது குடும்பத்தைத்தான் அவர்கள் முதலாவதாக கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் இரு தரப்பு ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் மோதிவருவது கவலைக்குரியதாக உள்ளது.
வலைத்தளத்தில் அஜீத் ரசிகராக இருக்கும் நஸ்ருதீனிடம் இதுபற்றி கேட்டபோது, “இந்த மோதல் ‘ஆரம்பம்’ படத்தின் முதல் பார்வை டீஸர் வந்தபோதுதான் முதலில் தொடங்கியது. அஜீத்தின் படத்தைப் பற்றி ட்விட்டரில் நாங்கள் ஏதாவது குறிப்பிட்டால் விஜய் ரசிகர்கள் உடனடியாக அதைக் கிண்டல் செய்து எதையாவது எழுதிவிடுகிறார்கள்.
‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போன செய்தி வெளியான போது விஜய் ரசிகர்களின் கிண்டல் அதிகமாக இருந்தது. உடனடியாக நாங்கள் விஜய்க்கு எதிராக பதிவுகளை இடத் தொடங்கினோம். தற்போதைய இந்த மோதல் தவறான விஷயம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக எங்கள் ‘தல’யை விட்டுத்தர முடியாது. ட்விட்டரில் நாங்கள் ஒரு விஷயத்தைக் ட்ரெண்ட் செய்தால் அவர்களும், அவர்கள் ட்ரெண்ட் செய்தால் நாங்களும் அமைதிகாக்க வேண்டும். நாங்கள் அமைதிகாக்க தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்குத் தயாரா?” என்றார்.
விஜய் ரசிகரான தீபக் கூறும்போது, “இந்த சண்டை ‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போனதில் இருந்துதான் ஆரம்பித்தது நாங்கள் அஜீத்தை கிண்டல் செய்து எந்தப் பதிவையும் இடவில்லை. அவரது ரசிகர்களைத்தான் கிண்டல் செய்தோம். அஜீத் ரசிகர்களும் அதற்குப் பதிலாக எங்களைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதில் அவர்கள் எங்கள் தளபதியை கிண்டல் செய்தார்கள். அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ட்விட்டர் தளத்தில் சண்டை பெரிதானது. இது தவறுதான் என்றாலும், எங்களுக்கு எதிராக ஒரு விஷயம் நடைபெறும் போது, அதை கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த சண்டை நிற்கவேண்டும் என்றால் விஜய், அஜீத் இருவரும் இணைந்து அறிக்கை விட வேண்டும். அல்லது ஒரு வீடியோ பதிவை வெளியிட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்” என்றார்.
‘தல’யும் ‘தளபதி’யும் இதைச் செய்வார்களா? 


thanx - the hindu


  • ! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் ஹீரோ தான் !! இங்கு யாரும் யாரையும் கொண்டாடபடவேண்டிய அவசியமில்லை!!
    40 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • skaki  
    தல..
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ahmed  
    கண்டிப்பஹா செய்ய வேண்டும்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • S.DEZOSA  
    இப்படியே follow பண்ணுங்க , இந்தியா சீக்கரம் வல்லரசு ஆய்டும்.....
    about 2 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
  • shruthi  
    வேலை இல்லாத வெட்டி வேலை ..
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • vijayraj  
    தீபக் சொன்னது சரியான செய்தி..
    Points
    130
    about 3 hours ago ·   (7) ·   (5) ·  reply (0) · 
  • Harris Ahimas  
    தமிழா நீ முட்டாள் அக்கதே. மீண்டும் மீண்டும் நடிகர்கள் பின்னல் நிற்கிறாய், நீ உன்னுடை அறிவையும், ஆற்றலையும் உன்னுடய சொந்த தொழிலுக்க செலவிடு, அது உன்னை உயர்த்தும். நடிகர்களாலும் நடிகைகழலும் தமிழ் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது, அமைதி இழந்தது.
    Points
    3650
    about 6 hours ago ·   (16) ·   (1) ·  reply (0) · 
  • Az  
    முட்டாள் தனத்தின் உச்ச கட்டம்!! ஹ ஹ ஹ ஹா !!!
    Points
    330
    about 6 hours ago ·   (22) ·   (1) ·  reply (0) · 
  • santhil kumar  
    Vip boys
    about 7 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • vkskumar  
    சினிமா என்பது வெறும்கேளிக்கை தான். தனி நபர் துதி பாடுவதை விட்டு விட்டு வீண் சண்டை போடாமல் நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கு.இந்த ரசிகர்கள் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தி உருப்படுவத ர்க்கு வழியய் பார்த்தல் நன்றாக இருக்கும்.
    about 7 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    'தல'எழுத்து ராமா....
    Points
    1240
    about 9 hours ago ·   (4) ·   (4) ·  reply (0) · 
  • raj  
    தல தளபதி மோதல் சினிமாவில் புதுசு இல்ல. ஆனா இந்த நிலமைய தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்க சில நடிகர்கள் (பொடி பசங்க) ஆர்வமா இருகாங்க. டேய் பொடி பசங்களா என்னைக்குமே தல தளபதி மாஸ் டா. ரெண்டு ரசிகர்களும் ஒன்னு சேந்தா நீங்க இருக்குற இடமே தெரியாது டா.
    Points
    600
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • kumar  
    ennama neenga ipdi panrengalamea ma
    Points
    225
    about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Charl Esta  
    நாட்டிற்க்கு நாட்டின் முன்னேற்றத்திற்ககு இது மிக அவசியமான செய்தி
    about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Ahart  
    ஆக மொத்தம் சண்டையை விட்ற மாறி யாரும் தெரியல. எல்லாம் ஏட்டிக்கு போட்டி மாறி நடக்குது. நல்லா வருவீங்க பா!!!
    about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • SUNDARARAMAN.M  
    தேவை இல்லாத நேர விரயம் .நண்பர்களே இருக்கும் வேறுபாடுகள் போதாதென்று ஏன் நீங்கள் வேறு சண்டையிடவேண்டும்?இதனால் யாருக்கு என்ன லாபம்?
    Points
    175
    about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • siva  
    திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்காக தன் சொந்த இன சகோதரர்களை கேவலமாக விமர்சித்தும், வெறுப்பை உமிழ்ந்து கொள்ளும் ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம்!! சொந்த மண்ணில் வாழும் நம் மக்களையே நேசிக்க தெரியாத நாம் அயல் நாட்டில் வாழும் மக்களுக்காக போராட்டம் செய்வது, குரல் கொடுப்பது எல்லாம் போலித்தனம் தான். அஜீத்துக்காக, விஜயிக்காக சண்டை போடுபவர்கள், விவசாயம், மீதேன் எதிப்பு திட்டம், நியுட்ரினோ விவகாரம், ஊழல்களை எதிர்த்து போராடலாம்!! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் ஹீரோ தான் !! இங்கு யாரும் யாரையும் கொண்டாடபடவேண்டிய அவசியமில்லை!! .
    Points
    385
    about 11 hours ago ·   (16) ·   (0) ·  reply (0) · 
  • Vikram  
    நண்பர்களே. தலயும் தளபதியும் அவர்கள் வேலையை செய்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பது அவர்கள் தொழில். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்களுடைய ரசிகர்களான நாம் நமது வேலையை அல்லது தொழிலையோ சரியாக செய்தாலே போதுமானது. அதை விடுத்து அவர்கள் இருவருக்காக சண்டையிடுவது வேதனையளிக்கிறது. இப்படி சண்டையிடுவதால் நமது சுய மரியாதை மட்டுமல்ல தல தளபதி அவர்களுடைய பெயரும் தான் கெடும். சமீபத்தில் ட்வீட்டரில் மற்ற நடிகரின் ரசிகனை இன்னொரு நடிகரின் ரசிகன் அவமானப்படுத்த ஹேஸ் டேக் கிரயேட் செய்து ட்ரெண்டு செய்தது உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உங்களையும் உங்கள் நடிகரையும் கேவலமான மன நிலையோடு பார்க்க செய்து விடும். ரசிகாராக மட்டும் இருங்கள் வெறியனாக மாறாதீர்கள். இப்படிக்கு அஜித் ரசிகன்.
    Points
    200
    about 11 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
  • karthikk  
    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ......
    about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Saravanan  
    அவங்க அவங்க வேலையை (நடிப்பு) ஒழுங்கா செஞ்சு பணம் சம்பாதிச்சு, வருங்கால சந்ததியினருக்கு சொத்து சேத்து .....இப்படி அவங்க வேலையை அவங்க ஒழுங்கா செஞ்சு பிழைப்பை பார்க்கறாங்க. உனக்கு ஒருத்தர பிடிச்சா அவங்க படத்த ரசிக்கிறதோட நிறுத்திக்கங்க. போய் பொழப்ப கவனிச்சு வாழ்க்கையில settle ஆகற வழியை பாருங்க. அத விட்டுட்டு உங்களுக்கெல்லாம் ஏன் ஒருத்தருக்கு கொடிபிடிக்கற இந்த வெட்டி வேலை. பொழைக்கிற வழியைப் பாருங்கப்பா. அவங்களுக்கு கொடிபிடிக்கிறதாலோ ஒருத்தற ஒருத்தர் திட்டிக்கிறதாலோ உனக்கு வேலைகிடைக்கப்போகுதா அல்லது ஒவ்வொரு திட்டுக்கும் இவ்வளவு பைசான்னு உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகப் போகுதா. ......வெட்டி வேலையைத்தான் செய்யராங்கப்பா?