Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts
Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts

Saturday, April 09, 2011

ஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியாதிகளுக்கு சொம்பு

'ஊழலுக்கு எதிரான இந்தியா!'

அதில் நீங்களும் ஒருவரா?
'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற 
http://www.indiareport.com/resources/images/original/anna_hazare1.jpg

உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணா​விரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே! 

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்​படுத்தி​யவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!

ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்​வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது  நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!

அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்​​களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்​மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர்.

அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.

இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை.

ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?

இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 

'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!


முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.


இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளு​மன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்​பேன்...'' என்றார்.

http://im.in.com/media/download/wallpapers/2011/Apr/anna_hazare_420x315.jpg
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். 

அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.

நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!


இன்றைய தினமலரில்........
லோக்பால் மசோதாவை தயாரிக்க இருதரப்பு குழு அமைப்பது குறித்து, அரசு கெஜட்டில் வெளியிட இயலாது என்றும், மசோதா தயாரிப்பு குழுவுக்கு அமைச்சர் அல்லாத ஒருவரை தலைவராக இருக்கவும் ஏற்க முடியாது என, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதையடுத்து, அன்னா ஹசாரேயின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர் கருத்துக்கு நாடு முழுவதும் அதிக ஆதரவு பெருகுவதால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ளின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார். 

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நான்காவது நாளாக அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. ஹசாரே தரப்பில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கைகள் இரண்டை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.
http://lh4.ggpht.com/_xFP6s39OUYY/TZxN0zPsQwI/AAAAAAAAqSI/PqYJgEtdQs8/Anna%20Hazare-gandhiyan-%20begins%20fast_thumb%5B2%5D.jpg?imgmax=800
கபில் சிபல் தகவல்: நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை. பின்னர் அவர் கூறும்போது, "ஹசாரே தரப்பினர் வலியுறுத்தும் பிற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது.

அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு தரப்பும் இணைந்த குழுவை அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த குழு அமைப்பது பற்றியோ, அந்த குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசு கெஜட்டில் வெளியிட இயலாது. வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபற்றி அனைத்து உறுதிமொழிகளையும் அளிக்கவும் தயார். 

இன்னொரு கோரிக்கையான, இருதரப்பும் அங்கம் வகிக்கும் அரசின் குழுவுக்கு அமைச்சரவையில் இல்லாத வெளிநபர் தலைவராக இருக்கவும் அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம் என்பதால், அதையும் ஏற்க முடியாது' என்றார். இந்த தகவல்கள் உண்ணாவிரத மேடையில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த குழுவுக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தலைவராக இருப்பார் என்றும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது உண்ணாவிரத பந்தல் முன்பாக குழுமியிருந்த அனைவருமே கோபமும், ஆத்திரமும் அடைந்தனர். வரும் 13ம் தேதி ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடப்பது கண்டு அரசுகள் அலறுகிறது. 

இதன் வெளிப்பாடாக, ஆளாளுக்கு ஒரு போராட்டம் நடத்தும் அபாயம் ஏற்படும் என்று காங்., தகவல் தொடர்பாளர் சிங்வி கூறினார். பிரதமர் மன்மோகன் ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அரசும் நேற்று தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டது.
http://nimg.sulekha.com/others/thumbnailfull/anna-hazare-2011-4-6-10-21-28.jpg
13ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்: முக்கிய கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதையடுத்து, உண்ணாவிரத மேடையிலிருந்த படியே அன்னா ஹசாரே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 13ம் தேதி அன்று ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். 

ஊழலை எதிர்ப்பதில் அலட்சியம் காட்ட நினைக்கும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழு வேண்டுமென்றும், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 12ம் தேதி அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராமநவமி விடுமுறை என்பதாலும், மக்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்றும் நிர்வாகிகள் முடிவு செய்ததையடுத்து சிறை நிரப்பும் போராட்டம் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

பின்னர் நிருபர்களிடம் ஹசாரே தரப்பு நிர்வாகிகள் பேசும்போது, "ஹசாரே கூறும் காரணங்களையும், வார்த்தைகளையும் வேண்டுமென்றே திரித்து வெளியிட அரசு முயற்சிக்கிறது. அரசியல் கலப்பு இல்லாத நியாயமான ஒருவர் தான் குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமெனஹசாரே வலியுறுத்துகிறார். இதை ஏற்க அரசு மறுக்கிறது' என்றனர்.

பெருகுகிறது ஆதரவு: ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் குவியத் துவங்கியுள்ளனர். யோகா குரு ராம்தேவ், பாலிவுட் நட்சத்திரம் அனுபம்கெர் போன்ற பிரபலங்களும் வந்திருந்தனர். அனுபம்கெர் பேசும்போது, "சச்சின், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற முக்கியமானவர்களும் வர வேண்டும். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றார்.

Friday, April 08, 2011

ஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தியது ஜூ வி

ராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

வேண்டிய நிறுவனங்களுக்கு ரகசியத் தகவல் தந்தார்கள்!
ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் சம்பந்தப்​பட்ட 'ஏ-ஒன்’ குற்றவாளியான
http://www.maniyosai.com/cms/images/stories/a.raja%20-%20file%20pic.jpg
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையை எதிர்கொள்ளத் தயாராகி, நீதிமன்றத்தில் ஆஜரானார்! 
கிட்டத்தட்ட 60 நாட்கள் சிறை​வாசத்தில் மனிதர் சற்று இளைத்து, முகம் வாடிக் காணப்பட்டார்.

சரியாக அயர்ன் செய்யப்படாதபேன்ட் சட்டை​யோடு நின்றார். மற்ற குற்றவாளி​களின் உறவினர்கள், நண்பர்கள் எல்​லாம் வந்திருக்க... ஆ.ராசாவின் மனைவி​யோ குழந்தைகளோ , நெருங்கிய உறவினர்​களோகூட நீதிமன்றத்துக்கு வரவில்லை.

''என்னுடைய பாவத்தை நானே சுமக்கிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம்!'' என்று  ஆ.ராசாவே கூறிவிட்டாராம். தி.மு.க-வுக்கு நெருக்கமான டெல்லி மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசத்திடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் ஆ.ராசா.


வெறும் 127 பக்கங்கள்தான் குற்றப்​பத்திரிகை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 125 சாட்சிகளுக்கும் கிட்டத் ​தட்ட 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 654 தஸ்தாவேஜுகளும் டிரங்க் பெட்டியில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு வந்து இறங்கிய​போது த்ரில் கூடியது.


சி.பி.ஐ. டி.ஐ.ஜி. எஸ்.கே.பல்சானியா மற்றும் விவேக் பிரியதர்சினி ஆகியோரை சந்தித்துக் கை குலுக்கிய ஆ.ராசா, ''நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது வேறு. ஆனால், உங்களைப் பாராட்டுகிறேன். இவ்வளவு விஷயங்களை, குறுகிய காலத்தில் கொண்டுவந்தது பாராட்டுக்கு உரியது!'' என்றார்.  ஷாகித் பால்வாவும் தன் பங்குக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினார். ''எங்களை மட்டும் கைது செய்து உள்ளே அனுப்பிவிட்டு, மற்ற நிறுவனங்களையும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் கௌர​வமாக நடத்துகிறீர்கள். இது அக்கிரமம்!'' என்றார் பால்வா!


இந்த ஊழலில் விழுங்கப்பட்ட பண விவகாரங்களை சி.பி.ஐ. கண்டுபிடித்ததோ... இல்லையோ, இந்த ஊழலின் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதைக் குற்றப் பத்திரிகையாக நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. இந்த முதல் குற்றப் பத்திரிகையில் ஊழல் பற்றி சி.பி.ஐ. தெரிவித்துள்ளவை கொஞ்சம்தான்.

''மே 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றபோது, தன்னோடு சுற்றுச்சூழல் அமைச்​சகத்தில் பிரைவேட் செக்ரெட்டரியாக இருந்த ஆர்.கே.சந்தோலியா, கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த சித்தார்த்த பெஹுரா இருவரையும் தன் அமைச்சகத்துக்கு அழைத்து வந்து, செயலராக ஆக்கினார். திட்டமிட்டுத் தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து சதித் திட்டம் தீட்டினார்.

அதேபோல, ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், மற்ற குற்றவாளிகளான டிபி ரியாலிட்டி ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் சஞ்சய் சந்திரா எல்லோரும் அவருக்குப் பழக்கமானார்கள். இந்தத் தொழில் அதிபர்களின் பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆ.ராசா அப்போதே அனுமதி வழங்கி உள்ளார். இவர் அமைச்சரானவுடன் முதல் காரியமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், யுனிடெக் நிறுவனத்துக்கும், ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்தைக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்!

ஸ்வான் டெலிகாம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு மனு செய்து இருந்தது. யுனிடெக் நிறுவனம் விதவிதமான பெயர்களில் எட்டு நிறுவனங்களைத் தயாராக வைத்திருந்தது.

1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றின் (என்.டி.பி.99) அடிப்​படையில் டிராய் அடிக்கடி வலியுறுத்திய விஷயம், 'ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்குப் போக, ஸ்பெக்ட்ரம் மீதம் இருந்தால்தான்... புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கவேண்டும்’ என்பது. ஆனால், ஆ.ராசா இந்த ஸ்பெக்ட்ரம் இருப்பை அறிந்துகொள்ளாமலே புதிய உரிமங்களை அளிக்கத் தொடங்கினார்.

புதிய உரிமங்களைப் பெறும் விண்ணப்பங்களை அளிக்கும் தேதியை அக்டோபர் 1 என்று அறிவித்துவிட்டு, பின்னர் 'செப்டம்பர் 24 வரை அளிக்கப்பட்டவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று அறிவித்தார். இந்த மாற்றம் குறித்து சட்ட அமைச்சகத்துக்கு 2007 அக்டோபரில் தகவல் கொடுத்தார். சட்ட அமைச்சகம், 'இது அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியும், அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பாமல், தன் முடிவில் ராசா குறியாக இருந்தார். அதோடு, 'அப்படி அனுப்புவது தேவை இல்லாதது’ என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார்!

02.11.2007-ல், 'ஸ்பெக்ட்ரம் போதுமானதாக இல்லாத நிலையில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இதற்குரிய ஒதுக்கீடுகளை கவனமாகவும் வெளிப்படையாகவும் செய்யவேண்டும்’ என்று பதில் எழுதினார் பிரதமர்.

அந்தக் கடிதத்துக்கு, அன்று இரவே சந்தோலியாவை வைத்துக்கொண்டு பதில் எழுதிய ஆ.ராசா, 'ஒரு சிறு விதிமுறைகூட மீறாமல் தொலைத் தொடர்பு துறை வெளிப்படையாக இந்த உரிமங்களை வழங்குகிறது’ என்று தெரிவித்தார். ஆனால், நடந்தவையோ வேறு!

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை தரும் கொள்கையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. 'முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றியதைத்தான் பின்​தொடர்ந்​தேன்’ என்று கூறினார் ஆ.ராசா. ஆனால், முதலில் விண்ணப்பித்தவர்கள் என்கிற முறையை மாற்றி, 'உரிமக் கட்டணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை’ என்று ஆ.ராசா மாற்றினார். 

கைப்பற்றப்பட்ட ஃபைல்கள் மூலம் இது தெரிய வருகிறது. இதில்தான் சொலிசிட்டர் ஜெனர​லையும் ஆ.ராசா ஏமாற்றியுள்ளார். இதில் ஆ.ராசாவின் கூட்டாளி அதிகாரிகளான ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெஹுரா ஆகி​யோர் கூட்டுச் சதிகள் புரிந்துள்​ளனர்.


முதலில் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற முறை இருந்​திருந்​தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்​​துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்​பட்டவுடன் ஏழு நாட்​களுக்குள் விண்ணப்பதாரர்கள் தொலைத் தொடர்புத் துறையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் 15 நாட்களில் நுழைவுக் கட்டணத் தொகையை வங்கி கியாரன்ட்டிகள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்டாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொன்றும் படிப்படியாக நடந்தால், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தகுதி இழந்துவிடும் என்பதால், அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர்!  

தங்களுக்கு வேண்டிய இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரகசியத் தகவல்களைக் கொடுத்தனர். அதாவது, 'யார் முதலில் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டுவருகிறார்களோ, அவர்களுக்குத்தான் அனுமதி’ என்கிற தகவல், அறிவிப்பு வருவதற்கு முன்கூட்டியே இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.


இதன்படி இவர்கள் வங்கி கியாரன்ட்டி, டிமாண்ட் டிராஃப்ட் எல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே எடுத்துத் தயாராக இருந்தனர். இந்த அறிவிப்பு, 2008 ஜனவரி 10-ம் தேதி பிற்பகல் 1.47-க்கு பத்திரிகை செய்தி, வெப்சைட் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் 3.30 மணிக்கு அனுமதிக் கடிதம் விநியோகிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படுகிறது.

இதன்படி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அவகாசத்தில் மற்ற கம்பெனிகளை எல்லாம் திணறடித்துவிட... ஸ்வான் மற்றும் யுனிடெக்கின் எட்டு நிறுவனங்கள் இந்த வங்கி கியாரன்ட்டிகளைக் கொடுத்தன. அனுமதிக் கடிதங்களையும் முதலில் பெற்றுச் சென்றனர். 

இந்த இரு நிறுவனங்கள் உட்பட 120 நிறுவனங்கள் கடிதங்களைப் பெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியே தள்ளப்பட்டன. இதனால், முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை விவகாரத்திலேயே தில்லுமுல்லு நடந்து உள்ளது!'' என்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் குற்றப் பத்திரிகையில்!


இப்படி ஆதாரங்களோடு பல விஷயங்களையும் சொல்லி இருக்கும் சி.பி.ஐ., அடுத்து ஏப்ரல் 25-ல் வைக்கப்போகும் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இன்னும் பல அணுகுண்டுகள் வெடிக்கும்!

அமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்திரா கிளு கிளு பேட்டி - காமெடி கும்மி

http://www.bollywoodbreak.com/photos/neetu-chandra-lucky/Neetu-Chandra-5.jpg 

ன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து. 

கன்னித்தீவுன்னா கன்னிகள் மட்டுமே உள்ள தீவா? இதுவரை யாருமே எண்ட்டர் ஆகாத ஃபிரஸ் தீவா? # டவுட்டு

1, '' 'ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?'' 

''அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.

ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்.. 

அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார். 

எங்கே? கேரவுன் வேன்லயா?

இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!''

ம் ம் பார்த்துட்டு ஜொல்றோம்.. அடச்சே.. சொல்றோம்.. 

2. ''அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே... என்ன ஆச்சு?'' 

''நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது. 

சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன். 

அப்படியா? வாங்க .. 20 நிமிஷம் பேசிட்டிருக்கலாம்.. ஹி ஹி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtYR1VeWH7fTg4Agacfo1XGwWhBoKHVlPYQ6mrDaoHJsapaJqLi2aPQ9ODlywC01OixbhiVFXP_QNWKqKq95JT-iUMqL2AbTlku1ose72P6B71U4I6zsf57FewphtqPW2A1ihHwKf01E0/s1600/neetu_chandra_hot_thighs.jpg
அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?

மத்தவங்க, பெத்தவங்க,ஒன்னுக்கும் வழி அத்தவனுங்க எப்பவும் இப்படித்தாங்க.. அவ்ங்களைப்பத்தி நமக்கென்ன? வாங்க.. நாம பழகலாம்.. 
எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!''

படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தான் சக்களத்தி என தெரியாமல்.... 

3. ''லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?'' 

 (பார்க்கறவங்களுக்குத்தான் தைரியம் வேணூம்.. அவ்ங்களுக்கென்ன?)

''நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத் தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!''

 அம்புட்டு அப்பாவியா நீங்க..?

4. ''நல்லாத் தமிழ் பேசுறீங்களே?'' 


''நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''


எப்படி? ஆ  ன  ந்  த  வி க  ட  ன்.. அப்படின்னா?

5. ''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?'' 

''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் 'தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்... நீத்து சந்திரா!''

தேஸ்வா புஸ்வா ஆகாம நல்லா ஓடட்டும்..


6. ''நீத்துன்னா என்ன அர்த்தம்?'' 

'' 'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''

எப்போதும் ஃபிரஸ்னு அர்த்தமா?ஹி ஹி 

Thursday, April 07, 2011

கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


-----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


-------------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

 ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

--------------------------------

6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

--------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

-----------------------------------------------
  http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

----------------------------------
9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

Wednesday, April 06, 2011

தி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு முடிவு - காமெடி கும்மி

ழக்கம்போலவே பரபரப்பான தேர்தல் கணிப்​பை வெளியிட்டு
http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg
இருக்கிறது, சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம்!  ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சிக்குப் பாதகமான முடிவுகள் வந்ததாகவும், 'அதை வெளியிடக் கூடாது’ என ஆளும் தரப்பால் மிரட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது!


இவ்வளவுதானா? ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆளும் கட்சியே ஜெயிக்கும்னு மேட்டர் போட்டுட்டு கீழே சின்னதா இவை யாவும் கற்பனையே... அப்படின்னு போட்டிருக்கலாம்.. 


ஆனால், மக்கள் ஆய்வகத்தின் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதக் கடைசியில் நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார், மக்கள் ஆய்வக இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம்.


''எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவிகிதமும் தி.மு.க. அணிக்கு 41.7 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும். பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. அணி கைப்பற்றும் என 51.1 சதவிகிதத்தினரும், தி.மு.க. அணிதான் கைப்பற்றும் என 36.7 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.


அய்யய்யோ... அம்மா ஓவரா ஆட ஆரம்பிச்சுடுவாங்களே.. 

மாவட்டம், தொகுதி அளவிலான நிலைமைகளை வைத்துக் கணக்கிட்டால், 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும் இருக்கின்றன. 59 தொகுதிகளில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது'' என்கிறது, இந்த ஆய்வு முடிவு.

டஃப் ஃபைட் 59ல ஆளுக்கு பாதின்னு கணக்கு போட்டாக்கூட அம்மா வந்துடுவாங்க போல இருக்கே.. அய்யய்யோ...


''இப்போதைய கணிப்பு முடிவு, அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கிறது என்றாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் வியூகத்தின் மூலம் தி.மு.க.வு-க்கு சாதகமாக முடிவுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது...'' என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

 தேர்தல் வியூகம்னா ஓட்டுக்கு ரூ 5000 தர்றதா பேசிக்கறாங்களே.. அதானே..?


''தேர்தல் அறிக்கை, சுமுகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெரு முனைக் கூட்டம் - பொதுக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் போன்ற வியூகங்களில் தி.மு.க அணி மக்களை ஈர்த்திருக்கிறது.

 எனக்கென்னவோ இலவசம், ஓட்டுக்கு பணம் இந்த 2 மேட்டர் தான் அய்யா முன்னிலை வகிக்க ஒரு (இரு) காரணமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு.




உட்கட்சிப் பூசல்கள் இல்லாதது, போஸ்டர், பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க அணி முன்னிலையில் இருக்கிறது.

இன்று ( 6.4.2011) கோவைல அம்மா+ கேப்டன் இணைந்த கைகள் போல போஸ் குடுத்து பிரச்சாரம் நடக்கப்போகுதாம்.. அங்கே என்னென்னெ காமெடி நடக்கப்போகுதோ..?


வியூகம் வகுத்துச் செயல்படுவதில் தி.மு.க-வின் எழுச்சியும் வீச்சும் இப்போதைய கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்!'' என்கிறார்கள்.

கள்ள ஓட்டு போடறது, பண பட்டுவாடா பண்றது இதுல எல்லாம் கழகத்தோட  வியூகம் பிரமாதமா இருக்குமே..?


ம.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் ஏற்படும் தாக்கம் பற்றிக் கேட்டபோது, ''இந்தப் புறக்கணிப்பால் அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு'' என 25.4 சதவிகிதத்தினரும் ''ம.தி.மு.க-வுக்குதான் பாதிப்பு'' என 7.4 சதவிகிதம் பேரும் ''தி.மு.க. அணிக்கு பாதிப்பு'' என 3.8 சதவிகிதம் பேரும் ''யாருக்கும் பாதிப்பு இல்லை!'' என 53.6 சதவிகிதத்தினரும் கருத்துக் கூறியுள்ளனர். ''கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ம.தி.மு.க எடுக்கப்போகும் நிலைப்பாடும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்பதும் இந்தக் கள ஆய்வின் முக்கிய முடிவுகளில் ஒன்று!

 வை கோ வின் தேர்தல் புறக்கணிப்பு நிச்சயம் அம்மாவுக்குத்தான் பாதிப்பு.. தி மு க வுக்கு 1% கூட பாதிப்பு இல்லை.. வை கோவுக்கான 4% ஓட்டுல 2 % ஓட்டு தி மு க வுக்கு விழ  வாய்ப்பு இருக்கு.. ஆனா 0.0001% கூட அம்மாவுக்கு விழ வாய்ப்பில்லை...


ஆய்வு முடிவை வெளியிட்ட பேராசிரியர் ராஜ​நாயகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


1. ''ஊழல் விவகாரம் பற்றிய கேள்விகளே இந்த ஆய்வில் இல்லையே?''

''மக்கள் எதைப் பிரச்னையாகக் கருதுகிறார்கள் என்பதுதான் எங்கள் ஆய்வின் அணுகுமுறை அடிப்படை. நாங்கள் சந்தித்த மக்கள், ஊழலையும் ஒரு பிரச்னையாகச் சொன்னார்கள். அரசுத் துறைகளின் ஊழல், முதல்வர் குடும்பத்தின் சொத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எல்லாம் பொதுவாகப் பேசுகிறார்கள். ஆனால், இதை வைத்துத் தேர்தலைத் தீர்மானிப்பதாக அவர்கள் சொல்லவில்லை.''

மக்கள் மனம் விசித்திரமானது.. கடைசி நேரத்தில் அது திடுக் முடிவுகளை எடுக்கக்கூடும்... 

2. ''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?''

''எல்லா இடங்களிலும் சுவர், சுவரொட்டி விளம்பரங்​களை மிகவும் குறைவாகவே பார்க்கமுடிந்தது. இதனால், பெரிய கட்சியின் வேட்பாளர் பெயர்கூட மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை. பொதுக் கூட்டம் நடத்தும்போதுதான், பெயர்களையே மக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களைப்பற்றி எந்தப் பகுதியிலும் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்​தின் கெடுபிடியால், பெரும்பாலான இடங்கள் இறுக்கமாக இருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை 'ஜனநாயக விரோதம்’ என்று கணிசமானவர்கள் கருத்துக் கூறினார்கள்.


கடந்த  ஒன்பது நாட்களில், 11 இடங்களில் தேர்தல் ஆணையத்தினர் எங்களின் வாகனங்களையும் சோதனை இட்டனர். நாங்கள் அதை கேமராவில் பதிவுசெய்ய... 'நம்பளையே படம் பிடிக்கிறாங்க!’ என்று கிண்டல் செய்தார்கள். நேர்மாறாக, ஒரே ஒரு அதிகாரி, 'ஏன் சோதனை செய்கிறோம்?’ என எங்களுக்கு ஒரு பேட்டியே கொடுத்தார்!''


விட்டா கழகத்தினர் அவங்களுக்கு பொட்டியே குடுத்திருப்பாங்க.. 

3. ''எத்தனை தொகுதிகளுக்குப் போய் வந்தீர்கள்... பரவலான நிலவரம் என்ன?''

''39 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 117 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குச் சென்றோம். பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. அணிக்கு சாதகமான நிலைதான்.

இதில், தெற்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடு இல்லை!


அதே சமயம், தி.மு.க-வின் தேர்தல் வியூகங்கள் அ.தி.மு.க. அணியைவிட அதிக அளவிலான மக்களிடம் சென்ற​டைந்து இருக்கிறது. இவர்களின் 'ரீச்’சை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவு அமையலாம்!''

 இப்படி எல்லாம் குழப்பக்கூடாது... அம்மாவா? அய்யாவா? வெட்டு ஒண்ணு .. மஞ்சள் துண்டு ரெண்டு... என பதில் வேணும்..  



Tuesday, April 05, 2011

அழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/monika/stills/monika_11.jpg 

அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌கன்‌னு 
என்‌ ரசி‌கர்‌கள்‌ சொ‌ல்‌றா‌ங்‌க!
- மோ‌னி‌கா‌ ஜி‌லீ‌ர்‌ பே‌ட்‌டி‌

முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌ககை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ஆட்‌டுக்‌கா‌ரப்‌ பெ‌ண்‌ணா‌க வரும்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பே‌சப்‌படுவதி‌ல்‌ கூடுதல்‌ சந்‌தோ‌சத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌. இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ தா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ உற்‌சா‌க பே‌ட்‌டி‌.

1. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு கி‌டை‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌...

முத்‌துக்‌கு முத்‌தா‌க சூ‌ட்‌டி‌ங்‌ நடக்‌கும்‌போ‌தே‌, படக்‌குழுவி‌ல்‌ உள்‌ள அத்‌தனை‌ பே‌ரும்‌ என்‌னோ‌ட நடி‌ப்‌பை‌ பா‌ரா‌ட்‌டுனா‌ங்‌க. அதோ‌ட நா‌ன்‌, வி‌க்‌ரா‌ந்‌த்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கள்‌ பெ‌ரி‌தும்‌ பே‌சப்‌படும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. படம்‌ வெ‌ளி‌யா‌ன பி‌ன்‌ நி‌றை‌ய தெ‌ரி‌ஞ்‌சவங்‌க, தெ‌ரி‌யா‌தவங்‌க, சி‌னி‌மா‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌ல இருக்‌கி‌றவங்‌கன்‌னு நி‌றை‌ய பே‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. கா‌தல்‌ நி‌றை‌வே‌றா‌ம தவி‌க்‌கி‌றத ,வெ‌ளி‌க்‌கா‌ட்‌டுற உங்‌க நடி‌ப்‌பு‌ கண்‌ கலங்‌க வை‌க்‌குதுன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. எனக்‌கு இப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த இரா‌சு.மதுரவன்‌ சா‌ருக்‌கு இந்‌த நே‌ரத்‌துல நா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌ல கடமை‌ப்‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌.

என்னங்க  நீங்க ? அவர் அந்தப்படத்துல  உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..? # நாரதர் நாதமுனி

2. அடுத்‌தது நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கு. அது பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌க...

இவ்‌வளவு‌ சீ‌க்‌கி‌ரமா‌, அதா‌வது இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. இப்‌படி‌ என்‌ படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது இதுதா‌ன்‌ முதல்‌ தடவை‌. 

நஞ்‌சுபு‌ரம்‌ படத்‌துல மலர்‌ங்‌கி‌ற ஆட்‌டுக்‌கா‌ர பொ‌ண்‌ணா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. ரொ‌ம்‌ப யதா‌ர்‌த்‌தமா‌ன கே‌ரக்‌டர்‌. இப்‌ப படம்‌ வெ‌ளி‌யா‌கி‌ ஓடி‌ட்‌டி‌ருக்‌கு. நி‌றை‌ய பே‌ர்‌ என்‌ கே‌ரக்‌டரும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ நல்‌லா‌ இருக்‌குன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. 2011ம்‌ வருஷம்‌ எனக்‌கு சந்‌தோ‌சமா‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கு.

உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..?வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன் 
http://chennai365.com/wp-content/uploads/actress/Monika/Monika-Stills-007.jpg
3. அழகி‌ மோ‌னி‌கா‌ மீ‌து தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரசி‌கர்‌களுக்‌கு இருந்‌த அபி‌ப்‌ரா‌யம்‌ இப்‌பவு‌ம்‌ அப்‌படி‌யே‌ இருக்‌கி‌றதா‌?

கண்‌டி‌ப்‌பா‌. முன்‌ன வி‌ட கூடுதலா‌வே‌ இருக்‌கு.  அது என்‌னோ‌ட ஈமெ‌யி‌ல்‌ பா‌த்‌தீ‌ங்‌கன்‌னா‌ தெ‌ரி‌யு‌ம்‌. அவ்‌வளவு‌ ரசி‌கர்‌கள்‌ இப்‌பவு‌ம்‌ என்‌னோ‌ட வெ‌ப்‌சை‌ட்‌ பா‌ர்‌த்‌து என்‌ மெ‌யி‌ல்‌ அட்‌ரஸ்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சு பா‌சமா‌ கடி‌தம்‌ அனுப்பு‌றா‌ங்‌க. என்‌னோ‌ட ஒவ்‌வொ‌ரு படம்‌ வெ‌ளி‌யா‌கும்‌போ‌தும்‌ அவங்‌க சந்‌தோ‌சத்‌தை‌யு‌ம்‌ பா‌ரா‌ட்‌டை‌யு‌ம்‌ சொ‌ல்‌வா‌ங்‌க. இப்‌போ‌ அடுத்‌தடுத்‌து முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ அனுபவங்‌கள்‌ கூடி‌னா‌லும்‌ நா‌ன்‌ எப்‌பவு‌மே‌ அழகி‌ மோ‌னி‌கா‌ தா‌ன்‌.


ரைட்டு.. அதை நாங்க நம்பனும்னா உங்க ஈமெயில் அட்ரசை மட்டும் குடுத்தா பத்தாது,... பாஸ்வோர்டும் குடுங்க...இப்படிக்கு பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பன்னாடை பாஸ்கரன்

4. உங்‌களுக்‌கு தனி‌த்‌துவமா‌ன நா‌யகி‌ என்‌ற அடை‌யா‌ளம்‌ ஏன்‌ இன்‌னும்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌?

அதுக்‌கா‌ன நே‌ரம்‌ இப்‌பதா‌ன்‌ வர ஆரம்‌பி‌ச்‌சி‌ருக்‌குன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, எனக்‌குன்‌னு தனி‌ அடை‌யா‌ளம்‌ தர்‌ற மா‌தி‌ரி‌ படங்‌கள்‌ அழகி‌க்‌கு அப்‌பு‌றம்‌ எனக்‌கு அமை‌யலே‌ன்‌னு தா‌ன்‌ சொ‌ல்‌லணும்‌. இப்‌போ‌ முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ அதை‌க்‌ கொ‌ஞ்‌சம்‌ நி‌றை‌வே‌த்‌தி‌ இருக்‌கு. 

மற்‌றபடி‌ நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌குள்‌ள வரும்‌போ‌து, ஒரு ஹீ‌ரோ‌யி‌னா‌ வரல. ஒரு ஹி‌ட்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ‌யி‌னா‌ நா‌ன்‌ அறி‌முகம்‌ ஆகி‌ இருந்‌தா‌ எனக்‌கு இன்‌னும்‌ அடை‌யா‌ளம்‌ கி‌டை‌க்‌கலே‌ங்‌கி‌றது பற்‌றி‌ நா‌ன்‌ கவலை‌ப்‌படலா‌ம்‌. ஆனா‌, நா‌ன்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌ அறி‌முகமா‌கி‌, அதுக்‌கப்பு‌றம்‌ சி‌ன்‌னச்‌ சி‌ன்‌ன சப்‌போ‌ர்‌ட்‌டி‌ங் கே‌ரக்‌டர்‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌. 
அதுக்‌கப்‌பு‌றம்‌தா‌ன்‌ இந்‌த இடத்‌துக்‌கு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ நா‌ன்‌ இப்‌ப இருக்‌கி‌ற இடம்‌ உயரமா‌ன இடம்‌ தா‌ன்‌. இந்‌த உயரமே‌ எனக்‌கு சந்‌தோ‌சந்‌தா‌ன்‌. இதை‌வி‌ட உயரமா‌ன இடத்‌தி‌ற்‌கு அடுத்‌தடுத்‌து அமை‌கி‌ற படங்‌கள்‌ என்‌னை‌க்‌ கொ‌ண்‌டு போ‌கும்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்..  #உண்மை விளம்பி உலகநாதன்

http://spicy.southdreamz.com/cache/awesome-pictures-of-south-actress/monika-.jpg_650.jpg
5. கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌சீ‌ங்‌க, அப்‌பு‌றம்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ன்‌னீ‌ங்‌க... ஏன்‌?

கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கணும்‌னு நா‌ன்‌ எப்‌பவு‌ம்‌ ஆசை‌ப்‌பட்‌டதி‌ல்‌ல. அந்‌தக்‌கதை‌ ரொ‌ம்‌ப பெ‌ரி‌ய அளவு‌ல பே‌சப்‌படும்‌னு நம்‌பி‌னே‌ன்‌. அதோ‌ட அது கதை‌க்‌கு தே‌வை‌ப்‌படுதுன்‌னு இயக்‌குனர்‌ வி‌ரும்‌பி‌ கே‌ட்‌டதா‌ல்‌ நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ கமி‌ட்‌ பண்‌ண படங்‌கள்‌ எல்‌லா‌மே‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு தா‌ன்‌ கமி‌ட்‌ பண்‌ணே‌ன்‌. அதை‌யு‌ம்‌ மீறி‌ ஒரு படத்‌துல ஒரு பா‌ட்‌டுக்‌கு மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கச்‌ சொ‌ல்‌லி‌ என்‌கி‌ட்‌ட கெ‌ஞ்‌சி‌னா‌ங்‌க. நா‌ன்‌ எவ்‌வளவோ‌ பி‌டி‌வா‌தமா‌ மறுத்‌தே‌ன்‌. அப்‌பு‌றம்‌ வீ‌ணா‌ பி‌ரச்‌சி‌னை‌ எதுக்‌குன்‌னு அந்‌தப்‌ பா‌ட்‌டுல மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌ச வே‌ண்‌டி‌யதா‌ப்‌ போ‌ச்‌சு. அதுக்‌கப்‌பு‌றம்‌ யா‌ர்‌ என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டா‌லும்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கி‌றதி‌ல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்.

அதோ‌ட என்‌ ரசி‌கர்‌கள்‌ மறக்‌கா‌ம என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டுக்‌கி‌ற ஒரு வி‌ஷயம்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கக்‌ கூடா‌துங்‌கி‌றதுதா‌ன்‌. நா‌ன்‌ அவங்‌க வீ‌ட்‌டுப்‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கே‌னா‌ம்‌. நி‌றை‌ய ரசி‌கர்‌கள்‌ என்‌ அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌க. அதனா‌ல கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கா‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க.

ஒரு பொ‌ண்‌ணை‌ அழகா‌ கா‌ட்‌டுனா‌, அதே‌ கி‌ளா‌மர்‌ தா‌ன்‌. அந்‌தக்‌ கி‌ளா‌மர்‌ தே‌வை‌ தா‌ன்‌. முகம்‌ சுளி‌க்‌க வை‌க்‌கி‌ற கி‌ளா‌மர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌.

ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன் 

6. பெ‌ரி‌ய இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பதி‌ல்‌லை‌யா‌?

அப்‌படி‌ச்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. இப்‌ப இரா‌சு. மதுரவன்‌ சா‌ர்‌ பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌ தா‌ன்‌. என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌. கண்‌டி‌ப்‌பா‌ அதை‌ நா‌ன்‌ கா‌ப்‌பா‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌னு நம்‌புறே‌ன்‌. அதே‌ மா‌தி‌ரி‌ என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு யா‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌லும்‌ நா‌ன்‌ சி‌ன்‌சி‌யரா‌ உழை‌க்‌க தயா‌ரா‌ இருக்‌கே‌ன்‌. அப்‌படி‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ இனி‌ ஒவ்‌வொ‌ண்‌ணா‌ அமை‌யு‌ம்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

கே வி ஆனந்த்,ஸ்ரீராம்,சந்தோஷ் சிவன்  மாதிரி ஃபோட்டோகிராஃபர் கம் டைரக்டர்ஸ் படங்கள்ல நடிங்க.. உங்க அழகு இன்னும் மிளிரும் 
http://tamilnews.anytimechennai.com/wp-content/uploads/2009/01/monica281208.jpg
7. இப்‌போ‌து நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ படங்‌கள்‌...

அகரா‌தி‌ படம்‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அகரா‌தி‌ படத்‌தி‌ல்‌ கதை‌யோ‌ட முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நா‌ன்‌ தா‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ வர்‌ணம்‌ படமும்‌‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அதுல நா‌ன்‌ ஒரு டீ‌ச்‌சர்‌ கே‌ரக்‌டர்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. வர்‌ணம்‌ வரும்‌பபோ‌து என்‌னோ‌ட நடி‌ப்‌பு‌ பே‌சப்‌படும்‌னு நா‌ன்‌ நம்‌பு‌றே‌ன்‌. அதோ‌ட வர்‌ணம்‌ என்‌ சி‌னி‌மா‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌ வண்‌ணத்‌தை‌யு‌ம்‌ மா‌ற்‌றும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌.

இது தவி‌ர, தமி‌ழ்‌ல நரன்‌ என்‌ற படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. கன்‌னடத்‌தி‌ல்‌ "ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. "நோ‌ என்‌ட்‌ரி‌" இந்‌தி‌ப்‌ படத்‌தி‌ன்‌ ரி‌மே‌க்‌ அது. இந்‌தி‌யி‌ல்‌ இஷா‌ தி‌யோ‌ல்‌ நடி‌ச்‌ச கே‌ரக்‌டர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌.  அப்‌பு‌றம்‌ இரண்‌டு தமி‌ழ்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ச்‌சி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அந்‌தப்‌ படங்‌கள்‌ பற்‌றி‌ய அறி‌வி‌ப்‌பு‌கள்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கும்‌. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ற்‌கு அப்‌பு‌றம்‌ இரண்‌டு மூ‌ணு படங்‌களுக்‌கா‌க பே‌சி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. கதை‌ கே‌ட்‌டுட்‌டி‌ருக்‌கே‌ன்‌. இந்‌த வருஷம்‌ எனக்‌கு ஆரம்‌பமே‌ நல்‌லா‌ இருக்‌கு.

மோ‌னி‌கா‌ அடுக்‌குவதை‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ 2011 மோ‌னி‌கா‌ வருடமா‌க இருக்‌கும்‌ போ‌லி‌ருக்‌கு.

"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.. இன்னொரு அமலா பால் ஆக ஐடியா பண்றீங்களோ..?#டவுட்டு

Monday, April 04, 2011

தப்ஸி உங்கள் சாய்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4O4v5C2UtveG4zh5XYaeojnmVY9Vb270LEPvGUZzHvciymuGLMqXA0trUfyrAay2Iss4XBoKePq4HlkCfm_-EMP4-2Yu_59U8yqjDGMfLg01gOKKH8e6kpCFX7JjQK8u7SzuEBxCVlnk/s1600/tapsi+%2528115%2529.jpg 

1. யார்  கூட  கூட்டணி?-னு  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  நான்  வந்துட்டேன்.

விளையாடாதீங்க  தலைவரே!  நீங்க  டூ  லேட்...  எலெக்‌ஷனே  முடிஞ்சிடுச்சு.

-----------------------------

2. தலைவரே!  உங்க  பள்ளிப்படிப்புல  சிங்கிள்  டிஜிட்  மார்க்தான்  எடுத்தீங்கன்னு  வெளில  சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம்  கூட்டணி  கட்சில  சிங்கிள்  டிஜிட்லதான்  சீட்  குடுப்பாங்க...

--------------------------

3. ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசரான  நீங்க  எப்ப  பாரு  லேடீஸ்  கூட  சுத்திட்டு  இருக்கீங்களாமே?

தப்புதான்...  அதுக்காக  அஃபீஸ்ல  அரசு  ஊழியர்ங்கற  நேம் போர்டை  சரச  ஊழியர்னு  மாத்திடறதா?

-----------------------------

4. என்ன  தலைவரே! 10,000  ஓட்டு  வித்தியாசத்துல  ஜெயிச்சுடுவீங்களா?

10,000  ஓட்டு  மொத்தமா  வர்றதே  சிரமம்தான்.

------------------------------

5. தேர்தல்  பிரச்சாரத்துல  மக்களை  பகிரங்கமா  மிரட்னாராமே தலைவர்?

ஆமா...  என்னை  ஜெயிக்க  வைக்கலைன்னா  மறுபடியும்  சினிமாவுக்கே  நடிக்க  வந்துடுவேன்னாரு.

---------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2010/05/Tapsi-Photo-Gallery-58.jpg
6. புள்ளி  விபரப்புலி-னு  பேரெடுக்க  ஆசைப்பட்டு  தலைவர்  தேர்தல்  கமிஷன்  கிட்டே  மாட்டிக்கிட்டாரா?  எப்படி?

இந்த  தொகுதில  மொத்தம்  75,000 கள்ள  ஒட்டுக்கள்  பதிவாகி  இருக்கு.  அதுல  68,000 என்  கட்சி  ஆளுங்க  போட்டது  7,000  கூட்டணி  கட்சி  ஆளுங்க  போட்டது-னு சொல்லி  மாட்டிக்கிட்டாரு.

-------------------------------

7. C.M.  ஆகியே  தீருவேன்னு  தலைவர்  234  தொகுதிக்கும்  நடந்தே  பிரச்சாரத்துக்கு  போறாரு.

அடடா...  நடக்காத  விஷயத்துக்கு  ஏன்  நடக்கறாரு?

----------------------------

8. பட்டி  மன்றத்தலைப்பால  கட்சிக்கு  பிரச்சனை  வந்துடுச்சாமே?

ஆமா...  மகளிர்  அணித்தலைவியின்  புகழுக்கு  காரணம் அவரது  சதைப்  பிடிப்பா?  உடல்  அழகின்  வடிவமைப்பா?-இதுதான்  டைட்டிலாம்.

---------------------------

9. தலைவர்  பழசை  என்னைக்கும்  மறக்கமாட்டார்-னு  எப்படி  சொல்றீங்க?

இன்னும்  அவரது  டைரிக்குள்ள  ஜெயமாலினி,  அனுராதா,  டிஸ்கோ சாந்தி  ஃபோட்டோஸ்  எல்லாம்  வெச்சிருக்காரே?

--------------------------------

10. தலைவர்  எதுக்காக  நடிகை  தப்ஸியை  பிரச்சாரம்  பண்ண  கூட்டிட்டு  வந்திருக்காரு?

இந்த  தேர்தல்ல  தப்ஸிதான்  கட்சியோட  கதாநாயகியாம்...

Saturday, April 02, 2011

கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

கலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன்,அரசியல் வானில் அதிர்ச்சி அலை

தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள்
 
http://tamizharivu.files.wordpress.com/2008/10/kalaignar.gif
வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள்.
 
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம்பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்!
 
'ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.

'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி  அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


தீர்மானம் கொண்டுவரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.


'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?



தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.


கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.