Monday, November 28, 2011

ஒத்திகை - சாந்தி அப்புறம் நித்யா புகழ் அர்ச்சனா சர்மாவின் ஒலகமகா சினிமா - காமெடி கலாட்டா திரை விமர்சனம்

லோ பட்ஜெட் படம் தானேன்னு யாரும் அல்ப சொல்பமா நினைக்காதீங்க .. பல புது மேட்டர்களை டைரக்டர் அள்ளி தெளிச்சிருக்காரு.. இதய பலஹீனம் உள்ளவர்கள் , தாங்கு திறன் இல்லாதவர்கள் தக்க துணையுடன் வரவும் .. கும்மறதுக்கு முன்னால படத்தை பற்றி வந்த நியூஸ் பாருங்க.. இது எப்படின்னா ஆட்டை வெட்டறதுக்கு முன்னே மஞ்சள் தண்ணீர் தெளிக்கிற மாதிரி.. ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு முன்னால லவ் லெட்டர் தர்ற மாதிரி..

படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னால தயாரிப்பு தரப்பு படத்தை பற்றி பிரஸ் மீட்ல குடுத்த பில்டப் பாருங்க..

டைரக்டர் ஏ.எம்.பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒத்திகை. ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்க, ஹீரோயினாக ஹாட் நாயகி (!!!!!!)அர்ச்சனா சர்மா நடிக்கிறார். ( எப்பாவும் ரொம்ப சூடாவே இருப்பாங்களா?)காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்பதை விளக்கும் படம்தான் ஒத்திகை. பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பல ஜோடிகளின் தற்கொலை தற்கொலையே இல்லை; அது கொலை என்பதை புலனாய்வு செய்து கண்டுபிடித்து படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார் பாஸ்கர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy6ikCVYLKRZ8QXlMPWiqMbR9XolgjUFxFyvqRQ7H9_g9xSjRpChJyJwcwFJii-BTkf3v-7qzNKels6DsiXlx3j-fMKQgoaNy6F4Mlt0aMXiUzQtjDzhLLrgmiBBZvFSQTgdnJBcxpdJk/s1600/Actress+Archana+Sharma+Stills11.jpg

மலை பிரதேசங்களில் அமைந்திருக்கிற தற்கொலை பாறைகளுக்கு வாயிருந்தால் ஓராயிரம் கதைகளை சொல்லும். இதில் பாதி கதைகள் காதல் கதைகளாகதான் இருக்கும். மலை பிரதேசங்களில் நடக்கும் இளம் ஜோடிகளின் தற்கொலை எல்லாம் நிஜமாகவே தற்கொலைதானா என்ற கேள்வியை எழுப்புவதுதான் ஒத்திகை படத்தின் அழுத்தமான கதை.


நான் சேகரித்த நிஜ தகவல்களின் அடிப்படையில் இந்த கதையை அமைத்திருக்கிறேன். சமுதாயம் தற்கொலை என்று நினைத்து கவலைப்படும் பல சாவுகள், தற்கொலையல்ல, கொலை என்ற அதிர்ச்சியை என்னுடைய ஒத்திகை கிளப்பும், என்கிறார் டைரக்டர் பாஸ்கர். ஒத்திகை படத்தின் தயாரிப்பாளரும் ஏ.எம்.பாஸ்கர்தான் என்பது கூடுதல் தகவல். ( அடடா.. ஹீரோ ரோலையும் அவரே பண்ணி இருக்கலாமே?)

படத்தோட ஓபனிங்க்ல ஹீரோ அப்போதான் முத முதலா அந்த ஊருக்கு வர்றாரு.. அவரு இந்து.. காதல் தண்டபாணியோட பொண்ணு தான் ஹீரோயின்  ,பார்த்ததுமே பத்திக்குது... அதுக்குதான் ஹாட் ஹீரோயின் பட்டம் போல.. ஹீரோயின் சைக்கிள்ள பள்ளிக்கூடம் போறப்ப ஹீரோ குறுக்காட்டறாரு... பாப்பாவுக்கு சத்தியமா 28 வயசாவது இருக்கும்.. ஆனா பாருங்க இந்த சீன்ல ஒரு செம காமெடி சீன் வெச்சிருக்காரு இயக்குநர்..

அதாவது ஹீரோயின் ஹீரோ கிட்டே பேசிட்டிருக்கறப்பவே வயிறு வலிக்குதுன்னு உக்காந்துக்கறாரு.. வயசுக்கு வந்துட்டாராம் .. அடபாவமே.. சரி லேட் டிஃபக்ட் போலன்னு நினச்சா ஒரு சீன்ல பாப்பாவுக்கு 17 வயசுதான்னு கோர்ட்ல ஜட்ஜ் சொல்றாரு.. 28 வயசு ஆண்ட்டியை 17 வயசு ஃபிகர்னு சொன்னதுக்காகவே டைரக்டரை மென்மையா கண்டிக்கலாம்.. சரி விடுங்க..

லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சதும் கண்டிக்கறாங்க.. துபாய் மாப்ளைக்கு கட்டி வைக்க முயற்சி பண்றாங்க.. 2 பேரும் ஊரை விட்டு 37 கி மீ ஓடி ஒரு காட்டுக்குள்ள போறாங்க.. இங்கே தான் இடைவேளை ட்விஸ்ட்..

இப்போ பாருங்க ஹீரோயின் கால்ஷீட்டும், ஹீரோ கால்ஷீட்டும் கிடைக்கலை போல.. அதுக்கெல்லாம் அசந்தவரா டைரக்டரு? கதை போக்கையே மாத்திடறாரு.. அதாவது வில்லன் , ஹீரோ ஹீரோயினை தேடிப்போற போலீஸ் ஆஃபீசர்.. அப்டி ஆக்‌ஷன் ட்ரெண்ட்.. யாராவது கேட்டா படம் லவ் ஆக்‌ஷன் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்னு சொல்லிக்கலாமே?

அப்புறம் பார்த்தா அந்த துபாய் மாப்ளை காட்டுக்குள்ள வர்ற ஆளுங்களை கொன்னு மனித உறுப்புகளை பார்சல் பண்ணி சேல்ஸ் பண்ற ஆள்.. ஹீரோயினை சாகடிச்சடறாங்க இடைவேளைலயே .. அவ்வ்வ்வ்


 சாந்தி அப்புறம் நித்யா படத்தை ரசித்தவர்கள் அந்த மாதிரி ஏதாவது இருக்கும் என எதிர்பார்த்து போயிடாதீங்கப்பா. ( நான் அப்படி எதிர்பார்த்து போகலை)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUAZmk8k1uU2fp9fW33xu9JHlN5cwMOZh5rRg7fOzo_qFPucvuUrnOIM5hCt0uhiK_W_4KNqW4fDyCsf_MEgwR-zeyjfFpTrZEhGE2V_omEDN4OJAGv5b2Q1ybU6v89qTQf5zla67W72M/s320/Othigai%20Movie%20Stills.jpg

மொக்கை படத்தில் ரசித்த வசனங்கள்

1.  எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..

சாரி.. நீங்க நினைக்கற பொண்ணு நான் இல்ல.. எனக்கு இன்னும் அந்த வயசு வர்ல..

2.  ஒரு பொண்ணு வயசுக்கு வந்த மேட்டர் கூட இவனுக்கு தெரில.. இவன் முதல்ல மேஜர் ஆகிட்டானா?ன்னு செக் பண்ணனும், இவனை உள்ளே கூட்டிட்டு போங்க.

3. துபாய் பொண்ணு , லோக்கல் ஃபிகரு என்ன வித்தியாசம்?

ஹி ஹி அது துபாய் பொண்ணு இல்ல.. பாய் பொண்ணு தான்.

4. போஸ்ட் மேன் - கோவாலு.......

பார்த்தியா மச்சான்./. என் மேல எவனாவது கை வெச்சான்னா உடனே கவர்மெண்டே ஆள் அனுப்புது பாரு..

5.  ஐ லவ் யூ .....

,ம் ம் ஓக்கே பரவால்ல..... ( என்னமோ காய்கறி ரேட் நிலவரம் பரவால்ல சொல்றமாதிரியே இருக்கே..)

6. ஏய்.. என்னையே ஏமாத்தறியா.. இரு இரு உன்னை வெச்சுக்கறேன்..

 என்னது ?வெச்சுக்கறியா? அப்போ கல்யாணம் கட்டிக்க மாட்டியா? ( ஹி ஹி என் லைஃப்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கல்யாணம் தான் )

7. காயின் பாக்ஸ்ல காசை போட்டேன் .. கால் போகலை காசையும் காணோமே?

டேய் நாயே நீ காசை போட்டது அவன் வாயில.. காயின் பாக்ஸ் பக்கத்துலயே வாயை திறந்து நின்னுருக்கான் அதைக்கூடா பார்க்கலை நீ?

8. ஹல்லோ.... அல்லல்லோஓஒ

ம் சொல்லுங்க..

நீங்க சூப்பர் ஃபிகரா? சுமார் ஃபிகரா?

9.  பெரிய முரளி இவரு.. ஃபோன்லயே லவ் பண்றாரு..

10.  டியர்.. ஃபோன்ல நான் தான் கிஸ் பண்றேன்கறதை எப்படி நீ கண்டு பிடிச்ச?

ஹீரோயின் - ஹி ஹி கிஸ் கூட ஒழுங்கா குடுக்கத்தெரியாத மரமண்டை நீன்னு எனக்கு தெரியும்

http://reviews.in.88db.com/plugins/content/plugin_jw_sig/showthumb.php?img=Othigai-movie/Othigai-movie-stills.jpg&width=200&height=200&quality=80

11. ஹீரோ - நீ என்ன யூஸ் பண்றியோ அதான் நானும் யூஸ் பண்றேன்.. சோப்.. பவுடர்... ( தம்பி.. பாப்பா ஃபேரன் லவ்லி , லிப்ஸ்டிக் யூஸ் பண்ணுதாம், என்ன செய்யப்போறே நீ என்ன செய்யப்போறே? )


12. வில்லன் - நான் ஏதோ சம்திங்க்ராங்க்-னு நினைச்சேன், இப்போதான் தெரியுது சம்திங்க் ராங்க்-னு ( 2ம் 1 தானே குழப்பறானே?)


13. டேய்.. வில்லனே இப்போ யார் வயசுக்கு வந்துட்டாங்கன்னு கார்லயே எங்களை ரவுண்ட் அடிக்கறே?

14. இப்போ எதுக்கு வில்லன் கார்ல இருந்து இறங்கி வர்றான்? மொத்தம் எத்தனை ரவுண்ட் அடிச்சேன்னு கேட்க வர்றானோ?அய்யய்யோ எண்ணாம விட்டுட்டேனே?

15. அப்பாடா, அவனுக்கு மெயில் செண்ட் பண்ணிட்டேன்..

அவன் மெயிலை எப்போ பார்ப்பான்?

ம்.. ரயில்வே கேட்  ஓப்பன் பண்ணூனதும் ரயில், மெயில் எல்லாம் பார்ப்பான்..

16. வில்லன் - டேய்.. சூர்யா மெயில் ஐ டி சொல்லு

சூர்யா மெயில் ஐ டி சொல்லிட்டேன் சார்..


http://www.filmics.com/gallery/d/112083-1/Othigai-Movie-Stills33.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ஹீரோவுக்கு ஓப்பனிங்க் ஃபைட் சீன் வெச்சப்ப ஹீரோ பைக்ல ஒரு கம்பெனி ஓனரை பார்க்க வர்றாரு.. வாசல்ல பைக்கை நிறுத்திட்டு அப்படியே போறாரே? சைடு லாக் பண்ணமாட்டாரா? அட்லீஸ்ட் சாவியை கூட எடுக்காமயா போவார்?

2. ஹீரோ + ஹீரோயின் ஒரு காட்டுக்குள்ள ஒதுங்கி இருக்காங்க.. அப்போ அந்த வழியா வந்த ஹீரோயினுடைய அப்பா பாத்ரூம் போக ஒதுங்கறாரு.. கொலுசு சத்தம் கேட்டு யார்றா அது?னு கேட்டுட்டு காட்டுக்குள்ள போறாரு.. இதுவரை ஓக்கே.. பொதுவா இந்த மாதிரி போறப்ப 1 பர்லாங்க் போய் பார்ப்பாங்க, ஆள் இல்லன்னா அவர் வேலையை பார்த்துட்டு அவர் போயிடனும்.. இவர் என்னடான்னா 12 கிமீ நடந்தே துரத்திட்டு தேடறாரே? ஏன்? அவர் பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தாக்கூட லாஜிக் இருக்கு..

3. அவர் சேஸ் பண்ணக்காரணமே கொலுசு சத்தம்தான்னு 20 நிமிஷம் கழிச்சு கண்டு பிடிக்கற ஹீரோ தன் கால்ல கொலுசை மாட்டிக்கறார்.. எதுக்கு அவ்ளவ் கஷ்டம்? சும்மா பாக்கெட்ல வெச்சாலே போதாதா? சலக் சலக் சத்தம் கேட்குமே.. ஏன்னா பாப்பா கால் சின்னது, ஹீரோ கால் 3 மடங்கு பெரிசா இருக்கு, எப்படி கொலுசு மேட்சா போட முடிஞ்சுது??

4.  ஹீரோயின் பிரஷ்ஷால பல் துலக்கறா. மாமனாக வர்ற வில்லன் அந்த பிரஷை வாங்கி தான் துலக்கறான் உவ்வே.. வேற நல்ல கற்பனையே வராதா?

5. ஒரு சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்ண வேண்டியதுதான், நீங்க பண்ணுனது ரொம்ப ஓவர்.. ஹீரோயின் அப்பா லவ் ஜோடியை பிரிச்சு வில்லனான மாமன் கிட்டே நீங்க என்ன வேணா செய்ங்க, என் பொண்ணை மனசு மாத்துனா சரிங்கறார்.. உடனே வில்லன் ஹீரோயினை கூட்டிட்டு ரூமுக்குள்ளே போறார்.. ஆ அப்டினு ஹீரோயின் சத்தம் போடறார்.. எந்த அப்பாவாவது இதுக்கு ஒத்துக்குவங்களா?அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வில்லன் ரேப் எல்லாம் செய்யலை சிகரெட்டால ஹீரோயின் கைல சுட்டான்னு ஒரு விளக்கம்.. எந்த மட வில்லனாவது கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணுவானா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmtEKFe9qcSrBly-8LtaZKqMujLvvl4PO32TBNcnCVnwkQuJ-RVqEwBfgBapahFmg1lotBaTxcRrPIeameZo5XL-GW_gTr8HEXZKph3Hj5AhEsM5GYErjvGxClBDHxO-sX55610G7unRw/s1600/archana_sharma_01.jpg
6. அடுத்த ஷாட்லயே வில்லன் 300 ரூபாய்க்கு வாங்குன டேப் ரிக்கார்டர் எடுத்துட்டுப்போய் ஹீரோயின் ஆ என அலறிய சத்தத்தை போட்டுக்காட்டி ஹீரோயினை கெடுத்துட்டேன்கறார் .. அட போங்க சார்.

7. அடுத்த ஷாட் செம காமெடி.. ஹீரோயினோட தோழி கிட்டே தூது விட்டு ஹீரோயின் கிட்டே குற்றம் நடந்தது என்ன? அப்டினு ஹீரோ விசாரிக்க சொல்றார்.. ஹீரோயின் அப்டி எதுவும் நடக்கலைங்கறார்.. அட ராமா.. அப்டியே நடந்திருந்தாலும் எந்த போண்ணாவது ஆமாங்கோவ். அவர் என்னை கெடுத்துட்டாருங்கோவ்னு சொல்லப்போவுதா?

8. இடைவேளைக்குப்பிறகு வில்லனோட அடி ஆட்கள் 4 பேர் ஹீரோயின் கண்ணை ஆபரேஷன் எதுவும் பண்ணாம கத்தியாலயே எடுக்கறாங்க.. அப்புறம் உடல் உறுப்புகளை எல்லாம் என்னமோ ஆட்டுக்கறி எடுக்கற மாதிரி உவ்வே.. ஹாஸ்பிடல்லதானே அதெல்லாம் எடுக்க முடியும்? எந்த மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸூம் இல்லாம எப்டி அதெல்லாம் எடுக்க முடியும்?

9. இன்ஸ்பெக்டர் லாட்ஜ்ல ஒரு கேஸ் சம்பந்தமா விசாரிக்கறார்.. என்கொயரி முடிஞ்சதும் லாட்ஜ் மேனேஜர் தாங்க்ஸ் சொல்றார்.. அதெப்பிடி? அவனவனுக்கு விசாரணை முடிஞ்சா போதும்னு தான் இருக்கும்.. தாங்க்ஸ் பொருந்தவே இல்லையே?

10. ஹீரோ, ஹீரோயின் 2 பேரையும் வில்லனோட ஆளுங்க தள்ளிவிடறாங்க, மலை உச்சில இருந்து.... அது எதுக்கு? இவங்க தேவை உடல் உறுப்புகள் தான்னா அங்கேயே அடிச்சுப்போட்டுட்டு எடுக்கலாமே?மலை உச்சில இருந்து தள்ளி விட்ட பிறகு டேமேஜ் ஆகின உறுப்புகளை எடுத்து என்ன யூஸ்?

http://www.lateststills.com/wp-content/uploads/2011/05/archana_sharma_6_0-300x300.jpg

 சி,பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்க முடியாது

ஆனந்த விகடன் விமர்சனம் எதிர்பார்ப்பு மார்க் - 32 ( விமர்சனமே போடமாட்டாங்க)

குமுதம் எதிர்பார்ப்பு கமெண்ட் - ம்ஹூம், தேறாது

ஈரோடு சங்கீதா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன்

டேமேஜர் வித் வாட்ச்விமன் ( ஜோக்ஸ்)

Flying Peocock
1.மேடம், இந்த ஆஃபீஸ்ல உங்களுக்கு வாட்ச் விமன் வேலை..

புரியலையே?

யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு வாட்ச் பண்ணி டேமேஜர்ட்ட சொல்லனும்

----------------------------------------

2. ஜட்ஜ்- எதையும் மறைக்காம வாக்கு மூலம் தரனும்..

ஷகீலா- ஹூம், இங்கேயுமா? # @ இமேஜினேஷன் ஆஃப் ஆபாச பட வழக்கு! கோர்ட்டில் ஆஜரானார் ஷகீலா!!

------------------------------

3. நான் ஒரு பெண்.என்பதால்  ஜாமீன் வேண்டும் -  கனிமொழி! 

நான் ஒரு ஆண்.என்பதால்  ஜாமீன் தர முடியாது - ஜட்ஜ்

------------------------------

4. சிரித்து கொண்டிருக்கும் , முறைத்துக்கொண்டிருக்கும் எந்த (மணமான) ஆணின் பின்னும் ஒரு மென் சோகம் கவிழ்ந்துள்ளது... #ஆய்வறிக்கை :-)

-----------------------------------------

5. ஆண்களுக்கு மிகவும் பிடித்த 3 எழுத்து வார்த்தை - ஃபிகரு.. பெண்களுக்கு மிகவும் பிடித்த 3 எழுத்து வார்த்தை- புடவை

--------------------------------------



 

6. 6 அமைச்சர்கள் - பதவிப்பிரமாணம் எடுக்கனும் ஜெ - நீங்க நியூஸ் கேட்கலையா? உங்களை நேத்தே மாத்தியாச்சு - ஜெ @ இமேஜினேஷன் ஆஃப் 6.11.2011 நியூஸ்

---------------------------------
7.ராம்சாமி -  மாப்ளே.. பொண்ணு பார்க்க போனியே , பொண்ணு எப்படி இருந்தா?

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ரொம்ப கோபமா......

--------------------------------------

8. குளிக்கபோறேன் கண்ணை மூடுடா என SMS அனுப்பினாள் வன் முறையைத்தூண்டும் மென் “முறைப்பெண்”

-----------------------------------

9. சில பெண்களுக்கு, டபுள் மீனிங் பேச்சுகள் புரிவதில்லை என ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள், அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை, ஒதுக்கி விடுகிறார்கள்

-------------------------------------


10.டியர்.. எதுக்காக மூஞ்சியைப்பாரு அப்டின்னே? 

டேய் லூசு.. சைட் அடிக்கறது தப்பில்லை ,ஃபிகரோட மூஞ்சியை மட்டும் பாருன்னேன்

------------------------------------




11. ஓ, பெண்களே, ஃபிகர்களே! வி நெக், யூ நெக் ஜாக்கெட் போடுங்க, வேணாம்னு சொல்லலை, ரொம்ப லோ நெக் போடாதீங்க, நாங்க ஆஃபீஸ்ல வேலை செய்யனும் பை நெக்குருகும் சங்கம்

-----------------------------------------

12. நாஞ்சில் மனோ -ஓசில சரக்கு சாப்பிடற ஒலகநாதன் நீதானா? 

விக்கி தக்காளி - ஆமா, ஏன்? 

நாஞ்சில் மனோ - இல்ல, உன் வீட்டு சுவர்ல “ மப்பிட்டவரை மரணிக்கும் வரை மறக்காதே”ன்னு ஸ்லாகன் பார்த்தேன்

---------------------------------------------

13. நிரூபன் -பெரிய பருப்பா?ன்னு கேட்டும் அந்த ஃபிகர் உன் கிட்டே கோவிச்சுக்கலையே? ஏன்?  

துஷ்யந்தன் - நீ வேற .. உன் முகத்துல பெரிய பரு-ப்பா-னுசொன்னேன்

-----------------------------------

14. டி.வி. நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை! ஐகோர்ட் நோட்டீஸ்!! # மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்கவே அம்மணி இப்படி திட்டமிட்டு சதி - கலைஞர்


-----------------------------------

15. கருண் - 16. வயசு பையன் ஒருவன் 10 ஃபிகர்ஸ் இருக்கும் இடத்தை எப்போ பயம் இல்லாம கடக்கிறானோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம்.

தமிழ்வாசி பிரகாஷ் - ஏன் கடக்கனும்?அங்கேயே தங்கிக்கலாமே?

---------------------------------------



16. .சித்தோடு சில்ஃபான்சி - சதீஷ், இப்படி தண்டமா இருக்கீங்களே? பீச்க்கு வர்றப்ப தலையை சீவிட்டு வர மாட்டீங்களா? 

நல்ல நேரம் சதீஷ் - ம்க்கும், தலையை சீவிட்டா நான் முண்டமா ஆகிடுவேனே?

----------------------------------------


17.  மேடம், உங்களுக்கும், அவருக்கும் நட்புதான் , காதல் இல்லைன்னு சொன்னீங்க, இப்போ பல்டி அடிச்சுட்டீங்களே?

நடிகை சிநேகா - ஏன்? ஹி ஹி எல்லாம் ஒரு மப்பு தான்

-------------------------------------

18.  சார், உங்களை விட அவங்க 2 வயசு சீனியராமே , எப்படி மேரேஜ் பண்ணிக்குவீங்க?

பிரசன்னா - சிம்ப்பிள், 2 வருஷம் கழிச்சு பண்ணிக்கறேன்

-------------------------------------

19. பெண் என்பதால் மட்டுமே சலுகை காட்ட முடியாது , ஓரளவுக்கு மீடியம் ஃபிகராவாவது இருக்க வேண்டும் - கனி மொழி ஜாமீன் மறுப்பு , ஜட்ஜ் தீர்ப்பு  @இமேஜினேஷன்

----------------------------------------

20.  கனி மொழிக்கு ஜாமீன் இல்லை என்றதும் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் மண் ஈரோட்டில் வானம் கதறி அழுகை - கலைஞர் பெருமிதம்





Sunday, November 27, 2011

புரட்டாசித்தலைவி ( ஜோக்ஸ்) - ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டா டா

1.DR, எனக்கு மனசே சரி இல்லை..

. ஏன்? 

சிநேகா, ஜெனிலியா, 9 தாரா அப்டினு வரிசையா எல்லாருக்கும் மேரேஜ் ஆகப்போகுது..

--------------------------------------

2.தலைவரே, ஜட்ஜ் உங்க கிட்டே கேட்ட 1780 கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்ல முடிஞ்சது?

  எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் - தெரியாது

-----------------------------------

3. கும்மாச்சி - என் ஆளு டெயிலி காலேஜ்க்கு பஸ்ல தான் போவா..

ஓ! வசதியான இடம் போல # டபுள் மடங்கு பஸ் சார்ஜ்

--------------------------------------

4. ஆத்தா உன் ஆட்சியிலே !அலங்கோல காட்சியடா.!. ஏற்றி வெச்சோம் ஒளி விளக்கு, விலை உயர்வை நீ விலக்கு

---------------------------------

5. எந்த பொண்ணுக்கு மேரேஜ்னாலும் எனக்கு மனசு சரி இல்லாம போயிடும் #விதி விலக்கு என் பொண்ணு

-----------------------------------




6. என் உறவுகளுக்கும் அவர் உறவுகளுக்கும் தனித்தனி கணக்கை , பிணக்கை வைத்திருக்கிறார் என் மனைவி

------------------------------------

7. தனிமையில் ஒரு முகமும், அவங்க வீட்டு விருந்தினரின் முன் ஒரு முகமும்,நம் முன் ஒரு முகமும் எப்போதும் வைத்திருகின்றனர் பெண்கள்

---------------------------------------

8. டேமேஜர் - ஆஃபீஸ் டைம்ல ஆஃபீஸ் ஃபோன்ல உங்க பர்சனல் கடலையை அவாய்டு பண்ணிக்குங்க

கவிதைக்காதலன் மணி -ok மேனேஜர் சார்.. இனி நம்ம ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் கூட மட்டும் TALK

-------------------------------------------

9. மங்குனி அமைச்சர் - லவ்வர்ஸ்ங்க விடிய விடிய அப்டி என்னதாண்டா பேசுவீங்க?

பனித்துளிசங்கர் - நாங்க எங்கே பேசறோம்? ம் ம் ஓ.. ஆமா .. ரைட்டு ..அப்புறம்? இதுதான் மொத்த டயலாக்கே

--------------------------------------------

10. கோவை பாவை - ஏன் தமிழ்ல பேச மாட்டீங்களா?

தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்ல பேசுனா எந்த ஃபிகரும் மதிக்க மாட்டேங்குது மேடம்,இதுக்காகவே இங்கிலீஷ் டியூஷன் போய் படிச்சேன்

-----------------------------------------




11. சேட்டைக்காரன் -பெண்கள் மலையாளம் பேசும்போதுதான் அழகு, தெலுகு பேசும்போது அப்படியே தலைகீழ்!

தோட்டா ஆல்தோட்ட பூபதி - பேச்சை கவனிச்சாத்தானே அந்த பிரச்சனை?

---------------------------------

12. தவறு என்று தெரிந்தே செய்யப்படும் தவறுகளுக்கு என்ன பெயர் சொல்வது?

ஜெயலலிதா என்றே சொல்லலாம்!

-----------------------------

13. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

--------------------------------------

14. சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு @ கோழி கூவுது ரீ மிக்ஸ் சாங்க்

--------------------------------------

15.  சி.பி - அண்ணே.. டீ இன்னும் வர்லை..

ராம்சாமி - டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-------------------------------------------


funny
16. தலைவர் ஏன் பயந்த முகத்தோட இருக்கார்?

வித்யா பாலன் நடிச்ச சில்க் ஸ்மிதா சுயசரிதை - த டர்ட்டி பிக்சர் படம் அவரோட சுய சரிதையா இருக்குமோன்னு சந்தேகப்படறாராம்

----------------------------------------

17. சிங்கப்பூர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?

பர்ச்சேஸ் மாலா - ம்ஹூம், சாரி, வெறும் கையைத்தான் வீசிட்டு வந்தேன்,

இல்லையே கைல வளையல், பிரேஸ்லெட் இருக்கே?

-------------------------------------------

18. மேடம், நேத்து மீட்டிங்க்ல டேமேஜர் என்ன பேசினார்?

பெங்களூர் ஸ்வீட் சுதா- எனக்கென்ன தெரியும்? நான் என் ஹஸ்பெண்டோட எஸ் எம் எஸ் கடலை-ல பிஸியா இருந்தேன் # யாருக்கோ

--------------------------------------

19. சிங்கப்பூர்  சாந்தி! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

சூப்பர்வைஸர் வேலை பார்க்கறேன்.

எந்த ஆஃபீஸ்ல?

என் வீட்ல தான், கணவர் சமையல் பண்றார், அதை சூப்பர்வைசிங்க்

-------------------------------------

20. விக்கி உலகம் - கோபம் வந்தா என் மனைவி பளார்னு அறைஞ்சிடறா ..

லேப் டாப் மனோ - உன் பாடு தேவலை.. என் மனைவிக்கு கராத்தாவே தெரியும்

---------------------------------
Beautiful Roses
funny


டிஸ்கி - நேத்து நைட் 8 மணிக்கு விக்கி தக்காளிக்கு ஃபோன் போட்டேன், அண்ணி தான் போனை எடுத்தாங்க.. தக்காளி அண்ணன் மட்டை ஆகிக்கிடக்காராம்.. தூக்கத்துலயே அவன் பண்றது சரி இல்ல.. இவன் ரொம்ப மோசம் ... என்னைத்தவிர எல்லாரும் கெட்டவங்க, அப்டினு ஒரே புலம்பலாம்./அவனுக்காக வைக்கப்பட்ட தலைப்புதான் இது.. ஸ்டார்ட் மியூசிக்..  ஒய் திஸ் கொலை வெறி  கொலை வெறி  டா டா

Saturday, November 26, 2011

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFszLvClt3XPJfVwQ1jYdRuHFvi8PkThI8sh2BR7jy8wP0jYWJElstJnmfTpN9q-Fom-YyNbrKLxXKNlMM4-j_zJnQdDPajWiOZVTPmFXxusakJrCusK9yh8RiEITySIa8XGckxv9863g/s1600/mayakkam-enna+ARV1.jpg"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்-ஐ வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபத்பாய்  தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.


ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

படத்தின் பெரும்பகுதி சூட்டிங் கேரளா, சென்னை, கோவை தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து முடிந்துள்ளது

http://tamil.oneindia.in/img/2011/09/20-selvaragavan-gitanjali300.jpg


1.உங்க படம் எப்பவும் ஃபர்ஸ்ட் ஆஃப் நல்லாருக்கு, செகண்ட் ஆஃப் சொதப்பிடுதே? ஏன்? 

ஃபர்ஸ்ட் ஆஃப் அடிச்சு முடிச்சதும் மட்டை ஆகிடறேன்,அதான்

-------------------------------------

2. ஆர்வக்கோளாறுல மயக்கம் என்ன படம் பார்க்க நினைக்கறவங்களுக்கு ஒரு வார்த்தை.. அது ஏதோ கலாச்சாரக்கோளாறுள்ள படமாம், BE CAREFULL


------------------------------------
3. தனுஷ் - எனக்கு எந்த மாதிரி கேரக்டர் தரனும்னு எங்கண்ணனுக்கு நல்லா தெரியும்.# அட போப்பா , அண்ணன் ஆப்பு வெச்சது கூடத்தெரியாம ...


------------------------------------
4. மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே -னு ட்விட்டர்ல சொன்னீங்களே? சார்.. படம் பார்த்தவங்க எல்லாம் கில்ட்டி ஃபீலிங்க்ஸோட போறாங்களே?அவ்வ்வ்வ்

-------------------------------
5. மயக்கம் என்ன? படம் அட்டர் ஃபிளாப் - இன்னொரு நடு நிசி நாய்கள் என பிரிவ்யூவில் படம் பார்த்த நண்பர் சொன்னார் அட தேவுடா.யூ டூ செல்வராகவன்?


----------------------------------------
http://2.bp.blogspot.com/-IA6HyiOfuaA/TqZXvjqzsiI/AAAAAAAARI8/sfnaNp7Aufo/s1600/Mayakkam-Enna-Stills-004.jpg
6. தமிழ்க்கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கு, என்னதான் மாடர்னா படம் எடுக்கறோம்னு சால்ஜாப்பு சொன்னாலும் வரம்புமீறும் படங்கள் அடிவாங்குவது உறுதி

------------------------------------
7. செல்வராகவன் - மயக்கம் என்ன படத்துல முதல் முறையா காமெடி ட்ரை பண்ணி இருக்கேன் # காமநெடியைன்னு சரியா சொல்லுங்க சார்

-------------------------------------
8. மிஸ்டர் செல்வராகவன், ஒன் பை டூ அப்டினு டீக்கடைல சொல்லலாம், பெட்ரூம்ல சொல்லலாமா?ஷேர் பண்ணிக்க இதென்ன ஷேர் ஆட்டோவா?

--------------------------------------------
9. படம் படு மொக்கையாம். ஒரே ஃபிகரை 3 ஃபிரண்ட்ஸ் வெச்சுக்கறாங்களாம் , கண்றாவிப்படம்

---------------------------------------
10. படத்துல பல லேயர்ங்க இருக்கறதா டைரக்டர் ட்விட்டர்ல சொன்னாரே? ஒரு லேயர் கூடவா நல்லாலை? 

பல லாயர்ங்க தான் கேஸ் போடப்போறாங்களாம் அவ்வ்வ்

---------------------------------------------

http://img1.dinamalar.com/cini/ShootingImages/13252927546.jpg

11. 50 ரூபா டிக்கெட் 25 ரூபா, 25 ரூபா டிக்கெட் 10 ரூபா வாங்க சார்  புதுப்படம்  வந்தா கேண்டீன்ல மிக்சர் வேற ஒரு பாக்கெட் ஃபிரீ # மயக்கம் என்ன

-------------------------------

12. என் படம் அடுத்த தலைமுறைக்கானது.

அடடா.. சார், அப்போ ஏன் இப்போ ரிலீஸ் பண்ணுனீங்க? 20 வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணி இருக்கலாமே?

---------------------------------

13. என் படம் பிரமாதமா ஓடும் பாருங்க..

தியேட்டரை விட்டுத்தானே?

-----------------------------------

14. 1.12.2011 வியாழன் அன்று வெளி வர இருக்கும் எம் சசிகுமார்-ன் போராளி வெளியாகப்போகும் பெரும்பாலான தியேட்டர்கள் மயக்கம் என்ன ஓடும் தியேட்டர்ஸ்தான்.. அப்போ ஏற்கனவே ரிசல்ட் அவுட்டா?  படம் அவுட்னு

--------------------------------------

15. நாந்தான் டைரக்டர், தம்பி தான் ஹீரோ, என் சம்சாரம் தான் புரொடியூசர்...

அடங்கொன்னியா. குடும்பப்படம்னு சொன்னதுக்கு இதானா அர்த்தம்?

-------------------------------------------

16. உங்க படம் செம கிக்கான படம்னு எப்படி சொல்றீங்க?

படத்துல வர்ற எல்லா கேரக்டரும் எப்பவும் சரக்கு அடிச்சுட்டே இருப்பாங்களே?பார்க்கலை?

------------------------------------

17. சார்.. படம் நல்லாருக்கு, கொஞ்சம் மெதுவா போகுது, அவ்வளவுதான்.

. நல்லா தூக்கம் வருதுன்னு சொல்றீங்களா?

------------------------------------

18.சார்,உங்க படம் பியூட்டி ஃபுல்.....

ரொம்ப தாங்க்ஸ்..

அதாவது THE BEAUTIFULL MIND  ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கு  # மயக்கம் என்ன?

-----------------------------------------------

டிஸ்கி -

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

 

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsPaalai_(2011)cover.jpg

விஜய்-ன் காவலன் ரிலீஸின் போதே சன் பிக்சர்ஸாரின் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.. அதாவது தமிழ்நாட்டின் பெரிய , செண்ட்டரான திரை அரங்குகளை ஆக்ரமித்து விடுகிறார்கள் . என்பதே அது.. இதனால் லோ பட்ஜெட் படங்களை திரை இட தியேட்டர்கள் கிடைப்பதில்லை.. தங்கள் கை வசம் மாஸ் மீடியா இருப்பதால் பெரும்பாலான படங்களை இவர்கள் வாங்கி நல்லா மார்க்கெட் பண்ணி தேத்தி விடுகிறார்கள்.. இதனால் வெளீயாகும் படங்கள் சன் பிக்சர்ஸாரின் தயாரிப்பாகவோ ,அல்லது அவர்கள் வாங்கும் படமாகவோ இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..

கலைஞர் ஆட்சியில் அது ஓக்கே, இப்போ ஆட்சி மாறிய பின்னரும் அது தொடர்வது ஏன்?ஏன் ஜெ வால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை?என்பதே நம் மனதில் எழும் கேள்விகள்.. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் பாலை இயக்குநர் காட்டமாக ஒரு கடிதம் மீடியாக்களில் வெளீயிட்டும் , ஃபேஸ் புக்கில் அதை பகிர்ந்தும் வந்திருக்கிறார்.. அந்த கடிதம்

 http://tamil.oneindia.in/img/2011/05/05-shammu-palai300.jpg

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலைஎன்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலைபடத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்என்பது.

பாலைகுழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையேஎன ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


------------------------------------------------------------




-------------------------------------------------------------




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3q1ONHvokhIe9TCdTEXGWNMyerF4YC-XiJGHhzjp2uK0vU_Mq0vjX1HKaYjCxC-bQQIFoPfebRzhtxhSqZXwKSRtPa8wTqHStzIYQ8iyRNnaEJ3aWQmo1HuZjdaY2TK95m6OuzQEVdEA5/s1600/paalai_movie_stills.jpg
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


 
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
, ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலைபடத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai



http://reviews.in.88db.com/images/paalai-movie/paalai-movie-stills-pics-photos-gallery-7.JPG


டிஸ்கி -  எனவே நல்ல சினிமா ரசிகர்கள் , ஆரோக்யமான திரைப்படம் வரவேண்டும் , திறமைசாலிகளை ஊக்குவிக்கவேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் பாலை படம் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நண்பர்களூக்கும் பகிரலாம் ஈரோட்டில் இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை.....கொங்கு மண்டலத்தில் திருப்பூரில் மட்டும் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.. மெத்தப்படித்தவர்கள் மிக்க  கோவையில் கூட இந்தப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தர வைக்கும் ஆச்சரியம்

டிஸ்கி பார்ட் 2 -

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா