Tuesday, March 29, 2011

2 ஜி ஊழலை வைத்து பாமர மக்களை ஏமாற்ற முடியாது - கலைஞர் பரபரப்பு பேட்டி

http://aakayam.files.wordpress.com/2010/05/p42.jpg 

மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவினர் ஒருமனதாக ஏற்பார்களா.. தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, சிஎன்என் ஐபிஎன் செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

 கூட்டணி தொடருமா?

1. 'தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?'

"அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரஸும், தமிழக அளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.


கருத்து மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம். அதாவது திட்டங்கள் தமிழகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல
 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/DMK/kk.jpg

2. இந்தத் தேர்தலில் திமுக முன்பை விட குறைந்த இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியும் அமையும் என எடுத்துக்கொள்ளலாமா?

"அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
 

மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து, இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலதுசாரி கட்சிகள் எல்லாம் இடம்பெற்று அவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள். 


அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEFWi8FjQK7IBzwutFtXcbwu0jzyfQvjGZzCOGtclejXmE6Ckabz4vTsiu1IS-8oQSl_fOkmE5GJRVUPGPes_BcpsjEPblZr7gFbZJKmlGJ7tIXuxrHAEQQ-8yjvMwiVSI68i9PZCjOEM/s400/thamalachi5.jpg
அரசியல் வாரிசு... 

3. "நீங்கள் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறீர்கள். உங்கள் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?"  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
"எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அண்ணா தலைமையில் ஓர் அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணாவால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை,"


4. "கட்சியில் உள்ள அனைவரும் ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வார்களா?"

"திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது, மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது.

மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத நிறுவனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg
குடும்ப அரசியல்...

5. குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார் - யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNwmT9eeXLTQr9A7es5yrhwXzHw6nPvrB60VCWy7cs-ULUa__geGN8cwv5EltixuQWNn-jYEw2jdAniAiVgzeWUVQREFc-HsrjfIyNILsXSCB1OPoeTI1L7Bgvful1isw3VoI12xegOc8/s1600/kanimozhi2.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம்... 

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து?

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.


இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை," 
 http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg
7. 2ஜி விவகாரத்தால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதா?

 சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்,

என்னது? பவுன் போட்டு பொண்ணு கட்டிட்டு போகனுமா?

Hilarious political cartoon images
1. ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்: 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்.

அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்..

----------------------------

2. தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்: இந்தத் தேர்தலிலும் ஓட்டுக்காக பணமும், பொருளும் வழங்க, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியினர் திட்டமிட்டுள்ளனர். பணம் எடுத்துச் செல்ல, "108' ஆம்புலன்சை பயன்படுத்தப் போவதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..


--------------------------------------------

http://www.movieinf.com/wp-content/images/2009/07/Hansika-Motwani1.jpg
3. சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி: சாதாரண சாப்பாடு 35 ரூபாய், அசைவம் 80 ரூபாய், சைவ பிரியாணி 20 ரூபாய், வெரைட்டி ரைஸ் 15, உப்புமா 18, இட்லி இரண்டு 12 ரூபாய், சப்பாத்தி இரண்டு 18 ரூபாய், பூரி செட் 18, பொங்கல் 18, ரோஸ்ட் 20, புரோட்டா 20, வடை 15, மினரல் வாட்டர் 14, மட்டன் பிரியாணி 100, சிக்கன் பிரியாணி 80, வாட்டர் பாக்கெட் 2, டீ 5, காபி 8, கூல் டிரிங்ஸ் 10, ஆம்லெட் 10 ரூபாய் என, உணவு வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?


---------------------------------------------

4. அ.தி.மு.க., எம்.பி., சிவசாமி பேச்சு: ஒரு நாட்டின் வளர்ச்சி, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக் கொள்வதில் தான். ஆனால், அண்டை நாடுகளுடன் நம் உறவு திருப்திகரமாக இல்லை. இந்திய அரசு தன் வெளிநாட்டுக் கொள்கையை கூர்ந்து கவனித்து மாற்றிக் கொள்ள வேண்டியது.

எனக்கென்னமோ ஒரு நாட்டோட வளர்ச்சி ஓட்டோட ரேட்டை வெச்சுத்தான்னு தோணுது.. போன எலக்‌ஷன்ல ரூ 2000. இப்போ ரூ 10,000 என பேசிக்கிறாங்க.. அப்போ 5 மடங்கு வளர்ந்திருக்கு...அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?
--------------------------------------------------
http://rianai.com/wp-content/uploads/2009/10/Hansika_Motwani_11-500x750.jpg
-5. ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஓட்டளித்தோம். எனவே, அரசுக்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் அடிப்படையற்றது.

ஓஹோ உங்க எம் பிக்கள் யாருக்கும் கொடுக்காம  எல்லாத்தையும் நீங்களே சுட்டுட்டீங்களா? இது ரொம்ப தப்பு.. எல்லாரும் சரி சமமா பிரிச்சுக்கனும்.. அது தானே நல்ல இந்தியனுக்கு அடையாளம்..?

----------------------------------
6. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: தமிழகத்தில் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொள்ளாமல், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. தென் மாநிலங்களில், கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தனிக்கவனம் மேற்கொள்ளப்படும்.

 உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த  வேண்டாத வேலை..?

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOYasLEDrghHumtsCvnbBIxJzp_reCPVrV09ykzRsoJDNpWbSsPEm0vMALrexfhWOTBzVU42E0YHAsPeqLN2x-n8e-vqmb_co0TIR0FsSkkMnJoU13BOO3bh3l7PsoZ14xYZi57dbrqg/s1600/HansikaMotwani01.jpg

7. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு :இந்தியாவில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் சமூகத்தில், வேண்டாத விளைவுகள் ஏற்படும்.

ஆமாமா.. ஏற்கனவே சில  பொண்ணுங்க பண்ற அல்டாப்பு தாங்கல... இதுல அவங்களோட பிறப்பு விகிதம் இன்னும் குறைஞ்சிட்டா  அப்புறம் அவங்க ஓவரா ஆடுவாங்க.. பவுன் போட்டு கட்டிட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுடும்..

------------------------------------------------------

8. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் நிறுத்தி கேள்வி கேட்கும் முறையைக் கொண்டு வரவுள்ளோம். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் சரியாக செயல்படாத போது, அவர்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

எங்க ஆளுங்களுக்கு லஞ்சம் கேட்கத்தான் தெரியும்.. கேள்வி கேட்டா பதில் சொல்லத்தெரியாதே...அப்புறம் ரிட்டர்ன் பெறும் உரிமையை மக்களுக்கு குடுத்துட்டா வாரா வாரம் எலக்‌ஷன் வைக்க வேண்டி வந்துடுமே..எவன் இங்கே யோக்கியனா இருக்கான்?

--------------------------------------------------
டிஸ்கி 1 - நடிகைகள் போஸ் குடுக்கறப்ப நேரா நிமிர்ந்து நிக்காம ஏன் கூன் விழுந்த மாதிரி இருக்காங்க?ன்னு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.. ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. அப்புறம் அவங்க லிப்ஸ்டிக்,இமைகளின் மேல் போட்ட வண்ணப்பூச்சு,சுடி எல்லாமே ஒரே கலர்ல இருக்கறதைப்பாருங்க..இது தான் மேட்சுக்கு மேட்ச்..ஹி ஹி

டிஸ்கி 2 - திருப்பூர் ஜோதிஜி அண்ணன் எலக்‌ஷன்ல நிக்கறதை முன்னிட்டு கிஃப்டா குடுத்த திருப்பூர் பனியன் தான் மேடம் போட்டிருக்காங்க 2 வது ஸ்டில்லுல...தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 3 - மேடத்தோட 3 வது ஸ்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ.. இள நரை வந்தாlலோ, கிழ நரை வந்தாலோ கறுப்பு மருதாணி தான் தலைக்கு போடனும்.. விவரம் தெரியாம சிவப்பு மருதாணி போட்டா இப்படித்தான் தலை செம்பட்டை ஆகிடும்..இந்த அரிய தகவல் தெரிவிச்சதுக்காக எனக்கு யாராவது அழகு டிப்ஸ் அழகேசன் விருது கொடுத்தா கூச்சமே இல்லாம வாங்கிக்குவேன்.. ( விருது வாங்க எதுக்கு கூச்சம்?)

Monday, March 28, 2011

எவண்டி உன்னைப்பெத்தான்.. ? அவன் மட்டும் என் கைல சிக்குனான்.. செத்தான்!!!!

http://narumugai.com/wp-content/uploads/2010/10/33876_471562211317_108887661317_6484073_6826200_n.jpg

1. “தலைவர் சென்னைல போட்டி போடாம ஏன் வெளி ஊர்ல போட்டி இடறாரு?”

      “சென்னை ஃபிகர்ஸை பார்த்து போரடிச்சுடுச்சாம். வெரைட்டியா ஸைட் அடிக்க ஐடியா பண்ணீட்டாரு”


------------------------------------------------

2.   “தலைவர் ஜெய்க்கபோறது உறுதி-னு எப்படி சொல்ற?”

       “செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”


--------------------------------------------------------

3.    “தலைவர் ஏன் தனிக்குடித்தனம் வந்திருக்காரு?”

       “அவரு இந்த எலக்‌சனை புறக்கணித்ததா அறிவிச்சதும் அவரோட சம்சாரம் அவரை புறக்கணிச்சுடுச்சாம்”


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD3rMCCt_qH2GSwook6WXZ9gSfP4p_Sx3EqNRXjB1IDf144FjGbi5FaHt6f7nPw-RL7bU2xC-oFmCdvSkPTf10dN3Ky0FCegV50KordYwffGQDEHvVMSgDC1PRx7GySIfAZ-BGcjT49xxS/s1600/anushka_1.jpg
4.   “தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”

       ‘’ஏன்?”

பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”

--------------------------------------------------



5.  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது கிரிக்கெட் அணி தவற விட்ட உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடமிருந்து நைசா அபேஸ் பண்ண ஆவண செய்யப்படும்”

---------------------------------------------------------



6.   “தலைவர் ஏன் மிரண்டுபோய் நிக்கறாரு?”

      “எவண்டா உன்னை எலக்‌ஷன்ல நிக்க சீட் குடுத்தான்... அவன் மட்டும் என் கைல கிடைச்சா அவன் செத்தான் அப்படினு மக்கள் திட்டுனாங்களாம்”

--------------------------------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/10/Anushka-1.jpg

7.    “தலைவர் பிரச்சாரத்துக்காக நெட்ல பிளாக்ஸ்பாட் ஆரம்பிச்சது தப்பா போச்சு”

        “ஏன்?”

      “அவர் மேல பிளாக் மார்க் விழுந்துடுச்சு”

-----------------------------------------------------


8.   “எல்லா தொகுதிலயும் தனியா போட்டி இடுவேன் -னு அறிவிச்ச தலைவர் ஏன் வாபஸ் வாங்கிட்டார்?”

        “234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.

-----------------------------------------



http://narumugai.com/wp-content/uploads/2010/11/Sneha-ullal12.jpg

9.    “நம்ம தலைவர்க்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு .....”

       “இப்பவே இப்படீன்னா.. தேர்தல் ரிசல்ட் வந்தா அவ்ளோதான் போல...”





----------------------------------------------------------

10.    “தலைவர்க்கு இன்னும் சின்னம் ஒதுக்கல போல...?”

         “ஆமா...போற போக்க பார்த்தா அவரையே ஒதுக்கீருவாங்க போல”









-----------------------------------------------------------------


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச்  வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ  கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ  மேட்டர்ல சொதப்புன மாதிரி......


டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி  அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...


டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு)  அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?


டிஸ்கி 4  - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )

வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற  டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...

டிஸ்கி 5  - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி

கேபிள் சங்கரை வம்புக்கு இழுத்த செந்தில்


http://www.kollywoodtoday.com/gallery/actress/anjali/images/anjali_027.jpg 

1. பத்திரிகைச் செய்தி: தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 13க்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள, "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது. அதனால், கமிஷனின் உத்தரவுப்படி, கடைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்படி கடையை மூடுனா கடைல ஒர்க் பண்றவங்க செட்டப்படி சைடுல கடையை திறந்து வெச்சு டபுள் மடங்கு லாபம் பார்த்துடுவாங்க..நட்டம் கவர்மெண்ட்டுக்கும், குடிமகனுக்கும் தான்.. 


--------------------------------------------------

2. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கடந்த பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், தேர்தல் அறிக்கை, மக்களின் நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்ணே.. அப்புறம் ஏன் நீங்களும், கலைஞரும் சென்னைல போட்டி போடாம இடத்தை மாத்தறீங்க..?போடா வெண்ணை அப்படின்னு சொல்லக்கூடாது,,


-----------------------------------------------------
http://www.cinespot.net/gallery/d/370379-1/Tapsi+photos+_19_.jpg
3. பா.ம.க., தேர்தல் அறிக்கை: பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். புகையில்லா தமிழகம், பூரண மதுவிலக்கு ஆகியவற்றை அமல்படுத்த பாடுபடுவோம்.

தமிழகத்தை குஜராத் ஆக்க பாடுபடுவோம்னு சொல்றீங்க.. சந்தோஷம்.. ஆனா நீங்க கூட்டணி வெச்சிருக்கறது தி மு க கூட.. தமிழகத்தை பீகார் மாதிரி ஆக்காம கலைஞர் ஓய மாட்டார் போல... 


----------------------------------------

4. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்ற பலவற்றால், தி.மு.க., அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கூறப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம், இந்த முறை கூறப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வன்முறை போன்ற தி.மு.க.,வினரின் தில்லுமுல்லு செயல்களை வாக்காளர்கள் நிராகரித்து, முறியடிப்பர்.

எல்லா இடங்களையும் இலவசமா மக்களுக்கு கொடுத்துட்டா மந்திரிங்க என்ன பண்ணுவாங்க..இருக்றதை அள்ளிக்குடுத்துட்டு தொண்டு செய்ய அவங்க என்ன இளிச்ச வாயர்களா? 

----------------------------------
http://www.teluguflavours.com/gallery/allgallerys/Models/876/Tapsi%20Panu%20(3).jpg
5. பார்லிமென்ட் பா.ஜ., தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூட்டாக அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில், எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனக் கூறி, பார்லிமென்ட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர். இந்த விஷயத்தில், பார்லிமென்ட் கமிட்டி கண்டறிந்த உண்மைக்கு மாறான கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற லஞ்சம் கொடுக்கப்பட்டது, தற்போது நிரூபணமாகியுள்ளது. லஞ்சம் கொடுத்து, கட்சி மாறி ஓட்டளிக்க வைத்ததன் மூலம் ஆதாயமடைந்த முதன்மை பயனாளிகள் பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தான்.

ஆமா.. இது வரை நடந்த எல்லா நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் இது மாதிரி நடந்திருக்கே.. என்னமோ புதுசா சொல்றீங்க.. காலம் காலமா நடந்துட்டு வர்ற சம்பிரதாயத்தை மாத்த முடியுமா? நம்ம இந்தியா பழம்பெரும் பாரம்பரியம் மிக்கதாச்சே.. ?

---------------------------------------

6. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: காங்கிரஸ், பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாமல், சில கட்சிகள் உள்ளன. மூன்றாவது அணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை, இந்த கட்சிகள் உணர்ந்துள்ளன. இதை செயல்படுத்த, அனைத்து கட்சித் தலைவர்களும், வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் திரள வேண்டும்.

மூன்றாவது அணியும்,ராமராஜன் படமும் ஒண்ணு தான்.. வேலைக்காகாது...

----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP1U86zMIPEkcZkcj4mbxYH9Sjmu35JmSNunYDCnnIs1-jAqCuzpdBcQi_vuaNH13Rh0TcKyiK-9aeYNAhZ5FCeOGGYmAf6ltsigDHQIyCmm6d5jQcGcfIV9Kvq9WQx2WL711VkYraTvRe/s640/Tamanna+47852+(17).jpg
7. நகைச்சுவை நடிகர் செந்தில் பேட்டி : தமிழகத்தில் திருக்குவளை மன்னராட்சியை ஒழிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இலவச, "டிவி'களை கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியவர் ஏன், "கேபிள்' இணைப்பை இலவசமாக வழங்கவில்லை?

கேபிள் சங்கர் பிளாக்ல போய் சப்ஸ்கிரைப் பண்ணிக்கிட்டா இலவசமா அவரோட படைப்புகள்  ரீடர்ல வருமே... இதுக்கு எதுக்கு கலைஞர் லெவலுக்கு போறீங்க? 

---------------------------------------

8. தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு: உண்டு கொழுத்த முதலைகளாக, மக்களை ஏமாற்றி பிழைக்கும் கட்சிகளாக திராவிடக் கட்சிகள் உள்ளன. "இலவசம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, முட்டாளாக்கி, பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. அவர்களுக்கு நமது கூட்டணி சிம்மசொப்பனமாக உள்ளது.

முதல்ல சொன்ன மேட்டர் சீரியஸா யோசிக்க வேண்டியதுங்கண்ணா.. கடைசியா சொன்னீங்களே.. சிம்ம சொப்பனம், ( SIM  ம சொப்பனம்) பேட்டரி சொப்பனம், செல்ஃபோன் சொப்பனம்னு .. நீங்க ஒரு தமாஷ்காரர்ங்கண்ணா.. 

------------------------------------

9. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு: கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்க தமிழக அரசு மறுத்து விட்டது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமில்லை என முதல்வரும், அவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களும் நிரூபித்து விட்டால், எங்களது கோரிக்கையைக் கைவிட்டுவிடுவோம்.

கள் இறக்க அனுமதி கொடுத்துட்டா அரசுக்கு வரக்கூடிய வருமானங்கள் குறைஞ்சிடும்.எல்லா பயனையும் விவசாயிங்களே அடைவாங்க.. அந்த அளவு அரசியல்வாதிகளை இளிச்ச வாயர்கள்னு நினைச்சீங்களா?


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல அஞ்சலி சேலை கட்றக்குள்ள ஃபோட்டோகிராஃபருக்கு அவசரம் போல.. ஆனா அவர் ஃபோட்டோ எடுக்கறப்ப நியாயமா அஞ்சலி கையை குறுக்க தானே கட்டி பதட்டப்படனும்? சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்குதே ? #டவுட்டு


டிஸ்கி 2  - ரெண்டாவது ஸ்டில்லுல தப்ஸி போட்டிருக்கற சேலை ஹீரோக்களுக்கு ரொம்ப சிரமத்தை குடுக்கும்.. டூயட் சீன்ல குத்தும்...அதனாலதான் ஒரு பாதுகாப்புக்காக அப்படி டிரஸ் போட்டிருக்காங்க போல.. பொது நலன் கருதி  வெளியிடுவோர்  அட்ரா சக்க அல்டாப் பேர்வழி.. ஹி ஹி

டிஸ்கி 3  - மூணாவது ஸ்டில்லுல தப்ஸியைப்பார்த்ததும் எனக்கு 2 மேட்டர் நினைவு வருது. 1. ஊட்டி, கொடைக்கானல் ரோட்ல வைக்கப்ட்ட போர்டுகளான அபாய வளைவுகள் ஜாக்கிரதை, குறுகிய சாலை கவனமாக செல்லவும்.. ஹி ஹி . 2. அவர் அவுட் ஆஃப் ஃபேஷனான ரப்பர் வளையல் போட்டிருந்தாக்கூட அதுலயும் மேட்சுக்க்கு மேட்ச் போட்டிருக்கார் பாருங்க..

டிஸ்கி 4.   - கடைசி ஸ்டில்லுல பாருங்க தமனா கை கழுத்து வெறுமையா இருப்பதை.. பாப்பாவுக்கு எக்ஸ்ட்ரா அணிகலன்கள் பிடிக்காது போல..அந்த இமேஜ் எல்லையை மீறி ஓவர்லேப் ஆகற மாதிரி இருக்கு கரெக்ட் பண்ணுங்க (தமனாவை அல்ல அவரோட இமேஜை)  அப்படின்னு கமெண்ட் போட நினைப்பவங்க.. கவனிக்க நான் வேணும்னு தான் அப்படி போட்டேன்.. அவங்க நம்மை ஆக்ரமித்த விதத்தை விளக்கும் சிம்பாலிக் ஷாட் அது.. ஹி ஹி  ( இவனுக்கு மனசுல கே பாலச்சந்தர்னு நினைப்பு)

டிஸ்கி 5  - பதிவின் டைட்டிலுக்கும், பதிவுக்கும் சமபந்தம் இல்லையே என யோசிப்பவர்கள் கமெண்ட் 7 ஐ பார்க்கவும்.. ஹி ஹி இப்படிக்கு சமாளிஃபிகேஷன் சண்முகராஜன்.

டிஸ்கி 6 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்கு

டிஸ்கி A - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி B - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி C SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

Sunday, March 27, 2011

உமா சங்கர் ஐ.ஏ.எஸ். பரபரப்பு பேட்டி - சி எம் போஸ்ட்டுக்கு கலைஞர், ஜெ இருவருமே தகுதியானவர்கள் இல்லை


http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/uma-shankar-ias.jpg
நிமிடத்துக்கு நிமிடம் அரசியல் நிலை மைகள் மாறிக்கொண்டே இருக் கின்றன. கூட்டு, பிளவு, மீண்டும் கூட்டு எனத் தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத கூத்துக்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.அரசியல் கட்சிகளின் அனுதின அதிரடிகளில் நியாயமும் நிலைப்பாடும் கேலிக்கு உள்ளாகின்றன

. கண் முன்னே நடக்கும் அத்தனை தலைகீழ் நிகழ்வுகளையும்  அப்பாவியாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் வாக்காளன். 'இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது?’ என மனசாட்சியோடு மல்லுக்கட்டும் வாக்காளனுக்கு நம்பிக்கை பகர்கிறார் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். 


''கொடைக்கானலுக்குக் குடும்பத்தோடு கிளம்பினோம். 120 கி.மீ. வேகத்தில் சென்ற எங்களுடைய கார், திடீரெனத் தலை குப்புறக் கவிழ்ந்துவிட்டது. அவ்வளவு பெரிய விபத்து நடந்தும் எங்களுக்குச் சிறு சிராய்ப்புகூட இல்லை. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு கார் வரவழைத்து, எவ்விதப் பதற்றமும் பயமும் இல்லாமல் கொடைக்கானல் பயணத்தை முடித்தேன். 'இந்த விபத்தில் நமக்கோ, குழந்தைகளுக்கோ ஏதும் ஆகிஇருந்தால்...’ என நான் யோசிக்கவே இல்லை.

'நான் நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடனும் இருக்கிறேன். அதனால், எந்த நிகழ்வாலும் என்னைக் குலைக்க முடியாது. நான் என் பாதையில் போய்க்கொண்டே இருப்பேன். நியாயமாகவும் நேர்மையாகவும் வேலை பார்ப்பவர்களுடன் கடவுள் எப்போதும் உடன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை மந்திரம். இது என் மனசாட்சியை வழிநடத்துகிறது. இத்தகைய மந்திரம் ஒவ்வொரு வாக்காளரின் மனத்திலும் எதிரொலித்தால், நமக்கான தலைமை தகுதி வாய்ந்ததாக இருக்கும்.


'தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும்’ என ஒரு சொலவடை சொல்வார் களே... அதைப்போல் நமக்கான தலைவர் களைத் தகுதிமிக்கவர்களாக நாம் தேர்ந்தெடுத்தால், இந்த தேசமே தகுதியான தேசமாகிவிடும்!

இன்றைய அரசியலில் 95 சதவிகிதத் தலைவர்கள், சுயநலனை மட்டுமே குறிக் கோளாக வைத்திருக்கிறார்கள். அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்தால் போதும். மக்களைப் பற்றி யோசிக்க வேண்டியதே இல்லை. 

முடிந்தவரை நான்கைந்து தலைமுறைகளுக்குத் தேவையானவற்றைக் குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும். இன்றைய தலைவர் களில் பெரும்பாலானவர்களுக்கு இதுதான் பிரதான கனவு. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற சிறு அக்கறைகூட இன்றைய தலைவர்களுக்கு இல்லை.

பிரதமர் என்கிற உயரிய பதவி தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவர் என்கிற பதவி வரை இதே மாதிரியான பாராமுகங்கள்தான் மக்களுக்கான பரிசாகக் கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் புறக்கணிக்கவும், சில நேரங்களில் மக்களை அடக்கி ஆளவும் நினைக்கிறார்கள். தேர்தலின்போது மட்டுமே திரும்பிப் பார்க்கப்படுகிற ஜீவன்களாக மக்களைப் பார்க்கிறார்கள்.


இன்றைக்கும் மக்களின் ஊழியனாகத்தான் என்னை அடையாளப்படுத்துகிறேன். அதன்படியே நடக்கிறேன். திருவாரூரில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சாலைகள் போடப்படும் இடத்தை நேரடியாக ஆராய்வேன். டேப் பிடித்து அளந்து பார்ப்பேன். வெறும் 40 சதவிகிதக் கற்களைப் போட்டுவிட்டு, 100 சதவிகிதம் போட்டதாகச் சொன்னதை, களத்திலேயே கண்டு பிடித்தேன்.


'என்னுடைய எஜமானர்கள் மக்கள்தான்!’ என்கிற எண்ணமே, நேர்மையான அதிகாரிகளை மக்களின் கடைக்கோடி வாழ்க்கை வரை உற்றுப் பார்க்கவைக்கிறது. அரசியல் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது இத்தகைய அக்கறையான கவனிப்பைத்தான். ஆனால், ஓட்டு வாங்கி ஜெயித்த உடனேயே மக்களின் எஜமானர்களாக அரசியல் தலைவர்கள் மாறிவிடுவதுதான் காலம் காலமாக இந்த சமூகத்தைத் துரத்தும் அவலம். 'தானாக எதுவும் மாறாது’ என்கிற பேருண்மை ஒவ்வொரு வாக்காளரையும் உந்தித்தள்ளும்போது, இந்த அவலம் நிச்சயம் அகற்றப்படும்!

யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், வாக்காளர்கள் மிகுந்த நிதானத்துடனும் ஆராய்ந்து தெளிந்த அறிவுடனும் செயல்பட வேண்டும். முதலில் வேட்பாளர் போட்டியிடும் கட்சியின் நிலைப்பாட்டை யும், அவர்களின் முந்தைய செயல்பாட்டை யும் கவனிக்க வேண்டும். அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தெரிந்து, அவரைப்பற்றியும் தேர்ந்த அறிவோடு ஆராய வேண்டும். 

முதலமைச்சர் வேட்பாளர் சரியில்லாதவராக இருந்தால், அவருடைய கட்சி வேட்பாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவருக்கு நம் வாக்கைச் செலுத்தக் கூடாது. காரணம், நல்ல வேட்பாளருக்கு நாம் செலுத்தும் வாக்கே தவறான ஒருவரைப் பதவியில் அமர்த்த அடிகோலிவிடும் அபாயம் இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் நல்லவராக இருந்து, நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தவறான வராக இருந்தாலும், அவருக்கு நாம் வாக்களிக்கக் கூடாது.


யாராவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் என முடிவு எடுத்தால், போட்டியில் இருக்கும் கட்சிகளில் யார் குறைந்தபட்ச ஊழல் பேர்வழி என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாக்களிக்கலாம். 'நமக்கான பிரதிநிதி கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’ என்கிற அக்கறை வாக்களிக்கும்போது நமக்குள் ரீங்கரித்துக்கொண்டே இருக்க வேண்டும். போட்டியிடும் யாரையுமே பிடிக்கவில்லை என்றால், சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கலாம். இல்லையேல், 49 ஓ-வுக்கு வாக்கு அளிக்கலாம்.


தேர்தல் தினத்தில் எத்தகைய வேலைகள் இருந்தாலும், வாக்குப் போடும் வாய்ப்பை மட்டும் தவறவிடக் கூடாது. கிராமங்களைக் காட்டிலும் நகரவாசிகள்தான் வாக்களிப்பது வெட்டி வேலை என எண்ணி, அன்றைய தின விடுமுறையை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

க்யூவில் நிற்பதைக்கூட அவர்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு இருக்கிறது என்கிற ராஜ மரியாதையை அவமானமாக நினைக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஐந்து வருட ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும் தகுதியைத் தவிர்த்துவிட்டு, வாக்குப் போடாமல் புறக்கணிப்பது தேசத் துரோகம். 

வாக்களிக்க மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். எத்தனையோ பேர் சிந்திய ரத்தத் துளிகளின் வடிவம் தான் நமக்கான சுதந்திரம். அதை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமமானதுதான் வாக்களிக்காமல் புறக்கணிப்பது!


அடுத்தது அன்பளிப்பு... ஐந்தாவது ஆண்டின் 11-வது மாதம் வரை மக்களைத் திரும்பியே பார்க்காதவர்கள், திடீரென அன்பு அவதாரம் எடுப்பார்கள். வலிய வந்து வணங்குவார்கள். ஏழைகளைப் பணத்தால் லபக்க முடியும் என்கிற ஆணையத்தில் இல்லாத 'தேர்தல் விதி’ அவர்களின் ஆணவத்தில் இருக்கும். அதனாலேயே வற்புறுத்திப் பணத்தைத் திணிப்பார்கள்.
Hilarious political cartoon images
அன்பளிப்புகள் தாராளமயமாகும். தேர்தல் நேரத்துத் தூண்டில்கள் துரத்தும்போது, எதற்கும் ஆசைப்படாத நிமிர்தலோடு, நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவது சாபத்துக்குச் சமமானது. அந்தப் பணமோ, பொருளோ, நம் வீட்டில் இருக்கவே கூடாது. நம் உழைப்பை விஞ்சி ஒரு பைசா கிடைத்தாலும், நாம் பிச்சைக்காரர்களே! 

இந்த உண்மையும் உளமார்ந்த வன்மையும் இன்றைக்கும் நிறைய கிராம மக்களிடம் இருக்கிறது. 'ஒன்னோட பணம் எனக்கெதுக்கு... நீ யார் வயித்துல அடிச்சு சம்பாரிச்சியோ?’ என வேட்பாளர்களைத் துரத்தும் பல பாட்டிகளை நான் பார்த்துஇருக்கிறேன். அத்தகைய நேர்மையும் வன்மையும் அனைத்து வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும்.


நம் கையில் இடப்படும் ஒரு துளி மையால் இந்த தேசத்தையே திருத்தி எழுத முடியும் என்கிற நம்பிக்கை நம்முள் எழுந்தால்... லஞ்சம், ஊழல், சமூக ஏற்றத்தாழ்வு, மக்களை மதிக்காத போக்கு என அத்தனை கேடுகளும் அகற்றப்பட்டுவிடும். மீண்டும் சொல்கிறேன்... தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும். 'தலை’யைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதிபடைத்த நாம், தலைஆட்டும் வர்க்கமாக இனிமேலும் இருக்கக் கூடாது!''

டிஸ்கி 1 - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 3 SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்