Saturday, October 23, 2010

பிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்



சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.

கோர்ட்டில்

ஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)

யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.

ஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.


சி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.


சி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.


வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே?

சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?

 ஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.


ஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.

டவாலி - ரமேஷ்,ரமேஷ்,ரமேஷ்

ஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்?

சி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.

ரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.

ஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.

ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.

ஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க?

ரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக  ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.

ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.

ஜட்ஜ்  - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.



வக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமா?கலைய?டேய் சி பி ஃபீஸை எடு.

சி பி  - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.

டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை

டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.

டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?

Friday, October 22, 2010

ஓ,தமிழர்களே,தமிழர்களே !

1. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேச்சு: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களையெல்லாம் கருணாநிதி செயல்படுத்தி வருவதுடன், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். திட்டங்களின் பயன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த சாதனைகளே தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைக்கும்.


நையாண்டி நாரதர் - அப்போ தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்களா?


2. மத்திய நிதித்துறை செயலர் கோபாலன் பேட்டி: கடன் திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கூட்டுறவு வங்கிகள் போன்ற சிறிய வங்கிகளில் கடன் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. வங்கிகளும் ஏமாறக் கூடாது. வங்கிச் சேவைக்காக மக்களும் அலையக் கூடாது.

 நையாண்டி நாரதர் - எங்கே? லோன் தர்றதுக்கு பேங்க் மேனேஜர் லோ லோனு அலைய வைக்கிறார்,லோன் வாங்கின பிறகு அதைக்கட்டாம பொதுஜனம் அலைவைக்குது,பதிலுக்கு பதில்.

3.  பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நையாண்டி நாரதர்  - டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?


4.  மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.


நையாண்டி நாரதர் - ஆம்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்களுக்கு சொரணை கம்மிதான்,இல்லாவிட்டால் திருப்பி திருப்பி தி மு க, அ ,தி மு க என 2 கட்சிக்கும் மாற்றி மாற்றி சான்ஸ் குடுக்குமா?அது இருக்கட்டும் குஜராத் மாநிலத்தில் மின் வெட்டே கிடையாது,அதை  உதாரணமா சொல்ல்லாமே?





5. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பணக்காரர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.

 நையாண்டி நாரதர் -உங்க லட்சியம் அதுதான்னா ஏன் கட்சி நடத்தறீங்க? அதை கலைச்சுட்டு சமூக சேவை அல்லது தொண்டு நிறுவனம் நடத்தலாமே?


6. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அரிசி கடத்தல், கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசிற்கு நிகராக இருந்த தமிழக போலீஸ், கருணாநிதி ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து போலீசாக மாறிவிட்டது.

  நையாண்டி நாரதர் - மணல் கடத்தல் பற்றி சொல்லவே இல்லையே,உங்களுக்கும் பங்கு வந்துடுதா?





7. முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.

 நையாண்டி நாரதர் - தலைவரே,இந்த காமெடிதானே வேணாம்கறது,ஆ ராசா பற்றியோ,அழகிரி பற்றியோ பேசுனா உங்களுக்கே கோபம் வந்துடுது.

 8.




Manthira punnagai audio launch
பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.



அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.

 நையாண்டி நாரதர் - மீனாட்சி மீனாட்சி தமிழ்க்கலாச்சாரம் என்னாச்சி?

9.
Poorna turns out as Glamour babe
பூர்ணா இப்போது ரொம்ப பிசி. அவரது மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு க்ளாமரமாக இறங்கி விட்டார். நரன் படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
நையாண்டி நாரதர் - இதுல தமிழ் ரசிகர்களுக்கு பரி பூரண சம்மதமாம்,மிஸ் பூர்ணா


10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார்  - த்ரிஷா

 நையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?

கோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி



1.டவாலி - நயன் தாரா, நயன் தாரா ,நயன் தாரா .

நயன் தாரா - ஸாரி,நான் பிரபுதேவா கூப்பிட்டாதான் வருவேன்,டவாலி கூப்பிட்டா வரமாட்டேன்.

2.  ஜட்ஜ் - ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை லவ் பண்றீங்களே?இது தப்பில்லை?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி ட்ரை (TRY) பண்றேன்.

3.  ஜட்ஜ் - பிரபுதேவா வீட்டுக்கு போனப்ப ரம்லத்தை அக்கான்னு பாசமா கூப்பிட்டு இருக்கீங்க,நல்லா பழகி இருக்கீங்க,இப்படி நம்பிக்கைத்துரோகம் பண்ணீட்டீங்களே?

நயன் தாரா - யுவர்ஆனர்,பொதுவா சக்களத்தியா வரப்போறவ மூத்த தாரத்தை அக்கான்னுதான் கூப்பிடுவா,அப்பவே அவங்க உஷார் ஆகி இருக்கனும்.

4. ஜட்ஜ் - உங்க  காதலர் பிரபுதேவாவை உடனடியா நீங்க மறந்துடனும், அதுக்கு என்ன சொல்றீங்க?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நான் யாரை லவ் பண்ணுனாலும் குறைஞ்சது 2 வருஷம் அவங்க கூட சுத்துவேன்,என் பாலிஸியை என்னால மாத்திக்க முடியாது.


5. ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.


நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.


6.ஜட்ஜ் - பிரபுதேவாவை நீங்க ரம்லத்துக்கு விட்டுக்குடுத்துடனும்,இதுக்கு என்ன செட்டில்மெண்ட் எதிர்பாக்கறீங்க?

நயன் தாரா - நான் என்ன 60 வருஷமா அவர் கூட குடித்தனம் பண்ணப்போறேன்?மீறிப்போனா 6 மாசம்,அதுவரைக்கும் அவரால பொறுத்துக்க முடியாதா?




7.  வக்கீல் - திடீர்னு அவர் ஆசைப்பட்டார்னு மூக்குத்தி குத்திக்கிட்டீங்களே,எப்படி?

நயன் தாரா - அவர் காதையே குத்திட்டேன்,இது என்ன பெரிய பிரமாதம்?


8. சிறந்த தம்பதியர் விருது வாங்குன நீங்க தமிழ் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

நல்ல காதல் ஜோடியை எவனும் மதிக்க மாட்டான்,கள்ளக்காதல் ஜோடி,அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படறவன் தான் மீடியா லைம் லைட்டுக்கு வர முடியும்.

9.பிரபுதேவாவுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொல்றீங்களே,அதே மாதிரி அவரும் உங்களுக்காக உயிரை கொடுப்பாரா?

அவர் எப்பவோ என் வயிற்றுல உயிர் குடுக்க ரெடியாத்தான் இருக்கார்,நாந்தான் காலம் கடத்திட்டு இருக்கேன்.

10. ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க.



11.நயன் தாரா - யுவர் ஆனர்,எதுக்காக எனக்கு 5 வருஷ கடுங்காவல் தண்டனை தர்றீங்க?

ஜட்ஜ் -  என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைதான் நான் செஞ்சேன்னு உங்க தப்புக்கு விளக்கம் குடுத்தீங்களே,அதே போல் என் மனசுக்கு எது சரின்னு பட்டுதோ அந்த தண்டனை தான் தருவேன்.

டிஸ்கி -1 : காமெடி டிராக்கில் கூட சிலர் லாஜிக் பர்ப்பார்கள்,அவர்கள் ஜோக் 8 & 9 ரெண்டும் கோர்ட்டில் நடந்த மாதிரி தெரியலையே என கேக்க கூடும்,அவர்களுக்கு மட்டும் சொல்வது அது கோர்ட் கேஸ் முடிந்து வெளியே வரும்போது நிருபர்கள்  கேட்டது.

டிஸ்கி 2 :  நயன் தாரா சம்பந்தப்பட்ட பதிவுகளில் ஏன் பிரபுதேவா படம் போடுவதில்லை என கேட்பவர்களுக்கு நயனின்  வாழ்க்கையில் எதுவும் ,யாரும் நிரந்தரம் இல்லை,அதான்

Thursday, October 21, 2010

சினிமா,சிரிமா,கில்மா - ஜோக்ஸ்



1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?

எல்லாம் சென்சார் பிராப்ளம்தான்.


ஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா?

அட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.


2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு?

அத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)


4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு?

அவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.



5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?


மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.




6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,?அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா?

சீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.


7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே?

கதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...?



8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே?

என்ன உளர்றே?

படத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள்  பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)


டிஸ்கி -1   : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)

டிஸ்கி - 2  :  ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்?


Wednesday, October 20, 2010

சினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)





அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்

            தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது.  வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

                        சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

            அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள்.  அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.

                        ”நான் உங்களைக் காதலிக்கிறேன்.  நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.

            தன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

            அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,
ஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.  அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ்.  அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.

            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு
முழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை.  நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.

                        அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.

            அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம்.  அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

டிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?அட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்


டிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)