Friday, September 03, 2010

சினிமா சிரிமா -உயர் தர சைவ சிரிப்பகம்

Hot Aishwarya Rai in black photoshoot
சினிமா சம்பந்தப்பட்ட ஜோக்ஸ்.இவை ஆனந்த விகடனிலும்,குமுதத்திலும் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தவை.அரசியல்வாதிகளையும் ,சினிமாகாரர்களையும் கிண்டல் செய்யும்போது நம் மக்கள் மிக மகிழ்ச்சி கொள்வதில் ஒரு உளவியல் ரீதியான காரணம் உள்ளது.நம்மால் அடைய முடியாத ஒரு உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே அது.
    1.  நிருபர் - மேடம்,நீங்க ஓவர் ஆக்டிங்க் பண்றதா எல்லாரும் சொல்றாங்களே?

      நடிகை - எனக்கு நடிப்பே வராதுனு சிலர் சொன்னாங்க,அதுக்கு இது எவ்வளவோ தேவலை.

    2. டைரக்டர் சார்,உங்க எல்லாப்படத்துலயும் க்ளைமாக்ஸ்ல ஹீரோ,ஹீரோயின்,வில்லன் எல்லாரும் செத்துடறாங்களே,ஏன்?
     
    சம்பளம்னு கேட்டு எவனும் என் வீட்டு வாசலை மிதிக்கக்கூடாதுனுதான்.
    3.படம் ஓடிட்டு இருக்கறப்ப கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஆள் அடிக்கடி வந்து ஹீரோயினை டச் பண்ணிட்டு போறாரே,எதுக்கு?

    அது வேற யாருமில்லை,படத்தோட டைரக்டர்தான்,டைரக்‌ஷன் டச் இல்லைனு யாரும் விமர்சனம் எழுதிடக்கூடாதே,அதுக்குதான்.

    4. படம் பூரா வில்லன் பபிள்கம் மென்னுக்கிட்டே இருக்காரு,ஒரு வசனம் கூட பேசலையே?

    அட நீங்க வேற,அவர் பேசுன எல்லா வசனத்தையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க.

    5. டைரக்டர் சென்சார் ஆஃபீசர்கிட்ட ஏன் தகராறு பண்றாரு?அவர் படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டாங்களா?

    ம்ஹூம், யு சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டாங்களாம், ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்தாலாவது கூட்டம் வரும்,தயவு செஞ்சு ஏ சர்ட்டிஃபிகேட் தாங்கனு கெஞ்சறார்.

    6.இந்தப்படத்துல ஏகப்பட்ட டர்னிங்க் பாய்ண்ட்ஸ் இருக்குனு சொன்னீங்க,அப்படி ஒண்ணும் இல்லையே?

    என்ன இப்படி சொல்லீட்டீங்க,படம் பூரா ஊட்டில நடக்குது,ஹீரோ 4 தடவை ஊட்டி டூ மேட்டுப்பாளையம் போறாரு,எத்தனை டர்னிங்க் பாய்ண்ட்ஸ் வந்தது,நீங்க கவனிக்கலை?

    7.இந்தப்படம் செம சஸ்பென்ஸ் படம்னு எப்படி சொல்றீங்க?

    படத்தோட கதை என்னனு 4 தடவை பார்த்தாக்கூட எவனுக்கும் தெரியாது.

    8.சாரி,நான் ஒண்ணும் அப்படிப்பட்ட ஆள் கிடையாதுனு ஹீரோயின் டைரக்டர்கிட்ட கோபமா சொல்லிட்டு போறாங்களே,அப்படி என்ன நடந்தது?

    படம் பூரா சேலை கட்டிட்டு  கவுரவமான குடும்பப்பொண்ணா நடிக்கனும்னு டைரக்டர் சொல்லிட்டாராம்.

    9.சினிமால இருந்து அரசியலுக்கு வந்துட்டதால பாதிப்பேரு தமிழ் நாட்டுல சந்தோஷமா இருக்காங்களாம்.

    அரசியலை விட்டும் வந்துட்டீங்கன்னா மீதிப்பேரும் சந்தோஷமா ஆகிடுவாங்க.

    10.அம்மா,தாயே,சாப்பிட்டு 3 நாள் ஆகுதுனு ஹீரோ அடிக்கடி பேசறாரே, ஏன்?

    பஞ்ச் டயலாக் வெக்கச்சொன்னதுக்கு டைரக்டர் பஞ்ச டயலாக் வெச்சுட்டராம்.