Showing posts with label LOVE. Show all posts
Showing posts with label LOVE. Show all posts

Sunday, February 10, 2013

”ஹிப்”னாடிஸ காதல்!!!!! ( ஜோக்ஸ்)

இந்த வண்டி எத்தனை பேர் ஓட்டி இருக்கீங்க????
Photo
1.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்

--------------------------------------



2. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு

-------------------------


3. டியர் , 11.11.11  ராசியான நாள் ,என்ன பண்ணலாம்? 

சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா

-------------------------------


4. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்

---------------------------------------



5. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு.. 

சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?

-----------------------------------




True Fact
-
LIKE us: @[245336315576613:274:Meow മ്യാവൂ]




6. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு  ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது

--------------------------------



7. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது

--------------------------------



8. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க? 

30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?

------------------------------------



9. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM  காதல்

---------------------------------



10.  காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது

--------------------------------







11. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்

-------------------------------



12. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.

சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி

----------------------------------



13. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்

-------------------------------------



14. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க? 

ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்

-----------------------------------



15. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது.. 

நிஜமாவா?  

ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்

---------------------------------



Photo



16. உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா? என யாராவது கேட்டால் ஒரே ஒரு முறை ஒரேஒரு பெண்ணுடன்தான் ஆகி இருக்கிறது எனவருத்தத்துடன்  சொல்லவேண்டி இருக்கு


----------------------

17. பெண்களுக்கு கையெழுத்து அழகாக இருப்பதில்லை, ஆண்களுக்கு தலை எழுத்து  நன்றாக இருப்பது இல்லை



---------------------------

18 மார்ச் 30 - தனுஷ்-ன் 3 ரிலீஸ் # 3 வது மாசம்,டைட்டில் 3 ,முக்கோணக்க்காதல்கதை,நாமத்துக்கும் 3 தான்


---------------------------

19 ஐஸ்வர்யா தனுஷ்க்கு என்ன சங்கடம்னா 3 படம் ஹிட் ஆகிட்டா தனுஷ்-ஸ்ருதி ராசியான ஜோடி ஆகிடும்,படம் அவுட் ஆகிட்டா அவர் ராசி இல்லாத டைரக்டர்


--------------------------------

20 நையாண்டி-ஒரே சமயத்தில 'பிளாக்'லயும்,'டுவிட்டரிலும்'இருப்பது 2 பொண்டாட்டி இருக்கிற கதை தான்! 


முனியாண்டி - 2 பக்கமும் அடி வாங்கி பாருங்க


-------------------------




தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman
தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman

21  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டுத்தான் நான் கரண்ட்டை கட் பண்ணி அனைத்து மக்களுக்கும் தண்ணி காட்டிட்டு இருக்கேன் - ஜெ அறிக்கை


----------------------------------

22 நாத்திகவாதியா இருக்கும் (அல்லது காட்டிக்கும்)கலைஞர் பாவம் பண்ணாரு ஓக்கே, ஆத்திகவாதி ஜெவும் அதே அளவு பாவம் பண்றாரே.. அது ஏன்?


------------

23 ரமீஸ் ராஜா- பெயர்க்காரணம் - ரம்மி ஆடறதுல ராஜாவா?ரமீ என்ற ஃபிகருக்கு ராஜாவா? டவுட்டு டேவிட்டு


--------------------------------

24 புரோட்டா புவனா -இங்க வந்து இன்னியோட ஒரு மாசம் ஆயிருச்சு. கலாட்டா பாவனா - 30 டைம் ஃபாலோ, அன்ஃபாலோலயே தெரியுது:)


-------------------------

25. சில பெண் ட்வீட்டர்கள் இன்னா நினைச்சுக்கறாங்கன்னா அவங்க போடற ட்வீட் நல்லாருக்குங்கறதால தான் RT கிடைக்குதுன்னு ஹய்யோ அய்யோ


----------------------------------






Photo: இலையொட்டிய மழைத்துளிபோல்
மனதோரமாய் ஒரு கவிதையை
சுமந்தபடியே இருக்கிறது
ஒவ்வொரு மழையும்.....

ரேவா

26. நையாண்டி -பஸ்ஸில் மூன்று பேர் அமரும் சீட்டில் இரண்டு குண்டர்களுக்கு நடுவில் சிக்கி அவதி பயணம்!



 முனியாண்டி - அந்த அவதி யுவதிக்கா?


------------------------------

27. ட்விட்டர்க்கு வந்ததுல இருந்து பலர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு நல்லா ட்ரெயினிங்க் ஆகிடுச்சு, அம்மா கட்சில ஐக்கியம் ஆகிடலாமா?ன்னு யோசிச்சிங்க்


--------------------------------

28. சீர் செய்ய மட்டும் நான் முறை மாமனாம். வேற ஏதாவது செய்யலாம்னா அண்ணாவாம்.. # மாமன் பொண்ணு போட்டா வாய்ல மண்ணு


---------------------------

29. பட்டுப்புடவை என்ன கலர்ல,என்ன டிசைன்ல இருந்தாலும் ஜரிகைல மாங்கா டிசைன் இருக்கற மாதிரி பெண்கள் பார்த்துக்கறாங்க # அவதானிப்பு


---------------------------

30 தனது கட்சி ஆளுங்க பிட் படம் பார்க்கற ஆளுங்கன்னு தெரிஞ்சுதான் தீர்க்கதரிசனமா பி ஜே பின்னு பேர் வெச்சிருப்பாங்களோ? 


----------------------------------------



Photo: <3
வேரென 
நீ..
வேறென்ன 
கேட்கட்டும் 
எனக்காக 
நான் 
<3

- Via ரேவா பக்கங்கள்


Saturday, September 08, 2012

பாகன் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEionVT9KIU4TGQEH1ewp7iN6-MW7WATvxRf2n9_CQ0paghhL2HekCwcaeTAteCPrSGXr0BlUwaLBHHTr8NvAdm_Xg7-FdkHHs0FL0cRApL_R4uAO36SJeoSENticOrZyexY0jyOPAqfYd1O/s1600/Paagan-Movie-New-Firstlook-Poster.jpgஹீரோ டென்த் ஃபெயில்.அவருக்கு உழைச்சு முன்னுக்கு வரனும்னு எண்ணம் இல்லை.. ஊரை ஏமாத்தி உலையில் போட்டு சம்பாதிக்கனும்னு நினைக்கறார்.முதலீடே இல்லாம சில பிஸ்னெஸ் பண்ண முயற்சி பண்றார். எடுபடலை.. அதனால ஒரு குறுக்கு வழியை கண்டு பிடிக்கறார். ஊர்லயே பணக்கார ஃபிகரை பார்த்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டா பணக்காரன் ஆகிடலாமே? இந்த கேவலமான ஐடியா வந்ததும் அந்த ஊர் பிக் ஷாட் பொண்ணை சுத்தி சுத்தி நாய் மாதிரி அலையறாரு.


அந்த பொண்ணு 4 ரீல் அலைய விட்டு மீ ஆல்சோ லவ்விங்க் யூன்னு சொல்லுது. அப்பா எதிர்ப்பு. உடனே பாப்பா வீட்டை விட்டு ஓடி வந்துடுது. சொத்து வரும்னு நினைச்ச ஹீரோவுக்கு ஷாக். ஆ ராசாவுக்கு தேள் கொட்டுன மாதிரி ஆகிடுது. இவளை வெச்சு சாப்பாடு போட முடியாது. அவ கிட்டே உண்மையை சொல்லிடறான். நான் சின்சியர் லவ்வர் எல்லாம் கிடையாது.தனுஷ் மாதிரி பணத்துக்கு ஆசைப்பட்டுத்தான் உன்னை லவ்வினது மாதிரி நடிச்சேன்னு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடறாரு. ஹீரோயின் காரித்துப்பிட்டு கிளம்பிடுது.. அப்பா கிட்டேயே... ஆஸ்திரேலியா அனுப்பிடறாரு அப்பா..


ஹீரோயின் எழுதி வெச்ச டைரி ஹீரோவுக்கு கிடைக்குது. அதுல பயங்கர ட்விஸ்ட். அந்த ஹீரோயின் தான் ஹீரோவை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணின ஆள்.. உடனே ஹீரோ மனம் மாறிடறாரு. உழைச்சு சம்பாதிக்கனும்னு வேலைக்குப்போறாரு. திருப்பூர்ல மொத்தம் 565 கார்மெண்ட்ஸ் இருந்தாலும் கரெக்ட்டா ஹீரோயின் ஹீரோ ஒர்க் பண்ற அதே இடத்துக்கு வருது..  என்ன ஆகுது? அந்த 2 கேனங்களும் சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே கதை..

http://www.tamilcinemaz.com/wp-content/uploads/2012/07/59th-Filmfare-Awards-Stills-32.jpg
 ஹீரோ ஸ்ரீகாந்த். இவர்  சினிமா வாழ்க்கையை 3 விதமா பிரிக்கலாம். சினேகா கூட சினேகமா இருந்த ஏப்ரல் மாதத்தில் காலம்.. அப்போ ஏறுமுகம். அவருக்கு அல்வா குடுத்து அடுத்து ஒரு ஃபிகரை(அஞ்சனா) கரெக்ட் பண்ணாரு,கோர்ட் கேஸ்னு ஏகப்பட்ட பிரச்சனை, சறுக்கு முகம். இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. நண்பன் படத்துல நடிக்கறதுக்கு முன் புக் ஆன படம்.. அர்விந்த்சாமியின் புதையல் படம் போல்  இவருக்கு கிடைச்சிருக்கற காமெடி கம் லவ் ஸ்டோரி.. அவர் அளவில் சரியா பண்ணி இருக்கார்.. 

 ஹீரோயின் ஜனனி அய்யர்,.. விழிகள் சுண்டி இழுக்குது.. இதழ்கள் செயற்கைப்பூச்சு இல்லாமயே மின்னுது.. கண்கள் பல கதைகள் சொல்லுது.. ஆனா பாப்பா உயரம் கம்மி.. ஹீரோவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கார்.. சூர்யா அனுஷ்கா கூட நடிக்கறப்போ செய்யும் ஸ்டூல் டெக்னிக்கை ஃபாலோ பண்ணவும்.. 


அங்காடித்தெரு வில்லன் ஏ வெங்கடேஷ் ( மகாப்ரபு இயக்குநர்) தான் வில்லன்.. அதிக வாய்ப்பில்லை.. வந்தவரை ஓக்கே/  புரோட்டா சூரி காமெடி போர்ஷன்.. எல்லாம் மொக்கை காமெடி..  எடுபடலை.. 
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-4287.jpg
 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. புரோட்டா சூரி தக்காளி லாரி விபத்தில் மாட்டி ஆள் காணாமல் போவதும் ஹீரோ அண்ட் கோ அவர் செத்துட்டதா நினைச்சு ஒப்பாரி வைப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி சீனும் கல கல டைப் 


2. கோவை சரளாவை ஏமாற்றி ஹீரோ  அவர் கையில் கவரிங்க் செயின் மாட்டி விட்டு தங்க நகையை அபேஸ் பண்ணும் சீன்.. அப்புறம் கோழிப்பண்ணை வைப்பதாக சொல்லும்போது உன் பேரைத்தான்மா வைப்பேன் என்றதும் கோவை சரளாவின் சிரிப்பில் கோழியின் குரலை மிக்ஸ் பண்ணியது கலக்கல் காமெடி.. 



3. போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிய ஹீரோ தான் ஏமாற்றிய ஆட்கள் கூடி நிப்பதை பார்த்து சார், நீங்க வேணா அந்த தொகையை செட்டில் பண்ணிடுங்க, நாங்க உங்களுக்கு மறுபடி தந்துடறோம் என போலீஸ் கிட்டேயே ஃபோர்ஜரி செய்வது


4. அழகான மெலோடி சாங்க் எப்படியோ பாட்டு.. ஆஹா! ஒளிப்பதிவும் கலக்கல்.. அந்த தெப்பக்குளம் .. இயற்கைக்காட்சிகள் அடடே போட வைக்குது.. 


5. ஹீரோயின் ஜனனி அய்யரின் கண்ணியமான ஆடை வடிவமைப்பு, ஒப்பனை அழகு..

http://www.cineulagam.com/photos/full/movies/pakan_004.jpg

மனதில் நின்ற வசனங்கள்



1. சார், நாங்க தக்காளி எக்ஸ்போர்ட் பண்றோம்./. 



 எங்கே? 


 பொள்ளாச்சில 

 அது எப்படி எக்ஸ்போர்ட் ஆகும்? 

 ஹி ஹி அங்கே போய் அப்புறம் எக்ஸ்போர்ட் பண்ணுவோம்



2. முகத்தை கொஞ்சம் சோகமா வெச்சுக்கோ இப்போ..


 அவன் முகம் எப்பவுமே சோகமா தான் இருக்கும்



3. நமக்குன்னு ஒரு காலேஜ்,  நமக்குன்னு ஒரு ஹோட்டல் எல்லாம் கட்டனும்



அதே மாதிரி நமக்குன்னு ஒரு கள்ளுக்கடை, நமக்குன்னு ஒரு போலீஸ் ஸ்டேஷன்.. அதுல இப்போ நம்மை அடிச்சானே அந்த போலீஸை வேலைக்கு சேர்த்து சம்பளம் நாமளே தரனும்



4. உழைச்சு சம்பாதிக்க லேட் ஆகும்.. ஆல்ரெடி பணம் இருக்கற பொண்ணை கட்டிக்கிட்டா சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம்



5. அவன் அவ கிட்டே என்ன சொல்லிட்டு இருக்கான்? 


 தெரில.. ஆனா அவன் ஃபிரண்ட்ஸ் இல்லாம ஹனிமூன்க்கு கூட போக மாட்டான்.. ஹி ஹி 


6. இது கல்யாணப்பத்திரிக்கை இல்லைடா மஞ்சள்  நோட்டீஸ், எஸ் ஆகிடு



7.. நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்./. கைல நயா பைசா இல்லை, 200 ரூபா கொடுத்து ஆட்டோவை கட் பண்ணுங்க 


அம்மா 


 கோவை சரளா - என்ன டா 200 ரூபா பணமா? என் கிட்டே இல்லை.. 


8. ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ..  இந்த ஜென்மத்துல உன்னை அவ மறக்கவும் மாட்டா, மன்னிக்கவும் மாட்டா..


9. சிங்கப்பூர் போய் திருப்பூர் பெருமையை காப்பாத்தற மாதிரி  ஹோடல் வைப்பான்னு பார்த்தா திருப்பூர்லயே சிங்கப்பூர் பெருமையை கெடுக்கற மாதிரி அந்தப்பேரை வெச்சிருக்கான் பாரு


10. மேடம், எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேணும்.. 

 நீ என் கம்பெனில ஜாப்க்கு வந்திருக்கியா? லோன் வாங்க வந்திருக்கியா?



11. ரொம்ப கிண்டல் பண்ணாதே. நானாவது ஓட்டை ஜட்டி போட்டிருக்கேன்,  உன்னை மாதிரி லேடீஸ் ஜட்டி போடலை.. 



12. அவன் பொய்யா உன்னை லவ் பண்ணப்ப நீ அவனை நம்புனே.,. இப்போ உண்மையா அவன் உன்னை லவ் பண்றான், ஆனா நம்பலை;. 
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/21105_1.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. சுந்தர ராமசாமி எழுதுன ஒரு  புளிய மரத்தின் கதைல புளிய மரம் கதை சொல்ற மாதிரி  இருக்கும்.. அந்த மாதிரி ஒரு சைக்கிள் தன் கதையை சொல்ற மாதிரி ட்ரை பண்ணி இருக்கீங்க.. ஆனா எடுபடலை.. ஏன்னா குறும்படத்துக்கு அது ஓக்கே..  2 1/2 மணி நேரப்படத்துக்கு அது போர் அடிச்சிடும்.. பொதுவா பேக் டிராப்ல ஒருத்தர் கதை சொல்றதையே அவாய்டு பண்ணனும்.. 



2.  முதல் பாதி மரண மொக்கை காமெடி, ஜாலி என கதை சொல்லிட்டு பின் பாதில  ஃபிளாஸ்பேக் சீரியஸ் பதின் பருவ காதல் கதை சொல்லப்பட்டிருக்கு. ஆடியன்ஸ் டக்னு செட் ஆக திணறிட்டாங்க// 



3. ஹீரோ கார்மெண்ட்ஸ் கம்ப்பெனில மாசம் ரூ 7000 வேலைக்கு சேருகிறார். 6 மாசம் ஒர்க் பண்ணின பிறகு அவர் கைல ரூ 42,000 தானே இருக்கும்? எப்படி ஒரு லட்சம் வெச்சிருக்கேன்னு சொல்றாரு? பார்ட் டைம் ஜாப் ஏதும் போகலை.. இன்செண்ட்டிவ் இல்லாத வேலை..  அப்படியே  ஓ டி பார்த்து வேலை செஞ்சாலும் மத்த செலவு ஏதும் அவருக்கு இல்லையா? 


4. பொதுவா டைரின்னா அந்தந்த கால கட்டத்துக்கு எழுதுவாங்க.. ஆனா இந்த பட ஹீரோயின் மட்டும் 23 வருஷ காதல் வாழ்க்கையை ஒரே டைரில நீட்டா எழுதி ரெடியா வெச்சிருக்கே? அது எப்படி?அந்த டைரி ஹீரோ கைல சிக்குவதும், ஹீரோ டைரி ஹீரோயின் டைரி கைல சிக்குவதும் நம்பற மாதிரி இல்லை.. 


 5. படத்தின் முக்கியமான மைனஸ் பாயிண்ட் என்னான்னா ஹீரோ தன் கண் முன்னால  ஹீரோயின் ரத்தமும் சதையுமா நிக்குது. லவ் பண்றேன்னு சொல்லுது. அப்போ அவளை உதாசீனப்படுத்தும்போதே அவர் கேரக்டர் மேல் எரிச்சல் வந்துடுது.ஆனா ஹீரோயின் டைரியை படிச்சதும் உடனே எப்படி மனசு மாறிடறார்?ஏத்துக்க முடியலையே?


6. காதல்ங்கறது மனசளவில் உணருவது ஊடலில் இருக்கும் ஹீரோயின் தானா உணர்ந்து வந்தா ஓக்கே.. ஹீரோவின் நண்பர்கள் போய் ஹீரோ டைரியை கொடுத்து உணர்த்துவது எல்லாம் நாடகத்தனம்.. 
http://mimg.sulekha.com/janani-iyer/images/stills/janani-iyer-photos-021.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -39

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு
உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்..இடைவேளை வரை மொக்கை காமெடி, அப்புறம் சீரியஸ் லவ்..  பெண்களும் பார்க்கும் தரத்தில் தான்
படம் இருக்கு. ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


http://www.koodal.com/cinema/gallery/events/2010/250/boss-engira-baskaran-premiere-show-stills_22_073605123.jpg



Saturday, August 18, 2012

ஏதோ செய்தாய் என்னை - சினிமா விமர்சனம்

http://tamilasia.com/wp-content/uploads/2012/03/Etho-Seithai-Ennai-Tamil-songs-mp3.jpgஹீரோயின் காலேஜ்ல மொத வருசம், ஹீரோ சீனியர்.. ராகிங்க்-ங்கற பேர்ல அப்பப்ப கலாட்டா பண்றார்..டெயிலி ஒரு ரோஸ் தர்றார்..ஹீரோ  ரோசாப்பூ விக்கற வாதியா? அல்லது ஹீரோயின் ரோசாப்பூ தலைல வைக்கற வாதியா? 2 ம் இல்லை. கொழுப்பு , அலும்பு தான்.. 


 ஹீரோயின் கண்டுக்கவே இல்லை.. படு கேவலமா திட்டறா.. இந்த தத்திக்கு அதெல்லாம் உறைச்சாத்தானே? ஹீரொயின் மாமா , அழகிரி மாதிரி ஒரு தாதா.. அவன் கிட்டே புகார் பண்றா.. 


இப்போ பயங்கரமான சஸ்பென்ஸ் காட்சி.. ஹீரோவும் மொத வருசம் தான் , 3 வது வருஷம்னு பொய் சொல்லி இருக்கான் ராஸ்கல். 

ஒரு தடவை ஹீரோவுக்கு கை விரல்ல அடிபட்டுடுது.. ஸ்பூன்ல சாப்பிடலாம்.. அந்த சாதாரண மேட்டர் கூட அந்த தத்தி ஹீரோயினுக்கு தெரியல.. ஊட்டி விடறா.. பதிலுக்கு ஹீரோ கொடைக்கானல்ல விடலை... ஏன்னா அவன் ஒரு விடலை.. கேனம் மாதிரி கெக்கே க்கே பிக்கேக்கேனு சிரிக்கறான். 2 பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகிடுது.. ( அதென்ன டவுன் பஸ்சா? மோட்டாரா? ஸ்டார்ட் ஆக ? )


ஹீரோயின் மாமா பெரிய தாதாவா இருந்தும் காதலை  ஏத்துக்கறார்... சஸ்பென்சாம் அடேய்.. அப்புறம் பார்த்தா அவரோட தொழில் முறை வில்லனை ஏமாத்தவாம்.ங்க்கொய்யால.. ஹீரோயினோட அண்ணனோட தொழில் எதிரி கேனம் மாதிரி ஹீரோவை கடத்தி “ உன் மாப்ளையை கடத்திட்டேன் ஹே ஹே ஹேய்” அப்டினு இளிக்கறான்.. 12 மணிக்குள்ள வந்தா  அவனை விட்டுடறேன்கறான்.. ( அவன் என்ன நடு நிசி நாயா ? பேயா?)



 http://i.ytimg.com/vi/IErQEd9UaLI/0.jpg


 இவர் போகலை.. இப்போதான் மாமாவோட  சுய ரூபம்  ஹீரோயினுக்கு தெரிது.. ஹீரோ க்ளைமேக்ஸ் ஃபைட் போட்டு படத்தையும் ஆடியன்சையும் ( 18 பேர்தான் ) முடிச்சு வைக்கறார்.. 

 பி வாசுவின் பையன் ஷக்தி தான் ஹீரோ. ஆள் இப்போ அஜித் மாதிரி வெயிட் போட்டுட்டார்.. எதுக்கு இவர் மீசைக்கும், மூக்குக்கும் ஓவர் க்ளோசப் வைக்கறாங்களோ? இவர் என்ன ஹீரோயினா?அவ்ளவ் க்ளோசப் ஷாட்ஸ் எதுக்கு? ஹீரொயின் கிட்டே வழியும் காட்சிகள் எல்லாம் ஓக்கே.., ஆனா வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசறது, ஃபைட் போடறது, 87 பேரை அடிக்கறது எல்லாம் ஓவர் ,ஓவரோ ஓவர்.. 


ஹீரோயின் புது முகம் லியா.. பொட்டே வைக்காத 50 மார்க் ஃபிகர்.. பல சீன்கள்ல இவர் கோபமா முகத்தை வெச்சுக்கவே ரொம்ப கஷ்டப்படறார்.. நல்லா கொழுக் மொழுக்னு தான் இருக்கார்.. ஓக்கே.. 



வில்லன்களா பூந்தோட்டக்காவல்காரன் ஆனந்த், பாடும் வானம்பாடி ஆனந்த் பாபுவும்.. ஆனந்த் ஓக்கே.. ஆனந்த் பாபு மொட்டை எல்லாம் அடிச்சு  5 உள் பனியன் போட்டு அதுக்கு மேல 2 டி சர்ட் போட்டு அப்புறமா ஒரு சட்டை போட்டிருப்பார் போல ( வில்லன்னா ஜை ஜாண்டிக்கா காட்டனும் இல்லை? )


http://www.top10cinema.com/dataimages/16320/13-08-2012-16320-1-6.jpg

42, 38, 36,38 ( மார்க்ங்க ஹி ஹி )

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஹீரோயின் பேக் ( நிஜமான லெதர் பேக்யா- பேடு பாய்ஸ்) உயரமான ஷெல்ப்ல இருக்கு.. ஹீரோயினால எடுக்க முடியல.. எட்டலை.. (  ஒரு அலை 2 அலை , 3 அலை ,4அலை , 5 அலை , 6 அலை, 7 அலை, 8அலை = எட்டலை)ஆனா ஹீரோ கிட்டே கேட்க கூச்சம், ஈகோ வேற.. ஆல்ரெடி சண்டை போட்டிருக்கு வேற.. ஹீரோவே வாலண்ட்ரியா மே ஐ ஹெல்ப் யூ?ன்னு கேட்கறாரு ( முறைப்படி ஆகஸ்ட் ஐ ஹெல்ப் யூன்னு தான் கேட்டிருக்கனும்? )அவர் பேக்கைத்தான் எடுத்து தர்றாருன்னு நம்பி ஏமாந்துடுச்சு பொண்ணு.. ஹீரோ ஹீரோயின் இடுப்பை பிடிச்சு தூக்கி விடறார்.. செம கிளு கிளு சீன் இது.. ( ஐடியா - நோட் பண்ணிக்குங்கப்பா)


2. ஹீரோயின் மாமாவோட அடியாள் கிட்டே “ நான் அவனை அடையாளம் காட்டறேன், நீ அவனை அடிச்சு உதச்சு ஜட்டியோட துரத்தனும்” என சொல்ல அந்த நேரம் பார்த்து ஹீரோ வெறும் ஜட்டியோட வர ஹீரோயின் தோழிகள் எல்லாம் முகத்தை திருப்பிக்கொள்ள , வில்லன் அடியாள் “ ஹலோ ஆல்ரெடி அவர் ஜட்டியோட தான் இருக்கார்.. இப்போ நான் என்ன செய்ய? என தம்பி மாதவன் மாதிரி கேட்பது செம காமெடி கலாட்டா காட்சி


3. காதலில் சொதப்புவது எப்படி  படத்தில் அடி வாங்கும் ஸ்பெஷலிஸ்ட் காமெடியன் இதிலும் அதே போல் பொண்ணுங்களிடம் அடி வாங்குவது ஜாலியாத்தான் இருக்கு 


4. ரிங்க் டைட்டா இருக்கு, கழட்ட முடியலைன்னு ஹீரோ பண்ற அட்டூழியங்கள் புரியாம லூஸ் ஹீரோயின் அவருக்கு பணி விடை செய்வதும் பின் அது காதலாக மாறுவதும்


5.  ஹலோ! யார் பேசறது? வசன நடையில் கலந்த பாட்டு சீன் 


6. ஹீரோயின் மோதிரம் காணாம போயிடுது.. ஹீரோ அந்த மோதிரம் கிடைச்சதா சொல்லி ஒரு மோதிரம் தர்றார்.ஹீரோயினுக்கு அது அவ மோதரம் இல்லைங்கறது 4 மாசம் கழிச்சு தெரிய வருது.. ஹீரோ கிட்டே போறார். மோதிரத்தை தர்றார். அப்போ ஹீரோ என்னமோ ஐ ஏ எஸ் எக்சாம் ரிசல்ட் என்னாச்சுன்னு கேட்கற மாதிரி “ என் லவ் மேட்டர் என்னாச்சு?”ன்னு கேட்கறப்ப இப்போ நான் கொடுத்திருப்பது உன்னோட மோதிரம் அல்ல, என்னோடது  என்கிறார் ( என்னுது உன்னுது, உன்னுது என்னுது  கான்செப்ட் )நல்ல கவிதையான காட்சி

 http://moviegalleri.net/wp-content/gallery/etho-seithai-ennai-movie-stills/etho_seithai_ennai_movie_stills_sakthi_vasu_liya_sree_5ea2aea.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன் ஹாலிவுட் படம் சுடற மாதிரி இருந்தா ஒரே டி விடியை 9 பேர் சுடாதீங்க..  ஒரே விதமான காட்சி அமைப்புகள் எத்தனை படத்துல பார்ப்பது?



2. தாதா,  ரவுடி யாரா இருந்தாலும் சரி பகையை தீர்க்க அவனவனைத்தான் கொல்வான்.. இப்படி லூஸ்மாதிரி தங்கச்சி மாப்ளை, மாமா பொண்ணோட மச்சான் இப்படி எல்லாம் கடத்திட்டு இருக்க மாட்டான்.. கேனத்தனமா திரைக்கதை எழுதறதை நிறுத்துங்க.. பெஞ்ச்  ரசிகர்கள் எல்லாம் படு கேவலமா நக்கல் அடிக்கறாங்க..


3. ஹீரோயினால உயரமான ஷெல்ஃப்ல இருக்கும் அவரோட காலேஜ் பேக்கை எடுக்க முடியலை, ஹீரோ அதை எடுத்துத்தர உதவி பண்ற மாதிரி ஒரு சீன். அப்போ அந்த இடத்துலயே ஒரு பெஞ்ச் இருக்கு.. அதை ஆடியன்ஸ் கண்ல காட்டாம அக்கட்ட தூக்கிப்போட்டிருக்க வேணாமா? ஒரு ஆள் கேட்கறான் - அந்த பொண்ணு என்ன  கபோதியா? பெஞ்ச் மேல ஏறி நின்னு எடுக்காதா?”


4. ஹீரோவுக்கு வலது கைல ஒரு விரல் அடிபட்டிருக்கு, 2 நாளா சாப்பிடலைன்னு ரீல் விடறப்போ ஒரு காதலியா, தோழியா இருந்தாக்கூட  அதை நம்பி ஊட்டி விட்டா ஓக்கே, ஆனா ஆல்ரெடி 2 பேருக்கும் வாய்க்கா தகராறு இருக்கு,.,. அப்படி இருக்க அந்த லூஸ் அதை நம்பி ஊட்டி விட்டுட்டு இருக்கே, ஏன்?



5,. ஹீரோயின் ஒரு கேட்பரீஸ் பைத்தியம்.. 2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு அந்த லூஸ் ஒரு சாக்லெட்  பைத்தியம்னு தெரியும் தானே?எப்பவும்  சாக்லெட் வாங்கி ஸ்டாக் வெச்சுக்க மாட்டான்? ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போறாங்க..  என்னனெமோ ஹீரோ ஆர்டர் பண்றார். ஹீரோயின் எனகு சாக்லெட் தான் வேணும்கறா.. உடனே ஹீரோ என்ன பண்ணனும்? பேரர் கிட்டே 10 ரூபா குடுத்து சாக்லெட் வாங்கிடு வான்னு அனுப்பி இங்கே அவன் கடலை பிஸ்னசை நடத்தனும், அதை விட்டுட்டு தொங்கா தொங்கான்னு 2 கிமீ ஓடறான்.. அப்போ வில்லன் வர ஹீரோயின் தனியா மாட்டிக்கறா.. உஷ் அப்பா முடியல.. 


6. ஹீரோவை வில்லன் ஆளுங்க 30 பேர் 45 இரும்புக்கழியால அடிக்கறாங்க.. ஹீரோ சாக இருக்காரு, ஆனா ஹீரோயின் கிட்டே வந்து சேர்ந்துடறாரு.. உனக்கு ஏதும் ஆகலையேன்னு ஹீரோயின் பதற ஹீரோ கேனம் மாதிரி  சாக்லெட் எடுத்து தர்றார்... அடேய் அது ரொம்ப முக்கியமா இப்போ?



7. படத்துக்கு சம்பந்தம் இல்லாம சைடு வில்லன் அவன் சைடுல படுத்திருக்கும் தன் சம்சாரத்துக்கு  மெட்டி மாட்டி விட்டு, பொட்டை சரி செஞ்சு என்னென்னெமோ பண்றான், அவனை போலீஸ் பிடிச்சுட்டு போனதும் அந்த பத்தினி வந்து வில்லன் வீட்டு கேட் முன்னால நின்னு சாபம் தர்றா, 2 ரீல் வேஸ்ட்,, படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? ( அந்த பில்டப் பார்த்து சைடு வில்லனோட சம்சாரத்துக்கும், மெயின் வில்லன் க்கும் ஏதோ கில்மா சீன் இருக்குன்னு நம்பி ஏமாந்துட்டோம் )

http://chennai365.com/wp-content/uploads/movies/Etho-Seithai-Ennai/Etho-Seithai-Ennai-Stills0953Ff04326.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்த ரோஸ் வாங்குன காசுக்கு குவாட்டர் வாங்கி இருந்தா எனக்காவது யூஸ் ஆகி இருக்கும்.. 



2. இந்த கிளாஸ்ல 36 பசங்க இருக்காங்க, ஆனா 6 பொண்ணுங்க தான் இருக்காங்க,..  3:1 என்ற குறைந்த பட்ச விகிதம் கூட இல்லை.. என்னடா காலேஜ் இது?பலாப்பழத்தை ஈ மொய்க்கறது மாதிரி இனி எல்லாம் அட்டு ஃபிகர மொய்ப்பானுங்களே?


3. பாடம் நடத்த வந்தானா? சுண்ணாம்பு அடிக்க வந்தானா? இந்த  காட்டு காட்ரான் லெக்சரர்? இங்கே படிச்சா நாம உருப்பட்டுடுவோம் போல.. அது நடக்கக்கூடாது



4. முதல்ல ரெட் ரோஸ் தந்தேன், அப்புறம் ஒயிட் ரோஸ் தந்தேன், இப்போ எனக்குப்பிடிச்ச  யெல்லோ  ரோஸ் தர்றேன்.. எனக்கு பிடிச்சது இந்த ரோஸ் மட்டும் இல்லை, உன்னையும் தான் 


5. காலேஜையே கலக்கனும்னு நினைச்சேன், இப்போ காலேஜ் வரனும்னு நினைச்சாலே அடி வயிறு கலங்குது

 ஏன் பெண்ட் பண்ணி பண்ணி நடக்கறீங்க?

 வாங்குன அடி அப்படி, அலைன்மெண்ட்டை மாத்திட்டானுங்க.. 



6. இந்த பசங்களே இப்படித்தாண்டி, இப்படித்தான் ஒரு நாள் ஒருத்தன் என்னையே நாய் மாதிரி மோப்பம் பிடிச்சுட்டு பின்னாடியே வந்தான்.. நான் என்ன செஞ்சேன் தெரியுமா?


 உன் சர்ட்டை கழட்டி அவன் கிட்டே கொடுத்துட்டியாக்கும்?



7. நான் சொல்ற மாதிரி செய்.. அவன் சட்டையை கழட்டி, பேண்ட்டை கழட்டி.. 

 அய்யோ

 அவ்ளவ் தான்..  அதுக்கு மேல வேணாம்.. 




8. XQS மீ சார்.. 


 அடிபட்ட பிறகு தமிழே சரியா புரிய மாட்டேங்குது, இதுல இங்கிலீஷ் வேறயா? 


 9.  சார், வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா போய்ட்டு வந்துடுவேன்

 நோ, நான் ரொம்ப கண்டிஷன்



உவ்வே

 சரி சரி போ 



10. வாமிட் பண்றேன்னு போனவன் அந்த பொண்ணை வாமிட் எடுக்க வெச்சுடுவான் போல இருக்கே?


11. என் ஃபிரண்ட் ரொம்ப நல்லவன், மானம், வெட்கம், ரோஷம் எதும் அவனுக்கு கிடையாது

 அய்யய்யோ, நீங்க சொன்னது அவனுகு கேட்டுட்டுச்சு போல, போறார்

 போகட்டும், அதுக்குத்தான் சொன்னதே


12. கணக்கு வாத்தியார்னு நினைச்சு வந்தோம், கராத்தே வாத்தியார் போல 


http://cdn3.supergoodmovies.com/FilesFive/0786ff977c5847f0aaae43c7cd4130f4.jpg




 சி .பி கமெண்ட் -  டி வி ல போட்டா பர்க்கலாம், இல்லை பார்த்தே ஆகனும்னு அடம் பிடிக்கறவங்க இடைவேளையோட எந்திரிச்சு ஓடி வந்துடுங்க ஏதோ செய்தாய் என்னை - படத்துல கடைசி வரை யாரும் எதையும் செய்யலை, அப்புறம் எப்படிய்யா படம் ஓடும்?

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்


 ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்

ஈரோடு அன்னபூரணி டி டி எஸ் தியேட்டரில் டிக்கெட் பிரிண்ட் பண்ணக்கூட காசு இல்லாததால் இதைக்கொடுத்தனர்#அய்யோ பாவம் ஏழை


டிஸ்கி -

1. பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/blog-post_17.html

 

2. . EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம் 

3. அட்டகத்தி - சினிமா விமர்சனம்

4. நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrF0S3zmfZba1xd2UqxpGGot571qKOOb2OjWeCDsP4Ajdsm369MuwNaoPyCEt8VJpNtMEhSCXZtpLFigOSl03e8R3q8Ypq4BSPDs2EPofoxwhD0KLqdz3CEsAlFYhhMFedD-XgOBJSUIA/s1600/Etho+Seithai+Ennai+%25282012%2529+Tamil+Mp3+Songs+Free+Download.jpg

 

Wednesday, August 15, 2012

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ZKnKmu1vbj66VfftnQboUbAahyP3EhDJ3KSSTJuIGGQj2ImtFmH9S_vIpHZo04cu9e_6T94nz5kRatIHWSbbNnpXMWC9hTYAPAgFxxhi4ziqzAa3CUOo9o6IMM8aev41PPYg94XbW7w/s1600/attakathi_movie_posters_wallpapers_004.jpgஅண்ணா என்றழைத்த பெண்ணை கண்ணா எண்றழைக்க வைக்கத்துடிக்கும்  ஒரு  சராசரி இளைஞனின் எளிமையான காதல் கதைதான் இந்த அட்டகத்தி..அட்டகத்தின்னா என்ன? . டம்மி பீஸ், வெத்து வேட்டு = அட்டகத்தி.. அந்தக்காலத்துல எம் ஜி ஆர் அட்டைக்கத்தி வீரர்னு எதிரிகளால் கிண்டல் செய்யப்பட்டார்.. ஆனால்  அவர்  அடைந்த புகழ் அளப்பரியது.. 


ஹீரோ +2 ல ஒரு பேப்பர் போயிடுச்சு,ஒவ்வொரு எலக்‌ஷன் வர்றப்பவும் டாக்டர் ராம்தாஸ் எப்படி அடுத்த தேர்தலில் நான் தான் சி எம்னு சொல்வாரோ அந்த மாதிரி 4 வருஷமா பாஸ் ஆகிடுவேன், அடுத்த வருஷம் பாஸ் அப்டினு ரீல் விட்டுட்டு பார்க்கறவங்க கிட்டே காலேஜ் ஸ்டூடண்ட்னு ரீல் விட்டுட்டு திரியறார்


பார்த்தேன் ரசித்தேன் படத்துல வர்ற மாதிரி ஹீரோ பஸ்ல பார்த்த ஒரு ஸ்கூல் ஃபிகரை லவ் பண்றாரு.. வழக்கம் போல அந்த ஃபிகர், பார்க்குது, சிரிக்குது... ஆனா லவ் சொல்ல வரும்போது “ அண்ணா, என்னை விட்டுடு”ங்குது.. ஹீரோ உடனே தாடி எல்லாம் வளர்த்து தேவதாஸ் ஆகலை.. அடுத்த ஃபிகரை பார்க்கறான்..


வீட்டுக்கு எதிர் வீட்டுப்பெண் ஒண்ணு பார்த்து சிரிக்குது.. அதையும் ரூட் விடப்பார்க்கறான்.. அப்புறம் பார்த்தா அது அண்ணன் ஃபிகரு, அண்ணி முறை.. இப்படியே டாக்டர் ராம்தாஸ் அரசியல் மாதிரி மாறி மாறி பச்சோந்தி மாதிரி ஹீரோவுக்கு மனசு மாறிட்டே இருக்கு. ஸ்கூல் லைஃப் முடிஞ்சு  எப்படியோ கேப்டன் கரை சேர்ந்த மாதிரி பாஸ் ஆகி காலேஜ் போறாரு..  இதுவரை படம் பவானி ஆற்றுத்தண்ணீர் மாதிரி  தெளிவா , அமைதியா, ஜாலியா போகுது.. 


இடைவேளைக்குப்பிறகு கல்லூரி வாசல் பிரசாந்த் கெட்டப்ல ஹீரோ ரூட்டு தல... என்ற காலேஜ் சேர்மேன் மாதிரி ரவுடி ஆகறார்.. காடு வெட்டி குரு மாதிரி பார்த்த ஆள்ங்களை எல்லாம் அடிக்கறார்.. காலேஜ்ல ஆரம்பத்துல அவர் ரூட் விட்ட ஃபிகரு காலேஜ் படிக்க வருது.. 


 இவரை பார்த்து ஏன் இப்படி இருக்கே?படு கேவலமா இருக்கியே? அன்னைக்கு எப்படி இருந்தே?ன்னு உசுப்பேத்தி விடுது.. பழைய சசிகலா கதவைத்திறன்னு ஜெ சொன்ன மாதிரி ஹீரோ மறுபடி அந்த பொண்ணு பின்னால சுத்தறார்.. முரளி மாதிரி கடைசி வரை காதலை சொல்லாம மென்னு முழுங்கிட்டே இருந்தா என்ன கதி ஆகும்?கறது க்ளைமாக்ஸ்..



http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-158.jpg


ஹீரோ புதுமுகம். இடைவேளை வரை இவர் நடிப்பு கலக்கல்.. தெனாவெட்டான நடிப்பு.. அக்மார்க் சராசரி பிளஸ் டூ மாணவன் பாடி லேங்குவேஜ்.. ஒவ்வொரு ஃபிகரும் அவரை ரிஜக்ட் செய்யும்போது கொஞ்சமே கொஞ்ச நேரம் வருத்தப்படுவதும், பின் ஜாலி ஆவதும் செம. 


 ஆனா இடைவேளைக்குப்பின் அவர் சேது விக்ரம் மாதிரி , பானுச்சந்தர் மாதிரி நடிப்பில் இமிடேட் பண்றார்.. ஆனாலும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. 


 ஹீரோயினும் புதுமுகமே.. கொஞ்சம் ஏறு நெற்றி.. கிராமத்து முகம், நகரத்து முகம் கலந்த கலவை.. ஸ்கூல் கேர்ள், காலேஜ் கேர்ள் என அவர் காட்டும்  மாறுதலான முகத்தோற்றங்கள் அழகு.. 


 படத்தில் முக்கியமான ஹீரோ இசை.. படம் ரிலீஸ் ஆகும் முன்னே ஹிட் ஆன பாடல்கள்.. அதுவும் ஆடி போனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி பாட்டு ஹை லைட்.. அலட்டிக்காத இசை.. மனதைக்கொள்ளை கொள்ளுது.. பின்னணி இசை ஓக்கே.. ஆனா பல காட்சிகளில் அந்தக்கால டிராமா இசை போல் போட்டிருப்பதால் படமும் டிராமா பார்க்கும் உணர்வையே தருது.. 

http://masscinema.in/wp-content/gallery/attakathi-movie-stills_1/attakathi-tamil-movie-stills-57.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அம்மா, என் ஜட்டி எங்கே?



அங்கே தான் இருக்கும் பார்டா.. 


இல்லை


 எங்கம்மா வீட்டுக்கு கொடுத்து விட்டிருக்கேன்.. 

ம்க்கும், அய்யோ என்னம்மா இது அடுப்புக்கரித்துணியா வெச்சிருக்கே?



2.  லவ்வர்ஸ் பாய்ஸ்னா அப்படித்தான்.. ஃபீல்டு ஒர்க் பண்ண போயிடனும்.. 



3. விட்றா, நீ தமிழ்லயா ஃபெயில்.. இங்க்லீஷ்ல தானே?அந்நிய நாட்டு மொழியை படி படின்னா எப்படி படிக்க?


4. படிக்கலைனாலும் ஈசியா பரீட்சை எழுதலாம் மச்சி.. இங்க்லீஷ் கொஸ்டீன் பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதனும், ஆனா ஒரு கண்டிஷன்.. நீ எழுதி இருக்கறது யாருக்கும் புரியக்கூடாது.. 


5.. டேய் என்னடா..? ஃபிகர் உன்னை பார்த்து சிரிக்குது?


ஹி ஹி 

 அய்யய்யோ, நீயும் அவளைப்பார்த்து சிரிக்கறே.. 

 ஹி ஹி \


 அடப்பாவி.. நான் 3 வருஷமா ட்ரை பண்றேன்.. ஆனா எனக்கு சிக்கலை, ஜஸ்ட் 3 மாசத்துல நீ கரெக்ட் பண்ணிட்டியே மச்சி.. 



6.  அண்ணா! இனி என் பின்னால வராதே! 


 என்னது? அண்ணனா?



7. விட்றா.. இப்போ நான் சோகமா இருந்தா மட்டும் அது என்ன என்னை மாமான்னா  கூப்பிட்றப்போகுது?


8. இவர் தான் ஹீரோவோட அப்பா.. இவருக்கு எப்போ எல்லாம் கோபம் வருதோ அப்போ எல்லாம் வாழை மரத்தை வெட்டுவார்.. அதான் அட்டைக்கத்தி ஃபேமிலி.. 


 9. பாழாப்போன வாத்தியார் 2 மார்க் சேர்த்து போட்டிருந்தா  ஆகாதா? என் பையன் அப்பவே பாஸ் பண்ணி இருப்பானே?


 உங்க பையன் ஃபெயிலா?

ச்சே ச்சே ஒரு பேப்பர்ல தான் போச்சுங்க.. அம்மா தெரியாம சொல்றாங்க.. 


 ஆமாமா, ஒரு பேப்பர் தான், ஆனா 4 வருஷமா அதை க்ளியர் பண்ணாம இருக்கான்.. 


10. அடடா.. அடடா.. 2 பொண்ணுங்களும் பார்க்கறாங்களே, திவ்யா, நதியா 2 ல யாரை செலக்ட் பண்ண? ஒரே குழப்பமா இருக்கே?


http://moviegalleri.net/wp-content/gallery/attakathi-shooting-spot-stills/attakathi_movie_shooting_spot_stills_1e167d0.jpg



11. நல்லாதான் பார்க்குது, சிரிக்குது.. நான் கூட செட் ஆகிடும்னுதான் நினைச்சேன்.. ஹூம்


12. நான் நல்லாத்தானே இருக்கேன்?டிரஸ்ஸிங்க் சென்ஸ் நல்லாத்தானே பண்றேன்?அவனைப்பார்த்தா அவளுக்குப்பிடிக்குது.. என்னைப்பார்த்தா பிடிக்கலை, அது ஏன்?


13. ஹாய்.. சாப்டாச்சா?


 ம் ம் 


 சாப்பிடலைன்னா பிரியாணி வாங்கித்தரலாம்னு நினைச்சேன்.. 

 ஸாரி.. அது காலைல சாப்பிட்டதை சொல்லிட்டேன், இப்போ சாப்பிடலாம்ங்க.. 




14. அப்போ  எல்லாம் என்ன ஸ்டைலா இருப்பே.. இப்போ ஏன் இப்படி இருக்கே? பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கு.. 


15. ஹலோ.. லெட்டர்னா கேவலமா?இன்னைக்கும் காதலை சொல்ல அழகான வழி கடிதம் தான்.. 


16. இங்கே பாரு, மச்சி, பொண்ணு ஓக்கே சொன்னா உடனே தூக்கிடனும்.. அதான் நல்லது.. 


17. பசங்க கூட சேர்ந்து குடிச்சேன்னு தெரிஞ்சுது.. உன்னை எதும் செய்ய மாட்டேன்.. பிராந்தில விஷத்தை கலந்து நான் குடிச்சிடுவேன்.. ஆரம்பத்துல கூல் டிரிங்க்ஸ்தான்னு சொல்லிக்குடுப்பாங்க.. பார்த்துக்கோ, நம்பிடாதே. என்ன?

18.அண்ணான்னு ஒரு பிகர் சொல்லுச்சுன்னா தங்கச்சின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கணும் மச்சி"



http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-175.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. ஹீரோ தினேஷ், ஹீரோயின் நந்திதா இருவரிடமும் வேலை வாங்கிய விதம் மார்வெலஸ்.. 


2. ஹீரோ வலுக்கட்டாயமாக வராத சோகத்தை முகத்தில் வர வைக்க ஒரு தலை ராகம் படம் பார்த்து சோகத்துக்கு ட்ரை பண்ணி நடிப்பது புதுசு.. நல்ல ஐடியா.. 


3. சாவு வீட்டில் நடக்கும் சோகத்தை  காமெடியாக்கி அங்கே ஹீரோ தப்பாட்ட மேள இசைக்கு ஆடிக்கொண்டே கண் இமையால் ரப்பர் எடுப்பது, அதை பார்த்து குதுகலித்து ஹீரோவின் அண்ணண் ஃபிகர் அமுதா தனி இடத்தில் போய் குத்தாட்டம் போடுவது அழகு..நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா?".ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா கானா பாட்டு கலக்கல்

http://moviegalleri.net/wp-content/gallery/attakathi-shooting-spot-stills/attakathi_movie_shooting_spot_stills_2f4a39f.jpg



4. பஸ்சில் காதல் சோகத்தில் ஹீரோ இருக்கும்போது பழைய தோழி பஸ்சில் வாலண்ட்ரியாய் வந்த ஆண்ட்ரியா போல் உரசுவது, மேலே விழுவது அவர் இடையை எல்லை மீறிய அழகியல்வாதமாய் உபயோகிப்பது செம கிளு கிளு.



5. ஹீரோவின் அப்பாவின் கேரக்டர் மனம் தொடுகிறது.. அல்டாப் பேர்வழியாக இருந்தாலும் மகன் மீது காட்டும் மறை முக பாசமும், தான் குடிகாரனாக இருந்தாலும் தன்  மகன் நல்லவனாக வளரனும் என்ற ஆதங்கத்தில் பேசுவது எல்லாம் செம.. அதே போல் அம்மா கேரக்டரும் படு பாந்தம்.... அவர் கணவருக்கு சோறு ஊட்டும் காட்சியில் ஏங்க வைக்கும் பாச மழை.. 


6. இசை சந்தோஷ் நாராயணன்.. இவர் கீதாப்பிரியனா? கிதார்ப்பிரியனா? படம் பூரா மெல்லிய கிதார் ஒலி மனதை வருடுது.. 2012இன் மறக்க முடியாத இசை.

7. படத்துல ஹீரோ ரூட் விடும் பெண்கள் மட்டும் 8 பேர். எல்லாமே 70 மார்க் ஃபிகர்ங்க தான் மிக இயல்பான , ஒப்பனை இல்லாமலேயே அழகுள்ள மனதை சுண்டி இழுக்கும் ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் சபாஷ் டைரக்டர் பா ரஞ்சித்

8. படத்தின் போஸ்டர் டிசைன், மார்க்கெட்டிங்க் டெக்னிக், ஸ்டில்ஸ் எல்லாம் செம.. ஒளிப்பதிவும் அருமை... 


http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-154.jpg

 இயக்குநரிடம்  சில கேள்விகள்



1. காலேஜில் ஹீரோவை அடிக்க  5 பேர் வர்றாங்க.. அப்போ ஹீரோ கூட 12 பேர் இருக்காங்க.. அவங்க அம்போ என்று  அவரை விட்டுட்டு ஓடிடறாங்க.. இது 2 வகைலயும் லாஜிக் இல்லை.. 1. எண்ணிக்கை//  5 பெருசா? 12 பெருசா? அடுத்து என்னதான் ஆள்கள் ரவுடிகளாக வந்தாலும் அப்படி எல்லாம் நண்பர்கள் விட்டுட்டுப்போக மாட்டாங்க.. ஆனா அந்த சீனை யாரும் குறை சொல்லமுடியாத படி காமெடி ஆக்கிட்டதும் சாமார்த்தியம் தான்.. ஆனாலும் குறை குறை தான்.. 



2. ஹீரோ கிட்டே முன்னாள் தோழி தானா வந்து உரசரது பார்க்க கிளுகிளுப்பாத்தான் இருக்கு.. ஆனா அதில் நம்பகத்தன்மை இல்லை.. ஏன்னா ஒரு ஆண்ட்டியோ, டிக்கெட்டோதான் அப்படி வாலண்ட்ரியா உரசும். இப்படி உரசுனா எவனும் லவ்வர்னு நினைக்க மாட்டான்.. அயிட்டம்னு தான் நினைப்பான்.. 


3. அந்த பஸ் கில்மா சீன் நடக்கறப்ப ஹீரோயின் அதை பார்த்துடறா.. அதை பார்த்து அதிர்ச்சி ஆகற மாதிரி காட்டி பின்னால ஒரு சஸ்பென்ஸ் வெச்சிருக்கீங்க.. ஓக்கே. ஆனா அந்த சீனுக்குப்பின் படம் ஏன் ஸ்கிப் ஆகுது? எடிட்டிங்க்ல கோளாறா?

http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-148.jpg


4. ஹீரோ எதையும் லைட்டா எடுத்துக்குவார் என்பதை அடிக்கடி சொல்றதால
 காதல் தோல்வி வரும்போது நமக்கும் பெரிய பாதிப்பு வர்லை.. அது பெரிய மைனஸ்.. 


5. இயக்குநர் சொல்ல வர்ற மேட்டர் லவ் சக்சஸ் ஆகலைன்னா இருக்கவே இருக்கு அடுத்த லவ்   டேக் இட் பாலிஸி.. நல்ல தீம் தான்.. ஆனாலும் முதல் காதல் மாறாத ரணமாய் என்றும் மனசில்  தங்கி இருக்கும் என்பதை அழுத்தமா சொல்ல தவறிட்டார்னு நினைக்கறேன்..


6.படத்தின் முன்பாதி வரை சினிமாத்தனம் இல்லாம நாம எல்லாரும் சந்திச்ச பஸ் லவ் பேஸ் பண்ணி படம் போகுது. ஆனா பின் பாதில ஹீரோவை ஏன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி காலேஜ் ரூட் தல ஆக்கனும்? ஃபைட், ரகளை எல்லாம் எதுக்கு? அதான் பல படங்கள்ல காட்டியாச்சே. அந்த 2 ரீல் கட் பண்ணி இன்னும் வெரைட்டியா யோசிச்சிருக்கலாம்..


7. ஆல்ரெடி ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் குடுத்தவன்.. அப்போ பாப்பா பிளஸ் டூ மெச்சூரிட்டி பத்தலை ஓக்கே இப்போ காலேஜ் கேர்ள். தான் இன்னொருவரை லவ் பண்ற விஷயத்தை அவ ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? எந்த பொண்ணும் இந்த விஷயத்துல மறைக்க மாட்டா.


சி.பி கமெண்ட் - காதல் படங்கள்ல ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி மாதிரி செம ஸ்பீடு திரைக்கதை எதிர்பார்த்து போனா ஏமாற்றம் தான் வரும்..இது கோவை குற்றாலம் மாதிரி மிதமான வேகத்தில் பொழியும் நீர் ஊற்று.. எல்லாருக்கும் பிடிச்சுடாது.. காதலர்கள், யூத்ங்க, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு பிடிக்கும். பெண்களும் பார்க்கும் படி கண்ணியமான நெறியாள்கை..இந்தப்படம் சந்தேகம் இல்லாத ஒரு வெற்றிப்படம் தான், ஆனா பிரமாதமான வெற்றிப்படம் ஆகும் வாய்ப்பை ஹேர் இழையில் தவற விட்ட படம்

http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Attakathi%20Movie%20Stills/65795440Attakathi_Movie_Stills-(58).jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று


 டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் -  3 1/2  /5


டெக்கான் கிரானிக்கல் - 7 /10



Saturday, August 04, 2012

உஞ்சவிருத்தி - சுஜாதா - சிறுகதை

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறா&ன பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.



‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.



‘‘நேத்திக்குதான்.’’



‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’



‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’



‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’



‘‘ஏர்போர்ட்ல.’’



‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’



‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு > விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’



‘‘ரெண்டும் ஒண்ணுதான.’’




‘‘இல்…லை.’’



‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’



‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’



‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’



‘‘மாட்டா!!’’



‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’



‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’



‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’



‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’



‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தான இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’



நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.





அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.



‘‘ரங்கு, இது யாரு?’’



‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி>னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’



‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’



யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.



‘‘உஞ்சவிருத்தி.’’



‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’



‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’



‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’



‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திர மங்கலத் தில் நெலம் எல்லாம் இருக்கு.’’



‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’



‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’



‘‘புரியலை ரங்கு.’’



‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’



ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சி>க்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…



‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’



‘‘கண்ணு வேற தெரியலை.’’



‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’




‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’



‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’



இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…




‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதா;ன? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’




‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’



‘‘ஜி.பிகிட்ட சொல்றதுதான?’’




‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’




‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’



‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’



ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.



‘‘நீ யாரு… கோதை பேரன்தா;ன?’’ என்றார் என்னைப் பார்த்து.




‘‘ஆமாம் மாமா!’’



‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’



‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’



‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’




‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’



‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயண&ன மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’



‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக் காகவா?’’



‘‘ஆமா, வேறென்ன..?’’



‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’



‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’



‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’



‘‘அதனால?’’



‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தா&ன நினைச்சுப்பா?’’



‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’



ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.



‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்ச விருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’




‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’



அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி>யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கபபா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’




‘‘தனியா இருந்து பாருமேன்.’’



‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’



‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’



‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நா;ன பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’



‘‘பிள்ளை?’’



‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’



‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’



‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போ&னன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’



‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’



அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.



ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண் டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…



‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’



‘‘பாத்தேன் சார்.’’



‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’



‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’



‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங் கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கற திலிருந்து பண்ற அட்ட காசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’



‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதா;ன?’’




‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’



‘‘சரி, நீங்க போய்டறதுதா;ன?’’



‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’



‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’



‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை மாத்தி மாத்தி எழுதிட் டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’



‘‘தொச்சுங்கறது…’’



‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறா&ன அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல் லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல் றார்’னு. அவ சொல்றது நியாயம்தா;ன?’’




‘‘தான தளிப்பண்றதா…’’




‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக் கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை. போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’



‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’



‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’




போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவி சாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.



நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போற வாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக் கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.




‘‘வாங்களேன் மாமா… உங்காம்தான? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.



‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம் கூட எடுத்துக்கமாட்டேன்.’’



வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேர்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டேர். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’




‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’



‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.




எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதா&ன?’ன்&னன். இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…

’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.



திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’



இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.



‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.



நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.



அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.



இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பி>க்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை > பதினெட்டு வயசு வரும் வரையில் வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.



பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக் கே&ன!’’ என்றான். ‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத் துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’



ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’





ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.



அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொலம்போ என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’



‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டேர். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தேர். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டேர். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டேர். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போ



றேன்னு காலை ஓடிச்சுண்டேர். மனசொடிஞ்சு போய்ட்டேர். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.



‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்.



‘‘எப்படி?’’



‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டு டுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’



‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’


‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’



‘‘இந்தப் பொண்ணு?’’


‘‘எம்.சி.ஏ.’’


நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’


‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

நன்றி - அமரர் சுஜாதா , உயிர் மெய் , சிறுகதைகள்

Sunday, July 29, 2012

சரோஜா - வா மு கோமு - சிறுகதை

சரோஜா


சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில் புதைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தலையணையை சாமிநாதன் என்றெண்ணி உயரத் தூக்கி முத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டாள். 'உடுங்க என்னெ சின்னக் கவுணுச்சி உடுங்க' என்று இவளின் காதுக்குள் சாமிநாதன் கூறுவது போலவே இருந்தது. 'உன்னை உடவே மாட்டேன்டா... ஒரு விசுக்காத்தான்டா இந்த சரோஜா ஏமாந்து போவா. எப்பத்திக்கிம் ஏமாந்துட்டே இருப்பாளாடா! உன்னையெ உடவே மாட்டேன்டா இந்த வாட்டி' என்று முனகிய சரோஜா தலையணையைக் கட்டிக் கொண்டே படுக்கையில் உருண்டாள்.



சரோஜா மூங்கில்பாளையத்தில் வடக்குத் தோட்டத்து ராமசாமிக் கவுண்டரின் பெண். பத்தாவது வரை விசயமங்கலம் அரசாங்கப் பள்ளியில் படித்தவள். பரீட்சை எழுதிய கையோடு விடுமுறையில் அம்மாயி வீட்டுக்கு திங்களூர் வந்தவளுக்கு உள்ளூருக்குள் சலூன் கடை வைத்திருந்த கோபாலன் மீது காதல் வந்தது. சலூன் கடை கோபாலன் நீளமான முடி வைத்திருந்தான். டிவியெஸ் ஸ்டார் சிட்டி பைக் வைத்திருந்தான். கார்கோஸ் பாண்ட் அணிந்திருந்தான். அஜித் மாதிரி சிவப்பாய் இருந்தான். இவளைக் கண்டதும் கண்ணைச் சிமிட்டினான். இவளுக்குள் அந்த செடி வேர் விட்டது. இவள் அம்மாயியையும், அப்பிச்சியையும் இராக் காலங்களில் அத்தாப் பெரிய வீட்டில் ஏமாற்றுவது எளிதாய் இருந்தது.



கோபாலன் சரோஜா மீது பித்தாய்த்திரிந்தான். அவனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு எல்லாப் பெண்களைப் போலவே பேசிக் கொண்டிருந்தாள்.



“இதெதுக்கு கோபாலு தாவாங் கட்டைக்கிக் கீழாறதுக்கிளியூண்டு மசுரு வளத்துறே? அதையெ நீயி நாளைக்கு செரைச்சு எடுத்துடு கோபாலு. அசிங்கமா இருக்கு. இருக்கட்டும் அதான் ஸ்டைலுன்னு சொன்னீன்னா உன்னைக் கடிச்சு வச்சுடுவேன்.”



“நீ கடிச்சு வைப்பேன்னு சொன்னப்புறம் நான் எதுக்கு அதை எடுக்கப் போறேன். நீ கடிச்சா எனக்கு வலிக்கவே வலிக்காது.”
“வலிக்காது... வலிக்காது... சரி, அதை நீ எடுப்பியா எடுக்கமாட்டியா?”



“எடுத்துடறேன் சரோ... உனக்குப் பிடிக்காதது என்கிட்ட எதுக்கு?” என்றவன் அப்படியே சரோஜாவை நிலத்தில் சாய்த்தான்.



“என்னைக் கட்டிக்குவீல்ல? என்னை ஏமாத்தமாட்டீல்ல? காலம் பூராவும் என்னெ உன் கண்ணுக்குள்ள வெச்சுக் காப்பாத்துவியா? உன்னோட சலூன் கடை அம்மாவாசைக்கு லீவுதானே? நாளைக்கு கோபி கூட்டிட்டுப் போறியா? பச்சை மலைக்குப் போகலாம். சாமி கும்பிடலாம். அப் படியே புதுப்படம் ஒன்னு பார்க்கலாம். என்ன பேச்சையே காணோம்? கூட்டிட்டுப் போகமாட்டியா?” என்றாள்.



“நீ எங்கே கூப்பிட்டாலும் வருவேன் சரோ... கொஞ்சம் நேரம் உன் லொட லொட வாயை லொட லொடக்காம இரேன் சரோ...” என்றவன் சரோஜாவின் இதழ்களைக் கவ்வினான். சரோஜா அப்புறம் எதுவும் பேசவில்லை. கண்கள் இருட்டு வானம் பார்த்து செருகிக் கொண்டன. சரோஜா அவன் முதுகைத் தன் கைகளால் தடவிக் கொடுக்கத் துவங்கினாள்.



அடுத்த நாள் இருவரும் பேசி வைத்தது மாதிரி பச்சைமலைக்குச் சென்றார்கள். கோபாலன் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். சரோஜா மிரண்டாள். இப்ப என்ன அவசரம் என்றாள். என் தங்கம் என் கூடவே எப்பவும் இருக்கோணும் என்றான். இல்லை என்றால் சாவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்று அழுதான். அழுபவனை எப்படித் தேற்றுவது என்று சரோஜாவிற்குத் தெரியாமல் அவனுக்கே பச்சை மலை உச்சியில் கழுத்தை நீட்டினாள். பச்சைமலையில் வீற்றிருந்த முருகன் தெற்குப் பார்த்தபடி முகத்தைத் திருப்பி ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான். அது மூங்கில்பாளையத்தைப் பார்த்துத்தானாய் இருக்க வேண்டும்.



அப்பிச்சிக்கும், அம்மாயிக்கும் சாகவேண்டிய காலத்தில் பேத்தி பிரச்சினையைக் கொண்டு வந்து விட்டாள். நீயெல்லாம் சாதிக்காரியாடி? என்று அம்மாயி கத்திக் கொண்டே பெரிய வீட்டைச் சுற்றியது. ராமசாமி கவுண்டரை அப்பிச்சி போனில் கூப்பிட்டது! ராமசாமிக் கவுண்டருக்கு சேதியைக் கேட்டதிலிருந்து காலும் கையும் ஓடவில்லை. கெழக்குத் தோட்டத் தான் முத்துச்சாமி கவுண்டருக்குப் பதைபதைத்து போன் அடித்தார். முத்துச்சாமி கவுண்டரும் ராமசாமி கவுண்டரும் சொந்த அண்ணன் தம்பிகள்தான். இருவருமே ஆறேழு வருடங்களுக்கு முன்பாக உள்ளூர் தேர்தலின் போது சண்டை போட்டுக்கொண்டு கட்டுமாரு கட்டிக்கொண்டு மூங்கில்பாளைய வீதியில் உருண்டவர்கள்தான். எதிர்முனையில் யாரு? என்ற தம்பி குரல் கேட்டதும் இவர் முசுக்கென அழ ஆரம்பித்துவிட்டார். அழுகை சப்தம் வைத்தே அண்ணன்தான் என்பதை உணர்ந்த முத்துச்சாமி கவுண்டர் அழட்டும் என சித்த நேரம் விட்டார்.


“என்றா பார்த்துட்டே இருக்கேன்... பொட்டப்புள்ள கணக்கா... கூகூன்னு அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தமுன்னு வேண்டாம். என்னாச்சுன்னு சொன்னாத்தான தெரியும் எழவு? சரி இல்லீன்னா போனை வெய்யி நீயி... உம்பொட ஊட்டுக்கே வாரேன். ஆளுதான் தடிமாடு கணக்கா இருக்கியேயொழிய ஒரு எழவும் தெரியாதுடா உனக்கு! போனை வெய்யிடா... நானே வர்றேன்” என்று முத்துச்சாமி கவுண்டர் கூறவும் துண்டால் கண்ணீரைத் துடைத்துவிட்டு போனை வைத்தார்.



முத்துச்சாமி கவுண்டரும் அண்ணனுக்கு என்ன பிரச்சினையோ என்று உடனேயே அம்பாஸிடரை எடுத்துக்கொண்டு அண்ணன் வீடு வந்துவிட்டார். அண்ணி வாசல் படியில் தலையில் கைவைத்து அழுது கொண்டு இருந்தது. தென்னை மரத்தில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் இவரையும் இவரது காரையும் அடையாளம் கண்டு கொண்டு எழுந்து வாலை ஆட்டிக் கொண்டே ‘கூ’ என முனகியது. அண்ணன் வீட்டினுள் சோபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டதும், 'என்னடா ஆச்சு?' என்று கேட்டுக் கொண்டே அருகில் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார். ராமசாமிக் கவுண்டர் விஷயத்தை நிதானமாய்க் கூறினார்.



“இப்ப அவிங்க ரெண்டுபேரும் எங்க இருக்காங்களாமா?”


“திங்களூர்ல ஊட்டுலதான்.”


“இங்க உட்கார்ந்துட்டு என்ன வேலை... அங்க போயி பார்த்துக்கலாம். போயி தாலிய அத்து வீசி எறிஞ்சுட்டு நம்ம புள்ளையக் கூட்டிட்டு வந்தரலாம். ஆமா அந்தப்பயல் என்ன நம்ம சாதியா? நம்ம சாதியின்னா ஆரு எவரன்ன விசாரிச்சுத்தான் எதையும் பண்டோனும்.”



“என்ன சாதியோ என்ன கருமமோ.. பரிச்செ லீவுல இங்கயே ஏன் அவளும் ஊட்டச் சுத்தீட்டே கெடக்காட்டீன்னுதான் போறேன் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னவளைத் தாட்டி உட்டேன். இப்போ ஒரே மாசத்துக்குள்ள தலையில கல்லைப் போடாத கொறையா பண்டி வெச்சுட்டா அவளை அங்கயே கொன்னு பெதச்சுப் போட்டு நாம வந்துடலாம்டா!”



“சரி சுந்தரன் எங்கெ? காலேஜ் போயிட்டானா? இருந்தா அவனையும் கார்ல ஏத்தீட்டுப் போயிடலாம்... கொல்றது புடிக்கிறது எல்லாம் போயி அங்க பார்த்துக்கலாம்.”



“காலேஜுக்கு எங்க போனான்... அதான் காலேஜும் லீவாப் போச்சே... ஊர் சுத்த காத்தால போனவன் இன்னங் காணம். சரி, உம்பட சட்டைல பட்டனைச் செரியாப் போடு. மேல ஒன்னு கீழ ஒன்னு போட்டுட்டு வந்துருக்கே. உம்பட அண்ணிக்காரிய கூட்டிட்டுப் போலாமா. ஒப்பாரி வெச்சாள்னா திங்களூர் முழுசுக்குமே கேட்டுத் தொலைக்குமே!”



“வேண்டாம். அது இங்கயே இருக்கட்டும். காதும் காதும் வெச்சமானிக்கே விசயத்தை அங்கயே முடிச்சுப் போட்டு நாம வந்துரோணும் பாத்துக்க. மூங்கில் பாளையத்துக்குள்ளார பரவீடுச்சுன்னா உலவத்துக்கே தெரிஞ்சு போனமாதிரி ஆவிப் போயிரும். நாளைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டே இருக்கும். பொட்டப்புள்ள சமாச்சாரம். நாளைக்கி ஒரு கல்யாணங்காச்சி பண்ட முடியாமப் போயிரும். நட போலாம்” என்று பட்டனைச் சரியாய்ப் போட்டுக் கொண்ட முத்துச் சாமி கவுண்டர் வெளி வாசலுக்கு வந்து அண்ணி அருகே நின்றார்.



“சும்மா எழவு உழுந்தட்ட மாதிரி வாசப்படியில உக்காந்துட்டு அழுதுட்டே இருக்கப்புடாது ஆமா பாத்துக்க. கூலிக்கார மாதாரிக பார்த்துட்டாங்கன்னா காதும் காதும் வெச்சு திருகிப் பேசிப் போடுவானுக. போய் உள்ளார உட்கார்ந்துட்டு அழு போ. நாங்க போய் கூட்டிட்டு சுருக்கா வந்து சேர்ந்துடறோம்.” முத்துசாமி கவுண்டர் காரைப் பார்த்தபடிதான் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தார். நேருக்கு எப்போதுமே முகம் பார்த்து அண்ணியிடம் பேசமாட்டார். சொன்னதுதாங்கோடு என்று எழுந்தவள், 'புக்கிட்டியூண்டு இருந்துட்டு அந்த சண்டாளி எந்த எடுபட்ட காசியோட தாலிய வாங்கீட்டு நிக்கறாள்னே தெரியிலியே. அவளெ அவத்திக்கே கொன்னு பொதச்சுப் போட்டு ரெண்டு பேரும் ஊடு வந்து சேருங்க. எமசாந்து வாங்குனது பேரு கொண்டாருது பாரு ஊட்டுக்கும் அப்பன் ஆத்தாளுக்கும்' என்று முனகிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது.




“தங்கம், செல்லம், கன்னுக்குட்டின்னு கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தினா தங்கக் குட்டி இந்த வேலைதான் செஞ்சுட்டு நிக்கும். கோழி ஒன்னெ புடிச்சு அடிச்சு சாறு காச்சி வெய்யிடி.. எட்றா வண்டியெ” என்று ராமசாமி கவுண்டரும் கார் கதவை நீக்கி உட்கார்ந்து கொள்ள முத்துச்சாமி கவுண்டர் கோபமாகவே ஆக்ஸிலேட்டரை மிதித்து இழுத்தார்.



கார் விசயமங்கலம் மேக்கூரைத் தாண்டியதும் வடக்கே வேகம் பிடித்தது. திங்களூர் பனிரெண்டு கிலோ மீட்டர்தான். முத்துச்சாமிக் கவுண்டர் தன் அண்ணியினுடைய தாய் வீட்டில் காரைக் கொண்டு வந்து நிறுத்தும்வரை அண்ணனிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ராமசாமி கவுண்டருக்குள்ளும் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. அண்ணனுக்கு ஒன்று என்கிறபோது முத்துச்சாமி கவுண்டருக்குத் தன் பெண்ணே தப்புக்காரியம் செய்துவிட்ட துடிப்புதான் இருந்தது. இத்தனை வருடப் பகையை இந்தக் குட்டிக் கழுதை தீர்த்து வைத்துவிட்டது.



பெரிய வீடு அமைதியாக இருந்தது! காரை நிறுத்தி இறங்கியவர் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடினார். நடு ஹாலில் புதுமணத் தம்பதிகள் டி.வி. பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்கள். விரைந்து வீட்டினுள் வருபவரைக் கண்ட சரோஜா, “சித்தப்பா” என்று எழுந்தாள். போன சுடிக்கு அவள் கன்னத்தில் ஒரு அப்பட்டம் போட்டார் முத்துச்சாமி கவுண்டர். “ஐயோ” என்று திருகி சரோஜா விழுந்ததும் பொடணி மயிரோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கோபாலனை நாலு மிதி வைத்து “யார்ரா நாயி நீயி?” என்றார். அதற்குள் ராமசாமிக் கவுண்டர் ஓடி வந்ததும் கீழே கிடந்த மகளைத் தூக்கி நிறுத்தி சாத்துச் சாத்தென சாத்தினார். “அடக் கொன்னு கின்னு போடாதீங்டா” என்று பெருசு ஓடிவந்து இருவரையும் தள்ளிவிட்டது. முத்துச்சாமி கவுண்டர் ஒதுங்கி நின்று கோபாலனின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி வைத்தார். அவன் அருகில் இருந்த தூணில் மோதி சரிந்து சாய்ந்து கையெடுத்துக் கும்பிட்டான். பின்னர் சோபாவில் கைகளை விரித்து சாய்ந்துகொண்டார்.



“இவன் யாராமா? கேட்டீங்ளா?” என்று பெரியவரைப் பார்த்துக் கேட்டார்.



“அவனாருன்னா? மூஞ்சீலயே எழுதி ஒட்டியிருக்குது தெரியிலியா? உள்ளூர் அப்புக்குட்டி நாசுவனோட பேரன். பெரிய புள்ளைய காஞ்சிக் கோயிலுக்குக் கட்டிக் குடுத்தான். அவளோட பையன்தான்.”



“ஏன்டா நீ நாசுவனாடா? எப்பட்றா இப்புடியெல்லாம் தைரியமா பண்றீங்க? எந்திரி மொதல்ல நீ.. போடா... அடிச்சுக் கொன்னே போடுவேன். போயி வாசல்ல நில்லு போ... எந்தர்றா மேல. கொன்னு கொண்டி வாய்க்கால்ல எறிஞ்சுட்டுப் போயிடுவேன்” என்று இவர் சப்தம் போடவும் தடுமாறி எழுந்த கோபாலன் வீட்டை விட்டு வெளியே சென்று வாசல்படி இறங்கி வாசலில் நின்றான்.



“கையைக் கட்டீட்டு நில்றா. அக்கட்ட இக்கட்ட நவுந்தீன்னா வந்து ஒரே ஒதைதான். இடுப்பு எலும்பு கத்திரிச்சுப் போவும் பார்த்துக்க. ஏம் பெருசு, உனக்கு அறிவு இருக்குதா இல்லையா? அப்புக்குட்டி பேரன்னு உனக்குத் தெரிஞ்சிருக்குது. நடு ஊட்டுல கொண்டாந்து உக்காத்தி வெச்சுட்டு இருந்திருக்கே. உனக்கொரு சாவு வரமாட்டீங்குது பாரு” என்று கோபத்தைப் பெருசிடம் திருப்பினார்.



“யாரு என்னன்னு கேட்டதுக்கு இன்னாருங்கன்னு சொன்னான். அதுக்குள்ளார கெழவி முந்தீட்டு வெளியே போடான்னுதான் சொன்னா. அதுக்குக் கெழவிய சரோசாப்புள்ள, 'போடி பெரிய இவ வந்துட்டா. எம்பட ஊட்டுக்காரனை வெளியே போவச் சொல்றா பாரு'ன்னு கத்தங்காட்டி அவ இந்தக் கருமம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும்னு ஒதுங்கீட்டா. அம்மாயியையே தூக்கி எறிஞ்சு பேசுறவகிட்ட என்னத்த பேசுறதுன்னுதான் அப்பனுக்கு போனைப் போட்டேன்” என்றவர் லொக்கு லொக்கென இருமிக் கொண்டே எதிர்த்த சோபாலில் உட்கார்ந்தார்.



“என்ன ஒரு ஏத்தமிருந்தா அவன் நடு ஊட்டுல உட்கார்ந்து டி.வி. பார்த்துட்டு இருப்பான்? ஏன்டி சரோஜா.. ஏன்டி காரியத்தைச் செஞ்சு போட்டு திருட்டு முழி முழிச்சுட்டு இருக்கே? சொல்லுடி”



“சித்தப்பா...”

“சித்தப்பன்தா நானு சொல்லுடி... என்ன பண்ணப் போறே?”

“நானு அவருகூட அவுங்க ஊட்டுக்கே போறேன் சித்தப்பா.”

“அவுங்க ஊட்டுக்கே போறியா? போயி?”

“போயி பொழைச்சுக்கறேன்.”

“டேய் ராமசாமி... அப்புடியே அவ கழுத்தைப் புடிச்சு நசுக்கி திருகிக் கொல்றா. நாயமயிரு பேசுதுபாரு புள்ளை.”

“சித்தப்பன் சொல்றதைக் கேட்டுத் தொலைடி சனியனே. எனக்குன்னு வந்து வாய்ச்சே பாரு. திடும் திடும்னு ஊட்டுக்குள்ளார நி நடக்குறப்பவே தெரியும்டி. இப்புடி எல்லாம் பண்டுவீன்னு. நான் உன்னியக் கொல்லமாட்டேன். ஆனா சித்தப்பன் சொல் பேச்சு கேக்கலீன்னா கழுத்தை திருவிக் கொன்னு போடுவான்” என்றார் ராமசாமி கவுண்டர். கூகூவென சரோஜா அழ ஆரம்பித்தாள். முத்துச்சாமி கவுண்டர் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரனை போனில் கூப்பிட்டார். விஷயத்தைச் சொல்லி வரச்சொன்னார்.

“சரோஜா... இப்போ இங்கெ திங்களூர் போலீஸ் வந்துடுவாங்க. அவனைக் கொண்டி கோயமுத்தூர் ஜெயில்ல போட்டுருவாங்க. உனக்கு வயசு பதினெட்டுகூட ஆவலை. அதனால உன்னைய எந்த ஊர் ஜெயில்ல போடுவாங்கன்னு தெரியல” என்றவரை அழுதபடியே பார்த்தவள் பயத்தில் மிரண்டாள். இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள்? போலீஸ், ஜெயில் என்கிறார்களே! அம்மா இவர்களோடு ஏன் வரலை? அம்மா வந்திருந்தால் அழுதாவது கோபாலனை மூங்கில் பாளையம் கூட்டிப் போயிருக்கலாம். அப்பனும் கூட ஆனது ஆயிப் போச்சு என்று விட்டுவிடும். இந்த சித்தப்பன் மலை முழுங்கி மகாதேவனாச்சே! சண்டை கட்டிக் கொண்டவர்கள் எப்போது ஒட்டுக்காகச் சேர்ந்தார்கள்!

“ஐயோ சித்தப்பா... போலீசு, ஜெயிலு எல்லாம் வேண்டாம் சித்தப்பா.”

“வேண்டாம்னாலும் உனக்கு வயசு பதினெட்டு ஆகலியே.”

“பதினெட்டு ஆவாட்டிப் போயிச்சாட்டாது. நானு கோபாலு ஊட்டுக்கே போயிடற«ன் சித்தப்பா. எனக்கு அவனைத்தான் புடிச்சிருக்குது.”

“நாயிப் பொச்சுல தேன் ராட்டு தொங்குதுன்னு போய் வழிச்சு எடுத்து நக்கிக்க முடியுமா? போயி ஜெயில்ல உட்கார்ந்துட்டு களி தின்னுட்டு எத்தனை வருசம் உள்ளார போடறானோ கெடந்துட்டு வா.”

“ஏன்டா முத்துச்சாமி, போலீசை வரச்சொல்லிட்டியா?” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

“நீ மொதல்ல அவ கழுத்துல கெடக்குற கவுத்தை அத்து வீசு.”

“ஐயோ, கவுத்தை அத்து வீசிடா தீங்கப்பா” என்றாள் சரோஜா. அவள் இரண்டு கைகளையும் கழுத்தில் வைத்துக் கொண்டாள், எங்கே சித்தப்பன் பேச்சைக் கேட்டு அப்பன் அத்து வீசிவிடுமோ என்று.

“சரி, உடு அண்ணா. போலீஸ்காரங்க தொட்டதுக்கெல்லாம் ஜெயில்ல போட்டு மிதிப்பாங்கள்ல அப்ப தானா தெரிஞ்சுக்குவா” என்றவர் வெளியே வாசலைப் பார்த்தார். கோபாலன் வாசலில் குத்த வைத்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். அதே நேரம் வாசலுக்கு இரண்டு மூன்று பைக்குகள் வந்து ஓய்ந்தன. வண்டியை நிறுத்திவிட்டு வந்த பஞ்சாயத்துத் தலைவரை வரவேற்க வெளிவாசலுக்குக் கும்பிடு போட்டபடி முத்துச்சாமி கவுண்டர் வந்தார்.

“வாங்க மாப்ளே.” பதிலுக்கு அவரும் கும்பிடு போட்டுவிட்டு வாசலில் குத்த வைத்திருந்தவனைப் பார்த்து 'இவனா?' என்றார்.
பின்னாலேயே வந்த அப்புக்குட்டி கோபத்தில் சென்று கோபாலன் முதுகில் நான்கு குத்துக்கள் வைத்தான்.

“சாமி வந்திருக்காப்ல. எருமெ கணக்கா உட்கார்ந்துட்டு இருக்கியாடா. சோத்தத் திங்கறியா? பிய்யத் திங்கறியாடா? எந்தர்றா மேல” என்று அப்புக்குட்டி கத்தியதும்தான் கோபாலன் எழுந்து தலைவருக்கு வணக்கம் போட்டான். தலைவர் அவனைக் கண்டுகொள்ளாமல் கூடவே வந்திருந்தவர்களை கிட்டே அழைத்தார். அவர்களும் 'என்னுங் தலைவரே!' என்று வந்தார்கள்.

“உள்ளார போயி நாலு சேர்க இருந்தா எடுத்துட்டு வாங்க. இப்புடி தென்னை மரத்துக்கிட்டயே உட்கார்ந்துக்குவோம்” என்றதும் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

“மாப்ளெ, போலீசோடதான் வருவீங்கன்னு பார்த்தேன்” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“இதுக்கெதுக்கு போலீசு? சொல்லிப் பார்ப்போம். பையன் இனி என்ன சுடியில இருக்கான்னு பார்ப்போம். முடியலீன்னா பார்ப்போம்.” ராமசாமிக் கவுண்டரும் சரோஜாவோடு வெளியே வந்தார். 'வணக்கம் மாப்ளே!' என்றொரு கும்பிடு வைத்தார்.

“புள்ளை எந்த ஊர் பள்ளிக் கோடத்துல படிச்சுட்டு இருந்தது மாமா?”

“விசயமங்கலத்துலதான் மாப்ள, பத்தாவது பரிட்சை எழுதிட்டு லீவுல வந்தா இங்கெ.”

“இந்த வயசிலேயே இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்னு தாலியக் கட்டிக்குதுகன்னே தெரியல. போன வாரம் இதே ஊர்ல ஒரு ஜோடி ஓடிப் போயிடுச்சு. இன்னமும் எங்கே இருக்காங்கன்னே தெரியல. காலம் எங்கே போவுதுன்னே தெரியில. வெசாலக்கிழமை சந்தையன்னிக்குப் பார்த்தா துக்கிளியூன்டு துக்கிளியூண்டு புள்ளைக இடுப்புல கொழந்தைய வச்சுக்கிட்டு ஜாமான் வாங்கிட்டுப் போவுதுக. சுத்திலும் பனியன் கம்பெனிக வந்துட்டுது. இந்த ஊர்க்காரங்க யாரு... வெளியூர்ல இருந்து வந்தவுங்க யாருன்னு ஒன்னும் எனக்கே தெரிய மாட்டீங்குது. அட, இப்பிடியே சேர்களைப் போடுங்கப்பா... அதான் வெயிலும் இல்லையே!” என்றவர் சேரில் அமர்ந்து கொள்ள, ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் சேர்களில் உட்கார்ந்தனர்.

“சரி மாமா. என்ன பண்ணலாம்ங்கறீங்க? உங்களுக்குத் தெரியாததையா இனி நான் பண்ணப்போறேன். புள்ளை என்ன சொல்லுது? அப்புக்குட்டி டேய்... இவுனுக்கு காது வேற கேக்காது. கத்திக் கத்தி சைகை வேற செய்யோணும். இங்க இழுத்தாந்து நிறுத்துடா உன் பேரனை” என்றதும் “சாமீ” என்றவன் கோபாலனைத் தள்ளிக் கொண்டு வந்து தலைவர் முன் நிப்பாட்டினான்.

“சாமி பொடணீல இவன் முடி வளர்த்தீட்டு புட்டுர்பைக்குல சுத்தீட்டு இருக்கப்பவே இப்புடி எதாச்சிம் பெருசா வில்லங்கத்தைக் கொண்டாந்துடுவான்னு நெனச்சுட்டே இருந்தனுங்க சாமி. இப்படி ஒரு காரியத்தை செஞ்சு போட்டானுங்ளே. நீங்க இவனை என்ன பண்டுனாலும் நானு ஒன்னுஞ் சொல்லலீங்க. இப்புடி ஒரு தப்பை எனக்கு முன்னாடி இருந்து எம்பட காலம் வரைக்கிம் செஞ்சதே இல்லீங்ஸெகா. பேசுறானான்னு பாருங்க சாமி ஒரு வார்த்தை.”

“அவனெல்லாம் பேசமாட்டான் அப்புக்குட்டி. ஜெயிலுக்குள்ளார போயி போலீஸ்காரங்ககிட்ட மிதி தின்னாத்தான் தெரியும்.”

“சாமி என்ன சொல்றீங்க? ஜெயிலுக்கா?”

“பின்ன, பத்தாவது படிக்கிற புள்ளைக்குத் தாலிய கட்டி கெடுத்து வச்சிருக்கான். இது அவுனுக்கே தெரியுமே! ஏண்டா எத்தனாவது வரைக்கும்டா நீ படிச்சிருக்கே? சொல்றா?”

“நானு டுவல்த் வரைக்கும் படிச்சிருக்கேனுங்க.”

“தாலி கட்டச் சொன்னது அவளாடா? இல்ல நீயே அதப்பண்டலாம், இதப் பண்டலாம்னு சொல்லித் தாலி கட்டினியா?”

“நான்தானுங்க கட்டறேன்னேன். சரோஜா சரின்னுடுச்சு.”

“எங்கடா கூட்டிட்டுப் போனே?”

“பச்சைமலைக்குத்தானுங்க.”

“யாரு? என்ன ஜாதின்னு தெரிஞ்சுதான் கட்டுனியா?”

“அதெல்லாம் தெரியாதுங்க. புள்ளைதான் என்கிட்ட லவ்யூன்னு மொதல்ல சொல்லுச்சுங்க. நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டனுங்க.”

“சரி சரி... நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டே. கைவசம் தொழிலும் இருக்குது காப்பாத்திடுவேன்னு வெச்சுக்க. நேரா திங்களூர் வழுவுக்குள்ளார போயி எவளையாச்சிம் லவ்யூன்னு சொல்லித் தாலி கட்டி குடும்பம் பண்டலாம்ல? இந்த ஏரியாவுக்கு வர்ற போதே எந்த ஏரியா இதுன்னு தெரியாமயா வந்திருப்பே? ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை உட்டு ஓடியே போயிடறேன்னு சொல்லிட்டீன்னா நீ தப்பிச்சே. இல்ல தகராறு பண்றதுன்னா இதபாரு... இப்பவே எஸ்.ஐயைக் கூப்பிடறேன். சொல்லு, உன்கிட்டவெல்லாம் வளவளன்னு பேசிட்டு இருக்கறதுக்கு இப்ப நேரமில்லை எனக்கு.”

“நானே நாளைக்கிக் காத்தால இவனெ இவங்காயா ஊருக்கே காஞ்சிக் கோயிலுக்கே தாட்டி உட்டிடறேனுங் சாமி” என்றான் அப்புக்குட்டி.

“நீ தாட்டி உட்டுருவே, அவன் போகணுமில்லே.”

“சொல்றா டேய் கோவாலா. சாமி கிட்ட சொல்றா. இல்லின்னா உன்னையக் கொன்னே கொண்டு போயி வீசிட்டுப் போயிடுவாங்டா” என்றான் அப்புக்குட்டி.

“சேரிங் நானு காத்தாலைக்கி ஊருக்கே போயிர்றனுங்க.”

“போயிட்டீன்னா ஒரேமுட்டா போயிடு. மறுபடியும் இந்தப் புள்ளைகிட்டே பேசணும், புடிக்கோணும்னு நெனச்சுட்டு சுத்துற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா உன்னைய என்ன பண்ணலாம்?”

“சாமி அவன் அந்தப் புள்ளை இருக்கிற பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்க மாட்டானுங்க.”

“நீ குறுக்க குறுக்க விலா ஓட்டாதடா அப்புக்குட்டி. அதை அந்தப் பையனே சொல்லட்டும். என்றா சொல்லு?”

“ஆமாங்க.”

“என்னடா மொட்டையா லோமாங்கொங்றே?”

“எங்கப்பிச்சி சொன்னாப்ல தானுங்க. நானு எங்கீம் போயி அந்தப் புள்ளைக்கித் துன்பங் குடுக்கமாட்டனுங்க.”

“டேய், நீயெல்லாம் ஒரு ஆளாடா? உன்னிய நம்பி எம்பட கழுத்தை நீட்டினேம் பாரு நானு. எம்பட கல்யாணம் நாசுவன் குசுவாவே போவட்டும்” என்ற சரோஜா கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை உருவி எடுத்து கோபாலன் முகத்தில் விட்டெறிந்தாள்.

“அப்போ நானு புறப்படறனுங்க மாமா. டேய் அப்புக்குட்டி, சொன்னது சொன்னாப்புல நடந்துக்கோணும். மறுபடி பிரச்சினை எதாச்சிம் வந்துச்சுன்னா என்னைய மனுசனாவே நீ பாக்கமாட்டே ஆமா..” என்று எழுந்த தலைவர் வணக்கம் போட்டுவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் சென்றதும் இவர்கள் முன் “சாமி” என்று கும்பிடு வைத்தான் அப்புக்குட்டி. சரோஜா கோபாலனிடம் சென்று காறி அவன் முகத்தில் துப்பிவிட்டுப் போய் காரில் உட்கார்ந்தாள். அப்புக்குட்டி கோபாலனை இழுத்துக்கொண்டு போனான். இந்த விஷயம் அப்படியே திங்களூரோடேயே முடிந்து போய்விட்டது. சரோஜாவும் இந்த விஷயத்தை திங்களூரோடே விட்டும்விட்டாள். பத்தாவதில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாள். முன்னூற்றி தொன்னூறு மார்க். மேற்கொண்டு பெருந்துறைக்குப் படிக்க அனுப்புவார்கள் என்றுதான் எதிர்பார்த்தாள். அப்படியான பேச்சே வீட்டில் கிளம்பவில்லை. அந்த விஷயத்துக்குப் பிறகு அதிகமாய் அம்மாவோடோ, அப்பாவோடோ இவள் பேசிக் கொள்வதுமில்லை. எந்த நேரமும் டி.வி.தான். சித்தப்பா வீட்டில் பாதி நேரமும் இவள் வீட்டில் பாதி நேரமுமாய்ப் பொழுதை ஓட்டினாள். அண்ணன் கந்தசாமியிடம் மட்டுமே பேசுவாள். மாத நாவல்களை ஈரோட்டிலிருந்து வாங்கி வரச் சொல்வாள். திங்களூர் விஷயம் நடந்து முடிந்துகூட ஏழெட்டு மாதமாகிவிட்டது. அப் போதுதான் இவளுக்குள் இரண்டாம் முறையாக காதல் இவள் வயிற்றினுள் மீண்டும் வேர்விட்டது.

சாமிநாதன்

உள்ளூர்க்காரன்தான். அடிக்கடி இவள் பள்ளிக்குப் போகையில் பார்வையில் தட்டுப்பட்டவன்தான். இவனது அப்பன் சுப்பன் இருபது வருடங்களாக இவர்கள் பண்ணையத்தில் இருப்பவன்தான். வீட்டின் பின்புறம் மாமரத்தின் அடியில்கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டிருந்த சாமிநாதனை, தொட்டியில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வரப்போனவள் பார்த்து அதிசயித்து நின்றாள். இவ்ளோ சிவப்பாய் அழகாய் அதுவும் நம் தோட்டத்தில்? கேள்வியில் நின்றவள் குடத்தில் தண்ணீரை நிரப்பி விட்டு எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டவள் காலை உதறினாள். நிலத்தில் நங்கென ஊன்றினாள். சலசலவென கொலுசு சத்தம் கேட்கவே சாமிநாதன் கிணற்றுப்புறமாய் முகத்தைத் திருப்பினான். சின்னக் கவுணுச்சி! மளாரென எழுந்து நின்றவன்,

“தேனுங் கவுணுச்சி” என்றான்.

“நீ எங்கெ எங்க தோட்டத்துல இருக்கே?” என்றாள்.

“உங்க தோட்டத்துக்கு வரப்புடா துங்றீங்ளா சின்னக்கவுணுச்சி?”

“நான் எதுக்கு வரவேண்டாம்ங்றேன். உங்கொப்பனைப் பார்க்க வந்தியா?”

“உங்க டிரேக்டரை ஒரு மாசத்திக்கி ஓட்டறதுக்கு வந்திருக்கணுங்க. இன்னா வரைக்கிம் குப்பை எடுத்து டிரேக்டர்ல கொட்டிக் கொண்டி வடகோட்டுக் காட்டுல கொட்டிட்டு வந்தனுங்க. சரீன்னு ஊடு போயி ஒரு வாய் கரைச்சுக் குடிச்சுப் போட்டு வந்து சித்தெ படுத்திருந்தனுங்க.”

“நீயி எத்தனாப்பு வரைக்கிம் படிச்சே?”

“பத்தாவது வரைக்கிந்தானுங்க.”

“குப்பை அள்றதுக்கு வந்திருக்கே?”

“தறிக்குத் தானுங்க போயிட்டு இருந்தேன். எங்கப்பன்தான் முந்தா நேத்து பெரிய கவுண்டரு பாக் கோணும் உன்னையென்னு சொல்றார்டான்னு சொன்னாப்ல. சரீ என்னன்னு கேட்டுப் போட்டுப் போவலாம்னு வந்ததீம் டிரேக்டர் சாவிய எடுத்துக் கையில குடுத் துட்டாப்ல. குடோனு ஓனருக்கு போனைப் பண்டி பையன் ஒரு மாசத்திக்கி வரமாட்டான். தோட்டத்துல வேலை இருக்குதுன்னு சொல்லிட்டாப்ல.”

“உனக்கு டிராக்டர் ஓட்டத் தெரியுமா?”

“அதென்ன கம்ப சூத்திரமுங்ளா சின்னக்கவுணுச்சி. அப்புறம் மேல படிக்கப் போவலீங்ளா நீங்கெ?”

“படிச்சு அஞ்சாறு ஆச்சு” என்று சரோஜா சொல்லியபோது சாமிநாதன் போன் அலறியது. 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே?'

“அட எடுத்துப் பேசு. நான் நின்னா என்ன?” என்று சரோஜா சொல்லிய பிறகே எடுத்து ஆன் செய்து 'ஹலோ' என்றான்.

“தோண்டா? சொல்றா! சாயந்தரம் ஆறு மணிக்கு விசயமங்கலம் பஸ் ஸ்டாப்கிட்ட வர்றேன். இப்பவா? வேலைக்காட்டுல இருக்கன்டா. செரி வெய்யி” என்றவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“செல் எல்லாம் வச்சிருக்கியா நீயி.. நெம்பரைச் சொல்லு” என்றாள். இவன் நெம்பர் சொன்னான். அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பின்னதான் சாமிநாதனுக்கு ஏன்டா நெம்பரை சின்னக்கவுணுச்சிக்கு சொன்னோம் என்றாகிவிட்டது.

கட்டிக்கொண்டிருந்த தலையணையை அருகே வைத்துவிட்டு செல்போனைக் கையில் எடுத்தாள். மணி பார்த்தாள். பத்து முப்பது ஆகியிருந்தது. எஸ் வரிசையில் சென்று சாமி என்ற பெயரில் நின்று சாமிநாதனுக்கு ரிங் விட்டாள். 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே...' பாடல் பாடியது. எதிர்முனையில் சாமிநாதன் எடுத்ததுமே இச் இச் இச்சென முத்தம் வைத்தாள்.

“சாமி சாப்டுட்டியா?”

“சாமி சாப்டுட்டியா?”

'டேய் கொரங்கா! தின்னு தொலச்சுட்டியாடா? ஏன்டா பேச மாட்டீங்றே? என்னடா கோவம் என் மேல?'

"ஏனுங்... சின்னக்கவுணுச்ச இப்புடி?"

"கூப்பிடாதடா இனிமேல் என்னை அப்புடி. எத்தனவாட்டிடா நான் சொல்றது உனக்கு? சின்னக் கவுணுச்சியாம் சின்னக்கவுணுச்சி. எனக்கென்ன கொம்பாடா மொழைச்சிருக்குது! கூப்புடுடா சரோஜா குட்டின்னு!"

"ஐய்யோ சின்னக்கவுணுச்சி ஏனுங்கோ நீங்க இப்புடி? நானு எப்புடீங்கோ போயி உங்க பேரைச் சொல்லிக் கூப்பிடுவேன்?"

"பின்னெ நீ கூப்பிடாமெ ரோட்டுல போறவனா என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவான். இங்க பாரு சாமிநாதா, நான் உன்மேல ஆசைப்பட்டுட்டேன். நீ பண்ண வேண்டிதெல்லாம் என்னெய லவ் பண்றது ஒன்னுதான். உனக்குப் பலதடவை சொல்லிட்டேன்."

"ஐய்யோ கவுணுச்சி. உங்களுக்கு நான் சொல்றது ஏனுங்கொ புரியமாட்டீங்குது? நானும் எங்கப்பனும் உங்க காட்டுல வேலை செய்யுற கூலி ஆளுகங்க சின்னகவுணுச்சி.

“ஏன்டா நானு பொம்பளைப்புள்ளை மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்றேன். நீ ஏன்டா ஒதுங்கி ஓடப்பாக்குறே?"

"கட்டி வெச்சுத் தோலை உரிச்சுப் போடுவாங்க பெரிய கவுண்டரும் பெரிய கவுணுச்சியும். சீப்புடிச்சு செத்துப் போயிருவேன் நானு."

"அடிச்சு வச்சுருவாங்கன்னுதான் இத்தினி நாளா பயந்துட்டுப் பேசாமல் இருந்தியாடா நீயி. அப்ப உனக்கும் என்மேல ஆசை இருக்குதுல்ல?"

"ஆசை இருக்காமப் போயிருமுங்ளா கவுணுச்சி. ரோட்டுல எத்தனை புள்ளைங்க போறாங்க. அழகா இருக்குற புள்ளைய ஆசையாப்பாக்குறதுதான்."

"நான் அழகா இல்லையா? அதைச் சொல்றா!"

"நீங்க கொள்ளைத்த அழகுதானுங்க."

"சரி, அன்னைக்கி தட்டுப்போர்கிட்ட மாட்டுக்குத் தட்டு எடுத்துட்டுப் போயி போடறதுக்கு நீ வந்தீல்ல. ஒரு முத்தம் குடுடான்னு கேட்டேன்ல. ஏன் மாட்டேனுட்டு போனே? கட்டி வெச்சு தோலை உரிச்சுப் போடுவாங்கன்னு பயந்துட்டுதானே?"

"கவுணுச்சி தூக்கம் வரலீங்ளா உங்களுக்கு? மணி பதினொன்னு ஆயிப்போச்சுங்க. தூங்குங்க நீங்க."

"எங்கடா தூக்கம் வருது எனக்கு? எந்த நேரமும் உன் நினைப்புதான். இப்போக்கூட நீயின்னு நினைச்சுட்டு தலைகாணிக்கு முத்தம் குடுத்துட்டு படுத்துட்டு இருந்தேன். நீ என்னடா பண்ணிட்டு படுத்திட்டு இருந்தே?"

"நானு ஒன்னும் பண்டுலீங்க கவுணுச்சி. தூக்கம் கண்ணை சொழட்டீட்டு வந்துச்சு. கூப்புட்டுப் போட்டீங்க. சுட்சு ஆப் பண்ணிட்டு வெச்சாத்தான் சத்தம் போடறீங்ளே!"

"நாளைக்கு மத்தியானம் என்னைக் கட்டிப்புடிச்சு உதட்டு மேல முத்தம் குடுக்குறியா?"

"நானெல்லாம் மாட்டேனுங்க"

"ஏன்டா மாட்டேங்றே? என் மேல உனக்கு ஆசை இல்லியா? இல்ல பயமா இருக்குதா?"

"ஒன்னுமில்லீங்க. என்னெயெ ஆளை விடுங்க."

"உன்னையெ நான் உடவே மாட்டேன்டா. சரி, மாமா என்ன பண்டுது?"

"மாமாவா? ஆருங்க?"

"ம். உங்கொப்பன் சுப்பன் என்ன பண்றான்?"

"அது ஒடம்பு வலின்னு மாத்திரை போட்டுட்டு எட்டு மணிக்கே படுத்து தூங்கீட்டுது."

"இப்புடி நீ என்மேல பிரியமே இல்லாமப் பேசறீல்ல. இருடா பார்த்துக்கறேன்."

"ஏனுங்க கவுணுச்சி பிரியமில்ல அது இதுன்னு பேசறீங்க. நீங்க நல்லா இருக்கோணுமுன்னுதான நான் நினைக்கிறேன். நாங்க எல்லாம் ஊசைன்னு நானே உங்ககிட்ட எப்புடிச் சொல்வேன்?" என்று சாமிநாதன் பேசிய பிறகுதான் சரோஜாவுக்கு மெதுவாய் புரிபட்டது எல்லாமே. இதற்கும் வழி பண்ணலாம் என்றே யோசித்தவள் மறுபடியும் சாமிநாதனிடம் ஆரம்பித்தாள்.

"சரி, எங்க தோட்டத்துல உன்னையெ வேலைக்கு சேர்த்தி உட்டது யாரு?"

"பெரிய கவுண்டருதானுங்க... கூப்புட்டு சாவி குடுத்தாரு."

"சரி, உன்னைய திடீர்னு அவரு கூப்பிட்டு சாவி எப்படி குடுப்பாரு?"

"அதெல்லாம் தெரியலீங்க. எங்கப்பன் சொல்லுச்சு வந்தேன்."

"நான்தான் எங்கப்பாகிட்ட சாமிநாதனைத் தோட்ட வேலைக்குக் கூப்பிடச் சொன்னேன்."

"ஐயோ!"

"என்ன லொய்யோ? எங்கம்மா கிட்ட நான் நம்ம விசயத்தைச் சொல்லி ஒரு வாரமாச்சு தெரியுமா?"

"ஐயோ! பெரிய கவுணுச்சிக்கும் தெரியுமா? மரத்துல என்னைத் தலைகீழுதா கட்டி வெச்சு கொல்லப்போறங்க."

"அப்புடி எல்லாம் ஒன்னும் நடக்காது. என் கண்ணுக்கு முன்னாடி உன்னைய அப்புடி செஞ்சுடுவாங்ளா? செய்ய உட்டுடுவனா நானு? எங்கம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். சாமிநாதன்தான் என்னோட ஊட்டுக்காரன்னு. நீ என்னைக் கட்டிக்கறேன்னு எங்கம்மாகிட்ட கேட்டுட்டா போதும் தெரியுமா!Ó என்று சரோஜா சொன்னதும்தான் சாமி நாதனுக்கே குழப்பமாகிவிட்டது.

"என்னடா, இத்தனை சொல்லிட்டேன். இன்னும் உனக்கு என்மேல நம்பிக்கை வரலீல்ல? போடா. உன்னைப் போயி நான் ஆசைப்பட்டு விரும்பினேன் பாரு. போன்லயாச்சும் ஒரே ஒரு முத்தம் குடேன்டா"

"ஐயோ சின்னக்கவுணுச்சி, நீங்க அதைம் இதைம் பேசிப் பேசியே என்னைய கமுத்திப் போடுவீங்ளாட்ட இருக்குதுங்க."

"அதைம் இதைம் என்னத்தைடா நான் பேசிட்டேன். உன்மேல ஆசைப்பட்டுட்டேன்னுதான இத்தனை நாளா படிச்சுப் படிச்சு சொல்லிட்டே இருக்கேன்.
நான் சாவுறேன். நான் செத்த பொறகாவது ஐய்யோ ஐய்யோன்னு அடிச்சுக்குவீல்ல" என்றவள் போனை கட் செய்தாள்.

சாமிநாதனுக்கு திடீரென இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்து விட்டது. சாவுறேன்னு சின்னக் கவுணுச்சி சொல்லிடுச்சே! ஐயோ, எக்குத்தப்பா எதாச்சிம் பண்ணிக்கிடுச்சுன்னா? ஐய்யய்யோ! நினைக்கவே பயங்கரமா இருக்கே! சாமிநாதன் திருப்பி சரோஜாவைக் கூப்பிட்டான். ரிங் ஆனது. ஹப்பாடா! சரோஜா கவுணுச்சி போனை எடுத்ததும் பேசி தப்பான முடிவுக்கெல்லாம் போகவேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சரோஜா போனை எடுக்கவேயில்லை. மறுபடி மறுபடி அடித்தான். ஆனால் சரோஜா சிரித்தபடியே எடுக்காமலேயே இருந்தாள். எத்தனை முறைதான் அடிப்பான் பார்ப்போம் என்றே ஏழு எட்டுமுறை எடுக்காமலேயே விட்டு சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு நிம்மதியாய்ப் படுத்தாள்.

ராமசாமி கவுண்டரின் அப்பன் ராமு கவுண்டர் புகைப்படம் வீட்டின் பூஜை அறையில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ராமு கவுண்டர் இறந்து பத்து வருடங்களாகிவிட்டது. ராமசாமிகவுண்டரின் அம்மா டொக் டொக்கெனத் தடியை ஊன்றிக் கொண்டே குனிந்தவாக்கில் பொக்கை வாயைமென்றுகொண்டே 'அதை எடுத்தாடா... அதை எடுத்தாடா' என்றே சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தது.

ராமு கவுண்டரின் புகைப்படத்திற்கு மாலையைப் போட்டவர் மூன்று படப்பு இலைகளையும் நோட்டம் விட்டார். வடை, ஆப்பிள், ஆரஞ்சு, முறுக்கு, திராட்சை, சாப்பாடு, குடல் வறுவல், கோழி வறுவல் என்று படப்பு இலை நிரம்பியிருந்தது.

“போன சுடிக்கு வாடான்னு சாமிநாதனை டிவிஎஸ் குடுத்து தாட்டி உட்டேன். போயி கால்மணி நேரம் இருக்கும். இன்னம் காணமே!” என்று தன்னப்போல் பேசிக் கொண்டு வீட்டின் வெளிவாசலுக்கு வந்தார் ராமசாமி கவுண்டர். கிழவி தடியை ஊன்றிக்கொண்டே பின்னால் வந்தது!

“ஆரைடா பாத்துட்டு இருக்கே? தேங்காய ஒடச்சு ஊதுபத்தி காட்டினீன்னா போதும்ல! முத்துச்சாமி ஊட்டுக்கும் நான் போவோணும்டா! அவன் இந்த நேரத்துக்குக் கும்புட்டே முடிச்சிருப்பான். மணி ரெண்டுக்கும் மேல ஆயிப் போச்சாட்ட!” என்று பேசிக்கொண்டே வீட்டினுள் போய்விட்டது.
சாமிநாதன் டிவிஎஸ்ஸில் வீட்டின் முன் வந்து நின்றான்.

“ஏன்டா இவ்ளோ நேரம். எடுத்துக்குடு, நேரமாயிட்டு இருக்குது.”

“காத்து ரெண்டு வீல்லயும் ரொம்ப கம்மியா இருந்துதுங்ளா, சைக்கிள் கடைக்காரர்கிட்ட உட்டு ரெண்டு வீலுக்கும் காத்துப் புடிச் சுட்டு வந்தனுங்க” என்றவன் கவரில் இருந்த முழுப்பாட்டிலை உருவி எடுத்து நீட்டினான்.

“ஊரு வரைக்கும் போன ஒடனே வந்துடறனுங்க.”

“அட ஆச்சு எல்லாம். சாப்புட்டு போட்டே போயிர்லாம் இரு” என்றவர் வீட்டினுள் பாட்டிலோடு சென்றார். பூஜை அறைக்குள் நுழைந்தவர் பாட்டில் மூடியைத் திருகி நடுவில் இருந்த இலையின் சோற்றில் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்தார். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என பிய்த்து சோற்றில் பிசைந்து பெரிய தட்டத்தில் வைத்தார். தேங்காயை உடைத்து வைத்து சூடம் காட்டினார். 'எல்லாரும் கும்பிடுங்க' என்றவர் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு தட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிப்படி ஏறினார். காகங்கள் தென்னை மரங்களில் இருந்து வீட்டின் மொட்டை மாடிக்குப் பறந்தன. தட்டுப்போர் மீது நின்று மாரன் எடுத்துத் தரும் தட்டுக்களை வரிசையாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சுப்பன் ஒரு மணி நேரமாகவே பசி பசி என்று சொல்லிக்கொண்டிருந்தான். பறந்துபோகும் காகங்களைப் பார்த்தவன் “சாமி கும்புட்டுப் போட்டாங்ளாட்ட” என்றான்.

“இந்த வருசம் ரொம்ப லேட்டுப் பண்ணிப் போட்டாரு கவுண்டரு” என்றான் மாரன்.

“சிறுகொடலை பெருங்கொடலு தின்னுட்டு இருக்குது மாரா! இனி அவரு நம்பளை சாப்புடக் கூப்பிட வருவாரு. நானு இறங்கிடறேன்” என்ற சுப்பன் சாத்தியிருந்த ஏணியில் கீழே இறங்கினான். இருவரும் கிணற்றுத் தொட்டிக்குச் சென்று முகம், கை, கால் கழுவிக் கொண்டிருந்தபோதே கவுண்டரின் சப்தம் வீட்டின் பின்புறத்தில் இருந்து கேட்டது!

“டேய் சுப்பா! அவனையும் கூட்டிட்டு வாடா! மணி வேற மூனுக்கும் மேல ஆயிப்போச்சாட்ட”
இவர்கள் வீட்டின் பின்புறம் சென்றபோது திண்ணை மீது சுடு சாப்பாட்டுடன் இலை விரித்திருந்தது! இருவரும் படலில் செருகி வைத்திருந்த இவர்களது டம்ளர்களை எடுத்துக்கொண்டு போய் பாட்டிலோடு நின்றிருந்த கவுண்டர் முன் நீட்டினார்கள். சுப்பன் சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு வந்தபோது சாமிநாதன் திட்டிலில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், சாமி... சாமி எந்திரீடா” என்று சாமிநாதனைத் தட்டி எழுப்பினான் சுப்பன். 'என்னப்பா' என்றான் தூக்கக் கலக்கத்தில்.

“கவுண்டரு உன்னைய சாப்பாட்டுக்கு தாட்டி உடச் சொன்னாருடா. போயி ஒரு வாய் தின்னுபோட்டு வந்துரு. சரக்கு ஊத்துவாரு. வேண்டாம்னு சொல்லப்புடாது” என்றான்.

“சரீப்பா, இன்னம் சித்த நேரம் போகட்டும். பசி போட்டு என்னைக் கொன்னு எடுத்துச்சா. கொஞ்சம் ரசம் ஊத்தி இப்பத்தான் தின்னு போட்டு படுத்தேன். அஞ்சு மணிக்காட்டப் போய்க்கறேன்” என்று இவன் சொன்னதும் சுப்பன் ஒன்றும் சொல்லாமல் கட்டிலின் கீழ் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு விறவுதறிக்க வெளிவந்தான். அந்த நேரம் சாமிநாதனின் செல்போன் அலறியது. பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தவன் சரோஜா நெம்பர் என்று தெரிந்ததும், தூக் கருமம் என்று எடுக்காமலேயே புரண்டு படுத்தான். ரிங் வந்து கொண்டேயிருந்தது, இவன் ஐந்து மணிக்கு எழுந்து கவுண்டர் வீடு புறப்படும் வரை!

“தேஞ் சாமிநாதா இத்தனெ நேரம்? சாலியா எங்காச்சிம் போயிருந்தியா? ஊட்டுல எல்லாரும் சாப்டாச்சு! கவுண்டர் கூட சாப்புட்டு போட்டு பெருந்துறை வரைக்கும் சோலின்னுட்டு போயிட்டாப்ல” என்று பேசிக்கொண்டே திண்ணையில் இலை விரித்து சாப்பாடு போட்டது பெரிய கவுண்டிச்சி. சரோஜா தாவணி பாவாடையோடு வீட்டின் பின் திண்ணைக்கு வருவதும் போவதுமாக இருந்தாள். அவள்தான் சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து,
“குடிப்பீல்ல.. டம்ளரை நீட்டு” என்றாள். இவன் மறுப்பேதும் சொல்லாமல் டம்ளரை நீட்டினான். சரோஜா சரக்கு ஊற்றினாள். டம்ளர் நிரம்பியதும் நிறுத்தி,
"குடி. இன்னம் ஊத்துறேன். இன்னிக்கு எங்கம்மாகிட்ட நீ கேட்டுரு என்ன!" என்றாள். இவன் மடமடவென குடித்துவிட்டு மறுபடியும் நீட்டினான். சரோஜா மறுபடியும் இவன் டம்ளரை நிரப்பி விட்டு வீட்டுக்குள் போய்விட்டாள். சாமிநாதன் இலையின் முன் அமர்ந்து வறுவலை எடுத்து மோந்து பார்த்துவிட்டு டம்ளரைக் காலி செய்துவிட்டு வறுவல் மென்றான்.

“வேணுங்கறதைக் கேட்டு வாங்கித் தின்னு.” -பெரிய கவுண்டிச்சி இவன் அருகிலேயே நின்று கொண்டது.

“வறுவல் நல்லா இருக்குதா? உங் கொப்பனும் நல்லா இருக்குதுன்னு நாலு தடக்கா வாங்கித் தின்னான்” என்றது. சாமிநாதனுக்குக் கொஞ்சமாய் கிறுகிறுப்பு தட்டியது. சாப்பாடு கிடுகிடுவென வயிற்றுக்குள் இறங்கியது. சரோஜா கதவுக்கு அருகிலேயே நின்று இவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

“வேணுங்கறதை கேட்டு வாங்கித்தின்னு. வேணுங்கறதைக் கேளு.” பெரிய கவுண்டிச்சியின் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது இவனுக்கு.

“ஊட்டுக்குள்ள தலைக்கறி வடைச்சட்டில இருக்கும். போயி எடுத்துட்டு வாடி சரோஜா. சாமிநாதன் திங்கட்டும்” என்றது.

சரோஜா வடைச்சட்டியோடு வந்தாள். இவன் கையை உயர்த்தி போதுங் சின்னக் கவுணுச்சி என்றான். Òபோதுங் பெரிய கவுணுச்சிÓ என்றான்.

“வேணுங்கறதைக் கேளு சாமிநாதா! வேணுங்றதைக் கேளு.”

பெரிய கவுண்டிச்சி குரல் கேட்க, இவன் சாப்பிடுவதை நிறுத்தி பெரிய கவுண்டிச்சி முகம் பார்த்தான்.

“சின்ன கவுணுச்சியெ எனக்குக் கட்டி வெச்சுட்டீங்கன்னா நானு மகராசனா பொழைச்சுக்குவேனுங்க” என்றான்.

“அடச் சக்கிலி நாயே! இவுனுக்கு வந்த ஏத்தத்தைப் பாரு” என்ற பெரிய கவுணுச்சி இலை முன் அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் எட்டி ஒரு மிதி வைத்தாள். சாமிநாதன் திண்ணையிலிருந்து அப்படியே வாசலில் தொப்பென விழுந்தான். பின் மண்டை ஏதோ வாசல் கல்லில் பொட்டென அடித்தது மாதிரி இருந்தது. சரோஜா கதவு வழியாக வீட்டினுள் ஓடுவது தெரிந்தது! வாசலில் கிடந்தவன் நிதானித்துக் கை ஊன்றி எழுந்து உட்கார்ந்தபோது கழுத்தில் ரத்தம் வடிவதைக் கண்ட பெரிய கவுண்டிச்சியும் போட்டது போட்டபடி எழுந்து வீட்டுக்குள் ஓடிப் போயிற்று. இவன் தடுமாறி எழுந்து அப்படியே வீடு நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் காலையில் பதினொரு மணிவாக்கில்தான் சாமிநாதன் கட்டிலில் இருந்து எழுந்தான். பின் மண்டை பயங்கரமாய் வலித்தது. செல்போன் அலறியது. சரோஜாதான். நேற்று அதன்பிறகு சரோஜாவிற்கு என்ன ஆச்சோ? செல்லை எடுத்தான்.

“சொல்லுங்கொ சின்ன கவுணுச்சி” என்றான்.

“சின்ன கவுணுச்சி இல்லடா. நான்தான்” என்றார் ராமசாமி கவுண்டர்.

“தேனுங் கவுண்டரே!”

“உங்கொப்பனைக் கேட்டேன். அவன் கட்டல்லயே கெடக்கறான்னு சொன்னான். நேத்து என்னதான் பண்டுனே நீயி? கவுண்டிச்சி சரோசாவைப் போட்டு சாத்தீட்டேகெடக்கறா. எட்டி ஒதச்சு தள்ளிட்டாளாமா கவுண்டிச்சி. இங்க நானு தோட்டத்துக்குப் போற கேட்டுக்கிட்டத்தான் நின்னுட்டு இருக்கேன். ஊட்டுக்குள்ள ஒரே ரச்சை. உன்னைய என்ன ஏதுன்னு கேட்டாத்தான் தெரியுமின்னு முத்துச்சாமி கவுண்டனும் சொன்னான். இங்க தான் நிக்கிறோம். சித்த வந்துட்டுப் போயிரு” என்றார்.

“இதென்னுங்... இப்பவே வாரேன்” என்றவன் எழுந்து செருப்பைத் தொட்டுக்கொண்டு கிளம்பினான். கிழக்கே இறங்கி வடக்கே நடந்தான். தூரத்தே கவுண்டர் தோட்ட கம்பி கேட் அருகே இரண்டு கவுண்டர்களும் நின்று கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. லுங்கியைக் கால்வரை இறக்கி விட்டுக்கொண்டு அவர்களிடம் வந்தான்.

“த்தென்றா.. மூஞ்சிகூட கழுவாம வந்துட்டியா?” முத்துச்சாமி கவுண்டர்தான் இவனைப் பார்த்ததும் ஆரம்பித்தார்.

“கூப்பிட்டீங்க. அப்பத்தான் எந்திரிச்சேன். சரின்னு போட்டு வந்துட்டனுங்க.”

“தென்றா அது, கழுத்துப் புறத்துல ரத்தமாட்ட காஞ்சு இருக்கு?”

“என்ன நடந்துச்சுன்னே தெரியலீங்க!”

“மப்பு அத்தனை ஏறிப்போச்சா நேத்து.”

“கவுணுச்சி டம்ளர்ல ஊத்தி உட்டாங்க... ரெண்டு டம்ளர்தான் குடிச்சனுங்க!”

“சின்ன கவுணுச்சிய பொண்ணு கேட்டியாமா நேத்து பெரிய கவுணுச்சிகிட்ட!” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“சின்னகவுணுச்சி தொந்தரவுதானுங்க எனக்கு இந்த இருவது இருவத்தஞ்சி நாளா! என்னெய லவ்வு பண்ணுதுங்ளாமா! சாமத்துல தூங்க உடாம போனுப்பண்டி போனுப்பண்டி.. தேங் கேக்கறீங்க!”

“என்கிட்ட சொல்லீருக்கோணு முல்லடா நீ மொதல்லயே!”

“நீங்கதான் என்னை சின்ன கவுணுச்சி சொல்லித்தான் வேலைக்கே தோட்டத்துக்கு சேத்துக்கிட்டீங்ளாமே!”

“அப்புடி வேற சொன்னாளா!”

“ஆமாங்க கவுண்டரே! பெரிய கவுணுச்சிக்கும் தெரியும். நீ ஏன்டா என்னை லவ்வு பண்ணமாட்டீங்றேன்னு ஒரே தொந்தரவுங்க. நேத்து கூட பெரிய கவுணுச்சிக்கிட்ட கேளு கேளுன்னு சொல்லுச்சுங்க.”

“தண்ணி மப்புல கேட்டே போட்டே! அப்புடித்தான?”

“நானு என்ன கேட்டேன் என்ன பேசுனன்னே தெரியலீங்க கவுண்டரே! சின்ன கவுணுச்சின்னு எத்தனையோ வாட்டி சொல்லீட்டணுங்க. கேக்கவே மாட்டீனுட்டுதுங்க.”

“டேய் ராமசாமி, இவன்மேல தப்பு ஒன்னுமில்ல. எல்லாம் அவகிட்டத்தான் வேலைத்தனம் பூராவும் இருக்குது. சரி சாமிநாதா, நீ வேணா நாளைல இருந்து தறிக்குடோனுக்கே போயிக்கோ. கணக்கு இருந்தா உங்கொப்பன் கையில குடுத்துடறோம். நீ போ” என்று முத்துச்சாமி கவுண்டர் இவனைப் போகச் சொல்ல, இவனும் திரும்பி வீட்டுக்கு நடந்தான்.

அன்று மாலையே ராமசாமி கவுண்டர் வீடு இழவு விழுந்த வீடானது! தகவல் தெரிந்த ஒரம்பறைசனம் காரிலும், பைக்கிலும் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தது! வழுவுச் சின்னான்தான் தன் அப்பனோடு தப்பட்டை காய்ச்சி அடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் உள்புறம் பெண்களின் அழுகை ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது! மாதாரிகள் வேலி ஓரமாக கூட்டமாய் நின்றிருந்தார்கள். சரோஜாவின் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா? தெரியவில்லையே! என்று பேசிக் கொண்டிருந்தார்கள். “தீயி எரிய எரிய அப்புடியே ஓட்டம் புடிச்சுட்டு ஓடியாந்துச்சாமா. இது வழியா நேரா ஓடி வழுவுக்குள்ளார முட்டி ஓடி சாமிநாதன் ஊட்டு முன்னாடி போயி உழுந்து உருண்டு செத்துப் போச்சாமா சின்னகவுணுச்சி. பிதுறு கெட்டு என்ன பண்றம்னு தெரியாமத்தான ஓடியிருக்கும். அட ஓடின கவுணுச்சி நேரா தண்ணித் தொட்டிக்குள்ளார ஓடியாந்து உழுந்திருக்கலாமே!” மாதாரிச்சிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் பங்காளிகளோடு வீட்டு வாயிலில் கைநீட்டிக் கொண்டிருந்தார்கள். சாமிநாதன் மாரனின் பின்னால் நின்று கொண்டே வரும்சனங்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். சின்ன கவுணுச்சி தானே சீமெண்ணெய் ஊற்றிப் பத்தவைத்துக் கொண்டதா. இல்லை கவுண்டரே சின்ன கவுணுச்சி மீது சீமெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து சாவுடி என்று விட்டாரா? ஒன்றும் புரியாமல் அதே யோசனையில் நின்று கொண்டிருந்தான்....


நன்றி: உயிர்மை மாத இதழ்

 வா மு கோமு