Showing posts with label KALAIGNAR. Show all posts
Showing posts with label KALAIGNAR. Show all posts

Monday, May 09, 2011

நாட்டு நடப்பும் நையாண்டிச்சிரிப்பும்

1. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கல்பாக்கத்தில், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக அணு உலை மின்சாரம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேச போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக்கூடும்.

அதான் இலங்கைல மொத்தமா உலை வெச்சுட்டாங்களே.. இனி என்ன மிச்சம் இருக்கு இழக்க நமக்கு.. ?

----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: "ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக வாதாட அரசு தரப்பில் ஏற்கனவே, மூத்த வக்கீல் லலித் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சுப்பிரமணியசாமியை அரசு தரப்பு வக்கீலாக நியமிப்பது ஏற்புடையதல்ல' என, சி.பி.ஐ., தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மேலும் வாதாட இருப்பதாக சுப்பிரமணியசாமி கோரினார். வழக்கு விசாரணை, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரியஸா டிராமா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு காமெடி? காமெடியன் ரோல்?னு நினைச்சிருப்பாங்களோ?

-------------------------------

3. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதைக் கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் எட்டு குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரியும், காஞ்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.



காஞ்சிபுரம் காய்ஞ்சிபுரம் ஆகி ரொம்ப நாள் ஆச்சே.. இனி மாய்ஞ்சி மாய்ஞ்சி போராடி என்ன பண்ணப்போறீங்க.. விடுங்க.. 

----------------------------------------------




4. பத்திரிகைச் செய்தி: மாமல்லபுரம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள, 296 மதுபானக் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின், மீண்டும் திறக்கப்பட்டன.


பேச்சுவார்த்தை பார்ல சுமூகமா கமுக்கமா நடந்ததா? 

-----------------------------------------

5. தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம்
தாழ்த்தப்பட்டோர் பிரிவில், 15 லட்சத்து, 41 ஆயிரம், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் பிரிவில், ஒரு லட்சத்து, 12 ஆயிரம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 14 லட்சத்து, 40 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில், ஒரு லட்சத்து, 88 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 28 லட்சத்து, 93 ஆயிரம், இதர பிரிவினரில், ஐந்து லட்சத்து, 56 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மே 13 க்குப்பிறகு வேலை வாய்ப்பில்லாதவர்கள் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

-----------------------------------------

6. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப்பகுதியில் இலங்கை அரசு, அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை, கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே, அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அண்ணே.. நல்லாதான் கூவுறீங்க.. இதையே தானைத்தலைவர்ட்ட போய் கூவுங்களேன் பார்ப்போம்..?

---------------------------------------

7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி :சோனியா உண்மையான இந்தியரே அல்ல; அவரின் குறி, இந்தியாவைச் சுரண்டி உலக நாடுகளில் சொத்துகள் சேர்க்க வேண்டும் என்பதே. இவற்றை விரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்.

சீக்கிரம்.. மே 13க்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு...அப்புறம் காங்கிரஸ் இருக்கற இடமே தெரியாம போயிடும்.. அதுக்குள்ள அம்பலப்படுத்திடுங்க.. 

-----------------------

8. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பா.ஜ., ஓட்டு வங்கி இந்தத் தேர்தலில் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில், பா.ஜ., தமிழக மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அதன் ஓட்டு வங்கி இருக்கும்.

ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்க? மீறி மீறிப்போனா 2 % ஓட்டு வாங்குவீங்களா? எதுக்கு இந்த அலப்பறை.. 

------------------------------

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக் கூடாது என்பது தான் எங்கள் நிலை.

அதான் எங்க தானைத்தலைவரும் சொல்றாரு..இது ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மட்டும் அல்ல. 3 குடும்பங்களின் கூட்டுக்குடும்ப ஆதிக்கம்னு.. நீங்க தான் புரிஞ்சுக்கலை.. 

-------------------------------


10. பா.ஜ., பொதுச் செயலர் ஜகத் பிரகாஷ் நட்டா பேட்டி: ஊழல் பிரச்னைகளில், தி.மு.க.,வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. காங்கிரசின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி, தி.மு.க., ஊழல் நடவடிக்கைகளை துவங்கியது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஊழலில் தான் கூட்டணி அமைத்திருக்கின்றனர். ஊழல் என்ற பிரச்னை வரும்போது அவர்கள் சமரசமாகி விடுவர்.


கூட்டணி ஆட்சின்னா ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா கூட்டு ஊழல்னா ஒத்துக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது..?

---------------------------------

Wednesday, May 04, 2011

மாட்டியது கலைஞர் டி வி.. விரட்டியது சி பி ஐ .. -- ஜூ வி.. ரிப்போர்ட்

லைஞர் டி.வி-க்கு பணம் கைமாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது!
'கடனாக வாங்கினோம். கடனை அடைத்துவிட்டோம்.’ என்று முதல்வர் கருணாநிதியும் கலைஞர் டி.வி-யும் சொல்லி வர... இந்தப் பணம் வந்த வழிமுறைகள் அத்தனையையும் அம்பலப்படுத்தி உள்ளது சி.பி.ஐ.

இந்த விவகாரம் வெளியில் வந்ததுமே கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்து இருந்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது.

அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.

மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது!

'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம்  3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின.

ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.

ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு.

இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள்.

இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான்  200 கோடியை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்​கிறது.

'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்,  209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி).

ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக்கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனி​களுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது.

இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய  209 கோடியில்,  200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது. அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.

இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த  200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல்,  சுற்றிவளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த  200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.வி-க்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.

அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.

இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டிபி குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு  510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது),  200 கோடியை கடனாக மாற்றிக்கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.

முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ.

2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது. கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில்  31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த  31 கோடியில்  25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார்  6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.

இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய  25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம்  214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர். அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை.

கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.

3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன. 19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாம்.

அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக்கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம் வரை வாங்கிக்கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக்கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை (தயாரித்து) காட்டி வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள். இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம் வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து  25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது.

இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த  25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.
4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது.

ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன்,  200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது. 2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது.

டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில்  200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது. ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.

பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது.

இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.
இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார்  30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார்  25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார்  23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.

கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ( 70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.

''கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த வரை, தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதைக் காட்டினாலே, குற்றம் நிரூபணம் ஆகிவிடும். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன!''

என்கிறார் வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினி.
வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப்போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!

நன்றி - ஜூ வி 

Tuesday, April 12, 2011

கலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் பிரம்மாஸ்திரம்...



 

 

டந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!


தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.


ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!




ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது.

'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!

மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது.




  a
இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!

காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை.

நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!


.
 
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா?

வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!


 

  a

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.

முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.

விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு.





 
 

 a

'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!




 

 
  a
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?

'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி.



 


வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?

Monday, April 11, 2011

கலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி தேர்தலுக்கு முந்தின தேர்தல் இது

http://www.cinesouth.com/images/new/kushboo-0302.jpg 

ன் கால்கள் ஓடி விளையாடிய இந்த திருவாரூர் மண்ணுக்கு மறுபடியும் வர, என் உடல் ஒத்துழைப்பு கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், இங்கே வரும்போது மட்டும்தான் என் மனம் நிறைவுகொள்கிறது!’ - ஐந்தாவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்ற கருணாநிதி, இந்த ஆட்சியின் தொடக்கக் காலத்தில் காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவு இல்லத்துக்கு வந்தபோது, சொன்ன வார்த்தைகள் இவை. இப்போது ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் அமர, கருணாநிதி முன்கூட்டியே தன் தாயின் நினைவிடம் போய் நிற்கிறார்!


அய்யாவுக்கு அம்மா மேல அன்பு இருந்தாலும் அய்யா கட்சிக்காரங்களுக்கு அம்மான்னா யம்மா தான்... 


திருவாரூர் நண்பர்களையும் உற்ற உறவுகளையும் கசிந்த கண்களோடு பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் கருணாநிதி. ''எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடிக் களித்தேனோ, எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ, எந்த மண்ணில் இருந்து என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேனோ... அந்த மண்ணில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?

இதில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. வேறு வழியின்றி நான் இங்கே போட்டியிடுகிறேன் என்று சொல்ல மாட்டேன்.

நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்களும் ,ஜெவும் ஒரே மாதிரி.. பூர்வீக இடத்துல போட்டி இடறீங்க...

http://www.southindianactresses.net/d/41717-4/Kushboo-Wallpaper-001.jpg
எனக்கே ஏற்பட்ட ஆசையின் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். பல இடங்களில் நான் வெற்றி பெற்று இருந்தாலும், 'உன் சொந்த மண்ணில் வீரத்தைக் காட்ட ஆற்றல் உண்டா?’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சம் எனக்கு உண்டு. அதனால்தான், திருவாரூரில் போட்டியிடுகிறேன்.

சென்னையில் போட்டி இட்டா படு கேவலமாக தோற்றுவிடுவேனோ என்ற அச்சம் உண்டு # மனசாட்சி


1957-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தனித் தொகுதிஆக்கி என்னைத் தடுத்துவிட்டார்கள். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது!'' 

வாய்ப்பா? ஏய்ப்பா?

''இந்தத் தேர்தலில், 'எனக்கு வாக்களியுங்கள்; எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ எனக் கேட்பேனே தவிர, 'யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்றெல்லாம் பேச மாட்டேன்.

படத்துல எழுதற வசனம் தான் புரியலைன்னா மேடைல பேசற வசனமுமா?

ஏனென்றால், திருவாரூரில் இருக்கும் அனைவரும் எனது சொந்தக்காரர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயர்ந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள். நான் அவர்கள் மீது எதிர்ப்புக் கணைகளை வீசி, ஒரு லேசான காயத்தைக்கூட ஏற்படுத்த விரும்பவில்லை. தப்பித் தவறி, அப்படி ஒரு சிராய்ப்பை உங்கள் இருதயத்தில் ஏற்படுத்தினேன் என்றால், அதற்காக மன்னித்துவிடுங்கள்!'' என முதல்வர் பேசப் பேச, 'ஓர் அரசியல் தலைவனின் பக்குவம் இப்படி அல்லவா இருக்க வேண்டும்’ என அசந்துபோனார்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

தமிழன் பேசிப்பேசியே வீணாப்போனான்..... பேச்சை கேட்டு கேட்டும் மதி மயங்கிப்போனான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw8xxnf77WzwGeoYukFclQF68r94xFZtG_-MKoj0WGNu3xCiItHb6jBKSXSlhhb9C6WRBPp8QZpD8bQPdz9xbJ0SMbKH5RSbnqNfKCJxzyTMQMaKJhbt0dFEWaZD9qV1w5uH7a6TdheIE/s400/2008062851771201.jpg
மறுநாள் காலை கருணாநிதி, காட்டூரில் உள்ள தன் தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போனார். குடும்ப உறவுகள் பலரும் சூழ்ந்திருக்க, தாயின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி, சில கணம் அமைதியாக நின்றார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் கிளம்பி வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடிக்கடி திருவாரூருக்கு வந்துபோகும் வழக்கமுடைய அழகிரி, அங்கே இருந்த நண்பர்களிடம், ''என்னய்யா, தலைவரை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வெச்சிடுவீங்களா?'' எனக் கேட்டு உற்சாகமாக உரையாடியபடி இருந்தார்.

ஓட்டுக்கு ரூ 5000 தர்றீங்க.. அந்த ஓட்டு வித்தியாசம் கூட இல்லைன்னா கொடுத்த காசுக்கு என்ன மரியாதை?


முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், நாகை மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, முதல்வரை ஜெயிக்கவைக்க இரவும் பகலுமாக இயங்கி வருகிறது. இதற்குஇடையில், கருணாநிதியின் வெற்றிக்கு அணை போடும்விதமாக அ.தி.மு.க. தரப்பு கிராமங்கள் தோறும் சாதிரீதியான கூட்டங்களை ரகசிய மாக நடத்தி வருகிறதாம்.

ஐவர்  குழுவோட வேலை என்ன? பண பட்டுவாடாவா?

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முக்குலத்து வேட்பா ளரான 'குடவாசல்’ ராஜேந்திரன் இரவு பகல் பாராமல் திருவாரூர் தெருக்களைச் சுற்றி வருகிறார். ''இதுவரை தோல்வின்னா என்னன்னே தெரியாத கருணாநிதிக்கு, நம்ம சமுதாயம்தான் சரியான அடி கொடுக்கணும்.
 http://farm3.static.flickr.com/2651/4137255345_15cf7a5898.jpg
எப்படி? நீங்க ஓட்டுக்கு ரூ 10000 தரப்போறீங்களா? போங்க தம்பி போங்க.. 

திருவாரூரில் கருணாநிதியை வீழ்த்துவதன் மூலமா நம்ம சமுதாயத்துக்கே பெரிய பெயரைத் தேடிக்க முடியும். வரலாற்று வாய்ப்பாகக் கிடைச்சிருக்கும் இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!'' என குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவான முக்குலத்துப் பிரமுகர்கள் கிராமங்கள்தோறும் இரவுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்றீங்க?உண்மைலயே அம்மாவுக்கு தில் இருந்தா இந்த தொகுதில நிக்க வேண்டியதுதானே..? அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...


இதுவரை கருணாநிதி பெற்ற வெற்றி வித்தியாசத்தைக் காட்டிலும், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்கவைக்க தி.மு.க. ஆதரவுப் பிரபலங்கள் அனைவருமே திருவாரூரில் டென்ட் அடித்துவிட் டார்கள். அன்பளிப்பு மேளாவும் ஆங்காங்கே களை கட்டுகிறது. முதல்வரின் தொகுதி என்பதால், திக்குமுக்காடிக் கிடக்கிறது திருவாரூர்!

 ஏம்ப்பா.. தேர்தல் கமிஷன்.. முதல்ல வி ஐ பிங்க நிக்கற தொகுதில பணப்பட்டுவாடா நடக்கறதை கண்காணிங்க... முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக்குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...

Saturday, April 02, 2011

கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?