Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Monday, February 23, 2015

யோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன காரணம் என்ன? - கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

  • புதிய படத்தின் படப்பிடிப்பில் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன்.
    புதிய படத்தின் படப்பிடிப்பில் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன்.
  • என்னை அறிந்தால்’ அஜீத், த்ரிஷா
    என்னை அறிந்தால்’ அஜீத், த்ரிஷா
“என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் விளக்கமளித்து 7 வருடங்கள் ஆகிறது. நான் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருப்பதால்தான் என்னால் அடுத்தடுத்த படங்களில் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது” என்று ஆவி பறக்கும் தேநீர் கோப்பையை கையில் பிடித்தபடி சிரிக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கும் அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
தொடர்ச்சியாக போலீஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே. இதற்கான காரணம் என்ன?
நான் இயக்கிய ‘மின்னலே’, ‘விண் ணைத் தாண்டி வருவாயா’, ‘பச்சைக்கிளி முத்துச் சரம்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களெல்லாம் போலீஸ் படங்கள் இல்லையே. ஆக்‌ஷன் பாணியில் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் போது, போலீஸைச் சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்து பண்ணுகிறேன்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் குற்றங்கள் என்பது இருக்காது. ஆனால், போலீஸ் அதிகாரி களின் வாழ்க்கையில் குற்றங்கள், ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆக்‌ஷன் படங்களைப் பண்ணும் போது போலீஸ் படங்களைப் பண்ணுகிறேன்.
அன்புச்செல்வன், ராகவன், சத்யதேவ். இதில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?
என்னைப் பொறுத்தவரை மூன்றுமே ஒரு கதாபாத்திரம்தான். 28 வயதில் இருக்கிற அன்புச்செல்வன்தான், 38 வயதில் சத்யதேவ். என் மூன்று போலீஸ் அதிகாரி பாத்திரங்களையும் எடுத்துப் பார்த்தால், நிறைய விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கும்.
‘காக்க காக்க’ படம் முடிந்தவுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தொடக்கத்தை வைத்தால், இது அங்கிருந்து தொடங்கிய படம் மாதிரிதான் இருக்கும்.
‘காக்க காக்க’ படத்தில் சின்ன வயது சூர்யாவை நான் காட்டவில்லை. ‘என்னை அறிந்தால்’ படத்தில் காட்டியது அவரு டைய சின்ன வயது வாழ்க்கையாக இருந்திருக்கலாம். மாயா இறந்தவுடன் விவாகரத்தான ஒரு பெண்ணை சந்தித்து இருக்கலாம். என் மூன்று போலீஸ் அதிகாரிகள் பாத்திரத்தில் எனக்குப் பிடித்தது சத்யதேவ் தான்.
‘என்னை அறிந்தால்’ இரண்டாம் பாகம் குறித்து நிறைய செய்திகள் வந்துகொண்டு இருக்கிறதே?
‘என்னை அறிந்தால்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக் கிறது. இதில் சத்யதேவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதை வைத்து இரண்டாவது பாகத்தின் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதை சண்டைப் படமாகவும் எடுக்கலாம்.
உணர்ச்சிபூர்வமான கதை யாகவும் இருக்கலாம். இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எழுதிவிட்டு அதை அஜீத் சாரிடம் கொடுப்பேன். கண்டிப்பாக அவர் அந்தப் படத்தை பண்ணுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
‘துருவநட்சத்திரம்’, ‘யோஹன்’, ‘சென் னையில் ஒரு மழைக்காலம்’ படங்களின் நிலைமை என்ன?
எனக்கே தெரியாது. ‘யோஹன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த 2 நாட் களுக்கு முன்பு ரத்தானது. ‘சென்னை யில் ஒரு மழைக்காலம்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி 25 நாட்கள் நடத்தினோம்.
அப்படத்தைப் பொறுத்தவரை அதில் நடித்தவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என்று நினைத்தேன். எங்கேயோ தப்பு நடக்கிறது என்று தோன்றியதால் அதை நிறுத்தினேன். மூன்று படங்களையும் கண்டிப்பாக என்றைக்காவது ஒரு நாள் தொடங்குவேன். அதில் சந்தேகமில்லை.
சூர்யா, விஜய் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் ‘துருவ நட்சத்திரம்’ ‘யோஹன்’ படங்களை நிறுத்தியதற்கு காரணமா?
என்னைப் பொறுத்தவரை அவர் களுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு நடிகர், கதையை நம்பி படம் பண்ணும் போது அப்படத்தின் கதை அவர்களுக்கு முழுமையாக பிடிக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் கதை விஷயத்தில் கொஞ்சம் உடன்பாடு இல்லை.
‘இந்தக் கதை வேண்டாம் கெளதம். வேற ஒண்ணு பண்ணலாம்’ என்று சொன்னார்கள். எந்த காரணத்துக்காக இதைப்பற்றி சூர்யா வெளியே சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை. அது அவர்களுடைய கருத்து. அதில் நான் எந்தத் தப்பும் சொல்லமாட்டேன்.
கெளதம் மேனன் படங்கள் என்றாலே ஏ சென்டரில் மட்டும்தான் நன்றாக ஓடும் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?
நான் படம் பண்ணும் போது ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என்றெல்லாம் நினைத்து படம் பண்ணுவதில்லை. எனக்கு என்ன தெரியுமோ அதைப் பண்ணுகிறேன். நாயகர்கள் கேட்கும் போது அவர்களோடு இணைந்து பண்ணு கிறேன். என்னுடைய வண்டி ஓடிக் கொண்டே இருக்கிறது.
படம் வெளியான பிறகு எந்த சென்டர்களில் படம் சரியாக போகவில்லை என்று நான் கேட்க மாட்டேன். ஏ சென்டரில் மட்டும்தான் என் படம் ஓடுகிறது என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் என்னுடைய சுபாவம்.
‘வாரணம் ஆயிரம்’, ‘என்னை அறிந் தால்’ உள்ளிட்ட உங்களுடைய படங்கள் மிகவும் நீளமாக இருக்கிறதே. இப்போது கூட 'என்னை அறிந்தால்' படத்தில் சில காட்சிகளைக் குறைத்திருக்கிறீர்கள்?
எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் தயாரிப்பாளராக இருந்தால் கண்டிப்பாக காட்சிகளைக் குறைத் திருக்க மாட்டேன். தயாரிப்பாளர், ‘எனக்கு கொஞ்சம் பயமாக இருக் கிறது, எந்தவொரு இடத்திலும் மெது வாக நகர்கிறது என்று ரசிகர்கள் சொல்லிவிடக் கூடாது’ என்றார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் தயாரிப் பாளர் சில காட்சிகளைத் தூக்கினார்.
ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. முதல் 3 நாட்கள் முடிந்தவுடன், வேறு ஒரு தரப்பு மக்கள் இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டமாக படம் பார்க்காமல் அமைதியாக பார்ப்பார்கள். அவர் களுக்கு இது பிடிக்கும்.
போலீஸ், காதல் இந்த இரண்டையும் தாண்டி வேறு கதைக்களத்தில் எப்போது படம் பண்ணுவீர்கள்?
எனக்கு போலீஸ், காதல் இரண்டை யும் தவிர வேறு தெரியாது. அதுதான் உண்மை. எனக்கு தெரிந்ததைத்தானே சினிமாவாக பண்ண முடியும். ஆக்‌ஷன் என்று இறங்கினால் அது போலீஸ் படமாக இருக்க வேண்டும் என்று நினைக் கிறேன். காதல் என்று இறங்கினால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக் கிறேன்.
இந்த இரண்டுக்குமே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்களுக்காக படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கு அந்த ரசிகர் கூட்டம் குறைகிறதோ அன்றைக்கு வேறு படங்களைப் பண்ணுவேன்.
தற்போது படங்களின் சென்சாரில் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?
சென்சாரை பொறுத்தவரை அவர்கள் செய்வது சரி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் பார்க்கலாம், ஆனால் அவர்களுடன் பெற்றோர்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோன்றியது.
அதைத்தான் சென்சாரிலும் சொல்லி யிருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத் ததில் எனக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்துமே இல்லை.
வரிச்சலுகை விஷயங்கள்தான் இன்னும் கொஞ்சம் மாற வேண்டும் என்று தோன்றுகிறது. யு/ஏ என்றால் ஒரு வரி, யு என்றால் ஒரு வரி என்ற நடைமுறை இங்கு மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் கிடையாது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் யு சான்றிதழ் பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


நன்றி - த  இந்து

Wednesday, January 28, 2015

இளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்?

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் 'டூரிங் டாக்கீஸ்' படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:
"நான் ஒண்ணும் 20 வயசுப் பையனாக இப்படத்தில் நடிக்கவில்லை. 60 வயதான ஒரு மனுஷனுக்கு அந்த வயதில் என்னென்ன குறும்புகள் செய்வாரோ அந்த மாதிரியான வயதான பாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ப்ளாட்பாரத்தில் தூங்கி எழுந்து வாய்ப்பு தேடுவேன். அப்புறம் இயக்குநராகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து நல்லா சம்பாதித்து பின்னாடி இதுபோது, இதற்கு பிறகு படங்கள் இயக்க வேண்டாம், தயாரிக்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
அப்போதுதான் என்னோட பையன் விஜய் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் அப்போது திரையுலகில் ரொம்ப முக்கியமான பெரிய இயக்குநர்கள் எல்லோர்கிட்டயும் என் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டி "சார்... என் பையனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி கொடுங்கள். எவ்வளவு செலவு என்றாலும் நான் பார்த்துக்கிறேன்"னு சொன்னேன். ஆனால் யாருமே விஜய்யை வைத்து படம் பண்ண தயாராக இல்லை" என்று நடிகர் விஜய் புறக்கணிக்கப்பட்ட கதையை உருக்கமாக கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், "விஜய்யை வைத்து யாரும் படம் இயக்க முன்வரவில்லை என்ற நிலையில்தான், நானே மறுபடியும் இயக்குநராகி என் மகனை வைத்து சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ? நல்ல மருமகள், நல்ல பேரக்குழந்தைகள், நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது.
போதும்... இதற்கு மேல் நாம ஏன் படங்கள் இயக்க வேண்டும் என்று நானேதான் முடிவெடுத்தேன். இயக்கம் மட்டும்தான் பண்ண மாட்டேன். மற்றபடி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் திறமையான இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிப்பேன்" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன். 


thanx - the hindu

  • இப்பு மட்டும் என்ன ...............சார்?
    Points
    330
    about 13 hours ago ·   (3) ·   (5) ·  reply (0) · 
  • Haja  
    முதல் படம் வந்த பொது தமிழின் நம்பர் 1 வார இதழ் ஒன்று "இந்த மூஞ்சியெல்லாம் பார்க்கணுமா" என்று ஒரு வரி விமர்சனம் செய்திருந்தது.. காலம் ஒரு ஒரு அற்புதம்...
    Points
    1275
    about 14 hours ago ·   (11) ·   (3) ·  reply (0) · 
  • Naga Nagaiah  
    இது விஜய்யை புறக்கணித்தவர்களுக்கான செய்தியா, அல்லது விஜய்க்கே சொல்லும் செய்தியான்னு சந்தேகமா இருக்குதுங்ணா... ஏம்பா இப்டி காச கரி ஆக்குறேன்னு மகன் வருத்தப்பட்ருக்கலாம்.. அதுக்கான பதிலா இத ஏன் எடுத்துக்க கூடாதுங்ணா..?
    about 16 hours ago ·   (18) ·   (4) ·  reply (0) · 
  • C R  
    வாழ்க்கையில் கஷ்டப் படாமல் ஜெயிச்சவங்க யாருமே இல்லை. அதில் வருத்தம் கொள்ளவும் தேவை இல்லை. இவரை நாடி வந்த அனைவருக்கும் இவர் வாய்ப்புக் கொடுத்திருப்பரா என்ன? இப்போதைக்கு விஜய்யின் பல தோல்விகளுக்கு எவர் தான் காரணம் என்று பலரும் கூறுகிறார்கள். ஒதுங்கி இருந்து அவரை மேலும் வளர விடுவதே இவருக்கு பெருமை. பழைய கதையெல்லாம் கிளறாதீர்கள்.
    Points
    1375
    about 16 hours ago ·   (40) ·   (2) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது." அனால் ஊருக்கு மட்டும் தன்னோட பணத்த எடுத்து எதுவும் நல்லது செஞ்சிடாதிங்க. ஏமாந்த ரசிகர்கள் எவனோட பணத்தையாவது எடுத்து கல்யாணம், நல்லது, அது இதுன்னு எதாச்சும் பண்ணுங்க. வெளங்கிடும் நாடு.
    Points
    1800
    about 17 hours ago ·   (72) ·   (15) ·  reply (0) · 
  • இருமேனி Irumeni  
    வருத்தப் படுவதற்கும்,புலம்புவதற்கும் இதில் ஒன்றும் இல்லை. விஜய் எந்த ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து விட்டு வந்தார்? அல்லது சினி ஃபீல்டில் எந்த ஒரு இயக்குநர்-நடிகரிடம் தொழில் கற்றுக் கொண்டார்? டைரக்டர் சந்திரசேகரனின் மகன் எனும் ஒரே தகுதியில் சினிமாவுக்குள் வந்தவர்.அவரை வைத்து அன்றைக்கு படம் எடுக்காதவர்கள் சரியான முடிவே எடுத்திருக்கின்றனர். ஒரு வகையில் அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
    Points
    4170
    about 18 hours ago ·   (48) ·   (15) ·  reply (0) · 
  • TMZ  
    இவர் பேசியது "தி ஹிந்து" எடிட் செய்ததா அல்லது அப்படியே செய்தி பதிவு செய்து உள்ளதா? இல்லை என்றால்...இவருக்கு மமதை அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். நிறைய முரண்பாடுகளுடன் பேசியுள்ளார். இன்றைக்கி விஜைய்க்கு வரும் எல்லா எதிர் விமரசனங்கள்ளுக்கு முழு காரணகர்த்தா சத்தியமாக இவர் ஒருவரே

Monday, January 12, 2015

புலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா?-தேவி ஸ்ரீபிரசாத் பேட்டி

தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா
தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா 
 

'புலி'யில் புது இசை: சிலாகிக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்

 

 
2014ல் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்தவர், 2015ல் விஜய் நடித்து வரும் 'புலி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்... அவர்தான் தேவி ஸ்ரீபிரசாத்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேசினோம்.
"2014ம் ஆண்டு எனக்கு ‘வீரம்’ படம் மூலமா நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் பல படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த 2015ம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்திருக்கிறது.
விஜய் படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். அவர் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் 'வில்லு' தான் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.
இயக்குநர் சிம்புதேவன் என்னிடம் 'புலி' படத்தைப் பற்றி பேசும் போதே எனக்கும் அவரும் நல்ல செட்டாகி விட்டது. அவர் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால், படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையுமே கார்டூனாக காட்டியதால் எனக்கு ரொம்ப எளிமையாக இருந்தது. 'புலி'யில் புது இசையை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 'புலி' தலைப்பிற்கே ஒரு பெரிய ரீச் கிடைத்திருக்கிறது.
'புலி' ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இதற்கு முன்னால் இந்த மாதிரியான படத்திற்கு நான் இசையமைத்ததில்லை. இப்படத்திற்கு நான் பண்ணப் போகிற இசையில் படத்தோட கதைக்கும், பிரம்மாண்டத்துக்கும், அதனோட அழகுக்கும், பொருத்தமா இருக்கணும். அதற்கு ஏற்றார் போல் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டேன். ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறது. விஜய், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பாடுகிறார்களா என்பது இப்போதே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை சாப்பிட்டு விடும்.
என்னுடைய பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும் என்பதை மனதில் வைத்து தான் அனைத்து பாடல்களையும் பண்றேன். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணுவதால், தமிழில் ரொம்ப தேர்ந்தெடுத்து தான் பண்றேன்.
என்னோட குரு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய இசை அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்த மாதம் நடத்த இருக்கிறோம். இந்தியாவில் இருக்கிற பெரிய இசைக் கலைஞர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நிறைய பேருக்கு நான் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சிஷ்யன் என்பது தெரியாது.
நாலைந்து வயது இருக்கும் போதே அவர்கிட்ட மாண்டலின் கற்றுக் கொள்ள போய்விட்டேன். என்னை மிகப் பெரிய மாண்டலின் கலைஞராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், நான் சினிமா பக்கம் போய்விட்டேன்" என்றார். 


நன்றி -த இந்து

Thursday, January 08, 2015

அஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்க்களம் - தீர்வு என்ன?

     
     
தமிழ் சினிமாவில் நாயகர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக உருவான காலம் தொட்டே அவர்களுடைய ரசிகர்களின் மோதல்களும் தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், என்று தொடங்கிய ரசிகர்களின் ஆக்ரோஷ மோதல்கள் இன்று அஜீத் - விஜய் ரசிகர்களிடையே உச்சகட்டத்தை எட்டி நிற்கிறது. முந்தையை ரசிகர்கள் போஸ்டர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் மோதிக்கொண்டிருந்தனர். ஆனால் அஜீத் - விஜய் ரசிகர்கள் அந்த யுத்தத்தை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பல காலமாக இந்த மோதல் இருந்துவந்தாலும் அது உச்சகட்டத்தை எட்டியது இந்தப் புத்தாண்டில்தான். பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டிய அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29-ம் தேதிக்குத் தள்ளிப்போவதாக அதன் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் புத்தாண்டு சமயத்தில் அறிவித்தார். ஏற்கெனவே ‘கத்தி’ பட விவகாரத்தில் தங்களை கலாட்டா செய்த அஜீத் ரசிகர்களைப் பழிவாங்க, இதுதான் தக்க சமயம் என்று பொங்கி எழுந்தனர் விஜய் ரசிகர்கள்.
“அஜீத் எப்போதும் யாருடனும் போட்டியிடாமல் தனியாக தன் படத்தை வெளியிடும் பழக்கம் கொண்டவர்” என்று ஆரம்பித்து, “மோதி ஜெயிக்கிறதுதான் வீரம்... தனிச்சு நின்னா அதுக்குப் பேரு சோரம்” என்று அஜீத் ரசிகர்களை ட்விட்டர் தளத்தில் சீண்டிப் பார்த்தனர்.
இதனால் கொந்தளித்துப்போன அஜீத் ரசிகர்கள் பதிலுக்கு, “படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதற்காக கைகட்டி வாய்ப்பொத்திக் கெஞ்சியது நாங்களா?” என்று ‘தலைவா’ பட சர்ச்சையை நினைவூட்டினர்.
இந்த சண்டையை இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய்க்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள் அஜீத் ரசிகர்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அஜீத்துக்கு எதிரான ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் பரப்பினார்கள். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வாய்கூசும்படியான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டது தமிழக சினிமா ரசிகர்களின் தரத்தை இந்திய அளவில் குறைப்பதாக இருந்தது.
ரசிகர்களின் இந்த மோதலைப் பற்றி அஜீத்தும், விஜய்யும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில் தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டியுள்ளனர். உதாரணமாக ஒருமுறை ‘மங்காத்தா’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற விஜய், அஜீத்துக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்தார். அதுபோல் விஜய்யின் பிறந்தநாள் ஒன்றில் அவரது வீட்டுக்கு சென்று நாள் முழுவதும் அவருடன் இருந்துள்ளார் அஜீத்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடிய விஜய் “ரசிகர்களின் சண்டை தேவையற்றது. தங்களது குடும்பத்தைத்தான் அவர்கள் முதலாவதாக கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் இரு தரப்பு ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் மோதிவருவது கவலைக்குரியதாக உள்ளது.
வலைத்தளத்தில் அஜீத் ரசிகராக இருக்கும் நஸ்ருதீனிடம் இதுபற்றி கேட்டபோது, “இந்த மோதல் ‘ஆரம்பம்’ படத்தின் முதல் பார்வை டீஸர் வந்தபோதுதான் முதலில் தொடங்கியது. அஜீத்தின் படத்தைப் பற்றி ட்விட்டரில் நாங்கள் ஏதாவது குறிப்பிட்டால் விஜய் ரசிகர்கள் உடனடியாக அதைக் கிண்டல் செய்து எதையாவது எழுதிவிடுகிறார்கள்.
‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போன செய்தி வெளியான போது விஜய் ரசிகர்களின் கிண்டல் அதிகமாக இருந்தது. உடனடியாக நாங்கள் விஜய்க்கு எதிராக பதிவுகளை இடத் தொடங்கினோம். தற்போதைய இந்த மோதல் தவறான விஷயம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக எங்கள் ‘தல’யை விட்டுத்தர முடியாது. ட்விட்டரில் நாங்கள் ஒரு விஷயத்தைக் ட்ரெண்ட் செய்தால் அவர்களும், அவர்கள் ட்ரெண்ட் செய்தால் நாங்களும் அமைதிகாக்க வேண்டும். நாங்கள் அமைதிகாக்க தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்குத் தயாரா?” என்றார்.
விஜய் ரசிகரான தீபக் கூறும்போது, “இந்த சண்டை ‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போனதில் இருந்துதான் ஆரம்பித்தது நாங்கள் அஜீத்தை கிண்டல் செய்து எந்தப் பதிவையும் இடவில்லை. அவரது ரசிகர்களைத்தான் கிண்டல் செய்தோம். அஜீத் ரசிகர்களும் அதற்குப் பதிலாக எங்களைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதில் அவர்கள் எங்கள் தளபதியை கிண்டல் செய்தார்கள். அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ட்விட்டர் தளத்தில் சண்டை பெரிதானது. இது தவறுதான் என்றாலும், எங்களுக்கு எதிராக ஒரு விஷயம் நடைபெறும் போது, அதை கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த சண்டை நிற்கவேண்டும் என்றால் விஜய், அஜீத் இருவரும் இணைந்து அறிக்கை விட வேண்டும். அல்லது ஒரு வீடியோ பதிவை வெளியிட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்” என்றார்.
‘தல’யும் ‘தளபதி’யும் இதைச் செய்வார்களா? 


thanx - the hindu


  • ! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் ஹீரோ தான் !! இங்கு யாரும் யாரையும் கொண்டாடபடவேண்டிய அவசியமில்லை!!
    40 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • skaki  
    தல..
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ahmed  
    கண்டிப்பஹா செய்ய வேண்டும்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • S.DEZOSA  
    இப்படியே follow பண்ணுங்க , இந்தியா சீக்கரம் வல்லரசு ஆய்டும்.....
    about 2 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
  • shruthi  
    வேலை இல்லாத வெட்டி வேலை ..
    about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • vijayraj  
    தீபக் சொன்னது சரியான செய்தி..
    Points
    130
    about 3 hours ago ·   (7) ·   (5) ·  reply (0) · 
  • Harris Ahimas  
    தமிழா நீ முட்டாள் அக்கதே. மீண்டும் மீண்டும் நடிகர்கள் பின்னல் நிற்கிறாய், நீ உன்னுடை அறிவையும், ஆற்றலையும் உன்னுடய சொந்த தொழிலுக்க செலவிடு, அது உன்னை உயர்த்தும். நடிகர்களாலும் நடிகைகழலும் தமிழ் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது, அமைதி இழந்தது.
    Points
    3650
    about 6 hours ago ·   (16) ·   (1) ·  reply (0) · 
  • Az  
    முட்டாள் தனத்தின் உச்ச கட்டம்!! ஹ ஹ ஹ ஹா !!!
    Points
    330
    about 6 hours ago ·   (22) ·   (1) ·  reply (0) · 
  • santhil kumar  
    Vip boys
    about 7 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • vkskumar  
    சினிமா என்பது வெறும்கேளிக்கை தான். தனி நபர் துதி பாடுவதை விட்டு விட்டு வீண் சண்டை போடாமல் நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கு.இந்த ரசிகர்கள் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தி உருப்படுவத ர்க்கு வழியய் பார்த்தல் நன்றாக இருக்கும்.
    about 7 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    'தல'எழுத்து ராமா....
    Points
    1240
    about 9 hours ago ·   (4) ·   (4) ·  reply (0) · 
  • raj  
    தல தளபதி மோதல் சினிமாவில் புதுசு இல்ல. ஆனா இந்த நிலமைய தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்க சில நடிகர்கள் (பொடி பசங்க) ஆர்வமா இருகாங்க. டேய் பொடி பசங்களா என்னைக்குமே தல தளபதி மாஸ் டா. ரெண்டு ரசிகர்களும் ஒன்னு சேந்தா நீங்க இருக்குற இடமே தெரியாது டா.
    Points
    600
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • kumar  
    ennama neenga ipdi panrengalamea ma
    Points
    225
    about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Charl Esta  
    நாட்டிற்க்கு நாட்டின் முன்னேற்றத்திற்ககு இது மிக அவசியமான செய்தி
    about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Ahart  
    ஆக மொத்தம் சண்டையை விட்ற மாறி யாரும் தெரியல. எல்லாம் ஏட்டிக்கு போட்டி மாறி நடக்குது. நல்லா வருவீங்க பா!!!
    about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • SUNDARARAMAN.M  
    தேவை இல்லாத நேர விரயம் .நண்பர்களே இருக்கும் வேறுபாடுகள் போதாதென்று ஏன் நீங்கள் வேறு சண்டையிடவேண்டும்?இதனால் யாருக்கு என்ன லாபம்?
    Points
    175
    about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • siva  
    திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்காக தன் சொந்த இன சகோதரர்களை கேவலமாக விமர்சித்தும், வெறுப்பை உமிழ்ந்து கொள்ளும் ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம்!! சொந்த மண்ணில் வாழும் நம் மக்களையே நேசிக்க தெரியாத நாம் அயல் நாட்டில் வாழும் மக்களுக்காக போராட்டம் செய்வது, குரல் கொடுப்பது எல்லாம் போலித்தனம் தான். அஜீத்துக்காக, விஜயிக்காக சண்டை போடுபவர்கள், விவசாயம், மீதேன் எதிப்பு திட்டம், நியுட்ரினோ விவகாரம், ஊழல்களை எதிர்த்து போராடலாம்!! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் ஹீரோ தான் !! இங்கு யாரும் யாரையும் கொண்டாடபடவேண்டிய அவசியமில்லை!! .
    Points
    385
    about 11 hours ago ·   (16) ·   (0) ·  reply (0) · 
  • Vikram  
    நண்பர்களே. தலயும் தளபதியும் அவர்கள் வேலையை செய்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பது அவர்கள் தொழில். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்களுடைய ரசிகர்களான நாம் நமது வேலையை அல்லது தொழிலையோ சரியாக செய்தாலே போதுமானது. அதை விடுத்து அவர்கள் இருவருக்காக சண்டையிடுவது வேதனையளிக்கிறது. இப்படி சண்டையிடுவதால் நமது சுய மரியாதை மட்டுமல்ல தல தளபதி அவர்களுடைய பெயரும் தான் கெடும். சமீபத்தில் ட்வீட்டரில் மற்ற நடிகரின் ரசிகனை இன்னொரு நடிகரின் ரசிகன் அவமானப்படுத்த ஹேஸ் டேக் கிரயேட் செய்து ட்ரெண்டு செய்தது உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உங்களையும் உங்கள் நடிகரையும் கேவலமான மன நிலையோடு பார்க்க செய்து விடும். ரசிகாராக மட்டும் இருங்கள் வெறியனாக மாறாதீர்கள். இப்படிக்கு அஜித் ரசிகன்.
    Points
    200
    about 11 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
  • karthikk  
    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ......
    about 11 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Saravanan  
    அவங்க அவங்க வேலையை (நடிப்பு) ஒழுங்கா செஞ்சு பணம் சம்பாதிச்சு, வருங்கால சந்ததியினருக்கு சொத்து சேத்து .....இப்படி அவங்க வேலையை அவங்க ஒழுங்கா செஞ்சு பிழைப்பை பார்க்கறாங்க. உனக்கு ஒருத்தர பிடிச்சா அவங்க படத்த ரசிக்கிறதோட நிறுத்திக்கங்க. போய் பொழப்ப கவனிச்சு வாழ்க்கையில settle ஆகற வழியை பாருங்க. அத விட்டுட்டு உங்களுக்கெல்லாம் ஏன் ஒருத்தருக்கு கொடிபிடிக்கற இந்த வெட்டி வேலை. பொழைக்கிற வழியைப் பாருங்கப்பா. அவங்களுக்கு கொடிபிடிக்கிறதாலோ ஒருத்தற ஒருத்தர் திட்டிக்கிறதாலோ உனக்கு வேலைகிடைக்கப்போகுதா அல்லது ஒவ்வொரு திட்டுக்கும் இவ்வளவு பைசான்னு உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகப் போகுதா. ......வெட்டி வேலையைத்தான் செய்யராங்கப்பா?