Showing posts with label ஜெ. Show all posts
Showing posts with label ஜெ. Show all posts

Sunday, March 31, 2013

கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1

Wednesday, January 02, 2013

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் - ஜெ அதிரடி அறிவுப்புகள்

டில்லியில் மருத்துவ மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, நாடு முழுவதும் குரல் எழுந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாய வழி செய்யப்படும் என்பது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தலைநகர் டில்லியில், கடந்த மாதம், மருத்துவ மாணவி ஒருவர், பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சை பலனின்றி, மாணவி இறந்ததையடுத்து, பாலியல் வன்முறைக்கெதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 



இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் ஓங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களும், இக்கருத்தை ஆமோதித்து, ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீதான அரசு நடவடிக்கை குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடவடிக்கை


இதன்படி, பாலியல் வன்முறை வழக்குகள், கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் புலன் விசாரணை செய்வர்; டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக மேற்பார்வையில் ஈடுபடுவர். முடிந்தவரை, இவ்வழக்குகளை, பெண் இன்ஸ்பெக்டர்கள், இல்லாவிட்டால், பெண் எஸ்.ஐ.,க்கள் விசாரிப்பர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி.,க்கள், வழக்கு முடியும் வரை, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, நிலுவையில் இருக்கும் அனைத்து, பாலியல் வன்முறை வழக்குகளையும், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆய்வு செய்து, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், 



இவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட திருத்தம்

இது போன்ற குற்றங்கள் மூலம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில், குண்டர்தடுப்புச் சட்டத்தை திருத்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதுடன், அந்த கோர்ட்களில், அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இது தவிர, 30 நாட்கள் காவல், ஜாமின், பிணையில் விடப்படுவதை தடை செய்தல், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை, கண்ணியத்துடன் நடத்துவது குறித்தும் போலீசாருக்கு பயிற்சியளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும், பெண்களுக்கு, மருத்துவ செலவிற்கான மொத்த செலவையும், அரசே ஏற்பதுடன், மறுவாழ்விற்கான உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுவதைப் போல்,  



ஆங்காங்கே தனித்தனியாக இயங்கும் பெண்கள் உதவி தொலைபேசி சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பொதுக்கட்டடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள், நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் வணிக மையங்கள்,பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை, "மப்டி' போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஏற்கனவே தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய், "பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற வேண்டும் என்பதற்காக, இத்தகைய குற்றங்களுக்கு, மரணதண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தெடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, ""ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். பாலியல் குற்றங்களை தடுக்க, ஆபாச சினிமாக்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.


 கேரளா செய்தி 


திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.



இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.



நன்றி - தினமலர்




Thursday, December 27, 2012

டெல்லி கூட்டத்தில் ஜெ அவமதிக்கப்பட்டாரா? மக்கள் கருத்து




தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டெல்லி கூட்டத்தில் ஜெ. குற்றச்சாட்டு 

புதுடெல்லி: தமிழகத்தின் சிறிய கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமயில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கபட்டது. இதனால் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தார்.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதற்கு தயாரிக்கப்பட்ட உரை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் சுருக்கம் வருமாறு: 


கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் ஏராளமான முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12 ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்த மதிப்புமிக்க நல்ல பயனுள்ள திட்டங்களை நான் எடுத்துரைத்தேன். அதன் அடிப்டையில் இத்திட்டம் 14 மாதங்களுக்கு பிறகு இறுதி வடிவம் பெற்றுள்ளது.

கடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த குறைந்த பட்ச கருத்துக்களாவது இதில் இடம் பெற்றிருக்கும் என நான் நம்புகிறேன். திருத்தப்படாத திட்ட நகலை படித்த போது, அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது ஜனநாயக விரோத அணுகுமுறைகள் இருப்பது தெரிய வருகிறது.

வறுமையை குறைக்க வேண்டும் என்ற கருத்தில் மத்திய அரசு மாறுபட்டு இருப்பதாக கருதுகிறோம். ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல தடவை மாநில தேவைகள் குறித்து நினைவூட்டினாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டை மட்டும் குறிப்பாக மத்திய அரசு கடுமையாக வஞ்சிக்கிறது. எந்த ஒரு சட்ட பூர்வமான கோரிக்கையும் தொடக்கத்திலேயே மறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அது குறித்து மறு படியும் கோரிக்கை விடுத்தாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

முதலீடுகளை ஊக்கு விக்க தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், மெட்ரோ-ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு துறை நிலங்கள் வழங்குவதில் தாமதப்படுத்துகிறது.அதனால் திட்ட மதிப்பீடும் அதிகரிக்கிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாட்டுக்குரிய உரிமையை பெற்று தருவதில் முழு திறமையற்று மத்திய அரசு விளங்குகிறது.

கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் மிக சிறிய கோரிக்கையான சென்னை நகருக்கு கேபிள் டிஜிட்டல் மயமாகும் திட்டத்துக்கு கூட உரிமம் வழங்குவதற்கு மறுக்கிறது. அது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரிக்கும் இது குறித்து பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறது. இதற்கு டிஜிட்டல் உரிமை வழங்குவதில் தாமதம் செய்வதன் மூலம் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஈடுபட்டுள்ள ஒரு கட்சியின் குடும்ப டி.வி. நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேர வழிவகுக்கும். கடந்த முறை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் வளர்ச்சி விகிதம் 2 இலக்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை வலியுறுத் தியிருந்தேன்.

ஆனால் வரைவு திட்டத்தை படித்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன். அதில் 9 சதவீதமாக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான தமிழ்நாட்டில் வளர்ச்சி விகிதம் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2 இலக்கு வளர்ச்சி விகிதமாக இருக்கும்.

நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அரசின் செயல்பாடு இன்மையால் வளர்ச்சி விகிதம் குறைந்து இருந்தது.தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.

பயிருக்கு நீர் இன்றியமையாதது. மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பெண்ணையாறு, அட்டப்பாடி அணை உள்ளிட்ட நீர் பகீர்மானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆனால் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆதரவும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வில்லை. 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திலும், இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்த முக்கியத்துவமும் தரப்பட வில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். தண்ணீர் விலை மதிப்பற்றது என்றாலும் அதை எப்போதும் வணிக ரீதியாக பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கப்பல் படையினரால்  தாக்கப்பட்டு பலியாகும் நிலை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பேச நேரம் ஒதுக்காததால் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு ! 

Posted Date : 11:39 (27/12/2012)Last updated : 12:38 (27/12/2012)
புதுடெல்லி: பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் . 


இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார்.

தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். 

மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும் அவர் மத்திய அரசுக்கு அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்




 மக்கள் கருத்து




ஒரு கூட்டம் இங்கே வந்து ஜெயா ஒரு அகம்பாவம் பிடித்தவர், கோவத்தின் வெளிப்பாடு தான் இது என்று கூவ ஆரம்பிக்கும். அவர்களுக்கும் நமது தானைய தலைவர் கருணாவுக்கும் ஒரு கேள்வி
கடந்த 13 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக அங்கம், மத்திய அரசை தாங்கிப் பிடிப்பதே திமுகதான். இதனை தவிர மத்திய அரசில் முக்கிய அமைச்சர்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த பயன் என்ன?
1. முல்லை பெரியாறு சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் அதன் பலன் கேரளாவுக்குத் தான்
2. கேரளாவில் மீனவன் சுடப் பட்டால் உடனே தண்டனை, இங்கே பல முறை நடந்தும் கடிதத்துக்கு பதில் கூட எழுதாத மத்திய அரசு.
3. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அது அரசு இதழில் வரவில்லை. கருணா இதற்காக செய்த நடவடிக்கை என்ன? திமுக ஆதரவு இல்லை என்றால் மத்திய அரசே இல்லை என்கிற நிலையில் இருந்து இன்று குடியரசு தலைவரே வீட்டுக்கு வந்து சந்திக்கும் அளவுக்கு மத்திய அரசை தாங்கி பிடித்ததன் பலன் தான் என்ன?
4. காவிரி நீருக்காக மத்திய அரசு கைவிட்ட பின்னர், நீதிமன்றத்தை நாடி வெற்றித் தீர்ப்பும் வாங்கி அதனை செயல் படுத்த கர்நாடக மறுத்த நிலையில் நாடு நிலையாக செயல் படவேண்டிய மத்திய அரசு வேடிக்கை ஒரு துரும்பு கூட அசைக்காதது ஏன்? மத்திய அரசை திமுக இதற்காக கண்டிக்காதது ஏன்?
5. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை (இனிமேலும் கட்டமைப்பு அமைக்கப் படாது) என்று சொல்லும் மத்திய அரசு தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்துக்கே தர மறுப்பது என்? மின்சாரம் வெளியே செல்ல மட்டும் கட்டமைப்பு உள்ளதா? உள்ளே வர மட்டும் மின்சாரம் மறுக்குமா?
6. எத்தனை முறை தமிழக பிரச்சனைகளுக்காக திமுக தலைவர் சோனியாவை சந்தித்திருக்கிறார்? தினம் ஒரு அறிக்கை விட்டு அதிமுக அரசை குறை சொல்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் மக்கள் பிரட்சைகளுக்காக?

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு கூட செவி மடுக்காத மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் மிக அதிகம். இதில் உச்ச கட்டம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றமே சொல்லியும், உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதத்தில் வெளியிடப் படும் என்று மத்திய அரசே வாக்குறுதி கொடுத்தும் இன்னும் நிறைவேற்ற தயங்குவது. இப்போது கர்நாடக இதனை வெளியிட மறுப்பு தெருவிப்பதும், மத்திய அரசே நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற செய்யும் சதி.

காங்கிரஸ் கட்சியின் எதிரியான பாஜக ஆளும் கர்நாடக மத்திய அரசால் பெற்ற நம்னைகளை விட திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் அதிகம். இதில் முக்கிய பங்கு கருணாவுக்கு தான். மறந்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பது இட்ட கட்டளை. நாளொன்றும் அதிமுக அரசை குறை சொல்லியே அறிக்கை விடும் கருணா மத்திய அரசின் துரோகம் மட்டும் கண்ணுக்கு தெரியாது. சோனியாவின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மட்டுமே தெரியும். இதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல நன்மை கிடைக்கும்.

வழக்கம் போல உள்ளூர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதில் சொல்லும் தமிழக மக்கள் பிரச்சனைகளின் மூலத்தை அறியாமல் மீண்டும் இந்த கூட்டத்தை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!!



2. இதுல அவமதிப்பு என்ன இருக்கு. ஒருவருக்கு எவ்வளவு நேரம் பேச அனுமதி என்பது ஏற்கன்வே முடிவு செய்த ஒன்றாகத்தானே இருக்கும்.
மற்ற முதல்வர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினார்கள். அதே 10 நிமிடம் தானே. பின்ன இதில் அவமதிப்பு எங்கிருந்து வந்ததோ?

ஏற்கனவே நான்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அதற்கு மத்திய அரசும், மு,க.வும் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்தவராயிற்றே, இவர் சொல்வதை நம்பலாமா?



3. அது ஒண்ணும் தமிழக சட்டசபையல்ல. நீங்கள் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி 45 சாய் கோணத்தில் நிற்க. மாநிலத்தின் தேவையறிந்து பேசி இருக்க வேண்டும் 10 நிமிடத்தில். மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்தானே உங்களுக்கும். அல்லது அனைவரையும் 1 மணி நேரம் பேசவிட்டு உங்களுக்கு மட்டும் 10 நிமிடம் கொடுத்து மணியடித்தார்களா?. நமது அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசை அண்டித்தான் பிழைக்க வேண்டும்.கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடி கறக்க வேண்டிய மாட்டை பாடி கறக்க வேண்டும்". நமக்கு தேவை பால். அதை பெற எதை செய்தால் என்ன? முறுக்கிட்டு திரிந்தால் 16 மணிநேர மின்வெட்டு 24 மணிநேரமாகிவிடும்.




4.
அழுதால் தான் பால்! உதாசீனம் செய்தால் பாழ் தான்!

தேசிய வளர்சிக்குழு கூட்டட்தில் நம் முதல்வர் அம்மா அவர்கள் கோவிச்சுகிட்டு வெளியேறினார். அங்க கிட்ட தட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட முதல்வர்கள் இருக்கும் நிலையில் பத்து நிமிடம் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும். இது நடைமுறை. பொதுவாக இது போன்ற கூட்டங்களுக்கு கலைஞர் போகும் போது தமிழக தேவைகளை ஒரு மணி நேர பேச்சாக தலைமைசெயலரை விட்டு ஒரு ட்ராப்ட் தயார் செய்து கொண்டு போவதும், பத்து நிமிடத்தில் அழகாய் தலைப்பு செய்திகளாக சொல்லி "இதன் மீதி விபரங்கள் இந்த பெட்டிஷனில் இருக்கு" என கூட்டத்தில் சமர்ப்பிப்பதும், அப்படி சமர்பிக்கும் போது அது "ரெக்கார்டட் டாகுமெண்டாக" ஆவதும் இயல்பு. இது ஒரு அப்பட்டமான புத்திசாலித்தனம்.

இந்த விபரங்கள் கூட தெரியாத அம்மையார் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு தமிழக தேவைகளை சொல்லாமல் அல்லது ரெக்கார்ட் செய்யாமல் வந்தமை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்! "அம்மா கோவக்காரங்க" என சொன்னா நமக்கு பெருமை இல்லை. அங்க வந்த பல முதல்வர்களும் "ஹய்யே, சரியான லூசா இருக்கே இந்தம்மா"ன்னு சக முதல்வர்களிடம் முனுமுனுத்து இருப்பர். இது ஒட்டுமொத்த தமிழர்களின் அவமானம்! இதைக்கூட "அம்மாவின் அதிரடி" என தினமலத்தில் நாளை போடுவானுங்க! "ஆமாம் ஆமாம்"னு இணைய போராளிகள் குதிப்பாங்க! பேசாம 21.12.2012ல உலகம் அழிஞ்சு தொலைச்சி இருக்கலாம்!



5. இது என்ன கூட்டம் என்று கூட தெரியாமல் பலர் கருத்து சொல்கிறார்கள். 10 நிமிட நேரம் என்கிற நடைமுறை இன்றைய கூட்டத்தில் மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டது. இதற்க்கு முன்னர் இதே கூட்டத்துக்கு முதல்வர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரம் 30 நிமிடங்கள். 5 ஆண்டுகளுக்காக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட கூட்டத்துக்கு 30 நிமிடம் கூட பேசாம என்ன திட்டம் போடப் போறாங்க? ஓர் ஆண்டுக்கு போடப் படும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாள் கணக்கில் நடைபெறும் பொது 5 ஆண்டு திட்டடக் கூட்டம் 10 நிமிடம் போதும்? 5 வருட செயல் திட்டம் பற்றி ஒரு மாநில முதல்வர் சொல்ல 10 நிமிடம் போதும் என்றால் இந்தக் கூட்டமே தேவை இல்லை. வழக்கம் போல இவர்கள் திட்டத்தை அறிக்கையாகவே வெளியிடலாம். தமிழகத்துக்கும் ஒன்னும் கிடைக்கப் போவது இல்லை.

வழக்கம் போல கருணாவின் துரோகத்துக்கு பதில் சொல்லாமல் ஜெயாவையே திட்டுவோம். அப்புறம் என்ன காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்து தமிழன் நீருக்கு கர்நாடகாவையும் உயிருக்கும் சிங்களனையும் எதிர்பாத்து இருக்கட்டும். உள்ளூரில் அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டு இணக்கமான மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறையை மிரட்டி வாங்குவோம்.
 
ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்! 
 
 இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்  ராஜீவ்சுக்லா,"தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில  முதலமைச்சருக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச  வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம்  செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும்,
 
காங்கிரஸ் அல்லாத மாநில  முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில  முதல்வர்கள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது.எனவே இதில்  எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்வர்கள், தங்கள்  மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இத்தகைய  கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல.  இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை" என்று கூறினார்.

டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்...தமிழகத்தில் இருக்கிறதா?: கருணாநிதி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டு,மேடை மற்றும் பந்தல் அகற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள   கருணாநிதி,தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி  கூறியதாவது:

திமுகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் - நாளை நடைபெறவுள்ள  தூத்துக்குடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டு தற்போது  அனுமதியை மறுத்து அமைக்கப்பட்ட மேடை, பந்தல்களைப் பிரிப்பதைப் பற்றி தங்கள்  கருத்து என்ன?
 
 
 
 
 
ஜெயலலிதா கட்சியினர் டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு,  அதற்காக அதை நம்பி போடப்பட்ட பந்தலை எல்லாம் அரசுக் காவலர்கள் பிரிக்கிறார்கள்.  இந்த ஜனநாயகவாதிகள் தான் மத்திய அரசைப் பற்றி குறை கூறுகிறார்கள்,  கண்டிக்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசின் பல தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? குறிப்பாக கேபிள்   டி.வி.க்கு உரிமம் தரவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?
 
  அதிலே ஏதாவது விவகாரங்கள் இருக்கலாம். உண்மை என்ன என்பது  பற்றி முழு விவரம் தெரியாமல் பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது: கருணாநிதி
Posted Date : 14:19 (27/12/2012)Last updated : 14:19 (27/12/2012)
சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார். 

டெல்லியில் 57 ஆவது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று காலை பிரதமர்  மன்மோகன் சிங் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பேச போதிய கால அவகாசம் வழங்கப்படாததை கண்டித்து தமிழக  முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.10 நிமிடங்களுக்கு மட்டுமே தம்மை பேச  அனுமதித்து,அதன் பின்னர் பேச்சை நிறுத்துவதற்கான மணியை ஒலிக்கச் செய்து தம்மை  மத்திய அரசு அவமதித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்  கருணாநிதியிடம் இது குறித்து கேட்டபோது,தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில்  ஜெயலலிதா கூறுவதுபோன்று அவமதிக்கப்பட்டிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.

பொதுவாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு 10  நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி மேலும்  கூறினார்.


நன்றி - விகடன்
+

Thursday, December 20, 2012

குஜராத்தில் மோடி கலக்கினார் , தமிழ் நாட்டில் ஜெ கலங்க வைத்தார்

http://lalitkumar.in/blog/wp-content/uploads/2011/09/narendra_modi.jpgகுஜராத்தில் பா.ஜ. முன்னிலை; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி
Posted Date : 07:33 (20/12/2012)Last updated : 12:33 (20/12/2012)
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இமச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால், ஆளும் பா.ஜனதா  ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

குஜராத் முன்னணி நிலவரம் 


பா.ஜ. க  - 115 ( 5 வெற்றி + 110 முன்னிலை)

காங்கிரஸ்  - 62 ( 3 வெற்றி + 59 முன்னிலை )

மற்றவை - 6    ( 3  வெற்றி + 3 முன்னிலை )


குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.


இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.


மோடி வெற்றி 


மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இமாச்சல் முன்னணி நிலவரம்:


காங்கிரஸ்   - 39  ( 13  வெற்றி +  26 முன்னிலை )

பா.ஜ.க.  - 24      (  7 வெற்றி + 17 முன்னிலை )

மற்றவை -  6   ( 1 வெற்றி + 5 முன்னிலை )




இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்க்ட்சி ஆட்சியை பிடிக்கிறது.  ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது.


முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில்,அக்கட்சி பா.ஜனதாவிடமிருந்து  ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின்  பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை  தேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி  இருந்தது.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில்  பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க.  வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை  பெற்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும்.பகல் 12  மணி அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி  அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 13 வெற்றி பெற்றும், 26 தொகுதிகளில்  முன்னிலை பெற்றும் காணப்பட்டது.இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி  அமைக்கிறது.

பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றும், 17 இடங்களில் முன்னிலை பெற்றும்,  மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெற்றும், 5 இடங்களில் முன்னிலை பெற்றும்  காணப்பட்டன.


திடீர் சாலை மறியலுக்கு தடை; குண்டர் சட்டத்திலும் திருத்தம்! 
Posted Date : 07:42 (20/12/2012)Last updated : 07:42 (20/12/2012)
சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும், 30 நாளுக்கு முன்பே அனுமதி பெறாமல் நடத்தப்படும் சாலை மறியல் தடை செய்யப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நேற்று முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில்,"குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்.

மேலும், சைபர் குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

சாலை மறியலுக்கு 30 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும்" என்றார்.


புதிய திட்டங்கள் 
மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ரூ.20 கோடியில் 4 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் செறிவு துளைகள் அமைக்கப்படும். மேலும், முத்துப்பேட்டை சூழலியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.

இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோருக்கு அதன் பராமரிப்புகள் குறித்து இப்போது ஒரு நாள் மட்டுமே பயிற்சி  அளிக்கப்படுகிறது. இனி, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். கரூர் அரசு மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், ராமநாதபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநல மருத்துவமனையும் ஏற்படுத்தப்படும்.

பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியாக நெடுஞ்சாலைகள் கோட்டம் உருவாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரிவுகளை உள்ளடக்கிய பூங்காக்களை அமைப்பதற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படும். குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு மீட்டர் வரை மேற்கொள்ளப்பட்டன.

அவற்றை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தருமபுரி மாவட்ட கிரிமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும். அங்கு சூரிய மின்சக்தி பூங்காவும், மிகப்பெரிய மின் உற்பத்தித் திட்டமும், மீன்களைப் பதப்படுத்தும் பூங்காக்களும் அமைக்கப்படும்.

தருமபுரிக்கு கூடுதல் கவனம்: இனக் கலவரங்களால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நக்சல் பாதிப்புகள் அதிகமுள்ள 32 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ரூ.7 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் மாதமொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்: திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாதத்துக்கு ஒருமுறையாவது மூத்த அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டம் இப்போது ஏறத்தாழ நடைபெறுவதே இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு மாதமும் துறைத் தலைவர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும்.

அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி

தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

விடியோ கான்பரன்ஸ் வசதியை புதிதாக 60 இடங்களில் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே 11 இடங்களில் உள்ள அமைப்புகளும் புதுப்பிக்கப்படும்.

புழல் சிறையில் ரூ.3 கோடியில் சூரிய மின்சக்தி அமைப்பு அமைக்கப்படும். அதேபோல், புழல், வேலூர், கடலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளில் ரூ.25 லட்சத்தில் பைகளை சோதனையிடும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்றார்.
நன்றி - விகடன் 


மக்கள் கருத்து 

1. உடன்பிறப்பே, ஒரு மதவாத கட்சி குஜராத்தில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி .... திரு. மோடி என் நெடுங்கால நண்பர் ... அவர் தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றது கேட்டு இதயம் இனிக்கிறது ... கண்கள் பனிக்கிறது .... இப்படி நடக்கபோவதை நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்திலேயே கணித்து கூறினேன் ... நேற்று இரவே நான் நண்பர் மோடியிடம் தொலைபேசியில் என் வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துவிட்டேன் .... அவரும் நன்றி தெரிவித்தார் ... எங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .... மோடியின் அப்பாவும் நானும் "காந்தியின் உப்பு சத்தியாக்ரகம்" தண்டியில் நடந்தபோது சந்தித்து அளவலாவியதை நினைவு கூர்ந்தார் .
.. வழியில் ஒரு உடுப்பி ஓட்டலில் 2 இட்லி 1 மசால் வடை நான் மோடியின் அப்பாவுக்கு கடனாக வாங்கி கொடுத்ததையும் அதை ஒரு இத்தாலிய வெள்ளை காகம் பறித்து சென்றதையும் அன்னாருக்கு நான் நினைவுபடுத்தினேன் ... இன்னும் சொல்லப்போனால் 2014 தேர்தலில் அவர் தான் பிஜேபியின் பிரதமர் வேட்ப்பாளராக நிற்க வேண்டும் என்ற என் அவாவை அவரிடம் தெரிவித்தேன் ..... அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் .... மேற்படி சம்பவங்கள் மோடி என் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் நடைபெற்றனவே அன்றி நாம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அல்ல என்பதை தம்பிக்கு இக்கடிதம் மூலம் நான் தெரிவித்து கொள்கிறேன். -
எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
2.  முதலில் கீழ் கண்ட புள்ளிவிவரங்களை காணுங்கள், பிறகு குஜராத்தில் மோடியின் வெற்றி எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (1) எல்லா அரசுக்கும் உரிய ANTI -INCUMBENT எதிர்ப்பு வாக்குகளை மீறி மூன்றாவது முறையாக மோடி வெற்றி கோடி நாட்டியது. தொடர்ந்து மூன்று முறையும் 1995 இல் இருந்து பிஜேபி ஆட்சிசெய்து வருவதும் சாதாரண விஷயம் இல்லை. ஜோதி பாசு தான் இதற்கு முன் தொடர்ந்து ஜெயித்து வந்தார். அதனை பாராட்டியே ஆகா வேண்டும் (2) இது நம்ம ரத்த காட்டேரிக்கு. தேர்தல் நிலவரங்களை கவனிக்கும் போது (குறிப்பாக TIMES NOW TV LIVE COVERAGE ) பெரு வாரியான முஸ்லிம்கள் மோடிக்கு (பிஜேபி) வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களிலும் கோத்ரா கலவரம் நடந்த இடத்திலும் பிஜேபி வென்றுள்ளது. மேலும் காங்கிரசின் ஆதிவாசிகள் வாக்குகளை இந்த முறை மோடி சுரண்டிவிட்டார். 
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் வளர்ச்சிக்கு வோட்டளித்து மதவெறி, சாதிவெறிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள். (3) 2007 தேர்தலை விட இந்த தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் 1.5% அதிகம். காங்கிரசுக்கும் பிஜேபிகும் வித்யாசம் 13%. பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மட்டும் 50% மேல். இது ஒரு மிக பெரிய வெற்றி. ஏனென்றால் கேசு பாய் படேலும் பிஜேபி யின் வாக்குகளை சற்று ருசித்தார். (4) காங்கிரஸ் தன்னுடைய புராதன ஸ்ட்ராங் ஹோல்டான மத்திய குஜராத்தை தற்போது பிஜேபி இடம் இழந்துள்ளது. 
ஆனந்த ரீஜனில் சங்கர் சிங் வகேலா போட்டி இடுவதால் சற்று அந்த ரீஜனில் தலை தூக்கியுள்ளது. (5) பிஜேபி தன்னுடைய ஸ்ட்ராங் ஹோல்டான நகரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு குஜராத் வரையிலான எல்லா நகரங்களையும் அது தக்க வைத்துள்ளது. எண்ணிக்கையில் காங்கிரஸ் சற்று முன்னேறினாலும் உண்மையில் இது வெற்றி இல்லை. 
3.பல மாநில முதல்வர்கள் செய்ய முடியாத சாதனையை மோடி அவர்கள் செய்துள்ளார். மூன்றாவது முறை அவர் வெற்றி பெறுவது இந்தியாவில் முதல் முறை நடக்கும் நிகழ்வு அல்ல. ஆனால்,அவரது வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியை இப்போதே பல ஊடகங்கள் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு என்ற அளவில் வெற்றி பெறுகிறார். 
ஆனாலும், அவர் தோல்வி அடைந்தது போலவே இப்போது பேசக் கிளம்பி விட்டனர். மத்திய அரசு தனக்குத் தேவையான குறைந்த பட்சப் பெரும்பான்மை இல்லாமல், சில பல கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து, மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசின் அல்லக்கை ஊடகங்கள் பா.ஜ.க.வின் வெற்றியை தோல்வியாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. வெற்றி எப்போதும் வெற்றிதான். அதில் மோடிக்கு மட்டும் தனி அளவுகோலா? ஹிமாச்சலில் பா.ஜ.க. தோல்வி வருத்தம் அளிக்கிறது. அங்கு, முதல்வராக வர இருப்பவர் மீது பல ஊழல் புகார்கள். நிலக்கரி ஊழலில் அவர் பெயர் அடிபடுகிறது. ஆகவே, முதல்வராக வர தகுதியானவர். 
4. இது Brand அம்பாசிடர் " மோடி " என்ற பெயருக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி... இங்கே மோடி தான் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் நடந்திருக்கிறது.. நன்றி... ஆனால் பிஜேபி க்கு எந்தவித லாபமும் தனிப்பட்ட முறையில் இல்லை ( மோடியின் லாபம் BJP இன் லாபம் குஜராத்தில் மட்டுமே ), BJP யின் செல்வாக்கு எந்த விதத்திலும் உயரவில்லை என்பதும் ஹிமாச்சல் முடிவுகளில் இருந்து தெரிகிறது, காங்கிரஸ் ஜெயிப்பது நல்லதில்லை என்பது எனது எண்ணம். அதே சமயத்தில்... 
பிரதமர் வேட்பாளராக மோடியை " Project " செய்தால் ஓரளவுக்கு பயன்தரலாம்... ஆனால் பெருமளவு பயன்தருமா என்று தெரியவில்லை.. எனினும்.. இப்போதே.. இந்த வெற்றியின் சூடோடு சூடாக.. இவரை அறிவித்தால் ஓரளவுக்கு... வாக்குகளை கவரமுடியும்..காங்கின் இலவச மாய வலையிலிருந்து ஓரளவுக்காவது மீட்க முடியும். இல்லை என்றால் பழைய குடுடி கதவை திறடி என்ற கதையாக.. மாநில கட்சிகளின் கலவையாக.. காங்கிரஸ் கட்சியே மீண்டும் அரியணை ஏறும்.. தம்பி ராகுல் தலைமையில்... அன்னை சோனியாவின் ஆசியோடும். அன்னம் ப சி இன் ஆலோசனையோடும்... ஆட்சியில் அமர்ந்து.. நாடு உருப்படாமல் போகும். 
5. இந்த இரு மாநிலங்களின் தேர்தல் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகிறது, மக்கள் 2ஜி ஊழலை திமுகவின் ஊழலாக பார்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தோல்வியும் ஹிமாசப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளும் அதிக சீட்டும் கொடுத்துள்ளனர். இத்தனை ஊழலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கூடுகிறது என்றால் அது ஆச்சரியமான விசயமே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்..
. தமிழகத்தை பொருத்த வரையில் திமுக காங்கிரஸ் தேமுதிக கூட்டனி மிக வலுவான கூட்டனி. அதிமுக கூட்டனி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் தோல்வி வரும். அதனால் அதிமுக பிஜேபியோடு கூட்டனி வைத்து தேர்தலில் நின்றால் அது வலுவான கூட்டனியாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், மாநில கட்சிகளுக்கு அல்ல. தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி எனக்கு பிடித்துள்ளது, சென்ற ஆட்சியை விட நிச்சயம் அம்மாவின் ஆட்சி நன்றாகவே உள்ளது.... 
இரண்டு விசயம் தான் உறுத்தலாக உள்ளது. விடுதலை புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தடுக்காமல் இருப்பது மற்றும் கூடங்குளம் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது. திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது, என் மனமார்ந்த வாழ்த்துகள்... 
6. குஜராத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த மாநிலத்தேர்தலை காங்கிரஸ் பிஜேபி கட்சிகளுக்கிடையேயான தேர்தலாகவோ அல்லது குஜராத் மக்களுக்கு நன்மை அதிகமாக யார் செய்வது என்றோ அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் அதிகம் மோடி என்ற தனி மனிதரைத்தூற்ற முடியும் என்று பட்டி மன்றம் தான் நடத்தியது. இதற்கு ராகுல் காந்தி சிறப்பு தலைவராக சொக்கவைக்கும் சோனியாவால் நிர்ணயிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளின்படி பிஜேபிக்கு வெற்றியா அல்லது திரு. நரேந்திர மோடிக்கு வெற்றியா என்பதைவிட சோனியா மற்றும் ராகுல் கம்பெனிக்கு வெட்கக்கேடான தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
 தேர்தல் நேரத்தில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அறிவிப்பு, (ஓட்டுக்காக) பணம் நேரடியாக வங்கியில் டெபாசிட் ஆகியவை எதுவும் எடுபடவில்லை. யாருய்யா அங்கே, நான் தினமலரு அன்வர் பாய் கூட போன்ல பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால, நரேந்திர மோடி எனது ஐம்பதாண்டு கால நண்பர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை, என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வாருதுன்னு கோபாலபுரத்துலேந்து பேசறது.? 
நன்றி - விகடன் , தினமலர்


Gujarat voted for development and Narendra Modi's leadership: Nitin Gadkari



New DelhiBJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.

He said it was a vote for "development and Mr Modi's leadership."

"The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said

"People have voted for the BJP for the fifth time and Narendra bhai's leadership for a 3rd time," he added.

Narendra Modi will be Chief Minister of Gujarat for a third straight term. Projections based on leads at 01.30 pm show Mr Modi likely to end the day at 123 seats, six  more than last time and enough to make his party state that his "vibrant Gujarat" plank worked despite the Congress' best effort to discredit him.
 
 
THANX - NDTV

Wednesday, November 07, 2012

முரசு சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஜெ வின் மாஸ்டர் பிளான்

திகைப்பில் தே.மு.தி..

மூழ்குகிறதா கேப்டன் ஷிப்!

ப்ரியன்

‘கல்கி’ 7.10.12 இதழ்பாலிடிக்ஸ் பஜார்பகுதியில்கேப்டனுக்கு பை...பை...’ என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்ஒன்பது தே.மு.தி.. எம்.எல்..க்கள் ...தி.மு..வில் சேருவது குறித்து ஊசலாட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களை ராஜினாமா செய்துவிட்டு வருமாறு ஜெயலலிதா சொல்வதாகவும்குறிப்பிட்டிருந்தோம்.  


அதைத் தொடர்ந்து ஒரு தே.மு.தி.. எம்.எல்.. நம்முடன் தொடர்பு கொண்டார். மீடியா ஜெயலலிதா கட்டளைப்படி தே.மு.தி..வைப் பிளக்கும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அந்தச் செய்தியில் உண்மையில்லை," என்றார். சரியாக அடுத்த பதினைந்து நாட்களுக்குள் நான்கு தே.மு.தி.. எம்.எல். .க்கள்தொகுதி நலன்என்பதை முன்னிறுத்தி ஜெயலலிதாவைச் சந்திக்க, தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. விஜயகாந்த் தரப்பு பதறிப் போனது.


சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரடி மோதல் ஏற்பட்டது. ‘உன்னாலே நான் ஜெயித்தேனா; என்னால நீ ஜெயித்தாயா?’ என்ற பிரச்னைதான். அதற்கு சில நாட்கள் முன் பிருந்தே தே.மு.தி.. எம்.எல். .க்கள் ஒரு விரக்தியாகத்தான் இருந்தார்கள்


 முதல் காரணம் .தி.மு..- தே.மு.தி.. நெருக்கம் அடிபட்டவுடன், தொகுதியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் அன்னியர்களாகிவிட்டனர். அரசின் எல்லா மட்டங்களிலும் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, தே.மு.தி.. எம்.எல்..க்களை ஒரு பொருட்டாக யாரும் மதிக்கவில்லை. அதே சமயம் கட்சிக்குள்ளும் புகைந்து கொண்டிருந்தது. சென்ற பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளின் பதவிகள் பிடுங்கப்பட்டு, கட்சி தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கட்சித் தேர்தலில் மாவட்ட அளவில் சுதந்திரமாக நடத்துவதற்கு மாறாக மேலிடத்திலிருந்து ஆட்கள் திணிக்கப்பட்டனர். ‘இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று ஆணை வந்தது. கேப்டனின் மச்சினர் சுதீஷ் வழிகாட்டுதல்படி சந்திரகுமார், பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு கட்சியில் எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே எரிச்சலில் இருந்தார்கள் எம்.எல்..க்கள்


 ஒரு பக்கம் அரசின் ஆதரவு இல்லாமல் எந்தவளர்ச்சிப் பணிகளும்செய்ய முடியாத நிலை; மற்றொரு பக்கம் கட்சியில் அரங்கேறிய சர்வாதிகாரம்," என்று புட்டு வைத்தார் ஒரு தே.மு.தி.. எம்.எல்.. தவிர அடிக்கடி எம்.எல்..க்களை ஒருமையில் திட்டுவதும், அடிக்க வருவதுமான சில நிகழ்ச்சிகள். பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவஸ்தர்களின் யோசனைகளுக்கு செவிசாய்க்காத நிலை.

இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொண்ட .தி.மு.. காய்களை நகர்த்தத் தொடங்கியது. ஜாதிச் சங்கத் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், ஏன் அமைச்சரவையிலேயே மிகவும் சீனியர் அமைச்சர் உட்பட எங்கள் எம்.எல்..க்களுக்கு வலை வீசத் தொடங்கினார்கள்


 அவர்களின் நோக்கம் இரண்டு. ஒன்று: எம்.எல்..க்களை இழந்து விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பறிப்பது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் தே.மு.தி.. தரப்பிலிருந்து யாரையும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையை உருவாக்குவது. இப்போது நான்கு எம்.எல்..க்கள்தான் வெளிப்படையாக வந்திருக்கிறார்கள். இன்னமும் அரை டஜன் எம்.எல்..க்கள் பாதை மாறி பயணம் செய்ய இருக்கிறோம்," என்கிறார் ஊசலாட்டத்தில் இருக்கும் ஒரு எம்.எல்.. எங்களை தார்மிக ரீதியாக கேள்வி கேட்க முடியாத நிலையில்தான் விஜயகாந்த் இருக்கிறார்," என்றார் அவர். தே.மு.தி.. விலிருந்து எம்.எல்..க்களை இழுப்பது தேவையற்ற வேலை என்ற கருத்தும் .தி. மு..வில் இருக்கிறது. விஜயகாந்துக்கு அனுதாபம் வரும்," என்கிறார் ஒரு ஆளும் கட்சி பிரமுகர்.



இப்போது வெளிப்படையாக வந்த சில எம்.எல்..க்களுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக திட்டக்குடி எம்.எல்..தமிழரசன் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. மதுரைத் தொகுதி சுந்தர்ராஜன் விஜயகாந்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். தவிர, தே.மு.தி..வின் பொருளாளர். பல சொத்துக்கள் இவர் பெயரில் வாங்கப்பட்டதாம். ஆனால் சமீப காலங்களில் இவர் ஊசலாடுவதால் இவர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மாற்றி எழுதப்பட்டதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தொடர்ந்து கட்சியில் நீடிக்க முடியாது என்று காய்களை நகர்த்தினாராம் அவர்.

வீட்டைக் காலி செய்யும்போது உரிமையானவர்களுக்குச் சொந்தமானதை விட்டுச் செல்ல வேண்டும்," என்று தே.மு.தி.. எம்.எல்.. சந்திரகுமார் கட்சி மாறப்போகும் எம்.எல்..க்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டுமாம். ஆனால் அதற்குப் பதிலடியாக சுந்தர்ராஜன், .தி.மு.. தயவில் வென்றதால் நாம் அனைவருமே ராஜினாமா செய்வோம்" என்று சொல்லியிருக்கிறார்.


 கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது குறிப்பிட்ட கட்சியால்தான் வென்றோம் என்று சொல்வது சரியல்ல; 2006 முதல் இன்றுவரை பார்த்தால் தே.மு.தி..வுக்கென்று எட்டு முதல் பன்னிரண்டு சதவிகிதம் வோட்டுக்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே பல .தி.மு.. எம்.எல்..க்களும் வெற்றிபெற தே.மு.தி.. செல்வாக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.


தே.மு.தி..வின் ஆதரவு தளத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம். நடிகர் விஜயகாந்தின் ரசிகனாக இருந்தவர்கள், இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்று ஆதரித்தவர்கள்; ஜெயலலிதா தலைமையை ஏற்காத எம்.ஜி.ஆர். தொண்டர்கள். ‘கடவுளிடமும் மக்களிடமும் தான் கூட்டணிஎன்று சொல்லி வந்தவர், .தி.மு. .வுடன் கூட்டணி அமைத்தவுடன், ‘கழகங்கள் வேண்டாம்என்ற நிலைப்பாட்டில் விஜயகாந்த்தை ஆதரித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். அடுத்து விஜயகாந்திடம் கொஞ்சமாக இருக்கும் எம்.ஜி.ஆர். வோட்டு வங்கியைப் பிடுங்கும் விதமாகத் தான் அவரை தி.மு..வை நோக்கித் தள்ளுகிறார் ஜெயலலிதா.



 தனியாக நின்று பல தோல்விகளைச் சந்தித்த நிலையில் அரசியலில்மிதக்கவேண்டுமென்றால் பதவிகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டுதான் .தி.மு..வுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அவர் தனியாக நின்று வோட்டைப் பிரிப்பது நல்லது என்றே இரு கழகங்களும் எண்ணி வந்தன. ஒரு கழகத்தோடு கூட்டணி அமைத்த நிலையில் மற்றொரு கழகத்தோடும் கூட்டணி அமைப்பதில் விஜயகாந்துக்கு இனி எந்தத் தயக்கமும் இருக்காது. தனியாக நின்று வோட்டுக்களைப் பிரித்தாலும் சரி, தி.மு..வோடு கூட்டணி அமைத்தாலும் சரி, தமக்கு ஆதாயம் என்றே ஜெயலலிதா இப்போது கருதுவதாகத் தெரிகிறது.



இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமதுவீட்டைசரி செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் விஜயகாந்த். முதலில் அவர் விட வேண்டியது முன்கோபம். தமது வேட்பாளரையே அடிப்பது, எம்.எல்..க்களை, தொண்டர்களைத் திட்டுவது, தேர்தல் பிரசாரத்தில் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்று விஜயகாந்த்தமக்கெனஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இது நடுநிலை மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.


விஜயகாந்தை குமுறவும், கொந்தளிக்க வைப்பதும் மிகச் சுலபம். கட்சித் தொடங்கி இது எட்டாவது வருடம். முதல் நான்கைந்து வருடங்களில் தொண்டர்களோடு நன்கு பழகி வந்தார். கிராமத்தில் இருந்த சில தொண்டர்களைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. இதற்குக் காரணம் மறைந்த பொதுச் செயலாளர் ராமு வசந்தன். கேப்டனின் ரசிகர்களையும் கேப்டனையும் ஒருங்கே இணைத்து கட்சிக் கட்டமைப்பை நன்கு வைத்துக் கொண்டிருக்க உதவியாக இருந்தார்.



 ஆனால் அவர் மறைந்த பிறகு குடும்பம் முன்னணிக்கு வந்தது. அதனால் பல பிரச்னைகள். அண்ணியார் (பிரேமலதா) பிரசாரம் கட்சிக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் மச்சினரைப் போல அவரும் ஒரு அதிகார மையமாக உருவானார். நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது கேப்டனின் கப்பலில் ஓட்டை விழுந்திருப்பது தெரிகிறது.


 கொள்கை அடிப்படையில் விஜயகாந்தைத் தலைவராக ஏற்றுக் கொண்டு தொடரும் சூழல் இல்லை. அவரது பெரும்பான்மை ஆதரவு தளமான ரசிகர்களின் எண்ணிக்கையும் இனி வளரப் போவதில்லை. காரணம் திரையுலகம் அவர் கையை விட்டுப் போய்விட்டது. இந்த நிலையில் தே.மு.தி.. கப்பலில் விழுந்த ஓட்டை இன்னமும் பெரிதாகும் வாய்ப்பே அதிகம்," என்றார் ஊசலாட்டத்தில் உள்ள மற்றொரு எம்.எல்..




தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களின்போது வெளியே சென்று அவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்யாமல், கட்சி அலுவலகத்திலேயே படத்துக்கு மாலை போட்டு, தன்னை சுருக்கிக் கொண்டார்.


அரசியல் ரீதியாகப் பார்த்தால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மட்டும் தமது நெருக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.., தே.மு.தி.., காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் என்ற அணி உருவாக நல்ல வாய்ப்பு இருப்பதாகவே இப்போதைய சூழலில் கருதப்படுகிறது



 இந்த வலுவான கூட்டணியை எதிர்க்க தன்னுடன், .தி.மு.., பா..., சி.பி.. ஆகியோரைச் சேர்த்துக் கொள்வார் ஜெயலலிதா. பலமான கூட்டணி காரணமாக விஜயகாந்த் நாடாளுமன்றத்தில் ஒரு சில இடங்களைப் பிடித்தாலும் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது தமது செயல்பாடுகளையும், யுக்திகளையும் புத்திசாலித்தனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் அவர் இருக்கிறார் என்பதே யதார்த்தநிலை.  



அந்தச் சூழலில் எதிர்காலத்தில் தி.மு..வை ஓரங்கட்டிவிட்டு, உண்மையான எதிர்க்கட்சியாக வர விஜயகாந்துக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நன்றாகத் திட்டமிட்டு, அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அவர் செயல்படுவாரேயானால், இப்போது அவருக்கு இருக்கும் உச்சபட்சமான ஆதரவு தளம் பன்னிரண்டு சதவிகிதத்துக்கும் மேலே உயரவும் கூட வாய்ப்பு உண்டு.

நன்றி - கல்கி  


சி.பி - புரட்சித்தலைவியின் பிளான் என்னன்னா கேப்டன் கட்சில இருக்கும் 10 எம் எல் ஏக்களை இழுத்து நாங்க தான் உண்மையான தேமுதிக அப்டினு கோர்ட்ல கேஸ் போட வைப்பது. விசாரணை முடியும் வரை சின்னம் முடக்கப்படும்