Showing posts with label சினிமா.அரசியல்.நகைச்சுவை. Show all posts
Showing posts with label சினிமா.அரசியல்.நகைச்சுவை. Show all posts

Tuesday, September 28, 2010

அரசியல்வாதிகளின் அலப்பறையும்,சினிமாக்காரர்களின் சிரிப்புரையும்

1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


 நையாண்டி நாரதர் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?



2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நையாண்டி நாரதர் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

நையாண்டி நாரதர் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

 நையாண்டி நாரதர் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.





5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

 நையாண்டி நாரதர் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)




6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


 நையாண்டி நாரதர் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?



7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா




நையாண்டி நாரதர்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.

Thursday, September 23, 2010

காந்தி தேசமே.........!?


 காந்தி பிறந்த மண் இது.தேனாறும்,பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை,மக்கள் பட்டினி இல்லாமல் இருந்தாலே போதும் எனும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் நம் அரசியல்வாதிகள் அவர்கள் சுயநலத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர மக்கள் நலத்தை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பத்திரிக்கைகளில் அவர்களது கூற்றும்,அடிக்கும் கூத்தும்,




காங்கிரஸ் எம்.எல்.ஏ., விடியல் சேகர்: திருப்பூர் சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு ஒதுக்கிய 200 கோடி ரூபாயை பயன்படுத்த, மாநில அரசு திட்டம் வகுக்கவில்லை. மத்திய அரசு ஆய்வு செய்ய ஒதுக்கிய ஐந்து கோடி ரூபாயை பயன்படுத்தி, திட்ட விளக்க அறிக்கை தயாரிக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு பங்குத் தொகையையும் ஒதுக்கவில்லை.


நக்கலிஸ்ட் நாரதர் - அந்தத்திட்டத்துக்கு ஒதுக்கலைன்னா என்ன,அவங்க பர்சனலா ஒரு தொகை ஒதுக்கி இருக்க மாட்டாங்க?


முதல்வர் கருணாநிதி: ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகைகளை படிப்பதற்கே கை நடுங்குகிறது. செய்தியைப் படிக்கிறபோது, இத்தனை பேர் இறந்தனர், இத்தனை பேர் கொல்லப்பட்டனர், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்லப்படுகிற, காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது.


நக்கலிஸ்ட் நாரதர் - அப்போ இலங்கை காஷ்மீரை விட தூரம்னு சொல்றீங்களா?சொந்தப்பொண்டாட்டிக்கு சீக்காம்,பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி உடம்பு தேக்காம்



தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், அந்த துறை சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கக் கூடாது என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை.

 நக்கலிஸ்ட் நாரதர் - நம்ம அரசியல்வாதிகள் எதை ஃபாலோ பண்றாங்களோ இல்லையோ முறைகேடு எப்படி பண்ணலாம்கறதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுவாங்க.



அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு: தமிழக அரசியலில் கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து பேச வேண்டும்.

நக்கலிஸ்ட் நாரதர் -அது எப்படி முடியும்?அவரு கொட நாடே கதினு இருக்கார்,இவர் தமிழ்நாடே நம்ம குடும்பத்துக்குனு கனவு காண்கறார்.

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, "தமாஷ்' பேச்சு: கருணாநிதியும், ஜெயலலிதாவும் வன்னியர்கள் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இந்த சமூகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்றால் அன்புமணி முதல்வராக வேண்டும்.

நக்கலிஸ்ட் நாரதர் - இந்த சமூகம்னு நீங்க சொல்றது டாக்டர் ராம்தாஸ் குடும்பம்தானே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: மற்ற கட்சிகளில் தேர்தலின் போது மட்டுமே இளைஞர்களை எப்படி பயன்படுத்த முடியும் என்று யோசிக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அந்த இளைஞர்களை வேலை வாய்ப்பு, கல்வி மட்டுமின்றி, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்து சக்தியாக பார்க்கிறது.

நக்கலிஸ்ட் நாரதர் - உங்களுக்கு அரசியல் பரீட்சைல பாஸ்மார்க் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: தி.மு.க., அரசின் செயல்களை கம்யூனிஸ்டுகள் விமர்சித்தால், முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

நக்கலிஸ்ட் நாரதர் - மக்கள் மாற்றத்தை விரும்பறாங்க,ஓகே,எந்த மாற்றம் வந்தாலும் அது பொது ஜனத்துக்கு ஏமாற்றமா போயிடுதே?

பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: பா.ஜ., சொந்த பலத்தில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பும் அளவு சக்தி படைத்துள்ளது. கூட்டணி குறித்து தி.மு.க., பேச வந்தாலும், பா.ஜ., தயாரில்லை.

நக்கலிஸ்ட் நாரதர் - பந்திலயே உக்காரவேணாம்னு சொல்றாங்களாம்,இலை ஓட்டைனு சொன்னானாம்

மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேட்டி: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 10 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது, 13 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நக்கலிஸ்ட் நாரதர் - அண்ணே ,ஆப்பிரிக்காவைத்தான் இருண்ட கண்டம்னு சொல்வாங்க,உங்களை தொடர்ந்து மின் வாரியத்துல விட்டு வெச்சா தமிழகத்துக்கு அந்தப்பேரை வாங்கிக்குடுத்துடுவீங்க போலிருக்கே? 

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை, வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி செய்ய வேண்டும். சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடு தான்.

நக்கலிஸ்ட் நாரதர் - டாக்டர் அய்யா,2011 ல உங்க கட்சிக்கு எந்தக்கூட்டணிலயும் இட ஒதுக்கீடு கிடைக்கறமாதிரி தெரியலையே,என்ன் பண்ணப்போறீங்க?

Wednesday, September 22, 2010

விஜய்- அதிர்ச்சி தரும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்

1.இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.

விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ்  
( நண்பன் )படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?

---------------------------------

2.டைரக்டர் - படத்துக்கு கதை என்னனு முடிவு பண்ணியாச்சு.

விஜய் - முதல்ல டைட்டிலை முடிவு பண்ணுங்க சார்,என் படத்துல யாரும் கதையை எதிர்பார்க்க மாட்டாங்க.

------------------------------

3.விஜய் - தீபாவளிக்குள்ள என் படம் ரிலீஸ் ஆகிடுமா?

புரொடியூசர் - அது தாராளமா ரிலீஸ் ஆகிடும்,ஆனா படம் ரிலீஸ் ஆனதும் வெட்டு,குத்துனு கலவரம் ஆகி நீங்கதான் உள்ளே போயிடுவீங்கனு நினைக்கிறேன்.

---------------------------

4.விஜய் - அப்பா,அந்த புரொடியூசரை பகைச்சுக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?இப்போ பாருங்க,பட போஸ்டர்ல உலக சினிமா வரலாற்றிலேயே  முதன் முதலாக 5 மெகா ஃபிளாப் குடுத்த விஜய் நடிக்கும்னு பட விளம்பரம் குடுத்திருக்கறதை...

-------------------------------







5. விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?


----------------------------


6.அரட்டை அரங்கம் விசு விஜயை ஹீரோவா போட்டு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?

காவலன் அவன் கேவலன்

--------------------------

7.ஷங்கர் சார்,3 இடியட்ஸ்  படத்தை ரீமேக் பண்ணப்போறீங்களாமே,ஹீரோஸ் யாருனு முடிவு பண்ணீட்டீங்களா?

ஒரு இடியட் மட்டும் இப்போதைக்கு முடிவாகி இருக்கு.(கமிட் ஆகி இருக்கு)


-------------------------

8.விஜய் - டைரக்டர் சார்,இந்தப்படத்துல நான் அரசியல்ல இறங்கற மாதிரி பாலிடிக்ஸ் பஞ்ச் டயலாக்ஸ் பேசி இருந்தேன்,ஏன் கட் பண்ணீட்டீங்க?

டைரக்டர் - இது சீரியஸ் படம்,இதுல காமெடி பண்றதுக்கு இடம் இல்லை.

----------------------------

9.எஸ்.ஏ.சந்திரசேகர் சார்,உங்க பையனை வெச்சு ஒரு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?

எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?அவ்வளவு ரிஸ்க் எடுக்க,வேற புரொடியூசரா சிக்காம இருக்காங்க?


----------------


10..விஜய் - 5 படங்கள் தொடர்ந்து ஊத்திக்குச்சு,6வது படமும் ஃபிளாப் ஆனா என் எதிர்காலம் என்னாகும்?100 படத்தை நான் டச் பண்ண முடியுமா?

விடுங்க .6வது படமும் ஃபிளாப் ஆனா ஆறுலயும் சாவு,நூறுலயும் சாவு அப்படினு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.,

------------------------

Tuesday, September 21, 2010

நகைச்சுவை சரவெடி

1.இந்த வாரத்தின் சிறந்த ஆஃபாயில் ஆறுமுகம் விருது தினகரன் நாளிதழுக்கு
எந்திரன் படம் சென்சாரில் யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியதைக்கூட அரைப்பக்க மேட்டர் ஆக்கி வெளியிட்டமைக்காக.


2 இந்த வாரத்தின் சிறந்த அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது நயன்தாராவிற்கு,100 நாள் ஓட வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தனது
மோசமான தோற்றத்தால் 75 நாள் படம் ஆக்கியதற்காக.

3.இந்த வாரத்தின் சிறந்த சோலை புஷ்பங்களே சோப்ராஜ் விருது பிரபு
தேவாவுக்கு,நயன் தாரா பாலைவனத்தில் தெரிந்த சோலை என பேட்டி கொடுத்ததற்காக,(இதே மாதிரி ரம்லத் யாரையாவது கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?)

4. இந்த வாரத்தின் சிறந்த தள்ளுமுள்ளு தங்கராஜ் விருது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லுக்கு,மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுசில்குமாருடன் ஃபோட்டோ எடுக்கையில் சுசிலின் பயிற்சியாளர் சத்பல்சிங்கை தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏழைஜாதி ஏகாம்பரம் விருது அமைச்சர் ஆ ராசாவிற்கு,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பு பற்றிய விசாரணையில் ரூ 88 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாக புரூடா விட்டதற்கு. ( அந்த 1000 கோடியை என்ன தான் பண்ணுனீங்க?)

6. இந்த வாரத்தின் சிறந்த ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம் விருது பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கிற்கு,ஏழைகளுக்கு உணவுக்கிடங்கில் வீணாகும் அரிசியை இலவசமாகத்தரமுடியாது என சட்டம் பேசியதற்காக.

7. இந்த வாரத்தின் சிறந்த செல்ஃபோன் செல்லமுத்து விருது  ராகவேந்திரருக்கு,நடிகை சினேகாவிற்கு செல்ஃபோனில் தினம் 50 மிஸ்டுகால்,75 ஆபாச எஸ் எம் எஸ் என மானாவாரியாக அனுப்பியதற்கு.

8. இந்த வாரத்தின் சிறந்த வள்ளுவருக்கேற்ற வாழ்க்கைத்துணைவி வாசுகி விருது நடிகை சீதாவிற்கு,டி வி நடிகர் சதிஷை 2ம் திருமணம் செய்துகொண்டு
ஆர் பார்த்திபனையும்,குழந்தைகளையும் பரிதவிக்க விட்டமைக்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த ரெட்டை வால் கழுதை ரெங்குடு விருது  எ .வ. வேலுவிற்கு,திருச்சியில் நடந்த கட்சி மீட்டிங்கில் ஜெவை குட்டிசுவர் என அநாகரீகமாக வர்ணித்ததற்காக.

10. இந்த வாரத்தின் சிறந்த கலரிங்க் ஹேர் கல்பனா விருது மு.க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதிக்கு,சென்னை கோட்டுப்புறம் அரசுப்பள்ளியில் நடந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் விழாவிற்கு கலக்கல் மேக்கப்,கலரிங்க் செய்யப்பட்ட கூந்தல் என வந்து கலக்கியமைக்காக. (சினிமா நடிகைங்க தோத்தாங்க போங்க)