Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Wednesday, May 08, 2019

பரிசுப்பொட்டிக்கடையை சாத்திட வேண்டியதுதானா?

1   நடந்து முடிந்துள்ள, 18 சட்டசபை இடைத்தேர்தல், தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், ஆட்சியை தக்க வைக்க, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடிய ஜனநாயக விரோத செயலை, ஆளும் கட்சி மேற்கொள்கிறது.- முத்தரசன்: 

 #  உங்க ஊர்ல அதுக்கு   ஜனநாயக விரோத செயலா? எங்க ஊர்ல சாணக்கியத்தனம். ராஜதந்திரம்


===============


 முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், எல்லை கட்டுப்பாடு கோட்டருகே, பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் அபாண்டமாக புளுகுகிறது.  - மோடி:  

இந்தியா பாகிஸ்தான் தாக்குதலை விட பாஜக காங்கிரஸ் துல்லியத்தாக்குதல் அபாரம்



==============


3 தேர்தல் பிரசாரத்தின்போது, எங்கள் குடும்பத்தைப் பற்றி, நாங்கள் பேசுவதில்லை; மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசுகிறோம். ஆனால், பா.ஜ., தலைவர்கள், தங்கள் பிரசாரங்களில், எங்களின் குடும்பத்தைத் தான் குறி 
வைக்கின்றனர்.-  பிரியங்கா:  

#  குடும்பத்தைப்பத்திப்பேசுனா கணவர் மீது இருக்கற ஊழல் வழக்கு பற்றியும் பேசனும், எதுக்கு வம்புனு கூட நீங்க விட்டிருக்கலாம்


===============


4   என் தந்தை லாலு பிரசாத், சுறுசுறுப்பானவர். ஒரு நாளில், பத்துக்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் பங்கேற்பார். இப்போதைய தலைவர்கள், இரண்டு கூட்டங்களுக்கே சுருண்டு விடுகின்றனர்.- , தேஜ் பிரதாப்: 

  #  அவ்ளோ சுறுசுறுப்பா இருந்து என்ன பிரயோசனம்? சிறைப்பறவையாதானே இருக்காரு இப்போ?

============


5   பா.ஜ.,வின் பேச்சை கேட்டு, தேர்தல் ஆணையம் இயங்குவதாக, காங்., கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது.  - ஜிதேந்திர சிங்:  

 # முறைப்படி இந்த பதிலை அல்லது பதிலடியை   தேர்தல் ஆணையம் தானே   தரனும்?



=============

6    பாக்., பயங்கரவாதிகளை, ஐ.நா., பட்டியலில் சேர்ப்பதும், துல்லிய தாக்குதல்கள் நடத்துவதும் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒழித்து விடாது. அதிரடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்.  - கபில் சிபல்:

   # சரி   உங்க ஆட்சில அந்தப்பணீயை ஏன் செய்யல? 


===============


7    
அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது சரி. இந்த உத்தரவுக்கு எதிராக பேசும், தி.க., தலைவர் வீரமணிக்கு, ஹிந்துக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்  - எச்.ராஜா 

# மரம் நட்டா மரக்கன்று நட்டா மழை வர வாய்ப்பு இருக்கு , யாகம் ப்ண்றதுக்கு ஏன் அரசுப்பணம்?> அல்லது மக்கள் வரிப்பணம்?

============


8   மோடி நடத்திய துல்லியத் தாக்குதலில், எத்தனை பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டனர் என்ற விபரம், இதுவரை எவருக்கும் தெரியாத மர்மமாக இருக்கிறது. -கே.எஸ்.அழகிரி

\\ ராணுவம் நடத்தியதுதானே அந்தத்தாக்குதல்>


அதெல்லாம் ராணுவ ரகசியம்ங்க


============


7   அடுத்தவரை ஏசுவதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதையும், நாங்கள் செய்வதே இல்லை.-கமல்


 அப்போ இவரை யாரோ பர்சனலா தாக்கி இருக்காங்க


------------


8  குறுக்கு வழியில், மக்களை ஆசை காட்டி, பணம் கொடுத்து ஆட்சியை தக்க வைக்க நினைக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த ஆட்சியால், மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் இருக்கப் போவதில்லை.= மல்லை சத்யா


வாங்குன 2000 ரூபா பலன் தானே?


=============


 
'நான், அநாகரிகமாக பேச மாட்டேன். களவாணித்தனம், புறம்போக்கு என்பதும், சட்டசபை குறிப்பில் உள்ளது' என, ஸ்டாலின் கூறினார். கடந்த முறை சட்டசபையில், களவாணித்தனமாக, புறம்போக்குத்தனமாக, தி.மு.க., தான் செயல்பட்டது.=நாராயணன் திருப்பதி 


இப்போதான் அநாகரீகமா பேசமாட்டேன்னிங்க , இப்போ பேசிட்டீங்களே”


=================


10   தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறது காங்கிரஸ் என, மோடி கூறவில்லை. தன்னை கொலை செய்ய முடியாது எனக் கூறுகிறார். 'பிரதமர் இப்படி பேசலாமா' என, சொல்பவர்கள், 'பிரதமரை இப்படிச் சொல்லலாமா' என, ஸ்டாலினை பார்த்துக் கேட்காதது ஏன்?-நாராயணன் திருப்பதி 

#  அதுதான் தேர்தல் பிரச்சார யுக்தி போல, கோர்ட் கண்டிச்சா மன்னிப்பு கேட்டாப்போச்சு, அரசியல்வாதிகளுக்குப்பிடிச்ச்ச வார்த்தை மன்னிப்பு 





==============


11   
'அ.தி.மு.க., காணாமல் போய்விடும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலினும், தினகரனும், ஜோசியர்களை போல் கூறி வருகின்றனர். 47 ஆண்டு வரலாறு கொண்ட, அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், யாரும் அசைக்க முடியாது. =ஓபிஎஸ்


ஆமா, யாராவது தர்ம யுத்தம் நடத்துனாத்தான் உண்டு


===============

12  ஜெயலலிதாவுடன், 32 ஆண்டுகள் இருந்து, துரோகம் செய்தவர் தினகரன். அவருடன் சில அரசியல் வியாபாரிகள் சேர்ந்து, கட்சியை நடத்துகின்றனர். அவர்களுக்கு, இந்த தேர்தல் முடிவுகள், பாடம் புகட்டும். எதிர்க்கட்சிகள், 'டிபாசிட்' இழப்பர்.-ஓபிஎஸ்

அப்போ பரிசுப்பொட்டிக்கடையை சாத்திட வேண்டியதுதானா?


===========



 13  என், 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், பல தேர்தல்களை சந்தித்து விட்டேன். அந்த அனுபவத்திலும், எனக்கு வந்த தகவல்களின்படியும் கூறுகிறேன். இம்முறை நாங்கள், சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெறுவது உறுதி. இதில், ஓட்டு வித்தியாசம் என்ன என்பது மட்டுமே, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.- சந்திரபாபு நாயுடு   # எந்த அரசியல்வாதியாவது தான் தோற்கப்போவதி உறுதினு சொல்வாங்களா? எல்லாருமே தான் தான் ஜெயிப்போம்னுதான் சொல்வாங்க 


=================


14   எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள, 'மெகா' கூட்டணி, 'மெகா' ஊழலுக்குத் தான் வழி வகுக்கும்.-மோடி:   #  நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தமும் அதிகரிக்கும்னு பிசிக்ஸ்ல படிச்சிருக்கோம், அது மாதிரியா? கூட்டணீக்கட்சிகளின் எண்ணிக்கை அதிகரீக்க  அதிகரீக்க ஊழலும் அதிகரிக்கும்?


=================


15   பா.ஜ., ஆட்சியின் போது தான், ஆப்கானிஸ்தானின் காந்தகாரில், மசூத் அஸார் விடுவிக்கப்பட்டான். அதன் பிறகே, அவன் பெரிய பயங்கரவாதியாக மாறினான்.-ராகுல்:  # விடுவிக்கப்பட்டப்போ அதுக்கு காங் ஆதரவு தெரிவிச்சதே?


==================


16  குடிநீர், மின்சார வினியோகம், தெரு விளக்குகளை சரி செய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவற்றுக்கு, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன; உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 அப்போ ஆட்சி முடியற வரை உள்ளாட்சித்தேர்தல் நடத்தற ஐடியாவே இல்லை?


==================

17 ரம்ஜான் மாதம் துவங்க உள்ளது. இந்த மாதம், பிரார்த்தனைக்கான மாதம். மக்கள் அனைவரும் நோன்பு இருப்பர். இந்த நேரத்தில், பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினரும் சண்டையிட்டு கொண்டிருப்பது, அவர்களுக்கு தொந்தரவளிக்கும். முஸ்லிம் மக்களின் அமைதிக்காக, கடந்த ஆண்டு அறிவித்ததைப் போல, இந்த ஆண்டும், சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.-மெஹபூபா முப்தி 


முதல்ல அவங்களை (பாகிஸ்தான் தீவிரவாதிகள்)  நிறுத்தச்சொல்லுங்க, நானும்  நிறுத்தறேன்பாரோ?


================

18  வட மாநில மக்கள், மத்திய ஆட்சி மாற்றத்துக்காக காத்திருக்கின்றனர்.-முதல்வர் நாராயணசாமி 

 அப்போ தென் மாநில ம,க்கள் மோடி ஆட்சியை விரும்புகிறார்களா?புதுசா இருக்கே?

================


19  -ஸ்டாலினால் தான், துரைமுருகன், கனிமொழி வீடுகளில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது.-ஜெயகுமார்

அப்போ மத்திய அரசை விமர்சிச்சா ரெய்டு கச்ன்ஃபர்ம்னு மறைமுகமா சொல்றாரா?

==============


20  'சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும்' என, ஸ்டாலின் கூறுவது, 21ம் நுாற்றாண்டின் மிகப்பெரிய காமெடி -ஜெயகுமார்

 காமெடியா? டிராஜெடியா?ஃபோர்ஜெரியா?னு மே 23 ல தெரியும்

=================

Monday, December 07, 2015

கருகரு கூந்தலுக்கு உதவும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

ணவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் கறிவேப்பிலை. கொசுறாக வாங்கினாலும் அதன் பலன்களோ மிக மிக அதிகம். தமிழர்கள் இதன் பெருமையை அறிந்திருப்பதால்தான் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், நீர் மோர் என அனைத்திலும் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர். கறிவேப்பிலை மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது;  தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது.
உலர்ந்த கறிவேப்பிலையை நன்றாகப்  பொடிசெய்து, மிளகாய் வற்றல் பொடி அல்லது மிளகுத் தூளுடன் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, சீரகம், சுக்குப்பொடி ஆகியவற்றைத்  தேவையான அளவு சேர்த்து, நன்றாக அரைத்துப் பொடித்து, சிறிதளவு நெய் விட்டு இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், மந்தம், மலக்கட்டு ஆகியவை சரியாகும்.
கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் கலந்து சாப்பிட, சுவையின்மை, கழிச்சல், பித்த வாந்தி, செரிமானப் பிரச்னை போன்றவை குணமாகும்.
சித்த மருத்துவமுறையில் தலைமுடிக்குத் தயாரிக்கும் தைலத்தோடு, கறிவேப்பிலையைச் சேர்த்துக் காய்ச்சித் தடவினால், தலைமுடி நன்றாக வளருவதோடு கருமையாகவும் இருக்கும்.
அரிசியோடு கறிவேப்பிலையைச் சேர்த்து உரலில் குத்தி, நன்றாகப் புடைத்து, பழுத்து உலர்ந்த ஒரு மிளகாயைச் சேர்த்துக் கருக்கி, வசம்புச்சாம்பல், சிறுநாகப்பூ, அதிவிடயம் சேர்த்து, நீர்விட்டு, சுண்டக்காய்ச்சிக் குடித்தால், அஜீரணம், வயிற்றுப்போக்கு குணமாகும்.
இரண்டு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை காம்பு நீக்கி, ஒரு பாத்திரத்தில் சுமார் 400 மி.லி நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, நீர் பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டி, மூன்று வேளையும் சுமார் 50 மி.லி குடித்துவந்தால், சளி, இருமல் குணமாகும்.

பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது கறிவேப்பிலை. கறிவேப்பிலைக்கு நல்ல மணம் உண்டு. வீட்டின் முன்புறம், பின்புறம் என ஏதாவதோர் இடத்தில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்பது நல்லது.
- பு.விவேக் ஆனந்த், படம்: தே.தீட்ஷித்

thanks vikatan

Sunday, November 29, 2015

மேகி நூடில்ஸில் மீண்டும் புதிய சர்ச்சை

பாட்னா: மேகி நூடுல்ஸை தொடர்ந்து மேகி பாஸ்தாவிலும் கூடுதல் காரீயம் சேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், நெஸ்லே நிறுவனத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொண்டன.

அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் தடை செய்தது.

இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன்பின் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸை,  நெஸ்லே நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், நெஸ்லே நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக காரீயம் கலந்திருப்பதாக உத்தரபிரதேச உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியும் அவர்களிடம் இருந்து உரிய பதில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இந்த புகாரை மறுத்துள்ள நெஸ்லே நிறுவனம், பாஸ்தா பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று விளக்கம் அளித்துள்ளது

thanks vikatan.

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுவோருக்கு எச்சரிக்கை - சவுதி பெண்ணின் பேட்டி

காட்பாடி அருகே மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரியை எளிதில் மறந்திருக்க முடியாது.

சவுதிக்கு வீட்டு வேலைக்கு சென்று, மொழியறியாத தேசத்தில் பல மாதம் கஷ்டங்களை அனுபவித்ததோடு, தன் ஒரு கையையும் பறிகொடுத்து, குற்றுயிரும் குலையுமாக நாடு திரும்பியவர். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தன் சொந்த ஊருக்கு வந்திருந்த அவரை சந்தித்தோம்.

வலது காலும் முறிந்துள்ளது. முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அனுபவங்கள் அவர் மனதிலிருந்து  இன்னும் முழுவதுமாக விலகவில்லை என்பதை அவரது முகம் காட்டுகிறது. 

எழுந்து நடக்கவே சிரமப்பட்டவரிடம், "என்ன நடந்தது?" என்றோம். 

"எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். வீட்டுக்காரர் ஒழுங்கா வேலைக்கு போகலை. பையன் கட்டட வேலைக்கு போய் குடும்பம் நடத்தவேண்டியதா இருந்துச்சு. ஒருநாள் வேலைசெய்றபோது தடுமாறி விழுந்து அவனுக்கு கால் உடைஞ்சு, தொடர்ந்து வேலைக்கு போக முடியாம ஆகிவிட்டது.

குடும்பத்துக்கு வருமானமே இல்லாம போச்சு.  கடன் வாங்கி பொண்ணுங்களை கட்டிக்கொடுத்திட்டு அந்த கடனையும் திருப்பி கட்ட முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமையிலதான் பையனுக்கு தெரிஞ்ச ஒருத்தர்,  'வெளிநாட்டுல வீட்டு வேலைக்கு நல்ல சம்பளம் தராங்க'னு சொல்ல, சரின்னு அங்க போறதுக்கு முடிவு செய்தேன். 

புருஷனும் வேலைக்கு போறதில்லை. பையனுக்கும் அடிபட்டுப்போச்சு. நாமதான் இனி குடும்பத்தை கரைசேர்க்கணும்னு வெளிநாட்டு வேலைக்கு போனேன். நல்ல சம்பளம் தருவாங்க. நம்ம வாழ்க்கை வறுமையும் போயிடும்னு நம்பிப்போனேன். ஆனா கையை இழந்து, காலும் செயல்படாமபோய், இப்போ என்னோட வேலைகளையே என்னால செஞ்சுக்க முடியலை."- கதறி அழுகிறார் கஸ்துாரி.

மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்தியவரிடம் "அங்கு வேலைச் சூழல் எப்படி இருந்தது?"  என்றோம்.

" ரியாத்ல எனக்கு வேலை. அரபிக்காரங்க ஒருத்தங்களோட 65 வயசு அம்மாவ பாத்துக்கணும். அவங்க வீட்டு வேலையை எல்லாம் செய்யணும். துணி துவைக்கறது, வீட்டை சுத்தம் பண்றது, அவங்களுக்கு தேவையானதை செய்து தரணும். காலைல எந்திரிக்கறதுல இருந்து ராத்திரி தூங்குற வரை வேலை இருக்கும். ஒருநிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. ஜூலை மாசம் போனேன். போன நாள்ல இருந்து ஒரு நாள் கூட நல்ல சாப்பாடே எனக்கு போட்டதில்லை.
மூணு நாளுக்கு முன்னாடி செஞ்ச கெட்டுப்போன சாப்பாட்டைதான் கொடுத்தாங்க. சரி சம்பளத்துக்குன்னு இவ்ளோ தூரம் வந்துட்டோம். சகிச்சுகிட்டு இருப்போம்னு இருந்தேன். மாசம் 300 டாலர் சம்பளம்னு சொல்லியனுப்பினாங்க. அங்க 900 ரியால் கொடுத்தாங்க. முதல் மாசம் சம்பளம் கொடுத்திட்டு என் பையனுக்கு போன் போட்டு கொடுத்தாங்க. 

அவன்கிட்ட 'சம்பளம் வாங்கிட்டேன்பா என்று சொல்லிவிட்டு, 'சரியான சாப்பாடு போடறதில்லைன்னு' மனக்குறையாக சொன்னேன். அவ்வளவுதான், மறுநாள் எனக்கு கொடுத்த காசையும் புடுங்கிட்டாங்க. என் செல்லையும் வாங்கிகிடுச்சு அந்த வீட்டம்மா. 

சாப்பாடு போடலைன்னாலும் சம்பளமாவது தந்தா போதும்னு இருந்தேன். கொடுத்த சம்பளத்தையும் புடிங்கிகிட்டதால பயம் வந்துவிட்டது. வீட்டுக்கும் பேச முடியாது. அவங்க பேசுறதும் எனக்கு புரியாது. அந்தம்மா கூட சைகையில்தான் பேசுவேன்.  'எனக்கு இங்க இருக்க புடிக்கலை... ஊருக்கே அனுப்பி வச்சிடுங்கமா' ன்னு ஒருமுறை அழுதுட்டே சைகையால கெஞ்சினேன். 

கோபமான அந்தம்மா,  'கழுத்தை அறுத்திடுவேன்' னு சைகை காட்டினாங்க. எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. இங்க இனி இருந்தா நம்மளை எதாவது பண்ணிடுவாங்கன்னு, அவங்க பையன் வீட்ல வேலை செய்த நெய்வேலிக்காரர் ஒருத்தர்ட்ட நடந்த விஷயத்தை சொல்லி, 'என்னை போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுருப்பா நான் அவங்க மூலமா ஊருக்கு போய்டுறேன்' னு அழுதேன்.

ஆனா அந்த பையன் நான் சொன்னதை அப்படியே அந்த வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டான். அப்புறம் சித்ரவதை ஆரம்பிச்சிட்டது. என்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து, ஒருநாள் அந்த வீட்டின் மாடியில் இருந்து சேலையை கட்டி இறங்கப் பார்த்தேன். அப்போ அங்க இருந்த ஜெனரேட்டர்ல கை சிக்கிக்கிடுச்சு. ரத்தம் வெளியேறினதால் நான் மயங்கி கீழ விழுந்துட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. கை ரொம்ப நசுங்கினதால வெட்டி எடுத்துட்டதா சொன்னாங்க." என்று பறிகொடுத்த கையின் தோள்பட்டையை தடவிப்பார்த்து கண்ணீர் சிந்தினார். 

"குடும்ப வறுமைக்கு ஒரே தீர்வாக வெளிநாட்டு வேலை அமையும்னு நம்பிதான் அங்க போனேன். இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு தெரியாது. இனி அப்படி யாரும் போகக்கூடாது. அதுக்கு நானே நேரடி உதாரணம். குறைவான சம்பளத்துக்கு ஒரு ஆட்களை அனுப்ப இத்தனை லட்சம்,  இத்தனை ஆயிரம்னு ஏஜெண்டுங்க கமிஷன் வாங்கிக்கறாங்க. 

வீட்டுக்காரங்க அவ்ளோ செலவு செய்வதால், நமக்கு வேலை புடிக்கலைன்னாலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குறது நடக்குது. வீட்டை விட்டு எங்கயும் அனுப்பாததால், மற்ற இடங்கள்ல இருக்க நம்ம பொம்பளைங்க நிலை தெரியலை. ஆனால் அவங்களும் இப்படிதான் கொடுமை அனுபவிக்கறாங்கன்னு நினைக்கிறேன்." என்றார் கம்மிய குரலில்.

கஸ்துாரிக்கு தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் நிவாரணத் தொகையாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மாதம் ரூ. 8000 வட்டிப்பணமாக வருவதாக சொல்கிறார். ஆனால் தற்போதைய நிலையில் அவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்வதற்கே அந்த தொகை சரியாகி விடுகிறது என்கிறார்.
மத்திய அரசு மற்றும் சவுதி அரசிடமிருந்து நஷ்ட ஈடு  கேட்டு கோரிக்கை மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார். 

வெளிநாட்டு வேலையில் விருப்பம் இருப்பது தவறில்லை. சரியான தகுதிகளோடு, அனுபவம் வாய்ந்த,  முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் செல்வதே சரியாக இருக்கும்.  எதையும் ஆராயாமல் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை நம்பிபோனால் துயரங்களை சந்திக்கவேண்டிதான் இருக்கும்.

கஸ்துாரியின் வாழ்க்கை சொல்லும் படிப்பினை இதுதான்!

- அ. அச்சணந்தி
படங்கள்: ச.வெங்கடேசன்

thanks vikatan

சாமானியன் கூட மின்சாரம் தயாரிக்கலாம் - உலகத்தையே அசத்திய டெல்லி வாலா

- கார்க்கி பவா
சென்னை மழையில் சிக்கித் தவித்த பலரின் முக்கியமான தேவையாக இருந்தது எது தெரியுமா? மின்சாரம். வீட்டைச் சுற்றி தண்ணீர் நிற்க, தொட்டியில் குளிக்க தண்ணீர் இல்லாமல் தவித்தவர்கள் ஏராளம். உலகில் 3 பில்லியன் மக்களுக்கு எல்லா நேரமும் மின்சாரம் கிடைப்பதில்லை என்கின்றன சர்வேக்கள்.
"ஏழைகள் ஏழைகளாகவே இருக்க காரணம், மின்சக்தி இல்லாததுதான்!" என்கிறார் மனோஜ் பார்கவா. யார் இவர்?

மனோஜ் பார்கவா... அமெரிக்க நாட்டு தொழிலதிபர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 1960 களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்கே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பியவர், 12 ஆண்டுகள் டெல்லியில் இருக்கும் ஹன்ஸ்லோக் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் பார்கவாவின் தந்தை, அமெரிக்காவில் பிளாஸ்டிக் நிறுவனங்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பொறுப்பை ஏற்று நடத்த மீண்டும் அமெரிக்க சென்ற பார்கவா, அதை வெற்றிகரமாக நடத்தினார். இப்போது பார்கவாவின் நிறுவன மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 99 சதவிகிதத்தை, உலகின் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கச் செலவழிக்க இருக்கிறார். அதில் ஒன்றுதான் ’இலவச மின்சார’ திட்டம்.

மனோஜ் பார்கவா டீம் கண்டுபிடித்திருக்கும் “ஹைபிரிட் பைசைக்கிள்”லில் ஒரு மணி நேரம் பெடல் செய்தால், ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், இதிலிருந்து எந்தவிதமான மாசு ஏற்படுத்தும் கழிவுகளும் வெளியாகாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்வதால் பணமும் மிச்சம். இது செயல்படும் விதம் பற்றிய வீடியோவை கீழே காணலாம்.

 
இது மற்றும் இல்லாமல் எனர்ஜி தொடர்பான பல ஆய்வுகளில் மனோஜ் பார்கவா டீம் இயங்கி வருகிறது. அதில் இன்னொரு முக்கியமான புராஜக்ட்  “லிமிட்லெஸ் எலக்ட்ரிசிட்டி”. பூமியில் அடியில் செல்ல செல்ல, வெப்பநிலை அதிகரிக்கும். அங்கே அபரிதமான சக்தி மறைந்து கிடக்கிறது. ஆனால் அதை வெளிக்கொண்டு வர வழி இல்லாமல் மனித இனம் திணறி வந்தது. பார்கவாவின் கண்டுபிடிப்பான “கிராபீன்” என்றொரு மெட்டல் இதற்கு வழி காட்டி இருக்கிறது.

கிராஃபீன் ஒரு நல்ல மின்கடத்தி. இதன் ஒரு முனையில் 100 டிகிரி வெப்பம் செலுத்தப்பட்டால், அதன் இன்னொரு முனையில் அதே 100 டிகிரி வெப்பம் கடத்தப்படும். ஆச்சர்யம் என்னவெனில், நடுவில் கிராஃபின் குளிர்ந்தே காணப்படும். இது சில அடிகளுக்கு மட்டுமே கடத்தும் என நினைக்க வேண்டாம். எத்தனை மைல்கள் கடந்தாலும் அதே வெப்பசக்தி கிடைக்கும். இதை பூமிக்கு அடியில் செலுத்தி, அந்த வெப்பசக்தியை மேலே கொண்டு வந்தால் எளிதில் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவும் “பொல்யூஷன் ஃப்ரீ” என்கிறார் பார்கவா.

மின்சாரம் மட்டுமில்லாமல், நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்தும் பல புராஜக்டுகளை தொடங்கி இருக்கிறார் மனோஜ் பார்கவா. இவரது முயற்சிகள் மனித வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயமாக இருக்கும் என்கிறார்கள். பார்கவாவின் ”பில்லியன் இன் சேஞ்ச்” என்னும் திட்டங்கள் பற்றிய ஒரு முழுமையான ஆவணப்படம் தயாரித்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் முன்னணி அலைவரிசைகளில் இது திரையிடப்பட இருக்கிறது.

இணையவாசிகள் அதற்காக காத்திருக்க தேவை இல்லை. இதோ அந்த படம் உங்களுக்காக.
  

thanks vikatan

Tuesday, November 24, 2015

சிறுவனை மலம் அள்ள வைத்த ஆசிரியை...

சாதிய வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் இரண்டு சம்பவங்கள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சம்பவம் - 1
தீண்டாமை ஒரு பாவச் செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்!

- என சமத்துவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தையின் பிஞ்சு விரல்களால் மலத்தை அள்ளவைத்த கொடுமை நாமக்கல் மாவட்டம் ராமாவரம் நகராட்சிப் பள்ளியில் நடந்துள்ளது.
காலையில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் 2-ம் வகுப்பு ஆசிரியை விஜயலட்சுமி, தன் வகுப்பு மாணவன் சசிதரனை அழைத்தார். ஆத்திச்சூடியை ஒப்பிக்கச் சொல்லி அழைக்கிறார் என்றுதான் சசிதரனும் சென்றான். ஆசிரியை அவனுக்கு வைத்த வேலை... அநீதியானது. இன்னொரு மாணவனின் மலத்தை அள்ள வைத்திருக்கிறார் இந்த ஆசிரியை. இந்த விஷயம் வெளியே தெரியவர, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுபற்றி சசிதரனின் தந்தை வீராசாமியிடம் கேட்டபோது, ‘‘நாங்க ராமாவரம் காலனியைச் சேர்ந்​தவங்க. நான் கோழிப் பண்ணையில லோடுமேனா இருக்கேன். என் மனைவி பேரு ரேவதி. எங்களுக்கு பரணிதரன், சசிதரன், கிருபாகரன் என மூணு பசங்க. மூணு பேரும் எங்க ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற ராமாவரம் புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கூடத்தில படிக்கிறாங்க. இதில் நடுப்பையன் சசிதரனுக்கு ஏழு வயசு. 2-ம் வகுப்பு படிக்கிறான். இவனுக்குத்தான் இந்த அநீதி நடந்திருக்கு.
கடந்த 12-ம் தேதி மாணவன் முகமது ஷெரீப் வகுப்பறையில மலம் போயிருக்கான். என் பையன் சசிதரனைக் கூப்பிட்டு, அதைக் கையில் அள்ளி ஜன்னல் வழியா போடச் சொல்லி இருக்காங்க அந்த விஜயலட்சுமி டீச்சர். அவனும் கையில் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டுட்டான். உணவு இடைவேளையில் இதைச் சொல்லி எல்லா மாணவர்களும் சசிதரனைக் கிண்டல் செஞ்சிருக்காங்க.
அதனால சாப்பிடாம இருந்து, சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் என் மனைவியிடம் சொல்லி அழு​திருக்கான். இரவும் சாப்பிடாம அழுதுகொண்டே தூங்கிட்டான். விடியற்காலை 5 மணிக்கு நான் வந்ததும் என்னிடம் சொல்லி அழுதான்.
பள்ளி திறந்ததும் நானும் என் மனைவியும் சென்று விஜயலட்சுமி டீச்சரிடம் கேட்டோம். அவுங்க அதட்டலாகவும், மிரட்டும் தொணியிலும் பேசினாங்க. அந்த விஜயலட்சுமி டீச்சர் பள்ளிக்கூடம் இருக்கும் ராமாவரம் புதூரைச் சேர்ந்த உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர். சாதிய கண்ணோட்​டத்துலதான் இப்படிச் செய்திருக்​காங்க. எங்க ஊர்க்காரங்க அனைவரும் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டோம்.
அதன் பிறகு கல்வித் துறை அதிகாரிகள் வந்து அனைத்துக் குழந்தை​களிடமும் விசாரிச்சாங்க. நடந்தது அனைத்தும் உண்மைனு எல்லாருக்​கும் தெரிஞ்ச பிறகும் அந்த விஜயலட்சுமி டீச்சர், ‘அந்தப் பையனுக்கு டி.சி-யைக் கொடுத்து அனுப்புங்க’னு எகத்தாளமாச் சொன்னாங்க. பிறகுதான் காவல் துறையிடம் புகார் கொடுத்தோம். இப்போ அவங்க தரப்பினரிடம் இருந்து எங்களை மிரட்டறாங்க. எனக்கோ, என் குழந்தைகளுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தா அதற்கு அவங்கதான் பொறுப்பு’’ என்றவர், ‘‘நீங்க சசிதரனிடமே கேட்டுப் பாருங்க, அவனே சொல்வான்’’ என்றார்.
மாணவன் சசிதரன், ‘‘நான் டூ பாத்ரூம் போகல. முகமது ஷெரீப்தான் போனான். அவன் போனதற்கு என்னைக் கூப்பிட்டு அள்ளச் சொன்னாங்க. நான் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டேன். அதைப் பார்த்து எல்லா பசங்களும் சிரிச்சாங்க’’ என்று பரிதாபமாகச் சொன்னான். .
ஆசிரியை விஜயலட்சுமியின் உறவினர்கள், ‘‘ஒரு பையன் செய்த தவறுக்காக இன்னொரு பையனை எப்படி தண்டிப்பாங்க? லாஜிக்கே இல்லாம அந்தக் காலனிக்காரங்க டீச்சர் மேல பழி போடுறாங்க... இப்போ சாதிப் பிரச்னை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் இந்தப் பிரச்னையைப் பெரிசு பண்ணப் பாக்கறாங்க’’ என்றனர்.
முகமது ஷெரீப்பின் தந்தை அப்துல்லா, ‘‘என் பையனிடம் விசாரிச்சேன். அவன்தான் டூ பாத்ரூம் போயிருக்கிறான். அதை சசிதரன் என்ற மாணவனை அள்ளச் சொல்லி இருக்கிறார் விஜயலட்சுமி டீச்சர். எங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தால்கூட நாங்க போய் சுத்தம் செய்திருப்போம்’’ என்றார். 
முகமது ஷெரீப்பும், ‘‘நான்தான் டூ பாத்ரூம் போனேன். ஆனா, சசிதரனை அள்ளச் சொன்னாங்க டீச்சர்’’ என்றார்.
இதுபற்றி நாமக்கல் எஸ்.பி-யான செந்தில்​குமார், ‘‘அந்த வகுப்பறையில் இருந்த அனைத்துக் குழந்தைகளிடமும் விசாரித்ததில் தவறு நடந்துள்ளது உண்மை என்பது உறுதிசெய்யப்​பட்டது. பிறகு அந்த ஆசிரியை விஜயலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்கப்​பட்டுள்ளது’’ என்றார்.
சம்பவம் - 2
டையைக் கழற்றச் சொல்லி அவமானப்​படுத்தியதால் ஓர் இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இது.
நெல்லை மாவட்டம், பழவூர் அருகே பிள்ளையார் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் தாமரைச்செல்வன். தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த அவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாதி ரீதியாக அவரைத் துன்புறுத்தி, அவமானப்படுத்தியதே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தங்களின் ஒரே மகனான பொன்தாமரைச் செல்வனை பறிகொடுத்துவிட்டு கதறி அழுதுகொண்டிருந்த தந்தை ராஜதுரை, தாய் சரோஜா ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம். ராஜதுரை, ‘‘என் பையனும் எதிர்வீட்டு ஐயப்பனும் நண்பர்கள். கடந்த 8-ம் தேதி ரெண்டு பேரும் வாய்க்காலில் குளிக்கப் போயிருக்காங்க. அப்போ, ஆவாரைகுளத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அவங்களுக்குள்ளே சண்டை போட்டிருக்காங்க. அவங்களை என் பையனும், ஐயப்பனும் சமாதானம் செஞ்சிருக்காங்க. அதுல ஒரு தரப்பு கோபம் ஆகியிருக்கு. அவங்க, ‘நேத்து சண்டையில ஒரு செல்போனும், மோதிரமும் காணாமல் போயிடுச்சு. அதைப் பத்தி விசாரிக்கணும்’னு சொல்லி கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்கே என் மகனோட உடுப்பு எல்லாத்தையும் அவுத்து அடிச்சு அசிங்கப்படுத்தி இருக்காங்க. அந்த வேதனையில வீட்டுக்கு வந்த உடனே ஃபேன்ல தூக்குப்போட்டுத் தொங்கிட்டான்’’ என்று கண்ணீருடன் விவரித்தார்.
‘‘எம்பையன் யாருக்கும் எந்தக் கேடும் நினைக்காதவன். ‘படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போயி உன்ன உக்கார வெச்சி சாப்பாடு போடுவேம்மா’னு அடிக்கடிச் சொல்வான். எந்த வம்புதும்புக்கும் போகமாட்டான். அவனை அடிச்சு அசிங்கப்படுத்தித் தூக்குமாட்ட வெச்சிட்டாங்களே...’’ என கதறி அழுதார் தாய் சரோஜா.
வழக்கறிஞர் செம்மணியிடம் கேட்டோம். ‘‘பொன் தாமரைச்செல்வன் உடலை பழவூர் ஸ்டேஷனுக்கு  போலீஸ் தூக்கிட்டுப் போயிட்டாங்க. தங்கள் மகனின் மரணத்துக்கு ஆவாரைகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ், இளங்கோ, கலைசிகாமணி, இளையராஜா, பால்பாஸ்கர், மிராசு ஆகியோர்தான் காரணம் என்று பொன் தாமரைச்செல்வனின் தந்தை ராஜதுரை புகார் கொடுத்தார். அதனை பதிவுசெய்ய போலீஸார் மறுத்துட்டாங்க. ராஜதுரையிடம், ‘என் பையன் செலவுக்குப் பணம் கேட்டான். நான் கொடுக்காததால தூக்குப்போட்டு தற்கொலை செஞ்சுக்கிட்டான்’ என்று எழுதிக் கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செஞ்சிருக்காங்க’’ என்று கூறுகிறார்.
உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய போதிலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், நெல்லை சரக டி.ஐ.ஜி-யான அன்பு ஆகியோரிடம் மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மதுரையைச் சேர்ந்த ‘எவிடென்ஸ்’ அமைப்பினர், கள ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அமைப்பாளர் எவிடென்ஸ் கதிர், ‘‘பிள்ளையார் குடியிருப்புக் கிராமத்தில் மூன்று தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்கள், சாதியத் தாக்குதலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த இளைஞனை அடித்து, நிர்வாணப்படுத்தி, அசிங்கப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டி இருக்கிறார்கள். இதற்குக் காரணமானவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் செய்தும் போலீஸார் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை. பொன் தாமரைச் செல்வனின் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும்’’ என்றார், திட்டவட்டமாக.
இதுபற்றி காவல் துறையினரிடம் கேட்டதற்கு, ‘‘நாங்கள் உரிய விசாரணை நடத்திய பிறகே வழக்குப்பதிவு செய்துள்ளோம். தற்கொலை செய்து கொண்ட பொன் தாமரைச்செல்வனுடன் ஆவாரைகுளத்துக்குச் சென்றதாக இவர்கள் புகார் தெரிவிக்கும் ஐயப்பனை அழைத்துப் பேசினோம். அவனோ, ‘அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என எழுத்துப்பூர்வமாகவே கொடுத்து உள்ளான்’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான்.
மழை வெள்ளம் ஊரையே மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. சாதித் தீயை அணைக்க ஒரு பெரு வெள்ளம் எப்போது வரும்?

thanks vikatan

Saturday, November 21, 2015

வெள்ளத்தில் கார்/பைக் சிக்கினால்...

‘‘மழைத் தண்ணியில வண்டி ஓட்டுறது செமையா இருக்கு மச்சான்...’’ என்று புளகாங்கிதம் அடைபவரா நீங்கள்? அப்படியெனில், இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.
‘‘ஏரியா இருந்ததெல்லாம் ஏரியாவா மாறி, மறுபடியும் ஏரியா மாறிடுச்சு!’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் கவிதை எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, இதைக் கொஞ்சம் படியுங்கள். கார்/பைக் விஷயங்களில் மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது. சிக்கிவிட்ட உங்கள் வாகனத்தை வெள்ளத்திடம் இருந்து காப்பாற்ற... மழை நேரங்களில் கவனமாக வாகனத்தைச் செலுத்த இதோ சில டிப்ஸ்...
பைக் ஓட்டிகளுக்கு...

1. வாகனங்களுக்கு முதல் சிம்ம சொப்பனமே தண்ணீர்தான். அதுவும் சைலன்ஸருக்கும் தண்ணீருக்கும் சுத்தமாக ஆகாது. எனவே, சைலன்ஸர் மூழ்கும் அளவு உள்ள நீர்ப் பகுதிகளில், ‘‘கொஞ்ச தூரம்தானே.. அப்படியே ஓட்டிடலாம்’’ என்று நினைத்தீர்கள் என்றால், இன்ஜினுக்கு கண்டம். அதன் காரணமாகவே இப்போது சைலன்ஸர் உயரமாக உள்ள பைக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. லேட்டஸ்ட் யமஹா, ஹோண்டா, சுஸூகி பைக்குகளுக்கு எல்லாமே இப்போது சைலன்ஸர் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

2. மழை வெள்ளத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்/பைக்குகளை, வெள்ளம் வடிந்தபிறகு, ஸ்டார்ட் செய்யவே கூடாது. முடிந்தால், பெட்ரோலையும் காலி செய்வது சாலச் சிறந்தது. சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதுதான் பெஸ்ட்.

3. மழை நேரங்களில் மட்டுமல்ல; வெயில் நேரங்களிலும் ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்துவிட்டு பொருத்துவது நல்ல பலன் தரும். ஸ்பார்க் ப்ளக் எக்ஸ்ட்ரா ஒன்றை எப்போதுமே டூல் கிட்டில் வைத்துக்கொள்வது இன்னும் பெஸ்ட். பைக்குகளின் ஸ்பார்க் ப்ளக் விலை 90 முதல் 100 ரூபாய்தான்.

5. செயின் கார்டு உள்ள பைக்குகளில் பிரச்னை இல்லை. நேக்கட் பைக்குகளில் செயின் ஸ்பிராக்கெட்டுகள் ‘கார்டு’ இல்லாமல், ஓப்பனாகவே இருக்கும். இவை ஓரளவு பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தாலும், மழை நேரங்களில் மெக்கானிக்குகள் மூலம் ‘செயின்  ஸ்ப்ரே’ செய்து கொள்வது நல்லது.

6. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க்கில் மிகவும் கவனம் தேவை. என்னதான் டேங்க் மூடி நன்றாக கவர் செய்யப்பட்டிருந்தாலும், ஓரம் வழியாக சில சொட்டு நீர்த்துளிகள் பெட்ரோல் டேங்கினுள் கலக்க வாய்ப்புள்ளது. பெட்ரோலில் தண்ணீர் கலந்து விட்டால், ஸ்பார்க் ஏற்படுவதில் பிரச்னை ஏற்பட்டு... வழியில் ஆஃப் ஆகி... (இன்ஜின் ஸ்டாப்) வேறென்ன..? ஸ்டார்ட்டிங் டிரபுள்தான்!

கார் ஓட்டிகளுக்கு...

1. பைக்கைவிட, வெள்ளத்தின் பாதிப்பு கார்களுக்குத்தான் அதிகம். இதிலும் சைலன்ஸர்/ஏர் இன்டேக்குக்குள் தண்ணீர் புகாத வரை எல்லாமே ஸ்மூத்தான். வேறு வழியில்லை என்றால், முதல் கியரில் 1,200 முதல் 1,500 ஆர்பிஎம்-முக்குள் குறைவான வேகத்திலேயே மெதுவாகச் சென்று வெளியேறுங்கள்.

2. அதிக தண்ணீருக்குள் இருக்கும்போது கார் ஆஃப் ஆகிவிட்டால், காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். இது கனெக்டிங் ராடுகளில் பிரச்னை ஏற்படுத்தி, மிகப் பெரிய செலவுக்குக் கைகாட்டி விடும். தள்ளிச் செல்வதுதான் பெஸ்ட்.

3. வெள்ள நேரங்களில் எங்கெங்கு, எத்தனை அடி பள்ளம் ஏற்படும் என்பது மாநகராட்சியினருக்குக்கூடத் தெரியாது. கார்களில் சென்று சின்னப் பள்ளங்களில் விழுந்தால்கூட, சேதாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீல்கள் அடிவாங்குவதோடு இன்ஜின் சம்ப், சேஸி, பம்பர் பகுதிகள் நிச்சயம் அடி வாங்கும்.  

4. பிரீமியம் கார்களில் பிரச்னை இல்லை; ஹேட்ச்பேக் கார்களில் முன் பக்க விண்ட்ஷீல்டில் என்னதான் வைப்பர் பயன்படுத்தினாலும், மழை நேரங்களில் விசிபிளிட்டி அவ்வளவாக இருக்காது. வெளியே நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்போது, உடனே வைப்பர் பயன்படுத்துவதால், விண்ட் ஷீல்டுகளில் ஸ்க்ராட்ச்கள் ஏற்படுவதுடன், மழை நேரங்களில் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, டிஷ்யூ பேப்பர், மைக்ரோ ஃபைபர் துணி அல்லது நல்ல வளவளப்பான நியூஸ் பேப்பரைக் கொண்டு அழுந்தத் துடைத்துவிட்டு வைப்பர் பயன்படுத்துவது பெஸ்ட்.

5. மழை நீர், கார்களில் பெரும்பான்மையாக கை வைப்பது எலெக்ட்ரானிக் பாகங்களில்தான். எனவே, ஜன்னலை மூடிவிட்டு, ஏ.சியை ஆன் செய்யாமல் பயணிப்பதுகூட நல்லதுதான். 

6. எலெக்ட்ரானிக் விஷயங்கள் எவ்வளவு ஆபத்து என்பதற்கு ஓர் உதாரணம்: சென்னை டிராஃபிக்கில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர், காரை ஐடிலிங்கில் விட்டு, ஏ.சியை ஆன் செய்துவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார். எக்ஸாஸ்ட் வழியாக வெளியேற முடியாத காற்று, உள்ளுக்குள்ளேயே சுழன்று தீப்பிழம்பை ஏற்படுத்த, கார் தீப்பிடித்து உயிரை இழந்திருக்கிறார் ஓர் அப்பாவி. 

7. பவர் விண்டோஸ் பட்டனும் எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதிலும் கவனம் தேவை. கார் முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டால், பின் பக்க விண்ட்ஷீல்டை உடைத்து வெளியே வருவது நல்லது. கண்ணாடியை விட, உயிர் முக்கியம் இல்லையா?

8. மழையில் நிறுத்தப்பட்ட காரை, மறுநாள் ஸ்டார்ட் செய்து உடனே ஆக்ஸிலரேட்டரை மிதித்து, அவசர அவசரமாகக் கிளம்புவதைத் தவிருங்கள். எப்போதுமே காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஐடிலிங்கில் சிறிதுநேரம் வைத்திருந்தபிறகு கிளம்புங்கள். டர்போ சார்ஜர், பெட்ரோல் மிக்ஸிங் என்று எல்லாமே அப்போதுதான் சீராக நடக்கும்.

9. மெக்கானிக் பாகங்களுக்கு ஏதும் பிரச்னை வராதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்டீயரிங், கியர்பாக்ஸ், கிளட்ச், பிரேக், ஹேண்ட்பிரேக் போன்றவை ஜாம் ஆக வாய்ப்புண்டு. எனவே, கிளம்பும் முன் இவற்றை நன்றாக பரிசோதித்து விட்டுக் கிளம்புவது நல்லது.

10. ரொம்ப முக்கியமான விஷயம் - ஈரமான சாலைகளில் வேகம் வேண்டாமே!

- தமிழ் தென்றல்

thanks vikatan

மழை... யார் செய்த பிழை?

ஒரு ரியல் (எஸ்டேட்) எச்சரிக்கை!சென்னைக்கு அருகே... சகல சகதி(வசதி)களும் நிரம்பிய குடியிருப்புகள்!

வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் கால் டாக்ஸி நிறுவனங்கள் இப்போது படகு விடுகிறார்கள் என்ற மீம்ஸ் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவியது. கிண்டல் செய்யப்பட்ட கால்டாக்ஸி நிறுவனம் அதனை உண்மையாக்கி இலவசமாகப் படகுகளைவிட்டு, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டதுதான் இத்தனை பாதிப்பிலும் பாராட்ட வேண்டிய அம்சம்.

சொகுசு பங்களாக்கள்... சோக பங்களாக்கள்!

சென்னையில் அனைத்து வசதிகளும் கொண்ட, அமைதியாக வாழ ஏற்ற இடம் என்று தீபாவளிக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங்கில் உச்சத்தில் இருந்த வேளச்சேரியில், படகுப் போக்குவரத்து விடும் நிலை ஏற்பட்டது. வெனிஸ் நகரைப்போல வீடுகளை ஒட்டிப் படகுகள் விடும் அளவுக்கு சென்னை மாநகர், புறநகர் பகுதிகளை மாமழை புரட்டிப் போட்டுவிட்டது.

வேளச்சேரி ஏரியைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகள், பேருந்து நிலையம் அமைந்துள்ள விஜயநகரம், வேளச்சேரியில் இருந்து பெருங்குடிக்குச் செல்லும் நூறடி சாலை என அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளநீர் ஆறாக ஓடியது. முக்கியமான சாலைகளில் இந்த நிலைமை என்றால், குடியிருப்புகளில் மூன்றடி உயரத்துக்கு மேலே தண்ணீர் புகுந்துவிட்டது. வேளச்சேரியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 பேர் மீட்கப்பட்டு மேடான பகுதிகளில் இருந்த பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.


மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியாகக் கருதப்பட்ட மேற்கு தாம்பரம்  சி.டி.ஓ. காலனியில் ‘வில்லா’ என்றழைக்கப்படும் சொகுசு வீடுகள் அதிகம். வெளி ஆட்கள் யாரும் நுழைய முடியாத அந்த வீடுகளுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அழையா விருந்தாளியாக வெள்ளநீர் புகுந்தது. அனைத்து அடுக்குமாடிகளிலும் தண்ணீர் புகுந்துவிட்டதால் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்தில் தஞ்சம் அடைந்தனர். மின்வசதி, உணவு, குடிநீர் இன்றித் தவித்தனர். சிலர் நகருக்குள் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்குத் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

கனமழை கடந்த திங்கள்கிழமை ஓய்ந்தது. மழை ஓய்ந்தாலும் மக்களின் துயரத்துக்கு முடிவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முழுக் கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. எனவே, ஏரி மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் உதவி!

அடுத்தடுத்து தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டதால் குடியிருப்புகளுக்கு உள்ளே செம்பரம்பாக்கம் தண்ணீர் புகுந்தது. இதனால், சென்னையின் புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்தது. மணப்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீர் எந்த அதிகாரிகளுக்கும் கட்டுப்படவில்லை. புறநகர்களில் உள்ள பல ஏரிகளுக்கு முறையான வெளியேற்றுக் கால்வாய்கள் இல்லாத நிலையில், சிலர் அவசரப்பட்டு ஆங்காங்கே ஏரிக்கரைகளை உடைத்ததால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.

பேரிடர் மீட்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் சார்பாக 130 படகுகளைக் கொண்டு குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பல இடங்களில் மீட்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதுபோன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியோர் மீட்கப் பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் அளிக்கப்பட்டன.


குழந்தைக்குப் பால் வாங்க வழியில்லை!

வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களிடம் பேசினோம். முடிச்சூர் சோழன் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், “ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வந்தது. ஆனால், தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கி வீதியில் நின்ற தண்ணீர் வீட்டுக்குள் நுழைய ஆரம்பித்தது. முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேல் மாடி வீடுகளில் இருந்தவர்களிடம் அடைக்கலம் புகுந்தோம். கீழ்த்தளத்தில் இருந்த வீடுகளில் இரவில் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது.

என் குழந்தை பசியால் அழுதபோது பால் வாங்கக்கூட முடியாத நிலை. தண்ணீரைக் கொடுத்து சமாளிக்க வேண்டிய பரிதாப நிலையில் தவித்தோம். படகு வந்து எங்களை மீட்ட பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது” என்றார்.

மாத்திரைகள், சான்றிதழ்கள் நாசமாகின!

‘‘நள்ளிரவுதான் அதிக அளவில் தண்ணீர் வரத் தொடங்கியது. கால் மணி நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்தது. எந்தப் பொருளையும் எடுக்க முடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மாத்திரையை எடுக்க டிராவை திறந்தேன். அதிலும் தண்ணீர் போய்விட்டது. பீரோவிலும் தண்ணீர் புகுந்துவிட்டது. என் குழந்தைகளின் சான்றிதழ்களும் பாழாகிவிட்டன. போட்டது போட்டபடி வீட்டின் மாடிக்குப் போய்விட்டேன். இரண்டு நாட்கள் கழித்துத்தான் கீழ்த்தளத்துக்கு இறங்கி வந்தேன்” என்றார் கஸ்தூரி.

சி.டி.ஓ. காலனியைச் சேர்ந்த பென்னி, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், அது போரூர் ஏரிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், அந்தக் கால்வாய் சீர் செய்யபடாததால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீணாகப்போய்க் கொண்டு இருக்கும் தண்ணீர் முழுவதும் போரூர் ஏரிக்குப் போய் இருந்தால் சென்னையில் தண்ணீர் பஞ்சமே வராது. அதேபோல் பள்ளிக்கரணை ஏரியைத் திறந்தபோது கால்வாய் வழியே செல்ல வேண்டிய தண்ணீர், அது தூர்வாரப்படாததால், வீடுகளுக்குள் புகுந்தது. நீர்நிலைகள் வீட்டுமனைகளாக மாற்றி விற்கப்பட்டுவிட்டன. இதற்கு அரசு அனுமதி கொடுத்து விட்டு இப்போது நிவாரணம் வழங்குவது எதற்காக? பல வீடுகளில் கழுத்தளவு தண்ணீர் நின்றது. டி.வி., வி.சி.ஆர்., வாஷிங்மெஷின், கார், பைக், துணிமணிகள், புத்தகங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் சேதம் அடைந்துவிட்டன” என்றார்.



கைக்குழந்தைகள்... கர்ப்பிணிகள்!

மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த நோயாளிகளையும், குழந்தைகளையும் மீட்பதே சிரமமாக இருந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராகுல் என்பவர், ‘‘நாங்கள் சி.டி.ஓ. காலனியில் மீட்புப் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு சிரமங்களில் தத்தளித்த பலரை மீட்டோம். மூன்று மாதக் குழந்தையைப் படகில் ஏற்ற முடியாமல் தோளில் தூக்கியவாறே கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தோம். சிறுநீரகப் பிரச்னையில் தவித்த வயதான முதியவர் ஒருவரை, ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து ‘யூரினரி’ பையோடு அவரை படகில் மீட்டோம். வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களை மீட்டோம்’’ என்றார்.

ஆடுகள், மாடுகள், செல்லப்பிராணிகள்!

மனிதர்கள் மட்டுமின்றி, மாடுகள், வீடுகளில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளும் ஆறடி தண்ணீரில் சிக்கித் தவித்தன. பல இ்டங்களில் தெருக்களில் திரிந்துகொண்டிருந்த பன்றிகள் இறந்துவிட்டதால், துர்நாற்றம் வீசியது. வெள்ளத்தில் தத்தளித்த மாடுகளை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மாடுகளுக்குக் கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. பல  இடங்களில் மீட்புக் குழு வரும்வரை காத்திருக்காமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த நீச்சல் தெரிந்தவர்கள் டியூப்களைக்கொண்டு மக்களை மீட்டுள்ளனர். 


கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு, தனது கமாண்டோ சகாக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். “இதுவரை சுமார் 800 பேரை மீட்டுள்ளோம். நவீன ஃபைபர் படகுகளைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டோம்.  முடிச்சூரில் வீட்டுக்குள் தண்ணீர் நிரம்பிய அதிர்ச்சியில் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவருக்கு முதல் உதவிசெய்து, பத்திரமாக மீட்டோம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் தண்ணீரில் சிக்கிக்கொண்டார். அவரையும் பத்திரமாக மீட்டோம். வீதிகளில் தண்ணீர் நிரம்பிய நிலையில் ஆள் அரவமற்ற வீடுகளில், ஆடுகள் இரண்டாவது மாடியில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. அவற்றையும் மீ்ட்டு வந்தோம்.

முடிச்சூரில் பசுவும் கன்றும் மழை நீரில் சிக்கிக்கொண்டன. தாய்ப் பசுவுக்குக் கழுத்தளவு தண்ணீர். கன்றோ கிட்டத்தட்ட நீரில் மூழ்கிவிட்டது. முதலில் கன்றுக்குட்டியை மீட்டுக் கரை சேர்த்தனர். பிறகு, தாய்ப்பசுவை மீட்டுக் கொண்டுவந்தனர். கரை சேர்ந்த பசுவும் கன்றும் உயிர் மீண்ட மகிழ்ச்சியில் ஒன்றை ஒன்று நக்கிக்கொடுத்து பாசத்தைப் பொழிந்த காட்சி காண்போரை உருகவைத்தது’’ என்றார் சைலேந்திர பாபு.

ஆனந்த அனுபவத்தைத் தர வேண்டிய மழைக்காலம், சென்னை மக்களுக்குத் துயரத்தைத் தந்துள்ளது.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.ஹரிஹரன்


இயற்கையை வெல்ல முடியாது!

ஏரிகளை ஆக்கிரமித்தால் என்ன நேரும் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிட்டது சென்னையைப் புரட்டிப்போட்ட கனமழை. நீர்நிலைகளாக இருந்த ஏரிகளையும் கால்வாய்களையும் மனைகளாக மாற்றி விற்பனை செய்ததன் விளைவுதான், இன்று சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதற்குக் காரணம். மனிதர்கள் என்றைக்குமே இயற்கையை எதிர்க்கவோ, வெல்லவோ முடியாது என்பதற்கு சென்னையின் மழை, வெள்ள பாதிப்புகள் ஓர் உதாரணம்.

வெள்ள செய்தி!

சென்னையின் புறநகரில் ஞாயிற்றுக்கிழமை முதல் வீடுகளில் தண்ணீர் சூழந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தபோது, அரசு உடனடியாக  100-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. இந்தப் பணியில் தமிழகத்தில் கால்டாக்ஸி சேவையில் இருக்கும் ‘ஓலா’ நிறுவனமும் களத்தில் இறங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபைபர் படகுகளைத் தண்ணீர் தேங்கிய வேளச்சேரி, நந்தம்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் படையினரோடு இணைந்து ஈடுபட்டனர். இவர்கள் படகில் இரண்டு நீச்சல் தெரிந்த மீனவர்கள் படகோட்டிகளாக இருந்துள்ளனர். ஒன்பது பேர் உட்காரும் அளவிலான படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட படகுகளை ஓலா நிறுவனம் மீட்புப் பணிக்குப் பயன்படுத்தியுள்ளது. கால்டாக்ஸிக்குக் கட்டணம் வசூல் செய்யும் ஓலா நிறுவனம், இந்த மீட்புப் படகுகளை இலவச பயன்பாட்டில் இயக்கியது. தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையைப் பொறுத்து படகுப் போக்குவரத்து இயங்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுவா மனிதநேயம்?
சி.டி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இருந்தனர். தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியதும். தொண்டு நிறுவன நிர்வாகிகள், குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். மூதாட்டிகள் 25 பேரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர். தொண்டு நிறுவனத்தின் மாடிக்குச் சென்ற மூதாட்டிகள் காப்பாற்ற உதவி கேட்டு இரவில் கூக்குரலிட்டுள்ளனர். காலையில்தான் அவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் வசித்தவர்கள் மீட்புக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் வசிக்கும் சரண்யா “திங்கள் கிழமை படகு மூலம் எங்களை மீட்டனர். அப்போதுதான் மூதாட்டிகள் மீட்கப்பட்டனர். பலர் நடக்க முடியாத நிலையில் இருந்ததால் மீட்புக் குழுவினர் அவர்களைத் தூக்கி வந்து படகில் ஏற்றினர். 25 மூதாட்டிகளையும்  யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டதற்கு அவர்கள் தரப்பில் சாதகமான பதில் வரவில்லை என்பதுதான் வேதனை” என்றார் துயரத்துடன்.

ஹெலிகாப்டர் பயன்பாடு!

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் தங்கள் வீடுகளின் மாடியிலேயே முடங்கியதால் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஹெலிகாப்டர்கள் மூலம் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன. முடிச்சூர், வேளச்சேரி பகுதியி்ல் சிக்கியிருந்தவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், வெஜிடபிள் பிரியாணி ஆகியவை  இரண்டு நாட்களும் வழங்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் ஹெலிகாப்டர் பறக்க முடியாமல் அங்கு இருந்த மக்கள் தண்ணீருக்கே தவித்துள்ளனர். வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை வைத்து மூன்று நாட்களைச் சமாளித்துள்ளனர் பல குடும்பத்தினர். மின்சாரம் தொடர்ந்து தடைபட்டதால் செல்போன் சார்ஜ் இல்லாமல் உதவிக்குக்கூட யாரையும் அழைக்கமுடியாத பரிதாபத்தில் பல குடும்பங்கள் இருந்துள்ளன. மீட்புப் படையினர் வந்தும் பலர் தங்கள் வீடுகளின் மாடியில் இருந்து வர மறுத்துவிட்டனர். வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாக்க முடியாது என்று இவர்கள் கூறியுள்ளனர்.

விநோத வேண்டுதல்!

குடிதண்ணீர் இல்லை என்று சில நேரங்களில் குடங்களைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் அலையும் பெண்களைப் பார்த்திருக்கிறோம்.  இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மழை நிற்கவேண்டும் என “அம்மிக்கல்” வைத்து வேண்டுதல் செய்த விநோதமும் நடந்தேறியுள்ளது.

thanks vikatan