Thursday, March 02, 2023

VADH (2022) ஹிந்தி - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


வத்  என்றால்  ஹிந்தியில்  வதம்   என்று  ;பொருள் . எக்ஸ்க்யூஷன் . கடவுள்  அவதாரம்  அசுரனை  வதம்  செய்வது  போல  ஒரு  மனித  மிருகத்தை  ஒரு  சாமான்யன்  வதம்  செய்வது  தான்  கதைக்கரு 

கணவன் - மனைவி  இருவரும்  ரிட்டையர்டு  ஆன  ஆசிரியர்கள் . இருவருக்கும்  ஒரே  ஒரு  மகன்/. ஃபாரீனில்  இருக்கிறான். இவர்களுக்கு  இருந்த  ஒரே  சொத்தான  சொந்த  வீட்டை  அடமானம்  வைத்துக்கடன்  வாங்கி  அவனைப்படிக்க  வைக்க  வெளிநாடு  அனுப்புகிறார்கள் . வாங்கிய  15  லட்ச  ரூபாய்க்கடனுக்கு  வட்டி  கட்டிக்கொண்டு  இருக்கிறார்கள் 


இவரிடம்  சேமிப்புப்பணமாக  10  லட்சம்  தான்  இருந்தது , ஆனால்  மகனின்  வற்புறுத்தலால்  25  லட்ச  ரூபாய்  ரெடி  செய்து  தர  வேண்டிய  சூழலில் 15  லட்சம்  பிரைவேட்  பார்ட்டியிடம்  கடன்  வாங்கி  மகனைப்படிக்க  வைத்தார் 


 ஆனால்  மகன்  பெற்றோர்  மீது பாசமும்  இல்லாமல் தனக்காகத்தான்  அவர்கள்  கடன்  வாங்கி  இருக்கிறார்கள்  என்ற  அக்கறையும்  இல்லாமல்  அவர்களை  மதிக்காமல் இருக்கிறான். கை நிறைய  சம்பளம்  வாங்கினாலும்  சரியாகப்பணம்  அனுப்புவதில்லை . அவன்  மனைவி  அதாவது   தம்பதியின்  மருமகள்  அவனை  விட  மோசம்,  அவர்களிடம்  ஆன்  லைன்  வீடியோ  காலில்  பேசுவதற்குக்கூட  சம்மதிப்பதில்லை . நேரம்  கூட  செலவழிக்காதவளா  பணம்  செலவழிக்கப்போகிறாள்?


வயதான  தம்பதிக்கு  பிள்ளை , மருமகள்  பாசம்  தான்  கிடைக்கவில்லை , வீட்டிலாவது  நிம்மதியாக  இருக்க  முடிந்ததா?  வட்டிக்குப்பணம்  கொடுத்தவன்    மிரட்டுகிறான். அவன்  மோசமான   ரவுடி . தம்பதியின்  வீட்டுக்கு  வரும்போது ஒரு  பெண்ணையும்  உடன்  அழைத்து  வந்து  அவர்கள்  வீட்டை  இலவச  லாட்ஜ்  ஆக  பயன்படுத்திக்கொள்கிறான். தம்பதியின்  பக்கத்து  வீட்டில்  12  வயது  சிறுமி  ஒருத்தி  இருக்கிறாள் . அவள்  மீது  ரவுடி  தப்பான  பார்வை  வைக்கிறான்


தொடர்ந்து  ரவுடியின்  டார்ச்சரால்  கோபம்  அடைந்த  அந்த  வயதான நபர்  ஒரு  கட்டத்தில் அந்த  12  வயது  சிறுமியை  வட்டிக்குப்பதிலாக  தாரை  வார்த்துக்கொடு  என்று  கேட்கும்போது  கோபத்தில்;  அந்த  ரவுடியைக்கொலை  செய்து  விடுகிறார்


த்ரிஷ்யம்  படத்தில்  வருவது  போல  சாமார்த்தியமாக  அந்தக்கொலையை  எப்படி  மறைத்தார்?  போலீசிடம்  இருந்து  அவர்  தப்பினாரா?   என்பது  மீதி  திரைக்கதை 


வயதான  தம்பதி   ஆக  சஞ்சய்  மிஸ்ரா  மற்றும்  நீனா  குப்தா   இருவரும்  அருமையான  நடிப்பு . இயலாமையில்  தவிப்பதை  , மகனிடம்  இருந்து  அன்பு  மறுதலிக்கப்படுவதை  கண்களாலேயே  கடத்தி  இருக்கிறார்கள் 


போலீஸ்  இன்ஸ்பெக்டராக  மானஜ் விஜ்  கம்பீரமாக  வில்லனை  எதிர்கொள்வதிலும்  சரி , தன் அந்தரங்க  வீடியோ  அவனிடம்  சிக்கியபின் பம்மும்போதும்  சரி  இரு  விதமான  மாறுபட்ட  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


வில்லனாக  சௌரப் சச்தேவா  நமக்கு  வெறுப்பு ஏற்படுத்தும்  அளவில்  நடித்துள்ளார்


ஜஸ்பால்  சிங்க் சாந்து  மற்றும்  ராஜீவ் பர்ன்வால்  இருவரும்தான்  திரைக்கதை ,இயக்கம்


 ஒளிப்பதிவு  கனகச்சிதம் , குவாலியர்  எனும்  ஊரின்  அழகை  படம்  படித்துக்காட்டி  உள்ளார்  சப்பான்  நாருலா 


முதல்  ஒரு  மணி  நேரம்  திரைக்கதை  மிக  மெதுவாகவும்  கொலை  நிகழ்ந்த பின்  வரும் 50  நிமிடங்கள்  பரபரப்பாகவும்  நகர்கிறது 


110  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது . மிகக்குறைந்த  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில் 60  லட்சம் ரூபாய்  வசூல்  செய்துள்ளது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 

1  கோபத்தில்  கொலை  செய்வது கூட  ஓக்கே , ஆனால்  உடல்  பாகங்களை  துண்டு  துண்டாக  வெட்டி  அப்புறப்படுத்துவது , எலும்புகளை  அரவை  மிஷினில்  கொடுத்து  பவுடர்  ஆக்குவது  எல்லாம்  ஓவர்.


2   கொலை  நடப்பது  வீட்டில்  நடு  ஹாலில். பாத்ரூமில்  பாடியைக்கொண்டு  போய்  கட்  பண்ணி  டிஸ்போஸ்  செய்வதுதான்  புத்திசாலித்தனம். வாஷிங் , க்ளீனிங்  எல்லாவற்றுக்கும்  அதுதான்  உகந்ததாக  இருக்கும்,  நடு  ஹாலில்  இந்த  வேலையை  செய்தால்  என்னதான்  வாட்டர்  வாஷ் செய்தாலும்  ரத்த  வாடை  போகாது. போலீஸ்  வந்தால்  சந்தேகம்  வரும் 


3  டெட்  பாடியின்  துண்டுகளை  ஒரு  சாக்குப்பையில் கட்டி  மக்கள்  கூட்டம்  உள்ள  பஸ்சில் கொண்டு  போவது  எல்லாம்  ரிஸ்க். நாம  சாதாரணமா  துணி , காய்கறி  லக்கேஜ்  கொண்டுபோனாலே  கண்டக்டர்  ஓப்பன்  பண்ணி  காட்டு, உள்ளே  என்ன  இருக்கு?  செக்கிங்  ஆஃபீசர்  வந்தா  நான்  தான்  பதில்  சொல்லனும்  என்பார், ஆனால்  பெரியவர்  ரொம்ப  அசால்ட்டாக  சாக்கு  மூட்டையை  பஸ்சில்  கொண்டு  போவது  நம்பகத்தன்மையே  இல்லை 


4  பஸ்சிலோ, ரயிலிலோ  எளிதில்  தீப்பற்ரக்கூடிய பொருட்களை  எடுத்துச்செல்ல  அனுமதி  இல்லை, ஆனால்  பெரியவர்  இரவு  நேரத்தில்  பெட்ரோல்  கேனில்  பெட்ரோலுடன்  பயணிக்கிறார். கண்டக்டர்  எப்படி  அதை  அனுமதித்தார். அட்லீஸ்ட்  கட்டைப்பையில்  மறைத்தாவது  கொண்டு  போவதாக  காட்டி  இருந்தால்  நம்பும்படி  இருந்திருக்கும்


5  கொலை  ஆன  வில்லனின்  மனைவி  தன்  குழந்தையுடன்  நாயகன்  வீட்டுக்கு  வந்து  விபரம்  கேட்கும்போது  வசனகர்த்தா  ஒரு  பிழை  செய்து  விட்டார். கொலை  ஆன அடுத்த  2  வது நாளே  வந்த  மனைவி “ இந்த  குழந்தை  அப்பா  எங்கெ?னு  தினமும்  கேட்டுட்டு, நச்சரிச்சுட்டு  இருக்கா, அவளுக்கு  என்ன  பதில்  சொல்ல?   இந்த  வசனம்  தவறு. இனி  வரும்  காலங்களில்  டெய்லி  கேட்பாளே? என்ன  பதில்  சொல்ல  என்பதே  சரியான  வசனமா  இருக்கும்


6  கணவன்  மிஸ் ஆகி விட்டான் என  வருத்தத்தில்  இருக்கும்  ,மனைவி  ஃபுல் மேக்கப்பில்  லிப்ஸ்டிக்  உட்பட  உலா  வருவது  உறுத்துகிறது. மேக்கப் மேன்  டல்  மேக்கப்  போட்டிருக்கலாம் 


7  ஒப்புதல் வாக்குமூலம்  தந்த  நாயகனின்  வாக்கை  நம்பாமல்  போலீஸ்  அவரை  திருப்பி  அனுப்புவதில்  லாஜிக்கே  இல்லை, அவங்களுக்கு  ஒரு  கேஸ்  முடியுது , அந்த  வாய்ப்பை  ஏன்  இழக்கறாங்க ?


8 செல் ஃபோனில்  இருந்து  சிம்  கார்டை  தனியா  கழட்டி  எடுத்திருந்தால்தான்  அவுட்  ஆஃப்  கவரேஜ்   ஏரியா  என  குரல்  வரும், பேட்டரி  டவுன்  ஆகி  செல் ஃபோன் ஸ்விட்ச்  ஆஃப்  ஆகி  விட்டால்   குரல்  ஸ்விட்ச்டு ஆஃப்  என்று தான்  வ்ரும். ஆனால்  போலீஸ்  ஆஃபீசர்  வில்லனின்  செல்லுக்கு  ஃபோன்  செய்யும்போது  அவுட்  ஆஃப்  கவரேஜ்   ஏரியா  என  குரல்  வருகிறது 


9 ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க  நாயகன்  வந்தபோது   ஹெட்  கான்ஸ்டபிளோடு   2  கான்ஸ்டபிள்களும்  பெஞ்ச்சில்  வேறு  இருவரும்  அமர்ந்திருந்தனர். அவர்களும்   சாட்சியே . ஆனால்  நாயகன்  நான்  அப்படி  எல்லாம்  வாக்கு  மூலம்  தரவில்லை  என  பல்டி  அடிக்கும்போது  ஆதாரம்  இருக்கிறது  என  போலீஸ்  சொல்லவிலையே? 


10  சைக்கிள்  ரிக்‌ஷாக்காரன்  போலீஸில்  ஸ்டேட்மெண்ட்  கொடுக்கும்போது  நாயகன்  வழக்கமா பேரம்  பேசுவார், சம்பவம்  ந்டந்தபோது  பேரம்  பேசலை  என  சொல்றான், ஆனா  சாக்கு  மூட்டைல  பிணம்  இருந்ததால  அந்த  வாடை  அடிப்பது  பற்றி எதூவும்  சொல்லலை. அதே  போல  [பஸ்சில்  ப்யணிக்கும்போதும்  அந்த  பிரச்சனை  நாயகனுக்கு  வரவில்லை 


11 வில்லன்  தன்  செல்  ஃபோனில்  போலீஸ்  ஆஃபீசரின்  அந்தரங்க  வீடியோ  க்ளிப்  கேலரியில்  வைத்திருக்கிறான், ஆனால்  ஃபோன்  லாக்  செய்யாமல்  இருப்பானா? அவனது  ஃபோனை  நாயகன்  ஓப்பன்  பண்ணி  எப்படிப்பார்க்க  முடிந்தது ?


 12 போலீஸ்  ஆஃபீசர்  ஒரு   பெண்ணுடன்  இருப்பதை  வீடியோ எடுத்து  வைத்து  பொலீசையே  ரவுடி  மிரட்டி  வருகிறான்  என்பதும்  நம்பும்படி  இல்லை . அப்பவே  அவனை  லாக்கப்ல  தள்ளி  ஃபோனை  பிடுங்கி  இருந்தா  மேட்டர்  ஓவர்

13  டெட் பாடியை  அவ்வளவு  கனகச்சிதமாக  அப்புறப்படுத்துபவர்  தான்  கொலை  செய்த  நபரின்  செல்  ஃபோன்  தன்  வீட்டில்  கிடப்பதை  கவனிக்கவில்லை  என்பதும்  நம்பகத்தன்மை  இல்லை 


ரசித்த  வசனங்கள்


 1 இந்த  நகர  வாழ்க்கைல  குளிக்கறதுக்குக்கூட  தண்ணீர்  கிடைக்க  மாட்டேங்குது , ரேஷன்  கடைல  தர்ற  மாதிரி  அளந்து  ஒரு  பக்கெட்  தண்ணீர்தான்  கிடைக்குது, அடுத்த  ஜென்மத்துல  செடி, கொடி ,மரமாப்பிறந்தாலாவது  தண்ணீர்  இஷ்டம்  போல  கிடைக்கும்


2  ஸ்கூலில்  ஒரு  மாணவனை  அடித்த  போது  மூன்று  நாட்கள்  தூங்க  முடியாம  இருந்தேன், ஆனா  இவனைக்கொலை  செஞ்ச  பின்னும்  நிம்மதியா  என்னால  தூங்க  முடிஞ்சுது 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை  என்பதால்  ஸ்லோ பர்ன்  த்ரில்லர்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம், வன்முறைக்காட்சிகளோ, , அடல்ட்  கண்ட்டெண்ட் காட்சிகளோ  இல்லை . ரேட்டிங் 2.25 / 5



Vadh
Vadh 2022 film poster.jpg
Theatrical release poster
Directed byJaspal Singh Sandhu
Rajiv Barnwal
Written byJaspal Singh Sandhu & Rajiv Barnwal
Produced byLuv Ranjan
Ankur Garg
Neeraj Ruhil
Nymphea Saraf Sandhu
Subhav Sharma
Starring
CinematographySapan Narula
Edited byBharat S Rawat
Music byGurcharan Singh
Production
companies
Luv Films
J Studio
Next Level Productions
Distributed byYash Raj Films
Release date
  • 9 December 2022

Wednesday, March 01, 2023

SHEFEEKKINTE SANTHOSHAM (2022) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா - @ அமேசான் பிரைம்


நம்  உணவுப்பொருட்களில்   சமையலில்  கசகசா  வாசனைப்பொருளாக  பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில்  கசகசா  அனுமதிக்கப்பட்ட  உணவுப்பொருள். ஆனால்  வெளிநாடுகளில்  தடை செய்யப்பட்ட  போதைப்பொருள். வெளிநாடு  போகும்  ஒரு  இந்தியர்  இந்த  விஷயம்  தெரியாமல்  கசகசாவை  பேக்  பண்ணி  கொண்டு  சென்றால்  அங்கே  மாட்டிக்கொள்வார். அந்த  மாதிரி  ஒரு  சிக்கலில்  மாட்டிக்கொள்ளும்  வெளிநாட்டு  இந்தியனின்  கதை  தான்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

ஷெஃபிக்கிண்டே சந்தொஷம்  ( ஷெஃபிக்கின்  சந்தோஷம்)  படத்தின்  ஒன்  லைன்  என்ன?   TOO MUCH OF SWEETNESS IS  NOT GOOD FOR LIFE    எல்லாமே  ஒரு  அளவாதான்  இருக்கனும்  என்ற  கரு தான்  எடுத்தாளப்பட்டிருக்கிறது . ஒரு  ஃபீல்  குட்  மூவியில்  ட்விஸ்ட்ஸ்  அண்ட்  டர்ன்ஸ் இவ்வளவு  புகுத்த  முடியுமா? என  ஆச்சரியப்படுத்துகிறது.தன்னைச்சுற்றி  உள்ள  அனைவருக்கும்  ஏதாவது  நல்லது  செய்யும்  கேரக்டர்  ஒரு  சமயத்தில்  சிக்கலில்  ,மாட்டிக்கொள்ளும்போது  மற்றவர்கள்  ரீ  ஆக்சன்  என்ன? என்பதை  படம்  விளக்குகிறது 


 நாயகன் துபாயில்  பணி  செய்யும்  இந்தியர். வருடாந்திர  விடுமுறைக்காகவும், அவருடைய  திருமணத்துக்காகவும்  இந்தியா  வருகிறார். வரும்போது  பலருக்கு  பல விதமான  பரிசுப்பொருட்களைக்கொண்டு  வருகிறார். அவருடைய  டாக்டர்  நண்பருக்கு ஹூக்கா  எனப்படும்  புகை  போக்கி பரிசாகக்கொண்டு  வருகிறார். அதில்  உள்ள  புகையிலையில்  மயக்க  மருந்து  இருக்கிறதா? என  போலீஸ்  செக்  செய்ய  லேபிற்கு  அனுப்புகிறது. நாயகன்  கைது  செய்யபப்டுகிறார். நிச்சயிக்கப்ப்ட்ட  அவரது திருமணம்  நிற்கிறது .  ரிசல்ட்  வரும்  அந்த  15  நாட்களுக்குள்  நாயகன்  வாழ்க்கையில்  நடக்கும்  திருப்பங்களே  திரைக்கதை 


நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ப்ரியன்  ஓடத்திலானு  எனும்  மலையாளப்படத்தின்  நாயகன்  பிரியன்  கேரக்டர்  போல்  வடிவமைக்கப்பட்டு  இருக்கிறது ., நாயகனாக  உன்னி  முகுந்தன்  இந்த  கேரக்டரை  ஏற்று  நடிப்பதில்  கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார். இதற்கு  முந்தைய  இவரது  படங்களில்  அச்சாயன்ஸ்,(ACHAYANS)  பிரமம்  ( BRAHMAM)  , அவ்ருடய  ராவுகள்  , ( AVARUDE RAAVUGAL)  ஆகிய  படங்களில் அவரது  கேரக்டர்  கச்சிதமாக  வடிவமைக்கப்பட்டிருக்கும், மிக  இயற்கையாக  நடித்திருப்பார். இந்தப்பட  கேரக்டர்  அவரது  சொந்தப்படமான  மேப்படியான்  ( MEPADIYAN)


ஆயுர்வேதிக்  டாக்டராக  வரும்  மனோஜ்  கே  ஜெயன்  நடிப்பும்  , காமெடியும்  அருமை . அவரது  க்ளினிக்கில்  பணியாற்றும்  பெண்ணாக ஆத்மியா ராஜன் அழகாக  வந்து  போகிறார். ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  நாயகன்  இவரைத்தான்  காதலிக்க  முயற்சிப்பது  போல  காட்டப்படுகிறது. அவை  மிக  சுவராஸ்யம்


 நாயகனுக்கு  திருமணம்  நிச்சயிக்கப்பட்ட  பெண்ணாக  திவ்யா  பிள்ளை அழகான  முகம், அருமையான  நடிப்பு. நாயகனின்  நண்பனாக  வரும்  பாலா  காமெடி  டிராக்கில்  ஆரம்பத்தில்  கலக்குபவர்  க்ளைமாக்ஸில்  ஒரு  எதிர்பாராத  ட்விஸ்ட்  வைக்கும் கேரக்டராக  மாறுகிறார்


இரண்டு  மணி  நேரம்  ஓடும்  கதையில்  முதல்  பாதி  கலகலப்பு  , டூயட்  என  வேகமாக  நகர்கிறது .  நாயகன்  கைது  செய்யப்படும்  காட்சியிலிருந்து  கதை   சோக  மூடுக்குள்  சென்ற  பிறகு  ஸ்லோ  ஆகிறது. ஒரு  சராசரியான  ஃபீல்  குட்  மெலோ  டிராமா  அமெசான் பிரைம்  ரிலீஸ் 


ரசித்த  வசனங்கள் 


 1  ஷெஃபீக்  வர  இன்னும் இரண்டு  நாட்கள்  டைம்  இருக்கே? ஏன்  இப்பவே  வாழைப்பூவை  வெட்டி  எடுக்கறே?


 வாழைத்தோபு ஓனர்  நாளை  இங்கே  வர்றார், அதுக்குப்பின்  எடுக்க  முடியாதே? 


 2  என்னது ? இலவச  சிகிச்சையா? அப்போ  என்  பேரையுல்  லிஸ்ட்ல  எழுதிக்கோ 


 உங்களுக்குத்தான்  பைல்ஸ்  இல்லையே? அப்றம்  எதுக்கு ?


3  பொண்ணு  வீட்டுக்காரங்க  வந்தாங்களாமே? நிச்சயம்  ஆகிடுச்சா?


 ஆமா, பொண்ணு  எனக்கு  இல்லைனு  நிச்சயம்  ஆகிடுச்சு 


4 பொழைப்பு தேடி  ஃபாரீன்  வர  எனக்கு  ஒரு  காரணம்  உண்டு 


 நீ மட்டுமில்ல, ஃபாரீன்  வரும் எல்லாருக்கும்  ஒரு  காரணம்  இருக்கும் 


5   மூலம்  கற  வியாதி  உனக்கு  மட்டும்  இல்ல , எல்லாருக்கும்  உண்டு , சச்சின்  டெண்டுல்கருக்குக்கூட  மூலம்  உண்டு 


 எப்படி  சொல்றே?


 அவரு  பேட்டிங்  பண்றப்போ  நோட்  பண்ணு , இப்படி  இப்படி  மூவ்  பண்ணுவாரு 


6  பிளட் பிரஷரும்.,  சுகரும்  தீர்க்க  முஜ்டியாத  வியாதிகள், ஆனா  அதை  வெளில  சொல்ல  யாரும்  கூச்சப்படுவதில்லை , ஆனா  மூல  வியாதி  சரியா  மருந்து  சாப்பிட்டா  தீரக்கூடிய  வியாதி , அதை  வெளில  சொல்ல  நாம  கூச்சப்படறோம்


7  கடைல  எனக்கு  தெரிஞ்ச  ஆள்  உண்டு 50%  டிஸ்கவுண்ட்  வாங்கித்தர்றேனு  சொன்னியே?


 அது  வந்து...  நீ  வாங்குனது  குவாலிட்டியான  சாதனம்   அதுக்கு  டிஸ்கவுண்ட்  கிடைக்குமா?

8  உங்க  பையனுக்கு  அவுர்ங்கசீப்னு  ஏன்  பேர்  வெச்சீங்க ?


 அது  ஒரு  பேரரசன்  பேரு, அதுக்கு  என்ன  குறைச்சல்?


 சொந்த  அப்பாவையே  ஜெயில்ல தள்ளியவர்  அவர். குழந்தை  எப்படி  வளரப்போகுதோ ?


 அய்யய்யோ


9   இந்த  மிட் நைட்ல  அவனுக்கு  கால்  பண்றதா?  சரி  பண்றேன்,  ஆனா  க்ட்   பண்றானே? தூங்கி  இருப்பானோ?


 தூங்குனவன்  எப்படி  கால்  கட்  பண்ண  முடியும் ?


10   நம்  வீட்டில்  உள்ளோரும், நாட்டில்  உள்ளோரும்  எல்லோரும்  அன்பு  செலுத்தனும்னா  அவன்  அனாதையாகத்தான்  இருக்கனும்,  நம்மளை  மாதிரி ஆட்களுக்கு  அந்த  பாக்கியம் கிடைக்காதுதானே?


 


சபாஷ்  டைரக்டர்


1  மூல  வியாதி  வந்த  நாயகன்  மூலம்  ஸ்பெஷலிஸ்ட் டாக்டரைக்காண ஹாஸ்பிடல்  வந்து  அங்கே  உள்ள  ரிசப்ஷனிஸ்ட்  இடம்  முழங்கால்  வேதனை  என பொய்  சொல்லி  அப்பாயிண்ட் மெண்ட்  வாங்கி  வெயிட்  பண்ண  அங்கே  நடக்கும் அமளி  துமளி  காமெடி  சம்பவங்கள்  அடி ;பொலி   


2  தமிழ்  ஆட்டோ  டிரைவராக  வரும்  பாலா  கேரக்டர்  டிசைன்  அருமை , குறிப்பாக  க்ளைமாக்ஸில்  அவர்  குற்ற  உணர்ச்சியுடன்  நாயகன்  முன்  ஒரு  நடை  நடப்பாரே, பிரமாதம்


3   மெயின்  கதையில்  வரும்  நாயகன் - நாயகி  காதல்  காட்சிகளை  விட  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  வரும்  நாயகன் - இரண்டாம்  நாயகி   காம்போ  காட்சிகள்  சுவராஸ்யம்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


 1  பொதுவாக  மலையாளப்படங்களில்  காட்சிகளும், வசனங்களும்  யதார்த்தமாக  உண்மைக்கு  மிக  நெருக்கமாக இருக்கும், ஆனால்  இதில்  நாயகன்  பேசும்  பல  வசனங்கள்  ஒரு  தத்துவவாதியின்  ஸ்பீச்  போல  டிராமடிக்காக  இருந்தது 


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல் தமிழனை , தமிழ்  நாட்டு  மக்களை  மட்டம்  தட்டும்  காட்சி  அமைப்புகள் , வசனங்கள்  இருப்பது  சர்க்கரைப்பொங்கலில்  கல் 


3    ஆதாரம்  இல்லாமல்  போலீஸ்  நாயகனை  நிச்சயதார்த்தம்  அன்று  கைது  செய்வது  ஏற்புடையது  அல்ல, அதிலும்  அவரை  அடிப்பது  எல்லாம்  ஓவர்



 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -    மெதுவாகச்செல்லும்  மலையாள  ஃபீல்  குட்  மூவி  பார்த்துப்பழக்கம்  உள்ளவர்கள்   பார்க்கலாம்,  சராசரி  படம்  ரேட்டிங்  2.25 / 5 


டிஸ்கி - எந்த  ஓடிடி  என  டைட்டிலிலேயே   மென்சன்  பண்ணிடறேன். ஆங்கில  சப் டைட்டில்  இருக்கு. தமிழ்  ஆடியோ  இருக்கா?னு  கேட்டு  பல கமெண்ட்ஸ்  வருது . இல்லை , அதுக்கு  அவசியமும்  இல்லை . மலையாளம், தெலுங்கு , தமிழ்  எல்லாம்  ஒரே  மாதிரி  தான்  இருக்கும், குத்து மதிப்பா  புரிஞ்சுக்கலாம், பத்தாததுக்கு  சப்  டைட்டில்  இருக்கு 

Sunday, February 26, 2023

வயசுப்பொண்ணு (1978) - தமிழ் - சினிமா விமர்சனம்

  ஸ்பாய்லர்  அலெர்ட்


இதயம்  பேசுகிறது  மணியன்  எழுதிய  தொடர்கதையான  லவ் பேர்ட்ஸ்  நாவல்  வடிவில்  வந்து  பின் சினிமாப்படம்  ஆகி  உள்ளது 


நாயகியோட  அக்கா  அம்மா , அப்பா  பேச்சைக்கேட்டு அடக்க  ஒடுக்க மாக  இருக்கும்  குடும்பப்பெண் , நாயகி  மாடர்ன்  கேர்ள்  ஆக  வாழ  விரும்பும்  ஆடம்பரமான  பெண்.நாயகன் ஒரு  வெட்டி  ஆஃபீஸ். அவன்  கூட  ஊர்  சுத்திட்டு  இருக்கா  நாயகி. அதை  அப்பா  பார்த்து  கண்டிக்க  நாயகி  லூஸ்  மாதிரி  வீட்டை  விட்டு  ஓடிப்போக  முடிவு  பண்ணி  ரயில்  ஏறி  எங்கேயோ  போக  முடிவு  பண்றா. ரயிலில் ஒரு  பணக்காரர்  சினேகிதம்  கிடைக்கிறது. அவர்  கூடவே  அவரது  பங்களாவிற்கு  செல்கிறார். அங்கே  தங்குமிடம்  தந்து  வேலையும்  தருகிறார் பணக்காரர். நாயகியை  அவர்  எதுவும்  தொந்தரவு  செய்யவில்லை , ஆனால்  அந்த  பணக்காரர்  வேறு  பெண்களுடன்  நெருக்கமாக  இருப்பது  நாயகிக்குப்பிடிக்கவில்லை , அதனால்  அவரை  விட்டு  விலக  நினைக்கிறா:ள்


 நாயகி  பட்டணத்தில் நல்ல  வேலையில்  இருப்பதை  அறிந்த  நாயகியின் அக்கா  தங்கையைப்பார்க்க  பட்டணம்  வருகிறாள் . நாயகன்  நாயகி , நாயகியின்  அக்கா  இருவரையும்  ஃபாலோ பண்ணி  அங்கே  வருகிறான். இந்த  சமயத்தில்  நாயகி  சில  ரவுடிகளால்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படுகிறாள் 


 இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதுதான்  திரைக்கதை 


சேலை  அணி  ந்து  அடக்க  ஒடுக்கமாக  இருந்தால்  யாரும்  ரேப்  செய்ய  மாட்டார்கள் , மாடர்ன்  டிரஸ்  போட்டால்  அரை  குறை  ஆடை  தப்பு  செய்ய  ஆண்களைத்தூண்டும்  என்பதுதான்  கதையின்  ஒன்  லைன் . இதைக்கண்டு  பிடிக்க  ரெண்டரை  மணி  நேரம்  ஆனது ., இது  ஒரு  தோல்விப்படம், ஆனா  அட்டகாசமான  பாட்டு  ஒண்ணு  இருக்கு 


நாயகியாக  ரொஜா  ரமணி  அழகிய  முகம் அருமையான  நடிப்பு ., கிளாமரான  தோற்றம்  நாயகியின்  அக்காவாக லதா  பண்பட்ட  நடிப்பு  , கண்ணிய  உடை 


நாயகனாக  முத்து ராமனுக்கு  நவரச  நாயக்ன்  கார்த்திக்கின்  ரோல், அக்கா, தங்கை  இருவருக்கும்  நூல்  விடும்  கேரக்டர் 


 பணக்காரராக  நம்பியார் , இவரை  வில்லன்  மாதிரி  காட்டலாமா? நல்லவராகக்காட்டலாமா?? என  இயக்குநருக்குக்குழப்பம் 

எம் எஸ்  விஸ்வநாதன் இசையில்   மூன்று  பாடல்கள், அதுல  ஒரு  பாட்டு  மெகா  ஹிட் 


இரண்டரை  மணி  நேரம்  ஓடும்  அளவுக்கு  இழு  இழு என  இழுத்து  ட்ரிம்  பண்ணி  எடிட்  பண்ணி  இயக்கி  இருப்பவர்  கே  சங்கர் 


ராஜாராம்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  காஞ்சிப்பட்டுடுத்தி  கஸ்தூரிப்பொட்டு  வைத்து  தேவதை  போல்  நீ  நடந்து  வர  வேண்டும் 


2  அதோ  அதோ  ஒரு   செங்கோட்டை  இதோ  இதோ  ஒரு பெண்  கூட்டை  நான்  ஒரு   மும்தாஜ் , நீ ஒரு  ஷாஜகான்


3  மாத்தலாத்தா


4  மை  ஹூங்  லக்கி  லக்கி 


  ரசித்த  வசனங்கள் 


1   எங்க  வீட்டு  பசு  மாடு  பொல்லாதது , உங்க  வீட்டுக்காளையை  அடக்கி வைங்கனு  சொல்ல  முடியுமா?


2  பெண்கள்  தலை  குனிந்து  நடந்தாதான்  ஆண்கள்  தலை  நிமிர்ந்து  நடக்க  முடியும்


3  அடுத்தவங்களைப்பத்தி  கவலைப்பட்டுட்டே  இருந்தா  நாம  சந்தோஷமா  இருப்பது  போய்டும்

4   அவ  வழி  தவறிப்போறா , நீங்க  முறை  தவறிப்போறீங்க 

5  அவ  படி  தாண்டி  வெளில  போய்ட்டா, இனி நான்  எப்படி  படி  தாண்டி  வெளீல  போக  முடியும் ? 


6  அவ  இப்படி  தறிகெட்டுப்போகக்காரணம்  குறைந்த  பட்ச  சுதந்திரத்தைக்கூட  நீங்க  தராததுதான்

7  திருப்தியா  சாப்பிடறவங்களாலதான்  ஒரு  செயலை  முழுசா  செய்ய  முடியும்

8  இவ  தன் பேருக்கு  ஏத்த  மாதிரி ஆடி  அசைஞ்சு  ஸ்லோவாதான்  போவா  , ஏன்னா இவ  பேரே  சுலோச்சனா

9  தப்பை  மடில  கட்டிக்கிட்டவங்க  நாம  பணிஞ்சுதான்  போகனும்


10  நான்  ஒண்ணு  சொன்னா  தப்பா  நினைக்க  மாட்டீங்களே?

  நீங்க  எப்படி  நினைச்சுக்கச்சொல்றீங்களோ  அப்படியே  நினைச்சுக்கறேன்


   11 உடைஞ்சு  போன  தேனடைல  கூட  ஒரு  சொட்டுத்தேனாவது  மிச்சம்  இருக்கும் 


12  உலகத்துல  எத்தனையோ  பேரைப்பார்க்கிறோம், பழகுகிறோம், ஆனா  யாரோ  ஒரு  சிலர்  மேல தான்  பாசமும், அன்பும்  தோணுது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஸ்விம்மிங்  டிரஸ் ல  நீ  எவ்ளோ  அழகா  இருக்கே  தெரியுமா? அதை  உனக்கு  காட்டத்தான்  ஆள்  விட்டு  ஃபோட்டோ  எடுக்கச்சொன்னேன்  என  நாயகன்  சொன்னதும்  நாயகி  கோபப்பட்டு  கண்ணாடி  முன்  பார்த்தா  தெரியுமே? எதுக்கு  அதை  ஃபோட்டோ  எல்லாம்  எடுக்கனும்னு கேட்டிருக்க  வேண்டாமா? 


2  அக்கா , தங்கை  இருவரும்  ஒரே  காலேஜில்  படிக்கிறார்கள்,  தங்கை  அடிக்கடி  லீவ்  போடுகிறாள். ஒரு  முறை  ஒரு  சித்தி  வீட்டு  விசேஷம் என  லீவ்  போடும்போது  தங்கை  சொல்வது  உண்மையா? என  தெரிந்து  கொள்ள  காலேஜ்  பிரின்சிபால்  அக்காவைக்கூப்பிட்டு  விசாரிக்கிறார்கள். அக்கா  லீவ்  எடுக்கலை  என்னும்போது  அது  டுபாக்கூர்  என்பது  நமக்கே  தெரியுதே? பிரின்ஸ்க்கு  தெரியாதா? 


3  நாயகி  ஸ்விம்  டிரசில்  இருப்பதை  ஃபோட்டோ  எடுத்தது  அப்பாவுக்கு  தெரிய  வந்ததும்  பிரச்சனை  ஆகிறது .,  அப்போ  நாயகி  நாயகனிடம்  இந்த  ஃபோட்டோ  எப்படி  பப்ளிக்ல  லீக்  ஆச்சு ? என  கேட்டு  சண்டை  போட்டிருக்க  வேண்டாமா? ஆனா  செய்யல


4 வில்லன்  சென்னை  டூ  டெல்லி  போக  ரிசர்வேஷன்  டிக்கெட்  எடுத்திருக்கிறான், நாயகிக்கு  அன் ரிசர்வ்டு  கம்பார்ட்மெண்ட்  ஓப்பன்  டிக்கெட்  எடுத்துத்தருகிறான்,  நாயகி  எப்படி  வில்லனுடன்  ரயிலில்  ஒரே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  பயணிக்க  முடியும் ?


5  நாயகி  தன்  அக்காவுடன் , வீட்டில்  இருக்கும்போது  ரொம்ப  ஃப்ரீயா  இருப்பது  போல  காட்டிக்கொள்பவள்  வீட்டை  விட்டு  வெளியே  வந்ததும்  ரொம்ப  கட்டுப்பெட்டியான  பெண்  போல்  நடந்து  கொள்வது  கேரக்டர்  டிசைனில்  நிகழ்ந்த  குழப்பம் 


6  காஞ்சிப்பட்டுடுத்தி  கஸ்தூரிப்பொட்டு  வைத்து  தேவதை  போல்  நீ  நடந்து  வர  வேண்டும்   பாடல்  காட்சியில்  சரணம்  வரிகள்  “ நீ  பொய்க்கோபம்  கொண்டு  என்னை  நீ  விலக்கனும்  என  காட்சிப்படுத்தும்போது  நாயகி  கோபமே  படலை , வெட்கம் தான்  படுது . சூப்பர்  ஹிட்  பாட்டு  பிக்சரைசேஷனில்  கோட்டை  விட்டு  விட்டார்களே? 


7  நாயகி  வீட்டில் சண்டை  போட்டுக்கொண்டு  எல்லாம்  வரவில்லை , அக்கா  தேடி  வரும்போது  அவரை  அலட்சியம்  செய்வதற்கான  காரணம்  சொல்லப்படவில்லை 


8  நாயகி  ஹோட்டலில்   சாப்பிட்டு விட்டு  அக்காவுக்குப்பிடித்த  க்ளோப்ஜாமூன்  பார்சல்  வாங்குகிறாள் , அதிகபட்சம்  10 வாங்குனாக்கூட  பார்சல்  சைஸ்  என்ன  சைஸ்ல  இருக்கலாமோ  அதை  விட  25  மடங்கு  பெருசா  அந்த  பார்சல்  இருக்கு


9   ஹோட்டலில்  நாயகி  சாப்பிடும்போது 4  பொறுக்கிப்பசங்க  அவளை  உத்துப்பார்க்கறாங்க , அப்பவே  அவ   உஷார்  ஆகி    நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  தகவல்  தெரிவித்திருக்கலாமே?


 10  ஹோட்டலில்  லேட்  நைட்  ஆகி  விட்டதால்  நாயகி டாக்சியில்  வரும்போது  பேக்  கிரவுண்டில்  இருட்டாக  இருக்கிறது , ஆனா  ரவுடிகள்  அவளை  ஃபாலோ  பண்ணி  ரேப்  பண்ணும்போது  வெளிச்சம்  வெய்யில்  இருக்கு , அடுத்த  நாள்  காலை  வரை  வெயிட்  பண்ணி  ரேப்  பண்ணி  இருப்பாங்களோ ? 

11   கல்யாண  மேடையில்  நாயகி , நாயகன்  ஏதோ  ஒரு  ஆளிடம்  தகறாரு  செய்து  ஃபைட்  போட்டுக்கொண்டு  இருக்கிறார். டெம்ப்போ  ஏத்தறதுக்கான  சீனா? நம்பகத்தன்மையே  இல்லை ,  காலைல 6  மணிக்கு  முகூர்த்தத்தை  வெச்சுட்டு  யாராவது  அலாரம்  வெச்சு  நாலரை  மணிக்கு  வெள்ளென  எழுந்து  போய்  சண்டை  போட்டுட்டு  இருப்பாங்களா? 


12  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ஆரம்பம்  முதல்  கடைசி  வரை   நாயகி  அல்லது  நாயகியின்  அக்கா  யார்  கிடைச்சாலும்  கரெக்ட்  பண்ணிடலாம்  என்ற  எண்ணத்தில்  இருப்பவராகத்தான்  காட்டப்படுகிறார், ஆனால்  க்ளைமாக்சில்  நாயகியின்  அக்காவிடம்  உனக்காகத்தான்  உன்  தங்கை  பாதுகாப்புக்காக  அவள்  பின்னால்  சுற்றினேன்  என  பல்டி  அடிப்பதும்  நாயகி  தன்  அக்காவிடம்  அக்கா  நீயும்  அவரும்  ஒருவரை  ஒருவர்  விரும்புகிறீர்கள்  என  எனக்குத்தெரியும் என  சொல்வதும்  நம்ப  முடியாத காட்சிகள் 


13  வில்லனான  நம்பியார்  லேடீஸ்  விஷயத்தில்  வீக் என   சில  காட்சிகளில்  தெளிவாக  காட்டி  விடுகிறார்கள், முன்  பின்  அறிமுகமே  இல்லாத  நாயகிக்கு  அவர்  உதவுவது , வீட்டில்  தங்க  ஏற்பாடு  செய்வது  எல்லாமே  உள்  நோக்கம்  கொண்டுதான்  என்பது  தெள்ளத்தெளிவாகதெரிகிறது , ஆனால்  அவரை  அநியாயத்துக்கு  நல்லவன்  ஆகக்காட்டி  இருப்பது  எல்லாம்  ஓவர் 


14  நாயகிக்கு  ஹிந்தியே  தெரியாது , ஆனால்  க்ளைமாக்சில்  அவர்  ஹிந்திப்பாட்டு  பாடுவது  போல  காட்டி  இருக்கிறார்கள் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகி  கிளாமர்  டிரசில்  வருகிறார். மற்றபடி  அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சிகள்  இல்லை . ரேப்  சீன்  கூட  பூடகமாக  உணர்த்தப்படுகிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - . நாவலாக வந்து  படமாக  ஆன  படங்களைப்பார்க்கும்  ஆர்வம்  உள்ளவர்கள் மட்டும்  பார்க்கலாம்,  யூ  ட்யூப்ல  கிடைக்குது / ரேட்டிங்  2 / 5 




வயசு பொண்ணு
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. என். குஞ்சப்பன்
ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ரோஜாமணி
லதா
வெளியீடுசெப்டம்பர் 21978
ஓட்டம்.
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

HUNT (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @அமேசான் பிரைம்


சுதீர்  பாபு    
ரசிகர்களை  க்ளைமாக்சில்  அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகும் படம்.  டைட்டில் , போஸ்டர்  டிசைன்  எல்லாம் பார்த்து  இதுவும் வழக்கம்  போல  சிங்கம்  போலவோ , சாமி போலவோ  ஒரு போலீஸ்  ஆக்சன்  ஸ்டோரியாத்தான் இருக்கும்னு அசால்ட்டா   இருக்க  வேண்டாம் . இது  சைக்கோ  க்ரைம் த்ரில்லர்  படம் 

 

ஹீரோ சுதீர் பாபு ,  பரத்   இருவரும்  செம  க்ளோஸ்  ஃபிரண்ட்ஸ் . இருவருமே  அசிஸ்டெண்ட்  கமிஷனர்   கேட்டகிரி  தான். ஸ்ரீ காந்த்  கமிஷனர் . இவங்க  3  பேருமே  பதவியைத்தாண்டிய ஒரு நட்பு வட்டத்தில் இருக்காங்க

 

ஒரு தருணத்துல  கப்பல்  படையைச்சேர்ந்த  ஒரு  உயர்  அதிகாரியை  ட்ரங்க்கன்  டிரைவிங் கேஸ்ல  பரத்  பிடிச்சுடறார். அவர்  தன்னோட  செல்வாக்கைப்பயன்படுத்தி  என்ன என்னமோ செஞ்சு  பார்க்கறார். ஆனா  மீடியாவில்  அவர்  பேர்  ரிப்பேர் ஆகிடுது . இதனால  அந்த  ஆஃபீசருக்கு    பரத்  மேல செம காண்டு

 

பரத்தால் பாதிக்கப்பட்ட  இன்னொரு  ரவுடி  ஒருத்தன் இருக்கான். போலீஸ்  ஆஃபீசருக்குப்பகையாதான் ஏகப்பட்ட  பேர்  இருப்பாங்களே? இது மாதிரி  அவருக்குப்பைகையான  சில நபர்களின் சம்பவக்கோர்வைகளா  திரைக்கதை  நகருது

 

 ஒரு கட்டத்துல  பரத்துக்கு  ஒரு விருது  தரப்படும் விழாவில்  அவர்  மேடைல பேசிக்கொண்டு இருக்கும்போது  யாரோ  துப்பாக்கியால்  ஷூட்  பண்ணி  கொலை பண்ணிடறாங்க / ஸ்பாட்ல  இருந்த  சுதீர் பாபுவும்  , ஸ்ரீ  காந்த்தும்   எவ்வளவோ  முயற்சித்தும்  கொலையாளியைப்பிடிக்க  முடியல

 

 மீடியாக்கள்  இதைப்பெரிய  இஷ்யூ ஆக்குது . கேசை  க்ளோஸ்  பண்ணவேண்டிய  நெருக்கடி . சுதீர்  பாபு  ஒரு கட்டத்துல  ஸ்ரீ  காந்த்க்கு  ஃபோன்  பண்ணி  கொலையாளியை  கண்டு பிடித்து விட்டேன்னு  சொல்லும்போது எதிர்பாராத விதமா  ஒரு கார் ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கொள்கிறார்

 

 ஆஸ்பத்திரில  அவருக்கு  பழைய  நினைவுகள்  எல்லாம்  அழிந்து  விடுகிறது . அதாவது  அவர் போலீஸ்  ஆஃபீசர்  என்பதும்  மற்ற  சில  விபரங்கள்  எல்லாம் நினைவு   இருக்கிறது , ஆனால்  இந்த  கொலைக்கேஸ்  விபரங்கள்  மற்றும் இவரது  நண்பர்கள்  பற்றிய  விபரங்கள்  மறந்து  விடுகிறது

 

 

 இந்த  கேசை  மீண்டும்  நீயே டீல்  பண்ணுனு  ஸ்ரீ  காந்த்  சுதீர் பாபு  கிட்டே   ஒப்படைக்கறார்.அதுக்குப்பின்  அவர்  கொலையாளீயை  கண்டுபிடிச்சாரா? என்பதுதான் கதை 


சுதீர்பாபு   நடிப்பை  நான்  முதன் முதலாக AA AMMAYI KURINCHI MEEKU CHEPALI (2022) தெலுங்குப்படத்தில்தான்  பார்த்தேன் , சிறப்பான  நடிப்பு .. இதிலும்  அவரது   நடிப்பு பக்கா . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  காட்சியில் பின்னிப்பெடல்  எடுத்து விட்டார்


ஹிந்தியில்  வந்த  தல்வார்  படத்தில் வருவ்து  போல  ஹீரோவான  போலீஸ்  ஆஃபீசரை   சிலர்  குறை  சொல்லும்  காட்சிகள்  உண்டு. அதில் தயங்காமல்  நடித்தது  சபாஷ் . குறிப்பாக  அவருக்குக்கீழே  வேலை  செய்யும்  3  போலீஸ்  ஆஃபீசர்களும்  டீம் லீடரை  மாத்தனும்  என அவர்  முன்னாலயே  கமிஷனரிடம்  முறையிடும்  இடத்தில் சுதீர்பாபு  நடிப்பு  கலக்கல் 


பரத் நடிப்பில்  குறை  வைக்கவில்லை . மேடையில்  என்ன  பேசப்போகிறோம்  என்பதை  மனைவியிடம்  ஒத்திகை  பார்க்கும்  சீன்  ஒரு உதாரணம் . நண்பனை  விட்டுக்கொடுக்காத  நடிப்பும்   அருமை 


ஸ்ரீகாந்த்   ஹையர்  ஆஃபீசராக , கமிஷனராக  இருந்தாலும்  அலட்டிக்கொள்ளாத நடிப்பு 


ஜிப்ரானின்  இசையில்  ஒரே  ஒரு  பாடலுடன்  நிறுத்திக்கொண்டது  மகிழ்ச்சி, இது  போல  த்ரில்லர் படங்களுக்கு  பாடல்கள் , காமெடி  டிராக்  , டூயட்  எல்லாம்  ஸ்பீடு  பிரேக்கர்கள் , பின்னணி  இசையில்  பிரித்து  மேய்ந்து  இருக்கிறார்


அருள்  வின்செண்ட்டின் ஒளிப்பதிவு  கச்சிதம் பிரவீன் புடியின்  எடிட்டிங்கில் காட்சிகள்  விறுவிறுப்பாக  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கின்றன.

2013ஆம்  ஆண்டு  பிருத்விராஜ்  நடித்த  மும்பை  போலீஸ்  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது / 





சபாஷ்  டைரக்டர் 


1   முறைப்படி  படத்தின்  கதை  மொத்தமே  40 நிமிடங்கள்  தான். அதை  2 மணி நேரப்படமாக  இழுக்க  இயக்குநர்  கண்டு  பிடித்த  வெற்றி விழா  கமல்  ஞாபக மறதி உத்தி  அருமை 


2  கொலை  நடக்கும்  ஸ்டேடியம்   அருகில்  இருக்கும்  பில்டிங்  டீட்டெய்லிங்  எல்லாம் பக்கா 



3  திரைக்கதையின்  திருப்புமுனைக்காட்சியாக  வரும் GAY  காட்சி  கையளப்பட்ட   விதம்  குட் 


நச்   டயலாக்


 சில  கேஸ்களில்  சிலர்  பேசற  சாதாரண  விஷயங்கள்  கூட  க்ளூவாக  மாறும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   ஒரு  கமிஷனர்  தன் செல் ஃபோனில்  வந்த  வாய்ஸ்  மெசேஜைக்கூட  கவனிக்காமல்  இருப்பாரா?


2  முக்கியமான  கொலைக்கேஸ்  பற்றிய  விபரத்தை  அவருக்குக்கீழ்  பணி ஆற்றும்  போலீஸ்  ஆஃபீசர்  அனுப்பிய  மெசேஜை  அவர்  கவனிக்காமல்  இருப்பது  நம்பும்படி  இல்லை . அதை  சில  மாதஙக்ள்  கழித்து  அவர்  சொன்னதும்  டக்னு  ஃபோனில்  எடுத்து  உடனே  ஓப்பன்  பண்ணுவதும்  நம்பற  மாதிரி  இல்லை 


சி.பி ஃபைனல்  கமெண்ட்  -   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  பிரமாதம்  ,அந்த  ஒரு  ப்ளஸ்  பாய்ண்ட்டை  வைத்தே  குறும்படமாக  எடுக்க வேண்டிய  படத்தை  முழு நீளப்படமாக  எடுத்த  இயக்குநரின் திறமைக்கு  ஒரு ஷொட்டு . ரேட்டிங்  3 / 5 



Hunt
Directed byMahesh Surapaneni
Based onMumbai Police
Produced byV. Ananda Prasad
StarringSudheer Babu
Srikanth
Bharath
CinematographyArul Vincent
Edited byPraveen Pudi
Music byGhibran
Production
company
Release date
  • 26 January 2023
CountryIndia
LanguageTelugu

Thursday, February 23, 2023

ஃபைவ் ஸ்டார் (2002) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )@ராஜ் டிவி


 ஆனந்த  விகடன்  பத்திரிக்கையில்  பணியாற்றும்போதே  பிரமாதமான  ஆர்ட்டிக்கிள்ஸ்  எழுதி  மக்கள்  மனம்  கவர்ந்த  சுசி கணேசன்  இயக்குநர்  மணிரத்னம்  அவர்களிடம்  அசிஸ்டெண்ட்  டைரக்டராக  பம்பாய் , இருவர் , உயிரே ( தில் ஸே )  ஆகிய  படங்களில் பணியாற்றினார். இவரது  முதல்  படமே  ஃபைவ்  ஸ்டார் தான் . இது  தமிழக  அரசின் சிறந்த  திரைக்கதைக்கான  விருது  பெற்றது .. சினேகா  அறிமுகம்  ஆன  விரும்புகிறேன் 2004 ஆம்  ஆண்டில்  தமிழக  அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  விருதை  பெற்றுத்தந்தது . 2003 ம்  ஆண்டில்  ரிலீஸ்  ஆன திருட்டுப்பயலே  தமிழக அரசின்  சிறந்த  படத்துக்கான  விருதைப்பெற்றதோடு  கமர்ஷியலாகவும்  சூப்பர்  டூப்பர்  ஹிட்  படமாக  அமைந்தது  . மிகப்பெரும்  எதிர்பார்ப்புடன்  ரிலீஸ்  ஆன  கந்தசாமி  அட்டர் ஃபிளாப்  படமாக  அமைந்ததால்  அதற்குப்பின்  இவருக்கு  எல்லாமே  சறுக்கல்  படங்களாக  அமைந்தன


ஸ்பாய்லர்  அலெர்ட்


காலேஜ்  நண்பர்கள்  ஐந்து  பேர், அதில்  மூன்று  ஆண்கள், இரு  பெண்கள் . இந்த   ஒன்லைனைக்கேட்டதும்  உங்கள்  கற்பனையில்  எழும்  கதையே  இதில்  இல்லை 


  ஐந்து  பேரும்  ஒரே  கம்பெனியில்  ஒன்றாக  வேலை  செய்ய  ஆசைப்படுகிறார்கள் . அதற்காக  சில வேலை  வாய்ப்பையும்  இழக்கிறார்கள் . அவர்கள்  ஆசைபப்படி  ஒரே  கம்பெனியில்  வேலை  கிடைக்கும்போது  அந்த  ஐவரில்  ஒருவனுக்கு  மட்டும்  கம்பெனியின்  மும்பை  பிராஞ்ச்சில்  போஸ்ட்  கேட்க  சென்னை  பிராஞ்ச்சில்  போஸ்ட்  கிடைத்த  மற்ற  நான்கு  பேரும் திடுக்கிடுகிறார்கள் 


 கிராமத்தில்  அப்பாவின்  வற்புறுத்தலால்  ஒரு  கிரமாத்துப்பெண்னை  திருமணம்  முடித்த  கையோடு  அவளை  அங்கேயே  விட்டு  விட்டு  இங்கே  வந்திருக்கும்  நண்பன்  அந்த  அவமானத்தை  மறைக்கத்தான்  இவர்களோடு  பணி  புரிய  ஆசைப்படவில்லை  என  தெரிகிறது


அந்த  ஐந்து  பேரில்  மற்ற   இரு  பெண்களுக்கும்  ஒரு  ஆணுக்கும்  வெவ்வேறு  இடத்தில்  திருமணம்  முடிகிறது


  சம்பவம்  நடந்து  இரு  வருடங்கள்  கழித்து நாயகன்  ரயிலில்  ஒரு  பெண்ணைப்பார்த்து  காதல்  கொள்கிறான். நாயகி  பணி புரியும்  இடத்திற்கு  அடிக்கடி  வந்து  பழக்கம்  வைத்துக்கொள்கிறான். நாயகியின்  வீட்டுக்கு  தன்  நண்பர்களுடன்  வந்து  பிரப்போஸ்  பண்ண  நினைக்கும்  தருணத்தில்  தான்  நாயகி  தங்கள்  ஓடிப்போன  நண்பனின்  மனைவி  என  தெரிகிறது


 அதிர்ச்சி  அடைந்த  அனைவரும்  ஓடிப்போன  நண்பனைக்கண்டு பிடித்து  நாயகியிடன்  சேர்த்து  வைக்க  முடிவெடுக்கிறார்கள் 


ஓடிப்போன  நண்பனை  வில்லன்  என  வைத்துக்கொள்வோம்,  நாயகி  மீது  ஆசைப்படும்   நண்பனை  நாயகன்  என  வைத்துக்கொள்வோம், இப்போது   நாயகன், நாயகி ,  வில்லன்  என  முக்கோண  சிக்கல்  கதை  தான்  மீதி  திரைக்கதை


நாயகனாக  பிரசன்னா  அருமையான  நடிப்பு . நாயகி  தன் நண்பனின்  மனைவி  என  தெரிந்து  அதிர்ச்சி  காட்டும்  இடம்  கச்சிதம் . ரயிலில்  பாடும்  காட்சியில் இவரது  நடன  அசைவுகள்  நளினம்

ஹாலிவுட்டின்  சிறந்த  உதட்டழகி  என  அஃபிஷியலாக  அறிவிக்கப்பட்ட  ஏஞ்சலீனா  ஜூலியின்  தங்கையோ  என  வியக்க  வைக்கும்  கோலிவுட்டின்  உதட்டழகி  கனிகாவின்  லிப்ஸ்  க்ளோசப்  ஷாட்ஸ்  கலக்கல்  ரகம், ஒளிப்பதிவாளர்  ரசனையோ ரசனை .  ரயிலில் நாயகனுடன்  காம்போ  காட்சிகள் , ஷாப்பிங்  காம்ப்ளெக்சில்  மேனேஜராகக்காட்டும்  கம்பீரம் , கிராமத்தில்  வாளுடன் கிராமத்தில்  காட்டும்  க்ளைமாக்ஸ்  வீரம்  என  படம்  முழுக்க  நாயகிக்கு  ஸ்கோப்  உள்ள  கதை ,  கனிகா  உணர்ந்து  நடித்திருக்கிறார்


வில்லனாக  கிருஷ்ணா  கனகச்சிதம், க்ளைமாக்சில்  அவரது  மாறுபட்ட  கெட்டப்   அடடே  போட  வைக்கிறது 


மற்ற    நண்பர்களாக  சந்தியா  பிரகாஷ் , மங்கை ,  கார்த்திக்  மூவரும்  ஓக்கே  ரகம்

 வில்லனின்  அப்பாவாக  உதிரிப்பூக்கள்விஜயன்  அருமையான  நடிப்பு, இவர்  குணச்சித்திரம் , வில்லத்தனம் , நாயகன்  என  எந்த  கேரக்டர்  கிடைத்தாலும்  அதில்  முத்திரை  பதிப்பவர் 


டிடிஆர்  ஆக  சிட்டி  பாபு  ஒரே  ஒரு  சீனில்  காமெடிக்கு /


ஸ்ரீராம்  பரசுராம், அனுராதா  ஸ்ரீராம்   இருவரும் தான்  இசை   எல்லாப்பாடல்களும்  செம  ஹிட்  , மணி  ரத்னம்  படம்  பார்ப்பது  போல்  இருக்கிறது  பிஜிஎம்  கச்சிதம் 


ரவிவர்மனின்  அற்புதமான  ஒளிப்பதிவில்  காட்சிகள் கலர் ஃபுல் 

வெளிநாட்டுக்காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை 


ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்   கடைசி  30  நிமிடங்கள்  தவிர்த்து  அனைத்தும்  கச்சிதம் இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுது , 




சபாஷ்  டைரக்டர்


1  தன்  விருப்பத்துக்கு  மாறாக  கிராமத்துப்பெண்ணை  அப்பாவின்  வற்புறுத்தலால்  திருமணம்  செய்யும்  நபர்  மண  மேடையில்  பெண்ணைப்பார்க்கும்போது  அங்கே  கல்யாணக்கோலத்தில்  கண்டிஷன்  ஆன  அப்பா  உட்கார்ந்திருப்பது  போல்  கற்பனை  செய்வது 


2   படம்  ஆரம்பித்த  முதல்  20  நிமிடங்களிலேயே  அடுத்தடுத்து  3 கொண்டாட்ட  பாடல்களுடன்  மணிரத்னம்  பாணியில்  ஜாலி வாலி பட்டாசு 


3  பிரசன்ன  கனிகாவை  ரயிலில்  பார்த்த  நிமிடமே  விருப்பப்பட்டு பின்  பழகிய  பின்  அவரை  நினைத்து  துள்ளாட்டத்துடன்  பாடும்  மெகா ஹிட்  மெலோடி  சாங்க்,,, அந்தக்காட்சியில்  கனிகாவுக்கான க்ளோசப்  ஷாட்கள் , பிரசன்னாவின்  நடிப்பு 


4   நாயகன்    ஒருதலையாய்  காதலித்த  பெண்  நண்பனின்  மனைவி  என்று  அறிந்ததும்  தான்  கொண்டு  வந்த  மியூசிக்  கிஃப்டை  தராமல்  மறைத்து  வைக்க  முற்படும்போது   அது  எதேச்சையாக  கீழே  விழுந்து  ”    ஈஸ்வரி  உன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்படறேன்”  என  ஓப்பன்  ஆகி  பாட்டு  வரி  வரும்போது  நாயகியும் , அவள்  குடும்பத்தாரும்  அதிர்ச்சி  ஆவது , நண்பர்கள்  முகம் சுருங்கிப்போவது 


5  நாயகி  கிஃப்டாகத்தந்த  பேண்ட்  சர்ட்டை  ஹேங்கருடன்   அந்தரத்தில்  தொங்க  விட   கற்பனையில்  அந்த  டிரஸுக்குள்  இருந்து  நாயகி  சோளக்கொல்லை  பொம்மை  போல  முளைத்து  வந்து  டான்ஸ்  ஆடும்  காட்சி 


6  நிச்சயக்கப்பட்ட  திருமணங்களில்  இரு  தரப்பு  சம்மதமும்  பெற வேண்டும், அப்படி செய்யாமல்  நடக்கும்  திருமணங்கள்  ஆபத்தே  என்ற  கதைக்கருவை  கமர்ஷியலாக  சொன்ன விதம்  அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சண்டே...   (  ஓப்பனிங்  சாங்  கொண்டாட்ட  பாடல் )


2   எங்களுக்கு  (  ஃபிரண்ட்ஸ்  எஞ்சாய்  மொமெண்ட்  சாங்)


3  ஃபைவ்  ஸ்டார்  ஃபைவ்  ஸ்டார்  ஹொரே  ஹுர்ரே  ( நண்பர்கள்  வேலை  கிடைத்த சந்தோஷப்பாடல் )


4 ரயிலே  ரயிலே  ஒரு  நிமிஷம்   (  ஹீரோ  ஹீரோயினை  நினைத்துப்பாடும்  மெலோடி)


5   ஈஸ்வரி  உன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்படறேன், திரு  திருடா   திரு  திரு திருடா  தீஞ்சுவை  தானடா   (  லவ் ப்ரப்போஸ்  ட்ரீம்  சாங் ) 



6  எங்களுக்கு  நல்ல  காலம்  இது   ( இன்ஸ்ட்ரூமெண்ட்டல்  ம்யூசிக் சாங்)


7  எங்கிருந்து  வந்தாயடா  எனை  பாடுபடுத்த  எனைத்தேடி  எடுக்க 



  ரசித்த  வசனங்கள் 


1  ஆணும்  பெண்ணும்    சேர்ந்து  பழகுனா  அது  காதலாதான்  இருக்கனும்னு  அவசியம்  இல்லை 


2   இங்கே  பீச்சுக்கு  வர்றவங்க  பலர்  நண்பர்களா  வந்து  காதலர்களா  மாறிடறாங்க , அல்லது  காதலர்களா  வந்து  நண்பர்களா  பிரிஞ்சுடறாங்க 


3   சமையல்காரான்னா  அவ்ளோ  கேவலமா?  எல்லா  ஹோட்டல்களிலும்  ஆண்  தான்  சமையல், ஒரு ஹோட்டல்லயாவது  பொம்பளை  சமைச்சுப்பார்த்திருக்கீங்களா?


4  இத்தனை  பேரு  என்னைக்காதலிச்சப்ப  என்  கணவர்  உங்களுக்கு  மட்டும்  ஏன்  என்னைப்பிடிக்காம  போச்சு ? அப்டினு  கேட்கப்போறேன்


5  தொலைஞ்சு  போனவனைக்கண்டு பிடிக்கலாம், ஆனா  மறைஞ்சு  நிக்கறவனை  எப்படிக்கண்டுபிடிக்க ?

6  தொலைஞ்சு  போன  புருசனைக்கண்டு  பிடிக்கப்போறோம்கற  சந்தோஷத்தை விட  ஜாலியா  ஃபாரீன்  டூர்  சுத்திப்பார்க்கலாம்கற  சந்தோஷம்  தான்  அதிகம், இல்லையா?


சரி , நான்  வர்ல


7  அப்பன்  மகனுக்கு  செஞ்சதை  , அண்ணன்    தங்கைக்கு  செஞ்சதை  சொல்லிக்காட்டக்கூடாது 


8  கோபம்  வந்தா   கொட்டித்தீர்ப்பதுதான்  கிராமத்து  அப்பாக்களின்  பழக்கம் 


9  உலகத்துல  சந்தேகப்படாத  புருசன்  கிடைச்சுட்டா  அதை  விட  சந்தோஷம்    பெண்ணுக்கு  வேற  இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தனக்கு  கிராமத்துக்குப்போக  விருப்பம்  இல்லை  என்று  கூறும்  நண்பனை  வலுக்கட்டாயமாக  ரயில்  ஏற்றி  அனுப்பும்  நண்பர்கள்  அவன்  பாதி  வழியில்  இறங்கி  ரூட்  மாற  வாய்ப்புண்டு  என்பதை  ஏன்  மறந்தார்கள்:?  யாராவது ஒருவர்  அவர்  கூட போய்  விட்டு  வந்திருக்கலாமே? கதைப்படி  அவர்  பாதி  வழிலயே  இறங்கிடறார்

2  நாயகி  தான்  அந்த  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  மேனேஜர்  , அவரது  ஃபோட்டோ  வை  டெவலப்  பண்ண  ஹீரோ  அவரது  ஃபோட்டோஷாப்பிலேயே  கொடுக்கிறார். அதை  டெவலப்  பண்ணி  பிரிண்ட்  போட்ட  ஆள்  மேனேஜரிடம்  அதை  தெரிவிக்க  மாட்டாரா? அட்லீஸ்ட்  இது  மேனேஜர்  ஃபோட்டோ  ஆச்சே? என  வியக்க  மாட்டாரா? 


3   விஜயன்  தற்கொலை  செய்ய  முயற்சிக்கும்  காட்சி  உதிரிப்பூக்கள்  க்ளைமாக்ஸ்  காட்சியை  நினைவுபடுத்துகிறது. அதைத்தவிர்த்திருக்கலாம்.அந்த  தற்கொலையால்  மகன்  ஃபாரீனில்  இருந்து  சாவு  சடங்குக்கு  திரும்பி  வருவதாகக்காட்டி  இருந்தால்  கூட  ஏதாவது  பிரயோஜனமாக  இருந்திருக்கும், அதுவும்  இல்லை  என்பதால்  அந்தக்காட்சி  தண்டம்தான்’


4   படத்தின்   கடைசி  அரை  மணி  நேரம்  தேடுதல்  வேட்டை  என்பதால்  கொஞ்சம்  போர்  அடிக்கிறது, இதே போல்  திரைக்கதை  அம்சம்  கொண்ட  ஆறு  மெழுகுவர்த்திகள் ,  உட்பட  பல  படங்கள்  அந்த  ஸ்லோனெஸ்  காட்சிகள்  கொண்ட  படங்கள்  தான் 


5  நாயகியின்  கணவன்  கடைசி  வரை  தன்  தவறை  உணர்ந்ததாகவே  தெரியவில்லை . அவனுக்கு  ஒரு படிப்பினைக்காட்சி  வைத்திருக்கலாம் 


6  படம்  முழுக்க  தன்  கணவனைக்காண  ஆவலாக  இருந்த  நாயகி   கணவனின்  யோக்யதை  தெரிந்ததும் இனி  நான்  எதுக்காக  அவனுக்காக அழனும் என  ஒரே  வசனத்தில்  பல்டி  அடிப்பது  கொஞ்சம்  செயற்கை  தட்டும்  காட்சியாக  இருந்தது


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  ய்யூ சர்ர்டிஃபிகேட்  ஃபிலிம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரொமாண்ஸ் பட  ரசிகர்கள் , மணிரத்னம்  ரசிகர்கள் , கனிகா  ரசிகர்கள்  பார்க்கலாம், ஜாலியான  டைம்  பாஸ் லவ்  மூவி  , ரேட்டிங்  3.25 / 5 

நீ நான் நிழல் (2014) - தமிழ் - ASHA BLACK(2014) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் ) @ ஜெ மூவிஸ்


  2014 ஆம் ஆண்டு  மலையாளம், தமிழ்  ஆகிய  இரு  மொழிகளில் ஒரே  சமயத்தில்  எடுக்கப்பட்டஇந்தப்படம் இண்டர்நெட்  வசதி  பெருகிய  பின் நடக்கும்  ஆன் லைன்  சேட்டிங் , அதனால்  ஏற்படும்  குற்றங்கள்  பற்றி  பேசுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 


நாயகன் ஒரு  போலீஸ்  ஆஃபீசர். நகரில்  அடுத்தடுத்து  ஐந்து  ஆண்கள்  கொலை  செய்யப்படுகிறார்கள் . பொது  வாழ்க்கையில்  அந்த  ஐந்து  பேருக்கும்  எந்த  விதமான  தொடர்பும்  இல்லை , அதனால்  பர்சனல்  வாழ்க்கையை அலசி  ஆராய்ந்ததில்  அவர்கள்  ஐந்து  பேரின்  ஃபேஸ்  புக்  அக்கவுண்ட்டிலும்  பொது  நண்பர்  ஒருவர்  இருக்கிறார்..அவரைப்பற்றி  விசாரணை  நடக்கின்றது


சம்பவம்  2 


நாயகி 17  வயது  நிரம்பிய  அழகி . அவள் தன் 12  வயது  முதல்  ஆன்  லைனில்  பலருடன்  சேட்டிங்கில்  இருக்கிறாள், அது  அவளுக்கு  ஒரு  டைம்  பாஸ்.அவளது  பெற்றோர்  அவளுக்கு  சரியான  அன்பு, பாசம், கவனிப்பு, நேரம்  எதையும்  ஒதுக்கவில்லை ,அதனால்  இப்படி  ஆகிறாள் ,மலேசியாவைச்சேர்ந்த  நாயகி  இந்தியாவில்  கோவையில்  ஒரு இளைஞனுடன்  சேட்டிங்  செய்கிறாள் , ஆரம்பத்தில்  சாதா  சேட்டிங்கில்  ஆரம்பித்த  அவர்கள்  நட்பு  பிறகு  ஆன்  லைன்  வீடியோ  கால்  நட்பாக  வளர்ந்து   நேரில்  சந்திக்க  முடிவெடுக்கும்  அளவுக்கு  நட்பு  இறுகுகிறது


இந்தியாவில்  இருந்து  மலேசியாவுக்கு  வந்த  அந்த  இளைஞன் குறிப்பிட்ட  இடத்தில்  காத்திருக்க  நாயகி  வரவில்லை . பிறகு  அலைந்து  திரிந்து  அவள்  வீட்டைக்கண்டு  பிடித்துப்போனால்  அங்கே  அவள்  தற்கொலை  செய்து  இறந்திருக்கிறாள் 


 மேலே  கூறிய  இரண்டு  சம்பவங்களும்  எந்தப்புள்ளியில்  இணைகிறது  என்பதுதான்  திரைக்கதை 


  போலீஸ்  ஆஃபீசராக  சரத்குமார்  கம்பீர  நடிப்பு , ஆனால்  அந்த  ஒட்டுத்தாடியை  தவிர்த்திருக்கலாம், அவர்  கூடவே  இருக்கும்  இரு  ஆஃபீசர்கள்  சும்மா  வந்துட்டுப்போறாங்க 


 நாயகியாக   இஷிதா  கண்களைக்கொள்ளை  கொள்ளும்  அழகு. 17  வயதுப்பெண்ணாக  கச்சிதமாக  வந்து  போகிறார்


 அவரது  காதலனாக அர்ஜூன்  லால்  நிறைவான  நடிப்பு , வசதி மிக்க  நபரான  அவர்  கொஞ்சம்  கொஞ்சமாக  ஆன்  லைன்  சேட்டிங்க்கு  அடிமை  ஆவது கச்சிதமாக  காட்டப்படுகிறது. நடிப்பும்  கனகச்சிதம் 


டாக்சி  டிரைவராக மனோஜ்  கே  ஜெயன் , நாயகியின்  தந்தை  ஆக  ராஜன்  பி  தேவ், காதலனின்  அம்மாவாக  ஃபாத்திமா  பாபு  அனைவரும்  கொடுத்த  கேரக்டரை  கச்சிதமாக  உள் வாங்கி  நடித்திருக்கிறார்கள் 


நிகில்  வேணுவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


 கதை  திரைக்கதை  வசனம்  எழுதி  இயக்கி இருப்பவர்  ஜான்  ராபின்சன்


 க்ரைம்  த்ரில்லர்    மாதிரி  ஆரம்பித்து  ஃபிளாஸ்பேக்கில்  ரொமாண்டிக்  ஸ்டோரி  ஆக  டோன்  ஆப்  ஆகும்  கதை  மீண்டும்  த்ரில்லர்  ஜோனுக்குள்  வரும்போது  ஆடியன்சுக்கு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை 


இதை  ரொமாண்டிக்  த்ரில்லராக  எடுக்கலாமா? க்ரைம்  த்ரில்லராக  எடுக்கலாமா? என  இயக்குநர்  கொஞ்சம்  குழம்பி  இருக்கிறார் என்பது  தெரிகிறது 


 ஜெசின்   ஜார்ஜ்ஜின்  இசையில்  பாடல்கள் சுமார்  ரகம், பிஜிஎம்  அதை  விட  சுமார்  ரகம் . ஒளிப்பதிவு  குட் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகியின்  ஃபேஸ் புக்  ஐடியின் பாஸ்வோர்டை  அவளது  காதலன்  கண்டுபிடிக்கப்பயன்படுத்தும்  யுக்தி  குட் 


2  நாயகியின்  ஃபிளாஸ்பேக் கதையை  கார்ட்டூன்  வடிவில்  கவிதை  போல  தந்த  விதம் , வெரிகுட்  பிரசண்ட்டேஷன்


3   இந்தக்கால  இளைஞர்கள்  மனம்  கவர்ந்த  விதத்தில்  ஆன்  லைன்  சேட்டிங்கை  படம்  ஆக்கிய  விதம்


4  மெயின்  கதையோடு  டாக்சி  டிரைவர்  மனைவி  கதை , போலீஸ்  ஆஃபீசரின்  13  வயது  மகள்  கதையை  சாமார்த்தியமாக  இணைத்தவிதம்


5   க்ளைமாக்ஸ்  காட்சி  சட்டத்துக்கு  உட்படாததாக  இருந்தாலும்  அப்ளாஸ்  அள்ளும்  காட்சி 

  ரசித்த  வசனங்கள் 


1  வீட்டு  வாடகை  எப்போதான்  தர்றதா  உத்தேசம் ? 


டோண்ட்  ஒர்ரி, காந்தி  ஜெயந்தி  அன்னைக்கு  தந்துடறேன்


 எப்படி ? அவனை  மிரட்டி  பணம்  தர  ஒத்துக்க  வெச்சுட்டேன் பார்த்தியா?


 ஆனா இப்போதைக்கு  நீங்க  அவன்  கிட்டே  இருந்து  பணம்  வசூலிக்கவே  முடியாது

ஏன்?


ஏன்னா இன்னைக்கு  தேதி அக்டோபர்  3 , இனி  இன்னும்  ஒரு  வருசம்  நீங்க  காத்திருக்கனும் 


2-டெய்லி  நேரில்  சந்தித்துப்பழகும்  பெண்களையே  இப்பவெல்லாம்  நம்ப  முடியறதில்லை , ஆனா  இண்ட்டெர்நெட்டில்  பழகிய  பெண்ணை  நம்ப  முடியுமா?


3   இசை , கலை  இரண்டிலும் அதிர்ஷ்டம்தான்  துணை  நிற்கனும், எப்போ  ஜெயிப்போம்னு  சொல்ல  முடியாது



4   டேய்.. உன்  ஆளை  அடுத்த  சேட்டிங்ல  ஆறு  ஃபோட்டோஸ்  அப்லோடு  பண்ணச்சொல்லு 


எதுக்கு  ஆறு?


 ஒண்ணு  உனக்கு , மீதி  அஞ்சு  எங்க  அஞ்சு பேருக்கும்  தலா  1 


5




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1  தற்கொலை  செய்த  பெண்ணின்  லேப்  டாப்பை  போலீஸ்  ஏன்  கைப்பற்றவில்லை ?  காதலியின்  லேப் டாப்  காதலன்  கைக்கு  எப்படி  வந்து  சேர்கிறது ?


2  காதலன்  ஃபேஸ்புக்  அக்கவுண்ட்டில்  நுழைய  முயற்சிக்கும்போது  பாஸ்வோர்டு  தெரியாமல்  குத்து  மதிப்பாக  ஒவ்வொன்றாக  போட்டு  வரும்போது குறிப்பிட்ட  முயற்சிக்கு  மேல் செல்  ஃபோன்  நெம்பர்க்கு  பாஸ்வோர்டு  ரி   செட்டப்  ஆப்சன்  வருமே?  அப்படி  வராதது  ஏன் ?


3  சீரியசான  கதையில் எம் எஸ்  பாஸ்கரின்  மொக்கை  காமெடி  டிராக்  எரிச்சல் .




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- கதைக்களம்  எசகு பிசகானது  என்றாலும்   காட்சிகள்  கண்ணியம், வாய்ப்பிருந்தும்  கிளாமர்  காட்சிகளை  இயக்குநர்  தவிர்த்திருக்கிறார், குட்  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆன்  லைன்  சேட்டிங் , லவ்வர் , மர்டர்  என  கதை  செல்வதால்   2 கே  கிட்ஸ்க்கு  எண்ட்டர்டெயின்மெண்ட்  படமாகவும், நைண்ட்டீஸ்  கிட்ஸ்க்கு அவரவர்  மகள்களுக்கான  விழிப்புணர்வுப்படமாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.  பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  யூ  ட்யூப்பில்  கிடைக்கிறது , நான்  ஜெ  மூவிசில்  பார்த்தேன் , ரேட்டிங் 2.25 /5 







Asha Black / Nee Naan Nizhal
Asha Black.jpg
Malayalam poster
Directed byJohn Robinson
Written byJohn Robinson
Screenplay byJohn Robinson, Santhosh Laxman
Story byJohn Robinson
Produced byBindhu John Varghese
StarringIshitha Chauhan
Arjun Lal
R. Sarathkumar
Krishnabhaskar Mangalasserri
CinematographyAlby
Edited byNikil Venu
Music byJecin George
Production
company
Nimita Productions
Release date
  • 10 October 2014
CountryIndia
LanguagesMalayalam
Tamil