Wednesday, September 22, 2010

வந்தே மாதரம் - சினிமா விமர்சனம்

 
ஒரு புலனாய்வுப்படத்துக்கு ஆடை வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட படமோ என வியக்கும் வண்ணம் போலீஸ் ஆஃபீஸராக வரும் ஹீரோக்கள் இருவருக்கும் யூனிஃபார்மிலும் சரி,சிவில் டிரஸ்ஸிலும் சரி கலக்கலான டிரஸ்ஸிங்க் சென்ஸோடு எடுக்கப்பட்ட படம் இது.

ராஜநீதி என்ற பெயரில் கேரளத்தில் சக்கைபோடு போட்ட மலையாள டப்பிங் படம்தான் இந்த வந்தேமாதரம்.கதை என்று புதிதாக ஏதுமில்லை,விஜய்காந்தின் மாமூல் ஃபார்முலாதான்.பாகிஸ்தான் தீவிரவாதி,இந்தியாவில் சதி,ஹீரோக்கள் முறியடிப்பு என புளித்துப்போன கதைதான்.ஆனால் காட்சி அமைப்பில் ,திரைக்கதையில் வித்யாசமும்,வேகமும் காட்டி இருக்கிறார்கள். 



அர்ஜூன் எந்த பில்டப்பும் தராமல் சாதாரணமாக அறிமுகமாகும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏர்ஹோஸ்டலாக வரும் சினேகாவும்,உளவுத்துறை அதிகாரியாக வரும் மம்முட்டியும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் பாடல் காட்சியான சஞ்சீவனா என் ஜீவனா பாடலில் சினேகாவுக்கு கிளாமர் தூக்கல் ரகம்.(எனக்கு ஒரு சந்தேகம்,இங்கே போர்த்தி நடிக்கும் நடிகைகள் ஆந்திராவில்,கேரளாவில் மட்டும் தாராளம் காட்டுவது ஏன்?

எடுத்துக்கொண்ட கேஸ் படிப்படியாக முன்னேறி வரும்போது,வெற்றிகரமாக ஹீரோக்கள் நடந்து வரும்போது போடும் பின்னணி இசை அசத்தல் ரகம்.தொடர்ந்து வரும் கன்யாகுமரி,தேங்காய்பட்டினம் லொக்கேஷனும்,ஒளிப்பதிவும் அற்புதம்.



எனக்குத்தெரிந்து தீவிரவாதியை விசாரணை செய்கையில் அதிகபட்ச சித்திரவதை காட்டப்பட்டது (தமிழில்)திருப்பதிசாமி இயக்கி,விஜய்காந்த் நடித்த நரசிம்மா தான்.(நம்பவே முடியாத காட்சி அமைப்புகள்).அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது இந்தப்படத்தின் சித்திரவதைக்காட்சிகள்.விசாரணை நடக்கையில் எமோஷனல் ஆகும் மம்முட்டி அருகில் இருக்கும் போலீஸ் ஆஃபீசர் மேல் கை வைக்கும் ஆவேச நடிப்பு தூள்.

ரியாஸ்கானின் குத்துப்பாட்டுக்கான ஆட்டம்,இயக்குநர் ராஜ்கபூரின் வில்லத்தன நடிப்பு எல்லாம் அருமை.அர்ஜூன் ரியாஸ் சம்பந்தப்பட்ட சேஸிங்க் காட்சிகள் செம பரபரப்பு( கமலின் விக்ரம் படத்துக்குப்பின்)அனிமல் பிளானட் சேனலில் சிறுத்தை மானை துரத்துவது போல என்ன ஒரு விறுவிறுப்பு?



 

கஷ்டப்பட்டு பிடிக்கப்பட்ட வில்லனின் கையாள் டாக்டர் 2 ஹீரோக்கள் முன்னிலையில் சர்வ சாதரணமாக தற்கொலை செய்வது எப்படி?
செல்ஃபோனில் வில்லன் பேசும்போது சிக்னல் லொக்கேட்டர் வைத்து பேசும் இடத்தை கண்டறிவதை பாமரனும் கை தட்டும் விதத்தில் படமாக்கிய இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

அதே போல் பாம் பிளாஸ்ட் சீன் மிக தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்க் என அனைவரும் கை கோர்த்து கலக்கிய சீன் என பெயர் வாங்கிய சீன்.அவ்வளவு களேபரத்திலும் வில்லன் பேஷண்ட் வேஷத்தில் தப்பிக்கும் சீன் செம விறு விறுப்பு.






நான் நினைக்கிறேன்,இந்தப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஓடிக்கொண்டே எழுதியிருப்பார் என,அவ்வளவு நேர்த்தி,லாவகம்,வேகம்.இதெல்லாமே இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு ஸ்பீடு கம்மி.பாட்ஷா உட்பட பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களின் திரைக்கதை முன் பாதி வேகமாகவும், பின் பாதி சுமாராகவும் அமைந்து விடும் மர்மம் என்னவோ?

பெலிக்கான் பறவை மூலம் சேதி பரப்பும் பாகிஸ்தானின் உளவாளி ஐடியா செம தூள் என்றால் அதை மம்முட்டி & கோ முறியடிப்பது செம ஸ்மார்ட்,ஆல் கிரடிட்ஸ் கோ டூ டைரக்டர்.(ALL CREDITS GO TO DIRECTOR)

கீழே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்க மேலே அர்ஜுனும்,வில்லனும் போடும் ஃபைட் சீன் நல்ல கற்பனை.அதை அழகியல் நேர்த்தியோடு படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்.


 

ரசனையான சீன்கள்.

1.விவசாயிகள் தற்கொலைக்குபோவதற்கு என்ன காரணம் என்பதை தண்ணிர்க்கஷ்டத்தின் வலியோடு படமாக்கிய டாக்குமெண்ட்ரி

2.தேசிய நதி நீர் இணைப்பின் தேவையை,அதன் முக்கியத்துவத்தை அழகாக விளக்கிய விதம்

3.க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் ஜாக்கிசான் நடித்த  THE SPANISH CONNECTION (தெ ஸ்பானிஷ் கனெக்‌ஷன்) படத்தில் வருவது போல் அர்ஜூன் வில்லனை ஜம்ப்  பண்ணி நெஞ்சில் உதைக்கும் டூப்ப்  போடாமல் எடுக்கப்பட்ட அந்த ரிஸ்க் ஷாட்

4. குத்தாட்டப்பாடலான 1,2,3,4 பாட்டில் குத்தாட்ட நாயகியின் லோ கட் சீன் கிளாமரை கலரிங் லைட் அடித்து மறைத்த சாமார்த்தியம் ( ஏற்கனவே சிங்கம் படத்தில் அனுஷ்கா நடித்த காதல் வந்தாலே பாட்டு  படமாக்கிய விதம் போல் இருந்தாலும்)

படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

1.தீவிரவாதியின் மகளுக்கு 5 வயது என வசனத்தில் வருகிறது,ஆனால் காட்சி அமைப்பில் 10 வயது ஆன மாதிரி காண்பித்தது,

2.தீவிரவாதியை மகள் செண்ட்டிமெண்ட் காண்பித்து  மடக்க முயல்வது.99% தீவிரவாதிகள் குடும்பம் இல்லாத ,அதை துறந்தவர்கள்தான்.

3.அப்படியே அதை ஒப்புக்கொண்டாலும் மகளாக நடிக்க வைக்க 1008 பேர் இருக்க ஹீரோவின் மனைவியையே தேர்ந்தெடுப்பதும்,முக்கியமான தருணத்தில் சினேகாவை அம்போ என வில்லனின் பாசறைக்குள் அனுப்பி அவரை உயிரிழக்க வைப்பதும்.

சில வசன பளிச்கள்

1.குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது,சார்,இனி இவன் மேல நான் கை வைக்கலாமா?

ஓ,தாராளமா,இனி காலே வைக்கலாம்.

2.என்னது,இப்போ  டாக்டருக்கே டிரீட்மெண்ட் தரவேண்டியதா இருக்கு?

இந்தப்படம் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை தங்கு தடை இன்றி அனைத்து செண்ட்டர்களிலும் ஓடும்.ஆக்‌ஷன் பிரியர்களுக்கும்,சி பி ஐ டைரி குறிப்பு,மாதிரியான கேரள புலனாய்வுப்படங்களை  ரசிப்பவர்களுக்கும் பிடித்தமான படம்.


Tuesday, September 21, 2010

நகைச்சுவை சரவெடி

1.இந்த வாரத்தின் சிறந்த ஆஃபாயில் ஆறுமுகம் விருது தினகரன் நாளிதழுக்கு
எந்திரன் படம் சென்சாரில் யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியதைக்கூட அரைப்பக்க மேட்டர் ஆக்கி வெளியிட்டமைக்காக.


2 இந்த வாரத்தின் சிறந்த அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது நயன்தாராவிற்கு,100 நாள் ஓட வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தனது
மோசமான தோற்றத்தால் 75 நாள் படம் ஆக்கியதற்காக.

3.இந்த வாரத்தின் சிறந்த சோலை புஷ்பங்களே சோப்ராஜ் விருது பிரபு
தேவாவுக்கு,நயன் தாரா பாலைவனத்தில் தெரிந்த சோலை என பேட்டி கொடுத்ததற்காக,(இதே மாதிரி ரம்லத் யாரையாவது கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?)

4. இந்த வாரத்தின் சிறந்த தள்ளுமுள்ளு தங்கராஜ் விருது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லுக்கு,மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுசில்குமாருடன் ஃபோட்டோ எடுக்கையில் சுசிலின் பயிற்சியாளர் சத்பல்சிங்கை தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏழைஜாதி ஏகாம்பரம் விருது அமைச்சர் ஆ ராசாவிற்கு,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பு பற்றிய விசாரணையில் ரூ 88 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாக புரூடா விட்டதற்கு. ( அந்த 1000 கோடியை என்ன தான் பண்ணுனீங்க?)

6. இந்த வாரத்தின் சிறந்த ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம் விருது பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கிற்கு,ஏழைகளுக்கு உணவுக்கிடங்கில் வீணாகும் அரிசியை இலவசமாகத்தரமுடியாது என சட்டம் பேசியதற்காக.

7. இந்த வாரத்தின் சிறந்த செல்ஃபோன் செல்லமுத்து விருது  ராகவேந்திரருக்கு,நடிகை சினேகாவிற்கு செல்ஃபோனில் தினம் 50 மிஸ்டுகால்,75 ஆபாச எஸ் எம் எஸ் என மானாவாரியாக அனுப்பியதற்கு.

8. இந்த வாரத்தின் சிறந்த வள்ளுவருக்கேற்ற வாழ்க்கைத்துணைவி வாசுகி விருது நடிகை சீதாவிற்கு,டி வி நடிகர் சதிஷை 2ம் திருமணம் செய்துகொண்டு
ஆர் பார்த்திபனையும்,குழந்தைகளையும் பரிதவிக்க விட்டமைக்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த ரெட்டை வால் கழுதை ரெங்குடு விருது  எ .வ. வேலுவிற்கு,திருச்சியில் நடந்த கட்சி மீட்டிங்கில் ஜெவை குட்டிசுவர் என அநாகரீகமாக வர்ணித்ததற்காக.

10. இந்த வாரத்தின் சிறந்த கலரிங்க் ஹேர் கல்பனா விருது மு.க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதிக்கு,சென்னை கோட்டுப்புறம் அரசுப்பள்ளியில் நடந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் விழாவிற்கு கலக்கல் மேக்கப்,கலரிங்க் செய்யப்பட்ட கூந்தல் என வந்து கலக்கியமைக்காக. (சினிமா நடிகைங்க தோத்தாங்க போங்க)

Saturday, September 18, 2010

365 காதல் கடிதங்கள் - சினிமா விமர்சனம்



பருத்திவீரன் படம் ஹிட் ஆன சமயத்தில் வெளிவந்த ஒரு ஆங்கில படத்துக்கு 300 பருத்தி வீரர்கள் என டைட்டில் வைத்த மாதிரி இந்தப்படத்துக்கு 365 காதல் கடிதங்கள் என டைட்டில் வைத்து உள்ளார்கள்.வைத்த டைட்டிலை கரெக்ட் பண்ண ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு வருடம் தினசரி ஒரு கடிதம் அனுப்புவது மாதிரி ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன?16 வயசுப்பையன் கூடப்படிக்கும் 16 வயசுப்பொண்ணை லவ் பண்ணுகிறான்.(இந்த காலத்தில் 16 வயசுப்பையன் 34 வயசுப்பெண்ணை லவ் பண்றதுதான் ஃபேஷன் - உபயம் கிரண் நடித்த வாலிபமே வா.)+2 பாஸ் பண்ணினால் காதலை ஏற்றுக்கொள்வதாக ஹீரோயின் கூறுகிறாள்.(ஆஹா,என்னே ஒரு கஷ்டமான கண்டிஷன்?)கஷ்டப்பட்டு பாஸ் ஆன ஹீரோ ஹீரோயின் வாயால் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறான்.இந்த சமயத்தில் ஹீரோயின் இட மாற்றம் காரணமாக சென்னை செல்கிறாள்.அட்ரஸ் குடுத்துவிட்டு.ஹீரோ கடிதமாக போட்டுத்தள்ளுகிறான்.பதிலே இல்லை.ஹீரோயின் அம்மா அதை ஒளீத்து வைக்கிறாள்.4 வருடங்கள் கழித்து ஹீரோயின் ஹீரோ ஊருக்கு வந்து ஹீரோவை சந்திக்கும்போது ஒரு ஆக்சிடெண்ட்டில் கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறாள். 6 வருடங்கள் சிகிச்சை செய்தும் குணம் ஆகாததால் ஹீரோயின் தந்தை அவளை கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.உடனே ஹீரோ தற்கொலை செய்துகொள்கிறார்.அவர் இறந்ததும் ஹீரோயினுக்கு பழைய நினைவு திரும்பி விடுகிறது.


  
ஹீரோ செலக்‌ஷன் மஹா மட்டம்.ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்.தன்னை ஹீரோ பார்க்கும்போது பெருமிதமும்,வெட்கமும் கலந்த நாணச்சிரிப்பு உதிர்ப்பது அருமை.மற்றபடி தேறாத கேஸ்.

ஓப்பனிங்க் சீனில் ஹீரோ இன்ஸ்பெக்டர் மனைவி என தெரியாமல் ஏடாகூட போஸில் ஃபோட்டோ எடுத்து மாட்டுவது வறட்சியான காமெடி.டீ கொண்டு வர்றவனுக்கு எல்லாம் டீட்ட்ய்ல் சொல்லனுமா என அறிமுகமாகும் கருணாஸ் காமெடி எடுபடவில்லை.

பொக்கிஷம் படத்தில் சேரன் கடித இலக்கியத்தை மையமாக வைத்து கதை எழுதும்போதே புத்திசாலித்தனமாக கதைக்களம் 1980 களில் செல்ஃபோன் அதிக உபயோகத்தில் இல்லாத காலம் என்பது மாதிரி பீரியட் ஃபிலிம் ஆக்கி விட்டிருந்தார்.ஆனால் இந்தப்படத்தில் ஹீரோயின் கையில் செல்ஃபோன் வைத்திருக்கிறார்,ஆனால் ஒரு முறை கூட ஹீரோவுடன் ஃபோனில் பேசாமல் லெட்டரையே நம்பி இருப்பது திரைக்கதையில் முதல் சறுக்கல்

ஹீரொயின் பாத்திரப்படைப்பில் கோட்டை விட்டாரா, அல்லது எடிட்டரின் தவறா தெரியவில்லை ஹீரோயின் ஒரு காட்சியில் ஹீரோவை காதலிப்பது போலவும் அடுத்த காட்சியில் இது வெறும் நட்புதான் என சொல்லுவது போலவும் அமைந்து பார்வையாளர்களை குழப்புகிறது.

என் 20 வருஷ அனுபவத்தில் மப்புல இருக்கறவன் கல்லை சரியா போட்டதே இல்லை,  போடுடா பார்ப்போம் என குடிகாரனை உசுப்பேற்றும் காமெடி ஓகே ரகம்.நட்பு படத்தில் செந்தில் 10 பைசா பைத்தியமாக வந்தது மாதிரி இதில் முத்துக்காளை மல்லிகா பைத்தியமாக வருகிறார்.அவர் நடிப்பு ஓவர் ஆக்டிங்.சுத்தமா சிரிப்பே வர்லை,எரிச்சல்தான் வருது.

ஹீரோ ஹீரோயினுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறார்.அதற்கு ஜாஸ்மின் இல்லம் என பெயர் வைக்கிறார்.பேசாமல் படத்துக்கு மல்லிகை இல்லம் என டைட்டில் வைத்திருக்கலாம்.

சைக்கிள் தேவதை சாலையில் ஐஸ் மழை பாடல் காட்சி நல்ல ரசனையாக 
எடுக்கபட்டுள்ளது. முதல் மழை முதல் முத்தம் பாடல் காட்சி முதல் மழை என் மனசுக்குள் தெறித்திட்ட என்ற பாடல் வரிகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

 365


படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

1.ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்த வீட்டில் கள்ளக்காதலர்கள் ஒதுங்கும் இடத்தில் ஹீரோவும்,ஹீரோயினும் கம்பைன் ஸ்டடி பண்ணுவதும்,அதை ஹீரோவின் அப்பாவே பார்த்து பூரிப்பதும்
(கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வானாம் -உபயம் திண்டுக்கல் ஐ லியோனி)

2.ஹீரொயின் காலில் ஹீரோ விழுந்து கெஞ்சியதும் ஹீரோயின் காதலிக்க ஒத்துக்கொள்வது. (காதலையே கேவலப்படுத்தி விட்டார்கள் கூடவே ஆண் வர்க்கத்தை)

3.எந்தத்தந்தையாவது கோமா ஸ்டேஜில் இருக்கும் மகளை கருணைக்கொலை செய்ய முன் வருவாரா?( உளவியல் நிபுணர் ஒருவரிடம் விசாரித்தேன்,சான்ஸே இல்லை என்றார்.வயதானவர்கள் என்றால் ஓகே,இள வயதுப்பெண்ணை கொலை செய்ய யாரும் நினைக்க மாட்டார்களாம்.)

4. 6 வருடங்கள் கழித்து ஹீரோவை சந்திக்க வரும் ஹீரோயின் ஏன் இத்தனை நாட்களாக கடிதமே போடலை என ஏன் கேட்கலை?ஜஸ்ட் லைக் தட் போயிடறாரே?

5. எந்த ஸ்கூலில் பிட் அடித்த மாணவனை உடனே டி சி குடுத்து அனுப்புகிறார்கள்?

படத்தில் வரும் ரசனையான சீன்கள்

1.காதலியின் மேல் உதட்டில் தோன்றும் வியர்வைத்துளிகளை இங்க் ஸ்பில்லரால் காதலன் சேகரிப்பது.(காதல் என்றாலே பைத்தியக்காரத்தனங்களின் தொகுப்புதானே)

2.என்னால என் காதலியை மறக்க முடியலை என உதார் விடும் எடுபிடியிடம் கருணாஸ் “எங்க முதலாளியைப்பார்,9 பேரை வெச்சிருந்தார்,எல்லாரையும் அப்பப்ப மறந்துடுவார் என அவரை வாருவது

படத்தில் வரும் ரசனையான வசனங்கள்

1.அதிக சோகத்தையும்,அதிக சந்தோஷத்தையும் தருவது காதல் மட்டும்தான்.

2. மரணம் என்பது இறைவன் தர்ற சுகமான தூக்கம்.

3.செம கட்டையா நிக்குதே பொண்ணு,என்னய்யா பஞ்சாயத்து?  ம்,கட்டை பஞ்சாயத்து.

4.அறிவாளி வேலையை தேடிப்போவான்,புத்திசாலியை வேலை தேடி வரும்.

5.டேய்,எப்படியாவது ட்ரை பண்ணி என்னை கரெக்ட் பண்ணறதுலயே நீ குறியா இருக்கேடா.

ஆனா முடியலையே.

6.அந்தப்பொண்ணைப்பார்த்தா தப்பானவளா தெரியலை,செத்துப்போன என் ஆத்தா மாதிரியே இருக்கா.

உன் ஆத்தா ஜீன்ஸ் போட்டிருக்குமா?

7. மூளை வளரனும்னு உன் பையனுக்கு முட்டைக்காபி போட்டுத்தர்றே,உன் பையன் பரீட்சைல முட்டை வாங்கக்கூடாதுங்கறதுக்காக காப்பி அடிக்கறான்.

8.உன் பிள்ளை ராமர் மாதிரியா?

 ஆமாமா,ஒரு பொண்ணுக்கு காதல் பாலம் போட்டுட்டு இருக்கான்

சமீப காலமாக வரும் காதல் படங்களில் ஒரு மோசமான க்ளிசே வருகிறது. அது க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது.இது மாபெரும் தவறு என்பதை அந்த படங்களின் தோல்வி உணர்த்துகிறது.

இந்தப்படம் பி சி செண்ட்டர்களில் ஏழு நாள் ஓடினாலே அது ஏழாவது அதிசயம்தான்.

Thursday, September 16, 2010

பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்

பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.
தி.மு.க - த மா க கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர்,பி ஜே பி அனுதாபியாக இருந்தாலும் தான் எழுதும் அரசியல் கட்டுரைகளில் நடுநிலைமை தவறாதவர்,அப்படிப்பட்டவர் இன்று வெளியாகி இருக்கும் துக்ளக் இதழில் எழுதிய தலையங்கத்தின் சாரம் அதிர்ச்சி அளிக்கிறது.
அவர் அப்படி என்ன எழுதினார் என்பதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக் கூடாது பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி
புதுடெல்லி, செப்.7-

பிரதமர் மன்மோகன்சிங், நேற்று பத்திரிகை ஆசிரியர்களை தனது வீட்டிற்கு அழைத்து, உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஒன்றில், அரசு `குடோன்'களில் வீணாகிவரும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்? இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பை இன்னும் நான் படித்துப் பார்க்கவில்லை.”

ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?படித்துப்பார்த்து விட்டு பேச வேண்டியதுதானே.


நன்றாய் தெரிகிறது நீங்கள் யாருக்கான அரசு என்று. உங்கள் சம்பளம் மட்டும் 5  மடங்கு  உயர்த்தியது போதாது என்பீர்கள்.  ஏழைகள் என்றால் கசக்கிறது. செருப்பால் அடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள்.


இது குறித்து நண்பர் வேந்தன் அரசு கூறியது
நம் நாட்டில் 100 கோடி டன் தானியங்கள் விளையுதுனா, அது முழுமையும்
நாட்டு மக்களுக்கு போய் அடையணும்.
அரசு அவற்றில் பெரும்பான்மை வாங்கி பதுக்கிவச்சா ஏழைமக்கள் என்ன
செய்வாங்க? இது சந்தையில் இருந்தால் தானியங்களின் விலை குறையும் ஏழைகளால்
வாங்க இயலும்..

இதில் ஒரு பகுதியை அழுகி வீணாக்குவது என்பதை சமூக குற்றம்.
உணவுப்பொருட்கள் இருந்தால் என்ன விலை என்றாலும் வாங்கி பசியாறலாம்
இல்லாமலே போனால்? அவர்களால் தாமே தானியங்களை விளைவிக்கத்தான் முடியுமா?

பில்கேட்சு போன்ற ஒரு கோடீசுவரன் வந்து 100 கோடி டன் தானியங்களையும்
வாங்கி கடலில் கொட்டினா அரசு சும்மா இருக்குமா?

அதனால் தானியங்களி வீணடித்த உணவுத்துறை அமைச்சரை கழுவில் ஏற்றணும்.

நீதிபதிகளுக்கு பொலிடகலி கரெக்ட் ஆக பேச வேண்டிய அவசியம் இல்லை. அதனால்
அவர்கள் கருத்தை அரசு கட்டாயம் கேட்கணும்.  மேலவையில் உடகார்ந்து
சொன்னால்தான் அறிஞர்களின் கருத்தா?

நண்பர் அசோக் கூறியது
தானியங்கள் விலை கூடினால், அடுத்த முறை போட்டி போட்டு கொண்டு விலை அதிகமுள்ள தானியங்களை விவசாயிகள் விளைவிப்பார்கள். அதே போல் விலை குறைந்தால் அந்த தானியங்களை விளைவிக்க நாட்டம் காட்ட மாட்டார்கள்.

தானியத்தை வீணாக்குபவனும் நட்டத்தை அடையாமல் இல்லை. நட்டத்தை நோக்கி தொழில் நடத்த அவனும் மூடன் அல்ல. தானியம் வீணாகும் நிலையில், போக்குவரத்து செலவு, தானிய விலையை விட அதிகமாக இருந்தால் தவிர அவன் அடி மாட்டு விலைக்கு தன் பொருளை விற்றே தீருவான்.

சந்தை விதிகள் சுதந்திரமாக இயங்க விடுங்கள். அதை விட திறனான வழி முறைகள் வேறு இல்லை.


இப்போது மேட்டருக்கு வருவோம்.சோ அவர்கள் பிரதமர் செய்ததும் ,சொன்னதும் சரிதான் என தலையங்கம் எழுதி இருக்கிறார்.ஏழைகள் பட்டினி இருந்தாலும்  பரவாயில்லை,உணவுப்பொருள்கள் வீணானாலும் பரவாயில்லை,சட்டப்படி தான் நடக்கனும் என்கிறார்

என் கேள்வி,சட்டப்படிதான் எல்லாம் இங்கே நடக்கிறதா?

1.ஜெ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரே அது சட்டப்படியா?

2.கலைஞர் 25 தலைமுறைக்கு கோடிக்கணக்கி சொத்து சேர்த்தாரே அதுவும் சட்டப்படியா?

3.ஆ ராசா 1000 கோடி ஊழல் பண்ணியும் கூட்டணி அதர்மப்படி அதை கண்டுகொள்ளாமல் பி எம் இருக்காரே அது சட்டப்படியா?

4.போபர்ஸ் ஊக்ஷலில் ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்டது தெரிந்தும் மூடி மறைக்கப்படதே,அது சட்டப்படியா?

ஏழைகளுக்கு ஒரு நீதி,பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும். 4 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை என.கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை நடக்கும்போது சட்டம் மீறப்பட்டால்தான் என்ன? மனிதாபிமானம் எப்போது உயிர் பெறும்?  

Wednesday, September 15, 2010

கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?


பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு அடைந்ததைப்பார்த்து ஆளாளுக்கு இப்போது காமெடி ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே.உள்ளத்தை அள்ளித்தா,ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்,தெனாலி,பஞ்ச
தந்திரம்,வசூல்ராஜா எம் பி பி எஸ்,தமிழ்படம்,இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்று பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மினிமம் கேரண்டி காமெடி ஸ்கிரிப்ட்டுக்கு எப்போதும் உண்டு.ஆனால் நம்ம டைரக்டர்கள் இன்னும் மதுரை,வன்முறை,காதல் என்றே சுற்றி சுற்றி வருகிறார்கள்.

கவுண்டமணிக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுதிய வீரப்பன் (பி எஸ் வீரப்பா அல்ல) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதற்குப்பிறகு வாலி படம் மூலம் விவேக் காமெடி ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தார்.வடிவேலு சிங்கமுத்து உட்பட சிலரை பணியில் அமர்த்தி கலக்கினார்.(இப்போ 2 பேருக்கும் லடாய்).

காமெடி ஸ்கிரிப்ட் எழுதுவதில் இப்போது ஒரு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் 10 பேர்களை ஒருவர் கூட உபயோகப்படுத்துவதில்லை.அவர்களைப்பற்றியஒரு அறிமுகம்.

டாப் 10 ஜோக் ரைட்டர்ஸ்

1. தஞ்சை தாமு. -தமிழ்ப்பத்திரிக்கை உலகிலேயே வார்த்தை ஜாலம் எனும் மாய சக்தியால் மிகச்சிறந்த ஜோக்குகளை எழுதி முன்னணியில் இருப்பவர்.தஞ்சாவூர்க்காரர்,பி எஸ் என் எல் இல் பணி புரிபவர்.வயது 47.கவிஅரங்கம்,நகைச்சுவை மன்றப்பேச்சு என வாரா வாரம் சனி ஞாயிறுகளை காமெடிக்காக ஒதுக்குபவர்.கலைஞர் டி வி யில் எல்லாமே சிரிப்புதான் ஸ்டேண்ட் அப் காமெடியில் 12 எப்பிசோடு கலக்கியவர்.இவர் ஒரு கவிஞரும் கூட.தா.முகமது இக்பால் என்பது சொந்தப்பெயர்.விகடன் அட்டைப்படங்களில்  ஜோக்கால் அலங்கரித்தவர்.இவரது செல் எண்
9443508846

2.வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி
தாமுவின் வாரிசு என இவரை சொல்லலாம்.3 வருடங்களில் இவரது வளர்ச்சி பிரம்மாண்டமானது.விகடன்,குங்குமம் இதழ்களில் இவரது ஜோக் வராத வாரமே இருக்காது.சொல் விளையாட்டு,வார்த்தை ஜாலம்,நையாண்டி என கலந்துகட்டி அடிப்பவர்.வயது 36,காலைக்கதிர் வாரக்கதிர் இதழில் 53 அட்டைப்படக்கவிதைகள் எழுதி சாதனை படைத்தவர்.ஒரு ஜோக் எழுத்தாளர் கவிதையிலும் கலக்க முடியும் என முதன்முதலாக நிரூபித்தவர்.இவரது செல் எண் 9245148312

3. வி சாரதிடேச்சு,திருவல்லிக்கேணி,சென்னை

ஜோக் எழுத்தாளர்களில் எல்லோருக்கும் சீனியர்.ஆனந்த விகடனில் 1992,1994,1998 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு வாரமும் 14 ஜோக்ஸ் ( 2 முழுப்பக்கங்கள்)வெளிவந்தது இவருக்கு மட்டும்தான்.இவர் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். துறைமுகத்தில் அக்கவுண்ட் செக்‌ஷனில் பணிபுரிகிறார்.வயது 58.செல் எண் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.கொஞ்சம் ரிசர்வ் டைப்.

4.கரடிகுளம் ஜெயாபாரதிப்பிரியா 

இவர் தமிழ்ப்பத்திரிக்கை உலகில் 9800 ஜோக்ஸ் பிரசுரம் கண்டு எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்திலும்,தர வரிசையில் 4ஆம் இடத்திலும் உள்ள்ளார்.இவர் இப்போது எழுதுவது இல்லை.இவரைப்பற்றிய தகவல்களும் சரியாகக்கிடைக்கவில்லை.

5.அம்பை தேவா,தூத்துக்குடி

விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர்.(ராவணன் படத்தில் உசுரே போகுது பாட்டு வருமே).இவர் சீனியர்.எல்லோருக்கும்.1972 இல் இருந்து எழுதுகிறார்.இவரது ஜோக்குகள் நறுக் சுருக் என 3 வரிகளில் முடிந்து விடும்.நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர்.இவர் கட்டுரை,ஜோக்ஸ் வராத பத்திரிக்கைகளே இல்லை எனலாம்.துறைமுகத்தில் க்ளர்க் பணி.வயது 55.இவரது செல் எண் 9842343232.



இந்தக்கட்டுரை இடப்பற்றாக்குறையின் காரணமாக தொடரும் போட்டு இப்போதைக்கு முடிக்கிறேன்.புது இயக்குநர்கள் காமெடி ஸ்கிரிப்ட் எழுத இவர்களை பயன்படுத்திக்கொண்டால் அது ஒரு புதிய ரத்தத்தை நகைச்சுவைக்குப்பாய்ச்சியதாக இருக்கும் என நகைச்சுவை எழுத்தாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் ஜோக் ரைட்டர்ஸ் இப்போது 200 பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களது திறமை ஒரே வட்டத்துக்குள் சுருங்கி விடக்கூடாது.வாய்ப்புக்கிடைத்தால் அவர்கள் கலக்குவார்கள் என்பது நிச்சயம்.