Showing posts with label Hindi film review. Show all posts
Showing posts with label Hindi film review. Show all posts

Saturday, August 10, 2013

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

 

தாத்தாவின் ஆஸ்தியை  எப்படி பேரன் உதயநிதி ஸ்டாலின் சினிமா  எடுக்கறேன்கற பேர்ல கரைச்சுட்டிருக்காரோ  அப்படி   ஹீரோ தன் தாத்தாவின்  அஸ்தியை கரைக்க ரயில்ல  ராமேஸ்வரம்  போறார்.ரயிலில் வந்த மயிலை  சந்திக்கறார்.மயிலுக்கு  என்ன பிரச்சனைன்னா இயக்குநர் சேரன்  பொண்ணு மாதிரி  அது  யாரையும்  லவ்வலை, ஆனா வீட்ல  பார்த்து வெச்ச மாப்ளை பிடிக்கலை, அதுனால   வீட்டை விட்டு ஓடி வர திட்டம் போட்டிருக்கு .


ஹீரோவை யார்னே தெரியலைன்னாலும்  அவர் தான் தன் காதலர்னு  சும்மா அடிச்சு விட்ருது. ஆல்ரெடி பார்த்து வெச்ச மாப்ளையை  அடிச்சு  வீழ்த்துனாத்தான்   பொண்ணு  ஹீரோவுக்கு .!  ஹீரோ  ஹீரோயினைக்கூட்டிட்டு   எஸ் ஆகறார். வழிப்பயணத்துல  ஹீரோயின் கூட  சினேகா  ஆகிடுது , அடச்சே , சினேகம் ஆகிடுது. லவ் வந்துடுது . ( நாமும் எத்தனையோ பயணம்  கடந்து வந்துட்டோம்  ஒரு லவ்வும் வந்து தொலைய மாட்டேங்குது ;-))


அவங்க  2 பேர் லவ் என்ன ஆச்சு? என்பதே  கதை 


 ரொம்ப சாதாரணமான , நமக்கு மிகவும் பரிச்சயமான இந்தக்கதையை   ரொம்ப சுவராஸ்யமான திரைக்கதை  , சம்பவங்கள் மூலம்  விறு விறுப்பாக்கொண்டு போறாங்க 




ஹீரோ ஷாருக்கான்  நம்ம ஊர் மவுன ராகம் கார்த்திக் மாதிரி, என்ன ஒரு இளமைத்துள்ளல் , நடிப்பு , பாடி லேங்குவேஜ் , எல்லாம் அபாரம் . இந்த வயசுலயும்  பாஜிகர்  படத்துல பார்த்த அதே சுறுசுறுப்பு ,இளமை . வெல்டன் . 

இவர் பேசும்   தமிழ் , ஆங்கில , ஹிந்தி வசனங்கள்  செம காமெடி கலாட்டா , கிரேசி மோகன் பாணியில் அமைந்த   வார்த்தை ஜால காமெடி  பெரிய பிளஸ்.



ஹீரோயின் தீபிகா அந்த புதருக்குப்பின்னால போகக்கூடாது, படுக்கக்கூடாது சாரி  தீபிகா படுகோனே . தேக்கு மரம் மாதிரி வழுவழு என்ற  வாளிப்பான  உடம்புடன் , பாக்கு மரம் மாதிரி ஓங்கி வளர்ந்த உடம்புக்காரி  ( நீ இதுக்கு முன்னால பாக்கு மரத்தையோ , தேக்கு மரத்தையோ நேர்லபார்த்திருக்கியா? சும்மா அள்ளி விடாதடா? ) இவர்  முதுகில்  எதுவும் அணிவதில்லை  என்ற வைராக்கியத்துடன்  ஆளான நாள் முதலா  சத்தியம் செஞ்சு  கொடுத்தவர் மாதிரி ஓப்பனாகவருகிறார்.




 இவர் லோ ஹிப் சேலை மிகமிக அபாயகரமான  ஷேர் மார்க்கெட் , பண ரூபாய் மதிப்பு போல  கீஈஈஈழே இறங்கி வரும்  வாகு அய்யய்யோ !.தொப்புளுக்கு கீழே  2 இஞ்ச் சேலையை இறக்கி கட்டும்மான்னு டைரக்டர் சொன்னா  6 இஞ்ச் இறக்கி கட்டும் இறக்க  சுபாவம் உள்ள   கிளாமர் ராணி . இவர் போட்டு வரும்  வளையம் உள்ள மூக்குத்தி இவர் முக அழகுக்கு பொருந்தவில்லை என யாராவது அவரிடம் போய் சொன்னால் தேவலை ( அல்லது ஃபோன் நெம்பர் கொடுத்தா நான் மெசேஜ்ல சொல்லிக்கறேன் ) 


அடிக்கடி இவர் லோ கட் ஜாக்கெட்டில் துள்ளிக்குதிப்பது  முயல் கதையை நினைவுபடுத்துது . ஹீரோவை விட  அரை அடி  உயரம் என்பதால்  ஹீரோவுடனானக்ளோசப் காட்சிகளில் எல்லாம்  குனிஞ்சு  நடிக்க வேண்டிய  கட்டாயம் , நமக்கு தாயம் 



ஹீரோயின் அப்பாவாக சத்யராஜ் . கம்பீரமான தோற்றம் , ஆனால் அதிக வாய்ப்பு இல்லை.  கிராமத்து தாதா  தோற்றம் கனகச்சிதம். மேஜர் சுந்தர்ராஜனுக்கு அண்ணன் . ஒரே வசனத்தை தமிழில் , ஆங்கிலத்தில் , ஹிந்தியில் என  3 டைம் சொல்றார். ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறுபதம் இதோ -  டேக் ஹெர் , இவளை எடுத்துக்கோ , தேரி மேரி 


படம் முழுக்க தமிழ்  வசனங்கள்  வந்து போகுது , மும்பைல சப் டைட்டில் போட்டுத்தான்  படத்தை ஓட்டனும்  போல





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  




1. ஓப்பனிங்க் சீனில்  ஹீரோயினுக்கு ஓடும்  ரயிலில் இருந்து கை கொடுத்து  ஏத்தி விடும்(ரயில்ல தான்) ஹீரோ  வில்லன்கள்  என தெரியாம   4 பேரையும்  அதே போல்ம்  கை கொடுத்து  ரயிலில் ஏற்றுவது  செம காமெடி சீன் , தியேட்டரில் செம அப்ளாஸ் 


2. அந்த    ரயில்  ஒரு பாலத்தில்  நிற்கும்போது   ஹெலிகாப்டர்ஷாட்டில்  இரு புறமும் ஓடும் ஆற்றை காட்டுவ்து அபார,மான லொக்கேஷன்  செலக்‌ஷன் ,ஒளிப்பதிவு  பிரமாதம்  ( மகாராஸ்ட்ராவில் உள்ள  டூர் ஸ்பாட்டான  லோனாவாலாவாம் - நாமெல்லாம் பேங்க்ல லோன் வாங்கிட்டுதான் அங்கே போக முடியும் )  ஹாலிவுட் படத்துக்கு இணையான காட்சி அது 



3. திருமணமான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணை  தூக்கிக்கொண்டு   300 படிக்கற்கள்  உள்ள   மலைக்கோயிலில்  தூக்கிச்செல்ல வேண்டும்  என்ற நிபந்தனைப்படி  ஹீரோ ஹீரோயினை  தூக்கிச்செல்லும் செண்ட்டிமெண்ட் சீன்  ( இந்த  சீனில் நான் அனிரூத்  ஆண்ட்ரியாவை  தூக்கிச்செல்வது போல் கற்பனை பண்ணிப்பார்த்துக்கிட்டேன் ) 


4.   கூட  இருக்கும் வில்லனின் அடியாட்களுக்கு தமிழ்மட்டுமே தெரியும் என்பதால்   ஹீரோ - ஹீரோயின் இருவரும் பாட்டு மூலமாகவே  சங்கேதமாக தகவல் பரிமாறிக்கொள்வது   சுவராஸ்யம் . ஹிந்தியில்   சூப்பர் ஹிட் பாட்டுக்களை   அதே மெட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்பாடுவது  பாலிவுட்டில்  அமோக வரவேற்பு பெறும் 


5.  ப்ரியாமணியுடனான  குத்தாட்டம் கலக்கல் டான்ஸ் ,  அந்த மெட்டு , டான்ஸ்  கொரியோகிராபி  கிழி கிழி  ( நன்றி  - கலா சலா  சல சலா ).க்ளைமாக்ஸில்   வரும்  லுங்கி டான்ஸ்  செம ஆட்டம் .


யு  நெக் ஹிஹி


 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:



1. கில்லி படத்தில் விஜய்  த்ரிஷாவின் கழுத்தில்  அரிவாளை வெச்சு மிரட்டி வில்லன்களிடம்   இருந்து  தப்பிப்பதும்  , பிரகாஷ் ராஜை  ஜீப்புடன் ஓட விட்டு சேத்தில் தள்ளி  விடுவதும் மிக புகழ் பெற்ற காட்சி , அதை அச்சு அசல் அப்படியே காப்பி அடிச்சது ஏன்? இத்தனைக்கும் இது ஆல்ரெடி  தெலுங்கில் வந்தசீன் தான் . ஒரே சீனை  எத்தனை பேர்தான்   சுடுவீங்க ? ( ஒக்கடு தெலுங்கு ஒரிஜினல் )
2. முத்து படத்தில்   லவ் லெட்டர்  கை மாறி ஆளாளுக்கு தப்பா ஆளைஅர்த்தம் பண்ணிக்கிட்டு நைட்  தோட்டம்  வந்து  அலை மோதும்  காமெடி அப்படியே   சுட்டிருக்கீங்க  .. முடியல(   மீட்   @ ஸ்டோர் ரூம்) 



3. ஹீரோயினுக்கு  ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ் சுத்தமா வர்லை . அதனாலதானோ என்னவோ  கேமரா எப்பவும் அவர் முகத்தைத்தவிர   மத்த  எல்லா இடங்கள்லயும்  சுத்திட்டே இருக்கு  


4. ஷாருக்கான் படத்துல   ரஜினி வரனும்னு கட்டாயமா? என்ன?  ரஜினி இந்தப்படத்துல நடிக்கறார், ஒரு கெஸ்ட்  ரோல்ல வர்றார்னு ஆசை காட்டி  சும்மா ஒரேஒருபாட்டுக்கு   அவர்  ஃபோட்டோவ மட்டும் மாட்டி ஹீரோ ஷாரூக் ஆடுவது   ஆர்க்கெஸ்ட்ரா  ட்ரூப் மாதிரி இருக்கு , படு செயற்கை  , இதெல்லாம்   அறிமுக   ஹீரோ படத்துக்கு  ஓக்கே , ஷாரூக் மாதிரி  சூப்பர் ஸ்டார்கள் இன்னொரு சூப்பர்ஸ்டாரை   அண்டிப்பிழைக்கனுமா?


5.   இளையதளபதி விஜய்& புரட்சித்தளபதி   விஷால் 2 பேரும்   சம்ப்ந்தம் இல்லாம ஏதாவது பஞ்ச்  டயலாக் அப்பப்ப பேசுவாங்க , அந்த மாதிரி இதுல ஹீரோ எதுக்காக  ஒரு டயலாக்கை அடிக்கடி  ரிப்பீட்டிங்க்? - டோண்ட் அண்டரெஸ்டிமேட் த  பவர்  ஆஃப் எ  காமன் மேன்  = பொது ஜனத்தின்சக்தியை   குறைச்சுஎடை போடவேணாம் 




6. அலெக்ஸ் பாண்டியன் அட்டர் ஃபிளாப் ஆக முக்கியக்காரணமே   ஹீரோ   80 கிமீ வேகத்தில்  ஜீப்ல போய்க்கிட்டே எதிரே 120 கிமீ வேகத்தில் வரும்  ஜீப்  டயரை அரிவாளால் வெட்டி தள்ளும் சீன் தான் .. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத   அந்தசீனைஏன் காப்பி அடிக்கனும் ? 



7.  கிங்க்காங்கின் மொக்கை காமெடி  சீன்,இலங்கைக்கு டீசல்   கடத்தும்  சீன்  தேவை  இல்லாதது 


8.  படத்தின் முன்  பாதி   செம ஸ்பீடா போகுது , பின் பாதி   டெட் ஸ்லோ . இழு இழு என இழுத்திருக்கவேண்டாம் , எடிட்டிங்க்ல இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்


9 . தனுஷ் இன் உத்தம புத்திரனில் இருந்து சில காட்சிகளை  உருவியது எதுக்கு ?  என் லிங்கு சாமியின்  ரன் பட க்ளை மாக்ஸ் காட்சியைசுட்டது ஏன்? 



10 . ஹீரோவின் பெயர் ராகுல் என வைத்தது  யாருக்கு  குல்லா போட?




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  ஹீரோயின்  -அந்த ஃபோன்  அவருது
வில்லன்கள் -அடடா ,முதல்லியே  சொல்லி  இருந்தா  அவரையும்  தூக்கிப்போட்டிருப்போமே? 


2.  ஹீரோயின்  -எங்கப்பா  ஒரு  பெரிய   தலை 

 ஓஹோ , டீச்சரா? ஐ மீன்  வாத்தியாரா?


 ஹய்யோ , அவர் ஒரு டான்  ( தாதா) 



3. சத்யராஜ்  - என்னம்மா   கண்ணு... தமிழ்  தெரியாதா? 



4. ஐ ஆம்  இன்ஸ்பெக்டர் 


விச் பார்ட்?


ஹோல் பாடிக்கும்

 யோவ் , எந்த  ஏரியாவுக்குன்னு கேட்டேன்




5. உயிரோட வந்த நீ உயிரோட இங்கே இருந்து  போக மாட்டே  


 

6. ஆல் ஈஸ்   வெல்

 என்னது,? ஆயில் ஈஸ் வெல்லா? 



 7  , என்னங்க ? வண்டி  ரிப்பேரா? ஏன் கார்ல புகை வருது?

 ம், கார் தம் அடிக்குது 



8.  கேரளா  லாரி  டிரைவர் -எந்தா ஜோலி? 


 ஐ ஆம் நாட் ஏஞ்சனா ஜூலி 



9.  நான்  ரொம்ப நல்லவன் , ஒரு மகளோட மாப்பிள்ளைக்கு  இதைவிட முக்கியமான  தகுதி என்ன வேணும் ?


 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்    - ஷாரூக்  ரசிகர்கள் , தீபிகா (குப்புற) படுகோனே ரசிகர்கள்  பார்க்கலாம் . ஜாலி டைம்பாஸ், பெண்களும் பார்க்கலாம் . ஈரோடு வி எஸ் பில படம் பார்த்தேன் 




டிஸ்கி- தலைவா- விமர்சனம் -http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html 

















 ஒயிட் அண்ட்  பிளாக் கில்  கலர்



Monday, July 01, 2013

அம்பிகாபதி - சினிமா விமர்சனம்

 

ஹீரோவுக்கு 6 வயசா இருக்கும்போதே 5 வயசான ஹீரோயினை லவ் பண்றாரு. யாரும் பயப்பட வேணாம். அது பப்பி லவ் தான். 5 நிமிஷம் தான் காட்டறாங்க . இப்போ ஹீரோ 10 வது படிக்கறாரு. ஹீரோயின் 9 வது படிக்கறா. லவ்வை சொல்றாரு. பளார்னு அறை வாங்கறாரு.ஆனா அண்ணன் அசரலையே? மீண்டும் மீண்டும் லவ் சொல்லி 15 தடவை அறை வாங்கறாரு. 16 வது தடவை ஹீரோயினுக்கு லவ் வந்துடுது ( நீதி - ஒரு பொண்ணு கிட்டே 15 தடவை உதை வாங்குனா போதும் லவ்விடலாம் )


2 பேரும் லவ் பண்ணிக்கும்போது ஹீரோ தன் காதலை நிரூபிக்க 4 டைம் தன் மணிக்கட்டை அறுக்கறாரு . ஹீரோயின்  ஒரு  டைம் அறுக்கறாரு . டைரக்டர் மட்டும் படம் பூரா அறுத்துட்டே இருக்காரு .

2 பேர் லவ்வும் 2 வீட்டுக்கும் தெரிஞ்சதும் வழக்கம் போல் பொண்ணு வீட்ல பொண்ணை வேற ஊருக்கு படிக்க அனுப்பிடறாங்க . இங்கே தான் கதைல பயங்கரமான ட்விஸ்ட் . ஹீரோயின் அங்கே போய் முறைப்படி ஹீரோவைத்தானே நினைச்சு ஏங்கனும்? தூங்கனும் , அல்லது தூக்கம் வராம தலையணையை கட்டிப்பிடிக்கனும்?




 ஆனா  இது பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கு அக்கா போல . அங்கே வேற ஒரு  பையனை பிராக்கெட் போடுது . அது கூட தேவைலை . 2 இஞ்சி மரப்பான் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கலாம். அந்த கேவலமான கதையை ஹீரோ கிட்டே  அதாவது பழைய காதலன் கிட்டே ஸ்கூட்டர்ல பின்னால உக்காந்து  அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே பெருமையா சொல்லுது . 


 படம் பார்க்கறவங்களுக்கு டவுட் . ஹீரோயின் மெண்ட்டலா? படம் பார்த்துட்டு இருக்கும் நாம எல்லாம் கேனயன்களா? 

 இப்போ படத்துல ஒரு ட்விஸ்ட் . ஹீரோயினோட லேட்டஸ்ட் லவ்வர் திடீர்னு மண்டையைப்போட்டுடறான். அதுக்கு ஹீரோ தான் காரணம்னு ஹீரோயின் நினைக்குது . அந்த லேட்டஸ்ட் லவ்வர் காலேஜ் ல சேர்மேன் . கட்சி ஆரம்பிச்சு புரட்சி எல்லாம் பண்ணும் ஐடியா. ஹீரோயின்  அவர் லட்சியத்தை நிறைவேத்த  முயற்சி பண்றாரு. ஹீரோ அவளுக்கு உதவி பண்றாரு. 

 இந்த 2 கேனங்களும் வாழ்க்கைல இணைஞ்சாங்களா? இல்லையா? என்பதை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போயும் , டப் வேஸ்ட் பண்ண நினைக்காதவங்க டி வி லயும் பார்த்து தெரிஞ்சுக்கலாம் .


 ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியதா சொல்லப்பட்டு செல்வராகவன் இயக்கிய 3 படத்தின் 5  ரீல் அப்படியே முன் பாதி ல சுட்டுட்டாங்க . கே பாக்யராஜின்  டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க்  கொஞ்சம் , கமலின் மூன்றாம் பிறை கொஞ்சம் .ரங்க் தே பசந்தி கொஞ்சம் , பின் பாதில புதுப்பேட்டை பாதிப்பு என படம் ஒரு காக்டெயில் மாதிரி .




ஹீரோ தனுஷ் பிரமாதமான நடிப்பு . குறை சொல்லவே முடியாது . வழக்கமா சைக்கோ ஸ்பெஷலிஸ்ட்டா வரும் அவர் இதுல சாதா ஆளா வர்றதே திருப்தி . தனுஷ் கிட்டே என்ன ஸ்பெஷல்னா அவர் தாடி மீசை எடுத்தா ஸ்கூல் ஸ்டூடண்ட் . வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஒரு தோற்றம் வந்துடறது தான் . பல இடங்களில் இவர் நடிப்பு பட்டாசு . வெல்டன் தனுஷ் 


 ஹீரோயின் சோனம் கபூர் . மாசு மருவே இல்லாத மொசைக் தரையில்  ஐஸ்க்ரீம் வழிய விட்ட மாதிரி ஒரு முகம் . ஆனா அவருக்கு எல்லாமே சின்னது . ஐ மீன் அவருக்கு கண் , காது , உதடு எல்லாம் ரொம்ப சின்னது . தமிழர்கள் குஷ்பூ , நமீதா , ஹன்சிகா , அஞ்சலி மாதிரி பிரம்மாண்டங்களை ரசிச்சுப்பழகினவங்க . அதனால பெருசா எடுபட மாட்டாங்கன்னு தோணுது. ஆனா அவர் நடிப்பு கலக்கல் .


சிரிப்பு , கோபம் , அழுகை என எல்லா காட்சிகளிலும் ஜொலிக்கிறார் ( அதாவது சோக சீனிலும்  பாப்பா  ஃபுல் மேக்கப் ) டிரஸ்சிங்க் சென்ஸ் பக்கா . பாடல் காட்சிகளில் அவர் முதுகு ஒரு  ஷங்கர் பட போஸ்டரே ஒட்டும் அளவு பிரம்மாண்டமா ஓப்பனா இருக்கு. குட் 



இன்னொரு ஹீரோவா  வரும் அபய்டியோல் ஆள் பர்சனாலிட்டிதான் . ஆனா அப்பாஸ் , ஷாம் மாதிரி மைதா மாவு கேஸ் . செல்லாது செல்லாது 


தனுஷ்-ன் தோழியாக வரும்  ஃபிகர் யாரு? நல்ல அழகு , நடிப்பு என கவனிக்க வைக்க்கிறார் ( நாம எந்த ஃபிகரை கவனிக்காம இருந்தோம் ? ) 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் முன் பாதி இளமைக்கலக்கல் . செம ஜாலியான திரைக்கதை . செம ஸ்பீடு . சின்ன சின்ன முக பாவனைகளில் ஹீரோ - ஹீரோயின் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க 


2. ஒளிப்பதிவு  ஹோலிப்பண்டிகை காட்சிகளில், காசி நகரின் அழகை அள்ளும் காட்சிகளில் அபாரம் . கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் 


 3 , இசை ஏ ஆர் ரஹ்மான். பிரம்மாண்டமான இசை .  பி ஜி எம் மில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். 2 பாட்டு ஹிட்டு . ஹிந்தி ராஞ்சனா வுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் வர ஒரே காரணம் ஏ ஆர் ஆர் தான் 


4 ஹீரோயின் , ஹிரோவின் தோழி மற்றும் பெண் கதாப்பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு , உடை உடுத்திய விதம் எல்லாம் அருமை . பிரம்மாண்டம் , கலை நயம் 


5. அப்ளாசை அள்ளும் தனுஷ் நடிப்பு 3 இடங்களில் பின்னிப்பெடல் எடுத்து விட்டார் . 1. இனி உன்னைப்பார்க்க வந்தேன் நான் ஒரு அப்பனுக்கு பொறக்கலை  என அவரிடம் பல்லைக்கடித்து பேசும் இடம்  2. பின் பாதியில் ஹீரோயினைப்பார்க்க காலேஜில் காம்பவுண்ட் ஏறிக்குதிக்கையில் மாட்டி யார் என விசாரிக்கப்படுகையில் தான் ஒரு திருடன் என சமாளிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடிக்காட்சிகளும் தமிழுக்கு புதுசு  3 . அருமையான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பிரமாதமான ஜாலியான எப்பிசோடாக வரும் முன் பாதி திரைக்கதைக்கும், பின் பாதி குழப்படி திரைக்கதைக்கும் சமப்ந்தமே இல்லை . ஏன் இந்த தேவை இல்லாத வேலை ? 


2. காலேஜ் சேர்மேனாக வருபவர் எப்படி தொகுதி மக்களைக்கவர்ந்து கட்சி ஆரம்பிக்கும் அளவு பெரிய ஆளாக முடியும் ? 


3. தனுஷ் எப்படி திடீர் என  கட்சியில் செல்வாக்கு பெறுகிறார்? அவர் என்ன நாஞ்சில் சம்பத்தா? பரிதி இளம் வழுதியா? 



4. ஹீரோயின் ஹீரோ கிட்டே “ நீ ஜெயிச்சுட்டா உனக்கு உன் கன்னத்துல  முத கிஸ் தர்றேன் கறா . ஆனா ஆல்ரெடி அவ 2 டைம் குடுத்திருக்கா ( நான் எண்ணிட்டே இருந்தேன் ) அது எப்படி? 



5. ஹோலிப்பண்டிகை கொண்டாட்ட காட்சியில் ஊரே முகத்தில் கலர்ப்பொடியோட இருக்கு, ஹீரோயின் மட்டும் படுக்ளினா  இருக்கே? எப்படி? கூட்டத்துக்கு நடுவே தான் நிக்குது 



6. ஹீரோ “ டூயட் பட வசனமான சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் அப்டினு வைரமுத்து கவிதையை வாசிக்கும் சீனில் பேப்பர்ல ஹிந்தி எழுத்து. ஒண்ணா அதை கட் பண்ணி இருக்கனும், அல்லது  தமிழ்ப்பேப்பர் வெச்சு ஒரு ஷாட் எடுத்திருக்கனும் 



7. ஹீரோயினின் 2 வது காதலன் முஸ்லீம் அல்ல என்பதை ஹீரோதான் கண்டு பிடிக்கனுமா?  ஹீரோயின் பெற்றோர் ஏன் விசாரிக்கலை? இத்தனைக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுது . வீட்டுக்கு போக வர இருந்திருப்பாங்களே? 




8. ஹீரோயினின் 2 வது காதலன் இறந்ததை நேரில் பார்க்கும் ஹீரோ   ஏன் வாமிட் எடுக்கறாரு? முறைப்படி வருத்தப்பட வேண்டிய ஹீரோயினே பெருசா அலட்டிக்கலை. இவரு ஏன் ஓவரா ஃபீல் ஆகறாரு? 



9. ஹீரோயின் ஹீரோ மேல உண்மையான காதலே வைக்கலை. ஹீரோவோட காதலை யூஸ் பண்ணிக்கறாரு. அதனாலேயே ஆடியன்சால அவங்க காதல் கதைல லயிப்பு வர்லை 



10. கூட்டத்தில் நடக்கும் வெடிகுண்டு காட்சிகள் , பெரிய அரசியல் தலைவி ஹீரோயினுடன் பேச வருவது எல்லாம் படு செயற்கை 





மனம் கவர்ந்த வசனங்கள்


1. இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் சமம் கிடையாது


2. என்னைக்கு தான் லவ் பண்ற பொண்ணு இன்னொருத்தனை ல்வ் பண்ணுதோ அப்பவே அவனோட லவ் செத்துடும்


3. இதுவரை எந்த ஆணும் உணர வைக்காத புது உணர்வை எனக்கு உணர வெச்சான்.அதை அவனுக்கு உணர வைக்கனும் னு நினைக்கறேன்


4. புதுசா எது வந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு அது பின்னால ஓடறதுதான் நம்ம பழக்கம்


5. நான் ரத்தம் சிந்தறேன்.நீ கண்ணீர் சிந்தறே.ஆனா நமக்குள்ளே காதல் நடக்கவே இல்லை.விசித்திரமா இல்ல?


6.  பிகரை கரெக்ட் பண்ண 2 வழி 


.1.கடின உழைப்பு.விடாம அவ பின் சுத்துவது

 2 அவளை பயமுறுத்துவது


7. தொழுது கொண்டிருப்பது என்னவோ நீ தான்.ஆனால் இறைவன் வரம் கொடுத்தது என்னவோ எனக்குத்தான்



8. ஒரு பொண்ணாலயும் ஒரு ராக்கெட்டாலயும் தான் நம்மை எந்த உயரத்துக்கும் கூட்டிட்டுபோக முடியும்



9.ஏய்.. உன் பேரையாவது சொல்லிட்டுப்போ .


 நாளைக்கு எப்படியும் என் கிட்டே அறை வாங்க வருவே தானே? அப்போ சொல்றேன் 

10  அது லவ்வே இல்லைடா, நான் அப்போ டென் த் படிச்சுட்டு இருந்தேன் 


 நான் மட்டும் லா காலேஜ்லயா படிச்சேன்? 




11. உன்னைப்பார்த்தாலே அந்தப்பொண்ணு சிரிக்குதே ..  ஏன்?


வெட்கம் , சந்தோஷம் 



12.  ஒரு பெண்ணை சராசரி கல்யாணப்பொண்ணா  தயார் பண்ற வீடாத்தான் என் அத்தை  வீடு இருந்தது 



13.  இவன் வீட்ல இல்லைன்னா  வேற எங்கேயும் தேட வேண்டாம் . நேரா ஹாஸ்பிடல் வந்துடுங்க . அங்கே தான் இருப்பான். அடிக்கடி தற்கொலை முயற்சி பண்ணிக்குவான் 


14. என் மேல தப்பு இருந்தப்பவே  எங்க அப்பா கிட்டே கூட சாரி கேட்டதில்லை. இப்போ என் மேல தப்பும் இல்லை, நீ என் அப்பாவும் இல்லை , உன் கிட்டே ஏன் நான் சாரி கேட்கனும் ? 



15. இப்போ இருப்பது 2 வகை அரசியல் தான் 

1. இருக்கும் ஆட்சியை சதி பண்ணி கவுத்துட்டு புது கட்சி ஆட்சி அமைப்பது 


2. புது அரசியல் கட்சி ஆரம்பிப்பது 



16. சவால்களை எல்லாம் தாண்டி ஜெயிப்பவனே தலைவன் 



17. நான் வாழ்க்கைல கத்துக்கிட்ட பாடம் - பொண்ணுங்களை நம்பி எப்பவும் எந்தக்காரியத்திலும் இறங்கக்கூடாது


18. கரைல நின்னுக்கிட்டே முத்தை எடுக்க முடியாது 


19. இங்கே இருக்கும் சாமியார்கள் எல்லாரும் பாவிகள் . ஏதாவது தப்பைப்பண்ணிட்டு வந்து இங்கே ( காசியில் ) ஒளிஞ்சிக்கறாங்க 



20. நாம செஞ்ச பாவத்தை கங்கையாலயோ , கண்ணீராலயோ கழுவிட முடியாது



21.  தம்பி, நீ யாரு? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 


 நான் ஒரு திருடன் , திருட வந்திருக்கேன் 


22.  இந்த தேசத்துல தலைவருக்கு பஞ்சம் ,ம் என்னை மாதிரி மாக்கான் சொல்றதையே ஜனங்க கேட்கறாங்கன்னா...  





 படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ்

அம்பிகாபதி - முன் பாதி காதல் கலாட்டா,பின் பாதி அய்யய்யோ நான் கிளம்பட்டா?

 ஒரு படத்தை உல்டா அடிச்சா ரீ மேக். பல படங்கள் ல இருந்து உருவி கதம்பமாக்குனா ஓன்மேக் # சினிமா விதி

40% 3 , 30% டார்லிங் டார்லிங் டார்லிங். 30 % புதுப்பேட்டை = அம்பிகாபதி ( ரங்க் தே பசந்தி , மூன்றாம் பிறை ஆங்காங்கே )

ராஞ்ச்சனா ஹிந்தியில் ஹிட் ஆனதில் ஆச்சரியமே இல்லை.ஆனால் தமிழில் அம்பிகாபதி ஹிட் ஆக வாய்ப்பே இல்லை # அவதானிப்பு

ஏ ஆர் ஆர் துள்ளாட்ட இசை பி ஜி எம் பின்றாரு





-ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =40,

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - படம் பார்த்தே ஆகனும்னு அடம் பிடிப்பவங்க இடை வேளை வரை பார்த்துட்டு ஓடியாந்துடுங்க . ஏ ஆர் ஆர்ன் தீவிர ரசிகர்கள் மட்டும் முழுசா பாருங்க  . முன் பாதி ரதி , பின் பாதி பேதி . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன். 1300 பேர் அமரும் தியேட்டரில் 278 பேர் இருந்தாங்க



a




 




Saturday, November 10, 2012

Barfi! (2012) - சினிமா விமர்சனம்

http://img.hindilinks4u.net/2012/09/Barfi-20121.jpg

என் மன வானில் ஹீரோ போல், மொழி ஹீரோயின் போல் இந்தப்பட ஹீரோவும் வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி . காதல் மன்னன் அஜித் போல் இவர் ஆல்ரெடி மேரேஜ் நிச்சயம் ஆன  இலியானாவுக்கு ரூட் விடறார்.அவர் நாட் ஓக்கேன்னு சொன்னாலும் மனசளவுல லவ் இருக்கு. வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்பதால் தயக்கம், இருந்தாலும் சைக்கிள் கேப்ல  சத்யா கமல் அமலா முத்தம் மாதிரி ஒரு லிப் கிஸ் வரை போயிடுது.


இலியானாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையுடன் மேரேஜ் ஆகிடுது. ஹீரோ தேவதாஸ் எல்லாம் ஆகலை. அவரோட அப்பாவுக்கு திடீர்னு உடல் நலக்குறைவு. ஆபரேஷனுக்கு பணம் வேணும். அப்பா கார் டிரைவரா வேலை செய்யும் முதலாளியிடம் செலவுக்கு பணம் கேட்டா கர்நாடகா நமக்கு தண்ணீர் விஷயத்துல என்ன பண்ணுச்சோ அதை பண்றாரு.கடுப்பான ஹீரோ தன் அப்பாவின் முதலாளியின் மகளை  குணா கமல் மாதிரி கிட்நாப் பண்ணிடறாரு .


 இவ்ளவ் பணம் குடுத்தாத்தான் மகளை ஒப்படைப்பேன்னு மிரட்டி  அந்தப்பணத்தை வாங்கி ஆபரேஷன் பண்ண வைக்கிறாரு. முதலாளியின் மகள் பிரியங்கா சோப்ரா  மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி மனநலக்குறைவு  உள்ளவர். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். இருவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிடுது.


பிரியங்காவின் அப்பா ஒரு டிராமா போட்டு  ஹீரோவை போலீஸ்ல சிக்க வைக்கிறார். பழைய காதலி இலியானா தாலி கட்டுன புருஷனை அம்போன்னு விட்டுட்டு ஹீரோ கூட இருந்து அவர் காதலை சேர்த்து வைக்க ட்ரை பண்றாரு. என்ன ஆச்சு என்பதே மிச்ச மீதிக்கதை.. 

 படத்தோட இயக்குநர் பல உலகப்படங்கள் பார்த்தவர் போல். செய் நேர்த்தி, தொழில் நுட்பக்கலைஞர்களிடம் வேலை வாங்கிய முறை எல்லாம் பிரமாதம். சீன் பை சீன் ஆல்ரெடி வந்த பல படங்களின் கலவையா இருந்தாலும் சாதா ரசிகனுக்கு சிந்திக்க வாய்ப்பே கொடுக்காத திரைக்கதை அமைப்பு , காட்சிகளின் விவரிப்பு அழகு.


ஹீரோ  ரன்பீர் கபூர் சிம்மா சொல்லக்கூடாது, செம நடிப்பு. பிறவிக்கலைஞனும், தன் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான  ரசனைக்கு தீனி போடும்  கேரக்டர்  தேர்வு செய்யும் ஜீவ கலைஞனுமாகிய   கமல் செய்யமுடிந்த கேரக்டரை சர்வசாதாரணமாக அநாயசமாக ரன்பீர் செஞ்சுடறார். படம் முழுக்க அவருக்கு வசனங்கள் இல்லை, ஆனாலும் அந்த குறையே  தெரியாத வண்ணம் தன்  பக்குவமான நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். 


ஹீரோயின் இலியானா ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். அநேகமாக இவர் இடுப்பை காட்டாமல் நடிப்பைக்காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ( ஒரே ஒரு சீன்ல பேக்ல இருந்து லைட்டா இடுப்பை காட்டறார் ) குடும்பப்பாங்கான தோற்றம் அபாரம். நிச்சயிக்கப்பட்ட பெண் காட்டும் தடுமாற்றம், காதல்  , வெட்கம் எல்லாம் வெளிப்படுத்தும் அழகிய கேரக்டர். வெல்டன் 


  பிரியங்கா சோப்ராக்கு லைஃப் டைம் கேரக்டர். மூன்றாம் பிறையில் ஸ்ரீ தேவிக்கு குழந்தை மாதிரி நடிச்சா போதும், ஆனா இதுல அதை விட சவால் நிறைந்த கேரக்டர்.  சாதா ஜனங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத உயர் குடி மக்கள் மட்டுமே அறிந்த நோய் தாக்கிய கேரக்டரை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 


அது போக ஆசிஸ் வித்யார்த்தி மிடுக்கான நடிப்பு, போலீஸ் ஆஃபீசராக வரும் தொந்தி கேரக்டர், அப்பா கேரக்டர் எல்லாரும் அளவான நடிப்பு


http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/07-2012/first-look-ranbir/barfi23.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இது 1972 மற்றும் 1978 ஆகிய கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் ஒளிபப்திவு , ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஒர்க். அதி அற்புதமான பங்களிப்பு.கொல்கத்தா , டார்ஜிலிங்கில் கேமரா புகுந்து விளையாடுகிறது


2. ஹீரோ இலியானாவுக்கு பிரபோஸ் பண்ணியதும் தான் ஆல்ரெடி எங்கேஜ்டு என்று இலியானா சொன்னதும் டக் என இலியானா தோழிக்கு ரூட் விடும் குறும்புத்தனம் , மிக இய்ல்பாக நடக்கும் அந்த லிப் டூ லிப் கிஸ் சீன் அந்த சீனில் லைட்டிங்க்


3. ஹீரோ தன் ஷூவை கழட்டி அதில் டாட்டா காட்டுவது. பிரியங்காவுக்கு தன் இருப்பிடம் , வருகை அறிவிக்க தன் ஷூவை மேலே எறிந்து எறிந்து சோர்வது 


4. இலியானாவின் விரலில் மாட்டப்பட நிச்சய மோதிரத்தை  கழட்டி வீசி , அருகம்புல்லால் மோதிர முடிச்சு இடுவது கவிதையான சீன் 


5. பிரியங்கா சோப்ரா கோசாப்பழம் ( தர்பூசணி) சாப்பிடும்போது மேட்சுக்கு மேட்சாக ரத்த சிவப்பில் கோட் அணிந்து இருப்பது கொள்ளை அழகு 


6. இடைவேளை கார்டு போடும்போது பிரியங்கா தூக்கக்கலக்கத்தில் தன் விரலை ஹீரோ கையோடு இணைப்பது , பின் ஹீரோ எழுந்து அவர் தூக்கம் கலக்காமல் தன் விரலை விடுத்து அவர் விரலுடன் கோர்ப்பது 


7. ஹீரோவுக்கு காது கேட்காது என்பதால் காலிங்க் பெல்லுக்கு பதிலாக  செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு செம 


8. பிரியங்கா கயிற்றுப்பாலத்தை கடக்கையில் ஹீரோ குறும்பாக அதை ஆட்டுவது, பின் ஒரு காட்சியில் இருவரும் நாசியில் நாசி வைத்து கொஞ்சுவது ரொமாண்டிக் சீன்ஸ் 


9. ஹீரோ  ஆளில்லா வயல்காட்டில் நெம்பர் ஒன் போவதும் திடீர் என ஒரு கூட்டம் அவர் முன் தோன்றுவதும் பின் சேம் டிட்டோ போலீசுக்கும்  நடப்பதும் ரகளையான காமெடி 


10. ஹீரோயின் இலியானாவின் அம்மா கேரக்டர் நடிப்பும் , அவர் தரும் ஆதரவும் பேச்சும் அழகு


http://blog.bookmyshow.com/wp-content/uploads/image/BMS%20Reviews/BARFI!/barfi-2.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தின் முதல் காட்சியான போலீஸ் , ஹீரோ சேசிங்க் சீன் ஆல்ரெடி ஜாக்கிசானின் பிராஜக்ட் ஏ படத்தில், ஆர் பாண்டிய ராஜனின் நெத்தி அடி, ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்  படத்தில் வந்ததுதான், புதுசா யோசிச்சு இருக்கலாம்.அதேபோல் பல கட்சிகள் சார்லி சாப்ளின் படங்கள் சாயல்


2. இந்தப்படத்தின் மார்க்கெட்டிங்க் மகா மோசம். போஸ்டர் டிசைன் எல்லாம் ஹீரோ சைக்கிளில் நிற்கும் காமெடிப்படம் போல் தோற்றம். இது அழகிய கவிதை மாதிரி லவ் ஸ்டோரி, போஸ்டர் டிசைன் மணிரத்னத்தின் கீதாஞ்சலி, மவுன ராகம் போல் அமைந்திருந்தால் செமயா இருந்திருக்கும். படத்துக்கான ஓப்பனிங்க் கிடைக்காததுக்கு காரணம் போஸ்டர் தான் ( பி & சி செண்ட்டரில் படம் சரியா போகலை ) 


3. ஹீரோ அடிக்கடி ரயிலில் ஜன்னலில் பிடி போட்டு ரயிலுடன் பயணித்து விளக்குக்க்ம்பத்தில் மோதி கீழே விழறார், கம்பமும் விழுது. அது எப்படி? சைக்கிள் தான் டேமேஜ் ஆகும். இரும்பு கம்பம் சாதா லைட் வெயிட் லேடீஸ் சைக்கிள் மோதி கீழே விழுமா?


4. அடிக்கடி ஹீரோ கதவில் மோதி இடிச்சுக்குவது ஆல்ரெடி சாகர் ஹிந்திப்படம் முதல் பல படங்களில் கமல் செஞ்சதுதான், சிப்பிக்குள் முத்து , மூன்றாம் பிறை , பாச வலை போன்ற கமல் படங்கள் தாக்கம் ஆங்காங்கே 


5. இலியானா பாரம்பரியம் மிக்க குடும்பப்பெண்ணாக நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து வர்றார், ஆனால் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. அது எப்படி? அவர் அம்மா கேரக்டர் நெற்றி வகிடு , நெற்றியில் குங்குமம் வெச்சு வர்றாரே? அதே போல் இலியானாவையும் நடிக்க வைக்கலையே? 


6. திரைக்கதை அமைப்பு சாதா ஜனங்களுக்கு புரியாது. நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே. தேவையே இல்லை. நேரடியா ஒரே நேர் கோட்டில் கதை சொல்லி இருக்கலாம் 


7. ஒரு பென்ச் ரசிகனின் கேள்வி. படத்தில் ஹீரோவுக்கும் ப், பிரியங்காவுக்கும் மேரேஜ் ஆகுது. பல வருடங்கள் ஒண்ணா வாழறாங்க, ஆனா குழந்தை இல்லை, சோ அவங்களூக்கு இடையே மேட்டர் நடந்ததா? இல்லையா? என்பதை நாசூக்காகவாவது சொல்லி இருக்க வேண்டாமா? 


8. இலியானா தன் புருஷனை அம்போன்னு விட்டுட்டு வந்துடறார், புருஷன் மிக்சர் பார்ட்டியா? எந்த ஸ்டெப்பும் எடுக்கலையா? அவர் காலம் முழுக்க ஹீரோவுக்கும், பிரியங்காவுக்கும் சேவை செஞ்சாரா? ஹீரோ கூட மேட்டர் பண்ணாரா? என்ற  கேள்வுக்கும் தெளிவான விடை இல்லை . (  நெம்பர் 7 , 8 கேள்வி சந்தேகங்கள் எழுப்பிய பெஞ்ச் ரசிகன் நான் தான் ஹி ஹி )


9.ஒரு  சீன்ல சன்பாத் எடுக்கும் ஆண் நிர்வாணமா படுத்திருக்கார், அவர் இடுப்பருகே பேப்பர், அந்த நியூஸ்பேப்பரில் ஹீரோவை போலீஸ் தேடும் விளம்பரம், ஹீரோ அந்த பேப்பரை பார்க்க ,, அந்த ஆள் ஹீரோவை ஹோமோ என நினைக்க மேற்படி காமெடி ஹாலிவுட்டுக்கு ஓக்கே, ஆனா இங்கெ? அதே சீனை ஒரு பெண்ணை வைத்து எடுத்திருந்தா கிளாமருக்கு கிளாமர், கிளு கிளுப்புக்கு  கிளு கிளுப்பு


10. மன நலம் குன்றிய பிரியங்கா ஒரு சினில்  நெம்பர் டூ போக  சல்வாரை உயர்த்தி நிக்கரை கழட்டுன்னு ஹீரோ கிட்டே சொல்றார். அந்த சீனில் கேமரா ஹீரோயினுக்கு பேக்கில் வைக்கப்படிருக்கனும், கண்ணியத்துக்கு கண்ணியம். எதிர்பார்ப்பான கிளு கிளுப்புக்கு கிளுகிளுப்பு . கேமரா ஹீரோயினுக்கு முன்னால பட்டவர்த்தனமா வெச்சிருக்க வேணாம்.


http://zns.india.com/upload/2012/9/23/priyanka-barfi.jpg


சி.பி கமெண்ட் - இது வித்தியாசமான அனுபவம் தரும் நல்ல காதல் கதைதான். ஆனால் ஆஸ்காருக்கு அனுப்பி பிரமாதப்படுத்தும் அளவு ஒரிஜினல் சரக்கு இல்லை. அதாவது வழக்கு எண்  18 /9 படம்  20 கிமீ வேகத்தில் ஓடும் இளைஞன் எனில் பர்ஃபி 30 கிமீ வேகத்தில் ஊக்க மருந்து சாப்பிட்டு ஓடும் இளைஞன். குவாலிட்டியில் ஒரு படி கீழே இருந்தாலும் வழக்கு எண்  18 /9  தான் நல்ல படம். மசாலா ரசிகர்கள், மாமூல் ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு படம் பிடிக்காது. ஏ செண்ட்டரில் மட்டுமே ஓடும். ஈரோட்டில் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகி 2 நாள் தான் ஓடுச்சு. நான் பார்க்கும்போது தியேட்டரில் 12 பேர்தான்.

http://content.internetvideoarchive.com/content/photos/7918/702611_131.jpg

Wednesday, September 26, 2012

Heroine - சினிமா விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2012/bollywood-movie-heroine/kareena-kapoor-heroine-movie-wallpaper01.jpgநாட்ல மேரேஜ் ஆகாம 1008 நல்ல ஆண்கள் , அப்பாவிகள் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரப்பொண்ணுங்க, நடிகைங்க கண்ல மாட்டறது, அல்லது அவங்களா போய் மாட்டிக்கறது ஆல்ரெடி மேரேஜ் ஆன அயோக்கியப்பசங்க கிட்டேதான். நயன் தாரா எப்படி ரம்லத்க்கு துரோகம் பண்ணி பிரபுதேவாவை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி இந்தப்படத்து ஹீரோயின் கரீனாகபூரும்  ஒரு புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை வளைச்சுப்போடறார். அவருக்கு ஆல்ரெடி மனைவி, குழந்தை எல்லாம் இருக்கு. 


 இவருடைய நோக்கம் தான் எப்பவும் மீடியாவில் பேசப்படனும், பர பரப்பான செய்தி நம்மை பற்றி வந்துட்டே இருக்கனும்னுதான். ஒரு தடவை ஷூட்டிங்க் ஸ்பாட்டில் தன் கள்ளக்காதலனின் முதல் மனைவியின் குழந்தையிடம் ஆசையா பேசிட்டு இருக்கும்போது முதல்  மனைவி ஐ மீன் சக்களத்தி வந்து படு கேவலமா  திட்டிடறா?அது சம்பந்தமா செம காண்ட்ல இருக்கும்  கரீனா  தன் காதலன் கிட்டே நியாயம் கேட்கறாரு.



 கார்ல போய்ட்டு இருக்கும்போது 2 பேருக்கும் வாக்குவாதம் வந்து கமல் ஹாசன் எப்படி வாணி கமலை மாடிப்படிக்கட்டுல இருந்து தள்ளி விட்டாரோ அப்படி காரை நிறுத்தி தள்ளி விட்டுடறார் ( அந்த கால கட்டத்தில் வாணி மாடியில் இருந்து தவறி விழுந்தார் என சொல்லப்பட்டாலும் பின்னாளில் ஸ்டார் டஸ்ட் இதழில் வாணி கமல் ஹாசன் உண்மையை சொன்னார் ) 


 இவருக்கு  அதாவது கரீனாவுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுது. பழி வாங்கத்துடிக்கறார்.மார்க்கெட் டல்லா இருந்தப்போ எப்படி லட்சுமிராய் தனக்கு சம்பந்தமே இல்லாத கிரிக்கெட் ஃபீல்டுல இருந்த டாப் ஹீரோ டோனியை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி கரீனாவும் ஒரு கிரிக்கெட் ஸ்டாரை வளைச்சுப்போடறார்.

 http://www.cinmass.com/wp-content/uploads/2012/09/Kareena-hot-stills-in-Heroine-10.jpg




பல காரணங்களால கரீனாவுக்கு மார்க்கெட் டல் ஆகிடுது. சோகமா இருக்கும்போது ஆறுதலா   ஒரு  பெங்காலி நடிகை கூட லெஸ்பியன் உறவு வெச்சுக்கறாங்க.. இது எப்படின்னா ஃபயர் படத்துல படத்தின் கதைக்கு தேவை , முக்கியம்னு தீபா மேத்தா சொல்லி நந்திதா தாஸ் , ஷபனா ஆஷ்மி கூட கோர்த்து விட்ட மாதிரி. ஆனா அப்போ கரீனா போதைல இருந்ததால அதுக்கு ஓக்கே சொல்லிட்ட மாதிரி ஒரு சப்பைக்கட்டு வேற 


மார்க்கெட் இழந்த அல்லது மங்கிய கரீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க ஒரு வங்காள இயக்குநர்ட்ட  ஆர்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கேட்கறார். அதுக்கு பரிகாரமா அல்லது பிரதிபலனா அவர் கூட படுக்கறார். 


 புகழ் வெறி, புகழ் போதையால என்ன எல்லாம் பிரச்சனை வருது, அதுக்கு என்ன தீர்வு என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


 படத்தின் மெயின் ஹீரோ   ஹீரோயின்  கரீனாகபூர்-ன் நடிப்புத்தான். பட்டாசு.படத்தில் நடிக்கும் அனைவரையும் சர்வசாதாரணமாக டாமினேட் செய்கிறார். காதல் , கோபம் , குரோதம், ஏமாற்றம் , கில்மா, சோகம், கண்ணீர் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் காட்டுகிறார். கிளாமரை தன் தேகத்தில் காட்டு காட்டு என காட்டுகிறார்.. இந்த கிளாமர் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா?  போடுங்கம்மா ஓட்டு கரீனாகபூர் சின்னத்தை பார்த்து அப்டினு பிரச்சாரம் ஒண்ணுதான் பண்ணலை..


 ரகுவரன் கணக்கா கரீனா டென்ஷன்ல கத்துவது, கோபத்தில் எல்லாத்தையும் போட்டு உடைப்பது , போதைல இருப்பது என நவரச நடிப்பு.. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு  குறை சொல்ல ஏதும் இல்லை.. குட்.  சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான  குணச்சித்திர நடிப்பு, உறுத்தாத அழகு எல்லாம் ஓக்கே ரகம் .


Shahana Goswami

http://www.moviegupshup.net/data/media/274/shahana848.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏன் ஒதுங்கறே? நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா? 



அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லை.  மேக்கப் கலைஞ்சுடுமேன்னு பார்க்கறேன் ( இவ தாண்டா பத்தினி - நன்றி டாக்டர் ராஜசேகர்)



2. ஏதோ இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்னு சொன்னீங்க.. அவ பிளாட்டுக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. அங்கே தான் மீட்டிங்க் நடந்ததா?



3. நடிகர்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா நடிக்க வருது



4. என்ன என்னைப்பார்த்து ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் சொல்றே? என்னைப்பார்த்து உனக்கு சந்தோஷம் இல்லை? 


 ஹாய்! யா



divya dutta
http://www.actresspics.in/wp-content/gallery/divya-dutta/divya-dutta-actress-hot-pics-wallpapers-2.jpg



5.  அவர் எந்த மாதிரி பர்ஃபார்மென்சை எதிர்பார்க்கறார்னு சரியாத்தெரியலை..


சரி சரி நான் சொல்லித்தர்றேன்



6. ஃபிலிம் ஸ்டர்னா தன்னைத்தவிர யாரைப்பற்றியும் சிந்திக்காத சிந்திக்கத்தெரியாதவர்னு அர்த்தம்


7. சுய கட்டுப்பாடு ஒரு கன்யாஸ்திரிக்கு ரொம்ப முக்கியம். உங்க கோபம், ஆவேசம், எல்லாத்தையும் பார்க்குறப்ப நீங்க அதுக்கு தகுதி இல்லைன்னு ஈசியா சொல்லிடலாம்,. எஸ் யூ ஆர் அன் ஃபிட்  ஃபார் தட் ( மேஜர் சுந்தர்ராஜன்)



8. அமெரிக்கா போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கப்போறேன்


 பரிவு, அக்கறை மட்டும் தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.. 

 lillete dubey
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoDiNWbH-jMiMOp-lcy9S-y_Qa3o2sfrVR6yxHfQkLP8BGTIl9ymvalKmYQnMuu6ite59-j2V-M-i2p4JBbXI3GPI55nnuz5mJ5i_o5VmvDa2wgU9MgO6h_1IbOPuq0ldIuisg8tiz7Rk/s1600/jiah-khan04.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. டைட்டில் டிசைன், போஸ்டர் டிசைன் எல்லாம் ஏன் வித்யாபாலன் நடிச்ச டர்ட்டி பிக்சர் மாதிரி இருக்கு? பார்க்கறவங்க அந்த பட கதைன்னு நினைக்க சான்ஸ் அதிகம்..  ஒரு வேளை அதான் நீங்க எதிர்பார்த்ததா? 


2. நடிகையா வர்ற நடிகை ஒரு பாட்டு சீன்ல காமதேனு என சொல்லப்படும் பசுவின் சிலை மேல் அமர்ந்து குத்தாட்டம் ஆடறாங்க. இதுக்கு எப்படி சென்சார் கிடைச்சதுன்னு தெரியலை.. அவங்களை விடுங்க, இந்த சீன் எடுக்கும்போதே இது இந்துக்களை , அவங்க மனசை புண் படுத்தும்னு தெரியாதா? இந்து முன்னணியினர் தகராறு செஞ்சா படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்கட்டும்னுட்டு வேணும்னே அந்த சீன் எடுத்தீங்களா?



3. படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேர்க்டர்ஸும் தம் அடிக்கறாங்க, சரக்கு அடிக்கறாங்க, அதுவும் கரீனா சீன் பை சீன் ரஜினி மாதிரி ஐ மீன் ஆரம்பக்கட்ட ரஜினி மாதிரி சிகரெட்டோடயே சுத்தறாரு.. எதுக்கு அப்படி ?


4. ஹீரோயின் கரீனா புகழ் பெற்ற ஒரு நடிகை. அவங்க ஒரு சூப்பர் ஸ்டார் கூட கில்மா பண்றப்போ அதை செல் ஃபோன்ல வீடியோ  எடுக்கறாங்க. ஏதாவது ஃபைட் வந்தா நமக்கு ஆப்புன்னு அந்த ஹீரோவுக்கு தெரியாதா?எப்படி அதுக்கு அலோ பண்றார்?



5. அந்த கில்மா வீடியோவை மீடியா கிட்டே கொடுப்பேன்னு கரீனா மிரட்டும்போது ஹீரோ ஏன் பம்மறாரு? ஏண்டி ! பொம்பளை உனக்கே அந்த ஏத்தம்னா ஆம்பளை எனக்கு எவ்ளவ் ஏத்தம் இருக்கும்? மானம் போனா உனக்கும்தானே போகும்? நீயும் தானே அந்த வீடியோவில் இருக்கே?ன்னு கேட்கலையே? ஏன்?



6. அப்படி மீறிப்போனா இருக்கவே இருக்கு நித்யானந்தா பாணி டயலாக் - இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நான் அவன் அல்ல அப்டினு சொல்லிட்டா தீர்ந்தது. ஏன் பயப்படனும்?

 pallavi sharda
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=winter-festive-preview-2011_132221587610.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. தமிழ்ல  எப்படி முதல் பாவம்ல அபிலாஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன்ல குஷ்பூ , ஜம்புல அந்த ஆண்ட்டி எப்படி ஹையஸ்ட் கிளாமர் காட்னாங்களோ அதே போல் கரீனா கபூரின் உயர்ந்த பட்ச சீன் படம் இதுதான் என்ர லேபிள் வெச்சுக்கிட பாடு பட்டது 



2. படத்துல வர்ற முக்கியமான 4 லேடீஸ்க்கும் கிளாமர் காட்சிகள் வெச்சது 



3. படத்தை விறு விறுப்பா முடிஞ்சவரைக்கும் போர் அடிக்காம கொண்டு போனது 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDYzFcFnyKla7l6k7R5vZFkFSsyc42spEvGUJYQZ7a0rbsCKm_S3Umkk4hM-FVEqCPRzuRI56LtNPQOXxWd8SqeVUb1cdtEs2_YNCAZ2o6fEc1ACE5lXUbkjDSF14wlFnOzJzwq1KGRo/s1600/Kareena+Kapoor+navel.jpg

 சி.பி கமெண்ட் -  கரீனா கபூரின் ஆண் ரசிகர்கள் சீனுக்காக பார்க்கலாம். ஆனா வெளில நடிப்புக்காக பார்த்தேன்னு ரீல் விட்டுக்கலாம்.. பெண்கள் பார்க்கத்தேவை இல்லாத தகுதி இல்லாத படம்.. ( ஆனா நான் பார்த்த ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் படம் பார்க்க வந்தவங்க பாதிப்பேர் லேடீஸ் தான், வாழ்க பெண்ணுரிமை)

டிஸ்கி - இந்தப்படத்துல பல ஆண்கள் நடிச்சிருந்தாலும் பெண்கள் ஸ்டில் தான் போட்டிருக்கேன். 33 % இட ஒதுக்கீட்டுக்கே போராடும் பெண்களுக்கு அட்ராசக்கவுல் மட்டும் எப்போதும் 93 % இடை சாரி இட ஒதுக்கீடு. இதுக்காக பெண்ணியம் காக்கும் கண்ணியம் கொண்ட காரிகன் பட்டம் கொடுத்தா கலைஞர் போல் கூச்சமே இல்லாம அதை வாங்கிக்கத்தயாரா இருக்கேன் .


Director:

Madhur Bhandarkar

Writers:

Madhur Bhandarkar, Niranjan Iyengar

Stars:

Kareena Kapoor, Randeep Hooda and Arjun Rampal