Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Monday, August 24, 2015

அன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்சர் செய்தாரா? -எஸ்பி.முத்துராமன்

  • ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.
    இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.
    எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.
    எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.
    என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.
    படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.
    ‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.
    என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.
    ‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.
    ‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’
    ‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.
    சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.
    ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.
    - இன்னும் படம் பார்ப்போம்...
    Govind  
    மாபெரும் சபைதனில் " நீ ". நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் . ஒரு மாற்று குறையாத மன்னவன் M.G.R மட்டும்தான் என்று மக்கள் போற்றி புகழ்கிறார்கள்
    Points
    110
    3 days ago
     (1) ·  (0)
     
    govind Up Voted
    • RS
      இன்றும் இளமை மாறா புதுப்படம்
      3 days ago
       (0) ·  (0)
       
      • A
        Anandan  
        ரொம்ப முக்கியம். மிகைப்படுத்தி சொல்லப்பட்ட ஒன்று.
        Points
        7640
        3 days ago
         (1) ·  (0)
         
        RBALAKRISHNAN Up Voted
        • R
          ஏ.வி.எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த ஒரே படம் இதுதான். மிகப்பெரிய வெற்றிப்படம் என்றாலும் இந்த படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர் கொடுத்த தொந்தரவுகளை தாங்கமுடியாத மெய்யப்ப செட்டியார் அவர்கள் 'இனிமேல் இந்த ஆளை வைத்து படமே எடுக்க மாட்டேன்' என்று கூறியதாக பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தது இன்றும் நினைவில் உள்ளது.
          Points
          22395
          3 days ago
           (1) ·  (0)
           
          mohan Up Voted
          • G
            Govind  
            மாபெரும் சபைதனில் நி நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் . ஒரு மாற்று குறையாத மன்னவன் M.G.R மட்டும்தான் என்று இன்றும் மக்கள் புகழ்கிறார்கள்

          Monday, July 27, 2015

          சிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்டி+அனிருத் = பிரம்மாண்டமான புதுப்படம்

          ஆர்.டி.ராஜா
          ஆர்.டி.ராஜா
          ஹாலிவுட் திரைப்படங்களில் நட்சத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறுவது திரைக்கதை. அங்கு பிரதான வேலையாக ‘ஸ்க்ரிப்ட் டாக்டர்’ என்ற கதை விவாதப் பணி பின்பற்றப்பட்டு வருகிறது. இது தமிழ் சினிமாவில் முன்பே இருந்ததுதான். இடையில் சில காலம் இதன் முக்கியத்துவம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அது முக்கியத்துவம் பெற்று வருகிறது.
          அந்த வகையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களின் படப்பிடிப்புக்கு பின் அதை சரியே முறைப்படுத்துவது, படத்தின் புரோமோஷனுக்கு யோசனைகள் கொடுப்பது என்று பிஸியாக இருந்து வருபவர், ஆர்.டி.ராஜா. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
          பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ‘ஐ’ பட மேக்கப்மேன் ஸீன் ஃபுட், அனிருத் எனப் பிரமிக்க வைக்கும் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘24 ஏ.எம். ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவை சந்தித்தோம்:
          சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
          ‘மெரினா’ படம் முடித்த உடனேயே, “அடுத்த படத்தை நீங்களே தயாரிக்கலாமே” என்று சிவா என்னிடம் கூறினார். அதன் பிறகும் பலமுறை கூறினார். சில காரணங்களால் தள்ளிப்போன அந்த விஷயம் இப்போது கைகூடி வந்திருக்கிறது. சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் ஒரு உதவி இயக்குநரும்கூட. திரைக்கு வருவதற்கு முன்பே சின்னத் திரையிலும் பெரிய திரையிலுமாக, பல படைப்புகளில் அவர் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக் கிறார். அவரை வைத்து ஒரு படம் தயாரிப் பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
          அவர்தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் என்றும் ஒரு பேச்சு இருக்கிறதே?
          இந்திய அளவில் இன்றைக்கு 90 சதவீத நடிகர்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். தமிழிலும் தனுஷ், ஆர்யா, விஷால், ஜீவா, விஜய் சேதுபதி என்று நிறைய ஹீரோக்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். அப்படி யிருக்க சிவாவும் தயாரிப்பாளராக மாறுவதில் தப்பில்லை. ஆனால் அவருக்குத் தயாரிப் பாளராகும் எண்ணமில்லை. சிவா இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றால் அதை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.
          பி.சி.ஸ்ரீராம் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரையிலான பிரமாண்ட கூட்டணியை எப்படி அமைத்தீர்கள்?
          பி.சி.ஸ்ரீராமுக்கு நாங்கள் ஸ்க்ரிப்ட் புக்கையே கொடுத்தோம். அவருக்கு கதை மிகவும் பிடித்ததிருந்தால் சம்பளத்தைக்கூட ஒரு பொருட்டாக அவர் நினைக்கவில்லை. ‘இது உங்களோட முதல் படம் ராஜா. நல்ல டீம். அதனால எனக்குப் பெரிய சம்பளம் வேணாம்’ என்று சொன்னார். சிவாவின் மேக்கப் டெஸ்டுக்காக ஆறரை மணிக்கு மேக்கப்மேன் ஸீன் ஃபுட் வருவார் என்றால் பி.சி.சார் அங்கே ஐந்தரைக்கே வந்திடுவார்.
          ‘மொழிங்கிறது அறிவு கிடையாது. நீ என்ன விரும்பினாலும் என்கிட்ட சொல்லு. நான் மேக்கப்மேனுக்கு அதை இங்கிலீஷ்ல சொல்லிடுறேன்’ன்னு புது இயக்குநர் பாக்யராஜுக்கு தைரியம் கொடுக்குறார். யார் கொடுப்பாங்க இப்படியொரு உற் சாகத்தை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் பி.சி.சார்.
          மும்பைக்குப் போய் ரசூல் பூக்குட்டிக்கு கதை சொன்னோம். ‘இந்தக் கதையில எனக் கான வேலை அதிகம். நிச்சயம் பண்றேன்’ என்று அவர் சொன்னார். மேக்கப் மேன் ஸீன் ஃபுட்டுக்கு மொத்த ஸ்க்ரிப்டையும் மெயில் பண்ணினோம். அவருக்கும் பிடித்திருந்தது. இப்படித்தான் கதைக்கு ஏற்ற டெக்னீஷியன்களை ஒருங்கிணைத்தோம்.
          நீங்கள் பல நிறுவனங்களுக்கு ஸ்க்ரிப்ட் டாக்டராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். எடுத்த படத்தை பிறரிடம் காட்டி சரி செய்யும் இந்த ஹாலிவுட் ஐடியா இப்போது தமிழ்த் திரையுலகுக்கும் வந்துவிட்டதா?
          இந்த ஐடியா ஹாலிவுட்டுக்கு எப்போது வந்ததோ தெரியாது. ஆனால், தமிழில் இது பல காலமாகப் பின்பற்றப்பட்ட ஐடியாதான். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் கதை இலாகாவையே உருவாக்கி வைத்திருந்தார்கள். ஒரு கதையை செய்து பலரும் பலவிதமாக விவாதிச்சு ஓகே செய்த பிறகே படங்களை எடுத்தார்கள். படம் முடிந்த பிறகும் அந்தக் கதை இலாகா வினர் படத்தைப் பார்ப்பார்கள்.
          ஒரு ரசிகனின் மனநிலையோடு படத்தை சரிசெய்வார் கள். இடையில் காணாமல்போன அதே வழக்கம்தான் இப்போது மறுபடியும் வந்திருக் கிறது. ரசிகனோட பார்வைக்குப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் ஒரு படத்தைச் சரிசெய்ய தொழில்நுட்பம் நிறைய வசதி களைச் செய்து கொடுத்திருக்கிறது. அதனால் மாற்றுப் பார்வைக்கு ஒரு படத்தைக் காட்டுவது தப்பில்லை. நான் நிறைய படங்களை அப்படிப் பார்த்து என் மனதில் பட்ட கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன். ஃபாக்ஸ் ஸ்டார், திருப்பதி பிரதர்ஸ், ஸ்டுடியோ க்ரீன், ரெட் ஜெயன்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பசங்க புரொடக்சன்ஸ் என பல நிறுவனங்களில் சில ஐடியாக்களுக்காக என்னை அழைத்திருக்கிறார்கள்.
          படம் பற்றி கருத்து சொல்வதோடு புரோமோஷன் சம்பந்த மான ஐடியாக்களையும் நிறைய கொடுத்திருக் கிறேன். முறையான அனுபவத்துக்காக அறிவுமதி, செல்வபாரதின்னு பலரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். நிறைய விளம்பரப் படைப்புகள் பண்ணியிருக் கிறேன் ‘மான் கராத்தே’ உள்ளிட்ட படங் களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். ஒரு இயக்குநருக்கான எல்லா வேலைகளையும் தெரிந்துகொண்டுதான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன்.
          எப்பவுமே திரைக்கதைதான் முதல் ஹீரோ. நல்ல திரைக்கதை எப்போதும் தோற்காது. ஹாலிவுட்டில் இப்பவும் முதலில் ஒரு நாவலைத்தான் தேர்வு செய்கிறார்கள். அதன் பிறகுதான் அதற்கேற்ற நடிகர்களை யும் டெக்னீஷியன்களையும் தேர்வு செய்வார்கள். இந்த முறையை எங்கள் ‘24 ஏ.எம். ஸ்டூடியோஸ்’ நிறுவனம் பின்பற்றும்.
          தமிழ் சினிமா மீண்டும் கதாசிரியர்களின் கையில் வரும். அதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். என்னுடைய இந்த நிறுவனத்தில் லயோலா கல்லூரிப் பேரா சிரியர் ராஜநாயகம், அண்ணன் அறிவுமதி, இன்னும் சில பத்திரிகை நண்பர்கள் அடங் கிய ஆலோசனைக்குழு இருக்கிறது. இவங் களோட வழிகாட்டலில் சரியான திரைக்கதை கொண்ட சிறந்த படங்களை ‘24 ஏ.எம்.’ நிறுவனம் தேர்ந்தெடுத்து தயாரிக்கும்.

          நன்றி - த இந்து

          Thursday, July 02, 2015

          மாரி -பக்கா கமர்ஷியல் கலக்கல் - இயக்குநர் பாலாஜி மோகன் சிறப்புப் பேட்டி

          • பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
            பாலாஜி மோகன் (படம்: எல்.சீனிவாசன்)
          • ‘மாரி’ படத்தில் தனுஷ்.
            ‘மாரி’ படத்தில் தனுஷ்.
          ‘மாரி’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே கிடைத் துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
          ‘மாரி’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?
          ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் ‘மாரி’ யில் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்க்கும் வழக்கமான கமர்ஷியல் படப்பாணியில் இல்லாமல் வேறு மாதிரி இருக் கும். என் முந்தைய இரண்டு படங்களிலும் கதையை முழு மையாக எழுதி முடித்துவிட்டு, அதன் பிறகு நாயகனைத் தேர்வு செய்தேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது தனுஷ் சாரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு ரசிகனாக தனுஷ் சாரை எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே இந்தக் கதையை எழுதி இயக்குகிறேன்.
          உங்கள் முதல் இரண்டு படங் களை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். நட்சத்திரங்களும் அதிகம். அது கஷ்டமாக இல்லையா?
          அதை நான் ஒரு பெரிய விஷயமாக மனதில் ஏற்றிக் கொள் ளவில்லை. என் முந்தைய படங் களைப் போல இதன் படப்பிடிப் புக்கு போனேன், கதையில் எழுதப்பட்ட காட்சிகளை இயக்கி னேன். அவ்வளவுதான். பெரிய செட், பெரிய நடிகர்கள் என்று மனதில் எதையும் ஏற்றிக் கொள் ளாமல் முந்தைய படங்கள் போலவே மிக வேகமாக எடுத்து விட்டேன்.
          குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக முதலில் மாறியது உங்களின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். இப்போது பலரும் அதைக் கடைப்பிடிக்கிறார்களே?
          வெள்ளித்திரை படங்கள் என் றால், ஒரு சின்ன யோசனையை வைத்துக் கொண்டு அதை படமாக பண்ணுவதுதான். அதையே இப்போது ஒரு குறும்படத்தை வைத்து வெள்ளித்திரை படமாக மாற்றுகிறார்கள். குறும் படத்தை வைத்துக் கொண்டு இயக்குநராகும் வாய்ப்பை பெறு வது ஹாலிவுட்டில் சாதாரணமாக நடக்கிறது. ஒரு புதிய இயக்கு நரின் குறும்படங்கள், அதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் ஆகியவை தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும். இதை ஒரு நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
          ‘மாரி’ படத்தின் பாடல்கள் எல்லாமே குத்துப் பாடல் ரகத்திலேயே இருக்கிறதே?
          இப்படத்தின் கதை அப்படி. இதில் வேறு மாதிரியான பாடல் கள் எதையுமே திணிக்க முடி யாது. படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
          தனுஷ் - ரோபோ சங்கர் காமெடிக் கூட்டணி எப்படி வந்திருக்கிறது?
          இப்படம் முழுக்க தனுஷ் சாருடன் ரோபோ சங்கர் வருவார். இருவரின் வசனங்கள், காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அதே போல, இப்படம் ரோபோ சங்கருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் .
          உங்கள் முந்தைய படங்களைவிட ‘மாரி’ படத்தின் டிரெயிலர் கமர்ஷியலாக இருக்கிறதே. உங்களுக்கு கமர்ஷியல் இயக்குநராக வேண்டும் என்று ஆசையா?
          வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு வேறு மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டேன். சூழ்நிலை காரணங் களால் ‘வாயை மூடி பேசவும்’ அமைந்து விட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் பண்ணி யிருக்க வேண்டிய படம் ‘மாரி’. ஒன்றரை வருடங்கள் கழித்து பண் ணலாம் என்று தனுஷ் சார் சொன்னதால் இப்படம் தாமதம் ஆனது அவ்வளவுதான். ‘மாரி’ படத் துக்கு பிறகும் நான் வெவ்வேறு களங்களில்தான் படம் பண் ணுவேன்.
          ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே. அதற்கு என்ன காரணம்?
          அப்படத்தின் இரண்டாம் பாதி யில் வசனங்களே இருக்காது. இதை எவ்வளவு சரியாக பண்ணி னாலும், அப்படம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே போய் சேரும் என்று தொடங்கும்போதே தெரியும். தயாரிப்பாளர் சசிகாந் திடம் நாலு கதைகளை நான் கொடுத்திருந்தேன்.
          அவற்றில் இருந்து அவர் ‘வாயை மூடி பேசவும்’ கதையைத்தான் தேர்வு செய்தார். அதைத்தான் படமாக எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் நான் நினைத்ததை விட அதிகப்படியான மக்களிடம் போய் அப்படம் சேர்ந்தது.


          thanx - thehindu

          Sunday, June 07, 2015

          அதிரி புதிரி ஹிட் ஆன காக்கா முட்டை' உடைத்து நொறுக்கிய தமிழ் சினிமா மூடநம்பிக்கைகள்!

          காசி தியேட்டர் - இது 'தரை லோக்கல்' நோக்கர்கள் ஆதிக்கம் உள்ள திரையரங்கம் என்பது சென்னையை அறிந்த சினிமா ஆர்வலர்களுக்கு தெளிவாகத் தெரியும். அதுவும், இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சி என்பது 'மாஸ் மசாலா' படங்களுக்கான ரகளையான கொண்டாட்டங்களுக்கு உரியது என்பது மிகவும் தெளிவு.
          இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சியில் 'காக்கா முட்டை' படத்தை ரசித்தபோது கிடைத்த அனுபவம், தமிழ் சினிமாவின் 'சாதாரண ரசிகர்கள்' என்று அசாதாரண கலை ஆர்வலர்கள், முக்கிய படைப்பாளிகள் சிலர் சொல்லி வரும் பல 'மித்'துகளைக் கொத்துபரோட்டா போட்டது.
          தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு முதல் நாள் காட்சிகளில் கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் 'காக்கா முட்டை'க்கு கிடைத்தது வியப்பை அளித்தது.
          பல்வேறு முக்கிய விருதுகளைக் குவித்துவிட்டாலோ, முக்கியப் பட விழாக்காளில் பங்கேற்றுவிட்டாலோ 'இது கலைப் படைப்பு. சாதாரண ரசிகர்களுக்கு பார்க்கப் பொறுமை இருக்காது. சில தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டுமே போதும்' என்றெல்லாம் சினிமா துறையைச் சேர்ந்தவர்களே கருதுவது உண்டு. எல்லா சினிமாவும் கலைப் படைப்புகள்தானே? யார் இப்படி மோசமாகக் கொளுத்திப் போட்டது என்றுதான் இதுவரையிலும் தெரியவில்லை.
          இப்படி குருட்டாம்போக்கில் கொளுத்திப் போடுவதன் விளைவுதான், நம் சமூகத்தில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை சினிமா மொழியில் பதிவு செய்யும் நல்ல படைப்புகள், தியேட்டரில் சாதாரண மக்களுக்குக் காணக் கிடைக்காமல் போவதற்கு வழிகுக்கிறது.
          சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் சில படைப்புகள் சில நேரங்களில் சினிமா ரசிகர்கள் பலரைக் கவராததும் சாதாரண விஷயம்தான். அத்தகைய படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா மொழியோ, உத்திகளோ ரசிகர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அதற்காக, ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லுவது சுத்த மூடநம்பிக்கை என்பதையே 'காக்கா முட்டை' நிரூபித்திருக்கிறது.
          இயல்பு வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகளையும், வசனங்களையும் துல்லியமாக உள்வாங்கி ரசிக்கத்தக்கவர்கள்தான் சில ஜீனியஸ்கள் சொல்லும் சாதாரண ரசிகர்கள் என்பதை காக்கா முட்டையின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பு காட்டிக் கொடுத்தது. ரகளையான நகைச்சுவை தருணங்களை ரவுண்டு கட்டி களேபரம் செய்த அதே ரசிகர்கள், நெஞ்சுக்கு பாரத்தைக் கடத்தும் தருணங்களில் பின்-ட்ராப் சைலன்ட் காட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.
          இதுபோன்ற சினிமாவைத் தயாரிக்க முன்வந்ததற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் லாபம் ஈட்டும் கலைஞர்கள், தங்கள் துறையின் தரத்தை மேம்படுத்த உறுதுணைபுரிவது கடமை. அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். காக்கா முட்டை முயற்சிக்காக இவர்களைப் பாராட்டினால், கல்லா கட்ட மட்டுமே தமிழ் சினிமாவைப் பயன்படுத்தும் பலரைக் கழுவியூற்ற வேண்டிய சூழல் எழும் என்பதால் இதோடு இந்த மேட்டரை நிறுத்திக்கொள்கிறேன். இந்த இடத்தில், தெரிந்தோ தெரியாமலோ நடிகர் சிம்பு இந்தப் படத்தில் அளித்த பங்களிப்பையும் பாராட்டச் சொல்கிறது மனம்.
          காக்கா முட்டையில் தனுஷ் - வெற்றிமாறனின் பங்களிப்பில் பாராட்டுக்குரியது என்றால், இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் உத்திகளையும் சொல்லலாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரம்மாண்ட செலவு செய்வது போன்ற நடவடிக்கை மூலம் பிரபலப்படுத்தி, கடைசியில் ரசிகர்களைப் படுத்துவதற்கு பதிலாக, முழுமையாகத் தயாரான நல்ல படைப்புகளைப் பிரபலப்படுத்த மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளும் வரவேற்கத்தக்கதே. இவ்விருவர் வழியைத் தயாரிப்பாளர்கள் பின்பற்றும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மணிகண்டன்கள் பலரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
          மிக முக்கியமாகச் சொல்லியே தீர வேண்டிய ஒன்று... தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் கச்சிதமாக ஆக்‌ஷன் செய்வதை பெரிய காக்கா முட்டையையும், ரியாக்‌ஷன் செய்வதை சின்ன காக்கா முட்டையையும் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் என்றே கருதவைத்தது இரண்டு சிறுவர்களின் நடிப்பாற்றல்.
          உலக அளவில் மிகப் பெரிய அளவில் லாபமும் புகழும் ஈட்டும் படைப்பாளிகளைப் பட்டியலிட்டால், அதில் சிறுவர்களுக்கு எழுதுவோர் - படைப்பவர்கள் தான் அதிகம் இடம்பெறுவர். ஆனால், இங்கே தமிழ் இலக்கியச் சூழலில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், சிறுவர் இலக்கியத்தின் மீது ஈடுபடுவோர் எண்ணிக்கை ஐந்து விரல்களுக்குள் அடங்கிவிடும். அப்படி எழுத முற்படுபவர்களை, குழந்தைத்தனமாக பார்க்கும் சக இலக்கியவாதிகளின் பார்வையால் சிறார் இலக்கியம் மீதான ஈடுபாடே எவருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.
          இதே நிலைதான் தமிழ் சினிமாவிலும். சிறார் சினிமாவைப் பொறுத்தவரையில், சிறுவர்களுக்கான - சிறார் ரசனை உள்ளவர்களுக்கான சினிமா, பெரியவர்களுக்கான - 18 வயதுக்குட்பட்ட மனமுதிர்ச்சி மிக்க சிறுவர்களுக்கான சினிமா, இந்த இரண்டு தரப்பின் தேவையையும் பூர்த்தி செய்யும் சினிமா என மூன்று வகையாக பிரிக்கலாம். காக்கா முட்டை மூன்றாம் ரகம். பெரியவர்களுக்கான சிறார் சினிமா மட்டுமல்ல - சிறுவர்களுக்கான ப்யூர் சினிமாவும்கூட.
          மாஸ், மசாலா, காதல், கலாய்ப்பு, அதிரடி சினிமா கூடாது என்பதெல்லாம் இல்லை. சினிமா எந்த வடிவத்திலும் வரலாம். ஆனால், இந்த மாதிரியான ஓவர் சீன் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு படைப்பாளியைச் சுற்றியிருக்கும் கதைகளையும் வாழ்க்கையையும் தொழில்நுட்ப உதவிகளுடன் சுவாரசிய சினிமா விருந்தாக அமையக் கூடிய படங்களும் வரவேண்டும் என்பதே விருப்பம்.
          மக்களின் ரசனையைக் குறைசொல்லிக் கொண்டே குத்தாட்ட வளர்ச்சிக்கு வித்திடுவது இனியும் நீடிக்காது என்பதையே காக்கா முட்டைக்கு நிறையும் அரங்குகள் சொல்லும் சேதி.
          மிகச் சிறந்த நகைச்சுவைகள், மனதைத் தைக்கும் நெகிழ்ச்சிகள் என திரையில் எவை வந்தாலும், இழவு வீட்டில் அழாமல் உம்மென்றிருப்பது போன்ற மனநிலையுடன் மல்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் சோ-கால்டு ஏ சென்டர் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கத் தெரிகிறதா என்பதே இப்போது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
          வெற்று கலாய்ப்புகளுக்குக் கூச்சலிடுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்ட ரசிகர்கள், இந்தியப் பொருளாதார நிலை, ஏழ்மையின் வலி, பிழைப்பு அரசியல், வருவாய் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் சமூகக் கலாய்ப்பு (Social satire) காட்சிகளையும் வசனங்களையும் புரிந்துகொண்டு உடனுக்குடன் ரியாக்ட் செய்தபோது, அவர்கள்தான் உண்மை சினிமாவின் ரசிகர்கள் என்று உணர்ந்தேன்.
          காக்கா முட்டை படைப்புக் குழுவின் முயற்சிகளைப் பார்த்தாவது, 'தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டதுதான். அவர்களை நாம் தவறாகப் புரிந்துகொண்டு இதுவரையில் மேகி செய்து வயிற்றை நிரப்பிவிட்டோம். இனியாவது நல்லிடியாப்ப விருந்து அளிப்போம்' என்று முக்கியப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தமிழ் சினிமா சமூகமும் உணர வேண்டும்.
          எனக்குத் தனிப்பட்ட முறையில், காக்கா முட்டை படத்தின் பல காட்சிகள் தியேட்டரில் சிரிப்பை வரவழைத்தன. அதேகாட்சிகளை வீட்டுக்கு வந்து யோசித்தபோது, அவை தந்த வலிகள் சொல்லி மாளாது. இதற்கு, சின்ன காக்கா முட்டை 'சிட்டி சென்டரை'ப் பார்த்து ரியாக்டும் தருணத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
          ம்... நீங்கள் கேட்பது என் காதுகளுக்குக் கேட்கிறது. காக்கா முட்டை படத்தின் கதை என்ன? திரைக்கதை என்ன? வசனங்கள் என்ன? என்றெல்லாம்தானே கேட்கிறீர்கள். தமிழில் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடும் சினிமா விமர்சனத்தைப் படியுங்கள். பெரும்பாலான விமர்சனங்களின் முக்கால்வாசி பகுதியைத்தான் நீங்கள் கேட்கும் விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுங்கின்றனவே!
          பின் குறிப்பு: இம்மாதம் 19-ம் தேதி வெளியிடும் 'குற்றம் கடிதல்' என்ற படத்தை, கடந்த ஆண்டு டிசம்பரில் திரைப்பட விழா ஒன்றில் பார்த்தேன். காக்கா முட்டை ரிலீஸாகி சில தினங்களில் அப்படம் வெளிவருவது, தமிழ் சினிமாவின் புத்தெழுச்சி மீதான வியப்பின் கால அளவை மேலும் கூட்டும் என்பது உறுதி. |
          சரா - தொடர்புக்கு: [email protected]


          நன்றி - த இந்து

          • மலையாளத்தில் மம்மூட்டியும் மோகன்லாலும் மசாலாப் படங்களில் நடித்தாலும் ஆண்டுக்கு ஓரிரு அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் சீரிய படங்களிலும் நடிக்கிறார்கள் சிறிய மார்கெட்டான கேரளாவில் மலையாள சினிமா உயிர்ப்புடன் இருக்க இதுதான் காரணம்.ஆனால் இதுபோல சேவை செய்ய.(தனுஷ், கமல் தவிர்த்த நமது மசாலா மாஸ் நடிகர்கள் கனவில்கூட சிந்திக்க மாட்டார்கள் !அதுதான் இன்றைய இழிநிலைக்குக் காரணம் .பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகள் தயாரிப்பாளர்களே கிடைக்காமல் அவதிப்பட்டதற் கு இந்த உளுத்துப்போன ஸ்டார் சிஸ்டம்தான் காரணம் .காக்காமுட்டை காக்கா பல முட்டை போட வாழ்த்துக்கள்
            Points
            1240
            about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
               
            • Kuppusamyn  
              அன்று மிக பெரிய நடிகர்கள் ஒரு படத்தை பார்த்து அசந்து போய் ஆஹாஇது அல்லவோ நல்லசினிமா என்று வியந்தனர் அந்தப்படம் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நல்ல படம் வர ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சி
              Points
              665
              about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • RAMESH  
                நான் ஒப்புக்கொள்கிறேன் . இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்.அதே சமயம் தொப்புள் தெரியும் கதாநாயகிகளும், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே காதல் அரும்புவதை நவரசம் கலந்து காட்டுவதையும் தயவு செய்து நிறுத்த சொல்லுங்கள். ஆசிரியர்களிடையே இன்று பாடம் சொல்லித்தருவதை விட இது போன்ற அறைவேக்கட்டுத்தனமான நிகழ்வுகளினால் சமூக பாதிப்படைய கூடாதே என்ற கவலையே மேலோங்கி உள்ளது. எந்த கதாநாயகன் இன்று டாஸ்மாக் கடையில் இல்லாமல் இருக்கிறான்? அல்லது மது அருந்தாமல் இருக்கிறான்? இது போன்ற காட்சிகள் இல்லாமல் படம் எடுக்க சொல்லுங்கள் நீங்கள் பாராட்டும் அந்த கதாநாயகர்களை. செய்யமாட்டார்கள். ஏன் தெரியுமா? பணம். பத்து படம் சமூகத்தை சீரழிக்கும். கல்லா கட்டுவார்கள். 11 வது படம் இது போன்று தயாரித்து விருது வாங்குவார்கள். இவர்களுக்கு சமூகத்தின் மீதோ நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதோ நோக்கம் அல்ல. இவர்களின் தாக்கம் மீடியாவில் வர வேண்டும். அவ்வளவே. பின் புலம் இருப்பதால் நினைத்ததை சாதிக்க முடிகிறது. எது எதற்கோ மேல் நாட்டினரை மேற்கோள் காட்டும் நாம் இந்த விசயத்தில் அவர்களை பின் பற்றியே ஆக வேண்டும்
                about 11 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
                vijai · கதிரவன் · Imran · SankarArumugam · Rahamath  Up Voted
                • Jelson  
                  படம் இருக்கட்டும் நீங்க சொல்ல. வந்த விஷத்தை எளிமையாசொளிருகலம்
                  about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Sudharsan  
                    தமிழ் சினிமா கண்டிப்பாக மாறி வருகிறது என்பதற்கு காக்கா முட்டை எடுத்துகாட்டு மிக சிறப்பான ஒரு திரைப்படம் என்ன மணி சார் இப்பிடி பணிடிங்கலே We salute Brother...
                    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • J.Nagasubramanian  
                      என்னய்யா பெரிய காக்கா, என்னய்யா பெரிய முட்டை ...ஒரு பஞ்ச் டியலாக் இருக்கா; ஒரு பத்து பேரை ஒத்தக்கையாலே அடிச்சு நொறுக்கறது இருக்கா; ஒரு முத்தம் இருக்கா; காதலன் காதலி எலும்பு நொறுங்கற மாதிரி அணைச்சுகறது இருக்கா; ஒரு காரு சேசிங் இருக்கா; ஒரு ஸ்டென் கன் வெடிக்கறது இருக்கா ; ஒரு பாம் போட்டு பத்து பேரை கொன்னு ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிகிட்டு போறது இருக்கா .....என்னைய்யா இருக்கு.... வெறும் முட்டைதான் இருக்கு ....ஒரு கண்ட்ராவியும் இல்லே....சரி ..சரி ..அப்படியே பேசிக்கிட்டிருங்க ... நான் அந்த படத்த அதான் காக்கா முட்டைய அஞ்சாவது தடவை பாத்துட்டு வந்துர்றேன் ...படத்த போட்டுருவான் ...நேரமாகுது டைட்டில்லேந்து பாக்கணும்...வரேன்
                      Points
                      550
                      about 16 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                      ?????? · siva · கதிரவன் · Imran  Up Voted
                      • Shanmugam  
                        சின்ன காக்கா முட்டையின் நடிப்பை பாராட்ட வார்த்தை போதவில்லை . இந்தப்படத்தை எப்படி நம்பிக்கையுடன் தயாரித்து வெற்றியடைந்தார்கள் என்பதுதான் கேள்வி.