Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Friday, December 07, 2012

அன்புள்ள முதல்வருக்கு கூடங்குளம் மக்கள் சார்பில் ஒரு கடிதம்



தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்


பிப்ரவரி 25, 2012 13:32
அன்புள்ள அம்மா,

வணக்கம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001,செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து, நேரில் சந்தித்து, எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு, எங்கள் மக்களின் அச்சங்கள்,பயங்களை அகற்றும்வரை, அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி, உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள். எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள்.இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும், எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும். 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, இதை கடுமையாக எதிர்த்தீர்கள். அதேபோன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தையும் அது ஏற்புடையதல்ல என்று அறிவித்து தீர்க்கதரிசனத்தோடு அதை எதிர்த்தீர்கள். அணுசக்தியின் தீமைகள்,கடுமையான விளைவுகள் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். இந்தப் பின்னணியில் தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் போராட்டம் தொடங்கி, தங்களை நேரில் சந்தித்த பிறகு பல எதிர்வினைகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை பற்றிய தன்னிலை விளக்கங்களை அளித்திட தயவுசெய்து என்னை என்னை அனுமதியுங்கள்.

1. 1980 களிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை பலர் தலைமையிலே நடத்திக் கொண்டு வருகிறோம். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வரவிருந்த போது, மக்கள் போராட்டங்களால் அது கைவிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்து, ஆறு பேர் குண்டடிபட்டனர். தொடக்கத்திலிருந்து இன்றுவரை பல நூறு தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இவையனைத்தும் ஊடகங்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தங்களிடம் நான் நேரில் விளக்கியது போன்று, எங்கள் போராட்டத்திற்கும் திமுகவுக்கோ வேறு எந்தக் கட்சிக்குமோ எந்த தொடர்பும் கிடையாது. எனது தந்தையார் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து கொள்கைக்காக திமுகவில் இருந்தவர். அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்காக இயங்க ஆரம்பித்த பிறகு முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டவர். திமுக எம்பி கனிமொழி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அணுசக்தியை ஆதரித்துப் பேசியபோது,. எங்கள் இயக்கம் அதைக் கண்டித்து அதை விமர்சித்து 'காலச்சுவடு' இதழிலே நான் கட்டுரை எழுதினேன். எனக்கோ, எங்கள் போராட்டக் குழு உறுப்பினர்களுக்கோ அரசியல் ஆசைகளோ, எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் மீது மோகமோ கடுகளவும் கிடையாது என்பதை தங்களுக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

2. எங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டிலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களிலிருந்தோ, தனியார், கட்சிகளிடமிருந்தோ எந்தப் பணமோ வேறு உதவிகளோ வந்ததுமில்லை. இப்போது வரவுமில்லை. எந்த சாதி, மத நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. எங்கள் மீனவ மக்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும், பீடி சுற்றும் பெண்களும் தருகின்ற சிறிய நன்கொடைகளை வைத்து மிகச் சிக்கனமாக செலவு செய்து காந்திய வழியில் எளிமையாகப் போராடி வருகிறோம். பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் போக்குவரத்து செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். போராட்டங்களுக்கு வருபவர்களுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே நாங்கள் கொடுக்கிறோம். இது முழு உண்மை.

 3. நான் 1989 ஆகஸ்ட் முதல் 2001 வரை அமெரிக்காவில் எம்.ஏ மற்றும் பிஎச்டி பட்டப்படிப்புகள் படித்துவந்தேன். பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றினேன். எனது மனைவியும் நானும் அன்றும் இன்றும் என்றும் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அந்நாட்டு குடியுரிமையை இயற்கையாகவே பெற்றாலும் அவர்கள் தமிழ்மண்ணில் தமிழர்களாக இந்தியர்களாக வாழவேண்டுமென விரும்பியதால் எங்கள் 2 வயது, மூன்று மாதக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கின்ற எனக்கு அமெரிக்க அரசுடனோ அதன் நிறுவனங்களோடா எந்தவிதமான தொடர்போ கிடையாது. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு வருகைதரு பேராசிரியாராக மட்டுமே போய் வருகிறேன்.

 4. போராடுகின்ற எங்கள் மக்களில் இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, சாதியினரோ நடத்துகின்ற போராட்டமல்ல இது. தமிழ் மக்களாக எங்கள் வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக நடத்துகின்ற போராட்டம். நாங்கள் எங்களைத் தமிழராக இந்தியராக மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம்.

 5. கூடங்குளம் அணுமின்நிலையம், எங்கள் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், சனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூட 23 ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மிகச்சிறிய அணுமின் நிலையங்களைப் போலல்லாமல் கூடங்குளம் அணு உலைகள் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்ற பூதாகரமானவை. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் கடினப்பாறைகள் போதுமான தடிமன் உடையவையாக இல்லை. இந்தப் பகுதியில் பல ஊர்களில் எரிமலைக் குழம்பு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பகுதி பூமிக்குள் கார்ஸ்ட் குழிகள் என்னும் எபறும் வெற்றிடங்கள் இருக்கின்றன. எங்கள் பகுதி கடலுக்குள் பெரும் வண்டல் குவியங்கள் இருக்கின்றன. அவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி எழும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் நீரியல், நிலவியில், கடலியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான எதிர்தரப்பு வாதங்களை சற்றும் பொருட்படுத்தாது, எங்கள் பகுதிக்கு வந்த டாக்டர் அப்துல் கலாம், மத்திய அரசு நியமித்த டாக்டர் முத்து நாயகம் குழு போன்றோர் கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி வராது, அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது என்று வெறுமனே சொல்லிச் செல்கிறார்கள். அணுஉலை பாதுகாப்பு என்பது வெறும் கட்டங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்தது மட்டுமல்ல. மக்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அணு உலைகளின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் பற்றி பேச மறுக்கிறார்கள். அணு உலை சாதாரணமாக இயங்கும்போதே அதிலிருந்து வெளிப்படும் "தினசரி வாடிக்கையான வெளிப்பாடுகள்" காற்றின் மூலமாகவும் நீரின் வழியாகவும் வெளிப்பட்டு மக்களைப் பாதிக்கும்.

ஆண்டுதோறும் 30 டன் அணுக்கழிவுகளை உற்பத்தி செய்து, அவற்றை எங்கள் மண்ணில் சேமித்து வைத்து, 40 முதல் 60 ஆண்டுகள் வரை அணு உலை இயங்கி முடித்தபிறகு, அதனை செயலிழக்கச் செய்து, பல்லாண்டுகள் பாதுகாத்து எங்கள் மண்ணை நீரை காற்றைப் பாதிப்புக்குள்ளாக்கும் அணுசக்தி துறை, கணக்கற்ற அளவு தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டும்போது எந்த பின்விளைவும் ஏற்படாது என்று எங்களை நம்பச்சொல்கிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் உள்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் முத்துநாயகம் குழு அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. நாங்கள் கேட்ட அடிப்படைத் தகவல்களைத் தரவில்லை. இந்நிலையில் தாங்கள் தலையிட்டு டாக்டர் இனியன் தலைமையில் மாநிலக் குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால் அணுசக்தித் துறையின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அந்தக்குழுவில் இடம்பெற்றது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதனையும் ஏற்றுக்கொண்டோம்.





இனியன் குழு பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் அணு உலைக்குள் போய்விட்டு ஓரிரு மணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு வந்தார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி நேரங்கள் எங்கள் போராட்டக் குழுவைச் சார்ந்த ஒன்பது பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களிடம் எ


ங்கள் நிபுணர் குழுவைச் சந்தித்துப் பேசவும், எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவந்து மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கவும் மன்றாடினோம். அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் அரசு என்று தங்களின் அரசை தாங்கள் கருதிச் சொல்லப்படுகின்ற நிலையில் தாங்கள் நியமித்த குழு எங்கள் மக்களைப் புறந்தள்ளியது வேதனை அளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கு நற்சான்று வழங்கி தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது இனியன் குழு.

மக்களை அழிக்காது, வாழ்வாதாரங்களை நசுக்காது, எதிர்காலத் தலைமுறையை ஒழிக்காது, மாற்று வழிகளிலே மின்சாரம் தயாரிக்கு தங்களின் திட்டங்களை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். ஆனால் அதற்கான உதவிகளைத் தர மறுக்கின்ற மத்திய அரசு, நான்கு தனியார் அனல் மின்நிலையங்களை முடக்கி தமிழகத்தில் மின்வெட்டை அதிகமாக்கி தங்கள் அரசையும், தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் அறிவோம். நாங்கள் மின்சாரத்தை எதிர்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஏழை மக்கள் நலமாக வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நாம் செய்த செலவுகள் வீணாகாது. அமெரிக்காவிலுள்ள ஷோர்ஹம் அணுஉலை மக்களுடைய எதிர்ப்பால் இப்படி மாற்றப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக தமிழகம் புகுஷிமா போன்ற ஓர் அணு உலை விபத்தை தாங்கிக்கொள்ளாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2006 ஆம் ஆஃண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னங்குளம், அஞ்சுகிராமம், அழகப்ப்புரம், மயிலாடி, சுவாமித்தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் இப்படி ஒரு நிலநடுக்கம் நடந்தால் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்' என்பது வள்ளுவம்.

அடித்தட்டு மக்களுக்கும் வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை உண்டெனக் கருதும் செயல்படும் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நேரடியாகத் தைலயிட்டு எட்டு கோடி தமிழ் மக்களைக் காக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. இந்தியாவின் அரசியல் கட்சிகள் சிலவும் அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்காவுக்காக, ரஷியாவுக்காக, பிரான்ஸ் நாட்டுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக, இந்திய முதலாளிகளுக்காக, இந்திய முதலாளிகளுக்காக ஏவல் வேலை செய்யும்போது தாங்கள் சாதாரண மக்களுக்காக உழைப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் தலைமை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கட்டும். 120 கோடி மக்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெறட்டும். வெள்ளைக்காரர்களின் அடிமை தேசமாக இல்லாமல் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைமை தேசமாக மாற்றட்டும் என்று தங்களின் 64 ஆவது பிறந்த நாளில் போராடும் மக்கள் சார்பாக தங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். இறையருள் இனிது பயக்கட்டும்!

தங்கள் உண்மையுள்ள,

சுப. உதயகுமார்

ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
இடிந்தகரை



நன்றி - த சண்டே இந்தியன்

Wednesday, March 21, 2012

கூடன்குளம் - ஜெ நடத்திய நாடக காட்சிகள் - ஜூ வி கட்டுரை - ஒரு பார்வை



''உலகில் நடக்கும் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பது தானே கேயாஸ் தியரி?'' 

சி.பி - ஆமா.. பஸ் கட்டணம் ஏற்ற லேட் ஆச்சுன்னாலும் சரி.. கூடன்குளம் திறக்க லேட் பண்ணாலும் சரி.. இடைத்தேர்தல் இருக்குன்னு அர்த்தம். 

''ஒரு வழியாக கூடங்குளம் அணு மின் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது தமிழக அரசு. 'கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் பெரிய அரசியல் சதுரங்கமே ஆடப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கூடங்குளம் போராட்டம் வெடிக்க ஆரம்பித்து இருந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கத் தொடங்கிய நேரத்தில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லிய அந்த அறிக்கையைக் கண்டு, போராட்டக் குழுவினர் கொதித்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்தால், 'கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அதனைத் திறக்கக் கூடாது’ என்று அடுத்த நாளே ஜெயலலிதா அறிவித்தார்.


சி.பி - பல்டி அடிக்கறது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை ஆச்சே.. என்ன.. ஜெ ரொம்ப ரேரா தான் பல்டி அடிப்பாங்க...
 

 'கூடங்குளம் பாதுகாப்பானதுதான்’ என்று ஜெயலலிதா முதலில் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட இப்போது அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில், அதனை அப்படியே வழிமொழிந்திருந்தார். மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அறிக்கையை அவரே ஜெராக்ஸ் எடுத்து ஒப்புக்கொண்டு இருக் கிறார்!''

''கூடங்குளத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா உறுதியாகத்தான் இருந்தார். தீவிரவாதத் தடுப்பு மையம், பட்ஜெட், பெட்ரோல் விலை உயர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம், தமிழக அரசுக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்று மத்திய அரசோடு பல விஷயங் களில் முரண்பட்டார். இவை அனைத்துக்கும் வெளிப்படையாகவே அறிக்கையும்விட்டார். ஆனால்,  கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருந்தார். 'கூடங்குளம் திட்டம் செயல்படுத்தத் தகுதி ஆனதுதான். ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிர்க்கும்போது, அவர்களது பேச்சுக்கு செவிமடுக்கத்தானே வேண்டும்’ என்பது ஆரம்பத்தில் அவரது நிலைப்பாடாக இருந்தது.


 சி.பி - அதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலயே அவங்க முடிவு எடுத்திருப்பாங்க.. ஆனா தேர்தல், இடைத்தேர்தல்க்காக  வெயிட்டிங்க்..இப்போ எல்லாம் முடிஞ்சது.. அதான் சுய ரூபம் காட்டறாங்க

  'தூத்துக்குடி ஏரியாவில் பலம் பொருந்திய மணல் மனிதர் ஒருவர் கூடங்குளம் அணு உலை வந்தால், தனது தொழில் பாதிக்கும் என்று கருதி காய்களை நகர்த்தி வருகிறார்’ என்று பெயர் குறிப்பிடாமல் தனது கட்சிப் பொதுக்குழுவில் சொன்னார் விஜயகாந்த்.


சி.பி - இதென்ன புதுக்கரடி?  கேப்டன் மப்புல இருக்கறப்ப சொன்னதா? திராணியோட சொன்னதா?


 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி’யிலும் இதுபற்றி வெளிப்படையாகவே பெட்டிச் செய்தி வெளியானது. 'அந்த மணல் மனிதர் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டவர். அதனால்தான், கூடங்குளத்தை வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்’ என்று எல்லாம் செய்திகளை றெக்கை கட்டின.''


சி.பி - அடப்பாவிகளா?வில்லனா இருந்தாக்கூட மறைமுகமா மக்களுக்கு அந்தாள் நல்லதுதான்யா  பண்ணி இருக்கான்.. ஏதோ கொஞ்ச நாள் தள்ளீப்போட்டிருக்கார்..
''இந்த அரசியல் விமர்சனங்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதைவிட மின் வெட்டுதான் அவருக்கு தீராத தலைவலி ஆனது. 'வேறு வழி இல்லை! கூடங்குளம் திறக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. அதிலும் அரசியல் வித்தைகளை நடத்தியதுதான் ஆச்சரியம். கூடங்குளத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய மாநில அரசின் சார்பில் போடப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.



காரணம், சங்கரன் கோவில் இடைத்தேர்தல். கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டித்தான் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி முடிவு எடுத்திருந்தால், அந்தக் குழு அறிக்கை கொடுத்த மறுநாளே அறிவித்திருக்கலாம். ஆனால், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் இந்த முடிவை அவர் எடுத்ததற்கு அரசியல் பின்னணிதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது!''


''சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்என்ற நிலை அனைவரும் எதிர்பார்த்ததுதான்


''சங்கரன்கோயில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், 'நாளை அமைச்சரவை கூடும்’ என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 'சங்கரன்கோவில் தேர்தலுக்கு முன்னதாக கூடங்குளத்தைத் திறந்தால் போராட்டக்காரர்களால் ஏதாவது கொந்தளிப்பு ஆகி... சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து... அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கலாம்’ என்று நினைத்தாராம் முதல்வர். அதற்குத்தான் தாமதம் காட்டி உள்ளார்!''

 சி.பி - யார் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு காரியம் நடந்தா சரி - ஜெ


 கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்கிற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு டெல்லியில் நடந்த சம்பங்கள்தான் தமிழகத்தில் இப்படி அதிர்வலைகளை உண்டாக்கியதாம். டெல்லியிலும் தமிழகத் திலும் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றனவாம். இங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது 'இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கும்’ என்று நாடாளுமன்றத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைச்சரவை முடிவும் வெவ் வேறாக இருந்தாலும் அதற்குள் அரசியல் பின்னணி இருக்கிறது. அதுதான் கேயாஸ் தியரி.’

''15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட கூடங்குளத்தை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு ரொம்ப உறுதியாகவே இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. அதோடு வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. இந்தப் பின்னணியில்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்தன.


 ஜெயலலிதா இது தொடர்பாக இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். ஆனால், சரியான ரியாக்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, 'எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு’ என்று தீர்மானத்துக்கு எதிராகவே கருத்து சொல்லிவந்தது மத்திய அரசு. 'கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று மத்திய அரசுக்கு செக் வைத்தாராம் ஜெயலலிதா. 'என்ன வேண்டும்?’ என்று கேட்டது மத்திய அரசு. நிதிஉதவி, மின்சாரம் உட்பட மத்திய அரசிடம்  கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது. அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் டெல்லிப் பறவைகள் சொல்கின்றன.''



'' 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதன் மீது எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இப்போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்ததற்கு அவசரம் காட்டியது கூடங்குளத்துக்காகத்தான். மத்திய மாநில அரசுகள் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியதன் விளைவு.... கூடங்குளம் பிரச்னையும் தீர்ந்தது. ஐ.நா. தீர்மான விவகாரமும் ஓய்ந்தது. பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது என்கிற கணக்கு சரியாகி இருக்கிறது. இந்த 'மூவ்’களை கடைசி நேரம் கண்டு கோதாவில் திடீரென்று கருணாநிதியும் குதித்தார்.''


''அவர் ஏதோ உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டாரே?''

''திங்கள் கிழமை அன்று காலையில் கருணாநிதி யிடம் பிரதமர் பேசினார். 'அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அப்போது சொன்னாராம் பிரதமர். இதை அறிந்துகொண்டுதான், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கருணாநிதி அறிவித்தார். பிரதமர் அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்ததும் கருணாநிதி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். 'அதாவது கருணாநிதி மிரட்டியதால்தான் மன்மோகன் இந்த முடிவு எடுத்தார்’ என்பதைக் காட்ட நடந்துள்ளன இந்தச் சம்பவங்கள்!''

 சி.பி - நாடகம் போடறதுல கலைஞர் கில்லாடி ஆசே..
''கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதாவே நேரடியாக அழைத்துப் பேசினாரே!''
''இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசினோம் என்பதைப் பதியத்தானே வேண்டும்!
கேபினெட் நடந்துகொண்டு இருந்தபோதே கூடங்குளம் பகுதிக்கு போலீஸார் மலையளவு குவிக்கப்பட்டுவிட்டார்கள்.




சங்கரன்கோவில் தேர்தல் பணிகளுக்காக சென்ற போலீஸார் அங்கு திருப்பிவிடப்பட்டார்கள். மாநில அரசு நினைத் தால்தான் கூடங்குளத்தை திறக்க முடியும் என்பதில் மத்திய அரசும் தெளிவாக இருந்தது. எனவே ஜெயலலிதாவையே அவர்கள் முழுமையாக நம்பி இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு 19-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா!


இதனால் கூடங்குளம் பகுதியில் வன்முறை ஏற் படக்கூடும் என்பதால் முதல் நாளிலேயே, தென்மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் தலைமையில் 4,000 போலீஸார் குவிக்கப்பட்ட னர். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்காக வந்திருந்த எட்டு மாவட்ட எஸ்.பி-க்கள் கூடங்குளம் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ் வந்து சேர்ந்தார். வன்முறையைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள், கலவரத் தடுப்புப் படை என கூடங்குளம் அணு உலை முன்பாக பெரும் படையே குவிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரில் வாடகைக் கட்டடத்தில் அமர்ந்து அணு உலையைக் கண்காணித்து வந்த போராட்டக் குழு உறுப்பினர்களான வக்கீல் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழக அரசின் தீர்மானம் பற்றி அறிந்த இடிந்தகரை மக்கள், ஆலய மணியை அடித்துக் கூட்டத்தை திரட்டினர். அதற்குள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால், இடிந்தகரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.''

''போலீஸை வைத்து இதற்குப் பதில் சொல்வார்களா?''
''போராட்டக்காரர்களை 18-ம் தேதி இரவு நெல்லைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்தார். 'என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு, 'ஏற்கெனவே நீங்கள் முதல்வருக்கு கொடுத்திருந்த மனு பற்றி பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

'கூடங்குளத்தில் போலீஸாரைக் குவிப்பதையும் எங்களைத் திட்டமிட்டு அழைப்பதையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இதனால், நாங்கள் அங்கு செல்ல மறுத்து விட்டோம். 19-ம் தேதி காலையில் மீண்டும் எங்களை அழைத்த அவர், 'ராதாபுரம் வரையாவது வாருங்கள். அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூப்பிட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எங்கள் மக்கள் சந்தேகப்பட்டார்கள்.


அதனால் எங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் போயிருந்தால் எங்களைக் கைது செய்திருப்பார்கள்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். கூடங்குளத்தை அமைதியாகத் திறக்கவிடுவார்களா என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்''

சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. மக்கள் பெருமளவில் இதை எதிர்க்கக்கூடாது என்பதற்க்காக செயற்கையான 8 மணி நேர மின் வெட்டை ஜெ உருவாக்கினார் என்று சில ர் சொல்றாங்க.. நாளை கூடங்குளத்தில் ஏதாவது விபத்து நடந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மேலும் அங்கே பணீ புரிந்த 147 பேருக்கு புற்று நோய் என்று இந்தியா டு டே கட்டுரை வெளியிட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறாங்க?

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் அந்த ஏரியா மக்களுக்கு தண்ணீர் சப்ளை, , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தமாம்/... அட தேவுடா.. ஏழை எளிய மக்களை அடக்குமுறை கொண்டு ஆள ஆங்கிலேயர் என்ன? நம்மாளுங்க என்ன? எல்லாம் ஒரே கேட்டகிரிங்க தான்..

Sunday, March 18, 2012

பொது பட்ஜெட் 2012-13 அப்டேட்ஸ்: முக்கிய அம்சங்கள்


தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் ரூ.20,000-ஐ உயர்த்துவது உள்ளிட்ட நடுத்தர மக்களின் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள் இருக்கும் அதேவேளையில், சேவை வரி உயர்வு, கலால் வரி உயர்வின் தாக்கங்களைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறது, பொது பட்ஜெட் 2012-13.
2012-13 பொது பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலையானதாக இருக்கும்.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 


* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.


* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.
* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.
* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.
* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.
* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)
* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.
* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.
* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.
* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.
* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.
* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.
* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* பாதுகாப்புத் துறைக்கு ரூ.1,93,407 கோடி நிதி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம்.
* போக்குவரத்து மற்றும் மின்சாரத்துக்கு தலா ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
* பொதுத்துறை வங்கிகளுக்கான முதலீடு ரூ.15,888 கோடி.
* மாநிலங்களுடன் ஒருமித்த கருத்துடன் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டுக்கு நடவடிக்கை.
* அடுத்த 5 ஆண்டுகளில் யூரியா தேவையில் இந்தியா தன்னிறைவு அடையும்.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் ப்ராஜகட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் என்ற இடத்தில் தொடங்கி வைக்கப்படும்.
* நிதி சீர்திருத்த மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
* உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடரும்.
* சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்குவதில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
* உரம் மானியம் வழங்குவதில் அரசு புதிய திட்டத்தை கடைபிடிக்கும்.
வருமான வரிவிலக்கு வரம்பு..
* தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு, ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்‍கு 10 சதவீதம்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம்.
* ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்‍கு 30 சதவீதம் வரியும் விதிக்‍கப்படுகிறது.
* வங்கி சேமிப்புக்‍ கணக்‍குகள் மீதான வட்டித் தொகைக்‍கு 10 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்‍கு.
* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.
வேளாண் கடன் இலக்கு 5.75 லட்சம் கோடி!
* உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு முழு மானியம் அளிக்‍கப்படும்.
* வேளாண் துறைக்‍கான ஒதுக்‍கீடு 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.20,208 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விவசாயத்துக்‍கான கடனுதவி 5.75 லட்சம் கோடியாக உயர்வு.
* விவசாயிகளுக்‍கான கடனுதவி மீது 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற சுகாதார, குடிநீருக்கு ரூ.14,000 கோடி.
* நபார்டு வங்கிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* நபார்டு சட்ட திருத்த மசோதா நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
* நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பண்ணை நீர் பாசனம், நுண்ணுயிர் பாசனத்துக்கு கடன் வழங்க தனி அமைப்பு.
* விவசாயத்தை பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாய கடன் அட்டைகளை ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
* பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வரை திரட்ட இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது
* பங்குச்சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்‍கப்படும்.
* சென்னை அருகே தொற்று நோய் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அரசு, தனியார் துறைகள் மூலம் 6,000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
* 150 மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3 லடசம் கடன் உதவி.
* சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.25,555 கோடி
* மதிய உணவு திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
வருமானவரியை சேமிக்க புதிய திட்டம்...
* சிறு முதலீட்டார்கள் பயன் பெறும் வகையில் ராஜீவ் காந்தி பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்‍கப்படும். இதில் 5 லட்சம் வரை முதலீடு செய்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்‍கு பெறலாம்.
* கச்சா எண்ணெய் மீதான மானியச் செலவு அதிகரிப்பு
* விமான எரிபொருளை நேரடியாக இறக்‍குமதி செய்ய அனுமதி; விமானப் போக்‍குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்‍கத் திட்டம்;  விமான போக்‍குவரத்துத்துறைக்‍கு நடைமுறை மூலதனமாக 100 கோடி டாலர் திரட்ட திட்டம்.
* பொதுத்துறை வங்கிகளின் மறு முதலீட்டுக்‍கு ரூ.15,890 கோடி ஒதுக்‍கீடு.
* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி.
* 8,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த ரூ.25,360 கோடி ஒதுக்‍கீடு
*  10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்‍க திட்டம்
* நுண் கடனுதவி நிறுவனங்கள் நெறிமுறை மசோதா கொண்டுவரப்படும்.
சேவை வரி அதிகரிப்பு...
* சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு. இதன் மூலம் ரூ.18,660 கோடி கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு.
* சேவை வரி விதிப்பில் இருந்து ப்ரீ ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிக் கல்வி, சினிமா துறை முதலியவற்றுக்கு விலக்கு.
* கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு.

* வேளாண் சாராத பொருள்களுக்கான சுங்கவரி அதிகபட்சமாக 10 சதவீதம்.

வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து, உற்பத்திப் பிரிவுகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கு மறைமுக வரியிலிருந்து விலக்கு.

* சில குறிப்பிட்ட வகை சிகரெட்டுகள், பீடிகளுக்கு கூடுதல் கலால் வரி, பெரிய வகை கார்களுக்கு சுங்கவரி உயர்வு,

முத்திரையிடப்படாத நகைகளுக்கும் கலால் வரி, சிறிய கலைஞர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட வெள்ளி நகைகளுக்கும் கலால் வரியிலிருந்து விலக்கு

*  வரி விதிப்பு மூலம் நிகர வருவாய் ரூ.41,440 கோடி
பல்வேறு வரிவிதிப்புகள் அடங்கிய பொது பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள்:
புற்றுநோய், எச்.ஐ.வி. மருந்துகள்
சோலார் பவர் விளக்குகள், எல்.இ.டி. பல்புகள்
அயோடின் உப்பு
சோயா உணவுப் பொருட்கள்
தீப்பெட்டிகள்
எல்.இ.டி மற்றும் எல்.சி.டி. டிவிக்கள்
பொது பட்ஜெட் எதிரொலியால் விலை அதிகரிக்கும் பொருட்கள்:
ஏ.சி. சாதனங்கள்
ஃபிரிட்ஜ்
சைக்கிள்கள்
ஜி.எஸ்.எம்., பி.டி.ஏ. மொபைல்கள்
தங்கம், பிளாட்டினம்
கார்கள்
சிகரெட்டுகள்
உயர்தர ஓட்டல் உணவுகள்
விமானக்கட்டணங்கள்
2012-13 ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடுகள்:

* மொத்த வரி வருமானம் - ரூ.10,77,612. கோடி (2011-12) ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டைவிட 19.5 சதவீதம் கூடுதலாகும்.

* மத்திய அரசுக்கான நிகர வரி வருமானம் ரூ.7,71,071 கோடி (மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்)

* வரியல்லாத வருவாய் - ரூ.1,64,614 கோடி

* கடனல்லாத வருவாய் - ரூ. 41,650 கோடி

* மொத்த செலவீனம் - ரூ.14,90,925 கோடி

* திட்ட செலவு - ரூ.5,21,025 கோடி

* திட்டமிடாத செலவு - ரூ. 9,69,900 கோடி

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும்.

* தொழில்துறை வளர்ச்சி பலவீனமாக உள்ளது.

* முதல் காலாண்டில் ஏற்றுமதி 23% ஆக உயரும்.
* இந்திய பங்கு வர்த்தகம் மேம்பட்டுள்ளது.

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலைமை சீரானதாக இருக்கும்.

* வேளாண் மற்றும் சேவைத் துறை தொடர்ந்து சிறப்பாக உள்ளது.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
* உணவு மற்றும் உரம் மானியங்கள் மிகப் பெரிய அளவில் செலவினத்தை ஏற்படுத்துகின்றன.

* உணவுப் பாதுகாப்பு மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் புராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் தொடங்கி வைக்கப்படும்.
* சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு நேரடி நிதி மானியம்

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.

* பங்குச்சந்தைகளில் ரூ.50,000 ஆயிரம் வரை முதலீடு செய்வதற்கு சலுகைகள்.

* பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகளுக்கு ரூ.15,888 ஒதுக்கீடு.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழே இருப்பவர்கள், ரூ.50,000 வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், 50 சதவீத வரிமான வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயர்.

* மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தேசிய நில வங்கி மற்றும் கடன் மேலாண்மை மசோதாக்கள் வரும் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கான ஒதுக்கீடு 14 சதவீதம் உயர்வு. வரும் நிதியாண்டில் 8,800 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.

* வேளாண் கடன் இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

* நபார்டு வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

* ஏ.டி.எம்.களில் கிஸான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.

* குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு பரிசு.

* உணவு தானியங்களை சேமிக்க புதிய கிடங்குகள் அமைக்கப்படும்.

* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.

* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.

* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.

* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 6,000 பள்ளிகள் கட்டப்படும்.

* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)

* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.

* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.

* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் திட்டம்.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.

* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.

* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.

* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
*  நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.

* தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரப்பு ரூ.2 லட்சமாக உயர்வு. இது, ரூ.1.8 லட்சமாக இருந்து வருகிறது.


* ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை - 10 சதவீதம்

* ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை - 20 சதவீதம்

* ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி.
* சேமிப்பு கணக்கில் ரூ.10 ஆயிரம் வரை வரும் வட்டிக்கு வரி கிடையாது.

* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


விலை உயரும், குறையும் பொருட்கள்...

* அயோடின் உப்பு, தீப்பெட்டி, சோயா பொருட்கள் விலைகள் குறைகிறது.

* சோலார் லைட்டுகள், எல்.இ.டி. பல்புகள் விலை குறைகிறது.

* கைவினைப் பொருட்களின் விலைகள் குறைகின்றன.

* புற்றுநோய், எச்.ஐ.வி. சிகிச்சைக்கான மருந்துகள் விலை குறைகின்றன.

* 10%-ல் இருந்து 30% ஆக வரி உயர்வதால், சைக்கிள்களின் விலை உயர்கின்றன.

* ஏ.சி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

* ஆடம்பரப் பொருட்கள், விமானக் கட்டணங்கள் உயர்கின்றன.

* சிகரெட்டுகள் விலை அதிகரிக்கின்றன.

* தங்கம், வைரங்களின் விலைகள் உயர்கின்றன.  

Friday, January 27, 2012

துக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா? - விகடன் - காமெடி கும்மி

http://suriyantv.com/wp-content/uploads/2011/12/%E0%AE%9A%E0%AF%8B.jpg 

மிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.

 சி.பி - இதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஏன்னா அத்வானிக்கு தமிழ் தெரியாது, அவருக்கு மொழி பெயர்த்து சொல்றப்ப அந்த மேட்டரை மட்டும் கட் பண்ணிட்டு கூட சொல்லி இருக்கலாம், யாருக்கு தெரியும்? ஹி ஹி

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?

 சி.பி - இப்படித்தான் சசிகலாவையும், நடராஜனையும் ஜெவின் ராஜ குருக்கள்னாங்க. பொதுவா அரசர்கள் பரம்பரை பரம்பரையா அமைச்சர்களை, மதி யூகி மந்திரிகளை கறி வேப்பிலையா யூஸ் பண்ணிக்கிட்டு தன்னை விட வளருவாங்க என்ற எண்ணமோ, அச்சமோ தோண்றப்ப நைஸா கழட்டி விடுவாங்க..மன்னர்கள் என்றைக்கும் மன்னர்களாகவே இருக்காங்க, ஆலோசகர்கள் என்றென்றும் ஆலோசகர்கள் தான், நீ நல்லா ஆலோசனை கொடுத்துட்டே நன்றி, ஒரு வருடம் நாட்டை ஆண்டு கொள்னு எந்த அரசரும் விட்டுக்கொடுத்ததில்லை


 1. ''சோவுக்கு கிங் மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?''


சி.பி - அண்ணன் ஓப்பனிங்க் கேள்வியே  தப்பா கேட்டுட்டாரு .. க்யூன் மேக்கர் ஆகும் ஆசையா?ன்னு கேட்கனும் ஹி ஹி 


''நான் கிங் மேக்கர் என்றால், கிங் யார்? நீங்கள் மோடியையும் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், ஒருவர் கிங், இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்).


நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைக் கூறி இருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்கு வதில் முட்டுக்கட்டை ஏற்பட் டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!''

சி.பி - குஜராத்தின் வளர்ச்சியை  கணக்கில் கொண்டு மோடியை முன் மொழிவதைக்கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. எந்த அடிப்படைல  எதேச்சதிகாரப்போக்கும்,எவரையும் மதிக்காத ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், அதீத தன்னம்பிக்கை உள்ள ஜெ வை பரிந்துரைக்கிறார்?இந்த மாதிரி இவர் பேசறப்ப தான் பிராமணர் என்பதாலா? என்ற கேள்வி எழுகிறது.. 


2. ''இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?''

சி.பி - அடிமைக்கலாச்சாரமே போதும்னு நினைக்கற சிங்குக்கு இவர் மோசமைல்ல.. 
''குஜராத்தும் பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள்தான் அவரை முன்னிறுத்துகின்றன.''


சி.பி - இந்த கருத்துக்கான எதிர் வாதத்தை  யாராலும் முன் வைக்க முடியாது என்று நினைக்கிறேன், குஜராத்தின் வளர்ச்சி பிரமிப்பானது.. 


3. ''மோடி பிரதமரானால், குஜராத்தில் நடந்த வெறியாட்டங்கள் இந்தியா முழுக்க நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?''  


''மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் நடந்தது என்பது போல் பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடங்கி எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள், அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால், அதற்குக் காரணம் மோடி அல்ல. கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!''


சி.பி - அதெப்பிடி மோடி காரணம் இல்லைன்னு சொல்ல முடியும்? ஒரு நல்லது நடந்தா அதுக்கு அவர் தான் காரணம்னு பாராட்ற மாதிரி , ஒரு அல்லது நடக்கறப்ப ( கெட்டது) அதுக்கும் அவர் தானே பொறுப்பு? உலகக்கோப்பையை ஜெயிச்சப்ப ஆஹா ஓஹோன்னு பாராட்டுன அதே ஜனங்க, அவர் சில தோல்விகளை சந்திச்சப்ப எதிர் வாதங்களை வைக்கலையா?

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijayakanth_jayalalitha_59.jpg

4. ''அத்வானியை வைத்துக்கொண்டே மோடியைப் பிரதமராக்க நீங்கள் விடுத்த அழைப்பு, உங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ். விடுத்த மறைமுகச் செய்தியா?''


''ஆர்.எஸ்.எஸ். அத்வானியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அதைச் சொல்ல அவர்களிடமே எவ்வளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். போயும் போயும் என்னிடம் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.''


சி.பி - காதலை நேரடியா சொல்றதுக்கு முன்னால ஒரு தோழன், அல்லது தோழி மூலமா ஒரு தூது விட்டு ஆழம் பார்க்கறதை  தமிழன் தான் முதல்ல கண்டு பிடிச்சான், அந்த மாதிரிதான் இதுவும்..

5. ''ஒருகாலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க-வை முன்னிறுத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர்நாடகத்தை மாற்றிவிட்டது பா.ஜ.க. இனியும் எப்படி பா.ஜ.க-வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?''


''பா.ஜ.க-வில் நீங்கள் இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம்சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க- தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க-வின் பெரும் பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகார் களிலும் சிக்காதவர்கள். ஆனால், காங்கி ரஸில் அப்படிச் சொல்ல முடியாது.''


சி.பி - காங்கிரஸ் பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கட்சி.. அதனால ஊழல்ல பெஸ்ட்டா விளங்கறாங்க, பி ஜே பிக்கு நாம வாய்ப்பு கொடுத்தா அவங்களும்  பெஸ்ட்டா ஊழல் பண்ணுவாங்க.. அதனால யாரும் காங்கிரஸ் அளவு பி ஜே பி ஊழல் பண்ண முடியலைன்னு  வருத்தப்பட தேவை இல்ல.. 


6. ''சரி, ஜெயலலிதாவை எந்த அடிப்படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகிறீர்கள்?''


சி.பி - இது பொதுவான மனிதப்பண்பு தான், தன் ஜாதிக்காரங்க, தனக்கு பழக்கமானவங்களை முன் நிறுத்தறதுல என்ன தப்பு இருக்கு? 
''இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது. ஒருமைப் பாட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருக் கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அதிகாரிகளே மெச்சும் சிறந்த நிர்வாகி. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது. நினைத்ததைச்  சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது. மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரதமரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.''     


சி.பி - மொழி அறிவு தான் பிரதமர் ஆகத்தேவை என்றால் இந்த நாட்டில் பல துபாஷ் ( மொழிபெயர்ப்பாளர்)களே பிரதமர் ஆகி இருப்பார்கள்.. பிரதமர் ஆக முக்கியத்தேவை 1. பொறுமை  2 . நிதானம் 3. மற்ற பெரியவர்கள்,அதிகாரிகள்,கருத்துக்களை காது கொடுத்துக்கேட்டு நிலைமையை சீர் தூக்கி பார்த்து முடிவெடுத்தல் 4 , மற்ற கட்சிகளை அரவணைத்து செல்லும் பாங்கு..இவைகள் தான்.  எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் கொண்டவர்களெல்லாம் பிரதமர் ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே தாஜ்மஹாலை இடம் மாற்றனும், கேட் வே ஆஃப் இண்டியாவை மூடனும்னு ஏதாவது அச்சு பிச்சு வேலை ந்டந்தா இந்த உலகம் நம்மை பார்த்து கை கொட்டி சிரிக்கும்.. 


http://www.vikatan.com/news/images/muthu_toon.jpg

7. ''ஜெயலலிதாவின் கடந்த 9 மாத ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''


''ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. அதற்கு ஓர் ஓட்டுநரை அமர்த்துகிறீர்கள். அவர் அந்த வண்டியின் இன்ஜினைக் குட்டிச் சுவர் ஆக்குகிறார். போதாக்குறைக்கு அவருடைய குடும்பத்தினர் வண்டியின் மற்ற பாகங்கள் அனைத்தையும் பாழாக்குகிறார்கள். வண்டி நகரவே மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வண்டியை ஓட்ட இன்னொரு ஓட்டுநரை நியமிக்கிறீர்கள். அவர் எப்படி வண்டியை உடனே ஓட்டுவார் என்று எதிர்பார்க்க முடியும். அவர் முதலில் பழுதுபார்க்க வேண்டும் அல்லவா? அந்தப் பணிதான் இப்போது நடக்கிறது.''

சி.பி - சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்  விருது சோவுக்குத்தான் ஹி ஹி 


8. ''தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு, அமைச்சர், அதிகாரி கள் மாற்றக் குளறுபடிகள்... எல்லா வற்றையும் இப்படித்தான் பார்க்கிறீர் களா?''


''ஆமாம். தலைமைச் செயலக மாற்றம் நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஆனால், அண்ணா நூலக மாற்றம் தேவையற்றது. அதனால், பலர் பயன் அடைந்துவருகிறார்கள். சமச்சீர்க் கல்வியைப் பொறுத்த அளவில் அது சமச்சீர்க் கல்வி அல்ல; சமத் தாழ்வுக் கல்வி என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அது நிச்சயம் மாற்றப்பட வேண்டியதுதான். விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை.


கலைஞர் ஆட்சி உட்பட. ஏனென்றால், விலைவாசியைத் தீர்மானிக் கும் முக்கியக் காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர் கள் மாற்றம் என்பது ஒரு நிர்வாகத்தைச் செம்மையாக்குவதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கை. பரம்பரைக் குத்தகைதாரர்கள்போல, தி.மு.க. ஆட்சியில், ஜில்லாவுக்கு ஓர் அமைச்சர், தன் தலைவரைப் போலவே அந்தந்த ஜில்லாக்களில் அவர்கள் பதவிக்குக் கொண்டுவரும் தன்னுடைய வாரிசுகள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள்... இப்படித்தான் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பொருத்தமானவர் ஜெயலலிதா அல்ல!''


சி.பி - கஜானா காலி என்றால் அரசன் மணி மகுடத்தை  துறக்க வேண்டும் , மக்களிடம் கை ஏந்தக்கூடாது.. தொழில் அதிபர்கள், பெரும்பணக்காரர்களிடம் அதிக வரி வசூலிக்கலாம், டாஸ்மாக், சிகரெட் போன்றவற்றி டபுள் மடங்கு வரி விதிக்கலாம், அதை எல்லாம் விட்டு விட்டு நடுத்தர மக்களிடம் கை ஏந்துவது வெட்கக்கேடானது.. 


9. ''ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதி கள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக்கிறார். ஆனால், அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அப்படி இல்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''


''தனித் தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டும் என்றோ, விடுதலைப் புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிவிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்று பேசுகிறார் அவ்வளவுதானே? இதில் என்ன நிலைப்பாடு மாற்றம் இருக்கிறது?''


சி.பி - எப்பவுமே ஒரு விஷயத்தை நாம உன்னிப்பா கவனிக்கனும், உள்ளாட்சித்தேர்தல் டைமிலோ, இடைத்தேர்தல் வரும் டைமிலோ எடுக்கும் முடிவுகள் உள் நோக்கம் கொண்டவை.. உண்மையிலேயே ஜெ நேர்மையான முதல்வர் என்றால் பஸ் கட்டண உயர்வை உள்ளாட்சித்தேர்தல்க்கு முன்பே அறிவித்திருக்கலாமே? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisinTrMcmu6LOO-xHSMfOp-O9Af96HQc8qUZPt-UArCtZtNp_SPsXgmqhyphenhyphenfhw2J1oNn339vxnByh4v794CsIN0qDoqEcm-1SiXoq0CpOB3UN6wQE8VNRV3X8saOqLcOR2iIgsD-PRDhIBj/s320/cho_azhagiri.jpg


10. ''ஜெ.- சசி பிரிவு உண்மைதானா?''


''அது உண்மை என்றே அவர்களுடைய கட்சிக்காரர்களும் அவர்களைச் சுற்றி இருப்ப வர்களும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள்.''


சி.பி - அண்ணே, சோ அண்ணே, நிருபர் கேட்டது உங்க கருத்தை, கட்சிக்காரங்க கருத்து எங்களுக்கே தெரியும், நாங்களும் பேப்பர் படிக்கறோம்.. ஹி ஹி 


12. ''சசிகலா நீக்கத்துக்கு என்ன காரணம்?''

சி.பி - பெங்களூர் கோர்ட்டில்  சொத்துக்குவிப்பு வழக்கில் வரப்போகும் தீர்ப்பு ஜெவுக்கு பாதகமாக வரப்போகுதுன்னு தெரிஞ்சிடுச்சு.. அதனால எல்லாத்துக்கும் காரணம் சசி தான், எனக்கு எதுவுமே தெரியாது, அப்பாவி என்ற இமேஜை மக்களிடமும், கொஞ்சம் ஏமாந்தா ஜட்ஜ் இடமும் பதிவு செய்யவே இந்த நாடகம் என்பது பலரது கருத்து 



''எனக்குத் தெரியாது. நான் ஜெயலலிதா வையோ, அ.தி.மு.க-வையோ தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் எனக்குத் தெரிவது... கட்சியைச் சீராக்கவும் நிர்வாகத்தைச் செம்மையாக் கவும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற் பட்ட சக்திகள் ஆட்சியில் குறுக்கிடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கை யாக இது இருக்கலாம்.''

 சி.பி - எங்கண்னனுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி.. தி முக -  த மா க உறவு ஏற்பட்ட போதும், ரஜினியின் த மாக ஆதரவு நடந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு..

13. ''ஜெயலலிதாவையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான 'பார்ப்பன லாபி’யின் சதிதான் சசிகலா நீக்கம் என்றுசொல்லப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


''நீங்கள் சொல்வதுபோல வைத்துக் கொண்டால், நான் அ.தி.மு.க-வைக் கைப் பற்றிவிடுவேன். அவர்களுடைய தலைவனாகிவிடுவேன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் என்னைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படி எல்லாம் நான் நம்ப வேண்டும். நீங்களே சொல்லுங் கள்... அவ்வளவு பெரிய மடை யனா நான்?

ஒரு லாபி என்றால், அதில் சில பேர் இருக்க வேண்டும். அப் படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை.


மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய்... இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். இவர்கள் எல்லோருமே பிராமணர்களா? அப்போது எல்லாம் இந்தப் 'பார்ப்பன லாபி’ குற்றச் சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து முளைக்கிறது?''


http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2010/12/09/9/Img/Pc0090900.jpg

14. ''சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றிப் பேசப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எதைவைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது.


மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர்., கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக் காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். 

இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது!''


15. ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?''


''எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!''