Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Thursday, April 18, 2013

பூவே பூச்சூடவா நதியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! @ கல்கி

 

நம்பிக்கைப் பூவே நதியா!

எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

பூவே பூச்சூடவாவில் பார்த்த அதேசுந்தரிசற்றும் மெருகு குறையாமல் சுற்றளவும் ஏறாமல் அதே அழகுடன் இருப்பது படு ஆச்சரியம்! மும்பையில் தம் கணவர் ஷிரீஷ் கோட்போலே, தம் மகள்கள் சனம் மற்றும் ஜனாவோடு ஒரு மாலை பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த நதியாவை அவரது செல்()பேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது கிடைத்தமின்னல் பதில்கள்...
.கே! எல்லோருமே உங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படற ஒரு கேள்வி தான் இது. அது எப்படி அதே ட்ரிம் அன்ட் ஸ்லிம்மை மெயின்டேன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
(ஜோரான சிரிப்பைத் தொடர்ந்து வருகிறது பதில்) அதுக்குக் காரணம் என்னோட ஜீன்ஸ் தாங்க. Jeans இல்ல genes. எங்க அம்மா இந்த வயசுலகூட பார்க்க ரொம்ப இளமையா தெரிவாங்க."
உங்க ஜீன்ஸுக்கு ஒருஜே ஜே’. தினமும் ஜிம்முக்குப் போய்மாங்கு மாங்குன்னு உடற்பயிற்சி செய்யறது. நோ சர்க்கரை, நோ நெய், நோ சாதம்னு ஏதாவது...?
சொன்னா நம்ப மாட்டீங்க. தினமும் லஞ்ச் சாப்பிட்டு முடிச்ச உடனேயே டார்க் சாக்லெட் சாப்பிடுவேன். டின்னர் முடிச்சப்பறமும் டார்க் சாக்லெட் கட்டாயம் சாப்பிடுவேன். என்னோட வீக்னஸே சாக்லெட்தான். ஜூஸ் சாப்பிடுவது மட்டுமேதான் டயட்டிங் அப்படீன்னு கிடையாது. எதைச் சாப்பிட்டாலும் கொஞ்சம் குறைவா சாப்பிடணும். அவ்வளவுதான். தினம் 30 நிமிஷங்களாவது என் வீட்டிலேயே உடற்பயிற்சி கட்டாயம் செய்வேன். வாக்கிங் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜிம்முக்கு போனாதான் ஜம்முன்னு இருப்போம், அப்படின்னு எல்லாம் கிடையாது. நம்ம உடம்பை நாமே புரிஞ்சு ஓரளவு பராமரிச்சாலே போதும். எல்லாருமே என்னிக்குமே ஜம் ஜம்ன்னு இருக்கலாம்."

நீங்க சமைப்பீங்களா? உங்க ஃபேவரைட் உணவு எது?
நான் நல்லகுக்குங்க! வீட்டுல இருந்தா, முக்கால்வாசி நான்தான் சமைப்பேன். நாங்க நிறைய வெளிநாடுகள்ல இருந்தவங்க. அதனால, மெக்சிகன், சைனீஸ் உணவு வகைகளில் எனக்கு நாட்டம் உண்டு. என் கணவர் சுத்த சைவம். மஹராஷ்ட்ரிய உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைப்பேன். கேரள பாணியில் அசைவ உணவுகளையும் சமைப்பேன்."
சூப்பரா தமிழ் பேசறீங்களே. நீங்க நடிக்கிற படங்கள்ல உங்கச் சொந்தக் குரலிலேயே பேசலாமே?
எனக்கும் சொந்தக் குரலில் தமிழ்ல பேசி நடிக்கணும்னு ஆசைதான். ஆனா, இன்னி வரைக்கும், ஒரு பத்து பேர் முன்னாடி என்னைத் தமிழ்ல பேசுங்கன்னு சொன்னா நான் ரொம்ப நெர்வஸ் ஆயிடுவேன். தமிழ்நாட்ல இருக்கும் பொழுது தமிழ் வரும். திரும்ப இங்க மும்பை வந்தாச்சுன்னா தமிழ் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடும். இங்க மராத்தி, ஹிந்தின்னுதானே காதுல விழுது?"
நாட்டியப் பேரொளி நடிகை பத்மினிகூட முதல் படம் நடிச்சது பற்றி...?

நான் மும்பையில் பிறந்து வளர்ந்த பொண்ணு. எங்க வீட்ல என்னோட பெற்றோர்கள் மலையாளத்துலதான் பேசுவாங்க. தமிழ், எனக்கு அப்போ தெரியாது. அப்போல்லாம் ஹிந்திப்படம்தான் பார்ப்பேன். எப்பவாவது தியேட்டரில் மலையாள படம் போட்டா, அப்போ போய் பார்ப்பேன். அவ்வளவுதான். தமிழ்ப்படத்தை அவ்வளவா நான் பார்த்தது கிடையாது.
பத்மினி அம்மா நடிச்ச ஹிந்திப் படம்தான் பார்த்திருக்கேன். பத்மினி அம்மா ரொம்ப ரொம்ப பொறுமைசாலி! தான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட்ங்கற பந்தாவே இல்லாம பழகினாங்க. நான் எவ்வளவோ டேக் எடுத்திருக்கேன். ஆனா கொஞ்சம்கூட சலிச்சுக்கலை. அந்தப் படத்துக்காக எனக்குத் தமிழ் டீச்சர் ஒருத்தங்க தமிழ் கத்துக் கொடுத்தாங்க."
நடிகர் திலகத்தோடஅன்புள்ள அப்பாவில் நடிச்சீங்களே அது?

அவர் ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட்! எது செஞ்சாலும் அதை சரியா செய்யணும்னு நினைப்பார். அவரோட நான் நடிக்கும்போது எனக்கு 19, 20 வயதுதான் இருக்கும். எனக்கு அவரைப் பார்த்தாலே ஒரே உதறலா இருக்கும். ஆனா, ஃபர்ஸ்ட் டேக்லியே சரியா நான் பண்ணினதைப் பார்த்து ரொம்பவே பாராட்டி எனக்கு ஆசி கூறினார். நான் பேசிய தமிழைக் கேட்டு கிண்டல் பண்ணுவார். சினிமாவை சீரியஸாக நான் எடுத்து கொள்ள ஆரம்பிச்சதே சிவாஜி அப்பாவுடன் நடிச்ச பிறகுதான்."
நீங்க ஏன் தமிழ் டீ.வி சீரியல்களில் நடிப்பதில்லை? தமிழ் சினிமாவும் ரொம்ப செலக்டிவ்வாதான் பண்றீங்க? என்ன காரணம்?
தமிழ் சீரியல்கள் செய்ய எனக்கு முதல்ல நேரம் இல்லீங்க. நான் இருப்பது மும்பைல. என்னோட முதல் ப்ரையாரிட்டி என்னோட அழகான குடும்பம்தான். பாருங்க, என் பெரிய பொண்ணு பத்தாவது படிக்கறா. அவளோட படிப்பை நான் பார்க்கணும். சீரியல்களில் திரும்பத் திரும்ப பழைய கதைகளையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. சினிமாவில் எனக்குப் பிடிச்ச மாதிரி, வித்தியாசமான கேரக்டர் வந்தா நான் நடிப்பேன். நடிக்கணும்னு சும்மாவே ஏகப்பட்ட படங்கள் ஒத்துக்கிட்டு பண்ற பழக்கம் எனக்கு இல்ல"

மும்பைல இருக்குற ஹிந்தி மக்கள் உங்களை அடையாளம் கண்டுபிடிப்பாங்களா?
இல்லை! இங்க இருக்குற தமிழர்கள் மற்றும் மலையாளிகள் தான் என்னை அடையாளம் கண்டு குதூகலிப்பாங்க!
சினிமா பெயர்தான் நதியா. இங்க இருக்கறவங்களுக்கு நான் ஜரீனா இல்லன்னா, மிஸஸ் கோட்போலே. என்னை இங்க யாருமே சினிமா நடிகையா பார்ப்பது கிடையாது. ஒரு முழு நேர அம்மாவாகவும், ஹவுஸ் வொய்ஃபாகவும்தான் நான் மும்பையில் இருக்கேன். அப்பப்போ என் மன நிறைவுக்காகவும், என் ரசிக - ரசிகைகளின் சந்தோஷத்துக்காகவும், சினிமா, விளம்பரப்படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன்..."
மகளிர் தின மெஸேஜ் ஒண்ணு...?
எப்பவும் டல்லடிக்காதீங்க. உங்களை நீங்களே நம்புங்க! எதிலும் நம்பிக்கை வெச்சா ஜெயிக்கலாம்!" என்கிறார் இனிமை, இளமை மாறாத நைஸ் நதியா!


 
 நன்றி - கல்கி

Saturday, February 16, 2013

கடல் - துளசி,கவுதம் கார்த்திக் காம்பினேஷன் பேட்டி @ கல்கி


நடிப்பு ஜீன்லயே இருக்கு!

எஸ். சந்திரமௌலி

கடல் படத்தின் கதாநாயகன் கௌதம், கதாநாயகி துளசி இருவரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் சந்தித்தோம். இரண்டு பேரையும் ஒன்றாக உட்கார வைத்து, பேட்டி கண்டோம். ஜாலியான மூடில் இருந்த இருவரும் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் சொன்னார்கள். தொகுப்பு இதோ:
கேள்வி: ‘அலைகள் ஓய்வதில்லைபடம் பார்த்திருக்கீங்களா?
கௌதம்: முன்னாடியே பார்த்திருந்தாலும், ரெண்டு மாசத்துக்கு முன்னால பார்த்தப்போ ரொம்ப என்ஜாய் பண்ணினேன். யூத்ஃபுல் பட் இன்னொசென்ட் அப்பாவைப் பார்த்தேன். திரையில என்னைப் பார்க்கிற மாதிரியே இருந்தது.
துளசி: முன்னாடி ஒரு தடவை பார்த்திருக்கேன். ஆனா, மணி ரத்னம் படத்துல நடிக்கப்போறது முடிவானதும் எத்தனை தடவை அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. நான் நடிக்கறதுக்கு அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது. படத்துல கார்த்திக் அங்கிள், அம்மாவுக்கு இடையிலான லவ் கெமிஸ்டிரி நல்லா இருந்தது.
கேள்வி: தமிழ் நல்லா தெரியுமா?
கௌதம்: ஸ்கூல்ல படிச்சிருக்கேன். ஆனாலும் கடல்ல நடிக்க வந்த பிறகு, மெட்ராஸ் டாக்கீஸ்லதான் நல்லா தமிழ் கத்துக்கிட்டேன்.
துளசி: எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. பேசினா புரிஞ்சுக்க சிரமமில்லை. அடுத்த படத்துல நானே எனக்கு டப்பிங் பேசுவேன்னு நம்பறேன்.
கேள்வி: சினிமாவுல நடிப்போம்னு நெனைச்சதுண்டா?
கௌதம்: ஸ்கூல்ல படிக்கறப்போ ஆஸ்டிரனாட் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம், டாக்டராக ணும்னு நினைச்சேன்; மியூசிக்ல இன்ட்ரஸ்ட் வந்தது. ஒரு மியூசிக் பாண்டுல இருந்தேன். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருந்தது. அதலெட் ஆகணும்னு பிராக்டீஸ் பண்ணினேன். வளர்ந்த பிறகு சினிமா ஆசையும் வந்தது. மணிரத்னம் கேமரா முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு.
துளசி: சினிமாவுல நடிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. ஸ்கூல் முடிச்சிட்டு நான் டாக்டராகணும்கிறது என் அப்பாவோட ஆசை. எனக்கு எம்.பி.. முடிச்சிட்டு, சொந்த பிசினஸ் பண்ணணும்னு ஐடியா. ஆனா நடிக்க வந்துட்டேன்.

கேள்வி: மணிரத்னம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சபோது உங்க ரியாக்ஷன்?
கௌதம்: ரொம்ப சந்தோஷமா இருந்தது.
துளசி: பிளசன்ட் சர்பிரைஸ்! ஆனா அவர் நான் கொஞ்சம் குண்டா இருக்கிறதால, வெயிட் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ரொம்பக் கஷ்டப்பட்டு, வெயிட் குறைச்சேன்.
கேள்வி: உங்க ரோல் பத்தி?
கௌதம்: தூத்துக்குடி மீனவ கிராமத்து இளைஞன் ரோல். பேர் தாமஸ். மெரினாவுக்குப் போய், ஒரு சில மீனவர்களோட பேசி, பழகி, அவங்களை நல்லா கவனிச்சுப் பார்த்தேன். மீனவங்க லைஃப் பத்தி வீடியோ எடுத்துக்கிட்டு வந்து குடுத்தாங்க. அதைப் பார்த்தேன். கலைராணிதான் என்னை நல்லா டிரெயினிங் கொடுத்து, தாமஸ் ரோலுக்கு தயார் பண்ணினாங்க.
துளசி: எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. கலைராணிதான் எனக்கும் டிரெயினிங். ரொம்ப உபயோகமாய் இருந்துச்சு.
கேள்வி: முதல் நாள் ஷூட்டிங் அனுபவம்?
கௌதம்: ஷூட்டிங்குக்கு முதல் நாள் ராத்திரிதான் ரொம்பப் படபடப்பாய் இருந்தது. படுத்தால் தூக்கம் வரலை. தூங்கினபோது ராத்திரி ரெண்டு மணி இருக்கும். நாலு மணிக்கெல்லாம் ஷூட்டிங்குக்கு ரெடியாகணும்னு சொல்லி எழுப்பிட்டாங்க. முதல் தடவை டயலாக் பேசவேண்டிய ஷாட்லயும் டென்ஷனாக இருந்தது. ஆனா மணிரத்னம், ‘ரொம்ப கூலா இரு. நேச்சுரலா நடின்னு சொல்லி, தைரியம் சொன்னாரு.
துளசி: முதல் ஷெட்யூல்ல எனக்கு சீன் இல்லை. ரெண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்குக்குத்தான் நான் போனேன். எனக்கு சைக்கிள் ஓட்டுறா மாதிரி முதல் ஷாட். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஒரு மாதிரி சமாளிச்சேன்.
கேள்வி: நடிப்புங்கறது ஜீன்ல இருக்குன்னு நம்பறீங்களா?

கௌதம்: ஜீன்லயும் இருக்கு; அதே சமயம் ஒரு நடிகனை டைரக்டர்தான் உருவாக்கறாருன்னும் நினைக்கிறேன்.
துளசி: எனக்கு ஜீன்லயே இருக்குன்னு நினைக்கிறேன். அதே சமயம், ஜீன், சொல்லித் தருவது இதையெல்லாம்விட, நடிப்புங்கறது சீனுக்குத் தேவை என்னன்னு புரிஞ்சுக்கிட்டு, அதை முழுசா உள்வாங்கி, நடிப்பா வெளிப்படுத்தவேண்டிய அறிவுபூர்வமான விஷயம்னு நினைக்கிறேன்.
கேள்வி: ரொம்ப சவாலாக இருந்த சீன்?
கௌதம்: எலே கிச்சா பாட்டுக்காக கடல்ல படு வேகமா கட்டுமரத்துல போன சீன். முதல்ல ரொம்பவே தடுமாறினேன். அப்புறமா பேலன்ஸ் பண்ணி நிற்கக் கத்துக்கிட்டு, நடிச்சு முடிச்சது ரொம்ப பெரிய சவால்.
துளசி: அந்தமான்ல எடுத்த மூங்கில்தோட்டம் பாட்டு சீன். எனக்கு தண்ணியைக் கண்டால் பயம். போதாக்குறைக்கு தண்ணியில நிற்கும்போது மீன் வந்து காலை குத்தும்னு சொல்லிப் பயமுறுத்திட்டாங்க. கடலுக்குள்ள இறங்கப் போற சமயத்துல, மணிரத்னம், என்னோட கண் கான்டாக்ட் லென்ஸ கழற்றிடுன்னு சொன்னபோது, ரொம்ப பயந்திட்டேன். கௌதம் கையைப் பிடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ளே போய், ஒருவழியா சமாளிச்சேன்.
கேள்வி: அடுத்தது என்ன?
கௌதம்: நோ ஐடியா. கடல் ரிலீசுக்குக் காத்திருக்கிறேன்.
துளசி: ரவி கே. சந்திரன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். ரொம்ப நல்ல கேரக்டர்.



thanx - kalki