Showing posts with label விஜயலட்சுமி. Show all posts
Showing posts with label விஜயலட்சுமி. Show all posts

Thursday, July 26, 2012

சீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா

http://www.eutamil.com/wp-content/uploads/2011/04/29Seemaan.jpg 

தலைவர் பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார் !

ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.  பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் ? என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கூசாமல் பொய்யுரைத்துள்ளார் சீமான் என்றால் நம்புவீர்களா ?


சரி சீமான் உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதனை எவ்வாறு அறிய முடியும் ? முதலில் ஒரு யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். தற்போது ஜூலை மாதம் முடிவில் உள்ளோம். ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர் 1ம் திகதி என்று பார்த்தால் 60 நாட்களே உள்ளது. இந்த 60 நாட்களில் சீமான் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிகப்போகிறாராம். ஆனால் அது யார் என்று அவருக்கே தெரியாதாம் ! நாம் தமிழர் கட்சியை நடத்தும் தலைவர் அவர் ! ஒரு மாநாடு நடக்க 3 மாதங்களுக்கு முன்னரே பிளான் போடும் அவர் தனது வாழ்க்கை துணை யார் என்று தெரியாது, ஆனால் அக்டோபர் 1ம் தேதி கல்யாணம் என்று சொல்கிறாரே நம்பக்கூடிய வகையிலா இது இருக்கிறது ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYHKbC4AalJf3TF_-keayBJ8Dg0HJBERSCvezxjWmFU1S8JzXwEkG2N6olc94xBa9SmozbIGJI6NbviJXnuSfJaLOQxulMUNQp-CsUDIWL29aU3kgykjztO-_Jfa0WjMncqN3YZ6l3rjs/s1600/se+v+5.jpg

வன்னியில் புலிகள் பலமாக இருந்தவேளை புலிகளின் ஊடகவியலாளராக இருந்த அழகான பெண் யாழ்மதி. இவர் குறிப்பாக ஆங்கிலச் செய்திகளை வாசிக்கும் ஊடகவியலாளர். சீமான் முதன்முதலாக இந்தப் பெண்ணை வன்னியில்தான் சந்தித்து இருந்தார். திரைப்படப் பிடிப்பு சம்பந்தமாக புலிகளுக்கு பாடம் எடுக்க சென்றவர், இந்த அழகான பெண்ணை கண்டு மயங்கி இருந்தார். தமிழ் தேசியத்தின் பெயரால் புலிப் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று இவர் தலைவர் பிரபாகரனுக்கு சொன்னார்.

ஆனால் குறிப்பிட்ட அப் பெண்ணை பிறிதொருவர் திருமணம் முடிக்க இருப்பதாக தலைவர் தெரிவித்து, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அப் பெண் யாரும் இல்லை, புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அலெக்ஸ் என்னும் அன்புமணி காதலித்தவர் ஆவார். பின்னர் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் நான்கே மாதத்தில் அலெக்ஸ் மற்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் விமானத் தாக்குதலில் இறந்தனர். பின்னர் 2009ம் ஆண்டு யாழ்மதி இராணுவத்திடம் சரணடைந்தார்.


இவர் இவர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை எப்படியோ மோப்பம்பிடித்த சீமான், இலங்கையில் உள்ள துணை ஆயுதக் குழு ஒன்றுக்கு பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக கொடுத்து அன்புமணியின் முன்னாள் மனைவியான அழகான பெண்ணை(யாழ்மதியை) சிறையில் இருந்து மீட்டு இருக்கின்றார் சீமான்.

இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கின்றார். சீமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்புமணியின் முன்னாள் மனைவி எவ்வித குறைகளும் இல்லாதபடி பார்க்கப்பட்டார். தற்போது தமிழ் நாட்டில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்ணுக்கும் சீமானுக்கும் அக்டோபர் 1ம் திகதி திருமணமாக உள்ளது ! அதாவது ஒரு விதவைக்கு மறு வாழ்வு கொடுப்பது பாவம் என்று நாம் கூறவில்லை. இல்லையேல் ஒரு போராளியை இவர் காப்பாற்றியது தொடர்பாக நாம் விமர்சனம் தெரிவிக்கவில்லை.

http://cinemaulakam.com/images/vija_viyapu_170711.jpg


ஆனால் சீமான் தான் இன்னும் மணப் பெண்ணை பார்க்கவே இல்லை என்று ஏன் பொய்யுரைக்க வேண்டும் ? குறைந்த பட்சம் தான் ஒரு ஈழப் பெண்ணை தான் மணம் முடிக்க இருப்பதாக ஏன் அறிவிக்கவில்லை ? இதனைக் கூட துணிவாக அறிவிக்க வக்கில்லாத சீமான் எவ்வாறு தமிழீழத்துக்காகப் போராடப்போகிறார் ?

எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்கப்போகிறார் ? அன்புமனியின் மனைவியை மணப்பது நல்ல விடையம் ! ஆனால் அதனை அவரால் ஏன் நேர்மையாகத் தெரிவிக்க முடியவில்லை ? வாய் கிழிய கத்தும் அவர், இதனை மட்டும் ஏன் ஒரு கேவலமாக நினைக்கிறார் ? பெண் விடுதலை அவ்வளவு தானா ? இவ்வளவு நாளும் இவர் பேசிய வீர வசனங்கள் எல்லாம் பொய் தானா ? இனி ஈழத் தமிழர்கள் சீமானை எப்படி நம்புவது ?  ஒரு கருணாநிதி, ஒரு சுபவீரபாண்டியன், ஒரு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி நபர்கள், இவர்களைப் போல ஒரு உயிர் இல்லாத அரசியல் ஜடம் போல அல்லவா சீமான் மாறிவிட்டார் ?


உலகத் தமிழர்கள் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்வார்கள் ? தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசி  அரசியல் செய்வதும், பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் தானா இன்னும் இருக்கிறார்கள் ? நாங்கள் இலங்கையில் அப்படியே செத்து மடிவதை தவிர வேறு வழியே இல்லையா ? இது தான் எங்கள் இனத்தின் சாபக்கேடா ? நாங்கள் எங்கள் உயிருக்கும் மேலாக நம்பியிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளே எங்களை அழிக்க உதவுவதா ? எங்கள் கண்ணில் மண்ணை வாரிப் போடுவதா ?


அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், தலைவர் நிராகரித்த பெண்ணை, தலைவர் மணம் முடித்த நாளில் மணம் முடித்து தேசிய தலைவர் முகத்தில் கரியைப் பூசுகிறார் சீமான் !


நன்றி - சம்பவம், முத்தமிழ் குழுமம்

செய்தி 2 


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். மணமகள் முன்னாள் சபாநாயகரான மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழி. சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கயல்விழி காளிமுத்துவின் இரண்டாம் தாரத்து மகள். பட்டதாரிப் படிப்பை முடித்திருக்கும் கயல்விழி சீமானின் புரட்சிகரமான பேச்சில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.



நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பிய கயல்விழி அதுபற்றி பேசுவதற்காக சீமானை சந்தித்து இருக்கிறார். காளிமுத்துவின் மீது மிகுந்த மரியாதை கொண்ட சீமான் கயல்விழியை மனமார வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல், கயல்விழியின் தாயையும் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார். குடும்ப ரீதியான இந்த நட்புதான் ஒருகட்டத்தில் திருமணப் பேச்சு வரை நீண்டிருக்கிறது.


திருமணமே வேண்டாம் என்கிற நிலையில் இருந்த சீமான் மீது தேவையற்ற சர்ச்சைகளை சிலர் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்கள். விஜயலெட்சுமி என்கிற நடிகையைத் தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்தார்கள். அரசியலில் புதுப்புயலாக பரபரப்பு கிளப்பும் சீமான் மீது உளவுத்துறையும் இதர அரசியல் கட்சிகளும் சினிமாப் புள்ளிகள் சிலரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனால் பெண் சம்மந்தமான புகார்களை இவர்கள் எந்த நேரத்திலும் சீமானுக்கு எதிராகக் கிளப்பக்கூடும். 



அதனால் திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதே சிறந்தது என சீமானுக்கு பலரும் அறிவுரை வழங்கினார்கள். இதற்கிடையில் சீமானுக்கு எதிராக பரபரப்பு கிளப்பிய விஜயலட்சுமி தன்னுடைய வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லியிருக்கிறார்.



அதனால் இந்த சுபவேளையை தவறவிட விரும்பாத சீமான் காளிமுத்து மகள் கயல்விழியை திருமணம் செய்ய பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் அரனையூரில் வசிக்கும் சீமானின் தாய் தந்தையர் இருவரும் இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். ”முகாம்களில் வாழும் ஈழ அகதிப் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து என் மகன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்தேன். ஈழ உணர்வு கொண்ட கயல்விழியை மணப்பது அகதிப் பெண்ணை மணப்பதற்கு ஒப்பானதுதான்” எனச் சொல்லி இருக்கிறார் சீமானின் தாய்.



மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி திருமணம் நடந்த அக்டோபர் முதல் தேதி சீமானின் திருமணமும் நடக்க இருக்கிறது. மிகப்பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடாகி வருகிறது. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்தத் திருமண விழாவை தலைமை ஏற்று நடத்த இருப்பவர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன்.


நன்றி - தாய்த்தமிழ்


சி.பி - மேலே சொன்ன இரண்டு செய்திகளில் எது உண்மை என்பது அக்டோபர் 1 அன்று தெரிந்து விடும்

Saturday, June 04, 2011

சீமான் VS விஜயலட்சுமி -கில்மா?!! நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

http://thatstamil.oneindia.in/img/2011/06/03-seeman-vijayalakshmi300.jpg 

ன்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! 

சி.பி- ஏம்மா.. 3 வருஷமா பழகிட்டே இருந்தீங்களே... அப்பவே ஏன் புகார் பண்ணாம இப்போ எலக்‌ஷன் ரிசல்ட் காங்கிரஸ்க்கு பாதகமா வந்த பிறகு பண்றீங்க?


புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ்வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார்.  

சி.பி - ஹா ஹா அப்படியா?அப்போ புகாரை வாபஸ் வாங்குங்க.. ஹே ஹே ஹேய்

விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை?

சி.பி- எல்லாம் புகழ் ஆசை தான், வேற என்ன? பரபரப்பா பத்திரிக்கைல பேர் வரனும்.. மீடியா ஜூம் லைட் தன் மேல படனும்...

'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சின்னத்திரையிலும் தலையைக் காட்டினார். சீமானின் இயக்கத்தில் வெளியான 'வாழ்த்துகள்’ படத்திலும்  நடித்தார். பரபரப்பு சர்ச்சையில் அவர் பெயர் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ், தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார். அப்போது, தூக்க மாத்திரை களை விழுங்கி தற்கொலைக்கும் முயன்றார். 2006-ல் கன்னட நடிகர் சுஜான் லோகேஷ§டன் மூன்று வருடங்களாக குடும்பம் நடத்துவதாகச் சொல்லி பரபரப்பு கிளப்பினார். 

சி.பி - ஹா ஹா .. மேடம் உங்க ராசியான நெம்பர் 3 ஆ? யாரை லவ் பண்ணுனாலும் 3 வருஷம்  தான் லவ் பண்றீங்க?

டி.வி நிகழ்ச்சியின் இயக்குநர் ஒருவர் மீதும் 'கல்யாண கலாட்டா’ புகாரைக் கொடுத்து பரபரக்க வைத்தார். இப்போது அதே வெடிகுண்டை சீமான் மீதும் வீசி இருக்கிறார். பரபரப்பு கிளப்புவதும் பின்னர் அப்படியே அமைதியாகிவிடுவதும் விஜயலட்சுமியின் வழக்கமான வாடிக்கைதான்.

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் எப்படிப் பழக்கம்?

சி.பி - ஹி ஹி ,இதை எல்லாம் பப்ளிக்கா சொல்ல முடியுமா?
ஒன்றரை வருடத்துக்கு முன்பு விஜயலட்சுமியின் சகோதரிக்கு குடும்ப ரீதியான சிக்கல். அப்போது விஜயலட்சுமி கண்ணீரோடு சீமானை அணுக, அவர் மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ராமாத்தாளிடம் அனுப்பினார். விஜயலட்சுமியின் சட்டப் போராட்டத்துக்கு சங்கமித்திரை என்ற வழக்கறிஞர் மூலமாக உதவினார். மேற்கொண்டு நடந்ததை சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் விவரிக்கிறார்.

சி.பி - ஓஹோ அவர் குடும்பமே அப்படித்தானா? அப்ப சரி.. அவர் மேல தப்பில்லை போல ... எல்லாம் ஹெரிடிட்டி பிராப்ளம்.. 

''ஈழ விவகாரத்தில் மிகுந்த தீரத்தோடு போராடும் சீமானுக்கு இழுக்கு உண்டாக்கும் விதமாகவே இப்படி ஒரு புகாரைப் பரப்பி இருக்கிறார் விஜயலட்சுமி. குடும்பப் பிரச்னையில் மனிதாபிமான முறையில் இரக்கப்பட்டதைத் தவிர அந்தப் பெண்ணுக்கும் சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் சீமானின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேவையற்ற மன உளைச்சலை உண்டாக்கியது விஜயலட்சுமிதான்.

சி.பி - ஓஹோ, சிவா மனசுல சக்தி மாதிரி சீமான் மனசுல சிங்கார லட்சுமியா? ம் ம் நடக்கட்டும்.. 

'என் மீது கயல் விழி என்கிற ஆவியை ஏவிவிட்டு என் குடும்பத்தின் நிம்மதியையே குலைத்து விட்டீர்கள். தயவு செய்து என் மீது ஏவி இருக்கும் ஆவியை விரட்டுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ என்கிற எஸ்.எம்.எஸ்-ஐ சமீபத்தில் சீமானுக்கு அனுப்பினார். 

 சி.பி - அட.. அது யாரு?கயல்விழி.. புது கேரக்டரா இருக்கு? நல்ல ஃபிகரா?


(அதை நம்மிடம் காட்டுகிறார்!) 

 சி.பி - இதை காட்டுனது விஜயலட்சுமியா?சீமான் வக்கீலா? #டவுட்டு..
ஹி ஹி

எத்தனையோ இக்கட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஈழ விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் சீமான், ஆவியை ஏவிவிடுகிறார் என்றால் சிரிக்கத்தானே முடியும்? பகுத்தறிவுக் கொள்கையில் உறுதி பிறழாமல் இருக்கும் சீமான் மீது பில்லி சூனியப் பிரச்னையைக் கிளப்புவதில் இருந்தே அந்தப் பெண்ணின் குணம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அவதூறு பரப்பிய விஜய லட்சுமி மீது ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இருக்கிறோம். விஜயலட்சுமியை இயக்கும் சூத்திரதாரிகளையும் சும்மா விட மாட்டோம்!'' என்றார் சந்திரசேகர்.

 சி.பி- அப்போ அஞ்சு கோடி ரூபா கொடுத்துட்டா அண்ணன் சீமான் மானம் காக்கப்படுமா? ஹி ஹி , சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்.. அது சரி.. ஏதோ சூத்திரதாரின்னு சொல்றீங்களே? அது கலைஞரா?அவர் தான் அப்படி கதை சொல்லிட்டு இருப்பாரு.. 



இன்னும் சிலரோ, ''விஜயலட்சுமி புகார் கொடுக்க கமிஷனர் ஆபீஸ் போவதற்கு முன்னரே காங்கிரஸ் புள்ளி ஒருவர் அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் போன் செய்து 'கமிஷனர் ஆபீஸில் முக்கியச் செய்தி!’ எனப் பரப்பி இருக்கிறார். 

 சி.பி - உண்மை பொடி   நடையா வாசலுக்கு வந்து செருப்பை தொடும்போது வதந்தி பஸ் ஏறி ஊருக்கே போய் இருக்குமாம்.. அந்த மாதிரி.. 



ஈழ விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சீமானை சிதைக்கும் விதமாகவே திட்டமிட்டு சிலர் விஜயலட்சுமி மூலமாக இந்த நாடகத்தை நடத்துகிறார்கள். விஜய லட்சுமி மீது தாக்குதலை நடத்தி பழியை சீமான் மீதும் போட்டு சிக்கவைக்கவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். விஜயலட்சுமி சீமானை திருமணம் செய்ய நினைத்திருந்தால் அவருடைய உறவினர்களைத்தானே அணுகி இருக்க வேண்டும்.

 http://123tamilcinema.com/images/2011/06/02-vijayalakshmi33-300.jpg
அதைச் செய்யாமல் போலீஸிடம் புகார் கொடுத்ததிலேயே சீமானின் இமேஜை உடைப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது புரிந்துவிட்டது. ஈழப் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் சிங்கள அரசுக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த சி.மகேந்திரன் மீது வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் பின்னணியில் சிங்கள உளவுப் புள்ளிகளின் கைங்கர்யம்தான் செயல்பட்டது. அதேபோல் இப்போது சீமான் மீதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது!'' என்கிறார்கள் அவர்கள்.

சி.பி - பொதுவா வி ஐ பிங்க எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சு பொண்ணுங்க கிட்ட பழகறப்ப ஜாக்கிரதையா இருக்கனும், அல்லது ப்ழகவே கூடாது.. அதுக்கான விலை தான் இதெல்லாம்.

'பகலவன்’ பட டிஸ்கஷனில் இருந்த சீமானை சந்தித்தோம். எதையும் சட்டையே செய்யாதவராக சிரித்தவர், ''காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கேன்? ஒரு வருஷத் துக்கும் மேல் சிறையில் இருந்துட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்காகப் போராடவும் காங் கிரஸுக்கு எதிராகப் பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை. படிக்கவோ தூங்கவோ நேரம் இல்லாத அளவுக்கு தீவிரமாக இயங்கிவரும் எனக்குக் கண்டவர்களோடும் டூயட் பாடுவதுதான் வேலையா?

ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்த களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். விட்டுத் தள்ளுங்கள் அந்த வெட்டிக் கதைகளை எல்லாம்...'' என்றார் சீறலாக!

சி.பி - வெட்டிக்கதைகள்னா விட்டுத்தள்ளிடலாம். குட்டிக்கதைகளா இருக்கே? ஹி ஹி