Tuesday, March 07, 2023

லியோ - டைட்டில் ப்ரமோ டி கோடிங்

 


கமல்  நடித்த  விக்ரம் படத்தின்  பிரம்மாண்ட  வெற்றியால்  அதன்  இயக்குநர்  லோகேஷ்  கனகராஜின் மார்க்கெட்  வேல்யூ  ஏகத்துக்கும்   எகிறியது. விஜய்  உடன்  அவர்  இணைந்த  முதல்  படமான  மாஸ்டர்  பற்றிக்குறிப்பிடும்போது   இது  விஜய்  படமாக  இருக்குமா? லோகெஷ்  படமாக  இருக்குமா?  என  பலரும்  கேட்டார்கள் . இரு  தரப்பு  ரசிகர்களையும்  திருப்திப்படுத்த  50%  விஜய்  படமாகவும், 50 %  லோகேஷ்  படமாகவும்  இருக்கும் என  சொல்லி  இருந்தார். ஆனால்  இந்தப்படம்  டைட்டில்  வெளியாகும்  முன்பே  அவர்  சொன்ன  விஷயம்  இது  முழுக்க  முழுக்க  விஜய்  படம்  என்பதுதான்

   விஜய்க்கு  சமீபத்தில்  வெளியான  இரு  படங்களும்  பெரிய  வெற்றி  இல்லை.  பீஸ்ட்  சுமாராகத்தான்  போனது . வாரிசு  தெலுங்கு  பட  சாயலில்  இருந்தது. அதனால்  இந்தப்படத்துக்கு  எதிர்பார்ப்பு  எகிறி  இருக்கிறது 


 சமூக  வலைத்தளங்களில்  நேற்று  விஜய் உடைய  இரு  ரத்தக்கறை  படிந்த  உள்ளங்கைகளை  காட்டியபடி   நிற்கும் ஸ்டில்  வெளியானதும்  பட  டைட்டில்  ரத்தம்  சம்பந்தப்பட்டதாகத்தான்  இருக்கும்  என    பேச்சு  கிளம்பியது. கமல்  நடித்த  குருதிப்புனல்  போல  டைட்டிலில்  குருதி அல்லது  ரத்தம்  எனும்  சொல் நிச்சயம்  இருக்கும்  என  எதிர்பார்க்கப்பட்டது


பிறகு  திடீர்  என  பட  டைட்டில்  கருடன்  என  இருக்கலாம்  என  வதந்தி  பரவியது .  இப்போது  லியோ ப்ளடி  ஸ்வீட் என்பதுதான்  டைட்டில்  என்பது  தெரிய  வந்துள்ளது 


 லியோ  எனில்  சிம்ம  ராசி  அலல்து  சிங்கம்  போன்றவன், சிம்ம  சொப்பனமாக  எதிரிகளுக்கு  தோன்றுபவன்  என  கொள்ளலாம், அல்லது  ஹீரோ  பெயரே  லியோ  என  இருக்கலாம் . ஒரு  இடத்தில்  விஜய்  பின்னால்  சிலுவை  உள்ளது . எனவே  இதில்  அவர்  கிறிஸ்துவராக  இருக்கலாம் 


கதை நடக்கும் இடம்  காஷ்மீர்  ஆக  இருக்கலாம். அங்கே  விஜய்  சாக்லேட்  ஃபேக்டரி  மாதிரி  ஒன்று  வைத்திருக்கிறார். இது  நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ் ஆன  மணிஹெய்ஸ்ட்  பாகம் 3, 4,5   ஆகிய  பகுதிகளில்  வரும்  நேசனல்  பேங்க்  அஃப்  ஸ்பெயின்  உள்ளே  உள்ள  தங்கத்தை  கொள்ளை  அடிக்கும்  கதையில்  புரொஃபசர்  இருக்கும்  வீட்டில்  குளிர்  பானம்  தயாரிப்பது  போல்  மேல்  பூச்சுக்கு  செட்  பண்ணி  இருப்பது  போல  உள்ளது 


 படத்தின்  டைட்டில்  டிசைன்  மற்றும்  பல  இடங்களில்  மஞ்சள்  எழுத்துக்கள் பொன்  நிறத்தில்  தோன்றுகிறது . எனவே  நிச்சயம்  இது  தங்க  வேட்டை  சம்பந்தப்பட்ட  படம்  தான் 


  தங்க  கட்டிகளில்  சாக்லேட்  க்ரீமை  தடவி  மறைத்து  வைக்கலாம்


விஜயைத்தேடி  பல  கார்கள்  அணி  வகுத்து  வருவது  ஊமை  விழிகள்  க்ளைமாக்ஸ்  போல  தர,மான சம்பவமாக  உள்ளது அந்தக்கார்  நெம்பர்  ரிஜிஸ்ட்ரேஷன்  பார்த்தால்  ஆந்திரா  தெலுங்கானா  மாநிலம்  போல  தெரிகிறது . எனவே  காஷ்மீரில்  உள்ள  விஜயைத்தேடி  வில்லன்கள் தெலுங்கானாவிலிருந்து  வருகிறார்கள் 


 படத்தில்  ஒரு  பெரிய  பாம்பு  வருகிறது. காட்டுபிரதேசங்களில்  வன  விலங்குகளைப்பிடிக்க  பொறி  வைப்பார்கள் . அது  போன்ற  ஒரு  பொறியில்  பாம்பு  சிக்கி  தலை தனியாக  துண்டாவது  போல  காட்டுகிறார்கள் .அது  போல  காரில்  வரும்  எதிரிகளுக்கு  ஹீரோ  ஏதோ  செக்  மேட்  வைத்திருக்க்லாம்  என  யூகிக்கலாம்


 நாணயத்தின்  ஒரு  பக்கத்தில்  லியோ  என  இருப்பதால்  மறுபக்கம்  என்னவாக  இருக்கும்? என  பேச்சு  கிளம்பி  ஹீரோ  சாக்லேட்  பாய்  ஆக  ஒரு  ரோலும்  ஆக்சன்  ஹீரோவாக  ஒரு ரோலும்  ஆக  மொத்தம்  டூயல்  ரோல்  ஆக  இருக்கலாம்  என  சிலர்  சொல்கிறார்கள் , ஆனால்  லோகேஷ்  இதுவரை  ஹீரோ  டபுள்  ஆக்சன்  ஃபார்முலாவில்  படம்  செய்யவில்லை .  கைதி , விக்ரம்  உட்பட  அவர்  படங்களில்  ஹீரோ ஒரே  ஆள்   இரு  விதமான  கேரக்டர்  சாஃப்ட்  ஆக  ஒருவர்  அதே ஆள்  பின்னாளில்;  வயலண்ட்  ஆக  மாறி  ஆக்சனில்  துவம்சம்  செய்பவராகத்தான்  காட்டுவார் , எனவே  ஹீரோ  டபுள்  ஆக்டிங்காக  இருக்காது 


படம்  தீபாவளிக்கு  சில  தினங்கள்  முன்பாகவே  வெளியாகிறது. விஜய்  படங்களில்  நீண்ட  இடைவெளிக்குபிறகு  ரிலீஸ்  தேதி  முன்  கூட்டியே  அறிவித்து  பக்கா  பிளானிங்கில்  ஷூட்டிங்  நடைபெறுகிறது

Monday, March 06, 2023

FARZI ( 2023) ஹிந்தி - வெப் சீரிஸ் விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


ஃபேமிலி  மேன்  சீரிஸ் பாகம் 1  , பாகம் 2   மெகா  ஹிட்  ஆனதே  அதே  யூனிட்  எடுக்கும் வெப் சீரிஸ் /  படம்   எனபதால்  இதற்கு  எதிர்பார்ப்பு  அதிகம் , அது  போக  விஜய்  சேதுபதி  ஹிந்தியில்  நடிக்கும்  முதல்;  வெப்சீரிஸ்  என்ற  பெருமையும்  உண்டு , ராசி  கண்ணா , ரெஜினா போன்ற  தெரிந்த  முகங்கள்  இதில்  உண்டு  என்பது  கூடுதல்  பிளஸ்

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பிரமாதமான  ஆர்ட்டிஸ்ட். ஒரு  ஓவியம்  அல்லது  படத்தைப்பார்த்தால்  தத்ரூபமாக  அப்படியே  வரையக்கூடியவர் , அவரது  தாத்தா  ஒரு  பிரிண்ட்டிங்  பிரஸ்  வைத்து  நடத்தி  வருகிறார். தேச  பக்தி  உள்ளவர் . புரட்சி  எனும்  ஒரு  பத்திரிக்கை  சொந்தமாக  நடத்தி  வருகிறார். ஆனால்  பெரிய  அளவில்  சர்க்குலேஷன்  எல்லாம்  இல்லை .    இந்தப்பத்திரிக்கை  தயாரிப்பால்  அவருக்கு  ஏகப்பட்ட  கடன் உண்டாகி இருக்கிறது 


 தாத்தாவுக்கு  ஏற்பட்ட  கடனால்  கடன்  கொடுத்தவர்  ஒரு  கட்டத்தில்  நெருக்கத்தொடங்க  வேறு  வழி   இல்லாமல்  நாயகன்  தன்  தாத்தாவுக்குத்தெரியாமல்  அதே  பிரஸ்சில்  கள்ள  நோட்டு  அடிக்கிறான். கடனை  தீர்த்து  விடுகிறான்


 வில்லன்  ஒரு  இண்ட்டர்நேஷனல்  பிக் ஷாட்.  இவன்  பெரிய  அளவில் கள்ள  நோட்டு  அடித்து இந்தியாவில் புழக்கத்தில்  விட்டு இந்திய   பொருளாதாரத்தை  பலவீனம்  ஆக்க  முயல்பவன்


கள்ள  நோட்டு  கும்பலை  ஒழிக்கும்  ஸ்பெஷல்   ஆஃபீசர் ஒருவர்  இருக்கிறார். அவரும்  அவரது  டீமும்   போதிய  அரசு  உதவி , பொருளாதார  உதவி  இல்லாமல்  தவிக்கின்றனர் .  ஒரு  கட்டத்தில்  முழு  பலத்துடன்   இந்த  ஆஃபீசர்  டீம்  களம்  இறங்குகிறது 


 ப்ரொஃப்சனலாக  கள்ள  நோட்டு அடிக்கும்  வில்லன்  அடிக்கும்  பணத்தில்  சில  குறைகள்  இருக்கின்றன. அதை  கள்ள  நோட்டு  மிஷின்  கண்டு  பிடித்து  விடுகிறது . அவன்  நாயகனின்  திறமை  அறிந்து  அவனை  தன்னுடன்  கூட்டுச்சேர  அழைக்கிறான் 


நாயகன்  - வில்லன்  -  ஸ்பெஷல்   ஆஃபீசர்  என  முக்கோண  சேசிங்கில்  திரைக்கதை  நகர்கிறது . இதில்  யார்  வெற்றி  பெற்றார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


 இதில்  எட்டு  எபிசோடுகள் ஒவ்வொன்றும்  50  டூ  55 நிமிடங்கள் .மொத்தம்  440 . கிட்டத்தட்ட  ஏழரை  மணி   நேரம்  ஆகும் இதை  முழுதாக  பார்த்து  முடிக்க 


 நாயகனாக  ஷாகித்  கபூர் , கச்சிதமான    நடிப்பு  இவருக்கு  தமிழ்  டப்பிங் வாய்ஸ் தந்தது  நடிகர் ஜீவா , நன்கு  பொருத்தம் 

நாயகனின்  நண்பனாக   புவன் அரோரா  செம. காமெடிக்கு  மட்டுமல்ல , குணச்சித்திர  நடிப்புக்கும்  ஆள்  கேரண்டி


வில்லனாக கே  கே  மேனன்/ பல  காட்சிகளில்  தன் உடல்  மொழியால்  நடிப்பால்  ரசிக்க  வைக்கிறார்


ஸ்பெஷல்  ஆஃபீசராக  விஜய்  சேதுபதி அலட்டல்  இல்லாத  நடிப்பு , இவரின்  மனைவியாக  ரெஜினா  அதிக  வாய்ப்பில்லை, வந்த  வரை  அழகு 

விஜய்  சேதுபதிக்கு  தமிழ்  டப்பிங்  வாய்ஸ்  தந்தது  திருச்சி  சரவணக்குமார் . செம  கச்சிதம் குரல்  பொருத்தம். ஹிந்தியில்  அவரது  ஒரிஜினல்  வாய்ஸ் தான்


குப்ரா சைத்   ஃபாரீன்  லேடியாக , வில்லனின்  சுப்பீரியராக  வந்து  வில்லனை  அப்பப்ப மிரட்டும் கேரக்டர் , அசால்ட்டாக  நடித்திருக்கிறார்


நாயகனின்  செல்வச்சீமாட்டி கேர்ள் ஃபிரண்டாக  காவ்யா  தப்பர்  சில  காட்சிகள்  வந்தாலும்  கவனம்  ஈர்க்கிறார்


நாயகனின்  சித்தப்பாவாக சித்ரஞ்சன்  கிரி  மறக்க  முடியாத  குணச்சித்திர  நடிப்பு . தாத்தாவின்  பிரஸ்சில் ஊழியராக  இருந்தாலும்  உறவினர்  போல  அப்பப்ப  நாயகனை   கவனிப்பது  அருமை 


ஃபைனான்ஸ்  மினிஸ்டராக  ஜாகிர்  உசைன்  அசத்தல். விஜய்  சேதுபதிக்கும்  இவருக்குமான  காம்போ காட்சிகள்  எல்லாம்  கலக்கல் ரகம் 


நாயகனின்  தாத்தாவாக  அமோல்  உருக  வைக்கும்  பாந்தமான  நடிப்பு , அடிக்கடி  ஞாபகமறதியால்  பாதிக்கப்படுவது  நெஞ்சை  கனக்க  வைக்கும்  நிகழ்வுகள் 


நாயகனுக்கான  பிஜிஎம் ,  வில்லனுக்கான  மாஸ்  இண்ட்ரோ ,  ஸ்பெஷல்  ஆஃபீசருக்கான  பில்டப் . முக்கியமான  மூன்று லேடி  கேரக்டர்ளை  வடிவமைத்த  விதம்   அந்த  3  லேடிஸ்  கேரக்டர்களுக்கும்  காம்பினேஷன் ஷாட்ஸ்  இல்லாதது  அனைத்தும்  வியக்க  வைப்பவை 


நாயகன் - தாத்தா - நண்பன்  மூவருக்குமான  பாண்டிங்   சிறப்பு . நாயகன் -நாயகி கெமிஸ்ட்ரி  குட் . வில்லன் - நாயகன்  காம்போ  காட்சிகள்   கச்சிதம் . மெயின் கதைக்கும்  விஜய்  சேதுபதியின்  பர்சனல்  ஃபேமிலி  ஸ்டோரிக்கும்  சம்பந்தம் இல்லை . அவர்  மனைவியுடான  டைவர்ஸ்  காட்சிகள் , கோர்ட்  சீன் குழந்தையை  யார்  கவனிப்பது  இவை  எல்லாமே  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்குகள் 


சபாஷ்  டைரக்டர் ( ராஜ்  அண்ட்  டி கெ )


1 மப்பில்  இருக்கும்போது ஆஃபீசர்  விஜய் சேதுபதி  மினிஸ்டரையே  மிரட்டுவதும் , விடிந்த  பின்  நேரில்  போய்  பம்முவதும் , அவர்  தேவையை  நிறைவேற்றிக்கொள்வதும்   செம 


2  ஒரு  கட்டத்தில்  தன்  ஹையர்  ஆஃபீசரிடம்  கெஞ்சிப்பேசும்  ராஷிகண்ணா தனக்கு  வேறொரு  டிபார்ட்மெண்ட்டில்  பிரமோஷன்  கிடைத்ததும்  பழைய  ஆஃபீசரிடம்  கெத்து  காட்டும்  மாஸ்  சீன்


3 ராசி  கண்ணா  விஜய்  சேதுபதி  ஆஃபீசுக்கே  போய்  சிடி 600  கள்ள  நோட்டு  கண்டு  பிடிக்கும்  ஸ்கேனர்  மிஷினை  டெலிவரி  பண்ணி  தனது  திறமைகளை  நிரூபித்து  ஆன்  த  ஸ்பாட்  அப்பாயிண்ட்மெண்ட்  ஆர்டர்  பெறும்  சீன்


4 நாயகனின் பிரசை ராசி  கண்ணா  கண்டு பிடிச்சு ஓப்பன்  பண்ணும்  சீனும்  அப்போது  நாயகனிடம்  தொற்றிக்கொள்ளும்  பரபரப்பும்  மாஸ்  சீன். ஒரு  முக்கியமான  தருணத்தில்   விஜய்  சேதுபதி யிடமிருந்து  ஃபோன் வர   நாயகன்  ராசியை  தாக்கும்  முடிவை  கைவிடும்  காட்சி  ஃபெண்டாஸ்டிக்  த்ரில்லிங்  சீன்


5  கள்ளநோட்டை  கொண்டு போகும்  டிரக்கை  செக்கிங்கில்  பிடிக்கும்போது  நாயகன்  சாமார்த்தியமாக  தப்பிக்கப்போடும்  பிரில்லியண்ட்  ஐடியாவும்  பிறகு  போலீசிடம்  போடும்  டீலிங்கும்


6  விஜய்  சேதுபதி - ஜாஹிர்  உசேன்  காம்போ  காட்சிகள்  கச்சிதம்.


7    கே கே  மேனன்  உடல்  மொழி  அவர்  பேசும்  வசனங்கள்  எல்லாமே  பிரமாதம் 

8  கள்ள  நோட்டு  பற்றிய  டீட்டடெய்லிங்  இதுவரை  நாம்  அறியாத  பல  விஷயங்கள் 


9  மிலிட்ரி  ஜீப்  டயர் தடயங்களை  வைத்து  வில்லனின்  அடியாட்கள்  ரூட்டை  மாற்றுவதும்  விஜய் சேதுபதி  அண்ட்  கோ  சேசிங்  சீன்களும் 


10  வில்லனின்  அடியாளை  ஆஃபீசர்  பிடித்து  விசாரிக்கும்போது  இந்த  நியூஸ்  மட்டும்  வெளில  போச்சுன்னா  என  அவன்  மிரட்ட  ஆரம்பிக்கும்போதே அவன்  காலில்  ஷீட் செய்து  விஜய்  சேது பதி  கெத்தாகப்பேசும்  வசனங்கள் 


11   இது  உண்மையான  கள்ள  நோட்டு  இல்லை  நம்மை  டைவர்ட்  பண்ண  போலியான  கள்ள  நோட்டு  என  ஆஃபீசர்  மினிஸ்டரிடம்  ஆர்க்யூ  பண்ணும்  காட்சி  செம  மாஸ் . மினிஸ்டர்  தன்  செல்வாக்கை  காட்ட  மீடியாக்களிடம்  பேட்டி  கொடுப்பதும்  ஆஃபீசர்  அதை  விரும்பாததும்  நல்ல  பாயிண்ட் 


12  க்ளைமாக்சில்  கார்  பார்க்கிங்கில்  நாயகன் - ஸ்பெஷல்  ஆஃபீசர் ,  நாயகி  அனைவரும்  மீட்  பண்ணிக்கொள்ளும்  காட்சி  செம மாஸ் . இதயத்துடிப்பை  எகிற  வைக்கும்  ரைட்டிங் 


13   ஏற்கனவே  மனி  ஹெய்ஸ்ச்சிங்கில்  கண்ட  ஐடியா  என்றாலும்  க்ளைமாக்சில்  நாயகனின்  காரை  சேஸ்  செய்யும்  போலீசை  பிளாக்  பண்ண  100  கோடி  ரூபாய்  பணத்தை  நடு  ரோட்டில்  கொட்டி டிராஃபிக்    ஜாம்  பண்ணும்  சீன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஒரு  கள்ள  நோட்டை  ரெஸ்ட்டாரண்ட்டில்  கண்டதும்  உங்க  கிட்டே  இருக்கும் எல்லா  500  ரூபா  நோட்டையும்  காட்டுங்க, அதுல  கள்ள  நோட்டு  இருக்கு  செக்  பண்ணனும்னு  ராஷி  கண்ணா  சொன்னதும் பணத்தைக்குடுத்துட்டு  மேனேஜர்க்கு  இன்ஃபார்ம்  பண்றேன்னு  அந்த  இடத்தை  விட்டு  கிளம்பறான்  கேஷியர்,  அப்போ கேஷ்க்கு  செக்யூரிட்டி  யாரு ? வேற  யாரையாவது  அங்கே  நிக்க  வெச்சுட்டுத்தானே  கிளம்பனும் ? அல்லது  நோட்டுக்களை  ஒப்படைக்கும்  முன்  மேனேஜர்ட்ட  ஒரு  வார்த்தை  கேட்டுக்கறேன்னு  சொல்லனும் 


2  ராசி  கண்ணா  ஓவர்ஸ்மார்ட்  ஆக ஒர்க்  பண்ணும்போது  விஜய்  சேதுபதி ஒன் கோல்  ஒன்  ஃபேகஸ் நம்ம  டார்கெட்    வில்லன்  தான், நாயகனை  அப்புறம்  பார்த்த்துக்கலாம்  என  மறுத்து  ரூமை  விட்டு  வெளியே  போனது,ம்  ராசி  அவரது  ஆஃபிஸ்  ரப்பர்  ஸ்டாம்ப்பை  மிஸ்  யூஸ்  பண்ணி ஒரு  ஆர்டர்ல  சீல்  வைத்துக்கொள்கிறார், சிசிடிவி கேமரா  காட்டிக்கொடுக்குமே? அவர்  இப்போதான்  ஜாயின்  பண்ணி  இருக்கார் , இந்த   ரிஸ்க்  எடுப்பது  அவரது  வேலைக்கே  ரிஸ்க் ஆச்சே?


3  கள்ள  நோட்டு  அடிக்கறாங்களா?னு  11  பிரிண்ட்டிங்  பிரஸ்ல  ஒரு  ரெய்டு  விசிட்  அடிக்கலாம்னு  போலீசை  கூப்பிட  ராசிகண்ணா  முயலும்போது  ஸ்டேசன்ல  யாரும்  இல்லை, நாளை  பார்ப்போம்னு  அவர்  சொல்றார்.  ராசி  கம்ப்பெல்  பண்ணுனதும்  கிளம்பறார். ஒரு  ஆண்  ஒரு  பெண்  இவர்கள்  இருவர்  மட்டும்  போவது  டேஞ்சர்  என்பது  தெரியாதா? 

4  நாயகனின்  தாத்தா  கடன்  அடைக்கப்பட்ட  போதே  எப்படி  இவ்ளோ  பணம்  என  கேட்டவர்  அதற்குப்பின்  பிரஸ்க்கு  ஏன் விசிட்  அடிக்கவே  இல்லை ?


5  இதுவரை  கள்ள  நோட்டு  அச்சடிக்கும்  வேலையை  மட்டுமே  செய்து  வந்த  நாயகன்  முதல்  முறையாக  சூரத்  நகரத்துக்கு  டோர்  டெலிவரி  பண்ணும்  ரிஸ்க்கை  எதற்கு  எடுக்கிறார் ?


6 கோடிக்கணக்கில் சம்பாதித்த  நாயகன்  சூரத்தில்  டோர்  டெலிவரி  பண்ணும்போது  சரக்கு  டவுன்  லோடிங்  எல்லாம்  செய்வது  எல்லாம்  தரை லெவல், அந்த  மினிஸ்டர்  அடியாட்கள்  கூட  வைத்துக்கொள்ள  மாட்டாரா?  பாக்ஸ்  இறக்க  ஏற்ற?


7  கூலிங்  க்ளாஸ்  போடுவது  பைக்கில்  ட்ராவல்  பண்ணும்போது  கண்ல  மண் , தூசி  விழாமல்  இருக்க ,  ஒரு  கெத்துக்காக , ஆனால்    வெய்யில் இல்லாத  இடத்தில்  நடக்கும்  ஒரு  சேசிங்  சீனில்  ஆஃபீசர்ஸ்  எல்லாரும்  கூலிங்க்  கிளாசோடு  தரையில்  ஓடிக்கொண்டே  சேஸ்  பண்றாங்களே? டார்கெட்  எப்படி  தெரியும் ? 


8  வில்லனின்  பெயர்  உலகம்  பூரா  பரவி  இருக்கும்போது  நாயகனின்  தாத்தா  மற்றும்  சார்ந்தவர்கள்  யாருக்குமே  அவரை  அடையாளம்  தெரியாதா? 


9  பேச்சிலர்ஸ்க்குதான்  ரூம்  , வீடு  வாடகைக்கு  கிடைக்காது, மத்திய  அரசு  ஊழியரான  ராசி  கண்ணா  வருடக்கணக்கில்  தங்க  நல்ல  வாடகை வீடு இல்லாமல்  அலைவது  நம்பும்படி  இல்லை 


10  அதிகம்  பழக்கம் இல்லாத  நாயகனிடம் அரசு  ஊழியரான  ராசி  கண்ணா  தன்   செல்  ஃபோனை  நம்பி  தருவது  எப்படி? ஒரு கால்  பண்ணிட்டு  தர்றேன்னு  கேட்டப்போ  கூட  இருக்கும் இன்னொரு  புரோக்கர்  நண்பனிடம் ஏன்  ஃபோன்  கேட்காம  நம்ம  கிட்டே  கேட்கறான்னு  டவுட்  வர்லையா? 


11  நாயகண்  ராசி கண்னா  ஃபோனை  ஜிம்மிக்ஸ்  வேலை  பண்ணி  ரெடி  செய்த  பின்  ராசிக்கு  வரும்  எல்லா  மெசேஜூம்  அதே  டைமில்  இவர்  ஃபோனுக்கும்  வரும், அப்போ  அதே  ராசி  கூட  நிக்ழும்  ஒரு  ஜாலி  மீட்டிங்ல  தன்  ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ண  வேண்டாமா? ராசிக்கு  டவுட்  வராதா?  தனக்கு மெசேஜ்  வரும்போதெல்லாம்  இவனுக்கும்  வருதே?னு  தோணாதா?  ( ஆனா  அப்படி  தோணலை  ராசிக்கு ) 


12 கள்ள   நோட்டுக்களை  கப்பலில்  எடுத்து  வரும்  பிராசசில்  நாயகன்  ரூட்  மற்றும்  ஐடியா  மட்டும்  தந்தா  போதுமே?  அதுதானே  டீல் ?எதற்காக  ரிஸ்க்  எடுத்து  கப்பலில்  கூட  போகிறார்? அது  வில்லனின்  ஆட்கள்  பார்த்துக்க  மாட்டாங்களா?


13    ஒரு  ஆர்ட்டிஸ்ட்  ஆன  நாயகன்  தன்  காதலியை  இம்பெரெஸ்  பண்ண  காதலியின்  ஓவியத்தை  வரைந்து  கொடுப்பதுதானே  உலக  வ்ழக்கம்? இவரு  தான்  முதன் முதலாக  15  வயதில்  வரைந்த  ஓவியத்தைத்தருகிறார். 


14  தன்  அப்பார்ட்மெண்ட்க்கு  வரும்  நாயகனுக்கு  காதலி  ஒரு  டைம் கூட  தன்  கையால்  சமைச்சு  சாப்பாடு பரிமாறலை /. ஒவ்வொரு  டைமும்  ஆர்டர்  பண்ணி  வர வைக்கறாங்க, அல்லது  ஹோட்டல்ல  போய்  சாப்பிடறாங்க. என்னதான்  மாடர்ன்  கேர்ள்ஸ்க்கு  சமைக்க  அவ்வளவா  வராதுன்னாலும்  மாதம்  ஒரு  டைம்  கூடவா  சமைக்க  மாட்டாங்க ? 


15  கள்ள  நோட்டு  டிசைனிங்  அண்ட்  பிரிண்டிங்  மட்டும்  தான்  நாயகன்  ஒத்துக்கொண்ட  டீலிங்  ஆனால்  வில்லன் நாயகனை   டிஸ்ட்ரிபியூசன்  ஏன்  லேட்  ஆகுது?னு  மிரட்டும்போதும்  ஏன்  பம்மறார்? அவர்  அதற்கு  பொறுப்பு  இல்லையே? 


16  வில்லனின்  கேங்கில்  கறுப்பு  ஆட்டைக்கண்டு  பிடித்து  தலையில்  ஷூட்  பண்றாங்க. டெட்  பாடியை  அப்படியே  தரையோட  சேர்த்து  இழுத்துட்டு  போகும்போது  ரத்தக்கறை  ஒரு  பர்லாங்  தூரத்துக்கு  வருது. அதை  ஆள்  விட்டு  க்ளீன்  பண்றதுக்கு  டிஸ்போஸ்  பண்ணும்போதே  பாடியை  தூக்கி  சென்றிருக்கலாமே? 


17  கள்ள  நோட்டு ஒழிப்புக்கும்பலில்  ராசி  கண்ணா  இருப்பது  தெரிந்தும்  நாயகனான  ஆர்டிஸ்ட்  தான்  முதன்  முதலில்  வரைந்த  ஓவியத்தை  பரிசாக  அளிக்கிறான்


18   சரக்கு  டெலிவரியில்  நாயகனுக்கு  ஒரு  டவுட்  வருது. அதுக்குப்பின்னும்  தான்  சொன்ன  இடத்தை  விட்டுட்டு  பார்ட்டி  சொன்ன  இடத்துக்கு  வ்ர  எப்படி  ஓக்கே  சொல்றார்? புதுப்பார்ட்டிதான்  சேஃப் , பழைய  பார்ட்டி  ரிஸ்க்  என  நினைப்பவர்  போலீஸ்  பொறி  வைத்த   எம் எல் ஏ  டீலிங்க்குக்கு சம்மதிப்பது  எப்படி?அட்லீஸ்ட்  அவங்க  சொல்லும்  இடத்துக்கு  எல்லாம்  வர  முடியாதுனு  சொல்லலாமே? 


19  நாயகி  ஃபோனில்  உள்ள  ஸ்கேனிங் பேட்டர்னை  நாயகன்  ரிலீஸ்  பண்ணுவது ஏன்? அவளை  சந்தேகப்படலையே?போலீசின்  திட்டங்கள்  அப்டேட்  ஆக  தனக்குத்தெரியனும்  என்பதற்காகத்தானே?  அதை  ரிலீஸ்  செய்வது  பெரிய  ரிஸ்க்  ஆச்சே? 


20  நாயகி  ஆர்ட்டிஸ்ட்  தன்  இன்ஷியலாக  எஸ்  என்பதை  கள்ள  நோட்டில்  மார்க்  பண்ணுவதைக்கண்டுபிடிக்கிறாள். தன்  காதலன்  பெயர்  சந்தீப் (சன்னி)  என்பதும், அவன்  ஒரு  ஆர்ட்டிஸ்ட்  என்பதும்  அவளுக்குத்தெரியும், இருந்தும்  நாயகி  ஏன்  நாயகனை  கடைசி  வரை  சந்தேகப்படவில்லை ?


21  நாயகியின்  செல் ஃபோனில்  வாட்சப்  சேட்டிங்கை  சந்தீப்  உடன்  செய்ததை  ஆஃபீசர்  பார்க்கிறார். அதில்  நாயகன்  டி பி  இருக்கும். ஆனால்  க்ளைமாக்சில்  நாயகனை  நேருக்கு  நேர்  முதன்  முதலாக  விஜய்  சேதுபதி பார்க்கும்போது  அவருக்கு  எதுவும்  க்ளிக் ஆகவில்லையே?

22  நாயகன், நண்பன்  இருவரையும்  ஸ்பெஷல்  ஆஃபீசர்  பார்த்து  விடுகிறார். அப்புறமும்  ஏன்  அவர்கள்  இருவரும்  கெட்டப்  சேஞ்ச்  பண்னலை ?

23 க்ளைமாக்சில்  நாயகன் , நண்பன்  இருவரையும்  கன்  பாய்ண்ட்டில்  மடக்கி  போட்டுத்தள்ள  முயற்சிக்கும்போது  நாயகனின் கேங்  கன்  பாயிண்ட்டில்  வில்லனின்  ஆட்களிடம் இருந்து  நாயகனை  தப்புவிக்கிறார்கள்  ஓக்கே, கார்  டயர்களை  சுட்டு  ஃபாலோ  பண்ண  முடியாம  பண்றாங்க  அதுவும்  ஓக்கே , அவர்களிடம்  இருந்த  துப்பாக்கியை  வாங்கிட்டுப்போய்  இருக்கலாமே? 


 ரசித்த  வசனங்கள் 

1   இந்த  ஜெனரேஷனோட  பிரச்சனை  என்ன  தெரியுமா? நிறைய  பார்க்கறாங்க , நிறைய   படிக்கறாங்க, ஆனா  எதையும்  புரிஞ்சுக்கறதில்லை 


2  மக்களோட  தேவை  என்ன? ஜெயிக்கறதுக்கான  வழியைக்காட்டனும்


3   தாத்தா  செஞ்ச  புரட்சி எல்லாம்  ஃபன்  (FUN)  ஆச்சு , எங்க  டிஃபன்  பன்  ஆச்சு 


4  பாக்கெட்ல  பணம்  இல்லாதப்போ  பார்க்கிற  எல்லாமே  பணமாதான்  தெரியும் 


5 இந்தப்பொண்ணுங்களே  இப்படித்தான் , பாய் ஃபிரண்ட் மட்டும்  தெருக்கோடில  வாழனும், புருசன்  மட்டும்  பல  கோடில  வாழனும்


6  தெரு நாய்  வானத்தைப்பார்த்து  குரைப்பதும்  , பணக்காரப்பொண்ணுங்களுக்கு  நீ  இப்படி  காசை  இரைப்பதும்  ஒண்ணு 


7  கஷ்டப்படறாங்க  தான்  இங்கே  நிறைய  இருக்கோம். நாம  எல்லாம்  மிடில்  கிளாஸ்   ஃபேமிலி இல்லை   மிடில்   ஃபிங்கர் கிளாஸ்   ஃபேமிலி


8  இன்னும்  கொஞ்ச  நாள்  தான்  நாம  கஷ்டப்படுவோம், அதுக்குப்பின்  செத்துடுவோம்


9  கொள்ளைக்காரனுக்கு  பணம்  கடன்  கொடுத்தாக்கூட  திருப்பி  வாங்கிடலாம், ஆனா  ஆர்ட்டிஸ்ட்க்கு  கொடுத்தா  பணம் அம்பேல் தான் 


10  பத்திரிக்கை  மூலமா  பேரு  வாங்கலாம், ஆனா  சோறு  வாங்க  முடியாது 


11  பணக்காரன்  தான்  சிஸ்டம்  உருவாக்கறான் , ஆனா  ஏழைங்க  குப்பைத்தொட்டில தான்  வாழனும் , பணக்காரன்  வட்டில  வாழறான் , இந்த  சிஸ்டத்தை  உடைக்க  புரட்சி  தேவை 


12  கலகத்துக்கும் , புரட்சிக்கும்  சின்ன  வித்தியாசம்தான் . யார்  தோற்கிறானோ  அவன்  கலகக்காரன், யார்  ஜெயிக்கிறானோ  அவன்  புரட்சி  வீரன் 


13  ஒரு  கசப்பான  உண்மை  என்னான்னா ஜெயிக்கறவனைத்தான்  இந்த  உலகம்  ஞாபகம்  வெச்சுக்கும்


14  எப்பேர்ப்பட்ட  பிரச்சனையா  இருந்தாலும்  அவன்  கிட்டே ஒரு சொல்யூசன்  இருக்கும்


 அப்படி  இருந்தா  அவன்  இந்நேரம் பெரிய ஆள்  ஆகி  இருக்கனுமே?


15  ஒருத்தன்  மூழ்காம  இருக்க  எதை  வேணா  பிடிச்சு  மேலே  வர  தயாரா  இருப்பான் 


16  சிஸ்டம்க்கு  கீழே  சிக்கிடாத , சிஸ்டம்  தான்  நமக்குக்கீழே  இருக்கனும்


17  நாம  ஜெயிக்கனும்னா  பை  ஹார்ட்  பண்ணனும் ( இதய பூர்வமா  வேலை  செய்யனும் )  இல்லை  சிஸ்டத்தை  பாய்காட்  பணணனும் 


18   காப்பி  அடிக்கவே  நம்மலால  முடியாது , நோட்டு  அடிக்க முடியுமா?


19  கலையையும், குப்பையையும்  ஒரு  தப்பு  தான்  வித்தியாசப்படுத்தும்


20  என்  கிட்டே  ஒரு  கெட்ட  பழக்கம்  இருக்கு 


 ஒண்ணு தானா? நீ கெட்ட  பழக்கங்களோட  குப்பைத்தொட்டி  ஆச்சே? 


21   உன்  கண்ணுக்கு  எட்டுனவன்  உன்  GUN க்கு  எட்டலையா?


22     45  ஜிஎஸ் எம்  பேப்பரை  மட்டும்  திருடுனா போதாதா? ஏன்  எல்லாத்தையும்  திருடனும் ?


  அதை  மட்டும்  திருடுனா  கள்ள  நோட்டு  அடிக்கத்தான்  திருடுனோம்னு கண்டு  பிடிச்சுடுவாங்க 


 இந்த  மாதிரி  ஸ்கூல் ல  படிக்கும்போது  யோசிச்சிருந்தா  உருப்பட்டிருப்பே 


23   கவலைப்படறதுதான்  உங்க  ஹாபி  ஆச்சே?  நீங்க  ஒரு  கவலைக்கலைஞன்


24   நாம  ஸ்பெஷலா  யாரை  நினைக்கிறோமா  அவங்க  கிட்டே  உண்மையா  இருக்கனும்


25  வறுமை  நம்மை  வெறுமை ஆக்கிட்டுப்போய்டுச்சு . இதுவரை  கஷ்டப்பட்டு  செஞ்சதை  இனி  இஷ்டப்பட்டு  செய்யலாம் 

26  கேடித்தனத்துக்கு  எக்ஸ்பயரி  டேட்டும்  இல்லை , பேராசையைத்தடுக்க  எந்த  கேட்டும்  இல்லை 


27    இது  ரெகுலர்  ப்ரோட்டோ  கால்  தான், இப்டி  செக்  பண்றாங்களே?னு  ஃபீல்  பண்ணாதீங்க , செக்யூரிட்டிக்காக


  நோ பிராப்ளம், எங்களுக்கு  அவ்ளோ  ரோஷம்  எல்லாம்  இல்லை 


28    வேட்டு  வைக்கறதா  இருந்தாலும்  சட்டத்து கிட்டே  கேட்டுதான்  வைப்போம் 


29   நான்  செஞ்ச  தப்புக்காக  வருத்தப்படனும்னு  எவ்வளவோ  முயற்சி  செஞ்சேன், ஆனா கொஞ்சம்  கூட  வருத்தப்பட  முடியல . நேச்சுரலா  எனக்கு  கில்ட்டி  ஃபீலிங்க்ஸே  வர்லைங்கறப்போ  என்ன  செய்ய  முடியும் ?


30  நீ  எப்போடா  டாக்ஸ்  கட்டுனே? டாக்ஸ்  கட்டுனவன்  எல்லாம் அமைதியா உள்ளே  இருக்கான் 


 சரக்கு  அடிக்கறமே  பீர்  வாங்கறமே  அதுல  கூட டாக்ஸ்  கட்றோம்


31   அவமானத்தையும் , பழியையும் தாங்கிக்க  ஒரு  தில்  வேணும், அதுவும் ஒரு  நேர்மையான  மனுசனுக்கு 


32  தற்கொலைக்கு  முன்  அவரு  எழுதி  வெச்ச  லாஸ்ட்  நோட்  என்ன  தெரியுமா? இதுதான்  என்னோட  லாஸ்ட்  என்கவுண்ட்டர் 


33  அரை மனசோட  செய்யும்  எந்தக்காரியமும்  சரி  வராது , முழு  மனசோட  செய்யனும் 


34  ஒரு  விஷயத்துக்கு  சாவே  கிடையாது , அதுக்குப்பெருதான்  பேராசை , அது  ரத்தத்துல  ஊறி  இருக்கும்


35  பணம்  இருந்தா நீ தான்  கிங் அந்தப்பணம்  எப்படி  வந்தது ?னு  எவனும்  கேட்க  மாட்டான் 


36 நான் ஒரு  பிஸ்னெஸ்  மேன், எனக்கு  எதிரிங்களைப்பிடிக்காது . யார்  என்  கூட  ஒர்க்  பண்ணலையோ  அவங்க  பூரா  என்  எதிரிகள் தான் 


37 உன் திறமையை  ஊருக்கு  உலகத்துக்கு  தெரிவிக்க  ஒரு  ஸ்டேஜ்   வேணும்


38   சில டைம்  நம்மை  நோக்கி  எழுப்பப்படும்  கேள்விகள்  பர்ஃபெக்சன்  பற்றி  இருக்காது  பர்செப்சன்  பத்தியதா  இருக்கும்


39 கள்ள  நோட்டு  பர்ஃபெக்ட்டா  இருக்கனும்னு  அவசியம்  இல்லை , ஆனா  கள்ள நோட்டு  மிஷினை  ஏமாற்றும்  அளவு  பர்ஃபெக்ட்டா  இருந்தா  போதும் 


40  ஸ்கூலில்  யாரும்  நம்ம  கிட்டே  எவ்ளோ  படிச்சிருக்கே? னு  கேட்கறதில்லை , பாஸ்  ஆகிட்டியா?  அப்டினு  தான்  கேட்பாங்க 


41   வெற்றியோட  ரகசியம்  என்ன? தெரியுமா?  பயம்  தான் , தோல்வி  அடைஞ்சிடுவோமோ  அப்டிங்கற  பயம் தான் , அந்த  பயத்துல  நமக்கு  தூக்கம்  வராது 


42  உலகத்துலயே  பழமையான  முதல்  தொழில்  விபச்சாரம் , இரண்டாவது  கள்ள  நோட்டு  அடித்தல் 


43  எவ்ளோ  பெரிய  பலசாலியா  இருந்தாலும்  அவனை  உடைச்சுப்போடுவது  டைவர்ஸ்  தான் 


44  நீ  செய்யும்  வேலையை  நேசி , அப்படி  நேசித்தால்  நீ  மீண்டும்  வேறு  வேலையே  செய்யத்தேவை  இல்லை .  


45  பணம்  தேவை  தான், ஆனா  அதை  ஆண்டவனா  மாத்திடக்கூடாது 


 ஆனா  ஆண்டவன்  செய்யும்  எல்லா  வேலையையும்  பணம்  செஞ்சுடுதே?


46  முகம்  பஞ்சர்  ஆகி   இருக்கு? குழந்தை  மூஞ்சில  யார்டா  கோலம்  போட்டது ?


47  நாம  கண்ணை  மூடிக்கிட்டு   போர்க்களத்துல  இறங்கறோம், அவங்க  எப்படி  தாக்குவாங்க? எங்கே  இருந்து? எதுவுமே  தெரியாது


48  பணம்  வந்தா  நாம  டாப்புல  இருக்கலாம், இல்ல  ஆப்புல  இருக்கலாம்


49   அவன்  ஒரு  பாம்பு  அவனை  நம்பாதே


 அவன்  பாம்பா  இருந்தாலும்  நம்ம  மகுடி  சத்தத்துக்கு  டிஸ்கோ  டான்ஸ்  ஆடித்தான்  ஆகனும் 


50    இந்த  பேராசை   ஒரு  தேவையை  அப்படியே  அத்தியாவசியம்  ஆக்கி  விடும், 


51  என்னை  ஃபாலோ  பண்ணனும்  இல்லைன்னா  குறுக்கே  நிக்காம  ஓரமா  ஒதுங்கிபோகனும்


52   யார்  நம்ம  கூட  நிக்கறாங்களோ  அவங்க  தான்  நம்மாளுங்க 


53  டைட்டானிக்  பார்த்ததுல இருந்தே  இப்படி  போஸ்  கொடுக்கனும்னு  ஐடியா , ஆனா  பீஸ்  ஐ  மீன்  கூட  ஒரு  ரோஸ்  தான் இல்லை 


54  பணத்தால  சந்தோஷத்தை  வாங்க  முடியாதுனு  சில  பேரு  சொல்வாங்க , சொல்றவங்க  திவால்  ஆனவங்களா  இருப்பாங்க , இல்லைன்னா பணத்தையே  பார்க்காத  பரம    ஏழைங்களா  இருப்பாங்க 


55  திடீர்  பணக்காரன்  கிட்டே  உள்ள  ஒரே  பிரச்சனை  என்னான்னா  பணத்தை  எங்கே  எப்படி  செலவு  பண்ணனும்னே தெரியாது ‘

56    மினிஸ்டர் சார்  ஒரு பெரிய  பிராப்ளம், மிஷினால்  கண்டு  பிடிக்க  முடியாத  கள்ள  நோட்டுக்கள் 12,000  கோடி  வந்திருக்கு 


இந்த  விஷய்ம்  உனக்கும்  எனக்கும்  மட்டும்  தானே தெரியும் ?  மக்களுக்கு  தெரியாதில்ல? 


 ம்ஹூம்.; \

\

 அப்புறம்  எப்படி  இதை  ஒரு  பிரச்சனைனு  சொல்றே? 


57   இந்த  ஆன்லைன்ல நல்ல  ,மா(தி)ரி இருக்கற  பாதிப்பேரு  மொள்ள  மாரி தான்


58  ரொம்ப  உயரமான  இடதுல  இருந்து  கீழே  விழும்போது  முதல்ல  அவனுக்கு  பறக்கற  மாதிரி  தான்  இருக்கும்


59   அரசியல்ல  மட்டும்  வாக்கு , சத்தியம்  இதுக்கெல்லாம்  மதிப்பே  கிடையாது


60  ஒரு  குறிப்பிட்ட  வயசுக்கு  மேல  ஆண்கள்  சிடுமூஞ்சியா  அகிடறாங்க ,  குறிப்பா  பெண்  துணை  இல்லாதவர்கள் 


61  எல்லோருக்கும்  ஏமாற்ற  ஆசை  தான் , வாய்ப்புக்காகத்தான்  காத்திருக்காங்க 


62  எந்த  அளவுக்கு ஒருத்தன்  ஃபேமஸ்  ஆகிறானோ அந்த  அளவுக்கு  அவன்  ஒளிஞ்சுக்க  வேண்டிய  தேவை  எற்படும் 


63  வாழ்க்கைல  எல்லாரும் , எப்போதும்  தேவைப்பட  மாட்டாங்க , ஏன்னா  நம்ம  தேவைகள்  அடிக்கடி  மாறிட்டே  இருக்கு 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-   முகம்  சுளிக்க  வைக்கும்  காட்சிகளோ, 18+  காட்சிகளோ  இல்லை , ஆனால்  அடிக்கடி  யாராவது  கெட்ட  வார்த்தை  பேசுவதை  கொச்சையாக  பேசுவதை  குறைத்திருக்கலம், ஃபேமிலியோடு  பார்க்கும்போது  அப்பப்ப  ம்யூட்  பண்ன  வேண்டி  வரும்  ஏழாவது  எபிசோடில் 22  நிமிடம்  30 வது நொடியில்  ஒரு  லிப் லாக்  சீன்  இருக்கிறது , மற்றபடி  லேடீஸ்  கேரக்டர்கள்  அனைவருக்கும் கண்ணியமான  உடை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மூன்று  சினிமாப்படம்  பார்க்கும் அளவு  நேரத்தை இழுத்துக்கொண்டாலும்  ஒர்த்  ஆன  வெப் சீரிஸ்  தான். த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம்   ரேட்டிங் 3 / 5 




Farzi
Farzi.jpeg
Promotional poster
GenreBlack comedy
Crime thriller
Created byRaj & DK
Written by
Directed byRaj & DK
Starring
Music byKetan Sodha
Sachin–Jigar
Tanishk Bagchi
Country of originIndia
Original languageHindi
No. of series1
No. of episodes8
Production
Executive producerRahul Gandhi
ProducerRaj & DK
CinematographyPankaj Kumar
EditorSumeet Kotian
Running time42–66 minutes
Production companyD2R Films
Release
Original networkAmazon Prime Video
Picture format4K UHD HDR
Audio formatDolby Digital 5.1
Original release10 February 2023

Friday, March 03, 2023

MEPPADIYAN(2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


மேப்படியான்  என்பதற்கு  தமிழில்  மேற்கூறியபடி  என  அர்த்தம்.  நடிகர்  உன்னி  முகுந்தனின்   முதல்  சொந்தப்படம். உன்னி  முகுந்தன்  ஃபிலிம்ஸ்  என  சினிமா  கம்பெனி  தொடங்கி  எடுத்த  முதல்  படம் . இந்தப்படம் ரிலீஸ்  ஆகும் முன்  அமலாக்கத்துறை  இவர்  வீட்டில்  ரெய்ட் வந்தது  அப்போது  பரபரப்பாகப்பேசப்பட்டது. 2010 ஆம் ஆண்டு    கேரளா மாநிலம்  இடுக்கி  மாவட்டம் ஈராற்றுப்பேட்டை (  ஈராட்டுப்பேட்ட) எனும்  ஊரில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவம்  இது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்  ஒரு  கார்  மெக்கானிக் . இவருக்கு  சொந்த  வீடு  உண்டு, அம்மா, ஒரு  காதலி  உண்டு இவர்  வசிக்கும்  அதே  ஏரியாவில்  மளிகைக்கடை  நடத்தி  வருபவர்  10 செண்ட்  நிலம்    வாங்க  ஆசைப்படுகிறார்.அதே  போல  நாயகனுக்கும்  10  செண்ட்  நிலம்  வாங்க  வேண்டிய  தேவை  இருக்கிறது 


அப்போது  ஒருவரிடம் 54 செண்ட்  இடம்  இருப்பதாக  தகவல்  வருகிறது . அந்த  மளிகைக்கடைக்காரர்  நாயகனிடம்  சொல்லும்  யோசனை  இதுதான். நாம்  இருவரும்  சேர்ந்து  அந்த  நிலத்தை  வாங்குவோம். அந்த  நிலத்தை  நிரவி  ஃபிளாட்  போட்டு  விற்றால் டபுள்  மடங்கு    லாபம்  கிடைக்கும், அப்போ  நாம்  வாங்கிய   10 செண்ட்  நிலம்  நமக்கு  இலவசம்  என்பது  போல் ஆகிவிடும்  என்கிறார்


இருவரும்  அந்த  நிலத்துக்கு  சொந்தக்காரரை  சந்திக்கின்றனர் . விலை  பேசி  ரூ ஒரு லட்சம்  அட்வான்ஸ்  கொடுக்கின்றனர். ஆறு  மாதம்  டைம், அதற்குள்  ரிஜிஸ்டர்  செய்து  விட  வேண்டும்  என  கண்டிஷன். ஓக்கே  சொல்லி  டீலை முடிக்கின்றனர்


 திடீர்  என  சில  நாட்கள்  கழித்து  நிலத்தின்  ஓனர்  ஃபோன்  செய்து  என்  மகளுக்கு  திருமணம்  நிச்சயம்  ஆக  இருக்கிறது.  முன்  கூட்டியே  நிலத்தை  வாங்கிக்கொள்ள  வேண்டும்  என்கிறார்


 இப்போது  மளிகைக்கடைக்காரர்  கையில்  பணம் இல்லை  என  பின் வாங்குகிறார். நாயகன்  வேறு  வழி  இல்லாமல்   பணம்  ரெடி  பண்ண  ஒத்துக்கொள்கிறார்


நாயகனுக்கு  வர  வேண்டிய  பேங்க் டெபாசிட்  பணம்  கைக்கு  வர  இன்னும்  ஆறு  மாதம்  டைம்  உள்ளது . அதனால்  உடனடியாக  பணம்  ரெடி பண்ண  வேறு  சோர்ஸ்  இல்லாததால்  தன்  சொந்த  வீட்டை  விற்க  முன்  வருகிறார். ஆனால்   நாயகனின்  நெருக்கடி  தெரிந்த  ஃபைனான்சியர்  நாயகனின்  வீட்டை  பாதி  விலைக்கு  அதாவது  ரூ  25  லட்சம்  ரூபாய்க்கு  கேட்கிறார்.


வேறு வழி  இல்லாமல்  அதற்கு  ஒப்புக்கொண்ட  நாயகன் வீட்டை  விற்று  பணத்தை  இடத்தின்  ஓனரிடம்  கொடுக்கிறார்.  அவரது  மகள்  திருமணம்  நிகழ்கிறது . அடுத்த  நாள்  இடத்தை  ரிஜிஸ்டர்  பண்ணலாம்  என  இருக்கும்போது  இடத்தின்  ஓனர்க்கு  சீரியஸ் , ஆள்  இன்னும்  ஒரு  நாள்  தான்  தாங்குவார்  என  டாக்டர்  சொல்லி  விடுகிறார்


இந்தப்பிர்ச்சனையை  நாயகன்  எப்படி  எதிர்  கொள்கிறார்? இதற்குப்பின்  இடம் ரிஜிஸ்டர்  ஆன  பின்  தான்  அந்த  இடத்தில்  ரயில்வே  டிராக்  அமைக்க  இருப்பதாக  தகவல்  வருகிறது. அந்த  பிரச்சனையை  எப்படி  டீல்  செய்கிறார்? என்பதே  மீதி  கதை  


நாயகனாக  உன்னி  முகுந்தன் . சிறப்பாக  செய்திருக்கிறார். பார்ப்பவர்  அவர்  மேல்  பரிதாபம்  கொள்ளும்படியான  பாத்திர  வடிவமைப்பு ,நாயகியாக , காதலியாக அஞ்சு  குரியன்  அழகிய  முகம் , அதிக  வாய்ப்பில்லை 


மளிகைக்கடைக்காரர்  வர்கீஸ்  ஆக சைஜூ  க்ரூப்  கிட்டத்தட்ட  வில்லன்  ரோல்.  இவர்  வேண்டும்  என்றே  செய்யவில்லை , ஆனால்  நாயகனை  சிக்கலில்  மாட்ட  விடுகிறார். மெச்சத்தக்க  நடிப்பு 


சமயம்  பார்த்து  அடி  மாட்டு  விலைக்குக்கேட்கும்  ஃபைனான்சியராக  இந்திரன்ஸ் . குள்ளநரித்தனமான  பார்வை ,  அமைதியான  தோற்றம்  என  கனகச்சிதமான  நடிப்பு 

\

 இந்தப்படத்தின்  திரைக்கதை  பிரமாதம் ,  ஒரு  சாதா  கதையை  க்ரைம்  த்ரில்லர்  போல  பர  பரப்பாக  எடுத்துச்செல்வது  சிறப்பு . பிள்ட்  பிர்சர்  இருப்பவர்கள் படத்தின்  க்டைசி  அரை  மணி  நேரத்தை  பார்ப்பதை  தவிர்ப்பது  நல்லது . அவ்ளோ  டெம்ப்ட்  ஏற்றி  இருகிறார்கள், செம  ரைட்டப் 


சஹீர்  முகம்மதுவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்யப்பட்டு  உள்ளது  நீல்  டி  குன்ஹா வின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்  முன்  நடப்பது  போல  அத்தனை  தத்ரூபம்  ராகுல்  சுப்ரமணியின்  இசையில்  பாடல்கள்  கச்சிதம், பின்னணி  இசை  விறு விறுப்பு , திரைக்கதை  வசனம்  இயக்கம் விஷ்ணு  மோகன்


 குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  இந்தப்படம்  அமேசான்  பிரைம்ல  கிடைக்குது . ஒரு  இடம்  அல்லது  வீடு  வாங்குவதில்  எத்தனை  ;பிரச்சனை  உள்ளது  என  எடுத்துச்சொல்லும்  நல்ல  படம் 


சபாஷ்  டைரக்டர்


1  பாத்திரங்களை  அறிமுகப்படுத்த  முதல்  30  நிமிடங்கள்  ஆகிறது, அதற்குப்பின்  ஒரு  இடத்தில்  கூட  தொய்வு  இல்லை , செம  விறுவிறுப்பு 


2  இது  நிஜ  சம்பவத்தின் படமாக்கம்  என்பதால்  தேவை  இல்லாத  திணிப்புகள்  எதுவும்  இல்லாமல்  நேரடியாக  கதை  சொன்ன  பாங்கு 


3  நாயகன் ஆல்ரெடி  ஏகப்பட்ட  பணச்சிக்கலில்  இருக்கும்போது  வீட்டை  விற்க  ஆள் ரெடி  செய்த  நண்பன்  அதற்கு  புரோக்கர்  கமிஷன்  கேட்டு  நாயகனை  நெருக்கும்  இடம் , அதற்கு  நாயகனின்  ரீ ஆக்சன்  செம   


4  நாயகனின் காதலியின்  பெற்றோர்  பேசும்  இடம், இவனுக்கு  வேலையும்  இல்லை , இருந்த  வீடும்  போச்சு  , இவனை  நம்பி  எப்படிப்பொண்ணு  தர  என  அவநம்பிக்கை  தெரிவிக்கும் இடம் 



  ரசித்த  வசனங்கள் 

\

1  வேலைல  அரசாங்க  வேலை , தனியார்  வேலைனு  பெருசா  வித்தியாசம்  கிடையாது , ஆனா  வாழ்க்கைல  ரிஸ்க்  எடுக்க  பயப்படறவங்கதான்  கவர்மெண்ட்  ஜாப் க்கு  ஆசைப்படுவாங்க 


2   வாழ்க்கைல  ஒரு கேரண்டி  வேணும்னா  கவர்மெண்ட்  ஜாப்  இருந்தாதான்  முடியும் 


3  கவர்மெண்ட்  ஜாப்ல  இருக்கறவங்களும் , ஃபாரீன்ல  வேலை  செய்பவர்களும்  தான்  சேஃப்டினு  நம்ம  நாட்ல  பலரும்  நினைச்சுட்டு  இருக்காங்க 


4  என்னை  மெக்கானிக்னு  பொத்தாம்  பொதுவா  நினைச்சுடாத . நான்  வண்டிகளைப்பராமரிக்கும்  டாக்டர் 


5   வாழ்க்கைல  ரிஸ்க்  எடுத்தவங்க  மட்டும்  தான்  உயரமான  இடத்தை  அடைய  முடிந்திருக்கிறது 


6  கடன்  வாங்கி  இன்வெஸ்ட்  பண்றது  என்  பிஸ்னெஸ்ல  இல்லை, அந்த  ரிஸ்க்கை  நான்  எப்பவும்  எடுப்பதில்லை 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு செண்ட்  ஒன்றரை   லட்சம்  ரூபாய்  என  ரேட்  சொல்லும்  ஓனர்  ஒரு லட்சத்துப்பத்தாயிரம்  என   கேட்கும்போது  பேரமே  பேசாமல்  உடனே  ஓக்கே  சொல்வது  எப்படி ?

2  அட்வான்ஸ்  ஆக  ரூ  1  லட்சம்  தரும்போது  கேஷாக  தருகிறார்கள். அதற்கு  ரிசீப்ட்டோ  பேப்பரில்  எழுதியோ  வாங்கவில்லை . அட்லீஸ்ட்  அக்கவுண்ட்  பேயி  செக்காக  தருவதுதானே  சேஃப்டி ? 


3  மார்க்கெட்  வேல்யூ  50  ல்ட்சம்  ரூபாய்  மதிப்புள்ள  தன்  சொந்த  வீட்டை  ஒரு  அவசரத்தேவைக்காக  நாயகன்  ரூ 25  லட்சம்  க்கு  விற்க  சம்மதிப்பது  ஏன்? அதற்கு  வங்கியில் வீட்டுப்பத்திரம்  அடமானம்  வைத்து  பணம்  வாங்கலாமே?  ( வங்கியில்  பிராசசிங்  டைம்  ஆகும்  எனில்  அதை  பணம்  தர  வேண்டிய  பார்ட்டியிடம்  சொல்லலாமே?) 


4  வீட்டை  வாங்கும்  இந்திரன்ஸ்   50  லட்சம்  ரூபாய்  வீட்டை 35  லட்சம்  ரூபாய்க்குப்பேசி  பின்  23  லட்சம்  தான்  இப்போ  இருக்கு , வேண்டும்  என்றால்  தர்றேன், இல்லைன்னா  விடுங்க  என  சமயம்  பார்த்து  கழுத்தறுக்கும்போது  மீதி  ரூ 2 லட்சம்  க்கு  செக்  வாங்கி  இருக்கலாமே?


5  வில்லங்கச்சான்றிதழில்  இது ரெயில்வே  டிராக்  வரும்  இடம் , என்பது இருக்குமே? 


6  சாமான்யர்கள்  ஹைவேஸ்  ரோட்டில்  அமைந்த  இடத்தையோ   ரயில்வே  ட்ராம்  வரும்  இடத்தில்  உள்ள  இடத்தை  ஏமாந்து  வாங்குவதோ  நடக்கலாம், ஆனால்  ஃபைனான்சியர்  தீர  விசாரித்துத்தானே  வாங்குவார் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம் , ஃபேமிலியுடன்  பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இந்த  மாதிரி  கதைக்கருவை  வைத்து  இப்படி  எல்லாம்  பிரமாதமாக  திரைக்கதை எழுத  முடியுமா? என  வியக்க  வைக்கும்  படம்  ரேட்டிங்  3 / 5 


Meppadiyan
Meppadiyan Poster.Png
Theatrical poster
Directed byVishnu Mohan
Written byVishnu Mohan
StarringUnni Mukundan

Anju Kurian

Saiju Kurup
CinematographyNeil 'D' Cunha
Edited byShameer Muhammed
Music byRahul Subramaniyan
Production
company
Unni Mukundan Films
Release date
  • 14 January 2022 (India)
CountryIndia
LanguageMalayalam

Thursday, March 02, 2023

VADH (2022) ஹிந்தி - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


வத்  என்றால்  ஹிந்தியில்  வதம்   என்று  ;பொருள் . எக்ஸ்க்யூஷன் . கடவுள்  அவதாரம்  அசுரனை  வதம்  செய்வது  போல  ஒரு  மனித  மிருகத்தை  ஒரு  சாமான்யன்  வதம்  செய்வது  தான்  கதைக்கரு 

கணவன் - மனைவி  இருவரும்  ரிட்டையர்டு  ஆன  ஆசிரியர்கள் . இருவருக்கும்  ஒரே  ஒரு  மகன்/. ஃபாரீனில்  இருக்கிறான். இவர்களுக்கு  இருந்த  ஒரே  சொத்தான  சொந்த  வீட்டை  அடமானம்  வைத்துக்கடன்  வாங்கி  அவனைப்படிக்க  வைக்க  வெளிநாடு  அனுப்புகிறார்கள் . வாங்கிய  15  லட்ச  ரூபாய்க்கடனுக்கு  வட்டி  கட்டிக்கொண்டு  இருக்கிறார்கள் 


இவரிடம்  சேமிப்புப்பணமாக  10  லட்சம்  தான்  இருந்தது , ஆனால்  மகனின்  வற்புறுத்தலால்  25  லட்ச  ரூபாய்  ரெடி  செய்து  தர  வேண்டிய  சூழலில் 15  லட்சம்  பிரைவேட்  பார்ட்டியிடம்  கடன்  வாங்கி  மகனைப்படிக்க  வைத்தார் 


 ஆனால்  மகன்  பெற்றோர்  மீது பாசமும்  இல்லாமல் தனக்காகத்தான்  அவர்கள்  கடன்  வாங்கி  இருக்கிறார்கள்  என்ற  அக்கறையும்  இல்லாமல்  அவர்களை  மதிக்காமல் இருக்கிறான். கை நிறைய  சம்பளம்  வாங்கினாலும்  சரியாகப்பணம்  அனுப்புவதில்லை . அவன்  மனைவி  அதாவது   தம்பதியின்  மருமகள்  அவனை  விட  மோசம்,  அவர்களிடம்  ஆன்  லைன்  வீடியோ  காலில்  பேசுவதற்குக்கூட  சம்மதிப்பதில்லை . நேரம்  கூட  செலவழிக்காதவளா  பணம்  செலவழிக்கப்போகிறாள்?


வயதான  தம்பதிக்கு  பிள்ளை , மருமகள்  பாசம்  தான்  கிடைக்கவில்லை , வீட்டிலாவது  நிம்மதியாக  இருக்க  முடிந்ததா?  வட்டிக்குப்பணம்  கொடுத்தவன்    மிரட்டுகிறான். அவன்  மோசமான   ரவுடி . தம்பதியின்  வீட்டுக்கு  வரும்போது ஒரு  பெண்ணையும்  உடன்  அழைத்து  வந்து  அவர்கள்  வீட்டை  இலவச  லாட்ஜ்  ஆக  பயன்படுத்திக்கொள்கிறான். தம்பதியின்  பக்கத்து  வீட்டில்  12  வயது  சிறுமி  ஒருத்தி  இருக்கிறாள் . அவள்  மீது  ரவுடி  தப்பான  பார்வை  வைக்கிறான்


தொடர்ந்து  ரவுடியின்  டார்ச்சரால்  கோபம்  அடைந்த  அந்த  வயதான நபர்  ஒரு  கட்டத்தில் அந்த  12  வயது  சிறுமியை  வட்டிக்குப்பதிலாக  தாரை  வார்த்துக்கொடு  என்று  கேட்கும்போது  கோபத்தில்;  அந்த  ரவுடியைக்கொலை  செய்து  விடுகிறார்


த்ரிஷ்யம்  படத்தில்  வருவது  போல  சாமார்த்தியமாக  அந்தக்கொலையை  எப்படி  மறைத்தார்?  போலீசிடம்  இருந்து  அவர்  தப்பினாரா?   என்பது  மீதி  திரைக்கதை 


வயதான  தம்பதி   ஆக  சஞ்சய்  மிஸ்ரா  மற்றும்  நீனா  குப்தா   இருவரும்  அருமையான  நடிப்பு . இயலாமையில்  தவிப்பதை  , மகனிடம்  இருந்து  அன்பு  மறுதலிக்கப்படுவதை  கண்களாலேயே  கடத்தி  இருக்கிறார்கள் 


போலீஸ்  இன்ஸ்பெக்டராக  மானஜ் விஜ்  கம்பீரமாக  வில்லனை  எதிர்கொள்வதிலும்  சரி , தன் அந்தரங்க  வீடியோ  அவனிடம்  சிக்கியபின் பம்மும்போதும்  சரி  இரு  விதமான  மாறுபட்ட  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


வில்லனாக  சௌரப் சச்தேவா  நமக்கு  வெறுப்பு ஏற்படுத்தும்  அளவில்  நடித்துள்ளார்


ஜஸ்பால்  சிங்க் சாந்து  மற்றும்  ராஜீவ் பர்ன்வால்  இருவரும்தான்  திரைக்கதை ,இயக்கம்


 ஒளிப்பதிவு  கனகச்சிதம் , குவாலியர்  எனும்  ஊரின்  அழகை  படம்  படித்துக்காட்டி  உள்ளார்  சப்பான்  நாருலா 


முதல்  ஒரு  மணி  நேரம்  திரைக்கதை  மிக  மெதுவாகவும்  கொலை  நிகழ்ந்த பின்  வரும் 50  நிமிடங்கள்  பரபரப்பாகவும்  நகர்கிறது 


110  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது . மிகக்குறைந்த  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில் 60  லட்சம் ரூபாய்  வசூல்  செய்துள்ளது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 

1  கோபத்தில்  கொலை  செய்வது கூட  ஓக்கே , ஆனால்  உடல்  பாகங்களை  துண்டு  துண்டாக  வெட்டி  அப்புறப்படுத்துவது , எலும்புகளை  அரவை  மிஷினில்  கொடுத்து  பவுடர்  ஆக்குவது  எல்லாம்  ஓவர்.


2   கொலை  நடப்பது  வீட்டில்  நடு  ஹாலில். பாத்ரூமில்  பாடியைக்கொண்டு  போய்  கட்  பண்ணி  டிஸ்போஸ்  செய்வதுதான்  புத்திசாலித்தனம். வாஷிங் , க்ளீனிங்  எல்லாவற்றுக்கும்  அதுதான்  உகந்ததாக  இருக்கும்,  நடு  ஹாலில்  இந்த  வேலையை  செய்தால்  என்னதான்  வாட்டர்  வாஷ் செய்தாலும்  ரத்த  வாடை  போகாது. போலீஸ்  வந்தால்  சந்தேகம்  வரும் 


3  டெட்  பாடியின்  துண்டுகளை  ஒரு  சாக்குப்பையில் கட்டி  மக்கள்  கூட்டம்  உள்ள  பஸ்சில் கொண்டு  போவது  எல்லாம்  ரிஸ்க். நாம  சாதாரணமா  துணி , காய்கறி  லக்கேஜ்  கொண்டுபோனாலே  கண்டக்டர்  ஓப்பன்  பண்ணி  காட்டு, உள்ளே  என்ன  இருக்கு?  செக்கிங்  ஆஃபீசர்  வந்தா  நான்  தான்  பதில்  சொல்லனும்  என்பார், ஆனால்  பெரியவர்  ரொம்ப  அசால்ட்டாக  சாக்கு  மூட்டையை  பஸ்சில்  கொண்டு  போவது  நம்பகத்தன்மையே  இல்லை 


4  பஸ்சிலோ, ரயிலிலோ  எளிதில்  தீப்பற்ரக்கூடிய பொருட்களை  எடுத்துச்செல்ல  அனுமதி  இல்லை, ஆனால்  பெரியவர்  இரவு  நேரத்தில்  பெட்ரோல்  கேனில்  பெட்ரோலுடன்  பயணிக்கிறார். கண்டக்டர்  எப்படி  அதை  அனுமதித்தார். அட்லீஸ்ட்  கட்டைப்பையில்  மறைத்தாவது  கொண்டு  போவதாக  காட்டி  இருந்தால்  நம்பும்படி  இருந்திருக்கும்


5  கொலை  ஆன  வில்லனின்  மனைவி  தன்  குழந்தையுடன்  நாயகன்  வீட்டுக்கு  வந்து  விபரம்  கேட்கும்போது  வசனகர்த்தா  ஒரு  பிழை  செய்து  விட்டார். கொலை  ஆன அடுத்த  2  வது நாளே  வந்த  மனைவி “ இந்த  குழந்தை  அப்பா  எங்கெ?னு  தினமும்  கேட்டுட்டு, நச்சரிச்சுட்டு  இருக்கா, அவளுக்கு  என்ன  பதில்  சொல்ல?   இந்த  வசனம்  தவறு. இனி  வரும்  காலங்களில்  டெய்லி  கேட்பாளே? என்ன  பதில்  சொல்ல  என்பதே  சரியான  வசனமா  இருக்கும்


6  கணவன்  மிஸ் ஆகி விட்டான் என  வருத்தத்தில்  இருக்கும்  ,மனைவி  ஃபுல் மேக்கப்பில்  லிப்ஸ்டிக்  உட்பட  உலா  வருவது  உறுத்துகிறது. மேக்கப் மேன்  டல்  மேக்கப்  போட்டிருக்கலாம் 


7  ஒப்புதல் வாக்குமூலம்  தந்த  நாயகனின்  வாக்கை  நம்பாமல்  போலீஸ்  அவரை  திருப்பி  அனுப்புவதில்  லாஜிக்கே  இல்லை, அவங்களுக்கு  ஒரு  கேஸ்  முடியுது , அந்த  வாய்ப்பை  ஏன்  இழக்கறாங்க ?


8 செல் ஃபோனில்  இருந்து  சிம்  கார்டை  தனியா  கழட்டி  எடுத்திருந்தால்தான்  அவுட்  ஆஃப்  கவரேஜ்   ஏரியா  என  குரல்  வரும், பேட்டரி  டவுன்  ஆகி  செல் ஃபோன் ஸ்விட்ச்  ஆஃப்  ஆகி  விட்டால்   குரல்  ஸ்விட்ச்டு ஆஃப்  என்று தான்  வ்ரும். ஆனால்  போலீஸ்  ஆஃபீசர்  வில்லனின்  செல்லுக்கு  ஃபோன்  செய்யும்போது  அவுட்  ஆஃப்  கவரேஜ்   ஏரியா  என  குரல்  வருகிறது 


9 ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க  நாயகன்  வந்தபோது   ஹெட்  கான்ஸ்டபிளோடு   2  கான்ஸ்டபிள்களும்  பெஞ்ச்சில்  வேறு  இருவரும்  அமர்ந்திருந்தனர். அவர்களும்   சாட்சியே . ஆனால்  நாயகன்  நான்  அப்படி  எல்லாம்  வாக்கு  மூலம்  தரவில்லை  என  பல்டி  அடிக்கும்போது  ஆதாரம்  இருக்கிறது  என  போலீஸ்  சொல்லவிலையே? 


10  சைக்கிள்  ரிக்‌ஷாக்காரன்  போலீஸில்  ஸ்டேட்மெண்ட்  கொடுக்கும்போது  நாயகன்  வழக்கமா பேரம்  பேசுவார், சம்பவம்  ந்டந்தபோது  பேரம்  பேசலை  என  சொல்றான், ஆனா  சாக்கு  மூட்டைல  பிணம்  இருந்ததால  அந்த  வாடை  அடிப்பது  பற்றி எதூவும்  சொல்லலை. அதே  போல  [பஸ்சில்  ப்யணிக்கும்போதும்  அந்த  பிரச்சனை  நாயகனுக்கு  வரவில்லை 


11 வில்லன்  தன்  செல்  ஃபோனில்  போலீஸ்  ஆஃபீசரின்  அந்தரங்க  வீடியோ  க்ளிப்  கேலரியில்  வைத்திருக்கிறான், ஆனால்  ஃபோன்  லாக்  செய்யாமல்  இருப்பானா? அவனது  ஃபோனை  நாயகன்  ஓப்பன்  பண்ணி  எப்படிப்பார்க்க  முடிந்தது ?


 12 போலீஸ்  ஆஃபீசர்  ஒரு   பெண்ணுடன்  இருப்பதை  வீடியோ எடுத்து  வைத்து  பொலீசையே  ரவுடி  மிரட்டி  வருகிறான்  என்பதும்  நம்பும்படி  இல்லை . அப்பவே  அவனை  லாக்கப்ல  தள்ளி  ஃபோனை  பிடுங்கி  இருந்தா  மேட்டர்  ஓவர்

13  டெட் பாடியை  அவ்வளவு  கனகச்சிதமாக  அப்புறப்படுத்துபவர்  தான்  கொலை  செய்த  நபரின்  செல்  ஃபோன்  தன்  வீட்டில்  கிடப்பதை  கவனிக்கவில்லை  என்பதும்  நம்பகத்தன்மை  இல்லை 


ரசித்த  வசனங்கள்


 1 இந்த  நகர  வாழ்க்கைல  குளிக்கறதுக்குக்கூட  தண்ணீர்  கிடைக்க  மாட்டேங்குது , ரேஷன்  கடைல  தர்ற  மாதிரி  அளந்து  ஒரு  பக்கெட்  தண்ணீர்தான்  கிடைக்குது, அடுத்த  ஜென்மத்துல  செடி, கொடி ,மரமாப்பிறந்தாலாவது  தண்ணீர்  இஷ்டம்  போல  கிடைக்கும்


2  ஸ்கூலில்  ஒரு  மாணவனை  அடித்த  போது  மூன்று  நாட்கள்  தூங்க  முடியாம  இருந்தேன், ஆனா  இவனைக்கொலை  செஞ்ச  பின்னும்  நிம்மதியா  என்னால  தூங்க  முடிஞ்சுது 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை  என்பதால்  ஸ்லோ பர்ன்  த்ரில்லர்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம், வன்முறைக்காட்சிகளோ, , அடல்ட்  கண்ட்டெண்ட் காட்சிகளோ  இல்லை . ரேட்டிங் 2.25 / 5



Vadh
Vadh 2022 film poster.jpg
Theatrical release poster
Directed byJaspal Singh Sandhu
Rajiv Barnwal
Written byJaspal Singh Sandhu & Rajiv Barnwal
Produced byLuv Ranjan
Ankur Garg
Neeraj Ruhil
Nymphea Saraf Sandhu
Subhav Sharma
Starring
CinematographySapan Narula
Edited byBharat S Rawat
Music byGurcharan Singh
Production
companies
Luv Films
J Studio
Next Level Productions
Distributed byYash Raj Films
Release date
  • 9 December 2022

Wednesday, March 01, 2023

SHEFEEKKINTE SANTHOSHAM (2022) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா - @ அமேசான் பிரைம்


நம்  உணவுப்பொருட்களில்   சமையலில்  கசகசா  வாசனைப்பொருளாக  பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில்  கசகசா  அனுமதிக்கப்பட்ட  உணவுப்பொருள். ஆனால்  வெளிநாடுகளில்  தடை செய்யப்பட்ட  போதைப்பொருள். வெளிநாடு  போகும்  ஒரு  இந்தியர்  இந்த  விஷயம்  தெரியாமல்  கசகசாவை  பேக்  பண்ணி  கொண்டு  சென்றால்  அங்கே  மாட்டிக்கொள்வார். அந்த  மாதிரி  ஒரு  சிக்கலில்  மாட்டிக்கொள்ளும்  வெளிநாட்டு  இந்தியனின்  கதை  தான்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

ஷெஃபிக்கிண்டே சந்தொஷம்  ( ஷெஃபிக்கின்  சந்தோஷம்)  படத்தின்  ஒன்  லைன்  என்ன?   TOO MUCH OF SWEETNESS IS  NOT GOOD FOR LIFE    எல்லாமே  ஒரு  அளவாதான்  இருக்கனும்  என்ற  கரு தான்  எடுத்தாளப்பட்டிருக்கிறது . ஒரு  ஃபீல்  குட்  மூவியில்  ட்விஸ்ட்ஸ்  அண்ட்  டர்ன்ஸ் இவ்வளவு  புகுத்த  முடியுமா? என  ஆச்சரியப்படுத்துகிறது.தன்னைச்சுற்றி  உள்ள  அனைவருக்கும்  ஏதாவது  நல்லது  செய்யும்  கேரக்டர்  ஒரு  சமயத்தில்  சிக்கலில்  ,மாட்டிக்கொள்ளும்போது  மற்றவர்கள்  ரீ  ஆக்சன்  என்ன? என்பதை  படம்  விளக்குகிறது 


 நாயகன் துபாயில்  பணி  செய்யும்  இந்தியர். வருடாந்திர  விடுமுறைக்காகவும், அவருடைய  திருமணத்துக்காகவும்  இந்தியா  வருகிறார். வரும்போது  பலருக்கு  பல விதமான  பரிசுப்பொருட்களைக்கொண்டு  வருகிறார். அவருடைய  டாக்டர்  நண்பருக்கு ஹூக்கா  எனப்படும்  புகை  போக்கி பரிசாகக்கொண்டு  வருகிறார். அதில்  உள்ள  புகையிலையில்  மயக்க  மருந்து  இருக்கிறதா? என  போலீஸ்  செக்  செய்ய  லேபிற்கு  அனுப்புகிறது. நாயகன்  கைது  செய்யபப்டுகிறார். நிச்சயிக்கப்ப்ட்ட  அவரது திருமணம்  நிற்கிறது .  ரிசல்ட்  வரும்  அந்த  15  நாட்களுக்குள்  நாயகன்  வாழ்க்கையில்  நடக்கும்  திருப்பங்களே  திரைக்கதை 


நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ப்ரியன்  ஓடத்திலானு  எனும்  மலையாளப்படத்தின்  நாயகன்  பிரியன்  கேரக்டர்  போல்  வடிவமைக்கப்பட்டு  இருக்கிறது ., நாயகனாக  உன்னி  முகுந்தன்  இந்த  கேரக்டரை  ஏற்று  நடிப்பதில்  கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார். இதற்கு  முந்தைய  இவரது  படங்களில்  அச்சாயன்ஸ்,(ACHAYANS)  பிரமம்  ( BRAHMAM)  , அவ்ருடய  ராவுகள்  , ( AVARUDE RAAVUGAL)  ஆகிய  படங்களில் அவரது  கேரக்டர்  கச்சிதமாக  வடிவமைக்கப்பட்டிருக்கும், மிக  இயற்கையாக  நடித்திருப்பார். இந்தப்பட  கேரக்டர்  அவரது  சொந்தப்படமான  மேப்படியான்  ( MEPADIYAN)


ஆயுர்வேதிக்  டாக்டராக  வரும்  மனோஜ்  கே  ஜெயன்  நடிப்பும்  , காமெடியும்  அருமை . அவரது  க்ளினிக்கில்  பணியாற்றும்  பெண்ணாக ஆத்மியா ராஜன் அழகாக  வந்து  போகிறார். ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  நாயகன்  இவரைத்தான்  காதலிக்க  முயற்சிப்பது  போல  காட்டப்படுகிறது. அவை  மிக  சுவராஸ்யம்


 நாயகனுக்கு  திருமணம்  நிச்சயிக்கப்பட்ட  பெண்ணாக  திவ்யா  பிள்ளை அழகான  முகம், அருமையான  நடிப்பு. நாயகனின்  நண்பனாக  வரும்  பாலா  காமெடி  டிராக்கில்  ஆரம்பத்தில்  கலக்குபவர்  க்ளைமாக்ஸில்  ஒரு  எதிர்பாராத  ட்விஸ்ட்  வைக்கும் கேரக்டராக  மாறுகிறார்


இரண்டு  மணி  நேரம்  ஓடும்  கதையில்  முதல்  பாதி  கலகலப்பு  , டூயட்  என  வேகமாக  நகர்கிறது .  நாயகன்  கைது  செய்யப்படும்  காட்சியிலிருந்து  கதை   சோக  மூடுக்குள்  சென்ற  பிறகு  ஸ்லோ  ஆகிறது. ஒரு  சராசரியான  ஃபீல்  குட்  மெலோ  டிராமா  அமெசான் பிரைம்  ரிலீஸ் 


ரசித்த  வசனங்கள் 


 1  ஷெஃபீக்  வர  இன்னும் இரண்டு  நாட்கள்  டைம்  இருக்கே? ஏன்  இப்பவே  வாழைப்பூவை  வெட்டி  எடுக்கறே?


 வாழைத்தோபு ஓனர்  நாளை  இங்கே  வர்றார், அதுக்குப்பின்  எடுக்க  முடியாதே? 


 2  என்னது ? இலவச  சிகிச்சையா? அப்போ  என்  பேரையுல்  லிஸ்ட்ல  எழுதிக்கோ 


 உங்களுக்குத்தான்  பைல்ஸ்  இல்லையே? அப்றம்  எதுக்கு ?


3  பொண்ணு  வீட்டுக்காரங்க  வந்தாங்களாமே? நிச்சயம்  ஆகிடுச்சா?


 ஆமா, பொண்ணு  எனக்கு  இல்லைனு  நிச்சயம்  ஆகிடுச்சு 


4 பொழைப்பு தேடி  ஃபாரீன்  வர  எனக்கு  ஒரு  காரணம்  உண்டு 


 நீ மட்டுமில்ல, ஃபாரீன்  வரும் எல்லாருக்கும்  ஒரு  காரணம்  இருக்கும் 


5   மூலம்  கற  வியாதி  உனக்கு  மட்டும்  இல்ல , எல்லாருக்கும்  உண்டு , சச்சின்  டெண்டுல்கருக்குக்கூட  மூலம்  உண்டு 


 எப்படி  சொல்றே?


 அவரு  பேட்டிங்  பண்றப்போ  நோட்  பண்ணு , இப்படி  இப்படி  மூவ்  பண்ணுவாரு 


6  பிளட் பிரஷரும்.,  சுகரும்  தீர்க்க  முஜ்டியாத  வியாதிகள், ஆனா  அதை  வெளில  சொல்ல  யாரும்  கூச்சப்படுவதில்லை , ஆனா  மூல  வியாதி  சரியா  மருந்து  சாப்பிட்டா  தீரக்கூடிய  வியாதி , அதை  வெளில  சொல்ல  நாம  கூச்சப்படறோம்


7  கடைல  எனக்கு  தெரிஞ்ச  ஆள்  உண்டு 50%  டிஸ்கவுண்ட்  வாங்கித்தர்றேனு  சொன்னியே?


 அது  வந்து...  நீ  வாங்குனது  குவாலிட்டியான  சாதனம்   அதுக்கு  டிஸ்கவுண்ட்  கிடைக்குமா?

8  உங்க  பையனுக்கு  அவுர்ங்கசீப்னு  ஏன்  பேர்  வெச்சீங்க ?


 அது  ஒரு  பேரரசன்  பேரு, அதுக்கு  என்ன  குறைச்சல்?


 சொந்த  அப்பாவையே  ஜெயில்ல தள்ளியவர்  அவர். குழந்தை  எப்படி  வளரப்போகுதோ ?


 அய்யய்யோ


9   இந்த  மிட் நைட்ல  அவனுக்கு  கால்  பண்றதா?  சரி  பண்றேன்,  ஆனா  க்ட்   பண்றானே? தூங்கி  இருப்பானோ?


 தூங்குனவன்  எப்படி  கால்  கட்  பண்ண  முடியும் ?


10   நம்  வீட்டில்  உள்ளோரும், நாட்டில்  உள்ளோரும்  எல்லோரும்  அன்பு  செலுத்தனும்னா  அவன்  அனாதையாகத்தான்  இருக்கனும்,  நம்மளை  மாதிரி ஆட்களுக்கு  அந்த  பாக்கியம் கிடைக்காதுதானே?


 


சபாஷ்  டைரக்டர்


1  மூல  வியாதி  வந்த  நாயகன்  மூலம்  ஸ்பெஷலிஸ்ட் டாக்டரைக்காண ஹாஸ்பிடல்  வந்து  அங்கே  உள்ள  ரிசப்ஷனிஸ்ட்  இடம்  முழங்கால்  வேதனை  என பொய்  சொல்லி  அப்பாயிண்ட் மெண்ட்  வாங்கி  வெயிட்  பண்ண  அங்கே  நடக்கும் அமளி  துமளி  காமெடி  சம்பவங்கள்  அடி ;பொலி   


2  தமிழ்  ஆட்டோ  டிரைவராக  வரும்  பாலா  கேரக்டர்  டிசைன்  அருமை , குறிப்பாக  க்ளைமாக்ஸில்  அவர்  குற்ற  உணர்ச்சியுடன்  நாயகன்  முன்  ஒரு  நடை  நடப்பாரே, பிரமாதம்


3   மெயின்  கதையில்  வரும்  நாயகன் - நாயகி  காதல்  காட்சிகளை  விட  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  வரும்  நாயகன் - இரண்டாம்  நாயகி   காம்போ  காட்சிகள்  சுவராஸ்யம்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


 1  பொதுவாக  மலையாளப்படங்களில்  காட்சிகளும், வசனங்களும்  யதார்த்தமாக  உண்மைக்கு  மிக  நெருக்கமாக இருக்கும், ஆனால்  இதில்  நாயகன்  பேசும்  பல  வசனங்கள்  ஒரு  தத்துவவாதியின்  ஸ்பீச்  போல  டிராமடிக்காக  இருந்தது 


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல் தமிழனை , தமிழ்  நாட்டு  மக்களை  மட்டம்  தட்டும்  காட்சி  அமைப்புகள் , வசனங்கள்  இருப்பது  சர்க்கரைப்பொங்கலில்  கல் 


3    ஆதாரம்  இல்லாமல்  போலீஸ்  நாயகனை  நிச்சயதார்த்தம்  அன்று  கைது  செய்வது  ஏற்புடையது  அல்ல, அதிலும்  அவரை  அடிப்பது  எல்லாம்  ஓவர்



 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -    மெதுவாகச்செல்லும்  மலையாள  ஃபீல்  குட்  மூவி  பார்த்துப்பழக்கம்  உள்ளவர்கள்   பார்க்கலாம்,  சராசரி  படம்  ரேட்டிங்  2.25 / 5 


டிஸ்கி - எந்த  ஓடிடி  என  டைட்டிலிலேயே   மென்சன்  பண்ணிடறேன். ஆங்கில  சப் டைட்டில்  இருக்கு. தமிழ்  ஆடியோ  இருக்கா?னு  கேட்டு  பல கமெண்ட்ஸ்  வருது . இல்லை , அதுக்கு  அவசியமும்  இல்லை . மலையாளம், தெலுங்கு , தமிழ்  எல்லாம்  ஒரே  மாதிரி  தான்  இருக்கும், குத்து மதிப்பா  புரிஞ்சுக்கலாம், பத்தாததுக்கு  சப்  டைட்டில்  இருக்கு