Wednesday, November 30, 2011

குளிரடிக்குதடி ஜங்கன மங்கனஜங்க் -ஜோக்ஸ்

1. டியர்! பீச்க்கு வாக்கிங்ல போலாம்னு சொல்றீங்களே! ஏன்?


பைக்குல பெட்ரோல் போடறதுக்கோ, டவுன் பஸ்ல போற அளவுக்கோ வசதி இல்லை.


--------------------------------------


2. லைப்ரரி மாஸ்டர் ஏன் கடுப்பா இருக்கார்?


ஃபேஸ்புக் வேணும்னு கேட்கறாங்களாம்.


----------------------------------


3.என் கணவர் என் பேர்ல இருந்த வீட்டை, என்கிட்டே இருந்த நகைகளை எல்லாம் வித்து குடிச்சு அழிச்சுட்டாரு!


ஓஹோ! வித்தகன் &வித்தவன்-னு சொல்லுங்க.


------------------------------------


4. நீங்க எடுக்கப் போற படத்தோட கதைல ஒன் லைன் சொல்லுங்க.


மொத்தக் கதையே ஒன் லைன் தான்.


----------------------------------

5. குளிர் காலக் கூட்டத் தொடர்ல தலைவர் என்ன பேசுனாரு?


அவர் எங்கே பேசுனாரு? அடிக்குது குளிரு... குளிரடிக்குதடி ஜங்கன மங்கன ஜங்க் -னு பாட்டுதான் பாடுனாரு.


-----------------------------------



6. மாப்ளைக்கு சொந்த ஊரு மூலனூர்தான். அதுக்காக அவருக்கு மூலம் இருக்குமோ?-னு கேட்கறது நல்லாலை!

---------------------------------


7. ஷார்ட் சர்க்யூட் -பெண்ணின் பொறாமை இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.


என்னது?

வயர் (WIRE) வயிறு எரியுறது.

-------------------------------


8. வயசுக்கு வந்த அழகான ராசா ஒரு சினிமா நடிகர். அவர் யாரு?


மேஜர் சுந்தர்ராஜன்.

--------------------------------

9.காலேஜ் ஸ்டூடண்ட்: ஐ லவ் யூ.


ஃபிகரு: நான் போய் நீ சொன்னதை அப்டியே பிரின்ஸ்பால் கிட்டே சொல்றேன்.

காலேஜ் ஸ்டூடண்ட்: ஏய்... லூஸு  அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு.


-----------------------------------------


10. ஸாரி டைரக்டர் சார்! ஆடு மேய்க்கற கேரக்டர்ல நடிச்சா என் இமேஜ் போயிடும்!


ஓகே! மாடு மேய்க்கற கேரக்டர் okவா?


------------------------------------------



11. மழலைகள் சந்தோஷ சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட வைரங்கள்! அவர்களை தீட்டுங்கள்! திட்டாதீர்கள்!


----------------------------------------


12. டாஸ்மாக் பாரில் பிசியாக இருக்கும் குடிமகன்கள் செல்ஃபோன் ஒலிக்கும்போது அது ஆண்டவனின் அர்ஜெண்ட் கால் என்றாலும் அட்டெண்ட் செய்வதில்லை
-அவதானிப்பு. @ டெடிகேட்டட் டூ விக்கி தக்காளி

--------------------------------------



13. குட்டி தேவதையை ஆட்டோ நெரிசலில் திக்கு முக்காட வைக்கலாமா?
பெற்றோர்களே! உங்கள் மழலைகளை பள்ளிக்கு நீங்களே அழைத்துச் செல்லுங்கள்!

--------------------------------------


14. ஒவ்வொரு பிரச்சனையும் திறக்கமுடியாத ராட்சசக் கதவாய் பிரம்மாண்டமாய் நம் முன் நிற்கிறது. அதற்கான தீர்வாய் ஒரு சாவி நிச்சயம் இருக்கும்.


---------------------------------------


15. இதயம் கொடுத்து உயிரைக் கேட்கும் காதல் உன்னுது! உயிரைக் கொடுத்து இதயம் கேட்கும் அன்பு என்னுது.


--------------------------------



16. கவலை நாளைய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை, ஆனால் அது இன்றைய சந்தோஷத்தை அழித்துவிடும்.


----------------------------------


17. எந்த சந்தோஷமும் படாமல் நீ முழுக்க முழுக்க ஒரு நபரை நம்பினால் அவர் வாழ்க்கை முழுக்க நல்ல நண்பராகவும் அமையலாம்! உங்களுக்கே ஒரு படிப்பினையை தருபவராகவும் மாறலாம்.


-------------------------------------


18. பையன் சரக்கடிச்சுட்டு லேட்டா வீட்டுக்கு வர்றான். அப்பா அடிச்சுட்டா என்ன பண்றதுனு அவன் சத்தம் போடாம லேப்டாப் ஓப்பன் பண்ணி ஒர்க் பண்ற மாதிரி நடிக்கறான். அப்போ அப்பா வந்து,

“டேய்! குடிச்சிருக்கியா?”

“நோ டாடி”

“அப்புறம் ஏன் என் சூட்கேஸை திறந்து வெச்சிருக்கே?”

லேப் டாப் மனோவின் சுய சரிதை

------------------------------------


19. காதல் என்பது இரு உள்ளங்கள் பேசும் மொழி! நட்பு என்பது உள்ளங்கள் இருக்கும் அனைவரும் பேசும் மொழி.

--------------------------------------

20. ஒரு யானை ஒரு கிணறை எட்டிப் பார்த்தது. அப்போ ஒரு எறும்பு யானையை கடிச்சிடுது. ஏன்?


ஏன்னா அந்த கிணத்துல எறும்போட ஃபிகர் எறும்பு குளிக்குதாம்.


---------------------------------------


டிஸ்கி - கடைசி படத்துக்கான விளக்கம்.. நாம் வெளில போறப்ப ஆஃபீஸ்க்கு போற மாதிரி இருந்தா அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு முகத்தையும், ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கோ, கெஸ்ட் வீட்டுக்கோ போறப்ப ஒரு முகத்தையும் , கில்மா ஃபிகரை பார்க்கப்போறப்ப ஒரு முகத்தையும் ரெடி பண்ணிட்டு போறோம் , அதை சிம்பாலிக்கா, தனுஷாலிக்கா இந்த படம் சொல்லுது..