Monday, January 31, 2011

காதல் வானவில் - கவிதை


http://rammalar.files.wordpress.com/2010/12/rainbow1.jpg 
வரும் .......வரும் ...........என 

தோட்டத்துப்பாத்திகளெல்லாம் 

காத்திருக்க 

பாதை மாறிப்போனது ஏன் நதியே?

விதைப்பது வீண் என்று தெரிந்தும் 

பாலைவனத்தில் பதியம் ஏன் சகியே..?

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-49/rain-cover.jpg
மொட்டு மலர தென்றல் தாலாட்டலாம்.

ஆனால் தென்றலைக்காண மொட்டு..?

மண்ணருகே நீர் இருந்தும் 

வானம் பார்க்கும் பூமியாய் நீ....


உன் அருகே நான் இருந்தும் 

நிலாவைப்பிடிக்க ஆசைப்படும்

சின்னக்குழந்தையாய் நீ...
http://ahshaja.files.wordpress.com/2010/07/love_water_beach_bg2.jpg
பூமிக்குப்பிடித்தது சூரியன் என்பது தெரிந்தும்

மழைச்சாரல் என்னும் கவிதை வழியாகவாவது

மண்ணைத்தொடத்துடிக்கும்

வானவிலாய் நான்.

டிஸ்கி -1 :  இந்தக்கவிதை தினமலர் வார மலர் இதழில் வெளியானது.மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)

டிஸ்கி 2 - கலியுகம் தினேஷ்தான் முதல்ல பாஸ்னு என்னை கூப்பிட ஆரம்பிச்சார்..சரி போனாப்போகுது ஒருத்தர்தானேன்னு நானும் விட்டுட்டேன்,,இப்போ ஆளாளுக்கு தல.. பாஸ்.. அப்படின்னு கூப்பிடறாங்க.. சிலர் ஒரு படி மேலே போய் அண்ணேன்னு கூப்பிடறாங்க.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. எனக்கே வயசாகிப்போன மாதிரி ஒரு ஃபீலிங்க் வந்திடுச்சு..அதனால இனி என்னை எல்லாரும்  டேய்  சிபி  , அடேய் செந்தில் இப்படி கூப்பிடுங்க.. ஏன்னா நான் எல்லாருக்கு தம்பி மாதிரி.. ஹி ஹி ஹி 

டிஸ்கி 3 - நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

 

2. வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3. THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

4 உயிரினும் மேலான உடன் பிறப்பே.....