Tuesday, November 02, 2010

கவுத்துட்டாரே கவுத்துட்டாரே




இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார். அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.
பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.

            அதைக் கவனித்த இராஜாஜி, சிரித்துக்கொண்டே,“சரியான வேலை
செய்தாய் அப்பா! நாங்கள் எல்லாம் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நீ ஒரே நிமிஷத்தில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்த்து விட்டாயே” என்றார்.