Showing posts with label FILM. Show all posts
Showing posts with label FILM. Show all posts

Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





Saturday, December 15, 2012

ரஜினி அரசியலுக்கு வர உள்ளூர ஆசைப்படுகிறாரா?

''இனி என்ன செய்ய..?'' தவிக்கும் ரஜினி!

ஜினியின் பிறந்த நாள் என்பது, அவரது படம் ரிலீஸ் மாதிரியே பரபரப்பைக் கிளப்பும். இந்த ஆண்டு 12.12.12 என்ற அபூர்வ தேதியில் வருவதால் ரஜினிக்கே இந்த பிறந்த நாள் செம ஸ்வீட் தினம். பொதுவாக பிறந்த நாள் அன்று எஸ்கேப் ஆகிவிடுபவர், இந்தப் பிறந்த நாள் அன்று போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.



 திரைப்படத் துறைக்கு ரஜினிகாந்த் வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இந்த ஆண்டு 63-வது பிறந்த நாள். ரசிகர்களுக்குத் தேவை இல்லாத சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்றுதான், பிறந்த நாள் அன்று ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் ரஜினி. கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிறகு ரசிகர்களைச் சந்திப்பதில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினார்.



ஒவ்வோர் ஆண்டும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும், கடந்த ஆண்டுதான் சென்னை மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி​யின் 62-வது பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் வள்ளுவர் கோட்டத்திலேயே விழா எடுக்க, கடந்த மாதமே வேலைகளைத் தொடங்கினர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்துக்கு விண்ணப்பத்தோடு வாடகையும் செலுத்தப்பட்டது. கடைசி நேரத்தில், அரசு விழாவுக்கு புக் செய்யப்பட்டுள்ளது என்று காரணம் கூறி, அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், ரசிகர் மன்ற விழாவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மாற்றினார்கள்.



கடந்த சில வருடங்களாக டிசம்பர் 12-ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடுவதைத் தவிர்த்துவந்த ரஜினியின் வீடு, இந்தத் தடவை விழாக்கோலம் பூண்டது. போயஸ் கார்டன் வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.  



சென்னையில் ரஜினி இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள், அதிகாலை 6 மணிக்கே போயஸ் தோட்டத்தில் குவியத் தொடங்கினர். ரஜினி வீடு இருக்கும் பகுதியில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் இருப்பதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கவே, ரசிகர்களை ரஜினி சந்திப்பதற்கு ஸ்பெஷல் மேடை தயாரானது. மின்னல் போன்று வீட்டைவிட்டு வெளியே வந்த ரஜினி, ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.



'சூப்பர் ஸ்டார் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று ரசிகர்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு விறுவிறுவென மேடை ஏறிய ரஜினி, கைகளை தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டார். ரசிகர்களின் வாழ்த்து கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளக்கவே... புன்னகையுடன்  ரசிகர்களை அமைதிப்படுத்திய ரஜினி மைக்கில் பேசினார்.  



''அனைவருக்கும் நன்றி. உங்களால் பெருமை அடைகிறேன். உங்களது பூஜை, வேண்டுதல்களால் நான் நலமுடன் இருக்கிறேன். இந்த ஏரியா செக்யூரிட்டி நிறைந்த இடம். முதல்வர் வசிக்கும் இடம். நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. உங்கள் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்து கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை. ஆனால் அதற்கு நேரம் போதாது. உங்களது பெற்றோரை, குடும்பத்தை அன்போடு கவனித்துக்கொள்ளுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்'' என்றார்.



ரசிகர்கள் கொண்டுவந்த பிரசாதங்கள், வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகளை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேட்டி கொடுத்தார். ''இந்தப் பிறந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 'கோச்சடையான்’ படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற்றால், 'பொன்னியின் செல்வன்’, 'ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றையும் அருமையான படங்களாக எடுக்கும் காலம் மலரும். திரையுலகில் புதிய டிரெண்டை இது உருவாக்கும்'' என்றார்.



''பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ்?''


''நல்லதையே நினைக்கவேண்டும். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு காரியங்களில் ஈடுபட​வேண்டும். அனைவரிடமும் அன்பாக இருங்கள்'' என்றவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க மேடை ஏறினார்.



இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, 'ரஜினி வெளியே செல்கிறார்’ என்று சொல்லி, ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி சத்யநாராயணாவும் போலீஸாரும் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அனைவரையும் போயஸ் தோட்டத்தின் நுழைவாயிலான பின்னி சாலை சந்திப்பில் கொண்டுபோய் விட்டனர். அதன் பிறகு வந்த ரசிகர்களை அனுமதிக்காமல், பின்னி சாலை சந்திப்பின் அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும், 'ரஜினியைப் பார்த்துவிட்டுத்தான் போவோம்’ என்று ரசிகர்களும் அங்கேயே நின்றனர். இந்தப் பிரச்னையை ரஜினியின் காதுக்கு அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் கொண்டுசென்றனர். 



அதன் பிறகு, 'ரசிகர்களை ரஜினி தொடர்ந்து சந்திக்கிறார். உள்ளே விடுங்கள்’ என்று போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை என்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், ரஜினியின் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ரசிகர்கள் அதிக அளவில் ஏறி நின்றதால், சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.



பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 10-ம் தேதி இரவு போஸ்டர் ஓட்டினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ​ஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி... ஒட்டிய போஸ்டரையும் கிழித்துள்ளனர். 'யாரும் போஸ்டர் ஒட்டக் கூடாது’ என்று எச்சரித்து விரட்டினார்கள். ஏனாம்?


அந்த போஸ்டரில், 'தலைவா, தமிழர்களை ஏமாற்​றும் விதியை மாற்று! தமிழர்களுக்கு ஏற்றம் தரும் கொடியை ஏற்று!’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதில் விதி என்ற வார்த்தையில் 'வி’-யை கறுப்பு - சிவப்பு நிறத்திலும், 'தி’-யை கறுப்பு - வெள்ளை - சிவப்பு நிறத்திலும் எழுதி இருந்தனர். இந்த பிரச்னையும் ரஜினி கவனத்துக்குப் போனதாம். அந்த வாசகங்களை திரும்பத் திரும்பப் படித்து சிரித்துக்கொண்டாராம்.



இதையடுத்து 13-ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கலந்துகொண்டார் ரஜினி. அந்தக் கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசவும் செய்தார்.



''1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பலரும் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். நான் அரசியலில் இறங்க விரும்பாமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் என்னை விடவில்லை. நான் வெளிப்படையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதை அறிவிக்கவில்லை என்றால் கோழை என்று சொல்வார்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, கோழையாக வாழ விரும்பவில்லை. அந்த சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆதரவை வெளிப்படையாக அறிவித்தேன். 


அதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆதரவு கொடுத்துவிட்டேன் என்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அமைதியாக இருந்தேன். அதற்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.



அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைத்தாலும் முடிவது இல்லை. ஆட்சியில் அமரவைக்கும் தொண்டர்களே... அவர்களைத் தோற்கடிக்கவும் செய்கிறார்கள்.



 ஒரு மனிதனுக்கு எப்படி தலையெழுத்து இருக்கிறதோ அதுபோலவே ஒரு மாநிலத்துக்கும் தலையெழுத்து உண்டு, ஒரு நாட்டுக்கும் தலையெழுத்து உண்டு. யார் ஆளவேண்டும் என்பது சந்தர்ப்ப சூழல்களால்தான் நடக்கும்,  தனிப்பட்ட திறமையால் நடக்காது. நேரம் என்பது முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. காமராஜரைவிட நல்ல தலைவர் ஒருவர் இருக்காரா? அவரையே தோற்கடித்துவிட்டனர். எல்லாம் காலம்தான்.



நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்கள்தான் எனக்கு எல்லாம். நான் என்ன செய்யவேண்டும் என்பதை கோஷம்போட்டுச் சொல்கிறீர்கள். நான் பொய்யான வாக்குறுதி கொடுக்கத் தயார் இல்லை...'' என்று அரசியல் பேசியவர் அடுத்து 'பாபா’ விவகாரம் குறித்தும் பேசினார்.



''என்னுடைய ஒரு படம் வெளியிடுவதற்கு பிரச்னை செய்தார்கள். சிகரெட் பிடிக்கக்கூடாது என்றார்கள். நான் சினிமாவில் வீம்புக்காகவே சிகரெட் பிடித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்ன விஷயம் நல்லது. ஆனால், அதைச் சொன்னவிதம் சரியில்லை. இப்போது நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். சிகரெட் காரணமாகத்தான் என்னுடைய உடல் கெட்டுப்போனது. நான் குணமாகிவந்ததை மெடிக்கல் மிரக்கிள் என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த மெடிக்கல் மிரக்கிள் என்பது நீங்கள் செய்த பிரார்த்தனைதான்'' என்றவர் ரசிகர்கள் சிகரெட் பிடிக்கவேண்டாம் என்பதை பிறந்த நாள் கோரிக்கையாகவும் வைத்தார்.


ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தாலும் பிரச்னைகளுக்குள் எப்போதும் சிக்கிக்கொள்ள அவர் விரும்பியது இல்லை. இப்போது கோர்ட், கேஸ் என்று அலையும் விஜயகாந்த்தின் அரசியல் நிலைமையைப் பார்த்து ரஜினியின் தவிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் இதுவரை அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத ரஜினி, ரசிகர்கள் மத்தியில் மனம்திறந்து பேசியிருப்பது சோர்ந்துகிடக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



- எம்.குணா, எஸ்.முத்துகிருஷ்ணன்,


அட்டை மற்றும் படங்கள்:


சொ.பாலசுப்பிரமணியன், பா.கார்த்தி


 வெளியே செல்லாத முதல்வர்!


கடந்த மாதம் 11-ம் தேதி சிறுதாவூர் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு இருந்தபடியே, தினமும் போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்து கோட்டைக்குச் செல்வார். மாலையில் சிறுதாவூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா முடிந்த பிறகு அவர் போயஸ் தோட்டம் வீட்டிலேயே தங்கிவிட்டார். வழக்கமாகக் கோட்டைக்குச் செல்லும் அவர், ரஜினி பிறந்த நாள் அன்று, வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனித்தாராம்.


 ஓ, நண்பனே!


ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர் மயிலாப்பூர் காந்தி. இவர்தான், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கவனித்துவந்தார். மனதில் பட்டதை ரஜினியிடம் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எந்த உதவியையும் ரஜினியிடம் கேட்டது கிடையாது. சிறப்பு தினங்களில் காந்தியின் வீட்டில் இருந்துதான் ரஜினிக்கு மீன் குழம்பு செல்லும். திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அத்தகைய நண்பரான காந்தி, கடந்த 10-ம் தேதி இரவு மாரடைப்பால் இறந்துவிட்டார். செய்தியைக் கேட்டு துடிதுடித்துப்போன ரஜினி, பிறந்த நாளுக்கு முந்தைய நாளான 11-ம் தேதி காலை மனைவி லதாவுடன் காந்தி வீட்டுக்குச் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் சார்பில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், கூடவே இருந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொண்டார்.



 நன்றி = ஜூ வி 



மக்கள் கருத்து 



1. ஹூம்.. செலிபிரட்டிகள் தான் தமிழகத்தை ஆள முடியும்.இதை வேறு சிலர் வக்காலத்து வாங்கு கிரார்கள். என்று மறையும் இந்த செலிபிரட்டி கிரேஸ். 




2. யார் சொன்னது ஜெயல்லிதா துணிச்சல் மிக்கவர் என்று? மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் எவ்வளவு கோலை என்று. வழக்கமாக கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, ரஜினியின் பிறந்த நாள் அன்று கோட்டைக்கு செல்லாமல், பயந்து வீட்டிலேயே வேலையை செய்துவந்தாராம்!




3. புலி வருது...புலி வருதுன்னு சொல்லியே சம்பாதித்த பணத்தை வைத்து நோகாமல் நோம்பி கும்பிட வேண்டியதுதான். தன்னால் எதையும் செய்ய இயலாது. கடவுள் கட்டளையிடும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லியே சுய முடிவெடுக்க முடியாமல் தடுமாறிவரும் பயந்தாங்கொள்ளி.



4. அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை--- ஆம் கொள்ளையடிக்க தலைவன் ஆனவனெல்லாம் சந்தோஷமாக இல்லை. சேவை செய்ய வ்ந்த நல்லகண்ணு போன்றவர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ரஜினி இனி வேஷம் போட வேண்டாம். படம் வரும் போது பில்டப் கொடுத்து ஏமாற்றுவது , கோழைத்தனத்திலும் கீழ்மையானது.


5. பிறந்த நாளன்று, பத்திரிகையாளர்களிடம் தனியாக 'கோச்சடையான்' பற்றி பேச்சு... ரசிகர்களிடம் 'அரசியல்' பற்றி பேச்சு... ம்ம்ம், நடத்துங்க...



Wednesday, December 14, 2011

சென்னை உலகப்பட விழா - படங்கள் ஒரு பார்வை - பாகம் 1

சென்னையில் உள்ள நண்பர்களுக்கு இனி செம ஜாலி தான். ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஸ்டார்ட் ஆகிடுச்சு. டெயிலி வகை வகையா படங்கள் பார்க்கலாம்.. அவங்களுக்கான ஒரு கைடு.. 

காலை 11 மணி காட்சி  - சென்னை உட்லண்ட்ஸ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUb0XAyQL5CLPHkbcf0DXSPmLfsZFQuE1UWd9le83MCSq-nbjtWoirOIr8xHVfreoja4uNBqDpo1zf9w10QK-Cc08y6o_OYcE-AHcR-_euhdgVXpecyLwqOXeGgBDKqvMMN3d3Ib17LlAa/s1600/L-hero.jpg
1.PECHORIN -  இது ஒரு ரஷ்ய நாவலை தழுவியது . எ ஹீரோ  ஆஃப் அவர் டைம் - இதான் நாவல் பேரு.. நாவலோட ஓபனிங்க்லயே அபசகுனமா நான் இப்போ இறந்தாலும் இறந்து விடலாம்னு தொடங்குனாலும் ஹீரோ கடைசி வரை இறக்கவே இல்லை.. ஆனா படத்துல ஒரு சேஞ்ச்.. கதைப்படி ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால தன் சுய நலத்துக்காக தன் ஃபிரண்டையே கொலை செய்யறாரு.. படம் ரொம்ப ஸ்லோ.. 95 நிமிஷம் ஓடற படம்,இயக்குனர் : Roman Khrushch

http://www.jonathanrosenbaum.com/wp-content/uploads/2011/10/thekidwithabike.jpg
 2. THE KID WITH A BIKE - இது ஒரு ஃபிரான்ஸ் படம்.. குழந்தைங்களுக்கான படம். குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்! இன்று மாலை 5.30 மணிக்கு அதே உட்லன்ட்ஸ்.இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne

http://i.fanpix.net/images/orig/h/f/hfpcycakcl1e1la.jpg

3.  THE THREE WAY WEDDING - படத்தோட ஹீரோ நம்ம ஊரு எஸ் வீ சேகர் மாதிரி ஒரு டிராமா டைரக்டர்.. செம இண்ட்ரஸ்ட்டிங்கா நாடகம் எல்லாம் போடுவார்.. அவர் எழுதுன புது நாடகம் அதுல அவரோட முன்னாள் மனைவியும் , முன்னாள் மனைவியோட இந்நாள் லவ்வரும்  நடிக்கறாங்க.. அதுக்கான ரிகர்சலுக்கு ஒரு இடத்துக்கு போறாங்க.. அங்கே நடக்கற சம்பவங்கள் தான் படம்.. இதுவும் ஒரு ஃபிரான்ஸ் படமே..  100 நிமிடங்கள் ஓடும் படம்.. இயக்குனர்: Jacques Doillon உட்லண்ட்ஸ் சிம்பொனி யில் காலை 10.30 மணி காட்சி

http://vthumb.ak.fbcdn.net/hvthumb-ak-ash2/51269_233780826675350_233780230008743_51261_1910_b.jpg

4.   THE SON  ( OGUL) - இது ஒரு துருக்கி படம்.. 18 வயசு பையன் தன் முத லவ்வரை சந்திக்கறதுக்காக சொந்த ஊரை விட்டு கிளம்பறான்..வழில அவன் சந்திக்கும் அட்வென்ச்சர்தான் படம்.. அவன் தன் ஆளை சந்திக்கறதுக்கான பயணத்துல தன் அப்பாவை சந்திக்கறான்..படம் செம ஸ்லோ.. 97 நிமிடங்கள் ஓடுது.. இயக்குனர் : Atilla Cengiz இன்று மதியம் 12.45 மணீக்குஉட்லண்ட்ஸ் சிம்பொனி யில்

http://www.filmafrique.com/sites/default/files/images/news/durban.jpg

5. OTELO BURNING -  நெல்சன் மண்டேலா ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆன கால கட்டத்துல இளைஞர்களிடையே ஏற்பட்ட  எழுச்சி, உணர்வுகளை சொல்லும் படம்.. நம்ம ஊர்ல எப்படி எம் ஜி ஆர் , அண்ணா போன்ற தலைவர்கள் வாழ்ந்தப்ப அவருக்காக உயிரையும் கொடுக்கும் தொண்டர்கள் இருந்தார்களோ அந்த மாதிரி  தென் ஆப்பிரிக்காவின் பார்வையில் கதை போகுது ,  டைரக்டர் SARA BLECHER, இது இன்று மாலை 3 மணிக்கு உட்லண்ட்ஸ் சிம்பொனி யில்
 http://29.media.tumblr.com/tumblr_lpxr8sRabR1qcb58yo1_400.gif
6. THE WEEPING WILLOW - 38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம். இயக்குனர் : Masjid Majidi , இது ஈரானிய படம், ஃபிலிம் சேம்பர்ல காலை 10 மணீக்கு 

7. 7. 7.THE DISPENSABLES - வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.இயக்குனர் : Andreas Arnstedt, இன்று மதியம் 12,30 மணிக்கு, ஃபிலிம் சேம்பரில்

http://criterion-production.s3.amazonaws.com/stills/8505/shadowsinparadise_66.jpg

 8.SHADOWS IN PARADISE  -இந்த டைட்டில்ல 1986-ல் ஒரு படம் , 2010-ல் ஒரு படம் வந்திருந்தாலும் 2ம் வெவ்வேற ஸ்டோரி லைன், புது படம் ஆக்‌ஷன் மூவி.. பழைய படம் தான் இன்னைக்கு போடும் படம்.. ஹீரோயின் செம ஃபிகர்.. பார்ட்டி சூப்பர் மார்க்கெட்ல கிளர்க்.. ஹீரோ ஒரு துப்புரவுத்தொழிலாளி.. 2 பேருக்கும் செம லவ், ஆனா பாருங்க 2 பேரும் வெளீல சொல்லிக்கலை.. நம்ம ஊரு காதல் கோட்டை , முரளி படங்கள் டைப். போல இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது

http://ecx.images-amazon.com/images/I/514WD8ECPDL._SL500_AA300_.jpg

9. LENINGRAD COWBOYS GO AMERICA - பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!இயக்குனர் : Aki Kaurismäki

http://img.interia.pl/rozrywka/nimg/l/s/Kadr_filmu_Joanna_Joanny_4758573.jpg

10. JOANNA -போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்! இயக்குனர் Feliks Falk