Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Sunday, March 01, 2015

எனக்குள் ஒருவன் -லூசியா’ கன்னடத்தில் ஹிட் ஆன அளவு தமிழில் ஆகுமா?-தனுஷின் முன்னாள் சகலை பேட்டி

  • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
    ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
  • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
    ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
பாய்ஸ் படத்தில் விடலைப் பையனாக அறிமுகமாகி ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களுக்கு நகர்ந்திருப்பவர் சித்தார்த்.
தனக்கென்று தனிப் பாணி கொண்ட அவரைச் சந்தித்தபோது, “ கடந்த 12 வருடங்களில் 25 படங்கள்தான் நடித்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. அதற்காக நான் பண்ணிய படம்தான் ‘எனக்குள் ஒருவன்’.” தரமான சினிமா தர வேண்டும் என்ற தாகம் வெளிப்படப் பேச ஆரம்பித்தார் அவர்.
‘லூசியா’ கன்னடத்தில் ஹிட். அதன் மறு ஆக்கத்தில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால்தான் ஒப்புக்கொண்டீர்களா?
இப்படத்தை ‘லூசியா’ ரீமேக் என்ற ஒரு வார்த்தையில் அடக்க முடியாது. அடிப்படைக் கதைக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்படத்துக்காக இயக்குநர் பிரசாத் எழுதியிருக்கும் வசனங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். ‘லூசியா’ பார்த்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால், இந்த வேறுபாட்டை உணர்வார்கள். பார்க்காதவர்களுக்கு இரட்டை விருந்து.
முதல் முறையாக ஒரே படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ஒரேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டேன்.
முதலில் ஹீரோ கதாபாத்திரத்தை நடித்துவிட்டுப் பிறகு திரையரங்கப் பணியாள் கதாபாத்திரம் செய்தேன். அதற்காக முகத்தைக் கறுப்பாக்கினேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இருபது நாட்கள் திரையரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அது எனக்கே புதிய அனுபவம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.
மக்களோடு மக்களாக நின்று கொண்டிருப்பேன். ‘ஹீரோ யாருப்பா… எங்க இருக்காருன்னு’ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘இன்னும் வரலை. மேக்கப் போட்டுட்டு நானே இருக்காருப்பா…’ என்று பதிலளித்தேன். அதே போல தீபா சன்னிதி, நரேன் இருவருக்குமே என்னை முதல் முறையாகப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. இப்படி நிறைய நிஜ காமெடியை அனுபவித்தேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நேரத்தில் படம் வெளியாகிறதே?
எங்கள் படத்துக்கு முன்னர் ‘காக்கிச் சட்டை’ வெளியாகிறது. அவங்க எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார்களோ, அதே நம்பிக்கையில்தான் நாங்களும் வெளியிடுகிறோம்.
போன வருடம் இதே மார்ச் மாதத்தில், ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜெயிச்சுருக்கு, அந்த நம்பிக்கையில் நம்ம படத்தை வெளியிடலாம் என்று சொல்லி அடுத்த வருடம் நிறைய படங்களை வெளியிடுவார்கள். அந்தப் பெயர் எங்களுக்குக் கிடைக்கும்.
இந்தி, தெலுங்கில் படம் பண்ணுவதை ஏன் குறைத்துக்கொண்டீர்கள்?
இதுவரை மூன்று படங்கள் இந்தியில் பண்ணியிருக்கேன். அதில் இரண்டு வெற்றிப் படங்கள். தெலுங்குப் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பவும் இந்தி, தெலுங்கிலிருந்து நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் தமிழில் நல்ல தரமான படங்களைப் பண்ணிவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
எனக்கு இந்த சாக்லேட் பாய், அழகான பையன் என்ற இமேஜ் எல்லாம் போக வேண்டும். சொல்லப் போனால் என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும்போது கோபம்தான் வருகிறது. அப்படிக் கூப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இனிமேல் எந்த மாதிரியான கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.
வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வணிகப் படங்கள் பண்ண மாட்டீர்களா?
எம்.பி.ஏ. படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள் சேர்ந்தேன்.
எங்கப்பா ‘எதுக்குப்பா இது’ன்னுகூடக் கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
போதுமான அளவுக்குச் சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், வெளிநாட்டில் போய் டூயட் ஆடி, பூ கொடுத்துக்கொண்டுதான் இருக்கணும். எனக்கு அதுவும் பிடிக்கல… வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?
அதற்காக வணிகப் படங்களுக்கு நான் எதிரியல்ல. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘சிங்கம்’ மாதிரியான கதை எனக்கு வரவில்லை. சூர்யாவுக்கு வந்தது; நடித்தார். எனக்கு எது சரியா வரும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ அதில் நடிக்கிறேன். நல்ல வணிகப் படத்துக்கான கதை வரும்போது அதில் கண்டிப்பாக நடிப்பேன்.
‘காவியத் தலைவன்’ படத்துக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையே…
வசூல் ரீதியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் ‘காவியத் தலைவன்’ படம் தப்பான படம் கிடையாது. நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் எனக்கு அமைந்த படம். வசந்தபாலன் மாதிரியான இயக்குநர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாட வேண்டும்.
இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பாருங்கள் அப்படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இப்போதுகூட நாம் கமல் சார் நடித்த ஓடாத படங்களைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பில் வெற்றியடைந்த படங்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? இல்லையே!
மறுபடியும் உங்களைப் பற்றிய காதல், பிரிவு செய்திகள் வலம் வருகின்றனவே?
(சிரித்துக் கொண்டே…) எதுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டு…? இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கட்டும்; என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறேன்.


thanx = the hindu



Wednesday, February 25, 2015

காக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதையா? - ராட்டினம் இயக்குநர் பேட்டி

  • ஸ்ரீமுகி
    ஸ்ரீமுகி
  • ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
    ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
‘‘அந்த ஹீரோவிடம் கதை சொல்லுங்கள். ஓகே என்றால் படப்பிடிப்புக்கு கிளம்புங்கள்.. இப்படிச் சொல்லும் தயாரிப்பாளர்கள்தான் இன்றைக்கு நிறைய தென்படுகிறார்கள். பெரும்பாலான தமிழ் சினிமா, நடிகர்களை நம்பியே இருக்கிறது.
தயாரிப்பாளர்களும் நல்ல கதையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ‘ஆர்டிஸ்ட் வேல்யூ’ மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து 2014-ல் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தந்ததா? இல்லையே..’’
- தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் பற்றி சற்று கோபத்துடன் பேசுகிறார் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.
‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.
நாயகன் சத்யா, படத்தின் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?
எங்கள் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. அவர் படத்தின் நாயகன். படத்தை விளம்பரப்படுத்துவதும், பண்ணாததும் அவர் விருப்பம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் உரிமை கொண்டாட எல்லோருக்கும் பங்கு உண்டு.
அதுவே தோல்வி அடைந்தால் இயக்குநர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை நம்பி படம் எடுக்கிறோம். இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
முழுக்க கமர்ஷியல் பின்னணியில் புதிய பட வேலைகளைத் தொடங்கிவிட்டீர்களாமே?
கமர்ஷியல், யதார்த்தம், பிரம்மாண்டம் இதை எல்லாம் கடந்து நல்ல சினிமா என்பதுதான் சரியான வெற்றி. கடந்த ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களின் வெற்றிதான் பெரிய வெற்றி.
அந்த வகையில் கலகலப்பாக ஒரு கதையை எழுதி வருகிறேன். கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பணிகளை எல்லாம் ‘எட்டுத்திக்கும் மதயானை’ ரிலீஸுக்கு பிறகு தொடங்கவேண்டும்.
‘ராட்டினம்’ படத்தில் காதலை வித்தியாசமாக காட்டியிருந்தீர்கள். இந்த படம் எதை நோக்கி பயணிக்கிறது?
‘ராட்டினம்’ திரைப்படம் திருட்டு டிவிடி வழியேதான் அதிக மக்களை போய்ச் சேர்ந்தது. திரையரங்குகளில் இருந்து எடுத்த பிறகு கிடைத்த பாராட்டுகள்தான் அதிகம். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை காவல்துறை பின்னணியில் படமாக்கியிருக்கிறோம்.
அதே நாளில் ரிலீஸாகும் ‘காக்கிச்சட்டை’ படமும் போலீஸ் கதைதானே.
‘காக்கிச்சட்டை’ படத்தில் பரவலாக முகம் அறிமுகமான ஹீரோ என்பதால் கமர்ஷியல், மாஸ் ஆகிய விஷயங்களில் பெரிதாக கவனம் செலுத்தியிருப்பார்கள். ‘எட்டுத்திக்கும் மதயானை’யில் யதார்த்தம் மட்டும்தான் பிரம்மாண்டம்.
சாமானிய மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் அலசியிருப்போம். தகுதிவாய்ந்த ஒரு பொறுப்பில் இருக்கும் அதிகாரி அந்த பணியின் முக்கியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறுவதால் நிகழ்கிற சமூக அவலங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இது வித்தியாசமான போலீஸ் பின்னணியாக இருக்கும்.
முதல் படத்தில் இயக்குநர். அடுத்த படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல பொறுப்புகளை சுமப்பது ஏன்?
இன்றைக்கு சினிமாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நேரடி கிளைத் தொழில்களில் தயாரிப்பாளர் பணம் போடுகிறார். ஆனால், போட்ட பணத்தை நேரடியாக, எளிதாக எடுத்துவிட முடிகிறதா? அதில் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள். இயக்குநராக இருந்த நான், தயாரிப்பாளர் ஆனபிறகு இப்படி பல அனுபவம் கிடைத்திருக்கிறது.
‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.



நன்றி  - த இந்து 

Monday, February 23, 2015

யோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன காரணம் என்ன? - கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

  • புதிய படத்தின் படப்பிடிப்பில் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன்.
    புதிய படத்தின் படப்பிடிப்பில் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன்.
  • என்னை அறிந்தால்’ அஜீத், த்ரிஷா
    என்னை அறிந்தால்’ அஜீத், த்ரிஷா
“என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் விளக்கமளித்து 7 வருடங்கள் ஆகிறது. நான் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருப்பதால்தான் என்னால் அடுத்தடுத்த படங்களில் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது” என்று ஆவி பறக்கும் தேநீர் கோப்பையை கையில் பிடித்தபடி சிரிக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கும் அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
தொடர்ச்சியாக போலீஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே. இதற்கான காரணம் என்ன?
நான் இயக்கிய ‘மின்னலே’, ‘விண் ணைத் தாண்டி வருவாயா’, ‘பச்சைக்கிளி முத்துச் சரம்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களெல்லாம் போலீஸ் படங்கள் இல்லையே. ஆக்‌ஷன் பாணியில் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் போது, போலீஸைச் சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்து பண்ணுகிறேன்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் குற்றங்கள் என்பது இருக்காது. ஆனால், போலீஸ் அதிகாரி களின் வாழ்க்கையில் குற்றங்கள், ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆக்‌ஷன் படங்களைப் பண்ணும் போது போலீஸ் படங்களைப் பண்ணுகிறேன்.
அன்புச்செல்வன், ராகவன், சத்யதேவ். இதில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?
என்னைப் பொறுத்தவரை மூன்றுமே ஒரு கதாபாத்திரம்தான். 28 வயதில் இருக்கிற அன்புச்செல்வன்தான், 38 வயதில் சத்யதேவ். என் மூன்று போலீஸ் அதிகாரி பாத்திரங்களையும் எடுத்துப் பார்த்தால், நிறைய விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கும்.
‘காக்க காக்க’ படம் முடிந்தவுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தொடக்கத்தை வைத்தால், இது அங்கிருந்து தொடங்கிய படம் மாதிரிதான் இருக்கும்.
‘காக்க காக்க’ படத்தில் சின்ன வயது சூர்யாவை நான் காட்டவில்லை. ‘என்னை அறிந்தால்’ படத்தில் காட்டியது அவரு டைய சின்ன வயது வாழ்க்கையாக இருந்திருக்கலாம். மாயா இறந்தவுடன் விவாகரத்தான ஒரு பெண்ணை சந்தித்து இருக்கலாம். என் மூன்று போலீஸ் அதிகாரிகள் பாத்திரத்தில் எனக்குப் பிடித்தது சத்யதேவ் தான்.
‘என்னை அறிந்தால்’ இரண்டாம் பாகம் குறித்து நிறைய செய்திகள் வந்துகொண்டு இருக்கிறதே?
‘என்னை அறிந்தால்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக் கிறது. இதில் சத்யதேவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதை வைத்து இரண்டாவது பாகத்தின் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதை சண்டைப் படமாகவும் எடுக்கலாம்.
உணர்ச்சிபூர்வமான கதை யாகவும் இருக்கலாம். இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எழுதிவிட்டு அதை அஜீத் சாரிடம் கொடுப்பேன். கண்டிப்பாக அவர் அந்தப் படத்தை பண்ணுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
‘துருவநட்சத்திரம்’, ‘யோஹன்’, ‘சென் னையில் ஒரு மழைக்காலம்’ படங்களின் நிலைமை என்ன?
எனக்கே தெரியாது. ‘யோஹன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த 2 நாட் களுக்கு முன்பு ரத்தானது. ‘சென்னை யில் ஒரு மழைக்காலம்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி 25 நாட்கள் நடத்தினோம்.
அப்படத்தைப் பொறுத்தவரை அதில் நடித்தவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என்று நினைத்தேன். எங்கேயோ தப்பு நடக்கிறது என்று தோன்றியதால் அதை நிறுத்தினேன். மூன்று படங்களையும் கண்டிப்பாக என்றைக்காவது ஒரு நாள் தொடங்குவேன். அதில் சந்தேகமில்லை.
சூர்யா, விஜய் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் ‘துருவ நட்சத்திரம்’ ‘யோஹன்’ படங்களை நிறுத்தியதற்கு காரணமா?
என்னைப் பொறுத்தவரை அவர் களுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு நடிகர், கதையை நம்பி படம் பண்ணும் போது அப்படத்தின் கதை அவர்களுக்கு முழுமையாக பிடிக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் கதை விஷயத்தில் கொஞ்சம் உடன்பாடு இல்லை.
‘இந்தக் கதை வேண்டாம் கெளதம். வேற ஒண்ணு பண்ணலாம்’ என்று சொன்னார்கள். எந்த காரணத்துக்காக இதைப்பற்றி சூர்யா வெளியே சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை. அது அவர்களுடைய கருத்து. அதில் நான் எந்தத் தப்பும் சொல்லமாட்டேன்.
கெளதம் மேனன் படங்கள் என்றாலே ஏ சென்டரில் மட்டும்தான் நன்றாக ஓடும் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?
நான் படம் பண்ணும் போது ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என்றெல்லாம் நினைத்து படம் பண்ணுவதில்லை. எனக்கு என்ன தெரியுமோ அதைப் பண்ணுகிறேன். நாயகர்கள் கேட்கும் போது அவர்களோடு இணைந்து பண்ணு கிறேன். என்னுடைய வண்டி ஓடிக் கொண்டே இருக்கிறது.
படம் வெளியான பிறகு எந்த சென்டர்களில் படம் சரியாக போகவில்லை என்று நான் கேட்க மாட்டேன். ஏ சென்டரில் மட்டும்தான் என் படம் ஓடுகிறது என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் என்னுடைய சுபாவம்.
‘வாரணம் ஆயிரம்’, ‘என்னை அறிந் தால்’ உள்ளிட்ட உங்களுடைய படங்கள் மிகவும் நீளமாக இருக்கிறதே. இப்போது கூட 'என்னை அறிந்தால்' படத்தில் சில காட்சிகளைக் குறைத்திருக்கிறீர்கள்?
எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் தயாரிப்பாளராக இருந்தால் கண்டிப்பாக காட்சிகளைக் குறைத் திருக்க மாட்டேன். தயாரிப்பாளர், ‘எனக்கு கொஞ்சம் பயமாக இருக் கிறது, எந்தவொரு இடத்திலும் மெது வாக நகர்கிறது என்று ரசிகர்கள் சொல்லிவிடக் கூடாது’ என்றார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் தயாரிப் பாளர் சில காட்சிகளைத் தூக்கினார்.
ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. முதல் 3 நாட்கள் முடிந்தவுடன், வேறு ஒரு தரப்பு மக்கள் இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டமாக படம் பார்க்காமல் அமைதியாக பார்ப்பார்கள். அவர் களுக்கு இது பிடிக்கும்.
போலீஸ், காதல் இந்த இரண்டையும் தாண்டி வேறு கதைக்களத்தில் எப்போது படம் பண்ணுவீர்கள்?
எனக்கு போலீஸ், காதல் இரண்டை யும் தவிர வேறு தெரியாது. அதுதான் உண்மை. எனக்கு தெரிந்ததைத்தானே சினிமாவாக பண்ண முடியும். ஆக்‌ஷன் என்று இறங்கினால் அது போலீஸ் படமாக இருக்க வேண்டும் என்று நினைக் கிறேன். காதல் என்று இறங்கினால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக் கிறேன்.
இந்த இரண்டுக்குமே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்களுக்காக படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கு அந்த ரசிகர் கூட்டம் குறைகிறதோ அன்றைக்கு வேறு படங்களைப் பண்ணுவேன்.
தற்போது படங்களின் சென்சாரில் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?
சென்சாரை பொறுத்தவரை அவர்கள் செய்வது சரி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் பார்க்கலாம், ஆனால் அவர்களுடன் பெற்றோர்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோன்றியது.
அதைத்தான் சென்சாரிலும் சொல்லி யிருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத் ததில் எனக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்துமே இல்லை.
வரிச்சலுகை விஷயங்கள்தான் இன்னும் கொஞ்சம் மாற வேண்டும் என்று தோன்றுகிறது. யு/ஏ என்றால் ஒரு வரி, யு என்றால் ஒரு வரி என்ற நடைமுறை இங்கு மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் கிடையாது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் யு சான்றிதழ் பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


நன்றி - த  இந்து

Sunday, February 01, 2015

அமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து சரண் -அஜித் காம்போ படம்

ஆயிரத்தில் இருவர்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்த இயக்குநர் சரணை சந்தித்தோம்.
“இந்தப் படத்தில் முதல் 10 நிமிடத்தில் கதையை சொல்லிவிடுவேன். அதற்கு பிறகு எல்லாமே சம்பவங்கள்தான். முதல் 10 நிமிட கதையை அடிப்படையாக வைத்து நிகழும் நிகழ்வுகள்தான் மொத்த படமுமே” என்று ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தைப் பற்றிய விளக்கத்துடன் பேச ஆரம்பித்தார் சரண்.
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படத்தைத்தான் ‘ஆயிரத்தில் இருவர்’ படமாக மாற்றி இருக்கிறீர்களா?
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படமும் ‘ஆயிரத்தில் இருவர்’ படமும் வெவ்வேறு கதை. அந்தப் படம் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அந்தப் படத்துக்காக நான் பேசி வைத்த நடிகர், நடிகைகள் அனைவருமே ‘ஆயிரத்தில் இருவர்’ கதைக்கு பொருத்தமாக இருந்தார் கள். ஆகையால் அவர்களை வைத்தே இதைப் படமாக்கி விட்டேன். மற்றபடி இரண்டு படங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
நீங்களும் அஜீத்தும் இணைந்து பல படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அவருடன் இணையும் திட்டம் இருக்கிறதா?

அஜீத் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ‘அசல்’ படத்துக்கு பிறகு இன்னொரு படத்தை இணைந்து செய்யலாம் என்று நானும், அவரும் பேசினோம். இதுபற்றி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி யிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அப்படத்தை செய்ய முடியவில்லை. மீண்டும் இணைந்து படம் பண்ணுவதற்கான சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக பண்ணுவோம்.
எனக்கும் அவருக்குமான நட்பு எப்படி என்றால், நாங்கள் எப்போதுமே திடீரென்றுதான் இணைந்து படம் செய்ய முடிவெடுப்போம். அவர் கூப்பிட்டு பேசிய அடுத்த நாள் முதல் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ‘அட்டகாசம்’, ‘அசல்’ எல்லாமே அப்படித்தான் நடந்தது. அந்த மாதிரியான வாய்ப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம்.
‘காதல் மன்னன்’ படத்தில் அஜீத்தை சாக்லெட் பாயாக காட்டினீர்கள். ஆனால், தற்போது அவர் கமர்ஷியல் படங்களில் சிக்கிக் கொண்டாரே?
நான் ‘காதல் மன்னன்’ படம் பண்ணியதே ஒரு கமர்ஷியல் பார்வையில்தான். மறைந்த இயக்குநர் பாலசந்தர் அப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு, “இந்த கதையை மூன்று விதமாக எடுக்கலாம். அந்த மூன்று விதங்களில் நீ கமர்ஷியலாக பண்ணி யிருக்கிறாய். நல்லாயிருக்கு” என்று பாராட்டினார்.
தற்போது ஒரு குறும்படம் இயக்கி வெற்றி பெற்றாலே சினிமா இயக்குநர் ஆகிவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே? 


இது வரவேற்கத்தக்கதுதான். நல்ல படம் எடுக்கும் எல்லாருக்குமே இங்கு வாய்ப்பு இருக்கிறது. புதிதாக வருபவர்கள் இயக்குநர் களிடம் இருந்து கற்றுக்கொண்டும் வரலாம், கல்லூரியில் படித்து விட்டும் வரலாம். யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் இயக்குநர் மணிரத்னம் தனிமுத்திரை பதித்து இருக்கிறாரே.
அதேபோல குறும் படம் எடுத்து சினிமா உலகுக்குள் நுழைபவர்களாலும் தனி முத்திரை பதிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது, வரவேற்கும் விதமாகத்தான் பேச வேண்டும் என்று சொன்னால் அது தவறு.
குறும்படம் எடுத்து சினிமாவுக்கு வருபவர்களில் 5 சதவீதம்பேர் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் வருகிறார்கள். மீதமுள்ள 95 சதவீதம் பேர் இயக்குநர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பாக மட்டுமே குறும்படங்களை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்.
இப்படி நிறையப் பேர் வருவதால் ‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். அவர்களுக்கான களம் இது அல்ல என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். 

 thanx - the hindu

 



  • Namale kathaya thirudidan padam எடுக்குறோம் maththavangala குறை சொல்றோம் போலினு.
    about 17 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) ·
       
  • sundar  
    ....‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். .... என்றும் ......பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்......என்றும் சொல்லியுள்ளார். எடுத்த படம் ஒழுங்கா போகலை என்றால் அவஸ்தை படும் தயாரிப்பாளர்கள் தவிர நடிகர், நடிகையரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு என்னபாடு படப்போகிறார்களோ??? போலீஸ், உண்மைவிளம்பி டி.வீ நிகழ்ச்சிகளுக்கு கொண்டாட்டம்தான்.
    Points
    1165
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "போலி இயக்குநர்கள் பெருகிவிட்டார்கள்" இப்படியெல்லாம் யோசிப்பதை விட்டு விட்டு, புதுசா மக்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல படங்களை கோடாங்க. ஜெர்மன் கவிஞன் Goethe சொல்ற மாதிரி, "All truly wise thoughts have been thought already thousands of times; but to make them truly ours, we must think them over again honestly, till they take firm root in our personal experience." இத முதலில் follow பண்ணுங்க சரண் சார், நீங்க உண்மையான படத்தை எடுக்கலாம். உண்மையிலேயே அனைத்து படைப்பாளிகளும் போலியானவர்களே. அவனவனுக்கு தான் தெரியும் தாம் எங்கிருந்து திருடுகிறோம் என்று...
    Points
    1815
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • skv  
    செத்தவீட்டுலேதான் தலைய விரிச்சுன்னு ஆடுவாக அன்று .இன்று சினிமாலே எல்லாமே அப்படிதான் இருக்கு உடைக்கோ பஞ்சமொபஞ்சம் திருமானமான பெண்கள் எவாலுமே தாலியே போடறது இல்லே சிநிமாகாரிகளைபார்த்து குடும்பபெங்களும் அப்படியே பின்பர்ருகிரார்களே அதுதான் கொடுமை