Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, May 28, 2013

மதன் கார்க்கி - கலைஞர் தூது போன காதல்! -வி.ஐ.பி.களின் காதல் அரங்கேற்றம்

வி..பி.களின் காதல் அரங்கேற்றம்
கொஞ்சு புறாவே

கலைஞர் தூது போன காதல்!

கதிர்பாரதி
மதன் கார்க்கி

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதலென்றால் அண்ணா பல்கலைக் கழகத்தில் என்னையும் நந்தினியையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சீனியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் இருந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்ப்யூட்டர் சொஸைட்டிதான். அது மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் மட்டுமல்லாத மற்ற திறமைகளுக்கும் நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல் ஜிப்ரானின் படப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதலாக அப்போது இல்லை. வெறும் நட்பாகத்தான் இருந்தேன்.
அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில்; சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நான். நந்தினி சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் சிரித்தாள். இந்த அனுபவத்தைத்தான்காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின்அழைப்பாயா...’ பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நானென்ன பேசவேண்டுமென்று சொல்லிப் பார்த்தேன் / நீ என்ன கூற வேண்டுமென்றும் சொல்லிப் பார்த்தேன் / நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் / நீ எங்கு புன்னகைக்க வேண்டுமென்றுகூட சேர்த்தேன்
ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான்தான் சாட்டில் என் காதலைச் சொன்னேன். நான் மத்தியதர வகுப்பு. உங்களோடது பெரிய குடும்பம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். ஐந்து வருடங்கள் என் தேடல்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருந்திருக்கிறாள்.
ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்து விட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ‘என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை, அவன் வானம், அவன் சிறகு. திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோஎன்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தார். அப்போதுகூட என் மனத்தில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? "
அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க" என்று சொல்லிவிட்டேன். பின்பு யதேச்சையாக ஆர்குட்டில் நந்தினியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க"- நான்தான் ஆரம்பித்தேன்.
நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்" - என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆயிடுச்சா?"

கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணணும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கே!" என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம், வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன். " - சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் கனமானவை.
சரின்னுதான் தோணுது. நீங்களும் நானும் சேர்ந்து வாழறது அர்த்தமுள்ளதா இருக்கும். நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களை இந்தியாவுல வந்து பாக்கறேன்" என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிது. அவள் என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 10 அன்று.
இப்போது அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றிச் சொன்னதும் அவருக்குக் கோபம். ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நண்பர்களிடம் சொல்லி பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?" என்ற அப்பாவின் வாதத்தில் மகனின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது.
அப்பா, என் விருப்பம் நந்தினி. உங்கள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனை பேசவைத்தேன். அப்பா அசைந்து கொடுக்கவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக் கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன். அப்போது அவர் தமிழகத்தின் முதல்வர். என் காதலைக் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படாதே என் குடும்பத்தில் நிறைய காதல் கல்யாணம்தான். உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன்" என்று என் காதலுக்குக் கைகொடுத்தார்.
மறுநாள் காலையில், நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை அவர் என் அப்பாவின் காதுக்குள் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் அப்பாவின் கோப அலை.
கலைஞரிடம் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம்..." என்று பொரிந்து தள்ளிவிட்டு, சரி நந்தினியை வரச் சொல்," என்றதும், எனக்கு சந்தோஷம். நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணி நேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேச வந்தவள், அப்பாவின்கள்ளிக் காட்டு இதிகாசம்நாவலையும்ரிதம்படத்தின் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்" என்று கட்டளை போட்டுவிட்டு கவிதை எழுத போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத போன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைக்கழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
நந்தினியோடுதான் என் திருமணம் என்ற என் பிடிவாத நியாயத்தை அப்பா புரிந்து கொண்டார். கலைஞர் தலைமையில் என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. எங்கள் காதலின் உயிர்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்து விட்டான். பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை , காதலை அதிகப்படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம், அவளை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. என் பாடல்களை நந்தினி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகி இருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்கு காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்துக்கும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்க வைத்திருக்கிறது காலம். கடல் படத்தில் நான் எழுதிய கீழ்க்கண்ட பாடலைப் போல
மனச தொறந்தாயே... நீ /எங்கிருந்து வந்தாயோ நீ?/ அடியே... அடியே / என்ன எங்க நீ கூட்டிப் போற?

நன்றி - கல்கி 

Sunday, March 31, 2013

கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1