Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Thursday, December 27, 2012

டெல்லி கூட்டத்தில் ஜெ அவமதிக்கப்பட்டாரா? மக்கள் கருத்து




தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டெல்லி கூட்டத்தில் ஜெ. குற்றச்சாட்டு 

புதுடெல்லி: தமிழகத்தின் சிறிய கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமயில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கபட்டது. இதனால் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தார்.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதற்கு தயாரிக்கப்பட்ட உரை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் சுருக்கம் வருமாறு: 


கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் ஏராளமான முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12 ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்த மதிப்புமிக்க நல்ல பயனுள்ள திட்டங்களை நான் எடுத்துரைத்தேன். அதன் அடிப்டையில் இத்திட்டம் 14 மாதங்களுக்கு பிறகு இறுதி வடிவம் பெற்றுள்ளது.

கடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த குறைந்த பட்ச கருத்துக்களாவது இதில் இடம் பெற்றிருக்கும் என நான் நம்புகிறேன். திருத்தப்படாத திட்ட நகலை படித்த போது, அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது ஜனநாயக விரோத அணுகுமுறைகள் இருப்பது தெரிய வருகிறது.

வறுமையை குறைக்க வேண்டும் என்ற கருத்தில் மத்திய அரசு மாறுபட்டு இருப்பதாக கருதுகிறோம். ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல தடவை மாநில தேவைகள் குறித்து நினைவூட்டினாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டை மட்டும் குறிப்பாக மத்திய அரசு கடுமையாக வஞ்சிக்கிறது. எந்த ஒரு சட்ட பூர்வமான கோரிக்கையும் தொடக்கத்திலேயே மறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அது குறித்து மறு படியும் கோரிக்கை விடுத்தாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

முதலீடுகளை ஊக்கு விக்க தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், மெட்ரோ-ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு துறை நிலங்கள் வழங்குவதில் தாமதப்படுத்துகிறது.அதனால் திட்ட மதிப்பீடும் அதிகரிக்கிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாட்டுக்குரிய உரிமையை பெற்று தருவதில் முழு திறமையற்று மத்திய அரசு விளங்குகிறது.

கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் மிக சிறிய கோரிக்கையான சென்னை நகருக்கு கேபிள் டிஜிட்டல் மயமாகும் திட்டத்துக்கு கூட உரிமம் வழங்குவதற்கு மறுக்கிறது. அது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரிக்கும் இது குறித்து பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறது. இதற்கு டிஜிட்டல் உரிமை வழங்குவதில் தாமதம் செய்வதன் மூலம் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஈடுபட்டுள்ள ஒரு கட்சியின் குடும்ப டி.வி. நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேர வழிவகுக்கும். கடந்த முறை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் வளர்ச்சி விகிதம் 2 இலக்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை வலியுறுத் தியிருந்தேன்.

ஆனால் வரைவு திட்டத்தை படித்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன். அதில் 9 சதவீதமாக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான தமிழ்நாட்டில் வளர்ச்சி விகிதம் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2 இலக்கு வளர்ச்சி விகிதமாக இருக்கும்.

நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அரசின் செயல்பாடு இன்மையால் வளர்ச்சி விகிதம் குறைந்து இருந்தது.தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.

பயிருக்கு நீர் இன்றியமையாதது. மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பெண்ணையாறு, அட்டப்பாடி அணை உள்ளிட்ட நீர் பகீர்மானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆனால் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆதரவும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வில்லை. 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திலும், இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்த முக்கியத்துவமும் தரப்பட வில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். தண்ணீர் விலை மதிப்பற்றது என்றாலும் அதை எப்போதும் வணிக ரீதியாக பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கப்பல் படையினரால்  தாக்கப்பட்டு பலியாகும் நிலை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பேச நேரம் ஒதுக்காததால் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு ! 

Posted Date : 11:39 (27/12/2012)Last updated : 12:38 (27/12/2012)
புதுடெல்லி: பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் . 


இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார்.

தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். 

மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும் அவர் மத்திய அரசுக்கு அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்




 மக்கள் கருத்து




ஒரு கூட்டம் இங்கே வந்து ஜெயா ஒரு அகம்பாவம் பிடித்தவர், கோவத்தின் வெளிப்பாடு தான் இது என்று கூவ ஆரம்பிக்கும். அவர்களுக்கும் நமது தானைய தலைவர் கருணாவுக்கும் ஒரு கேள்வி
கடந்த 13 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக அங்கம், மத்திய அரசை தாங்கிப் பிடிப்பதே திமுகதான். இதனை தவிர மத்திய அரசில் முக்கிய அமைச்சர்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த பயன் என்ன?
1. முல்லை பெரியாறு சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் அதன் பலன் கேரளாவுக்குத் தான்
2. கேரளாவில் மீனவன் சுடப் பட்டால் உடனே தண்டனை, இங்கே பல முறை நடந்தும் கடிதத்துக்கு பதில் கூட எழுதாத மத்திய அரசு.
3. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அது அரசு இதழில் வரவில்லை. கருணா இதற்காக செய்த நடவடிக்கை என்ன? திமுக ஆதரவு இல்லை என்றால் மத்திய அரசே இல்லை என்கிற நிலையில் இருந்து இன்று குடியரசு தலைவரே வீட்டுக்கு வந்து சந்திக்கும் அளவுக்கு மத்திய அரசை தாங்கி பிடித்ததன் பலன் தான் என்ன?
4. காவிரி நீருக்காக மத்திய அரசு கைவிட்ட பின்னர், நீதிமன்றத்தை நாடி வெற்றித் தீர்ப்பும் வாங்கி அதனை செயல் படுத்த கர்நாடக மறுத்த நிலையில் நாடு நிலையாக செயல் படவேண்டிய மத்திய அரசு வேடிக்கை ஒரு துரும்பு கூட அசைக்காதது ஏன்? மத்திய அரசை திமுக இதற்காக கண்டிக்காதது ஏன்?
5. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை (இனிமேலும் கட்டமைப்பு அமைக்கப் படாது) என்று சொல்லும் மத்திய அரசு தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்துக்கே தர மறுப்பது என்? மின்சாரம் வெளியே செல்ல மட்டும் கட்டமைப்பு உள்ளதா? உள்ளே வர மட்டும் மின்சாரம் மறுக்குமா?
6. எத்தனை முறை தமிழக பிரச்சனைகளுக்காக திமுக தலைவர் சோனியாவை சந்தித்திருக்கிறார்? தினம் ஒரு அறிக்கை விட்டு அதிமுக அரசை குறை சொல்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் மக்கள் பிரட்சைகளுக்காக?

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு கூட செவி மடுக்காத மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் மிக அதிகம். இதில் உச்ச கட்டம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றமே சொல்லியும், உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதத்தில் வெளியிடப் படும் என்று மத்திய அரசே வாக்குறுதி கொடுத்தும் இன்னும் நிறைவேற்ற தயங்குவது. இப்போது கர்நாடக இதனை வெளியிட மறுப்பு தெருவிப்பதும், மத்திய அரசே நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற செய்யும் சதி.

காங்கிரஸ் கட்சியின் எதிரியான பாஜக ஆளும் கர்நாடக மத்திய அரசால் பெற்ற நம்னைகளை விட திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் அதிகம். இதில் முக்கிய பங்கு கருணாவுக்கு தான். மறந்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பது இட்ட கட்டளை. நாளொன்றும் அதிமுக அரசை குறை சொல்லியே அறிக்கை விடும் கருணா மத்திய அரசின் துரோகம் மட்டும் கண்ணுக்கு தெரியாது. சோனியாவின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மட்டுமே தெரியும். இதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல நன்மை கிடைக்கும்.

வழக்கம் போல உள்ளூர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதில் சொல்லும் தமிழக மக்கள் பிரச்சனைகளின் மூலத்தை அறியாமல் மீண்டும் இந்த கூட்டத்தை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!!



2. இதுல அவமதிப்பு என்ன இருக்கு. ஒருவருக்கு எவ்வளவு நேரம் பேச அனுமதி என்பது ஏற்கன்வே முடிவு செய்த ஒன்றாகத்தானே இருக்கும்.
மற்ற முதல்வர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினார்கள். அதே 10 நிமிடம் தானே. பின்ன இதில் அவமதிப்பு எங்கிருந்து வந்ததோ?

ஏற்கனவே நான்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அதற்கு மத்திய அரசும், மு,க.வும் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்தவராயிற்றே, இவர் சொல்வதை நம்பலாமா?



3. அது ஒண்ணும் தமிழக சட்டசபையல்ல. நீங்கள் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி 45 சாய் கோணத்தில் நிற்க. மாநிலத்தின் தேவையறிந்து பேசி இருக்க வேண்டும் 10 நிமிடத்தில். மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்தானே உங்களுக்கும். அல்லது அனைவரையும் 1 மணி நேரம் பேசவிட்டு உங்களுக்கு மட்டும் 10 நிமிடம் கொடுத்து மணியடித்தார்களா?. நமது அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசை அண்டித்தான் பிழைக்க வேண்டும்.கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடி கறக்க வேண்டிய மாட்டை பாடி கறக்க வேண்டும்". நமக்கு தேவை பால். அதை பெற எதை செய்தால் என்ன? முறுக்கிட்டு திரிந்தால் 16 மணிநேர மின்வெட்டு 24 மணிநேரமாகிவிடும்.




4.
அழுதால் தான் பால்! உதாசீனம் செய்தால் பாழ் தான்!

தேசிய வளர்சிக்குழு கூட்டட்தில் நம் முதல்வர் அம்மா அவர்கள் கோவிச்சுகிட்டு வெளியேறினார். அங்க கிட்ட தட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட முதல்வர்கள் இருக்கும் நிலையில் பத்து நிமிடம் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும். இது நடைமுறை. பொதுவாக இது போன்ற கூட்டங்களுக்கு கலைஞர் போகும் போது தமிழக தேவைகளை ஒரு மணி நேர பேச்சாக தலைமைசெயலரை விட்டு ஒரு ட்ராப்ட் தயார் செய்து கொண்டு போவதும், பத்து நிமிடத்தில் அழகாய் தலைப்பு செய்திகளாக சொல்லி "இதன் மீதி விபரங்கள் இந்த பெட்டிஷனில் இருக்கு" என கூட்டத்தில் சமர்ப்பிப்பதும், அப்படி சமர்பிக்கும் போது அது "ரெக்கார்டட் டாகுமெண்டாக" ஆவதும் இயல்பு. இது ஒரு அப்பட்டமான புத்திசாலித்தனம்.

இந்த விபரங்கள் கூட தெரியாத அம்மையார் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு தமிழக தேவைகளை சொல்லாமல் அல்லது ரெக்கார்ட் செய்யாமல் வந்தமை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்! "அம்மா கோவக்காரங்க" என சொன்னா நமக்கு பெருமை இல்லை. அங்க வந்த பல முதல்வர்களும் "ஹய்யே, சரியான லூசா இருக்கே இந்தம்மா"ன்னு சக முதல்வர்களிடம் முனுமுனுத்து இருப்பர். இது ஒட்டுமொத்த தமிழர்களின் அவமானம்! இதைக்கூட "அம்மாவின் அதிரடி" என தினமலத்தில் நாளை போடுவானுங்க! "ஆமாம் ஆமாம்"னு இணைய போராளிகள் குதிப்பாங்க! பேசாம 21.12.2012ல உலகம் அழிஞ்சு தொலைச்சி இருக்கலாம்!



5. இது என்ன கூட்டம் என்று கூட தெரியாமல் பலர் கருத்து சொல்கிறார்கள். 10 நிமிட நேரம் என்கிற நடைமுறை இன்றைய கூட்டத்தில் மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டது. இதற்க்கு முன்னர் இதே கூட்டத்துக்கு முதல்வர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரம் 30 நிமிடங்கள். 5 ஆண்டுகளுக்காக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட கூட்டத்துக்கு 30 நிமிடம் கூட பேசாம என்ன திட்டம் போடப் போறாங்க? ஓர் ஆண்டுக்கு போடப் படும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாள் கணக்கில் நடைபெறும் பொது 5 ஆண்டு திட்டடக் கூட்டம் 10 நிமிடம் போதும்? 5 வருட செயல் திட்டம் பற்றி ஒரு மாநில முதல்வர் சொல்ல 10 நிமிடம் போதும் என்றால் இந்தக் கூட்டமே தேவை இல்லை. வழக்கம் போல இவர்கள் திட்டத்தை அறிக்கையாகவே வெளியிடலாம். தமிழகத்துக்கும் ஒன்னும் கிடைக்கப் போவது இல்லை.

வழக்கம் போல கருணாவின் துரோகத்துக்கு பதில் சொல்லாமல் ஜெயாவையே திட்டுவோம். அப்புறம் என்ன காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்து தமிழன் நீருக்கு கர்நாடகாவையும் உயிருக்கும் சிங்களனையும் எதிர்பாத்து இருக்கட்டும். உள்ளூரில் அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டு இணக்கமான மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறையை மிரட்டி வாங்குவோம்.
 
ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்! 
 
 இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்  ராஜீவ்சுக்லா,"தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில  முதலமைச்சருக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச  வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம்  செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும்,
 
காங்கிரஸ் அல்லாத மாநில  முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில  முதல்வர்கள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது.எனவே இதில்  எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்வர்கள், தங்கள்  மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இத்தகைய  கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல.  இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை" என்று கூறினார்.

டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்...தமிழகத்தில் இருக்கிறதா?: கருணாநிதி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டு,மேடை மற்றும் பந்தல் அகற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள   கருணாநிதி,தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி  கூறியதாவது:

திமுகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் - நாளை நடைபெறவுள்ள  தூத்துக்குடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டு தற்போது  அனுமதியை மறுத்து அமைக்கப்பட்ட மேடை, பந்தல்களைப் பிரிப்பதைப் பற்றி தங்கள்  கருத்து என்ன?
 
 
 
 
 
ஜெயலலிதா கட்சியினர் டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு,  அதற்காக அதை நம்பி போடப்பட்ட பந்தலை எல்லாம் அரசுக் காவலர்கள் பிரிக்கிறார்கள்.  இந்த ஜனநாயகவாதிகள் தான் மத்திய அரசைப் பற்றி குறை கூறுகிறார்கள்,  கண்டிக்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசின் பல தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? குறிப்பாக கேபிள்   டி.வி.க்கு உரிமம் தரவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?
 
  அதிலே ஏதாவது விவகாரங்கள் இருக்கலாம். உண்மை என்ன என்பது  பற்றி முழு விவரம் தெரியாமல் பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது: கருணாநிதி
Posted Date : 14:19 (27/12/2012)Last updated : 14:19 (27/12/2012)
சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார். 

டெல்லியில் 57 ஆவது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று காலை பிரதமர்  மன்மோகன் சிங் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பேச போதிய கால அவகாசம் வழங்கப்படாததை கண்டித்து தமிழக  முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.10 நிமிடங்களுக்கு மட்டுமே தம்மை பேச  அனுமதித்து,அதன் பின்னர் பேச்சை நிறுத்துவதற்கான மணியை ஒலிக்கச் செய்து தம்மை  மத்திய அரசு அவமதித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்  கருணாநிதியிடம் இது குறித்து கேட்டபோது,தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில்  ஜெயலலிதா கூறுவதுபோன்று அவமதிக்கப்பட்டிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.

பொதுவாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு 10  நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி மேலும்  கூறினார்.


நன்றி - விகடன்
+

Wednesday, December 26, 2012

கலைஞருக்கு சசிகலா வைத்த செக் , கலைஞரின் டிஃபன்ஸ் ஆட்டம்

http://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/SASI_1.jpg 


ப்பாடி...’ என்று பெங்களூரு கோர்ட் வளாகத்தில் எல்லோரு​மே பெரு​​மூச்சு​​விட்டனர். ஏனென்​றால், 1,032 கேள்விகளுக்கும் சசிகலா பதில் சொல்லி​விட்டார்.



 ஜெட் வேக வெள்ளி!


வியாழக்கிழமை மாலை வரை 825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோயிலுக்குப் போகத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்​கொண்டால் வரத் தாமதமாக 

வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால், ஆசையைத் தவிர்த்து​விட்டு புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்​தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார்.


ஜெ.ஜெ. பிரின்​டர்ஸ், ஜெயா பப்ளி​கேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும்  மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, 'தெரியாது’ என்றார்.


ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், 'எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா. அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.


'பங்களா’ பதில்கள்?


வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளிவிவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 



ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்​களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தி​யதுபோன்ற அத்தனை கேள்வி​களுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார்.



 ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி​விட்டு சரியாகச்சொன்​​னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.  



விசாரணை அதிகாரிகளை விளாசிய சசி!


சனிக்கிழமை காலை உண​வை சீக்கிரமாக முடித்துக்​கொண்டு, கோர்ட் பக்கத்​திலே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்த சசி, 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தார். கோர்ட் நடவடிக்கை தொடங்கியதும், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார் நீதிபதி. 'நல்லம நாயுடு தலைமையிலான அதிகாரிகள் சசி என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, 81 முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்களே?’ என்று கேட்டார்.



'விசாரணை அதிகாரிகள் சில பொருட்களைக் கைப்பற்றி இருந்தாலும், எங்களுடைய சொத்துக் கணக்கை அதிகமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் திட்டமிட்டு கணக்கில் சேர்த்தனர்’ என்றார். 'அப்படியென்றால் ஜெயலலிதா, நீங்கள், சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த​தாக விசாரணை அதிகாரி நல்லம நாயுடு கூறி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.



 'நான், சுதாகரன், இளவரசி மூவரும் தனித்தனியாக தொழில்  நடத்துகிறோம். அதில் ஜெயலலிதாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்மீது கொண்டுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சியிலே வழக்கை ஜோடித்து உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த என்னிடம் விசாரிக்க வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தாமல் ஹாயாக டி.வி-தான் பார்த்தனர். ஆனால் அப்போது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக என்னிடம் விசாரணை நடைபெறுவதாக டி.வி-யில் தலைப்புச் செய்தி ஓடியதைப் பார்த்து அதிர்ந்தேன். 



அதன்பிறகுதான் இதெல்லாம் விசாரணை அதிகாரியின் நாடகம் என்பது தெரிந்தது. பல்வேறு காலகட்​டங்களில் விசாரணை அதிகாரிகள் வரம்பை மீறி சோதனை நடத்தியது, எங்களுடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்​படும் கைக்கடிகாரங்கள், நகைகள், பொருட்கள் தொடர் பாகச் சொன்ன அத்தனையுமே பொய்யானவை. வேண்டும் என்றே அவற்​றின் மதிப்பை அதிகமாகக் காட்டி இருக்கின்றனர்’ என்று விளாசினார்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Feb/858bc757-3919-4ab5-868f-b52d04f91e86_S_secvpf.gif


சுதாகரன் திருமணச் செலவு!


சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஜெய​லலிதா என்ன பதில் சொன்னா​ரோ, அதே பதிலையே சசிகலாவும் சொன்​னார்.


'சுதாகரனின் திருமணத்துக்கு நானோ, ஜெயலலிதாவோ, ஒரு ரூபாய்​கூட பணம் செலவழிக்கவில்லை. தமிழகப் பண்பாட்டின்​படி திருமணச் செலவை மணப்பெண் வீட்டாரே முழுவதுமாக ஏற்றுக்​கொண்டனர். அதுதான் வழக்கம். இதுதொடர்பாக பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் சாட்சியம் அளித்து இருக்கிறார்’ என்று உறுதியான குரலில் சொன்னார் சசிகலா.


இது பொய் வழக்குதான்!


'ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்​களின் விவரங்கள் தர முடியுமா?’ என நீதிபதி கேட்ட போது நீண்ட நேரம் யோசித்துவிட்டு, 'எழுத்து மூலமாகப் பதில் சொல்​கிறேன்’ என்றார் சசிகலா. அவரிடம், 'வழக்கின் முதல் குற்ற​வாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.


'ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே 'எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதே போல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்​களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெய​லலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.


கருணாநிதி என்னை மிரட்டினார்!





கடைசியாக, 'இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, 'போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாகஎடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, 'இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.


இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.



'தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெய லலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். 



எங்களுடைய சொத்துகளை எல்லாம் ஜெய லலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்து விட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அது மட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. 



எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி-யில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.


அடுத்து சுதாகரன் வருகை!



ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, 'நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார்.


உடனே குறுக்கிட்ட நீதிபதி, 'இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் 26-ம் தேதி சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார். இப்போது சுதாகரனுக்கு வக்கீல்கள் கோச்சிங் கிளாஸ் நடத்திவருகிறார்களாம்.
ஆக, தீர்ப்பு நெருங்குகிறது!



நன்றி - ஜூ வி 

http://viruvirupu.com/wp-content/uploads/2012/02/Sasikala-Court-20120218-1.jpg


சென்னை "ஜெயலலிதாவுக்கு, எதிராக, என்னை கருணாநிதி தூண்டிவிட்டார் என, பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா கூறியுள்ளது, அப்பட்டமான பொய்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும், சொத்துக் குவிப்பு வழங்கில், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு, பதில் அளித்த சசிகலா, "ஜெயலலிதாவுக்கு, எதிராக, கருணாநிதி என்னை தூண்டிவிட்டார்' என, கூறியுள்ளது கலப்படமற்ற, அப்பட்டமான பொய். சசிகலா கூறுவதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்திலேயே, தவறான, தகவலை அவர் கூறியுள்ளார். சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தவில்லை; பெண் வீட்டார் தான் செலவழித்து நடத்தினர் என, சசிகலா சொல்லியிருப்பது, எந்தளவுக்கு பொய்யான தகவலோ, அதுபோல தான், என் மீது, சொல்லியிருக்கும் குற்றச்சாட்டும். 


நன்றி - தினமலர் 


http://tamil.oneindia.in/img/2012/06/07-sasikala8-300.jpg

Tuesday, November 27, 2012

நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ - கலைஞரை நக்கல் அடிக்கும் படமா? மணி வண்னன் தில் பேட்டி


http://haihoi.com/Channels/cine_gallery/sathyaraj_amaithipadai_2_nagaraja_cholan_ma_mla_first_look_posters_3786785252_S_108.jpg 


அமாவாசை ரிட்டர்ன்ஸ் !



அதே லொள்ளு, அதே தில்லு, அதே ஜொள்ளு... 'அமைதிப் படை’யில் அதகளப்படுத்திய 'அமாவாசை’, 18 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் அதன் இரண்டாம் பாகம்  'நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ’-விலும் அப்படியே இருக்கிறார். 'அல்லக்கை’ டு 'அலேக்’ அரசியல்வாதி கதையின் பின்னணியை 'அமைதிப்படை’ அளவுக்கு எந்தத் தமிழ்ப் படமும் கிண்டல்அடித்தது இல்லை. சத்யராஜ், சீமானை வைத்து சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்திவரும் இயக்குநர் மணிவண்ணன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறார். துரத்திப் பிடித்துப் பேசியதில் இருந்து.


 ''என்ன சார்... எப்பவும் நாட் ரீச்சபிள்லயே இருக்கீங்களே..?''



''சந்தோஷமான விஷயம்தானுங்களே... செல்போன் டவர் இல்லாத 'நாட் ரீச்சபிள்’ ஏரியா இந்தியாவுக்குள் இப்போ காட்டுக்குள்ள மட்டும்தானே இருக்கு. நம்ம இயற்கை வளத்தை அரசியல்வாதிங்க எப்படிலாம் அழிக்கிறாங்க - இதுதான் 'அமைதிப் படை’ இரண்டாம் பாகத்தின் கதை. அதனாலதான் ஒழுங்கான ரோடுகூட இல்லாத காட்டுக்குள்ள படத்தை எடுத்துட்டு இருக்கோம்.


சத்யராஜ் இந்தப் படத்திலும் அதே அமாவாசைதான். நாகராஜசோழன் எம்.எல்.ஏ-வோட அல்லக்கைதான் நான். முன்னைக் காட்டிலும் மோசமா இருக்குற சத்யராஜைத் திருத்த முயற்சிக்கிற லாரி டிரைவர் கேரக்டரில் சீமான் நடிச்சிருக்கார். என் மகன் ரகுவண்ணனும் நடிக்கிறான்.



 கோமல், வர்ஷா, மிருதுளானு மூணு பொண்ணுங்க இருக்காங்க. கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா, மகன் சத்யராஜ் கேரக்டர் கள் இந்தப் படத்துல இல்லை. ஆனா, அவங்க இல்லாதது தெரியாத அளவுக்கு புது திரைக்கதை அமைச்சிருக்கேன். அரசியல்வாதிகளின் சேட்டையும் கொள்ளையும் இப்போ கோடிகளில் ஓடிட்டு இருக்கு. அப்படியான குள்ளநரி அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா நாகராஜசோழன் இருப்பான். அவன் என்ன ஆகுறான்கிறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்!''


''வாரிசு அரசியல், அப்பாவுக்கு விஷம்வைக்க முயற்சிக்கும் மகன்னு படத்தோட கதையைப் பத்தி ஏதேதோ பரபரப்பா தகவல் உலவுதே?''



''இதுலாம் உங்க லொள்ளு சார். எப்பவுமே இந்த மணிவண்ணன் தனி நபரைக் குறிவெச்சு விமர்சிக்க மாட்டான். நாம சாப்பிடுற சாப்பாட்டுல, குடிக்கிற தண்ணியில... ஏன் சுவாசிக்குற காத்துலகூட அரசியல் இருக்கு. காலையில எந்திரிச்சதுல இருந்து தூங்கப்போற வரை அரசியலோடுதான் நாம வாழறோம். அந்த அரசியலைத்தான் படத்துல பேசப் போறேனே தவிர, தனி நபர் தாக்குதல் எதுவும் படத்துல இருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்த வரை சத்யராஜ் பண்ற அக்குறும்பு உங்களைச் சுத்தி இருக்கிற அரசியலை மறந்து சிரிக்கவைக்கும்!''


''நடுவுல உடல்நிலை சரியில்லாம இருந்தீங்களே... இப்போ ஒரு படம் இயக்கும் அளவுக்கு உற்சாகமா உணர்றீங்களா?''



''50 வயசுக்கு மேலதான் ஆக்டிவ்வா வேலை பார்க்கு றான் ஹாலிவுட்காரன். முதுகுத் தண்டுவடத்துல அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து, இப்போதான் ஓரளவு தேறி இருக்கேன். தொண்டாமுத்தூர் பக்கத்துல க்ரீன் வேலி க்ளப்புனு ஒரு இடத்துல தங்கி இருக்கோம். குளிர் பின்னுது. அதிகாலையில நான்தான் முதல் ஆளா எந்திரிச் சுப் போய் எல்லோர் ரூம் கதவை யும் தட்டி எழுப்புவேன். 'ஏனுங் மணி... இன்னும் அரை மணி நேரம் தூங்கிக்குறேனே’னு சதாய்ப்பார் சத்யராஜ். பதிலுக்கு நடுராத்திரி நான் அசந்து தூங்குறப்போ தலை முழுக்க மப்ளர் போர்த்திக்கிட்டு வந்து, 'வாங்க மணி... வாக்கிங் போயிட்டு வரலாம்’னு லந்து கொடுப்பார். இதெல்லாம் என்னை உற்சாகமாவெச்சுக்க அவர் காட்டுற அக்கறை!'' 



''இப்போ ம.தி.மு.க. முகாம் பக்கம் உங்களைப் பார்க்க முடியலையே?''


''அந்தப் பக்கம் போனாத்தானே பார்க்க முடியும். 2006-ல ம.தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணப்போ, நான் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூடக் கிடையாது. ஆனா, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்குறப்போ, வைகோ, சீமான், நெடுமாறன்லாம் எந்த மேடையில் இருந்தாலும் நானும் அங்கே இருப்பேன். சீமானோட கருத்து கள், போராட்ட வழிமுறைகள் பிடிச்சுப்போய் 'நாம் தமிழர்’ இயக்கத்துல உறுப்பினராகி இருக்கேன். ஆமாம்... இப்போ தம்பி சீமான் இல்லே...  தலைவர் சீமான்!''


 நன்றி - விகடன்

http://www.cineaxis.com/Gallery/Actress/TAMANNAAH%20LATEST%20STILLS/Thumb.jpg


 டிஸ்கி - கலைஞர் , அழகிரி ,ஸ்டாலின் வாரிசு சண்டை பற்றிய படம் போல் தெரிகிறது


http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2012/10/&file=nagaraja-cholan-ma-mla-amaidhi-padai-2-poster_13503672951.jpg

Saturday, November 10, 2012

கலைஞரும் , கலைமாமணி பட்டமும் - திண்டுக்கல் ஐ லியோனி பேட்டி




      தனது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.

அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும்கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச்சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார்.  "இனிய உதய'த்துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது...

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் திண்டுக்கல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது அது புனித பால் உயர்நிலைப் பள்ளியாய் உருமாறி உயர்ந்து நிற்கிறது.  நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். மிகமிக வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். அதேசமயம் என் உறவினர்கள் பலர் இசை, நாடகம், நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வர்களாக இருந்தார்கள். எனவே இசையும் நகைச்சுவையும் என் இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண்டன. அவை நான் பெற்ற வாழ்வின் கொடைகள்.

பொதுவாக, பேசிப்பேசியே பொழுதைக் கழிக்காதே வீணாகிவிடுவாய் என்று அறிவுரை சொல் லுவார்கள். ஆனால் இந்த அறிவுரை உங்கள் விசயத் தில் பொய்த் துப் போய்விட்டதே. எப்படி?

இதுவும் எனக்குக் கிடைத்த இயற்கை யின் கொடைதான். பொதுவாக பேசிப்பேசியே வீணாகக் கழிக்கும் பேச்சு, பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். நேரத்தையும்  அது விரயமாக்கும். ஆனால் நான் மேடையில் பேசும் பேச்சு, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. என் பேச்சைக் கேட்பவர்கள் இன்னும் பேசுங்கள் என்று கேட்பதும் கட்டணம் கொடுத்து என்னைப் பேச அழைப்பதும்தான் இதுவரை நான் கண்டது. மனிதன், மற்றவர்களிடம் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ளக் கிடைத்த ஓசை வடிவம்தான் பேச்சு. சிந்தனையாளர்களின் பேச்சு வரலாற்றில் பல அரிய நல்ல காரியங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. அறிஞர் அண்ணாவைப் போன்ற தலைவர்களின் பேச்சு, அரசியலில் மிகப்பெரிய புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் பேச்சு, நம்பமுடியாத அளவிற்கு சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

எனவே பேச்சுக்கலை என்பது பொழுதைப் போக்கக் கூடிய விசயம் அல்ல; பொழுதை ஆக்கக்கூடிய விசயம். எனது பேச்சாற்றலும் அப்படிப்பட்ட புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

பள்ளிப் பருவத்தில் நீங்கள் பேசி, பரிசு பெற்றதுண்டா?

புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பா வைப் பெற்றேன். அது மற்றவர்களுக்கு வேண்டு மென்றால் வெறும் பிளாஸ்டிக் டப்பா. என்னைப் பொறுத்தவரை நான் முதன்முதலில் வாங்கிய கோல்ட் மெடல். அதுதான் இன்றுவரை எனக்குள் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் முதல்மேடை அனுபவம்?

நான் முதன்முதலாகப் பட்டிமன்றம் பேசியது திண்டுக்கல் மேட்டுப்பட்டி பங்கு சர்ச் விழாவில் தான். அப்போது நடுவராக இருந்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற ஜாம்பவான் அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையா. ஏசுநாதர் செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? என்ற தலைப்பில்  நடந்த அந்த பட்டி மன்றத்தில் நான், சமயப் புரட்சி என்ற தலைப்பில் பேசினேன். ஆனால் அன்றைய பேச்சு எனக்கே பிடிக்கவில்லை. காரணம் அது சரியாய் சோபிக்கவில்லை. "ஆஹா! வேலைக்கா காது போலிருக்கே' என்று மனம் நொந்துபோனேன். அப்போது அந்த ஆலயத்தின் பங்குத் தந்தைதான், ""கவலைப்படாதே, நீ நன்றாகப் பேசினாய். உன்னிடம் விசயம் இருக்கிறது'' என்று என்னை உற்சாகப்படுத் தினார். அந்த உற்சாகம்தான், அந்த முதல் மேடையில் தோற்ற என்னை, இன்று வெற்றியாளனாக ஆக்கியிருக் கிறது.

உங்கள் பேச்சாற்றலுக்குக் கிடைத்த  மிகப் பெரிய பாராட்டாக எதைக் கருதுகிறீர்கள்?

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இலக்கியவாதியும், தேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் தலைவர் என்ற மகுடங்களோடு கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவரும் முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரிடம், நான் பெற்ற பாராட்டுகளையே மிகப்பெரிய பாராட்டுகளாகக் கருதுகிறேன். எனது பட்டிமன்றப் பேச்சை முழுதாய் உட்கார்ந்து கேட்டு ரசித்து, அகம் மகிழ்ந்து என் நெற்றியிலே முத்தமிட்டு வாழ்த்தினாரே, அதைவிட வேறு என்ன  பாராட்டு எனக்கு வேண்டும்? நான் பெற்ற முத்தங்களிலேயே மறக்க முடியாத முத்தப் பரிசு அவரது  முத்தப் பரிசுதான். அதுமட்டுமல்லாது 2011-ல் என்னைப் பாராட்டி கலைமாமணி விருதை தனது கரங்களால் எனக்கு வழங்கி சிறப்பித்தி ருக்கிறார் கலைஞர்.

உங்களால் மறக்கமுடியாத மேடை அனுபவம்?

 பட்டிமன்றங்களுக்கு வருவதற்குமுன் 85-களில் ஆசிரியர் போராட்ட மேடைகளில் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய "கையில வாங்கினேன் பையில போடலை, காசு போன இடம் தெரியலை' என்ற பாடலைப் பாடி அதற்கு விளக்கமும் சொன்னேன்.
 அப்போது தள்ளுவண்டி வைத்துப் பிழைக்கும் ஒரு வயதான பெரியவர், என்னிடம் வந்து, தன் வேட்டி முடிப்பில் இருந்து மூன்று ரூபாய்க்கான நாணயங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, "நீ நல்லா பேசுறே, பெரிய ஆளா வருவே' என்று வாழ்த்தி, வியர்வை வடிந்து கொண்டிருந்த தனது முகத்தை என் கைகளில் பதித்து, ஒரு முத்தம் கொடுத்தார். எனக்குக் கிடைத்த மக்களின் மாபெரும் அங்கீகாரமாக இதைத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

உங்கள் திருமணம் காதல் திருமணமா?

ஆமாம். காதல் திருமணம்தான்.

நீங்கள் கேட்டு வியந்த பேச்சு யாருடைய பேச்சு?

முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தபோது, நிருபர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். அப்போது கலைஞர், "ஒரு தாய் தனது குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகிறபோது அது முகத்திலே சிறுநீர் கழித்துவிட்டால், அந்தக் குழந்தையை தாய் வெறுப்பாளா? மாட்டாள். தன் முகத்தை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிப்பாள். அந்தத் தாயைப் போலத்தான்  நானும்' என்றார். இப்படிப் பட்ட  கலைஞரின் சமயோஜிதப் பேச்சாற்றல் பலரை யும் வியக்க வைத்திருக்கிறது.

நீங்கள்  படித்த ஆசிரியர்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன சொல்வார்கள்?

எனது ஆசிரியர்களை நான் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர்கள், "வகுப்பில் நாங்கள் பார்த்த உனக்கும் இப்போது இருக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையே' என்று வியப்பார்கள். நான் படித்த காலத்தில் செய்த சேட்டைகளால் பெற்ற தண்டனைகள் அதிகம். அவர்களது அடிகளால் ஏற்பட்ட வடுக்களை நான் அவர்களிடம் காட்டியிருக்கிறேன்.

அப்போது அவர்கள் ஒருவித கூச்சத்தோடு, இப்போதைய எனது நிலைக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள் பாருங்கள். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே இல்லை.


உங்கள் பலம் எது? பலவீனம் எது?

எந்தத் தலைப்பு கிடைத்தாலும் அதைப் பற்றிப் பேசமுடியும்- மக்களைக் கவரமுடியும் என்று நினைப்பது எனது பலம். அளவுக்கு அதிகமாக எளிமையாக இருப்பதும், பிறர் சொல்வதை உடனே நம்புவதும் எனது பலவீனம்.

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களைக் கலங்க வைத்த  சம்பவம் எது?

எனது தந்தையார் பெயர் இன்னாசி. உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தவர். எனக்கும் அப்பாமீது அளவு கடந்த பிரியம். அவரோடு 24-8-98 இரவில் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் மேலும் பேசிக்கொண்டிருக்க அப்பா ஆசைப்பட்டார்.

ஆனால் நானோ, அப்பா தூங்கட்டுமே என்று விரைவாக விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது இறப்புச் செய்தி வந்து என்னை நிலைகுலைய வைத்தது. அவர் கடைசியாக விரும்பியதுபோல் இன்னும் கொஞ்சம் நான் பேசிக்கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சியில் மேலும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என் அப்பாவின் மறைவுதான் என்னை ரொம்பவே கலங்க வைத்துவிட்டது.

அரசியல் மேடைகளிலும் தைரியமாக ஏறுகிறீர்களே எப்படி?

 நான் தற்போது திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் ஏறிப் பேசிவருகிறேன். ஜாதி, மதம்... இந்த இரண்டும்  இல்லாமல் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழி இல்லாமல் எந்த மனித இனத்தாலும் வாழமுடியாது. நம் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் ஜாதிக் கட்டமைப்பு களைத் தகர்த்தெறியவும் தமிழர்களின் உரிமைகளுக் காகக் குரல்கொடுக்கவும் உழைத்துவருகிற ஒரே இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான் அந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். நான் நினைப்பது சரி என்று தோன்றியதால் தி.மு.க. மேடைகளுக்கு வந்தேன். அதன் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருப்பதால்தான், துணிச்சலாக தி.மு.க.வின் அரசியல் மேடைகளில் ஏறுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்?

புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன். மொழிப் பற்று, மூட நம்பிக்கை ஒழிப்பு, அழகியல் என எல்லா அம்சங்களும் கலந்த பாடல்களை எழுதி தமிழ் உணர்வை யும் ஊட்டி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் அவர். அவரது "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடலைப் பாடிதான் எனது எல்லாப் பட்டிமன்ற பேச்சுகளையும் நான் தொடங்குகிறேன்.

நீங்கள் சமீபத்தில் ரசித்த படைப்பு எது?

பேராசிரியர் சுப. வீரபாண்டி யன் எழுதிய "திராவிடத்தால் எழுந்தோம்' என்ற நூல்தான் நான் சமீபத்தில் படித்து, ரசித்து, சிந்திக்கத் தொடங்கிய நூல். திராவிட இயக்க வரலாற்றையும் திராவிட இயக்கம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங் களையும் அந்த நூல் அற்புதமாக விளக்குகிறது. பஞ்சமர்களுக்கும்  பெண்களுக்கும் சுயமரியாதை யைப் பெற்றுக் கொடுத்த தோடு, அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்த இயக் கம் திராவிட இயக்கம்  என்பது போன்ற தகவல் களை அழகாக மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் விதைத் திருக்கிறார் சுப.வீ. எனக் குள் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் என்று கூட இதைச் சொல்லலாம்.

திரைப்படப் பாடல்களை மேடைகளில் அலசி ஆராய்கிற உங்களுக்கு, யாருடைய பாடல்கள் பிடிக்கும்?

அன்று முதல் இன்றுவரை நான் ரசிப்பது, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களைத்தான். ஆழமான சிந்தனைகளை எளிய தமிழில் வெளியிட்டவர் அவர். பொதுவுடமைச் சிந்தனைகளை மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் பிரகடனப்படுத்தும் பாடல்கள் அவருடையவை. கல்யாணப் பரிசு படத்தில் "துள்ளாத மனமும் துள்ளும்' என்ற பாடலில் "துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்' என்ற வரிகளில் மிகச் சிறந்த கற்பனையை அள்ளிவீசியிருப்பார். இப்போது  அப்படிப்பட்ட பாடல்களை அதிகம்  கேட்க முடிவதில்லை. இப்போது வரும் பாடல்களில் பெரும்பாலானவை வெறும் டண்டனக்காதான்.

உங்கள் திரையுலக அனுபவங்கள் எப்படி?

நான் நடித்த ஒரே படம் "கங்கா கௌரி'. நடிகர் அருண் விஜய், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருக்கு அப்பாவாக நடித்தேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை அந்த ஒரே படத்தில் உணர்ந்துகொண்டேன். என்னை இயக்கிய இயக்குநர் மாதேஷ்வரன், தயாரிப்பாளர் விஷ்ணுராம் ஆகியோரை வாழ்நாள் முழுக்க என்னால் மறக்க முடியாது.

உங்களை வியக்க வைப்பவர்கள் யார்?

ஒருவர் கலைஞர். காரணம் 89 வயதிலும் ஓயாத உழைப்பும் அதீத நினைவாற்றல் கொண்டவராகவும் இருக்கிறார். இந்த வயதிலும் தொண்டர்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவரது புன்னகை உதிர்வதே இல்லை. அவரது தன்னம்பிக்கை எவருக்கும் வராது.

இன்னொருவர்  கவியரசு கண்ணதாசன். உயர் நிலை வகுப்பைக்கூடத் தாண்டாத முத்தையா என்ற கிராமத்து வாசி, காலத்தால் அழியாத திரைக் காவியங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

அதோடு அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி தமிழிலக்கியத்தையே திகைக்க வைத்திருக்கிறார்.

அடுத்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவைக் கருத்துகள் மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளை முற்போக்காகக் கூறியவர் அவர். அவரது இசையாற்றலும் வியக்கவைப்பதாகும். இதைவிட எல்லா நேரத்திலும் எந்த நிலையிலும் எவருக்கும் உதவக்கூடிய அவரது கொடைக்குணம் என்னை வியக்கவும் நெகிழவும் வைக்கிறது.

நீங்கள் நினைத்து நினைத்து சிரித்த விசயம் எது?

தூத்துக்குடி அருகில் கீழஈரால்  பக்கம் ஒரு கிராமம். அங்கு எங்களது பட்டிமன்றம் நடந்தது.

அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த பேச்சாளர்  வதிலை ராஜா  பேச எழுந்தபோது, மேடையே  ஒரு குலுங்கு குலுங்கி பின்னோக்கி நகரத் தொடங்கி விட்டது. காரணம் மிகவும் குண்டான அவரது எடையை அந்த டிராக்டர் டிரெய்லர்மீது அமைக்கப் பட்ட மேடையால் தாங்க முடியவில்லை.  அப்பப்பா அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு குபீரென்று பொத்துக்கொண்டு வருகிறது.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்கள் போர்க்களத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி திரட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும் போய் வந்தேன். தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் எங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக் கான நிதியைத்  திரட்டினேன். இவற்றையே எனது சாதனைகளாகக் கருதுகிறேன்.

சிறந்த பேச்சாளராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கை யோடு மேடை ஏறுங்கள். ஒவ்வொரு மேடையையும் புது மேடையாகக் கருதுங்கள். மடை திறந்தாற்போல் பேச்சு வர, நிறைய நூல்களைப் படியுங்கள். உங்களுக் கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியின் ரகசியம் எது?

தன்னம்பிக்கை, பணிவு, எளிமை. அதைவிட எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் குணம்.

நேர்காணல்: அமுதா தமிழ்நாடன்







நன்றி - நக்கீரன்





Monday, October 15, 2012

அம்மா! உன் ஆணைப்படி மின் வெட்டு, எல்லாம் கண் கட்டு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmnrqnQ0-s4poaYUN9lBz9lFYJV6W4TcTZOYbicJQkXBW5H7hF0OjKETaR-56vlaexavETegGMnoz6n3UIjZtlOFQk_Wp3CR6GIn9DGLe9KjeKgscWAsC5OsKchAVwRd1PK8yW0xkJFjzV/s1600/426897_320639244652607_1940552083_n.jpgதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

 

கோவை. சா.காந்தி,
9
அக்டோபர் 2012
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

 


தமிழகத்தின்
மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

 

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

 

மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

 

1.தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக. இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

 


இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

 

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

 


வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

 


வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

 

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

 


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

 


இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச்மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

 


ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

 


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

 


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

 


ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

 


இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

 


கூடங்குளத்தில் உள்ள வி.வி..ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும்.

 

எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

 

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும்.

 

இதில், கம்பி இழப்பான 22% கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது. எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

 

…………..கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.

மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினைமின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

 


மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

 


2012
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

 


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

 

பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

 

சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 

மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 


• 31
பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

 


பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

 


உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

 


திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்
ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

 


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

 

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

 


அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

 

பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

 

இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

 

அன்புடன்

கோவை. சா.காந்தி,

9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111
http://www.vikatan.com/news/images/minvettu_toon.jpg




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuWc200fSRKq_y3ZZt3HVhAMN1oSe6cmuml4ijhFC3HkyHj2GzgUnbHj6PIFc4AlfHYOVYsv2HTIVkiQ7tUKOyy_O1jb1hO3QS-YTI26vZ6mt66TNRz5mA0KnU5171HPbWwlxj9yN28H0W/s400/power_cut_Secrets.jpg
http://img.dinamalar.com/data/large/ECART_1303669261.jpg





http://dc150.4shared.com/doc/5Zb_imOV/preview_html_m3e149585.gif