Showing posts with label அனுஷ்கா. Show all posts
Showing posts with label அனுஷ்கா. Show all posts

Friday, December 12, 2014

லிங்கா - சினிமா விமர்சனம்



ஹீரோ  ஒரு திருடன்.அவரும் , அவர் நண்பர்கள் குழாமும்  செய்யும்  லூட்டிகள் செம  ஜாலியாப்போகுது.


  சோலையூர்  அணையை இஞ்சினியர் செக்  பண்ணி  அணைக்கு ஆபத்து .அந்த ஆபத்தில்  இருந்து அணையைக்காப்பாத்தனும்னா ராஜாவோ அல்லது அவரது  வாரிசான  லிங்காவோ  வந்து தான் அணையைத்திறக்கனும் .ஆனா  லிங்கா   வர மாட்டேங்கறார்


நகைக்கண்காட்சில வைக்கப்பட்ட  மரகத நெக்லசை  ஆட்டையைப்போட  திட்டம் போடும்  இடங்கள்  காதில்  பூச்சுற்றல் என்றாலும்  சுவராஸ்யம். ஹீரோயினை  சோலையூர்  கிராமத்துக்கு கூட்டிட்டு வரவேண்டிய  பணி  ஹீரோயினுக்கு. அதே  ஊரில்  இருக்கும்  கோயிலில்  உள்ள  மரகதச்சிலையை திருட வந்த  ஹீரோ வுக்கு  தன்  தாத்தா  வின்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது.  

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து  தன் கலெக்டர் பதவியை  துறந்து  ஹீரோவின்  தாத்தா  ஊர் மக்களின்  நன்மைக்கு  அணை  கட்டுகிறார். அந்த அணை  கட்ட  ஏகப்பட்ட  தடங்கல்கள்  சதிகள்  சவால்கள் .எல்லாத்தையும்  முறியடிச்சு  சொந்த  செலவில்  எப்படி  அணையைக்கட்டுகிறார்  என்பதே  கதை

ஹீரோவா  த  ஒன் அண்ட்  ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி. 4 வருட  இடைவெளிக்குப்பின்  அவர்  காட்டும்  அட்டகாசமான  ஓப்பனிங்  சீன்  கலக்கல் . 60வயது ஆன  பின்னும் அவர்  25  வயது  இளைஞர்  போல்   சுறுசுறுப்பாக  பின்னிப்பெடல்  எடுக்கிறார். பாடல்  காட்சிளில்  தமிழ் நாட்டு  மக்களின் நன்மைக்காகவும் , ரசிகர்களுக்காகவும்  வேண்டா  வெறுப்பா  ரொம்ப  சிரமப்பட்டு  அனுஷ்கா  கூட  சோனாக்சி  சின்ஹா  கூட  டூயட்  பாடி ஆடி  நடிச்சிருக்கார்.




டிவி நிருபராக வரும் அஸ்கா உதட்டழகி  குஸ்கா கன்ன அழகி அஞ்சே  முக்கால் அடி உயர கொழுக் மொழுக்  ரேஸ் குதிரை அழகி அனுஷ்கா தான்  நமக்கெல்லாம்  பூஸ்ட்.பாப்பாவுக்கு  முகத்தில்  கொஞ்சம்  முதிர்ச்சி எட்டிப்பார்க்குது என்றாலும்  தமிழன் முகத்தை அதிகம்  கவனிக்காததால்  தப்பி விடுகிறார்.கண்காட்சியில்  ரஜினியுடன்  நெருக்கமாக  இருக்கும் காட்சி ஆல்ரெடி    பீரோவுக்குள்  கொஞ்சிக்குலாவிய  தூள்  படத்தின்  தழுவல்  காட்சி  தான் ( விக்ரம் -ஜோதிகா)  என்றாலும்  கிளு  கிளு தான்.


மெயின்  ஜோடி  சோனாக்சி சின்ஹா.ஹிந்தில  சோனா  என்றால்  தங்கம்னு அர்த்தம் .அதே  போல்  தங்கம்  போல்  ஜொலிக்கும் அழகி. ஏறு நெற்றி  இவருக்கு  மைனசாவே  தெரியலை.நல்லா பரம பத  மேப்பை  விரிச்சு  வெச்சு  விளையாடும் அளவுக்கு அகலமான  முதுகு அழகி.முதல்  மரியாதை  ராதா  கணக்கா  ஜாக்கெட்  இல்லாம  வர்றார். ( சேலை  கட்டி  இருக்கார் ) கண்ணியமான   கேமரா மேனாக இருந்தாலும்  ஒரு  பாடல்  காட்சியில்  அவரையும் அறியாமல்  கிளாமர்  எட்டிப்பார்க்குது



சந்தானத்தின்  காமெடி  வழக்கம்  போல்  கலக்கல்.இவரது  ஒன் லைனர்கள்  அப்ளாஸ் அள்ளுது. கருணா வும்  கேப்  கிடைக்கும்  இடத்தில்  எல்லாம்  சிரிக்க வைக்கிறார்.நண்பேண்டா  என  அவர்  முழுசாக  சொல்ல  முடியாமல்  வயசு  சீனியாரிட்டி  கருதி நண்பேன்  என  நிறுத்த  ரஜினி  டா என  முடிக்க  தியேட்டரே  கல கல



ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  ரொம்ப  நீளம் .படத்தின்  மெயின்  கதையே  ஃபிளா   ஸ்பேக் தான்  என்பதுதான்  படத்தின்  பலமும்  பலவீனமும். ரஜினி  படம்  எனில்  பாட்ஷா  படையப்பா  போல்  சவால்  விடும்  கேரக்டரா  பார்த்து  மக்கள்  ட்யூன் ஆகிட்டாங்க .எனவே  இது போல்   பென்னி  குயிக்   அணை  கட்டும்  கதை  எல்லாம்  ரிப்பீட் ஆடியன்சை  வர  வைப்பது  சிரமம்.


வில்லனாக  வரும்  பிரிட்டிஷ்  வில்லன்   ஆள்  நல்ல  பர்சனாலிட்டி  எனில் அவர்  மனைவியாக  வந்து  ரஜினிக்கு  சப்போர்ட்  செய்யும்   கேரக்டர்  நல்ல  கலர் . ஜவஹர்லால்  நேரு  - மவுண்ட்பேட்டன்  பிரபு  சம்சாரம்  கதை தான்  நினைவு  வருது.



இசை  ஏஆர்  ரஹ்மான் . 2 பாட்டு  நல்லாருக்கு . ஆனா  பின்னணி  இசை  சுமார்தான் .


மிகக்குறுகிய  காலத்தில்   பெரிய பிராஜக்ட்டாக  சக்சஸ்ஃபுல்லா  தருவது  சாதா  விஷயம் இல்லை . கே எஸ்  ரவிக்குமார்  தான்  அந்த  மேஜிக் கை  நிகழ்த்திக்காட்டி   இருக்கார்.












மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. திருடப்போர வீட்டுல யாரும் இல்லயான்னு பாருங்கடான்னா காலிங்பெல் அடிச்சுப் பாக்குறானுவ # சந்தானம்

2. "என்ன ஜோக்கா?


" "ஜோக்கா இருந்தா சிரி...வீக்கா இருந்தா விட்று


3. எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்யுர ஒரே தொழில் திருட்டுத்தொழில் !

4. வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை! - ரஜினிகாந்த்

5. நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்! முடியாததுல இறங்க மாட்டேன் !

6. ஸ்பெஷல் டீ-ய குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்!!! - சந்தானம்!

7. மனுசன்னா நம்பணும்.. மாசு உள்ள போனா தும்மனும் -/// 

8. "ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் மாமா வேல செய்ராரு" 

"என்ன வேல செய்யுராரு" 

"அதான் சொன்னனே..."

9.சந்தானம் டூ ரஜினி ; நீ வேணாம் வேணாம்னா கூட ஜனங்க விட மாட்டாங்க போல... ஊரே உனக்கு மரியாதை கொடுக்குதே-

10. ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமுத்துடும்!!! -சந்தானம் 

11. "மரகத நெக்லஸ்கு 3Cன்னா மரகத சிலைக்கு ஒரு 15C வருமா?" 

சந்தானம் ;"15C, 21C எல்லாம் மந்தவெளி பஸ்டாப்புக்குத்தான் வரும்-/"

12. எதிர்பார்க்காதது நடந்தாதான் அது சுவாரஸ்யம்!

13. ஹாஹா விஜயகுமார் : "அய்யா நான் இந்த சோலையூர் கிராமத்து நாட்டாமைங்க

14. ஒரு வேல சாப்புடலன்னா பிரச்சனை இல்லை..ஒரு வேல கூட சாப்புடலன்னா அது பிரச்சனை!!!

15. I haven't failed .... I just postponed my success

16. ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க.. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்!

17.இஷ்டப்பட்டது கிடைக்கனும்னா கஸ்டப்பட்டுத்தான் ஆகணும்..!

18.எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் தூங்குற இடம் நம்ம உயரம்தான்..!

19. வெள்ளக்காரன்; "மிஸ்டர் லிங்கேஸ்வரன், நீ DAM கட்டுர மாதரி தெரியல... இவள வேணா கட்டுவ



20  
பிரம்மானந்தம் = சும்மா ங்கற வார்த்தை என் அகராதிலயே கிடையாது



 சந்தானம் = சம்பளம் மட்டும் சும்மா வாங்கறீங்க?


21
பணம் இருந்தா மரியாதை தானா தேடி வரும்


22
வாழ்க்கைல எதும் ஈசி இல்லை.முயற்சி பண்ணுனா எதும் கஷ்டம் இல்லை


23
இந்த மரகத நெக்லஸ் என்ன விலை?


3 கோடி. அடப்பாவி .சேட்டு 1 1/2 கோடின்னானே


24  
சந்தானம் ஹிட் பஞ்ச் = பறக்காஸ் ( கிளம்புவோம்)


25
அனுஷ்கா = யோவ் கில்லாடி கிங்குய்யா நீ.


 ரஜினி = இப்போ என்னை விட்டேன்னாத்தான் நான் அடுத்த வேலையைப்பார்க்க முடியும்


26 
அனுஷ்கா = யோவ்.உன் பார்ட்ஸ் எல்லாம் எப்டிய்யா இப்டி வேலை செய்யுது? # ரஜினி படம்னா டபுள் மீனிங் கூட சாதாவா ஆகிடுது


27 
சந்தானம் டூ ரஜினி = ஒயின்ஷாப் ல சரக்கு அடிக்கும்போது அப்பாவைப்பாத்த மாதிரி ஏன் பம்முறே?


28   பிரிட்டிஷ்  வில்லன் -
என் முன்னால ஏன் இப்டி நிக்கறே?


 என் முன்னோர்கள் உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கல # ரஜினி கலக்கல் டயலாக் டெலிவரி



29
நாம எந்த வேலை செய்யறோம்கறது முக்கியம் இல்லை. செய்யற வேலையை சந்தோசமா செய்யனும் # லிங்கா


30 
அரண்மனை ல இருக்கறவன் எல்லாம் ராஜா இல்லை.எங்கே இருந்தாலும் தன் கிட்டே இருப்பதை இல்லாதவங்களுக்குத்தர்ற எல்லோரும் மனசளவில் ராஜாதான் # லிங்கா


31
நல்லது நடக்கும்போது 1 மேல ஒண்ணா நடக்குது. கெட்டது நடக்கும்போதும் அப்டித்தான்.ஒண்ணு மேல ஒண்ணா நடக்கும் # லிங்கா





படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. உஸ்ஸ்.. வானத்தைப்போல படத்துல செந்தில் தன்னை புகழ்ந்து பேசும் பிச்சைக்காரனைவெச்சு பண்ணும் காமெடிய உல்டா பண்ணிருக்காங்கப்பா:-))


2  சூப்பர் ஸ்டாரின்  ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன்  60 வயசா?30 வயசா?




3
அனுஷ்கா தேவதையை தாவணி ல ரொம்ப சிம்ப்பிளா காட்டறாங்க.அதுலயும் பாப்பா சிறப்பா காட்டுது # அனுஷ்காடா





கால்ல மாட்ட வேண்டிய ரவுண்ட் கொலுசை கட் பண்ணி காதுல தொங்க விட்டிருக்கு அனுஷ்கா





அனுஷ்கா " ஏய்யா என் இடுப்பைப்பிடிக்கறே? ஏய்யா விட்டுட்டே?னு கேட்கும்போது ரஜினி எந்த பதிலுமே சொல்லலையே?




6
மோனா மோனா பாட்டில் ரஜினி கலக்கல்.ஆனா அனுஷ்கா கெட்டப் எடுபடலை.யாரு மேக்கப்விமன்?






7
ARR ரஜினி படத்துக்கு சரியா செட் ஆகலை.பிஜிஎம் சுமார்தான்.தேவா வா இருந்தா செமயா இருந்து இருக்கும்.ஆனா இன்ட்டர்நேசனல் மார்க்கெட்டிங் வேணுமே




8 அனுஷ்கா கால் மேல் கால் போட்டு டயலாக் பேசும் காட்சியில் கெண்டைக்கால் வரை பாரசூட் தேங்காய் எண்ணெய் தடவி மினுமினுப்பை ஏத்திட்டாங்க




9
சந்தானம் மேக்கப்பே இல்லாம செம யூத்தா இருக்கார்.




10
அனுஷ்கா உட்கார்ந்திருக்கும் எல்லா சீன் லயும் கால் மேல கால் போட்டு தெனாவெட்டா உக்காருது.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ




11
முதல் 1 மணி நேரம் ஆட்டம் பாட்டம் சந்தானம் காமெடி ரஜினி அலப்பறைனு நல்லா தான் போகுது.இப்போ பிளாஸ்பேக் ஸ்டார்ட்




12 ரஜினி பஞ்ச் = லெட்ஸ் பிகின் # ரயில் பைட்




13
ராஜா காலத்து ரஜினி ஓப்பனிங் சீன் ல THE LEGEND OF ..,னு ஏதோ புக் படிச்ட்டு இருக்கார்.குறியீடு




14

பிளாஸ்பேக் காட்சிகளில் லைட்டா போர் அடிக்க ஆரம்பிக்குது




15
ரஜினி பஞ்ச் = SEE YOU SOON




16
HAPPY BIRTH DAY TO YOU என ரஜினி பிறந்த நாளில் ரிலீஸ் ஆன படத்தில் காட்சி வைத்தது இயக்குநர் டச் .ரசிகர்கள் கை தட்டல் அதிருது தியேட்டர்






17
ரஜினி முன் வில்லன் நிற்கும் காட்சியில் கேமரா கோணம் டாப் ஆங்கிளில் வெச்சிருக்கனும்.லோ ஆங்கிள் ல வெச்சா எடுபடாது.வில்லன் உயரம்




18 
படையப்பா வுடன் ஒப்பிடும்போது அதில் பாதி கூட வர்லை.இடைவேளை. 10மடங்கு னு சொன்ன ஷங்கர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்




19 
சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன் 60 வயசா?30 வயசா?




20 
மக்களுக்காக ஏதாவது செய்யனும்னு ரஜினி 10 நிமிசத்துக்கு ஒரு டைம் சொல்லிட்டே இருக்காரு # தலைவர்டா




21
எஜமான் படத்தில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சி போல் புயல் காற்றில் பறக்கும் பிளான் மேப் பேப்பர்சை பிடிக்கும் காட்சி




22
சின்னச்சின்ன நட்சத்திரங்கள் பிடிக்க வந்்தாய் .குட் மெலோடி. ஆனால் விஷூவல் டெம்ப்ளேட்்




23
60 வயதைக்கடந்த பின் நடித்த படத்தில் எம் ஜி ஆர் காட்டிய சுறுசுறுப்பை விட அதீத வேகத்தில் ரஜினி.இதுதான் ரஜினி




24
இஞ்சினியர் பில்டிங் கட்ட படும் சிரமங்களைக்காட்டினா அது மருமகன் தனுஷ் படம் ,அணை கட்ட கலெக்டர் படும் சிரமங்களைக்காட்டினா அதுரஜினி படம்




25
தேசியக்கொடியை ரஜினி பிடித்தபடி நிற்கும் காட்சி கலக்கல்.குறியீடு.இருவர் படத்தில் மணிரத்னம் உபயோகித்த டாப் ஆங்கிள் ஷாட் டெக்னிக்




26
பென்னி குயிக் ன் அணை கட்டிய வரலாற்றை சாமார்த்தியமான திரைக்கதையால் தியாக சரித்திரமாய் மாற்றியது அருமை




27
ரஜினி படத்துக்கே உண்டான பர பர சவால் காட்சிகள் நிறைந்த திரைக்கதையை எதிர்பார்க்காமல் பென்னி குயிக் ன் போராட்டக்கதையாகப்பார்க்கனும்







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1   ஆறு  மாத காலத்தில்  பெரிய  விஐபிகள்  கால்ஷீட்டில்   ஒரு  சக்சஸ்  மசாலாப்படம்  எடுப்பது    சாதா  விஷயம்   இல்லை.  பிரமாதமான  நிர்வாகம்.

2  அணைக்கட்டு  செட்டிங்   அட்டகாசமான  ஆர்ட்  டைரக்சன்


3   அருவி  , மலை  என  கேமரா  கண்ணுக்குக்குளிர்ச்சி


4   வசனங்கள்  ரஜினி  ரசிகர்களை  உசுப்பேற்றும்  விதத்தில்  இருப்பது


5 அனுஷ்கா  , சோனாக்சி  சின்ஹா  என  2  நாயகிகள்   இருந்தும்  கண்ணியமாக  கிளாமர் கண்ட்ரோலரா  இருந்தது





இயக்குநரிடம்  சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ரஜினி படத்துக்கு ஃபிளாஸ்பேக்  ஏன் இவ்வளவு  ஸ்லோவாக   இருக்கனும் ?  கோச்சடையான்  போல்  தீப்பொறி  பறக்கும்னு  பார்த்தா  முத்து   ஃபிளாஸ்பேக்  போல் தத்தித்தத்தி  வருதே?


2  ரயில் ஃபைட்  சீன்  எந்திரன்  ஃபைட்  போலவே   அதீத  கிராஃபிக்ஸ்  சீன் . ஏமாற்றம்  அளிக்கிறது .அதை  இன்னும்  நல்லா  ரியலிஸ்ட்டிக்கா  ரஜினி ஸ்டைலோட  காட்டி  இருக்கலாம்.


3  வில்லன்  பவர்ஃபுல்லா  காட்டப்படலை .அது  பெரிய  பின்னடைவு . பலமான வில்லனை   ஹீரோ  இன்னும் சாமார்த்தியமா  ஜெயிச்சாத்தானே  அதுல ஒரு கெத்து  இருக்கும் ? சோப்ளாங்கி வில்லனை  ஈசியா   ஹீரோ  ஜெயிச்சா  அதுல  எப்படி பாராட்டோ  , அப்ளாசோ அள்ள  முடியும் ?

4  நிலத்தின்  மதிப்பு  போல்  100  மடங்கு  பணம்  தர  ரஜினி ஒத்துக்கொள்கிறார். நிலத்துக்கு சொந்தக்காரர்களான  மக்களுக்கு அதிக  பணம்  தர்றார். இவ்வளவு  சொத்து ஏது ? என்ன தான்  ஜமீனா , ராஜாவா  இருக்கட்டுமே?

5  ஆர்  சுந்தர்ராஜன்   வில்லனாக  மாறி  மக்களுக்கு  ரஜினியை  கெட்டவனாக  காட்டும்  காட்சி அக்மார்க்  டிராமா . இது அந்தக்கால அரதப்பழசான  டெக்னிக்


6  ரஜினி கோபமாகப்பார்க்கும்  மாஸ்   பார்வை  தளபதிக்குப்பின் பெரிதாக  யாரும்  காட்டவில்லை . இந்தப்படத்திலாவது  உபயோகித்து  இருக்கலாம்






சி  பி  கமெண்ட் -
லிங்கா = ரஜினி மேஜிக் ,பென்னிகுயிக் கதை .பாட்ஷா படையப்பா அளவு இல்லை.ஆனா  முத்து  லெவல் ஹிட்  எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தயாரிப்பான  பாபா , பாண்டியன்  போல்  பிளாப் ஆகிவிடும் என்ற   பலரது  யூகங்களுக்கு  ஆப்பு  -விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங்  =  3 / 5






டிஸ்கி - வசனம் அப்டேட்டில்  முதல் 19 ம் கருத்து கந்தன்  டி எல்லில் இருந்தது.நன்றி

Saturday, September 14, 2013

SUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்படம் )

ஹீரோ ஒரு  கார் மெக்கனிக், ஹீரோயின்  ஜின்ஸ் பேண்ட் டி சர்ட் ( ஸ்லீவ்லெஸ்) போட்ட நவீன டாக்டர்.அண்ணனோட மெக்கானிக் ஷாப்க்கு அண்ணி ஒரு டைம் வர்றாங்க. ஹீரோக்கு அவரை  கண்டதும் காதல்.அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் அனைவர் காருக்கும் இலவச சர்வீஸ்ங்கறார். ஹீரோயின்  உடனே  போட்டிக்கு  எங்க ஹாஸ்பிடலில் உங்க பணியாளர்கள் அனைவருக்கும்  இலவச சிகிச்சைங்கறார். ஆஹா ! லவ் பண்ணினா  ஒரு டாக்டரைத்தான் லவ்வனும் போல்.  இவங்க காதல் வளரும்போது ஹீரோயினின் வளர்ப்பு அண்ணன் (!!) மூலம் சிக்கல் . 


அவருக்கும்  ஹீரோக்கும் ஆரம்பத்துலயே சண்டை . அக்னிநட்சத்திரம் கார்த்திக் - பிரபு மாதிரி  , அழகிரி -ஸ்டாலின் மாதிரி  முறைச்சுக்கறாங்க . அது ஏன்? அதுக்கு  ஒரு ஃபிளாஸ் பேக்

 ஹீரோயினோட வளர்ப்பு அண்ணனுக்கு நிஜமாவே  ஒரு தங்கச்சி . அது  ஹீரோவை லவ்வுது . திருப்பதி லட்டு மாதிரி  இருக்கும் அனுஷ்காவை ஹீரோவுக்கு  பிடிக்கலை . அவர் எம் ஜி ஆர் கணக்கா  ஹீரோயினை தோழியா மட்டும் ஏத்துக்கிட்டு கட்டிப்பிடித்தல்  , தடவுதல் , இடையை கிள்ளுதல் முதற்கொண்டு என்ன என்ன  மொள்ள மாரித்தனம் எல்லாம் பண்ண முடியுமோ அதை எல்லாம் பண்ணிட்டு காதல் , கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்றார்.நல்லவேளை   தங்கச்சின்னு சொல்லலை . 




 ஒரு கட்டத்துல விழாமேடைல   ஓப்பனா  ஒரு ஸ்டேட்மெண்ட் விடறார். இன்னைக்கு  நைட்க்குள்ளே என்னை லவ்வலைன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன் அப்டினு. அதை  ஹீரோ  சீரியசா எடுத்துக்கலை .


ஆனா   அனுஷ்கா சொல்பேச்சு மாறாம செத்துக்கிடக்கார் . அவர் சாவுக்கு ஹீரோதான் காரணம்னு  இவர் நினைக்கறார். அதான் பிரச்சனை . 

படத்துல பயங்கரமான  ட்விஸ்ட் 1 . அனுஷ்கா கொலை செய்யப்பட்டிருக்கார் , யார் எதுக்காக செஞ்சார் என்பது வெண் திரையில்  காண்க 


அமலாவோட ஆத்மார்த்த நாயகன் நாகார்ஜூன்  தான்  ஹீரோ .ஃபங்க்  தலை  , ஷேவ் செய்யாத  தாடி அப்டினு  கேவலமா வர்றார்.அவரை  ப்போய் 2  ஹீரோயின்களும்  விழுந்து  விழுந்து லவ்வுதேன்னு ஆடியன்சுக்கு செம வயித்தெரிச்சல் ( இங்கே ஆடியன்ஸ் = சி பி எஸ்) 


இவர்  கூட 2 டூயட்  , அவர்  கூட ஒரு டூயட்  , 2  ஃபைட் அவ்வ்ளவுதான்  ஹீரோ வேலை 


ஆயிஷா டாக்கியா தான்   ஹீரோயின் . டாக்டரா வர்றவர் டிரஸ்ஸிங்க் சென்ஸ் எப்படி இருக்கனும்னு கத்துக்கிட்டு நடிச்சிருக்கலாம் . அட்லீஸ்ட்   இயக்குநராவது  கவனம் செலுத்தி  இருக்கலாம் . ஒரே தாராள மயம் தான் . சி செண்ட்டர் ரசிகர்களுக்கு  கொண்டாட்டம் தான் 


அனுஷ்கா தான்  2 வது நாயகி . ஒரு டூயட்  , அது போக  17 நிமிஷம் வர்றார் . அவ்வளவுதான். மத்தபடி  இவர்  கிட்டே பெருசா எதிர்பார்க்க  முடியாது 


பூரி ஜெகன்னாத்தின் ஃபேவரைட் காமெடியன் பிரம்மானந்தம்  20 நிமிடங்கள் வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்துக்கு  டைட்டில் செலக்‌ஷன் ஆஹா. எல்லா மொழியிலும் ஒரே டைட்டிலே வெச்சுக்கலாம் . படம்  சூப்பர்னு டைட்டிலைச்சொன்னாக்கூட ரிசல்ட்டைத்தான் சொல்றாங்கன்னு  நினைச்சுக்குவாங்க 



2. சும்மா கெஸ்ட் ரோலில் வரும் அஸ்கா அனுஷ்கா வை மெயின் ஹீரோயின்  மாதிரி பில்டப் கொடுத்து  போஸ்டர்களில் , ஸ்டில்களில்   பயன் படுத்தி படத்துக்கு மார்க்கெட் வால்யூ கொடுத்தது 


3. படத்துல என்ன கதைன்னு  ரசிகர்களை  யோசிக்கவே விடாம பட படன்னு காட்சிகளை நகர்த்தியது 


4. இன்னொரு  ஹீரோவாக வரும் சோனு வை நாகார்ஜூனை விட  இளமையாக , அழகாக காட்டிய  தைரியம் ( நம்மூர்ல இப்படி காட்ட விட மாட்டாங்க ) 


5. பேங்க் ஏடி எம்  திருடனை பார்த்த வன் ஓவியன்   அதை  வரைய வைப்பவர் பிரம்மான்ந்தம் என்ற காமெடி டிராக் நல்லா  ஒர்க் அவுட் ஆகி இருப்பது . சாயாஜி ஷிண்டே  இமேஜ் பார்க்காமல் காம்டியில் கலக்கியது 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  இரண்டு  ஹீரோக்களும் ஏன்  கொள்ளைக்காரர்கள் ஆகறாங்க என்பதற்கு சொன்ன  காரணம்  ரொம்ப  கற்பனை வறட்சி . ஒரு  டைம் அனுஷ்காவுக்கு வயித்து வலி வருது . சும்மா வெந்தயத்தை கரைச்சுக்குடுத்தா சரி ஆகி இருக்கும் . அதுக்குப்போய்   ஹாஸ்பிடல் செலவுக்கு காசு இல்லைன்னு யாராவது  கொள்ளை அடிப்பாங்களா? ஆளாளுக்கு இப்படி  கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டா  கலைஞர், ஆ ராசா மாதிரி பெரிய மனுஷங்க என்னதான் செய்வாங்க  ? தொழில் போட்டி வந்துடாது? 


2.  ஏ டி எம்  மிஷினை கொள்ளை அடிக்கும் ஆரம்பக்காட்சியில் அத்தனை களேபரங்கள் , பல போலீஸ் ஆஃபீசரை சுடுதல்  , தாக்குதல்க்குப்பின் அவ்ர்கள் கொள்ளை அடிப்பது பிசாத்து   2 லட்சம் ரூபாய்  தானா? ஏ டி எம்  மிஷின்ல அவ்வளவுதான்  இருக்குமா? உள்ளத்தை அள்ளித்தா வேன் எல்லாம் வெச்சுக்கடத்தி  இருக்கோம் காமெடி தான் நினைவுக்கு வருது 


3. பேங்க்கில் கொள்ளையர்கள் வந்ததும் ஒரு லேடி ஸ்டாஃப் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி மாட்டிக்கறா. அவ சாதாரணமா எஸ் எம் எஸ் அனுப்பி  இருக்கலாமே? 


4. பேங்க் ல கொள்ளை அடிக்க  ஹீரோக்கள் 2 பேர் , ஹீரோயின் 1 ஆக  மொத்தம் 3 பேர்  3 வெ்வ்வேற  பைக்ல போறாங்க . ட்ரிபில்ஸ் போய் இருக்கலாம் , அல்லது  2 பைக் போதுமே?  நாட்டுல பெட்ரோல் விலை என்ன ரேட்டுக்கு  விக்குது ? 


5. ஹீரோ & கோ  வை போலீஸ்கள்  13 பேர் பார்க்கறாங்க ., எல்லார் கைலயும் கன்  இருக்கு , ஆனா  சுடாம  வரிசைல வந்து  ஒவ்வொரு ஆளா  ஃபைட்  போட்டுட்டு இருக்காங்க ? 



6.  அனுஷ்கா  ஹீரோவுக்கு ஒரு டைம்  கால் பண்றார் . அப்போ  ஹீரோ அட்டெண்ட்  பண்ணாம ஃபோனை கட் பண்றார் . உடனே   ஹீரோயின்   டயல்டு கால் ல போய்  ரி டயல் பண்ணா போதாதா?  எதுக்கு பேக்கு மாதிரி இன்னொரு டைம்,  10 டிஜிட்டையும் டைப் பண்ணுது ( இந்த   தப்பை நல்லா   நோட் பண்ணுங்க   , எல்லா  சினிமாலயும்  வருது ) 


7. அனுஷ்கா தற்கொலை செஞ்சார் , போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட் ல  பலரோட   கை ரேகை பதிஞ்சிருக்கு  தகவல் வந்திருக்குமே?  ஏன் அதை யாரும்    நோட் பண்ணலை ? 


8. அனுஷ்கா   ஹீரோ  கிட்டே தன் லவ்வை சொல்றார் . அவர் ஏத்துக்கலை . ஒண்ணா   அவர் விலகிப்போகனும் . அல்லது  கொஞ்சனும் , அதை விட்டுட்டு என்னமோ லவ்வர்ஸ் விளையாடற மாதிரி  இப்போ நான்  என் டிரஸ் எல்லாம்  ரிமூவ் பண்றேன் , நீ உன்  டிரஸ் எல்லாம் கழட்டுங்கறார். இதுனால காதல்  வந்துடுமா?  ஏதோ   காட்சி  கிளுகிளுப்பா வரனும்க்றதுக்காக காதலை  கொச்சைப்படுத்தலாமா?  ( எங்களுக்கு சீனும்  வேணும் , அது  கண்ணியமா காதலை  கொச்சைப்படுத்தாம  இருக்கனும் ) 


9. வெள்ளி நிலா பாட்டு   ரட்சகன் ல வரும் சந்திரனை தொப்ட்டது யார் பாட்டின்  இசை ,  மெட்டு எல்லாத்தையும் அப்பட்டமா  சுட்டு இருக்கு 


10 . காமெடியன்  டிராயிங்க் பண்ணும்போது கைல  பிரஷ் வெச்சிருக்கார் , ஆனா ஓவியம்   ஃபினிஷ் ஆனதும்  காட்டுவது பென்சில்  ஓவியம் தான் 




மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணுங்க   விஷயத்துல பசங்க எப்பவும்  வீக் தான் 


2. ஹீரோயின் - எனக்கு  ஃபோர்ட்டபிள்  டி வியே போதும்,  பெருசு வேணாம் 


ஹீரோ - என்னங்க  இப்படிச்சொல்லீட்டீங்க ? சின்னதை வெச்சு என்ன செய்யப்போறீங்க? ( டபுள்  மீனிங்க் ) 


3. அண்னனுக்கு பேக் பெயின் 


ஹீரோயின் - என்ன செஞ்சாரு ?


 எதுவுமே செய்யலை . அதான் பிராப்ளம் . காலா காலத்துல செய்ய வேண்டியதை செஞ்சிருக்கனும் 


4.  டேய் , கஷ்டப்பட்டு சம்பாதிச்சவன்  கூட இப்படி எண்ணிட்டு இருக்க மாட்டான் , கொள்ளை  அடிச்ச பணத்தை எதுக்கு இப்படி  மண்டி போட்டு உக்காந்து எண்ணிட்டு  இருக்கிங்க ? 




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  39 ( டப்பிங்க் படத்துக்கு விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க ) 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   2.75 / 5


சி பி கமெண்ட்  - படம்  ஜாலியா போகுது . கண்ணுக்கு  விருந்து  இருக்கு , காமெடி  இருக்கு . ஆனா டி வி ல பார்க்கற அளவு தான் ஒர்த் . நாகார்ஜூன் ,, அனுஷ்கா ரசிகர்கள் மட்டும்  தியேட்டரில் பார்க்கலாம் .இது ஆந்திராவுல  2005 லயே  ரிலீஸ் ஆகி இருக்கு , இங்கே இப்போதான் வருது  போல 



Friday, July 05, 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

நாடு பூரா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த மாறு வேஷமும் போடாம  ஒரு சாதாரண ஸ்கூல்ல  என்சிசி மாஸ்டரா ஒர்க் பண்றார். படத்தோட டைரக்டர் தவிர மத்த எல்லாருமே கேனயனுங்களா இருக்கறதால யாரும் அதை கண்டுக்கலை , சந்தேகப்படலை .ஹீரோவோட மாஸ்டர் பிளான் என்னான்னா ஆயுதக்கடத்தல் கும்பலைக்கண்டுபிடிச்சு அவங்களை அழிக்கறது .பொண்ணு பார்க்கப்போறப்போ பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கறதில்லையா? அந்த மாதிரி அவருக்கு மாட்டுனது போதை மருந்து கடத்தல் கூட்டம்.ஹீரோ அந்தக்கூட்டத்தை எப்படி பிடிக்கறார் என்பதே ரெண்டே முக்காஆஆஆல்  மணி நேரம் ஓடும் சிங்கம் 2 படத்தோட திரைக்கதை  .


சும்மா சொல்லக்கூடாது , சூர்யாவுக்கு  போலீஸ் யூனிஃபார்ம் ஒரு கம்பீரத்தைக்கொடுக்குது . காக்க காக்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவரோட கர்ஜனை , தோரணை எல்லாம் செம . போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்காக நடப்பதும் , பாடி லேங்குவேஜும்  சூப்பர் . ஆனா வசனம் பேசும்போது மட்டும் பல்லைக்கடிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு பேசறார். டூயட் காட்சிகளில் விஜய்யை டச் பண்ணப்பார்க்கறார்.


ஹீரோயின் ஹன்சிகா தான் .பல படங்களில்  கொழுக் மொழுக்  கொழுக்கட்டை மாதிரி அழகாக வந்தவர் இதில் சாதா கட்டை செண்பகமா வர்றார். இதுல இவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாம் . லட்சுமிமேணன்க்கு போட்டியா காட்டிக்கறாரோ என்னவோ? இவரோட காதல்ல ஆழம் இல்லாததால எடுபடலை 




 சைடு ஹீரோயின் அனுஷ்கா . செர்ரிப்பழ உதட்டழகி .நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி . பட்டு சேலை கட்டி  மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது .ஆளை அசத்தும் அழகு . பாடல் காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள் 


வில்லனாக யாரோ ஒரு சிங்கள ஆள். ஆஜானுபாகமான தோற்றம். எள்ளலான நடிப்பு. தேறிடுவார். அது போக கண்ணே கனியமுதே , சங்கமம் பட் ஹீரோ ரகு(மான்) இன்னொரு வில்லன். ஓக்கே தான் நடிப்பு 


 படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு 


 விவேக் போலீஸ் ஆஃபீசராக வந்து ஒரே  ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறார். சந்தானப்புயல் முன் விவேக் காணாமல் போய் விடுவது பெரும் சோகம் . இந்த கேரக்டரில் விவேக் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் 


 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.பொதுவாக தமிழில் பாகம் 2 எடுபடாது. உதா - நாளைய மனிதன் ஹிட், அதிசய மனிதன் பிளாப் , பில்லா சூப்பர் ஹிட், பில்லா 2 சுமார் ஹிட் , அமைதிப்படை மெகா ஹிட் , நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் பிளாப். இந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்த காஞ்சனா ( முனி 2 ) வரிசையில் சிங்கம்2 வும் சேர்ந்தது , அதுக்கு பக்க பலமாக விறு விறுப்பான திரைக்கதை அமைத்தது 


2. பட்டப்பகலில் கஸ்டம்ஸ் ஆபீசரை கொலை செய்து விட்டு அவசர அவசரமாக தடயத்தை வில்லன்கள் மறைக்கும் காட்சி 


3. சந்தானம் ஒவ்வொரு முறையும் தான் மாட்டிக்கொள்ளும்போது எதிராளியின் காலில் விழுந்து பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என கெஞ்சுவது  தியேட்டரில் செம சிரிப்பு . ஒரு சாதாரண காமெடியைக்கூட ஒரு நல்ல காமெடியன் நல்ல காமெடி ஆக்க முடியும் என்பதற்கு உதாரணம் . ஒருத்தர் வேட்டையை உருவதும் , ஒரு ரவுடி லேடி சேலை பாவாடையை இழுப்பதும் கொல் சிரிப்பு 


4. ஆபரேஷன் டி  என்பது இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டாதது . அதாவது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போட்டுத்தள்ளுவது , கிட்டத்தட்ட என்கவு்ண்ட்டர் மாதிரி . இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு  ( துப்பாக்கில இப்படி ஒரு சீன் வரும் )


 


5. டூயட் காட்சிகளில் அனுஷ்காவை துள்ளிக்குதிக்க வைத்து ஆடியன்சை துள்ளிக்குதியாட்டம் போட வைத்தது . மற்ற காட்சிகளில் அழகுப்பதுமையாய் , சேலையில் வரும் சோலையாய் தென்படும் அனுஷ்  டூயட்டில் மட்டும் இறங்கி ஆடி இருக்கார் , கிறங்க வைக்கும் அழகு  ( கா விட்டதால் அனுஷ்காவிடம் கா விட்டுட்டேன் என பொருள் இல்லை, சும்மா செல்லம் ) இந்தப்படத்துக்கு சாமார்த்தியமாய் சென்சாரிடம் யு சர்ட்டிஃபிகேட் ”வாங்கியதுக்கு”: ஸ்பெஷல் பாராட்டு

6. சிங்கம் டான்ஸ் பாட்டு செம. அனுஷ்காவுக்கு செம சீன்

7. விஸ்வரூபம் கமலை நையாண்டி செய்யும் யாரென்று  தெரிகிறதா சந்தானத்தின் ஃபைட் சீன் அதகளம் . தியேட்டரில் அப்ளாஸ் மழை ( வீட்டில் டி விடியில் பார்த்தால் இந்த சுவராஸ்யம் மிஸ் ஆகும் ) அதே போல் அவரது  ஓப்பனிங்க் காட்சியில் எந்திரன் ரஜினையையும் விட்டு வைக்கலை


8. கண்ணுக்குள்ளே கண்ணை வெச்சு பாட்டு ஹிட் ஆகும் . அந்தப்பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் ஓக்கே ரகம் 




 இயக்குநரிடம் சில கேள்விகள்  


1.  ஜஸ்ட்  15 வயசு ஆன ( !!!!????)  பத்தாங்கிளாஸ் படிக்கும் பிகரான ஹன்சிகா போலீஸ் ஆஃபீசரான 37 வயசு சூர்யாவை காதலிப்பது எல்லாம் ஓக்கே , அவர் தன் காதலை சூர்யாவிடம் சொல்லும்போது அவர் அப்பவே “ ஏம்மா , நான் ஆல் ரெடி ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டென்” அப்டினு சொன்னா அப்பவே மேட்டர் ஓவர் , அதை கடைசி  வரை சொல்லாம இதெல்லாம் சரிப்பட்டு வராது அப்டினு ஏன் பம்மறார்? சைடுல இதையும் ஓட்டிக்கலாம்னு நினைச்சுட்டாரா?


2. ஹன்சிகா காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கார். எக்சாம் கொஸ்டீன் பேப்பரை திருடும்போது  வெறும் 5 கிராம் ஏ 4 பேப்பர் அவர் நெத்தில பட்டு லென்ஸ் விழுமா ? அப்படி விழுந்தா உடனே அவருக்கு அது  தெரியாதா? ஏன் மாட்டிக்கறார்? 



3. அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஹன்சிகா கண்ணாடி போட்டுட்டு வர்றார் . அவரை மாதிரி கண்ணாடி போட்ட ஃபிகருங்க 4 பேர் இருக்கும் போது ஹீரோ கரெக்டா எப்படி ஹன்சிகாவை சந்தேகப்பட்டு உண்மையை கண்டு பிடிக்கறார்? 


4. ஹன்சிகா போலீஸ்க்கு போன் பண்ணி ஸ்கூல்ல கலவரம் நடக்குதுன்னு சொல்றார். போலீஸ் வருது. அவர் தான் யார்னு யார் கிட்டேயும் சொல்லலை , போலீஸ் கிட்டேயும் சொல்லலை , எப்படி சந்தானம் , ஹீரோ 2 பேரும் ஹன்சிகா தான் ஃபோன் பண்ணினார்னு கண்டு பிடிக்கறாங்க? 


5. போலீஸ் ஆஃபீசரான ஒருவர் டியூட்டிக்காக  தற்காலிகமா வேலையை ரிசைன் பண்ணின மாதிரி நடிக்கறார் ஓக்கே , அதை தன் சொந்த அப்பா கிட்டேயே யாராவது சொல்லாம இருப்பாங்களா? சொந்த பொண்டாட்டி கிட்டே கூட அதை சொல்ல மாட்டேன்னு ஹீரோ பஞ்ச் பேசுவது ஓக்கே , பொண்டாட்டிங்கன்னா ஓட்டை வாய்ங்களாத்தான் இருக்கும் , ஆனா அப்பா கிட்டே ஏன் சொல்லலை? அதை சாக்கா வெச்சு வரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் உஷ் அப்பா ... 


6.  சாதாரண ஏ சி யான ( அசிஸ்டெண்ட் கமிஷனர் ) ஹீரோ உள்ளே வரும்போது உள் துறை அமைச்சரே எந்திரிச்சு நின்னு மரியாதை தர்றாரே அவர் ரொம்ப சாதாரண துணை நடிகரோ? 




7. வில்லன்க லாட்ஜ்ல ரூமை  வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு உள்ளே சீட்டாடிட்டு இருக்காங்க . செல் ஃபோனை வைப்ரேஷன் ஆர் சைலண்ட்ல மோடுல போடாம அப்படியா பெப்பரெப்பேன்னு ஹீரோ கிட்டே மாட்டிக்குவாங்க ?


8. காலியா இருக்கும் குஷன் சேர்ல வில்லன் ஈட்டியால லாங்க்ல இருந்து வீசறார் . அது சக்னு போய் செண்ட்டர்ல குத்தி நிக்குது . நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க . காலியா இருக்கும் சேர் மேல 10 அடி தூரம் தள்ளி நின்னு ஈட்டி எறிஞ்சா அந்த சேர் கீழே விழும் . ஆனா அப்படி குத்தி நிக்காது. யாராவது சேரைப்பிடிச்சுக்கிட்டு நின்னாத்தான் அப்படி குத்தும் ( இதை செக் பண்றேன் பேர்வழின்னு எங்க வீட்ல இருந்த ஒரே ஒரு குஷன் சேர் கோவிந்தா )


9. பொண்ணு சமப்ந்தம் பேசும் இடத்தில் அனுஷ்கா & கோ ஏற்பாட்டின்படி அங்கே நடப்பதை அறிய செல்போனில் வீடியோ எடுத்து லைவ் ஷோ பார்க்கறாங்க . அந்த லேடி அப்படி பப்ளிக்கா ஃபோனை கைல பிடிச்சுட்டு நிக்குது. யாருமே அதை கவனிக்கலையா? ஹீரோ போலீஸ் ஆஃபீசர் வேற , அவருக்குமா தெரியலை  ?


10. ஆபரேஷன் டி கேன்சல் ஆகிடுச்சு , உள்துறை அமைச்சர் அந்த லெட்டர் உங்களுக்கு நாளை தான் கைல கிடைக்கும். அதுக்குள்ளே நைட்டே மேட்டரை முடிச்சுடுங்கனு சொல்றார். இந்த மாதிரி அதி முக்கிய அரசாங்க ஆணைகள்  தந்தி மூலமாகவோ , ஃபோன் கால்  மூலமாவோ பிறப்பிக்கப்படும் , எழுத்துப்பூர்வமான ஆணைகள் சு ம்மா ரெக்கார்டிங்க் பர்ப்பஸ்க்கு வேணும்னா வாங்கி வெச்சுக்கலாம். சி எம் ஃபோன் ல ஆபரேஷன் டி கேன்சல் பண்ணியாச்சா? என ஏன் கேட்கலை? 


11. படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற சாதா அடியாள் தான் மெயின் வில்லன் என்பதை ஆல்ரெடி குருதிப்புனல் , புலன் விசாரனை உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சே பாஸ் 


12.  ஹன்சிகா - அனுஷ்கா சக்களத்தி சண்டை ரொம்ப கேவலமா இருக்கு. அந்த சீனுக்கு வசனம்  எழுதுனவர் போரிங்க் பைப்ல தண்ணி பிடிக்கும் பொம்ப்ளைங்க ரேஞ்சுக்கு இறங்கி .. உஷ் அப்பா


 13 . ஒரு சர்வதேச  கடத்தல்காரனை லாக்கப்ல போட்ட ஹீரோ வெளில கிளம்பும்போது யாராவது வில்லனை மீட்க வரலாம்னு சந்தேகப்பட்டு  லாக்கப் சாவியை எடுத்துட்டுப்போறார். செம காமெடி . சாவியை எடுத்துட்டா அந்த ரூமை யாராலும் திறக்க முடியாதா? ஹய்யோ அய்யோ





மனம் கவர்ந்த வசனங்கள் 


1.   நான் எல்லாம் டேஞ்சரை டெபாசிட் பண்ணிட்டு அபாயத்தை வம்புக்கு இழுக்கறவன் # சந்தானம்


2. சூர்யா பஞ்ச் - நீ என் வீட்டுக்கு வந்தே.நான் தாங்கிட்டேன்.நான் உன் வீட்டுக்கு வந்தா நீ தாங்க மாட்டே # பக் சீட் பிகர் மேல வி பு சி



3.  தூரத்துல இருக்கற ஆளை 10 ஸெகண்ட்ஸ் ல போட்டுட்டேன்.பக்கத்துல இருக்கற உன்னைப்போட எவ்ளவ் நேரம் ஆகும் ? # நோ டபுள் மீனிங்.ஹீரோ டூ வில்லன் ்


4. வில்லன் ன் கேவலமான பஞ்ச் - நான் கெளுத்தி மீன் இல்ல.வலைல விழுந்தாலும் உலைல விழ மாட்டேன்


5.  தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார்.புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார் .அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார் # சந்தானம்


6. சந்தானம் - உனக்கு நான் பேர் வாங்கித்தர்றேன்.நீ எனக்கு பீர் வாங்கித்தந்துடு.எப்டி டீலிங்?


7. சந்தானம் - டீச்சர் ஜாக்கெட்ல ஓஜோன்ல ஓட்டை விழுந்த மாதிரி ஏகப்பட்ட பொத்தல்கள் இருக்கே


8. சந்தானம் - அய்யய்யோ.பிரச்சனையை பேரம் பேசி வாங்கிட்டேன் போல


9. பேசாம அவங்க கிட்டே பாவ மன்னிப்பு கேட்டுடு.


 சந்தானம் - பாவ மன்னிப்பு ,பாசமலர் எல்லாம் கேட்க அவங்க என்ன டிவிடி கடை ஓனரா? 


10. இந்த வயசுல பிகர் வர்றதும் ,வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம் # சி 2 சந்தானம்

 

11. சந்தானம் - ஸாரி மேடம்.உங்களுக்கு மேரேஜ் ஆகி 3 புருசனுங்க இருக்கற மேட்டரே எனக்கு இப்போ தான் தெரியும்


12. சந்தானம் - என்னய்யா? போலீஸ்னா எல்லாரும் வயித்தில சோத்தை கட்டிட்டே அலைவாங்ளோ? #தொப்பை


13. ஒருத்தரை நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா அவங்க மேல நமக்கு இனம் புரியாத ஒரு அன்பு வரும்.அது காதல் இல்லை.இன்பேக்சுவேசன்


14.  சந்தானம் = சார்.பாயே மூடு,பீச்சே மூடுனு சொல்றீங்ளே.பாயை மூடிடலாம்.பீச்சை (BEACH) எப்டி மூடுவீக?


15.  நீங்க அம்மா , அப்பா பேச்சை கேட்பீங்களா 


 அவங்க பேச்சைக்கேட்காம? அவங்க எனக்கு தெய்வம் சார் ( சிவகுமாரை இம்ப்ரெஸ் பண்ண வைக்கப்பட்ட வசனம் போல ம்)


16.  என்னது? நாய் மோப்பம் பிடிக்குமா?


 பின்னே , உன்னை மாதிரி பீடி பிடிக்கும்னு நினைச்சியா?



17. ஏன் என்னைப்பார்த்து நாய் குரைக்குது?

 நாயாவது உன்னைப்பார்க்குதேன்னு சந்தோஷப்படு


18. ஆமா , நீ வேட்டி கட்டி இருக்கியே? ஜட்டி போட்டிருக்கியா? பார்த்துடா, நாய் கவ்விட்டுப்போய்டப்போகுது


19.  ப்ளூ கிராஸ் என்னைப்பிடிச்சுட்டுப்போனாலும் பரவாயில்லை ,  3 நாயையும் கல்லால அடிக்காம விட மாட்டேன்


 2 நாய் தானே இங்கே இருக்கு ?

 அந்த 3 வது நாய் நீ தாண்டா


 20.  மிஸ் ! எங்கே போய் இருந்தீங்க?

 சொல்ல மாட்டேன்


 நீ சொல்லலைன்னா 8 மணி நியூஸ்ல சொல்வாங்களா? அட சொல்லம்மா/








21.  செல் ஃபோன் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க , கம்யூனிகேஷனை கட் பண்ணாலே நாட்ல பாதிக்கலவரம் குறைஞ்சுடும்



22. இனிமே என் பொண்ணு காய்கறி வாங்கக்கூட சைரன் வெச்ச கார்ல தான் போவா


23. இவங்களை சமாளிக்க க்ளீன் போலீஸ் பத்தாது , கிரிமினல் போலீஸ் வேணும்  ( நாட்டுல 75 % அப்டித்தானுங்க்ணா)


24 விருந்தாளியையே இப்படி ப்வெளுக்கறாங்களே இந்தம்மா  இவங்க புருசனை எப்படி வெளுப்பாங்க


25. காதல்னா  என்ன? நெஞ்சுல வெச்சு நினைப்புல வாழனும்

26. அத்து மீறி மனசுல நுழைய நினைச்சா அது காதல் ஆகிடாது


27. தொகுதிப்பிரச்சனைக்காக என்னைக்காவது பி எம் கிட்டே பேசி இருப்பீங்களா? எம் பி சார். ஒரு பொறுக்கிக்காக இப்படி போன் போட்டு பேசறீங்க?


28. அமலாபால் நடிச்ச படம் மைனா , ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் சைனா , என்னை விட்டுடு நைனா # சந்தானம்





















படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. அய்யய்யோ அனுஷ்கா அழுகுதே.இப்போவே பஸ் ஏறி அனுஷ்காவுக்கு ஆறுதல் சொல்லனும்



2. அழகு ரதி அனுஷ்கா முன்னால பப்ளிமாஷ் பப்ஸ் ஹன்சிகா எடுபடல


3. ஹீரோ சார் ஹரி சார் அது ஏன் சார் வசனம் பேசும்போது பல்லைக்கடிச்சுக்கிட்டே பேசறார் சார்?

4.   சிவப்புக்கலர் ஜாக்கெட் ,மஞ்சள் கலர் பட்டு சேலை அனுஷ்கா திருவாரூர் தேர் தேவதை

5. 50 கிமீ வேகத்துல போகும் ப்ஸ்ஸை ஹீரோ ஓடியே துரத்தி ஏறிட்டாரு # சிங்கம் சிங்கம் துரை துரை  சிங்கம் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்டட டொய்டங்

6. ஹீரோவோட அப்பா மேரேஜ்க்கு ஓக்கே சொல்றது 6 வது ரீல் ல.அதை ஹீரோயின் தன் அப்பா கிட்டேதகவல் சொல்றது 12 வது ரீல் ல # 6 மனமே 6


7. அனுஷ்காவுக்கு உதடு் மட்டும் இவ்ளோவ் சின்னதா இருக்கே?்



8. டூயட் சீனில் அனுஷ்காவின் முக சேஷ்டைகள் கலக்கல் # அனுஷ் பழம்


9. ஸார்.ஹன்சிகா சார்.பாத்ரூம்ல குளிக்குது ஸார். # சொந்த வீட்ல பாத்ரூம்ல தாழ் போட்டுட்டு குளிக்கும்போது எதுக்கு டர்க்கி டவல்? எப்டி  நம்ம லாஜிக் கொஸ்டீன்? 


10 சந்தானம் - அனுஷ்கா டூயட் கலக்கல் # சூர்யா பாவம் 


11. ஹன்சிகா டென் த் படிக்கற ஸ்டூடண்ட்டாம்.அய்யோ ராமா


12. ஒத்தை ஆள் 10 பேரை அடிச்சா என்ன அர்த்தம்?


 சி பி = 10 பேரும் சொத்தைப்பசங்கனு அர்த்தம் பாஸ் 


13. 120 கிமீ வேகத்துல 4,ஜீப் ஹீரோவைத்துரத்துது.பிடிக்க முடியல.செம ஓட்டம்.கின்னஸ் ரெக்கார்ட்


14. சாமி விக்ரமை மறைமுகமாத்தாக்கறாரு சூர்யா.என்ன தகராறோ?


15. ஓப்பனிங் சீன் அஞ்சலிக்கு குத்தாட்டம்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =41

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். காலை 7 மணி ஷோ , என்னை மாதிரியே வெட்டியா ஊர்ல பல பேர் இருக்காங்க போல , பல்லு கூட துலக்காம வந்துட்டாங்க   சிங்கம் 2 - மாமூல் ஆக்சன் ஹரி பிரான்ட் மசாலா - தலைவா வரும் வரை தாங்கும். படம் ஸ்பீடாத்தான் போகுது , ஆனா காது வலிக்குது. அஞ்சலி ஒரு பாட்டுக்கு ஓப்பனிங்க்ல ஓபனா ஒரு குத்தாட்டம் போடுது, அதனால போகனும்னா யாரும் லேட்டா போகாதீங்க