Showing posts with label கார்த்திக் சுப்புராஜ். Show all posts
Showing posts with label கார்த்திக் சுப்புராஜ். Show all posts

Tuesday, June 02, 2015

54321 - 1984 ல் வந்த யார்? திகில் படத்துக்கு இணையான படமா? - கார்த்திக் சுப்புராஜின் அசிஸ்டெண்ட் இயக்கம்


கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகவேந்திர பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் '54321'. ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர்.
'54321' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, டி.சிவா, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, "எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன் .'54321' படத்தின் ட்ரெய்லரையும் பாடலையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதிர்ச்சியுடன் இருந்தது.
காட்சிகளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான். இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும். நாங்கள் நான்கைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம். சினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொருரகம். இப்படி இருக்கிறது சினிமா.இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு பேசும் போது, "இங்கே இயக்குநர் அம்மா, அப்பா, குரு, அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆகிய முன்று பேருக்கு நன்றி கூறினார்.இப்படத்தின் இயக்குநர் எவ்வளவு உயர்ந்தாலும் தயாரிப்பாளர்களை மறக்கக் கூடாது. இயக்குநருக்கு தாய் தந்தையாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். இதை மறந்து விடக் கூடாது. நம்பி முதலீடு செய்பவர் தயாரிப்பாளர்தான்..
1984ல் நான் நண்பர் சேகரனின் எண்ணத்தில் 'யார்?' என்று ஒரு திகில் படம் எடுத்தேன். 9 லட்சத்தில் முடிக்க நினைத்து வட்டி சேர்ந்து 36 லட்சத்தில் வந்து நின்றது. அதற்காக என்னிடம் இருந்த பல அருமையான படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன். படம் பெரிய வெற்றி அதே போல இப்படமும் வெற்றி பெற வேண்டும்.
இப்போது பெரிதாகி வரும் 'க்யூப்' பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும். பெரிய படங்களுக்கு 'க்யூப்'பிற்கு அதிகமாக தொகை வாங்கிக் கொள்ளலாம். சிறிய படங்களுக்கு வாரம் மூவாயிரம் போதும் என்று கேட்டுள்ளோம். அதற்காக நானும் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் பேசி முடிவெடுத்திருக்கிறோம்" என்று பேசினார்

நன்றி - த இந்து

Sunday, March 08, 2015

இறைவி - எஸ் ஜே சூர்யா வில்லன் , விஜய் சேதுபது ஹீரோ - ஜிகிர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

‘பெஞ்ச் டாக்கீஸ்’ குறும்படத்தில் ஒரு காட்சி. - கார்த்திக் சுப்புராஜ்
‘பெஞ்ச் டாக்கீஸ்’ குறும்படத்தில் ஒரு காட்சி. - கார்த்திக் சுப்புராஜ்
‘‘நல்ல விஷயங்களைச் செய்யும்போது மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும்போது புதிய விஷயங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் மலர்கிறது’’என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
‘ஜிகர்தண்டா’ படத்தை தொடர்ந்து ‘இறைவி’ படத்தை தொடங்கவுள்ள அவர், மற்றொரு புறம் தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக தனது ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்’ நிறுவனத்தின் மூலம் 6 குறும்படங்களை திரையரங்கில் வெளியிடும் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
சினிமாவில் டெக்னாலஜி மூலம் என்ன செய்ய முடியும் என்கிற தேடலை நோக்கிய பயணம் இது. இது படம் எடுக்கும் கம்பெனி இல்லை. என் நண்பர்கள் கார்த்திகேயன், கல்யாண், எழில் ஆகியோர்களோடு சேர்ந்து இதைத் தொடங்கியிருக்கிறேன். இதன் மூலம் குறும்படங்களை தியேட்டருக்கு கொண்டு வந்து சினிமாவை டிக்கெட் கொடுத்து பார்ப்பதைப்போல குறும்படங்களையும் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவேன்.
குறும்படம் என்பது ஒரு கலை வடிவம். எந்த ஒரு குறும்பட இயக்குநருக்கும் தன் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று ஆசை இருக்கும். சினிமா பார்க்க வருபவர்கள் ஒரு குறும்படத்தை பார்த்துவிட்டு போகும் மனநிலையோடு வருவதில்லை. 2 மணிநேரமாவது அவர்களை அமர வைக்க வேண்டும். அந்த அடிப்படையில் முதல்கட்டமாக எங்களிடம் வந்த குறும்படங்களில் 6 படங்களை தேர்ந்தெடுத்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களில் மார்ச் 6-ம் தேதி (நாளை) ரிலீஸ் செய்கிறோம். இந்த 6 குறும்படங்களில் விஜய் சேதுபதி நடிப்பில் நான் இயக்கிய ஒரு குறும்படமும் இடம்பெறுகிறது.
குறும்படங்களை இதேபோல் தொடர்ந்து வெளியிடுவீர்களா?
இப்போது வெளியிடவுள்ள குறும்படங் களுக்கு மக்களிடம் கிடைக்கும் வர வேற்பை வைத்து இந்தப் பணியை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. பெரிய இயக்குநர்கள் பலரும் குறும்படங் களை இயக்கவேண்டும் என்பது என் ஆசை. சில பெரிய இயக்குநர்களும் குறும்படங்கள் இயக்கித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி, ‘மதுபான கடை’ இயக்குநர் கமலக்கண்ணன் ஆகியோர் அடுத்தடுத்து குறும்படங்களை இயக்கவிருக் கிறார்கள். சித்தார்த் ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகிறார். அதேபோல மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களும் குறும்படங்களை இயக்கித்தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
முன்னணி இயக்குநர், நடிகர்கள் குறும்படத்துக்கு வந்தால் அவர்களுக்கான சம்பளம், கால்ஷீட் பிரச்சினை ஆகியவை வருமே. அதை எப்படி சமாளிப்பீர்கள்?
அவர்கள் இப்போது வாங்கும் அளவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. கால்ஷீட் பிரச்சினை பெரிதாக இருக்காது. படங்களின் கால்ஷீட்டுக்கு நடுவில் கிடைக்கும் ஒன்றிரண்டு ஓய்வு நாட்களை இதற்கு ஒதுக்கினாலே போதும். மேலும் இதை விரும்பிச் செய்யும் கலைஞர்களை மட்டுமே இதற்காக அணுகவுள்ளோம்.
‘இறைவி’ படம் எந்த கட்டத்தில் உள்ளது?
கதையை எழுதி முடித்துவிட்டேன். காதல் பின்னணியாகக் கொண்ட கதை இது. எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவோம்.
இந்தப் படத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவை எப்படி பிடித்தீர்கள்?
இப்படத்துக்கான கதையை எழுதும் போது அவர் முகம்தான் நின்றது. ‘இசை’ படத்தின் பணிகள் முடிந்ததும் அவரைச் சந்தித்து படத்தின் கதையைக் கூறினேன். உடனே ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.
இங்கே தயாரிக்கப்படும் படங்கள் அதிகமாக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவதில்லையே?
திரைப்படவிழாக்களுக்கு என்று படங்களை திட்டமிட்டு பண்ண வேண்டும். நானும், ‘ஜிகர்தண்டா’ படத்தை இங்கே ரிலீஸ் செய்வதற்கு முன்பே பெர்லின் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டேன். ஆனால், சில காரணங்களால் அது சாத்தியமில்லாமல் போனது. குறிப்பாக, ரிலீஸ் ஆவதற்கு முன் படம் விழாக்களில் கலந்துகொண்டால் திருட்டு விசிடி வந்துவிடும் என்கிற பயம் இங்கே அதிகம் உள்ளது. அதனால்தான் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை. தரமான திரைப்பட விழாக்களில் எல்லாம் திருட்டு விசிடி போன்ற மறைமுகமான திருட்டு வேலைகள் நடக்க விடுவதில்லை. இன்றைக்கு ஹாலிவுட்டில் பெரிய வரவேற்பை பெறும் பல படங்கள் ரிலீஸுக்கு முன் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்கள்தான்.
திரைப்பட விழாக்களில் கவனிக்கப்படும் படங்கள் நம் நாட்டில் விற்பனைரீதியாக பெரிய தாக்கத்தை பெறுவதில்லையே?
நம்ம ஊரில் அவார்டு படங்கள் என்றால், தியேட்டர் கிடைப்பதில்லை. அதை மக்கள் ரசிப்பதில்லை என்ற ஒரு தவறான புரிதல் உள்ளது. இந்த மனநிலை முதலில் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து மாற வேண்டும். வருகிற ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘காக்கா முட்டை’ திரைப்படம் பல விருதுகளை குவித்த படம். இதை ஃபாக்ஸ் ஸ்டார் என்ற பெரிய நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இப்படி நல்ல மாற்றம் வர வேண்டும். வரும்.
‘ஆஸ்கர்’ வென்ற படங்களை கவனித்தீர் களா?
‘பேர்டுமேன்’ பார்த்தேன். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய படமாக அது எனக்கு பட்டது. அந்தப்படத்தின் கேமரா நகர்வைப்போல நாங்கள் ‘ஜிகர்தண்டா’ படத்தில் 3 நிமிடங்கள் முயற்சி செய்திருப்போம். ‘பேர்டு மேன்’ படத்தில் சாதனை அளவாக அப்படி செய்திருக்கிறார்கள்.


நன்றி  - த  இந்து

Wednesday, March 05, 2014

ஜிகிர்தண்டா - இயக்குநர் ”பீட்சா” கார்த்திக் சுப்புராஜ் ஒரு கேவலமான கதை சொல்லி -பாய்ஸ் சித்தார்த் அதிரடி பேட்டி


டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேவலமாக கதை சொல்வார்! - சித்தார்த்

Karthik Subburaj says story very worst says Siddharth
பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து சித்தார்த்தை நாயகனாகக்கொண்டு ஜிகர்தண்டாவை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது படத்தில் நடித்த சித்தார்த், லட்சுமிமேனன், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன், சிம்ஹா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சித்தார்த் பேசுகையில், பாய்ஸ் படத்தில் அறிமுகமான நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து விட்டேன். ஆனபோதும் என் மீது பதிந்துள்ள ப்ளே பாய் இமேஜை இதுவரை என்னால் மாற்றமுடியவில்லை. அதனால்தான் இனியும் அந்த இமேஜை தொடர விடக்கூடாது என்று அதற்கேற்ற கதைகளை தேடி வந்தேன்.




அப்போதுதான் பீட்சா படத்தை பார்க்க நேர்ந்தது. அந்த படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டதால், எனது டுவிட்டரில் அதுபற்றி விமர்சனம் எழுதியிருந்தேன். அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜூடன் நட்பு கிடைத்தது. அதையடுத்து அவர் என்னிடம் சொன்ன கதை தான் ஜிகர்தண்டா. ஏற்கனவே நான் ஆரம்பத்தில் நடித்த 15 படங்களில் 12 படங்களில் புதியவர்கள்தான் இயக்குனர்கள். நான் அவர்களுக்கு கால்சீட் கொடுத்ததின் காரணம். புதியவர்கள் முதல் படத்தில் தங்களது மொத்த திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைப்பார்கள். அதனால்தான் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்.

மேலும், அவருக்கு முதல் படம் பீட்சாவாக இருந்தபோதும், அவர் முதலில் இயக்குவதற்காக இந்த ஜிகர்தண்டா கதையைத்தான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். பட்ஜெட் அதிகம் தேவைப்பட்டதால் இரண்டாவதாக பண்ணயிருந்த பீட்சாவை முதலில் டைரக்டர் செய்திருக்கிறார். ஆக, கார்த்திக் சுப்பராஜ் முதலில் இயக்கயிருந்த ஜிகர்தண்டாவில்தான் இப்போது நான் நடித்திருக்கிறேன்.ஆக, அவரது முதல்பட ஹீரோ நான்தான்.

இப்படி சொன்ன சித்தார்த், முதலில் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டபோது நொந்து விட்டேன். அந்த அளவுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவே இல்லை. அதன்பிறகு, ஜிகர்தண்டாவின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்தபோதுதான் அற்புதமான கதை என்பதை புரிந்து கொண்டேன். அந்த அளவுக்கு ரொம்ப கேவலமாக கதை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ். அதனால் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ஹீரோக்கள் அவரிடம் கதை சொல்லுங்கள் என்று கேட்காமல், ஸ்கிரிப்டை கொடுங்கள் என்று வாங்கிப் படிப்பதுதான் சரி என்று தெரிவித்த சித்தார்த், இந்த ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு என் மீது அழுத்தமாக பதிந்திருக்கும் ப்ளேபாய் இமேஜ் முற்றிலுமாக மறைந்து விடும் என்றும் அடித்து சொல்கிறார்.


thanx - dinamalar